Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

குறள் 263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]

பொருள்
துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.

துறந்தார் - tuṟantār   n. துற-. Ascetics,recluses, as having renounced the pleasures ofthe world; [பற்றுவிட்டவர்] சன்னியாசிகள். துறந்தார் பெருமை துணைக்கூறின் (குறள், 22).  

துறந்தார்க்குத் - துறந்தவர்களுக்கு

துப்புரவு - tuppuravu   n. துப்பு¹ + உரவு 1.Ability, cleverness; சாமர்த்தியம் சர்வேசுவரனைக்கேள்விகொள்ளவேண்டாதபடி துப்புரவுடையன (ஈடு,1, 5, 3). 2. Necessity; வேண்டற்பாடு 3. Excellence; மேன்மை (W.) 4. Beauty; அழகு (W.)5. Established custom, order, propriety ofconduct; முறைமை ; தூய்மை; நுகர்ச்சிப்பொருள்; ஐம்பொறிநுகர்ச்சி; அனுபவம்; திறமை; முறைமை; மேன்மை; வேண்டற்பாடு; அழகு.

வேண்டுதல் - vēṇṭu-   5 v. cf. வேள்-. [K.bēḍu.] tr. 1. To want, desire; விரும்புதல்.பகலோடு செல்லாது நின்றீயல் வேண்டுவன் (கலித்.145). 2. To beg, entreat, request; பிரார்த்தித்தல். வேண்டித்தேவ ரிரக்கவந்து பிறந்ததும் (திவ்.திருவாய். 6, 4, 5). (பிங்.) 3. To listen to witheagerness; விரும்பிக் கேட்டல். அன்னைவாழி வேண்டன்னை (ஐங்குறு. 101). 4. To buy, purchase;விலைக்கு வாங்குதல். (நாமதீப. 704.)--intr. To beindispensable; to be necessary; இன்றியமையாததாதல். வேண்டுமே காக்கை கடிவதோர் கோல்(நாலடி, 41).
வேண்டி - vēṇṭi   prep. id. For thesake of; பொருட்டு. அதை எனக்கு வேண்டிச் செய்.
வேண்டிக்கேள்-தல் [வேண்டிக்கேட்டல்] vēṇṭi-k-kēḷ-, v. tr. id. +. To beseech;மன்றாடிக்கேட்டல். (யாழ். அக.; 

மறத்தல் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு.

மறந்தார்

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

மற்றையவர்கள் - மற்றவர்கள்; பிற மக்கள்

தவம் - tavam   n. tapas. 1. Penance,religious austerities; பற்றை நீக்கிக் காயக்கிலேசஞ்செய்துகொண்டு கடவுளை வழிபடுகை. தவஞ்செய்வார்தங்கருமஞ் செய்வார் (குறள். 266). 2. Result ofmeritorious deeds; புண்ணியம் தவந்தீர் மருங்கிற்றனித்துய ருழந்தோய் (சிலப். 14, 26). 3. Householder's life, dist. fr. naṟṟavam; இல்லறம் தவஞ்செய்வார்க்கு மஃதிடம் (சீவக. 77). 4. Chastity; கற்பு தேவியுள்ளத் தருந்தவ மமையச்சொல்லி(கம்பரா. திருவடி 9). 5. A section of the kalam-pakamவெப்பம்  ' பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.

முழுப்பொருள்
துறத்தல் என்றென்பது ஒன்றைவிட்டு நீங்குதல் அல்லது ஒன்றை கைவிடுதல் அல்லது ஒன்றில் இருந்து பற்றற்று இருத்தல். அப்படி ஒருவர் இருப்பாரானின் அவருக்கு சில தேவைகள் என்று வரக்கூடும். அதனை துறவாதவர்கள் செய்துக்கொடுக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு நெறி.

இல்லறத்தை துறந்து துறவறம் பூண்டவர்களுக்கு உணவு, ஆடை, தங்குமிடம் (முக்கியமாக குளிர்காலத்தில்) ஆகியவை தேவைப்படும். அதனை இல்லறத்தில் இருப்போர் செய்து தர வேண்டும். இதனால் இல்லறத்தில் இருப்போர் துறவோருக்கு ஈடு என்று பொருள் அல்ல. அது கடமை அவ்வளவு தான்.

