Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

உள்ளியது எய்தல் எளிதுமன்

குறள் 540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் 
உள்ளியது உள்ளப் பெறின்
[பொருட்பால், அரசியல்,  பொச்சாவாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பொச்சா -  பொச்சாப்பு - மறத்தல் - மறதி

பொச்சாவாமை  - மறவாமை - மறதி இல்லாமை - மறதியின்மை

உள்ளி  - மனதில் நினைத்து
உள் - உள்ளே - மனதில்
இ - demonstrative prefix, this, இந்த. As to combine. see, அ dem. Note இப்பால், இம்மாத்திரம், இத்தனை, இவ் வளவு, etc. -- are combinations; 2. a feminine appell, termination as, கூனி; 3. see any grammar for other terminations.
உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப் பெயர் காரியத்திற்காய ஆகுபெயர்.

உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். 

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.
எய் - எறி (cast, throw)

எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது.

மன் - part. 1. An expletive; ஓர் அசைநிலை. ஆயிருதிணையி னிசைக்குமன் (தொல். சொல். 1).2. Affix indicative of (a) future tense; எதிர்காலங்காட்டும் இடைநிலை. (தொல். சொல். 1, சேனா. கீழ்க்குறிப்பு.) (சி. போ. பா. 1, உரை.): (b) ellipsis;ஒழியிசைக்குறிப்பு. கூரியதோர் வாண்மன் (தொல்.சொல். 252, உரை): (c) greatness, abundance;மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்றுமன்னே (புறநா. 75): (d) change or transformation; பிறிதொன்றாகைக்குறிப்பு. பண்டு காடுமனின்று கயல்பிறழும் வயலாயிற்று (தொல். சொல். 252,உரை): (e) prosperity; ஆக்கக்குறிப்பு. திருநிலைஇயபெருமன்னெயில் (பட்டினப். 291): (f) what ispast and gone; கழிவுக்குறிப்பு. சிறியகட் பெறினேயெமக்கீயு மன்னே (புறநா. 235): (g) permanence;நிலைபேற்றுக்குறிப்பு. (நன். 432.) 3. A personalsuffix, as in vaṭamaṉ; ஒரு பெயர்விகதி.- ஒழியிசை (ஒழிந்தபொருள்தருஞ் சொற்களைத் தருவது.)


மன் - n. மன்னு-. 1. King; அரசன்.மன்னுடை வேலினாய் (சீவக. 1200). 2. Kṣattriya;warrior; க்ஷத்திரியன். மன்னாகி மறையவனாய் (சேதுபு. சேதுபல. 69). 3. Lord, chief; தலைவன்.மன்னுயிர் நீத்தவேலின் (பு. வெ. 4, 23, கொளு). 4.Husband; கணவன். மன்னொடுங்கூடி . . . வானகம் பெற்றனர் (சிலப். 25, 59). 5. The 26thnakṣatra. See உத்தரட்டாதி. (பிங்.) 6. Greatness; பெருமை. (யாழ். அக.) 7. Meanness,inferiority; இழிவு. (சூடா.)

மன்  - n. manu. Mantra; மந்திரம்.(பிங்.)

மற்று - இல்லையென்றால்
part. 1. An expletive; ஓர்அசைநிலை. (தொல். சொல். 264.) 2. A disjunctive;வினைமாற்றுக் குறிப்பு. (நன். 433.) 3. A term meaning other, another; பிறிதுப்பொருட் குறிப்பு. (நன்.433.)--adv. 1. Again; மறுபடியும். (W.) 2.Subsequently, afterwards; பின். 3. See மற்றப்படி.

மற்றந்தான் - மற்ற எண்ணங்களில் கவனச்செலுத்தி கவனச்சிதைவு கொள்வது

உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். 

