Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label அவர்வயின்விதும்பல். Show all posts
Showing posts with label அவர்வயின்விதும்பல். Show all posts

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்

 

குறள் 1270
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

ஆம் -  நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

கால் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

பெற்றக்கால் - அப்படியே பெற்றுவிட்டாலும்

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

ஆம் -  நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

உறின் - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

ஆம் -  நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

உள்ளம் -  மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உடைந்து - உடைதல் - தகர்தல்: உலைதல்: கெடுதல்: மலர்தல்: பிளத்தல்: முறுக்கவிழ்தல்: எளிமைப்படுதல்: புண்கட்டியுடைதல்: ஆறுமுதலியனகரையுடைதல்: அவிழ்தல்; தோற்றோடுதல்; வெளிப்படுதல்

உக்கக் - உக்கு-தல் - ukku-   5 v. intr. உட்கு-. [M.ukku.] 1. To rot, decay, moulder; மக்கிப்போதல். உக்கினமரம். 2. To pine away, waste away;மெலிதல். அவள் துக்கத்தால் உக்கிப்போகிறாள். Loc.  

கால் காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

முழுப்பொருள்
தலைவி தலைவனின் பிரிவால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளாள். அவள் நெஞ்சம் மிகவும் வருந்தியுள்ளது. அத்தகைய நிலையில் அவளுக்கு ஒரு ஐயம்? ஒருவேலை இந்த பிரிவின் துன்பம் தாங்காமல் என் உள்ளம் உடைந்து எங்கள் காதலும் மக்கிவிட்டால் பின்பு பிரிந்து சென்ற என் தலைவருடன் இனி சேர்க்கூடும் என்றாலும் என்ன ஆக போகிறது? அல்லது அவர் திரும்பி என்னிடம் வந்தால் தான் என்ன ஆக போகிறது? அல்லது அவர் வந்த உடன் அவருடன் கூடினால் தான் என்ன ஆகப்போகிறது? என்று தலைவி கூறுகிறாள்.

அதாவது எல்லாத் துன்பத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது. அத்துன்பம் எல்லையை கடந்துவிட்டால் நெஞ்சம் உடைந்துவிடும். பின்பு ஒட்டினாலும் அது முன்போல் இருக்காது என்பதே தலைவியின் ஐயம். மிகவும் நியாயமான ஒன்று. இது பிரிவு என்றில்லை. எல்லாவித துன்பத்திற்கும் பொருந்துவதாகவே இருக்கிறது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி; பெறின் என் - நம்மைப் பெறக்கடவளானால் என்? பெற்றக்கால் என் - அதுவன்றியே பெற்றால் என்? உறின் என்? - அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை. (இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன. அதன்மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.).

மணக்குடவர் உரை
எனது உள்ளம் உடைந்து போயின் பின்பு அவரைப்பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?. இது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?.

சாலமன் பாப்பையா உரை
என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

 

குறள் 1268
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

கலந்து - கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

வென்று - வெல்லுதல்
வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

ஈக - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

மனை - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய்.

கலந்து - கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

மாலை  - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

அயர் - ayar   s. langour, அயர்வு; 2. distress. அயர்வுயிர்த்தல், recovering from langour.  , ayar   VI. v. t. forget, மற., வாட்டம்; 
அயர் -அயர்-தல் - ayar-   4 v. intr. To play, sport;விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரை யயரும்(கலித். 82).

கம் - வானம்; காற்று; மேகம்; வெண்மை; உயிர்; தலை; நீர்; ஆடு; தொழில்; கம்மியர்தொழில்; வீட்டின்பம்; மண்டையோடு; பிரமன்.

விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.

முழுப்பொருள்
தலைவி கூறுவதாக
என்னைப் பிரிந்து போருக்கு சென்ற என் வேந்தன் போரிலே வென்று வரட்டும். ஏனெனில் அதுவே அவருக்கு இன்பம்/வெற்றி. சரி, வந்து என்ன? தலைவன் வீட்டிற்கு வந்து நானும் தலைவனும் மாலையில் கூடி தழுவி முயங்கிப் புணர்ந்து விளையாடும் வீட்டின்பத்தை எனக்கு விருந்தாக படைக்கட்டும் என்று தலைவி கூறுகிறாள்.

நற்றிணைப் பாடலொன்றும் இக்கருத்தை ஒட்டியிருப்பதைப் பார்க்கலாம்.

“பூண்கதில் பாகநின் தேரே....
அரிவை
விருந்தயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன்னகை காண்கம்” (நற்றினை 81:5-9)

“நெடுநா ஒண்மணி பாடுசிறந் திசைப்ப
மாலை மான்ற மணல்மலி வியனகர்த்
தந்தன நெடுந்தகைத் தேரே என்றும்
அரும்படர் அகல நீக்கி,
விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே” – (நற்றிணை: 361:5-9)

குறுந்தொகைப் (155: 6-7)பாடல் கூறுவதையும் காணலாம்.

