Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

வானோக்கி வாழும் உலகெல்லாம்

குறள் 542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் 
கோல்நோக்கி வாழுங் குடி.
[பொருட்பால் , அரசியல், செங்கோன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி.

நோக்குதல் பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

வான் நோக்கி - வானம் பொழிகின்ற மழையை நம்பி, அதன் கொடைக்கு காத்து, அதனை எதிர் நோக்கி 

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழும் - வாழ்கின்ற

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

எல்லாம் - முழுதும்

உலகெல்லாம் - எல்லா உயிர்களைப் போல

மன்னவன் - maṉṉavaṉ   n. மன்னு-. 1.See மன்னன். முறை செய்து காப்பாற்று மன்னவன்(குறள், 388). 2. Indra; இந்திரன். மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் (சிலப். 5, 173); அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

மன்னவன் - அனைவரையும் ஆட்சிப் புரிகின்ற அரசனின்

கோல்  - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

கோல் - செங்கோல் அரசச்சின்னமாகியநேர்கோல்; நல்லரசாட்சி; நெருப்புச்சலாகை.

கோல்நோக்கி - நல்லாட்சியை எதிர்நோக்கி

நோக்குதல் பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

வாழுங் குடி -  வாழ்வார்கள் மக்கள் அனைவரும்.








முழுப்பொருள்
மழை நீர் தான் மலைகளில் மரங்களின் வேர்களில் தேங்கி பின்பு ஆறாக உருவெடுத்து பின் பெருக்கெடுத்து எல்லா இடங்களும் செல்லும். அந்த நீர்ரே எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதாரம். விலங்குகளும் (நீர் மற்றும் இன்றி) செடிகளையும் மரங்களையும் நம்பி வாழ்கின்றன. ஆதலால் தான் மழைநீரை எதிர் நோக்கியே உலகலில் உள்ள எல்லா உயிர்களும் வாழ்கின்றன. மழைநீர் பொய்த்தால் எல்லா உயிர் இனங்களும் அவதிப்படும்.  

அதேப் போல், எல்லா மக்களும் தங்களை செங்கோல் கொண்டு ஆட்சிப்புரியும் மன்னரை/அரசரை நம்பியே உள்ளனர். மன்னர் நன்கு ஆட்சி செய்தால் தான் அவர்கள் வாழ்வு இன்னல்கள் இன்றி இருக்கும். மன்னர் நன்கு ஆட்சிச் செய்யாவிடில் மக்கள் அவதிப் படுவர். 

உதாரணமாக ராஜராஜ சோழன் தனது ஆட்சிக் காலத்தில் பல நல்ல திட்டங்களை வகுத்து மக்களும் நன்மை புரிந்தார். மற்ற சோழ மன்னர் ஆட்சிகளில் வீரானம் ஏரி, கல்லனை போன்றவை நிறுவப்பட்டது. அதனுடைய பயன்களை நாம் இன்றும் அறுவடை செய்கிறோம். அதேப்போல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டில் திமுக/அதிமுக ஆட்சிகளின் மோசமான் ஆட்சிகளில் அவதிப்படுகிறோம் (உதாரணமாக: காவேரி நதி நீர் பங்கீடு).  இந்தியாவிற்கு பிறகு சுதந்திரம் பெற்ற நாடு தென்கொரியா. ஆனால் தென்கொரியா உலகலில் மிக மிக வளர்ந்த நாடுகளின் பட்டியலில் ஒன்று. ஆனால் இந்தியா இன்றும் வளரும் நாடுகளில் பட்டியலில் உள்ளது. ஐம்பது சதவீதரிற்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். இரண்டு நாடுகளுக்கும் வித்தியாசம் ஆட்சி நடத்திய விதம், மன்னர் பொறுப்பில் இருந்தவர்களின் ஆட்சி. 

ஆதலால் மக்கள் தனது நல்லாட்சியை எதிர் பார்த்தே வாழ்கின்றனர் என்று உணர்ந்து மன்னர்கள் ஆட்சிப் புரிய வேண்டும். 

மேலும்: அஷோக்

ஒப்புமை
”வித்திவான் நோக்கும் புன்புலம்” (புறநா.18:24)

“மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை’ (நான்மணி.47)

“எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்” (பெருமாள் திருமொழி 5:7)

‘தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன
கோல்நோக்கி வாழும் குடிபோன் றிருந்தேனே” (பெருமாள் 5:3)

“கோல்நோக்கி வாழும் குடிஎல்லாம் தாய்முலையின்
பால்நோக்கி வாழும் குழுவிகள் - வானத்
துளிநோக்கி வாழும் உலகம்” (நான்மணி.27)


பரிமேலழகர் உரை
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகாநிற்குமே எனினும்; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். 
விளக்கம்
[நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.] 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை எதிர்பார்த்து அது பெய்வதால் வாழும் ; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - ஆயினும் , குடிகளெல்லாரும் அரசனது செங்கோலை எதிர்பார்த்து அது நடப்பதால் வாழும் .

நோக்கி வாழ்தல் இன்றியமையாததாகக் கொண்டு வாழ்தல் . வானால் நீரும் உணவும் கிடைப்பது போல் , செங்கோலால் உயிர்ப் பாதுகாப்பும் , பொருட்காப்பும் கிட்டுவதால் , வான்போன்றே செங்கோலும் மக்கள் உயிர்வாழ்விற்கு இன்றியமையாததென்பதும் , செங்கோலின்றி வானிருந்தும் பயனில்லை யென்பதும் , பெறப்படும் . உலகு , கோல் என்பன ஆகுபெயர்கள் . கோலென்றது செங்கோலை. 'குடி' தொகுதிப்பெயர் . வானின் தண்பு உயிர்கட்கு இன்பஞ் செய்வது போல் கோனின் அன்பும் குடிகட்கு இன்பந்தருவதாம்.

"நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால் , யானுயி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே".(126)

என்னும் புறப்பாட்டு இங்குக் கவனிக்கத் தக்கது .

மணக்குடவர் உரை
உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி யின்புறாநிற்பர்; அதுபோலக் குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கியின்புறாநிற்பர்

மு.வ உரை
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.




English Meaning - As I taught a kid - Rajesh
All the organisms in the world survives, looking up to the skies for rain; the people live, looking up to their ruler’s scepter/sengol/செங்கோல் for justice. 

Rain water is captured by the roots of the plants in forests, ponds, lakes etc. This forms the basis of livelihood for all organisms. Hence, all organisms survive looking up to the skies for rain. Also, it is not mere survival, because when the plants lives, they flourish and make the world a better place. 
Similarly, all the people live looking up for the king's / leader's rule. If the leader rules well (i.e. administers / manages / develops the state well), people's pain/sorrow/difficulties would reduce and vanish and they would live happily. Whereas if the leader doesn't rule well, people would suffer. When people live happily the make the world a better place.
If there is a drought, many plants die and it takes some time for the plants to regain the flora and fauna. Similarly if the leader doesn't rule well for few years, it would take many years for the people to come back on growth and flourish. 

This applies even to the family. If the family head does well, all the members in the family will be happy. At individual level, if the person does well (develops himself, does his dharma, earns money), he will not suffer. Also he can help others too.

King Raja Raja Cholan who lived in 10th century did lots of work for the welfare of people such as creating lakes, developing irrigation systems, building dams etc. Such works benefit people even in the 21st century. 

Questions that I ask to the kid
What does rain give? What does a leader give?
What does the world look up to for survival? Whom does the people look up to?
Why is a king's rule as important as rain?

வேண்டற்க வென்றிடினும் சூதினை

குறள் 931
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் 
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
[பொருட்பால்,நட்பியல், சூது]

பொருள் 
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டற்க - வேண்டாம் 

வென்று வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை.

வென்றிடினும் - வென்றாலும் 

சூதினை - சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி.

வென்றதூஉம் வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

தூண்டுதல் - செலுத்துதல்; ஏவுதல்; தள்ளுதல்; விளக்கைத்தூண்டுதல்; நினைப்பூட்டுதல்; செலுத்துதல்; அனுப்புதல்; கிளப்பிவிடுதல்.

பொன் - சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம்என்னும்நான்குவகைப்பட்டதங்கம்; உலோகம்; இரும்பு; செல்வம்; அணிகலன்; திருமங்கலியம்; பொன்நாணயம்; மேருமலை; பொலிவு; பசலை; ஒளி; அழகு; ஏற்றம்; திருமகள்; வியாழன்; சூரியன்; பெண்குறி.

மீன் - நீர்வாழ்உயிரி; விண்மீன்; சித்திரைநாள்; அத்தநாள்; மீனராசி; சுறா; நெய்தல்நிலப்பறை.

விழுங்குதல் - மெல்லாதுஉட்கொள்ளுதல்; கவளீகரித்தல்; தெளிவின்றிப்பேசுதல்; வெல்லுதல்; சொற்களைமழுப்புதல்; கவர்தல்; பரவுதல்; கொல்லுதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள் 
நமக்கு ஆரம்பித்தில் வெற்றியை தரக் கூடியதாகவே இருந்தாலும், நாம் என்றும் சூது விளையாட்டை நாடி செல்ல கூடாது. ஏனெனில், அந்த வெற்றியானது, மீன் தூண்டில் முனையில் உள்ள இரும்பை போன்றது. அந்த இரும்பை இரை என எண்ணி மாட்டிக்கொள்ளும் மீனை போல், சூது மூலம் வரும் வெற்றியானது நம்மை சிக்க வைத்து விடும்.

சூதினால் மகாபாரதத்தில் தர்மர், நாடு, சகோதரர், மனைவி எல்லாம் இழந்து காட்டில் ஒளிந்து வாழும் அவல நிலையும், அதை தொடர்ந்த மிக பெரிய போரும், அதன் இழப்புகளும் அனைவரும் அறிந்ததே.

சூது அத்தகைய வலிமை உடையது. வெற்றி என்னும் மாய தூண்டிலால் கவரப்பட்டு. சூது விளையாட்டில் எக்காரணம் கொண்டும் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள கூடாது என்பதே கருத்தாகும் .

பரிமேலழகர் உரை
வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும். (வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.).

