Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்

குறள் 1269
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் 
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு
[காமத்துப்பால், கற்பியல்,  அவர்வயின்விதும்பல்]

பொருள்
ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

நாள் -  தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

எழு - eẕu   s. pillar, post, கம்பம்; 2. a kind of weapon; 3. see ஏழு.

நாள் -  தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்

செல்லும் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

சேண் - அகலம்; நீளம்; சேய்மை; உயரம்; மலையினுச்சி; வானம்; தேவருலகம்; நெடுங்காலம்.

சென்றார் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

வரு - வரும் 

நாள் -  தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

வைத்து  - vaittu   part. வை³-. Anexpletive; ஓர் அசைச்சொல். இப்பாதகத்தைக் கண்டுவைத்தும் (சீவக. 681, உரை).

வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

ஏங்குதல் - ஒலித்தல்; அழுதல்; இரங்குதல்; திகைத்தல்; மனம்வாடுதல்; அஞ்சுதல்; கவலைப்படுதல்:இளைத்தல்.
 
ஏங்கு பவர்க்கு - ஏங்குபவர் - மனம் வாடுபவர்க்கு; கவலைப்படுவர்க்கு


முழுப்பொருள்
தொலை தூரம் சென்ற காதலரை எதிர் நோக்கி, எப்பொழுது திரும்புவார் என்றும் அவர் வரும் நாளை மனதில் வைத்து அவரையே அவருடன் கூடி இருந்த நாட்களை மனதில் நினைத்து ஏங்கி  வாடும் காதலிக்கு ஒரு நாள் கூட பல நாட்களாக தோன்றும்.

கவிஞர் வாலியின் வரிகளில் இதை ஒற்றிய சினிமா பாடல் ஒன்றின் சில வரிகள் கீழே .
"நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருசங்கள் ஆகும்
நீ என்னை நீங்கி சென்றாலே
வருசங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே"

ஒப்புமை

”எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல” (குறுந் 24:4)
“ஏழூர்ப் பொதுவினைக் கோரூர்” (குறுந் 172:5)
“ஒருநாள் நம்மில் வந்ததற் கெழுநாள்
அழுப என்ப” (ஐங்குறு.32)
“ஒவா தெழுமடங் குட்குவரத் தோன்றி” (பெருங்.1.43:122)
“பூசுசாந் தொருவர் பூசிற் றெழுவர்தம் மகலம் பூசி” (சீவக.116)
“தெய்வங்காள் என்செய்கேன் ஓரிரவே ழூழியாய்” (திருவாய் 5.4:8)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு - சேணிடைச் சென்ற தம் காதலர் மீண்டுவரக் குறித்தநாளை உட்கொண்டு, அது வரும் துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்கு; ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் - ஒரு நாள் பல நாள் போல நெடியதாகக் காட்டும். ('ஏழ்' என்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து நின்றது; 'ஒருவர் கூறை எழுவர் உடுத்து' என்றாற்போல. தலைமகள் வருத்தம் பிறர்மேலிட்டுக் கூறியவாறு. இதனான் இதுவும் தலைமகள் கூற்றாகாமையறிக. 'இரு நாள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் போலச் செல்கின்றது.

மு.வரதராசனார் உரை
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.

சாலமன் பாப்பையா உரை
தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.

இருவேறு உலகத்து இயற்கை

குறள் 374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளிய ராதலும் வேறு.
[அறத்துப்பால், ஊழியில், ஊழ்]

பொருள்
இரு - iru   adj. இரு-மை. 1. Great,spacious, vast; பெரிய மாயிரு ஞாலம் (குறள், 999).2. Black; கரிய. இருமலர்க் குவளை யுண்கண் (சீவக.1171).  

இருமை, duality, the two births, the present and future life.

இரு - பெரிய; கரிய; இரண்டு

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

இருவேறு - இரண்டு வேறு ஊழ் பயன்கள் இருப்பது.

ஊழ் - நியதி.

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

உலகத்து - உலகத்தினுடைய.

இயற்கை – இயல்பானதன்மை; வழக்கம் இலக்கணம் நிலைமை கொள்கை

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்

திரு வேறு – இதில் செல்வம் சேருவதற்கான விதி என்பது ஒன்று.

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

தெள்ளியர் - தெளிந்தஅறிவுடையவர்.

ஆதலும் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

தெள்ளியராதலும் வேறு – அறிவுடையராக இருத்தல் என்பது மற்றொரு விதமாய விதி.

முழுப்பொருள்
நாஞ்சில் நாடன்: உலகத்தின் இயற்கை இரண்டு வகையானது. செல்வம் என்பது ஒன்று, தெளிவு என்பது மற்றொன்று.

அறிவுடமையே பொருள் ஈட்டுவதற்கும் செல்வம் சேருவதற்குமான காரணம் என்பது எல்லோருக்கும் அறிந்தவொன்று. ஆனால் அறிவுள்ளவர்களிடல் திரு இல்லாததும், திரு உள்ளவர்களிடம் அறிவு இல்லாததும், இரு வேறு விதமான உழ்வினையால்தான் என்பதும் இவ்விதம் ஊழ் பொதுவாக அறிந்த கோட்பாடுகளுக்கு மாறாக இயங்குவது இயற்கையானது என்றும் கூறுகிறது இக்குறள். இக்குறளும் ஊழின் பெருவலி யாவுள என்பதை வலிந்து அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்நிலையை எடுத்துக்காட்டும் பழமொழிப் பாடலொன்று இவ்வாறு கூறும்:
“உரைசான்ற சான்றோர் ஒடுங்கி யுறைய 
நிரையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்” (பழமொழி.125)

நாலடியாரில் நன்றியில் செல்வம் என்னும் அதிகாரத்தில், வரும் இரண்டு பாடல்கள் இக்குறளின் கருத்தையொட்டி வருகின்றன.
புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே
உணர்வ துடையா ரிருப்ப – உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே
பட்டும் துகிலும் உடுத்து. (நாலடி 264)

இப்பாடலின் கருத்து: 
கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறி முள்ளியும் கத்தாழையும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர்.  இப்பாடலின் உள்ளுரைக் கருத்து: கறி முள்ளியும் கத்தாழைச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்துவன. அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மையும் இல்லை என்னும் பாடல் இது.

நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம் – தொல்லை
வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில். (நாலடி 265)

இப்பாடலின் கருத்து: 
இவ்வுலகில் நல்ல அறிவுடையோரும் நல்ல குணமுடையோரும் வறியராக இருப்ப, அவ்வறிவும் குணமும் அற்ற கீழோர் செல்வராக இருப்பதற்குக் காரணம் பழைய வினைப் பயனேயன்றி, எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் வேறு காரணம் இல்லை. அறிவொழுக்கம் அற்றவர் செல்வராக வாழ்வதற்குக் காரணம் ஊழ்வினையே! ஆயினும் அவரிடம் இரக்கத் தன்மையின்மையால், செல்வம் பெற்றும் ஒரு பயனும் இல்லை என்பது கருத்து.

மேலும் : அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.

மணக்குடவர் உரை
செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.

மு.வரதராசனார் உரை
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

சாலமன் பாப்பையா உரை
நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.


அருளியலும்.. பொருளியலும்..
நாம் இப்புவியில் வாழ இன்றைய தினம் அடிப்படைதேவை பணம் என்றால் மிகையொன்றுமில்லை எனக் கருதுகிறேன். அன்றாட வாழ்வில் நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, பண்டமாற்றுமுறை மறைந்து உழைப்பின் குறியீடாக, மதிப்பாக உள்ள அந்த பணத்தை/பொருளைச் சம்பாதிக்கும் முயற்சியே,  நமது அன்றாட வாழ்க்கை/நடவடிக்கைகள், பணிகள்.

இதன் நிமித்தமாக அன்றாடம் சகமனிதர்களுடன் உறவாட வேண்டியதாக இருக்கிறது. அந்த முயற்சியில் தெரிந்தோ, தெரியாமலோ நம்மால் அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

இது தவிர்க்கப்படவேண்டியதா, இல்லை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானா என சிந்தனை நமக்கு வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்கொள்ளும் துன்பம், பிரச்சினைகளுக்கு காரணம் என்ன?, நம்மால் பிறருக்கு துன்பம் எனில் பிறரால் நமக்கு துன்பம் என்பதும் சரிதானே:) அப்போதுதான் இது என்ன எப்படி என்பதை கணிக்க முடியும். வெளிவரவும் முடியும், அதே சமயம் பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தை நீக்க நம் பங்கு என சிந்தித்து செயல்படமுடியும்.

