Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும்

குறள் 317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எனை - eṉai   adv. என் What, why;என்ன.  , eṉai   எ³. adj. All; எல்லாம் சுட்டுணர்வெனப்படுவ, தெனைப்பொருளுண்மைகாண்டல் (மணி. 27, 62).--adv. However much;எவ்வளவு. எனைப்பகை யுற்றாரும் (குறள், 207).
தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில் போடப்படும் காய்கறித் துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

எனைத்தானும் -  எவ்வளவு சிறிதாயினும்
எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும், Always. See ஞான்று
யார்க்கும் - எவருக்கும்
மனத்தான் ஆம் - தன்னுடைய மனதால்
மாணார் - மாட்சிமையற்ற பகைவர்.
மாணா - மாட்சியற்று, பகை
செய்யாமை  - கொள்ளாது இருத்தல்
தலை - சிறப்பாகும்

முழுப்பொருள்
நமக்கு தீங்கு செய்வோர் சிலர் உண்டு. அவர்களுக்கு நாம் கேடுதல் நினைக்க கூடாது செய்யவும் கூடாது. சில சமயம் நமது ஆற்றாமையாலும், பொறாமையாலும் பிறருக்கு தீங்கு நினைப்போம் செய்வோம். அது பிறருக்கு தீங்கு செய்கிறதோ இல்லையோ, நமக்கே அது தீங்கு செய்து விடும். ஏனெனில் அது நம்முள் ஒரு வஞ்சகத்தினை வளர்த்து ஒருவித கெட்ட எண்ணங்களை மனதில் விதைக்கும். அது விருட்சம் ஆகி நமக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும். நம்முடைய அன்றாட ஆக்கப்பூர்வமான செயல்களில் இடையூறு விளைவிக்கும். "கேடுவான் கேடு நினைப்பான்" என்றும் நாம் ஆறிவோம். அதுவே நாம் நல்ல விஷயங்களில், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டால் நல்லது.

ஆதலால் எவ்வளவு சிறிதானாலும், எந்த ஒரு காலத்திலும், சூழ்நிலையிலும், எந்த ஒரு மனிதருக்கும் மனதில் கூட மாட்சியற்ற (மாண்பு அற்ற) பகைமை பாராட்டாமல் இருத்தல் சிறந்தது அறம் என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகினற் இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம். (ஈண்டு மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மனத்தான் ஆம் மாணா- மனத்தோடு கூடிய தீய செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை- எக்காலத்தும் எவர்க்கும் எத்துணைச் சிறிதும் செய்யா திருத்தல் தலைமையான அறமாம்.

மனத்தோடு கூடிய செயலாவது அறிந்து செய்யுஞ் செயல். மாணுதல் நன்றாதல். 'மாணா' பலவின் பால் எதிர்மறை விணையாலணையும் பெயர். வலிமையுள்ள காலத்தையும் உட்படுத்த 'எஞ்ஞான்றும்' என்றும் எளியாரையும் விலக்க 'யார்க்கும்' என்றும் "சிறு பொறி பெருந்தீ" யாதலானும் சிறுநஞ்சும் பெருந்தீங்கு செய்தலானும் சிறுவினையும் தீயது தீவினையே என்று கருதி எனைத்தானும் என்றும் கூறினார்.

மணக்குடவர் உரை
யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.

மு.வரதராசனார் உரை
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

சாலமன் பாப்பையா உரை
எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.

பொருள்: எனைத்தானும் எ ஞான்றும் யார்க்கும் - எவ்வளவேனும் எந் நாளும் யார்க்கும் , மாணா மனத்தானும் செய்யாமை தலை - துன்பந்தரும் செயல்களை உள்ளத்தாலும் செய்யாதிருத்தல் தலையாய துறவறம்.

அகலம்: தலை என்பது ஆகு பெயர், தலையாய துறவறத்திற்கு ஆயினமை யால். நச்சர், பரிமேலழகர் பாடம் ‘மனத்தானாம்’. மற்றை மூவர் பாடம் ‘மனத்தானும்’. மனத்தானாம் என்பது பொருத்தமான பொரு ளொன்றையும் தாராமையின், மனத்தானும் என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப் பட்டது.

கருத்து: மனத்தானும் பிற உயிர்க்குத் துன்பஞ் செய்யாமை தலையாய துறவறம்.

English Meaning - As I taught a kid - Rajesh
Never do a harmful deed, however small, to anyone, in any circumstance, consciously or otherwise. That itself is great and a dharma. Such a dharma will protect us. (தர்மம் தலை காக்கும்). Even though we might not do harm to others, others might do harm to us. Even at dire circumstances, we should not do harmful deed to others because 1) it will seed jealous or hatred in us which is a prison for us 2) this will lead to a never ending chain reaction 3) distract us from our dharma and productive work.  

Questions that I ask to the kid
What we should not do to others at any circumstance? Why?

No comments:

Post a Comment