Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அறங்கூறான் அல்ல செயினும்

குறள் 181
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
அறம் - aṟam   n. அறு-. 1. Happiness;சுகம். (சம். அக. Ms.) 2. That which is salutary; இதம். அறத்துறை மாக்க டிறத்திற் சாற்றி(சிலப். 14, 28).
அறம்புறமாகப்பேசு-தல் aṟam-puṟam-āka-p-pēcu-, v. intr. அறம் + புறம் + ஆ- +. Tospeak disrespectfully, vulgarly; மரியாதையின்றித் தாழ்வாகப் பேசுதல். (J.)

கூறான் - கூறாதவன், பேசதாவன்

அல்ல - அறத்திற்கு புறம்பான பாவங்களைச்

செயினும் - செய்தாலும்

ஒருவன் - அத்தகையவன்

புறம் வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்; puṟam   s. the side of a thing, பக்கம்; 2. the outside, வெளி; 3. the back, முதுகு; 4. back-biting, புறணி; 5. a tract or part of a country, இடம்; 6. side, party, பட்சம்; 7. a surrounding wall or fortification, சுற்றுமதில்; 8. a form of the 7th case, ஏழனுருபு; 9. valour, bravery, வீரம்.

கூறான் - கூறாதவன், பேசதாவன்

என்றல் - என்றால்

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
உலக நூல்கள் அனைத்தும் எந்தெந்த காரியங்கள் அறம் என்று சொல்கின்றன. அத்தகைய அறச்செயல்களை செய்தால் நன்மை பயக்கும் மற்றும் வீடு அடைய ஏதுவாக இருக்கும்.  இவ்வுலகலில் எல்லோரும் அறத்தை பின்பற்றி வாழ்வதில்லை. ஆனால் புறம் பேசுவோர் பெரும்பான்மையில் உண்டு என்று திருவள்ளுவருக்கு தெரியும் போலிருக்கு. 

ஒருவன் வாழ்வில் செய்யவேண்டிய அறச்செயல்களை செய்யாமல் இருந்தாலும், அறச்சொற்களை பேசாமல் இருந்தாலும், (அறம் என்ற சொல்லுக்கு நேர்மை என்றும் பொருள்) நேர்மையான சொற்களை நேர்பட பேசாமல் இருந்தாலும், முகத்திற்கு நேராக நேர்மையான கருத்துக்களை பேசாமல் இருந்தாலும், முகத்திற்கு நேராக (முகஸ்தூதியோடு) வஞ்சனையாக பேசினாலும் (வஞ்சமாய் பேசினால் மனிதன் அறிந்துக்கொள்ள முடியும்), அறம் அல்லாதாவற்றை செய்தாலும், நேர்மையற்ற காரியங்களில் ஈடுபட்டாலும் பரவாயில்லை அக்தொருவன் முதுகிற்கு பின்பு நின்று புறம் பேசாமல் இருந்தால் என்று. அக்தொரு அறமற்றவன் புறம் பேசாமல் இருந்தால் அவனுக்கு அது நன்மையே பயக்கும் என்கிறார் திருவள்ளுவர். 

இங்கே புறம் பேசுவது என்றால் நாம் இல்லாத போது நமது உற்றாரிடம் நம்மை பற்றி நேர்மையற்ற சொற்களை கூறுவது, நம்மை பற்றி அன்னியர்களிடம் கூறுவது நாம் இல்லாத பொழுது ஆகும். 

இங்கே திருவள்ளுவர் புறம் பேசாமல் இருந்தால் போதும் அறமற்றவற்றை செய்யலாம் என்று சொல்லவில்லை. அறமற்றவருக்கே புறம் பேசாமல் இருந்தால் நன்மை பயக்கும் என்றால், அறத்துடன் இருப்பவர் புறம் பேசாமல் இருந்தால் எவ்வளவு நன்மை பயக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

பாரதியாரும் தன்னுடைய பாப்பா பாட்டிலே, “இளமையில் கல்” என்பதற்கு ஏற்றவாறு “புறஞ்சொல்லாலாகாது பாப்பா” என்பார்.

உலகநாதர் தன்னுடைய உலகநீதி என்ற நூலில் “போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்”,  “காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம், புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம், புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்” என்று சொல்லுகிறார்.

வள்ளாலார் சுவாமிகள் “உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்று சொல்கிறார்.

எல்லா நீதி நூல்களும் புறங்கூறாமையை இழிந்து உரைப்பதோடு, புறங்கூறுவாரோடு சேருவதையும் வேண்டாமென்கின்றன.

பெரியோர் பெருமையைப் பற்றி பேசும் அதிகாரத்தில், நாலடியார், “பிறர் மறையின்கட் செவிடாய் திறனறிந்து ஏதிலாரிற்கட் குருடனாய் தீய புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும் அறங்கூற வேண்டா அவற்கு” என்னும். அதாவது தீமைதரும் புறங்கூற நேரின் ஊமையாகிவிட வேண்டுமென்ற குணமுடையவரே மேலோர் என்கிறது இப்பாடல்.  “இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும் பழிப்புறம் சொல்லாப் பண்பினன்” என்று புறங்கூறுதலை பழித்து, கூறாததை பண்பு என்றும் சொல்கிறது பெருங்கதையில் வரும் இவ்வரிகள்.

ஒப்புமை
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு (நாலடி 158)

இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும்
பழிப்புறம் சொல்லாப் பண்பினன் (பெருங் 1.36:9-10)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, காணாதவழிப் பிறரை இகழ்ந்து உரையாமை. மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், இஃது அழுக்காறாமை வெஃகாமைகளின்பின் வைக்கப்பட்டது.)

ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றல் இனிது - பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று, (புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம், இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

Thirukkural - Management - Avoiding Backbiting
One of the limiting and self-injuring habits is talking the negatives of people behind their backs. “Backbiting,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 74), “is unkind and unpleasant talk about somebody who is not present.” A universally damaging habit is unknowingly practiced by most of us. An employee complains to his spouse against his superior and complaints to his colleagues against his spouse. Ironically, neither his spouse can influence the behavior of his boss, nor his colleagues can influence the behavior of his spouse. This situation must sound familiar to you.

Rarely there are exceptions to this condescending, if that is the right word, practice. One person commented, “Backbiting is lubrication for our gossips. Without backbiting, we cannot continue our conversations here. We cannot pass time.” People, for sure, cannot pass their time without getting into it. Though everyone talks against talking behind other people, everyone enjoys doing that.

People spend considerable time talking against others and suddenly they become philosophical or enlightened and say ‘there is no point in backbiting as it is meaningless and waste of time.' They get into backbiting again and become philosophical again. Gossiping and regretting are regular practices for some people. 

Valluvar anticipated the irrelevance of talking against people in their absence and relevantly devoted a chapter to the ills of backbiting. Kurals that warn us of the negative consequences of backbiting and educate us to avoid resorting to that practice. Though a person does not do any virtuous act, he will be considered a pleasant person, if he does not talk ill of others in their absence, as in Kural 181. Not talking ill of someone in someone's absence is better and more pleasant than doing any positive act.

Even to ignore virtue and to sin
Is not so bad as to earn a slanderer's name 

English Meaning - As I taught a kid - Rajesh
Even if one does not speak positive things or truth, people will still consider him better or fine if he doesn't gossip or talk behind the back. Because gossiping or backbiting is considered characterless as it is unproductive, destructive and creates a negativity.

Questions that I ask to the kid
When will this world get consider you a better person even if you don't do speak positive things? Why gossiping is considered bad?

நடுவின்றி நன்பொருள் வெஃகின்

குறள் 171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]

பொருள்
வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை;

நடுவு - இடை; நடுவுநிலைமை; மாதரிடுப்பு; நீதி; equity, justice, impartiality.

இன்றி - iṉṟi   adv. இன்-மை. Without;இல்லாமல். தனக்கொரு பயனின்றியிருக்க (கலித். 96,30, உரை).

நன் - நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

வெஃகின் - வெஃகு-தல் -  veḵku-   5 v. tr. 1. To desire ardently; மிகவிரும்புதல். அருள் வெஃகி (குறள்,176). 2. To covet; பிறர்பொருளை இச்சித்தல்.இலமென்று வெஃகுதல் செய்யார் (குறள், 174).

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பொன்றி - அழியும்

குற்றமும் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.

ஆங்கே - அங்கே

தரும் - ஈன்றும்

முழுப்பொருள்
நடுவு என்றால் நீதி. நீதி என்றால் அறம். நடுவின்றி என்றால் நேர்மையில்லாத, அறமில்லாத, உழைப்பில்லாத, நேர்மையான உழைப்பில்லாத என்று பொருள். 

நாம் ஒரு பொருளின் மீது விருப்பம் கொள்கிறோம் என்றால் அதன் மீது ஒரு நியாயம் வேண்டும். அப்பொருளை விரும்புவதற்கான நேர்மையான எண்ணங்களும் உழைப்பும் வேண்டும். இல்லையென்றால் அது அறமாகது. 

இங்கே திருவள்ளுவர் ஒரு பொருளை உடைமையாக்கிக்கொள்வது தவறு என்று மட்டும் சொல்லவில்லை. அறமில்லாமல் ஒரு பொருளை விரும்புவதுக் கூட தவறு என்கிறார் திருவள்ளுவர். 

அப்படி ஒருவர் நேர்மையான உழைப்பில்லாமல் நல்ல எண்ணங்கள் இல்லாமல் ஒரு பொருளை விரும்பினால் அஃது அவருடைய புகழையும் அவரது குடும்பத்தின் புகழையும் அழிக்கும். அது மட்டும் அல்லாது குற்றங்களையும் (குற்றங்கள் செய்யத் தூண்டும்) தரும் என்கிறார் திருவள்ளுவர்.


