Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label இரவு. Show all posts
Showing posts with label இரவு. Show all posts

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

 

குறள் 1060
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
இரப்பன் - இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.)
இரப்பான் -இரப்பன் - யாசகம் செய்பவன்

வெகுளாமை - சினவாமை

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச்சூழப்போடும்நெல்; மங்கலக்குறியாகநெல்வைத்துநிரப்பியநாழி.

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

தானேயும் - தாமே ஒரு

சாலும் - சாலுதல் - நிறைதல்; பொருந்துதல்; முற்றுதல்; மாட்சிபெறுதல்.

கரி - அடுப்புக்கரி; நிலக்கரி; கரிந்தது; கருமையாதல்; மிளகு; நஞ்சு; மரவயிரம்; யானை; பெட்டைக்கழுதை; சான்றுகூறுவோன்; சான்று; விருந்தினன்; பயிர்தீய்கை; வயிரக்குற்றங்களுள்ஒன்று.

முழுப்பொருள்
ஈவர் கொடுத்து உதவவில்லை என்றால் அவர்களிடம் யாசிப்பவர்கள் கோபம் கொள்ளக்கூடாது. ஏனெனில் வறுமையில் வரும் துன்பத்திற்கு யாசிப்பவர்களே போதுமான சான்றாக உள்ளனர். வறுமையினால் யாசிப்பவர்களுக்கு வறுமையின் துன்பம் தெரியும். ஆதலால் அதனை உணர்ந்து ஈவர் கொடுக்கவில்லை என்றால் கொடுத்த உதவ முடியாத அளவுக்கு ஏதோ ஒரு துன்பம் அவர்களை வாட்டுகிறது என்று புரிந்துக்கொள்ள வேண்டும். கோபம் கொள்ளகூடாது. 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்னினிதே” (இனியவை.40)

பரிமேலழகர் உரை
இரப்பான் வெகுளாமை வேண்டும் - ஈவானுக்குப் பொருள் உதவாவழி இவன் எனக்கு ஈகின்றிலன் என்று அவனை இரப்பான் வெகுளாதொழிதல் வேண்டும்; நிரப்பு இடும்பை தானேயும் கரிசாலும் - அது வேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும். (யாவர்க்கும் தேடவேண்டுதலும் நிலையின்மையும் முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட நின்றமையின், உம்மை எச்ச உம்மை. தனக்கேயன்றி மற்றை யிரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறும் துன்பத்தைத் தனக்கேயாக வைத்துத் தானுறுந் துன்பம் தான் அறிந்து வெகுளற்க என்பதாம். இதனான் அவர்க்கு இன்றியமையாததோர் இயல்பு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவனை யிரந்தால் அவன் ஈந்தில னென்று தான் வெகுளா தொழிதல் வேண்டும். பொருளரிதென்பதற்குத் தன்னுடைய நிரப்பிடும்பை தானேயும் அமையுஞ் சான்று. இஃது இரப்பார்க்கு வேண்டியதோ ரியல்பு கூறிற்று

மு.வரதராசனார் உரை
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை
பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

 

குறள் 1059
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
ஈவு - கொடை; நன்கொடைப்பொருள்; பங்கிடுகை; பிரித்துக்கண்டபேறு; ஒழிகை.

ஈவார் - கொடை அளிப்பவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

உண்டாம்  - உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்; uṇṭu   உள்-. [K. uṇṭu, M. Tu.uṇḍu.] v. intr. Finite verb denoting existence,used in common to all genders and personsand both numbers;

தோற்றம் - காட்சி; விளக்கம்; சாதி; படைப்பு; சாயை; புகழ்; பார்வை; உயர்ச்சி; உற்பத்தி; பிறப்பு; உருவம்; தன்மை; வலிமை; சொல்மாலை; உறுப்பு; உத்தேசம்; நாடகப்பிரதேசம்; எண்ணம்; மாயை; இருவகைத்திணை; காண்க:உயிர்த்தோற்றம்

இரந்துஇரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

கோள் - கோள் கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

மேவார் - மேவுதல் - அடைதல்; விரும்புதல்; நேசித்தல்; உண்ணுதல்; ஓதுதல்; நிரவிச்சமனாக்குதல்; மேலிட்டுக்கொள்ளுதல்; வேய்தல்; அமர்தல்; பொருந்துதல்.

இலா - இல்லை 

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

இலாஅக் கடை – இல்லாது போயின்

முழுப்பொருள்
ஈவாரிடம் சென்று யாசிப்பவர்கள் இல்லாமல் போனால் கொடுத்து உதவும் ஈவார்க்கு புகழ் இருக்குமா? யாசிப்பவர்கள் இல்லையென்றால் பின்பு ஈவார்க்கு புகழும் புண்ணியமும் அடைய வேறு வழி ஏது? 

