Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label அலரறிவுறுத்தல். Show all posts
Showing posts with label அலரறிவுறுத்தல். Show all posts

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்


குறள் 1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

வேண்டின்வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

நல்குதல் -  கொடுத்தல், விரும்புதல், படைத்தல், To show deep love -> தலையளி செய்தல் [தலையளி - ideal love - உத்தம அன்பு],  To rejoice -> உவத்தல்
நல்குவர் - தலையான அன்பிற்கு பாத்திரமானவர் - விருப்பதிற்கு உரியவர் 

காதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.

யாம் - தன்மைப் பன்மைப் பெயர்

வேண்டும் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

கௌவை - ஒலி; வெளிப்பாடு; பழிச்சொல்; துன்பம்; கள்; எள்ளிளங்காய்; ஆயிலியநாள்; செயல்.

எடுக்கும் - எடுத்தல் - நிறுத்தலளவு; எடுத்தலோசை; உயர்த்துதல்; சுமத்தல்; தூக்குதல்; நிறுத்தல்; திரட்டுதல்; உரத்துச்சொல்லுதல்; குரலெடுத்துப்பாடுதல்; மேம்படுத்திச்சொல்லுதல்; பாதுகாத்தல்; எழுப்புதல்; தொடங்கல்; ஏற்றுக்கொள்ளுதல்; எடுத்துவீசுதல்; வீடுமுதலியனகட்டல்; இடங்குறித்தல்; கைக்கொள்ளுதல்; தாங்குதல்.

இவ் - இந்த 

ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.

முழுப்பொருள்
இவ்வதிகாரத்தில் சில குறள்களில் அலரை விரும்பாதவர்களாகவும் அலரை விரும்புபவர்களாகவும் காதலர்கள் இருக்கிறனர் கூறப்பட்டுள்ளது. எத்தகைய சூழ்நிலையில் காதலர்கள் அலரை விரும்புவோர் என்று இக்குறளில் கூறப்பட்டுள்ளது.

நான் என் காதலரை விரும்புவது போன்றே என் காதலர் என்னை விரும்புகிறார் ஆதலால் நாங்கள் இருவருக்கும் நினைப்பது என்னவென்றால் இந்தக்கௌவை அதாவது அலர்ப்பேச்சினை இவ்வூரார் எடுத்து உரைக்கலாம். எங்களுக்கு அதனால் துன்பமில்லை. அலர்ப்பேச்சால் இவ்வூர்மக்கள் அனைவருக்கும் எங்கள் தெரிவதால் எங்கள் காதல் இன்னும் பலப்படுகிறது. 

பி.கு: இதனை இப்படியும் சொல்லலாம், நாங்கள் விரும்பியே மழையில் நனைந்தோம். ஆதலால் மழையில் முழுக்க நனைந்தப்பிறகு முக்காடு எதற்கு?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச் சொல்லியது.) யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடுக்கும் - உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே விரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; காதலர் தாம் வேண்டின் நல்குவர் - இனிக் காதலர் தாமும் யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர், அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது தோன்றக் 'காதலர்' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்.).

மணக்குடவர் உரை
யாம் விரும்ப, அலரையும் இவ்வூரார் எடுத்தார். ஆதலான் இனித் தாங்களே விரும்பிக் கொடுப்பர் நமது காதலார்க்கு.

மு.வரதராசனார் உரை
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

சாலமன் பாப்பையா உரை
நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

 

குறள் 1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
அலர் - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி.

நாண - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

ஒல்வதோ - ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.

அஞ்சல் - அஞ்சுதல், கலங்கல், மருளல் தோல்வி தபால்

ஓம்பு - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

என்றார் - என்று கூறினார்

பலர் - அநேகர்; சபை.

நாண நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

நீத்தல் - பிரிதல்; துறத்தல்; தள்ளுதல்; இழித்தல்; வெறுத்தல்; விடுதல்; நீங்குதல்.

கடை -  முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி

நீத்தக்கடை - அவர் செல்லும்போது

முழுப்பொருள்
”இவ்வூர் மக்கள் நமது காதலைப்பற்றி அலர் பேசுபவர்கள் அதற்காக வெட்கப்பட்டு எங்கள் காதலை மறைத்துவைத்திருந்தேன். என்காதலர் பிரிந்துசென்றுவிடுவாரோ என்ற அச்சமும் அதற்கு ஒரு காரணம் ” என்று தலைவி நினைக்கிறாள். 

இதனை உணர்ந்த தலைவன் தலைவியிடம் கூறினான், ”இவ்வூர்மக்க்ள் அலர் பேசுவார்கள் என்று நாணப்பட்டாதே. பழிகூறும் ஊரார் நாணும் படியாக,  உன்னைவிட்டு பிரியமாட்டான். ஆதலால் நீ அஞ்சாதே! நம் காதல் உன்னுள் வளர்வதை நாணத்தால் நீ தடுக்காதே [அஞ்சல் ஓம்பு என்றால் வளர்த்தல், பேணுதல் என்ற பொருளும் அடங்கும்]”. 