“மாலை நனிவிருந் தயர்மார் தேர்வரும் என்னும் உரைவா ராதே”

”விருந்தும் பெறுகுநள் போலும் திருந்திழைத்
தடமென் பணைத்தோள் மடமொழி யரிவை...
செல்லு நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர்புக லாய்ந்தே” (அகநா.324:1-15)

“மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்தோ பெற்றனள் திருந்திழை யோளே” (அகநா 384:13-4)

இன்றைய இரண்டாவது குறளுக்கான காரணம், போர் செய்தமன்னன், முயங்கற் போர்க்கு தம் தலைவனை அனுப்பவேண்டும் என்பதற்காக.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) வேந்தன் வினை கலந்து வென்று ஈக - வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல்வானாக; மனை கலந்து மாலை விருந்து அயர்கம் - யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக. (மனை என்பது ஈண்டு ஆகுபெயர். 'மங்கலம் என்ப மனை மாட்சி' என்புழிப்போல. வினைசெய்தற்கண் வந்த மாலைப்பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தல் முதலிய இன்மையின், 'மனைகலந்து மாலைக்கு விருந்தயர்கம்' என்றான். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இது வினை முடியாமுன் கூறலான், விதுப்பாயிற்று. பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க என்றும், மனை கலந்து என்றும், மாலைப்பொழுதின் கண் விருந்தயர்கம் என்றும் வந்த, அவ்வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று.).

மணக்குடவர் உரை
நம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வானாக: யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப்பொழுதிலே நம்காதலர்க்கு விருந்து செய்வேமாக. வருதற்கு இடையீடு அவன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள். மனை - அட்டில்.

மு.வரதராசனார் உரை
அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.

சாலமன் பாப்பையா உரை
அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

 

குறள் 1267
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
புலப்படுதல் - தெரிதல்; வெளிப்படுதல்.

புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

கொல்(லு)-தல் - kol-   3 v. tr. [K. M. kol.]1. To kill, slay, murder; வதைத்தல் கொன்றன்னவின்னா செயினும் (குறள், 109). 2. To destroy,ruin; அழித்தல் கொன்றான்காண் புரமூன்றும் (திருவாச. 12, 16). 3. To fell, cut down; வெட்டுதல் மரங்கொஃ றச்சர் (சிலப். 5, 29). 4. To reap, asthe heads of grain; கதிரறுத்தல். நெற்கதிரைக்கொன்று களத்திற் குவித்து (தொல். பொ 76, உரை).5. To afflict, tease; துன்பப் படுத்துதல் நின்னலங் காட்டி யெம்மைக் கொன்றாயென (சீவக. 642).6. To neutralize metallic properties by oxidation; இரசமுதலியவற்றின் விஷத்தன்மையைக் கெடுத்தல்  

புலப்பேன்கொல் – ஊடி வெறுப்பேனோ?

புல்லுவேன்  - புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

கொல்லோ- கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

கொல்(லு)-தல் - kol-   3 v. tr. [K. M. kol.]1. To kill, slay, murder; வதைத்தல் கொன்றன்னவின்னா செயினும் (குறள், 109). 2. To destroy,ruin; அழித்தல் கொன்றான்காண் புரமூன்றும் (திருவாச. 12, 16). 3. To fell, cut down; வெட்டுதல் மரங்கொஃ றச்சர் (சிலப். 5, 29). 4. To reap, asthe heads of grain; கதிரறுத்தல். நெற்கதிரைக்கொன்று களத்திற் குவித்து (தொல். பொ 76, உரை).5. To afflict, tease; துன்பப் படுத்துதல் நின்னலங் காட்டி யெம்மைக் கொன்றாயென (சீவக. 642).6. To neutralize metallic properties by oxidation; இரசமுதலியவற்றின் விஷத்தன்மையைக் கெடுத்தல்  

கலப்பேன் - கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

கொல் -  இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

கேளிர் - தோழர்; உறவினர்.

வரின் - வரும்/ வந்தால்

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து சென்றுள்ளான். பிரிந்து சென்ற கணவன் வந்தால் தன்னிலை என்ன என்று கவலைப்படுகிறாள் தலைவி. அது என்ன பொல்லாத கவலை?

கண்களே முகத்திற்கு ஒளி. கண்களே முகத்திற்கு அழகு சேர்க்கின்றன. தலைவிக்கு தலைவனே வாழ்வின் ஒளி. தலைவியின் அகத்திற்கு அழுகு சேர்ப்பது அவள் தலைவனின் மீது கொண்ட காதல். 

