Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label ஒழுக்கமுடைமை. Show all posts
Showing posts with label ஒழுக்கமுடைமை. Show all posts

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

குறள் 140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]

பொருள்
உலகத்தோடு - உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

ஒட்ட - அடியோடு; கிட்ட; இறுக; அணுக; போல.

ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

ஒழுக்கம்  - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

பல - ஒன்றுக்குமேற்பட்டவை

கற்றும் - கற்கை - படித்தல்.

கல்லார் - நெறிநூல்கள் கல்லாதவர்

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

இலாதார் - இல்லாதவர்

அறிவிலாதார் - அறிவு இல்லாதவர்கள் 

முழுப்பொருள்
உலகம் என்றால் உயர்ந்தோர் என்று பொருள் கொள்ள வேண்டும். "உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர்" என்று திருமுருகாற்றுப்படையிலும் வருகிறது. 

ஆதலால் உயர்ந்தோருடன் ஒட்டி அவர்கள்கடைப்பிடிக்கின்ற ஒழுக்கத்தை பின்பற்றி ஒருவர் வாழவேண்டும். அப்படி உயர்ந்தோருடன் ஒட்டி வாழாமல் ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் ஒருவர் இருப்பார் என்றால் நூல்கள் பல கற்றும் அவர் பல நூல்கள் கல்லாத அறிவில்லாதவர்க்கு சமம் (நூல்கள் கற்றும் பலனில்லை). 

ஒழுகுதல் / ஒழுகல் என்றால்?
வானத்தில் இருந்ததில் மழை கீழே ஒழுகிறது. வானம் உயர்ந்தோரை குறிப்பதால் உயர்ந்தோரில் இருந்து வரும் நற்குணங்கள் (ஒழுக்கம்) என்பதால் ஒழுகல் என்ற சொல் வந்திருக்கலாம் (நன்றி: இலங்கை ஜெயராஜ்).

ஏன் உயர்ந்தோருடன் ஒழுக வேண்டும்?
திருக்குறள் மூதுரை ஆத்திச்சூடி போன்று பல நெறி நூல்கள் கற்றால் போதாதா? அதில் இருந்து ஒழுக்கத்தை கற்க முடியாத? முடியும். ஆனால் ஒழுக்கமே ஆயினும் சில ஒழுக்க நெறிகள் காலத்திற்கு காலம் மாறக்கூடும். எவை மாற தக்கவை எவை சரியான மாற்றம் என்று நூல்கள் பல கற்று உணர்ந்து பின்பற்றி அதனை வாழ்வாக வாழும் உயர்ந்தோர் அறிவர். ஆதலால் முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் உயர்ந்தோர் வாழ்வர். ஆதலால்உயர்ந்தோரை பின்பற்றினால் நாம் அந்த மாற்றங்களை அறிந்துகொள்ளலாம். மேலும் பெரியாரைத் துணைக்கொள்ளுதல் என்று நன்மையே பயக்கும். 

மேலும்

ஊரோடு ஒத்து வாழ்
இக்குறளை படித்தப்பின்பு "உலகத்தோடு ஒத்து வாழ்" என்பது காலப்போக்கில்  மருவி "ஊரோடு ஒத்து வாழ்" என்று ஆயிற்று என நினைக்கிறன். அது அந்த ஊர்க்கு ஏற்றாற்போல் மாறி விடு என்று பலர் புரிந்துகொண்டு தான் வளர்ந்த இடத்தில் பெற்ற நல்லவற்றையெல்லாம் துடைத்தெறிந்து விட்டு புதிய இடத்துக்கு தன்னை மாற்றிக்கொள்கின்றனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் மக்களுக்கு பொருந்து. 

நான் நிர்வாக மேலாண்மை மேற்பட்டபடிப்பை அமெரிக்காவில் படிக்கும் பொழுது உலக நிர்வாகம் பற்றி படித்தேன். அதில் எங்களுக்கு கூறப்படும் முக்கியமான ஒன்றே என்ன தெரியுமா ? நீ வேறு ஒரு நாட்டிற்கு சென்றால் அந்த நாட்டின் கலாச்சாரம்/பண்பாடு ஆகியவற்றை கற்றுக்கொள். நல்லவற்றை எடுத்துக்கொள். தீயவற்றை அறிந்து எச்சரிக்கையாக இரு. மொழியை கற்றுக்கொள்வதை முதன்மையான காரியமாக கொள்ளாதே. மொழி வெறும் தொடர்புக்கான ஒரு கருவி தான்.  உன்னுடைய சுயத்தை இழக்காதே. ஆனால் பலர் மொழியை கற்றுக்கொள் என்று வம்புபண்ணுவர். குறிப்பாக இந்தியாவில் ஹிந்தி கத்துக்கோ கன்னடம் கத்துக்கோ என்று அடம்பிடிப்பர். மொழியை கற்றால் அதற்கான பயனும் உண்டு. ஆனால் அதனை தேவை எனில் செய்யலாம். மொழியை தாண்டி ஒரு நாட்டில் அந்நாட்டைப்பற்றி கற்க பல உண்டு. ஒரு மொழியை கற்காமல் அந்நாட்டில் உள்ள நல்ல புத்தகங்களை இலக்கியங்களை மொழிப்பெயர்ப்பு செய்து வந்த வடிவங்களில் படிக்கலாம். அதில் இருந்து நாம் பெறக்கூடியவை ஏராளம்.

நற்றிணைப்பாடல் இதை, “நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும் பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்” என்கிறது.  பின்னால் வரப்போகும் அறிவுடமை அதிகாரத்தில் “எவ்வ துறைவ துலகம் – உலகத்தோ டவ்வ துறைவ தறிவு” என்று அறிவுறுத்தலாக கூறுவார் வள்ளுவரே!

நாலடியார் இப்படி சொல்கிறது
குலந்தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையறு தொல்சீர்உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர் (நாலடி 333)

மேலும் கீழ்க்காணும் குறள்களுடனும் தொடர்புபடுத்தி புரிந்துக்கொள்ளலாம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)

மணக்குடவர் உரை
அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று

மு.வரதராசனார் உரை
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

Thirukkural - Management - Relationship
Relationship happens when there is a need fulfillment. “A relationship,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 985), “is a friendship and strong emotional connection between two people.”