இந்த சூழ்நிலை நமக்கு பின்னர் தெரியவரும்போது என்ன செய்வது, தொழிலில், வணிக நடவடிக்கைகளில் இது சாதரணம் என எடுத்துக்கொள்வதா? , இல்லை நான் மிகவும் உணர்வுபூர்வமானவன். பணம் எனக்கு முக்கியமில்லை, மனிதமே முக்கியம் என பொருளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்வதா? பொருளியலா அல்லது அருளியலா ?

இவ்வுலகில் இனிது வாழ மனிதனுக்கு அருளியலும் வேண்டும், பொருளியலும் வேண்டும்

பொருள் மட்டும் இருந்தால்/சம்பாதிக்க வேண்டி இருந்தால் அவன் தனக்காகவும், தனக்கு கிடைக்கும் வசதிகளுக்காகவும் மட்டுமே வாழ்வை நடத்துவான். இது விலங்குநிலை வாழ்வு. அமைதியற்ற வாழ்வு. பொருளே பிரதானம் என்று வரும்பொழுது மனித தன்மை குறைந்துவிடும். அறிவு மட்டுமே அரசாளும். இதுவே இன்றைய உலகவாழ்வு. இது தன்னளவில் உகந்ததாக இருந்தாலும், நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு நன்றியானது அல்ல.

அருள் மட்டும் இருந்தால் அவன் உலகியலில், பொருளாதார வாழ்வில் தோற்றுவிடுவான். பொருள் அற்ற வாழ்க்கை பொருளற்ற வாழ்வாகிவிடும். அங்கேயும் அமைதி இழப்பு வரும். தன்னளவில் நிச்சயம் பாதிப்பு வரும். இது சமுதாயத்தை பாதிக்கும். இது நம் அனைவருக்கும் பொதுவானது. விதிவிலக்கானவர்கள் சிலர் இருக்கலாம். 

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு  (374)

எனவேதான் உலகியலில் அதிகமாக ஈடுபட்டவர்கள் அருளியலை இழக்கிறார்கள். அருளியலில் ஈடுபட்டவர்கள் உலகியலை இழக்கிறார்கள். இதுவே இன்றைய நிலை. போலித்தனமான அருளியலில் இருப்பவர்கள் ’எல்லாவற்றையும்’ அனுபவிக்கிறார்கள்:)

 எது எப்படி இருப்பினும் இரண்டும் இணைந்த வாழ்வே வெற்றியான வாழ்வு, சீரான வாழ்வு. 

சரி, நமக்கு வேண்டியது என்ன?

அருளியலையும், பொருளியலையும் இணைக்கும் வாழ்வை தியானம் கொண்டுவரும். வாழ்வில் தியானம் செய்வதை விடவும், வாழ்வையே தியான வாழ்க்கையாக மேற்கொள்வது சிறந்தது. அது வேறென்ன.. விழிப்புணர்வுதான், ஒவ்வொரு நொடியிலும்..!!!!!

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்தின்கண் விதி இரண்டு வேறு (வகைப்பட்டது); திரு(வினர் ஆதல்) வேறு தெள்ளியர் ஆதலும் வேறு -செல்வத்தை உடையவராதற்கு (உரிய விதி) வேறு ) அறிவை உடையவ ராதற்கு (உரிய விதி) வேறு.

அகலம்: பின்னர்த் ‘தெள்ளிய ராதல்’ என்று கூறுகின்றமையான், முன்னர்த் திருவினர் ஆதல் என்று கொண்டு பொருள் உரைக்கப்பட்டது. ‘ஆதல்’ இரண்டும் உருபும் பொருளும் உடன் தொக்க தொகைகள்.


கருத்து: செல்வந்த ராதற்கும் அறிவுடைய ராதற்கும் உரிய விதிகள் வெவ் வேறு.

Thirukkural - Management - Fate
The natural law of the world is that wealth and knowledge are two different things, differentiates Kural 374.

Twofold is the way of  the world 
Wealth is one, wisdom is another. 

There are people in possession of abundant wealth and there are people in possession of profound knowledge. Both, possession of abundant wealth and possession of profound knowledge, are the results of a person's fate. So to be wealthy and to be intelligent  are two different things. The Kural says that some are destined to be wealthy and some are destined to be intelligent. One cannot choose between these two as one's fate chooses what one deserves. 

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
1) தமிழிலக்கியங்களில் ஊழ்
இவ்வினைகளின் வலிமைபற்றிச் சமணர்களால் எழுதப்பட்ட நாலடியார் என்னும் நூலில் பழவினை என்னும் பெயரில் ஓர் அதிகாரமும், திருக்குறளில் ஊழ் என்னும் பெயரில் ஓர் அதிகாரமும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழ் என்ற சொல்லுக்கு, “இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி’ எனப் பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கின்றார். அன்றியும் ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே கருத்துடைய சொற்கள் எனவும் பரிமேலழகர் குறிப்பிடுகின்றனர். ஊழை நினைத்தால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வராமலிருப்பது அரிது. ஊழின் வலியை வற்புறுத்துவதற்கென்றே எழுதப்பட்ட காப்பியமாகக்கூட அதனைக் கருதலாம். இப்பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யாத கோவலன், கள்வன் எனக் கருதப்பட்டுக் கொல்லப்படுகிறான். முற்பிறப்பிலே கோவலன் குற்றமற்ற ஒருவன் சொல்லப்படுவதற்குக் காரணமாய் இருந்தான். அத்தீவினையின் பலனையே இப்பிறப்பிலே அவன் அனுபவிக்கின்றான். கன்மம் என்பதும் ஊழ் என்பதும் இதுதான்.

2) ஊழும் முயற்சியும்
இப்பிறப்பிலே நமக்கு நிகழ்வன யாவும் முற்பிறப்பிலேயே விதிக்கபட்டுவிட்டன் என்றல் நாமாக முயன்று செய்வதற்கென எதுவுமில்லை. நாம் செய்வது, செய்யாமலிருப்பது எல்லாம் முன்வினைப்பயனானால், வாழ்வில் ஊக்கம், முயற்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடம் எங்கே என்ற வினா எழலாம். “விதியை நம்பாதவன் தான் தமிழன். விதியை நம்பினால் முயற்சிக்கு இடமில்லை” என்று இன்று சிலர் பிர்சங்கங்கள் செய்து திரிகின்றார்கள். இது விதி என்பது என்ன என்று சரியாக விளங்கிக்கொள்ளாமையால் ஏற்படும் அநர்த்தம். ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ற பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதே விதி என்ற சொல்லுக்குக் கருத்து. எனவே விதையை நம்பினால் தான் முயற்சிக்கு இடமுண்டு. நம்பாவிட்டால் தான் இடமில்லை. பழவினை பயனை நுகரும்போது நமது முயற்சிக்கும் இடமுண்டு என்பதைக் காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்கள் ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கியுள்ளார். பழவினையின் பயன், ஒருவன் கடன்பட்டிருத்தலை ஒத்தது. தொடக்கத்தில் அவனுடைய உழைப்பிலே பெரும்பகுதி அவனுடைய பழைய கடனைத் தீர்ப்பதிலேயே செலவாகிவிடும். தனது உழைப்பு முழுதும் கடனை அடைப்பதிலேயே செலவாகிவிடுகிறது என்று அவன் உழைக்காமல் இருக்கலமா? அங்ஙனம் இருப்பின், அவனுடைய கடன் மேலும் மேலும் பெருகும். அங்ஙமன்றி அவன் உழைக்கத் தொடங்கினால் எவ்வளவு அதிகம் உழைக்கிறானோ அவ்வளவுக்கு அவனுடைய கடனும் குறையும். பின், பணத்தை சேர்க்கவும் இடமுண்டு. அது போலவே, ஊழினால் துன்பப்படுகிறவன் முயற்சி செய்யாமலிருந்தால் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாவான். முயற்சி செய்தால் அதற்கேற்ப அவனது துன்பம் குறையும். 

நமது வாழ்வை ஒரு “பிறிட்ஜ்” விளையாட்டுக்கு ஒப்பிடுகிறார் பேராசிரியர் ராதாகிருஷ்ணன். இவ்விளையாட்டிலே நமக்குக் கிடைக்கும் சீட்டுகளைப்போல நமது பழவினையை வைத்துக்கொள்ளலாம். இச்சீட்டுகளை நாம் நம் விருப்பப்படி தெரிந்தெடுப்பதில்லை. சீட்டுகளைத் தெரிந்தெடுக்க நமக்கு உரிமை இல்லாவிடினும், அச்சீட்டுகளைக்கொண்டு வெற்றியோ, தோல்வியோ ஈட்டும் வாய்ப்பு நமக்கு உண்டு. இதைப் போலவே, பழவினையைத் தெரிந்தெடுக்க அதிகாரம் இல்லாவிடினும், அதனை வைத்துக்கொண்டு மேலே ஆக்குவதோ அழிப்பதோ யாவும் நம் கையிலேயே உள்ளது. 

