Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

026 புலான்மறுத்தல்

பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - புலான்மறுத்தல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

குறள் 252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு

குறள் 253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்

குறள் 254
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்

குறள் 255
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு

குறள் 256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

குறள் 257


குறள் 260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்

பதிவு வரிசை


படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்

குறள் 253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் 
உடல்சுவை உண்டார் மனம் 
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
படை - paṭai   n. படு²-. [K. paḍe.] 1.Army; சேனை (பிங்.) படையியங் கரவம் (தொல்.பொ. 58). 2. Forces for the defence of akingdom, of six kinds, viz., mūla-p-paṭai,kūli-p-paṭai, nāṭṭu-p-paṭai, kāṭṭu-p-paṭai,tuṇai-p-paṭai, pakai-p-paṭai;பகைப்படை என்ற அறவகைச்சேனை. (குறள், 762, உரை ) 3. Mob, rabble, crowd; திரள் Colloq.4. Relations and attendants; பரிவாரம் அவன்படைகளுக்கு யார் போட்டுமுடியும்? 5. Weapons,arms of any kind; ஆயுதம் தொழுதகை யுள்ளும்படையொடுங்கும் (குறள், 828). 6. Instrument,implement, tool; கருவி 7. Means, agency;சாதனம். செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள்,555). 8. (Jaina.) Traid of excellent things.See இரத்தினத்திரயம் படை மூன்றும் (சீவக. 2813).9. A sledge-like weapon, used in war; முசுண்டி (பிங்.) 10. Ploughshare; கலப்பை (பிங்.) படையுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு 7). 11.Saddle; குதிரைக்கலனை. பசும்படை தரீஇ (பெரும்பாண். 492). 12. Covering and tra  

கொண்டார் - உடையவர்

நெஞ்சம் - neñcam   n. id. [M. neñca.]1. See நெஞ்சு தாமுடைய நெஞ்சந் துணையல்வழி(குறள், 1299). 2. Love; அன்பு நெஞ்சத் தகநகநட்பது நட்பு (குறள், 786).

போல் - pōl   part. போல்-. [T. pōlu, K.pōl, M. pōluga, Tu. hōlu.] 1. A particle ofcomparison; ஓர் உவமவுருபு. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்து (குறள், 118). 2. An expletive; ஓர் அசைச்சொல். (திருக்கோ. 222.)

நன்று - naṉṟu   n. நன்-மை. 1. That whichis good, goodness; நல்லது அங்கிது நன்றிது நன்றெனு மாயை யடங்கிடு மாகாதே (திருவாச. 49, 8).(சூடா.) 2. Excellence; சிறப்பு 3. Greatness,largeness; பெரிது (தொல். சொல் 343.) 4. Virtue,merit; அறம் நட்டார் குறை முடியார் நன்றாற்றார்(குறள், 908). 5. Happiness, felicity; இன்பம் நன்றாகு மாக்கம் பெரிதெனினும் (குறள், 328).6. Good deed; நல்வினை சான்றோர் செய்த நன்றுண்டாயின் (புறநா. 34). 7. Benefit; உபகாரம் தக்கார்க்கு நன்றாற்றார் (நாலடி, 327). 8. Prosperity; வாழ்வினாக்கம். நன்றாங்கா னல்லவாக் காண்பவர் (குறள், 379). 9. Heaven; சுவர்க்கம் வாள்வாய் நன்றாயினு மஃதெறியாது விடாதே காண் (கலித்.149). 10. Expr. signifying approval; அங்கீகாரக்குறிப்பு. நன்றப்பொருளே வலித்தேன் (சீவக. 1932).

ஊக்காது - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயலுதல்; கற்பித்தல்; நினைத்தல்; ஏறுதல்; நோக்குதல்.

ஊக்காது

ஒன்றன் - ஒன்று - oṉṟu   n. [T. oṇḍu, K. ondu, M.onnu, Tu. onji.] 1. The number one; க என்னும் எண் (திவ். திருச்சந். 7.) 2. A person ofconsequence, a person worthy of regard; மதிப்புக்குரிய பொருள் ஒறுத்தாரை யொன்றாக வையாரே(குறள், 155). 3. Attaining salvation; வீடுபேறு (திவா.) 4. Union; ஒற்றுமை வேந்தர் வேந்த னிதயமு மொன்றாய்நின்ற வியற்சையை (பாரத. சூதுபோர்.7). 5. Truth; வாய்மை ஒன்றுரைத்து (கம்பரா.கிளை. 24). 6. Semen; இந்திரியம் இரண்டடக்கார்ஒன்று பலகாலமும் விட்டிடார் (திருவேங். சத. 74). 7.Euphemism for urination; சிறுநீர் ஒன்றுக்குப்போய்வா. Colloq. 8. (Gram.) Singular numberof the impersonal class; அஃறிணை யொருமைப்பால். (நன். 263.) 9. That which is imcomparable; ஒப்பற்றது. -- conj. Or; else; விகற்பப்பொருளைக்காட்டும் இடைச்சொல் ஒன்று தீவினையைவீடு, ஒன்று அதன்பயனை நுகர் 

உடல் - uṭal   n. prob. உடன் [T. oḍalu, K.oḍal, M. Tu. uḍal.] 1. Body; உடம்பு (பிங்.) 2.Consonant; மெய்யெழுத்து உடன்மேலுயிர்வந்து(நன். 204). 3. Birth; பிறவி தோலி னுடையாலுந்தீரா துடல் (சைவச. பொது 403). 4. Means, instrument; சாதனம் பசுவதனுஸந்தானத்துக் குடலாமே (ஈடு, 1, 2, 8). 5. Gold; பொன் (திவா.) 6.The wherewithal, money; பொருள் விளக்கேற்றற்குடலில னாப (பதினொ. திருத்தொண். 54). 7. Mainbody of a cloth, excluding the border spaces;ஆடையின் கரையொழிந்த பகுதி உடல் அரக்கு Colloq. 8. Texture of a cloth as judged by thewarp and woof; ஆடையினிழை. Colloq.

சுவை - ஐம் புலன் களுள் நாவின் உணர்வு, உருசி; இன்பம்; இரசம்; இனிமை; கவிதையின் இரசம்; சித்திரை நாள்.

உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

உண்டார் - உண்டவர்

மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

முழுப்பொருள்
போர்களத்தில் படைகொண்டவர்கள் பிற உயிர்கள் மீது இரக்கம் அற்றவர்கள். பிற உயிர்களை (எதிரி உயிர்களை) வெட்டி வீழ்த்துவது அவர்களுக்கு ஒரு வெற்றிச் சுவை. அவ்வெற்றியில் கள்வெறியும் உன்மத்தமும் அடைவர். அதில் அவர்கள் வாழ்நாளெல்லாம் திளைப்பர். அவ்வளவு ஏன், தன்மீது வாளின் வெட்டுகள் பட்டாலும், குண்டுகள் சீண்டினாலும், அதன் தழும்புகளை வீர அடையாளங்களாகவே பார்ப்பார்கள். அதற்காக மகிழ்ச்சி அடைவர். எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருப்பார்கள்

அதைப்போன்றவர்களே பிற உயிர்களின் (விலங்குகளின்) ஊணை/மாமிசத்தை உண்ணுபவர்கள். அவர்களுடைய மனமும் இரக்கமும் குற்ற உணர்ச்சியும் கருணையும் அற்றதாகவே இருக்கும்.



ஊனுண்ணுவார் மனம் நல்லதை நினையாததையத் திரிகடுகப்பாடல்,(74 “கொலைநின்று தின்றொழுகு வானும்பெரியவர் புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் – இல்லெனக்கொன்று ஈகென் பவனை நகுவானும் இம்மூவர் யாதும் கடைப்பிடியா தார்.” என்று சொல்லி, கொலைநின்று தின்றொழுகுதலை அறநெறி நில்லாரின் முதற்குற்றமாகக் கூறுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
படை கொண்டார் நெஞ்சம் போல் - கொலைக் கருவியை தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல, ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது - பிறி்தோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது. (சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்டல். இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஆயுதம் கையிற்கொண்டவர் நெஞ்சுபோல் நன்மையை நினையாது: ஒன்றினுடலைச் சுவைபடவுண்டார் மனம்.

மு.வரதராசனார் உரை
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

சாலமன் பாப்பையா உரை
கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.

English Meaning - As I taught a kid - Rajesh
The heart of one who has eaten and relished flesh, is like the heart of one leading an army: it cannot be compassionate; it is merciless. The person heading the army relishes killing the opponents, doesn't worry about the loss of lives of his own soldiers being killed during the battle. They wear such deaths as a badge of honor because they do not have any guilt. Similarly, people who eat and relish flesh of other creatures are not compassionate.

Questions that I ask to the kid
How do you describe the heart of one who has eaten and relished flesh, is like?

025 அருளுடைமை

பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - அருளுடைமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணும் உள

குறள் 242
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றால் 
தேரினும் அஃதே துணை

குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

குறள் 244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

குறள் 245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி

குறள் 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

குறள் 247

குறள் 250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லு மிடத்து

பதிவு வரிசை




அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த 
இன்னா உலகம் புகல்
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

சேர்ந்த - சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

நெஞ்சினார்க்கு - நெஞ்சத்தை உடையவர்க்கு

இல்லை - இல்லை

இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்

சேர்ந்த -  சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

புகல் - புகுகை; இருப்பிடம்; துணை; பற்றுக்கோடு; தஞ்சம்; உடம்பு; தானியக்குதிர்; வழிவகை; போக்கு; சொல்; விருப்பம்; கொண்டாடுகை; பாடும்முறை; வெற்றி; புகழ்; புரையுள்ளது.

முழுப்பொருள்
இருள் என்னும் அறியாமை என்னும் தீங்குதரும் இன்னா (துன்பமான) உலகம் ஆனது மிக கொடியது ஆகும். ஆனால் நெஞ்சத்தில் அருள் என்னும் கருணை, (பிறருக்கு) நல்வினை செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளோர்க்கு அத்தகைய இருண்ட உலகத்தில் இடம் இல்லை.

ஏனெனில் அறியாமை என்னும் இருள் அவர்கள் மனதில் இல்லை. அறிந்தும் மனதில் கருணை இல்லை என்றால் அவர்கள் மனதில் இருள் இருக்கிறது என்றே பொருள் (ஏனெனில் அறிந்ததை கடைப்பிடித்தால் தான் அறிதல்). ஒருக்கால் ஒரு நல்வினை ஆற்றும் பொழுது துன்பங்கள் வந்தாலும் அவர்களுக்கு வாழ்வின் மீது உள்ள நம்பிக்கை ஒளியாய் அவர்களை இருளில் (துன்பத்தில்) இருந்து விலக்கி ஊக்கம் தந்து முன்னே வழி நடத்தி காப்பாற்றும்.

இருள் இல்லையேல் அருள் உண்டு.
அருள் இல்லையே இருள் நிறைந்துவிடும்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.).

மணக்குடவர் உரை
அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.

மு.வரதராசனார் உரை
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

குறள் 232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]

பொருள்
உரை - urai   n. உரை&sup4;-. [K. ore, M. ura.]1. Speaking, utterance; உரைக்கை உரைமேற்கொண்டு (திவ். இயற். 1, 25). 2. Word, expression,saying; சொல் (திவா.) 3. Explanation, interpretation, commentary, exposition, gloss; வியாக்கியானம் உரையாமோ நூலிற்கு நன்கு (நாலடி, 319).4. Sound of a letter; எழுத்தொலி. (பிங்.) 5.Fame, reputation; புகழ் உரைசால் பத்தினிக்கு(சிலப். பதி 56). 6. Sacred writings, holy writ;ஆகமப்பிரமாணம். (சி. சி அளவை, 1.) 7. Roar,loud noise; முழக்கம் குன்றங் குமுறியவுரை (பரிபா.8, 35). 8. Mantra recited aloud; பிறருக்குக்கேட்கும்படி செபிக்கும் வாசக செபம் (சைவச.பொது. 151.)  

உரைப்பார் - உரைப்பவர்கள்; வியக்கியானம் செய்பவர்கள்; முழக்கமிடுவோர்

உரைப்பவை - உரைக்கை - விரித்துச்சொல்லுகை 

எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.

இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இரப்பார்க்கு - (பொருள்) வேண்டுபவர்க்கு

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

ஈவு - கொடை; நன்கொடைப்பொருள்; பங்கிடுகை; பிரித்துக்கண்டபேறு; ஒழிகை.

ஈவார் - கொடை அளிப்பவர்

மேல் - mēl   [T. K. mēlu, M. mēl.] n. 1.That which is above or over; upper side; surface; மேலிடம். ஒலை . . . தொட்டு மேற்பொறியை; மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

நிற்கும் - நிற்பது - niṟpatu   n. நில்-. The immoveables, as the vegetable kingdom; தாவரம் நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க (திருவாச. 3, 53).  

புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

முழுப்பொருள்
உரைப்பவர்கள் என்றால் முழக்கமிடுபவர்கள், எழுத்தின் மூலமாகவும் பறைசாற்றுபவர்கள் என்று அர்த்தம். அத்தகையவர்கள் பிறரிடமும் ஊர்மக்களிடமும் வரும் சந்ததியினரிடமும் மற்றொருவரைப் பற்றி கூறுவது ஒன்றை மட்டும் தான். அவர் செய்த கொடையை பற்றி மட்டும் தான். ஒரு பொருள் அல்லது உதவி வேண்டி இரந்தவருக்கு (இரக்கும் முன்னரே கூட) உதவி செய்து (கொடை அளித்து) செய்யும் கொடை வள்ளல் பற்றியே உரைப்பவர்கள் புகழ் பாடுவார். ஆதலால் பிறருக்கு உதவி செய்பவர்களின் மேல் என்றும் புகழ் வானம் போல் நிற்கும்.

பரிபாடல் திரட்டில் ஈவார்மேல் புகழ் நிற்றலை இவ்வாறு கூறப்படுகிறது: “ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும் சேய்மாடக்கூடல்”. “இருள் பொழியும் குற்றம் பலவரினும் யார்க்கும் பொருள் பொழிவார் மேற்றே புகழ்”. தண்டியலங்காரத்தில் மேற்கோள் பாடலாகச் கீழ்கண்ட செய்யுள் சொல்வது இக்கருத்தைத்தான்.

“வெய்ய குரல்தோன்றி, வெஞ்சினஏறு உட்கொளினும்,
பெய்யும் மழைமுகிலைப் பேணுவரால்; – வையத்து,
 இருள்பொழியும் குற்றம் பலவரினும், யார்க்கும்
 பொருள்பொழிவார் மேற்றே புகழ்”

புகழ் என்பது “உரையும்,பாட்டுமென” இருவகைப்படும். “உரையும் பாட்டும் உடையோர் சிலரே” என்னும் புறநானூற்று வரியும் அதையே சொல்கிறது. சொல்வழக்கில் சொல்வதும், புலவோர் பாடிப் புகல்வதும் புகழே என்பதால், பரிமேலழகர், “பாடுவார் பாடுவன எல்லாம் புகழாம் என்பதூஉம் பெற்றாம்” என்பார்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உரைப்பார் உரையுகந்து” (சுந்தரர்.அவிநாசி 4)

“ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும்
சேய்மாடக் கூடல்” (பரிபா.திரட்டு 11)

“கொடைப்பெரும் புகழார்” (திருவாய் 8.4:9)

“இருள்பொழியும் குற்றம் பலவரினும் யார்க்கும்
பொருள்பொழிவார் மேற்றே புகழ்” (தண்டி.47 மேற்)

பரிமேலழகர் உரை
உரைப்பார் உரைப்பவை எல்லாம் - உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் - வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம். (புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்(புறநா.27) அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும்,இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும், படவே 'பாடுவார் பாடுவன எல்லாம் "புகழாம் என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம் எல்லாம் சொல்லுக ; புகழ் ஈவார் மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.).

மணக்குடவர் உரை
சொல்லுவார் சொல்லுவனவெல்லாம் இரந்துவந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாநின்ற புகழாம்.

மு.வரதராசனார் உரை
புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

சாலமன் பாப்பையா உரை
சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

024 புகழ்

பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - புகழ்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு

குறள் 232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்

குறள் 233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்

குறள் 234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

குறள் 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது

குறள் 236


குறள் 239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா 
யாக்கை பொறுத்த நிலம்

குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 
வாழ்வாரே வாழா தவர்

பதிவு வரிசை


023 ஈகை

பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - ஈகை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

குறள் 222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

குறள் 223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள

குறள் 224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு

குறள் 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்


பதிவு வரிசை



சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

குறள் 230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]

பொருள்
சாதலின் - சாதல் - cātal   n. சா-. Death; இறப்பு சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும்(சீவக. 269).  ; iṟappu   n. id. 1. Transgression,trespass; அதிக்கிரமம் பொறுத்த லிறப்பினை யென்றும் (குறள், 152). 2. Going, passage, passing;போக்கு. (பிங்.) 3. Death; மரணம் (திருவாச. 5,12.) 4. Excess, abundance; மிகுதி (பிங்.) 5.That which is superior; உயர்ந்தபொருள். ஒப்பிறப்பில் வெங்கையுடையோய் (வெங்கைக்க. 75). 6.Heavenly bliss, emancipation; மோக்ஷம். இறுகலிறப்பென்னும் ஞானிக்கும் (திவ். திருவாய். 4, 1, 10).7. [M. iṟa.] Inside or under part of a slopingroof, eaves; வீட்டிறப்பு இறப்பிற் றுயின்று (திருக்கோ. 328). 8. (Gram.) past tense; இறந்தகாலம் இறப்பி னெதிர்வி னிகழ்வின் (தொல். சொல் 202).

இன்னாது - iṉṉātu   n. இன்னா-மை. 1.Evil; தீது பிறப்பின்னா தென்றுணரும் (நாலடி. 173).2. Pain; துன்பு (ஈடு.)  

இன்னாதது - துன்பமானது வேறு

இல்லை - இல்லை

இனிது - iṉitu   இனி-மை. n. 1. Thatwhich is sweet, pleasing, agreeable; இன்பந்தருவது. இனிதுறுகிளவியும் (தொல். பொ 303). 2. Thatwhich is good; நன்மையானது.--adv. Sweetly,favourably; நன்றாக புலியூர்ப் புக்கினி தருளினன்(திருவாச. 2, 145).  

அதூஉம் - அதுவே

ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

இயை - அழகு; புகழ் இசைப்பு வாழை
கடை - kaṭai   n. 1. [T. M. kaḍa, K. Tu.kaḍe.] End, termination, conclusion; முடிவு (பிங்.) 2. Place; இடம் (திவா.) 3. Limit,boundary; எல்லை கடையழிய நீண்டகன்ற கண்ணாளை (பரிபா. 11, 46). 4. Shop, bazaar, market;அங்காடி. (பிங்.) 5. Inferiority, baseness, meanness, lowness, least, lowest, worst; கீழ்மை நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்கு (திருவாச. 1,60). 6. Degraded person, man of low caste;தாழ்ந்தோன். கல்லாத சொல்லுங் கடையெல்லாம்(நாலடி, 255). 7. Entrance, gate, outer gate-way; வாயில் கடைகழிந்து (அகநா. 66). 8. Clasp,fastening of a neck ornament; பூண்கடைப்புணர்வு (திவா.) 9. Handle, hilt; காம்பு கடைகுடை யெஃகும் (மலைபடு. 490).--adj. Succeeding,following; பின் கடைக்கால் (பழ. 239).--part.1. (Gram.) Sign of the locative; ஏழனுருபு. (நன்.302.) 2. Verbal prefix; ஓர் உபசருக்கம் கடைகெட்ட(திருப்பு. 831). 3. Termination of a verbalparticiple; ஒரு வினையெச்ச விகுதி ஈத லியையாக்கடை (குறள், 230).