தலைவியின் கண்ணைப்போன்ற தலைவன் திரும்பி வந்தால், ஏன் என்னை பிரிந்து சென்றீர்? ஏன் இத்தனை நாட்கள் ஆகியது என்னிடம் திரும்பி வர? ஏன் என்னைப் பற்றி நினைக்காமல் எனக்கு ஒரு தூதுக்கூடச் சொல்லி அனுப்பாமல் இருந்தீர் என்று தலைவருடன் ஊடல் செய்வதா? அல்லது (பிரிவை தாங்க முடியாத மனதை அடக்கமுடியாத என் நெஞ்சு விரும்பும் படியும் அவர் விரும்பும் படியும்) அவரை தழுவி கூடிப் புணர்வதா? இல்லை இவ்விரண்டும் கலந்த ஊடலையும் கூடலையும் சேர்த்தே செய்வதா? இதுவே தலைவியின் குழப்பமும் கவலையும் ஆகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின், புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ; புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ; கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்? (புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ'? என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
கண்போற் சிறந்தகேளிர் வருவாராயின், அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக் கடவேனோ: அன்றி என்னாற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ: அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக் கடவேனோ: யாதுசெய்யக் கடவேன்?.

மு.வரதராசனார் உரை
என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?.

சாலமன் பாப்பையா உரை
கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?.

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்

குறள் 1266
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
வருக - வருகை - arrival

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

வருகமன்வரட்டும்

கொண்கன் - கணவன்; நெய்தல்நிலத்தலைவன்.

ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

ஒருநாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

பருகுவன் - பருகுதல் - குடித்தல்; உண்ணுதல்; நுகர்தல்.

பைதல் -இளையது; சிறுவன்; குளிர்; துன்பம்.
paital   n. id. 1. That whichis young or small; இளையது. பைதல் வெண்பிறை(தேவா. 628, 5). சிறுகிளிப் பைதலே (திவ். திருவாய்.9, 5, 6). 2. Boy; சிறுவன். பைதலை யித்தனைபொழுதுகொண் டிருப்பதோ (கம்பரா. பிணிவீட். 2).3. Sorrow, affliction; துன்பம். பைத லுழப்பதெவன் (குறள், 1172). 4. Cold, chilliness; குளிர்.பனிப்படு பைதல் (பரிபா. 11, 75).

பைதல் - paital   v. n. of பை, sorrow, affliction, துன்பம்; 2. change of colour from love-sickness; 3. (பையல்) a boy.

பை - pai   -s. Bag, sack, purse, satchel, சாக்கு. 2. Hood of a cobra, பாம்பின்படம். 3. Any bladder, duct or sack in animal bodies, குடற்பை. (c.) 4. [ex பசு.] Color, நிறம். 5. Beauty, அழகு. 6. Green, பச்சை.

பைத்தல், v. noun. Sorrow, affliction. துன்பம். 2. Change of color from love- sickness, &c., as the verb.

நோய்  - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. 

எல்லாம் - முழுதும்

கெட - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து சென்று உள்ளான். அப்பொழுது பிரிவு தந்த பைதல் நோய் தலைவியின் மேனி முழுவதும் படர்ந்து அவளை மிகவும் துன்புறுத்துகிறது. துன்பத்தில் தவிக்கும் தலைவி நினைக்கிறாள், இருக்கட்டும் இருக்கட்டும், என்னை பிரிந்து சென்ற நெய்தல் நிலத்தை சார்ந்த என் தலைவன் ஒருநாள் திரும்பி என்னிடம் வந்து தானே ஆகவேண்டும். அப்பொழுது அவரை ஆரா பசிக்கொண்ட வேள்விப்போல உண்பேன். வேள்வி எவ்வாறு மாசுகளை எல்லாம் எரித்து சுத்தம் செய்யுமோ அதுப்போல அவருடன் மகிழ்ச்சையாக இருக்கப்போகும் நாட்கள் எல்லாம் என் பிரிவின் நோயை அழித்து அதன் நினைவுகளையும் அழித்து விடும் என்றென்கிறாள் தலைவி. 

இது பிரிவின் நோய் என்றில்லை, வாழ்வில் கஷ்டமான நாட்கள் இருந்தால் அதனால் தலைவி துன்புற்றால், அவற்றையெல்லாம் அழித்துவிட முடியும். ஆனால் அதற்கு தலைவன் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான் தலைவி மகிழ்ச்சியடையும் வண்ணம் செய்வனவற்றையெல்லாம் (தன் அடிப்படை கடமைகளை) செய்யவேண்டும் - என்பதை நாம் இக்குறள் கூறாவிட்டாலும் நாம் அவ்வாறு கண்டுக்கொள்ளலாம். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கூரா ராழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே” (திருவாய் 6.9:1)

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) கொண்கன் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன். ('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன். இது வரவு வேட்கையாற் கூறியது.