வினைக்கண் வினைகெடல் ஓம்பல்

குறள் 612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை 
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வினை தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

வினைக்கண் - செய்யும் செயலின் (கடினமின்மையின்) மீது உள்ள கண்ணோட்டத்தில் 

வினை தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

கெடல் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

வினைகெடல் - செய்யும் செயல் கடினம் என்று எண்ணும் போது அல்லது இடர்கள் வரும்போது

ஓம்பு - பாதுகாத்தல், பேணுதல், காத்தல், 
ஓம்பல் - செய்யும் செயலை பேணவேண்டும்
ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

வினை தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.
வினைக்குறை - ஒரு செயலை செய்யாமல் பாதியில் 

குறை - குற்றம்; குறைபாடு; வறுமை; எஞ்சியது; மனக்குறை; தவறு; நேர்த்திக்கடன்; இன்றியமையாப்பொருள்; செயல்; வேண்டுகோள்; வேண்டுவது:துண்டம்; ஆற்றிடைக்குறை; சொல்லின்எழுத்துக்குறை; ஆறாம்வேற்றுமை; உண்ணுந்தசை; அரசிறை.

குறை - இன்றியமையாதப் பொருள் (பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே' என்று  புறநானூறு [188]  கூறுகிறது. 

தீர்-தல் - tīr-   4 v. [T. tīru, K. tīr, M.tīruka.] intr. 1. [Tu. tīruni.] To end, expire,vanish; உள்ளதொழிதல். 2. To be completed,finished, consummated; முற்றுப்பெறுதல் வேலைதீர்ந்துவிட்டது. 3. To separate; to leave; tocease, as pain or disease; to be cleared up, as adoubt; to be freed, as from a curse or its effects;நீங்குதல். திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு (குறள்482). 4. To go, proceed; போதல் (பிங்.) 5.To be absent, non-existent; இல்லையாதல். பாய்தூதிப் படர்தீர்ந்து (கலித். 66). 6. To die, perish;அழிதல். சென்று தீர்வன வெனைப்பல கோடியுஞ்சிந்தி (கம்பரா. முதற்போர். 238). 7. To pass; tobe spent; கழிதல் சிலதினங்க டீர்ந்துழி (கம்பரா.திருவவ. 43). 8. To be exhausted, used up;செலவாய்ப்போதல். கைப்பணமெல்லாம் தீர்ந்தது.ஆயிரயோசனையாழமுந் தீர (கம்பரா. சேதுபந். 45). 9.To belong absolutely; உரிமையாதல். திருமகட்கேதீர்ந்தவாறென்கொல் (திவ். இயற். 1, 42). 10. Tobe determined, decided; நிச்சயித்தல் தீர்ந்த  

தீர் - இறுதியை அடைதல்
தீர்ந்து - விலகியது, முற்றம் சோர்வடைந்த
தீர்ந்தாரின் - முற்றம் சோர்வடைந்து செய்யாது விலகியவர்

தீர்ந்தன்று - விலகிவிடும்

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் பொழுது, அது கடினம் (செயலின் கடினத்தினாலோ அல்லது நேரத்தினாலோ அல்லது இடர்களினாலோ) என்று எண்ணும் பொழுது செய்யும் செயலை பேணுதல் வேண்டும். 

அவ்வாறு செய்யாது செய்யும் செயலை பாதியில் விட்டுவிட்டு சோர்வடைந்து செயலில் இருந்து நீங்கியவரை இவ்வுலகமும் கைவிடும். 

மற்றும் ஒரு குறளில் இதை பற்றி கிட்டத்தட்ட இதே பொருளில் சொல்கிறார் திருவள்ளுவர்.
எண்ணுவம் என்பது இழுக்கு. (சுட்டியை சொடுக்கவும்)

இதனை கிட்டதட்ட இதே பொருளில் சற்று மாறுபட்டு உள்ள ஒரு ஆங்கில வாக்கியம்
"When you really want something to happen, the whole world conspires to help you achieve it". - The Alchemist (Paulo Cohoelo) 

பரிமேலழகர் உரை
வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று-வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக் கண் வினைகெடல் ஓம்பல்-அதனான் செய்யப்படும் வினைக் கண் தவிர்ந்திருத்தலை ஒழிக. 

விளக்கம் 
(குறை-இன்றியமையாப் பொருள். அது ''பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே'' [புறநா. 188] என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.)

மணக்குடவர் உரை
வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று. இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது. 

மு.வரதராசனார் உரை
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.

Thirukkural - Management - Perseverance
The world does not consider a person persistent who considers the task at hand as tough and gives up execution of that task. On the contrary, the world recognizes and accepts a person who perseveres to complete the task undertaken, supports Kural 612.

The world gives up those who give up: 
Stick to your task. 

One of the purposes of living is to have the responsibility to complete a task undertaken. The saying 'Winners never quit and quitters never win’ probably is an offshoot of this thought. 

English Meaning - As I taught a kid - Rajesh
While doing a work and moving towards a goal, one might find it difficult or get self doubts, one might face challenges, yet without deviating from the work and without giving up the work, one should continue pursuing the work. If one gives up in the middle of work, then world, scholars, managers will give up on him/her and not respect him/her

Questions that I ask to the kid
What happens if we don't do a work properly?
What happens if we don't complete a work?
What happens if we give up on our work/mission/goal?
Whom will the Scholars/world/(சான்றோர்கள்) not respect?

நிலையின் திரியாது அடங்கியான்

குறள் 124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப்  பெரிது
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

நிலையின் - நிலையில்

திரிதல் - அலைதல்; எழுத்துமாறுதல்; பால்தன்மைகெடுதல்; கெடுதல்; சுழலல்; வேறுபடல்; சலித்தல்; மயங்குதல்; கைவிடுதல்; திருகுறுதல்; போதல்; திரும்புதல்.

திரியாது - அலையாது, கெடாது, மயங்காது, கைவிடாது

அடக்கம் - மனமொழி மெய்கள் அடங்குகை; கீழ்ப்படிவு பணிவு அடங்கியபொருள்; மறைபொருள் கொள்முதல் பிணம்அடக்கம்செய்தல்.

அடங்கியான் - அடங்குதல் - aṭaṅku-   5 v. intr. 1. Toobey, yield, submit, to be subdued; கீழ்ப்படிதல் நிலையிற் றிரியா தடந் யான் (குறள், 124). 2. Toshrink, become compressed; சுருங்குதல் தழற்பசியடங்கிடாது (கி. பூ 20, 6). 3. To cease;  aṭaṅku-   5 v. intr. 1. Tobe close together, thick or crowded; நெருங்குதல். அலவன் கண்பெற வடங்கச் சுற்றிய (கலித். 85).2. To lie, lie down; கிடத்தல். வெள்ளேற்றெருத்தடங்குவான் (கலித். 104).

தோற்றம் - காட்சி; விளக்கம்; சாதி; படைப்பு; சாயை; புகழ்; பார்வை; உயர்ச்சி; உற்பத்தி; பிறப்பு; உருவம்; தன்மை; வலிமை; சொல்மாலை; உறுப்பு; உத்தேசம்; நாடகப்பிரதேசம்; எண்ணம்; மாயை; இருவகைத்திணை; காண்க:உயிர்த்தோற்றம்.

மலை - malai   n. perh. மல்லல். [K. male.] 1.Hill, mountain; பருவதம். மலையினு மாணப் பெரிது(குறள், 124). 2. Collection, aggregation; ஈட்டம்.சொன்மலை (திருமுரு. 263). 3. Abundance, bigness, as a mountain; மிகுதி. Colloq.

மலையினும் - மலையை விட

மாணப்  - மாண் -. Greatness;glory; splendour; excellence; dignity; மாட்சிமை., மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.

பெரிது - பெரிது, மிகவும்

முழுப்பொருள்
தான் கொண்ட நெறிகளில் இருந்தும், தன் கொள்கைகளில் இருந்தும், நிலை மாறாமல், மன உறுதியுடன் அடக்கத்துடன் வாழ்பவனின் உயர்வானது மலையினை விட பெரிதாகும்.

இக்குறளுக்கு எடுத்துகாட்டாக சம காலத்தில் பலர் உள்ளனர். சிகரம் தொட்டும் அடக்கத்துடன் இருக்கும் அவ்வுயரிய பண்பே அவர்களுக்கு மேலும் சிறப்பை கொடுக்கின்றது.