இயையாக்கடை - செய்யமுடியாமல் போகும்போது

முழுப்பொருள்
மரணம் என்பது கொடுமையானது ஆகும். அதற்கு அஞ்சுகிறான் மனிதன். மரணம் பற்றிய சிந்தனையே பல நேரங்களில் உவப்பானது கிடையாது. மரணத்தின் நினைப்பு அவனுக்கு துன்பத்தை தரும்.

பிறருக்கு கொடுப்பதே அறம். அதுவே இல்லற வாழ்வின் கடமையாகும். ஆனால் அத்தகைய நேரங்களில் ஒருவரால் பிறருக்கு கொடுக்க முடியவில்லை என்றால் அக்கணமே இறந்து விடுதல் போன்று இனிமையானது வேறு ஏதும் இல்லை. ஏனெனில் நம்மால் பிறருக்கு உதவ முடியவில்லையே என்று வரும் காலங்களில் பலமுறை வருந்துவதை (இறப்பதை) விட ஒரு முறை சாதலே இனிது ஆகும். பிறருக்கு உதவ முடியாத தேகம் வாழ்தலை விட இறத்தல் இனிது. 

மகாபாரதப்போரில் கர்ணன், ஒரு சில விநாடிகள் தன்னை அண்டி, தானம் யாசிக்கும் கண்ணனுக்கு கொடுக்கவொன்றுமில்லையே என்று வருந்தினாலும், தன்னுடைய புண்ணியங்களின் பலன்களை கொடுப்பதால், தன்னுடைய உயிரையே இழக்க நேரிடுமென்று அறிந்தும் உவகையோடு கொடுக்கிற காட்சி உண்டு. அது இத்தகைய ஈகையை காட்டும் சித்திரம். தருமம் தலையைக் காக்கும், அது நீங்கினால் தலையை எடுக்கும் என்பதையும் உணர்த்தும் சித்திரம்.

சாதல் என்ன துன்பமா? பிறந்து முடிதல் இயற்கையெனினும், மீண்டும் சேரமுடியாத பிரிவு துன்பமே. “சாதல் அன்ன பிரிவு” என்கிறது அகநானூற்றுப் பாடல், (339:14). கலித்தொகைப் பாடல் (43:26.7), “இன்மையுரைத்தார்க் கதுநிறைக்கா லாற்றாக்கால் தன்மெய் துறப்பான் மலை” என்கிறது, ஈகையை தன் உயிரினும் மேலாக நினைப்பாரை.

நாலடியார் பாடல் பசியால் வாடிவருபவருக்கு, உள்ளிருந்தும், ஒன்றுமே ஈயாதான், இருப்பதைவிட இறந்து வானுலகுக்கு விருந்தாவதே  நன்று என்கிறது. இருந்து-வுக்கு எதுகையாக விருந்து இருந்தாலும், ஈயாத கருமிகள் எப்படி வானுலகிற்கு விருந்தாவர்? வேண்டுமானால் நரகத்திற்கு விருந்தாகலாம்.

உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்(கு)
உள்ளூர் இருந்தும்ஒன் றாற்றாதான் – உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று (நாலடி 288)

“தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால்
ஈண்டு வந்துனை யிரந்தவர்க் கிருநிதி யவளை
வேண்டி யீதியோ வெள்குதி யோவிம்மல் நோயால்
மாண்டு போதியோ மறுத்தியோ வெங்ஙனம் வாழ்தி” (கம்ப.மந்தரை 72)

மேலும்: அஷோக் உரை



குறளின் அடிப்படை அறங்களாக முன்வைக்கப்படுபவை கொல்லாமை, ஈகை, பொறையுடைமை போன்றவையே. அவையும்கூட மிக மென்மையாக மனசாட்சியை நோக்கிப் பேசப்படும் தொனியிலேயே வலியுறுத்தப்படுகின்றன.
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதுவும்
ஈதல் இயையா கடை
சாதலைவிட கொடியது இல்லை, ஆனால் கொடைக்கு முடியாத நிலைவந்தால் அதுவும் இனிதே’ என்ற குறள் உண்மையில் மிகக் கடுமையானது. இரப்பவர்களுக்கும் அறவோருக்கும் கொடுப்பதே இல்லறத்தார் கடமை என்று வகுக்கிறது சமண மரபு. அப்படிக் கொடுக்க முடியாதபோது சாவதே மேல் என்று ஆணையிட வரும் குறள் அந்நிலையில் மரணமும் இனியதாகிவிடும் என்றே கூறியமைகிறது.

பரிமேலழகர் உரை
சாதலின் இன்னாதது இல்லை - ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை, அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது - அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது. (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து. இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.

மு.வரதராசனார் உரை
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

022 ஒப்புரவறிதல்

பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - ஒப்புரவறிதல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு

குறள் 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

குறள் 213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
ஒப்புரவின் நல்ல பிற

குறள் 214
ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான் 
செத்தாருள் வைக்கப் படும்

குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

குறள் 216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

குறள் 217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்



ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒப்புரவறிதல் - உலக நடையினை அறிந்து ஒழுகல்; உலக ஒழுக்கத்தை உணர்ந்து நடத்தல்.

ஊருணி  - ஊரினருக்கு உண்ணும் நீர் உதவும் நீர் நிலை; ஊரையடுத்த குளம்; ஊரார் நீர் முகக்கும் குளம்; ūr-uṇi   n. id. + உண்-. Publicdrinking water tank in a village or town; ஊராருண்ணுநீர்நிலை. ஊருணி நீர்நிறைந் தற்றே (குறள், 215)  

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை; மழை; மேகம்

நிறைதல் - நிறைதல் நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல்.

அற்றேல் - அப்படியானால்.

