Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

உரனென்னும் தோட்டியான்

குறள் 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
உரனென்னும் -> உரன் + என்னும்.
உரன் -> திண்மை ((மன உறுதி) - Vigor / Density / Strength / Determination),  பற்றுக்கோடு வெற்றி வலி ஊக்கம், உள்ளமிகுதி மார்பு அறிவு

என்னும் -> என்கிற, யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

தோட்டி - ஆணை; காவல்; கதவு; மனைவாயில்; காண்க:தோணாமுகம்; கட்டழகு; செங்காந்தள்மலர்; நெல்லிமரம்; அங்குசம்; கொக்கி; வெட்டியான்; குப்பைமுதலியனவாருவோன், துப்புரவாளன்.

தோட்டியான் -> அங்குசத்தால் (அங்குசம் : யானையை அடக்க கூடிய கருவி) ->. கருவியாகிய.

 
(அடக்கும்) அங்குசம்

ஓரைந்தும் -> ஓர் ஐந்தும்; மெய், வாய்,கண், மூக்கு, செவி என்ற யானைப் போன்ற ஐம்புலன்கள்.

காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.  

காப்பான் -> எண்ணங்கள் செல்லாமல் காவல் காப்பான்.

வரன் - சிறந்தவன்; கடவுள்; பிரமன்; தமையன்; மணமகன்; கணவன்; சீவன்முத்தருள்பிரமவரர்எனப்படும்வகையினன்.

வரனென்னும் -> வரன் + என்னும்.

வைப்பு - வைக்கை; பாதுகாப்புநிதி; புதையல்; இடம்; நிலப்பகுதி; ஊர்; உலகம்; செயற்கையானது; செயற்கைச்சரக்கு; வைப்பாட்டி; கலிப்பாவகையின்இறுதியுறுப்பு.
வைப்பிற்கோர் -> வையத்தில் + பிறக்க + ஓர்

வரனென்னும் வைப்பிற்கோர் 
பேரின்பப் பெருவீடு; வரமாகிய வீடுபேறு; எல்லா நிலத்திலும் மிக்கது (சிறப்பானது).  அத்தகைய வையத்தில் பிறக்க தக்க

வித்து -> வித்து (விதை) ஆவான். (ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகன் அல்ல). வித்து என்றது, பூமியில் பிறவாது, மீண்டும் மோட்சமாகிய வீட்டிலே முளைப்பதால்
வித்து - மரஞ்செடிகொடிகள்முளைக்கக்காரணமாயிருக்கும்விதை; விந்து; மரபுவழி; வழித்தோன்றல்; சாதனம்; காரணம்.

முழுப்பொருள்
உலகம் மேம்பட உயிர்களின் மனம் மேம்பட வேண்டும். உயிர்களின் மனம்மேம்பட அறிவுமேம்படல் அவசியம். இத்தகு மேம்பட்ட அறிவுத்திண்மை புலனடக்கத்தால் சாத்தியம். ஐப்புலன்களின் உணர்வுகள் அடக்க முடியாதவை. யானையைப் போல் மலையானவை. 

இத்தகு ஐம்புல உணர்வுகளை அறிவுத்திண்மையெனும் (அறிவு, மன உறுதி) தோட்டியால் (என்னும் கருவியால்) காப்பவனே இவ்வுலகின் விதை போன்றவன் என்கிறார். 

அங்குசம் என்னும் சிறு ஆயுதமே ஒரு பெரிய யானையை அடக்க வல்லது என்பதை நாம் உணர வேண்டும்.  ஆனால் ஒரு தேர்ந்த பாகனால் மட்டுமே அங்குசத்தை சரியாக பயன்படுத்தமுடியும். ஒரு தேர்ந்த பாகன் என்பவன் பல பயிற்சிகளை கற்று (மறக்காமல்) உள்ளவன். ஆதலால் அறிவு மற்றும் மன உறுதியால் (மன பயிற்சிகளாலும்) ஐம்புலன்களை அடக்கலாம். 

துறவெனும் நிலந்தனில் துளிர்விடத் தகுந்த ஒர் முதிர்ந்த நல் வித்தாக அவன் விளங்குவனாம்.
அதாவது, தாய் ஈண்டு பிறந்து இறந்தவன் எல்லாம் மகன் அல்ல. மோட்சம் அல்லது பேரின்ப பெருவீட்டில் துளிர் விட தகுதியான முதிர்ந்த விதையானவனே மகன். 

இரவு ஒரு யானை. யானை எத்தனை அற்புதமான மிருகம். மிருகங்களில் அதற்கு இணையாக ஏதுமில்லை. கன்னங்கரிய பேருடல். அதன் எல்லா அசைவுகளும் அழகே. அது ஒரு மாபெரும் குழந்தை. ஆனால் அந்த மகத்துவத்திற்குள் மதம் ஒளிந்திருக்கிறது நண்பர்களே. மிருகங்களிலேயே யானையைப் பழக்குவதுதான் மிக மிக எளிதானது. ஆனால் ஒருபோதும் முழுமையாக பழக்கிவிடமுடியாத மிருகமும் யானைதான்.

யானைமேல் இருக்கும் மனிதன் உணரும் அகங்காரம் ஒன்றுண்டு. அவன் தன்னை ஒரு மகாராஜாவாக, சிம்மாசனம் மேல் அமர்ந்தவனாக உணர்கிறான். அவனறிவதில்லை அவன் மகத்தான அறியமுடியாமை ஒன்றின் மீது அமர்ந்திருக்கிறான் என்று. நம் முன்னோர் அதை உணர்ந்திருந்தார்கள். யானை மறப்பதேயில்லை என்று சாஸ்திரம் சொல்கிறது. யானை மன்னிப்பதேயில்லை என்கிறது. யானைப்பகை என்று அது குறிக்கப்பட்டிருக்கிறது.

இரவு ஒரு யானை. சாமரக்காதுகள் அசைய, கொம்புகள் ஊசலாட, பொதிகள் போல் காலெடுத்து வைத்து மெல்ல நடந்து வரும் யானை. கஜராஜவிராஜிதம் என்று காளிதாசன் சொன்னான். பேரழகியின் நடை யானையின் நடை போன்றது. ராத்ரி தேவியின் நடையல்லவா அது? யானை இதோ நம் வாசலில் வந்து நிற்கிறது. கன்னங்கருமையாக. பேரழகாக. வாருங்கள் அதன் வெண்தந்தங்களைப் பற்றிக்கொள்வோம். அதனிடம் காலெடு யானை என்று சொல்வோம்.ஏறியமர்ந்தால் இந்த உலகையே வென்றவர்களாவோம். ஆனாலும் அது யானை. அறியப்படமுடியாதது. ஏனென்றால் அது காடு. ஊருக்குள் இறங்கிவந்த காடல்லவா யானை? புதர்களின் இருளும் மலைப்பாறைகளின் கம்பீரமும் காட்டருவிகளின் ஓசையும் மலைச்சுனைகளின் குளிரும் கலந்தது யானை…

நூல் ஒன்பது – வெய்யோன் – 41 (நன்றி: ஜெயமோகன்)

முன்புலரியிலேயே கர்ணனின் அரண்மனைமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கி காலடிகள் ஓசையிட விரைந்து காவலரை பதறி எழச்செய்து “எங்கே? மூத்தவர் எங்கே?” என்றான் சுஜாதன். அவர்கள் மறுமொழி சொல்வதற்குள்ளாகவே கூடத்தில் ஓடி, படிகளில் காலடி ஒலிக்க மேலேறி இடைநாழியில் விரைந்தபடி “மூத்தவரே!” என்று கூவினான். கர்ணனின் துயிலறை வாயிலில் நின்ற காவலன் திகைத்தெழுந்து நோக்க “எங்கே மூத்தவர்? சித்தமாகிவிட்டாரா?” என்றான்.

கதவைத் திறந்த சிவதர் “கூச்சலிடாதீர்கள் அரசே, அரசர் அணிபுனைகிறார்” என்றார். “அணிபுனைவதற்கு நாங்கள் என்ன பெண்கொள்ளவா செல்கிறோம்? வேட்டைக்கு! சிவதரே, நாங்கள் வேட்டைக்கு செல்கிறோம்!” என்றான். “இதற்குமுன் வேட்டைக்கு சென்றதே இல்லையா?” என்றார் சிவதர். “பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் மூத்தவருடன் இப்போதுதான் நான் செல்லப்போகிறேன்” என்றான் சுஜாதன். கைகளைத் தூக்கி வில்லம்புபோல காட்டி “இம்முறை நானே தன்னந்தனியாக மதகளிறு ஒன்றை எதிர்கொள்ளப்போகிறேன்” என்றான்.

புன்னகையுடன் “நன்று” என்று சொன்ன சிவதர் “அதற்கு எளிய வழியொன்று உள்ளது” என்றார். “என்ன?” என்றான் சுஜாதன். “யானைக்குப் பிடிக்காத மணங்களை உடலில் பூசிக்கொள்வதுதான். தங்கள் உடலில் இருக்கும் இந்த யவனப்பூஞ்சாந்து காட்டில் உள்ள அத்தனை யானைகளையும் மிரண்டு இருளுக்குள் ஓடச்செய்துவிடும்” என்றார். சுஜாதன் உரக்க நகைத்து “ஆம், அதை நானும் எண்ணினேன். யானையை நான் எதிர்கொள்ள வேண்டும்… யானை என்னை எதிர்கொள்ளக்கூடாதல்லவா!” என்றான்.

உள்ளிருந்து கர்ணன் வெளிவந்து “என்ன, புலரியிலேயே பேரோசை எழுப்புகிறாய்?” என்றான். அவன் அருகே ஓடிச்சென்று ஆடை நுனியைப்பிடித்து ஆட்டி “வேட்டைக்கு! மூத்தவரே வேட்டைக்கு!” என்றான் சுஜாதன். “ஆம், வேட்டைக்குத்தான்” என்றபடி கர்ணன் “சென்று வருகிறேன் சிவதரே” என்றான். சிவதர் “படைக்கலங்கள் தேரில் உள்ளன” என்றார். “ஆம்” என்றபடி கர்ணன் நடக்க சுஜாதன் அவனுக்குப்பின்னால் ஓடிவந்து “நான் மூன்று விற்களையும் பன்னிரு அம்பறாத்தூணிகளையும் என் தேரில் வைத்திருக்கிறேன்” என்றான். “என்ன செய்யப்போகிறாய்? காய்கனிகளை அடித்து விளையாடப்போகிறாயா?” என்றான் கர்ணன்.

“மூத்தவரே” என்றபடி சுஜாதன் அருகே வந்து அவன் கைகளைப் பற்றி தன் தோளில் வைத்தபடி “நான் இம்முறை உண்மையிலேயே களிறு ஒன்றை எதிர்கொள்வேன்” என்றான். “நாம் களிறுகளை கொல்லச் செல்லவில்லை இளையோனே” என்றான் கர்ணன். “அவை வேளாண்குடிகளுக்குள் இறங்காமல் உள்காடுகளுக்குள் துரத்திச் செல்கிறோம். அவற்றின் நினைவில் சில எல்லைகளை நாம் வகுத்து அளிக்கிறோம். அங்கு வந்தால் வேட்டையாடப்படுவோம் என்பதை அவை தங்கள் குழந்தைகளுக்கு சொல்லும். அந்நினைவே காட்டுக்கும் விளைநிலத்திற்குமான எல்லையாக அமையும்” என்றான்.

“நரிகளுக்கும் ஓநாய்களுக்கும் அந்நினைவு நெஞ்சில் பதியாதா?” என்றான் சுஜாதன். “பதியும். ஆனால் அவற்றை மீறுவதைப்பற்றியே அவை எண்ணிக்கொண்டிருக்கும். யானைகள் நெறிகளுக்குள் வாழ்பவை.” அவன் கையை அசைத்து “ஏன்?” என்றான் சுஜாதன். “ஏனெனில் அவை மிகப்பெரிய உடல் கொண்டவை. ஒளிந்து கொள்ள முடியாதவை. அவற்றின் மேல் தெய்வங்கள் அமர்ந்துள்ளன.”

From Ashok's Blog: Good Explanation 

ஒப்புமை
“மறுமைக்கு வித்து” (நாலடி 183)

“மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்க்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்” (நாலடி 59)

“தொண்டர் அஞ்சு களிறு மடக்கி” (சம்பந்தர்.கேதாரம் 1)

“முழுக்கி யெழுவன மும்மத வேழம்
அடக்க அறிவெனும் தோட்டியை வைத்தேன்” (திருமந் 2034)

பரிமேலழகர் உரை
உரன் என்னும் தோட்டியான் ஒர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலங்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். 
விளக்கம் 
(இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந் நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.) 

மணக்குடவர் உரை
அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.

சாலமன் பாப்பையா உரை
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான். 

English Meaning - As I taught a kid - Rajesh
For the world to become a better place, every living being (especially human being) has to be become a better person. Hence, everyone's heart and mind have to become better. This can be achieved by developing mental vigor / strength and determination. This mental strength has to be used as a weapon against the 5 senses which mischievously fail us against our path to success / glory. This mental strength might seem like a small weapon (taming stick). But remember, an elephant is can be controlled using a small weapon. Similarly mental strength can be used to control the 5 senses. But, even to control a weapon, the elephant guard has to learn on how to use the small weapon against the huge elephant. Similarly, one has to learn how to use the mind (by meditation, perseverance etc) against the 5 senses.  If one does so, he or she can overcome the 5 sense and achieve success or attain Moksha in the life. Such a person is a like a healthy seed in this world.

