Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

மனத்துக்கண் மாசிலன் ஆதல்

குறள் 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
மனது மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
மனத்துக்கண் - மனதின் கண்; மனசாட்சி
மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.
இலன் - இல்லை என்று
ஆதல் - ஆகுதல்
அனைத்து - மற்ற அனைத்து 
அறன் - ஆபரணங்கள்,
ஆகுல - ஆகுலம் - மனக்கலக்கம்; ஆரவாரம் (பேரொலி; பகட்டு துன்பம்)
நீர - nīra   s. (pl.) (நீர்மை) those which have properties, குணத்தையுடையன.
பிற - மற்றவை

முழுப்பொருள்
வாழ்வில் ஒருவன் வெளியே உள்ள நீதிமன்றங்களில் தன்னை நல்லவன் என்று நிருபிக்கலாம். நம்மை முழுவதும் அறிந்த நமது வீட்டு மனிதர்களைக் கூட ஏமாற்றி நல்லவன் என்று காட்டிக்கொள்ளலாம். ஒருவேளை தவறு என்று நிருபிக்கப்பட்டால் கூட வெளியே தப்பித்து செல்லலாம்.

ஆனால் தன்னுடைய சொந்த மனசாட்சியில் அது நடக்காது. தன் மனதிற்கு தெரியும் தான் செய்தது தவறா நன்றா என்று. எங்கு ஓடினாலும் மனதில் இருந்து தப்பவே முடியாது. ஆதலால் தான் திருவள்ளுவர் சொல்லுகிறார் தன் மனதிற்கு மாசு இல்லை என்று தெரிந்தால் அதுவே அனைத்திலும் சிறந்த அறம். மற்ற அனைத்தும் தேவையில்லாத ஆபரணங்களே. மற்ற அனைத்தும் வெறும் சத்தமே.

புற வாழ்க்கையை மேன்படுத்துவதைவிட அக வாழ்க்கையை மேன்படுத்துவது மிக மிக அவசியம். அகவாழ்க்கை சீரானால் புறவாழ்க்கை தானாக சீராகும் அகவாழ்க்கையில் மேன்மை உயர்வை தரும். ஆதலால் குழந்தைகளுக்கு சிறிய வயதில் அறத்தை விதைத்தால் அவர்களின் வாழ்வு மேன்மை பெற நல்ல தொடக்கமாக அமையும்.

ஒருவரின் ஆத்மசக்தி/ஆதம்ஷக்தி மனம் தூய்மையாக இருக்கும்பொழுது வரும். ஒருவரின் ஆத்மசக்தி ஒருவரை தீயவழிகளில் இருந்து விலக்கியோ அல்லது சீக்கிரமாக மீட்டெடுத்தோ நல்வழியில் செலுத்தும். ஆனால் அதற்கு மனதில் நல்லெண்ணங்களை விதைக்கவேண்டும். 

மனதை தூய்மையாக வைத்துக்கொள்வதே ஒருவரின் அறம். தூய்மையான மனமே உண்மையான ஆபர்ணம். மற்றவையெல்லாம் வெற்று சத்தங்களே.

இந்த கடைசி வரி ‘ஆகுல நிர பிற’ (மற்ற அனைத்தும் சத்தமே, மற்றவை எல்லாம் வெற்று ஆபர்ணங்களே) தனை பல இடங்களில் நாம் மனதில் சொல்லிக்கொண்டால் எளிய விஷயங்களை அற்ப விஷயங்களை நாம் கடந்து செல்லலாம்.

திருவள்ளுவர் பல இடங்களில் இதனை ஒட்டிய பொருளை கூறி உள்ளார். உதாரணமாக:
குறள் 293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்




மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன் - அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர - அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய; (குற்றம் - தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையான் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் - ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது; பிற ஆகுல நீர - மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.

மனம் தூய்மையாயிருப்பின் அதன் வழிப்பட்ட முக்கரண வினைகளும் தூய்மையாயிருக்குமாதலின், மாசிலா மனமே அறத்திற்கு அடிப்படை என்றவாறு. மனம் தூயதாயிருப்பின் வெளிக்கோலம் வேண்டாததாயும், தீயதாயிருப்பின் வெளிக்கோலம் பிறரை ஏமாற்றுவதாயுமிருத்தலின், இருவழியும் பயனின்மை நோக்கி வெளிக் கோலத்தை வீண் ஆரவாரமென்றார். 'ஆதல்' வியங்கோளுமாம்.