நிறைந்தற்றே - (மழையினால்) நிறைந்த/ நிரம்பிய குளம் போலும்

உலகு உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

அவாம் - 
பேர் அறிவாளன்  - பல நூல்களை கற்று என்ன பயன் நாம் அறிவுக்கு அறிவானவனின், முதன்மை அறிவைக்கொண்டவன், அறிவேயானவன் வாலறிவன்; pēr-aṟivāḷaṉ   n. id. +அறிவு +. Person of mature understanding,wise man; உயர்ந்த ஞானமுடையவன். உலகவாம்பேரறிவாளன்றிரு (குறள், 215).

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

முழுப்பொருள்
ஒரு ஊரில் உள்ள குளம் ஊரில் உள்ள மக்களுக்கு உண்ணுவதற்காக பயன்படும் நீர் நிலையாகும். அத்தகைய நீர் தானாக வந்தது இல்லை. அது மேகத்தில் இருந்து பெய்த மழையும் ஊற்றுகளில் இருந்து வந்தது ஆகும். அந்த குளம் அந்த ஊருக்கு பொதுவானது சொந்தமானது.

குளத்தில் உள்ள நீரை போலவே செல்வந்தர்களின் செல்வமும். இவர்களின் செல்வம் தானாக முளைத்தது இல்லை. இவர்களின் உழைப்பு ஒரு பக்கம் (குளம் கட்டுவதற்கான கட்டுமானார்களின் உழைப்புப் போல)இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அது உலகிற்கு சொந்தமானது. கொஞ்சம் ஆழாமாய் பார்த்தால் வானமும் மண்ணும் அளித்த இயற்கை பொருட்களே விலை என்ற பெயரில் பணமாக செல்வமாக அவர்களிடம் போய் சேர்ந்து உள்ளது. ஆக அந்த செல்வம் ஊர் மக்களுக்கு உதவ வேண்டும். அந்த ஞானமே பேரறிவு. அதனை உடையவனே பேரறிவாளன். அவனுடைய செல்வம் ஊருணி நீர் போன்று உலகத்திற்கானது. மக்கள் உரிமை கொண்டாடலாம் என்று அர்த்தமில்லை. அச்செல்வத்தை அவன் மட்டும் அனுபவிக்காமல் அந்த மக்களுக்கு உதவும் வகையில் செலவிட வேண்டும்.

ஊருணி இருப்பது என்பதற்க்காக மழைப்பெய்யவில்லை. ஊருணி இயற்க்கையின் கொடையை சேமித்துத்துவைத்துள்ளது. அதுப்போல் ஒருவர் சூழ்நிலைகளால் நல்ல அறிவு பெற்றுவிடுகிறார். அவர் தானாக இவ்வுலகில் கற்றது என்று என்பது மிக மிக குறைவே. அவர் காலச்சங்கிலியில் ஒரு கொப்பளம் போன்ற மிக மிக சிறிய ஒன்று. அவர் முந்ததைய சந்ததியரின் அறிவு செயல்பாட்டின் ஒரு சிறு துளி மட்டுமே. ஆதலால் அவ்வறிவுச்செல்வம் பொதுவானது. அதனை பிறர்க்கு பயன்படும் வண்ணம் பகிர்ந்தளிப்பதே அறமாகும். அதேப்போல் பொருட்செல்வமும் பலரின் உழைப்பால் குவிந்தவை. அவற்றை பகிர்ந்தளிப்பதே அறமாகும்.

நீர் என்பது அத்தியாவசிய தேவை. ஒரு ஒப்புரவாளன் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கொடுக்கிறவனாக இருக்க வேண்டும். அதுப்போல் அறிவும் செல்வமும் அத்தியாவசியம் ஆகும்.
=====
கேணி, பிரத்யேகக் குடும்பக் கேணி அல்ல. ஊருண் கேணி. இந்த வார்த்தையே வெகு அழகு. கிணறுகளில் தண்ணீர் சேந்த மறுக்கப்பட்ட வரலாறு கொண்ட இச்சமூகத்தில் , இந்த வார்த்தை முக்கியமானது.
அந்தக் கேணி நீர் நிறைந்திருப்பது இன்னொரு நல்லூழ்.
பேரறிவாளன் செல்வம் அது போன்றது. என்றால், பேரறிவு என்பது தான் ஈட்டிய பொருள் தனது மட்டுமே என்று கருதாத அறிவு.
எல்லோராலும் பொருள் ஈட்ட இயலாது. ஈட்டுபவர்கள் அதைத் தேவைப்படுவோர்க்குத் தந்துவுவதே சமூக அறம்.
காந்தியின் தர்மகர்த்தா முறை.
=====

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறைப்
பல்லோர் உவந்த உவகை” (அகநா 42:9-11)

“ஊருணி நிறையளவும் .... மறுக்கின்றார்கள் யார்” (கம்ப..மந்திரப் 82)

“வள்ளிய ராயோர் செல்வம் மன்னுயிர்க் குதவு மன்றோ” (கம்ப.சேதுபந்தன 24)

“ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்” (அப்பர்.மறைக்காடு 5)

“ஊருணி யுற்றவர்க்கு” (திருக்கோவையார்.400)


ஊருணியின் நீர் அந்த ஊருக்குள் பெய்யும் மழை. அந்த ஊரின் ஊற்று. அந்த ஊருணி நிறைவது மழையாலும் ஊற்றாலும். ஆகவே அது ஊருக்குச் சொந்தமானது. அவ்வாறுதான் செல்வனின் செல்வமும். அவனுடையது அல்ல அது. வானமும் மண்ணும் அவனுக்கு அளித்தது அது. ஆகவே அது ஊருக்கு உதவவேண்டும். அந்த ஞானமே பேரறிவு. அப்பேரறிவை உடையவனின் திருவே ஊருணி போல உலகாக்குவது. இந்த வாசிப்பை கவிதையின் தனிமொழி அடைந்தவனே செய்வான். அவனே கவிதைவாசகன். அவனுக்கே இது கவிதை.

பரிமேலழகர் உரை
உலகு அவாம் பேர் அறிவாளன் திரு - உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும். (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம். இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

Thirukkural - Management - Corporate Social Responsibility
Corporate Social Responsibility (CSR) is the development of the twentieth century management practice. There have been debates on the relevance of Corporate Social Responsibility and doing charity with shareholders' money. “Corporate Social Responsibility is sincerely considering the impact of the company's actions on society,” 

(Koontz, 1990). Corporate Social Responsibility includes social responsiveness also. “Social Responsiveness is the ability of a corporation to relate its operations and policies to the social environment in ways that are mutually beneficial to the company and to the society,” (Koontz, 1990). Valluvar anticipated the need for organizations to be socially responsible and provided his views on the importance and objectives of Corporate Social Responsibility. Kurals support the need for business organizations to serve the society in which they operate.