But why is elephant used as a metaphor here? because elephant is like ignorance / illusion. Similarly our 5 senses are as big as elephant. our ignorance and illusion are also big. We all have ego in us because of this illusion and ignorance. So, we have to control that. But why elephant, not fox or lion - Because a fox cannot be controlled. It is always breaks the rules. But elephant can be trained to not cross borders. 

Similarly our mind can also be trained and practised. this can be achieved by controlling our 5 senses which can be done with the help of meditation.


Questions that I ask to the kid
Who is a good seed to the world? 
How can one become a good seed to the world?
What comes to your mind when you see a elephant mahot controlling a elephant using a small stick?

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

குறள் 1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
[காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி]

பொருள்
தாம் அவர்கள்; மரியாதை குறிக்கும் முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை
வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

தாம்வீழ்வார் -> தாமாக காதலுக்கு வீழ்வர் (தானும் அவளை/அவரை காதலிப்பர்).

தம் - ஒருசாரியை இடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

தம்வீழப் -> தமக்காக அவரும்/அவளும் வீழ்வர் (அவரும்/அவளும் காதலிப்பர்).

பெறுதல் -  அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
பெற்றவர் -> அப்படி பட்ட மனைவியையோ / கணவனையோ பெற்றவர்.

பெற்றாரே -> பெறுவர்.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை

காமத்துக் -> காமம் + அத்து -> இன்பத்து எல்லைகளில் ((உள்ள / மெய்) புணர்ச்சியை  குறிக்கும்).

அத்து - attu   s. (Tel.) boundary, limit, எல்லை. அத்துமீறிச்செல்ல, to transgress the boundary.
அத்து -> எல்லை.
அத்து - இசைப்பு; சிவப்பு செவ்வை துவர் அரைஞாண் அரைப்பட்டிகை தைப்பு; அசைச்சொல், ஒருசாரியை.

காழ் - மரவயிரம், மனவுறுதி; கட்டுத்தறி; தூண்; ஓடத்தண்டு; இருப்புக்கம்பி; யானைப்பரிக்கோல்; கதவின்தாழ்; விறகு; காம்பு; கழி; இரத்தினம்; முத்து; பளிங்கு; பூமாலை; மணிவடம்; நூற்சரடு; விதை; கொட்டை; கருமை; குற்றம்.

இல் - இல்லை

காழில் -> விதை இல்லாத -> இடையுறு இல்லாத (ஒரு பழம் உண்ணும் பொழுது விதை இடையுறாக இருக்கும்) / தடையின்றி.

கனி -> பழம்; கனிவு; சாரம்; இனிமை; கனிச்சீர், மூவகைச்சீரில்இறுதியிலுள்ளநிரையசை; பொன்முதலியனஎடுக்கும்சுரங்கம்..

முழுப்பொருள்
தலைமகளும் காதலித்து தலைமகனும் ஒருவரை ஒருவர் ஒருங்கே காதலிக்கப் பெற்ற இருவரும் இன்பதை (இன்பத்தின் எல்லைகளுக்குள்) நுகரும் போது எந்த இடையுறுமின்றி நுகர்வர். சுவைக்கும் பழத்தில் விதை இல்லாமல் இருந்தால் எந்த இடையுறும் இன்றிப் பழத்தை சுவைக்கலாம். அதாவது ஒருவருக்கொருவர் (மன)வேறுபாடு இன்றி இருப்பது. ஆதலால் தான் காமத்துக் காழில் கனியை அவர்கள் பெறுவார்கள் என்று திருவள்ளுவர் கூறுகிறார். 

இருவரில் ஒருவர் ஒருங்கே இல்லாவிடாலும் விதை வந்து இடையுறு செய்யும். அதனை களைய நேரம் எடுக்குமாம்.

ஒப்புமை
“யாழ்கொன்ற கிளவி யாள் தன் அமிழ்து றழ் புலவி நீக்கிக்
காழின்றிக் கனிந்த காமக் கொழுங்கனி நுகர்ந்து” (சீவக.2089)

மற்றுமொருப் பொருள் (மூலம் : தினமணி)
இவர்கள் இருவருக்கும் ஒருங்கே காதல் வந்தால் இவர்களுக்கு இடையில் ஊடல் இருக்காது. கூடலுக்கு முன்பு ஊடல் இல்லை என்றால் அதில் அவ்வளவு இன்பம் இருக்காது. ஆதலால் சற்று ஊடலும் தேவை. 

பரிமேலழகர் உரை
[அது , தனியாகிய படர் மிகுதி என விரியும் .அஃதாவது , படர் மிகுதி தலைவன்கண் இன்றித் தன்கண்ணதேயாதல் கூறுதல் .அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலின் , அவன்கண் இல்லையாயிற்று . இது , பசப்புற்று வருந்தியாட்கு உரியதாகலின் , பசப்புறு பருவரலின் பின் வைக்கப்பட்டது.]

காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர்; நீ அவரோடு பேரின்பம் நுகர்தி,' என்ற தோழிக்குச் சொல்லியது. தாம் வீழப் பெற்றவர் - தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர்; பெற்றோரே காமத்துக் காழ்இல் கனி - பெற்றாரன்றே காமநுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை.

விளக்கம் (காமம்: ஆகுபெயர். 'அத்து' அல்வழிக்கண் வந்தது, முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் 'பெற்றார்' என்றும், அவரால் தடையின்றி நுகரப்படுதலின் 'காழில் கனி' என்றும் கூறினாள். 'நம் காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனியாம் பெற்றிலேன்,' என்பதாயிற்று.) 

காமம் என்பதை மரத்தின் பெயராகக் கொள்ளின், அத்துச்சாரியை வேற்றுமை வழியில் வந்ததேயாம். ஏகாரம் தேற்றம்.

மணக்குடவர் உரை
தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காம நுகர்ச்சியின்கண் பரலில்லாததோர் பழத்தைப் பெற்றவராவர். இது தடையின்றி நுகரலாமென்றது.

சாலமன் பாப்பையா உரை
தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.

தான் காதலில் வீழ்ந்துவிட்ட கணவன் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காமநுகர்ச்சி என்னும் வித்தால்லாத(அதாவது இடறில்லாத,குறைவில்லாத) பழத்தை கொண்டது போலன்றோ

"காய்கறி வாங்கிட்டு வரும்போது அப்படியே ஒரு தர்பூசணி பழம் வாங்கிட்டு வாங்க! வெயிலுக்கு இதமா இருக்கும்." என்றால் என் மனைவி.

"வெயிலுக்கு இதமாத்தான் இருக்கும்; ஆனா அதுல இருக்குற கறுப்பு விதைகளை எடுத்துட்டு சாப்பிடணும்! அதுதான் கொஞ்சம் கஷ்டம்! முன்னாடியெல்லாம் திராட்சையில விதை இருக்கும்.அத சாப்பிடும்போது விதைய துப்பிட்டு சாப்பிடணும்.பிறகு (Seedless Grapes). கண்டுபிடிச்சாங்க இப்ப நிம்மதியா சாப்பிட முடியுது. சீதாப்பழம் சாப்பிடறது ரொம்ப நியூசன்ஸ்! அதுல இருக்குற விதைய எடுத்துட்டு சாப்பிடறதுக்குல்ல பிராணனே போயிடும்! பழம்னா, உரிச்சோமா, சாப்பிட்டோமான்னு இருக்கணும். வாழைப்பழம் மாதிரி."

"அது கூட உரிச்சு சாப்பிடறது கொஞ்சம் கஷ்டம்தானே! யாராவது உரிச்சு கொடுத்தா வசதியா இருக்கும்! இல்லீங்களா?"

" என்ன*? கிண்டலா? என்னை வாழைப்பழ சோம்பேறின்னு சொல்றியா?"

"ஐயையோ! அப்படி நான் சொல்லலையே! எதையும் கஷ்டப்படாமெ அனுபவிக்கனும்னு நினைக்கிறீங்களே! அதைத்தான் சொன்னேன்!"

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.(1191)

பழத்தை சுவைக்கும்போது, இடையில் விதைகள் வருவது இடையூறாக இருக்கும்.கணவன் மனைவி இருவரும் உடல், உள்ளம், உயிர் என்னும் மூன்றாலும் ஒன்றுபட வேண்டும். அப்படி ஒன்றுபடாத நிலையில் அவர்களை இணைத்து வைத்திருக்கும் கவர்ச்சி குறையும். அதனால் மனவேறுபாடு தோன்றும். அந்த வேறுபாடு புணர்ச்சி என்னும் கனியைச் சுவைக்கும்போது விதைகள் போல வந்து இடையூறு செய்யும்.

மணிநீரும் மண்ணும் மலையும்

குறள் 742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
[பொருட்பால், அரணியல், அரண்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மணி கோமேதகம்; நீலம்; பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வயிரம்என்னும்ஒன்பதுவகைஇரத்தினங்கள்; நீலமணி; காண்க:சிந்தாமணி; பளிங்கு; கண்மணி; உருத்திராக்கம்; தாமரைமணிமுதலியன; தானியமணிநஞ்சுநீக்குங்கல்; சந்திரகாந்தக்கல்; மணிமாலை; அணிகலன்; உருண்டைவடிவமாயுள்ளபொருள்; மீன்வலையின்முடிச்சு; ஆட்டினதர்; வீடுபெற்றஆன்மா; அழகு; சூரியன்; ஒளி; நன்மை; சிறந்தது; கருமை; கண்டை; அறுபதுநிமிடமுள்ளநேரம்; ஒன்பது; ஆண்குறியின்நுனி; பெண்குறியின்ஓர்உள்ளுறுப்பு.

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

மணிநீரும் -> மணி போலும் நிறத்தினையுடைய நீரும்; அதாவது மணிபோல் தெளிந்த நீர்.

மணிநீர் - மணிபோலும்நிறத்தினையுடையநீர்; இரத்தினத்திலுள்ளநீர்.

மண் - நிலவுலகம்; நீராடுங்கால்பூசிக்கொள்ளும்பத்துவகைமண்; பூமி; புழுதி; காண்க:திருமண்; தரை; அணு; சுண்ணச்சாந்து; மத்தளம்முதலியவற்றில்பூசும்மார்ச்சனை; மணை; வயல்; கழுவுகை; ஒப்பனை; மாட்சிமை.

மண்ணும் -> வெள்புள்ளிடை நிலமும்;  அதாவது  நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும் (வெட்ட வெளியான நிலமும்).

மலை - alai   n. perh. மல்லல். [K. male.] 1.Hill, mountain; பருவதம். மலையினு மாணப் பெரிது(குறள், 124). 2. Collection, aggregation; ஈட்டம்.சொன்மலை (திருமுரு. 263). 3. Abundance, bigness, as a mountain; மிகுதி. Colloq.
மலையும் ->  உயர்ந்த மலை.

அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.
நிழல் - சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய்.

காடும் - காடு - வனம்; மிகுதி; நெருக்கம்; செத்தை; எல்லை; நான்குஅணைப்புள்ளஒருநிலவளவு; சுடுகாடு; இடம்; புன்செய்நிலம்; சிற்றூர்; ஒருதொழிற்பெயர்விகுதி.

அணிநிழற் காடும் -> குளிர்ந்த அழகிய நிழலையுடைய அடர்ந்த காடு; [செறிவுடைய காடென்று அர்த்தமாகும்].

உடையது - செல்வமாக கொண்டது; கொண்டது

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

அரண்  -> வலிமைமிக்க கோட்டை. பாதுகாப்புடைய நகரம் (Stronghold).

முழுப்பொருள்
வற்றாத மணி போன்ற தெளிந்த நீர், நிழலும் நீருமில்லாத் வெட்ட வெளியான நிலம் (தாணியங்கள் (உணவு) பயிறிடுவதற்காக), மலைகள் (மற்ற உயிரினங்கள் வாழ), குளிர்ந்த அழகிய நிழலையுடன் அடர்ந்த காடு (மூலிகைக்கள் செழிப்பாக வளர, மற்றும் காடுகள் தண்ணீரை ஓயாமல் கொடுக்க)  ஆகிய நான்கும் ஒரு நாட்டிற்கு பாதுக்காப்பிற்கு இன்றியமையாததாகும். அவையே நாட்டிற்கு கோட்டையாக விளங்கும். 

ஐம்பூதங்களினால் உருவானது இம் மானிட உடம்பு. அதனை வளர்ப்பது உணவு. அந்த உணவோ, நிலமும் நீரும் இணைந்த இணைப்பால் வருவது, என்பதே அப்பேருண்மையாகும். இதனால் நிலனும் நீரும் எவ்வளவு இன்றியமையாதன என்பதை உணரலாம். நிலமும் நீரும் உணவுப்பொருளை உருவாக்க மட்டுமா செய்கின்றன? மனிதனுக்கு வேண்டிய மருந்துப் பொருட்களையும் சேர்த்தல்லவா விளைவிக்கின்றன. அதனால் அவ்விரண்டின் தூய்மையும் கூட தனிக் கவனத்தைப் பெருகின்றன. ஒரு நாட்டின் பாதுகாப்பில் நீரும் நிலனும் இன்றியமையாததாகும்.