Image result for ravana sita

(Ravana Abducting Sita)

உதாரணம்:
இச்சைக்கு ராவணனே நல்ல உதாரணமாகும். சீதா மீது கொண்ட இச்சையினால் தான் அவன் எல்லா தவறுகளை செய்தால். பிறர் (ராமரின்) மனைவி சீதா என்று தெரிந்தும், பிறர் மனைவி மீது இச்சைக்கொள்வது தவறு என்று தெரிந்தும் இச்சைக்கொண்டான். அதுவே அவனை பல குற்றங்களை செய்ய வைத்தது. அதுவே அவனது அனைத்து புகழையும் (சிவ பக்தன், வீணை வித்வான், நல்ல ஆட்சியாளன் என்ற பல புகழ்கள்) அழித்தது. ஆதலால் தான் கம்பர் இராமாயணத்தில் சொல்லி இருப்பார்  "கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி"மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி எத்தனை உயர்ந்தது என்று கீழே காணவும்.

மேற்சொன்ன கம்பராமாயண வரிகளின் ஜெயமோகனின் விரிவுரை கீழே

இங்கே அரக்கனைக் கொல்லும் அவதாரம் அல்ல, அறமிலியை அழிக்கும் பேரறத்தான் அல்ல ஒரு கணவனும் இருக்கிறான். தன் மனைவி மேல் காமம் கொண்ட அன்னியனின் உள்ளத்தின் ஆழத்து அடுக்குகளுக்குள் சென்று தேடித் தேடித் துழாவிச் சலிக்கும் ஒரு கணவனின் உள்ளத்தை காணமுடிகிறது இவ்வரியில்.

ஒவ்வொரு சொல்லாலும் அந்த நுட்பத்தை நிகழ்த்துகிறான் தமிழ்த் தெய்வம் சன்னதம் கொண்டெழுந்த நாவினன். சீதை கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஆகச் சொல்லப்படுகிறாள். கற்பின் கனலாக அல்ல, மோகவல்லியாக. பித்தூட்டும் பெண்ணாக.

அசோகவனத்தில் கோடை நதியென மெலிந்து தெளிந்து ஒளி கொண்டு தவக்கோலம் பூண்டிருக்கும் நாயகி அல்ல அவன் நினைக்கும் அப்பெண். கள் மலர் சூடி கண்மலர்ந்து சிரித்து ராமனை களி கொள்ள வைத்த இளங்கன்னி. அவன் அங்கு தேடுவது அவளை.

ராவணன் அந்தக் கன்னியை தன் ஊன்விழிகளால் கண்டிருக்கவே மாட்டான், அவனுள் கரந்த காதலன் காணாமலிருப்பானா என்ன?

ராவணன் சீதையை கவர்ந்து வந்தது தெரிந்த காதலே. அப்படியென்றால் கரந்த காதல் எது? எங்கோ ஆழத்தில் அப்பாலும் ஒரு காதல் இருந்ததா? முற்றிலும் வேறானது? கள்ளிருக்கும் மலரா அவன் உள்ளம்?

ராவணனின் நகர்ச்சிறையிலிருந்து அவளை மீட்கலாம் ராமன், மனச்சிறையிலிருந்து எப்படி மீட்பான்? உள்ளிருக்கும் எனக் கருதி தடவுகிறது அம்பு. பதைப்புடன் ஏமாற்றத்துடன் சீற்றத்துடன்

இன்னும் சிலநாட்களில் அவளை அனல்தேர்வுக்கு அனுப்பப் போகிறவன் அவன். அதற்கு ஒர் சலவைக்காரரின் சொற்கள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றன , அவ்வளவே. அதற்கான அந்தத் தவிப்பு அவனுள் இப்போதே இருக்கிறது.

இந்த உச்சத்தில் மானுட ராமனின் அம்பு பட்டுச் சரியும் அமரக்காதலனாகிய ராவணனே வாசகனின் கண்முன் பேருருவம் கொள்கிறான். அவனை நோக்கியே காவியகர்த்தனும் கண்ணீர் உகுக்கிறான் எனத் தோன்றுகிறது.

வீழ்ந்தான் அரக்கன் என அலையெழுந்து பூசல் கொண்டாடவில்லை கம்பனின் சொற்கடல். அங்குநிகழும் மானுட நாடகத்தின் உள்ளே புகுந்து தடவிச் செல்கிறது காவியச்சொல் எனும் வாளி. அங்கு கவிஞன் பிரம்மத்தின் சொல்வடிவத் தோற்றமென நின்றிருக்கிறான்.


பின்னும் மனம் விரியும் வாசகன் மட்டுமே பெருங்காதல் கொண்ட கணவனே ஆயினும் , பேரறத்தான் ஆயினும், புவியணைந்த பரம்பொருளே ஆயினும் அவன் மானுடன் என உணர்ந்து , அவன் ஆழம் தன் ஆழமே என உணர்ந்து அவனை மேலும் அறிவான். நீ நான் என இங்கு வந்தவன் அல்லவா என நெகிழ்வான்.

மேலும்:
இன்னா நாற்பது பாடலொன்று, “அடைக்கலம் வவ்வுதல் இன்னா” என்று பிறரிடம் அடைக்கலமாகிய பொருளைக் கவருதல் துன்பம் தரும் என்கிறது. மாவலி வானகத்தையும் வையகத்தையும் பறித்து என்ற பொருளிலே கம்பர் “திறல் மாவலி என்பான் வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்” என்பார். மாவலி என்பான் திறமுடையவந்தான் ஆனால் தேவருக்கு உரிய வானகத்தையும், மனிதருக்குரிய வையகத்தையும் அவன் முறையற்று கவர்ந்ததை “வவ்வுதல்” என்ற சொல்லிலே கம்பர் உணர்த்துகிறார்.
அபிராமி பட்டரோ உமை சிவனாரின் இடப்பாகம் பற்றியதை உணர்த்துவிதமாக இருபாடல்களில் வவ்வுதலைக் குறிக்கிறார். இக்குறள் கருத்துக்கு மாறாக இருந்தாலும், பற்றினை நல்விதமாகக் கூறுதலுக்கும் வவ்வுதல் பயனாகியுள்ளது. “வவ்வியபாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே” என்பார் பட்டர்.  அந்தாதியானதால், முந்தைய பாடலில், “மதிசய மாகவன்றோ வாமபாகத்தை வவ்வியதே?” என்ற வினாவோடு முடித்திருப்பார்.
மற்றொரு முத்தொள்ளாயிரப்பாடல், தலைவனிடம் மயங்கி அவனிடம் மனதை பறிகொடுத்த பெண்கள் அதனால், அழகு குன்றினராம். அவ்வாறு பெண்களின்  அழகைத் திருடிகொண்டு போனமன்னன் எப்படி செங்கோல் செலுத்தும் மன்னனாக இருக்கமுடியும் என்கிறது. கவிதை நயத்தில் தலைவனை ஏற்றிச் சொன்னாலும் வவ்வுதல் என்ற சொல் “திருடலுக்கு ஒப்பானதாகவும், அது செங்கோல் ஏந்தும் தகுதியை மன்னனுக்கு அளிக்காது” என்றும் சொல்வது கவனிக்கத்தக்கது. அப்பாடல்:

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேன்மாந்தைக் கோவே! – நிரை வளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்
செங்கோலன் அல்லன் என!

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, பிறர்க்குரிய பொருளை வௌவக் கருதாமை. பிறர் உடைமை கண்ட வழிப் பொறாமையே அன்றி, அதனைத் தான் வௌவக் கருதுதலும் குற்றம் என்றற்கு, இஃது அழுக்காறாமையின் பின் வைக்கப்பட்டது.)

நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் - அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.'நன்பொருள் வெஃகின்'என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.).

மணக்குடவர் உரை
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம், இது சந்தான நாச முண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

பொறுத்தல் இறப்பினை என்றும்

குறள் 152
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை 
மறத்தல் அதனினும் நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பொறை பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.
பொறுத்தல் - தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்.

இறப்பு - அதிக்கிரமம்; மிகுதி போக்கு இறப்பு உலர்ந்தபொருள்; வீடுபேறு வீட்டின்இறப்பு; இறந்தகாலம்; ṟappu   v. n. & s. (இற), death, மரணம்; 2. excess, too much in quantity, மிகுதி; 3. transgression, wrong; மீறு தல்; 4. the eaves of a house, இற வானம்; 5. past tense, இறந்தகாலம்; 6. that which is superior, உயர்ந்த பொருள்.  

இறப்பினை -  உயர்ந்தது, சிறந்தது

என்றும் - என்றைக்கும், எந்நாளும், எப்போதும் - என்று இருந்தாலும்

அதனை - அந்த செயலை (அந்த தவறை)

மறத்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

அதனினும் - அதனை விட

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
நாம் வாழ்வில் பல மனிதர்களை சந்திக்கிறோம். பெரும்பாலானோரிடம் நல்லவையும் உண்டு குறைகளும் உண்டு என்பதை அறிவோம். சிலரிடம் அதிக குறைகள் உண்டு. அவர்கள் அத்தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள், திருத்துத்திக்கொள்ளவும் மாட்டார்கள். மறுபுறம் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். அது அவர்களின் நல்லுள்ளத்திற்கான சான்று. அவர்களின் முன்னேற்றத்திற்கான சான்று.