உள்ளியது - மனதில் நினைத்து

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உள்ளப் - உண்மையான,  மனம், ஊக்கம், ஆத்மா,

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பெறின் - பெறுவர்

முழுப்பொருள்
நான் இவ்வுயரங்களை அடைந்துவிட்டேன். மேன்மேலும் உயரங்கள் கடினமாக இருக்கிறது. என்ன சொல்லுகிறீர்கள்?

மனதில் தான் அடைய வேண்டிய குறிக்கோளை அடைவது மிக எளிமையான ஒன்று ஒருவனுக்கு (மன்னனுக்கு, தலைவனுக்கு). எப்படி? நாம் அடைய வேண்டுமென்று ஒரு செயலை உளமாற நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுது மற்ற சிந்தனைகளில் சென்று கவனம் இழந்துவிடுவது நடக்கக்கூடியது. அவ்வாறு இல்லாமல் சிந்தனைக்களையாமல் உள்ளத்தால் அடைய வேண்டி நினைத்தவற்றை மறவாமல் உளமாற பின் தொடர்ந்து சென்றால் தான் எண்ணியவற்றை எளிதாக பெறுமுடியும்.

இங்கு பொச்சாவமை அதிகாரத்தில் இது வருவதால் தான் எடுத்துக்கொண்ட செயலை ஒரு பொழுதும் மறவாமல் இருப்பது சிறந்தது. ஏன் என்றால் ஒரு செயலை துவங்கும் பொழுது ஒரு உத்வேகம் இருக்கும். ஆனால் சில நாட்களுக்குப்பின் அது குறைந்து மற்ற சிந்தனைகளில் மனம் சென்று எடுத்த செயலில் ஊக்கம் குறைந்து மறந்துவிடுவர்.

மேலும் - அஷோக்

பரிமேலழகர் உரை
தான் உள்ளியது எய்தல் எளிது மன் - அரசனுக்குத் தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம், மற்றும் உள்ளியது உள்ளப் பெறின் - பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின். (அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது: மறவி இன்றி அதன்கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மன் தான் உள்ளியது எய்தல் எளிது - அரசன் தான் கருதிய பொருளைத் தான் கருதியவாறே பெறுதல் எளிதாம் ; உள்ளியது மற்றும் உள்ளப் பெறின் - தான் எண்ணியதைப் பின்னும் விடாது எண்ணக் கூடுமாயின்.

உள்ளியதை யுள்ளுதலாவது தான் கருதியதைப் பெறும் வரை மறவாது அது பற்றி முயற்சி செய்தல் . 'மற்று' பின்மைப் பொருளில் வந்தது . 'மன்' என்பதை இடைச் சொல்லாகக் கொண்டு , அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின் , 'மன்' ஒழியிசைக் கண் வந்தது ,என்னும் பரிமேலழகர் இலக்கணக் குறிப்பு இவ்விடத்திற்கு ஏற்காமை யுணர்க.


மணக்குடவர் உரை
தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின். இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார். 

மு.வ உரை
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.

Thirukkural - Management - Perseverance
'Be ambitious' has been a stock phrase used by anyone who has achieved some significance in his life. That phrase has meaning and relevance as one must aspire to achieve great things in one's  life. That aspiration will turn out to be a thought. Be determined to realize that thought and put in efforts to accomplish the task, suggests Kural 540.

All aims are easy to achieve
To those that persist.

Napoleon Hill, one of the successful authors of success coaching, says, “Whatever the mind can  conceive and believe, the mind can achieve.” So conceive a thing, believe in what you conceive and achieve that as it is your responsibility to achieve greater things. You can definitely achieve whatever you aspire for, if you just perspire and persevere. Remember Thomas Alva Edison's “Genius is one percent inspiration and ninety nine percent perspiration.”

English Meaning - As I taught a kid - Rajesh
One has to conceive a thing and be ambitious about it. But that is not sufficient. If one believes in his/her conceived/aspired idea/dream/goal and if one perspire and persevere, then one can easily and definitely achieve whatever (and like how) they conceived. aspired.  Be determined to realize that thought and put in efforts to accomplish the task. One should not procrastinate his/her tasks/action, one should not forget his dream.