நீர், நிலம், மலை, காடு ஆகிய இந்த நான்குமே மருந்திற்கான மூலிகைகள் வளர்தற்கான நிலைக்களன்களாகவும் இருப்பன. மண்ணின் தன்மை பயிர்க்குளவாகுதலால் மூலிகைகளை விளைவிக்கும் இடம் மிகுந்த கவனத்திற்கு உரியதாகிறது. மருத்துவ முறைகள் தொடங்கியபோதே மண்-நீர் ஆகியவற்றின் தேர்வும் தொடங்கிவிட்டதைச் சரக சம்கிதை நன்கு உணர்த்துகின்றது.

சுற்றுச் சூழல் மாசடைகின்றபோது உயிர் இனங்களும் பாதிப்பிற்குள்ளாகின்றன என விளக்குவதன் வாயிலாகச் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வின் தேவை விளக்கப்படுகிறது. 


ஆக இவை நான்கும் கேடடையாமல் பாதுக்காப்பது ஒரு நாட்டிற்கு இன்றியமையாததாகும். ஆகவே தான் இது பொருட்பாலில் அரணியலில் வந்தது.

குறிப்பாக"மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளும் விலங்குகளும் உயிர் வாழும். அவைகளில்லாத உலகில் நம்மாமல் ஒருபோதும் வாழ இயலாது"

”மணிநீர் வைப்பு மதிலொடு பெரிய” (சிறுபாண் 152)

”மண்ணுற வாழ்ந்த மணிநீர்க் கிடங்கின்” (மதுரைக் 351)

“மணிநீர கயநிற்ப” (கலித் 35:5)

காரியாசான் எழுதிய சிறுபஞ்சமூலப்பாடல் (48) இயற்கை அரண்களை இவ்வாறு கூறுகிறது.

நீண்ட நீர், காடு, களர், நிவந்து விண் தோயும்
மாண்ட மலை, மக்கள் உள்ளிட்டு மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும், அரணா உடையானை
வேந்தனா நாட்டல் விதி

இப்பாடலும் மேலே சொல்லப்பட்ட நான்குவகை இயற்கை அரண்களையும், மற்றும் போர்களில் திறம்வாய்ந்த படையையும் அரணாகச் சொல்லுகிறது.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாவது. (எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலம் என்பார் 'மண்' என்றும், செறிந்த காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார். மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய் இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.) .

மணக்குடவர் உரை
தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும், மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடாயினும் உடையது அரணாம். தெளிந்தநீர்- பெருநீர். இது கலங்காதாதலின். அணி நிழற்காடு என்றதனாலே செறிவுடைய காடென்று கொள்ளப்படும்.

மு.வரதராசனார் உரை
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வலைப்பில் இருந்து :
மூலம்: 
மணி நீர் என்பதற்கு மணி போன்ற நிறத்தினை உடைய, எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்றும், அணிநிழற் காடு என்பதற்குக் குளிர்ந்த நிழலை உடைய செறிந்த காடு என்றும் பொருள் தருகிறார் பரிமேலழகர். ஆங்கிலேயர் வரவுக்கு முன் நம்மிடம் நிலப்பரப்பில் 35 சதவிகிதம் காடுகள் இருந்தன என்கிறார்கள் பூகோள அறிஞர்கள். 200 நெடிய ஆண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயர் தேசம்விட்டு ஓடியபோது, காடுகள் 26 சதவிகிதமாகக் குறைந்திருந்தது. இன்று நம்மிடம் இருக்கும் காடுகளின் பரப்பு 15 சதவிகிதமே!

ஆங்கிலேயர் 200 ஆண்டுகளில் அழித்த காடுகளின் பரப்பு ஒன்பது சதவிகிதம் எனில், சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளில் அழிபட்ட காடுகள் மேலும் 11 சதவிகிதம். அதை பாகிஸ்தானிய தீவிரவாதிகள் வந்து அழித்துவிட்டுப் போகவில்லை. நமது ஆண்ட வர்க்கம், அதிகார வர்க்கம், வணிக வர்க்கம்தான் அழித்தது என்று சொல்லக் கூசுகிறது நமக்கு.

காடு அழிவது பற்றி இவ்வளவு கவலை எதற்கு?

காடு என்பது தேக்கு, ஈட்டி, வேங்கை, கோங்கு, மருது எனும் மரங்களைக் கதவுகளாகவும், நிலைகளாகவும், கட்டில்களாகவும், மேஜை நாற்காலிகளாகவும், மரச் சிற்பங்களாகவும் மாற்றிக்கொள்ளத் தருவது. அகில், சந்தனம் எனும் நறுமணங்கள் தருவது. யானைத் தந்தம், புலித் தோல், மான் தோல், புலிப் பல், மான் கொம்பு போன்றவை தருவது. தேன் தருவது. காபி, தேயிலை தருவது. ஏலம், கிராம்பு, குருமிளகு தருவது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இன்னும் எண்ணற்ற மூலிகைகள் தருவது. காடு என்பது பெண்பால் என்கிறார் கவிஞர் சக்தி ஜோதி. நமக்கு எதையாவது தந்துகொண்டே இருப்பது.

எல்லாவற்றுக்கும் மேலாகக் காடு என்பது மனித குலத்துக்குத் தண்ணீர் தருவது. ஆயிரக்கணக்கான மரம், செடி, கொடிகள், விலங்குகள் பறவைகள், பிற உயிரினங்கள், நுண்ணுயிர்கள் எனக் காபந்து செய்துவைப்பது காடு.

காடுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள், காட்டைப் பேணிக்கொண்டும் பாதுகாத்துக்கொண்டும்! அவர்களைக் குறிக்க மெத்தப் படித்த நாகரிகர்களான நாம் பயன்படுத்தும் சொற்கள் காட்டாளன், காட்டு மனிதன், காட்டுமிராண்டி, காட்டான். ஆனால், அவன் காட்டைக் காத்தான்; நாம் அழித்துக்கொண்டு இருக்கிறோம்.

வற்றாத ஜீவநதி என்றும், உயிராறு என்றும், தாயினும் சாலப்பரிந்து பயிர் பச்சைகளுக்கும் மானுடருக்கும் தண்ணீர் வழங்கும் தாய் என்றும் ஆறுகளைப் போற்றிப் பெருமைகொள்கிறோம். ஆனால், ஆற்றுக்குத் தண்ணீர் எப்படி வருகிறது என்று யோசித்தோமா? ஒன்று, தானே ஆறு ஊறிப் பெருகிக் கொப்பளித்து வரவேண்டும் மண்ணுக்குள் இருந்து. அப்படி ஏதும் தெரியவில்லை. அல்லது பனிமலைகள் உருகிப் பெருகி வரவேண்டும் கங்கை போல. அங்ஙனம் உருகி வருவதற்குத் தென்னிந்தியாவில் எங்கும் பனிமலைகள் கிடையாது. ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்றான் கம்பன். என் கட்டுரைத் தொகுப்பு ஒன்றுக்கு அந்தச் சொற்றொடரைத் தலைப்பாக வைத்தேன். ஆற்றில் நல்ல தண்ணீர் வராமல் இருப்பது நதியின் குற்றம் அல்ல. ஆற்றுக்கு நல்ல தண்ணீர் எங்கிருந்து வருகிறது? அகத்தியன் எனப்படும் கும்பமுனியின் காகம் கவிழ்த்த கமண் டலத்தில் இருந்து பெருகி வருகிறதா? விரிசடைக் கடவுளின் உச்சியில் இருக்கும் கங்கை பெருக்குகி றாளா நன்னீர்? அல்லது, பாற்கடலில் துயில் பயிலும் நாராயணன் நம்பி அபயக்கரம் காட்ட அதிலிருந்து பாய்கிறதா பன்னீர் போல?

காடுகளில் இருந்து ஊறிப் பெருகி வருகிறது தண்ணீர். முழுமுதற் கடவுளர்களின் வேலையைக் காடு செய்கிறது உவப்போடு, ஓயாமல் ஒழியாமல். பெய்கின்ற மழையைக் காடு பிடித்து வைத்துக்கொண்டு சிற்றோடையாக, கால்வாயாக, ஆறாக, பெரு நதியாகக் கசியவிட்டுக்கொண்டு இருக்கிறது.

காடு எனில் பெருமரங்கள், குறுமரங்கள், தாவரங்கள், குற்றுச்செடிகள், புதர்கள், கொடிகள், பேரணிகள், பாசிகள், காளான்கள் கொண்ட சோலைகள், புல்வெளிகள், பல்வகைத் தாவர மடிப்புகள், அடுக்குகள் ஆகும். பெய்யும் மழையை அவை மண்ணில் தக்கவைத்துக்கொண்டு, காலம்தோறும் சன்னஞ்சன்னமாகக் கசியவிட்டுக்கொண்டு இருப்பது காடு. நீரின் வழித் தடங்கள்தான் ஓடைகள், ஆறுகள் என்பன. ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டித்தான் நகர மக்களுக்குப் பிரித்து, பகிர்ந்து வழங்குகிறார்கள்.

ஆண்டுதோறும் மார்ச் 22-ம் நாள் ‘உலகத் தண்ணீர் தினம்’ எனக் கொண்டாடப்படுகிறது. கோவையில் ‘ஓசை’ என்ற அமைப்பு… அருந்தும் நீர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று போன்றவை அடுத்த தலைமுறைக்கும் தேவை என்பதை உரக்கச் சொல்லும் இளைஞர் இயக்கம். எழுத்தாளர்கள், ஓவியர்கள், செய்தியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்றை வனம் புகச் செய்தனர்.

கொங்குப் பகுதியின் வற்றாத ஜீவநதி பவானி. மேற்குத் தொடர்ச்சி மலையில், நீலகிரி மலை அடுக்குகளின் மேற்குப் பகுதியில் பிறப்பெடுத்து, தமிழ்நாடு விட்டு கேரளத்தினுள் 30 கி.மீ. பாய்ந்து, தமிழ் மக்களுக்கு உதவாமல் போகிறோமே எனும் பரிவு உணர்ச்சியால் திரும்பி, முள்ளி எனும் இடத்தில் மறுபடியும் தமிழ்நாட்டுக்குத் திரும்பி நுழைகிறது. பின்பு, அது சென்று சேர்வது காவிரியில்.

கோவையில் இருந்து புறப்பட்ட நாங்கள் மேட்டுப்பாளையம் சாலையில், அரங்கநாதன் அரசாளும் காரமடையில் இடது பக்கம் திரும்பி, தனவணிகர் குலம் காத்த குருந்த மலைக்குன்று உறையும் முருகன் கோயிலுக்குப் போகும் பிரிவு கடந்து, பல்லாண்டுகள் முன்பு வாழ்ந்து தமிழ் கூறும் நல்லுல கத்தாரால் அறியப்படாமல் மறைந்த தத்துவக் கவிஞர் ‘வெள்ளியங்காட்டான்’ வாழ்ந்த வெள்ளியங்காடு தாண்டி, அத்திக்கடவுப் பாலத்தில் இறங்கி, பவானி ஆற்றங்கரையோடும் ஒற்றையடிப் பாதையில் மரத்து வேர்களும், கற்குவியல்களும், புதர்களும் விலக்கி நடக்க ஆரம்பித்தோம்.

அந்தப் பகுதியில் மழை பெய்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன. எனினும் பவானி, அசாவேரி ராகம் போல ஆடி அசைந்து, மரங்களின் பெருவேர்களும் பாறைகளும் குறுக்கிடும் இடங்களில் சலசலத்து, பள்ளங்களில் பாய்ந்து, பில்லூர் அணைக்கட்டு நோக்கிப் பெருகி வளர்ந்து வந்தது. தமிழகப் பசுமை இயக்கம் வெளியிட்டுள்ள ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனும் குறுநூல், இந்த மலைத் தொடரை கேரளம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கோவா, மராத்தியம், குஜராத் என்னும் ஏழு மாநிலங்களின் சொத்து என்று குறிப்பிடுகிறது. தென்முனையில் இந்து மகா சமுத்திரம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் எனும் முக்கடல் பகுதியில் தலை தூக்கும் இந்த மலைத் தொடர், வடக்கே குஜராத்தின் வடக்கு முனையான ‘தப்தி’ நதியின் உற்பத்தி இடம் வரைக்கும் நீள்கிறது. 1,600 கி.மீ. நீளமும், சில இடங்களில் 70 கி.மீ அகலமும் ஆனைமுடி, தொட்டபெட்டா போன்ற 2,600 மீட்டர் உயரமுள்ள சிகரங்களும் கொண்டது. எத்தனை நதிகள் பெருகிப் பாய்ந்து மக்களுக்குப் பயன் தருகின்றன?

‘நீரவர் கேண்மை’ எனும் எங்கள் பயணம் காடுகளையும் ஆறுகளையும் அறிந்துகொள்ளும் முயற்சிதான். கேரளத்தில் பாய்ந்திருக்கும் பவானியின் குறுக்கே முக்காலி எனும் இடத்தில் தடுப்பணை கட்டி, பன்னாட்டு குளிர்பான நிறுவனத்துக்குத் தாரைவார்த்து, கோவை – திருப்பூர் மக்களின் தொண்டைத் தண்ணீரை அபகரிக்க முயன்ற தைச் சுற்றுச் சூழல் அமைப்புகள் முனைந்து போராடி முறியடித்தன.