Valluvar presented his views on social obligations of an organization in Kural 215. He uses a rich simile to advocate the importance of service to the society.

The wealth of a wise philanthropist 
Is a village pool ever full.

The wealth with a person, who considers it as an obligation to help the needy, is like a fountain in a village that keeps giving water for the needs of all the people in that village. The fountain is always overflowing. There is no lack of water. Similarly, wealth keeps increasing in a person who uses his wealth to the welfare and the development of his society. 

English Meaning - As I taught a kid - Rajesh
Water accumulated in a pond gathered from rain and other drainage sources is common for the uses of entire people in the village/city/world. Because rain showered for the entire village/world. Not just for the pond.

Similarly, a knowledgeable intelligent person and wealthy person should contribute and benefit the society. Because the knowledge a person has is not just his/her knowledge. He/She didn't start from scratch. They have gained knowledge from the society which has carried it over centuries. Hence, knowledge and wealth of an intelligent person should be useful for many people.

Questions that I ask to the kid
How would you relate a water pond with knowledge?
Is Pond water common for all? What would you relate this to? Why? Why a person who has worked hard to gain knowledge should not think that it is his earned knowledge?

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

குறள் 201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தீவினை பாவம்; கொடுஞ்செயல்; அக்கினிகாரியம்; தீவழிபாடு.

தீவினையார் - தீவினைகளில் திளைப்பவர்கள்;

அஞ்சார் - அஞ்ச மாட்டார்கள்

விழு viḻu   adj. விழு¹-. 1. cf. vara.Excellent; sublime; சிறந்த. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லை (குறள், 162). 2. Distressing,grievous; துன்பமான. (சீவக. 2355.)

விழுமியோர் - viḻumiyōr   n. id. Excellent persons; சிறந்தோர். வானகங் கையுறினும்வேண்டார் விழுமியோர் (நாலடி, 300).

விழுமியார் - சிறந்த குணம் உடையோர்

அஞ்சுதல் - பயப்படுதல்.

அஞ்சுவர் - பயப்படுவார்கள்

தீவினை - பாவம்; கொடுஞ்செயல்; அக்கினிகாரியம்; தீவழிபாடு.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

செருக்கு - cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.

முழுப்பொருள்
தீவினை என்பது பாவச்செயல், கொடுஞ்செயல். அதனை செய்வது தீவழிபாடு ஆகும். அதன் ஊற்றுக்கண் என்பது செருக்கு. அதாவது அகங்காரம் ஆகும். நான் என்னும் அகங்காரம். நம்மை யாரும் எதுவும் கேட்க முடியாது, நாம் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்ற அகங்காரம் ஆகும்.

அத்தகைய அகங்காரத்தையும் தீவினைகளையும் கண்டு அதனை செய்யவும் அஞ்சுவார்கள் உயர்ந்த பண்புகளையும் மாண்புகளையும் உடைய சான்றோர்களும் பெரியோர்களும். ஆனால் தீவினை செய்பவர்கள் தீவினையை கண்டு அஞ்சமாட்டார்கள்.

தீவினைகளை அஞ்சுவதால் அவர்கள் அகங்காரம் தன்னை அண்ட விடாமால், தீவினை செய்யாமல் உயர்கிறார்கள். அதனாலே அவர்கள் விழுமியார்.


பரிமேலழகர் உரை
[அஃதாவது, பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல். இதனான் மெய்யின்கண் நிகழும் பாவங்கள் எல்லாம் தொகுத்து விளக்குகின்றார் ஆகலின்.இது பயன்இல சொல்லாமையின்பின் வைக்கப்பட்டது.)

தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.

மு.வரதராசனார் உரை
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

சாலமன் பாப்பையா உரை
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
Bad work/activities or terrible things are considered as Sin. The root of bad activities is EGO. Self ego makes us such that no one can question us as one thinks that we don't have to respond to anyone. Hence, such people whon't be afraid of bad activities.

Hence, the one who is scared of bad activities will focus on doing good things and build good character. They are considered as scholarly people

Questions that I ask to the kid
Root of Bad activities is EGO. Who is afraid of it? Who is not afraid of it? What does people who are afraid of this EGO/bad activities do?

021 தீவினையச்சம்

பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - தீவினையச்சம்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு

குறள் 202
தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும்

குறள் 203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

குறள் 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் 
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு

குறள் 205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து

குறள் 206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

குறள் 207


குறள் 209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
துன்னற்க தீவினைப் பால்

குறள் 210

பதிவு வரிசை


020 பயனில சொல்லாமை

பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - பயனில சொல்லாமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

குறள் 192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது

குறள் 193
நயனிலன் என்பது சொல்லும் பயனில 
பாரித் துரைக்கும் உரை

குறள் 194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

குறள் 195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

குறள் 196
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்

குறள் 197


குறள் 200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்

பதிவு வரிசை


பயனில பல்லார்முன் சொல்லல்

குறள் 192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 
நட்டார்கண் செய்தலிற் றீது
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல - இல்லாதவற்றை

பல்லார் - pallār   pron. பல்¹. Many persons; பலர் பல்லா ரகத்து (குறள், 194).  

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல். 

சொல்லல் - சொல்வது; கூறுவது

நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.

நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

இல - இல்லாதவற்றை

நட்டார் - நண்பர்; உறவினர்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

செய்தலின் - செய்வது; செய்தலை காட்டிலும்

தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு.

முழுபொருள்
நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் துன்பம் தருபவற்றை (இன்பம் அல்லாதவற்றை) செய்வது கேடு, தீயது. அது நமக்கு துன்பத்தை தரும். அதனை காட்டிலும் தீயது பலர் (பல அறிவுடையோர்) கூடியுள்ள ஒரு இடத்தில் முன் நின்று பிறருக்கு பயன் அற்ற சொற்களை கூறுவது, பயன் அற்ற செய்திகளை பேசுவது, சம்பந்தமில்லாத வற்றை பேசுவது. இத்தகையது அவர்களுக்கு மட்டும் தீது அல்ல. நமது ஆற்றலையும் நேரத்தையும் நாம் வீண் அடித்துக்கொண்டு இருக்கிறோம். ஆதலால் நமக்கும் தீதாகும்.

ஏனெனில் பலர்கூடி இருந்தால் அங்கே உள்ள ஆற்றல் மிக அதிகம். அதைப்போன்ற ஒரு நிகழ்வை ஒருங்கினைப்பது கடினமாகும். அவ்வாற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். அதனை பயன் இல்லாமல் சிதைப்பது நன்மையை தவறவிட செய்வதனால் வரும் பாவம்/ துன்பம் ஆகும்.