இரந்து கொள்வார் சென்று இரக்கவில்லையாயின் ஈவார் என்பார்க்கு புகழுக்கு யாதொரு வழியுமில்லை.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பரப்புநீர் வையத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்
இரப்பாரில் வள்ளல்களும் இல்லை - இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பனும்
தம்மைத் தலைப்படுத்த லால்” (அறநெறி.219)

பரிமேலழகர் உரை
இரந்துகோள் மேவார் இலாஅக் கடை - அவர்பாற்சென்று ஒன்றனை இரந்துகோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் - கொடுப்பார் மாட்டு என்ன புகழுண்டாம்? யாதுமில்லை. (தோற்றம் - ஆகுபெயர். மேவுவார் என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின் அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இரந்து கோடலைப் பொருந்துவார் இல்லாதவிடத்து ஈயக கருதியிருப்பார்மாட்டுப் புகழ் யாதான் உண்டாம். இஃது இரப்பாரில்லாராயின் புகழுடையார் இலராவார். ஆதலால் இரவு பழிக்கப்படா தென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

 

குறள் 1058
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
இரப்பன் - இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.)
இரப்பன் - யாசகம் செய்வேன்
இரப்பாரை - யாசகம் செய்யும் நபர்கள்

இல்லாயின் - இல்லையானால்

ஈர்ங் - ஈரம் - நீர்ப்பற்று; பசுமை குளிர்ச்சி அன்பு அருள் அழகு அறிவு குங்குமப்பூ பகுதி கரும்பு வெள்ளரி

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்சொல்.

ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.

மரப்பாவை - மரப்பொம்மை, சிறுவர் விளையாட்டுக்குரிய மரப்பொம்மை.

சென்று - செல்லும் , செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

அற்று - அத்தன்மையானது

வந்தற்று - வருவதுபோலாம்

முழுப்பொருள்
யாசிப்பவர்கள் இல்லாமல் போனால் என்னவாகும்? கொடுத்து உதவ நெஞ்சில் ஈரம் உடைய அதாவது அன்புடைய மக்கள் பெருமை வாய்ந்த பெரிய உலகில் இருந்தும் யாசிப்பவர்கள் இல்லாமல் போயின் (ஈவரும் இல்லாமல் போவர் பின்பு அன்பும் குறைந்துவிடும்) இவ்வுலகம் மரப்பாவைகள் நடமாடும் இடத்திற்கு சென்று வருவதுப்போல் ஆகிவிடும். ஈதல் செய்வதால் ஏற்படும் புகழும், புண்ணியங்களும் இல்லாமையின் வானோர் உலகும் ஒருவருக்கு கிடைக்காது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையிற் கையற வுடைத்து” (புறநா 38:12-5)

பரிமேலழகர் உரை
இரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்; ஈர்ங்கண்மா ஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற்போலும். (ஐகாரம், அசைநிலை. ஞாலம் என்னும் ஆகுபெயர்ப் பொருட்கு உவமையோடு ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும் புண்ணியமும் எய்தாமையின், உயிருடையரல்லார் என்பதாம், 'ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து, வாழ்வாரே வன் கணவர்', என்றார் பிறரும்: இத்தொடையின்பம் நோக்காது 'இரப்பவர் இல்லாயின்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் இரக்குமவர்களை உடைத்தல்லவாயின், உள்ள மக்களது இயக்கம் மரப்பாவை சென்றுவந்து இயங்கினாற்போலும். இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.

மு.வரதராசனார் உரை
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

குறள் 1057
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
இகழ்ந்து -  இகழ்-தல் - ikaḻ-   4 v.intr. To be careless,negligent; அசாக்கிரதையாதல். பிரியாரென விகழ்ந்தேன் (திருக்கோ. 340).--tr. 1. To slight, despise;opp. to புகழ்-;அவமதித்தல். (குறள், 698.) 2. Toforget; மறத்தல் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில்(குறள், 538).  

இகழ்ந்து  - மறந்தும் 

எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.

எள்ளாது - இழிவாக பேசாது 

ஈவாரைக் - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

காணின் -  காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

மகிழ்ந்து - மகிழ்தல் - அகங்களித்தல்; உணர்வழியஉவகைஎய்துதல்; குமிழியிடுதல்; விரும்புதல்; உண்ணுதல்.

உள்ளம் - ஊக்கம், மனத்திடம்; அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை, ஊக்கம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு.

உள்ளுள் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உவப்பது - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்

உடைத்து -  உடைதல், உடையது, இருக்கும்

முழுப்பொருள்
எக்கணத்திலும் மறந்தும் (அல்லது) அசாக்கிரதையாலும் (தான் புரிகிற உதவிக்காகவும், பிறரின் வறுமையை வைத்தும் ) பிறரை இழிவாகப் பேசாத ஒரு கொடையாளனை கண்டால் யாசிக்கும் ஒருவர் மகிழ்ச்சி அடைவார் அவர் மனமும் உவகை கொள்ளும். 

ஆதலால் பிறருக்கு உதவுகின்றவர் கொடை அளிக்கின்றவர் பிறர் மனம் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றால் அவர் மற்றவரை மறந்தும் இகழக்கூடாது. 

