Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இல்லாரை எல்லாரும் எள்ளுவர்

குறள் 752
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை 
எல்லாரும் செய்வர் சிறப்பு.
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள்
இல்லாரை  - பொருள் இல்லாதவர்
எல்லாரும் - எல்லோரும், எல்லா மக்களும்
எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.
எள்ளுவர்  - இகழ்வார், கீழே தள்ளுவார்கள்
செல்வரை - பொருட்செல்வம் உள்ளவரை
எல்லாரும் - எல்லோரும், எல்லா மக்களும்
செய்வர் - செய்வார்கள்
சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.
சிறப்புச்செய்தல் - ஒப்பனைசெய்தல்; போற்றுதல்; விழாக்கொண்டாடுதல்.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

முழுப்பொருள்
இக்குறளுக்கு எல்லா உரைகளும் சொல்லும் பொருள் பொருள்/பணம்/செல்வம் இல்லாதவர்களை இவ்வுலகம் இகழும், கீழே தள்ளும். ஆனால் பணம் உள்ளவர்களை போற்றும். மேலோட்டமாக பார்த்தால் இதை சட்டென்று ஏற்றுக்கொள்ளத் தூண்டும். ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்தால் அவ்வாறு இல்லை என்பதே உண்மை. உதாரணமாக, ஊரில் உள்ள பணம் படைத்தவர்களை எல்லோரும் போற்றுவர். ஆனால் உண்மையிலேயே அவர் ஒரு அயோக்கியர் என்று தெரிந்தால் அவர் செல்வந்தவர்களாக இருந்தாலும் அவரை நாம் இகழ்வோம். அதே போல ஒருவர் ஏழ்மை நிலையில் வாழலாம். ஆனால் அவரிடம் பேசி அவருடைய நற்பண்புகளையும் அப்படிப்பட்ட ஏழ்மையிலும் அவர் உழைப்பிலும் நேர்மையிலும் அன்பிலும் தவறாதவர் என்று அறிந்தால் எல்லோரும் அவரை போற்றுவர். ஆதலால் செல்வம் என்பது வெறும் பணம் ஆகாது.

பொருள் என்ற சொல்லுக்கு உண்மை, செயல், மெய்மை, நன்மதிப்பு, அறிவு, கொள்கை, அறம், வீடுபேறு, பொன் என்று பலவற்றை அர்த்தமாக கூறலாம். ஆதலால் இப்பொருள்களை இல்லாதவரை எல்லோரும் இகழ்வர். இப்பொருள்களை உள்ளவரை எல்லோரும் சிறப்பு செய்வர்.

சிறப்பு என்னும் சொல்லிற்கு பகட்டு என்ற பொருளும் உண்டு. அவ்வாறு எடுத்துக்கொண்டால் இக்குறளின் பொருள் ->  பொருள் (பணம்) இல்லை என்றால் எல்லோரும் முகத்து நேரே மட்டும் தான் இகழ்வார்கள். ஆனால் தீயவழியில் செல்வம் ஈட்டியவரை நன்மதிப்பு இல்லாத செல்வந்தரை எல்லோரும் பகட்டு செய்வர். அதாவது பெருமை செய்வது போன்று ஒப்பனை செய்வர். புறம் பேசுவர்.  அது இன்னும் கேவலம்.

கி.வா.ஜ-வின் ஆராய்ச்சிப் பதிப்பிலே பல இலக்கியப் பாடல்களில் ஒத்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதை சுட்டியுள்ளார். நாலடியார், அப்பர் தேவாரம், கம்ப இராமாயணம், பழமமொழி என்று பல இலக்கிய மேற்கோள்கள் இருந்தும், முற்றுக் கருத்தையும் கூறும், கீழ்வரும் பழமொழிப் பாடல் கவனிக்கத்தக்கது, படிக்கும் வழியே பொருள் விளங்க எழுதப்பட்ட பாடல்.

முட்டின் றொருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல் (பழமொழி 59)

(முட்டின்றி ஒருவர் – உச்சமிது என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகுதியாக, குறைவின்றி;
அட்டு இற்று – சமைக்கப் பட்ட உணவு தீருமட்டும்;
கெட்டார்க்கு – செல்வமிழந்து வறுமையுற்றவர்க்கு;
நட்டார் – நண்பர்கள்)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இலாஅர்க் கில்லைத் தமர்” (நாலடி 283)

“வாழாதார்க் கில்லைத் தமர்” (நாலடி 290)

“மாடு தானது இல்லெனின் மானுடர்
பாடு தான்செல்வா ரில்லை” (அப்பர்.கொண்டீச்சரம் 3)

“மறுமை கண்டமெய்ஞ் ஞானியர் ஞாலத்து வரினும்
வெறுமை கண்டபின் யாவரும் யாரென விரும்பார்” (கம்ப.வருணனை.14)

“அருளுடைய யாரும்மற் றல்லா தவரும்
பொருளுடை யாரைப் புகழாதார் இல்லை” (பழமொழி 269)

“உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே - வண்டாய்த்
திரிதரும் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்” (நாலடி 284)

“முட்டின் றொருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல்” (பழமொழி 59)

“பொருள்கை யுண்டாய்ச் செல்லக் காணின்
போற்றியென் றேற்றெழுவர்
இருள்கொள் துன்பத் தின்மை காணின்
என்னேஎன் பாரும் இல்லை” (திருவாய். 9.1:3)

“செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்துநீர் மாந்தர் போல
அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகல மாய வெல்லாம்
நல்கூர்ந்தார்க் கில்லை சுற்றம் என்றுநுண் ணுசுப்பு நைய
ஒல்கிப்போய் மாடம் சேர்ந்தா ரொருதடங் குடங்கைக் கண்ணார்” (சீவக.2535)

“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே” (ஆதி உலா.136)

பரிமேலழகர் உரை
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத்தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர். (உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு.).

மணக்குடவர் உரை
பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர்; பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர். இது சிறப்பெய்தலும் பொருளுடைமையாலே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.

சாலமன் பாப்பையா உரை
பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.

ஆற்று பவர்க்கும் அரண்பொருள்

குறள் 741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
[பொருட்பால், அரணியல், அரண்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஆற்று - ஆற்றுதல் - āṟṟu-   5 v. intr. 1. To becomestrong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. Tobe sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 

ஆற்றுபவர்க்கும் - வலிமையடைபவர்களுக்கும், 

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அஞ்சித் - அஞ்சித்து - பயப்படுதல்

தற் -தன்னை

போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்
போற்றுபவர்க்கும் - 

பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

முழுப்பொருள்
தன்னுடைய நாட்டை, தன்னுடைய படைகளை வலிமையாக வளர்த்துக்கொண்டு, பிற நாடுகள் மீது போர் தொடுக்கும் போது அரண் என்னும் பாதுகாப்பு கோட்டை நாட்டிற்கு ஒரு கவசமாய் அமையும். குறிப்பாக திடீர் தாக்குதல்களின் போது ஒரு கவசமாய் அமையும். அதே போல பிற நாடுகள் தன் நாட்டின் மீது போர் தொடுத்தால், அவர்களை நாட்டின் எல்லையிலேயே தடுக்க ஒரு நல்ல தற்காப்பாய் அமையும். அவர்கள் உள்ளே வந்து நாசம் செய்து நாட்டின் வளங்களை அழிக்கும் முன்பே எல்லையிலேயே அவர்களை தடுப்பது நல்லது. ஆதலால் சிறந்த ஒரு அரண் நாட்டிற்கு இன்றியமையாதது.