வேலை நிமித்தமாக தற்காலிகமாக தலைவன் பிரிந்திருந்தாலும், பழிகூறும் ஊரார் நாணும் படியாக,  அவன் என்னைவிட்டு நிரந்தரமாக பிரியமாட்டான். ஆதலால் அலரிற்கு பயந்து நான் ஏன் நாணவேண்டும்? என்று தலைவி கருதுகிறாள்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”அஞ்சலோம் பென்னும்
நன்னர் மொழியும் நீமொழிந் தனையெ” (கலி.21:7-8)
“அஞ்சலோம் பென்றாரை” (கலி 41:22)
“அஞ்சலோம் பென்றதன் பயனன்றோ” (கலி 132-9)
“அஞ்சலோம் பென்று நலனுண்டு நல்காதான்” (சிலப் 24:3)

பரிமேலழகர் உரை
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) அஞ்சல் ஒம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்ட ஞான்று 'நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாணா ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது. ('நாண' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து. பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.

மு.வரதராசனார் உரை
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?.

சாலமன் பாப்பையா உரை
அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

 

குறள் 1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

கண்டது -  காணப்பட்டபொருள்; சம்பந்தமற்றசெய்தி

மன்னும் - மன்னில்
மன்னும் - மன் - மன்னும் - பெரும்பான்மையும், ஓர்இடைச்சொல்.
மன்னு-தல் - maṉṉu-   5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து

ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

அலர் - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி

மன்னும் - மன்னில்
மன்னும் - மன் மன்னும் - பெரும்பான்மையும், ஓர்இடைச்சொல்.
மன்னு-தல் - maṉṉu-   5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து

திங்களைப் - திங்கள் - சந்திரன்; மாதம்; திங்கட்கிழமை; பன்னிரண்டு.

பாம்பு - ஊரும்உயிர்வகை; இராகுஅல்லதுகேது; நாணலையும்வைக்கோலையும்பரப்பிமண்ணைக்கொட்டிச்சுருட்டப்பட்டதிரணை; ஆயிலியநாள்; நீர்க்கரை; தாளக்கருவிவகை.

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

கொண்டற்று - முழுவது பரவியது போலாகியது.

முழுப்பொருள்
நான் எனது காதலரை / காதலியை கண்டது என்னவோ ஒரு நாளைக்குத் தான். ஆனால் கிரகண காலத்து ராகுப் பாம்பு சந்திரனை விழுங்குவதை உலகே அறியும் படி இருள் கவ்வுமே அச்செய்தியைப்போல நாங்கள் ஒருநாள் சந்தித்த செய்தி இவ்வூர் மக்களிடம் அலராக/ பழிச்சொல்லாக / புறங்கூற்றாக பரவியிருக்கிறது. கிரணம் இருளைக் குறிப்பதால், இந்த அலர் காதலை வளர்க்கும் மகிழ்ச்சியானது அன்று. இந்த அலர் காதலர்களுக்கு துன்பமே தருகிறது என்று உணரலாம். 
 
மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உற்றது மன்னும் ஒருநாள்” (குறுந் 271:3)

பரிமேலழகர் உரை
(இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப்பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது.) கண்டது ஒரு நாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று -அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது. (காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
யான் கண்ணுற்றது ஒருநாள்; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல, எல்லாரானும் அறியப்பட்டு அலராகா நின்றது.

மு.வரதராசனார் உரை
காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

சாலமன் பாப்பையா உரை
நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!. 

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

குறள் 1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
களி - மகிழ்ச்சி; கள்முதலியனஅருந்திக்களிக்கை; தேன்; கள்; கட்குடியன்; உள்ளச்செருக்கு; யானைமதம்; குழைவு; குழம்பு; மாவாற்கிண்டியகளி; கஞ்சி; வண்டல்; உலோகநீர்; களிமண்.

தொறும்  - toṟu   a distributive plural particle of place, time, quality etc. as தோறு, பன்மையிடைச்சொல்.

தோறு - ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும்என்னும்பொருளில்வரும்ஓர்இடைச்சொல்.

தோறு - tōṟu   . A distributive plural suffix, which with உம் subjoined signifies, each; every, &c., பன்மைஇடைச்சொல்; இடங்கள்தோ றும், in each place, here and there; வருஷந் தோறும், annually; வாரந்தோறும், weekly; தினம் தோறும், daily.

கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.

உண்டல் - uṇṭal   n. உண்-மை. Cominginto existence; உண்டாகுகை. காட்டத்தி லங்கிவேறுண்டல்போல் (சி. போ. பர. 12, 3, 2)

உண்டல் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

வேட்டு - வேட்கைத்தொழில்; வெடி.
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
அற்றால் - (உணவின்) தன்மை அறிந்து

வேட்டற்றால் - வேட்கை தரும் இன்பமாம் (சிலருக்கு? பலருக்கும்?)