ஒரு வேலை இகழ்ந்தால் என்னவாகும்? அவ்வுதவியை பெற்றவர் அதனை மறுபடியும் அவ்வுதவியை திருப்பி கொடுத்து கடனை முடிக்க முற்படுவார். அது அவர்களுக்கு ஒருவித சுமை. ஆதலால் நாம் செய்த உதவி சுமையாக முடிகிறது. ஒரு கசப்பான அனுபவமாக மாறிவிடுகிறது. சில சமயம் பெற்ற பணத்தை திரும்ப கொடுப்பார். அதனால் உதாரணமாக ஒருவரின் கல்வியோ மருத்துவ சிகிழ்ச்சையோ கல்யாணமோ தடைப்படக்கூட வாய்ப்பு உண்டு 

வறுமையில் இருந்தால் ஒருவர் தன்மானத்தை இழந்து உயிர் வாழவேண்டும் என்றில்லை. ஆதலால் ஒருவரின் தன்மானத்தை தாக்கும் விதமாக பேசவோ இகழவோ கூடாது. மேலும் நாம் ஒருவருக்கு உதவி விட்டதால் நாம் அவர்களுக்கோ அல்லது அவர்களின் வாழ்விற்கோ எஜமான் ஆகிவிட முடியாது. 

இனியவை நாற்பது (30), இக்கருத்தையொட்டியே, 
“எளியர் இவர் என்றிகழ்ந்து உரையாராகி 
ஒளிபட வாழ்தல் இனிது” என்கிறது. 

“மகிழ்ந்துள்ளம்”, “உள்ளம் உவப்பது உடைத்து” என்பதும் ஒன்றையே கூறுவனபோல் தோன்றினாலும், ஒருவரது நல்ல இயல்பைக் காணும்போது உள்ளம் மகிழ்வது எல்லோருக்கும் இயல்பே. அதையும் தாண்டி, அதனால் உறுபயனை ஐம்புலன்களும் அனுபவித்தாலும், அவற்றையொட்டிய உள்ளத்தில் ஏற்படும் நிறைவே, உவகையே முதன்மையானது என்பதால், அதை வலியிறுத்துவதாகக் கொள்ளலாம்,

”நம்மாலே ஆவர்இந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று தம்மை
மருண்ட மனத்தார்” (நாலடி 301)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து. (இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், 'உள்ளுள் உவப்பது உடைத்து' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரக்கத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது வேண்டப்பட்டதனைக் கொடுப்பாரைக் காணின், இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து.

மு.வரதராசனார் உரை
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

குறள் 1056
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

இல்லாரைக் - இல்லார் - இல்லாதவர்

காணின் -  காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச்சூழப்போடும்நெல்; மங்கலக் குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி.

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.

ஒருங்கு - முழுமை; முழுதும்; எல்லாம்; எல்லாங்கூடிநிற்கை; அடக்கம்; ஒருகாலத்தில்; ஒருசேர; ஒருதன்மை; அழிவு

கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

முழுப்பொருள்
யாசிக்க வருவோர் ஒன்றும் இல்லாத வறுமையில் இருப்பவர்கள். அப்படி
யாசிக்க வருவோரிடம் தன்னிடம் இருப்பதை மறைக்க முயற்சி செய்தால், யாசித்தவரிடன் வறுமை துன்பம் எல்லாம் அழிந்து போய்விடும். ஏனெனில் எல்லாம் இருந்தும் யாசிக்க வந்தவனிடம் கொடுக்க முடியாத மனம் உடையவனே உண்மையில் வறுமையில் இருப்பவன். அது ஒரு நோய் என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம்விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும். ('கரத்தல்', ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
கரப்பிடும்பை இல்லாதரைக் காண்பாராயின், நிரப்பினான் ஆகிய இடும்பை யெல்லாம் ஒருங்கு கெடும். கரப்பிடும்பை யில்லார் என்றமையால் இது செல்வராயினார் மாட்டு இரக்க லாகா தென்றது.

மு.வரதராசனார் உரை
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

சாலமன் பாப்பையா உரை
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று

குறள் 1055
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி

இலார் - இல்லை என்றால்

கரப்பிலா -> கரைகள் இல்லாதவர்கள்; ஒளிவு மறைவு இல்லாதவர்கள் .

வையகத்து  - மண்ணுலகம்; விலங்குஇழுக்கும்வண்டி; கூடாரவண்டி; சிவிகை; ஊர்தி; உரோகிணிநாள்.

உண்மையான் -  என்கின்ற மெய்யான நிலை

கண்  - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

நின்று - எப்பொழுதும்; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்படவரும்ஒர்இடைச்சொல்.

இரப்பவர்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
இரப்பன்-இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.)