திரிகடுகம், வேந்தர்களுக்கு தேவையான அங்கமாக அரணைக்கூறுகிறது. “...............பலர் தொகினும் 
எத்துணையும் அஞ்சா எயில் அரணும் ….
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு” (திரி.100)

புறநானூற்றுப் பாடலொன்று, “பாடல் சான்ற விறல் வேந்தனும்மே வெப்பு உடைய அரண் கடந்து துப்பு உறுவர் புறம் பெற்றிசினே” (புறம். 11) என்று பிறநாட்டின்மீது படையெடுத்துச் சென்று பகைவரது அரணை அழித்து வென்ற செய்தியைக் கூறுகிறது. மற்றொரு புறநானூற்றுப் பாடல், “ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி…” (புறம் 92) என்று நெடுமான் அஞ்சியின் வீரத்தைச் சொல்லுங்கால் கூறுகிறது. “நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,ஆங்கு இனிதிருந்த வேந்தனொடு…..” (புறம். 36) என்று பிரிதொரு புறப்பாடல் பாடுகிறது. சங்க இலக்கியங்களில் அரண் என்பதன் சிறப்பைப் பாடும் பாடல்கள் நிறையவே உள்ளன.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி , அந்நாட்டிற்கு உறுப்பாய் அடங்குமாயினும், பகைவரால் தொலைவு வந்துழி , அது தனக்கும் அரசன்றனக்கும் ஏமமாதற் சிறப்புப் பற்றிப் பிறிதோர் அங்கமாக ஓதப்பட்ட அரண் இவ்வதிகாரத்தால் கூறுகின்றார்.]

ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் - மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் சிறந்தது; அஞ்சித்தன் போற்றுபவர்க்கும் அரண் பொருள் - அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது; (பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வெளவாமல் வைத்துச் செல்ல வேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தார் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது; பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவதாம்; ஆதலால் அதனைச் செய்யவேண்டும்.

மு.வரதராசனார் உரை
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.

English Meaning - As I taught a kid - Rajesh
A fortress is vital for those 
1) on the offensive - i.e., when the country's well armed and well prepared military goes on war with other countries, fortress serves as a protection.

2) on the defensive to protect themselves - i.e., when the enemies attack the country without notice, fortress helps to stop the enemies at the fortress itself so that a) enemies don't spoil our resources and people and b) it gives an opportunity for the soldiers in the fortress to fight with the enemies and save the country. 

Hence, a fortress is inevitable. 

Questions that I ask to the kid
Is fortress vital? Why?
In today's times, is fortress inevitable? Why?

இருபுனலும் வாய்ந்த மலையும்

குறள் 737
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் 
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு
[பொருட்பால், அரணியல், நாடு]

பொருள்
இரு - இரண்டு
புனலும் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய்குறுகியகுப்பிகளில்நீர்மப்பொருளைஊற்றஉதவுங்கருவி.
இருபுனலும் - தேங்கும் நீரும், ஓடும் நீரும் இருபுனல் எனப்படும்
வாய்ந்துகொள்(ளு)-தல் - vāyntu-koḷ-   v. tr. வாய்¹- +. To obtain by conquest;வென்று கைப்பற்றுதல்
வாய்ந்த  - உயர்ந்த
மலையும் - மலை - malai   n. perh. மல்லல். [K. male.] 1.Hill, mountain; பருவதம். மலையினு மாணப் பெரிது(குறள், 124). 2. Collection, aggregation; ஈட்டம்.சொன்மலை (திருமுரு. 263). 3. Abundance, bigness, as a mountain; மிகுதி. Colloq.
வருபுனல் - s. A river, the water of a river, ஆறு. (சது.) வருமட்டும்--வருமளவும். Until coming
வல் - வலிமையான
அரணும் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்
நாட்டிற்கு - நாடு நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.
உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.

முழுப்பொருள்
1) ஆறு என்ற இயற்கையாக ஓடும் நீரும், அதனை அணைகளிலும் குளங்களிலும் ஏரிகளிலும் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் தேக்கி வைத்துக்கொள்ளுவது ஒரு நாட்டிற்கு தேவையானது. அது மட்டும் இன்றி நிலத்தடி நீரும் இன்றியமையாதது. 2) அது போல உயர்ந்த மலைகளும் தேவையானது. மலை என்பது பல இயற்கைவளங்களை ஒரே இடத்தில் கொண்டாது. வேர்களில் இருந்து சொட்டு சொட்டாக வீழ்ந்து ஆறாக உற்பத்தியாக தேவையான மரங்களை கொண்டது மலை. 3) வருபுனல் எனப்படும் பொழியும் மழை எனப்படுவது. மழை பெய்ய வேண்டும் என்றால் மரங்கள் வேண்டும். ஆதலால் ஒரு நாட்டில் மரங்கள் இருக்க வேண்டும். 4) மக்களை எதிரிகளிடம் இருந்து காக்க வல்ல கோட்டை சுவர் அரணாகும். இது திடமான சுவர் என்று மட்டும் அல்லாது, வலிமையான படைகளும் அடங்கும்.

மேற்சொன்ன நான்கும் (இருபுனலும் உயர்ந்த மலையும் பொழியும் மழையும் வலிமையான அரண்களும்) ஒரு நாட்டிற்கு தேவையான உறுப்புகள் ஆகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடாக்குக: அவை நாட்டிற்கு உறுப்பாதலால். இஃது இவை ஐந்துங்குறையாமல் வேண்டுமென்றது.

மணக்குடவர் உரை
இருபுனலும் - 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயமாம். (ஈண்டுப் புனல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண் -ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.) .

மு.வரதராசனார் உரை
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.

இருபுனல்: தேங்கும் நீரும், ஓடும் நீரும் இருபுனல் எனப்படும்.

‘இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு’

என்பது நாடு அதிகாரத்துக் குறள். இருபுனலும் உயர்ந்த மலையும் பொழியும் மழையும் வலிமையான அரண்களும் நாட்டின் உறுப்புகள் என்பது பொருள்.