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

வெளிப்படும் - வெளிப்படு-தல் - veḷi-p-paṭu-   v. intr. id. +. 1. To come out, issue forth, asbreath; வெளியேவருதல். 2. To become manifestor evident; to become public; to be revealed;வெளிப்படத் தோற்றுதல். பரவா வெளிப்படா . . .உரவோர்கட் காமநோய் (நாலடி, 88). 3. To beclear, explicit; பொருள் விளக்கமாதல். வெளிப்படுசொல்லே கிளத்தல் வேண்டா (தொல். சொல். 298).4. See வெளிவா-, 2.

வெளிப்படுத்துதல் - பலர்அறியத்தெரிவித்தல்; காட்டுதல்; வெளியேவரச்செய்தல்; புத்தகம்பதிப்பித்தல்; வெளியேபோகச்செய்தல்.

தோறும் தோறு - ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும்என்னும்பொருளில்வரும்ஓர்இடைச்சொல்.

தோறு - tōṟu   . A distributive plural suffix, which with உம் subjoined signifies, each; every, &c., பன்மைஇடைச்சொல்; இடங்கள்தோ றும், in each place, here and there; வருஷந் தோறும், annually; வாரந்தோறும், weekly; தினம் தோறும், daily.

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக, இனிமை, இனிய 

முழுப்பொருள்
கள் /மது உண்ணும் ஒவ்வொரு பொழுதும் மகிழ்ச்சி கிடைக்கிறது. அது உடற்கின்பம் தான். ஆனால் எங்கள் காதலைப்பற்றி இவ்வூரார் பேசும் பொழுதெல்லாம் பழிக்கும் பொழுதெல்லாம் வெடி வெடித்து இவ்வுலகிற்கே பறைசாற்றியதுபோல் உள்ளது. அது அவ்வாறு வெளிப்படுவதால் இனிமையே தருகிறது எங்கள் உள்ளத்திற்கு.

கள் குடித்தால் மகிழ்ச்சி (என்றாலும் உடல் அழியும்). ஆனால் இந்த காதலை மக்கள் பேசினால் எங்கள் காதல் வளரும். காதல் வளர்வதை காட்டிலும் இனிது காதலர்க்கு ஏது ?
 
மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மகிழ்ந்ததன் தலியும் நறவுண் டாங்கு” (குறுந் 165:1)

“உட்கொண் டரற்றும் உறுபிணி தலைஇக்
கட் கொண் டாங்குக் களிநோய் கனற்ற” (பெருங் 1.35:50-51)

“நறவிளை தேறல் உறுபிணி போலப்
பிறிதின் தீராப் பெற்றி நோக்கி” (பெருங் 2.16:63-4)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) களித்தொறும் கள் உண்டல் வேட்டற்று - கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது - எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றது. ('வேட்கப்பட்டடற்றால்' என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கை மிகுதியால் அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம்.).

மணக்குடவர் உரை
மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற்போலக் காமமும் அலராகுந்தோறும் இனிதாகும். இஃது அலரறிவுறுத்த தோழியை நோக்கி நுமக்குத் துன்ப மாயிற்றே இவ்வலரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

குறள் 1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
கவ்வையால் - கவ்வை - ஒலி; பழிச்சொல்; துன்பம்; கவலை; பொறாமை; கள்; 
செயல்; எள்ளிளங்காய்; ஆயிலியம்.

கவ்வு - kavvu   s. greatness, பெருமை; 2. fork of a branch; 3. grasp of the mouth; 4. eating.

கவ்விது - வளர்ந்தது 

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

இன்றேல் - இல்லை என்றால்

தவ்வு  - கெடுகை; பலகையிலிடும்துளை; பாய்ச்சல்.

தவ் - தவ்வுதல் - tavvu-   5 v. intr. தபு-. 1. Tolessen, decrease, shrink; குறைதல் (அக. நி ) 2.To close the petals, as a flower; குவிதல் தவ்வாதிரவும் பொலிதாமரையின் (கம்பரா. சரபங். 2). 3.To perish, decay, waste away; கெடுதல் 4. Tofail; தவறுதல் எறிந்த வீச்சுத் தவ்விட (கம்பரா. அதிகாயன் 213).  ; tavvu-   v. intr. தாவு-. [K.tavu.] 1. To leap, jump, spring; தாவுதல் தவ்வுபுனல் (திருவாலவா. 30, 32). 2. To tread gently மெல்ல மிதித்தல் தவ்விக்கொண்டெடுத்த வெல்லாம்(இரகு. ஆற்று 19). 3. To boast; to be arrogant;அகங்கரித்தல். அதிகமாகத் தவ்வாதே. 

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

தன்மை குணம்; இயல்பு; நிலைமை; முறை; பெருமை; ஆற்றல்; நன்மை; மெய்ம்மை; தன்னைக்குறிக்குமிடம்; ஒரணி.

இழந்து - இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் காதலிக்கிறார்கள். அக்காதலை வளர்ப்பது இந்த ஊர் மக்கள் என்கின்றனர் காதலர்கள். ஏனெனில் ஊர் மக்கள் காதலர்களின் காதலைப் பற்றிப் புறத்தில் பேசி பேசி இவர்கள் காதலை வளர்க்கின்றனர். அப்படி இவர்கள் மட்டும் பேசிவளர்க்கவில்லையென்றால் இவர்கள் காதல் காதலின் தன்மையான வளர்தலை இழந்து மெலிந்து சும்பி போயிருக்கும்.

