Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label உழவு. Show all posts
Showing posts with label உழவு. Show all posts

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து


குறள் 1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

செல்லான் - தன்னுடைய நிலத்தில் அன்றாடம் பாடுபடச் செல்லாது இருப்பான்

நிலக்கிழார் - நிலத்துக்குஉரியவர்.
கிழவன் - உரியவன்; தலைவன்; மருதநிலத்தலைவன்; அகவைமுதிர்ந்தவன்; எண்ணெய்க்கசடு; பரணி.
கிழவன் இருப்பின் – நிலக்கிழானாகிய விவசாயி

இருப்பின் - இருந்தால் - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

புலந்து - புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.

இல்லாளின் - இல்லாள் -  மனைவி; மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; வறுமையுடையவள்.

ஊடுதல் -  புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்.

ஊடிவிடும் - மனைவி கோபங்கொண்டு வெறுத்து விடுவாளோ அது போல.

முழுப்பொருள்
நிலத்திற்கு உரியவன் (நிலக்கிழான்), விவசாயி அன்றடம் விவசாயம் செய்யாமல், நிலத்தில் உழவு செய்து பயிர்விளைவிக்க செல்லாமல் சோம்பித் திரிந்தால் என்ன ஆகும் தெரியுமா? கோபித்துக்கொண்டு ஊடி கணவனைவிட்டு விலகி இருக்கும் மனைவியைப் போல நிலமும் தனது வெறுப்பை காண்பிக்கும். எப்படித்தெரியுமா? நிலம் வெறுப்புற்று பலன் தராமல் தரிசாகிவிடும். பாடுபடாத நிலம் மும்மாரி பொழிந்தாலும், முப்போகம் விளையக்கூடியதாயிருந்தாலும், மெல்ல அருகி (நொந்து) இறுதியில் பாழாகி தரிசு நிலம் போன்றே ஆகிவிடும். 

ஆதலால் உழவிற்கு நிலமும் மழையும் இருந்தால் மட்டும் போதாது. விவசாயியும் விவசாயியின் சோம்பித்திரியாமல் உழவு செய்கிற உழைப்பும் தேவை. 

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
கிழவன் செல்லான் இருப்பின் - அந்நிலத்திற்குரியவன் அதன்கண் நாள்தோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின்; நிலம் இல்லாளின் புலந்து ஊடிவிடும் - அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப்பின் அவனோடு ஊடிவிடும். (செல்லுதல் - ஆகுபெயர். பிறரை ஏவியிராது தானே சேறல் வேண்டும் என்பது போதர, 'கிழவன்' என்றார். தன்கண் சென்று வேண்டுவன செய்யாது வேறிடத்திருந்தவழி மனையாள் ஊடுமாறுபோல என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி. இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மனையகத்திருப்பானாயின், அது தான் செல்லாமையாற் புலந்த இல்லாளைப் போலப் புலந்துவிடும். இது நாடோறுஞ்சென்று பார்க்க வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை
நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்


குறள் 1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்

ஏர்-தல் - ēr-   4 v. intr. To rise; எழுதல் பனிக்கடல் பருகி வலனேர்பு (முல்லைப். 4).--tr. To belike, similar; ஒத்தல் முத்தேர்முறுவலார் (இனி. நாற். 2).  

ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு

ஏரினும் - ஏர் கொண்டு உழுதலிலும் 

நன்றால் - நன்றென்பது

எரு - உரம்; சாணி; வறட்டி; பசளை; மலம்

இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை.

கட்டுதல் - பிணித்தல்; அமைத்தல்; செலுத்துதல்; கற்பித்துச்சொல்லுதல்; சேர்த்தல்; தடுத்தல்:இயற்றுதல்:போலுதல்; இறுகுதல்; வெல்லுதல்; நிமித்தமாதல்; அடக்குதல்:எழுப்புதல்; தழுவுதல்; திருமணம்பண்ணுதல்; பிடுங்குதல்; கதைகட்டல்; வீடுமுதலியனகட்டல்; உரைகட்டுதல்; களவுசெய்தல்; உகுத்தல்; சூடுதல்; வசப்படுத்தல்; முடித்தல்.

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

கட்டபின் - களை நீக்கிய பிறகு

நீரினும் -  நீர்ப் பாய்ச்சுதலிலும் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

அதன் - அதனுடைய 

காப்பு - பாதுகாவல்; காவலாயுள்ளது; காப்புநாண்; தெய்வவணக்கம்; காப்புப்பருவம்; திருநீறு; கைகால்களில்அணியும்வளை; வேலி; மதில்; கதவு; அரசமுத்திரை; ஏட்டுக்கயிறு; காவலானஇடம்; ஊர்; திக்குப்பாலகர்; சிறை; மிதியடி; அரசன்நுகர்பொருள்.

முழுப்பொருள்
உழவு எப்படி செய்யவேண்டும் என்று இக்குறளில் கூறுகிறார் திருவள்ளுவர். 
1. உழவு செய்ய முதலில் மாடுகளைக்கொண்டும் கலப்பையைக்கொண்டும் ஏர் உழுதல் வேண்டும். ஏர் உழுதால் காற்றில் வயலில் உள்ள மண்கடிகள், கற்கள் ஆகியவை எடுக்கப்பட்டு, விதைகளின் வேர் எளிதாக உள்ளே செல்ல ஏதுவாக இருக்கும். அதனால் பயிரும் நன்றாக வளரும். ஏர் உழும் பொழுது காற்றில் இருந்து நைட்ரஜன் ஆக்சைடை பெற்று மண்ணும் வளம் பெறும்.

2. ஏர் நன்றாக உழுதால் மட்டும் போதுமா? போதாது. நன்றாக எரு அதாவது உரம் இடுதல் வேண்டும். பயிர்விளைய தேவையான சத்துக்கள் மண்ணுக்கு கிடைக்கும். 

3. எரு இட்டால் போதுமா? போதாது. களைகளை நீக்க வேண்டும். தேவையற்ற களைகளை நீக்கினால் தான் செடிகளின் வேர்கள் நன்றாக உள்ளே செல்லும். 

4. களைகளை நீக்கினால் போதுமா? போதாது. நன்றாக வரப்புயர நீர் பாய்ச்ச வேண்டும். 

5. நீர் பாய்ச்சினால் போதுமா? போதாது. பயிர் விளைத்தபின், அப்பயிரைக் காப்பதற்காக காவல் செய்வதே மிக்க நன்றாம். ஏனெனில் மற்ற விலங்குகள் வந்து பயிரை மேய்ய கூடும். சில சமயங்களில் பூச்சிகள் வந்து தாக்கும். அவற்றில் இருந்து பாதுக்காக்கவேண்டும். களைகள் வளரும். அவற்றை களைந்து எறிந்து பயிர்களை காக்கவேண்டும். இல்லையேல் பயிர்கள் விளைய இடம்கொடுக்காமல் விளைச்சலை குறைத்துவிடும்.

ஆக மேற்சொன்ன ஐந்தும் பயிர்கள் விளைவிக்க இன்றியமையாதது என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

மேலும்: அஷோக் உரை 

ஒப்புமை
”பைங்கூழ் விளைவின்கண் போற்றான் உழவும்” (திரி.59)

பரிமேலழகர் உரை
ஏரினும் எரு இடுதல் நன்று - அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்ட பின் அதன் காப்பு நீரினும் நன்று - இவ்விரண்டும் செய்து களை கட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினும் நன்று. (ஏர் - ஆகுபெயர், காத்தல், பட்டி முதலியவற்றான் அழிவெய்தாமல் காத்தல். உழுதல், எருப்பெய்தல், களை கட்டல், நீர்கால் யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்..).