வகையறிந்து வல்லவை வாய்சோரார்

குறள் 721
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் 
தொகையறிந்த தூய்மை யவர்.
[பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை]

பொருள்
வகை  - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognize, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).

வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு; val   s. strength, power, பலம்; 2. quickness, speed, சீக்கிரம்; 3. a hillock, மேடு; 4. dice, சூதாடுகருவி.; val   n. cf. vala. 1. Strength, power;வலிமை. (சூடா.) 2. Ability; திறமை. 3. Hillock;mound; மேடு. (உரி. நி.) 4. Dice; சூதாடுகருவி.(தொல். எழுத். 373.) 5. Bodice; முலைக்கச்சு. (யாழ்.அக.); val   n. val. Quickness, speed;விரைவு. (சூடா.)

அவை - அப்பொருள்கள்

வாய் - உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு; பாண்டம் முதலியவற்றின் திறந்த மேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

சோரார் - சொல்லில் குற்றங்களைந்து பேசுவர்
சொல்லின் - சொல்லில்

தொகை - கூட்டம்; சேர்க்கை; கொத்து; மொத்தம்; பணம்; எண்; கணக்கு; தொக்குநிற்றல்; திரட்டுநூல்; விலங்குமுதலியவற்றின்திரள்; கூட்டல்; தொகுத்துக்கூறுகை; வேற்றுமைத்தொகைமுதலியதொடர்சொற்கள்.
அறிந்த - அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognize, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.
தூய்மையவர் -தூய்மையாளர்

முழுப்பொருள்
ஒரு கூட்டம் என்பது பலவகையில் இருக்க கூடியது. ஒரு சில கூட்டங்களில் கற்றோர் இருப்பர். ஒரு சில கூட்டங்களில் சாமனியர்கள் இருப்பார். ஆகவே ஒரு அவையில் பேசுபவர் அச்சபையில் உள்ள மக்களின் திறனையும், ஆற்றலையும், அவர்களின் நேரத்தின் மதிப்பையும் அறிந்து இருக்க வேண்டும்.  அவர்கள் முன்னே பேசும் பொழுது தவறான சொற்களை பயன்படுத்தக்கூடாது.  அவைக்கேற்ற சொற்களை கவனமாக தேர்ந்தெடுத்து அவற்றை கோர்த்து சரியாக பேச வேண்டும். ஏனெனில் தவறான சொற்கள் தவறான புரிதலை கொடுக்கும். நேரத்தை வீண் அடிக்கும். அப்படி பேசினால் அச்சபையில் மறுபடியும் பேசும் வாய்ப்பு கிடைப்பது எளிது அல்ல. ஆதலால் அவை திறன் அறிந்து அதன் வல்லமையை கருத்தில் கொண்டு அவர்களின் நேரம் பொன் போன்றது என்று எண்ணி அவற்றை வீண் செய்யக்கூடாது என்று அஞ்சி சரியான சொற்களை கொண்டு பேச வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , சொல்லுதற்குரிய அவையினையறிந்து சொல்லுங்கால் அதற்கு அஞ்சாமை . அதிகார முறைமையும் இதனானே விளங்கும் .]

வகை அறிந்து வல்லவை வாய் சோரார் - கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை அறிந்து வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தான் வழுப்படச் சொல்லார்; சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் தொகையெல்லாம் அறிந்த தூய்மையினை உடையார். (இருந்தாரது வன்மை அவைமேல் ஏற்றப்பட்டது. 'வல்லவை' என்பதற்கு, தாம் 'கற்றுவல்ல நூற்பொருள்களை' என்று உரைப்பாரும் உளர். 'அச்சத்தான்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'சொல்லின் தொகை' 'தூய்மை' என்பவற்றிற்கு (குறள் 711) மேல் உரைத்தாங்கு உரைக்க.).

மணக்குடவர் உரை
தப்பினால் வருங் குற்றவகையை யறிந்து கற்றுவல்ல அவையின்கண் அஞ்சுதலால் சோர்வுபடச் சொல்லார், சொற்களின் தொகுதியையறிந்த தூய்மையுடையவர். இது மேற்கூறியவற்றால் கற்றவர் தப்பச் சொல்லாரென்று அக்கல்வியால் வரும் பயன்கூறிற்று.

மு.வரதராசனார் உரை
சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.

Thirukkural - Management - Public Speaking - Audience Analysis
A powerful, persuasive, and convincing public speaker is one who knows the quality of his audience, the occasion of the speech and the impact of his choice of words on his audience, and presents them accordingly. That sort of speaker will never, even unconsciously or by mistake, use words that bring him dishonour, instructs Kural 721.

The expert speaker will make no slip Addressing an assembly he has gauged. So, know your audience, understand the occasion of your speech, choose powerful and meaningful words, and speak accordingly to inspire. 

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்

குறள் 720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]

பொருள்
அங்கணம் - சேறு; முற்றம் இருதூண்நடுவிடம்; சாக்கடை மதகு நீர்த்தாரை
அங்கணத்துள் - அங்கணத்திற்குள்; சேறு, சாக்கடை போன்ற நீர்த்தாரையினுள்

உக்க - ukku-   5 v. intr. உட்கு-. [M.ukku.] 1. To rot, decay, moulder; மக்கிப்போதல். உக்கினமரம். 2. To pine away, waste away;மெலிதல். அவள் துக்கத்தால் உக்கிப்போகிறாள். Loc.  
அமிழ்து - உணவு; ஆவின்பால்; நெய் மோர் நீர் மழை தேவருணவு வேள்விப்பொருள்களில்மிஞ்சியவை; இரவாதுவந்தபொருள்; நஞ்சுபோக்கும்மருந்து; இனிமை அழிவின்மை; வீடுபேறு நஞ்சு பாதரசம்
அற்று - aṟṟu   அன்-று. n. One of suchquality, impers. sing.; அத்தன்மையது. 
அற்றால் - போன்றது
தம் - tam   part. தாம் Flexional increment generally used along with the nouns ofthird pers. pl.; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை தம்மிடை வரூஉம்படர்க்கை மேன (தொல். எழுத். 191).  
கணத்தர் - கணத்தார் - ஊர்க்காரியநிருவாகிகள்.
அல்லார் - அல்லாதவர்கள்
முன் - முன் நின்று
கோட்டி - துன்பம்; பைத்தியம்; பசுடி; நிந்தை; சபை; குழு; கூட்டம்; பேச்சு; அழகு; ஒருவரோடுகூடியிருக்கை; கோபுரவாயில்; மனைவாயில்; கிட்டிப்புள்; விகடக்கூத்து.
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
நாம் ஒரு தகவலை அல்லது தர்க்கத்தை அல்லது அவிப்ராயத்தை பற்றி மற்றவரிடத்தில் பேசுகிறோம் அல்லது ஒரு குழுவிலே விவாதிக்கிறோம் என்றால் குறைந்தபட்சம் அந்த தகவலை/ தர்க்கத்தை திறந்த மனதுடன் கேட்டு உள்வாங்கிக்கொள்ளும் நபர்களை நம் முன்னே பெற்று இருக்க வேண்டும் இன்னும் சொல்லப்போனால் அதனை புரிந்துக்கொள்ளகூடிய அறிவும் ஆற்றலும் உடைய கற்றோரிடத்தில் தான் கூற வேண்டும். அப்படி அல்லாமல் கற்றோர் அல்லாதவரிடத்திலும் இதனை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றலும் எண்ணமும் இல்லாதவரிடம் உரையாடிக்கொண்டு இருப்பது என்பது நம் வீட்டின் முற்றத்தில் உள்ள சாக்கடையில் (தனக்கும் பிறருக்கும் பயன் படக்கூடிய) அமிர்தத்தை கலப்பது போல் ஆகும். அந்த அமிர்தம் வீண் தான் ஆகும். அப்படி கலப்பது நமக்கும் அவப்பெயரை விளைவிக்கும். ஏன் என்றால், நம்மை பார்க்கும் பிறர், ஏன் இப்படிபட்ட கற்றோர் ஒரு மூடரிடம் போய் இதெல்லாம் சொல்லி தன்னுடைய நேரத்தையும் அறிவையும் வீண் செய்துக்கொள்கிறார் என்று ஏசுவார்கள். அது மட்டும் இன்றி நாமும் இந்த நேரம் விண் ஆகிவிட்டதே என்று வருந்துவோம்.