மன்னிப்பு கேட்காதவரிடம் நாம்  அமைதியாக சகித்துக்கொண்டு செல்வது சிறப்பாகும். மன்னிப்பு கேட்பவரை மன்னித்து செல்வது சிறப்பாகும். ஆனால் இவற்றைவிடவும் அத்தவறுகளையும் குற்றங்களையும் அறவே மறந்துவிடுவது என்பது சகித்துக்கொள்வதை காட்டிலும் மன்னித்தலை காட்டிலும் மிக மிக சிறந்தது. குற்றங்களை மறத்தல் நமக்கு இனிதே தரும். இங்கே நன்று என்ற வார்த்தைக்கு வாழ்வின்நோக்கம் என்ற பொருளும் உண்டு. ஆதலால் குற்றங்களை மறத்தல் என்பது நல்லவைக்கான வாழ்வின் நோக்கமாக கொண்டால் நன்மை நிச்சயம் என்று சொல்லலாம்.

ஏன் மறக்கவேண்டும்?
1) நம் மனதில் மற்றவரை பற்றிய தவறான ஒரு சித்திரம் ஆழ புதைந்திருந்தால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அது நமது பேச்சிலோ அல்லது முகத்திலோ தெரிந்துவிடும் (அகத்தில் உள்ளது முகத்தில் தெரிந்துவிடும்). அது மற்றவருக்கு சங்கடத்தையே தரும். முன் செய்த தவறினை மனதில் கொண்டு ஒருவரை பின்னாளில் எடைபோடவும் கூடாது, அவரிடம் தரப்படும் செயல்களில் அச்சாயம் பூசி நோக்கக்கூடாது. முக்கியமாக குடும்பங்களில் (மற்றும் அலுவலங்களில்) நாம் மனிதர்களை இடைவிடாது சந்தித்துக்கொண்டே இருப்போம். பல நிகழ்ச்சிகளில், விஷேசங்களில் என்று சந்திப்போம். அப்போழுது எல்லாம் மனதில் கசப்பை வைத்துக்கொண்டு இருந்தால் அன்பு மலர ஏதுவாக இருக்காது. வெறும் முகஸ்துதியே மிஞ்சும். ஆதலால் அன்பு மலர வேண்டும் என்றால் தவறுகளை மறக்க வேண்டும்.

2) நம் மனம் என்பது ஒரு கோயில் போன்று சுத்தமாக இருக்க வேண்டும். அங்கே மாசு தனை நெருங்கவிடக்கூடாது.

3) ஃபஸ்புக் (Facebook)இன் நிறுவுனர் மார்க் சக்கர்பர்க் (Mark Zuckerburg) என்பவர் எப்பொழுதும் ஒரே வகையான் சாம்பல் நிற டி-சர்ட்-களையே (grey color T-Shirt) அணிவார். அதற்கு காரணம் என்று சொல்வது என்னவென்றால் ஒவ்வொரு நாளும் நாம் என்ன சட்டை போடுவது என்று யோசிக்கும்பொழுது (முடிவு எடுக்கும் பொழுது) நாம் நமது ஆற்றலை பயன்படுத்துகிறோம். அவ்வாற்றலை நாம் வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களில் பயன்படுத்தினால் மிகவும் நன்று என்று சொல்வார். (திருக்குறளுக்கு வருவோம்). மனித ஆற்றல் என்பது வல்லமைவாய்ந்தது. அதனை (குற்றங்களை மனதில் வைத்துக்கொள்ளும் போன்ற) தேவையில்லாதவற்றில் அற்பவிஷயங்களைல் செலவு செய்யவேண்டாம்.

4) சிலர் செய்த தவறுகளை மற்றவர்களுக்கு ஞாபகம் படுத்துவர். அவர்களின் வாயை அடைப்பதுபோல பேசுவர். குற்றம் செய்ததனால் அவர் வாழவே தகுதி இல்லாதவர் போன்று பேசுவர். இது மனித தன்மை அற்றது. இது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம். வேந்த புன்னில் வேலை பாச்சுவதற்கு சமம். ஆதலால் தான் மறத்தல் மன்னித்தலை விடவும் சிறந்தது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”...............நன்றல்ல
தன்றே மறப்பது நன்று” (குறள் 108)

பரிமேலழகர் உரை
என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின்அப்பொறையினும் நன்று. ('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார்).

மணக்குடவர் உரை
பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.

மு.வரதராசனார் உரை
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

சாலமன் பாப்பையா உரை
தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

Thirukkural - Management - Tolerance
Valluvar resorts to a comparison to connect the power and benefits of tolerance in Kural 152.

Forgive transgressions always, better still 
Forget them.

A person of tolerance has to tolerate people who trouble him beyond a controllable limit. There is  nothing excess for a person with high tolerance for others as he can tolerate any trespassing by others. A person of intolerance has only excuses. Forgetting the troubles and the troublemakers is far better than just tolerating their insults and humiliations. If you retaliate to a person who troubled you, the thoughts of troubles remain deep inside and they trouble you a lot. If you want to take care of yourself, always forgive and forget people who have insulted, hurt, and humiliated you.

English Meaning - As I taught a kid - Rajesh
One should always tolerate a transgression/wrongdoing/offense. At the same time, it is even better to forget the transgression. A person might ask for forgiveness or realize his/her mistake and a person may not ask for forgiveness or realize his/her mistake. In both cases tolerating is a great quality. Forgetting that is even better because anything bad i.e., hatred, vengeance in our heart will prison us and kill us slowly. It will deplete our energy which can be used for productive stuffs. It can distract us from our goal. (remember kurals நகையும் உவகையும் கொல்லும் சினம், யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்)

Questions that I ask to the kid
What is better to forget than?
Forgetting Vs Tolerance - Which is better? Explain.

பிறன்பொருளாள் பெட்டொழுகும்

குறள் 141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து 
அறம்பொருள் கண்டார்கண் இல்
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை ]

பொருள்
பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

பொருளாள் - poruḷ-āḷ   n. id. +. Wife,as one's property; மனைவி

பெட்டு - பொய்; மயக்குச்சொல்; சிறப்பு; மதிப்பு.
பெட்டு - peṭṭu   n. prob. பெள்-. 1. Lie, false-hood; பொய். (பிங்.) மானுடம்போன்று பெட்டினையுரைப்போர் (பதினொ. கோபப்பிர.). 2. Delusiveword; மயக்குவார்த்தை. கயவர் சொல்லும் பெட்டைக்கெடுக்கும் (திவ். இராமாநுசநூற். 93).

ஒழுகும் - ஒழுகு - நெறிப்படி நடக்க; ஒழுகல் - v. noun. Flowing. 2. Leaking, dropping, a leak. 3. Behavior. 4.

பேதைமை - taimai   n. id. Folly;ignorance; credulousness; மடமை. பேதைமையன்ற தறிவு (நாலடி, 249).

ஞாலத்து - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை

கண்டார் - தோற்றுவித்தவர்; தொடர்பில்லாதவர்; kaṇṭār   n. காண்-. Lit., personswhom one sees (for the first time), hence,persons not related; persons not concerned;strangers; சம்பந்தமில்லாதவர். கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே (பிரபோத. 27, 44).

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

இல் - இல்லை

முழுப்பொருள்
காம மயக்கத்தினால் பிறருடைய மனைவி மீது பற்றுக்கொண்டு அவள் சொற்படி நடப்பது மடமை என்கிறார் திருவள்ளுவர். இத்தகைய மடமை உலகத்தின் அறம் பொருள் அறிந்தோரிடம் இல்லை என்கிறார் திருவள்ளுவர். அம்மடமை இருந்தால் அவர்களிடம் அறம் பொருள் இல்லை என்றும் நாம் பொருள் கொள்ளலாம்.

உதாரணம் 2
சற்று தள்ளி நின்று பார்த்தால் இது பிறன்பொருளாளுக்கு மட்டும் பொருந்தாது. நமது இன்றைய தமிழக அரசியலுக்கும் பொருந்தும். உதாரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு இப்போதைய தமிழக அரசின் ஆட்சி (எடப்பாடி ஆகட்டும் சரி, பன்னீர்செல்வம் ஆகட்டும் சரி) மத்திய அரசின் (பாஜக - நரேந்திர மோடி-யின்) கண் அசைவிற்கு ஏற்றப்படி நடக்கிறது. இது மடமையே ஆகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழையாமை.இஃது ஒழுக்கம் உடையார்மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின்பின் வைக்கப்பட்டது.)

பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் - ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை. (பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.

மு.வரதராசனார் உரை
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்

குறள் 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் 
தேரினும் அஃதே துணை
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]

பொருள்
பரிதல் - பற்றுவைத்தல்; காதல்கொள்ளுதல்; இரங்குதல்; சார்பாகப்பேசுதல்; வருந்துதல்; பிரிதல்; அறுதல்; முறிதல்; அழிதல்; ஓடுதல்; வெளிப்படுதல்; அஞ்சுதல்; வருந்திக்காத்தல்; பகுத்தறிதல்; அறிதல்; அறுத்தல்; அழித்தல்; நீங்குதல்; கடத்தல்; உதிர்த்தல்; வாங்கிக்கொள்ளுதல்.