இரப்பன்- யாசகம் செய்வேன்
இரப்பாரை - யாசகம் செய்யும் நபர்கள்

மேற்கொள்வது - மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

முழுப்பொருள்
மறைத்துக்கொள்வதற்கும் வஞ்சிப்பதற்கும் ஏதுமில்லாத இவ்வுலகத்தின் தன்மையால் தான் இவ்வுலகத்தின் கண் முன்னே நம்பிக்கையுடன் நின்று மற்றவர் மூலம் அல்லாமல் நேரடியாக வறுமையிலும் துன்பத்திலும் (அவமானத்திற்கு அஞ்சுகின்ற) இரப்போர் யாசிக்கின்றனர். ஆதலால் அவர்களுக்கு உதவ வேண்டியது இவ்வுலகத்தின் கடமை. இல்லையேல் இவ்வுலகம் என்னும் மெய் நிலை இல்லை. இது நரகம் எனக்கருதப்படும் என்று சொல்லாமல் சொல்லுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம்பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான் - அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே, பிறிதொன்றான் அன்று. (அவர் இல்லையாயின், மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே; மற்றொன்றாலன்று. மேல் கரவாதார்மாட்டு இரக்கவென்றார்; உலகத்தில் அவரைப் பெறுத லரிதென்றார்க்கு இது கூறினார்.

மு.வரதராசனார் உரை
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.

சாலமன் பாப்பையா உரை
கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.

இரக்க இரத்தக்கார்க் காணின்

குறள் 1051
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
இரக்கம் - irakkam   erakkam எரக்கம் mercy, pity, sympathy  ; irakkam   s. (இரங்கு) mercy, compassion, கிருபை; 2. pity, sympathy, உருக்கம்; 3. distress, grief, துக்கம்.

இரக்க - கேள்

இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இரத்தக்கார்க் - வேண்டுபவர்

காணின் - காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

கரப்பின் - கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

தம் - தன்னுடைய

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
நமக்கு ஒரு நிலையில் (நமக்காகவோ அல்லது ஒரு பொது சேவைக்காகவோ) பொருளோ அல்லது உதவியோ தேவை படுகின்றது என்றால் அதனை யாரிடம் கேட்க வேண்டும்? யாரிடம் கேட்டால் அவர்கள் இவருக்கு உதவவேண்டும் என்று மனதார நினைப்பார்களோ அவர்களிடம் கேட்க வேண்டும்? அவ்வாறு கேட்டால் உதவுபவரிடம் உதவியை நாட வேண்டும். அவ்வாறு கேட்டு அவர் கொடுக்கவில்லை என்றால் அல்லது ஒழிந்துகொண்டால் அல்லது வைத்துக்கொண்டே இல்லை என்று வஞ்சம் செய்தால் அது தவறு/குற்றமும் ஆகும். இதனால் நாம் கேட்டது தவறாகாது. இயன்றும் கொடுக்காததே தவறாகும்.

ஒப்புமை
“தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க் 
குற்ற குறையை உரைப்ப” (பழமொழி 88)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இரத்தக்கார்க் காணின் இரக்க - நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; கரப்பின் அவர் பழி தம் பழி அன்று - இரந்தால் அவர் கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான். ('இரவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயரது இறுதிக்கண் நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இரத்தற்கு ஏற்புடையராவார் உரையாமை முன் உணரும் ஒண்மையுடையராய் மாற்றாது ஈவார். அவர் உலகத்து அரியராகலின், 'காணின்' என்றும், அவர் மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிபு இன்மையின், 'இரக்க' என்றும், அவர் ஈதலின் குறை காட்டாமையின் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின் அப்பழி தூவெள்ளறுவைக்கண் மாசுபோல, அவர்கண் கடிது சேறலின் 'அவர்பழி' என்றும்,ஏற்பிலார் மாட்டு இரவன்மையின் 'தம் பழியன்று' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
தமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின் இரந்து கொள்க: அவர் இல்லை யென்பாராயின் அஃது அவர்க்குப் பழியாம்; தமக்குப் பழியாகாது. இது கூறுகின்ற இரத்தல் எல்லார்மாட்டுஞ் செயலாகா தென்பதூஉம், தக்கார் மாட்டிரத்தலென்பதூஉம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.

சாலமன் பாப்பையா உரை
ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.

இரத்தலும் ஈதலே போலும்

குறள் 1054
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
இரவு - இராத்திரி; மஞ்சள் இருள்மரம் இரத்தல் இரக்கம் பன்றிவாகை

இரவு - iravu   n. இர-. Beggary, mendicity; யாசிக்கை. கோலொடு நின்றா னிரவு (குறள்,552).

இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இரத்தலும்  - வேண்டுதல், பிச்சைகேட்டல்; யாசித்தலும்

ஈ-தல் - ī-   4 v. [T. ittsu, K. ī.] tr. 1. Togive to inferiors, give alms, bestow, grant;இழிந்தோர்க்குக் கொடுத்தல் ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே (தொல். சொல் 445). 2. To give;கொடுத்தல். 3. To distribute, apportion; பகிர்ந்துகொடுத்தல். 4. (Arith.) To divide; வகுத்தல் (W.) 5. To give instruction; படிப்பித்தல் ஈதலியல்பே யியம்புங் காலை (நன். 36). 6. To create,bring into existence; படைத்தல் எவ்வுயிர்களுமீந்தான (கம்பரா. அகலி 49). 7. To bring forth;ஈனுதல்.--intr. To agree, consent; நேர்தல் (பரிபா

ஈதலே - பிறருக்கு பகிர்ந்துகொடுத்தல்

போலும் - போன்றது

கரத்தல் - மறைத்தல்; கவர்தல்; கெடாதிருத்தல்; அழித்துமுதற்காரணத்தோடுஒடுக்குதல்; கெடுதல்.

கனவினும் - கனவு -கனா; உறக்கம்; மயக்கம்.

தேற்று - tēṟṟu   n. தேற்று-. 1. Makingclear; தெளிவிக்கை. 2. Becoming clear; தெளிவு செஞ்சொற்பொருளின் றேற்றறிந்தேனே (சிவப்.பிரபந். நால்வர் 28). 3. See தேற்றா (பிங்.) தேற்றின்வித்திற் கலங்குநீர் தெளிவதென்ன (ஞானவா. தாமவியா. 3).

தேற்றார் - அறிவிலார்; பகைவர்.

தேற்றாதார்மாட்டு - தெளிந்துக்கொள்ளாதார்

முழுப்பொருள்
இவ்வுலகில் எல்லோரும் பிறருக்கு தன் செல்வத்தை உதவகொடுத்து வாழ்வதில்லை. ஆனால் சில கொடை வள்ளல்கள் கனவிலும் கூட தன்னிடம் இருக்கும் செல்வம் தனை மறைத்து வாழ வேண்டும் என்று நினைக்கமாட்டர்கள். இவர்கள் பிறருக்கு உதவி செய்வதே மிக பெரிய பேறு என்று நினைப்பவர்கள், உணர்ந்தவர்கள். அதனால் தான் திருவள்ளுவர் சொல்லுகிறார் அத்தகைய கொடையுள்ளம் குணம் கொண்ட வள்ளல்களிடம் சென்று யாசிப்பது என்பது நாம் அவர்களுக்கு செய்யும் கொடைப்போன்றதே ஆம். ஏனெனில் அப்படி யாசிக்கும் பொழுது கொடுப்பவர் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார். அந்த மகிழ்ச்சியை அவர் அடையும் வாய்ப்பை நாம் அவரும் தருகிறோம்.

ஒப்புமை
”இரந்தோர்க் கெந்நாளும், காலம் பகராதார்” (சம்பந்தர்.சீகாழி 9)
“புயல் மறந்து மீன்சனிபுக் கூன்சலிக்கும் காலந் தானும்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய மெய்யர்” (சம்பந்தார்.கழுமலம்.3)

உதாரணமாக: யார் கொடை வள்ளல்
ஒரு அதிகாலை நேரத்தில் கிருஷ்ணர், அர்ச்சுனனுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களின் பேச்சு, மக்களுக்கு தான, தருமங்கள் செய்வது பற்றி சென்றது. அப்போது கிருஷ்ணர், கர்ணனின் கொடை தன்மை பற்றி உயர்வாக பேசிக்கொண்டிருந்தார். இதைக் கேட்ட அர்ச்சுனனுக்கு கோபம் தலைக்கேறியது.

உடனே அவன், ‘பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் கொடை வள்ளல் ஆகலாம்’ என்றான்.

‘ஓ.. அப்படியா?’ என்று கேட்டபடி நமுட்டுச் சிரிப்பு சிரித்த கிருஷ்ணர், அந்தப் பகுதியில் இருந்த ஒரு சாதாரண மலைக் குன்றை தங்க மலையாக மாற்றினார்.

பின்னர் அர்ச்சுனனிடம், ‘அர்ச்சுனா! இந்த தங்க மலையை, நான் உனக்கு பரிசாக அளிக்கிறேன். இந்த மலையை நீ, இன்று மாலை சூரியன் மறைவதற்குள் தானம் செய்து விட வேண்டும். அவ்வாறு செய்து விட்டால், நீதான் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய வள்ளல்’ என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

அர்ச்சுனன் தன்னைத் தேடி வந்தவர்களுக்கெல்லாம் அந்த தங்க மலையை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தான். மக்கள் வண்டி, வண்டியாக வந்து அர்ச்சுனன் கொடுத்த தானத்தை வாங்கிச் சென்றனர். காலை, மதியமாகி, அந்தி சாயும் வேளையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சூரியன் மேற்கில் மறைவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். ஆனால் அர்ச்சுன் வெட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த தங்க மலை குறைந்தபாடில்லை. கால்வாசி மலை தான் வெட்டப்பட்டு இருந்தது.