எல்லாரிடமும் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. கேட்கும் செவியும் கேட்கும் மனமும் எல்லாருக்கும் வாய்க்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கேட்பதைப்போல் கேட்பார்கள், நீங்கள் அகன்று சென்றதும் நீங்கள் சொன்னவற்றிலிருந்தே அவதூறு உருவாக்குவார்கள்.

நன்றாக யோசித்துப்பாருங்கள், தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நபரிடம் உங்கள் அந்தரங்கங்களைக் கொட்டியதுதான் இன்று நீங்கள் படும் பல பாடுகளுக்குக் காரணம். 

தகுதியில்லாரிடத்து சிறந்த பொருளைச் சேர்ப்பதை பலரும் கூறியுள்ளனர். “புல்லிடை உகுத்த அமுதேயும் போல்” என்பார் கம்பர், மந்தரைப் படலத்தில். “கல்வியினாய கழிநுட்பம் கல்லார்முன் சொல்லிய நல்லவும் தீயவாம்” என்கிறது பழமொழிப் பாடல். நன்மையறியாத கீழ்மக்கட்கு அறமுறைமை அறிவுறுக்குமிடத்து அது, பன்றிக்குக் கூழ்வார்க்குந் தொட்டியில் தேமாம்பழத்தைச் சாறு பிழிந்தாற்போல் தகுதியற்றதாகும்; அன்றியும், ஒரு மலைப்பாறையின்மேல் அறையப்படும் மரத்தாற் செய்யப்பட்ட முளைக்குச்சி நுனி சிதைந்து அதனுள் இறங்கிப் பொருந்தாமைபோல அவ்வறவுரையும் அவர் செவிக்கு நுழைந்து பொருந்தாதனவாகும் என்கிறது கீழ்வரும் நாலடியார் பாடல்.

பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்தற்று - சொல்லின், அது தூயதல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும். ('கொள்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்' (குறள் 196) என்பது போல் நின்றது. 'சொல்லின்', 'அது' என்பன அவாய் நிலையான் வந்தன. பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார், அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையோடு இயையாமை நோக்கிற்றிலர். சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு தோன்ற 'உக்க அமிழ்து' என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண் ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல இகழப்படுவர்; தம்முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின். கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு இஃது இகழப்படுவரென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
  அறிவதற்கு முயலாத மூடர் முன்னே
  அறிவுடையார் பேசாமை பெருமை தரும்
  அதை விடுத்து அவர் முன்னர் பேசல் என்றல்
  அறிவுடையார் பெருமையெல்லாம் குலைத்துவிடும்
  அறிவுடையார் மூடர்கள் முன் பேசல் என்றல்
  அங்கணத்தில் அமிழ்தம் அதைக் கொட்டினாற் போல்
  அறிவுடையார் அதை அறிவார் பேச மாட்டார்
  அதுவே தான் அவர் தமக்குச் சிறப்பளிக்கும்

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
நால்வர் ஐவராகக் கூடிப் பேசும் பழக்கமுள்ளவர்கள் என்றால் நீங்கள் குழுமிப் பேசுவது சபை கூடிப் பேசுவதற்கு நிகரானது. பெருத்த சபை கூடி அங்கே நீங்கள் பேசுவதற்கு உரிய வாய்ப்பு எப்போதும் அமையாது. குடும்பத்திற்குள், நண்பர்களுக்குள், விருந்தாடிச் சென்றவிடத்தில், அலுவலகத்தில், விட்டேத்தியான விடுமுறை தினங்களில் நாம் பலரோடு கூடியிருக்கிறோம். உலகப் பொருள் முதல் சொந்த இடர்வரை அனைத்தைப்பற்றியும் தொட்டுப் பேசிச்செல்வோம். உறவுகளால் நண்பர்களால் அல்லது மற்ற அந்நியர்களால் கூடும் சபையில் நீங்கள் ஒன்றை விவரித்துச் சொல்லும்போது உங்களுக்கே புரிபடாத ஒன்றின்மீது புதிய திறப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட சபையில் நீங்கள் அங்கத்தவர் என்றால் கொடுத்து வைத்தவர். 

என் பள்ளித் தோழன் சந்திரமோகன்பற்றி முன்னர் எழுதிய பதிவுகள் சிலதில் கூறியிருக்கிறேன். எதைப்பற்றியும் அவனிடம் சொல்லலாம். பொறுமையாகக் கேட்டுக்கொண்டு நம் பிரச்சனையின் வேர் என்னவென்று நமக்கே புரியும்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிடுவான். நான் பணிக்குச் செல்லத் தொடங்கிய புதிதில் ‘ஒரு வீடு கட்ட வேணும்டா’ என்று அவனிடம் புலம்பிக்கொண்டே இருந்தேன். ‘வீடு கட்டனும்னா என்ன பண்ணனும் தெரியுமா ?’ என்று திருப்பிக் கேட்டான். நான் விழித்தேன். ‘முதல்ல ஒரு இடத்த வாங்கனும். கோவணத்தூண்டு எடமானாலுஞ் சரி. அதை வாங்கிப் போட்டுடனும். எடத்தை வாங்கிப் போட்டுட்டா எப்ப வேணாலும் வீட்டக் கட்டிக்கலாம். சவுரியப்படறபோது ஒவ்வொரு செங்கல்லா அடுக்கி மெதுவா வீட்டக் கட்டு. யாரு கேட்பா ?’ என்றான். அவன் சொன்ன கணத்தில் எனக்கு எல்லாம் விளங்கியது. உடனடியாக மனையொன்றை வாங்கினேன். மற்றவை எல்லாம் தானாய்க் கனிந்தன. 