பரிந்து - முழு மனதுடன் அன்புடன் ஏற்று செய்தல்

ஓம்பிக் - ஓம்புதல் - ōmpu-   5 v. [T. ōmu, K. ōvū,M. ōmbu.] tr. 1. To protect, guard, defend,save; பாதுகாத்தல் குடிபுறங் காத்தோம்பி (குறள்,549). 2. To preserve; to keep in mind; to cherish, nourish; பேணுதல் ஈற்றியாமை தன்பார்ப்போம்பவும் (பொருந. 186). 3. To remove, separate; to keep off; to ward off; தீதுவாராமற்காத்தல். 4. To dispel; பரிகரித்தல் எனைத்துங்குறுகுத லோம்பல் (குறள், 820). 5. To maintain,support; to cause to increase; to bring up;வளர்த்தல். கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1). 6.To consider, discriminate; சீர்தூக்குதல் ஓம்பாவீகையும் (பு. வெ 9, 1). 7. To concentrate themind; மனத்தையொருக்குதல். தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை (குறள், 132). 8. To clutch or grasp tightly, as a miser; இவறுதல் பெற்றேமென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626).


காக்க - காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.

ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

தெரிந்து - தெரிந்து வினையாடல் - அமைச்சர் முதலாயினார் செய்யவல்ல செயல்களை ஆராய்ந்து அவற்றின் கண்ணே அவரை ஆளும் திறம்.
ஓம்பித் - ஓம்புதல்

தேர் - tēr   n. prob. தேர்²-. 1. [T. Tu. tēru,K. M. tēr.] Car, chariot; இரதம் கடலோடாகால்வ னெடுந்தேர் (குறள், 496). 2. A vehicle.See கொல்லாவண்டி 3. Boy's small car; சிறுதேர் புதல்வனைத் தேர்வழங்கு தெருவிற் றமியோற்கண்டே (அகநா. 16). 4. The 4th nakṣatra. Seeஉரோகிணி. (சூடா.) 5. Mirage; கானல் யானையிலங்குதேர்க் கோடு நெடுமலை (கலித். 24).

தேர் - tēr   தேரு, II. v. t. examine, investigate, ஆராய்; 2. discriminate, know, அறி; 3. consider, deliberate, யோசி; 4. say, tell, சொல்லு; v. i. be well versed or proficient in, பயில்.

தேரினும் - தேர்ச்சியுடன் பயின்றாலும்

அஃதே  - அஃதாவது
துணை - துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).


முழுப்பொருள்
ஒழுக்கம் என்பது உலகம் ஓம்பிய நெறி. மனிதர்களுக்கு உயர்ச்சி தரும் நெறி, நன்னடத்தை என்பது நாம் அறிவோம்.  ஒருவனுக்கு நல்லொழுக்கம் என்பது விதைக்கு பாய்ச்சும் நல்ல பசுமையான நீரைப் போன்றது ஆகும். நீரின் தன்மை விதைக்குள் சென்று வளர்ந்து நல்ல மரமாக வளரும். அதுப்போல் நல்ல குணங்கள் பழக்கவழக்கங்கள் நன்னடத்தைகள் ஒருவருள் வளர்ந்து உயர்ச்சி தரும். அறம் தனை நிலைநாட்ட உதவும். துன்பமான நேரங்களிலும் தவறான பாதையில் செல்வது தவறு என்று நம்மை அதில் இருந்து விலக்கி நல்வழியில் செலுத்தும் நல் ஒழுக்கம்.  இறுதியில் பல தடைகள் வந்தாலும் இன்பமே பயக்கும்.

அத்தகைய நன்னடத்தையை பின்பற்ற வகுக்கபட்ட நெறிகளை ஒருவர் பல நூல்களில் (உதாரணமாக திருக்குறள், ஆத்திச்சூடி, திருவாசகம், திருமந்திரம், நாலடியார், பெரியபுராணம், திருவருட்பா, திருமுறை, தேவாரம்) இருந்து ஆழமாக கற்றுக்கொள்ளலாம். ஆனால் தெரிந்து கொள்வதனால் மட்டும் என்ன பயன்? ஒன்றுமில்லை. நாம் கற்ற அறங்களை ஒழுக்கங்களை முழு மனதுடன் பரிவுடன் ஏற்று நன்மை தீமைகளை பகுத்தறிந்து முடிவு எடுத்து, அவ்வொழுக்கத்தை காதலித்து, அதற்காக தன்னை வருத்திக் காத்தால் தான், ஒழுக்கம் நமக்கு அரணாக இருக்கும்.

இங்கே திருவள்ளுவர் தெரிந்து என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அவ்வார்த்தைக்கு வெறுமென தெரிந்துக்கொள்ளுதல் என்ற அளவில் மட்டுமே பொருளை அகராதியில் காண்கிறோம். [ஒருவேளை அறிந்து என்று போட்டு இருந்தால் வேறு அர்த்தம் வரும். ஏன் என்றால் அறிந்து என்ற சொல்லுக்கு பயிலுதல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் "61 - பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற" என்று மற்றொரு குறளில் அழகாக கூறியிருப்பார்].

மேலும்: அஷோக் உரை

“இளையோனே, நெறியென்றால் என்னவென்று எண்ணுகின்றாய்? நன்றென நாம் உணரும் ஒன்றின் பொருட்டு எப்போது வேண்டுமானாலும் சுருட்டி வைத்துக் கொள்ளத்தக்க பட்டாடையா அது?” என்றார். “அது மணிமுடியல்ல, காலணி. முள்ளும் கல்லும் நிறைந்த பாதையில்தான் காலில் இருந்தாக வேண்டும்.”

பரிமேலழகர் உரை
ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க - ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க, தெரிந்து ஓம்பித்தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, இவற்றுள் இருமைக்கும். துணையாவது யாது? எனது மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். ('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால். இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை
எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.

பொருள்: பரிந்து ஓம்பி ஒழுக்கம் காக்க - (ஒருவன்) வருந்திப் பேணி ஒழுக்கத்தைக் காக்கக் கடவன் ; தெரிந்து ஓம்பி தேரினும் அஃதே துணை - (தனக்குத்) துணையானவற்றை யயல்லாம்) அறிந்து பேணி ஆராயினும் ஒழுக்கமே (தனக்குத் ) துணை (யாகலான்).

கருத்து: ஒருவனுக்கு நல்லொழுக்கமே ‘பொன்றுங்கால் பொன்றாத் துணை’.

Thirukkural - Management - Personality Development - Self Discipline
Even if a person learns from all  the scriptures and excels in the demonstration of his knowledge of them, only self-discipline remains as supreme in his life, confirms Kural 132.

Guard your conduct with care; studies won't give
A surer aid.

There are many educated failures. Education alone is not adequate to have a balanced personality. Therefore, there is a need to put in special efforts to cultivate self-discipline. The process of learning to be self-disciplined may be demanding but the outcomes of that will be more fruitful. There are examples of people who achieved excellence just because of self-discipline.


இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
தெய்வங்கள் மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன. மனிதன் ஒழுக்கந்தவறினால் தெய்வத்தின் சீற்றத்துக்கு ஆளாவான். வேறு யாரிடமிருந்து மறைத்தாலும் தெய்வங்களிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. ஒழுக்கத்துக்குத் தெய்வம் வருணன். வருணன் மனிதனுடைய செயல்களை எவ்வளவு தூரம் கவனிக்கின்றான் என்பதை உணர்த்துவதற்காகப் போலும் சூரியனையே வருணனுடைய கண்ணாக வேதத்திலே பல இடங்களில் கூறப்பட்டுள்ளது

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்

குறள் 126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 
எழுமையும் ஏமாப் புடைத்து
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒருமை orumai   n. ஒன்று [T. orima, M.oruma.] 1. Oneness, union; ஒற்றுமை (பிங்.) 2.Singleness, loneliness; தனிமை என்னொருமையுங்கண்டுவத்தி (கம்பரா. கிளை 30). 3. Unchangeableness; ஒரேதன்மை. ஒருமைமகளிரே போல (குறள்,974). 4. Peerlessness, uniqueness; ஒப்பற்றதன்மை. உண்மைபிறர்க் கறிவரிய வொருமையானும்(சிவப்பிர. முதற்சூ. 3, பக். 91). 5. (Gram.) Singularnumber; ஏகவசனம் (தொல். சொல் 44.) 6.Concentration of mind; மனமொன்றுகை. ஒருமையா லுன்ணையுள்கி. (தேவா. 478, 4). 7. Knowledgeof God; இறையுணர்வு (பிங்.) 8. Decision, determination; ஆலோசனைமுடிவு. கொடுத்துநம்முயிரென வொருமைகூறினான் (கம்பரா. மூலபல. 179). 9.Final emancipation; மோக்ஷம். எம்மொடா மொருமையெய்துவான் (தணிகைப்பு. நந்தியு. 17). 10. Truthfulness, veracity; மெய்ம்மை ஒருமையே மொழியுநீரார் (கம்பரா. அயோத். மந்திர. 9). 11. One birthin the round of births; ஒருபிறப்பு. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி (குறள், 398).  
ஒருமையுள் - மனமொன்றுகை யுள்

ஆமை - āmai   n. ஆம்¹ also யாமை [K. M.āma, Tu. ēme.] Turtle, any member of cheloniaor testidinata; கூர்மம் (திவ். பெரியாழ். 4, 9, 5.) , கூர்மம்; ஓர்உயிரினம்; ஒருநோய்; மணம்
ஆமைபோல் - ஆமையை போன்று

ஐந்து - ஐம்புலன், ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள்; ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள்:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

அடக்கல் - மறைத்தல்; கீழ்ப்படுத்துதல்; உட்படுத்துதல்; ஒடுக்கல்; பணியச்செய்தல்.

