Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

உரனென்னும் தோட்டியான்

குறள் 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
உரனென்னும் -> உரன் + என்னும்.
உரன் -> திண்மை ((மன உறுதி) - Vigor / Density / Strength / Determination),  பற்றுக்கோடு வெற்றி வலி ஊக்கம், உள்ளமிகுதி மார்பு அறிவு

என்னும் -> என்கிற, யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

தோட்டி - ஆணை; காவல்; கதவு; மனைவாயில்; காண்க:தோணாமுகம்; கட்டழகு; செங்காந்தள்மலர்; நெல்லிமரம்; அங்குசம்; கொக்கி; வெட்டியான்; குப்பைமுதலியனவாருவோன், துப்புரவாளன்.

தோட்டியான் -> அங்குசத்தால் (அங்குசம் : யானையை அடக்க கூடிய கருவி) ->. கருவியாகிய.

 
(அடக்கும்) அங்குசம்

ஓரைந்தும் -> ஓர் ஐந்தும்; மெய், வாய்,கண், மூக்கு, செவி என்ற யானைப் போன்ற ஐம்புலன்கள்.

காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.  

காப்பான் -> எண்ணங்கள் செல்லாமல் காவல் காப்பான்.

வரன் - சிறந்தவன்; கடவுள்; பிரமன்; தமையன்; மணமகன்; கணவன்; சீவன்முத்தருள்பிரமவரர்எனப்படும்வகையினன்.

வரனென்னும் -> வரன் + என்னும்.

வைப்பு - வைக்கை; பாதுகாப்புநிதி; புதையல்; இடம்; நிலப்பகுதி; ஊர்; உலகம்; செயற்கையானது; செயற்கைச்சரக்கு; வைப்பாட்டி; கலிப்பாவகையின்இறுதியுறுப்பு.
வைப்பிற்கோர் -> வையத்தில் + பிறக்க + ஓர்

வரனென்னும் வைப்பிற்கோர் 
பேரின்பப் பெருவீடு; வரமாகிய வீடுபேறு; எல்லா நிலத்திலும் மிக்கது (சிறப்பானது).  அத்தகைய வையத்தில் பிறக்க தக்க

வித்து -> வித்து (விதை) ஆவான். (ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகன் அல்ல). வித்து என்றது, பூமியில் பிறவாது, மீண்டும் மோட்சமாகிய வீட்டிலே முளைப்பதால்
வித்து - மரஞ்செடிகொடிகள்முளைக்கக்காரணமாயிருக்கும்விதை; விந்து; மரபுவழி; வழித்தோன்றல்; சாதனம்; காரணம்.

முழுப்பொருள்
உலகம் மேம்பட உயிர்களின் மனம் மேம்பட வேண்டும். உயிர்களின் மனம்மேம்பட அறிவுமேம்படல் அவசியம். இத்தகு மேம்பட்ட அறிவுத்திண்மை புலனடக்கத்தால் சாத்தியம். ஐப்புலன்களின் உணர்வுகள் அடக்க முடியாதவை. யானையைப் போல் மலையானவை. 

இத்தகு ஐம்புல உணர்வுகளை அறிவுத்திண்மையெனும் (அறிவு, மன உறுதி) தோட்டியால் (என்னும் கருவியால்) காப்பவனே இவ்வுலகின் விதை போன்றவன் என்கிறார். 

அங்குசம் என்னும் சிறு ஆயுதமே ஒரு பெரிய யானையை அடக்க வல்லது என்பதை நாம் உணர வேண்டும்.  ஆனால் ஒரு தேர்ந்த பாகனால் மட்டுமே அங்குசத்தை சரியாக பயன்படுத்தமுடியும். ஒரு தேர்ந்த பாகன் என்பவன் பல பயிற்சிகளை கற்று (மறக்காமல்) உள்ளவன். ஆதலால் அறிவு மற்றும் மன உறுதியால் (மன பயிற்சிகளாலும்) ஐம்புலன்களை அடக்கலாம். 

துறவெனும் நிலந்தனில் துளிர்விடத் தகுந்த ஒர் முதிர்ந்த நல் வித்தாக அவன் விளங்குவனாம்.
அதாவது, தாய் ஈண்டு பிறந்து இறந்தவன் எல்லாம் மகன் அல்ல. மோட்சம் அல்லது பேரின்ப பெருவீட்டில் துளிர் விட தகுதியான முதிர்ந்த விதையானவனே மகன். 

இரவு ஒரு யானை. யானை எத்தனை அற்புதமான மிருகம். மிருகங்களில் அதற்கு இணையாக ஏதுமில்லை. கன்னங்கரிய பேருடல். அதன் எல்லா அசைவுகளும் அழகே. அது ஒரு மாபெரும் குழந்தை. ஆனால் அந்த மகத்துவத்திற்குள் மதம் ஒளிந்திருக்கிறது நண்பர்களே. மிருகங்களிலேயே யானையைப் பழக்குவதுதான் மிக மிக எளிதானது. ஆனால் ஒருபோதும் முழுமையாக பழக்கிவிடமுடியாத மிருகமும் யானைதான்.

