Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்

குறள் 253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் 
உடல்சுவை உண்டார் மனம் 
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
படை - paṭai   n. படு²-. [K. paḍe.] 1.Army; சேனை (பிங்.) படையியங் கரவம் (தொல்.பொ. 58). 2. Forces for the defence of akingdom, of six kinds, viz., mūla-p-paṭai,kūli-p-paṭai, nāṭṭu-p-paṭai, kāṭṭu-p-paṭai,tuṇai-p-paṭai, pakai-p-paṭai;பகைப்படை என்ற அறவகைச்சேனை. (குறள், 762, உரை ) 3. Mob, rabble, crowd; திரள் Colloq.4. Relations and attendants; பரிவாரம் அவன்படைகளுக்கு யார் போட்டுமுடியும்? 5. Weapons,arms of any kind; ஆயுதம் தொழுதகை யுள்ளும்படையொடுங்கும் (குறள், 828). 6. Instrument,implement, tool; கருவி 7. Means, agency;சாதனம். செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள்,555). 8. (Jaina.) Traid of excellent things.See இரத்தினத்திரயம் படை மூன்றும் (சீவக. 2813).9. A sledge-like weapon, used in war; முசுண்டி (பிங்.) 10. Ploughshare; கலப்பை (பிங்.) படையுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு 7). 11.Saddle; குதிரைக்கலனை. பசும்படை தரீஇ (பெரும்பாண். 492). 12. Covering and tra  

கொண்டார் - உடையவர்

நெஞ்சம் - neñcam   n. id. [M. neñca.]1. See நெஞ்சு தாமுடைய நெஞ்சந் துணையல்வழி(குறள், 1299). 2. Love; அன்பு நெஞ்சத் தகநகநட்பது நட்பு (குறள், 786).

போல் - pōl   part. போல்-. [T. pōlu, K.pōl, M. pōluga, Tu. hōlu.] 1. A particle ofcomparison; ஓர் உவமவுருபு. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்து (குறள், 118). 2. An expletive; ஓர் அசைச்சொல். (திருக்கோ. 222.)

நன்று - naṉṟu   n. நன்-மை. 1. That whichis good, goodness; நல்லது அங்கிது நன்றிது நன்றெனு மாயை யடங்கிடு மாகாதே (திருவாச. 49, 8).(சூடா.) 2. Excellence; சிறப்பு 3. Greatness,largeness; பெரிது (தொல். சொல் 343.) 4. Virtue,merit; அறம் நட்டார் குறை முடியார் நன்றாற்றார்(குறள், 908). 5. Happiness, felicity; இன்பம் நன்றாகு மாக்கம் பெரிதெனினும் (குறள், 328).6. Good deed; நல்வினை சான்றோர் செய்த நன்றுண்டாயின் (புறநா. 34). 7. Benefit; உபகாரம் தக்கார்க்கு நன்றாற்றார் (நாலடி, 327). 8. Prosperity; வாழ்வினாக்கம். நன்றாங்கா னல்லவாக் காண்பவர் (குறள், 379). 9. Heaven; சுவர்க்கம் வாள்வாய் நன்றாயினு மஃதெறியாது விடாதே காண் (கலித்.149). 10. Expr. signifying approval; அங்கீகாரக்குறிப்பு. நன்றப்பொருளே வலித்தேன் (சீவக. 1932).

ஊக்காது - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயலுதல்; கற்பித்தல்; நினைத்தல்; ஏறுதல்; நோக்குதல்.

ஊக்காது

ஒன்றன் - ஒன்று - oṉṟu   n. [T. oṇḍu, K. ondu, M.onnu, Tu. onji.] 1. The number one; க என்னும் எண் (திவ். திருச்சந். 7.) 2. A person ofconsequence, a person worthy of regard; மதிப்புக்குரிய பொருள் ஒறுத்தாரை யொன்றாக வையாரே(குறள், 155). 3. Attaining salvation; வீடுபேறு (திவா.) 4. Union; ஒற்றுமை வேந்தர் வேந்த னிதயமு மொன்றாய்நின்ற வியற்சையை (பாரத. சூதுபோர்.7). 5. Truth; வாய்மை ஒன்றுரைத்து (கம்பரா.கிளை. 24). 6. Semen; இந்திரியம் இரண்டடக்கார்ஒன்று பலகாலமும் விட்டிடார் (திருவேங். சத. 74). 7.Euphemism for urination; சிறுநீர் ஒன்றுக்குப்போய்வா. Colloq. 8. (Gram.) Singular numberof the impersonal class; அஃறிணை யொருமைப்பால். (நன். 263.) 9. That which is imcomparable; ஒப்பற்றது. -- conj. Or; else; விகற்பப்பொருளைக்காட்டும் இடைச்சொல் ஒன்று தீவினையைவீடு, ஒன்று அதன்பயனை நுகர் 