இந்தக் காடுகளைத்தான் பொது நல நோக்கம் அற்று, சொந்த லாபம் மட்டுமே கருத்தில்கொண்டு அழித்து ஒழித்துக்கொண்டு இருக்கிறார்கள். தண்ணீரற்றுப் போய்க்கொண்டு இருக்கிறது இந்தக் கண்ணீர் தேசம்.

நாட்டில் சராசரி மழைக்குக் குறைவில்லை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். பிடித்து வைத்துக் கொள்ளும் குளம், குட்டை, வாவி, நீராவி, பொய்கை, தடாகம், ஏரி யாவும் தூர்ந்தும் ஆக்கிரமிப்புக்கு ஆட் பட்டும் கிடக்கின்றன. தண்ணீர் வழித் தடங்கள் சுருங் கிக்கொண்டும் மாய்ந்துகொண்டும் போகின்றன. 100 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் 800 அடிக்குக் கீழே போய்க்கொண்டு இருக்கிறது. மேல் வலிக்காமல் கடல் நீரைத் குடிநீராக்கும் திட்டம் என்று வாரிவிடுகிறார்கள் வாக்குறுதிகளை. அதில் ஒரு லிட்டருக்கான விலை பற்றி யாரும் பேசுவது இல்லை. பன்னாட்டு நிறுவனங்களின் ஏற்பாட்டில் வழங்கப்படும் தண்ணீருக்கு, திருப் பூரில் இன்று குடத்துக்கு ஒன்றே கால் ரூபாய

காடுகளை மரக் கூழுக்காகவும், தேயிலை, காபித் தோட்டங்களுக்காகவும், தட்டுமுட்டுச் சாமான்களுக்காகவும், உல்லாச வாசஸ்தலங்களுக்காகவும் அழித்துவிட்டு, நல்ல தண்ணீருக்கு நாக்கைத் தொங்கப்போட்டு நாய் போல எதற்கு அலைய வேண்டும் நாம்?

காடு, புல்வெளிப் பரப்புகள், சோலைகள் அழிந்தால் நீராதாரம் மட்டுமா அழிகிறது? எத்தனையோ நுண்ணுயிர்கள், பல்லுயிர்க் கோவைகள், புட்கள், விலங்குகள் யாவற்றின் இனங்கள் அழிகின்றன. ‘வேறெங்கும் காண இயலாத 16 பறவை இனங்களும், வரிக்கழுதைப் புலியும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழ்கின்றன’ என்றார் ‘ஓசை’ காளிதாஸ்.

‘சிட்டு’ எனும் ஆவணப் படம் எடுத்த கோவை சதாசிவம், கிங்ஃபிஷர் எனப்படும் பெருமீன் கொத்திப் பறவையைக் காட்டித் தந்தார். எனக்கோ, அந்தப் பெயரில் இருக்கும் பீர் மட்டுமே தெரியும். பாரதியார் பல்கலைக்கழகத் தாவரவியல் பேராசிரியர் ராமச்சந்திரன் சிறுநீரகக் கற்கள் நோய்க்கு மருந்தான ‘கல்லுருக்கி’ மூலிகை பறித்து வந்து தின்னத் தந்தார். இதய நோய்க்கு மருந்தாகும் நீர்மருது மரத்தின் உட்பட்டை பெயர்த்துக் காட்டினார். அவர் சொன்ன மற்றொரு சுவாரஸ்யமான தகவல், ‘அந்த மரத்தில்தான் அர்ச்சுனன் வில் பயிற்சி பெற்றான்’ என்பது. காட்டு மா, நாவல், புங்கு, கல் உச்சிக் கொடி, நீர் அத்தி எனும் மரங்கள்காட்டி னார் ‘ஓசை’ அவைநாயகன். இலக்கியத்தில் படித்திருந்த, ஏராளம் கேட்டிருந்த, ‘அருகு உளது எட்டியே ஆயினும் முல்லைப் படர்கொடி படரும்’ என மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை பாடிய எட்டி மரத்தையும் அதன் பழத்தையும் காட்டித் தந்தார்.

பத்திரிகையாளரும் சுற்றுச்சூழல் பாதுகாவற் போராளியுமான செல்வகுமார், மிக அரிதான பறவையான ‘இருவாய்ச்சி’ என்று தமிழிலும், ‘வேழாம்பல்’ என்று மலையாளத்திலும் அழைக்கப்படும் மழைக் காடு களின் அடையாளமான பறவை பற்றிச் சொன்னார்.

பவானி ஆற்றங்கரை ஓரமாக தட்டுத்தடுமாறி, வேர்களில் கால் சிக்கிக்கொள்ளாமலும், ஆற்றில் சரிந்துவிடா மலும் நாங்கள் தளர்நடை செய்தபோது, தொடர்ந்து பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தன. ஆள் நடமாட்டம் அறிந்து அரவம் செய்யும் அப்பறவைகளைக் ‘குக்குருவான்’ என்றும், ‘குக்குரு’ என்றும் சொன்னார்கள். அதிரடிப் படையினரின் நடமாட்டத்தை முன்னறிவிப்பு செய்தமையால், அவற்றுக்கு ‘வீரப்பன் தோழன்’ என்ற புதுப் பெயரும் உண்டு.

‘கனவு’ இதழாசிரியரும் நாவலாசிரியருமான சுப்ரபாரதி மணியன், சமீபத்தில் காலமான அவரது மனைவி சுகந்தி சுப்ரமணியன் நினைவுகளில் புதைந்து அடர் மௌனம் காக்க, ‘ஈரம் கசிந்த நிலம்’ நாவலாசிரியர் சி.ஆர்.ரவீந்திரன் இலக்கியக் கொள்கைகளைத் தாளித்து வந்தார். ஓவியர், சினிமாக் கட்டுரையாளர், புகைப்படக் கலைஞர் ஜீவா, எங்கும் எவற்றையும் கேமராவில்சுட்டுக் கொண்டு இருந்தார். சிறுகிணறு எனும் இருளர் குடி யிருப்பு… 15 வீடுகளும் 60 உறுப்பினர்களையும்கொண்டவை. அருகே, ஆற்றங்கரையின் தண்ணிழல் மணல் பரப்பில், கவிஞர் வேனில், ராகிக் களி உருண்டைகளை ‘ரக்ரி’ எனப்பட்ட காரசாரமான கீரைக் கடைசலில் தொட்டு, காய்ந்த மாடு கம்பில் பாய்ந்தது போல், வேகமாக விழுங்கிக்கொண்டு இருந்தார்.

காடு என்பது நகரத்து மனிதனுக்குத் தண்ணீர் வழங் கும் பேருயிர். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வகை யற்று அழிகிறது. மகாத்மா காந்தி சொன்னார், ‘இயற்கை மனிதனின் தேவைக்கான அனைத்தையும் தரும். ஆனால், மனிதனின் பேராசையை ஈடுசெய்ய அதனிடம் எதுவும் இல்லை’ என்று.

மலரைச் சிதைக்காமல் தேனைச் சேகரிக்கும் தேனீ போல, காட்டை அழிக்காமல் பயன்பெற்று வாழ மனிதன் கற்றான் இல்லை. உல்லாசப் பயணங்கள் போய், காதலியுடன் கைகோத்து, நண்பர்களுடன் பீர் பாட்டில் உடைத்து, பாலிதீன் பைகள் வீசிக் கெடுப் பதற்கானவை அல்ல காடும் மலையும் என்பதை இளைய தலைமுறைக்கு நாம் கற்றுத்தர வேண்டும். விதைப் பைகளை அறுத்துப் பொரித்துத் தின்றுவிட்டு, இனவிருத்தி செய்ய இயலாது.

மே நாள், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், அணு விஞ்ஞானி, ஏ.பி.ஜே.அப்துல்கலாம்,

‘இயற்கை அழித்த கொடியோர் நாங்கள்
காற்றை விடமாய் மாற்றிய பாவிகள்
வளர்ச்சியின் பெயரால் வாழ்வை அழித்தோர்
நீரைக் கெடுத்த துரோகிகள்’

- என்று சுயம் இரங்கிப் பாடுகிறார்.

நாளை குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால், காடுகள் பெருகி வளர்ந்து, அவை காப்பாற்றப்படவும் வேண்டும் என்ற அடிப்படை விஞ்ஞானத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவீர் பெற்றோரே!

English Meaning - As I taught a kid - Rajesh
1) Pristine water flowing in the river, 
2) unpolluted land (through which river flows and under which rain is stored in groundwater table is there), 
3) mountains (which play a role in wind movements thereby impacting rain), 
4) dense forests (which has trees that store 1000s of gallons of water in the roots which is the starting point of river) serve as forts for country.
All these four are hyper-linked in the formation of river. River is essential for drinking water, irrigation, agriculture etc. Hence, river is essential for living of humans and all living organisms. Hence, four things river, land, mountains, forests are forts. It is essential to protect the environment. Also, if these serve as natural borders of a country, it is additional advantage because they make the entry difficult for the enemies.

Questions that I ask to the kid
What are the 4 things in nature considered as a fort? Why? 

அவர்நெஞ்சு அவர்க்காதல்

குறள் 1291
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
அவர் - அவன், அவள் என்பதன் பன்மைச்சொல்; ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

அவர்நெஞ்சு -> அவருடைய நெஞ்சு / மனம்.

அவருக்கு - 
அவர் - அவன், அவள் என்பதன் பன்மைச்சொல்; ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல்.

ஆதல் - ஆவதுஎனப் பொருள் படும் இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

அவர்க்காதல்  -> அவருக்கு ஆதல் -> அவருக்கு உடம்படுதல் -> அவர் சொன்னப்படி கேட்கிறது. அதாவது நம்மை நினைக்காது.

கண்டும்  - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

கண்டும்  -> பார்த்தும்.

எவன் -
யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

எவன்நெஞ்சே -> ஆனால் எதற்கு நெஞ்சே ?

நீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர்.
எமக்கு - எனக்கு
நீஎமக்கு  -> நீ எனக்கு.

ஆகுதல் - ஆதல்

ஆகாது - அல்ல ; நிகழாது; முடியாது; அமையாது; 

ஆகா தது -> ஒத்துழைக்கவில்லை.


முழுப்பொருள்
தலைமகள் தன் நெஞ்சிடம் புலம்புகிறாள்:

அவர் என்னை நினைக்கவில்லை. அவர் என்னை காண வரவில்லை. அவர் சொன்னபடி அவர் நெஞ்சு கேட்கிறது. அதைப் பார்த்துமா நீ அவரை நினைத்துக்கொண்டு இருக்கிறாய். ஒருவர் தானாக அறிந்து செயல்பட வேண்டும். அப்படி செயல் பட வில்லை என்றாலும் குறைந்தது அடுத்தவர் செய்வதை பார்த்தாவது செய்ய வேண்டும். நீ அதையும் செய்யவில்லை. அவரை நினைத்து நான் எவ்வளவு துன்பப்படுகிறேன். ஆனால் நீ என்னோடு இல்லாமல் அவரை நினக்கிறாய். ஏன் நெஞ்சே இப்படி செய்கிறாய் ? - என்று அவருக்காகக் காத்திருக்கும் பொழுது தன் நெஞ்சுடன் செல்லக் கோபம் கொள்கிறாள்.

இங்கு நாம் மற்றொன்றையும் நோக்க வேண்டும். ஒரு பெண் தன் தலைவன் அவளை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். அவளை காண வர வேண்டும் என்று எப்போதும் விரும்புவாள். அது தான் ஒரு பெண்-இன் நெஞ்சமாகும்.

(அதனால, மனைவி (காதலி) போன் செய்யனும். அவுங்க நீங்க என்ன பத்தி அக்கரையே படலனு சொன்னா கோவம் கொள்ள கூடாது - இது இந்த பதிவாசிரியரின் சொந்த சரக்கு)

குறட் கருத்து (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
மாற்றிக் கொள்ள நினைந்தானா அவன் தன் நெஞ்சை
   மயக்குகின்ற வேலை மட்டும் செய்த மகன்
ஆற்றிக்  கொள்ள வழியின்றி அவன் நினைவில்
   அரற்றுவதும் பிதற்றுவதும்  மீண்டும் மீண்டும்
தேற்றுதற்கு ஆளின்றித் தவிப்பதுவும்
   தினம் வேண்டாம் சொல்வதை நீ கேட்பாய் நெஞ்சே
மாற்றமின்றி என்னிடமே இருந்திடு    நீ அவன்
   மயக்கு நெஞ்சு அவனிடத்தே இருந்தால்  போல

ஒப்புமை
”புலப்பென்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
கலப்பென் என்னுகிக் கையறு நெஞ்சே” (கலி 67:8-9)

“ஊடுவென் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
கூடுவென் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே” (கலி 12-3)

“துனிப்பென்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
தனித்தே தாழும் இத் தனியில் நெஞ்சே” (கலி 16-7)

“நிற்காணின்
கடவுபு கைத்தங்கா நெஞ்சென்னும் தம்மோ
டுடன் வாழ் பகையுடை யார்க்கு”  (கலி 77:22-4)

பரிமேலழகர் உரை
[அஃதாவது , காரணம் உண்டாய வழியும் புலக்கக் கருதாது , புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும் ,தலைமகன் புலத்தலும் ஆம் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

(தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சு - நெஞ்சே; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் - அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்கு ஆகாதது எவன் - நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது? (அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். எமக்காகாதது என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. 'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை' என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும் நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ?. இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?.

கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிருந் தொழும்

குறள் 260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

கொல்லான் - பிற உயிர்களைக் கொல்லாதவன்; குறிப்பாக தானோ அல்லது பிறர் இறைச்சி உண்பதற்காக பிற உயிரை கொல்லாதவன்.

புலால் - ஊன்முதலியன; புலால்நாற்றம்; தசைநரம்பு

புலாலை -> பிறர் விற்கும்  / கொடுக்கும் இறைச்சியை கூட.

மறுத்தல் - தடுத்தல்; திருப்புதல்; இல்லையென்னுதல்; நீக்குதல்; வெட்குதல்; திரும்பச்செய்தல்; இல்லாமற்போதல்.

மறுத்தானைக் -> மறுத்தவன்.
புலாலை மறுத்தானைக்  -> பிறர் கொன்று விற்கிற புலாலைக் கூட மறுப்பவன் என்பதையும் உள்ளடக்குவதற்காக திருவள்ளுவர் கொல்லான் என்று நிறுத்தாமல் புலாலை மறுத்தானைக்  என்று சேர்கிறார்.

கூப்புதல் - கைகுவித்தல்; குவித்தல்; சுருக்குதல்.
கைகூப்பி - கைகூப்புதல் - கைகூப்பிவணங்குதல்.

எல்லாம் - முழுதும்
எல்லா உயிருந் -> உலகில் வாழும் அனைத்து உயிர்களும். இங்கே மனிதனை கூறாமல் எல்லா ஜீவராசிகளையும் (விலங்குகளையும்) உள்ளடுக்குகிறார் திருவள்ளுவர்)

தொழும் - தொழுதல் - toḻu-   1 v. tr. [K. tuḷil, M.toḻuga.] To worship, adore, pay homage to;வணங்குதல். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்(குறள், 828).  

தொழும் - வணங்க தக்கவன்

முழுப்பொருள்
பிற உயிர்ளை தானோ அல்லது பிறர் இறைச்சி உண்பதற்காக கொல்லாது, பிறர் விற்கும் / கொடுக்கும் இறைச்சியை கூட (உண்ண) மறுத்து வாழ்கின்றவனை இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களும் இருகரம் கூப்பி வணங்கதக்கவன். (வணங்கும் என்று பொருள் அல்ல). எல்லா உயிர்களும் வணங்கதக்கவர்கள் தேவர்கள் ஆதலால் இவனும் தேவர்களுக்கு இணையானவன் என்று பொருள்.

எல்லா உயிர்களும் உன்னை வணங்கதக்கவனாக இருக்க வேண்டுமா?  பிறர் உயிர்களை கொன்றோ (பிறர் கொன்றதை) பெற்றோ உண்ணாது இருந்தால் எல்லா உயிர்களும் தொழும். ஏனெனில் இவன் கொல்லாமல் இருப்பதனால் தானே நாம் உயிருடன் இருக்கிறோம் என்று நன்றியுடன் நினைந்து வணங்கும்.

எழுத்தாளர் ஜெயமோகன் கொல்லாமை பற்றி இரண்டு கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளார். அவை இதோ
1) உயிர்க்கொலை (சுட்டியை தட்டுக)
நாராயணகுருவிடம் ஒருவர் சொன்னார், குரு நாம் ஏன் செத்த பசுவைச் சாப்பிடக்கூடாது? அது செத்துவிட்டதே? அதன் பாலைக்குடிக்கிறோமே, அது பசுவின் குருதிதானே?”

குரு நியாயம்தான் என்று சொல்லிவிட்டார். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து கேட்டார். ”அம்மா இருக்காங்களா?”  அவர்””போனவருஷம் போய்ட்டாங்க குரு”’ என்றார். ”தின்னுட்டீங்களா?” என்றார் குரு.

நான் என் மீது இருக்கும் கொசுவை சாதாரணமாக அடித்துக்கொல்வேன். அதேபோல ஓர் எருமையை மண்டையில் உலக்கையைப்போட்டு அடித்துக்கொல்வேனா? மாட்டேன். ஒரு நாயை கல்லால் அடிப்பதைப்பற்றிக்கூட என்னால் யோசிக்க முடியாது. எல்லாமே உயிர்தானே, கருணை என்றால் எல்லாவற்றுக்கும் தானே என்றெல்லாம் கேட்க முடியுமா என்ன?

அதாவது உயிர்கள் எல்லாம் நமக்கு ஒன்று அல்ல. அவற்றுக்குள் பேதம் உள்ளது. பெரிய உயிர் சின்ன உயிர் என உள்ளது. அரிய உயிர் எளிய உயிர் என உள்ளது . ஓர் உயிரின் நுண்ணறிவு, அதன் வாழ்நாள்… அனைத்துக்கும் மேலாக அதற்கும் நமக்குமான உறவு. அது நமக்குள் எவ்வகைப்பட்ட குறியீடாக உள்ளது என்பது. ஒரு மனிதன் நமக்கு மிக முக்கியமான உயிர். நாய் இன்னமும் குறைவான உயிர். ஓணான் இன்னும் கொஞ்சம் குறைந்தது. புழு இன்னமும் குறைந்தது.

ஆம், எல்லா உயிரும் நமக்கு ஒன்றல்ல. ஒரு நாயைக்கொன்றால் நம்மில் யாருமே இரவு தூங்க மாட்டோம். பூச்சிமருந்தடித்து ஒரேநாளில் ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொல்வோம்.இயற்கையே அந்த பேதத்துடன் தான் படைத்துள்ளது. கொசு கொல்லக்கொல்ல பெருகும். யானையை கொன்றால் அடுத்த குட்டி பிறக்க கால்நூற்றாண்டு ஆகும்.

உயிர்க்கொலை என்பது இந்த பூமியின் ஓர் இயற்கையான நிகழ்வு. அதற்கு எதிராக பண்பாடு உருவாக்கிக்கொண்ட விழுமியம்தான் கருணை என்பது. எல்லா விழுமியங்களும் ஓர் நடைமுறைத்தேவையில்  இருந்து உருவானவையே. அவை ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புகின்றன. வீரம் என்பதும் கருணை என்பதும் ஒரே சமூகத்தால் உருவாக்கப்படுகின்றன.ஒரு இடத்தில் கொலை வீரமாக கருதப்படுகிறது. இன்னொரு இடத்தில் அது பாவமாக.

அதேபோலத்தான் கருணையும்.  அது முழுமுற்றான ஒன்றல்ல. எந்த விழுமியமும் முழுமுற்றானதல்ல. அவை சார்புநிலை உடையவை. செடியை பிடுங்கி நறுக்கி உண்பது கருணைக்கு மாறானதல்ல, கொசுவைக் கொல்வது போல. ஆனால் ஆட்டை வெட்டி உண்பது கருணைக்கு மாறானது.

எளிமையான பதிலே இதுதான், கீரையை நறுக்குபவர்கள் ஆட்டைக் கொல்வார்களா? ஆடு நம் மனதில் வெறும் உயிரல்ல. அது ஒரு குறியீடாக, நெருக்கமானதாக உள்ளது. அதன் பழக்கங்கள், அவற்றின் வழியாக வெளிப்படும் அதன் மனம் நாம் அறிந்ததாக உள்ளது. கொசுவைக் கொல்லும்போது நாம் வெறுமொரு உயிரைக் கொல்கிறோம். ஆட்டைக் கொல்லும்போது ஓரு மனதையும் சேர்த்தே கொல்கிறோம். நமக்கும் ஆட்டுக்கும் இடையே உள்ள உறவைக் கொல்கிறோம். அதன் மூலம் உருவான ஒரு குறியீட்டைக் கொல்கிறோம்.

விழுமியங்கள் என்பவை சமூகக் கட்டுமானங்கள்தான். உதாரணமாக சென்ற தலைமுறையினருக்கு மரங்களை வெட்டுவதில் குற்றவுணர்ச்சியே இல்லை. ஒரு காயைப்பறிப்பதுபோல வெட்டுவார்கள். நமக்கு இப்போது குற்றவுணர்ச்சி உள்ளது. நம் தேவைக்காக ஒரு மரத்தை வெட்ட நம்மால் முடியாது. வெட்டினால் நிம்மதி இழப்போம். இந்த விழுமியம் சமீபகாலமாக, கடந்த 50 வருடங்களில், மானுடகுலத்தில் உருவாக்கப்பட்டது.

கருணை என்ற விழுமியம் மனிதர்கள் சமூகமாக உயிர்வாழ ஆரம்பித்த  காலத்தில் அவர்களுக்கு தேவையாக இருந்திருக்கலாம். இயற்கையை எதிர்மறைச் சக்தியாகக் காணாமலிருக்க சக உயிர்களுடன் ஒரு நல்லுறவை உருவாக்கிக்கொள்ள. அதற்கும் மேலாக சகமனிதன் மீதான வன்முறையின்மைக்கான குறியீடாக.

ஆகவே கொல்லாமை என்பதும் ஒரு முழுமுற்றான நடைமுறை அல்ல. அது ஒரு குறியீட்டு ரீதியான விழுமியமே.  கொல்லாமையை கடைப்பிடிப்பவன் நெஞ்சில் கருணை அதிகரிக்கும், சகமனிதன் மீதும் அக்கருணை உருவாகும் என்ற நம்பிக்கை. முதலில் மனிதனைக் கொல்லாதீர்கல். அடுத்து நெருக்கமான மிருகங்கலைக் கொல்லாதிருங்கள். அடுத்து சுயலாபத்துக்காக உயிர்களை கொல்லாதிருங்கள். அடுத்து நமக்கு தீங்கு அளிக்காத உயிர்களைக் கொல்லாதிருங்கந்- இவ்வாறு அந்த விழுமியம் வளர்கிறது. அதுவே அதன் இயல்பான வளர்ச்சி

அதன் அடித்தட்டில் இருந்து திருப்பிக் கேட்பது அபத்தம். செடிகளைக் கொல்கிறாயே அப்படியானால் உயிர்களை ஏன் கொல்லக்கூடாது? உயிர்களை கொல்கிறாயே ஏன் மனிதனைக்கொல்லக்கூடாது என்று தான் அது செல்லும்.

புலால் உண்ணும் வழக்கம் நாம் குரங்குகளாக இருந்தபோதே இருந்திருக்கலாம். சிம்பன்ஸிக்கள் கர்ப்பமாக இருக்கும்போது மாமிசம் உண்கின்றன. உபரியான புரோட்டீனுக்காக உண்ண ஆரம்பித்து எளிய உணவு, கனமான உணவு என்பதனால் நீண்டு சுவைக்கு அடிமையாகி இன்று வரை நீள்கிறது.

நான் அசைவம் உண்பவன் . அந்த சுவைக்காக மட்டுமே. அசைவம் உண்பவன் என்பதனால் அதை நியாயப்படுத்த மாட்டேன். அது மனிதனுக்கு இயல்பான,நல்ல உணவு அல்ல. அசாதாரண உடலுழைப்புள்ளவர்களுக்கு மலிவான புரதமாக அது இருக்கலாம். ஆனால் தேவையானதோ  தவிர்க்க முடியாததோ அல்ல.

இன்றைய உடலுழைப்பற்ற சூழலில் மாமிச உணவு கெடுதலானது. ஏன் பலசமயம் விஷம் போன்றது. ஆனால் பழகியபின் விடுவது கடினம். அதன் பின்னணியில் உள்ள கொலை என்பது நியாயப்படுத்த முடியாத ஒன்றுதான்

அடுத்த ஐம்பது வருடங்களில் செயற்கை புரோட்டின் வந்து மாமிச உணவே இல்லாமல் ஆகிவிடலாம். நம்முடைய வாரிசுகள் ‘அடாடா மிருகங்களை கொன்று தின்ற கொடூரர்களா நம் முன்னோர்’ என எண்ணலாம். இன்று நாம் நம் முன்னோர் இழைத்த சாதிக்கொடுமைகளை அறிந்து அதிர்வது போல!

வர்த்தமானர் முதல் காந்தி,நாராயணகுரு வரை கொல்லாமையை ஏன் சொன்னார்கள் என்றால் அது கருணைக்கான பயிற்சி என்பதனால்தான். ஒன்றில் இருந்து ஒன்றாக வன்முறையை கைவிடுவதற்கான பயணம் என்பதனால்தான்.

அது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் என் நாவின் பலவீனத்தால், என் ஆளுமையின் ஆழமின்மையால், என்னுடைய சிறுமையால் நான் அசைவன்

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

அந்த உயிர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்

2)  அருகர்களின் பாதை - 26 பயணக் கட்டுரையில் ஓசியான் பற்றிய குறிப்பில் கொல்லாமை பற்றி கீழே வருகிறது

ஓசியான் சமணர்களுக்கு முக்கியமான ஒரு தலம். ராஜஸ்தானின் ஓஸ்வால் இனக்குழுவின் பிறப்பிடம் இது என்று சொல்கிறார்கள். ஓஸ்வால்கள் இன்று துணி வணிகத்தில் ஓங்கியிருக்கிறார்கள். அவர்களின் ஓசியா மாதாஜி கோயில் இங்குள்ளது என்று குறித்து வைத்திருந்தேன்.