சற்று யோசித்தால், எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஒருவர் நம் வீட்டில் சிலவற்றை துறந்து வாழ்வார்கள். உதாரணமாக ஒருவர் சபரிமலைக்கு விரதம் இருக்கிறார் அல்லது வாரத்தில் ஒருநாள் விரதம் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அவர்களின் விரதத்தை மதித்து அவர்களுக்கு தொந்துரவு தராமல் இருக்க வேண்டும். சிலர் கொள்கை ரீதியாக மது அருந்த மாட்டேன் என்று இருப்பார்கள். அப்படி இருக்கையில் அவர்களை ஒரு பெக் என்று வற்புருத்தக் கூடாது. 

மேலும்: அஷோக் உரை

துறத்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றையவர் தவம்

‘துறந்தவர்களுக்கு ஈந்து அவர்களைப் பேணவேண்டும் என்பதற்காகவே மற்றவர்கள் தங்கள் தவத்தை மறந்தார்கள் போலும்!’. கிளிகள் கைதவறி உதிர்க்கும் நெல்மணிகளை மட்டுமே உண்டு ஒரு முனிவர் தவம்செய்தாரென்றும் அவர் முக்திபெற்று இறையுலகு சென்றபோது அங்கே அவருக்கு கதிர்மணிகள் உதிர்த்த பறவைகளும் இருக்கக் கண்டாரென்றும் ஒரு கதை உண்டு. தவம் செய்யும் முனிவன் தன் வீடுபேறுக்காக அதை ஆற்றுகிறான் என்றால் அவனுக்காக உலகியல் துயரங்களை ஏற்று அறமியற்றுவோர் அவனினும் மேல் அல்லவா என்று இக்குறள் வினவுகிறது.
தர்க்கம்சார்ந்து நோக்கினால் இது தவறானதே. துறந்தொர் தங்கள் உளவல்லமையால் விட்டுச்சென்ற உலக இன்பங்களில் இருந்து விடுச்செல்ல இயலாமையினால்தான் இல்லறத்தார் அங்கிருக்கிறார்கள். அவர்கள் தெரிவு செய்துகொண்ட வழி அல்ல அது, அவர்கள் கிடந்துழலும் வழி. ஆகவே அவர்கள் ஆற்றுவது தவமல்ல. துறந்தோரின் தவத்துக்கு அவர்களின் இல்லறம் ஒருபோதும் இணையும் அல்ல. ஒரு நீதிநூலில் துறந்து தவமியற்றுபவருக்கு இணையானவரே அவருக்கு உதவி செய்வோரும் என்று சொல்லியிருந்தால் அந்த நீதிக்கு என்ன பொருள்? துறவை உச்சத்தில் நிறுத்தும்  ஆசீவக,சமண, பௌத்த ஞானமரபுகளின் பின்னணியில் வந்த வள்ளுவர் உண்மையில் சொல்லவரும் கருத்தும் அதுவல்ல.

இங்கே இவ்வரி அக்கணத்தின் கவித்துவ மன எழுச்சிக்காகவே நிலைகொள்கிறது. கவித்துவத்தாலேயே தன் பொருளை அளிக்கிறது இது. இவ்வாறு முக்கியமான நீதிமொழிகளைச் சொல்லும்போது கவிஞனின் நேரடியான அகஎழுச்சி அதில் கைகூடியிருப்பதைக் காட்டும் குறள்கள் ஏராளமாக உண்டு.

பரிமேலழகர் உரை
மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும். ( துப்புரவு - அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.).

மணக்குடவர் உரை
துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தாராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை. இது தானத்திலும் தவம் மிகுதியுடைத்தென்றது.

மு.வரதராசனார் உரை
துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?.

சாலமன் பாப்பையா உரை
துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.

No comments:

Post a Comment