Today organizations spend millions of dollars to improve work place relationships. There are many workshops,  seminars, conferences, and training programs to help employees develop Interpersonal skills in workplace. Interpersonal  skill is made a compulsory competence for employees in many manufacturing companies. There are needs to focus on developing interpersonal  skills. Two predominant needs are: 1) People are too self-centered and they prefer to be isolates and 2) They are addicted to their smart phones.

People either do not find time or create purposeful time for meaningful relationships. Winning at any cost has become the order of the day. I win and you lose approach has become an unwritten norm. Because of all these thoughts and practices, individuals, teams, and organizations suffer. Relationship in workplace is important as it helps people maintain good health in addition to achieving tasks together by supporting  one another. A person,  as an individual, may prefer not to have relationship  as an individual. However, in an organization, a person is not an individual. A person is a social being. Interdependence between and among people, departments,  and divisions is very high in an organization. His actions and interactions influence and complement  the  performance of people associated with him. That necessitates the need for building meaningful relationships. 

Kurals help us to get Valluvar's views on relationship and its importance to personal and professional success, and the methods to build and sustain long lasting relationships. 

Kural 140 compares a person, though educated, learned, and widely read,to an illiterate, if he cannot get along with people, society, and the world's expectations and practices. So, a literate may be an illiterate when it comes to building relationships. Relationship, according to Valluvar, is getting along with people and the world at large. There are people who are individually brilliant but socially misfits. Social misfits create more problems than people who are intellectually low. Still man is a social being. 

Those are fools however learned
Who have not learned to walk with the world.

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

குறள் 139
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய 
வழுக்கியும் வாயாற் சொலல்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]

பொருள்
ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

உடையவர்க்கு - உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்

உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.

ஒல்லாவே - பொருந்தாத ; உடன்படாத; தகாத; 

தீய - தீமையான; போலியான.

வழுக்கியும் - வழுக்குதல் - சறுக்குதல்; தவறுசெய்தல்; தப்புதல்; மறத்தல்; அசைதல்; ஒழிதல்; அடித்தல்; மோதுதல்.

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

வாயால் - வாயினால் 

சொலல் - சொல்ல மாட்டார்கள் 

முழுப்பொருள்
ஒழுக்கத்தை பேணுபவர் பொருந்தாத (ஒழுக்கத்தின் தகுதிக்கு பொருந்தாத) தீய சொற்களை தவறியும் (சறுக்கியும், மறந்தும், வழுக்கியும்) தன் வாயால் கூற மாட்டார். தன் சிந்தனையில் இருப்பதே வாயில் வரும். ஆதலால் சிந்தையில் கூட தீயவற்றை பழக மாட்டார்கள்.

ஆதலால் நாம் நமது குடும்பங்களில் நல்லவற்றையும் நற்சொற்களை மட்டும் பேசுவதை ஒரு பண்பாடாக (வழக்கமாக) பேணவேண்டும். இனிய சொற்கள் இருக்கும் பொழுது ஏன் இனிமை இல்லாத சொற்களை பேசுகிறாய் என்று வள்ளுவர் முன்னமே நம்மை கேட்டுள்ளார். 

தீச்சொல் என்பது பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் பொய், ஒருவரைப்பற்றிய கோள்சொல், கடுஞ்சொல், வீண்சொல் போன்றவை. கேட்ட வார்த்தைகளும் பொருந்தும்.

இனியவை நாற்பது, “ஆக்கம் அழியினும் அல்லவை கூறா தேர்ச்சியின் தேர்வினிய தில்” என்று வளமே அழியினும் வன்சொல் சொல்லாதிருக்கும் தேர்ச்சியினைவிட உயர்ந்த தேர்வும் இனியதும் இல்லை என்கிறது.

"பொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன்" என்று தசரதனை பற்றி கம்பர் இராமாயணத்தில் கூறுகிறார். அதாவது பொய்யான சொற்களைப் போற்றாத உண்மை மொழிகளைப் போற்றும் தயரதன் (/தசரதன்) என்று பொருள்.

கம்பராமாயணத்தில் இருந்து ஒரு உதாரணம் 
=============================================
கைகேயி பெற்ற வரத்தால், இராமன் காடு செல்ல வேண்டி இருந்தது. அதைக் கேட்ட  இலக்குவன் கோபம் கொண்டு மிகையையாகப் பேசுகிறான். நிதானம் தவறி பேசுகிறான்.

'சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின்
வெங் கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!
அதாவது சிங்கம் தன் குட்டிக்கு ஊட்டும் இரையை நாய் தன் குட்டிக்கு ஊட்டுவது போல பரதனுக்கு நாடு கொடுக்க விரும்பினாளே கைகேயி என்று இலக்குவன் கோபத்தில் பேசுகிறான். 

ராமன் இப்படி பதில் சொல்கிறான் 
"விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்"
ஊழ்வினை (விதி) செலுத்தத்தாயும் தந்தையும் அவ்வினையின் கருவியாக இருந்து செயல்பட்டனரேஅன்றி அவர்களாக நம்மேல் பகை கொண்டு செய்தாரில்லை. மழைநீர்  வரத்து இன்மையால் சிலகாலம் ஆற்றில் நீர் வற்றுவது போல்வினைவலியால் பெற்றோர் அன்பின்மை  உடையார் போலத் தோன்றுவர், அவ்வளவேஎன்றானாம். மூவரையும்  தாயர் என ஒப்பக் கருதல் பற்றிக் ‘கைகேயியைப் பயந்து நமைப்புரந்தாள்’ என்றான் இராமன்.                

அதுத்தபடியாக 
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க,
'கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்,
விதிக்கும் விதி ஆகும், என் வில் - தொழில் காண்டி' என்றான்.

அதாவது விதியால் விளைந்தது என இராமன் சொல்ல, அந்த விதியையும் மாற்ற வல்ல விதி  என்வில் என்றான் இலக்குவன். துடிக்கின்ற  மனத்தை ஆற்ற முடியாமல் திணறுகிறேன் என்ற அவதியைமுதலில் வெளிப்படுத்துகிறான்; பின்னர் இதற்கு  ஏதாவது  முடிவு கண்டால்தான் என்மனம் ஆறும் என்பதாகப் பேசுகிறான்.