மணக்குடவர் உரை
உழுகின்றதினும் நன்றாம் எருவிடுதல்; களை கட்டபின்பு நீர் விடுதலினும் நன்றாம் அதனை அழியாமற் காத்தல். இது பல்கால் உழவு வேண்டுமென்பதூஉம் எருவிடவேண்டும்மென்பதூஉம், களைபறிக்க வேண்டுமென்பதூஉம் பசுப்புகுதாமற் காக்க வேண்டுமென்பதூஉம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை
உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது


குறள் 1035
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் 
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இரவார் - தாம் யாரிடமும் யாசிக்க வேண்டாதவர்

இரப்பார்க்கு - தம்மிடம் கையேந்துவார்க்கு

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

ஈவர்- ஈவு - கொடை; நன்கொடைப்பொருள்; பங்கிடுகை; பிரித்துக்கண்டபேறு; ஒழிகை.

கரவு- மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை

கரவாது - வஞ்சனை செய்யாது; களவு செய்யாது; பொய் சொல்லாது

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு.

மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

மாலையவர் - இயல்பினர், குணத்தினர்.

முழுப்பொருள்

உழவர்களின் சிறப்புகள் என்ன?
1. பிறரிடம் யாசிக்க மாட்டார்கள். தங்கள் உழைப்பில் வரும் வருமானத்திற்குள் வாழ்பவர்கள். வருமானத்திற்குள் எளிமையாக வாழ கற்றுக்கொண்டவர்கள்.

2. தன்னிடம் யாசிப்பவர்களுக்கு தன்னால் இயன்றவற்றை கொடுத்து உதவும் நற்பண்பையும் மனதையும் கொண்டவர்கள் உழவர்கள். அது அவர்கள் விளைவிக்கும் உணவுப்பொருட்களில் இருந்துப்பெற்ற தன்மை என்றுக்கூட கொள்ளலாம். [ஏனெனில் சமீபத்தில் விவசாயத்தை பாரம்பரியமாக செய்து வந்த ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் கூறினார், கைகாசைப்போட்டு உதவி செய்வதற்கும் விளைந்ததை எடுத்துக்கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விவசாயி அவன் வயலில் விளைந்ததை மனதார எடுத்து தருவான். அதனால் அவன் செல்வம் குறைந்ததாகவோ அல்லது செலவு செய்ததாகவோ எண்ண மாட்டான். அவனுக்கு அது பாரமாகவும் இருக்காது].

தன்னிடம் உதவி என்று யாசிப்பவர்க்கு மட்டுமல்ல. தன்னிடம் உணவுப்பொருட்களுக்கென இவ்வுலகமே உழவர்களிடம் தான் யாசிக்கிறது. இவ்வுலக மக்களுக்கே உணவு கொடுத்து மகிழ்பவர்கள் உழவர்கள்.

3. பிறரிடம் வஞ்சனை செய்யமட்டான். பிறர் பொருட்களை களவு செய்யமட்டான்.

4. தன் கையினால் உழவு செய்து கதிர் விளைவித்து உண்ணுவான்

மேற்சொன்னவற்றை தங்களுடைய இயல்பாக கொண்டவர்கள் உழவர்கள்.

கைவினை கரவேல் என்று ஆத்திச் சூடியும், இரப்போர்க்குக் கரப்பிலார் என்று சம்பந்தர்.புகலி(8) தேவாரமும் அத்தகைய கொடையுள்ளத்தினரையே கூறுகின்றன.

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
கைசெய்து ஊண் மாலையவர் இரவார் - தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர். ('செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.).

மணக்குடவர் உரை
பிறரை இரவார்; தம்மை இரப்பார்க்குக் காத்தலின்றி யாதொன்றாயினும் ஈவர்; கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்.

மு.வரதராசனார் உரை
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

சாலமன் பாப்பையா உரை
தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

குறள் 1034
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
பல - ஒன்றுக்குமேற்பட்டவை

குடை - கவிகை; அரசாட்சி; குடைக்கூத்து; பாதக்குறட்டின்குமிழ்; நீருண்ணும்ஒலைப்பட்டை; குடைவேல்; உட்டுளைப்பொருள்

நீழலும் - நிழல்; காற்று; சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய்.

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

குடைக் - கவிகை; அரசாட்சி; குடைக்கூத்து; பாதக்குறட்டின்குமிழ்; நீருண்ணும்ஒலைப்பட்டை; குடைவேல்; உட்டுளைப்பொருள்

கீழ்க் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம்.

காண்பர் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அலகு - எண்; அளவு அளவுகருவி பலகறை மகிழம்விதை; நென்மணி பயிர்க்கதிர்; ஆயுதம் ஆயுதத்தினலகு; கூர்மை பறவைமூக்கு; தாடை உயிர்களின்கொடிறு; கைம்மரம் நூற்பாவின்அலகு; துடைப்பம் பொன்னாங்காணி அறுகு நுளம்பு இலட்சம்பாக்கு; ஆண்பனை அகலம் குற்றம்

உடை - ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி.
உடை - (வி)ஒடி, தகர், உடைஎன்னும்ஏவல்.

நீழலவர்- உலகையே புரக்கும் கருணை நிழலை வழங்கும் உழவர் பெருமக்கள்.

முழுப்பொருள்
உலக மக்கள் எத்தகைய மன்னனின் ஆட்சியின் கீழ் அல்லது எத்தகைய நாட்டில் வாழ ஆசைப்படுவார்கள்?  எந்த நாட்டில் விவாசாயம் செழித்து விவசாயிகளும் செழிப்பாக இருக்கிறார்களோ அந்நாடு வளமான நாடு. விவசாயம் செழிப்பாக இருந்தால் மக்கள் பசி இன்றி இருப்பர். வறுமை இருக்காது. பசியும் வறுமையும் இல்லை என்றால் குற்றங்கள் நடக்க வாய்ப்புகள் மிக மிக குறைவாக இருக்கும். ஆதலால் அத்தகைய நாட்டில் அத்தகைய மன்னனின் கீழ் நடைபெறும் ஆட்சியில் மற்ற நாட்டு மக்களும் வாழ விரும்புவர்.

ஆதலால் ஒரு அரசரின் முதன்மையான பணிகளில் உழவு மேலாண்மை இருத்தல் வேண்டும். அதற்கு தேவையான நீர்வள மேம்பாடு (அதாவது ஏரி, குளம், ஆறு ஆகியவற்றை நிர்வகிப்பதும், மழையும் ஆறும் உண்டாக காரணமாக அமையும் காடுகளை நிர்வகிப்பதும் அடங்கும்),  (உழவு பிரியும்) மனித வள மேம்பாடு, விதைகள் மேம்பாடு, பூச்சிகள் மேம்பாடு, மரங்கள் மேம்பாடு, உணவு தானிய பங்கிட்டு மேம்பாடு, உணவு தானிய சேமிப்பு மேம்பாடு, உணவு தானிய வர்த்தக மேம்பாடு என்று எல்லாவற்றையும் அரசர் செவ்வென நிர்வகிக்க வேண்டும். அந்த உணவில் கலப்படங்கள் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். 

மக்களின் இதயத்தில் ஒரு நாட்டின் உண்மையான மதிப்பிடு உணவை உற்பத்தி செய்யும் உழவில் தானுள்ளது. மாட மாளிகைகளிக்கும், ஆடம்பர களியாட்டங்களும், பிரம்மாண்டமான பாதுக்காப்பு அரணும் படைக்கலன்களும், விண்வெளியில் ஆராய்ச்சியும், வணிகமும்  (மற்றும் பல) ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி அல்ல.  ஏனெனில் இவை யாவும் அறிவு சார்ந்தது. ஒரு விதத்தில் அகங்காரம் சார்ந்தது. தேவைக்கு அதிகமாவே வளர்த்து எடுக்கப்படுவது. அதுவே விவசாயம் அப்படிப்பட்டது அல்ல. அது இதயபூர்வமானது ஆகும், லாப நஷ்டங்களை பார்க்காது செய்யப்படுவது. மக்களின் பசியை ஆற்றுவதை ஒரு வேள்வியாக / விரதமாக / தபஸாக செய்யப்படுவது. தேவைக்கு அதிகமாக செய்யப்படவும் மாட்டாது ஏனெனில் தேவைக்கு உற்பத்தி செய்யப்படும் உணவு உண்ணப்படாமல் அழிக்கப்படும். உற்பத்தி செய்கிறவன் அழிக்க ஒப்பமாட்டான். ஆதலால் அழிக்க தேவையில்லாத நிலையை விரும்புவான் அதாவது தேவையானவற்றை மட்டுமே உற்பத்தி செய்வான். 