யானைமேல் இருக்கும் மனிதன் உணரும் அகங்காரம் ஒன்றுண்டு. அவன் தன்னை ஒரு மகாராஜாவாக, சிம்மாசனம் மேல் அமர்ந்தவனாக உணர்கிறான். அவனறிவதில்லை அவன் மகத்தான அறியமுடியாமை ஒன்றின் மீது அமர்ந்திருக்கிறான் என்று. நம் முன்னோர் அதை உணர்ந்திருந்தார்கள். யானை மறப்பதேயில்லை என்று சாஸ்திரம் சொல்கிறது. யானை மன்னிப்பதேயில்லை என்கிறது. யானைப்பகை என்று அது குறிக்கப்பட்டிருக்கிறது.

இரவு ஒரு யானை. சாமரக்காதுகள் அசைய, கொம்புகள் ஊசலாட, பொதிகள் போல் காலெடுத்து வைத்து மெல்ல நடந்து வரும் யானை. கஜராஜவிராஜிதம் என்று காளிதாசன் சொன்னான். பேரழகியின் நடை யானையின் நடை போன்றது. ராத்ரி தேவியின் நடையல்லவா அது? யானை இதோ நம் வாசலில் வந்து நிற்கிறது. கன்னங்கருமையாக. பேரழகாக. வாருங்கள் அதன் வெண்தந்தங்களைப் பற்றிக்கொள்வோம். அதனிடம் காலெடு யானை என்று சொல்வோம்.ஏறியமர்ந்தால் இந்த உலகையே வென்றவர்களாவோம். ஆனாலும் அது யானை. அறியப்படமுடியாதது. ஏனென்றால் அது காடு. ஊருக்குள் இறங்கிவந்த காடல்லவா யானை? புதர்களின் இருளும் மலைப்பாறைகளின் கம்பீரமும் காட்டருவிகளின் ஓசையும் மலைச்சுனைகளின் குளிரும் கலந்தது யானை…

நூல் ஒன்பது – வெய்யோன் – 41 (நன்றி: ஜெயமோகன்)

முன்புலரியிலேயே கர்ணனின் அரண்மனைமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கி காலடிகள் ஓசையிட விரைந்து காவலரை பதறி எழச்செய்து “எங்கே? மூத்தவர் எங்கே?” என்றான் சுஜாதன். அவர்கள் மறுமொழி சொல்வதற்குள்ளாகவே கூடத்தில் ஓடி, படிகளில் காலடி ஒலிக்க மேலேறி இடைநாழியில் விரைந்தபடி “மூத்தவரே!” என்று கூவினான். கர்ணனின் துயிலறை வாயிலில் நின்ற காவலன் திகைத்தெழுந்து நோக்க “எங்கே மூத்தவர்? சித்தமாகிவிட்டாரா?” என்றான்.

கதவைத் திறந்த சிவதர் “கூச்சலிடாதீர்கள் அரசே, அரசர் அணிபுனைகிறார்” என்றார். “அணிபுனைவதற்கு நாங்கள் என்ன பெண்கொள்ளவா செல்கிறோம்? வேட்டைக்கு! சிவதரே, நாங்கள் வேட்டைக்கு செல்கிறோம்!” என்றான். “இதற்குமுன் வேட்டைக்கு சென்றதே இல்லையா?” என்றார் சிவதர். “பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் மூத்தவருடன் இப்போதுதான் நான் செல்லப்போகிறேன்” என்றான் சுஜாதன். கைகளைத் தூக்கி வில்லம்புபோல காட்டி “இம்முறை நானே தன்னந்தனியாக மதகளிறு ஒன்றை எதிர்கொள்ளப்போகிறேன்” என்றான்.

புன்னகையுடன் “நன்று” என்று சொன்ன சிவதர் “அதற்கு எளிய வழியொன்று உள்ளது” என்றார். “என்ன?” என்றான் சுஜாதன். “யானைக்குப் பிடிக்காத மணங்களை உடலில் பூசிக்கொள்வதுதான். தங்கள் உடலில் இருக்கும் இந்த யவனப்பூஞ்சாந்து காட்டில் உள்ள அத்தனை யானைகளையும் மிரண்டு இருளுக்குள் ஓடச்செய்துவிடும்” என்றார். சுஜாதன் உரக்க நகைத்து “ஆம், அதை நானும் எண்ணினேன். யானையை நான் எதிர்கொள்ள வேண்டும்… யானை என்னை எதிர்கொள்ளக்கூடாதல்லவா!” என்றான்.