மு.வரதராசனார் உரை:
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

சாலமன் பாப்பையா உரை:
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

குறள் 1264
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
கூடிய - கூடுதல் - கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

பிரிதல் - பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.
பிரிந்தார் - பிரிந்து சென்றவர்

வரவு - வருவாய்; வருகை; வரலாறு; விளைவு; வழி; வணங்குகை

உள்ளி - உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )

கோடு - வளைவு; நடுநிலைநீங்குகை; யானையின்தந்தம்; விலங்குகளின்கொம்பு; ஊதுகொம்பு; நீர்வீசுங்கொம்பு; மரக்கொம்பு; யாழ்த்தண்டு; 'கெ', 'கே'முதலிவற்றின்தலைப்பிலுள்ளகொம்புக்குறியீடு; பிறைமதி; சங்கு; குலை; மயிர்முடி; மலையுச்சி; மலை; மேட்டுநிலம்; வரி; ஆட்டம்முதலியவற்றிற்குவகுத்தஇடம்; நீர்க்கரை; குளம்; காலவட்டம்; வரம்பு; ஆடைக்கரை; முனை; பக்கம்; அரணிருக்கை; கொடுமை; நீதிமன்றம்.

கொடு -நுகம்   n. id. +. 1.Yoke; நுகத்தடி (மரத்தடி) கொடுநுக நுழைந்த கணைக்காலத்திரி (அகநா. 350). 2. Plough; கலப்பை (பிங்.)3. The 10th nakṣatra. See மகம் (பிங்.)

ஏறும் - ஏறுதல் - உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல்.

என் - என்னுடைய

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள் "என்னுடன் கூடிவிட்டு பிரிந்தச் சென்ற காதலரை நினைத்து வருந்திக்கொண்டு இருந்தேன். அவர்மேல் கோபம் கூட இருந்தது. ஆனால் திரும்பி வரப்போகிறார் என்ற செய்தி கேட்டு என் வருத்தங்கள் கோபங்கள் என் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். மாறாக அவர் வரவை நோக்கி மரக்கிளைகளின் மேல் ஏறி அவர் வருவதை காண விழிநோக்கி ஆவலாய் இருக்கிறேன்" 

நாம் ஓர் இடத்தில இருந்து நின்று பார்த்தால் ஒரு ஆயிரம் அடி தூரத்தில் இருக்கின்றவை நமக்கு தெரியும். அதுவே ஒரு இருபது அடி உயரம் மேலே நின்று பார்த்தால் நமக்கு ஒரு கழுகின் பார்வைபோல் ஒரு இரண்டாயிரம் அடி தூரத்தில் இருப்பவை தெரியும். ஆதலால் கீழ் இருந்து பார்ப்பதை விட மேலிருந்து பார்த்தால் சற்று விரைவில் தெரிந்துக்கொள்ளலாம். தலைவியின் அந்த ஆர்வத்தையும் அவளது தலைவனை பார்க்க பொறுமையின்மையும் நுட்பமாக விவரிக்கிறார் திருவள்ளுவர்.

இக்காலத்தில் google-இல் flight status-உம், whatsapp-இல் location sharing செய்துக்கொண்டு அதில் இருக்கும் இடம் பார்த்து சந்தோஷப்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி - நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து; என் நெஞ்சு கோடு கொடு ஏறும் - என் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத் தெழாநின்றது. (வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும், அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், 'கூடிய காமமொடு' என்றாள், 'ஒடு' உருபு விகாரத்தால் தொக்கது. கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. கொண்டு என்பது குறைந்து நின்றது. 'அஃதுள்ளிற்றிலேனாயின் இறந்து படுவல்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப்பிரிந்தவர் வருவாராக நினைந்தே என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாராநின்றது. உயர்ந்த மரத்தின்மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள்.

மு.வரதராசனார் உரை
முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

குறள் 1263
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
உரன் - திண்மை; பற்றுக்கோடு வெற்றி வலி ஊக்கம், உள்ளமிகுதி மார்பு அறிவு

நசைஇ - நசை - ஆசை; அன்பு; நம்பிக்கை; எள்ளல்; குற்றம்; ஈரம்.

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

துணையாகச் - துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

சென்றார் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

வரல் - வருவதற்கு

நசைஇ -  ஆசை; அன்பு; நம்பிக்கை; எள்ளல்; குற்றம்; ஈரம்.

இன்னும் - இவ்வளவுகாலம்சென்றும்; மறுபடியும் மேலும் அன்றியும்

உளேன் - இருக்கிறேன் ; உயிர்வாழ்கிறேன்

முழுப்பொருள்
தன்னுடைய தொழிலில் (போர், வணிகம், வாணிபம்) வெற்றிப் பெறுவதை விரும்பி தனது உள்ளதை ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்றுவிட்டார் தலைவன். ஆனால் நானோ பிரிந்துசென்றவர் விரைவில் என்னிடம் வந்து சேர வேண்டும் என்று ஆசையாக அவருக்காக இன்றளவும் காத்திருக்கிறேன். அதனால் தான் உயிர் வாழ்கிறேன்.