உண்மையாக, வல்லரசு என்று நாடுகள் சொல்லிக்கொள்வதில் ஒன்றும் பலனில்லை. இயல்பாகவே மக்கள் சொல்ல வேண்டும் எது நல்ல நாடு என்று. அது உழவின் அடிப்படையிலேயே. வேறேதுமில்லை. 

அலகு என்ற சொல் நெற்கதிரைக் குறிப்பதாம். “பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே” என்கிற புறநானூற்றுப் பாடல் வரிகளும், இக்குறளின் கருத்தை உணர்த்துவதைக் காணலாம்.

“ஏரோட்டம் நின்னுபோனா உங்க காரோட்டம் என்னவாகும்” என்று பாமர மொழியிலே கேட்ட அண்மைக்கால கவிஞரை நினைவுறுத்தும் குறள். 

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
அலகு உடை நீழலவர் - உழுதல் தொழிலான் நெல்லினை உடையராய தண்ணளி உடையோர்; பலகுடை நீழலும் தம் குடைக்கீழ் காண்பர்-பலவேந்தர் குடை நிழலதாய மண்முழுதினையும் தம் வேந்தர் குடைக்கீழே காண்பர் (அலகு-கதிர், அ`ஃது ஈண்டு ஆகுபெயராய் நெல்மேலதாயிற்று. 'உடைய' என்பது குறைந்து நின்றது. நீழல் போறலின், நீழல் எனப்பட்டது. 'நீழலவர்' என்றது இரப்போர்க்கெல்லாம் ஈதல் நோக்கி ஒற்றுமை பற்றித் 'தங்குடை' என்றார். 'குடைநீழல்' என்பதூஉம் ஆகுபெயர். 'ஊன்று சால்மருங்கி்ன் ஈன்றதன் பயனே' (புறநா.35)என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம், 'இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்' (சிலப்.நாடுகாண்.149)என்றார் பிறரும்.).

மணக்குடவர் உரை
பல அரசர் குடைநிழலும் தம் அரசர் குடைநிழற்கீழே வரக்காண்பர், குடையில்லா நிழலை யுடையவர். குடையில்லா நிழலாவது பைங்கூழ் நிழல். இது தாம் வாழ்தலே அன்றித் தம் அரசனையும் வாழ்விப்பர் என்றது. (அலகுடைய நீழல்-கதிர்களையுடைய நெற்பயிரின்நிழல்).

மு.வரதராசனார் உரை
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

குறள் 1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
உழுது - உழுதல் - நிலத்தைக்கிளைத்தல்; கிண்டுதல்; மயிரைக்கோதுதல்.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

வாழ்வாரே - வாழ்வார் - வாழ்கின்றவர்

வாழ்வார் - வாழ்கிறார்

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

மற்றெல்லாம் - மற்று எல்லாம் - மற்ற கொடுத்தல் எல்லாம்

தொழுது - வணங்கல்

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

செல்பவர் - செல்லுவர்

முழுப்பொருள்
பூமியில் நிலத்தை உழுது பயிர் விளைவித்து அதனை அறுவடை செய்து அவ்வுணவை தானும் உண்டு பிறர்க்கு கொடுக்கும் உழவர்களே இவ்வுலகில் உண்மையாக வாழ்கின்றவர்கள். மற்றவர்கள் எல்லாம் தம் உணவுக்காக உழவர்கள் பின்பு சென்று உழவர்களை வணங்குபவர்கள்.

வாழ்தல் என்றால் மகிழ்தல் என்றும் பொருள். ஆதலால் உழவர்களே மெய்யான மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்றும் கூறலாம். ஏனெனில் பிறரின் பசியை (பசி என்னும் பிணியை) ஆற்றும் உணவை நிலத்தில் கடினமாக உழைத்து அவர்களுக்கு தருகின்றனர். அதனை தன்னுடைய அன்றாட தொழிலாக வைத்துள்ளனர். அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“வீழ்குடி உழவரொடு” (சிலப்.இந்திரவிழவூர் 43)

பரிமேலழகர் உரை
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர். ['மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே; மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர். இது செல்வமானது உழவினால் வருஞ் செல்வமென்றது.

மு.வரதராசனார் உரை
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

குறள் 1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
உழவு - நிலத்தைஉழும்தொழில், வேளாண்மை; உடம்பினால்உழைக்கை.

உழுவார் - உழவர்--உழவோர், s. Ploughmen, cultivators, agriculturists, husbandmen, inhabitants of agricultural districts, மருதநிலமாக்கள். 2. The fourth or Vellale caste, வேளாளர். 3. (p.) [ex உழப்பு.] War riors, heroes, படைவீரர்.

உலகத்தார்க்கு - உலகிலுள்ளோர், உலகமக்கள்; உயர்ந்தோர் உலகப்பற்றுடையார்.

ஆணி - இரும்பாணி; அச்சாணி எழுத்தாணி மரவாணி உரையாணி புண்ணாணி மேன்மை ஆதாரம் ஆசை சயனம் பேரழகு; எல்லை

அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

ஆற்றுதல் -  வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றாது - செய்யாது இருத்தல் 

எழுவுதல் - எழுப்புதல், எழச்செய்தல்; ஓசையுண்டாக்குதல்.

எழுதல் - எழுந்திருத்தல்; மேல்எழும்புதல்; தோன்றுதல்; புறப்படுதல்; தொழிலுறுதல்; பெயர்தல்; மனங்கிளர்தல்; மிகுதல்; வளர்தல்; உயிர்பெற்றெழுதல்; துயிலெழுதல்; பரவுதல்; தொடங்குதல்.

எழுவாரை - மற்ற தொழில்களை செய்வோரை

எல்லாம் - முழுதும்

பொறுத்து - தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்.

முழுப்பொருள்
நிலத்தை உழுது பயிர் விளைவித்து இவ்வுலக மக்களுக்கு உணவுக்கு தேவையான பொருட்களை (தானியங்கள், காய்கறிகள், பழங்கள்) வழங்குவோர் உழவர்களே. உணவு இல்லையென்றாலும் அதனை விளைவிக்கிற உழவர்கள் இல்லையென்றாலும் இவ்வுலக மக்களால் இயங்க முடியாது. ஆதலால் ஊர்திக்கு அச்சாரம் போன்று இவ்வுலக மக்களுக்கு உழவர்கள் ஆதரமானவர்கள்.

அகழ்வாரை எப்படி இவ்வுலகம் பொறுமையாக தாங்குகிறதோ அதுப்போலவே இவ்வுழவு தொழிலை ஆற்றாது பிற தொழில்களை செய்வோரையும் உழவர்கள் பொறுமையாக தாங்குகின்றனர்.