இதிகாச உதாரணம் கூற வேண்டும் என்றால், அனுமனை கூறலாம். மிக வலிமை பெற்றவனானாலும் கூட, எந்த இடத்திலும் அதை காட்டிக் கொள்ளாமல், ராமனுடைய கடை நிலை பக்தன் மட்டுமே என்று அடக்கத்துடன் நடந்து கொள்வது, அனுமனுடைய சிறப்பை மேலும் உயர்த்துகிறது .

ஒப்புமை
“ஆன்றோர் போலத்
துளக்கம் இல்லாத் திருத்தகு நிலைமைய” (பெருங் 1.50:4-5)
“மலையணைய நிலையுடைய மாதவர்கள்” (மேரு.சமவ.49)

பரிமேலழகர் உரை
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.).

மணக்குடவர் உரை
தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.

மு.வரதராசனார் உரை
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

பொருள்: நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - (தனது இல் வாழ்க்கை) நிலையினின்று வேறுபடாது (உளம், நா, உடல்) அடங்கியவனது தோற்றம், மலையினும் மாண பெரிது ‡ மலையினும் மிகப் பெரியது.

அகலம்: தோற்றம் - விளக்கம். தாமத்தர் பாடம் ‘நிலையிற் பிரியா’. இல்வாழ்க்கை நிலையினின்று வேறுபடாது அடங்குவதாவது, இல்வாழ்க்கை யின்கண் அடக்கி யாள வேண்டியவர்களை அடக்கி யாண்டுகொண்டே தான் அடங்கி யயாழுகல். ‘கருமஞ் சிதையாமல்’ என்னும் தொடக்கத்துக் குறளையும் நோக்குக. முந்திய மூன்று குறள்களால் பொதுவான அடக்கத்தைக் கூறினார். இக் குறளால் பிறருக்கு அடங்கி யயாழுகுதலின் பெருமையைக் கூறினார்.

கருத்து: இல்வாழ்வானது அடக்கம் அவனுக்கு மிக உயர்ந்த பெருமையைத் தரும்.

Management - 3 big questions of a king
A legend is that a King told one of his Ministers to find answers to three of his pressing questions. They were: 1) What is bigger than the earth? 2) What is deeper than an ocean? 3) What is taller than a mountain? The Minister explored all the possibilities to find answers to the King’s questions.

He could not get convincing answers to convince the King. He was much concerned that he would fail in fulfilling his responsibility. His daughter, on reading the disturbances on his face, asked him what was bothering him. The Minister explained to her the King’s expectations and his inability to find convincing answers to his questions. His daughter said, “My teacher told us, ‘You can find answers to all your questions in Thirukkural.’ My teacher is right as he always refers to Thirukkural to answer our questions. You too can refer to Thirukkural to find answers to your questions.” The Minister started to refer to Thirukkural to find answers to the King’s questions. He, like a detective with a magnifying glass, was meticulously reading the Kurals as he had a purpose. When he reached the Chapter 11, he found answer to the first two questions. 

Kural 102 provided the answer to the King’s first question ‘What is bigger than the earth?’

குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

Given in time, even a trifling help Exceeds the earth. A timely help, even though small, is considered and will be treated by the person helped as bigger than the earth. Remember the old saying, ‘A friend in need is a friend indeed.’ The size of the help does not matter, but the time of the help matters the most.

Kural 103 provided the answer to the King’s second question ‘What is deeper than an ocean?’ 
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது (103). 

Help given regardless of return Is wider than the sea. An unconditional help, like a mother’s love, that is helping someone without expecting any favor in turn, is considered deeper than an ocean. Somehow, we have become selfish and
we, before rendering any help, calculate the return on investment. When we expect something in return to the help provided to others that is not true help. Altruism is helping someone just for the sake of helping. An often told story is that a sadhu was bathing in the river Cauvery in Tamilnadu. He noticed a scorpion being carried away in the river. He wanted to save the scorpion, touched that to put that on the bank of the river. The scorpion stung his hand when he touched that. The sadhu dropped that. He attempted again, it stung again and he dropped the scorpion again. He kept on doing that to save the scorpion. An onlooker irritatingly commented, “Swami, you know a scorpion stings. In spite of that you are trying to save that.” The sadhu replied, “The nature of a scorpion is to sting. The nature of a sadhu is to help others despite difficulties.” 

When the Minister continued reading further, he found the answer to the King’s third question ‘What is taller than a mountain?’ in Kural 124. 
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது (124). 
The steadfast self-controlled towers aloft Taller than a mountain. If a person can remain polite and humble when he gets power, positions, personal gains, authority, and wealth, the ability to remain polite is considered taller than a mountain.

The Minister, while reading further, found answers to many of his pressing personal and professional problems. 

English Meaning - As I taught a kid - Rajesh
The stature of one, who doesn’t diverge from the right path (values, policies, discipline, character etc.) and remains restrained, will belittle a mountain. Despite reaching heights, these people are humble which itself gives more heights for them. We can given Lord Hanuman as an example because despite his humongous strength he always remained humble and remained as bhakta of Lord Rama.

Questions that I ask to the kid
What can belittle a mountain?
What happens when you don't diverge from the right path?

உள்ளம் உடைமை உடைமை

குறள் 592
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை 
நில்லாது நீங்கி விடும்.
[அரசியல், பொருட்பால், ஊக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உள்ளம் -  மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

பொருளுடைமை - பொருள் + உடைமை
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
பொருள்  - நிலையாமை கொண்டது

நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

நில்லாது - நிற்காது; நெடுநேரம் நிற்காதது. நிலையில்லாதது. 

நீங்கி  - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

விடும் - விடுதல்

முழுப்பொருள்
இக்குறள் பொருளுடையார் எல்லாமுடையார் என்று தவறாக கருதிக்கொண்டு இருப்போருக்குக் கூறப்பட்டது.

ஒருவனுக்கு எது சொத்து ? அவன் பிள்ளைகளா ? அவன் வங்கியில் வைத்துள்ள சேமிப்பா ? அல்லது அவன் வாங்கிக்குவித்து உள்ள பொருள் / நிலமா ? இது எதுவுமே இல்லை என்கிறார் திருவள்ளுவர். 

ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும். 

ஆனால் பொருள் எனப்படுவது உடம்பில் வேறாய் அழியகூடியது. உடம்பின் உழைப்பில் பெறப்படும் செல்வமானது பொருள். அந்த பொருட்செல்வம் நிலை நில்லாதது. அது எந்து நேரத்திலும் நம்மை விட்டு விலகிச்செல்லக்கூடியது. 

ஆதலால் ஒருவனுக்கும் ஊக்கம் மட்டுமே நிலைத்து நிற்கும் உடைமை (சொத்து). மற்ற உடைமைகள் (சொத்து) நிலைநிற்காது ஒடி விடும். 

இக்குறள் ஊக்கத்தின் அவசியத்தையும் மற்றும் செல்வத்தின் நிலையாமையையும் சுட்டிக்காட்டுகிறது. 

பி.கு: செல்வத்தின் நிலையாமைகீழ்க்காணும் குறளில் முன்பு கண்டோம்.
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் 
போக்கும் அதுவிளிந் தற்று (சுட்டியை சொடுக்குக)

ஒப்புமை
“உள்ளமுடை யான்முயற்சி செய்யஒரு நாளே
வெள்ளநிதி வீழும்விளை யாததனின் இல்லை” (சீவக.496)

“அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடைய ராயின் திரிந்தும் வருமால்
பெருவரை நாட பிரிவின் றதனால்
திருவினும் திட்பமே நன்று” (பழமொழி.136)

“பிரஹலாதனிடமிருந்து அதைப் பெறுக! அவ்வேதத்தை நீர் உமதென்றாக்குக! அதுவே வெல்லும் வழி.” இந்திரன் “ஆசிரியரே, நான் அவரை வெல்லமுடியாது. அதற்குரிய படைக்கலங்கள் என்னிடமில்லை” என்றான்.

புன்னகைத்து “உம் படைக்கலம் எப்படியென்றாலும் வெல்லவேண்டுமெனும் முனைப்பே. அதைக் கொள்க!” என்றார் சுக்ரர். “

படைக்கலத்தேர்ச்சி என்பது உள்ளம் தேர்வதே. சொல்லோ அம்போ வெறும் கருவிதான்


பரிமேலழகர் உரை
உள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள் உடைமை நிலை நில்லாது நீங்கிப் போம். 

விளக்கம்
('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.) ---

மணக்குடவர் உரை
உடைமையாவது ஊக்கமுடைமை; பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும். பொருள் உடையார்க்கு எல்லா முண்டாம் என்பார்க்கு இது கூறப்பட்டது. 

