Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

குறள் 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

பொருள்
பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.
வறிஞன் - பொருளில்லாதவன்

படுக்கும் - படுத்தல் - செய்தல்; நிலைபெறச்செய்தல்; சேர்ப்பித்தல்; வளர்த்தல்; உடம்பிற்பூசுதல்; அழித்தல்; பரப்புதல்; தளவரிசையிடுதல்; ஒழித்தல்; வீழச்செய்தல்; எழுத்துகளின்ஒலியைத்தாழ்த்திக்கூறுதல்; கிடத்தல்; பறையறைதல்.

இழவு - இழப்பு; கேடு சாவு எச்சில் வறுமை

ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

அகற்றும் - அகற்றுதல் - நீக்குதல்; துரத்துதல் அகலப்பண்ணுதல், விரிவாக்கல்.

ஆகல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்; ஆக்கம்

ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை.

உற்ற - உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

முழுப்பொருள்
பொருளில்லாதவன் / அறிவில்லாதவன் அழிந்து கேடுப் பெற்று வறுமையில் துயரப்பட வேண்டும் என்று ஊழ் இருந்தால் அது அவ்வாறே நடக்கும். அதுப்போல ஒருவனுக்கும் அறிவு (ஞானம்) விரிவாகவேண்டும் என்று ஊழ் இருந்தால் அறிவு வளர்வதற்கான சூழல் அமைந்து நடக்கும்.

இங்கே ஊழ் என்ற சொல்லுக்கு தலைவிதி என்று பொருள் இருந்தாலும், ஊழ் என்ற சொல்லுக்கு குணம், முதிர்ச்சி, முடிவு என்ற பொருள்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் நாம் கேட வேண்டும் என்றாலும் அல்லது நாம் வளரவேண்டும் என்றாலும் அது நம்முடைய முடிவின் விளைவே ஆகும்.  இங்கே கூற வேண்டிய மற்ற ஒன்றும் இருக்கிறது. நாம் எடுக்கும் முடிவு நமது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் நாம் சேர்த்துக்கொண்ட தகவல்களின் அடிப்படையிலும் எடுக்கப்படும். ஆதலால் அது நாம் செய்த வினையின் பயனாகும். அதுவும் ஊழே.

"அறிவு இறைவன் வழங்கியது. அறிவினால் பயன் இல்லை" என்ற பிற்காலத்தவர் கருத்திற்கு வள்ளுவர் கருத்து மாறுபட்டது. முற்போக்கானது.

இக்குறளில் தீயூழ் அறிவழிக்கும்,  நல்லூழ் அறிவு விரிக்கும் என்று ஊழுக்கும் அறிவுக்கும் உறவு கூறவே செய்கிறார் திருவள்ளுவர். ஆனால் அறிவு விதியினால் தான் உண்டாகிறது திரிபடைகிறது என்று வள்ளுவர் முற்றுரிமை கொண்டாடவில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும். (கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்'என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை'என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும். இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

சாலமன் பாப்பையா உரை
தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.

Thirukkural - Management - Fate
When your fate is favorable to you to create wealth, you will amass wealth but when your fate is not favorable,  you will lose all your wealth. Kural 372 supports the existence of fate.

Adverse fate befools, and when time serves
A friendly fate sharpens the brain.

When your fate is positive, you may succeed because of that. When your fate is negative, you may fail 
in spite of your best efforts.

No comments:

Post a Comment