அப்போது இராமன் சொல்கிறான்,

"வேதம் படித்த வாயால்" இப்படி பேசலாமா என்று.

வேதத்தைப் படித்தாலே போதும், வாழ்வில் நிதானம் வந்து விடும். வார்த்தையில்  கனிவு இருக்கும். பணிவு இருக்கும்.

அதாவது, படித்த பின் அதன் படி நடக்க நினைப்பவர்களுக்கு அப்படி நிகழும்.
ஆய்தந்து, அவன் அவ் உரை  கூறலும், ‘ஐய! நின்தன்
வாய் தந்தன கூறுதியோ  மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?’

அவன் - இலக்குவன்;  ஆய்தந்து - ஆராய்ந்து;  அவ் உரை கூறலும் -அந்தச் சொற்களைச் சொன்ன அளவில் (இராமன் அவனை நோக்கி);  ‘ஐய! - தம்பி;  மறை தந்த நாவால் - வேதங்களைச் சொன்ன நாக்கினால்;  நின்தன் வாய்தந்தனகூறுதியோ? -  உன் வாயில் வந்தவைகளைக் கூறுகின்றாயோ, நீ தந்தது - நீஇப்பொழுது (உன் வாயால்) தந்த சொல்; நெறியோர்கண் நிலாதது அன்றே? -நல்நெறியில் நடப்பவர்கள் இடத்தில் நிற்கத்தகாத சொல் அல்லவா; ஈன்ற தாய் தந்தை என்றால் - (உன் கருத்திற்கு  மாயாக நடப்பவர்) பெற்ற தாயும் தந்தையும் ஆனால்;  அவர் மேல் சலிக்கின்றது - அவரிடத்தில் கோபிப்பது; என்னோ?’ -  எப்படிப்பொருந்தும்.

வேதத்தைக் கற்றுணர்ந்த இலக்குமணன்  ‘அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்’ என்றுஅறிந்துள்ளவன்.  ஆகவே,  அன்னைக்கும்
தந்தைக்கும் மாறாக வாய்தந்த வார்த்தைகளைப் பேசுதல்நெறியற்றோர்
செயலாகும்  என்பது  இராமன் சொல்லியதாகும்.         

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா. (தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. சொல் சாதியொருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார், 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.).

மணக்குடவர் உரை 
தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் தம்வாயாற் சொல்லுதல் ஒழுக்க முடையார்க்கு இயலாது.

மு.வரதராசனார் உரை
தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

சாலமன் பாப்பையா உரை
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

Thirukkural - Management - Personality Development - Self Discipline
A self-disciplined person never speaks ill of others. He never resorts to meaningless, hurtful, unsuitable, and uncivilized words even unconsciously, that is., by mistake or by chance, confirms Kural 139.

Man of good conduct cannot speak ill
Even forgetfully.

A self-disciplined person is extremely conscious of what he says that there is no chance for slip of the tongue or slip of the mind.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

குறள் 137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒழுக்கத்தின் - ஒழுக்கம் -  நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

எய்துவர் - எய்து-தல் - eytu-   5 v. [T. eyidu, M.eytu.] tr. 1. To approach; அணுகுதல் நெடியோயெய்த வந்தனம் (புறநா. 10). 2. Toobtain, acquire, attain; அடைதல் ஏமம் வைகலெய்தின்றா லுலகே (குறுந். கடவுள் வாழ்த்து) 3. Toreach, as a place; தூநிறக் கங்கையாள்சூழ லெய்தினான் (பாரத. குருகுல. 34). 4. To revere; பணிதல் இளங்கொடியேயெய்தும் (தஞ்சைவா. 386). 5. To leave, forsake; நீங்குதல் எய்தலில்லாத் திருவின் (தஞ்சைவா. 386). -- intr. 1. Tobe adapted, suitable; பொருந்துதல் காலத்தோடெய்த வுணர்ந்து செயல் (குறள், 516). 2. To happen, occur; சம்பவித்தல் எட்டி குமர னெய்தியதுரைப்போன் (மணி. 4, 64). 3. To appear, become, crop up; உண்டாதல் மாசெனக்கெய்தவும்(கம்பரா. சிறப். 6). 4. To be sufficient, adequate;போதியதாதல். சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென்றெண்ணி (ஐந். ஐம். 38).  

மேன்மை - சிறப்பு; பெருமை; கண்ணியம்.

இழுக்கத்தின் - இழுக்கு  - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

எய்துவர் எய்து-தல் - eytu-   5 v. [T. eyidu, M.eytu.] tr. 1. To approach; அணுகுதல் நெடியோயெய்த வந்தனம் (புறநா. 10). 2. Toobtain, acquire, attain; அடைதல் ஏமம் வைகலெய்தின்றா லுலகே (குறுந். கடவுள் வாழ்த்து) 3. Toreach, as a place; தூநிறக் கங்கையாள்சூழ லெய்தினான் (பாரத. குருகுல. 34). 4. To revere; பணிதல் இளங்கொடியேயெய்தும் (தஞ்சைவா. 386). 5. To leave, forsake; நீங்குதல் எய்தலில்லாத் திருவின் (தஞ்சைவா. 386). -- intr. 1. Tobe adapted, suitable; பொருந்துதல் காலத்தோடெய்த வுணர்ந்து செயல் (குறள், 516). 2. To happen, occur; சம்பவித்தல் எட்டி குமர னெய்தியதுரைப்போன் (மணி. 4, 64). 3. To appear, become, crop up; உண்டாதல் மாசெனக்கெய்தவும்(கம்பரா. சிறப். 6). 4. To be sufficient, adequate;போதியதாதல். சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென்றெண்ணி (ஐந். ஐம். 38).  

எய்தாப் - அணுகாத ; அடையாத ; பணியாத ; நீங்காத ; உண்டாகாத 

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

முழுப்பொருள்
ஒருவர் ஒழுக்கத்தை பேணிப் பின்பற்றினால் அவர் மேன்மையை அடைவார். பெருமை கைக்கூடும். அதுவே ஒழுக்கத்தை பின்பற்றாமல் தாழ்வானவற்றை செய்தால் அவர் இழிவுநிலையை அடைவார். கீழ்மக்கள் என்று கருதப்படுவார். ஒழுக்கத்தை பின்பற்றாத காரணத்திற்காக நீங்காத பழியையும் பெறுவார். 