இங்கே நாம் முக்கியமாக நோக்கவேண்டியது காதலின் தன்மையானது வளர்தல் - வளர்ந்துகொண்டே இருத்தல். அது வளர்ந்துக்கொண்டே இருக்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தாதுளர் கானல் தவ்வென் றன்றே” (நற்.319:2)
“வெவ்வெங் கலுழி தவ்வென்க் குடிக்கிய” (குறுந் 356:4)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) காமம் கவ்வையால் கவ்விது - என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் தன்மை இழந்து தவ்வென்னும் - அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும். (அலர்தல்: மேன்மேல் மிகுதல். செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார். இயல்பு: இன்பம் பயத்தல், 'தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி: 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென றசைஇத் தாழ்துளி மறைப்ப' (நெடுநல்.184-85) என்புழியும் அது.).

மணக்குடவர் உரை
அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்; அவ்வலரில்லை யாயின் தனது தன்மை யிழந்து பொலிவழியும். செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்.

மு.வரதராசனார் உரை
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை
ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.

உறாஅதோ ஊரறிந்த கெளவை

குறள் 1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்

அதோ - சேய்மைச்சுட்டு; படர்க்கைச்சுட்டு; சுட்டிக் கவனிக்கச் செய்தற்குறிப்பு; கீழ்

ஊர்  - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.

அறிந்த - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

கௌவை?  - ஒலி; வெளிப்பாடு; பழிச்சொல்; துன்பம்; கள்; எள்ளிளங்காய்; ஆயிலியநாள்; செயல்.

அதனைப் - அதன் - It's   It's   It's , அதனுடைய

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பெறா - உறவை பெறாவிட்டாலும்

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு

பெற்று பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு.

நீர்த்து - நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

முழுப்பொருள்
உறா என்றால் பெறமுடியாதது என்று பொருள் ஏனெனில் உறாவொற்றி என்றால் மீளா வெற்றி என்று பொருள்.

காதலர்கள் நினைத்துக்கொள்கிறார்கள் மீண்டும் பெறவே முடியாதது எங்கள் காதல் உறவு என்று நினைத்தோம். அதனால் வாடினோம். ஆனால் இந்த ஊராருக்கு எங்கள் காதலைப் பற்றித் தெரிந்திருக்கிறது. அவர்கள் எங்கள் காதலைப்பற்றிப் (பழியாகவோ அல்லது வம்பாகவோ) பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஊருக்கே எங்கள் காதல் வெளிப்டையானதால் பெறமுடியாது என நினைத்த எங்கள் காதலை /(திருமண) உறவை நாங்கள் பெற்றதுப்போல் (பெறுவதற்கும் ஏதுவாக) ஆயிற்று. ஊரார் பேச்சு காதலர்களை ஒன்று சேர்க்கும் தன்மைவாய்ந்தது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஊர் அறிந்த கௌவை உறாஅதோ - எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ; அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான். (பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஊரறிந்த அலர் வருவதொன்றன்றோ? அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது, பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளல் வேண்டும். இஃது அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமராவார் உடன்படுவரென்று தலைமகன் கூறியது.

மு.வரதராசனார் உரை
ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று

மலரன்ன கண்ணாள் அருமை

குறள் 1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
மலர் - பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர்.

அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

கண்ணாள் - கலைமகள், நாமகள்; kaṇ-ṇ-āḷ   n. id. Belovedwoman; கண்ணாட்டி. (யாழ். அக.); kaṇṇāḷ   n. id. Sarasvatī,the goddess of learning; சரசுவதி (பிங்.)

அருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியாது - உணராமல்

அலர் - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி. alar   n. அலர்-. 1. Full-blownflower; மலர் (திவா.) 2. (Akap.) The idle talkin a village about any two lovers, dist. fr. அம்பல் பலருமறிந்து கூறும் புறங்கூற்று (குறள், 1142.)3. Joy; மகிழ்ச்சி (பிங்.) 4. Water; நீர் (பிங்.)5. Turmeric. See மஞ்சள் (மலை.) 6. Blackpepper. See மிளகு (மலை.) 

எமக்கு - எனக்கு

ஈந்து - īntu   n. Poison; நஞ்சு. (சங். அக.)ஈந்து

ஈந்தது - ஈ -கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To give, give to inferiors, give alms, be stow, grant, exercise liberality, கொடுக்க. 2. To distribute, apportion, divide among several, divide in arithmetic, பகிர்ந்துகொ டுக்க. 3. To devote, offer, present, அளிக்க. 4. (p.) To abound in benevolence, சொரிய. --Note. Giving alms is prescribed as one of the six duties of a Brahman. See தொ ழில். ஈயார்தேட்டந்தீயார்கொள்ளுவர். That which misers have hoarded will be carried off by the vicious. நூற்றைப்பத்துக்கீ. Divide a hundred by ten, (lit.) distribute a hundred among ten. தண்ணீருமீயான். He will not give even water.