மணக்குடவர் உரை
ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

சாலமன் பாப்பையா உரை
மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: மனத்துக்கண் மாசு இலன் ஆவது அனைத்து(ம்) அறன் ‡ உள்ளத்தின்கண் குற்றம் இல்லாதவனாய்ச் செய்யப்படுவது அனைத்தும் அறமாம்; பிற ஆகுல நீர‡ மனத்துக்கண் குற்ற முள்ள வனாய்ச் செய்யப் படுவன துன்பம் தருவன(வாகிய மறங்களாம்).

அகலம்: அனைத்தும் என்பதன் முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. தாமத்தர் பாடம் நீர்மை. மற்றை உரையாசிரியர்கள் நால்வர் பாடம் ‘மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்’. அதற்கு அவர்களுரை, (அறஞ்செய்வான்) தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆகுக. அவ்வளவே அறம்.(ஒருவன் தன்) மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆதல் ஓர் ஒழுக்கம் ஆகுமே யன்றி அறமாகாது. என்னை? அறம் என்பது ஓர் உயிர்க்கு நன்மை பயக்கும் ஒரு செயல். அது பற்றியே, ஆசிரியர் ‘அறவினையோவாதே செல்லும் வாயயல்லாஞ் செயல்’, ‘அன்றறிவாமென்னா தறஞ் செய்க’, ‘வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின்’, ‘செயற்பால தோறும் அறனே’ என்று கூறியுள்ளார். அன்றியும், ‘மனத்தின்கண் மாசிலனாதலே அறம்’ என்று கூறின், பற்றுள்ள முடையார் ஈகை முதலிய அறங்களைச் செய்யாது விடுதற்கு அக்கூற்றை ஒரு மேற்கோளாக எடுத்துக்காட்ட முற்படுவர். நன்று புரியாமைக்கு மேற்கோளாக எடுத்துக் காட்ட உதவும் ஒரு வகை மனோ நிலையை அறம் என்று ஆசிரியர் கூறார். ஆகலான், ‘மாசில னாத லனைத்தறன்’ என்பது ஏடு பெயர்த்தெழுதியோனால், அல்லது கால அளவில் சிதைந்துபோய்ப் பின்னர் ஊகித்து எழுதப்பட்ட வற்றால் நேர்ந்த பிழை எனக் கொள்க.

கருத்து: குற்றம் அற்ற மனத்தோடு செய்யப்பட்ட வினைகளெல்லாம் அறமாம்.


Thirukkural - Management - Thoughts
A spotless, nonviolent, positive, pure, and immaculate thought is the symbol of righteousness. If a person is pure internally, his external actions will be virtuous, asserts Kural 34. This is also the quality of righteousness. If a person's thoughts are lofty, the other things become secondary.

A spotless mind is virtue's sum
All else is empty noise.

If our thoughts are negative and our acts are apparently positive, those apparently positive acts are considered exhibitionism. That is sheer pretension. When there is incongruity between our thoughts and our actions, others can read our thoughts since we cannot hide our thoughts. Face is the index of mind is still true.

English Meaning - As I taught a kid - Rajesh
One can hide from their friends and family but they can never hide from their conscience. They should always do what their conscience thinks is right.  Rest are all noise. One can prove himself correct to the external court. One can act like a nice person in front of his family, friends and relatives. Even if caught, one can escape or plea for pardon. However, One can never escape the court inside a person's heart. 

So, if one doesn't have wrong or impure thoughts in mind, then that is Truth / Modesty / Moral. Rest of the honorable tiles, wealth  etc. are all just glittering jewels of no value. The key word here is ஆகுல நீர பிற - rest of things are just noise. We should be true to our heart. Our thoughts, efforts, deeds should be Truthful.

Questions that I ask to the kid
From whom you cannot escape when you did a mistake? Why? 

No comments:

Post a Comment