அறிவாளிகள் இல்லை என்றாலும் இவ்வுலகம் இயங்கும். ஆனால் உழவர்கள் இல்லை என்றால் இவ்வுலகம் இயங்காது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து - அவ்உழுதலைச் செய்யமாட்டாது பிறதொழில்கள் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்; உழுவார் உலகத்தார்க்கு ஆணி - அது வல்லார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர். ('காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு' என்றாற்போல உழுவார் என்றது உழுவிப்பார் மேலுஞ் செல்லும். 'உலகத்தார்' என்றது ஈண்டு அவரையொழிந்தாரை. கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின் 'ஆணி' என்றார். 'பொறுத்தலான்' என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவகம். 'அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்து' என்று பாடம் ஓதி, 'அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொறுத்து அவரைத் தொழுவாரேயாவர்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
உலகத்தாராகிய தேரினுக்கு அச்சாணிபோல்வார் உழுவாரே: அதனைச் செய்யாதாரே பிறர் பெருமிதத்தினால் செய்வனவெல்லாம் பொறுத்துத் தொழுது நிற்பார். இஃது உழுவார் தம்மையும் அரசனையும் பெரியராக்குதலன்றி உலகத்தையும் தாங்குவரென்பது கூறிற்று.

மு.வரதராசனார் உரை
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை
உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்

குறள் 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
[பொருட்பால், குடியியல், உழவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சுழன்றும் - சுழங்கு-தல் - cuḻaṅku-   5 v. intr. prob.சுழல்-. To whirl; to be tossed about; உழலுதல்.நெஞ்சகஞ் சுழங்குற (காஞ்சிப்பு. பன்னிரு. 276). (W.)

சுழல் - சுழற்சி; வளைவு; சுழிநீர்; சுழல்காற்று; காற்றாடி; பீலிக்குடை; ஏமாற்று; சஞ்சலம்.

ஏர்ப் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.

பின்னோன் - பிற்பட்டவன்; தம்பி; வேளாளன்.

பின்னது - பின்னே

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

அதனால் - அதனால்

உழந்தும் - உழலுதல் - அசைதல்; அலைதல்; சுழலுதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல்.
உழ - uẕa   VII. v. t. practise, learn by practice, பழகு; 2. conquer, வெல்லு; v. i. suffer, undergo penance, வருந்து; 2. be accomplished in any art, பழகு; 3. labour hard, exert, உழை.

உழவே - நிலத்தைஉழும்தொழில், வேளாண்மை; உடம்பினால்உழைக்கை

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
உழவு தொழிலை தவிர வேறு எந்த ஒரு தொழிலில் இவ்வுலக மக்கள் சுழன்றாலும் இறுதியில் ஏர் பிடித்து நிலத்தை பயிராக்கி உணவாக்கும் உழவனின் பின்னே தான் இவ்வுலகம் நிற்கிறது. அத்தகைய இந்த உழவு தொழிலில் எவ்வளவு வருத்தங்கள் இருந்தாலும் கடினமாக இருந்தாலும் உழவே இவ்வுலகில் முதன்மையான சிறந்த தொழில் (என்று திருவள்ளுவர் கூறுகிறார்).

உழவு தொழில் என்பது உடல் உழைப்பையும் அறிவையும் அனுபவத்தையும் சார்ந்த ஒரு தொழில். அது போல இயற்கையை நம்பி இருக்கின்ற தொழில். இயற்கை கைவிட்டால் (வானம் பொய்த்தாலோ அதாவது மழை அதிகமானாலோ பொய்த்தாலோ, வறட்சி ஏற்பட்டாலோ) உழவு செய்தல் முடியாது. அல்லது பூச்சி தாக்கினாலோ பயிர்கள் நாசம் அடைந்துவிடும்.  அப்படி இருக்கும் பொழுது அவர்களுக்கு வருவாய் குறைந்துவிடும் சில சமயம் ஒன்றுமே வராது. அதில்லாமல் உழவில் அன்றாடம் வருவாய் கிடையாது. அறுவடை காலத்தில் மட்டும் தான் விளைச்சலுக்கு ஏற்ப வரும். இதனால் இவர்களின் வருமானம் நிலையானது இல்லை என்பதை நாம் அறிகிறோம். இப்படி பல கஷ்டங்கள் இருந்தாலும் இவ்வுலகிற்கு உணவு படைக்கும் தொழிலே இவ்வுலகின் சிறந்த தொழில். 

அதுமட்டும் இன்றி மற்ற தொழில்களில் வரும் பயன் எல்லா மக்களுக்கும் ஆனது அல்ல. ஆனால் உழவில் மட்டும் தான் பயன் ஒவ்வொரு மக்களையும் சென்று அடையும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். . 

உப தகவல் (Sapiens book - Yuval Noah Harari)
வரலாற்று ரீதியாக பார்த்தால் மூன்று லட்சம் ஆண்டுகள் முன்பு மனிதன் (ஹோமோ சேப்பியன்ஸ்) ஆப்ரிக்காவில் விஸ்தரிக்க தொடங்கினான்.. ஆனால் 12000 ஆண்டுகள் முன்பு தான் அவன் விவசாயம் செய்ய துவங்கினான். அங்கிருந்து தான் சமூதாயங்கள், நாகரீங்கள் உருவாக தொடங்கின. அதன் பின்பு தான் ராஜாங்கம், பணம் முதலியவை உருவாகின. பின்பு தான் மதம், சாம்ராஜ்யங்கள் உருவாயிற்று. ஐநூறு ஆண்டுகள் முன்பு விஞ்ஞான புரட்சி துவங்கியது. இருநூறு ஆண்டுகள் முன்பு தொழிப்புரட்சி துவங்கியது. இன்றும் நாம் விவசாயம் இல்லாமல் இல்லை.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை - ஆதலான் எலலா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே. (ஏர் - ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடையது. இஃது உழவு வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.

English Meaning - As I taught a kid - Rajesh
A person can choose to one of the 1000s of jobs/opportunities available today. And that can person go around the world for that job. But at the end of the day, every person in this world is behind the farmer who carries the plow and does agriculture and serve the food. Hence, agriculture is best profession in the world

Questions that I ask to the kid
All the people in various occupations are behind whom?
Which is the best profession in the world? Why?

இலமென்று அசைஇ இருப்பாரைக்

குறள் 1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
 'இலம்!' - இல்லம்; இல்லறம் வறுமை
இலம்பை - ilampai   லம்பை, s. poverty, தரித்திரம்; 2. vexation, affliction, இடுக்கண், இலம்பைப்பட, to be distressed.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

அசை - செய்யுள்உறுப்புகளுள்ஒன்று; இசைப்பிரிவு; ஆடுமாடுகள்மீட்டுமெல்லும்இரை; அசைநிலை செயலறவு (ceyal-aṟavu   n. id. +.Prostrate condition, helplessness; வலியின்மை.  ) சுவடித்தூக்கு; தொங்குதூக்கு.
அசை - acai   VI. v. t. move, shake, agitate ஆட்டு; v. i. சோம்பு. be idle.
அசை - acai   II, v. i. move, stir, shake, ஆடு; 2. be active, walk, உலாவு; 3. be slow, சோம்பு; 4. be agitated, disturbed, கலங்கு.

- மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னிலைஒருமைவிகுதி; ஏவல்ஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பகுதிப்பொருள்விகுதி.

அசைஇ - தம்மிடம் விட்டு நகராது சோம்பி

இருப்பாரைக் - இருப்பவர்களை

காணின் - கண்டால்

நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

நிலமகள் -  the earth as a goddess, பூமி தேவி.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

நல்லாள் - குணத்திற் சிறந்த பெண், நற்குணமுடையவள்; தக்கவர்.