ஏன் நண்பர்களையும் உறவினர்களையும் இங்கே திருவள்ளுவர் கூறவேண்டும்? ஏனெனில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இழைத்த தீங்கை சரி செய்ய மன்றாடியாவது மறுவாய்ப்பை நம்மால் பெற முடியும். அவர்களும் ஒருவர் அல்லது ஒரு சிலர் இருப்பார்கள். ஆனால் ஒரு சபையில் அல்லது ஒரு தளத்தில் பலர் இருப்பார்கள். அவர்களுடைய நேரத்தை நம்மால் திருப்பித் தரமுடியாது. ஒரு பத்து அல்லது இருபது பேரிடம் சென்று சரி செய்வதே பெரும்பாடாக இருக்கும். அதற்குமேல் இருந்தால் அது முடியாது என்றே சொல்லலாம். மேலும் சரிசெய்வது செய்த தவறை நியாயப்படுத்தாது.

இது ஃபஸ்புக் / முகநூல் (Facebook) போன்ற தளங்களில் மக்கள் வெட்டி அரட்டை அடித்து கூச்சல் போடுவதும் அடங்கும் என்பதே எனது கருத்தாகும்.



மேலும்: அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. ('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில் பதரென்று சொல்லுக, இது மக்கட் பண்பிலனென்றது.

மு.வரதராசனார் உரை
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

பலர் கூடி இருக்கும் அவையில், அல்லது பல்லோரும் வாசிக்கும் பருவ இதழில், வலைத்தளத்தில், முகநூலில் யாருக்கும் எவ்விதப் பயனும் தராத சொற்களைப் பேசுதல் என்பது, நெருங்கிய ஆத்மார்த்தமான நண்பர்களுக்குத் தகாதன செய்வதை விடவும் தீமையானது.

English Meaning - As I taught a kid - Rajesh
It is more harmful to speak vain /useless words in front of many people, than to do contemptible deeds to your friends and family. Because it is difficult to organize large people. Hence, if we are mindless about the precious time in front of large gathering and waste it, then it will result in a very bad reputation and we will not get another chance to talk in front of large gatherings. It might reduce our other opportunities for growth as well. 

Doing contemptible deeds to family and friends is certainly wrong but at least for the sake of relationship one can yield their forgiveness once. But large gatherings will not easily forgive us for our vain speech. 

Questions that I ask to the kid
Why is vain speech in front of others more harmful than bad deeds to friends?

019 புறங்கூறாமை

பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - புறங்கூறாமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 181
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

குறள் 182
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

குறள் 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்

குறள் 184
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்

குறள் 185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்

குறள் 186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்

குறள் 187


குறள் 190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

பதிவு வரிசை

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

குறள் 182
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே 
புறனழீஇப் பொய்த்து நகை
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]

பொருள்
அறன் - aṟaṉ   n. அறம் Sacrificer, asperforming a sacred duty; வேள்விமுதல்வன் (பரிபா. 3, 5.)  ; வேள்விமுதல்வன்; அறக்கடவுள்

அழீஇ - அழி - கேடு; வைக்கோல் வைக்கோலிடும்கிராதி; கிராதி வண்டு மிகுதி வருத்தம் கழிமுகம் இரக்கம்

அல்லவை - அறம் அல்லாதவை; பாவச் செயல்கள்; பயன் அல்லாத செயல்கள்; allavai   n. அல்¹. 1. Sin, evil;பாவம். அழுக்காற்றி னல்லவை செய்யார் (குறள், 164).2. Uselessness, fruitlessness; பயனின்மை. (பிங்.)

செய்தலின் - செய்வது

தீதே - தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு.

புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

புறன்  - puṟaṉ   புறம்¹. n. 1. See புறம்¹. 2.Slander; பழிச்சொல். கேளாம் புறன் (சி. போ.அவையடக். 9).--adv. Behind one's back;காணாதபோது. புறனழீஇப் பொய்த்து நகை (குறள்,182).

அழீஇப் - இழிவாக இப்பொழுது பேசுதல்

பொய்த்து - அசத்தியம்; (எ. கா.) பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ (குறள். 938); மாயை (W); போலியானது (W.); நிலையாமை; (எ. கா.) புற்புதமே யன்ன பொய்க்குடி வாழ்க்கை யை (திருநூற். 3); உட்டுளை; (எ. கா.) பொய்பொரு முடங்குகை (சிலப். 15, 50); மரப்பொந்து (பிங்.); செயற்கையானது (பேச்சு வழக்கு); சிறுசிராய் (W.); உண்மை இல்லாதது, உண்மைக்குப் புறம்பானது

நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.
நகை - (வி)சிரி; பழி

முழுப்பொருள்
எனக்கு இக்குறளுக்கு இரண்டு பொருள்கள் தோன்றுகின்றன (ஏனோ தெரியவில்லை சமீபகாலமாக சில குறள்களுக்கு இரு அர்த்தங்கள் தோன்றுகின்றன. வாசிப்போர் அவர்களுக்கு சரி என்று படுவதை எடுத்துக்கொள்க)

1) அறத்தை அழித்து பாவச் செயல்களை செய்வதைப் போன்று (அல்லது அதனினும்) தீயது, கேடு விளைவிக்ககூடியது பிறரைப்பற்றி அவர் இல்லாதப் பொழுது தவறாகப் பேசிப் பின்பு அவர் இருக்கும்பொழுது செயற்கையாக நல்வற்றைப் பேசுவது (முகஸ்துதி செய்வது) என்ற பழி. நகை என்ற சொல்லுக்கு பழி என்ற பொருளும் உண்டு. ஆதலால் ஒருவர் புறம் பேசுவது நகைப்புக்கு /சிரிப்புக்கு என்ற அர்த்தத்திலும் மற்றொன்று பழி என்ற அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ளலாம்.

2) பிறரொருவர் அறத்தை அழித்து அறத்திற்கு புறம்பாக பாவச்செயல்களை நமக்கு செய்தாலும் அவறைப் பற்றி நாம் புறம் பேசுவது தீயது ஆகும். அதாவது அவறைப்பற்றி தவறாக அவரது முதுகுக்கு பின்னால் அவரில்லாதபோது பேசுவது தீயது ஆகும். கேடு விளைவிக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை - ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல். (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.).

மணக்குடவர் உரை
அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல். இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.