மணக்குடவர் உரை
வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக; வென்று பெற்ற பொருளும் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற்போலும். இது பின் கேடுபயக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.

இகலென்ப எல்லா உயிர்க்கும்

குறள் 851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் 
பண்பின்மை பாரிக்கும் நோய்.
[பொருட்பால்,  நட்பியல், இகல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இகல் - பகை; போர்; வலிமை; சிக்கு; அளவு; புலவி.
இகலாட்டம், s. Diversity of opi nions, controversy, disputation, alter cation, போராட்டம். 2. Competition, con tention, vieing, rivalry, shifting a duty on another, முரணுகை. எந்நேரமுமிகலாட்டமாயிருக்கிறவன். He who is always disputing.

என்ப - என்பது

இகல் என்ப - மனவேறு பாடு என்பது யாது என்று நூலோர் சொல்வார்கள் என்றால்

எல்லா - எல்லாம் ; முழுதும்; யாவும் 

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

எல்லா உயிர்க்கும்  - எல்லா உயிர்கள் இடத்திலும்

பகல் - பகுக்கை; நடு; நடுவுநிலை; நுகத்தாணி; முகூர்த்தம்; அரையாமம்; மத்தியானம்; பகற்போது; பிறரோடுகூடாமை; கட்சி; இளவெயில; அறுபதுநாழிகைகொண்டநாள்; ஊழிக்காலம்; சூரியன்; ஒளி; வெளி; கமுக்கட்டு.

பகல் - பகு - பிறரோடு கூடாமை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

பகலென்னும் - பிறரோடு கூடாது இருத்தல்

பண்பு -  வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

இன்மை இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

பண்பின்மை - பண்பு இல்லாது

பார் - பரப்பு; தேரின்பரப்பு; வண்டியின்நெடுஞ்சட்டம்; பூமி; நிலம்என்னும்பூதம்; நாடு; வன்னிலம்; பாறை; தடை; உரோகிணிநாள்; பருமை; வரம்பு; முத்துவிளையும்திட்டு; மறையோன்; புத்தன்; பாத்திபலகொண்டபகுதி; அடுக்கு; தடவை.

பார் - பூமி, நிலம்

பாரி-த்தல் -   pāri-   11 v. cf. sphāri. intr.1. To spread, expand; to abound; பரவுதல்.இவணலம் பாரித்திட்ட விந்நகர் (சீவக. 706). 2. Tobe bulky, huge; பருத்தல். Colloq. 3. To increase; மிகுதியாதல். தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது பாரித்து (பெரியபு. இளையான். 9). 4. Toarise, appear, come into being; தோன்றுதல்.பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும்பாண். 442).5. To prepare; ஆயத்தப்படுதல். பாயிய வெழுந்தவேங்கை பாரிக்குமளவில் (சூளா. துற. 19).--tr. 1.To foster; வளர்த்தல். பண்பின்மை பாரிக்கு நோய்(குறள், 851). 2. To cause to appear; தோன்றச்செய்தல். 3. To cause to be obtained;அமைத்துக்கொடுத்தல். பரமபதம் பாகவத ரனைவருக்கும் பாரித்தானால் (அரிசமய. பத்திசா. 98). 4. Tomake, form, construct, create, constitute; உண்டாக்குதல். (W.) 5. To fill up, complete;நிறைத்தல். பாரித்துள்ள இப்பண்டமும் (திருவிளை.குண்டோ. 16). 6. To wear, as ornaments; அணிதல். கைவளை பாரித்தார் (இராமநா. பால. 21). 7.To worship with flowers; அருச்சித்தல். தடமலரெட

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

பாரிக்கும் நோய் - உலகத்தில் நிலவும் நோய்

முழுப்பொருள்
இகல் என்றால் பகைமை, போர், முரணுகை, மனவேறுபாடு. அத்தகைய இகல் என்பது யாது என்றால் எல்லா உயிர்களையும் பகுத்து அதனுடன் இணங்கிச் செல்லாமல் அதனுடன் கூடாது இருப்பது. இத்தகைய பண்பின்மையை (பண்பு இன்மை) வளர்க்கும் தீய குணமே/நோயே மனவேறுபாடு/இகல் என்று நூலோர்/சான்றோர் சொல்லுவர்.

குடும்பம் உறவுகள் என்றால் ஏற்ற தாழ்வுகள் வேறுபாடுகள் இருப்பது எல்லா மனிதர்களுக்கும் இருப்பது போன்று இயல்பான ஒன்று தான். ஊர்க் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். விட்டுக்கொடுத்தான் குடும்பத்தில் உறவுகளை பேண வேண்டும். வாழ்நாள் முழுதும் செய்ய தேவையாக இருந்தாலும் செய்ய வேண்டும். ஏனெனில் பகைவளர்த்து தனித்து வாழ்ந்து நாம் சாதிப்பது ஒன்றுமில்லை. அதற்காக சுயமரியாதையை குறைத்துக்கொண்டு உறவு வளர்க்கவேண்டியதில்லை. சுயமரியாதை பாதிக்கப்படும் இடங்களில் அமைதியாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் நன்றல்லவற்றை அன்றே மறப்பதே நன்று. அது பகையை வளர்க்காது நம் நிம்மதியை காப்பாற்றும். ஏனெனில் நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற?. பாதிப்பிரச்சனைகள் போனவற்றை பற்றிப் பேசி பேசி ஊதிப் பெருக்கி வளர்ப்பவை யாகும். அது சில உறவுகள் பிரச்சனைகளை தூபம் போட்டு வளர்த்துவிடுவதில் கெட்டிகாரர்கள். ஆதலால் நினைவில் கொள்ளுகள் ”பகல் என்னும் பண்பு இன்மை இந்த பார் உலகில் ஒரு நோயாகும்”. நோயினை விலகி இருங்கள்.

பரிமேலழகர் உரை
எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை, பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர்.

விளக்கம் (மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லா உயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்று விளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும் கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று. இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இகல்-மாறுபாடு; எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய்- இயங்குதிணைப்பட்ட எல்லாவுயிர்கட்கும் இனத்தொடு கூடி வாழாமைக்கு ஏதுவான, பிரிவினை யென்னும் தீய குணத்தை வளர்க்கும் மனநோய்; என்ப- என்று கூறுவர் அறநூலார்.

சேக்கையும் உணவும் இணைவிழைச்சும் பற்றி அஃறிணையுயிரினங்கட்குள்ளும் இகல் விளைதலின், 'எல்லாவுயிர்க்கும்' என்றும், ஒன்றுபட்டிருக்க வேண்டிய இனத்தைப் பல்வேறு பிரிவாகப் பகுத்தலால் 'பகல்' என்றும், கூறினார். சேக்கை தங்குமிடம். இகலென்னுந் தீக்குணமுடைய மாந்தர் உயர்திணையாகாது அஃறிணைப்பாற்படுவர் என்பது தோன்றப் 'பண்பின்மை பாரிக்கு நோய்' என்றார்.

மணக்குடவர் உரை
எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை, இகலென்று சொல்லுவார் அறிவோர். இஃது இகலாவது இதுவென்று கூறிற்று. 

மு.வரதராசனார் உரை
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.

சாலமன் பாப்பையா உரை
எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
இகல் means enmity/war/conflict/Rivalry. What is rivalry? Rivalry breeds differences/discrimination among humans (and all organisms) thereby separating them just like day and night doesn't gel together. Rivalry is a dangerous trait; a disease that kills us, friendship, relationships, families, societies. So, one should not support rivalry or discrimination

Questions that I ask to the kid
What is rivalry? Why rivalry is considered a disease?

அறன்கடை நின்றாருள் எல்லாம்

குறள் 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை 
நின்றாரின் பேதையார் இல்.
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]

[அஃதாவது, காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழையாமை.இஃது ஒழுக்கம் உடையார்மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின் பின் பிறனில் விழையாமை வைக்கப்பட்டது.)

பொருள்
அறம் - அறம் - அறன்,  Moral or religious duty, virtue; the performance of good works according to the shasters--includ ing justice, hospitality, liberality, &c., also what is prescribed as the duty to be prac tised by each particular caste. Compare தருமம்

அறன்கடை - பாவம்.
அறன்கடை - பாவம் செய்து வாழ்வோர் ; அறத்தை தன் வாழ்வில் முதலாக வைக்காது, இறுதியாகயாக வைத்தல் (அறமில்லாதிருத்தல்)

நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

நின்று -  எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள்படவரும் ஒர்இடைச்சொல்.

நின்றாருள் - நின்றவர்களில் 

எல்லாம் - எல்லோரிலும் , முழுதும்

பிறன் -  மற்றையான், அன்னியன், அயலான்

பிறன்கடை - பிறன்பெண்டிரில் காமம் கொண்டு

நின்றாரின் - அவரது வீட்டில் நின்றவர்

பேதையார் - அறிவில்லாதவர், மடயர்

இல் - வேறு இல்லை.

முழுப்பொருள்
முதலில்: காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழைவதே பெரிய ஒழுக்க கேடு என்பதை குறிக்கவே இவ்வதிகாரம் ஒழுக்கமுடைமைக்கு அடுத்த அதிகாரமாக வைக்கப்பட்டுள்ளது. 

அறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்னும் கருத்தால் கரிசு (பாவம் ) அறங்கடை எனப்பட்டது. அத்தகைய பாவ வழியில் அறத்தினை தன்வாழ்வில் முதன்மையான வாழ்முறையாகக் கொள்ளாது கீழான, நெறியற்ற, அறமொழிந்த வாழ்வை வாழ்கின்ற மனிதருள் எல்லாம், காம மயக்கத்தால் பிறர் மனைவியின் மீது இச்சைகொண்டு விழைந்து பிறர் வீட்டின் வாசலில் இரப்புக்காக நிற்கும் மூடர் இழிந்தோர் பேதையார் (அறிவிலிகால்) யாரும் வேறு இல்லை.  பிறன் கடைநிற்றல் என்பது இரப்போன் (பிச்சை கேட்டுக்கும்) நிலை போன்ற இழிவையும் உணர்த்திற்று .