நகும் - நகு-தல்
naku-   6 v. [T. K. nagu.] intr.1. To laugh, smile; சிரித்தல் நகுதற்பொருட்டன்று நட்டல் (குறள், 784). 2. To rejoice;மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள், 774). 3. Tobloom, as a flower; மலர்தல் நக்க கண்போ னெய்தல் (ஐங்குறு. 151). 4. To open or expand;கட்டவிழ்தல். நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை(பரிபா. 4, 58). 5. To shine, glitter; பிரகாசித்தல் பொன்னக்கன்ன சடை (தேவா. 644, 1). 6.To hoot, as an owl; to sing, as a bird; புள்ளிசைத்தல். நட்பகலுங் கூகை நகும் (பு. வெ 3, 4).--tr.1. To despise; அவமதித்தல் ஈகென்பவனை நகுவானும் (திரிகடு. 74). 2. To surpass, overcome,defeat; தாழ்த்துதல் மானக்க நோக்கின் மடவார்(சீவக. 1866).  

முழுப்பொருள்
ஒருவனுக்கு வறுமை (தரித்திரம்) என்பது வாழ்நாளில் வரக்கூடும். ஆனால் அந்த வறுமையின் துன்பத்தில் உழன்று சோம்பல் கொண்டு அதனை சுகமென்று வாழ்வோர் சிலர் இருப்பர். அந்த சுகமே சொர்க்கம் என்று சொக்கி அதில் வீழ்ந்து உழல்வார்கள். தன் வாழ்வின் நோக்கம் என்ன என்று உணராமல் இருப்பர். ஒருவேலையும் செய்யாது நேரத்தை வீண் அடிப்பர். இத்தகையவர்களை கண்டு பூமி திருமகள் சிரிப்பாள். ஏளனம் கொள்வாள்.

ஏனெனில்? எவ்வேலையும் யாரும் கொடுக்கவில்லை என்றாலும் உழவு என்னும் தொழிலை எப்போதும் கொடுக்க நிலமகள் காத்து இருக்கிறாள். இவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் உழுது விதைத்து அறுத்து உண்பதே உயிர்வாழ்கை என்ற உண்மையை உணரவேண்டியது தான். உழவு செய்து வரும் உணவுப்பொருளில் உணவு மட்டும் அல்ல பொருளும் ஈட்டலாம்.

இக்குறள் சோம்பலை என்று பற்றியப் போல் தெரிந்தாலும், இவ்வுலகத்தில் பிறருக்கு உணவு கொடுக்கும் உழவு தொழிலுக்கு எப்பொழுது ஆட்கள் தேவை என்று.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் - யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும் - நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள்ளே நகா நிற்கும். (உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வங் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும் அதுசெய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். 'இரப்பாரை' என்று பாடம் ஓதுவாரும் உளர். இதனான் அது செய்யாத வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.).

மணக்குடவர் உரை
பொருளிலோமென்று சோம்பி இரப்பாரைக் கண்டால் நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும். இது நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

சாலமன் பாப்பையா உரை
நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

  சோம்பல் கொண்டு அதனைச் சுகமென்று வாழ்வாரை
  சொர்க்கம் அதே என்று சொக்கி அதில் வீழ்ந்து உழல்வாரை
  தாம் வாழும் வாழ்க்கை தரம் அதனை உணராரை
  தருவதற்குக் காத்திருக்கும் நிலமகளை அணுகாரை
  தேம்பி அழப் பிறந்தவரே இவர் என்று எண்ணி எண்ணி
  திருமகளாம் நில மகளாள் தினம் நகைத்து நிற்பாளாம்
  ஒம்புங்கள் உழைப்பதனை உழுது விதைத்து அறுத்திடுங்கள்
  உயிர் வாழ்க்கை அது என்ற உண்மையினை உணருங்கள் 

உழவினார் கைம்மடங்கின் இல்லை

குறள் 1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
உழவினார் - உழவு செய்யும் விவசாயிகள்/மக்கள்
கைம்மடங்கின் -  உழவுக்கு ஏர்பிடித்து, நாற்று நட்டு,  களை பறித்து, கதிர் அறுத்தல் முதலிய வேலைகளுக்கு கைகளை மடக்குதல்- உழவு வேலை செய்தல்

இல்லை - இல்லாமல் போனால்
விழைவு - விருப்பம்
உம் - எதிர்மறையும்மை

விழைவதூஉம் - நாம் விருப்ப படாத
விட்டு - ஆகாசம்
விட்டேம் - ஆகாசத்தை பார்த்துக்கொண்டு

என்பார்க்கு - இருக்க வேண்டிய

நிலை - நிலை வந்துவிடும்

முழுப்பொருள்
விவசாயிகள் ஏர்பிடித்து, நாற்று நட்டு, களை பறித்து, கதிர் அறுத்து விவசாய்ம் செய்வர். அப்படி தன்னை வருத்திக்கொண்டு உழவு தொழில் செய்து இவ்வுலகிற்கே உணவு படைப்பார்கள். அப்படிபட்ட உணவையே நாம் அனைவரும் அன்றாடம் விரும்பி உண்ணுகிறோம். நம்மை ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்? எதுவும் வேண்டாம் என்கிற துறவியார்கள் கூட உணவு உண்டு தான் ஆகவேண்டும்

ஆனால் அவ்விவசாயிகள் உழவு தொழிலை செய்யவில்லையென்றால் நமக்கு உணவு கிடைக்காது. உணவிற்கு வானத்தை பார்த்து தான் நாமும் ஏன் துறவிகள் கூட இருக்க வேண்டும். அந்நிலையை நாம் நினைவில் நிறுத்துக்கொள்ள வேண்டும். இல்லையே உயிர் வாழ்தல் கடினமாகி விடும்.

ஆதாலால் அந்நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது விவசாய நிலங்களை அபகரித்து வீடு கட்டுதல் கூடாது, ஆறுகளை அறுத்து மணல் வாரி தண்ணீர் பஞ்சத்திற்கு வழிவகுக்க கூடாது, நிலத்தடி நீரை ரசாயனம் கலந்து மாசு செய்ய கூடாது, மரங்களை வெட்டி மழை நீரை இல்லாமல் ஆக்க கூடாது.

உழவின் உழவோரின் சிறப்பை சொல்லும் குறள் இது.

மேலும்: அஷோக் உரை (நன்றி) 

எழுத்தாளர் ஜெயமோகன்’இன் ” அழியா இளமைகள்” கட்டுரையில் இருந்து சில வரிகள் 
பூனா நோக்கிச் செல்லும்போது சாலையோரத்தில் மரத்தடியில் வயலை நோக்கியபடி  ஒரு பெரியவர் அமர்ந்திருப்பதைக் கண்டு வசந்தகுமார் ஓட்டிக்கொண்டிருந்த சண்முகத்தின் தோளில் மெல்லத் தொட்டார். வண்டி நின்றது. நாஞ்சில் நாடன் இறங்கி வயல் நோக்கி சென்றார். பெரியவரிடம் மராட்டியிலேயே பேச ஆரம்பித்தார். கோதுமை அறுவடை நடந்துகொண்டிருந்தது. அறுவடை இயந்திரம் மாபெரும் வண்டு போல உறுமியது. நாஞ்சில்நாடன் வயலின் புதுதானிய மணம் பெற்று உணர்ச்சிவசப்பட்டார். கோதுமையை உருவி ஊதி வாயிலிட்டு மென்றார். புதிய வைக்கோலை எடுத்து முகர்ந்தார். அவர் நான் அறிந்த எழுத்தாளன் அல்ல. அந்தச்சட்டையை உருவிப்போட்டுவிட்டு வீராணமங்கலத்து விவசாயியாக ஆகிவிட்டார்

நாஞ்சில்நாடன் வேளாண்மையைப்பற்றி சில கேள்விகளைக் கேட்பதற்குள்ளாகவே பெரியவர் பொரிந்துகொட்டித்தள்ளினார். வழக்கம்போல கோதுமையும் நஷ்டம்தான். ஆனால் வேறுவழியே இல்லை, விவசாயம் செய்தாகவேண்டும். மகன்கள் ஏன் விவசாயம் செய்யவேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். ஏன் செய்யவேண்டும் என்று அவரும் யோசிக்காமலில்லை. ஆனால் தந்தையும் பாட்டன்களும் செய்த தொழில். மண்ணை சும்மா விட்டுவிடுவது பாவம்.