ஆற்றின் - ஆற்று-தல் - āṟṟu-   5 v. intr. 1. To become strong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. To be sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 101).--v. tr. 1. To  

எழுமை - n. எழு-. [M. eḻuma.]Height; உயர்ச்சி (திவா.)  ; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு.
எழுமையும் 

ஏமாப்பு - n. ஏமா-. 1. Security,safeguard; அரணாகை. எழுமையு மேமாப்புடைத்து(குறள், 126). 2. Support, stay; வலியாகை. எச்சத்திற் கேமாப்புடைத்து (குறள், 112). 3. Hauteur,pride; இறுமாப்பு ஏமாப் பிரலை விலங்கலை (ஞானா.43, 25). 4. Object, intention, purpose; கருத்து (திவா.)  

உடைத்து - உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
ஒரு ஆமையானது தன் உறுப்புகளை பயன்படுத்தி இடர் புகுதாமல் தன்னை தற்காத்துக்கொள்ளும். ஒரு ஐந்தறிவு ஆமையாலே தன் உறுப்புகளை பயன்படுத்தி தற்காத்துக்கொள்ள முடிகிறது. மனிதனால் முடியுமா? முடியும். எளிது! அதனால் தான் ஆமையோடு ஒப்பிட்டு சொல்கிறார் திருவள்ளுவர்.

மனிதர்களுக்கு மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் உண்டு; இவ்வைந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் ஊறு, சுவை, ஒளி,  நாற்றம், ஓசை எனவாகும். தீமை மனிதனுள் புக இவ்வைந்து பொறிகளே வழிகள். இப்பொறிகளை மனிதன் அடக்கினால் அவனுள் தீமை புகவே புகாது. ஒருவனுள் தீமை இல்லை என்றால் அவனுக்கு அதுவே சிறந்த அரண். அப்படி ஐம்புலன்களையும் அடக்கினால் அது ஒருவனை வலிமையாக்கும், உயர்ச்சி தரும்.

இங்கே வள்ளுவர் எழுமையும் என்று கூறுகிறார். ஏன் எழுமையும் என்கிறார் என்றால்? - ஒருவன் உயர்ச்சிக்கொள்ளும் பொழுதும் அடக்கத்தை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் அது அரணாக அமையும். உதாரணமாக பெரிய ஆளாகிய பின் கண்ட மேனிக்கு உணவு உட்கொள்ளுவது, பார்த்த பொருளையெல்லாம் ஆடம்பரத்துக்காக வாங்குவது என்று இருந்தால் - உடம்பும் வீணாகி பொய்விடும், பணமும் செலவாகும் - இது நம் வீழ்ச்சிக்கு வித்திடும்.  மொத்தத்தில் நம் வருங்காலத்தில் அது நமக்கு கேட்டையே விளைவிக்கும். ஆதலால் சர்வமும் புலன்களை அடக்கி ஆண்டால் உயர்ச்சி நிச்சயம்.

யோக ஆசிரியர் G.சௌந்தர் ராஜன் அவர்கள் “ஒரு மனிதன் வெளியுலகத்தை விட்டு கொஞ்சம் நேரம் கூட தன்னை விலக்கிக்கொள்ளாவிட்டால் அவனுக்கு துன்பம் மட்டுமே எஞ்சும்” என்று கூறுகிறார். (உதாரணமாக எந்நேரமும் mobile, cinema, breaking news, cricket, gossip etc)

யோக ஆசிரியர்  G.சௌந்தர் ராஜன் அவர்கள், புலன்களை உள்ளுக்குள் ஒடுக்குவது, ப்ரத்யாகாரம் என்று அஷ்டாங்க யோக மரபில் 5ஆவது நிலையாக குறபடுகிறது என்று கூறுகிறார். ஒருவர் ப்ரத்யாகாரத்தை  தொடர்ந்து செய்துவந்தால் அவர் அடுத்த 6ஆவது நிலையான தாரணா நிலைய அடைய முடியும். தாரணா நிலை என்பது ஒழுகுதல் என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஒருவர் தொடர்ந்து தாரண நிலையில் இருந்தால் அந்நேரத்தில் தனது உயிர் ஆற்றலை குவித்து அதனை சேமித்துவைத்துக்கொள்ளலாம். பின்பு அதனை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். 

அதனால் தான் வள்ளுவரும் புலன்களை அடக்காவிட்டால் வளர்ச்சி கிடையாது என்கிறார்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”அடங்கலால் ஆமை போன்றும்” (சீவக.1895)
“ஐவகைப் பொறியும் வாட்டி ஆமையின் அடங்கி” (சீவக.2824)

“ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி” (திருமந் 133)

“அடக்கும்ஐம் பொறியொடு கரணத்தப்புறம்
கடக்கும்வா லுணர்வினுக் கணுகும் காட்சியான்” (கம்ப.தைலமாட்டு 27)

”குறள் 398”

“தாமரைக் கண்ணொடேர் தவத்தின் மாலையன்
ஆமையின் இருக்கையன்” (கம்ப.சடாயு உயிர்நீத்த 23)

உடல்மேல் உள்ளம் கொண்ட வெற்றியே ஆற்றல். பொருள்மேல் ஆற்றல் கொண்ட வெற்றியே செல்வம். செல்வத்தின்மேல் கனவு கொண்ட வெற்றியே அழகு. அழகின்மேல் மானுடன் கொள்ளும் வெற்றியே கலை. முழுமைகொண்ட கலை  மெய்மையின் பருவடிவு.  மெய்மையே மானுடனை தெய்வமாக்குகிறது.

பரிமேலழகர் உரை
ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல்' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.

மு.வரதராசனார் உரை
ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

சாலமன் பாப்பையா உரை
ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.

பொருள்: ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஒரு பிறப்பின்கண் (ஒருவன்) ஆமை போல ஐம் பொறிகளையும் அடக்குதலைச் செய்யின், எழுமையும் ஏமாப்பு உடைத்து - (அவன் அடையும்) ஏழு பிறப்பின்கண்ணும் (அவனுக்கு அது) காவலாதலை யுடைத்து.

கருத்து: அடக்கம் மேல் வரும் ஏழு பிறப்பிலும் பெருமை பயக்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Just like a turtle hides its head in its shell when there is a danger, a person should learn to control his five senses. This discipline of controlling senses will act as a fort from danger

If you are able to control your five senses, your productivity will increase. Controlling senses helps in discipline which in turn helps to improve focus on work thereby leading to growth

Questions that I ask to the kid
What should you do for growth?
(like what or which animal/) How should you control your senses and what is the outcome of it?

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

குறள் 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
[அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]

பொருள்
செப்பம் - செவ்வை; நடுநிலை; சீர்திருத்தம்; பாதுகாப்பு; செவ்வியவழி; தெரு; நெஞ்சு; மனநிறைவு; ஆயத்தம்.

உடையவன் - கொண்டவன், உரியவன்; பொருளையுடையவன்; கடவுள் செல்வன் தலைவன்

ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை (ஆகு-. 1. Achievement, accomplishing), உண்டுபண்ணுகை; படைப்பு, செல்வம், பொன், பெருக்கம், இலாபம், ஈட்டம், கொடிப்படை, திருமகள், மங்களகரம், வாழ்த்து, Increase, development; விருத்தி, 

சிதைவு - குற்றம்; கேடு.

இன்றி - இன்-மை. Without;இல்லாமல், 

எச்சத்திற்கு - எச்சம் - எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்,  Work;காரியம்

ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து.

உடைத்து - உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
இக்குறளுக்கு பல உரைகள் “நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்” என்று எழுதப்பட்டு உள்ளது. ஆனால் எனக்கு சற்று அதிகமாகவும் தோன்றுகிறது.

நடுவுநிலையை பாதுகாக்கும் ஒருவன் அறத்தை பின்பற்றுவதால் அவன் தலைவன் எனலாம். நடுவுநிலை என்பது ஒரு செல்வமுமாகும். அத்தகைய செல்வம் குறையாமல் (/சிதைவின்றி) உயர்ந்துக்கொண்டே (/ஆக்கம்) இருக்கும்  - எப்போது என்றால் அவன் வரும் காலங்களிலும் நடுவுநிலையை தொடர்ந்து பாதுகாத்தால். அப்படி நடுவுநிலையை பாதுக்காத்தால் இந்த செல்வம் (புகழ், மனநிறைவு) அவர்காலத்திலும் அழியாது வருங்காலத்திலும் அழியாது. செல்வம் (புகழ், மனநிறைவு) உயர்ந்துக்கொண்டே இருக்கும். அது அவருடைய அடுத்த சந்ததியினருக்கும் ஒரு வாழ்க்கைக்கான வழிதடமாய் இருக்கும்.

ஒரு நீதியரசர் ஒரே ஒரு வழக்கிற்கு தவறான தீர்ப்பு அளித்தால் என்னவாகும்? ஒரு குண்டா பாலில் ஒரு துளி விஷம் கலந்ததுப்போல அவர் புகழ் குன்றி விடும்.

கலிதொகை இவ்வாறு கூறுகிறது
“செம்மையின் இகந்தொரீ இப் பொருள்செய்வார்க் கப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவ தறியாயோ” (கலி. 14:14-5)

இக்குறளுக்குத் தொடர்பில்லாவிட்டாலும், ஒரு கூடுதல் தகவல்: வள்ளுவர், “கற்றலைப்” பற்றியும், சிற்றினம் சேராமை பற்றியும் உள்ள குறள்களிலும் “எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்ற  சொற்றொடரையே சொல்லியிருப்பார். சங்க இலக்கியமான ஐந்திணை எழுபதிலும் இச்சொற்றொடர் பயன்பட்டிருக்கிறது.  புலவர்களுக்கு பிடித்த வெண்பா ஈற்றுச் சீர்களாயிருந்திருக்க வேண்டும்.  கீழ் கண்ட பாடலைப் படிக்கவும்.

