Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இருபுனலும் வாய்ந்த மலையும்

குறள் 737
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் 
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு
[பொருட்பால், அரணியல், நாடு]

பொருள்
இரு - இரண்டு
புனலும் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய்குறுகியகுப்பிகளில்நீர்மப்பொருளைஊற்றஉதவுங்கருவி.
இருபுனலும் - தேங்கும் நீரும், ஓடும் நீரும் இருபுனல் எனப்படும்
வாய்ந்துகொள்(ளு)-தல் - vāyntu-koḷ-   v. tr. வாய்¹- +. To obtain by conquest;வென்று கைப்பற்றுதல்
வாய்ந்த  - உயர்ந்த
மலையும் - மலை - malai   n. perh. மல்லல். [K. male.] 1.Hill, mountain; பருவதம். மலையினு மாணப் பெரிது(குறள், 124). 2. Collection, aggregation; ஈட்டம்.சொன்மலை (திருமுரு. 263). 3. Abundance, bigness, as a mountain; மிகுதி. Colloq.
வருபுனல் - s. A river, the water of a river, ஆறு. (சது.) வருமட்டும்--வருமளவும். Until coming
வல் - வலிமையான
அரணும் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்
நாட்டிற்கு - நாடு நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.
உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.

முழுப்பொருள்
1) ஆறு என்ற இயற்கையாக ஓடும் நீரும், அதனை அணைகளிலும் குளங்களிலும் ஏரிகளிலும் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் தேக்கி வைத்துக்கொள்ளுவது ஒரு நாட்டிற்கு தேவையானது. அது மட்டும் இன்றி நிலத்தடி நீரும் இன்றியமையாதது. 2) அது போல உயர்ந்த மலைகளும் தேவையானது. மலை என்பது பல இயற்கைவளங்களை ஒரே இடத்தில் கொண்டாது. வேர்களில் இருந்து சொட்டு சொட்டாக வீழ்ந்து ஆறாக உற்பத்தியாக தேவையான மரங்களை கொண்டது மலை. 3) வருபுனல் எனப்படும் பொழியும் மழை எனப்படுவது. மழை பெய்ய வேண்டும் என்றால் மரங்கள் வேண்டும். ஆதலால் ஒரு நாட்டில் மரங்கள் இருக்க வேண்டும். 4) மக்களை எதிரிகளிடம் இருந்து காக்க வல்ல கோட்டை சுவர் அரணாகும். இது திடமான சுவர் என்று மட்டும் அல்லாது, வலிமையான படைகளும் அடங்கும்.

மேற்சொன்ன நான்கும் (இருபுனலும் உயர்ந்த மலையும் பொழியும் மழையும் வலிமையான அரண்களும்) ஒரு நாட்டிற்கு தேவையான உறுப்புகள் ஆகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடாக்குக: அவை நாட்டிற்கு உறுப்பாதலால். இஃது இவை ஐந்துங்குறையாமல் வேண்டுமென்றது.

மணக்குடவர் உரை
இருபுனலும் - 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயமாம். (ஈண்டுப் புனல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண் -ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.) .

மு.வரதராசனார் உரை
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.

இருபுனல்: தேங்கும் நீரும், ஓடும் நீரும் இருபுனல் எனப்படும்.

‘இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு’

என்பது நாடு அதிகாரத்துக் குறள். இருபுனலும் உயர்ந்த மலையும் பொழியும் மழையும் வலிமையான அரண்களும் நாட்டின் உறுப்புகள் என்பது பொருள்.

No comments:

Post a Comment