1. தலைவனுக்கு தலைவியிடம் இன்பம் நுகர்தலைவிட வேறு ஆசைகள் இருக்கின்றன. ஆனால் தலைவிக்கோ தலைவன் மட்டுமே போதும். அவள் எண்ணங்கள் ஆசைகள் எல்லாம் தலைவன் மட்டும் தான். தலைவனைப்போல் தொழில் வெற்றி என்றெல்லாம் ஆசை மற்ற இடங்களில்  இல்லை. 

2. தலைவனுக்கு பிரிந்துசெல்லக்கூடிய ஊக்கம் மனத்திண்மை இருக்கிறது. ஆனால் தலைவிக்கோ அந்த மனத்திண்மை இல்லை. அதனால் தான் தலைவி பிரிந்துசெல்லவில்லை. தலைவனும் அதனை பொருட்படுத்தவில்லை. 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நவையறு குணங்கு ளென்னும்
பூணெலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக்
காணலா மின்னு மென்னும் காதலா லிருந்தேன் கண்டாய்” (கம்ப.மாயாசனகப் 22)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம் துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன். ('உரன்' என்பது ஆகுபெயர். 'அந்நசையான் உயிர் வாழா நின்றேன்,அஃதில்லையாயின் இறந்துபடுவல்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர் வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன். இஃது அவர் வாராரென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.

சாலமன் பாப்பையா உரை
என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.

இலங்கிழாய் இன்று மறப்பின்என்

குறள் 1262
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
இலங்கு - ilangku   III. v. i. shine, glitter, be bright, ஒளிசெய்.
இழை - நூல்; நூலிழை அணிகலன் கையிற்கட்டுங்காப்பு.
இலங்குதல் - ஒளிசெய்தல்; விளக்கமாகத்தெரிதல்.

இலங்கிழாய் - ஒளிமின்னும் அழகிய அணிகலன் அணிந்த தோழியே

இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.

மறத்தல் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு.

மறப்பின் - மறந்தால்

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.
தோள்மேல்

கலம் - உண்கலம்; பாண்டம்; குப்பி; கப்பல்; இரேவதி; அணிகலன்; யாழ்; கலப்பை; ஆயுதம்; ஓலைப்பாத்திரம்; ஒருமுகத்தலளவை; பந்தி; வில்லங்கம்.

கழியும் - கழிதல் -மிகுதல்; கடந்துபோதல்; நடத்தல்; குறைபடுதல்; அழிதல்; ஒழிதல்; சாதல்; முடிவடைதல்; வருந்துதல்; மலம்முதலியனவெளிப்படுதல்; அச்சங்கொள்ளுதல்.

காரிகை - பெண்; அழகு; அலங்காரம்; கட்டளைக்கலித்துறை; ஓர்யாப்பிலக்கணநூல்; ஒருநிறை; வாதனை.

நீத்து - நீத்தல் - பிரிதல்; துறத்தல்; தள்ளுதல்; இழித்தல்; வெறுத்தல்; விடுதல்; நீங்குதல்.

முழுப்பொருள்
தலைவனை பிரிந்த தலைவி தனக்குத்தானே கூறிக்கொள்கிறாள்: ஒளிமின்னும் அழகிய அணிகலன் அணிந்தவளே, இன்று நீ உன் காதலரை மறந்தால் பின்பு உன் தோள்மேல் உள்ள அணிகலங்கள் நீங்கி உன் அழகும் நீங்கிவிடும். தலைவி தனக்கு தான் சொல்லிக்கொள்கிறாள் தலைவியே தலைவனை நினைத்துக்கொண்டு இருப்பதே உனக்கு அழகு என்று. தலைவனை மறந்தால் அழகெல்லாம் நீங்கிவிடும்.

பி.கு: தலைவிக்கு தலைவனின் நினைப்பு இல்லை என்றால் அவள் அணிகலனும் அவளுடன் இருக்காதாம். தலைவிக்கு தலைவன் நினைப்பு இல்லை என்றால் அவளுக்கு அழகும் இல்லையாம். அப்படியா ? தலைவனை மறந்துவிட்டால் அவள் அழகில்லாதவளாகிவிடுவாளா என்ன ?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலை யல்லை; சிறிது மறக்கல் வேண்டும், என்ற தோழிக்குச் சொல்லியது.) இலங்கு இழாய் - விளங்காநின்ற இழையினை யுடையாய்; இன்று மறப்பின் - காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேல் காரிகை நீத்து என்தோள் கலங்கழியும் - மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம். ('இலங்கிழாய்' என்பது 'இதற்கு நீ யாதும் பரியலை' என்னும் குறிப்பிற்று. இன்று - யான் இறந்துபடுகின்ற இன்று. மேலும் - மறுபிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நீப்ப' என்பது , 'நீத்து' எனத் திரிந்து நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. 'இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி இன்புறலாம், அதனான் மறக்கற்பாலேன் அல்லேன'்,என்பதாம்.).