பெருங் கை இருங் களிறு ஐவனம் மாந்தி,
கருங் கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும்,
சுரும்பு இமிர் சோலை, மலை நாடன் கேண்மை
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செப்பம் உடையவன் ஆக்கம்-நடுவுநிலைமை யுடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து-பிறர் செல்வம் போல் அழியாது அவன் வழியினர்க்கும் வலிமையாதலை யுடையது. வலிமை-பாதுகாப்பு.

எச்சவும்மை தொக்கது. ஒருவனுக்குப் பின் எஞ்சி நிற்பதாகலின் வழிமரபு எச்சமெனப்பட்டது.

மணக்குடவர் உரை
நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து. நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.

மு.வரதராசனார் உரை
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

பொருள்: செப்பம் உடையவன் ஆக்கம் ‡ நடுவு நிலைமையைப் பொருந்தியவனது செல்வம், சிதைவு இன்றி எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து - அழிவு இல்லாமல் (அவனுக்கேயன்றி அவன்) மக்கட்கும் காப்பாதலை யுடைத்து.

அகலம்: எச்சத்திற்கும் என்பதன் உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. செப்பம் - நேர்மை-நடுவு நிலைமை.

கருத்து: நடுவு நிலைமை யுடையவன் செல்வம் அழியாது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]

பொருள்
காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில் நிகழ்ச்சியைக் குறிக்கும் முக்காலம்; இசைக்குரிய மூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.
காலத்தினால் - தக்கசமயத்திற்கு

செய்த - செய்யப்பட்ட
நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.
சிறிது - சிறு-மை, அற்பமானது
எனினும் - என்றாலும்
ஞாலத்தின் - ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.
மாணப் - மாண்-. Greatness;glory; splendour; excellence; dignity; மாட்சிமை., மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.
பெரிது - பெரிது, மிகவும்

முழுப்பொருள்
உலகில் பலர் பல உதவிகளை செய்கிறார்கள். நாம் அதில் பல உதவிகளை பெற்றுக்கொள்கிறோம். எல்லா உதவிகளும் பெரிது என்று சொல்ல முடியாது. அதுப்போல சில உதவிகள் சிறிதாய் இருந்தாலும் அது சிறிதாகாது. 

ஒரு முக்கியமான நேரத்தில் ஒரு உதவி சிறிதாக இருந்தாலும் அந்த உதவி அந்த இடத்தில் இவ்வுலகை விட மிக மிக பெரியது என்கிறார் திருவள்ளுவர். இங்கு நாம் காண வேண்டிய மற்றொன்று, அவ்வுதவியால் நன்மை கண்டிப்பாக அடைந்தோமா என்று பார்க்கவேண்டும் என்று திருவள்ளுவர் கூறவில்லை என்பதனை. 

உதாரணமாக ஒருவர் மருத்துவத்திற்கு இரத்தம் தானம் செய்து உதவுகிறார். மேலிருந்து பார்க்கையில் அது சிறிய உதவியாக இருக்கலாம். செய்யப்பட்ட மருத்துவம் தோல்வியடைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தக்க நேரத்தில் செய்யப்பட உதவியினை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதுவே சிறப்பு. அதுவே அறமும் கூட. 

இவ்வுதவி பொருள் உதவியாக இருக்கவேண்டியது என்று கூட இல்லை. இக்கட்டான நிலைமையில், தேவையான நிலைமையில் ஆறுதலுக்கு ஒரு தூணும், மனதிற்கு ஊக்கம் தரும் ஒரு வார்த்தையும் மிக மிக பெரிய உதவியே.  [நான் ஆறு வயதாய் இருந்தப்பொழுது எனது தந்தையை இழந்தேன். ஆனால் அன்று ஒரு வார்த்தை ஆறுதலுக்காக கூட எனது உறவினர்கள் நாங்கள் கஷ்டப்பட்டு வளரும் படிக்கும் காலங்களில் வரவில்லை. குறிப்பாக இருவரை தவிர வேறு யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால் வளர்ந்த பிறகு நல்ல வேலைக்கு சென்ற பிறகு வந்தார்கள். உறவு கொண்டாடினார்கள். ச்சீ என்றே அன்று நினைத்தேன்]

என் வாழ்வில் மற்றொரு உதாரணம்: எனது தம்பி மேற்ப்படிப்பு படிக்க தேவையான நிதி இருப்பதாக வங்கியில் காண்பிக்க வேண்டும். எங்களிடம் அப்போழுது தேவையான வற்றில் பாதி நிதிக் கூட இல்லை. ஆனால் ஒரு பத்து நண்பர்கள் சேர்ந்து வங்கியில் தங்களால் முடிந்த பணத்தை சேர்த்தார்கள். வங்கியில் நிதி இருப்பதாக சான்றிதழ் வாங்கிவிட்டு அப்பணத்தை ஒரே வாரத்தில் மறுபடியும் தந்துவிட்டொம். இவ்விடத்தில் அவர்கள் எனக்கு பணமாய் ஒன்றும் தரவில்லை. வங்கியில் காண்பிக்க ஒரு வாரம் கடனாய் தந்தார்கள். இது பார்க்கையில் சிறிதானாலும் அந்த நேரத்தில் இவ்வுலகை போன்று பெரியது எனக்கு.  [மற்றொரு உதாரணம்: இதே போல எனக்கு ஒரு நிலை வந்த பொழுது எனது தூரத்து சொந்தம் என்று சொல்ல கூடிய சித்தி சித்தப்பா அவர்கள் எனக்கு படிக்க நிதி தருவதாக சான்றிதழ் கொடுத்தார்கள். அதனால் அப்பொழுது நான் படிக்க விண்ணப்பிக்க முடிந்தது]

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் “நன்னெறிப்” பாடலொன்று சொல்கிறது. இதை அறஞ்செய்வதை வலியுறுத்தி, வருமுன் காத்தல் என்கிற எடுத்துக்காட்டோடு சொல்லுகிறார்.
“கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ்செய துய்கவே – வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு”
குறளின் கருத்து, சொல்வழக்கிலே, “உன்னைப்போல் இந்திரன் இல்லை” என்னும் உபசார வழக்கு போல சொல்லப்படுகிறது.  காலத்திலே செய்த உதவியின் சிறப்பை உயர்த்திக் காட்டவே, அதை “ஞாலத்தை விட” பெரியது என்றது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“நிலத்தினும் பெரிதே” (குறுந் 3:1)

“மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும்
எண்ணினும் பெரியதோர் இடர்’ (கம்ப.அயோமுகி 99)

“முன்னொருவன் செய்த உபகாரம் மூவுலகம்
தன்னைக் கொடுத்தாலும் சாலுமே” (பாரத வெண்பா)

பரிமேலழகர் உரை
காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.).

மணக்குடவர் உரை
உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது. இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
காலத்தினால் செய்த நன்றி- ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த வுதவி; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது- பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாயிருந்தாலும், அக்கால நிலைநோக்க நிலவுலகத்தினும் பெரிதாம்.

ஒருவர் செய்த நன்றியை அது செய்யப்பட்ட காலநிலைக்கேற்ப மதிக்க வேண்டுமென்பது கருத்து. 'காலத்தினால்' என்பது காலத்தாலே வந்தான் என்னும், மேலைவடார்க்காட்டு வழக்குப் போன்ற வேற்றுமை மயக்கம்.

மு.வரதராசனார் உரை
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

பொருள்: காலத்தினால் செய்த நன்றி - (ஒருவன் இடருற்ற) காலத்தில் (பிறன்) செய்த உதவி, சிறிது எனினும் ஞாலத்தின் மாண பெரிது - (செயலால்) சிறியது என்றாலும் (பயனால்) உலகத்தினும் மிகப் பெரியது.

அகலம்: காலத்தினால் என்பது வேற்றுமை மயக்கம், மூன்றாம் வேற்றுமை யுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையால். ‘என்னினும்’ என்பது ‘ன’கர வொற்றுக் கெட்டு நின்றது.

கருத்து : சமயத்திற் செய்த உதவியும் ஒப்பற்றது

Management - 3 big questions of a king
A legend is that a King told one of his Ministers to find answers to three of his pressing questions. They were: 1) What is bigger than the earth? 2) What is deeper than an ocean? 3) What is taller than a mountain? The Minister explored all the possibilities to find answers to the King’s questions.

He could not get convincing answers to convince the King. He was much concerned that he would fail in fulfilling his responsibility. His daughter, on reading the disturbances on his face, asked him what was bothering him. The Minister explained to her the King’s expectations and his inability to find convincing answers to his questions. His daughter said, “My teacher told us, ‘You can find answers to all your questions in Thirukkural.’ My teacher is right as he always refers to Thirukkural to answer our questions. You too can refer to Thirukkural to find answers to your questions.” The Minister started to refer to Thirukkural to find answers to the King’s questions. He, like a detective with a magnifying glass, was meticulously reading the Kurals as he had a purpose. When he reached the Chapter 11, he found answer to the first two questions. 

Kural 102 provided the answer to the King’s first question ‘What is bigger than the earth?’

குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

Given in time, even a trifling help Exceeds the earth. A timely help, even though small, is considered and will be treated by the person helped as bigger than the earth. Remember the old saying, ‘A friend in need is a friend indeed.’ The size of the help does not matter, but the time of the help matters the most.

Kural 103 provided the answer to the King’s second question ‘What is deeper than an ocean?’ 
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது (103). 