மு.வரதராசனார் உரை:
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.


Thirukkural - Management - Thoughts
Thought in the mind hath made us.
What we are by thought was wrought and built.
If a man's mind has evil thought,
Pain comes on him as comes the wheel the ox behind.
If one endures in purity of thought, Joy follows him as his own shadow-sure.
- James Allen

“Thought,” according to Oxford Advanced Learner's Dictionary [1996, p. 1243),“is the power or process of thinking.” Thoughts are things. Our thoughts make our lives. A universally accepted phrase is ‘You become what you think about.’

Let us learn from Valluvar his thoughts on thoughts. Kurals help us understand the importance of positive thoughts to lead a positive and successful life. William James, the great psychologist,  said, “A man can alter his life by altering his thoughts.” Valluvar is the predecessor to all these thoughts on thoughts. Possessing powerful and positive thoughts is the right possession. They remain with a person throughout his life. That is the thought in Kural 592.


The real asset  is a resolute mind- 
Riches and lands fleet. 

Positive thoughts are invaluable and permanent. The other possessions, wealth and material things, though appear to be present with one will disappear anytime. Material possessions are temporary, as  they do not have long lasting values. 

English Meaning - As I taught a kid - Rajesh
Willpower and Perseverence is the real asset of a person. Wealth or any other asset would not stay with us and would run away from us

Questions that I ask to the kid
Which is true asset?
Which asset will run way?

அனிச்சப்பூக் கால்களையாள்

குறள் 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை
[காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]

பொருள்
அனிச்சப்பூக் - அனிச்சம் - மோந்தால்வாடும்பூவகை.

களைதல் - பிடுங்கியெறிதல்; நீக்குதல்; ஆடையணிகழற்றல்; அழித்தல்; குழைதல்; அரிசிகழுவுதல்; கூட்டிமுடித்தல்.

கால் - நாலில்ஒன்று; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும்'வ' என்னும் பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

கால்களையாள்அடி காம்பை கலையாமல் 

பெய்-தல் - pey-   1 v. [M. peyyuga.] intr.& tr. To rain, fall, as dew or hail; மேனின்றுபொழிதல். பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55).--tr. 1. To pour down, pour into; வார்த்தல்.பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (புறநா. 115). 2.To put, place, lay, put into, serve up, as foodin a dish; கலமுதலியவற்றில் இடுதல். உலைப்பெய்தடுவது போலுந் துயர் (நாலடி, 114). 3. To throwout, throw aside; எறிந்து போகடுதல். பார்த்துழிப்பெய்யிலென் (நாலடி, 26). 4. To insert, interpol-ate, as in a text; இடைச்செருகுதல். 5. To give,confer; கொடுத்தல். உயிர்க்கு . . . வீடுபே றாக்கம் பெய்தானை (தேவா. 975, 7). 6. To make;to settle, appoint; அமைத்தல். பிரான் பெய்த காவுகண்டீர் . . . மூவுலகே (திவ். திருவாய். 6, 3, 5). 7.To spread; பரப்புதல். தருமணல் தாழப் பெய்து(கலித். 114). 8. To discharge; புகவிடுதல். கருந்தலை யடுக்கலி னணைகள் . . . . பெருங்கடலிடைப்பெய்து (கம்பரா. கும்ப. 248). 9. To write, draw;எழுதுதல். பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித்.143). 10. To put on, as harness; to

பெய்தாள் அணிந்தாள் 

நுகப்பிற்குநுகம் - எருதுகளின்கழுத்தில்பூட்டும்மரம், நுகத்தடி; காண்க:நுகத்தாணி; பாரம்; வலிமை; சோதிநாள்; மகநாள்; கதவின்கணையமரம்

நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான.

படாஅ - படா - paṭā   adj. U. barā. Large, great;பெரிய

பறை - தோற்கருவி; தப்பு; பறையடிக்குஞ்சாதி; வட்டம்; சொல்; விரும்பியபொருள்; ஒருமுகத்தலளவை; மரக்கால்; நூல்வகை; வரிக்கூத்துவகை; குகை; பறத்தல்; பறவைஇறகு; பறவை.

முன் குறிப்பு 
அனிச்சை அல்லது அனிச்சம் (Anagallis arvensis, Scarlet pimpernel) மிகவும் மென்மையான இதழ்களினை உடைய ஒரு பூக்களைக் கொண்ட ஒரு தாவர இனம். முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ. இதன் இதழ்கள் மென் செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களாகக் காணப்படும். இது சூரியன் இருக்கும் திசையில் இலைகளைத் திருப்பும்.



முழுப்பொருள்
அனிச்சம் பூவின் அடி காம்பு பகுதியை கலையாமல், இவளின் மெல்லிய இடையில் அணிகிறாளே. இனி அந்த இடுப்பிற்கு மங்கள ஒலி  இசைக்கப் போவதில்லை. அனிச்சம் பூவே மிகவும் மிருதுவானது. அதனினும் மிக மெல்லியது அவள் இடை என வள்ளுவர் அழகாக உரைக்கிறார்.

பரிமேலழகர் உரை
(பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது.) அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் - இவள் தன் மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா. (அம் 'முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும். முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறை படுதலும் இலக்கணக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.).

மணக்குடவர் உரை
அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்: இனி இவளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை. இஃது இடையினது நுண்மை கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

சாலமன் பாப்பையா உரை
என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.

அனிச்சம் பூ தமிழ் சினிமாவில்  
விக்ரம் நடித்த தாண்டவம் படத்தில் கூட அனிச்சம் பூவை குறிப்பிட்டு ஒரு அழகிய பாடல் ஒன்று உள்ளது..அதன் முதல் சில வரிகள் கீழே.

"அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி கெறங்க வைக்கும் பேரழகி
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்தே நான் போனேனே
சண்டாளி உன்கிட்ட சருகாகி நின்னேனே"

இன்சொலால் ஈரம் அளை

குறள் 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் 
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

இன்சொல் - இனிமையான சொல்; இனிமை பயக்கும் சொல்
இன்சொலால் - இன்சொல் + ஆல் - இனிமையான சொல் என்னவென்றால்
ஆல் - அசைநிலை

ஈரம் - நீர்ப்பற்று; பசுமை குளிர்ச்சி அன்பு அருள் அழகு அறிவு குங்குமப்பூ பகுதி கரும்பு வெள்ளரி; īram   s. wetness, humidity, moisture, நனைவு; 2. coolness, agreeableness, குளிர்ச்சி; 3. kindness, affection, அன்பு; 4. grace, கிருபை; 5. knowledge, wisdom, அறிவு; 6. freshness, greenness, பசுமை.

அளை - தயிர்; மோர் வெண்ணெய் புற்று பொந்து குகை ஏழாம்வேற்றுமையுருபு.
அளை - (வி)துழாவு; கல தழுவு

(அளை + கிறேன், ந்தேன், வேன்) - கலந்து

இப்படிறு - படிறு - வஞ்சனை; பொய்; அடங்காத்தனம்; குறும்பு; களவுப்புணர்ச்சி; கொடுமை.

இலவாம் - இல்லாமல்
இப்படிறு இலவாம் - பொய்மை / வஞ்சனை இல்லமால்; வாய்மையுடன்

செம்பொருள் -  உண்மைப்பொருள்; நேர்பொருள்; சிறந்தபொருள்; முதற்பொருளானகடவுள்; அறம்.
(மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின், 'செம்பொருள்' எனப்பட்டது.)

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
கண்டார் - கண்டவர்
செம்பொருள் கண்டார்  - அறத்தினை உணர்ந்தவர்

வாய்ச்சொல் - வாயினின்றுவருஞ்சொல்; வெறுஞ்சொல்; துணைச்சொல்.

முழுப்பொருள்
இன்சொல் என்பது என்னவென்றால் நெஞ்சுடன் அன்பு கலந்த அன்பு வெளிபடுகின்ற வாய்மையுடன் கூடிய வஞ்சனை கலக்காத சொல்லே இனிமையான சொல். இந்த மெய்பொருளை அறிந்த அறம் அறிந்தவர்களின் வாய்ச்சொற்களாக இன்சொல் இருக்கும்.

1) இந்த இன்சொல் எல்லோரிடமும் கொடுக்கபட வேண்டும்.