எங்கள் இலக்கிய நண்பர்களுக்குள்ளே ஓர் அருமையான சபை இருக்கிறது. தமிழினி பதிப்பக எழுத்தாளர்கள் அதில் அங்கத்தவர்கள். நண்பர் க.மோகனரங்கன் அக்குழுவில் கட்டாயம். நாங்கள் என்ன சொன்னாலும் அவர் இறுதியாக என்ன சொல்கிறார் என்பதைக் கவனிப்போம். எதிர்பாராத ஒரு திசையிலிருந்து தம் தரப்பைச் சொல்லுவார். ஆயிரம் பக்கங்களுக்கு எழுதுவது எப்படி இயல்கிறது என்று ஒருமுறை கேட்டேன். ‘யானையை ஒரேயடியா முழுங்கப் பார்த்தா அது எப்பவும் முடியாது. ஆனா, கொஞ்சங் கொஞ்சமா கடிச்சு சாப்பிட்டா சுத்தமாச் சாப்பிட்டுடலாம்’ என்றார். தினமும் முடிகின்ற அளவுக்கு எழுதிக்கொண்டிருப்பதில்தான் அந்தச் சாதனை உருவாகிறது. ‘ஈன்ற நாள்முதல் கன்றுக்குட்டியைத் தோளில் தூக்கிப் பழகிவந்தால் அது வளர வளர ஒரு காளையைத் தோளில் தூக்கும் பலம் பொருந்தியவர் ஆகிவிடுவோம்’ என்பார். 

அதனால்தான் ‘அவையறிதல்’ என்ற அதிகாரத்தையே திருவள்ளுவர் அமைத்திருக்கிறார். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் தரம் மிக முக்கியம். எல்லாரிடமும் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. கேட்கும் செவியும் கேட்கும் மனமும் எல்லாருக்கும் வாய்க்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கேட்பதைப்போல் கேட்பார்கள், நீங்கள் அகன்று சென்றதும் நீங்கள் சொன்னவற்றிலிருந்தே அவதூறு உருவாக்குவார்கள்.

நன்றாக யோசித்துப்பாருங்கள், தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நபரிடம் உங்கள் அந்தரங்கங்களைக் கொட்டியதுதான் இன்று நீங்கள் படும் பல பாடுகளுக்குக் காரணம். 
 அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் 
அல்லார்முன் கோட்டி கொளல். 

அங்கணம் என்றால் சேறு, பண்ட பாத்திரங்களைக் கழுவுகிற வீட்டுப் பகுதி, சாக்கடை. 

உக்க என்றால் ‘பதமழிந்த, கெட்டுப்போன.’ 

அமிழ்து அற்றால் - அமிழ்தத்தைப் போன்றது.

தம் கணத்தார் - தம்மைப்போன்ற இணையான நிறையறிவு பெற்றிருப்பவர்கள்.

கோட்டி என்பதற்குக் ‘கூடியிருக்கும்போது பேசும் பேச்சு’ என்று பொருள். (அதனால்தான் தனியாகப் பேசுகின்றவனை அவனுக்குக் கோட்டி பிடித்துவிட்டது, கோட்டிக்காரன் என்கிறோம். அதாவது அவன் முன் சபை கூடியிருப்பதைப்போன்ற பிரம்மை தோன்றி பேசிக்கொண்டேயிருக்கிறான்.) 

தன்னையொத்த நிறையறிவு இல்லாதவர்கள் முன் பேசுவது சேற்றில் அமிழ்தத்தை ஊற்றி அதன் பதத்தை அழிப்பதைப் போன்றது.

முகம்நோக்கி நிற்க அமையும்

குறள் 708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி 
உற்ற துணர்வார்ப் பெறின்
[பொருட்பால், அமைச்சியல், குறிப்பறிதல்]

பொருள்
முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.
நோக்கி - பார்த்து
நிற்க -நடக்க வேண்டும், பயில வேண்டும்; நில்
அமையும் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்
அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.
நோக்கி - பார்த்து
உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.
உணர்வார்ப் - உணர்வு - உணர்தல் - uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல் முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect,consider, contemplate; கருதுதல் (திவா.) 3. Toexamine, test, observe, scrutinize; ஆராய்தல் உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 4. Toexperience, as a sensation; அனுபவித்தல் ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ 11,1, 1). 5. To realize, conceive, imagine; பாவித்தல் அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ 9, 2, 3).  
பெறின் - பெற்றால்

முழுப்பொருள்
அகத்தில் உள்ளது முகத்தில் தெரியும் என்பது நாம் அறிந்த வாய்மொழி. ஆனால் அது எல்லோருக்கும் புரிவதில்லை என்பதே உண்மை.

நாம் மனதிற்குள் நினைப்பவற்றை வாய்வழியாக சொல்ல தயக்கம் கொள்வோம். அல்லது சொல்ல மாட்டோம். பிறர் சோர்ந்துவிட கூடாது என்று சொல்ல மாட்டோம். நம்முடைய நிலை பிறருக்கு தெரியக் கூடாது என்பதற்காக ஒரு வேடம் இட்டுக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது போன்று நடந்துக்கொள்வோம். ஆனால் எவ்வளவு நடித்தாலும் நம் அகம் ஓரிடத்திலாவது காட்டிக்கொடுத்துவிடும். இது சோர்வான தருணங்களுக்கு மட்டும் அல்ல, மனதில் சில நேரம் சிலர் வஞ்சகமா நினைப்பர், பொறாமை படுவர், கோபம் கொள்வர். ஆதலால் இவர்களின் முகத்தில் இருந்து அதனை அறிந்துக்கொள்வது மிக கடினம். ஆனால் முடியாதது அன்று.