Help given regardless of return Is wider than the sea. An unconditional help, like a mother’s love, that is helping someone without expecting any favor in turn, is considered deeper than an ocean. Somehow, we have become selfish and
we, before rendering any help, calculate the return on investment. When we expect something in return to the help provided to others that is not true help. Altruism is helping someone just for the sake of helping. An often told story is that a sadhu was bathing in the river Cauvery in Tamilnadu. He noticed a scorpion being carried away in the river. He wanted to save the scorpion, touched that to put that on the bank of the river. The scorpion stung his hand when he touched that. The sadhu dropped that. He attempted again, it stung again and he dropped the scorpion again. He kept on doing that to save the scorpion. An onlooker irritatingly commented, “Swami, you know a scorpion stings. In spite of that you are trying to save that.” The sadhu replied, “The nature of a scorpion is to sting. The nature of a sadhu is to help others despite difficulties.” 

When the Minister continued reading further, he found the answer to the King’s third question ‘What is taller than a mountain?’ in Kural 124. 
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது (124). 
The steadfast self-controlled towers aloft Taller than a mountain. If a person can remain polite and humble when he gets power, positions, personal gains, authority, and wealth, the ability to remain polite is considered taller than a mountain.

The Minister, while reading further, found answers to many of his pressing personal and professional problems. 

Thirukkural - Management - Helping Others
Help rendered to someone must be timely. If you help a person when he does not need your help, that act is not helping. That is rather interfering. On the contrary, if you help a person when he requests you to help, that act is not help. That is rather sympathy or obligation. A timely help, that is., helping when someone needs your help desperately, though very small, is greater than the world, Kural 102.

Given in time, even a trifling help
Exceeds the earth.

Be sensitive to people and their needs and help them when they need your help. 

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி

குறள் 93
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
இன்சொ லினதே அறம்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
முகத்தான் - முகத்து + ஆன்
முகம் - தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம், வாயில், நோக்கு, வதனம்
ஆன் - அவ்விடம், இக்கணம்

அமர்ந்து - அமர் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்

இனிது - இனி-மை, இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

அகத்தான் - அகம் + ஆன்
அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு, உள் மனம், அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

இன் - இனிமை

சொலினதே - சொல் + இனிதே

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல், சுகம்

முழுப்பொருள்
ஒருவரை வாசலில் (வாயிலில்) கண்ட உடன் (அல்லது முதல் முதலில் கண்ட உடன்), அவர் மீது, அன்புக்கொண்டு (விருப்பத்துடன்), இன்பம் தரும் மலர்ச்சியோடு அவரை காண வேண்டும். அதுப்போல உள் மனதில் இருந்து மகிழ்ந்து அவரிடம் இனிமையான நற்சொற்களை கூற வேண்டும். அதாவது அடுத்தவர் முகம் சுளிக்காத சோற்வூட்டாத சொற்கள். அதுவே அறம் என்கிறார் திருவள்ளுவர்.

இங்கே திருவள்ளுவர் ஒருவருக்கு பணம் காசு நகை கொடுக்க சொல்லவில்லை. இங்கே சொல்வது எல்லாம் பணம் கொடுத்து வாங்க தேவையில்லாத இனிய சொற்களை மட்டும் தான். ஆனால் அதற்கு தேவை மனது மட்டுமே.

இங்கே ஏன் திருவள்ளுவர் வாயிலில் (முதன் முதலில்) கண்ட உடன் இன்முகத்துடன் நோக்க வேண்டும் என்கிறார் ? எனக்கு என்ன தோன்றுவது என்றால் - ஒருவரை வரவேற்கும்/சந்திக்கும் பொழுது விருப்பம் இல்லாத மகிழ்ச்சியில்லாத முகத்தோடு இருந்தால், நாம் சந்திக்கும் நபருக்கு நம்மிடம் பேச ஒரு மனத்தடை உருவாகும். நாம் பல தடவை வீட்டில் பார்த்திருப்போம் - யாராவது ஒருவர் வீட்டில் முகம் கொடுத்து பேசவில்லை என்றால் ஏதோ தவறு இருக்கிறது என்று. இவ்வீட்டில் நாம் இங்கு வருவது இவருக்கு (ஒருவருக்கு) பிடிக்கவில்லை என்று நமக்கு புலப்படும். அதன் பிறகு நாம் அங்கு செல்வதை பொதுவாக தவிர்ப்போம். அதனை தவிற்கவே சந்திக்கும் பொழுதே இன்முகத்துடன் சந்திக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”விருந்துகண் டுள்ளம்
களிக்கு மங்கையர் முகமெனப் பொலிந்தன கமலம்’ (கம்ப.கார் 37)

பரிமேலழகர் உரை
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
முகத்தா னமர்ந்தினிது நோக்கி-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்-பின்பு நெருங்கியவிடத்து அக மலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலை யுடையதே அறமாவது.

ஒருவரைக் கண்டபொழுதே ஒரு பொருளை யீதல் பொதுவாக இயையாமையின், முதற்கண் இன்முகங் காட்டலும் உடனும் அடுத்தும் இன்சொற் சொல்லுதலும் மக்களைப் பிணித்து மகிழ்விக்குந் தன்மையனவாதலின், விருந்தினரிடத்தும் இம்முறையைக் கையாள்வதே சிறந்ததென்றார்.

மணக்குடவர் உரை
கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.

மு.வரதராசனார் உரை
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

பொருள்: முகம் மலர்ந்து இனிது நோக்கி அகம் ஆம் இன் சொல்லினது அறம்‡ முகம் மகிழ்ந்து இனிமையாகப் பார்த்து அகத்தின் கண் (உவகையால்) உண்டாகும் இனிய சொல்லையுடைய செயல் அறம்.

அகலம்: அத்து இரண்டும் ஆனும் சாரியைகள். ‘ஆல்’ அசை. ‘அது’ என்னும் சுட்டுப் பெயர் அறத்திற்கு முதலாகிய செயலைச் சுட்டி நின்றது. ‘ஏகாரம்’ அசை. இன் சொல்லின் என்பது செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘முகத்தா னமர்ந்து’. மணக்குடவர், பரிமேலழகர் பாடம் ‘இன்சொலினதே’. தாமத்தர் பாடம் ‘இன்சொலஃதே’. தருமர், நச்சர் பாடம் ‘இன்சொலி னஃதே’.

கருத்து: மலர்ந்த முகத்தோடும் இனிய சொல்லோடும் உவந்த உளத்தோடும் செய்யப்படும் வினைகள் அறமாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
Whenever we meet or come across someone we should greet them with smile in our faces. Also, it is our duty to say heartfelt positive and kind words. i.e., we should not hurt others. Our face reflects our heart. Hence, smile in our face is mentioned first. Similarly our words reflects our heart. 

Questions that I ask to the kid
When we speak to others how should our words be?
How should we treat others when we meet them? How would you relate it to words?

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்

குறள் 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இருந்து -  இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

ஓம்பி - ஓம்புதல் - ōmpu-   5 v. [T. ōmu, K. ōvū,M. ōmbu.] tr. 1. To protect, guard, defend,save; பாதுகாத்தல் குடிபுறங் காத்தோம்பி (குறள்,549). 2. To preserve; to keep in mind; tocherish, nourish; பேணுதல் ஈற்றியாமை தன்பார்ப்போம்பவும் (பொருந. 186). 3. To remove, separate; to keep off; to ward off; தீதுவாராமற்காத்தல். 4. To dispel; பரிகரித்தல் எனைத்துங்குறுகுத லோம்பல் (குறள், 820). 5. To maintain,support; to cause to increase; to bring up;வளர்த்தல். கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1). 6.To consider, discriminate; சீர்தூக்குதல் ஓம்பாவீகையும் (பு. வெ 9, 1). 7. To concentrate themind; மனத்தையொருக்குதல். தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை (குறள், 132). 8. To clutch orgrasp tightly, as a miser; இவறுதல் பெற்றேமென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626)

இல் வாழ்வது - இல்வாழ்க்கை வாழ்வது

எல்லாம் - எல்லாமே, அனைத்தும்

விருந்து - புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல்;

ஓம்பி ஓம்புதல் 

வேளாண்மை - vēḷ-āṇmai   n. வேள் +ஆள்-. 1. Gift, bounty, liberality; கொடை. (பிங்.)2. Beneficence, help; உபகாரம். விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு (குறள், 81). 3.Cultivation of the soil, agriculture, husbandry;பயிர்செய்யுந் தொழில். 4. Truth; சத்தியம். (பிங்.)வேளாண்மைதானும் விளைந்திட (கொண்டல்விடு. 84); 2. gift, bounty, liberality, ஈகை; 3. truth, மெய்.

செய்தற்பொருட்டு - செய்வதற்காக

முழுப்பொருள்
இல்வாழ்க்கையில் கணவன் மனைவியாக வாழ்கிறவர்களுக்கு பல கடமைகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று விருந்தோம்பல். கணவன் மனைவியாக வாழ்வது அவர்கள் இருவர் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ற சுயநலத்திற்கு அன்று. அவர்கள் இல்வாழ்க்கை வாழ்வது என்பது ஈகை செய்வதற்காக. வந்த விருந்தினருக்கு இருக்க இடம் கொடுத்து உபசரித்து நன்கு வயிராற உணவளித்து அவர்களை பேணுவதே விருந்தோம்பல். இல்வாழ்க்கையே வாழ்வது என்பதே வரும் விருந்தினரை உபசரிக்கவே என்கிறார் திருவள்ளுவர்.