Thomas Alva Edison's said “Genius is one percent inspiration and ninety nine percent perspiration.”

Questions that I ask to the kid
How one can easily attain his goal/dream?

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார்

குறள் 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
[காமத்துப்பால், கற்பியல்,  உறுப்புநலனழிதல்]

பொருள்
சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை; கழிகாமம்

நமக்கு -  நமக்கு

ஒழிதல் - அழிதல்; சாதல்; நீங்கல்; தவிர்தல்; விடுதல்; வெறுமையாதல்; எஞ்சுதல்; தங்குதல்; ஓய்தல்.

ஒழிய - தவிர;  நீங்க; கெட.

ஒழிய 1. unless (emphatic) [post. + conditional] [2. inf. of ஒழி `cease']

நமக்கொழியச்  - நமக்குக் கிடையாது

சேண் - அகலம்; நீளம்; சேய்மை; உயரம்; மலையினுச்சி; வானம்; தேவருலகம்; நெடுங்காலம்.

சென்று - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
சென்றார் - சென்றவர்

சேட்சென்றார் - அகல தொலைவிற்கு சென்றவர்

உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உள்ளி - நினைத்து

நறுமை - நன்மை; நன்மணம்.

நறுமணம்- நல்ல வாசனை,சுகந்தம்,மணப்பு,நறவு,குரவு

நறுமலர் - வாசனை கொண்ட மலர்

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

நாணின - நாணுதல், உடல் கூச்சங்கொள்ளுதல், To be influenced unfavorably as some trees or plants by nearness to the cocoa; to be uncongenial, to each other, as the red and white lotus, பிணங்க

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
கண்ணே உன் கண்களை காணும் மலர்கள் அனைத்தும் நாணம் கொள்ளும். அவ்வளவு அழகு நீ! அவ்வளவு அழகு உன் கண்கள். ஆனால் காதலர் உன்னைவிட்டுப் பிரிந்து தொலைவாகச் சென்றுவிட்டார். அதனை நினைத்துக்கொண்டு (உள்ளி) இருந்தால் நீ நோய் கொள்வாய் துன்பம் கொள்வாய். ஆதலால் உன் கண்கள் அழகிழக்கும். அதனால் உன்னைப் பார்த்து நாணம் கொண்ட மலர்களைப் பார்த்து நீ நாணம் கொள்ளும் நிலைமை வரும். ஆதலால் அத்தகைய துன்பம்(சிறுமை) நமக்கு (பெண்களுக்கு) தகாது (ஒழிய). ஆதலால் நீ அழலாமோ ? (என்று தோழி கூறுகிறாள்)

முழுப்பொருள்2: இக்குறளுக்கு முன்பு ஒருமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை சற்று தாமதமாகவே கண்டு உள்ளேன். ஆதலால் அதை இங்கே பதிவு செய்து பழைய பதிவை நீக்கிவிட்டேன்.

கணவர்(தலைவர்/காதலர்) மனைவியை (தலைவி/காதலி) விட்டுத் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு / நாட்டிற்கு வேலை நிமித்தமாக சென்று உள்ளார்.

அப்படி சென்று இருக்கையில் மன வருத்தமும், துன்பமும், (மன)நோயும் மனைவியான எனக்கு மட்டும் தான். அவருக்கென மன வருதம் ஏதுமில்லை 
(ஏன் என்றால் அவர் தான் வேறு வேலையாக அங்கு இருக்கிறாரே. என்னை பிரிந்த எண்ணம் அவருக்கு இல்லை - என்று நாம் புரிந்து கொள்ளலாம் - நமக்கொழியச் என்று குறியமையால்). 

அப்படி துன்பத்தில் வாடும் எனது மனது அவரையே நினைத்துக்கொண்டு இருக்கிறது. இப்படி நினைத்துக்கொண்டு அவரை ஏங்கி துன்பத்தில் அழுது வாடுகையில் என் கண்கள் ஒளி இழந்து, பொலிவிழந்து இருக்கின்றன. 