ஒழுக்கத்தை பின்பற்றினால் +1 அதாவது உயர்வு, ஒழுக்கத்தை பின்பற்றவில்லை என்றால் 0 அல்ல -1 அதாவது வீழ்ச்சி. 

இதே கருத்தை பழமொழிச் செய்யுள், “இழுக்கத்தின் மிக்க இழிவில்லை – இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு” என்கிறது.

இக்குறள் ஒழுக்கம் என்னும் குணத்திற்கு மட்டுமல்ல. நமது அன்றாட வேலைகளில் நாம் செலுத்தும் ஒழுக்கத்திற்கும் (discipline/work-ethics) பொருந்தும். ஒருவர் தன்னுடைய வேலையை செவ்வென செய்தால் அவர் முன்னேறுவார். ஒருவர் தன்னுடைய உறவுகளை பேணினார் என்றால் மக்களை சம்பாதிப்பார். அதுவே தனது வேலையை தனது கடமையை செய்யவில்லை என்றால் அவர் வேலையிலும் சரி பொருளாதார ரீதியாகவும் சரி வீழ்ச்சியே அடைவார். அதேப்போல உறவுகளை பேணவில்லையென்றால் தனிமைப்படுத்தப்படுவார். சுற்றம் இல்லை எனில் செல்வம் இல்லை என்று பொருள்.

மேலும்: அஷோக் உரை

மைந்தனுடன் தனித்துலாவுகையில் “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படவேண்டும், மைந்தா” என்றார். “மானுடர் எவரும் ஒழுக்கத்தின்பொருட்டு கணந்தோறும் உள்ளத்துடன் போரிட்டாகவேண்டும். சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் நம் ஒழுக்கத்துடன் ஆட விடாய்கொண்டுள்ளன. இனியமலர்கள், நறுமணங்கள், தென்றல், வண்ணங்கள், ஒளிகள் அனைத்தும் பிறழ்க பிறழ்க என்றே நம் உள்ளத்திடம் ஆழமாக சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆண்கள் தங்கள் விழைவால் வழிதவறுகிறார்கள். கன்னியர் தங்கள் ஆணவத்தால், அன்னையர் தங்கள் அன்பால் வழிபிழைக்கிறார்கள். அழகர்கள் பிறர் விழைவால் பிறழ்வுகொள்கிறார்கள். மைந்தா, ஒழுக்கம் என்பது அறத்திற்குக் கொண்டுசெல்லும் பாதை. ஒழுக்கத்தில் மாறாதிரு. உன் மதிப்பால் உவகையே கொள்முதல் செய்யப்படும்.”

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் லியோ டால்ஸ்டாய் பற்றிய ஒரு உரையில் (லியோ டால்ஸ்டாய் இவ்வாறு கூறுவாதுவதாக) இவ்வாறு கூறுகிறார் (https://www.youtube.com/watch?v=21Q_4mQG5TI @42:55)

ஆன்ம விடுதலை என்பது மேலான ஒழுக்கம் வழியாக மேலான அறம் வழியாக தான் சாத்தியம். ஏன் ஒழுக்கமும் அறமும் முக்கியம் என்றால் தனி மனிதன் ஒருவனின் மீட்சியும்/மீட்புமும் நிறைவும் அதில் தான் இருக்கிறது.

ஒழுக்கம் இல்லாதவன் மேலான இன்பங்களை அடைய முடியாது. ஒரு குழந்தையை தூய அன்போடு மடி மேல் எடுத்து வைக்க முடியாது.

பரிமேலழகர் உரை
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

Thirukkural - Management - Thoughts
A person can achieve greater heights in his life; lead a noble life and satisfied life when he is disciplined. All achievements are possible with the psychology of self- discipline.  There is a lot of power in self- discipline, declares Kural 137.

Right  conduct exalts one, while a bad name
Exposes one to undeserved disgrace.

When a person fails to lead a disciplined life, he will attain all disgraceful and humiliating consequences in his life. Those things are sure to lead him to a blameful and meaningless life. Therefore, personal effectiveness is possible only with personal discipline.


சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

சாந்தி பாஸ்கரசந்திரன் அவர்கள் "குழந்ததைகளின் பேருலகம்" என்ற ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார். அதில் "குழந்தைகளின் ஞாபக மறதி நோயல்ல" என்ற ஒரு கட்டுரையில் ஞாபக சக்திக்கு ஒழுங்கு எவ்வளவு முக்கியம் என்று கூறியுள்ளார்

ஞாபகசக்தி எனப்படும் நினைவாற்றல் திறன் அனைவருக்கும் சமமாகவே உள்ளது. ஆனால், அதை முறையாகப் பயன்படுத்துவதில் தான் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறார்கள். மூளையில் உள்ள நினைவத்திலிருவ்து ஏதாவது ஒரு தகவல் தேவையான நேரத்திற்கு நினைவிற்கு வர வேண்டுமென்றால் முதலில் அந்தத் தகவலை சரியான முறையில் பதிவு செய்து வைக்க வேண்டும். ஞாபகமறதிக்கு முக்கிய காரணம், தகவல்களை சரியான முறையில் மூளையில் பதிந்து வைக்கும் திறன் குறைவாக இருப்பதுதான். எனவே, குழந்தைகளின் மதிப்பெண் குறைவிற்கு நினைவாற்றல் குறைபாடு காரணமல்ல. 

'பென்சிலை எங்கே வைத்தோம்' என்று பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் வீடு முழுக்கத் தேடுவது, பள்ளிக்கு வந்து பையை திறந்ததும் கணக்கு நோட்டு கொண்டு வராததை அறிந்து பதறுவது, வீட்டுப்பாடத்தை மறந்துவிட்டு ஆசிரியரிடம் திட்டு வாங்குவது, நன்றாக படித்த பாடம் தேர்வு எழுதும்போது உடனடியாக ஞாபகத்திற்கு வராதது, என பல சந்தர்ப்பங்களில் 'ச்சே! இவ்வளவு மறதியாக இருக்கிறோமே' என்று பொதுவாக வயது வித்தியாசமின்றி எல்லா பிள்ளைகளும் தங்கள் மீதே எரிச்சல் பட்டுக்கொள்வதுண்டு. 