மணக்குடவர் உரை
இலங்கிய இழையையுடையவளே! யான் இன்று அவரை மறப்பேனாயின் பண்டை மெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலங்களையும் கழலவிடும். இலங்கிழாய் என்றவதனால் வருத்தமில்லாதவளே என்று விளித்தாளென்பது கொள்ளப்படும்.

மு.வரதராசனார் உரை
தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

சாலமன் பாப்பையா உரை
ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.

வாளற்றுப் புற்கென்ற கண்ணும்

குறள் 1261
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு.

அற்றுப் - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

புற்கு - puṟku   n. புன்-மை. Tawnycolour, dimness; கபிலநிறம். (திவா.)

புற்கென்ற - புற்கு என்ற

கண்ணும் - கண்

அவர் - காதலர்

சென்ற - பிரிந்துச் சென்ற

நாள் - நாள், பொழுது, தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

ஒற்றித் - ஒற்றுதல் - oṟṟu-   5 v. ஒன்று-. [T.K. ottu.]tr. 1. To bring into contact; to press, hug close;ஒன்றிற்படும்படி சேர்த்தல் வீணை . . . மாத ரணிமுலைத் தடத்தி னொற்றி (சீவக. 1746). 2. To stamp, asa seal; முத்திரையிடுதல். கொடுவரியொற்றி (சிலப். 5,98). 3. To spy out; உளவறிதல். கண்மா றாடவரொடுக்க மொற்றி (மதுரைக். 642). 4. To beat, ascymbals in keeping time; தாளம்போடுதல் காமருதாளம் பெறுதற் கொற்றுவதுங் காட்டுவபோல் (பெரியபு.திருஞான. 46). 5. To strike; அடித்தல் வேணுக்கோலின் மிடைந்தவ ரொற்றலின் (சீவக. 634). 6. Topress down; to press upon; அமுக்குதல் வெங்கணைசெவிட்டி நோக்கியொற்றுபு திருத்தி (சீவக, 2191). 7.To attack; தாக்குதல் பழனத்த புள்ளொற்ற வொசிந்தொல்கி (கலித். 77, 5). 8. To touch; தீண்டுதல் கதவொற்றிப் புலம்பியா முலமர (கலித். 8, 2). 9. Toembrace; தழுவுதல் சேஎச் செவிமுதற் கொண்டுபெயர்த்தொற்றும் (கலித். 103, 51). 10. To wipeaway, as tears; துடைத்தல் கொடியனாடன் கண்பொழி கலுழி யொற்றி (சீவக. 1397). 11. To pryinto; உய்த்துணர்தல் உள்ளொற்றி

தேய்ந்த - உரைசுதல்; குறைதல்; மெலிதல்; வலிகுன்றல்; கழிதல்; அழிதல்; சாதல்.

விரல் - viral   n. perh. விரவு-. [T. vrēlu, K.Tu. berel, M. viral.] 1. Finger; toe; கைகால்களினிறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு. விரலுளர்நரம்பின் (பொருந. 17). 2. See விரற்கிடை. பாதாதிகேசாந்தம் முக்காலே நால்விரலே ஆறுதோரை உசரமும் (S. I. I. ii, 395).viral   n. perh. விரவு-. [T. vrēlu, K.Tu. berel, M. viral.] 1. Finger; toe; கைகால்களினிறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு. விரலுளர்நரம்பின் (பொருந. 17). 2. See விரற்கிடை. பாதாதிகேசாந்தம் முக்காலே நால்விரலே ஆறுதோரை உசரமும் (S. I. I. ii, 395).

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் பிரிந்து உள்ளார்கள். அப்போழுது தலைவி தலைவனின் வரவை எதிர்நோக்கி இருக்கிறாள். அப்பொழுது அவர் வரக்கூடும் வழி(களை) நோக்கி கண்களை பதித்துக்கொண்டு இருக்கிறாள். ஆனால் பலநாள் கழிந்தும் தலைவன் இன்னும் வரவில்லை. அதனால் கவலையில் அவள் கண்கள் ஒளி இழந்து அதவாது அழகிழந்து, கண்களின் புகழ் இழந்து கபில நிறம் கொண்டன.

மேலும், அவர் விட்டுச்சென்ற நாள்களை (சுவற்றில் கோடுகளாய் போட்ட வரிகளை) அவள் கைவிரல்கள் எண்ணி எண்ணி தேய்ந்தன. அப்படி ஆனால் அவள் எத்தனை நாட்கள் தலைவனைப் பிரிந்து இருக்க வேண்டும். இல்லை எனில் அவள் பிரிவு தாங்காது எத்தனை முறை அதனை மறுபடியும் மறுபடியும் எண்ணி இருக்க வேண்டும்.