2) வஞ்சனைகள் இல்லார் அறத்தினை உணர்ந்தாலும், ஒருவருக்கு அன்பு நிறைந்த உள்ளமில்லையானால், அவருடைய வாய்மொழியானது இன்மொழியாயிராது. அதனால் தான் அளை என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

யோசித்துப் பார்ப்போம், நமது பேச்சில்  எவ்வளவு அன்பு இருக்கிறது என்று. கோபம் இருக்கும், வெறுப்பு இருக்கும், சந்தேகம் இருக்கும், அதிகாரம் இருக்கும், கிண்டல், நக்கல், நையாண்டி  எல்லாம் இருக்கும்.  அன்பு இருக்குமா ?  அன்பு இல்லாத பேச்சு இன் சொல் அல்ல. 

அறத்தினை உணர்ந்து பேச வேண்டும். அறம் என்றால் என்ன என்றே தெரியாவிட்டால்  எப்படி பேசுவது? பேசாமல் இருப்பது நலம். அறம் அல்லாதவற்றை  பேசுவது இனிய சொல் அல்ல. நல்லவற்றை, பயனுள்ளவற்றை மட்டும்தான் பேச வேண்டும். 

3) அதேபோல, அன்பு நிறைந்தவராயிருந்தாலும், சுயநலங்காரணமாக, வஞ்சனைக் கலந்த செயற்பாடு உடையவரானாலும், இனிய சொற்கள் வெறும் மேல் பூச்சாக்க இருக்குமே தவிர உள்ளார்ந்ததாக இராது. அதனால் தான் இப்படிறுஇலவாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

பொய் கலவாமல் பேச வேண்டும்.  பேசுகிறோமா?  உண்மை பேச முடியாவிட்டால், பேசாமல் இருந்து விட வேண்டும்.  எவ்வளவுதான் அன்பாக பேசினாலும், அதில் பொய் இருந்தால், அது இனிய சொல் அல்ல.  சிலர் மற்றவர்களை வானளாவ புகழ்வார்கள். மனதுக்குள் வைத்துக் கொண்டே. அவர்களின் புகழ்ச்சியில் உண்மை இல்லை. யோசித்துப்பார்த்தால் எத்தனையோப் பேர் மனதில் உண்மையான அன்பில்லாமல் நம்மிடம் அன்பாய் இருப்பது போன்று பாசாங்கு செய்வர். அது தவறு. 

4) இதன் காரணம் பற்றியே இரண்டையும் இணைத்தே கூறியது.

இவ்வதிகாரத்தின் முதற்குறளிலேயே இன்சொல் என்பதன் விளக்கத்தை வள்ளுவர் கூறுவது கவனிக்கத்தக்கது,

மேலும்: அஷோக்

சில கவிதைகள்

ஒருவர்க்கொருவர் நாம்
பரிமாறும் மென் சொற்கள்
பத்திரம் கொள்கின்றன
வானகத்தின் காப்பறையில்.
ஒரு நாள் அவை மழையென
வீழும் வையகத்தில்.
விரியுலகெங்கும் 
துளிர்க்கும் பசுமையாய்.
%
ரூமி

ஒப்புமை
”அன்புடை நன்மொழி அளைஇ” (முருகு 292)
“அன்புடை நன்மொழி இரவலர்க் கீந்த” (சிறுபாண்: 93)
“அன்புடன் அளைஇய அருள்மொழி” (மணி 5:63)



பரிமேலழகர் உரை
[அஃதாவது, மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும், விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதது ஆகலின், விருந்தோம்புதலின்பின் வைக்கப்பட்டது.)

இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?

மு.வரதராசனார் உரை
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

சாலமன் பாப்பையா உரை
அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: இன்சொல் ஈரம் அளை படிறு இல ஆம் - இனிய சொற்கள் அன்போடு கலந்து குற்றம் இல்லாதன வாம்; செம்பொருள் கண்டார் வாய் சொல் - (அன்றியும்) மெய்ப்பொருள் உணர்ந்தார் வாயினின்று வரும் சொற்களாம்.

அகலம்: இன் சொல் என்பது ‘இலவாம்’, ‘வாய்ச் சொல்’ என்னும் இரண்டு பயனிலைகளைக் கொண்டு நின்றது. தருமர் பாடம் ‘இன்சொலா யீரம்’ ; ‘காண்பார் வாய்ச் சொல்’. மற்றை நால்வர் பாடம் ‘இன் சொலா லீரம்’. இகர அளபெடை இசை நிறைக்க வந்தது. ஆல் என்பது அசை. ‘மாசற்ற நெஞ்சுடையார் வன்சொ லினிது’- நன்னெறி.

கருத்து: அன்போடு கலந்து குற்றமற்றதும், மெய்ப் பொருளுணர்ந்தார் வாயினின்று வருவதும் இனிய சொல்லாம்.

(ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.
                                             --- திருமந்திரம்

இதன் பொருள் ---
உண்ணப் புகும்பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும், பசுவிற்குச் சிறிது உணவு கொடுத்தலும், வறியார்க்குச் சிறிது சோறிடுதலும், அவ்வாறிடும் பொழுது இன்சொல் சொல்லுதலும் எல்லார்க்கும் இயல்வனவே.


ஆரம் என்பு புனைந்த ஐயர்தம்
         அன்பர் என்பது ஓர் தன்மையால்
நேர வந்தவர் யாவராயினும்
         நித்தம் ஆகிய பத்தி முன்
கூர வந்து எதிர்கொண்டு, கைகள்
         குவித்து நின்று, செவிப்புலத்து
ஈரம் மென் மதுரப்பதம் பரிவு
         எய்த முன்உரை செய்தபின்.   
                                   --- பெரியபுராணம்.

இதன் பொருள் ---
எலும்பினை மாலையாக அணிந்த சிவபெருமானுடைய அடியவர் என்னும் முறைமையால், தம்மிடத்துப் பொருந்த வந்தவர்கள் யாவராயினும், தாம் நாளும் இயல்பாகச் செய்து வரும் பத்திமையால் முற்பட வந்து அவர்களை எதிர்கொண்டு, கை குவித்து வணங்கி, நின்று, அவர்தம் செவிகளில் குளிர்ந்த, மென்மையான, இனிய மொழிகளை அவர் விரும்புமாறு முதற்கண் சொல்லிய பின்பு.

அடியவரை வரவேற்கும் சொற்கள் மூவகைப் பண்பினவாய் அமைய வேண்டும். முதலாவதாகக் குளிர்ந்த மொழிகளாக இருத்தல் வேண்டும். ஈண்டுக் குளிர்ச்சி அன்பின் மேலதாம். `ஈரம் அளைஇ` (குறள், 91) என வருவதும் காண்க. இரண்டாவது மென்மையாக இருத்தல் வேண்டும். மூன்றாவது இனிமையை யுடையவாக இருத்தல் வேண்டும். இதுவே ``ஈரமென் மதுரப்பதம்`` எனப்படும்.

Thirukkural - Management - Communication - Pleasant speech
Words spoken by a person of character, discipline, humility, and concern are always pleasant to listen to as those words do not come just from the mouth of that person but they come from the heart of that person, according to Kural 91.

Those are sweet words which men of virtue speak
Mingling t\love with sincerity.

Whatever comes from a person's heart goes to another person's heart. Words that come from the heart not only please the ears of the listeners but also create love and positive feelings in the hearts of the listeners. An emotionally matured person never uses words that are cunning and harmful. So, a person is known not only for what he speaks but also for how he speaks.

English Meaning - As I taught a kid - Rajesh
The words uttered by enlightened scholars will only be kind words that , carry(and display) love in its soul and are honest devoid of any malice /self-interest etc.

Kind words should really have love and compassion displayed because our words should not hurt anyone even for their mistakes. That's why Thiruvalluvar uses 'ஈரம் அளை'  i.e. mixed with love. Even kind words must be honest. It cannot be false words to butter someone. Kind words should not be used to sugar coat self-interests, malicious, cunning thoughts. That's why Thiruvalluvar uses 'இப்படிறு இலவாம்"

Questions that I ask to the kid
How would the words uttered by enlightened scholars be?

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

குறள் 332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் 
போக்கும் அதுவிளிந் தற்று.
[அறத்துப்பால்,துறவறவியல், நிலையாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கூத்தாட்டு - நடிப்பு, நடனம்.
கூத்தாட்டு - கூத்து / நாடகம் / திரை (சினிமா)
கூத்து - நடனம்; பதினொருவகைக்கூத்து; நாடகம்; தெருக்கூத்து; வியத்தகுசெயல்; கேலிக்கூத்து; குழப்பம்:நாடகம் பற்றி அமைந்த ஒருகடைச்சங்கநூல்.

அவைக்குழாம் - அவை + குழாம்
அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்

குழாம் - கூட்டம்; சபை; பலர் சேர்ந்த கூட்டம், திரள்

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அவைக்குழாத் தற்றே - அவையில் திரளாக கூடுவது. இங்கே இதைப்போன்ற அவைகளில் சிறுக சிறுக கூட்டம் கூடும்.