ஒரு திரைப்படமும் அதில் வரும் காட்சிகள் மற்றும் பாடல்கள் மனதில் பதிகிற அளவிற்கு பள்ளிக்கூடப் பாடம்  மனதில் பதிவதில்லையே ஏன்? ஆர்வம் மற்றும் கவனம் இல்லாததோடு ஓர் ஒழுங்கு இல்லாததுமே இதற்குக் காரணம். 

ரொம்ப மறதி என்று கூறும் குழந்தைகளிடம் பேசிப் பாருங்கள். கிரிக்கெட் ஸ்கோரைப் பற்றி கேட்டால் விலாவாரியாக பேசுவார்கள். எந்த மேட்சில், எந்த பிளேயருடைய ஆட்டம் பற்றி கேட்டாலும் புள்ளிவிவரமாகச் சொல்வார்கள். பிரச்னை நினைவாற்றலில் இல்லை, ஆர்வத்தில்தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. நினைவாற்றலுக்கு ஆர்வமே அடிப்படை. எதில் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமோ, அதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்க வேண்டும். 

அதேபோல ஏதாவது ஒரு பாடப்புத்தகத்தில் அட்டைப்படத்தைக் குழந்தைகளிடம் வரையச் சொன்னால், பெரும்பாலோர் தவறாகத்தான் வரைவார்கள். தினமும் பார்க்கிற புத்தகம்தான் என்றாலும் சரியாக வரைய முடியாததற்குக் காரணம், அவர்கள் புத்தகத்தை தினமும் பார்க்கிறார்களே தவிர கவனித்துப் பார்ப்பதில்ல்லை. நினைவாற்றலின் அடிப்படையான கவனிக்கும் திறனை வளர்த்துக்கொண்டால் இது போன்ற பிரச்னைகள் குறைந்துவிடும்.

அதேபோல ஒழுங்கின்மையும் ஒரு காரணம். லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ள ஒரு நூலகத்தில் நமக்குத் தேவையான புத்தகத்தை உடனடியாகத் தேடி எடுக்க முடிகிறது. ஆனால், ஒரு சில அறைகள் மட்டுமே உள்ள நம் வீட்டில் நமக்குத் தேவையான பொருளை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையே, அது ஏன்?ஒழுங்கின்மைதான் அதற்குக் காரணம். குழந்தைகள்தான் என்றில்லை பெரியவர்களுக்கும் இதே நிலைதான். அதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

பள்ளியிலிருந்து வந்ததும் ஷுக்களை கழற்றி அதற்குரிய ஸ்டாண்டில் வைக்க வேண்டும். சாக்ஸை கழற்றி துவைப்பதற்கென்று உள்ள இடத்தில் போட வேண்டும். பெல்ட், டை ஆகியவற்றை அதற்கென்று உள்ள இடத்தில் கழற்றி வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு செயலையும் ஓர் ஒழுங்கோடு தொடர்ந்து செய்தால், மனதின் செயல்பாடுகளிலும் ஒழுங்கு ஏற்படத் துவங்கும். அதன் மூலம் ஆர்வமும் கவனமும் ஏற்படும்.

...
...
பிள்ளைகள் குறைந்தது 8 மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுது படிப்பதைப் பழக்கப்படுத்த வேண்டும். தூங்கப் போகும் முன்பாக அன்று படித்த அனைத்தையும் ஒருமுறை மேலோட்டமாக நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது மூளையின் சில பகுதிகள் விழிப்புடன் இருந்து தகவல்களை குறுகிய காலை நினைவறையில் (short term memory) இருந்து நீண்ட கால நினைவறைக்கு (long term memory) எடுத்துச் சென்று பதிவு செய்துகொள்ளும். படிக்கும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியமான பயிற்சியாக இருக்கும். 


English Meaning - As I taught a kid - Rajesh
When one follows discipline/work-ethics/duties, one progress and attains growth. When one consistently follows discipline for a long time, one attains greatness. However, if one is indiscipline, it leads to destruction and ruins life and health. Indiscipline leads to negative fame, difficulties in life.

Questions that I ask to the kid
What does one attain by following discipline?
What does one attain by not following discipline?

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

குறள் 136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒழுக்கத்தின் - ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

ஓல்குதல் - தளர்தல்; மெலிதல்; குழைதல்; நுடங்குதல்; சுருங்குதல்; அசைதல்; ஒதுங்குதல்; அடங்குதல்; வளைதல்; குறைதல்; வறுமைப்படுதல்; மேலேபடுதல்; மனமடங்குதல்; கெடுதல்; நாணுதல்; எதிர்கொள்ளுதல்.

ஒல்கார் - தளராதவர், அசையாதவர், மனமுடையாதவர்

உரவு - Strength, force, firmness, hardness, வலி
உரவோர் - அறிஞர் (The wise, the learned), மூத்தோர் (Persons of respectability, gravity, age, &c., chief persons)

இழுக்கத்தின் - இழுக்கம் - பிழை; ஒழுக்கந்தவறுகை; தீயநடத்தை; ஈனம் தளர்வு தாமதம்

ஏதம் - துன்பம், குற்றம், கேடு

படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.

படு - (வி)படுத்துக்கொள்; விழு.

பாக்கு -  அடைக்காய்; கமுகு; எதிர்காலங்காட்டும்வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பாக்குக்குப்பதிலாகப்பயன்படும்பட்டையையுடையஒருசெடிவகை.

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

முழுப்பொருள் 
இக்குறளுக்கு எனக்கு முதலில் புரிந்துக்கொண்ட பொருள் ”முழுப்பொருள் 2” எழுதப்பட்டது தான். நான் பின்நாட்களில் மறுவாசிப்பு செய்யும் பொழுது எனக்கு ”முழுப்பொருள் 1” புலப்பட்டது. அது ஏன் என்று முழுப்பொருளில் விளக்குகிறேன்.