ஐம்பெரும் அறப்பிழைகளாகக் கருதப்படுபவற்றுள், பிறன் மனைவிழைதலும் சேருதலும் ஒன்றாகும். இப்பிழையினால் அறக்கேடும், பொருட்கேடும் விளையும்.

மேலும்: அஷோக்

ஒப்புமை
”அறன்கடைப் படாஅ வாழ்க்கை” (அகநா 15:1)
“பிறன்கடை நின்றொழுகு வானும்” (திரிகடுகம் 19)

ஆத்திச்சூடி
மெல்லி நல்லாள் தோள்சேர் - பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்
மோகத்தை முனி - காம ஆசைகளை விட்டொழிப்பாயாக
மனம் தடுமாறேல் - எதனாலும் மனக்கலக்கம் அடையாதே

பரிமேலழகர் உரை
அறன்கடை நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்-பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை. 

விளக்கம்
(அறத்தின் நீக்கப்பட்டமையின் 'அறன்கடை' என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார்; எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அறன்கடை நின்றாருள் எல்லாம் - காமம்பற்றித் தீவினை செய்தாரெல்லாருள்ளும் ; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல் - பிறன் மனைவியைக் காதலித்து அவன் வீட்டு வாயிற்கண்போய் நின்றாரைப்போலப் பேதையாரில்லை .

அறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதென்னுங் கருத்தால் கரிசு (பாவம் ) அறங்கடை எனப்பட்டது . காமத்தாற் பெண்ணிற்கடிமை யாகும் அண்ணாளரும் விலைமகளிரொடு கூடும் காமுகரும் போல , அறமும் பொருளும் இழத்தலேயன்றி , அச்சத்தால் தாம் விரும்பிய இன்பமும் இழத்தலால் , பிறன் மனைவியை விரும்புவாரைப் போலப் பேதையாரில்லை என்றார் . கடை என்னும் சொல்லொப்புமை பற்றித் தீவினையில் நிலைத்தவரையும் ' நின்றார் ' என்றார் . பிறன் கடைநிற்றல் என்பது இரப்போன் நிலை போன்ற இழிவையும் உணர்த்திற்று .

மணக்குடவர் உரை
காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.

மு.வரதராசனார் உரை
அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை.

பேதைமையுள் எல்லாம் பேதைமை

குறள் 832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை 
கையல்ல தன்கட் செயல்.
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை

பேதைமையுள் - பேதைமைகளில்

எல்லாம் - எல்லாம்

பேதைமை - பேதைமை; கொடியது

காதன்மை - காதல், 1.Affection, attachment; அன்பு. காதன்மை கந்தா (குறள்.507); 2.Desire; ஆசை, 3.lust, passion, விரகம்
கை - கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

கையல்ல - கையல்லது - தகாதது

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

தன்கட்செயல் - தன்னுடைய நேரத்தை அதில் ஈடுப்படுத்தி செயல்படுதல்

முழுப்பொருள்
ஒருவனுக்கு அறியாமையுள் எல்லாம் அறியாமை என்னவென்றால் தன் நிலைக்கு ஒவ்வாத, ஒழுக்கத்திற்கு ஒவ்வாத, அல்லது எப்பயனையும் தராத ஒரு தகாத செயலை மிகுந்த விருப்பப்பட்டு / ஈடுப்பாடுடன் / பற்றுக்கொண்டு செய்வதே ஆகும். 

ஒப்புமை
சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் – கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
சீர்ந்தது செய்யாதா ரில். (பழமொழி 67)

பரிமேலழகர் உரை
பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது, கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். 

விளக்கம் 
(இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பேதைமையுள் எல்லாம் பேதைமை - பேதைமைக் குற்றங்களெல்லாவற்றுள்ளும் கொடியதாவது; கை அல்லதன்கண் காதல் செயல் - ஒருவன் தனக்குத்தகாத ஒழுக்கத்திற் பெருவிருப்பங் கொள்ளுதல்.

கையல்லது செய்தல் , இருமைக்கும் ஆகாதென்று அறநூலாற் கடியப் பட்டனவும், தன் நிலைமைக்கு ஏற்காதனவுமான தீய செயல்களைச் செய்தொழுகுதல். 'கை' ஒழுக்கம்; ஆகுபெயர்.

மணக்குடவர் உரை
அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று 

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு

குறள் 999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 
பகலும்பாற் பட்டன்று இருள்.
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

பொருள்
நகல் - சிரிக்கை (சிரிப்பு), மகிழ்ச்சி (தம்முட் குழீஇ நகலி னினிதாயின்(நாலடி, 137)), நட்பு (நகலானா நன்னய மென்னுஞ் செருக்கு (குறள், 860)) ; பரிகாசம், ஏளனம்; படி; 

வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.

வல்லர் - வலிமை; habit of feasting or fasting for days at a time

நகல்வல்லர் - பல மக்களுடன்/மனிதர்களுடன் நட்புறவாடிக் கூடி மகிழும் பண்பு / தன்மை உடையவர்

அல்லார்க்கு - அல் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) 

மாயிரு  - ஏகமாயிரு-த்தல் -> ஒன்றாயிருத்தல்; மிகுதியாய்இருத்தல்.
ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.

பகலும் - பகல் - பகுக்கை; நடு; நடுவுநிலை; நுகத்தாணி; முகூர்த்தம்; அரையாமம்; மத்தியானம்; பகற்போது; பிறரோடுகூடாமை; கட்சி; இளவெயில; அறுபதுநாழிகைகொண்டநாள்; ஊழிக்காலம்; சூரியன்; ஒளி; வெளி; கமுக்கட்டு.

பாற்படுதல் - ஒழுங்குபடுதல்; நன் முறையில் நடத்தல். (பாற்பட்டார் கூறும் பயமொழி(இனி. நாற். 7).)

பாற்பட்டன்று - நன் முறையில் நடக்காமல்

இருள் -  இரு-மை, அந்தகாரம், கறுப்பு,  மயக்கம்; அறியாமை; துனபம்; நரகவிசேடம்; பிறப்பு; குற்றம்; மரகதக்குற்றம்; எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம்; யானை; இருவேல்; இருள்மரம்.

முழுப்பொருள்
ஞானம், பணம் முதலியவற்றை மிகுதியாக பெற்றவராக ஒருவர் இருந்தாலும் பிறருடன் நட்பாய் சிரித்து மகிழ்ந்து நகையாடி பகடி செய்து வாழும் பண்பு இல்லாதவராய் இருப்பின் அவர் பகலிலே இருளில் மூழ்கியிருப்பதற்கு ஒப்பாகும்.

நாஞ்சில் நாடன் உரை
இரு எனும் சொல்லுக்கே பெரிய என்றும், கரிய என்றும் பொருள் சொல்கிறார்கள். இருள், இருட்டு, இருண்ட எனும் சொற்கள் ‘இரு’ எனும் சொல்லின் பிறப்புக்கள் ஆகலாம். பண்புடைமை அதிகாரத்துக் குறள், ‘மாயிரு ஞாலம்’ என்கிறது. மாபெரும் உலகம் என்ற பொருளில்.

‘நகல் வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும் பாற் பட்டன்று இருள்’


என்பது முழுப்பாடல். எல்லோரிடமும் கலகலப்பாகச் சிரித்துப் பேசி மகிழத் தெரியாதவர்களுக்கு, இந்த மாபெரும் உலகமானது பட்டப் பகலிலும் நட்ட நடு இரவாகவே இருக்கும் என்கிறார் திருவள்ளுவர். பெரியாழ்வார்,

பரிமேலழகர் உரை
நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம். 

விளக்கம் 
(எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பில்லார்க்கு உலகியல் தெரியாது என்பார், 'உலகம் இருளின்கண் பட்டது' என்றார். 'பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நகல்வல்லர் அல்லார்க்கு -பண்பின்மையால் ஒருவரோடுங் கலந்துரையாடி மகிழுந் திறமில்லாதவர்க்கு; மா இரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகப்பெரிய இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்திருப்பதாகும்.

ஒருவரோடுங் கலந்தறியப் பெறாத பண்பிலிகட்கு உலகியல் முற்றும் தெரியாதென்பது கருத்து. பட்டன்று என்பது உடன்பாட்டுச் சொல்லாதலின் , ' பாழ் பட்டன்றிருள் ' என்று பாடமோதி, ' இருள் நீங்கிற்றன்று ' என்றுரைப்பது பொருள்கெடாவிடினும் பொருந்தாது. 'மாயிரு' மீமிசைச் சொல்.

மு.வரதராசனார் உரை
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.

மேலும் (நன்றி: அந்தமிழ்)
புண்பட்ட நெஞ்சுக்குச் சிரிப்பைப்போல இதமான மருந்து வேறு கிடையாது. உலக வாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு இன்பதுன்பம், பித்தலாட்டம் இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு சிரிக்கத் தெரியாமலும் நாம் இருந்தோமேயானால், என்ன ஆகும் நம் கதி? பைத்தியம் பிடித்துவிடும். பைத்தியம் பிடிப்பதிலிருந்து நம்மைத் தடுப்பதற்காகவே நமக்குச் சிரிப்பு என்ற தெய்வீகசக்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்
என்று சொன்னார் குறளாசிரியர்.

சிரிக்கத் தெரியாதவனுக்குப் பட்டப் பகலும் அமாவாசை இருட்டாகத்தான் இருக்கும் என்பது இந்த்க் குறளின் பொருள். தெளிவு இல்லாத காரணத்தால் சிரிப்பற்று இருக்கிறோம். உள்ளத்தில் தெளிவு வந்துவிட்டாலோ, வாழ்க்கையே ஒரு சிரிப்பாக இருக்கும். சிந்தனைத் தெளிவுள்ளவனுக்கு இந்த உலகம் ஒரு ஹாஸ்ய நாடகமாகத் தோன்றுகிறது. உணர்ச்சி வசப்பட்டவனுக்கு இந்த உலகம் சோக நாடகமாகக் காட்சி கொடுக்கிறது.

மிருக வர்க்கங்களிலேயே சிரிக்கும் ஆற்றலைப்பெற்ற பிராணி, மனிதன் ஒருவன்தான். ஆனால் இந்த அரிய ஆற்றலை மனிதனுக்குப் பயன்படுத்தத் தெரியவில்லையே என்று ஆற்றாமைப்படுகிறார் வள்ளுவர்.