இந்தக் கோயில் ஒரு மலைமேல் உள்ளது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோயில். 12ஆம் நூற்றாண்டில் விரிவாக்கிக் கட்டப்பட்டது. இங்குள்ள இரு கோயில்கள் சண்டி கி மாதா கோயில் மற்றும் அம்பா மாதா கோயில் ஆகியவை 1178இல் கட்டப்பட்டவை.

இந்த ஊர் பற்றிய ஒரு ஆர்வமூட்டும் தகவல் வாசித்தேன். இவ்வூருக்கு ஒரு காலகட்டத்தில் உப்கேஸ்பூர் என்று பெயர் இருந்தது. இங்குள்ள சாமுண்ட மாதாவுக்கு ஒரு காலகட்டத்தில் எருமைகளை பலிகொடுத்தார்கள். ஸ்ரீ ரத்ன பிரபா சூரி என்ற ஆச்சாரியார் அதை நிறுத்தினார். ஆகவே தேவி கோபம் கொண்டு ஆச்சாரியாரைக் கடும் நோவுக்கு ஆளாக்கினார். ஆனால் அந்த வலியைத் தாங்கிக் கொள்வதையே ஒரு பெரும் தவமாக ஆச்சாரியார் செய்தார்.

தேவி மனமிரங்கி ஆச்சாரியாரிடம் மன்னிப்புக் கோரினாள். ஆச்சாரியார் தேவிக்கு நல்லுரை சொன்னார். பக்தர்கள் கொடுக்கும் உயிர்ப்பலிகளின் பாவம் முழுக்க தேவிக்கே வரும் என்றும் விளைவாக அவளே நரகத்தில் உழலவேண்டியிருக்கும் என்றும் சொன்னார். தேவி அந்த நல்லுரை கேட்டு மனம் திருந்தி இனிமேல் பலி தேவையில்லை, சிவப்புநிறமான பூக்கள் கூடத் தேவையில்லை என்று முடிவெடுத்தாள். அதன் பின் ஆச்சாரியார் சாமுண்டிதேவிக்கு சாச்சி மாதா என்று பெயர் சூட்டினார்.

இந்த ஆச்சரியமான கதை நாட்டார் வழிபாட்டுமுறையை எப்படி சமணம் மாற்றியமைத்தது என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாகும். இந்தியா முழுக்க இந்த மாற்றத்தை சமணம் செய்திருக்கிறது. இது ஒரு பெரிய பண்பாட்டு மாற்றம். உயிர்ப்பலி இல்லாமலாவதென்பது உண்மையில் அந்த இனக்குழுவின் அடிப்படை மனநிலையையே மாற்றியமைக்கிறது. வன்முறைநீக்கம் செய்யப்பட்ட சமூகத்தில் உள்மோதல்கள் குறைகின்றன. அந்தச்சமூகம் பிறசமூகங்களுடன் சுமுகமான உறவுகொள்ள ஆரம்பிக்கிறது. வணிகத்திலும் பிற சமூகச்செயல்பாடுகளிலும் வெற்றி அடைய ஆரம்பிக்கிறது. தமிழகத்திலும் சாதிகளைக் கூர்ந்து ஆராய்ந்தால் இந்த அம்சத்தைக் காணலாம்.

பரிமேலழகர் உரை
கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும். (இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்தவனைக் கை குவித்து எல்லாவுயிருந் தொழும். மேல் எல்லாப்புண்ணியத்திலும் இது நன்றென்றார்; அது யாதினைத் தருமென் றார்க்குக் கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவனென்று கூறினார்.

சாலமன் பாப்பையா உரை
எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

பொருள்: கொல்லான் புலாலை மறுத்தானை -(ஓர் உயிரையும்) கொல்லாத வனாய்ப் புலாலை விலக்கியவனை, எல்லா உயிரும் கை கூப்பி தொழும் -எல்லா உயிர்களும் கைகளைக் குவித்து வணங்கும்.

அகலம்: கைகூப்பித் தொழுதல் மனிதர்க்கே உரியதாயினும், அதனை உபசார வழக்காக ஏனைய உயிர்களின் மேலும் ஏற்றிக் கூறினார். உயிரைக் கொல்லாமலும் புலாலைக் கொள்ளாமலும் இருக்கும் மனிதன் எல்லா உயிர்களாலும் கடவுளாகப் போற்றப்படுவன் என்ற வாறு.

கருத்து: கொலையும் புலையும் நீத்தோன் கடவுளை ஒப்பன்.

-----------------------------------------------------------------------------------
 இவ்வதிக்காரத்தின் குறள் கருத்துக்களின் வலிமையைக் காரணங்காட்டி, வள்ளுவரை சமண மதத்தினராகச் சொல்வோருண்டு.

இவ்வதிகாரத்தின் நிறைவுக் குறளான இக்குறளில், புலால் மறுத்தல், மற்றும் புலால் உண்டாகக் காரணமான செயலைச் செய்யாமை இவ்விரண்டின் உயர்வையும் சொல்லி, அவர்களை உலகின் உயிர்களெல்லாம் எவ்வாறு வாழ்த்தும் என்று சொல்லி நிறைவு செய்கிறார்.

சாதி குலம் முதலியவற்றை எந்த நிலையில் உணர்ந்து வைத்து ஒழுகல் வேண்டுமோ அவ்வளவில் நிறுத்தல் வேண்டும். அவை அபிமானத்துக்கு இடமாகி இறுமாப்பினையும் அகங்காரத்தினையும் வளர்க்கும் கருவிகளாகும்படி பீடித்தல் கூடாது என்பதை

"சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்,
ஆதமிலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு,
பேதைகுணம், பிறர்உருவம், யான் எனது என் உரைமாய்த்து,
கோது இல் அருது ஆனானைக் குலாவு தில்லைக் கண்டேனே"

என்ற திருவாசகம் (கண்டபத்து) வலியுறுத்திக் கூறுவதைக் காணலாம்.

புலால் உண்ணும் குலத்தில் பிறந்தவர்களானாலும், அவர்கள் புலால் உண்ணுதல் என்னும் தீ நெறியாகிய வெம்மை நெறியை விடுத்து, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தண்மை உடையவராய் இருந்தால், அவர்களை எல்லா உயிர்களும், எக்காலத்தும் கைகூப்பி வணங்கும் என்பது பலவேறு புராணங்களில் கண்ட வரலாறு.

பெரியபுராணத்தில் வரும் நாயன்மார்களில் ஒருவரான, நந்தனார் என வழங்கும் திருநாளைப் போவார் நாயனார் பற்றித் திருத்தொண்டர் திருவந்தாதியில், நம்பியாண்டார் நம்பிகள் கூறுமாறு காண்க.

"நாவார் புகழ்த்தில்லை அம்பலத்தான் அருள் பெற்று,நாளைப்
போவான் ஆவனாம் புறத்திருத் தொண்டன்தன்                                                                  புன்புலைபோய்,
மூவாயிரவர் கை கூப்ப முனி ஆயவன் பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர் இம்மண்டலத்தே".

இதன் பொழிப்புரை ---

பெரியோர்களால் வாயாரத் துதிக்கப்பட்ட புகழினை உடைய
தில்லையம்பலவாணருடைய திருவருளைப் பெற்றுத், தில்லைக்கு "நாளைப்போவார்" என்ற பெயர் பெறும், புறத்திருத் தொண்டராய்த் தமது புன்மையுடைய புலைப்பிறவி போய் நீங்கி, தில்லை மூவாயிரவரும் கைகுவித்துத் தொழும்படி முனியாகியவருடைய பதி, மரங்கள் நெருங்கிய பொழில்கள் சூழ்ந்த ஆதனூர் என்று இந்நிலவுலகத்து எடுத்துச் சொல்லுவர்.

நாளைப் போவார் நாயனார் தனது புன்மையான புலைத்தன்மை உடைய பிறவி நீங்கி, தில்லைவாழ் மூவாயிரவரும் ஒணங்கும் தன்மை பெற்ற முனிவராகத் தில்லை அம்பலவாணப் பெருமானின் திருவருள் பெற்றுத் திகழ்ந்தார்.

ஆதனூரில் தில்லை நினைவு வந்த காலம் முதல் தமது குலத்தை நினைந்து, தில்லையினுள் செல்வது தமக்குக் கூடாது என்று அஞ்சி நின்றவர் நந்தனாரே ஆவர். இறைவன் பக்கத்தே அணுகவிடாது. நந்தனாரைத் தடுத்தாரும் இல்லை.  பக்கத்தே வந்து தீண்டி ஊன் அமுதூட்டும்படி கண்ணப்ப நாயனாரை விடுத்தாரும் இல்லை.

கண்ணப்ப நாயனாரையும், திருக்குறிப்புத் தொண்டரையும் கையால் பற்றித் தம்மிடத்தில் வைத்த இறைவர், நந்தனாரை மெய்திகழ் வெண்ணூலும் வேணிமுடியும் கொண்ட மறைமுனிவராக்கி அருகு வரவழைத்தார் இறைவர். மறைமுனிவர் ஆனால் அன்றோ அருகு செல்ல இயலும் என்று எண்ணிப் பயந்து கொண்டொழுகிய நந்தனாரின் மனநிலையும் ஒழுக்கமுமே இதற்குக் காரணம்.

பினவரும் பெரியபுராணப் பாடல்களைக் காண்க....

நாளைப்போ வேன்என்று
     நாள்கள் செலத் தரியாது
பூளைப்பூ ஆம்பிறவிப்
     பிணிப்பு ஒழியப் போவாராய்ப்
பாளைப்பூங் கமுகு உடுத்த
     பழம்பதியில் நின்றும்போய்
வாளைப்போத்து எழும்பழனம்
     சூழ்தில்லை மருங்கு அணைவார்.

இதன் பொழிப்புரை ---

இவ்வாறு `நாளைப் போவேன்` என்று நாளும் நந்தனார் சொல்லிவர நாள்களும் கழிதலால், பூளைப் பூப்போன்ற நிலையாத இப்பிறவிச் சூழல் ஒழியப்போதற்கு ஒருப்படுவாராய், பூம் பாளைகள் நிறைந்த கமுக மரங்கள் செறிந்த சோலைகளை உடைய ஆதனூரினின்றும் புறப்பட்டு, வாளைமீன்கள் துள்ளி எழுந்து பாய்வதற்கு ஏற்ற நல்ல நீர்வளமுடைய வயல் சூழ்ந்த தில்லையின் பக்கத்தினை அணைவாராய்.

பூளைப்பூ --- இது மிக மென்மையானது; எந்நேரத்திலும் அழிதற்குரியது. அதனால் இதனைப் பிறவிக்கு ஒப்பிட்டார்,

        
செல்கின்ற போழ்து அந்தத்
     திருஎல்லை பணிந்துஎழுந்து
பல்குஞ்செந் தீவளர்த்த
         பயில்வேள்வி எழும்புகையும்
மல்குபெருங் கிடைஓதும்
         மடங்கள்நெருங் கினவுங்கண்டு
அல்கும்தம் குலம்நினைந்தே
         அஞ்சி அணைந்து இலர்நின்றார்.

இதன் பொழிப்புரை ---

நந்தனார் தாம் செல்கின்ற போது, அத்திருத் தில்லையின் எல்லையினை வணங்கி எழுந்து நின்று, அங்குப் பெருக எழும் செந்தீயை வளர்த்திடும் வேள்விச் சாலையில் எழுகின்ற ஓமப் புகையையும் பெருகும் ஓசையையுடைய நான்மறைகளும் ஓதப் பெறும் மடங்கள் நெருங்கி இருப்பனவற்றையும் கண்ணுற்று, அத்தகைய புண்ணிய விளைவு மிகும் தூய இடத்திற்குச் செல்வதற்குத் தமது குறைவுடைய குலத்தின் தகைமையை எண்ணிப் பயந்து, அங்கு மேலும் உட்செலாது புற எல்லையில் நின்றார்.


நின்றவர்அங்கு எய்த அரிய
         பெருமையினை நினைப்பார், முன்
சென்று, இவையும் கடந்து, ஊர்சூழ்
         எயில் திருவாயிலைப் புக்கால்
குன்று அனைய மாளிகைகள்
         தொறும் குலவும் வேதிகைகள்
ஒன்றிய மூவாயிரம் அங்கு
         உள என்பார் ஆகுதிகள்.

இதன் பொழிப்புரை ---

இவ்வாறு அங்கு நின்ற நந்தனார் அங்குத்தாம் சென்று அடைதற்கு அரிய பெருமைகளை நினைப்பாராய், முன்சென்று எல்லையைக் கடந்து, தில்லையைச் சூழ்ந்து இருக்கும் மதிலின் திருவாயிலில் புகுந்தால், அப்பால் அங்கு மலை போன்ற பெரிய மாளிகைகள் தோறும் நிலவி இருக்கும் வேள்விச் சாலைகள் மூவாயிரம் அங்கு இருக்கும் எனச் சொல்வார்கள்.

இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்றுஅஞ்சி
அப்பதியின் மதில்புறத்தின் ஆராத பெருங்காதல்
ஒப்புஅரிதாய் வளர்ந்து ஓங்க உள்உருகிக் கைதொழுதே
செப்புஅரிய திருஎல்லை வலங்கொண்டு செல்கின்றார்.