இவ் - இந்த

ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.

முழுப்பொருள்
மலரினை போன்ற அழகான மென்மையான எனது அன்பிற்குரிய காதலியின் அருமை பெருமை அறியாத இந்த ஊர் மக்கள் எங்கள் காதலைப்பற்றி புறம் பேசினார்கள். இந்த புறம் பேசுதல் எனக்கு நன்மையே ஈன்றது. ஏனெனில் 1) நான் அவளை பிரிந்து இருக்கும் பொழுதும் என் நினைப்பை அவள் மனதில் அகலாமல் பார்த்துக்கொண்டது ஏனெனில் என்னை பற்றி பேச பேச என் நினைவு அவள் மனதில் மீண்டுக்கொண்டே இருந்தது. அதனால் காதல் வேர் மிக ஆழமாக ஊன்றியது 2) இப்படி பேசுவதனால் அவளை வேறு யாரும் நெருங்கவும் இல்லை. 3) அந்த பெண்ணுக்கும் தோன்றும் எங்களைப்பற்றி ஊரே இப்படி பேசி விட்டது இனிமேல் வேறு யாரை நான் விரும்ப முடியும். இவனை தான் விரும்பியாக வேண்டும் என்று.

புறம் பேசுதல் தவறு என்று கூறும் பொழுது இது போன்று காதலைப் பற்றி புறம் பேசுதல் காதலர்களுக்கு நன்மை செய்து விடும். ஆதலால் சில இடங்களில் பேசாது இருப்பது நல்லது. ஊரே பேசி பேசி இந்த காதலை வளர்த்துவிடும்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது. (அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.).

மணக்குடவர் உரை
பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார். எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.

மு.வரதராசனார் உரை
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

சாலமன் பாப்பையா உரை
மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்

குறள் 1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
நெய் வெண்ணெயைஉருக்கிஉண்டாக்கும்பொருள்:வெண்ணெய்; எண்ணெய்; புழுகுநெழ்; தேன்; இரத்தம்; நிணம்; நட்பு; சித்திரைநாள்.

'நெய்யால்- நெயினால், எண்ணெயினால்

எரி - நெருப்பு; வேள்வித்தீ; தீக்கடைகோல்; ஒளி; அக்கினிதேவன்; நரகம்; கார்த்திகை; புனர்பூசம்; கந்தகம்; இடபராசி; கேட்டை; வால்மீன்வகை.

எரி - (வி)எரிஎன்ஏவல்; ஒளிர்; அழல்; பொறாமைகொள்; சினங்கொள்; வயிறெரி.

நுதுத்தல் - அவித்தல்; அழித்தல்; நீக்குதல்.
நுதுப்பு - nutuppu   n. நுது-. Quenching,suppressing; தணிக்கை (W.)  ; தணிப்பு

நுதுப்பேம் - தணிப்பேன்

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
என்றற்றால்-' என்று + அற்றால்

கௌவை -ஒலி; வெளிப்பாடு; பழிச்சொல்; துன்பம்; கள்; எள்ளிளங்காய்; ஆயிலியநாள்; செயல்.

யான் - நான்

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நுதுப்பேம் - தணிப்பேன்

எனல் - என்றது

முழுப்பொருள்
தலைவன் தலைவிக்கும் இடையே உள்ள காதல் என்பது அவர்கள் பழகும் பொழுது வளரும். காதலை நினைத்து நினைத்து வளரும். இதை தெரிந்த ஊர் மக்கள் உறவினர்கள் இந்த காதலை வளரவிடக்கூடாது அழிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இவர்கள் அனைவரும் பல இடங்களில் கூடி நின்று பேசி, எங்களை பற்றி பழிச்சொல் சுழல விட்டு, எள்ளிநகையாடுவது உண்மையில் எங்கள் காதலை வளர்க்குமே தவிர அழிக்காது. இவர்கள் கூடி நின்று பேசுவது என்பது எரிந்துக்கொண்டு இருக்கும் நெருப்பில் நெய்யினை ஊற்றுவது போல் ஆகும். தீயின் செந்தழல் நெய்யினை பருகி பருகி வளரும். அதுப்போல எங்கள் காதலும் வளரும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும். (மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று நினைத்தாற்போலும்; அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல். இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

காதலித்து விட்டேனாம் ஊரார் அதைக்
காண்பது போல் செய்தேனாம் என்றும் எங்கும்
கூடி அவர் கொண்டேனாம் ஊரைப் பற்றிக்
கொஞ்சம் கூட நினைப்பின்றி நடந்தேனாம் நான்
தேடி இதை ஊரெங்கும் சொல்வதனால் நான்
திருந்திடவா வாய்ப்புண்டு காமத்தீயைப்
பேசி இவர் அணைத்திடவே நினைத்தல் நெய்யால்
பெருந்தீயை அணைத்திடவே முயல்தல் ஆகும்

அலரெழ ஆருயிர் நிற்கும்

குறள் 1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
அலரறிவுறுத்தல் - அலர் + அறிவுறுத்தல்

அலர்  - பலரும் அறிந்து புறங்கூறல், பலரறிந்துபழிதூற்றுகை

எழ - எழல் - எழும்பல்; கிளர்ச்சி; தோன்றுதல்; புறப்படுதல்; உதித்தல்; மேற்பட்டுவருதல்; துயரம்.