மேலும் அஷோக் உரை

சிலப்பதிகாரத்தில் கோவலனை பிரிந்துள்ள கண்ணகி, அவன் (அவள் தலைவன் கோவலன்) இல்லாமல் தன்னால் விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறாள். அப்பாடல் கீழே
‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன் 75
முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருள் மொழி அளைஇ,
என் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்த, 80
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்’என்று அவள் கூற
-- இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ( / 2. மதுரைக் காண்டம் / 6. கொலைக்களக் காதை)

பொருள்
அறநெறியாளர்களுக்கு  அளித்தல், செந்தண்மைப் பூண்டொழுகும் அந்தணர்களைப் பாதுகாத்தல், துறவிகளை வழிபடுதல் - இந்த மூன்றும்  இல்லறம் பூண்டோர் கடமை. இந்த மூன்றையும் துறந்து நான் வாழ்ந்துகொண்டிருந்தேன்.  

இப்படி வாழ்ந்த என்னை உன் தாயும், தந்தையும் உன்மீது எப்போதும் இல்லாத சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, என்மீது அன்பு உள்ளம் கொண்டு, அருள் தரும் மொழிகளைப் பேசி, என்னைப் பாராட்ட, நான் வீட்டில் ஒளிந்துகொண்டு, என் நோவையும் துன்பத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், வாயால் புன்னகை பூத்துக் காட்ட, அந்த புன்னகையைப் பார்த்து  அவர்கள் மனம் வருந்தும்படிப் போற்றப்படாத ஒழுக்க நெறியில் வாழ்ந்தீர். 

அதனை நான் மாற்றாத உள்ளத்தோடு வாழ்ந்தேன் ஆகையால், நீ எழுக என்றவுடன் எழுந்தேன்.  - என்று கண்ணகி கோவலனிடம் கூறினாள்.  
(எழுக என எழுந்தாய். என் செய்தனை - என்று கோவலன் வினவியதற்கு இப்பபடி விளக்கம் அளித்தாள்) 

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் குறிப்பாக (main-ஆக) அவரது துணைவியார் கணவதி அம்மாள் பற்றி கி.ரா.இணைநலம் (எஸ்.பி.சாந்தி எழுதியது) நூலில் இருந்து சில பகுதிகள்
கணவதி அம்மாள் (கி.ராவின் மணைவி): கவிஞர் நாவன்னா காமராஜ்னு ஒருத்தர். அய்யாவுக்கு வேண்டியவர். காதி போர்டு இருந்தவர். அவர் ஒரு தடவை கன்னியாகுமரியிலிருந்து ஒரு முப்பது பேருடன் பாதயாத்திரை சென்று திரும்பி வந்துகிட்டிருப்பதாவும், இடைசெவல் வழியா வாரதாகவும், இரவு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யும்படியும் சேதி சொல்லி அனுப்பிவிட்டார். கேப்பைக்களியும், கருவாட்டுக் குழம்பும் போதும் என்று செய்ய வேண்டிய சமையல் அயிட்டத்தையும் அவரே சொல்லிவிட்டார். 
“முப்பது பேர்னா சும்மாவ. இரண்டு நாள் முன்னாடிதான், மத்தளம்பாறை வீட்டில் இருந்து வெள்ளைக் கேழ்வரகு ஒரு பத்து கிலோ போல கொடுத்து விட்டிருந்தாங்க.அதை அரைச்சி வெச்சிருந்தேன். எங்க ஊர்ல “பெத்த பூச்சி”ன்னு ஒரு பெரிய அம்மா கேப்பக் களி கிண்டுவதில் ரொம்ப திறமைசாலி. அவங்கள கூப்பிட்டு கேப்பைக்களி பண்ணி, கருவாட்டுக் குழம்பு தயார் பண்ணோம், தோசை ஊற்றி, அதையும் தயாரா வைச்சிருந்தோம். பிறகு பத்துமோ, பத்தாதோன்று உப்புமாவும் கிண்டி எல்லாருக்கும் வயிறார பசியாற்றினோம்.

வீட்டுக்கும் வர்ரவங்க யாரா இருந்தாலும், சாப்பிடற நேரத்துக்கு வந்துட்டாங்கன்னா, அவங்களுக்கும் பசியாத்தினாத்தான் எங்களுக்கு நிம்மதியா சோறு இறங்கும்.

அவர்கள் பேசி முடித்தவுடன் நானும்(எஸ்.பி.சாந்தி) நினைத்துப் பார்க்கிறேன். அய்யா பாண்டிச்சேரியில் மாறிய அத்தனை வீடுகளுக்கும் போயிருக்கிறேன். நான் அவர்கள் வீட்டில் ஒரு வேளையாவது உண்ணாமல் வந்ததில்லை. அதோடு, பல சமயங்களில் யாராவது கூடுதல் நண்பர்கள் வந்திருப்பார்கள்.

நான் ஒரு முறை சென்றபோது, திரு மாசிலாமணி, Ex.MLA, ஜெயங்கொண்டம் அவர்கள் குழந்தைகளுடன் பெண்ணின் திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். நல்ல வெய்யில் நேரம்.

சிறிது நேர உரையாடலுக்குப் பின் விருந்து உபச்சாரம் ஆரம்பித்து விடுகிறது. என்ன, பருப்பும் நெய்யும், வடையும், பாயாசமும் இல்லை. புளிக்குழம்பு,கீரைக்கூட்டு, வெண்டைக்காய் வறுவல், முட்டை என சாதாரண சாப்பாடுதான். ரொம்ப திருப்தியான சாப்பாடும்மா என்கிறார் விருந்தினர்.

அய்யா உடனே, “இங்கு வர்ரவங்க எல்லாருமே சாப்பாடு ருசியா இருக்குன்னு சொல்றாங்க. இது சாதாரண சாப்பாடுதானே” என்கிறார். சாப்படு என்பதின் ருசி சாப்பாட்டில் மட்டும் இல்லை. கூட இருக்கும் மனிதர்களின் கபடமில்லாத மனம், அவர்களின் இனிய உபசரிப்பு, பரிமாறும் விதம், உறுத்தல் இல்லாத, கலப்படமில்லாத எளிய பேச்சு,  இப்படி நிறைய்ய.

(19 செப் 2006 அன்று எடுத்த ‘அவள் விகடன்’ பேட்டியில் இருந்து ஒரு கேள்வி): இன்றும் உங்கள் மனைவியிடம் நீங்கள் வியந்து ரசிக்கும் விஷயம் எது?
கி.ரா: கவிஞர் நா.காமராசன் அவர்கள் தனது “படை பட்டாள”த்துடன் ஒரு நடைப்பயணம் வந்தார் (சுமார் 30 பேர் இருக்கலாம்). “ராத்திரி நாங்கள் இடைசேவல் தங்கல். எங்களுக்கு கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும் போதும் வேற எந்த விருந்தும் வேண்டாம் என்று துண்டுச்சீட்டு கொடுத்தனுப்பி இருந்தார்.

என் நண்பர் மத்தளம் பாறை ராமசாமி அவர்கள் அவருடைய தோட்டத்தில் விளைந்த வெள்ளைக் கேப்பை (ராகி) கொடுத்துனுப்பியிருந்தார். அன்றுதான் அதை மாவு அரைத்து வைத்திருந்தோம். ராமேஸ்வரம் பால் நெத்திலிக் கருவாடு வீட்டில் இருப்பு இருந்தது. ஒரு சிரமும் இல்லை; முப்பது பேருக்கு அளவில் களி கிண்டுவது தான் சிரமம். சொந்தக்காரப் பெண்கள் வந்து உதவினார்கள். காணுமோ காணாதோ என்று அரிசியைக் கொஞ்சம் நனைய வைத்து ஆட்டி ஒரு திடீர் உப்புமா செய்தாள். பிறகுதான் தெரிந்தது இதும் சரிதான் என்று. நடந்து வந்த பசி அவர்களுக்கு. கேப்பைக் களியும் கருவாட்டுக் கொழம்புக்கும் ஒரே கொண்டாட்டம்; உப்புமாவும் போன மூலை தெரியவில்லை. ஒரு தார் கதலிப்பழமும் சேர்ந்து கைகொடுத்தது.




பரிமேலழகர் உரை
[அஃதாவது, இரு வகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கு ஈதல் அன்மையானும், இடைநின்ற விருந்து ஓம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதல் ஆயிற்று. வேறாகாத அன்புடை இருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின்பின் வைக்கப்பட்டது.)

இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - கணவனும் மனைவிபும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு - விருந்தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே.

இக் காலத்திற்போல் உண்டிச் சாலைகளும் தங்கல் விடுதிகளுமில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவரு மின்மையின், இல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்றார். ' விருந்து ' பண்பாகு பெயர்.

மணக்குடவர் உரை
இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.

மு.வரதராசனார் உரை
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

பொருள்: இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - (ஒருவன்) இல்லின்கண் தங்கி (பொருளைக்) காத்து வாழ்த லெல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு- விருந்தினரைப் பேணி (அவருக்கு) உதவி செய்தற் பொருட்டு.

அகலம்: எல்லாம் என்பது ஈண்டு எஞ்சாப் பொருட்டாயதோர் உரிச்சொல். பொருள்+து = பொருட்டு. பொருட்டு ‡ பொருளையுடையது. ‘விருந்து’ ஆகுபெயர், அதனை உடையார்க்கு ஆயினமையால்.

கருத்து: இல்லின்கண் வாழ்வது விருந்தினரைப் பேணுதற்கே.

English Meaning - As I taught a kid - Rajesh
For the married couple, who "live" their lives, one of their duties is hospitality. They have to warmly receive guests (mainly sages, saints, elders, friends and whoever coming hungry) and serve them with food. The couple is engaged to themselves. But they shouldn't be selfish. They have to serve the needy with their hospitality.

Questions that I ask to the kid
What is the main duty of married couple? 
Is marriage meant to be a selfish, taking care of themselves?