இதன் பொழிப்புரை ---

இந்நிலையில், `எனக்கு இவ்வெல்லையினின்றும் உட்போதல் அரிது` என்று மிகவும் அஞ்சி, அம்மதிலின் புறத்தே பெருமானின் திருவடிகளில் ஆராத பெருவிருப்பாய், அன்பு தனக்கு வேறு ஒப்பரிதாய் வளர்ந்து ஓங்கிட உள்ளம் உருகி, அங்கு நின்றவாறே கை தொழுது, சொலற்கரிய பெருமை வாய்ந்த தில்லைப் பதியின் திருஎல்லையைப் பலகாலும் வலங்கொண்டு வந்தார்.


இவ்வண்ணம் இரவுபகல்
         வலஞ்செய்து, அங்குஎய்த அரிய
அவ்வண்ணம் நினைந்து அழிந்த
         அடித்தொண்டர், அயர்வுஎய்தி
மைவண்ணத் திருமிடற்றார்
         மன்றில்நடம் கும்பிடுவது
எவ்வண்ணம்? எனநினைந்தே
                  ஏசறவி னொடும் துயில்வார்.

இதன் பொழிப்புரை ---

இவ்வண்ணமாக இரவும் பகலும் வலம் செய்து, அங்குத்தாம் தமது குலத்தின் தன்மையால் உட்போதற்கு அரிய தன்மையை நினைந்து மனம் அழிந்த நிலையில், நந்தனார் உள்ளம் அயர்ச்சி கொண்டு, மையின் கருமை நிறமுடைய கண்டத்துச் செல்வனின் திருக்கூத்தை எவ்வாறு கும்பிடுவதென்று நினைந்தவாறே வருந்தித் துயில்வாராக,


இன்னல்தரும் இழிபிறவி இதுதடை என்றே துயில்வார்,
அந்நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி,
மன்னுதிருத் தொண்டர் அவர் வருத்தம் எலாம் தீர்ப்பதற்கு
முன்அணைந்து கனவின்கண் முறுவலொடும் அருள்செய்வார்.

இதன் பொழிப்புரை ---

துன்பத்தைத் தருகின்ற இழிந்த இப்பிறவி தடையாயுள்ளதை உட்கொண்டவாறே அன்றிரவு துயில் கொள்ளும் நந்தனாரின் நிலையினை, அம்பலத்துள் நிறைந்து ஆடுகின்ற பெருமானார் அறிந்தருளி, சீர்மை வாய்ந்த அத்திருத்தொண்டரின் வருத்தங்கள் யாவற்றையும் தாம் தீர்த்திடற்கு, அவர் கனவின்கண் சென்று புன்முறுவலுடன் அவருக்கு அருளிச் செய்வாராகி.

இப்பிறவி போய்நீங்க எரியின்இடை நீ மூழ்கி,
முப்புரிநூல் மார்பருடன் முன்அணைவாய் எனமொழிந்து,
அப்பரிசே தில்லைவாழ் அந்தணர்க்கும் எரிஅமைக்க
மெய்ப்பொருள் ஆனார்அருளி, அம்பலத்தே மேவினார்.

இதன் பொழிப்புரை ---

`இப்பிறவி நீங்கிட நெருப்பிடத்தே நீ முழ்கி எழுந்து, பின்பு முப்புரிநூல் அணிந்த மார்பையுடைய தில்லைவாழ் அந்தணருடன் என்முன்பு வந்திடுவாய்` என மொழிந்தருளி, அத்தன்மையாகவே தில்லைவாழ் அந்தணர்க்கும் அன்று இரவின்கண் அவர்கள் கனவில் `நந்தனார்க்கு நெருப்பு அமைத்துக் கொடுத்திடுக` என மெய்ப்பொருளாகிய சிவபெருமானும் அருள்புரிந்து தில்லையம்பலத்துள் மேவினார்.


தம்பெருமான் பணிகேட்ட தவமறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயில் முன்பு அச்சமுடன் ஈண்டி,
எம்பெருமான் அருள்செய்த பணிசெய்வோம் என்று ஏத்தித்
தம்பரிவு பெருகவரும் திருத்தொண்டர் பால் சார்ந்தார்.

இதன் பொழிப்புரை ---

கனவின்கண் தம் பெருமான் தமக்கு இட்ட பணியினைக் கேட்ட தவமறையோர்களான தில்லைவாழ் அந்தணர்கள், பெருமானின் திருவாயில்முன் அச்சத்துடன் அணைந்து, `எம் பெருமான் நமக்கு அருள் செய்தவாறு நாம் செய்வோம்` என்று பெருமானைப் போற்றித், தம் ஈசன்பால் அன்பு பெருகிட வருகின்ற திருத்தொண்டராய நந்தனாரிடத்து வந்துற்றார்கள்.


"ஐயரே! அம்பலவர் அருளால்இப் பொழுது அணைந்தோம்,
வெய்யஅழல் அமைத்து உமக்குத் தரவேண்டி" எனவிளம்ப
நையும் மனத் திருத்தொண்டர் "நான் உய்ந்தேன்"                                                    எனத் தொழுதார்
தெய்வமறை முனிவர்களும் தீ அமைத்தபடி மொழிந்தார்.

இதன் பொழிப்புரை ---

`ஐயரே! நாங்கள் அம்பலவர் அருளால், கொடிய தழலாய நெருப்பினை உமக்கு அமைத்துத் தருதற்காக இங்கு வந்துள்ளோம் என்று கூறுதலும், அதுகேட்டு, நைந்துருகும் மனமுடைய திருத்தொண்டராய நந்தனாரும், `நான் உய்ந்தேன்` எனத் தொழுதார். அதுபொழுது தெய்வமறையின் நெறிநிற்கும் தில்லைவாழ் அந்தணர்களும் தாங்கள் நெருப்பமைத்த தன்மையைச் சொன்னார்கள்.


மறையவர்கள் மொழிந்ததன் பின்,
         தென் திசையின் மதில் புறத்துப்
பிறை உரிஞ்சும் திருவாயில்
         முன் ஆக, பிஞ்ஞகர்தம்
நிறை அருளால், மறையவர்கள்
         நெருப்பு அமைத்த குழி எய்தி,
இறையவர்தாள் மனம் கொண்டே
         எரிசூழ வலம் கொண்டார்.

இதன் பொழிப்புரை ---

தில்லைவாழ் அந்தணர்கள் நெருப்பமைத் தமையை மொழிந்ததும், தென்திசை மதிலின் புறத்தில் பிறை வந்து உராயுமாறு உயர்ந்த திருவாயில் முன்னாகத், தில்லைப் பெருமான் திருவருளின் நிறைவால், அத் தில்லைவாழ் அந்தணர்கள் நெருப்பு அமைத்த தீக்குழியை நந்தனார் வந்தடைந்து, எம்பெருமான் திருவடிகளை மனத்தில் எண்ணிக்கொண்டு எரியைச் சூழ்ந்து வலமாக வந்தருளி.


கைதொழுது நடம் ஆடும்
     கழல் உன்னி அழல்புக்கார்,
எய்திய அப் பொழுதின்கண்,
      எரியின்கண் இம்மாயப்
பொய்தகையும் உருவு ஒழித்து,
     புண்ணியமா முனிவடிவாய்
மெய்திகழ்வெண் நூல்விளங்க
     வேணிமுடி கொண்டு எழுந்தார்.

இதன் பொழிப்புரை ---

கைகளைக் கூப்பித் தொழுது கூத்தியற்றும் சேவடிகளை மனத்தில் நினைந்து, அந்நெருப்பினுள் புகுந்தார். புகுந்த அப்பொழுதின்கண், அந்நெருப்பிடத்து மாயையின் விளைவாய பொய்ம்மை நிரம்பிய ஊன் உடம்பை நீக்கிப் புண்ணியம் நிறைந்த பெருமுனிவரின் வடிவாகி, திருமேனியில் திகழ்கின்ற வெண்ணூல் விளங்கிட, சடைமுடி கொண்ட ஒரு தவமுனிவராக மேலே எழுந்தார்.


செந்தீமேல் எழும்பொழுது
         செம்மலர்மேல் வந்து எழுந்த
அந்தணன்போல் தோன்றினார்,
         அந்தர துந்துபி நாதம்
வந்து எழுந்தது, உயர்விசும்பில்
         வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்
பைந்துணர் மந்தாரத்தின்
         பனிமலர் மாரிகள் பொழிந்தார்.

இதன் பொழிப்புரை ---

சிவந்த நிறமுடைய நெருப்பினின்றும் எழும் போது, செந்தாமரை மலர்மேல் இருக்கும் நான்முகனைப் போன்ற அழகிய வனப்புடன் தோன்றினார். அது பொழுது வானினின்றும் துந்துபிகளின் முழக்கம் எழுந்தது. உயர்ந்த வானிடத்தே தேவர்கள் கண்டு மகிழ்ந்து ஆர்த்து, பசிய மகரந்தப் பொடி பரக்கும் இதழுடைய மந்தார மரத்தின் மலர்ந்த பூக்களின் மழையினைச் சொரிந்தனர்.


திருவுடைய தில்லைவாழ்
     அந்தணர்கள் கைதொழுதார்,
பரவுஅரிய தொண்டர்களும்
     பணிந்துமனம் களிபயின்றார்,
அருமறைசூழ் திருமன்றில்
     ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப்
     போவாராம் மறைமுனிவர்.

இதன் பொழிப்புரை ---

திருவுடைய தில்லைவாழ் அந்தணர்களும் கண்டு கைகூப்பித் தொழுதார்கள். போற்றற்கரிய சிறப்புடைய அடியார்களும் பணிந்து, தங்கள் மனத்தில் பெருமகிழ்ச்சி கொண்டனர். இப்பால் அரிய மறைகள் சூழ்கின்ற திருவுடைய அம்பலத்தே ஆடுகின்ற சேவடிகளை வணங்குதற்குத் திருநாளைப் போவாராம் மறைமுனிவர் வந்து கொண்டிருக்க.

"ஐயர்" என்பது பெருமையுடையார் என்ற பொருளில் வரும்
வழக்கு. அன்றிச் சாதிப்பெயர் பற்றி வருதல் முன்னாள் வழக்கமல்ல. பெருமை காரணமாய் அன்றி இடுகுறியளவில் சாதிப்பெயராய் வழங்குதல் பிற்கால வழக்காகி விட்டது.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் நாயானார், பாணர் குலத்திலே அவதரித்தவர். அவர் செந்நெறியில் நின்று ஒழுகியதால், திருஞானசம்பந்தப் பெருமானைக் கண்டு தொழுது, அவரோடு இருக்கவேண்டும் என்று எண்ணி வந்தார். அவரை அன்போடு வரவேற்றார் ஆளுடையபிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தப் பெருமானார். தமது திருவாக்கினாலே திருநீலகண்ட யாழ்ப்பாணரை "ஐயர்! நீர் உளமகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம்" "ஐயர்! நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்பு செய்தவாறு", "ஐயர்! நீர் யாழிதனை முறிக்குமதென்" என்றெல்லாம் அருளியது எண்ணிப் பார்த்தால் சாதியை வைத்துத் தமிழர்கள் தீண்டாமையை அக் காலத்தில் வளர்க்கவில்லை என்பதும், அது பின்னாளில் சாதியை வைத்து, உயுர்வு தாழ்வு கற்பித்த அறிவிலிகளால் உண்டான தீ வழக்கம் என்பதும் தெரியவரும்.

இது மட்டுமல்ல. திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மற்ற அடியவர்களும் சூழ, திருஞானசம்பந்தர் திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளிய போது, அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கனார் திருநீலநக்க நாயானார். இவர் அந்தணர் குலத்தில் பிறந்தவர். பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்குத் தக்க திருவமுது செய்வித்து மகிழ்ந்திருந்தார். அன்று இரவில் ஞானசம்பந்தர் தம் மனையில் தங்குவதற்கு வேண்டுவதெல்லாம் அமைத்தார். திருஞானசம்பந்தரும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் தங்குவதற்கோர் இடம் கொடுத்தருளுமாறு பணித்தார். அப்பணிப்பிற்கு இன்புற்றுத் தாம் வேள்வி செய்யும் வேதிகையின் அருகிலேயே பாணருக்கும், பாடினியாருக்கும் இடம் கொடுத்தார் அவ் அந்தணனார். அப்பொழுது வேதிகையிலுள்ள நித்தியாக்கினி முன்னரிலும் மேலாக வலஞ்சுழித்து எரிந்தது. பாணர் மனைவியாருடன் வேதிகையருகில் பள்ளிகொண்டார். (நாயன்மார் காலத்தில் சாதி வேற்றுமையும் தீண்டாமையும் உண்டு. அக் கொடுமைகளை ஒழிக்கவே, இறையருளால் நாயன்மார்கள் தோன்றினார்கள் என்பது உணரத்தக்கது.)

நந்தனார் என வழங்கும் திருநாளைப் போவாரையும், திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், அறுப்பது மூவரில் வைத்து திருக்கோயில்களில் படிமம் உள்ளது. இன்றும் சைவப் பெருமக்கள் வணங்கி வருவது காணலாம். இவர்கள் அவதாரத் திருநாளைக் குருபூசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டின் உறையூரில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். இறைவன் முன் எல்லோரும் ஒன்றே என்ற இராமானுசரின் கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வார் வரலாறே மிகுந்த ஊக்கமாகவும் பலமாகவும் இருந்தது எனலாம்.

