Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இன்பம் ஒருவற்கு இரத்தல்

குறள் 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
[பொருட்பால், குடியியல், இரவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.
ஒருவற்கு - ஒரு மனிதருக்கு
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரந்தவை - இரந்து பெற்ற பொருள்;
துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.
உறாஅ  - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்
வரின் - வரும்

முழுப்பொருள்
இரப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல. ஒருவருக்கு மிகுந்த மனவருத்ததை கொடுக்க கூடியது. ஏனெனில் நாம் இரந்தால் அதற்கு பலர் கேள்வி கேட்பர். தேவையில்லாமல் பல விஷயங்களில் மூக்கை நுழைப்பர். ஏளனம் செய்வர். அது இல்லாமல் நமது குடிக்கும் நமக்கும் இழிவும் கூட. ஆனால் இரந்தால் நாம் இரந்தது மிக எளிதாக நமக்கும் பிறருக்கும் எந்த ஒரு மனவருத்ததையும் தராமல் வந்து சேர்ந்தால் அது சிறந்தது. அப்படி ஒரு இரத்தல் இன்பமே ஆகும். மேலோட்டத்தில் எளிமையாக பார்க்கபட்டாலும் அதில் நுட்பமான சில விஷயங்கள் உண்டு.

முதலாவதாக நாம் இரப்பது நேர்மையான (அறம் சார்ந்த) ஒரு காரணத்திற்காக இருந்தால் மட்டுமே நமக்கு எந்த ஒரு துன்பமும் இல்லாமல் வரும்.  ஆடம்பரமான இருப்பதற்கும் ஊர்சுற்றுவதற்கெல்லாம் கேட்டால் நம்மை கேள்வி கேட்பர்.

இரண்டாவதாக நம்முடைய பொருளாதாரம் தன்னை நாம் சரியாக பேணிகாக்காமல் அலட்சியமாக இருந்து விட்டு தீய வழிகளில் விரயம் செய்தால் நாம் இரக்கும் பொழுது நம்மை கண்டிப்பாக பலகேள்விகள் கேட்பார்கள். ஆதலால் நாமும் நேர்மையானவராக இருத்தல் வேண்டும்.

மூன்றாவதாக நாம் சென்று ஒருவரிடம் இரக்கும் பொழுது அவரால் அதனை கொடுக்க கூடிய பொருளாதாரத்தில் இருக்கிறாரா என்று அறிய வேண்டும். அவரால் கொடுக்க முடியாத தர்ம சங்கடமான சூழ்நிலையில் இருந்தால் நமக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று அவர் மன வருத்தம் படுவார். நமக்கு எப்படியாவது உதவி விட வேண்டும் என்று அவரும் இரந்து கொடுத்தாலும் கொடுப்பார். ஆதலால் நம்மால் மற்றவருக்கு துன்பம் வரக்கூடாது. 

மஹாபாரதத்தில் வரும் “கர்ணனை” இதற்கு உதாரணமாக சொல்லலாம். கர்ணனிடம்  இன்முகத்தோடு யாசகம் செய்பவன்.

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”வேளாண் வாயில் வேட்பக் கூறி” (பொருந் 75)
“தான் உபகரித்தற்கு வழியாகிய இரப்பினையே எப்பொழுது
விரும்பும்படி உபசாரங்களைக் கூறி (மேற்படி.ந)

பரிமேலழகர் உரை
ஒருவற் கிரத்தல் இன்பம் - ஒருவற்கு இரத்தல்தானும் இன்பத்திற்கு ஏதுவாம்; இரந்தவை துன்பம் உறாஅவரின் - இரந்த பொருள்கள் ஈவாரது உணர்வு உடைமையால் தான் துன்புறாமல் வருமாயின். (இன்பம் - ஆகுபெயர். 'உறாமல்' என்பது கடைக்குறைந்து நின்றது. துன்பம் - சாதியொருமைப் பெயர். அவையாவன, ஈவார்கண் காலமும் இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி வருவனவும் ஆம். அவையுறாமல் வருதலாவது, அவர் முன்னுணர்ந்து ஈயக்கோடல். 'இரந்தவர் துன்பமுறாவரின்' என்று பாடம் ஓதி, 'இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து ஈவராயின்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண் இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இரந்தவை துன்பம் உறாவரின்-இரந்த பொருள்கள் ஈவாரது பண்பாட்டினால் வாய் திறக்கு முன்பே விரைந்து மகிழ்ச்சியோடு கிடைக்குமாயின்; ஒருவற்கு இரத்தல் இன்பம்-ஒருவனுக்கு இரத்தலும் இன்பந்தருவதாம்.

துன்பம் காலமறிந்து செல்லுதல், காத்திருத்தல், ஈவார் மன நெகிழக் கெஞ்சுதல், அவர் முகந்திரிந்து நோக்குதலும் கடுஞ்சொற் சொல்லுதலும் மறுத்தலும் முதலியவற்றால் வருவது. ’இன்பம்’ ஆகுபொருளது. ’உறா’ ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். ’உறாஅ’ இசைநிறை யளபெடை. "இரந்தவர் துன்பமுறா வரி" னென்று பாடமோதி, இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றாற் றுன்புறாது எதிர்வந்தீவராயி னென்றுரைப்பாரு முளர் என்று பரிமேலழகர் கூறுவர். இதற்கு

"என்று முகம னியம்பா தவர்கண்ணுஞ்
சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்."


என்னும் நன்னெறியடிகள் மேற்கோளாம். இரத்தலும் என்னும் இழிவு சிறப்பும்மை தொக்கது.

மணக்குடவர் உரை
இரத்தல் ஒருவர்க்கு இன்பமாம், இரக்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாதவகை எய்துமாயின். இது வேண்டிய பொருள் பெறின் துன்பமாகா தென்றது.

மு.வரதராசனார் உரை
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.

English Meaning - As I taught a kid - Rajesh
If a person whom we request/beg financial assistance helps us happily and doesn't make us sad or regret, then, begging is also a happy thing.

For any person, pleading or begging or requesting for financial assistance, food or any other basic amenities is not an easy thing. Because one has to go through many internal emotions, one has to go beyond their self esteem, one might have to go through questions from other persons (sometimes it can be interrogative, free advices etc) , one might face judgement, one might face sympathy, one might face humiliations etc. Hence, a person begs with an heavy burden in their heart. 

Hence, if a person is able to understand the pleader (pleader's emotions and needs) and is helping then the pleader will be happy at pleading.

However, pleader must ask for genuine reasons, should be able to gauge the other persons financial situation too, and the pleader should not be idle.  Because 1) if pleader doesn't ask for genuine reasons then he/she might face humiliations/free advices 2) if the other person is not in good financial state then it might not give happily as he/she himself have to borrow money 3) if the pleader is idle then he/she is most likely face humiliations or get free advice. 

Questions that I ask to the kid
When is begging a happy thing?

No comments:

Post a Comment