உள்ளிருந்து கர்ணன் வெளிவந்து “என்ன, புலரியிலேயே பேரோசை எழுப்புகிறாய்?” என்றான். அவன் அருகே ஓடிச்சென்று ஆடை நுனியைப்பிடித்து ஆட்டி “வேட்டைக்கு! மூத்தவரே வேட்டைக்கு!” என்றான் சுஜாதன். “ஆம், வேட்டைக்குத்தான்” என்றபடி கர்ணன் “சென்று வருகிறேன் சிவதரே” என்றான். சிவதர் “படைக்கலங்கள் தேரில் உள்ளன” என்றார். “ஆம்” என்றபடி கர்ணன் நடக்க சுஜாதன் அவனுக்குப்பின்னால் ஓடிவந்து “நான் மூன்று விற்களையும் பன்னிரு அம்பறாத்தூணிகளையும் என் தேரில் வைத்திருக்கிறேன்” என்றான். “என்ன செய்யப்போகிறாய்? காய்கனிகளை அடித்து விளையாடப்போகிறாயா?” என்றான் கர்ணன்.

“மூத்தவரே” என்றபடி சுஜாதன் அருகே வந்து அவன் கைகளைப் பற்றி தன் தோளில் வைத்தபடி “நான் இம்முறை உண்மையிலேயே களிறு ஒன்றை எதிர்கொள்வேன்” என்றான். “நாம் களிறுகளை கொல்லச் செல்லவில்லை இளையோனே” என்றான் கர்ணன். “அவை வேளாண்குடிகளுக்குள் இறங்காமல் உள்காடுகளுக்குள் துரத்திச் செல்கிறோம். அவற்றின் நினைவில் சில எல்லைகளை நாம் வகுத்து அளிக்கிறோம். அங்கு வந்தால் வேட்டையாடப்படுவோம் என்பதை அவை தங்கள் குழந்தைகளுக்கு சொல்லும். அந்நினைவே காட்டுக்கும் விளைநிலத்திற்குமான எல்லையாக அமையும்” என்றான்.

“நரிகளுக்கும் ஓநாய்களுக்கும் அந்நினைவு நெஞ்சில் பதியாதா?” என்றான் சுஜாதன். “பதியும். ஆனால் அவற்றை மீறுவதைப்பற்றியே அவை எண்ணிக்கொண்டிருக்கும். யானைகள் நெறிகளுக்குள் வாழ்பவை.” அவன் கையை அசைத்து “ஏன்?” என்றான் சுஜாதன். “ஏனெனில் அவை மிகப்பெரிய உடல் கொண்டவை. ஒளிந்து கொள்ள முடியாதவை. அவற்றின் மேல் தெய்வங்கள் அமர்ந்துள்ளன.”

From Ashok's Blog: Good Explanation 

ஒப்புமை
“மறுமைக்கு வித்து” (நாலடி 183)

“மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்க்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்” (நாலடி 59)

“தொண்டர் அஞ்சு களிறு மடக்கி” (சம்பந்தர்.கேதாரம் 1)

“முழுக்கி யெழுவன மும்மத வேழம்
அடக்க அறிவெனும் தோட்டியை வைத்தேன்” (திருமந் 2034)

பரிமேலழகர் உரை
உரன் என்னும் தோட்டியான் ஒர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலங்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். 
விளக்கம் 
(இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந் நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.) 

மணக்குடவர் உரை
அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.

சாலமன் பாப்பையா உரை
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான். 

English Meaning - As I taught a kid - Rajesh
For the world to become a better place, every living being (especially human being) has to be become a better person. Hence, everyone's heart and mind have to become better. This can be achieved by developing mental vigor / strength and determination. This mental strength has to be used as a weapon against the 5 senses which mischievously fail us against our path to success / glory. This mental strength might seem like a small weapon (taming stick). But remember, an elephant is can be controlled using a small weapon. Similarly mental strength can be used to control the 5 senses. But, even to control a weapon, the elephant guard has to learn on how to use the small weapon against the huge elephant. Similarly, one has to learn how to use the mind (by meditation, perseverance etc) against the 5 senses.  If one does so, he or she can overcome the 5 sense and achieve success or attain Moksha in the life. Such a person is a like a healthy seed in this world.

But why is elephant used as a metaphor here? because elephant is like ignorance / illusion. Similarly our 5 senses are as big as elephant. our ignorance and illusion are also big. We all have ego in us because of this illusion and ignorance. So, we have to control that. But why elephant, not fox or lion - Because a fox cannot be controlled. It is always breaks the rules. But elephant can be trained to not cross borders. 

Similarly our mind can also be trained and practised. this can be achieved by controlling our 5 senses which can be done with the help of meditation.


Questions that I ask to the kid
Who is a good seed to the world? 
How can one become a good seed to the world?
What comes to your mind when you see a elephant mahot controlling a elephant using a small stick?

No comments:

Post a Comment