இங்கே விளையும் கோதுமையை எங்கோ ஏதோ வயிறு சாப்பிடவேண்டும் என தெய்வம் எழுதியிருக்கிறது. எறும்புகளோ எலிகளோ பறவைகளோ கூட சாப்பிடலாம். விவசாயம் செய்யாமல் விடுவது அவற்றை எல்லாம் பட்டினி போடுவது அல்லவா?” என்றார் பெரியவர். நாஞ்சில்நாடன் கண்கலங்கிவிட்டார். அவர் அருகே அமர்ந்து முகம் கனத்து பழுத்திருக்க கேட்டுக்கொண்டே இருந்தார்.
 
Image result for tamil nadu farmers


Image result for tamil nadu farmers 

 

Image result for paddy grains 

Image result for paddy grains 

Image result for tamil nadu farmers

பரிமேலழகர் உரை
உழவினார் கை மடங்கின் - உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேன் என்பார்க்கு நிலை இல்லை - யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தோம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா.

விளக்கம்
 (உம்மை, இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையால் தாம் உண்டலும் இல்லறஞ் செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்புமாத்திரமாய் கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். 'ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தோம் என்பார்க்கு' என உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அதைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.)


ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உழவினார் கை மடங்கின்- உழவுத்தொழிலைச் செய்வாரின் கை இதைச் செய்யாது ஓய்ந்திருக்குமாயின்; விழைவதும் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை- மாந்தராற் சிறப்பாக விரும்பப்படும் பெண்ணின்பத்தையுந் துறந்தோம் என்று பெருமை கூறிக்கொள்ளும் துறவியர்க்கும், அவர் அறத்தில் நிற்பது இல்லாமற்போம்.

உழவுத் தொழில் நிகழாதாயின் உணவில்லை. உணவில்லையெனின் இல்லறம் துறவறம் ஆகிய ஈரறமும் நிகழா என்பதாம். "யாவரும் விழையுமுணவும் யாந்துறந்தே மென்பார்க்கு அவ்வறத்தின்கணிற்றலுமுளவாகா." என்றுரைப்பர் பரிமேலழகர்.உணவும் யாந்துறந்தே மென்பார்க்கு உணவின்மையால் யாதொரு.கேடுமிராதாதலின், அவ்வுரை தன்முரணா யிருத்தல் காண்க. இனி, "யாதொரு பொருளின் கண்ணும் விரும்புவதனையும் விட்டேம் என்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை." என்னும் மணக்குடவ ருரையும், அங்ஙனமே தன் முரணாயிருத்தலாற் பொருந்தாதாம். 'விழைவதூஉம்' இன்னிசை யளபெடை. எனபார்க்கும் என்னும் எச்சவும்மை தொக்கது. இவ்வைந்து குறளாலும் உழவரது சிறப்புக் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்கு வராயின், யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவதனையும் விட்டேமென்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை.

எனவே துறவறத்திண்கண் நிற்பாரை நிறுத்துதல் உழவர்கண்ண தென்றவாறு.

மு.வ உரை
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
தமிழர்களின் அறிவுத் தந்தை வள்ளுவரை நான் அடிக்கடி சந்திப்பதுண்டு. சேர்ந்தாற் போல் அவரை ஒரு பத்துத் தினங்கள் சந்திக்க இயலாமல் போனது. ஆவலுடன் அவரைச் சந்திக்கச் சென்றேன். ஏதோ எழுதிக் கொண்டிருந்தவர் என்னை திரும்பிப் பார்க்கவே சிறிது நேரம் ஆனது.

என்ன நீண்ட நாட்களாக உன்னைக் காணவில்லையே. எங்கே போயிருந்தாய் என்றார்.
அய்யா ஒரு பெரிய துறவியைக் கண்டு வணங்கச் சென்றிருந்தேன் என்றேன்.

மிகப் பெரியவரா என்றார் வள்ளுவப் பெருந்தகை

ஆமாம் என்றேன்

எப்படி என்றார்

நான்மறைகளிலும் தேர்ந்தவர். மிகப் பெரிய ஞானி என்றேன்.

வள்ளுவர் சிரித்துக் கொண்டே அருகில் இருக்கின்ற கழனியிலே உழுது கொண்டிருந்த ஒரு
உழவரைக் காண்பித்து இவரை விடவா பெரியவர் என்றார். எனக்கோ வியப்பாயிருந்தது.

என்ன சாமி இவர் வேளாண்மைத் தொழிலாளி. அவரோ உலகஞானி. எத்தனை பெரிய பீடத்தின் குரு.எத்தனை சமூகப் பெரியவர்கள் எல்லாம் அவரின் முன்னர் பணிந்து நிற்கின்றனர். குடியரசுத் தலைவர்கள் தலைமை அமைச்சர்கள் விஞ்ஞானிகள் என்று பல தரப்பட்டவரும் அவரைத் தொழுது பணிந்து நிற்கின்றனர். நீங்கள் ஒரு வேளாண் தொழிலாளியைக் காண்பித்து இப்படிக் கேட்பது எப்படி என்றேன்.

மீண்டும் பொது மறைப் பெரியோன் கேட்டார். என் வினாவிற்கான விடையை சொல்
என்றார்.

நான் விடையளிக்க அஞ்சி நின்றேன்.

உலகச் சிந்தனைத் தந்தை வள்ளுவர் நகைத்துக் கொண்டே சொன்னார். இந்த வேளாண் தொழிலாளி ஆமாம் இந்த உழவன் தனது கையை மடக்கித் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள் உயிர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தையும் துறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் துறவியும் கூட பசித் துன்பத்திற்கு ஆளாகி விடுவார்.
இப்போது சொல் யார் பெரியவர்.எல்லாவற்றையும் துறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் துறவியா உழவரா யார் பெரியவர் என்றார்.

அவருக்கு விடையளிக்க யாரால் இயலும்

குறள் இதோ

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூ உம்
விட்டேம் என்பார்க்கும் நிலை

துறவறத்தை வள்ளுவர் கேலி செய்யும் பாங்கு விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டு விட்டோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் என்கின்றார்.

குறட் கருத்து 2  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
வள்ளுவரை  அடிக்கடி  நான்  சந்திக்கின்றேன்
            வாய்ப்பதனை  நானே தான்  பெற்றும்  உள்ளேன்
உள்ளு தொறும்  உள்ளுதொறும்  உயர்வளிக்கும்
            உண்மை வழி  அவர்தானே  காட்டி  நின்றார்
கள்ள மனம்  ஒழித்  தவர்தம்  முன்னால்  நின்றால்
            கனி வழியாம்  தனி  வழியைக்  காட்டுவாரே
தெள்ளு  தமிழ்ப்  புலவோர்கள்  அனைவருக்கும்
            தெளிந்த  வழி  காட்டியவர்  அவரே  தானே

உலகத்தில்  முதன்மை இடம்  யாருக்கென்று
            உழன்ற  படி  வள்ளுவரின்  முன்னே நின்றேன்
சில  கற்றுப்  பல  கல்லாச் சிறுவன்  என்னைச்
            சிரித்த படி  வரவேற்றார்  கேள்வி வைத்தேன்
பல  கற்று  உலகத்தை  வென்று  நின்ற
            பண்டிதர்கள்  பலர்   உண்டு படையெடுத்து
உலகத்தை  தன்  குடைக் கீழ்  கொண்டு வந்த
            ஒன்றிரண்டு  மன்னர்  உண்டு  மேலும் நல்ல


