Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

செய்யாமல் செய்த உதவிக்கு

குறள் 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]

பொருள்
செய்யாமல் செய்த -  இதற்கு முன் நாம் ஒருவருக்கு செய்யாத ஒரு செயலை நமக்கு அவரால் செய்யப்படுதல்
உதவிக்கு - உதவி, உபகாரம், சகாயம்
வையகமும் -  உலகம்,  பூமி
வானகமும் - கட்டற்ற தேவ லோகம்
ஆற்றல் - மிகுதி, வலிமை
அரிது - குறைவு

முழுப்பொருள்
பெரும்பாண்மையாக ஒருவர் மற்ற ஒருவருக்கு உதவி செய்தால் ப்ரதிபலனை எதிர்ப்பார்த்துத்தான் செய்வார்கள். அல்லது தனக்கு இவர் முன்பு செய்த உதவிக்கு கைமாறு செய்ய வேண்டும் என்று எண்ணி உதவுவார்கள். 

ஆனால் தனக்கு ஒருவர் எந்த ஒரு உதவியும் முன்பு செய்ய நேராத போதும் அல்லது செய்யாத போதும் அவருடைய கடின நிலையை அறிந்து அவருக்கு உதவி செய்வது மிகுந்த போற்றுதலுக்கு உரிய செயலாகும். அத்தகைய உதவி இந்த பூமியை விடவும் கட்டற்ற வானை விடவும் பெரிதாகும் என்கிறார் திருவள்ளுவர். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
'விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே” (குறுந் 101:1-3)

“பொன்னணி மார்பன் முன்னர் ஆற்றிய
நன்னர்க் குதவும் பின் உப காரம்
அலைதிரைப் பௌவம் ஆடை யாகிய
நிலமுழுது கொடுப்பினும் நேரோ என்மரும்” (பெருங் 3:20:186-9)

“சீறுவா யல்லை யைய.............
......................உதவிமா றுதவி யுண்டோ” (கம்ப.கிட்கிந்தை 55)


“உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மா றாக
மதயானை அனைய மைந்த மற்றுமுண் டாக வற்றோ” (கம்ப.கிட்கிந்தை 66)

“உலக மூன்று முதவற் கொருதனி
விலையி லாமையும் உன்னினென் மேலவை
நிலையி லாமை நினைந்தனன்” (மீட்சிப் 28)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின் , அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு, இஃது இனியவை கூறலின்பின் வைக்கப்பட்டது. )

செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செய்யாமல் செய்த உதவிக்கு -- தன்னிடத்திலிருந்து ஓர் உதவியையும் முன்பு பெறாதிருந்தும் ஒருவன் தனக்குச் செய்த வுதவிக்கு ; வையகமும் வானகமும் வானகமும் ஆற்றல் அரிது - ' மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அலை ஈடு செய்தல் அரிது .

கைம்மாறுகளெல்லாம் எத்துணைச் சிறந்தன வாயினும் , முதல் வினையைப் பின்பற்றின வழிவினைகளாதலின் முதல் வினைக்கு ஈடாகா என்பது கருத்து .

செய்யாமைச் செய்தவுதவி யென்று பாடமோதி, மறுத்துதவ மாட்டாமை யுள்ள விடத்துச் செய்த வுதவி யென்று பொருளுரைக்கத் தேவையில்லை. அப்பொருள்,

"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு"

(211)
என்னுங் குறளாற் பெறப்படுதலால்.

மு.வ உரை
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

சாலமன் பாப்பையா உரை
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

பொருள்: செய்யாமல் செய்த உதவிக்கு ‡ (பிறர்க்குத் தாம் ஓர் உதவியும்) செய்யாமலிருக்க த் தமக்குப் பிறர்) செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - பூவுலகமும் வானுலகமும் சமமாதல் இன்று.

கருத்து: தமது உதவியை முன் பெறாதார் தமக்குச் செய்த உதவி ஒப்பற்றது.

Thirukkural - Management - Helping Others
'Help yourself by helping others’ is an age old advice to make the purpose of our creation meaningful. “Help,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 556), “is to be useful to somebody; to make it easier for somebody to do something; to assist somebody.”  Anyone who helps others unconditionally will get back the benefits equivalent to that or more than that, though getting benefits in turn may not be the intention. 

Everyone needs help. Helping others can happen because of three reasons. One is in response to someone's request to be helped, two is in anticipation of someone's needs, and three is to get help in turn in future. Kurals give the views of Valluvar on helping. 

Kural 101 impresses us that if a person helps or assists someone even before the other person seeks  help the help rendered cannot be paid back even by presenting the helper anything equivalent to heaven and earth. The value of an unsolicited help is multifold.

Neither earth nor heaven can truly repay
Spontaneous aid

We must be sensitive to others' needs. People do not express their needs for reasons known and unknown. Communication  is to understand what is not said. Understand the needs of people and act accordingly.

No comments:

Post a Comment