அணுகுண்டுக்கு இல்லாத சக்தி சிரிப்புக்கு இருக்கிறது என்பதை ஒரு புராணக்கதை விளக்குகிறது. திரிபுரத்தில் அட்டகாசம் செய்துகொண்டு இருந்த அரக்கர்களை சிவபெருமான் அழித்தார். எப்படி அழித்தார்? ஹைட்ரஜன் குண்டு போட்டல்ல, ஒரு சிரிப்பு சிரித்தார். அவ்வளவுதான் தீமையே வடிவாக வந்த அரக்கர்கள் தீய்ந்து ஒழிந்தார்கள்.

சீராரூர் மேவும் சிவனே – சிரிப்பன்றோ
நேராரூர் இட்ட நிலை
என்று பாடினார் கவிஞர்.

சிரிப்பு புற இருளை மாத்திரமல்ல, அக இருளையும் அகற்றி துன்பத்தைத் துடைத்து இன்பத்தை நல்குகிறது.

Thirukkural - Management - Managing Stress - Laughter far Stress Reduction
Valluvar, through Kural 999, uses an analogy to enforce the importance of laughter. The world is never dark during a bright sunny day. For those who cannot laugh, do not laugh, and do not join others in their laughter this big bright world is dark even during the day. The world here may refer to their inner world.

This world is dark even at noon 
To those who cannot laugh.

If you do not laugh, your inner world will become dark. Laugh a lot to brighten your inner world. Laughter is also called inner jogging. Jog, in addition to jogging for physical fitness, for mental fitness.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்

குறள் 913
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று. 
[பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

பொருள் - பொருடனைப்போற்றிவாழ்

பெண்டிர் - பெண்கள்

பொருட்பெண்டிர் -  வேசியர், பொருள் தனை மட்டும் நேசிக்கும் பெண்

பொய்ம்மை - பொய், மாயம், போலி

முயக்கம் - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.

இருட்டு - இருள்; அறியாமை

அறையில் - அறை - அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம்; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை

இருட்டறையில் -  இருட்டு + அறைDark, unlit place

ஏதில் -  foreignness, அன்னியம்; 2. vicinity, அயல்; ஏதிலார், strangers, foreigners, enemies, neighbours; 2. prostitutes, பரத்தையர்.

தழீஇ - ஓர்ஒலிக்குறிப்பு (clamoming, rattling, roar, as of a drum.)

பிணம் - சவம், பிசாசம்

பிணந்தழீஇ - பிணத்துடன் உருண்டு ஒலி எழுப்பவது

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது

முழுப்பொருள்
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படு வார் என்று காமத்துப்பாலில் கூறுவார் திருவள்ளுவர். இதில் ‘மிக மென்மையான அகம் சார்ந்த விஷயம் காமம் என்பது’ என்று கூறியிருப்பார். அப்படிப் பட்டது காமம்.

ஆனால் தான் தழுவிப் புணரும் ஆடவர் கொடுக்கும் பொருளுக்காக ஆசைப்பட்டுப் பொய்யாகத் தழுவும் பெண் வேசியர் எனப்படுவார். அத்தகைய வேசியருடன் ஒருவர் தழுவல்/புணர்ச்சிக் கொள்வது என்பது இருட்டறையில் பிணத்துடன் (பிணம் என்று அறியாது) உருண்டு ஒலி எழுப்பவதுப்போல் ஆகும். அதாவது அகம் சாராத ஒரு செய்கை பிணத்துடன் செய்யும் செய்கைக்கு ஒப்பாகும்.

ஆதலால் விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில் என்கிறார் திருவள்ளுவர்.

ஆத்திச்சுடி
மைவிழியார் மனை அகல் - விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
மெல்லி நல்லாள் தோள்சேர் - பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்
மோகத்தை முனி - காம ஆசைகளை விட்டொழிப்பாயாக
நோய்க்கு இடம் கொடேல் -  நோய்க்கு இடம் கொடுக்காதே
மனம் தடுமாறேல் - எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
உத்தமனாய் இரு - நற்குணம் உள்ளவனாக வாழ வேண்டும்.
குணமது கைவிடேல் - நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே
கோதாட்டு ஒழி - குற்றமான விளையாட்டை விட்டு விடு 

நாஞ்சில் நாடன் உரை
இருட்டறை: இருட்டு அறை. வரைவின் மகளிர் அதிகாரத்துக் குறள் பேசுகிறது,

‘பொருட் பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையுள்
ஏதில் பிணம் தழீஇ அற்று’

இந்தக் குறளின் அளபெடை நயத்தைக் கவனிக்கவும். இன்று விலைமகள், வேசி, தேவடியாள் என்று மலிவாக்கப்பட்ட சொற்களுக்கு, அன்று வள்ளுவம் பயன்படுத்திய சொல் பொருட்பெண்டிர். Sex worker என்பதை விடவும் அருமையான சொல் இது. இருமனப் பெண்டிர் என்பான் கம்பன். பொய்மை எனில் போலி, முயக்கம் எனில் தழுவல், கலவி. பொருட் பெண்டிரின் பொய்மையான முயக்கமானது, இருட்டறையில் முன்பின் அறிந்திராத பெண்ணின் பிணத்தைத் தழுவது போன்றது என்பது குறளின் பொருள்.

பரிமேலழகர் உரை
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் - கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையையுடைய முயக்கம்; இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇயற்று - பிணமெடுப்பார் இருட்டறைக்கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற் போலும். 

விளக்கம் (பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாத ஓரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால், அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவராநின்றும் பொருள் நோக்கிப் புறத்தால் தழுவுவர்; அதனை ஒழிக என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் சொல்லும் செயலும் பொய் என்பது கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் - பொருள் கொடுப்பாரை விரும்பாது அவர் கொடுக்கும் பொருளையே விரும்பும் விலைமகளிரின் பொய்யான தழுவல்; இருட்டு அறையில் ஏது இல் பிணம் தழீஇய அற்று-கூலிக்கு அமர்த்தப்பட்டவன் இருட்டறையில் யாதொரு தொடர்புமில்லாத கன்னிப் பெண்ணின் பிணவுடம்பைப் பொருளாசை கருதித் தழுவினாற் போலும்.

இதிலுள்ள உவமத் தொடருக்கு, "பிணமெடுப்பார் இருட்டறைக் கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற் போலும்." என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருந்தாது.'முயக்கம்' , 'தழீஇ' இரண்டும் இடக்கரடக்கல்.பிணமெடுத்தலையே ஆசிரியர் கருதியிருப்பின், பிணம்எடுத்தற்று என்றோ பிணந்தூக்கியற்று என்றோ யாத்திருப்பர்.மேலும், உயிர்போனபின் பேய்வந்து அண்டும் என்று கருதி விளக்கேற்றி வைப்பது தமிழர் வழக்கமே யன்றி, இருட்டறையிற் சவத்தை வைப்பதன்று. இங்கு முயக்கம் கூட்டத்தைக் குறிப்பதால் அதற்கு உவமமான தழுவலும் அதனைக் குறித்தல் வேண்டும்.தொடுதல் அல்லது தூக்குதல் மட்டும் முயக்கத்திற்கு உவமமாகாது.உவமையைக் கூர்ந்து நோக்கின், பொருளாசையும் உள்ளத்தொடு பொருந்தாத கூட்டமும் பொதுத்தன்மை யென்பது பெறப்படும்.இத்தகைய பிணந்தழுவும் வழக்கம் தமிழரல்லாத வேற்றினத்தாரிடையே ஆசிரியர் தம் காலத்தில் இருந்தது கண்டு, அதை உவமமாக அமைத்திருத்தல் வேண்டும்.

18-ஆம் நூற்றாண்டிற்கும் 19-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் (1792-1823) தென்னாட்டில் வாழ்ந்த பிரெஞ்சுக் கிறித்தவ சமயக்குரவராகிய அப்பர் தூபாயிசு,தம் தாய்மொழியில் எழுதிய 'இந்துப் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்' என்னும் பொத்தகத்திற் கீழ்வருமாறு வரைந்திருக்கிறார்.

"இதேமக்களிடை, இனி ,அருவருப்பானதும் வெறுப்புண்டு பண்ணுவதுமான ஒரு வழக்கத்தைக் கொண்ட நம்பூதிரி என்னும் ஒரு தனிக்குலமும் உள்ளது. இக்குலப் பெண்கள் வழக்கமாகப் பூப்படையுமுன் மணஞ் செய்து வைக்கப்படுகின்றனர்; ஆயின், பூப்புக் குறிகள் வெளிப்படையாகத் தோன்றும் பருவத்தை யடைந்த பெண் ஆடவனொடு கூடுமுன் இறக்க நேரின், அவள் சவவுடம்பைப் பேய்த்தன்மையான புணர்ச்சிக் குட்படுத்த வேண்டுமென்பது கண்டிப்பான குலமரபாம்.இதன் பொருட்டு அப்பெண்ணின் பெற்றோர் அத்தகைய அருவருப்பான மணவகையை முற்றுவித்தற்கு இசையும் ஒரு வெங்கப் பயலைப் பணப்பரிசு கொடுத்து அமர்த்த வேண்டியுள்ளது,ஏனெனின், அம்மணம் முற்றுவிக்கப்பெறாவிடின்,அக்குடும்பம் தன் மானத்தை இழந்து விட்டதாக்க் கருதிக் கொள்ளும்." (மூன்றாம் பதிப்பு, பக்.19-17.)