ஆதலால் மற்றவர் முகத்தை மட்டும் நோக்கி அவர் உள்ளதில் இருக்கும் உண்மையான எண்ணங்களை குறிப்பறிந்து ஒருவரால் உணரமுடியும் என்றால் அப்படி பட்டவரை நம்முடன் உறுதுணையாக பேற்றால் மிக சிறந்தது. இங்கே முக்கியமான ஒன்று உணர்தல். உண்மை அறிந்துக்கொள்ளுதல் மட்டும் போதாது. அதனுடைய பொருள், வலி ஆகியவற்றை உணரக்கூடிய கண்ணோட்டமும், பிறரிடத்தில் அன்பும் வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க் கற்றந்தான்
வார்த்தையின் உணர்த்துதல் அரிதன் றோமனம்
வேர்த்தனள் வெதும்பினள் மெலிந்து சோர்ந்தனள்
பார்த்தனள் ஒருத்திதன் பாங்க னாளையே” (கம்ப.உண்டாட்டு.54)

“கண்டபின் இளைய வீரன் முகத்தினாற் கருத்தை யோர்ந்த
புண்டரி கக்க ணானும்” (கம்ப.உருக்காட்டு.76)

பரிமேலழகர் உரை
அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் - குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம்நோக்கி நிற்க அமையும் - அவர் தன் முகம் நோக்கும் வகை தானும் அவர் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும். ('உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து செல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இயல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவைமூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முகத்தை நோக்கி நிற்க அமையும்; தன் மனத்தை நோக்கி அறியலுற்றதனை அறியவல்லாரைப் பெறின். இஃது அமாத்தியர் குறிப்பை அரசனும் அறியவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

சாலமன் பாப்பையா உரை
தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.

மன்னர் விழைப விழையாமை

குறள் 692
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்
[பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]

பொருள்
மன்னர் - மன்னன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.
விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி.
விழைப - விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc.
விழையாமை - விழையாது இருத்தல்; விரும்பாதிருத்தல்
மன்னரான் - அவ்வாள்வோனாலேயே
மன்னியர் - மதிக்கத்தக்கவர்.
மன்னிய - மதிக்க தக்க
ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து
தரும் - தரும்

முழுப்பொருள்
மன்னருடன் சேர்ந்தொழுகும் ஒருவருக்கு, முக்கியமாக அமைச்சருக்கு முக்கியமான இரு நெறிகளை திருவள்ளுவர் கூறுகிறார்.

1) மன்னர் விரும்புவற்றை மட்டும் சொல்லகூடாது. மன்னர் விரும்பாதவற்றை சொல்லாதிருத்தல் கூடாது. உதாரணமாக ஒரு நாட்டு அரசருக்கு தன்னுடைய நாடு கணினி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கவேண்டும் என்று ஆசைக்கொண்டு இருக்கிறார் என்றால், அவரிடம் அதற்கான முதலீடுகளை பற்றி கூறினால் அவர் பெரும்பாலும் உள்ளக்கிளர்ச்சியினால் அதற்கு சம்மதிப்பார். அவர் சம்மதிப்பார் என்பதற்காக அதனை பற்றி மட்டும் கூறக்கூடாது. அச்சமயத்தில் வாழ்வாதாரத்திற்கான தேவையான விவசாயம், சுகாதாரம் போன்ற பிரச்சனைகளை பற்றியும் பேச வேண்டும்.  ஆதலால் மன்னர் விழையாத செய்திகளைக்கூட மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மை என்றால் அதனை பற்றி மன்னரிடத்தில் அவசியம் கூற வேண்டும்.

2) அமைச்சர் என்பவர் அரசரிடத்தில் மதிக்கதக்க ஆக்கம் தரும் செயல்களை பற்றி பேச வேண்டும். ஒரு அரசர் என்பவர் மக்களின் தலைவர். அவர் மக்களின் நலனிற்காக செயல்படுகிறார், மக்களின் நாட்டின் வளங்களை பயன் படுத்துகிறார். ஆதலால் மக்களிடம் மதிக்கதக்க ஆக்கம் தரும் செயல்களை பற்றி அரசரிடம் பேச வேண்டும். 

அப்படிச்செய்தால் தான் அரசருக்கும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும். 

(பி.கு: இங்கே அரசர் என்பவரிடத்தில் தலைவர் என்றும் நாடு என்னும் இடத்தில் அலுவலகம் என்றும் கொள்ளலாம்.)

இதை ஆசாரக்கோவை பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்பப் பெருகியக் கண்ணுந் – திறப்பட்டார்
மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின்
மன்னிய செல்வங் கெடும்.

அதாவது, அறிவுடையோர் தம்மாட்டுச் செல்வம் மிகப் பெருகிய விடத்தும், அறத்தினையுங் கல்யாணத்தினையும் முயற்சியையும் வீட்டினையும் அரசர் செய்வதினும் மேம்படச் செய்யாதொழிக; செய்வாராயின் தம்மாட்டுற்ற செல்வம் கெடும். இக்குறளின் விளக்கமாகவே இப்பாடல் உள்ளது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“பெரியார் உவப்பனதாம் உவவார்” (ஆசாரக் 64)
“அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்பப் பெருகியக் கண்ணும் - திறப்பட்டார்
மன்னரின் மேம்படச் செய்யற்க செய்பவேல்
மன்னிய செல்வம் கெடும்” (ஆசாரக் 85)

பரிமேலழகர் உரை
மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும். (ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து,அவர்தாமே எல்லாச் செல்வமும் நல்குவார் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
எல்லார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டவையன்றி மன்னரால் விரும்பப்பட்டவற்றை விரும்பாதொழிக; அவ்விரும்ப¬£ம அம்மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தருமாதலான். அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம். இஃது அவற்றைத்தவிர்தல் வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்

குறள் 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள்
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி
உடைமை - உடையனாகும் தன்மை; உடைமைப் பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை
ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.
வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்
அவாம் -
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.
உடைமை - உடையனாகும் தன்மை; உடைமைப் பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை
தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராச தூதர்தன்மை; ஒரு நூல் வகை; கூழாங்கல்; தூது மொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.
தூது - s. Message, communication, er rand, notice, tidings, செய்தி. 2. Embassage. embassy, commission, mission, தானாபதித்து வம். (Sa. Dûtya.) 3. (fig.) A negociator in love-intrigues, &c., messenger, ஒற்றன். 4. (fig.) Ambassador, envoy, தானாபதி. 5. A kind of poem representing a lady sending messages to her lover by her female companion, or by a bird, a beetle, &c., ஓர்பிரபந்தம்; [ex Sa. Du. to go.] (c.)

உரைப்பான் - உரைத்தல் ; ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

முழுப்பொருள்
ஒரு தூதர் எனப்படுபவர் அடிப்படையில் மக்களுக்கும் அரசருக்கும் அல்லது இரு நாட்டு அரசருக்கும் நடுவில் இருக்கும் ஒரு தகவல் தொடர்பாலர் என்று அறிவோம். ஆனால் அதனை தாண்டி அவர்களுக்கென்று பண்பென்று சில உண்டு. 

1) முதலாவதாக - அன்புடைமை. தன் நாட்டு மக்களிடமும், மற்ற உயிரினங்களிடமும் நேசம் இருக்க வேண்டும். அவர்களை நேசித்தால் தான் அவர்களின் நலன் கருதி மன்னரிடம் உறவாட முடியும். தூதர் என்பவர் மக்கள் நலனில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.  