இரண்டு பொருள்களை கூறியுள்ளேன் என்றாலும், இரண்டு பொருள்களும் பொருந்தும். முழுப்பொருள் சற்று வேறுமாதிரியான பார்வை. 

முழுப்பொருள் 1)
வாழ்வின் விழுமியமாக கொண்டு ஒழுக்கதை நீங்காது பின்பற்றி வாழ்வோர் மனவலிமை அடைவார்கள். அந்த மனவலிமையே  / ஆத்மசக்தியே (inner strength) அவர்களை மேலும் மேலும் ஒழுக்கமாய் வாழச்செய்யும். அதுவே ஒழுக்கத்தை பேணாதவர்கள் துன்பத்தை அடைவர். 

ஒரு செயலில் /தொழிலில் ஒழுக்கமாய் இருப்பவர்கள் அதில் வலிமையடைகிறார்கள். பிற்காலத்தில் அதில் மேன்மையடைகிறார்கள். வலிமையானவர்கள் ஒழுக்கமாய் இருப்பது இரண்டாவது பட்சம் தான்.

மனவலிமை உள்ளவர்கள் தானே ஒழுக்கத்தை பின்பற்ற முடியும் என்று நாம் கேட்கலாம். ஆனால் யோசித்துப்பார்த்தால், மனவலிமை வளர்வதே சிறுவயது முதல் ஒருவர் பின்பற்றும் ஒழுக்கத்தால் வளர்வது என்பதை உணரலாம்.  மேலும் ”நன்றிக்கு (நன்மைக்கு) வித்தாகும் நல்லொழுக்கம்” என்று பின்னர் இவ்வதிகாரத்தில் ஒரு குறளிலும் கூறியுள்ளார் திருவள்ளுவர். மனவலிமை என்னும் நன்மைக்கு வித்தாக அமைவதே நல்லொழுக்கம் தான். 

மேலும் மனவலிமை என்பது எல்லோரும் பிறப்பிலேயே பெற்று வருவதா என்று தெரிவதில்லை. அறிவைப் போன்று அதுவும் வளர்த்தெடுக்ககூடிய ஒன்றே என்று எனக்கு தோன்றுகிறது. அந்த மனவலிமை வளர்க்கும் வழி ஒழுக்கம் என்று இக்குறள்வாயிலாக உணர்கிறேன்.

ஒருவரின் ஆத்மசக்தி என்பது பூஜை செய்வதாலும், உடலை பேணுவதாலும் மட்டும் வந்துவிடாது. ஒருவரின் ஆத்மசக்தி என்பது ஒருவர் பின்பற்றும் ஒழுக்கத்தில் இருந்து வருகிறது.  ஒருவர் ஆத்மசக்தி என்னும் வலிமையை தான் பின்பற்றும் ஒழுக்கத்தில் இருந்தே பின்பற்றுகிறார். 

எழுத்தாளர் க.நா.சுப்ரமணியன் அவர்கள் பொய்த்தேவு என்னும் நாவலில் மைய கதாபாத்திரமான சோமு மற்றும் துணை கதாபாத்திரமான சாம்பமூர்த்தி என்னும் இரண்டு கதாபத்திரங்கள் வரும். அவர்களை பற்றிய சிறு குறிப்பு இதோ

மிக அதிகமாக உழைக்கும் சோமு தன் சிந்தனைகளை எல்லாம் பணத்தில் குவித்து இருக்கும் சோமு கோட்டை விட்டது ஆத்ம பலத்தில். ஏனெனில் இவன் வாலிபனாக இருக்கும் பொழுது அளவு கடந்த காம கற்பனைகளிலும், கூத்தியாள் சகவாசங்களிலும் திரிந்தான். ஆனால் பின்பு உழைப்பின் பக்கம் வந்தாலும் அவன் இரகசியமாக மறுபடியும் கூத்தியாள்களிடமே செல்கிறான். ஆனால் இதற்கு நேர் எதிராக க.நா.சு ரங்கா ராவையும் அவரதும் மாப்பிள்ளை சாம்பமுர்த்தியையும் காண்பிக்கிறார். ரங்கா ராவ் ஒரு சொத்து வழக்கில் தோற்றாலும் மனம்விடாது உயர்நீதிமன்றத்தில் போராடி வெற்றிப் பெறுகிறார். அதேப்போல் சாம்பமூர்த்தி அவன் மனைவி கங்காபாய் இறந்தப் பிறகு தனது பணத்தை எல்லாம் தீர்த்தப் பிறகு கூத்தியாளிடம் சென்று தவறு செய்கிறான். ஆனால் அவன் ஆத்மபலம் அவனை ஒரு வினாடியில் துவக்கத்திலேயே காப்பாற்றிவிடுகிறது. அவனை நல்வழிப்படுத்தி மறுபடியும் கோயில் பூஜை சேவை என்று ஈடுபடவைக்கிறது. ஏன் சாம்பமூர்த்தியின் ஆத்ம பலம் அதிமாக இருந்தது என்றால் அவன் பூஜை, சேவை, என்று மனதை நல்வழிப்படுத்தினான். நேர்மையாக இருந்தான். பொருளின் மீது மயக்கம் கொள்ளவில்லை. மேலும் தர்மம் தலைக்காக்கும் என்பதுப்போல், அவன் மகன் சுப்ரமணியம் நன்கு படித்து நல்ல ஒரு வியாபாரத்தை துவங்குவான்.

ஆனால் சோமு முதலி அப்படி அல்ல.  சாம்பமூர்த்திக்கு இருந்த ஆத்மபலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சோமுவிடம் இல்லை என்பதை சோமுவே உணர்ந்திருந்தான். சோமுவுக்கு பணம் ஒன்றே பிராதனம். அதனால் தான் அவனால் ஆத்ம சக்தியை வளர்த்து எடுக்க முடியவில்லை. அதனால் தான் அவன் எவ்வளவு பணம் சம்பாத்தித்தும் பூரண மனிதன் ஆகவில்லையே என்று சோமு வருந்தினான். புண்ணியத்தையும் சம்பாத்திக்கவில்லை. சோமுவின் மகன் நடராஜன் சீர்கேட்டு உதவாக்கரையாக வளர்வான்.