சிலை  வடிக்கும்  சிற்பி  உண்டு சிந்தனையால்
            செம்மாந்து  நிற்கின்ற  கவிஞர்  உண்டு
விலையில்லாக்  கலைகள்  உண்டு  நாட்டையாளும்
            வித்தகர்கள்  பல  பேர்கள்  உண்டு  உண்டு
நிலையில்லா  வாழ்விதனை  விட்டு  நீங்க
            நினைக்கின்ற  துறவியரோ  நிறைய  உண்டு
கல  கலவென்றே  சிரித்து  அனைவரையும்
            கையெடுத்து  ஆளுகின்ற  பெண்டிர்  உண்டு

இவர்களிலே  யார்  உயர்ந்தோர்  என்று  ஒரு
            இடக்கு  மடக்கான  கேள்வி  கேட்டு  வைத்தேன்
அவர்  உடனே  வயற் காட்டைக்  காட்டி  நின்றார்
            அங்கொருவர்  உழுது  நின்றார்  என்ன  என்றேன்
தவ  வேட  ஞானியரும்   கூட   இங்கே
            தடம்  மாறிப்  போவார்கள்  உழவன்  மட்டும்
அவன்  கையை  மடக்கித்  தலைக்  கீழே  வைத்து
            அப்படியே  படுத்து  விட்டால் ஒழிந்ததெல்லாம

துறந்து  விட்டோம்  என்பாரோ  துயில்  இழப்பார்
            தொல் புகழின்  புலவோர்கள்  புகழ்  இழப்பார்
இறந்து  பட்டோர்  புகழினிலே  வாழ்வோரெல்லாம்
            இரந்து  நிற்போர்  கூட்டத்தில்  இணைந்து நிற்பார்
பரந்து  பட்டுப்  பாராள்வோர்  பல்லிளிப்பார்
            பாவியராய்  அனைவருமே  மாறி நிற்பார்
உழந்து  நிற்கும்  உழவன்  அவன்  இல்லையென்றால்
            உலகம்  இல்லை  உயிர்கள் இல்லை  ஒன்றும் இல்லை

குறள்
உழவினார்  கைம்மடங்கின்  இல்லை  விழைவதூஉம்
விட்டேம்  என்பார்க்கும்  நிலை

குறட் கருத்து 3  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
எல்லாமும் துறந்து விட்டேன் என்று சொல்லி
இருப்பாரும் தலைவர்களும் அமைச்சர்களும்
நல்லாரும் ஒழுக்கமின்றிப் பொருளைச் சேர்க்கும்
நாகரீக மற்றாரும் வாழ எண்ணி
பொல்லாத செயலெல்லாம் செய்தழியும்
பொறுப்பற்ற அரசியலார் கூட்டமெல்லாம்
செல்லாமல் அழிவார்கள் உழவர் மட்டும்
செய் தொழிலை மறந்தங்கு உறங்கச் சென்றால்
                 

தொடிப்புழுதி கஃசா உணக்கின்

குறள் 1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
தொடி - toṭi   n. தொடு²-. 1. Curve, bend;வளைவு. தொடிவளைத் தோளும் (சிலப். 10, 128). 2.Bracelet; கைவளை (பிங்.) குறுந்தொடி கழித்தகைச்சாபம் பற்றி (புறநா. 77). 3. Armlet;தோள்வளை.நீப்ப நீங்காது வரின்வரை யமைந்து . . . போக்கில்பொலந்தொடி (நற். 136). 4. Armlet, warrior'sarmlet; வீரவளை வலிகெழு தடக்கை தொடியொடுசுடர்வர (மதுரைக். 720). 5. [T. toḍi.] Ring,ferrule, ornamental knob of an elephant's tusk;பூண். தொடித்தலை விழுத்தண்டூன்றி (புறநா. 243). 6.Circular projections in stone-wells serving assteps; பாறைக்கிணறுகளில் படியாக உதவ வெட்டப்படும் சுற்றுவட்டம். Loc. 7. A standard weight.See பலம் தொடிப்புழுதி கஃசா வுணக்கின் (குறள்,1037)


தொடி - ஒரு பலம் எடையுள்ள
பலம் - நிறைவகை (a standard weight)

புழுதி - மண்தூள்; துகள்; காய்ந்தநிலம்; காண்க:புழுதிக்கால்
புழுதி - காற்றால் பரவும் தூசி, சிறு துகள் போன்றவை; மண்தூள்; துகள், காய்ந்த நிலம்

கஃசா  கஃசு - காற்பலம் கொண்ட நிறுத்தல் அளவு ; காற்பலம் என்னும் எடை அளவு; ¼ பலம்

உணக்கு-தல் - uṇakku-   5 v. tr. caus. ofஉணங்கு-. [M. uṇakku.] 1. To cause to dry,to dry in the sun; உலர்த்துதல் தொடிப் புழுதிகஃசா வுணக்கின் (குறள், 1037). 2. To injure, ruin;கெடுத்தல். உணக்கினான் . . . என்வாழ்க்கை (விநாயகபு. 80, 120).  .

உணக்கின் - உணக்கல் – காய செய்தல்; நிழலுணத்தலாய் உணத்த.
உணத்த - வெயிலில் உலரத்துவது

பிடி - பற்றுகை; மனத்திற்பற்றுகை; நம்பிக்கை; மதக்கொள்கை; கைம்முட்டி; மற்பிடி; ஆயுதப்பிடி; குதிரையின்வாய்க்கருவியிற்கோக்குங்குசை; உபாயம்; உறுதி; உதவி; உள்ளங்கைப்பிடியளவு; பணியாரவகை; நான்குவிரல்கொண்டஓர்அளவு; பெண்யானை; பேய்; உலர்ந்தது; காண்க:ஏலம்; சீட்டாட்டத்தில்ஒருமுறைஎடுக்கப்படும்சீட்டு.

எரு - உரம்; சாணி; வறட்டி; பசளை; மலம்.

பிடித்தெருவும் - பிடி + எரு - ஒரு பிடி எருவும்

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டாது - தேவையில்லாமல்; வேறு உரங்களை விலைக்கு வாங்காது

சாலுதல் - நிறைதல்; பொருந்துதல்; முற்றுதல்; மாட்சிபெறுதல்.
சால் - நிறைவு; நீர்நிரப்பும்பானை; நீர்இறைக்கும்கலம்; உழவுசால்; கும்பராசி; ஆண்டு.

சாலப் படும் - செழிப்பாய் வளரும்.

முழுப்பொருள்
காய்ந்த நிலத்தில், ஒரு பலம் மண் (மண் காற்றோட்டம் பெரும் வகையில்) உழுது காற்பலம் (¼) அளவாகும் வரை உழுதால், அந்த நிலத்தில் ஒரு பிடி அளவு எருக்கூட தேவையில்லாமல், பயிர் செழுப்பாய் விளையும்.

பி.கு: திருக்குறளில் ஏதாவது தொழிலுக்கு அதிகாரம் என்று கேட்டால். இல்லை. ஆக உழவை வள்ளுவர் தொழிலாக பார்க்க வில்லை. அதனினும் மேலாக, அதன் முக்கியத்துவத்தை பார்த்தார் என்று கூறலாம்.

குறளின் அறிவியில் நோக்கு
நன்றி: திரு. இளமுருகன் (Star Vijay - தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு
நன்றி: Questpedia (வேளாண்மை பற்றிய நல்ல ஒரு வலைப்பக்கம்)
உங்கள் விஞ்ஞானத்தால் சாதிக்க முடிந்தது என்ன ? நிலம் குருடானது. விதை மலடானது. 

குறளில் உள்ள ஒரு அறிவியல் செய்தி
மண்னைத் தயார் செய்தல் என்பது பயிர் வளர்ப்புக்குத் தேவையான முதன்மையான செயலாகும். அடியில் உள்ள மண்ணின் சத்தை மேலே கொண்டுவரவும், கடினத்தன்மையை நீக்கவும் மண்ணைத் தயார் செய்தல் வேண்டும். இது உழுதல், சமன்படுத்தல் மற்றும் உரமிடல் ஆகிய செயல்களை உள்ளடக்கியதாகும்.