ஆர் - நிறைவு; பூமி; கூர்மை; அழகு; மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி; ஆரக்கால்; தேரின்அகத்தில்செறிகதிர்; அச்சுமரம்; செவ்வாய்; சரக்கொன்றை; அண்மை; ஏவல்; பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப்பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன்; ஆதன்; ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து; ஓசை; ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்.

நிற்கும் - நிலைக்கும்

அதனைப் பலர் - தெரியாத ஒன்றை மற்றவர்கள், பிறர்

அறியார் பாக்கியத்தால் - அறிவதனால் ஏற்படும் நன்மையால்

முழுப்பொருள்
திருமணத்திற்கு முன் காதலர்கள் கூடி புணர்ச்சி கொள்வர். அப்படி புணர்ச்சிக்கொண்ட பின்பும் அவர்களால் எல்லோரிடமும் தங்கள் உறவை முறையாக தெரிவிக்க முடியவில்லை. அவர்களும் ஒன்றாக இல்லை. பிரிந்து இருக்கிறார்கள். அப்படி பிரிந்திருப்பதால் உயிரற்று இருப்பதற்கு சமானம். 

ஆனால் இவர்களுடைய காதலை ஊர் மக்கள் புறங்குறினால் என்ன ஆகும்? அது கிசு கிசு வாக ஏழும். அது உயிரற்ற இவர்கள் காதலுக்கு ஆருயிர் பாய்ச்சி நிலைநிறுத்த ஏதுவாக இருக்கும்.   ஏனெனில் இது ஊரில் பலருக்கும் தெரியவந்ததால் எனக்கும் அவளுக்குமான உறவு உறுதிபடுத்தும். ஆக மக்கள் புறங்குறுவது இவர்களுக்கு மிகுந்த பாக்கியமே. ஆனால் ஊர் மக்களுக்கு தெரியாது அவர்கள் பேசி பேசி இவர்களுக்கு நல்லது செய்கிறார்கள் என்று!! 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , களவொழுக்கம் வேண்டிய தலைமகன் பிறர் கூறுகின்ற அலர் தனக்காகின்றவற்றைத் தோழிக்கு அறிவுறுத்தலும் , வரைவாக உடன் போக்காக ஒன்று வேண்டிய தலைமகளும் தோழியும் அவ்வலரை அவன்றனக்கு அறிவுறுத்தலும் ஆம் . இது நாணுத் துறந்தவழி நிகழ்வதாகலான் , நாணுத்துறவுஉரைத்தலின் பின் வைக்கப்ப்பட்டது.]

(அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவன் சொல்லியது.) அலர் எழ ஆர் உயிர் நிற்கும்-மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால் பலர்அறியார் - அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானே அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார். (அல்ல குறிப்பட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும்,அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம், ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான்,' என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.

மணக்குடவர் உரை
நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும். அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்: அறிவாராயின் எமக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார், இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(அல்லகுறிப்பட்ட பின்வந்த தலைமகனைத் தோழி அலரறிவுறுத்தி வரைவு கடாயவிடத்து, அவன் சொல்வியது.)

அலர் எழ ஆருயிர் நிற்கும்-என் காதலியோடு எனக்குள்ள தொடர்பு அலராயெழுகின்றதனால், அவளைப் பெறாது வருந்தும் என் அருமையான வுயிர் அவளைப் பெற்றது போன்றுமகிழ்ந்து நிலை பெறும்; அதனைப் பாக்கியத்தாற் பலர் அறியார்-அவ்வுண்மையை என் நற்பேற்றினால் அலர் கூறும் பலரும் அறியார்.

அல்லகுறிப்படுதலாவது, இரவுக்குறிக் காலத்தில் தலைமகன் வரவறிவிக்குங்குறி தற் செயலாக நிகழ்ந்து, தோழியுந் தலைமகளுஞ் சென்று தலைமகனைக் காணாது திரும்புதல்.

உயிரினுஞ் சிறந்ததொன் றின்மையான் 'ஆருயிர்' என்றும்; தன் காதலியைப் பெறாமையல் அவ்வாருயிர் மிகத் துன்புற்று நீங்கும் நிலையிலிருத்தபோது, அலரெழுந்து பெறற்கரியவளை எளியளாக்கி அவளைப் பெறுதற்குத் துணையாக நின்றமையின், 'அலரெழ வாருயிர் நிற்கும்' என்றும் ; அதை அலர்கூறுவார் அறிந்திருப்பின் அது கூறாராதலானும், அதனால் உயிர் போமாதலானும், அங்ஙனம் போகாது தடுக்கின்ற அவரறியாமை தனக்கு நற்பேறாக (Blessing in disguise) வாய்த்ததென்றும்; கூறினான். முற்றும்மை செய்யுளால் தொக்கது.