மேற்சொன்ன குறிப்புகளை படித்தால் நமக்கு ஒன்று புரிகிறது. ஒருவரின் ஆத்மபலம் ஒருவரை ஒழுக்கம் தவறும் பொழுது அதில் இருந்து காப்பாற்றி நல்வழிப்படுத்தும். ஆனால் அந்த ஆதம்பலமே ஒருவர் பல காலம் கடைப்பிடித்த ஒழுக்கத்தில் இருந்து பெற்றதாகும். அதாவது நமது முதல் நமக்கு இலாபத்தை தரும். நாம் தோல்வியுரும் பொழுது அந்த இலாபமே நமக்கு தோள்கொடுத்து நம்மை தோல்வியில் இருந்து மீள உதவும். ஆனால் அதற்கு முதல் தேவை. அதாவது ஒழுக்கம் தேவை.

ஆதலால் எவ்வளவு இளமையில் ஒழுக்கத்தைப் பேணி ஆதம்பலத்தை வளர்க்கிறோமோ அவ்வளவு நல்லது நமக்கு. ஆனால் ஒருவர் எந்த ஒரு காலத்தில் ஒழுக்கத்தை பின்பற்ற தொடங்கினால் அதற்கான பலனை அவர் நிச்சயம் அறுவடை செய்யமுடியும். 

(ஒரு சிறிய உதாரணம்: பலர் ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டும் என்றால் சபரிமலைக்கு ஒரு மண்டலத்துக்கு விரதம் இருப்பர். சாதாரணமாக ஒரு பழக்கத்தை விடும்பொழுது மனதில் பல அல்லல்கள் இருக்கும். ஆனால் ஒரு சபரிமலை விரதம் என்னும் பொழுது நமக்கு ஒழுக்கம் இயற்கையாய் வந்துவிடுகிறது. அதுவும், சிறுவயது முதல் சபரிமலைக்கு சென்றுபவர்கள், தங்கள் வாழ்வில் எப்பொழுதாவது வழி தவறினால், ஐயப்பனுக்கு மாலைப்போட்டால், நாம் அந்த 42 நாட்களில் தங்களை மறுபடியும் நேர்வழியில் எளிதாக செலுத்துக்கொள்வதை காண முடியும். அதுவே ஒழுக்கத்தின் வலிமை. மனம் ஐம்புலன்களையும் அடக்கி நற்சிந்தனைகளில் கவனம் குவிவதின் பலன். அம்மீட்சி ஒழுக்கத்தை தவிர வேறு ஏதும் தர முடியாது)

ஒழுக்கமுடையார்க்கு 


ஒழுக்கமில்லாதவருக்கு


முழுப்பொருள் 2)

நம்மிடம் ஒழுக்கம் குறைந்தால் நமக்கு துன்பம் ஏற்படும் நமக்கு இழுக்கு வரும் நமக்கு தளர்வு உண்டாகும் என்பதனை மெய்யாக உணர்ந்தறிந்தோர் அதற்கான மனவலிமையையும் கொண்டார் என்றால் அவர் ஒழுக்கத்தில் இருந்து தவறாது இருக்க கடினமாக உழைப்பார். அவர் ஒழுக்கத்தில் இருந்து தவறமாட்டார். அதற்கான நற்பலனையும் அனுபவிப்பார்.

பொதுவாக மனிதன் நல்ல உடை அணிந்து பிறரைவிட உயர்வானவன் என்று நினைத்துக்கொள்வான். ஒரு பரிசு கொடுத்தால் கூட தான் தான் சிறந்த பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைப்பான். எதிலும் தான் சிறந்தவன் என்று நினைப்பவன் இல்லை என்று சொல்ல யாருமில்லை. அதுவே யதார்த்தம்.

ஒழுக்கம் குறைந்தால் இழிவான குலத்தை சேர்ந்தவனாய் கருதப்படுவர். ஆதலால் அந்த அவலம் வரக்கூடாது என்பதற்காக நெஞ்சில் உரம் இருப்பவர்கள் ஒழுக்கத்தில் இருந்து விலகமாட்டார்கள்.

எல்லோருக்கும் காலையில் எழுவதில் இருந்து ஒழுக்கமாக இருக்க விருப்பம் தான். ஆனால் பலருக்கு முடிவதில்லை. ஒருவனுடைய இயலாமையால் ஒழுக்கத்தில் இருந்து தவறுகிறான். ஏனெனில் அவனிடம் அதற்கு தேவையான பலம் இல்லை. ஆனால் மனவலிமை உள்ளோர் கஷ்டப்பட்டாவது தனது நிலையை பேணிக்கொள்வர்.

ஏன் கடுமையானது என்றால் அது செய்தற்கு அருமையான செயல். (ஒரு கண்ணோட்டத்தில் அது எளிதானாலும் அது அன்றாடம் செய்வதற்கு கடினமானது தான்). 

ஏன் செய்ய முடியவில்லையென்றால் மன உரம் இல்லை என்பதாகும். மன உரம் இல்லாதவன் ஒழுக்கத்தை பேண முடியாமல் படியிறங்கி செல்கிறான். ஒரு விரதத்தை கடைப்பிடிக்க மன உரம் வேண்டும். அதனால் தான் உரவோர் என்றார் திருவள்ளுவர்.

ஏன் சிலர் செய்கிறார்கள் என்றால் அவர்கள் செய்யாவிட்டால் வரும் துன்பத்தை கீழ்நிலையை அறிவர்.

அண்மையில் வாழ்ந்து மறைந்த ஒரு கவிஞர் வி.சீதாராமன் எழுதியிருப்பார்.
"மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் " 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து. (ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.).

மணக்குடவர் உரை
ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை யறிந்து. இஃது இதனை அறிவுடையார் தவிராரென்றது. குற்றம் வருதல் பின்னே காணப்படும்.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை
ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

English Meaning - As I taught a kid - Rajesh
One who has mental/inner strength and perseverance will not move away from discipline because they understand that when one is not disciplined they will face lots of difficulties in life. At the same time, mental/inner strength is built right from young age by following a discipline. When a person has strong Mental/inner strength it protects a person and puts back a person in bath when they make mistakes or move away from discipline

Questions that I ask to the kid
What will people with mental strength do and don't do?
What to do when you want to build mental strength?