அதுபற்றி 17-ஆம் பக்கத்தில் பதிப்பாசிரியர் வரைந்துள்ள அடிக்குறிப்பு வருமாறு:-

இந்த அப்பர்(Abber) காலத்தில் செய்தி எவ்வாறாயிருந்திருப்பினும், இக்காலத்தில் இவ்வழக்கங்கள் இல்லை,இது பற்றித் திரு.உலோகன் (W.Logan) தம் 'மலைவாரக் கைப் பொத்தகம்' (Manual of Malabar) என்னும் நூலிற் பின் வருமாறு வரைகின்றார்.'மணவாதிறக்கும் பெண்டிர்க்குப் பிந்திய சிற்றீடு-இத்தகைய பெயர் அது பெறத் தகுந்ததாயின் - செய்தற்கு, (ஐரோப்பிய மணவாழிக் கொத்த இந்துச் சின்னமாகிய) தாலி ஈமத்தின் மேற்கிடத்தப் பட்டிருக்கும் சவத்தின் கழுத்தில் முறைகாரனான ஓர் உறவினனாற் கட்டப்படும் வரை,அதை எரிக்க முடியாதென்று சொல்லப்படுகின்றது. நம்பூதிரிமார் தம் இழவுச் சடங்குகளும் கைக்கொள்வுகளும் பற்றி அளவிறந்து வாய்வாளாமை மேற்கொள்கின்றனர்.இத்தனிவியப்பான ஈம மணத்தைச் சேர்ந்த பிற கைகொள்வுகள் பற்றித் தமக்குச் சொல்லப்பட்டதை அப்பர் தூபாயிசு வரைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. நம்பூதிரிக் குமுகத் தலைமக்களையும் மலைவாரத்தில் நம்பூதிரி வழக்கங்களை நெருங்கிப் பழகி யறிந்த பிறரையும் உசாவிய கவனமான உசாக்களால், அந்த அப்பர் இங்கு வரைந்திருக்கும் பழக்கத்தைப் பற்றி அவருக்குச் சொன்னவன் கூற்றை அவர் தவறாக உணர்ந்திருக்க வேண்டுமென்று எனக்குத் தெரிகின்றது.அத்தகைய நிகழ்ச்சியிற் செய்யப்படுவதென்னவென்றால் ,இந்துத் திருமணங்களில் வழக்கமாகச் செய்யப்படும் மதவியற் சடங்குகளை, இறந்த பெண்ணின் உடம்பைச் சுட்டெரிக்குமுன் அதன் மிசை நிகழ்த்துவதே. இங்கு மணமென்பது திருமணச் சின்னமாகிய தாலியைக் கட்டுவதேயன்றி மணமுற்றுவிப்பு வினையன்று."

பதிப்பாசிரியர் இங்ஙனம் மறுத்திருப்பினும், அப்பர் துபாயிசு கூற்று வலியிழந்து விடாது. கீழ்க்காணும் ஏதுக்குறிப்புகள் கவனிக்கத் தக்கன.

(1)இந்திய ஆரியப் பூசாரியர் முதற்காலத்திற் பல அருவருப்பான சடங்குகளை ஆற்றி வந்தமை, சென்ற நூற்றாடில் மார்க்கசகாய ஆச்சாரியார் வெளியிட்ட 'சித்தூர் அதாலத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு' என்னுஞ் சுவடியினின்று தெரிய வருகின்றது.

(2)திருவள்ளுவர் காலம் கி.மு. 2-ஆம் நூற்றாண்டாதலால், அப்பழங் கால நம்பூதிரி வழக்கம் ஆங்கில நாகரிகம் தென்னாட்டிற் புகும் வரை தொடர்ந்திருக்கலாம்.

(3) அப்பர் தூபாயிசு தம் நூலை எழுதி முடித்த ஆண்டு 1806. அந்நூலின் 3-ம் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1905. ஆதலால், பதிப்பாசிரியர் காலத்திற் பண்டை வழக்கம் நின்று போயிருக்கலாம்.நம்பூதிரிக் குல முதியோர் நினைவிலிருந்திருப்பினும் , இழிவு பற்றி அவரால் மறைக்கவும் மறுக்கவும் பட்டிருக்கலாம்.

(4) அப்பர் தூபாயிசு மதி நுட்பமும் உண்மையும் நடுவுநிலைமையும் உடைய துறவியராதலாலும், தென்னாடு வந்து தமிழ வாழ்வு வாழ்ந்து பதினாலாண்டு எல்லா மக்களொடும் நெருங்கிப் பழகிய பின் தம் நூலை எழுதினமையாலும், அவர் பிறன் கூற்றைப் பிறழவுணர்ந்தோ பொறுப்பற்ற தனமாகவோ எழுதியிருக்க முடியாது.

(5) முறைகாரன் தாலிகட்டற்கும் உறவினனல்லாத ஒரு பரம பஞ்சை பணம் பெற்றுத் தழுவற்கும் பெரு வேறுபாடிருப்பதால்,ஒன்றை யின்னொன்றாகப் பிறழவுணரவோ உணருமாறு கூறவோ முடியாது.

(6) மணமென்பது உண்மையிற் கூட்டமேயாதலால், பூப்படைந்து மணமாகாத அல்லது மணச்சடங்கு மட்டும் நடந்து கூட்டம் நிகழாத பெண் இறந்தபின் அவள் ஆவியைப் பொந்திகைப்படுத்தற்குச் செய்யும் சடங்கு, முதற் காலத்திற் கூட்டமாகவே யிருந்திருத்தல் வேண்டும். நாகரிகமடைந்த பிற்காலத்திலேயே, அது 'கொடும்பாவிகட்டியழுதல்' போல அடையாளச் சடங்காக மாறியிருத்தல் வேண்டும்.(பொந்திகை=திருப்தி (வ.).)

(7)'நம்பூதிரிமார் தம் இழவுச் சடங்குகளும் கைக் கொள்வுகளும் பற்றி அளவிறந்த வாய்வாளாமை மேற்கொள்கின்றனர்.' என்று திரு.உலோகன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

(8) "இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇயற்று" என்னும் திருக்குறள் உவமத்திற்கு, அப்பர் தூபாயிசு கூற்றே சிறந்த விளக்கமாகப் பொருந்துகின்றது.

(9) பூப்படையுமுன் பெண்ணிற்கு மணஞ்செய்து வைப்பதும், மணந்தபின் மணமக்கள் கூட்டத்தைத் தள்ளிவைப்பதும், பூப்படைந்த பெண் கூட்டத்திற்குமுன் இறப்பின் அவள் சவவுடம்பின் கழுத்தில் தாலி கட்டுவதும், பண்டைத் தமிழர் வழக்கமல்ல.

(10) திருவள்ளுவர் சேரநாடு சென்றிருக்க வேண்டுமென்பது முன்னரே "வெள்ளத்தனைய மலர் நீட்டம்"என்னும் குறளுரையில் (595) கூறப்பட்டது.

'தழீஇ' இன்னிசையளபெடை.

மணக்குடவர் உரை
பொருளே கருதும் பெண்டிர் ஒருவனோடு பொய்யே முயங்கும் முயக்கம், இருட்டறையினுள்ளே கிடந்ததொரு வேற்றுப் பிணத்தைக் கூலிக்குத் தழுவியதுபோலும். இவை இரண்டினாலும் கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் கூறப்பட்டது. 

மு.வரதராசனார் உரை
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.

வகைமாண்ட வாழ்க்கையும்

குறள் 897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் 
தகைமாண்ட தக்கார் செறின்.
[பொருட்பால், நட்பியல், பெரியாரைப் பிழையாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வகை - வலிமை, வாழ்க்கைக்குரிய பொருள் முதலியன, வணிகமுதல் ( the principal stock in trade, முதல்.); இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள், கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை

மாண் - Beinggreat, being worthy; மாட்சியாகை; மாண்டூகம்(One of the thirty-two Upanishads. See உபநிடதம்.),
மாண்டல் - மாட்சிமைப்படுதல்; இறத்தல்

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

வகைமாண்ட வாழ்க்கையும் - வலிமையாக, வாழ்க்கைக்குரிய பொருள்களை (மற்றும் சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின) ஆடம்பரமாக (முதல் ரகத்தில்) வைத்துக்கொள்வதை வாழ்க்கையின் மாட்சியாக கருத்துதல்

வான் - s. air, ether, sky, ஆகாயம்; 2. rain, மழை; 3. cloud, மேகம்; 4. adj. great, excellent, பெருமையான.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

வான்பொருளும் - பெருமைப்படக்கூடிய பொருள்கள்

என்னாம் - என்னவாம் ? என்ன பயன் ? (அப்பொருள்களுக்குப் பயன் இல்லை)

தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.

தகைமாண்ட - தன்மை, தகுதி, பெருமை, குணம் கொண்ட மதிப்பிற்குரிய 

தக்கார் - மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர்

செறின் -  செறு¹-தல் - சினத்தல். அரசர்செறின் வவ்வார்(நாலடி, 134), வெறுத்தல். செற்றாரெனக் கைவிடலுண்டோ (குறள், 1245).

முழுப்பொருள்
தன்மை, தகுதி, பெருமை, மதிப்பு, ஒழுங்குப் போன்ற நற்குணங்கள் கொண்ட மேன்மக்களின் சினத்திற்கு ஒருவர் உண்டானால் அவர் எத்தகைய வலிமையான வாழ்க்கை அதாவது வாழ்க்கைக்குரிய எல்லா பொருள்களும் சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின், மற்றும் வான்ப்போல் பெருமைக்குரிய பொருள்களை வைத்து இருந்தாலும் அவற்றுக்கு எப்பயனும் பொருளும் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

உதாரணமாக ஒரு பெரிய பணக்காரர் ஒரு நிகழ்ச்சிக்கு பிறரை காக்க வைக்கும் படியாக தாமதமாக சென்றால் அது மற்றவர்களை எரிச்சலடைய செய்யும். நான் வர தாமதமாகிறது நிங்கள் நிகழ்ச்சியை துவங்குகள். நாங்கள் வந்து சேர்ந்துவிடுகிறோம் என்று கூறலாம்.  அதேப்போல், பொருள் வைத்து இருக்கும் ஒருவர் பொருள் இல்லாத ஒருவரிடம் குறிப்பாக அறத்துடனும் ஒழுக்கத்துடனும் இருக்கும் ஒருவரிடம் சென்று பிழைக்க தெரியாதவனாக இருக்கிறாயே என்று கூறினால் அது அடுத்தவரின் சினத்தை சம்பாதிப்பது போன்று.

ஆத்திச்சூடி
சையெனத் திரியேல் - பெரியோர் "சீ" என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே .
மேன்மக்கள் சொல் கேள் - நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட .
தக்கோன் எனத் திரி - பெரியோர்கள் உன்னை நல்லவன் என்று புகழும்படி நடந்துக்கொள். .
சான்றோர் இனத்து இரு - அறிஞர்களின் குழுவிலே இரு
பெரியாரைத் துணைக் கொள் - அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள் .