அந்த சமயத்தில் மீண்டும் அங்கு வந்தார் கிருஷ்ணர். ‘என்னப்பா அர்ச்சுனா! நான் கொடுத்த தங்க மலை அப்படியே இருக்கிறதே! இன்னுமா நீ இதை தானம் செய்து முடிக்கவில்லை’ என்று ஏளனமாக கேட்டார் கிருஷ்ணர்.

அப்போதும் தன்னுடைய கர்வத்தை விட்டுக் கொடுக்காத அர்ச்சுனன், ‘நீங்கள் புகழ்ந்து பேசிய கர்ணனாக இருந்தால் கூட, இவ்வளவு தான் தானம் செய்து இருக்க முடியும்’ என்றான்.

‘அப்படியா..’ என்று சிரித்துக் கொண்டே கேட்ட கிருஷ்ணர், அந்த வழியாக சென்ற கர்ணனைக் கூப்பிட்டார். கர்ணன் ஓடி வந்து கிருஷ்ணரை வணங்கியபடி நின்றான். பின்னர், ‘கிருஷ்ணா! தங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைக்குமா?’ என்று கேட்டான்.

அதற்கு கிருஷ்ணர், ‘ஒன்றுமில்லை கர்ணா! இதோ பார்! இந்த தங்க மலையை சூரியன் மறைவதற்குள் நீ தானம் செய்ய வேண்டும். உன்னால் முடியுமா? ஏனென்றால் சூரியன் மறைவதற்கு இன்னும் சிறிது நேரம்தான் இருக்கிறது. காலையில் இருந்து தானம் செய்து வரும் அர்ச்சுனனாலேயே இந்த தங்க மலையை தானம் கொடுத்து முடிக்க முடியவில்லை’ என்றார்.

கிருஷ்ணர் இவ்வாறு சொல்லி முடித்தபோது, அந்த வழியாக பரம ஏழை ஒருவர் வந்தார். அவர் கர்ணனைப் பார்த்ததும், ‘ஐயா! நானும்.. என் குடும்பமும் மிகவும் ஏழ்மையில் தவிக்கிறோம். இன்றைய உணவுக்காவது ஏதாவது கொடுத்தால் நான் மகிழ்வேன்’ என்றார்.

உடனே கர்ணன், ‘ஐயா..! இந்த தங்க மலையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினான். பின்னர் கிருஷ்ணரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

கர்ணன் சென்றதும் கிருஷ்ணன் அர்ச்சுனனிடம் கூறினார். ‘இப்போது புரிகிறதா? யார் கொடை வள்ளல் என்று. பிறருக்கு உதவ பணம் மட்டும் இருந்தால் போதாது. அவர் களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணமும், அதை செயல்படுத்த ஈகை குணமும் நம் உள்ளத்தில் உதிக்க வேண்டும். மேலும், நீ தானத்தை அளந்து கொடுத்தாய். ஆனால் கர்ணனோ, தன்னிடம் இருப்பது என்ன என்ற அளவீடே இல்லாமல் இருப்பதை அப்படியே கொடுக்கும் குணம் பெற்றவன். அதனால்தான் அவனது கொடை தன்மை சிறந்து விளங்குகிறது’ என்றார் கிருஷ்ணர்.

பி.கு: அதுமட்டுமின்றி கர்ணன் சொன்ன மற்றொன்று என்னவென்றால் இந்த தங்கம் தனை பிறருக்கும் கொடை அள்ளிக்கும் பேறு (புண்ணியம்) தனை நீங்களும் பெற்றிடுங்கள் என்று.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும். (உம்மை ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெட வாராமையின் 'ஈதலே போலும்' என்றார், ஏகாரம் - ஈற்றசை.).

மணக்குடவர் உரை
கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும். ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும்.

மு.வரதராசனார் உரை
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.

சாலமன் பாப்பையா உரை
ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.

இரந்து நிற்பார் ஈவாரே ஆவாராம் ஆம்
இனிய தந்தை வள்ளுவனார் சொல்லுகின்றார்
சிறந்து நிற்கும் இப்படியோர் சிந்தனையை
செப்புதற்கு அவரன்றி யார்தான் உண்டு
மறந்தும் தம் கனவினிலும் செல்வம் தன்னை
மறைக்காமல் வெளிப்படையாய் வாழ்வார் தம்மை
இரந்து அவர் உடன் கொடுக்கும் மாண்பதனை
எல்லோரும் உணரும் வாய்ப்பைக் கொடுக்கின்றாராம்

இன்பம் ஒருவற்கு இரத்தல்

குறள் 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
[பொருட்பால், குடியியல், இரவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.
ஒருவற்கு - ஒரு மனிதருக்கு
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரந்தவை - இரந்து பெற்ற பொருள்;
துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.
உறாஅ  - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்
வரின் - வரும்

முழுப்பொருள்
இரப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல. ஒருவருக்கு மிகுந்த மனவருத்ததை கொடுக்க கூடியது. ஏனெனில் நாம் இரந்தால் அதற்கு பலர் கேள்வி கேட்பர். தேவையில்லாமல் பல விஷயங்களில் மூக்கை நுழைப்பர். ஏளனம் செய்வர். அது இல்லாமல் நமது குடிக்கும் நமக்கும் இழிவும் கூட. ஆனால் இரந்தால் நாம் இரந்தது மிக எளிதாக நமக்கும் பிறருக்கும் எந்த ஒரு மனவருத்ததையும் தராமல் வந்து சேர்ந்தால் அது சிறந்தது. அப்படி ஒரு இரத்தல் இன்பமே ஆகும். மேலோட்டத்தில் எளிமையாக பார்க்கபட்டாலும் அதில் நுட்பமான சில விஷயங்கள் உண்டு.