மு.வ உரை
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை
ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காதலித்து விட்டேனாம் என்னை விட்டு
கண்ணாளர் பிரிந்தாராம் ஊரே கூடி
பேதலித்து விட்டேன் நான் என்று சொல்லி
பின்னாலும் முன்னாலும் பேசி நிற்பார்
ஆதரவே அவர் தூற்றல் அதனாலன்றோ
ஆருயிரும் அழியாமல் நிற்கின்றது
காதலினை அவர் பேசப் பேசப் பேச
கவலையின்றி வாழுகின்றேன் நல் வினையால்

நம் காதலின் உயிர்ப்பு.... !!! (நன்றி: கவிப்புயல் இனியவன்)

நம் காதலின் உயிர்ப்பு....
காதலின் மகத்துவம்....
புரியாதடி ஊர் மக்களுக்கு.....
ஊர் வாயை மூட முடியாது ..
எதுவென்றாலும்  பேசிட்டு ...
போகட்டும் .....!!!

ஊரவரின் பேச்சு ....
எம் காதலுக்கு மூச்சு ...
அவர்கள் பேச பேச தான்
நம் காதல் வளர்கிறது ..
என்பதை மறந்து விட்டார்கள் ...!!!

காதலிப்பது யாருக்கும் தெரியாது என்றால்....காதல் நிறைவேறாவிடின்..வருத்தமுறும் காதலன் நிலை ஏன் இப்படி ஆயிற்று என யாருக்கும் தெரியாது.ஆனால்..அதுவே ஊருக்கே தெரிந்துவிட்டால்..வேறு வழியின்றி காதல் நிறைவேறியே ஆகும்.இதைத்தான் வள்ளுவன் மறைமுகமாக இக் குறளில் உணர்த்துகிறானோ?

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்கியம்.

ஊரவர் கெளவை எருவாக

குறள் 1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்

அலரறிவுறுத்தல் - அலர் + அறிவுறுத்தல்
அலர்  - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி.
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
உறுத்தல் - உறுத்துதல்; மிகுக்கை; ஒற்றுகை.


அம்பல் - சிலரறிந்து புறங்கூறுமொழி, கிசுகிசு, பழிச்சொல், பழிமொழி, பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை,

ஒரு விசயம் சிலருக்கு மட்டும் தெரிவது அம்பல். ஊரே அறிந்தால் அலர்.

அறிவுறுத்தல் - உபதேசித்தல், போதித்தல்

ஊரவர் - ஊரார், அன்னியர், (தன்னை வீடு, அலுவலுகம் போன்ற சுற்றத்தில் உள்ள மக்கள்)

கெளவை - kauvai   n. prob. hvay. 1. Sound,noise, roar; ஒலி குயிற் கெளவையிற் பெரிதே(ஐங்குறு. 369). 2. Disclosure; வெளிப்பாடு கற்பொடு புணர்ந்த கெளவை (தொல். பொ 41). 3. Ill-report, scandal, disrepute; பழிச்சொல் கல்லென்கெளவை யெழாஅக் காலே (ஐங்குறு. 131). 4. Affliction, distress; துன்பம் (பிங்.) 5. Toddy; கள் (பிங்.)  

எரு - உரம்; சாணி; வறட்டி; பசளை; மலம்

எருவாக - உரம்

அன்னை - தாய்; தமக்கை தோழி பார்வதி

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

அன்னைசொல் - தாயின் கடுஞ்சொல்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.
நீளுதல் - நீடுதல்; பெருமையாதல்; ஓடுதல்; நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல்.

நீராக நீளும் - பயிருக்கு (எரு மற்றும்) நீர் விட்டு செழுமையாய் வளர்வதுப் போல வளரும்

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

இந் நோய் - இந்த காதல் (காம) நோய்



முழுப்பொருள்
1) இந்த (களவு காதல்) காதல் ஊருக்கு தெரிய வர அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிசு கிசு-த்து (அம்பல்) கொண்டது சென்று இப்பொழுது (அலர்கிறார்கள் - ) பலரும் அறிந்து வெளிப்படையாக பேசுகிறார்கள். இது அறிந்து பெண்ணின் தாய் அவளை கடுமையாக ஏசுகிறாள். 

காதலர்கள் இருவரும் பிரிந்து இருக்கும் போது அவர்கள் தவிக்கும் காதல் நோய் என்னும் பயிருக்கு ஊராரின் இத்தகைய அலர்ப் பேச்சு இக்காதலுக்கு உரமாகவும் (எருவாகவும்) தாயரின் கடுஞ்சொல் நீராகவும் அமைது பயிர் (காதல் நோய்) செழுமையாக வளர உதவுகிறது. 

2) பண்டைத் தமிழர் அகவாழ்வில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உருவான களவுப் புணர்ச்சியை அறிந்த ஊரார், தம்முள் அதுகுறித்துப் பேசிக்கொள்வது ‘அம்பல்’ என்றும் ‘அலர்’ என்றும் ‘கெளவை’ என்றும் கூறப்பட்டது. பழிதூற்றல், புறங்கூறல் எனவும் பொருள் கொள்ளலாம். சிலரிடையே முகக்குறிப்பால், கண்களால், செய்கையால் நிகழுதல் ‘அம்பல்’ எனப்படும்; பலரும் பேசத்தொடங்கினால் ‘அலர்’ எனப்படும்.அம்பலாலும் அலராலும் காதலரின் களவு வெளிப்படும்.