பரிமேலழகர் உரை
தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்? 

விளக்கம் 
(உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் சேறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித் தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தகைமாண்ட தக்கார் செறின்- ஆக்க வழிப்பிற் கேதுவாகிய ஆற்றல் மாட்சிமைப்பட்ட மாதவர் அரசரை வெகுள்வாராயின், வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்ஆம் - ஆறுறுப்புக்களும் மாட்சிமைப்பட்ட அவர் அரச வாழ்வும் அவர் தமக்குச் சொந்தமாக ஈட்டிவைத்த பெருஞ் செல்வமும் என்ன ஆகும்! ஒரு நொடியுள் வெந்து சாம்பராய் விடுமே!

படை,குடி,நாடு,கூழ்,அமைச்சு, அரண் என்பன ஆறுறுப்புக்கள். நட்பு என்பது அரசனின் வலிமையை மிகுப்பதேயன்றி நாட்டுறுப்பன்று.

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் 
தகுதியான் வென்று விடல்." (குறள்.158)


என்று இல்லறத்திற்கும்,
"இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை." (ஷ.310)


"இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்." ( .314)

என்று துறவறத்திற்குங் கூறியிருப்பதால், 'செறின்' என்பது முற்றத் துறந்த முழு முனிவர் செறாமை தோன்ற நின்றது. 'வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு னென்னாம்' என்றது, அருந்தவரின் பெருந்திறலை யுயர்த்தி அரசர் தம் செல்வச் செருக்கால் அவருக்குத் தவறு செய்யாதவாறு எச்சரித்ததே யன்றி வேறன்றென வுணர்க.

மு.வரதராசனார் உரை
தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.

மணக்குடவர் உரை
எல்லா வகையானும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்: பெருமையால் மிக்க தகுதியுடையார் செறுவாராயின். எல்லா வகையுமாவன சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின 

சாலமன் பாப்பையா உரை
குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?.

English Meaning - As I taught a kid - Rajesh
One's luxurious /pompous lifestyle, sky high wealth doesn't matter (is insignificant) if we irk (or earn the wrath of) scholars / elders / respectable people. Wealth/money is essential in running day to day life. But it doesn't mean, if we have lot of money, we can do things that irritates others or disrespect others. We have to be humble irrespective of the money we have. By the way earning money illegitimately (through unethical means) will automatically irk others and they will not be respected irrespective how much money they have.

Questions that I ask to the kid
Does luxurious lifestyle or sky high wealth matter in front of scholars?
If we irk scholars would our pompous lifestyle or wealth save us? Why?

அகலாது அணுகாது தீக்காய்வார்

குறள் 691
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
[பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அகலாது - இடைவிடாது. அல்லும் எல்லும் அகலாது ஆகளமாயமர்ந்து நின்று (பெரியபு. புராணசா.20).
அகல்தல் - நீங்குதல்,  பிரிதல், கடத்தல்

அணுகுதல் - கிட்டுதல், நெருங்குதல்

அணுகாது - நெருங்காமல்

தீக்காய்தல் - tī-k-kāy-   v. intr. id. +.To warm oneself at the fire; குளிர்காய்தல் அகலா தணுகாது தீக்காய்வார் போல்க (குறள், 691).  

தீக்காய்வார் - குளிர்காய்தல்; நெருப்பில் குளிர் காய்வது
போல்க - அவர்களைப் போல இருக்க வேண்டும்

இகல் - பகை; போர்; வலிமை; சிக்கு; அளவு; புலவி.
இகலாட்டம், s. Diversity of opi nions, controversy, disputation, alter cation, போராட்டம். 2. Competition, con tention, vieing, rivalry, shifting a duty on another, முரணுகை. எந்நேரமுமிகலாட்டமாயிருக்கிறவன். He who is always disputing.

வேந்தர் - வேந்தன் - எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

வேந்தர்ச் - அரசர், முடிமன்னர், முதன்மையான

இகல்வேந்தர்ச் - முரண்படும், மாறுபடும் மனமுடைய அரசரிடம்

சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

சேர்ந்தொழுகு வார் - சேர்ந்து + ஒழுகு + வார் - சேர்ந்து நெறிப்படிநடக்க வேண்டியவர். 

முழுப்பொருள்
நெருப்பில் குளிர்காயும் பொழுது இன்பமாய் உள்ளதே என்று அதன் மிக அருகே சென்றால் அது சுட்டு விடும். மிக விலகியும் சென்றால் அது கத கதப்பைத் தராது. 

குளிர்காய்வதுப் போல மிக விலகியும் அல்லாமல் மிக நெருக்கமாகவும் அல்லாமல் மாறுபடும்/முரண்படும் மனமுடைய வலிமையான மன்னரிடம் சேர்ந்து நெறிப்படி பணிப்புரிய வேண்டிய அமைச்சர் செயல்படவேண்டும். 

மேலும்: அஷோக்

ஒப்புமை
”விடலைமை செய்ய வெருண்டகன்று நில்லா
துடலரு மன்னர் உவப்ப ஒழுகின்” (பழமொழி 225)

“அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழையுறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய வெளிய பயின் றனவென் றெண்ணி
இகழின் இழுக்கம் தரும்”  (ஆசாரக்.84)

“தீண்டி னார்தமைத் தீச்சுடும் மன்னர்தீ
ஈண்டு தங்கிளையோடும் எரித்திடும்” (சீவக.250)

“மன்னரென்பார்
எரியெனற் குரியார் என்றே எண்ணுதி” (கம்ப.வாலிவதைப் 187)

பரிமேலழகர் உரை
இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் - மாறுபாடுதலையுடைய அரசரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க.
விளக்கம் 
[கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல் வேந்தர்' என்றார். மிக அகலின் பயன் கெடாது, மிக அணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.]

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் -வலிமையுள்ள அரசரை அடுத்தொழுகும் அமைச்சர் முதலியோர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க- அவரினின்று மிக நீங்காமலும் அவரொடு மிக நெருங்காமலும் தீயருகே குளிர்காய்வார் போல இடைப்பட்ட இடத்தில் நிற்பதும் இருப்பதும் செய்க.

'அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்.'
"அருளு மேலர சாக்குமன் காயுமேல்
வெருளச் சுட்டிடும் வேந்தெனு மாதெய்வம்
மருளி மற்றவை வாழ்த்தினும் வையினும்
அருளி யாக்க லழித்தலங் காபவோ."

(சீவக. 247)

"தீண்டி னார்தமைத் தீச்சுடும் மன்னர் தீ
ஈண்டு தங்கிளை யோடுமெ ரித்திடும்
வேண்டி லின்னமிர் துந்நஞ்சு மாதலான்"

( சீவக.250)

'இகல் வேந்தர் ' என்றும் , 'அகலா தணுகாது தீக்காய்வார் போல்க' என்றும் கூறினார். அமைச்சர் முதலியோர் மிக நெருங்கின் மதியாமைக் குற்றம்பற்றித் தண்டிப்பவரும், மிக நீங்கின் மந்திரச் சூழ்வினைக்குப் பயன்படாத நிலைமையினருமான அரசர்க்கு; குளிர் காய்வார் மிக நெருங்கின் சுடுவதும் மிக நீங்கின் குளிர்போக்காதது மான தீயை, உவமித்தது மிகப் பொருந்தமான வினையுவமையாம்.

அஷோக்
அரசனொடு நெருக்கம் தீபோன்றதென்பதை ஆசாரக்கோவைப் பாடலொன்று இவ்வாறு சொல்கிறது.

“அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும் முழையுறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய வெளிய பயின்றெனவென் றெண்ணி இகழின் இழுக்கம் தரும்”

மணக்குடவர் உரை
மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க. இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.

Thirukkural - Management - Relationship
An English saying is that 'Keep someone at arms distance,' complements Valluvar's mantra for a long lasting relationship. Kural 691 helps us get insights from the practice of sitting near a hearth, fireplace, to warm your body during winter.

There are incidents of people claiming that the two are inseparable and dependable and made for each other, suddenly they start claiming that they cannot be together, they cannot get along and they seek separation. A trustworthy person becomes unreliable.  Why? Kural 691 provides the answer. The answer is too much attachment. The secret to a long lasting relationship is to practice detached attachment.

Courtiers round  a King, like men before a fire,
Should be neither too far not too near.

When we sit near fire, we do not sit too close to it, as it will burn us. We do not sit far away from the fire as it will not give us warmth. If we get too close to people, we may have conflicts because of familiarity as familiarity breeds contempt. On the contrary, if we are far away from people, we will be forgotten, as anything out of sight will be out of mind. Though Valluvar's advice is for relationship  with a King, his advice is applicable to relationship  with everyone.

English Meaning - As I taught a kid - Rajesh
When we are sitting and warming before a fire, we are not too fair or not too near. Similarly, a minister has to be not too far or not too near while being with a rule/king.  This doesn't mean not just physical distance between King and Minister, or King's office and Minister office but also in communication, relationship. Minister has to follow an attached detached principle.

Because, 
1) when the minister is too near to the King, the minister looses being in touch with the ground realities. A minister has to understand people's problem for which he has to gather information, analyze the information, assess the situation, develop solutions, take it to King for his notice and approvals. When the minister is too nearer to the King, the people might suffer which will end up as a problem for the country and the King. 

2) when the minister is too far from the King, the King looses being aware of the ground realities. Minister is the person who has to keep the King informed about the ground realities, suggest solutions and get approvals. When Minister is far away, this may not happen. Also, King might get doubt if the minister is doing against the minister. Also, the King has to assess the performance of the minister as well the welfare of the people. The King might have some doubts or ideas or secret/classified info to discuss with the minister in person. So, it is important for the minister to be meeting the King periodically.

Questions that I ask to the kid
At what distance a minister has to be with King? Why?