முதலாவதாக நாம் இரப்பது நேர்மையான (அறம் சார்ந்த) ஒரு காரணத்திற்காக இருந்தால் மட்டுமே நமக்கு எந்த ஒரு துன்பமும் இல்லாமல் வரும்.  ஆடம்பரமான இருப்பதற்கும் ஊர்சுற்றுவதற்கெல்லாம் கேட்டால் நம்மை கேள்வி கேட்பர்.

இரண்டாவதாக நம்முடைய பொருளாதாரம் தன்னை நாம் சரியாக பேணிகாக்காமல் அலட்சியமாக இருந்து விட்டு தீய வழிகளில் விரயம் செய்தால் நாம் இரக்கும் பொழுது நம்மை கண்டிப்பாக பலகேள்விகள் கேட்பார்கள். ஆதலால் நாமும் நேர்மையானவராக இருத்தல் வேண்டும்.

மூன்றாவதாக நாம் சென்று ஒருவரிடம் இரக்கும் பொழுது அவரால் அதனை கொடுக்க கூடிய பொருளாதாரத்தில் இருக்கிறாரா என்று அறிய வேண்டும். அவரால் கொடுக்க முடியாத தர்ம சங்கடமான சூழ்நிலையில் இருந்தால் நமக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று அவர் மன வருத்தம் படுவார். நமக்கு எப்படியாவது உதவி விட வேண்டும் என்று அவரும் இரந்து கொடுத்தாலும் கொடுப்பார். ஆதலால் நம்மால் மற்றவருக்கு துன்பம் வரக்கூடாது. 

மஹாபாரதத்தில் வரும் “கர்ணனை” இதற்கு உதாரணமாக சொல்லலாம். கர்ணனிடம்  இன்முகத்தோடு யாசகம் செய்பவன்.

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”வேளாண் வாயில் வேட்பக் கூறி” (பொருந் 75)
“தான் உபகரித்தற்கு வழியாகிய இரப்பினையே எப்பொழுது
விரும்பும்படி உபசாரங்களைக் கூறி (மேற்படி.ந)

பரிமேலழகர் உரை
ஒருவற் கிரத்தல் இன்பம் - ஒருவற்கு இரத்தல்தானும் இன்பத்திற்கு ஏதுவாம்; இரந்தவை துன்பம் உறாஅவரின் - இரந்த பொருள்கள் ஈவாரது உணர்வு உடைமையால் தான் துன்புறாமல் வருமாயின். (இன்பம் - ஆகுபெயர். 'உறாமல்' என்பது கடைக்குறைந்து நின்றது. துன்பம் - சாதியொருமைப் பெயர். அவையாவன, ஈவார்கண் காலமும் இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி வருவனவும் ஆம். அவையுறாமல் வருதலாவது, அவர் முன்னுணர்ந்து ஈயக்கோடல். 'இரந்தவர் துன்பமுறாவரின்' என்று பாடம் ஓதி, 'இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து ஈவராயின்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண் இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இரந்தவை துன்பம் உறாவரின்-இரந்த பொருள்கள் ஈவாரது பண்பாட்டினால் வாய் திறக்கு முன்பே விரைந்து மகிழ்ச்சியோடு கிடைக்குமாயின்; ஒருவற்கு இரத்தல் இன்பம்-ஒருவனுக்கு இரத்தலும் இன்பந்தருவதாம்.

துன்பம் காலமறிந்து செல்லுதல், காத்திருத்தல், ஈவார் மன நெகிழக் கெஞ்சுதல், அவர் முகந்திரிந்து நோக்குதலும் கடுஞ்சொற் சொல்லுதலும் மறுத்தலும் முதலியவற்றால் வருவது. ’இன்பம்’ ஆகுபொருளது. ’உறா’ ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். ’உறாஅ’ இசைநிறை யளபெடை. "இரந்தவர் துன்பமுறா வரி" னென்று பாடமோதி, இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றாற் றுன்புறாது எதிர்வந்தீவராயி னென்றுரைப்பாரு முளர் என்று பரிமேலழகர் கூறுவர். இதற்கு

"என்று முகம னியம்பா தவர்கண்ணுஞ்
சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்."


என்னும் நன்னெறியடிகள் மேற்கோளாம். இரத்தலும் என்னும் இழிவு சிறப்பும்மை தொக்கது.