பெருஞ் - பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத.

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

பெருஞ்செல்வம் - பெரிய செல்வம்

போக்கும் - போதல் - செல்லுதல்; அடைதல்; உரியதாதல்; பிறத்தல்; நீண்டுசெல்லுதல்; தகுதியாதல்; நெடுமையாதல்; நேர்மையாதல்; பரத்தல்; நிரம்புதல்; மேற்படுதல்; ஓங்குதல்; நன்குபயிலுதல்; கூடியதாதல்; பிரிதல்; ஒழிதல்; நீங்குதல்; கழிதல்; மறைதல்:காணாமற்போதல்; மாறுதல்; கழிக்கப்படுதல்; வகுக்கப்படுதல்; சாதல்; முடிவாதல்; ஒலியடங்குதல்; தொடங்குவதைக்குறிக்கும்துணைவினை; பகுதிப்பொருளையேவற்புறுத்தும்துணைவினை

அது - அது (இங்கே செல்வத்தை குறிக்கிறது)

விளி - ஓசை; இசைப்பாட்டு; கொக்கரிப்பு; சொல்; அழைப்பு; எட்டாம்வேற்றுமை; 
விளி - viḷi   II. v. i. perish, die, சா; 2. suffer, வருத்தப்படு; 3. be angry.
விளிவு, v. n. wrath, கோபம்; 2. death, சாவு.
விளி - viḷi  
க்கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be ruined, spoiled; to perish, கெட. (குவலை.) 2. To become extinct, to die, சாக. 3. To turn about, மறிய. 4. To suffer, வருத்தப்பட. 5. To be angry, கோபிக்க. (p.) விளியாதுநிற்கும்பழி. Imperishable disgrace; an indelible stigma.
விளிவு, v. noun. Wrath, கோபம். 2. Death, சாவு. (சது.)
விளிந் தற்று - விளிந்து + அற்று
விளிதல் - இறத்தல்; அழிதல்; குறைதல்; கழிதல்; ஓய்தல்; சினத்தல்; நாணமடைதல்; அவமானமடைதல்; வருத்தப்படல்; மறிதல்; சொல்லுதல்.

விளிந்து (விளியும்) - இறந்து அழியும் / ஒழியும்

அற்று -  அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள்
ஒரு திரையரங்கில் (அல்லது நாடக அரங்கில், அல்லது கூத்து நடக்கும் மேடைக்கு) மக்கள் சிறிது சிறிதாக கால இடைவேளைகளுடன் வருவர்.

அதாவது ஒரு 6:30 மணி காட்சியிற்கு 5:45 ஒருவர் வருவார், 6:00 மணிக்கு பத்துப் பேர் வருவர், 6:15க்கு நூறுப் பேர் வருவர், 6:20க்கு இருநூறுப் பேர் வருவர், 6:25க்கு ஐம்பதுப் பேர் வருவர் இறுதியில் 6:30 மணிக்கு சிலர் வருவர். கடைசியில் 6:30 மணிக்கு மக்களால் முழுவதுமாக அரங்கம் நிறைந்துவிடும். 

ஆனால் திரைப்படம் நிறைவடைந்தவுடன் (நாடகம் / கூத்து முடிந்தவுடன்) மக்கள் உடனடியாக திரைப்பட அரங்கை விட்டு வெளியேருவர். அவர்கள் நான் 6:00 மணிக்கு வந்தேன், 6:15க்கு வந்தேன், 6:30க்கு வந்தேன் என்று முன்னும் பின்னுமாக வருகின்ற போது வந்த கால இடைவேளைகளுடன் வெளியேறுவத்தில்லை. அவர்கள் உடனடியாக செல்கின்றனர். மேலும், அங்கு திரையரங்கிற்கு வந்தோர் அங்கேயே தங்கிவிடுவதில்லை. தங்கவும் வரவில்லை. அவர்கள் சென்றுவிடுவார்கள்.

மேலும் சினிமாவுக்கோ, கூத்து மேடைக்கோ செல்ல அனுமதிக்கும் வழி ஒன்றாகத்தான் இருக்கும்;கூத்து முடிந்து வெளியேறும் வழியோ பல வழிகளிலும் இருக்கும்.

கூத்தோ,நாடகமோ,சினிமாவோ பார்க்கச் செல்லும் மக்கள் மகிழ்வான உற்சாகமான மனநிலையில் செல்வார்கள்; கூத்து முடிந்து திரும்பும்போதோ அயற்சியும், சோர்வும் நிரம்பிய மனநிலையில் ஓய்வெடுக்க விரும்பி வெளியே ஓடுவோம்.

இதைப்போன்றதே செல்வம். வரும்பொழுது சிறுக சிறுக வரும். பெருஞ்செல்வமாகும். வரும் பொழுது மனதிற்கு உற்சாகம் ஊட்டக்கூடியதாக இருக்கும். ஆனால் செல்லும் பொழுது ஒரேயடியாக மிக சில நிமிடங்களில் (நேரத்தில்) வெளியே செல்லும். இறந்து அழியும் தன்மை வாய்ந்தது செல்வம். போகும்போதோ சோர்வையும் அயற்சியையும் விட்டுச் செல்லும்.

இவ்வாறு செல்வத்தின் நிலையாமையை விளக்குகிறார் திருவள்ளுவர்.

செல்வத்தின் நிலையாமையை உணர்ந்து செல்வத்தின் மீது அதீத பற்றோ உயர் மதிப்போ வைத்துக்கொள்ள கூடாதே தவிர செல்வத்தை உதாசீனப் படுத்தக்கூடாது. அறம், பொருள், இன்பம், வீடு என்பதே நாம் தரிக்க வேண்டிய நான்கு வேடங்கள். அறம் என்ற கடமைகளை ஆற்றி பொருள் ஈட்டி வாழ்வை நடத்தினால் தான் இன்பத்தை நுகரமுடியும். மூன்றும் சமநிலையில் பேணுவது அவசியம். பொருள்செயல்வகை அதிகாரத்தில் பொருளின் அவசியத்தையும் கூறியுள்ளார் திருவள்ளுவர். 
 

ரஜினி முத்து படத்தில் சொல்லுவதுப் போல் :  வந்தாலும் யேனு கேக்க முடியாது. போனாலும் யேனு கேக்க முடியாது. 

ஒப்புமை
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியும் இவ் வுலகம் (புறநா 29:23-4)

நன்றி: இலங்கை ஜெயராஜ் (காணொளி)

மற்றும்
போக்கும் என்ற சொல்லில் ஒரு ‘ம்’ விகுதி போட்டிருக்கிறார் பாருங்கள், போக்கு அது விளிந்தற்று என்று சொல்லவில்லை. போக்கும்’ என்கிறார்.

அதாவது போவதும் என்று சொல்வதன் மூலம் செல்வம் வருவதும்’ இருப்பதும்’ அப்படியே கூத்தாட்டத்தில் போது நடிகர்கள், நாடக சம்பவங்கள் நடக்கும் செயல்களுக்கொப்பானவை என்பது நாயனாரின்(பழைய கேரள முதல்வர் அல்ல !) கூற்று.

கூத்து நடக்கையில் நாம் காணும் அனைத்தும் உண்மையானவை அல்ல; பார்க்கும் கதை பொய், நடிக்கும் பாத்திரங்கள் பொய், நிகழும் நிகழ்ச்சிகள் பொய், கூத்து முடிந்த பின் பார்த்தால் வெண் திரை மட்டுமே மிச்சமிருக்கும்.

செல்வமும் வந்து நீங்கிய பின் இருப்பது வெறுமை மட்டுமே..
செல்வத்தின் தோற்றமும், இருப்பும், அழிவும் காணல் நீர் போலப் போய்விடுகிறது.

ஆக ஒரு கூத்தைப் பார்த்த வள்ளுவரின் சிந்தனையில் இத்தனை விதயங்களும் தோன்றியிருக்கின்றன.

கூத்தின் தன்மை, நடிகர்கள், கதை முதலியவர்றில் நிகழ்வு, கூத்து முடிந்த பின் உள்ள வெறுமை ஆகிய அனைத்தையும் செல்வத்திற்கு ஏற்றிய சிந்தனைத்திறன்தான் வியப்படைய வைக்கும் ஒன்று.

நன்றி: சங்கபல்கை

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
நிலையாமை என்ற அதிகாரத்தில் இக்குறள் வருவதால் செல்வம் நிலையாமை குறித்து தெளிவான அறிவு பெற்று, அதனை நல்ல வழிகளில் பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துரைப்பதே இக்குறளின் நோக்கம்.