2) இரண்டாவதாக - ஆன்ற குடிப்பிறத்தல் - நல்ல / மாட்சிமை பொருந்திய குடிப் பிறப்பு

3) மூன்றாவதாக - வேந்தவாம் பண்புடைமை - ஒரு தூதர் பரந்து விரிவாக பயணம் செய்து மக்களின் எண்ணங்களை அறிந்து அதனை மன்னரிடத்தில் கூறுபவராக இருக்க வேண்டும். ஒரு வேந்தரின் நேரம் விலைமதிக்க முடியாதது. ஆதலால் ஏது முக்கியமாக சொல்ல வேண்டுமோ அதனை தரவரிசைப் படுத்தி மன்னர் முழுவதும் உணர்ந்துக்கொள்ளும் அளவிற்கு சரியான சொற்களை கொண்டு சொல்ல வேண்டும். அதற்கான தக்க நேரத்திலும் சொல்ல வேண்டும். அப்படி இருந்தால் அரசர் விரும்பும் தூதுவராக அவர் இருப்பார்.

ஒப்புமை
தூதன் இலக்கணம்
அன்புடைமை ஆய்ந்த அறிவுடைமை இற்பிறப்பு
நன்குடைமை நல்ல நயனுடைமை - நன்கமைந்த
சுற்ற முடைமை வடிவுடைமை சொல்வன்மை
கற்றடங்கல் தூதின் கடன் (பாரத வெண்பா)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , சந்தி விக்கிரகங்கட்கு வேற்று வேந்தரிடைச் செல்வாரது தன்மை . அவ் விரண்டனையும் மேல் ' வினை செயல் வகை ' என்றமையின் , இஃது அதன்பின் வைக்கப் பட்டது . தான் வகுத்துக் கூறுவான் , கூறியது கூறுவான்எனத் தூது இருவகைப்படும் . அவருள் முன்னோன் அமைச்சனோடு ஒப்பான் ஆகலானும் , பின்னோன் அவனிற் காற்கூறு குணம் குறைந்தோன் ஆகலானும் , இஃது அமைச்சியலாயிற்று .]


அன்பு உடைமை - தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை - அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு - தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம். (முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.) .


மணக்குடவர் உரை
அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.

மு.வரதராசனார் உரை
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

சாலமன் பாப்பையா உரை
நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.

செய்வினை செய்வான் செயன்முறை

குறள் 677
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை 
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள்
செய்வினை - வினை முதல் வினை; முற் பிறப்பில் செய்த கருமம்; பில்லி சூனியம்; செய்யுந் தொழில்; cey-viṉai   n. id. +. 1. Work,undertaking; செய்யுந் தொழில் செய்வினை தூய்மை(குறள், 455). 2. Karma; முற்பிறப்பிற் செய்த கருமம் சீலமில்லாச் சிறியனேனுஞ் செய்வினையோ பெரிதால் (திவ். திருவாய், 4, 7, 1). 3. (Gram.) Verbin active voice; வினைமுதல்வினை. (இலக். கொத்.67.) 4. Witchcraft, sorcery; பில்லிசூனியம் Colloq.

செய்வான் - செய் வான்

முறை - muṟai   s. manners, morals, legality, ஒழுக்கம்; 2. order, regularity, கிரமம்; 3. good disposition, குணம்; 4. relationship by blood or marriage, உறவு; 5. repetition, number of times repeated, தரம்; 6. turns by which duty or work is done, வரிசை; 7. complaint, முறைப்பாடு; 8. a book, புத்த கம்; 9. antiquity, பழமை.
செயல்முறை - ஒரு செயலை செய்ய வேண்டிய ஒழுங்கு
அவ் வினை - அச்செயலை

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை
அறிவான் - அறிந்து அதன் படி நடப்பவன் / ஒழுகுபவன்
உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்வது என்பது அவ்வளவு எளிது அல்ல. தனக்கான செயலாக இருந்தால் அது நமது நேரம், ஆற்றல், உழைப்பு என்று பல்வேறு தளங்களில் முக்கியமானது. அதேப் போல பலர் ஈடுபட்டு இருந்தால் அதில் பலருடைய நேரம், ஆற்றல், உழைப்பு அடங்கி உள்ளது. அதனை நாம் போற்ற வேண்டும். இல்லை என்றால் பிற்காலத்தில் அவர்களும் (இதனை பார்த்த) மற்றவர்களும் நமக்கு உதவ மாட்டார்கள்.

ஆகவே ஒரு செயலை செய்யும் முன் அதனை பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனுடைய நன்மை, தீமை, பயன், தேவையான வளங்கள், பொருள்கள், உழைப்பு, மக்கள், அறிவு, திறன், தொழில்நுட்பம் என்று பலவகையான கோணங்களில் அச்செயலை பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அதேப்போல ஒரு செயலை எப்படிச்செய்ய வேண்டும் என்பது முக்கியம். அதற்கென்று ஒரு ஒழுங்கு, முறை, பக்குவம், வரிசை என்று இருக்கும். அதனை அறிந்து இருக்க வேண்டும். இதற்கு எல்லாம் ஏது துணையாக இருக்கும் என்றால் அச்செயலை முன்னரே செய்த செயல்வீரர்களிடம் பேசுவதே ஆகும். அப்படி அவர்களிடம் பேசி அவர்களின் அறிவை , அனுபவத்தை பாடமாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே விவேகம் ஆகும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“மெய்ந்நீர ராகி விரியப் புகுவார்க்கும்
பொய்ந்நீர ராகிப் பொருளை முடிப்பார்க்கும்
எந்நீர ராயினும் ஆக அவரவர்
தந்நீர ராதல் தலை” (பழமொழி 395)


பரிமேலழகர் உரை
செய்வினை செய்வான் செயன் முறை - அவ்வாற்றால் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல்- அவனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல். ('அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு முதலிய தூக்கலையும். உள் அறிவான் - முன் செய்து போந்தவன். அவன் கருத்து: அவன் செய்து போந்த உபாயம். அதனையறியவே தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது அவ்வினையினது உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக் கோடல்.

மு.வரதராசனார் உரை
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.

Thirukkural - Management - Leadership
Leaders may have shortcomings. A leader need not know everything he is expected to know. Every  leader has to seek counsel from people who are experts in their respective fields. Kural 677 instructs us that a leader, before executing  an action, must get suggestions, directions,  and guidance from other people who have thorough knowledge and experience related to that particular action. In modern management that practice is called seeking expert advice.

The way to do a thing is to get
Inside an insider.

The thought presented in Kural 677 is related to mentoring. Every leader needs a mentor who can mentor his leadership skill. Studies of successful leaders prove that acclaimed leaders have benefitted from the guidance from their mentors. The practice of mentoring has been in all fields, viz., religion, politics, education, and business. Refer to the Practice on ‘Mentoring' to learn more. 