மு.வரதராசனார் உரை
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.


Thirukkural - Management - Avoiding Backbiting
Though duality is the way of the universe, dual nature must not be the way of an individual. One's tongue should not move according to its whims and fancies just because it is flexible. Sharing with a person the negative qualities of another person in his absence and talking the positive qualities of the same person in his presence are too dangerous. They are more harmful than committing a crime, advices Kural 182.

Worse thon scoffing at virtue and committing a sin
Is to slander behind one's back and smile to his face.

018 வெஃகாமை

பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - வெஃகாமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

குறள் 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

குறள் 173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே 
மற்றின்பம் வேண்டு பவர்

குறள் 174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்

குறள் 175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

குறள் 176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்




படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

குறள் 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் 
நடுவன்மை நாணு பவர்
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]

பொருள்
வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை

படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்

வெஃகி
வெஃகல் - veḵkal   n. வெஃகு-. 1. Excessivedesire; மிகுவிருப்பம். (பிங்.) 2. Avarice, greed;பேராசை. (சது.
வெஃகுதல் - மிகவிரும்புதல்; பிறர்பொருளைஇச்சித்தல்.

பழிப்படுவ

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

படு - (வி)படுத்துக்கொள்; விழு; கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.

பழிப்படுவ - பழி விழும்

செய்யார்- காரியம் செய்ய மாட்டார்கள்

நடுவு - naṭuvu   n. id. [T. naḍumu. K.naḍuvu.] 1. Middle, that which is intermediate; இடை 2. Impartiality, uprightness; நடுவுநிலைமை நன்பல் லூழி நடுவுநின் றொழுக (பதிற்றுப்.89, 8). 3. Justice; நீதி (W.) 4. Loins or waist,especially of a woman; மாதரிடை. நடுவு துய்யன(கம்பரா. நகரப். 31).  

அன்மை - aṉmai   n. அல்-மை. 1. Reciprocal negation or difference, negation ofidentity, dist. fr. இன்மை அல்லாமை (தொல்.சொல். 25.) 2. Evil; தீமை அன்மை கடியுந் தவவலியால் (சேதுபு. முத்தீர். 8).

நாணுபவர் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்

முழுப்பொருள்
படுபயன் என்றால் பெரிய பயன், பெரிய செல்வம். வெஃகி என்றால் பேராசைக் கொள்ளுதல் - அளவுக்கு மேலான ஆசை. ஆக எவன் ஒருவன் மிக பெரிய ஒரு செல்வத்தின் மீது ஆசைக்கொண்டு அறம் (நடுவுநிலைமை) தவறி தவறான வழியில் சென்று அப்பொருளை அடைய வேண்டும் என்று அதற்கான அறமற்ற செயல்களை செய்கிறானோ அவன் மீது பழி (குற்றம்) வந்து விழும். அதனை அவன் சுமந்தாக வேண்டும்.

ஆதலால் நடுவுநிலைமை தவறுவதால், தவறான வழியில் செல்லுவதால், செய்யக்கூடாதச் செயல்களைச் செய்வதால் வரும் பழிப் பாவங்களுக்கு அஞ்சுபவர், நாணுபவர் பெரியப் பயன்கள் (பேராசைகளுக்கு) மீது பேராசை கொண்டு தவறான செயல்களை செய்யாமாட்டார்கள்.

’உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று சொல்லும் திருவள்ளுவர் ஆசைக்கொள்வதை தவறு என்று சொல்ல மாட்டார். ஆனால் பேராசை கொள்வதே தவறு என்கிறார். உயர்வான எண்ணங்கள் இருக்கலாம். அதற்கான நேர்மையான உழைப்பு இருக்க வேண்டும். நேர்மையான செயல்கள் மூலம் அதனை அறுவடை செய்யவேண்டும்.

இங்கே மற்றொன்று காண வேண்டும். ”வெஃகிப் பழிப்படுவ” என்று சொல்கிறார். பேராசையே தவறு செய்ய தூண்டுகிறது என்று பொருள். ஆதலால் பேராசை தனை அறுக்க வேண்டும்

மேலும்:
பிறர்குரிய பொருளைக் கவர்வதற்கும், நடுவு நிலைமைக்கும் என்ன தொடர்பு? வள்ளுவரைப் படிக்கும் போது, பல்வேறு குணநலன்களையும், குணக்குற்றங்களையும் அவற்றிற்கு இணையான செயல்களோடு பொருத்தி, செய்வதை வலியுறுத்துதலும், விலக்குதலை வலிந்துச் சொல்லியிருப்பதையும் காணலாம். குணநலன்கள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவையோ, அதேபோல்தான் குணக்குற்றங்களும்.  நடுவு நிலை நின்றவர், பிறர் பொருளை கவர்தல் பயனே தந்தாலும், அது ஒழுக்கக்கேடு என்பதையும் உணர்வதால், அதாவது ஒருபக்கமாக சிந்தியாமல், நல்லது, அல்லது இரண்டையும் ஆராய்ந்து, அச்செயலை செய்யவும், ஏன் நினைக்கவுமே நாணுவார்.

வெஃகல் என்பது மிக்கவிரும்பி கவர்தல், பேராசை கொண்டு வவ்வல் என்ற பொருளிலேயே இவ்வதிகாரத்தில் கையாளப்பட்டிருக்கிறது. வவ்வல், வவ்வுதல், அவ்வுதல், கவ்வுதல், இணுக்கம், பறித்தல் எல்லாமே தங்களுகுடமையில்லாத ஒன்றை தனக்குரியதாக்கிக் கொள்ள விழைதல்.

வள்ளுவர் ஆசையை விலக்கச் சொல்லவில்லை, பேராசையும் அதன்காரணமாக எவ்வழியிலேனும் தமக்குரியதாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்கிற தீக்குணத்தைக் கண்டிக்கத்தான் இவ்வதிகாரத்தைச் செய்துள்ளார்.

சூர்பனகை இராமனைக்கண்டு இச்சைகொண்டு கவர நினைத்ததும், இராவணன் சீதையழகிலே மதிமயங்கி அவளைக்கவர்ந்து சென்றதும், வாலி தன்னுடைய தம்பியின் மனையாளைக் கவர்ந்து சென்றதும், கௌரவர்கள் பாண்டவருக்குச் சொந்தமான நாட்டினை முறையற்ற வழியிலே கவர்ந்துகொண்டதும் வெஃகலின் நிகழ்வுகள்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் - நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.).

மணக்குடவர் உரை
தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர். இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.

மு.வரதராசனார் உரை
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.