மணக்குடவர் உரை
இரத்தல் ஒருவர்க்கு இன்பமாம், இரக்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாதவகை எய்துமாயின். இது வேண்டிய பொருள் பெறின் துன்பமாகா தென்றது.

மு.வரதராசனார் உரை
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.

English Meaning - As I taught a kid - Rajesh
If a person whom we request/beg financial assistance helps us happily and doesn't make us sad or regret, then, begging is also a happy thing.

For any person, pleading or begging or requesting for financial assistance, food or any other basic amenities is not an easy thing. Because one has to go through many internal emotions, one has to go beyond their self esteem, one might have to go through questions from other persons (sometimes it can be interrogative, free advices etc) , one might face judgement, one might face sympathy, one might face humiliations etc. Hence, a person begs with an heavy burden in their heart. 

Hence, if a person is able to understand the pleader (pleader's emotions and needs) and is helping then the pleader will be happy at pleading.

However, pleader must ask for genuine reasons, should be able to gauge the other persons financial situation too, and the pleader should not be idle.  Because 1) if pleader doesn't ask for genuine reasons then he/she might face humiliations/free advices 2) if the other person is not in good financial state then it might not give happily as he/she himself have to borrow money 3) if the pleader is idle then he/she is most likely face humiliations or get free advice. 

Questions that I ask to the kid
When is begging a happy thing?

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று

குறள் 1053
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
கரப்பிலா - கரைகள் இல்லாத; ஒளிவு மறைவு இல்லாத.
கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.

நெஞ்சின் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறிவார் - அறிவுள்ளவர்கள்

கடனறிவார் -> தேவையான் செயலுக்கு கடன் கொடுப்பது தன் கடமை என்று நினைப்பவர் (அறிபவர்); கடமையுணர்ச்சி.

முன்நின்று -> முன்பு நின்று

இரப்புமோ ரேஎர் -> இரப்பும் + ஓர் + ஏஎர்.

இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பும்  -> இரத்தல் - ஒரு பொருளை (உதவியை / கடன்) தாழ்மையுடன் கேட்பது.

ஏஎர் -> அழகு.

ஓர் +ஏஎர் + உடைத்து ->   நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து.

முழுப்பொருள்
ஒரு பொருளோ அல்லது உதவியோ அல்லது கடனோ நாடும் பொழுது யாரிடம் நாடவேண்டும் என்பதை கவனமாக கணக்கில் கொள்ளவேண்டும். எல்லோரிடமும் கேட்டுவிட கூடாது.

கரைகள் இல்லாத, ஒளிவு மறைவு இல்லாத, வஞ்சகம் இல்லாத மனம் கொண்ட, பிறருக்கு உதவி செய்வது தன் கடமை என்று உணர்ந்தவரிடம் (அறிந்தவரிடம்) மட்டுமே கடன் கேட்கலாம்.

அத்தகையவரிடம் மட்டுமே ஒருவர் அவர் முன் நின்று கடன் கேட்க வேண்டும். அப்படி முன் நின்று கடன் கேட்பது தான் கேட்பவருக்கு அழகு என்கிறார் திருவள்ளுவர்.

[அதாவது கடன் கொடுப்பவரே தன் நிலைமை அறிந்து தம்மிடம் வந்து கடன் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். ஏனெனில் கடன் கொடுப்பவருக்கு ஆயிரம் அலுவல் இருக்கும் அல்லவா ? -> ஆதலால் தான் முன்நின்று என்று கூறுகிறார் திருவள்ளுவர்]

அப்படி முன் நின்று கேட்பது இழுக்கு என்று நினைக்க வேண்டாம். அப்படி கேட்பது தான் அழகு / சரி / முறை என்று சொல்வதற்காக திருவள்ளுவர் ”ஏஎர் உடைத்து” என்று கூறி இகழ்ச்சியை களைகிறார்.

ஒப்புமை
”தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிப்
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்கும் குடிப்பிறந் தோயே” (புறநா 164;10:4)

குறட் கருத்து  (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
இரந்து நிற்பார் அழகுடையர் ஆவதற்கு
ஏற்ற ஒரு வழியினை நம் தந்தை சொன்னார்
மறந்தும் கூட செல்வத்தை மறைத்து வைக்கும்
மனம் இல்லாப் பெருங் கடமை யாளரிடம்
இரந்து நிற்றல் மிகச் சிறந்த ஏற்றம் தரும்
இரப்பவர்க்கும் அது பெரிய அழகைத் தரும்
சிறந்து நிற்கும் அக் குறளை இங்கே காண்பாம்
சென்றிரந்து நின்றோமா? அவனாய்த் தந்தான்

பரிமேலழகர் உரை
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் - கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து - நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து. ('சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' (குறள்-963) என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.).

மணக்குடவர் உரை
கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும் ஓரழகுடைத்து. இஃது ஒப்புரவறிவார் மாட்டு இரத்தலா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.