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும்

குறள் 631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 
அருவினையும் மாண்டது அமைச்சு.
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]

பொருள்
கருவி - ஆயுதம்; சாதனம்; கவசம்; கேடகம்; குதிரைக்கலணை; குதிரைச்சம்மட்டி; தொகுதி; மேகம்; தொடர்பு; ஆடை; ஓவியம்; அணிகலன்; துணைக்காரணம்; இசையுண்டாதற்குரியயாழ்முதலியகருவிகள்.

கருவியும் - ஒரு செயலை செய்வதற்கு தேவையான கருவிகள், துணை கருவிகள் - அறிவு, திறன்

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

காலமும் - சரியான நேரத்தில் சரியான ஒரு செயலை ஆற்றும் திறன்

செய்கை - தொழில்; செயல்; மனஉடல்செய்கைகள்; வேலைப்பாடு; ஒழுக்கம்; உடன்படிக்கை; செயறகைப்பொருள்; காண்க:செய்கைச்சூத்திரம்; பில்லிசூனியம்; வேளாண்மை; அரசாங்கஅனுமதிபெற்றுப்புதிதாகப்பண்படுத்தியநிலம்.

செய்கையும் - ஒரு செயலை செய்யும் விதம்/வகை

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

செய்யும் - தான் செய்கின்ற செயலின் 

அரு - அருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

அருவினையும் - அருவினைகளை களைந்து; ஒரு செயலில் உள்ள ல் அச்செயல் உருவாக்கக்கூடிய உருவாக்கிய உபாயங்களையும், இடையூறுகளையும் நீக்கி அச்செயலை செய்ய தக்க

மாண்டது - மகிமைப்பட்டது
மாண்பு, v. noun. Honor, dignity (நீதி); excellence (El. 17. 152); respectability, virtue (El. 1886. 1933); மாட்சிமை. 2. Beauty, அழகு.
மாண்டார், appel. n. [pl.] The illustrious, the great, பெருமையோர். (நால.) 2. See மாள்.

அமைச்சு - அமைச்சன்; அமைச்சுஇயல்.
அமைச்சு - அச்செயலை மகிமைப் பட செய்யவேண்டும் என்று எண்ணி அச்செயலை முடிக்கத்தக்கவன் அமைச்சன்

முழுப்பொருள்
இக்குறளில் ஒரு சிறந்த அமைச்சர் எவ்வாறு செயல்படுவான் என்பதற்கான இலக்கணத்தை கூறுகிறார் திருவள்ளுவர்.

சிறந்த ஒரு அமைச்சர் தான் செய்யும் செயலின், இயல்புகள், பயன்களை, அது விளைவிக்க கூடிய தீங்குகளை பற்றி நன்கு ஆராய்வார். இதை தெரிந்திதெளிதல் அதிகாரத்தில் ”குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” என்று கூறியிருப்பார். பின்பு தான் கொண்ட அறிவு, திறன், அனுபவம் கொண்டு அதனை சிறப்பாக முடிப்பதற்கான வழிகளை ஆராய்வார். செயலை செய்து முடிப்பதற்கான நிர்வாக திறமையை கொண்டவராவார். (எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு; எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.)

பின்பு அச்செயலை செய்வதற்கான சரியான நேரத்தை ஆராய்ந்து, அந்த நேரத்தில் செயல்படுத்துவார். செயப்படுத்தும் பொழுது வரும் இடையூறுகளை முன்பே ஆராய்ந்து இருப்பார். இடையூறுகள் வந்தாலும் அதனை கடந்து செல்ல தக்க வழிகளை ஆராய்ந்து செயல்படுத்துவார்.

அப்படி ஒரு செயலை எடுத்து மாண்புற (நீதி, மாட்சிமை, பெருமையோர்) செய்து முடிக்க தக்க மாண்பு கொண்டவர் அமைச்சர் ஆவார்.

மேலும்: அஷோக்

ஒப்புமை
”காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரியக் கற்ற
நூலுற நோக்கித் தெய்வம் நுனித்தறம் குணித்த மேலோர்
சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்து கொண்டு
பால்வரும் உறுதி யாவும் தலைவற்குப் பயக்கும் நீரார்” (கம்ப.மந்திரப்.8)

பரிமேலழகர் உரை
கருவியும்-வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும் - அதற்கு ஏற்ற காலமும்; செய்கையும்-அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும்-அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சு- வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான். 

விளக்கம் 
(கருவிகள்-தானையும் பொருளும். காலம்-அது தொடங்கும் காலம். 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தனையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கருவியும் - வினைக்கு வேண்டுங் கருவிகளும்; காலமும் - அதற்கேற்ற காலமும், செய்கையும் - அதைச் செய்யும் வகையும்; செய்யும் அருவினையும் - அவ்வகையிற் செய்யும் அரிய வினையும்; மாண்டது அமைச்சு - வெற்றிபெற எண்ணும் ஆற்றலிற் சிறந்தவனே அமைச்சனாவான்.

'கருவிகள்' படையும் படைக்கலமும் பொருளும் துணையும். 'காலம்' தொடங்கி முடிக்குங் காலங்கள். 'செய்கை' நால்வகை ஆம்புடையும் (உபாயமும்), தொடங்கும் வகையும், கையாளும் விரகும் (தந்திரமும்), இடையூறு நீக்கும் வழியும் ஆம். பெரும் பயன்தரும் சிறந்த வினையென்பார் 'அருவினை' என்றார். 'அமைச்சு' சொல்லால் அஃறிணையாதலின் அத்திணை முடிபு கொண்டது. இதே பின்னுங் கொள்க.

"இவை யைந்தினையும் வட நூலார் மந்திரத்திற்கங்க மென்ப". என்று பரிமேலழகர் கூறுவதால், வடநூலுக்குத் தமிழ்நூல் முதனூ லானமைதெளிவாம். இக்குறளிற் கூறப்பட்டவை நான்கேயன்றி ஐந்தல்ல. செய்கையைத் தொடக்கமும் முடிவும் என இரண்டாக வட நூலார் பிரித்தது வீணான பிற்கால விரிவுபாடாகும். திருக்குறளை வட நூல் வழியாகக் காட்டல் வேண்டியே, ' செய்கை' எனவே, அது தொடங்கு முபாயமும் இடையூறு நீக்கி முடிபு போக்குமாறும் அடங்கின." என்று பரிமேலழகர் தம் நச்சுக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்க.

மணக்குடவர் உரை
செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலுமாகிய இந்நான்கும் மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான். செய்தற்கு அரியவினையாவது மறுமண்டலங்கோடல்; கருவியாவது யானை- குதிரை முதலிய படை: காலமாவது நீரும் நிழலுமுள்ள காலம்; செய்தலாவது மடியின்றிச் செய்தல். 

மு.வரதராசனார் உரை
செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.

Thirukkural - Management - Leadership
Valluvar has provided us with the four actions of an excellent minister. A minister is a leader. So, Kural 631 is presented in the Practice on Leadership. A leader has to have knowledge of the right tools, the right time to execute, the right techniques for execution and more importantly the right task to do, advices the Kural.

Call him minister who best Contrives
The means, the time, the mode and  the deed.

Though all the other needs are in right place, if the task to be done is irrelevant, doing that task will result in loss of all the other invaluable resources. Recollect the thought by Warren Bennis “Leaders are people who do the right thing; managers are people who do things right.” Doing 
the right thing is more important  than just doing things right.

There are many examples of exemplary leaders who were and are physically short. Though they were and are short in stature, they were and are tall in their thoughts. That is why they are called tall leaders. They were visionaries.  So, size does not matter for influential leadership.

அறிவினான் ஆகுவ துண்டோ

குறள் 315
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 
தந்நோய்போல் போற்றாக் கடை.
[ அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை ]

பொருள்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

அறிவினான் - அறிவுடையவன் 

அறிவினான் - ஒருவருடைய கற்றறிவு, நோற்றறிவு இவற்றால்

ஆகுதல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

உண்டு  - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

ஆகுவ துண்டோ - ஆகக்குடிய (ஆக்குவது), பெறக்கூடிய பயனேதும் உண்டா?

பிறிது - வேறானது

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

பிறிதின்நோய் - மற்றவர்களின் (பிற உயிர்களை சேர்த்து) துன்பத்தினை

தந்நோய் - தன்னுடைய நோய் 

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்

தந்நோய்போல் - தனக்கே உற்றார் போல எண்ணி

போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்.

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

போற்றாக் கடை - அவர்களை அவற்றிலிருந்து காப்பாற்றாமல் இருந்தால்

முழுப்பொருள் (நன்றி: InterestingTamilPoems)
அறிவினான் = அறிவினால்

ஆகுவ துண்டோ = ஆகுவது உண்டோ ?மிக மிக கவனத்துடன் சொல்லப் பட்ட சொல். ஆகுவது என்றால் ஆக்குவது, செய்வது, செயல் படுவது. நிறைய பேர் மற்ற உயிர்களின் துன்பம் கண்டு இரங்குவார்கள். ஐயோ பாவம் என்று பரிதாபப் படுவார்கள். ஆனால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய மாட்டார்கள். வெறும்  அன்பு உணர்வும், அருள் உணர்வும் மட்டும் போதாது. மற்ற உயிர்களின்  துன்பத்தை  போக்க ஏதாவது செய்ய வேண்டும். 

நான் மற்ற உயிர்களை  துன்பம் செய்யாமல் இருக்கிறேன், அது போதாதா என்றால் போதாது. அது பூரணமான அறிவு அல்ல.

மற்ற உயிர்களின் துன்பம் கண்டு பரிதாபப் படுகிறேனே அது போதாதா என்றால் ...போதாது. அது முழுமையான அறிவு அல்ல.

மற்ற உயிர்களின் துன்பத்தை மாற்ற ஏதாவது செய்ய வேண்டும். அதுதான் அறிவு. ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும்.    

பிறிதின்நோய் = நோய் என்றால் துன்பம். (நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் என்பது வள்ளுவம் ​ ). பிறரின் என்று சொல்ல வில்லை. பிறிதின் என்று சொன்னார். புல், பூடு, புழுக்கள், பூச்சிகள், பறப்பன, நீர் வாழ்வன, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் எல்லாவற்றிற்கும் வரும் நோய்.  