கலங்காது கண்ட வினைக்கண்

குறள் 668
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
திட்பம் - உறுதி; வலிமை; மனவுறுதி; சொற்பொருள்களின்உறுதி; காலநுட்பம்
வினைத்திட்பம் - செயலின் கண் உறுதி

கலங்கு-தல் - kalaṅku-   5 v. intr. [T. kalagu,K. Tu. kalaṅku, M. kalaṅṅu.] 1. To be stirredup, agitated, ruffled, as water; நீர் முதலியனகுழம்புதல். கலங்க முந்நீர் கடைந்து (திவ். பெரியதி.6, 5, 1). 2. To be confused, confounded; மனங்குழம்புதல். கலங்காமற் காத்துய்க்கும் (நாலடி, 59). 3.To be abashed, embarrassed, perplexed; மயங்குதல் காமநலியக் கலங்கி (பு. வெ 11, பெண்பாற். 1).
கலங்காது - மனங்குழம்பாமல், மயங்காமல்
கண்ட - தான் கண்ட,  தான் எண்ணிய, தன் நினைத்தை
வினைக்கண் - செயலின் கண்; செயலை செய்யும் பொழுது
துளங்குதல் - அசைதல்; நிலைகலங்குதல்; தளர்தல்; வருந்துதல்; ஒலித்தல்; ஒளிசெய்தல்
துளங்காது - அசையாது, நிலைகலங்காது, தளராது
தூக்கம் - உறக்கம்; அயர்வு; சோம்பல்; வாட்டம்; முகச்சோர்வு; காற்றுமுதலியவற்றின்தணிவு; விலையிறக்கம்; ஆபரணத்தொங்கல்; காதணி; அலங்காரத்தொங்கல்; காண்க:தூக்கணங்குருவி; காலநீட்டிக்கை; நிறுப்பு; விலையேற்றம்; உயரம்.
கடிந்து - கடிதல் - ஓட்டுதல், நீக்குதல்; அழித்தல்; கண்டித்தல்; கோபித்தல்; விரைதல்; கொல்லுதல்; வெட்டுதல்; அடக்குதல்.
செயல் - செய்ய வேண்டும்

முழுப்பொருள்
நாம் ஒரு செயலை எடுக்கும் பொழுது அதனை பற்றிய ஒரு குறிக்கோள், அதற்கான கனவு(vision) இருக்கும். பின்பு அச்செயலை செய்ய தேவையான வற்றை அறிந்து தெளிந்து இருப்போம். அதுவே முதல் படி.

அச்செயலை எடுத்தப்பின்பு எந்த ஒரு நிலையிலும் மனம் தளறாமல், மனம் குழம்பாமல், எந்த ஒரு பழக்கத்திற்கும் பொருளுக்கும் மயங்காமல், கவனம் சிதராமல் எடுத்த செயலின் கண் செல்ல வேண்டும். முக்கியமாக சற்றும் தளராமல் அதில் இருந்து நீங்காமல் சோர்வில்லாமல் விரைவாக தாமதிக்காமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் செயற்க்கூறிய பயனை அடைவோம். 

இக்குறளில் நாம் முக்கியமாக இரண்டு விஷயங்களை பார்க்க வேண்டும். (1) ஒன்று மயக்கம், கலக்கும், குழப்பம் அல்லாமல் ஒரு செயலை செய்ய வேண்டும் 2) சோர்வு இல்லாமல் ஒரு செயலை தாமதிக்காமல் விரைவாக செய்ய வேண்டும். சோர்வு என்பது கொடிய நோய் என்பதை அறிக.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தௌ¤ந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க. (கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின்,தௌ¤ந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.).

மணக்குடவர் உரை
கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க. இது விரைந்து செய்யவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும்

குறள் 653
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]

பொருள்
ஓ - பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; தெரிதல்குறிப்பு; நினைவுக்குறிப்பு; கொன்றை; பிரமன்; ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை; பிரிநிலை, ஐயம், அசைநிலைஇவற்றைக்காட்டும்ஓர்இடைச்சொல்.

ஒ - பத்தாம்உயிரெழுத்து; ஒவ்வுஎன்பதன்பகுதி; ஐம்பறவைகளுள்மயிலைக்குறிக்கும்எழுத்து

ஓஒ! -  அதிசயக்குறிப்பு, வியப்புக்குறிப்பு

ஓஒதல் - ஓவுதல் - ஒழிதல், நீங்குதல்; நீக்குதல்; முடிதல்.

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

ஒளி  - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.

மாழ்கும் - மாழ்குதல் - யங்குதல்; கெடுதல்; சோம்புதல்; கலத்தல்.

செய்வினை - வினைமுதல்வினை; முற்பிறப்பில்செய்தகருமம்; பில்லிசூனியம்; செய்யுந்தொழில்.

ஆஅதும் - ஆகுதல், (எண்ணிய திண்ணிய முடிதல்) உயர்வான மேன்மையைக் கொடுத்தல்
என்னுமவர் - வேண்டுமென கருதுவோர்

முழுப்பொருள்

ஒருவர் வாழ்நாளில் தவிர்க்க வேண்டும் என்றால் அது தன்னுடைய புகழையும் மாண்பையும் அறிவையும் நன்மதிப்பையும் கெடுக்கும் செயல்களும், எண்ணங்களும் ஆக தான் இருக்க முடியும் என்கிறார் திருவள்ளுவர். இதனை ஆக்கப்பூர்வாமான செயல்களை விரும்பவரும், வாழ்வில் மேன்மை தரும் செயல்களை வேண்டுபவரும் விரும்புவர். 

உனக்கு புகழ்வெளிச்சம் வேண்டும் என்றால் உனது செயல்களை சரியாக தேர்வு செய் செவ்வென செய்.


என்று முன்னரும் வள்ளுவர் கூறியிருந்தார்.

சும்மா சோம்பேறியாக ஒரு செயலையும் செய்யாது இருத்தலைக்கூட ஒருவர் வாழ்வில் இருந்து நீக்க வேண்டும். ஏனெனில் செயலின்மை புகழையும் மேன்மையையும் குறைக்கும். சான்றோர் ஏசுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆதும் என்னும் அவர் - மேலாகக்கடவோம் என்று கருதுவார்; ஒளி மாழ்கும் வினை செய் ஓஒதல் வேண்டும் - தம் ஒளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க. ('ஓஒதல்வேண்டும்' என்பது ஒரு சொல் நீர்மைத்து. ஓவுதல் என்பது குறைந்து நின்றது. ஒளி - தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல். 'செய்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை என வினைத் தொகையாக்கியவழிப் பொருளின்மை அறிக. ஒளிகெட வருவது ஆக்கம் அன்று என்பதாம்.).

மணக்குடவர் உரை 
தமக்குப் புகழ்கெடவரும் வினையைச் செய்தலையும் ஆக்கங் கருதுவார் தவிர்க. இது முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்க என்றது.

மு.வரதராசனார் உரை
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.