Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்

குறள் 241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணும் உள
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அருட் / அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

செல்வம் -  கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

செல்வத்துள் செல்வம் - நான் ஈன்ற செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

பொருட் செல்வம் - பொன் என்கின்ற நிலையில்லாத செல்வம்

பூரியார் - பூரியர், கீழ்மக்கள், இழிந்தோர், கொடியவர்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். 

பூரியார்கண்ணும் உள - கீழ்மக்களிடமும்/ இழிந்தோரிடமும் இருக்கும்

முழுப்பொருள்
உலகில் வாழ பொருட் செல்வம் தேவையானதாக உள்ளது. இங்கே பொருள் எனப்படுவது பொன், பொருள், நிலம், என்று பல உண்டு. இதுவே செல்வம் என பலர் கருதுகின்றனர். இச்செல்வத்தினை சேர்க்கவே பலர் முற்படுகின்றனர். ஆனால் இச்செல்வம் என்பது அதிகம் செல்வம் படைத்தவரிடமும் இருக்கிறது, குறைந்த செல்வம் படைத்தவரிடமும் இருக்கிறது. உயர்ந்த குணங்களை உடையவரிடமும் இருக்கிறது, கீழ் குணங்கள் கொண்டோரிடமும் இருக்கிறது. ஆதலால் பொருள் இருப்பதனால் ஒருவர்க்கு மதிப்பு என்பது கிடையாது. ஆனால் பொருளுக்கு எப்பொழுதும் மதிப்பு உண்டு. அது பொருளின் சிறப்பு. ஆனால் பொருளினால் மனிதனுக்கு சிறப்பு இல்லை.

ஆனால் அருள் என்பதும் ஒரு செல்வம். அது நல்வினைகளை செய்வதனால் வரும் செல்வமாகும். இதுவே ஒருவருக்கு மதிப்பினை கூட்டும். அதுவே நிலைத்து நிற்கும். ஒருவர் வாழ்ந்து இறந்த பின்பும் நிலைத்து நிற்பது அருள். ஆதலால் செல்வத்துள் செல்வம் என்பது அருளே என்கிறார் திருவள்ளுவர். இவ்வருள் என்பது ஏழையிடமும் இருக்கும், பணக்காரரிடமும் இருக்கும். இவ்வருள் இருந்தால் அவர் உயர்ந்தோர், இல்லை என்றால் கீழோர். 

மேலும்: அஷோக் உரை

பொருள்
”பொருளினி யுணர வேறு புறத்துமொன் றுண்டோ புந்தித்
தெருளினை யுடைய ராகிற் செயலருங் கருணைச் செல்வம்” (கம்ப.நாகபாசப்.268)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை. இல்லறத்திற்கு அன்புடைமைபோல இது துறவறத்திற்குச் சிறந்தமையின் முன் கூறப்பட்டது.)

செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் - செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள - அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான். ( அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செல்வத்துள் செல்வம் அருள் செல்வம் - செல்வங்களெல்லாவற்றுள்ளும் சிறந்தது அருளாகிய செல்வமே; பொருள் செல்வம் பூரியார் கண்ணும் உள - மற்றப் பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்திலும் உள்ளன.

செல்வம் போன்ற பண்பைச்செல்வ மென்றார். உம்மை இழிவு சிறப்பு.

மணக்குடவர் உரை
செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்; பொருட்செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால். இஃது அருள்நிலை கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

சாலமன் பாப்பையா உரை
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.

பொருள்: அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் -அருளாகிய செல்வம் செல்வத்து ளெல்லாம் (சிறந்த) செல்வம் ; பொருள் செல்வம் பூரியார்கண்ணும் உள - பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்தும் உள்ளன.

அகலம்: அருள் -தண்ணளி‡கருணை. அதனை வட நூலார் ‘கிருபை’, ‘காருண்யம்’ என்பர்.

கருத்து: அருளுடைமை செல்வத்து ளெல்லாம் சிறந்த செல்வம்.

English Meaning - As I taught a kid - Rajesh
Money, wealth, assets, properties etc. to a certain extent are necessary in today's world. However, it is there with almost everyone (including trivial people, evil people) in this world though the amount would vary. Money can be earnt through immoral, tactful, cunning means too. So, there is nothing special about money. Also, humans does not become special or important for this world just because they have these  money. 

The grace, mercy, benevolence, good deed on earns by doing good things to others, to the humanity and to the world is the real wealth among all the wealth. This grace and good deed will live even after his or her death.

Questions that I ask to the kid
Why is grace, mercy, benevolence, good deed essential?

No comments:

Post a Comment