உடலியக்கத் தேவைக்கு ஏற்ற பொருட்கள் மீதும், புலன்களுக்கு இன்பமளிக்கும் பொருட்கள், மக்கள் மீதும் பழக்கப் பதிவுகளால் மனிதருக்கு விருப்பம் மேலிடுவது இயற்கை. பொருள், இன்பம் இரண்டையும் முயற்சியின்றியே பெறுவதற்கு அதிகாரமும், புகழும் உதவுவதால் - பொருள், புலனின்பம், அதிகாரம், புகழ் என நான்கு வகைகளில் மனிதனிடம் அவா உயர்ந்து கொண்டே போகிறது. இந்த நான்கு வாழ்க்கை வளங்களும் நிலைப்பதேயில்லை. இந்நான்கும் எந்த் அளவு கிட்டினாலும் மனம் நிறைவு பெறாது. மேலும் இத்தகைய அவாவை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் மிகு முயற்சியால், உடலுக்கும் மனதுக்கும் துன்பம். முயற்சியில் நினைத்தபடி வெற்றி கிட்டா விட்டால் சோர்வு ஏற்பட்டுத் துன்பம். இந்நான்கில் வெற்றி கிட்டினால் அவற்றைத் துய்க்கும்போது அளவு முறை மீறல், மாறல் ஆகிய விளைவுகளாலும் துன்பமே. எனவே பொருட்செல்வம் நிலையற்றது என அறிந்து, வருவதிலும் போவதிலும் மனம் சலிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார் வள்ளுவர். மேலும் கூத்தாட்டவைக் குழாத்தற்றே பெருஞ்செல்வம் என்பது ஒரு ஆழ்ந்த கருத்தை விளக்குகிறது. கூத்து தொடங்கும்போது ஒருவர், இருவராகச் சிறுசிறு கூட்டமாக வந்து சேர்வார்கள். சபை நிரம்பப் பல மணித் துளிகள் செல்லும். இதுபோலவே செல்வம் வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக நீண்டகால அளவில் வந்து சேரும்.

அப்படிச் சேரும் செல்வம் போகும்போது, கூத்து முடிந்தவுடன் மக்கள் ஒரு நொடியில் எப்படிக் கலைந்து போய் விடுவார்களோ, அது போல செல்வம் போகும் போது குறுகிய நேரத்தில் மறைந்து போகும் என்பதாகும்.

இத்தகைய நிலையாத செல்வங்களை அது வந்தடைந்த போதே நல்ல விளைவைத் தரும் முறையில், திட்டமிட்டுச் செலவு செய்து பயனடைந்து விட வேண்டும் என்பது குறிப்பிட்டுக் காட்டபடுகிறது இப்பாவின் மூலம்.

பரிமேலழகர் உரை
பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று - ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற்போலும், போக்கும் அது விளிந்தற்று - அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும். (பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. போக்கும் என்ற, எச்ச உம்மையான், வருதல் பெற்றாம். அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின் கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல் திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.).

மணக்குடவர் உரை
கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளும்; அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்

மு.வரதராசனார் உரை
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: பெரும் செல்வம் கூத்து ஆடு அவை குழீஅற்று - பெருஞ்செல்வம் (வருதல்) கூத்தாட்டு அவை கூடினாற் போலும்; போக்கும் அது விளிந்து அற்று‡ (பெருஞ் செல்வம்) போதலும் கூத்தாட்டு அவை (கூத்து முடிந்தவுடன்) போயினாற் போலும்.

அகலம்: குழுவி யற்று என்பது இன்னிசை நோக்கிக் குழீஇ யற்று என நின்றது. குழீஇயற்று, விளிந்தற்று என்பன வினையயச்சத் தொகைகள். அவை முறையே ‘குழீஇயினா லற்று’, ‘விளிந்தா லற்று’ என விரியும். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘அவைக் குழாத் தற்றே’. அவைக் குழாத்தற்றே என்பது பொருத்தமான பொருள் தாராமையானும், பின்னர் விளிந்தற்று என வருதலானும், குழீஇயற்று என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: செல்வம் வருதலும் போதலும் கூத்தாட்டவை குழுவுதலும் போதலும் போலாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
We slowly earn and accumulate wealth such as money, assets, properties, gold etc. at different stages in life. It is similar to people slowly gathering at different timings to a drama hall, movie hall etc. However, the wealth leaves us quickly not following the order or rate at which it came in. It is similar to people leaving the movie hall quickly and collectively without following the order of entry. When the wealth leaves us, we are disappointed and feel sad. It is similar to people having not feeling fresh whereas tired while leaving a movie hall. Money will not be permanently with us. Its presence with us volatile in nature. Hence, do not attach yourself to money or materialistic stuffs.

Questions that I ask to the kid
Equate money and a drama hall/movie theatre. 
Is money permanent?
How does money leave us?

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா

குறள் 969
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
[பொருட்பால், குடியியல், மானம்]

பொருள்
மயிர் - உரோமம்; சாமரை; தூவி

நீப்பின்நீத்தல் - பிரிதல்; துறத்தல்; தள்ளுதல்; இழித்தல்; வெறுத்தல்; விடுதல்; நீங்குதல்.

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

- எதிர்மறையைக்குறிக்கும்சாரியை; எதிர்மறைஇடைநிலை;

வாழாக் - வாழாதா 

கவரிமா - கவரிமான் - kavari-māṉ   n. id. +. Yak,Bos grunniens; மான்வகை. கவரிமானேறு கண்படை கொள்ளும் (பெருங். உஞ்சைக். 50, 20).

அன்னார் - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.)
அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

நீப்பர் நீத்தல் - பிரிதல்; துறத்தல்; தள்ளுதல்; இழித்தல்; வெறுத்தல்; விடுதல்; நீங்குதல்.

மானம் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம்; மண்டபம்; கத்தூரி; சவ்வாது; வானம்; ஒருதொழிற்பெயர்விகுதி; ஓர்இடைச்சொல்.

வரின் - வரும்/ வந்தால்

முன்குறிப்பு
கவரிமா அல்லது யாக் (Yak) என்பது நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம். காட்டு யாக்குகள் மாட்டினத்திலேயே பெரிய விலங்குகளுள் ஒன்று. பெரும்பாலானோர் கூறுவது போல் அப்படி ஒரு மான் வகை கிடையாது. (கவரி - சடை போன்ற முடி மா -விலங்கு)

நன்றி :  விக்கி/Wiki


முழுப்பொருள்
இமய மலை போன்ற பனி பிரதேசங்களில் வாழ்வதாக கூறப்படும் இந்த "கவரி மா" ஆனது, தன் அடர்ந்த ரோமத்தை இழந்து விட்டால், குளிர் தாங்காமல் இறந்து விடுவது போல, மானம் சிறிது இழந்தாலும் தன் உயிரினை துறந்து விடுவர் உயிரினும் பெரிதாக மானத்தை கருதுவோர்.

மானம் என்பது வாய்மையோடும், அறத்தோடும், ஒழுக்கத்தோடும், நாணத்தோடும் வாழ்வதற்கான ஒரு அடையாளம் எனலாம். ஆகையால் அது உயிருக்கு சமமாக கருதப்படுகிறது. நாம் பல அதிகாரங்களில் பல குறள்களில் கண்ட ஒன்று இவற்றில் எது இழந்தாலும் நமக்கு கேடே. நமக்கு அழிவே.

ஒப்புமை
1. வான் மயிர் துடக்கின் தானுயிர் வாழாப்
பெருந்தகைக் கவரி (பெருங் 1.35:233-4)

2. குழவி யிறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அள்வை
ஈனம ரோஇவ் வுலகத் தானே (புறநா.74)

ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானம் தலைவருவ செய்பவோ (நாலடி 198)

வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் 
மானம் அழுங்க வரின் (நாலடி 300)

உள்ளம் குறைபட வாழார் உரவோர் (நான்மணி 2)

மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிதே (இனியவை 14)

மானம் படவரின் வாழாமை முன்னினிதே (இனியவை 28)

தோல்வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை (திரி 27)

3. “மானம் நோக்கின் கவரிமான் அனைய நீரார்” (கம்ப.மந்திரப் 7)
‘வருந்தலின் மானமா அனைய மாட்சியர்” (கம்ப.உருக்காட்டு 19)

பரிமேலழகர் உரை
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர். (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது இயல்பு என்பது விளக்கி நின்றது.).

மணக்குடவர் உரை
ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார், மானம் அழியவரின் உயிர்விடுவர்.

மு.வரதராசனார் உரை
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

சாலமன் பாப்பையா உரை
மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.