தம்நோய்போல் போற்றாக் கடை.= தனக்கு வந்த துன்பம் போல் போற்றி அதை  நீக்கா விட்டால் ? போற்றி என்றால் பாதுகாத்தல், கவனமாக காப்பாற்றுதல்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடும் உள்ளம் அறிவின் பாற் பட்டது. வள்ளலாரை விட ஒரு படி மேலே போய் , வாடிய பியரை கண்டபோது நீயும் வாடிப் பயன் இல்லை, அதுக்கு தண்ணி ஊத்து என்கிறார் வள்ளுவர். அது அறிவு.

நம் வீட்டில் யாருக்காவது உடல் நிலை மன நிலை சரி இல்லை என்றால், நாமும் உடைந்து விடுவது அறிவின்  அழகு அல்ல. அந்த துன்பத்ஹ்டை போக்குவது தான் அறிவு.

ஒரு மருத்துவர் என்ன செய்கிறார் - நோயாளியின் துன்பத்தை, வலியை
குறைக்கிறார்

இப்படி ஒவ்வொரு துறையிலும் வல்லவர்கள் என்ன செய்கிறார்கள் - மக்களின் வலியை  போக்குகிறார்கள்.

நாம் படிப்பது, பரிட்ச்சை எழுதுவது, வேலை பார்ப்பது எல்லாம் மற்றவர்களின் துன்பத்தை குறைக்க என்று நினைக்க வேண்டும்.

எவ்வளவு ஆழமான சிந்தனை. அறிவு என்றால் நிறைய படிப்பது , நிறைய சொல்லுவது , நிறைய சம்பாதிப்பது என்று எல்லாம் சொல்ல வில்லை.

இப்போது சொல்லுங்கள் அறிவில்லாதவனை என்ன என்று சொல்லுவது ?


பிறர் துன்பத்தைத் தன துன்பம் போலக் கருதுவது அறிவு என்றும் பண்பாக்கத்திற்கு அறிவு கருவி என்றும் குறிப்பிடுகின்றார். பிறர் துன்பம் கண்டு இரங்கும் செயலை மட்டும்தான் என்று இல்லாமல் இரக்கத்துடன் புரியும் பிற உதவிச் செயல்களையும் வள்ளுவர் மறுப்பதற்கில்லை. கொடை முதலியவற்றை வள்ளுவர் மனிதர்க்குக் கடமையாகவே சொல்கிறார்.

பண்புகள், புறவுலகத்தால் சூழல்களால் பாதிக்கப்படவே செய்கின்றன. வெறும் சிந்தனை கொண்டே உலகம் திருந்த இயலாது. உலகம் உயர்வதற்குச் செயல்களும் துணை. இக்கருத்துகளும் வள்ளுவரின் அறிவியல் கருத்துகளேயாகும்.

மேலும்: அஷோக்

ஒப்புமை
”பிறர்நோயும் தந்நோய்போற் போற்றி யறனறிதல்
சான்றவர்க் கெல்லாம் கடன்” (கலி 139:2-3)

உதாரணம்: யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி (சிறுகதை - ஆசிரியர்: ஜெயமோகன்)

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஒரு நாள் தக தகக்கும் மாலை நேரம் . ஞாயிறு மஞ்சள் குளித்தாற் போல காட்சி தந்து
கொண்டிருந்தான். வள்ளுவப் பேரறிஞர் முன்னர் நிற்கின்றேன். எனது நண்பர் ஒருவரைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்.நிறையப் படித்தவர். மிகப் பெரிய அறிவாளி என்றெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருக்கின்றேன். கேட்டுக் கொண்டேயிருந்த வான் புகழ் வள்ளுவர் சிரித்துக் கொண்டேயிருந்தார்.நான் அவர் எழுதியுள்ள நூற்களைப் பற்றியெல்லாம் அவரிடம் வரிசையாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன். பேராசான் சிரித்துக் கொண்டேயிருந்தாரே யொழிய ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு நாம் ஏதோ தவறுதலாகப் பேசிக் கொண்டிருக்கி றோம் போல என்ற அய்யப்பாடு வந்து விட்டது.

அமைதியானேன்

வள்ளுவப் பேராசான் கேட்டார் மிகப் பெரிய அறிஞர் உன் நண்பர் அப்படித்தானே என்று.

நான் மீண்டும் அடுக்கலானேன்.

சரி இத்தனை படித்திருந்தால் அவர் ஒரு அறிஞர் என்று யார் உனக்குச் சொன்னது என்றார்

என்ன சாமி அதுதானே உண்மை என்றேன்

மீண்டும் கேட்டார் நிறையப் படித்திருந்தால் அவர் அறிஞர் என்று உறுதி படச் சொல்லுகின்றாயா என்று

திரும்பத் திரும்பக் கேட்கின்றார் என்றவுடன் எனது குரல் அடை பட்டு விட்டது.

சொல் என்றார்.

நான் அமைதியானேன்

அறிவு என்றால் என்ன என்று அடுத்து ஒரு கேள்வி கேட்டார்.

யாருக்கு யார் விடையளிக்க முற்படுவது. அமைதி காத்தேன்

சிரித்தார்

கல்வியல்ல படிப்பதல்ல அறிவிற்கு அடிப்படை. அடுத்த உயிர்கள் படுகின்ற துன்பத்தை தனது துன்பமாகக் கருதி அதனைத் தீர்க்க எவன் முற் படுகின்றானோ அவன்தான்
அறிவுடையவன்.

உனது நண்பர் அப்படி உயிர்க் குலத்தின் மேல் காதல் கொண்டு மற்றவர் துன்பத்தைத் தனக்கு வந்த துன்பம் போலவே கருதி துடிதுடித்து யாருக்கேனும் உதவி செய்து மகிழ்ந்துள் ளாரா. அன்று என்னிடம் வா நான் ஒத்துக் கொள்கின்றேன் அவரை அறிஞர் என்று.

வாயடைத்து நின்றேன். ஆமாம் அறிவு என்பது தன் வயிற்றையும் தன் பெண்டு பிள்ளைகள் வயிற்றையும் நிரப்புவதா. கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்து வைப்பதா.

பேரறிஞர் சொல் எத்தனை உண்மையானது.

குறள்
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தந்நோய் போல் போற்றாக் கடை

பரிமேலழகர் உரை
அறிவினான் ஆகுவது உண்டோ - துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ; பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தன போலக் குறிக்கொண்டு காவா இடத்து ? 

விளக்கம்
(குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறினைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், 'அது செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனான் செய்தல் விலக்கப்பட்டது.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை- பிறிதோ ருயிர்க்கு வந்த துன்பங்களைத் தமக்கு வந்தன போலக் கருதிக் காவா விடத்து; அறிவினான் ஆகுவதுண்டோ- உயிர்களின் இயல்பைப் பற்றி அறிந்த அறிவினால் ஏதேனும் ஒரு பயனுண்டோ? இல்லை என்றவாறு.

உயிர்களைப் பற்றி அறிந்த அறிவாவது; உயிர்கள் எழுவகைப் பட்டன என்பதும், அவை தொடக்கமிலியாகத் தத்தம் நல்வினை தீவினைக்கேற்ப நால்வகுப்பிற் பிறந்திறந்து துன்புற்று வருகின்றன என்பதும், அப்பிறவித் துன்பத்திற்கு இயல்பாக எல்லையில்லை யென்பதும், அத்துன்பத்தினின்று விடுதலை பெறும் வழி இறைவன் திருவருளைத்துணைக்கொண்டு இருவகை யறங்களுள் ஒன்றைத்தூய்மையாகக் கடைப் பிடித்தலே என்பதுமாம்.

இனி, பிறவுயிர்க்குத் துன்பம் வராமற் காத்தலாவது அஃறிணையில் இயங்கு திணையைச் சேர்ந்த நீர்வாழி, ஊரி, பறவை என்னும் மூவகையுயிர்களுள், கூர்ந்து நோக்கினாலொழியக் கண்ணிற்குப் புலனாகாத நுண்ணுயிரிகளுமிருப்பதால், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் முதலிய நிலைகளிலும், உண்டல் பருகல் முதலிய வினைகளிலும், கருவிகள் கொண்டு செய்யும் பல்வேறு தொழிலகளிலும், அந்நுண்ணுயிரிகட்குச் சேதம் நேராதவாறு கவனித்து ஒழுகுதலாம். இதனாற் கவன மின்மையால் நேரும் இன்னா செயல் விலக்கப்பட்டது.

பருவுடம் புள்ள பிறவுயிர்கள் தம்மைத்தாமே காத்துக்கொள்ளுமென்பதும், நுண்ணுயிரிகள் போல் எளிதாய்ச் சேதத்திற்குள்ளாகா என்பதும், கருத்தாம்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: பிறிதின் நோய் தம் நோய் போல் போற்றா(த) கடை - (அறிவுடையார்) பிறிது (ஒர்) உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் (கருதிக்) காவாத விடத்து, அறிவினான் ஆகுவது உண்டோ-(அவரது) அறிவுடைமையினால் ஆகும் பயன் உண்டோ? (இல்லை).

அகலம்: மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘தன்னோய்போல்’.

கருத்து : அறிவுடைமைக்கு அழகு பிற உயிர்க்கு இன்னா செய்யாமை.

மு.வ உரை
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

மணக்குடவர் உரை
பிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது. இஃது அறிவுடையார் செய்யார் என்றது.

சாலமன் பாப்பையா உரை
அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?.

Thirukkural - Management - Managing Emotions
Emotional imbalances are common among children & grownups, among uneducated & educated people, among leaders & followers, and among men & women. So, dealing with and managing emotions at family, work place, and society demand extraordinary  skills. Inability to manage emotions is one of the causes for many of the modern day diseases. “An emotion is a strong feeling of any kind: love, joy, hate, fear and jealousy,” (Oxford  Advanced Learner's Dictionary, 1996). Kurals tells us the importance of understanding  the role of emotions in one's self and others and channelizing them for productive relationships and performances. 

One of the age-old methods for managing emotions is to put oneself  in the other person's place and position to look at events from that person's perspective. What is the use of all education or knowledge, if an educated or a knowledgeable person cannot connect with others and experience their sufferings and pains as his own? Valluvar raises this question through Kural 315.

What good is that sense which does not feel and prevent
All creature's roes as its own?