அத்தகைய அழுது வாடிய கண்கள் இன்று ஒரு நறுமலரை காண கூட கூசுகிறது, நறுமலரை அழகு என்று நினைகிறது. நறுமலரில் மயக்கும் வாசனை உள்ளது என்று நினைகிறது. இது எத்தனை பெருங்கொடுமை அவளுக்கு ?

ஏன் நறுமலர் மேல் நாணம் கொள்வது ஒரு பெருங்கொடுமையாக சொல்லபடுகிறது என்றால், முன்பு ஒரு காலத்தில் நறுமலர்கள் இவள் அழகை கண்டும் இவள் மேல் உள்ள வாசனையை நுகர்ந்தும் இவளை கண்டு வெட்கபட்டன. ஆனால் இன்றோ அப்படியே தலைகீழாக நடக்கிறது. இவள் நறுமலரை கண்டு ஆச்சர்யப்படுகிறாள். இவள் கண்கள் வெட்கபடுகின்றன, கூசுகின்றன.

இவ்விளக்க உரை ஆசிரியரின் கேள்வி :
இப்படி பெருங்கொடுமை ஆற்றி வெளியுர்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள கணவன்மார்களை என்ன செய்யலாம் ?



பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகள்தன் கண்ணும் , தோளும் , நுதலும் முதலாய அவயவங்கள் தம் அழகு அழிதல் . இஃது இரக்கம் மிக்குழி நிகழ்வதாகலின் , பொழுது கண்டு இரங்கலின் பின் வைக்கப்பட்டது.]

(ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன. (நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப்பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்', என்பது கருத்து.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(ஆற்றாமை மிகுதியால் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.)

சிறுமை நமக்கு ஒழியச் சேண்சென்றார் உள்ளி- இவ்வாற்றாமை நம்மிடத்து நிற்கத் தாம் தொலைவிற்குச் சென்ற காதலரை நினைத்து நீ யழுதலால்; கண் நறுமலர் நாணின- உன் கண்கள் ஒளியும் அழகும் இழந்து, முன் தமக்கு நாணிய நன்மண மலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.

இவை கண்டார் காதலரைக் கொடுமை கூறுவர். ஆதலால் நீ யாற்றல்வேண்டு மென்பது கருத்து. நீ யுள்ளிக் கண் நாணின என்பது தனிநிலைமுடிபாம் (absolute construction.)

மணக்குடவர் உரை
நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்துக் கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன. பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று.

மு.வ உரை
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

சாலமன் பாப்பையா உரை
பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.


குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காணுகின்ற மலர்கள் எல்லாம் கவிழ்ந்து கொள்ளும்
கண்மணி உன் கரு விழிகள் கண்டு விட்டால்
நாணி நிற்கும் அம்மலர்கள் உந்தனது
நளின விழி தனைக் கண்டால் என்று என்றும்
வானளவு புகழ்ந்திட்ட காதலர்தாம்
வரவில்லை என்பதனால் விழியிரண்டும்
ஆன மட்டும் அழுதழுது அழகிழக்க
ஆடி நிற்கும் மலர்கள் எல்லாம் ஆர்ப்பரித்து


உனை நினைத்து கலங்கிய... 

என்னவனே ...
பிரிவு துயரை தந்து ....
நெடும் தூரம் சென்றவனே ...
உனை நினைத்து கலங்கிய...
கண்கள் அழகிழந்து
விட்டதடா ...!!!

உன் அழகை பார்த்து ...
அணுவாய் ரசித்த கண்களை ..
என் மனம் என்னும் மலர் ...
வெட்கப்பட்டான - இப்போ
அழகிழந்து இருக்கும் கண்கள் ..
மனமலரை பார்த்து ....
வெட்கப்படுகின்றன .....!!!