வரவை நோக்கி கண்கள் மங்கி ஒளியிழத்தலை பல கவிஞர்கள் கூறிவிட்டனர். குறுந்தொகைப் பாடல் வரியான “கண்ணே நோக்கி நோக்கி வாளிழந்தனவே” என்கும். சீவக சிந்தாமணியும், “கண்ணும் வாளற்ற” என்கும். விரல் தேய்தலை, “ஆய்கோ டிட்டுச் சுவர்வாய் பற்றுநின் படா” என்கிறது குறுந்தொகைப் பாடல். நாலடியார் பாடல், “நாள்வைத்து நம்குற்றம் எண்ணும்கொல்” என்கிறது.


ஒப்புமை
”நீளிடை யத்தம் நோக்கிவா ளற்றுக் 
கண்ணுங் காட்சி தௌவின” (நற் 397:2-3)
“கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந் தனலே” (குறுந் 44,1-2)
“வெளிறுகண் போகப் பன்னாட் டிரங்கி” (புறநா 177:2)
“கண்ணும் வாளற்ற” (சீவக் 998)

“ஆய்கோ டிட்டுச், சுவர்வாய் பற்றுநின் படர்” (குறுந் 358:2-3)
“நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்
தாழல் வாழி தோழி” (அகநா 61:4-5)
“சேணுறை புலம்பின் நாண்முறை இழைத்த
திண்சுவர் நோக்கி நினைந்து” (அகநா 289:9-10)
“மெல்விரலின்
நாள்வைத்து நம்குற்றம் எண்ணும்கொல்” (நாலடி 394)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , சேயிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை யொருவர் காண்டற்கு விரைதல் . தலைமகற் பிரிவும் தலைமகள் ஆற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின் இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப் பாலாற் கூறினார்.

(தலைமகள் காண்டல் விதுப்பினால் சொல்லியது.) அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த - அவர் நம்மைப் பிரிந்து போன நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற - அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின: இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை. (நாள் - ஆகுபெயர். புல்லியவாதல் - நுண்ணிய காணமாட்டாமை. 'ஒற்ற' என்பது 'ஒற்றி' எனத் திரிந்து நின்றது. இனி யான் காணுமாறு என்னை? என்பதாம். நாள் எண்ணலும் வழி பார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.).

மணக்குடவர் உரை
கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல்லென்றன: விரல்களும் அவர்போன நாள்களை யெண்ணி முடக்குதலாய்த் தேய்ந்தன. இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக்

குறள் 1265
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
அவர்வயின்விதும்பல் - பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகுதியால் ஒருவரிடம் ஒருவர் செல்லவிரைதல்

காண்க - பார்க்கும்படி செய்தல்.
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு

காண்கமன் - வருங்காலத்தில் காணும் பொழுது

கொண்கனைக் - கொண்கன் - கணவன் -  [கூடிய கொண்கன் குறுக (பு. வெ. பெண்பாற். 12, 11)], ஆவியின் இனிய கொண்கர் (கம்பரா. வரைக்காட்சி) - உயிரினும் இனியரான கணவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஆர - A sign of comparison; ஓர் உவமச்சொல் (தொல். பொ 286, உரை )--adv. [T. āra.] Fully, abundantly; மிக ஆரப்பருக (திவ். திருவாய். 10, 10, 5).

கண்டபின் - கண்ட பிறகு

நீங்கும் -  நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

என் - என்னுடைய
மென்- மெல்லிய
தோட் - தோள்
பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்; மயக்கம்; காதலனைப் பிரிந்திருக்கும் காதலி பொலிவு இழந்து நிறம் மாறுபடுவதைப் பசலை என்றும், பசப்பு என்றும் கூறுவர். இது ஒருவகை ஏக்க-நோய். மன ஏக்கம் உடலில் தோன்றுவது பசலை.

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து இருக்கும் பொழுது அவள் ஏக்கத்தால் வாடுகிறாள். இந்த ஏக்க நோய் அவளை வாட்டுகிறது. ஆதலால் அவளுடைய மெல்லிய தோள் பொலிவிழந்து நிறம் மாறுகிறது. இதனையே பசலை என்கிறோம்.

தலைவி பிரிவால் வாடும் பொழுது தலைவனை சந்திக்கும் நாளை அன்புடன் எதிர்நோக்குகிறாள். அவள் நினைக்கிறாள் உயிரினும் இனிய என் கணவரை காணும் பொழுது என் கண்கள் அவரை மனமார பார்த்துக்கொள்ள வேண்டும். என் கண் காண்பித்துத் தான் தன் நெஞ்சமே தலைவனை முதலில் பார்த்தது. கண் பார்த்தால் நெஞ்சமே பார்த்தது போலும் ஆகும். (குறள் - 1244 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று என்பதை நினைவில் கொள்க). ஆதலால் இத்தனை நாள் பார்க்காததற்கும் சேர்த்து வைத்து பார்க்க வேண்டும். என் கண்கள் மூலம் என் உடம்பு பசியை (வேட்கையை) தீர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்படி பசி ஆர பார்த்து தீர்த்தால் தான் அவள் மேல் படர்ந்து உள்ள ஏக்க நோயின் விளைவான பசலை நிறம் அவள் மெல்லிய தோளகளில் இருந்து நீங்கும். ஏனெனில் நெஞ்சத்தில் (இதயத்தில்) இருந்தே இரத்தம் உடம்பில் உள்ள அனைத்து இடங்களுக்கும் செல்லும்.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும். ('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(தலைமகன் வரவு கூறி, ஆற்றாயாய்ப் பசக்கற் பாலை யல்லை யென்ற தோழிக்குச் சொல்லியது.)