தீ வாய் அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்
எனும் நற்றிணைப் பாடல் வாயிலாய், அலர் தூற்றலில் பெண்களே அதிகமதிகம் ஈடுபடுவர் என்பது புலப்படுகிறது.

ஒப்புமை
”ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னைசொல் நீர்ப்படுத்து
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்
பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த
காரமர் மேனிநம் கண்ணன் தோழீ கடியனே” (திருவாய் 5.3:4)

பரிமேலழகர் உரை
வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, 'ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்' எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது. இந்நோய் - இக்காமநோயாகிய பயிர்; ஊரவர் கெளவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது.

விளக்கம் 
('ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏகதேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.) ---

மணக்குடவர் உரை
ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக இந்நோய் வளராநின்றது. இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டிற்கும் வரைவானாதல் பயன்.

மு.வ உரை
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.

நன்றி: ரிஷ்வன்

ஊராரின் பழிச்சொல்
உரமாகவும்
மாதாவின் கடுஞ்சொல்
நீராகவும்
காதலால் மலர்ந்த எம்
காமப்பயிர்
கருக விடாமல்
வளர உதவுகிறது.

நன்றி: தமிழ் மன்றம்

காதல் நோய்

அழுது அழுது காஞ்சனாவின் கண்கள் சிவந்திருந்தன. முகம் வீங்கிப்போய் இருந்தது.அம்மாவின் சொற்கள் ஈட்டிகளாக நெஞ்சில் பாய்ந்தன.

" இதோ பாரடி! அந்த மாடிவீட்டுக்காரங்க பரம்பரை பணக்காரங்க; நாம பரம ஏழைங்க; காதல் கத்திரிக்காய் எல்லாம் புத்தகத்துல படிக்கறதுக்கும்,சினிமாவுல பாக்குறதுக்குந் தாண்டி நல்லாயிருக்கும்; நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராதுடி; கால்வயித்துக்கு கஞ்சி குடிச்சாலும் மானத்தோட வாழ்ந்திட்டு இருக்கோம். அதுல மண் அள்ளி போட்டுராதடி.அந்தப் பையன மறந்துடு; நானே நல்ல பையனாப் பாத்து உனக்குக் கட்டி வக்கிறேன். என் வார்த்தைய மீறி ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணினேன்னு வச்சுக்கோ, அப்புறம் இந்த அம்மாவ நீ உசிரோட பாக்கமாட்டே!"

" என்ன மன்னிச்சிடம்மா! உன் வார்த்தைய மீறி நான் எதுவும் செய்யமாட்டேன்" என்று சொல்லி தன் காலில் விழப்போனத் தன் மகளைக் கட்டி அணைத்துக் கொண்டாள் முனியம்மா.

" சரி,சரி அழாதே! குடத்த எடுத்துக்கிட்டு ஆத்துக்குப்போய் தண்ணி கொண்டா; சமையல் பண்ணனும்."

" சரி அம்மா!" என்று சொல்லிய காஞ்சனா குடத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றாள்.

ஆற்றில் இறங்கி குடத்தைக் கழுவிக்கொண்டு இருந்தாள் காஞ்சனா. சற்று தூரத்தில் இருந்த இரண்டு பெண்கள், காஞ்சனாவின் காதுபடவே பேசத் தொடங்கினர்.

" விமலா! தெரியுமா சேதி " என்றாள் கமலா.

" சொன்னாத்தானே தெரியும் " என்றாள் விமலா.

" வெளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கேக்குது "

" கொஞ்சம் புரியிறமாதிரி சொல்லடி "

" இவ கெட்ட கேட்டுக்கு மாடிவீட்டுப் பையனுக்கு வலை வீசியிருக்கா! " என்று காஞ்சனாவை ஜாடை காட்டிப் பேசினாள் கமலா.

" நமக்கு எதுக்குடி ஊர்வம்பு? எவ எக்கேடு கெட்டுப்போனா நமக்கென்ன?" என்றால் விமலா.

குடத்தில் நீரை மொண்டு இடுப்பில் வைத்துக்கொண்டு நடந்தாள் காஞ்சனா. கண்களில் வழிந்த நீரைக் கைகளால் துடைத்துக்கொண்டாள்.

ஊரார் பேசிய ஏச்சுக்களையும், அன்னை பேசிய பேச்சுக்களையும் மீறி மாடிவீட்டுப் பையனுடைய நினைவுகள், மனத்திரையில் மீண்டும் மீண்டும் வருவதைக் காஞ்சனாவால் தடுக்கமுடியவில்லை.

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்.

கருத்து: ஊரார் பேசுகின்ற பழிச்சொல் எருவாகவும், அன்னைசொல் நீராகவும் துனணநிற்க, காதல் பயிரானது செழித்து வளர்கிறது.