நீங்கள் செயற்கை உறமாக வாங்குகிறிரே அமோனியா (Ammonia  NH3), அது நைட்ரஜன் (Nitrogen N) கொண்டது. ஆனால் குறள் சொன்னவாரு ஏர் விட்டால், நன்கு உழுதால் மூலம் மண்ணிற்கு காற்றோட்டம் அதிகமாகிறது. காற்றிலே நைட்ரஜன் (Nitrogen N) உள்ளது. அது மண்ணில் தங்கும். ஆக மண்ணில் நைட்ரஜன் அளவு அதிகமாகும். நிலத்தில் உள்ள இலை தழை போன்றவையெல்லாம் மட்கி நல்லதொரு வளத்தை மண்ணிற்கு கொடுகின்றது என அறிகின்றோம். அந்த நைட்ரஜனை (Nitrogen) இழுத்து பயிர் செழுமையாக வளரும். ஒரு பிடி எரு கூட தேவையில்லை. 

உழுதல் என்பது கீழ்மண்ணை மேலே கொண்டுவருதலும் அதன் கடினத்தன்மையை நீக்கி மெண்மையாக்குதலும் ஆகும். இதனால் மண்ணானது தாவரத்தின் வேர் சுவாசிக்கத் தேவையான காற்றை அளிக்கின்றது; ஈரப்பதத்தை நீண்ட காலத்திற்கு நிலைக்கச் செய்கிறது; நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியினை ஊக்குவிப்பதன் மூலம் வளமான மண்ணை மேலே கொண்டு வரச்செய்கிறது; களைத் தாவரங்களையும் அதன் விதைகளையும் மண்ணிலிருந்து நீக்குகிறது.இதனால் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்பதோடு மட்டுமல்லாமல், மண்ணரிப்பபை தடுக்கவும், கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடும் சிதைவைத் தூண்டவும், மண் உயிர்ப்பொருள் பெருகுவதையும் மாறுபடுவதையும் குறைக்கிறது.

பரிமேலழகர் உரை
தொடிப்புழுதி கஃசா உணக்கின் - ஒரு நிலத்தினை உழுதவன் ஒரு பலப் புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காய விடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அதன்கண் செய்த பயிர் ஒரு பிடியின் கண் அடங்கிய எருவும் இடவேண்டாமல் பணைத்து விளையும். 

விளக்கம் 
(பிடித்து - பிடியின்கண்ணது. 'பிடித்த' என்பதன் விகாரம் என்பாரும் உளர். 'வேண்டாமல்,' 'சான்று' என்பன திரிந்து நின்றன.) 

மணக்குடவர் உரை
ஒரு பலப்புழுதியைக் கஃசாக உணக்குவனாயின், ஒரு கையாற் பிடித்தது எருவும் இடவேண்டாமல் அமைந்து விளையும். மேற்கூறிய உழவு செய்யுந்திறன் கூறுவார் முற்படப் புழுதியுணக்க வேண்டுமென்றார். 

மு.வரதராசனார் உரை
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.

சாலமன் பாப்பையா உரை
உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.

குறளும் பசுமைபுரட்சியும்
நன்றி : Vaduvurvendan

பசுமைப் புரட்சிக்கு முந்தைய காலங்களில் வயலுக்குள் கொழுஞ்சி போன்ற செடிகளும், வரப்புகளில் உரத்துக்கான இலை, தழைகளைத் தரும் வளமான செடிகளையும் வளர்ப்பது  வழக்கமாக இருந்தது.

வயல் தரிசாக கிடக்கும் நாட்களில் புழுதி எடுப்பார்கள்.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்

உழவன் தனது கால் ஆழமாக அழுந்த தன் நிலத்தை உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடாமலேயே அந்நிலத்தில் பயிர் செழித்து வளரும்.

இக்குறளின் மூலம் உழுதலின் அவசியத்தைப் புரிந்துகொள்கிறோம்.  நன்கு உழுவதன் மூலம் காற்றோட்டம் அதிகமாகிறது.  நிலத்தில் உள்ள இலை, தழை போன்றவையெல்லாம் மட்கி நல்லதொரு வளத்தை மண்ணிற்கு கொடுக்கின்றது என அறிகிறோம்.

அதன் பின்னர் ஆடி மாத மழையில் வயல் முழுவதும் கொழுஞ்சி செடி சில்லென்று முளைக்கும்.  நடவுப் பருவத்திற்குள் அந்த செடிகள் நன்றாகத் தழைந்துவிடும்.

நடவுக்கு தொழியடிக்கும் முன்னரே அந்த செடிகளை மடக்கி உழுது, மண்ணோடு சேர்ந்து மட்கட் செய்வார்கள்.

அடுத்து வயல் வரப்புகளில் உள்ள உயர்ந்த செடிகளில் உள்ள இலை, தழைகளையும் வெட்டி வயலுக்குள் பரப்புவார்கள்.  எல்லாம் சேர்ந்து மக்கி, மண்ணுக்கு உரமாகி, அதன் மணிச்சத்தை வளமாக்கும்.

நடவுக்கு முன்னர் தொழியோடு சேர்ந்து மட்கும் இந்த இயற்றை உரம் மண்ணின் உயிர்ச்சத்தோடு இரண்டறக் கலந்து பயிரை வளர்க்கப் பயன்படும்.

இப்படித்தான் நமது  பாரம்பரிய விவசாயம் நடந்து வந்தது.

உரம் ஒருபக்கம், பூச்சி மருந்து மற்றொரு பக்கம்.

உரம் மண்ணில் இருக்கும் மணிச்சத்தை உறிஞ்சி அதன் மூலம் பயிரை சூல் கொள்ள வைத்தது.

பூச்சி மருந்து உழவுக்கும் உழவனுக்கும் நண்பனான சிற்றுயிர்களையும் சேர்த்துக் கொன்றது.
இப்படி காலம் காலமாக நாம் கைப்பற்றி வந்த இயற்கை வழி வேளாண் முறைகள் அனைத்தையும் பறிகொடுத்தோம்.

நமது வாழ்க்கை முறையாக இருந்த இயற்கை விவசாயம், இப்போது வார்த்தை அளவில் கூட இல்லாமல் போய்விட்டது.

இரு குறள்களின் முரண்பாடு ?

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

இந்த குறட்பாக்களில் முதல் குறட்பாவில் நன்றாக உழுதால், நிலத்திற்கு உரம் இடத் தேவையில்லை என்று சொல்கிறார்; ஆனால் இரண்டாம் குறட்பாவில் உரம் இடவேண்டும் என்று சொல்கிறார் ; ஏன் இந்த முரண்பாடு? " என்று கேட்டான்.

ஆசிரியர் சிரித்துக் கொண்டே ," நல்ல கேள்வி, காரணம் சொல்கிறேன், முதல் குறள் புன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகுமாறு உழுதுவிட்டு , மழை பெய்தவுடன் புன்செய்த் தானியங்கள், பயறு வகைகளை விதைத்து விட்டால் மேல் உரத்தையோ, பாய்ச்சு நீரையோ எதிர்பாராமல் வானத்தை, அதாவது மழையைப் பார்த்தே புன்செய்ப் பயிர்கள் விளைந்துவிடும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

இந்தக் குறள் நன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. உழுதல்,எருவிடுதல்,களையெடுத்தல்,நீர்பாய்ச்சுதல், காவல் காத்தல் என்பது போன்ற எல்லா வேலைகளையும் பார்த்தால்தான் நன்செய் நிலத்தில் பலன் காணமுடியும். இப்போது புரிகிறதா? முரண்பாடு உன்னிடம்தான் உள்ளது; வள்ளுவரிடம் இல்லை."