இசைக்குப் பெயர்பெற்ற பாணர் குலம் காலக் கிரமத்தில் தீண்டாக் குலம் ஆனது. அக்குலத்தில் பாண் பெருமாள் எனும் பெயரோடு ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பதினோராம் ஆழ்வாராக பிறந்த இவர் திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். எனினும், தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும், அம் மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சி, காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருவரங்கனை பாடிவந்தார். காவிரியிலிருந்து தண்ணீர் குடத்தோடு அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்யும் பொருட்டு விரைந்து வந்த லோகசாரங்கர் எனும் கோயில் பட்டர், வழியில் தன்னிலை மறந்து நின்றுகொண்டிருந்த பாணரை பலமுறை அழைத்தும் செவிமடுக்காததால், பாணர் விலகும் பொருட்டு ஒரு கல் கொண்டு எறிந்தார். அக்கல் அவரின் தலையில்பட்டு குருதி பெருக, அதைக் கவனியாது லோகசாரங்கர் தண்ணீரோடு அரங்கன் முன் சென்றார். பாணரின் பக்தியையும் உயர்வையும் உணர்த்த விரும்பிய இறைவன், இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கருக்கு காட்சிக் கொடுத்ததோடு, சாரங்கரை, பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் கொணர்ந்து தன் திருமுன் நிறுத்தும்படியும் ஆணையிட அவ்வாறே செய்தார். அதன் பொருட்டு பாணருக்கு "முனிவாகனன்" என்றும் "யோகிவாகனன்" என்றும் பெயர் ஏற்பட்டது.

வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபில் ஒப்பற்றவாரக விளங்கிய வள்ளல்பெருமான், ஜீவகாருண்ணியமும், ஆன்மநேயமுமே சிறந்து விளங்கி, மனிதர்கள் யாவரும் ஆன்நேய ஒருமைப்பாட்டு உரிமை உடையவர்களாய் விளங்கவேண்டும் என்று விழைந்தவர். உயிர்கள் மட்டுமல்ல, பயிர்கள் படும் துன்பத்தையும் காணச் சகியாதவராய் இருந்த இருந்தவர். "என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்" என்று முழங்கி, உயிர்கள் எல்லாம் அன்பின் வழிநின்று மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திட வேண்டும் என்று சன்மார்க்கம் என்னும் பெருவழியே உலகுக்குக் காட்டியவர்.

‘‘கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்; புலால் உண்ணக் கூடாது; எந்த உயிரையும் கொல்லக் கூடாது; சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கூடாது; இறந்தவர்களை எரிக்கக் கூடாது; சமாதி வைத்தல் வேண்டும்; எதிலும் பொது நோக்கம் வேண்டும்; பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்; சிறு தெய்வ வழிபாடு, அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது; உயிர்களை துன்புறுத்தக்கூடாது; மதவெறி கூடாதது" ஆகிய கொள்கைகளை வலியுறுத்திய வள்ளல்.

"வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம்
     வாடினேன், பசியினால் இளைத்தே
வீடுதோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த
     வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்,
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
     நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்,
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
     இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்"

"கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கு அடுத்த
     கடும்துயர் அச்சம் ஆதிகளை,
தருணநின் அருளால் தவிர்த்து, அவர்க்கு இன்பம்
     தரவும், வன்புலை கொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க
     உஞற்றவும், அம்பலம் தனிலே
மருவிய புகழை வழுத்தவும், நின்னை
     வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய்"

"புன்புலால் உடம்பின் அசுத்தமும், இதனில்
     புகுந்து நான் இருக்கின்ற புணர்ப்பும்,
என்பொலா மணியே! எண்ணி நான் எண்ணி
     ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய்,
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
     மயங்கி, உள்நடுங்கி, ஆற்றாமல்
என்பு எலாம் கருக இளைத்தனன், அந்த
     இளைப்பையும், ஐய! நீ அறிவாய்"

என்று பலவாறாக அப் பெருமானார் பாடி அருளிய திருவருட்பாப் பாடல்களை இன்றும் ஓதி உருகி வழிபடாதார் ஒருவரும் இல்லை.

"கைகூப்பி எல்லா உயிரும் தொழும்" என்று நாயானார் காட்டியபடியே, இப் பெருமானார்களை உலகமக்கள் கைகூப்பித் தொழுகின்றனர்.

English Meaning - As I taught a kid - Rajesh
People who do not kill and who do not eat meat would be worshipped by all the living organisms in the world. 

Questions that I ask to the kid
Whom does the living organism in the world worship?

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று

குறள் 1053
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
கரப்பிலா - கரைகள் இல்லாத; ஒளிவு மறைவு இல்லாத.
கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.

நெஞ்சின் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறிவார் - அறிவுள்ளவர்கள்

கடனறிவார் -> தேவையான் செயலுக்கு கடன் கொடுப்பது தன் கடமை என்று நினைப்பவர் (அறிபவர்); கடமையுணர்ச்சி.

முன்நின்று -> முன்பு நின்று

இரப்புமோ ரேஎர் -> இரப்பும் + ஓர் + ஏஎர்.

இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பும்  -> இரத்தல் - ஒரு பொருளை (உதவியை / கடன்) தாழ்மையுடன் கேட்பது.

ஏஎர் -> அழகு.

ஓர் +ஏஎர் + உடைத்து ->   நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து.

முழுப்பொருள்
ஒரு பொருளோ அல்லது உதவியோ அல்லது கடனோ நாடும் பொழுது யாரிடம் நாடவேண்டும் என்பதை கவனமாக கணக்கில் கொள்ளவேண்டும். எல்லோரிடமும் கேட்டுவிட கூடாது.

கரைகள் இல்லாத, ஒளிவு மறைவு இல்லாத, வஞ்சகம் இல்லாத மனம் கொண்ட, பிறருக்கு உதவி செய்வது தன் கடமை என்று உணர்ந்தவரிடம் (அறிந்தவரிடம்) மட்டுமே கடன் கேட்கலாம்.

அத்தகையவரிடம் மட்டுமே ஒருவர் அவர் முன் நின்று கடன் கேட்க வேண்டும். அப்படி முன் நின்று கடன் கேட்பது தான் கேட்பவருக்கு அழகு என்கிறார் திருவள்ளுவர்.

[அதாவது கடன் கொடுப்பவரே தன் நிலைமை அறிந்து தம்மிடம் வந்து கடன் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். ஏனெனில் கடன் கொடுப்பவருக்கு ஆயிரம் அலுவல் இருக்கும் அல்லவா ? -> ஆதலால் தான் முன்நின்று என்று கூறுகிறார் திருவள்ளுவர்]

அப்படி முன் நின்று கேட்பது இழுக்கு என்று நினைக்க வேண்டாம். அப்படி கேட்பது தான் அழகு / சரி / முறை என்று சொல்வதற்காக திருவள்ளுவர் ”ஏஎர் உடைத்து” என்று கூறி இகழ்ச்சியை களைகிறார்.

ஒப்புமை
”தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிப்
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்கும் குடிப்பிறந் தோயே” (புறநா 164;10:4)

குறட் கருத்து  (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
இரந்து நிற்பார் அழகுடையர் ஆவதற்கு
ஏற்ற ஒரு வழியினை நம் தந்தை சொன்னார்
மறந்தும் கூட செல்வத்தை மறைத்து வைக்கும்
மனம் இல்லாப் பெருங் கடமை யாளரிடம்
இரந்து நிற்றல் மிகச் சிறந்த ஏற்றம் தரும்
இரப்பவர்க்கும் அது பெரிய அழகைத் தரும்
சிறந்து நிற்கும் அக் குறளை இங்கே காண்பாம்
சென்றிரந்து நின்றோமா? அவனாய்த் தந்தான்

பரிமேலழகர் உரை
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் - கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து - நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து. ('சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' (குறள்-963) என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.).

மணக்குடவர் உரை
கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும் ஓரழகுடைத்து. இஃது ஒப்புரவறிவார் மாட்டு இரத்தலா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினும்

குறள் 184
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நின்று - எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் படவரும் ஒர் இடைச்சொல்.

நில்-தல் - [நிற்றல்]   3 v. intr. [K.nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt,tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast;to persevere, persist in a course of conduct;உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. Tostay, abide, continue; தங்குதல் குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; tobe discontinued, stopped or suspended; ஒழிதல் வேலை நின்றுவிட்டது. 6. To be subdued;அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியாழிசைநிற்ப (கலித். 143, 38). 7. To remain; tobe left, as matter in a boil, as disease in thesystem; to be due, as a debt; எஞ்சுதல் நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை 3). 8.To wait, delay; தாமதித்தல் தெய்வம் நின்றுகேட்கும்.  -

நிற்றல் - niṟṟl   v. noun. A standing, நிலை; [ex நில்.] (p.)

கண் - கண்ணோட்டம் - கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality, glow of kind feeling towards a friend or even a casual acquaintance, reluctance to deny a request made by a friend or acquaintance, humanity, fellow-feeling;)

அற - முழுவதும்; மிகவும் தெளிவாக செவ்வையாக.

அற - அறவே 

கண்ணறச் - கண்ணோட்டம் இல்லாமல்

சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

சொல்லினும் - சொல்லுதல் - கூறினாலும்

சொல்லற்க - சொல்லாதே 

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.

நின்று நில்-தல் - [நிற்றல்]   3 v. intr. [K.nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt,tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast;to persevere, persist in a course of conduct;உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. Tostay, abide, continue; தங்குதல் குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; tobe discontinued, stopped or suspended; ஒழிதல் வேலை நின்றுவிட்டது. 6. To be subdued;அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியாழிசைநிற்ப (கலித். 143, 38). 7. To remain; tobe left, as matter in a boil, as disease in thesystem; to be due, as a debt; எஞ்சுதல் நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை 3). 8.To wait, delay; தாமதித்தல் தெய்வம் நின்றுகேட்கும்.  -

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கா நோக்காமல் , கருதாமல்

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

முழுப்பொருள்
ஒருவன் முன்னே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையான சொற்களை கூடக்  கூறலாம். ஆனால் அவன் இல்லாத பொழுது, பின் விளைவுகளை எண்ணாத சொற்களை கூற கூடாது.  ஏனெனில் மனிதர்களைப் புரிந்துகொள்ளதான் நிறைய வாசிக்க வேண்டும் ஆனால் வெறுக்க சில வார்த்தைகள் போதும். கீழ்க்காணும் குறளையும் நினைவில் கொள்க.



ஒப்புமை
”கண்ணின்று கூறுத லாற்றா னவனாயின்” (கலி 378)
“கணமலை நன்னாட கண்ணின் றொருவர்
குணமேயும் கூறற் கரிதால் - குணனழுங்கக்
குற்ற முழைநின்று கூறும் சிறியவர்கட்
கெற்றால் இயன்றதோ நா” (நாலடி 353)

“காவா தவள்கண்ணறச் சொல்லிய வெஞ்சொல்” (சீவக 1069)

பரிமேலழகர் உரை
கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக. ('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக, இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.

மு.வரதராசனார் உரை
எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

பொருள்: கண் நின்று கண் அற சொல்லினும் - (ஒருவனது) கண் முன் நின்று கண்ணோட்டம் நீங்க (அவன் குறைகளைக் ) கூறினும், முன் இன்று பின் நோக்கா சொல் சொல்லற்க - (அவன்) முன் இல்லாமல் (அவனைப் ) பின் நோக்காமைக்கு ஏதுவாகிய சொற்களைச் சொல்லற்க.

அகலம்: நோக்காமைக்கு ஏதுவாகிய சொல்லை ‘நோக்காச் சொல்’ என்றார். அச் சொல்லாவது, ‘புறங்கூறல்’. ‘முன் இல்லாமல்’ என்பது பின் நின்று எனப் பொருள் தந்து நின்றது. கண்ணோட்டம் - இரக்கம் . நச்சர் பாடம் ‘பின்னோக்குஞ் சொல்’.

கருத்து: புறங்கூறல் கண்ணோட்டமின்மையினும் தீது.

Thirukkural - Management - Avoiding Backbiting
You can tell all the negative qualities and negative actions of someone in his presence. Look him in the eyes and tell him assertively why you do not like those qualities and actions. Be courageous and speak of someone's faults face to face is the direct message from Kural 184.

Better heartless words to a man's face
Than thoughtless ones at his back.

English Meaning - As I taught a kid - Rajesh
If you have an opinion or a feedback or a difference of opinion about a person, then courageously go to that person and speak to them about it face to face privately (one on one). Speak to them truthfully without hurting their feelings. [Because in the name of speaking bluntly we should not hurt others]. Speaking directly is better than talking behind the back. Because back biting / talking behind back / gossiping would have intended or unintended consequences which is generally impossible to reverse. Also talking behind back creates lots of negativity. 

Questions that I ask to the kid
What should you do if you have an opinion or difference of opinion or feedback about other person?
What is better than backbiting? or How can you avoid backbiting?
Why speaking directly and sorting out is better than backbiting? (backbiting has unintended consequences)