கண் ஆரக் கொண்கனைக் காண்க- என் கண்கள் நிறைவு பெறும் வகை என் காதலரை நான் காண்பேனாக; கண்ட பின் என் மேல் தோள் பசப்பு நீங்கும்- அங்ஙனங் கண்ட பின் என் மெல்லிய தோளின்கண் உள்ள பசலை தானே நீங்கி விடும்.

நிறைவுபெறும் வகை காணுதலாவது ஆசை தீரக் காண்டல். காண்க என்னும் வியங்கோள் ஆர்வமிகுதி பற்றியது. 'மன்' அது, இன்றியமையாததென்னும் பொருள்பட நின்றமையின் ஒழியிசை. காதலர் வரவைக் கண்ணாற் கண்டாலன்றிக் காதாற் கேட்டதினால் மட்டும் பசலை நீங்கா தென்பதாம்.

மணக்குடவர் உரை
என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும். இது காண்டல் வேட்கையால் கூறியது.

மு.வரதராசனார் உரை
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை
என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்

குறள் 1269
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் 
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு
[காமத்துப்பால், கற்பியல்,  அவர்வயின்விதும்பல்]

பொருள்
ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

நாள் -  தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

எழு - eẕu   s. pillar, post, கம்பம்; 2. a kind of weapon; 3. see ஏழு.

நாள் -  தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்

செல்லும் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

சேண் - அகலம்; நீளம்; சேய்மை; உயரம்; மலையினுச்சி; வானம்; தேவருலகம்; நெடுங்காலம்.

சென்றார் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

வரு - வரும் 

நாள் -  தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

வைத்து  - vaittu   part. வை³-. Anexpletive; ஓர் அசைச்சொல். இப்பாதகத்தைக் கண்டுவைத்தும் (சீவக. 681, உரை).

வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

ஏங்குதல் - ஒலித்தல்; அழுதல்; இரங்குதல்; திகைத்தல்; மனம்வாடுதல்; அஞ்சுதல்; கவலைப்படுதல்:இளைத்தல்.
 
ஏங்கு பவர்க்கு - ஏங்குபவர் - மனம் வாடுபவர்க்கு; கவலைப்படுவர்க்கு


முழுப்பொருள்
தொலை தூரம் சென்ற காதலரை எதிர் நோக்கி, எப்பொழுது திரும்புவார் என்றும் அவர் வரும் நாளை மனதில் வைத்து அவரையே அவருடன் கூடி இருந்த நாட்களை மனதில் நினைத்து ஏங்கி  வாடும் காதலிக்கு ஒரு நாள் கூட பல நாட்களாக தோன்றும்.

கவிஞர் வாலியின் வரிகளில் இதை ஒற்றிய சினிமா பாடல் ஒன்றின் சில வரிகள் கீழே .
"நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருசங்கள் ஆகும்
நீ என்னை நீங்கி சென்றாலே
வருசங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே"

ஒப்புமை

”எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல” (குறுந் 24:4)
“ஏழூர்ப் பொதுவினைக் கோரூர்” (குறுந் 172:5)
“ஒருநாள் நம்மில் வந்ததற் கெழுநாள்
அழுப என்ப” (ஐங்குறு.32)
“ஒவா தெழுமடங் குட்குவரத் தோன்றி” (பெருங்.1.43:122)
“பூசுசாந் தொருவர் பூசிற் றெழுவர்தம் மகலம் பூசி” (சீவக.116)
“தெய்வங்காள் என்செய்கேன் ஓரிரவே ழூழியாய்” (திருவாய் 5.4:8)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு - சேணிடைச் சென்ற தம் காதலர் மீண்டுவரக் குறித்தநாளை உட்கொண்டு, அது வரும் துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்கு; ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் - ஒரு நாள் பல நாள் போல நெடியதாகக் காட்டும். ('ஏழ்' என்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து நின்றது; 'ஒருவர் கூறை எழுவர் உடுத்து' என்றாற்போல. தலைமகள் வருத்தம் பிறர்மேலிட்டுக் கூறியவாறு. இதனான் இதுவும் தலைமகள் கூற்றாகாமையறிக. 'இரு நாள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் போலச் செல்கின்றது.

மு.வரதராசனார் உரை
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.

சாலமன் பாப்பையா உரை
தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.