உடல் - uṭal   n. prob. உடன் [T. oḍalu, K.oḍal, M. Tu. uḍal.] 1. Body; உடம்பு (பிங்.) 2.Consonant; மெய்யெழுத்து உடன்மேலுயிர்வந்து(நன். 204). 3. Birth; பிறவி தோலி னுடையாலுந்தீரா துடல் (சைவச. பொது 403). 4. Means, instrument; சாதனம் பசுவதனுஸந்தானத்துக் குடலாமே (ஈடு, 1, 2, 8). 5. Gold; பொன் (திவா.) 6.The wherewithal, money; பொருள் விளக்கேற்றற்குடலில னாப (பதினொ. திருத்தொண். 54). 7. Mainbody of a cloth, excluding the border spaces;ஆடையின் கரையொழிந்த பகுதி உடல் அரக்கு Colloq. 8. Texture of a cloth as judged by thewarp and woof; ஆடையினிழை. Colloq.

சுவை - ஐம் புலன் களுள் நாவின் உணர்வு, உருசி; இன்பம்; இரசம்; இனிமை; கவிதையின் இரசம்; சித்திரை நாள்.

உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

உண்டார் - உண்டவர்

மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

முழுப்பொருள்
போர்களத்தில் படைகொண்டவர்கள் பிற உயிர்கள் மீது இரக்கம் அற்றவர்கள். பிற உயிர்களை (எதிரி உயிர்களை) வெட்டி வீழ்த்துவது அவர்களுக்கு ஒரு வெற்றிச் சுவை. அவ்வெற்றியில் கள்வெறியும் உன்மத்தமும் அடைவர். அதில் அவர்கள் வாழ்நாளெல்லாம் திளைப்பர். அவ்வளவு ஏன், தன்மீது வாளின் வெட்டுகள் பட்டாலும், குண்டுகள் சீண்டினாலும், அதன் தழும்புகளை வீர அடையாளங்களாகவே பார்ப்பார்கள். அதற்காக மகிழ்ச்சி அடைவர். எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருப்பார்கள்

அதைப்போன்றவர்களே பிற உயிர்களின் (விலங்குகளின்) ஊணை/மாமிசத்தை உண்ணுபவர்கள். அவர்களுடைய மனமும் இரக்கமும் குற்ற உணர்ச்சியும் கருணையும் அற்றதாகவே இருக்கும்.



ஊனுண்ணுவார் மனம் நல்லதை நினையாததையத் திரிகடுகப்பாடல்,(74 “கொலைநின்று தின்றொழுகு வானும்பெரியவர் புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் – இல்லெனக்கொன்று ஈகென் பவனை நகுவானும் இம்மூவர் யாதும் கடைப்பிடியா தார்.” என்று சொல்லி, கொலைநின்று தின்றொழுகுதலை அறநெறி நில்லாரின் முதற்குற்றமாகக் கூறுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
படை கொண்டார் நெஞ்சம் போல் - கொலைக் கருவியை தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல, ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது - பிறி்தோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது. (சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்டல். இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஆயுதம் கையிற்கொண்டவர் நெஞ்சுபோல் நன்மையை நினையாது: ஒன்றினுடலைச் சுவைபடவுண்டார் மனம்.

மு.வரதராசனார் உரை
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

சாலமன் பாப்பையா உரை
கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.

English Meaning - As I taught a kid - Rajesh
The heart of one who has eaten and relished flesh, is like the heart of one leading an army: it cannot be compassionate; it is merciless. The person heading the army relishes killing the opponents, doesn't worry about the loss of lives of his own soldiers being killed during the battle. They wear such deaths as a badge of honor because they do not have any guilt. Similarly, people who eat and relish flesh of other creatures are not compassionate.

Questions that I ask to the kid
How do you describe the heart of one who has eaten and relished flesh, is like?

No comments:

Post a Comment