Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஊடல் உணங்க விடுவாரோடு

குறள் 1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு

உணங்க- உணங்கு-தல் - uṇaṅku-   5 v. intr. [K.oṇagu, M. uṇaṅṅu.] 1. To dry, as grain,vegetables or fish; உலர்தல் தினைவிளைத்தார் முற்றந்தினையுணங்கும் (தமிழ்நா. 154). 2. To become gaunt,as the body by fasting; to be emaciated; tobecome reduced; மெலிதல் ஊடலுணங்க விடுவாரோடு (குறள், 1310). 3. To be dejected in mind;to languish; சிந்தை வாடுதல் உணங்கிய சிந்தையீர்(கந்தபு. மோன. 21). 4. To shrink, shrivel; சுருங்குதல் உணங்கரும் புகழ் (காஞ்சிப்பு. நாட்டுப். 1). 5.To pine away, droop, become listless; செயலறுதல் உணங்கிடுங் கரணமென்னில் (சி. சி 4, 7).  

உணங்கல் - உலர்ந்தபொருள்; உலர்த்தியதவசம்; வற்றலிறைச்சி; உணவு; உலர்ந்தபூ.

உணங்கு - உலரு, வாடு, சுருங்கு, சிந்தைவாடு

விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

விடுவாரோடு - விடுவார் உடன்

என் - எந்தன்

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

நெஞ்சம் - மனம்

கூடுவேம் - கூடல் கொள்ள முனைப்புடன் இருப்பது
கூடல் - மதுரை, சோலை, பொருந்துகை; புணர்தல்(புணர்ச்சி); நதியின் சங்கமுகம் (the mouth of a river), நதிகள் ஒன்றோடொன்று கூடும்இடம், ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப் பிரிந்ததலைவி அவன் வரும் நிமித்தமறியத் தரையில் சுழிக்கும் சுழிக்குறி:அடர்த்தியான தோப்பு.

என்பது - என்று என்பது

அவா - ஆசை, பேராசை, ஆசைப்பெருக்கம், எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

முழுப்பொருள்
என்னுடன் உனக்கு கருத்து வேறுபாடு இருந்த பொழுது அல்லது பொய்யாக என்னுடன் கோபம் கொண்டு என்னுடன் நீர் பிணக்கு கொண்டாய், சண்டைப் போட்டாய், பேசாமல் இருந்தாய், திட்டினாய், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாய். அப்படி இருக்கையில் என் மனமும், நானும் வாடிப் போனோம். நீர் அப்போது என்னை வந்து சமாதானம் செய்யவில்லை.

ஆனால் என்னை அப்படி துயரில் ஆழ்த்தி வாட விட்டவரை என் (வெக்கம் கெட்ட மனசு) மனம் (வெறுக்க வேண்டும் அல்லவா ? ஆனால்) உன்னுடன் கூட வேண்டும், புணர்ச்சிக் கொள்ள வேண்டும், இன்புற வேண்டும் என்று நினைக்கிறது விரும்புகிறது. இதற்கு காரணம் உன்மேல் என் நெஞ்சம் கொண்ட ஆசை, விருப்பம், காதல் வேறேதும் இல்லை.

(முன்பு இந்த அதிகாரத்தில்

ஊடி யவரை உணராமை வாடிய 
வள்ளி முதலரிந் தற்று.

தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்)

பரிமேலழகர் உரை
இதுவும் அது. ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும், விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை.
விளக்கம் 
(அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக் கூட்டம் முடியாது' என்பதாம்.)

மணக்குடவர் உரை
என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

சாலமன் பாப்பையா உரை
ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.

உதாரணம்: ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.)

ஊடல் உணங்க விடுவாரோடு - ஊடல்கொண்ட போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவரோடு; என் நெஞ்சம் கூடுவேம் என்பது - என் உள்ளம் கூடியின்புறுவேம் என்று, கருதுகிறதற்குக் கரணியம்; அவா - அதன் ஆசையேயன்றி வேறன்று.

இதற்குப் பரிமேலழகருரை வருமாறு -

(உணர்ப்புவயின் வாராவூடற்கட்டலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது.)

ஊடல் உணங்க - தானூடற்கண்ணே மெலியா நிற்கவும்; விடுவாரோடு கூடுவேம் என்பது என்னெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேமென்று என்னெஞ்சம் முயறற்கேது தன்னவாவே பிறிதில்லை.

என்பதற்கேது என இருக்கவேண்டியது. 'என்பது' எனக் கருமகம் (காரியம்) கரணமாக (காரணமாக) ச்சார்த்திக் கூறப்பட்டது.

உதாரணம்: கவிமனம் (சுட்டியை சொடுக்கவும்)

திரைப்பாடல்கள்

1) பொன் மானே கோபம் ஏனோ (ஒரு கைதியின் டைரி)
2) என் கண்மணியே கண்மணியே (சின்ன வாத்தியார்)

3) அத்திக்காய் காய்  (பலே பாண்டியா) (பாடலின் அசைகள் பிரித்துப் பொருள்: தமிழ்ப்பாட்டு வலையத்தில் (சுட்டியை சொடுக்கவும்))

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
(கன்னிக்காய்..)
மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
(இரவுக்காய்..)
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
(ஏழக்காய்..)
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ
(உள்ளதெல்லாம்..)
கோதை என்னை காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

படம்: பலே பாண்டியா
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: ஜமுனாராணி, TM சௌந்தர்ராஜன், PB ஸ்ரீநிவாஸ், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

No comments:

Post a Comment