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

குறள் 135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு

உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

போன்று - போல

இல்லை - இருக்காது, தங்காது

ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

இலான் - இல்லாதவன்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உயர்வு - மிகுதியாதல்; உயர்ச்சி உயரம் விருத்தி, மேன்மை வருத்தம் உயர்வுநவிற்சியணி

முழுப்பொருள்
பொறாமை உள்ளவரிடம் செல்வம் நிற்காது/இருக்காது. அதுப்போல ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்ச்சி வராது. அது அவனை மட்டும் அல்ல அவனது  குடியினையும் கெடுக்கும்.

பிறருடைய ஆக்கங்களை வளர்ச்சிகளை கண்டு நீ பொறுக்கமுடியாவிட்டால்  சந்தோஷப்பட  முடியாவிட்டால்  உனது மனதில்  அழுக்கு இருக்கு என்று  அர்த்தம்.  மகாலக்ஷ்மி உன்னை விட்டு போய்விடுவாள். "அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்" குறள் 0167 கல்வியும் போய்விடும்.

தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை
அம்மா பெரிது என்று அகம் மகிழ்க, தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்து அழிக, கற்றது எல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று
நூல்: நீதிநெறி விளக்கம் (#14)
( "உனக்குக் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு"  பாட்டு  வருகிறதா ?)

ஆசாரக்கோவை “பொய், குறளை, வெளவல், அழுக்காறு, இவை நான்கும் ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்” என்கிறது. திரிகடுகம், “என்றும் அழுக்காறு இகந்தானும், – இம் மூவர்நின்ற புகழ் உடையார்.” என்கிறது. இனியவை நாற்பது, பாடல் எண் 36-ல் “அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே” (மனதிற்கு கேடான பொறாமைச் சொற்களை சொல்லாமல் இருத்தல் இனிது என்கிறது).

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. (உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? கொடுப்பது அழுக்கறுப்பான் 'சுற்ற'மும் (குறள்.166)நல்கூர்தலின். 'உயர்வு' - உயர் குலமாதல்.).

மணக்குடவர் உரை
மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல ஒழுக்கமில்லாதான் மாட்டு மிகுதியில்லையாம். இஃது உயர்ச்சியில்லையா மென்றது.

மு.வரதராசனார் உரை
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை
பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

English Meaning - As I taught a kid - Rajesh
When we are jealous of others our wealth will not stay with us. Similarly if we are not disciplined we will not have growth in life.

Questions that I ask to the kid
What does jealous people don't have ? why? what does indiscipline don't have?

மறப்பினும் ஓத்துக் கொளலாகும்

குறள் 134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]

பொருள்
மறத்தல் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு.

மறப்பினும் - மறந்தாலும் ; நினைவில் இருந்து போனாலும்

ஓத்துக் -ஓதுகை, ஓதப்படுவது; வேதம்; ஓரினப்பொருளைஒருவழிவைத்திருக்கும்இயல், நூற்பிரிவு; விதி.

கொளல் ஆகும் - கொண்டாலும் ; பின்னர் உரைத்துக்கொள்ளலாம்

பார்ப்பான் - பிராமணன்; பிரமன்; யமன்.

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்

குன்றக் - குன்று-தல் - kuṉṟu-   5 v. intr. cf. kṣud.[K. kundu.] 1. To decrease, diminish, becomereduced; குறைதல் 2. To be ruined; அழிவடைதல். குன்றாமுதுகுன்றுடையான் (சிவப். பிரபந். பிக்ஷாட.2). 3. To fall from high position; நிலைகெடுதல் குன்றினனையாருங் குன்றுவர் (குறள், 965). 4. (Gram.)To be omitted, as a letter; எழுத்துக்கெடுதல்.(தொல். எழுத். 109.) 5. [T. kundu.] To droop,languish; to be dispirited; வாடுதல் அவன் துயரத்தால் மனங்குன்றினான். 6. To become stunted; tobe arrested in growth; வளர்ச்சியறுதல். சிறுகன்றுகளின் முதுகிற் கையைவைத்தாற் குன்றிவிடும்.

கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
வர்ண சாஸ்திரத்தின் படி நான்கு குலங்கள் உண்டு. அவை 1) பிராமணர்கள் 2) சத்ரியர்கள் 3) வைசியர்கள் 3) சூதர்கள். பிராமணர்கள் எனப்படுபவர்கள் வேதங்களை படித்து உபதேசித்து வரும் சந்ததியினருக்கு கற்றுத்தந்து வேதத்தை காக்கும் கடமையை உடையவர்கள். சத்ரியகர்கள் நாட்டை ஆளவேண்டும் வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும் சூதர்கள் பிற தொழில்களை செய்ய வேண்டும்.

பிராமணர்கள் அடிப்படை வேலையே வேதங்களை கற்று ஓதவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அவர்களின் கடமையில் இருந்து தவறுகிறார்கள். அப்படி வேதத்தை மறந்து வேதம்தனை ஓதாமல் கூட இருக்கலாம். ஆனால் ஒருவன் ஒழுக்கத்தில் இருந்து தவறினால் அவனுடைய புகழும் அவன் குடும்பத்தினுடைய புகழும் குலத்தினுடைய புகழும் குன்றி விடும். ஆதலால் ஒருவருடைய புகழ் அவர் ஒழுக்கத்தில் உள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் ஒரு கேள்வி க்கு ராகவேந்திரர் பதில் சொல்வார்
கேள்வி : ஒரு பிராமணர் ஆவது பிறப்பாலா ஒழுக்கத்தாலா அல்லது படிப்பாலா?
ராகவேந்திரரின் பதில் :  ஒரு பிராமணர் ஆவது ஒழுக்கத்தினால்.



(@ 47:20)


பார்பனர்கள் சமூகத்தின் ஒழுக்க நெறிக்கு ஒரு நெறிவரம்பாக, அளவு வரையாக இருக்கவேண்டும். அவர்கள் அதிலிருந்து தவறினால், அவர்களுக்குக் கடுமையான தண்டனையும், தாழ்ந்தவர்களுள் ஒருவராக கருதப்படும் இழிமையும் உண்டாகும்

இன்னா நாற்பது “இன்னா, ஓத்தில்லா பார்ப்பான் உரை” என்கிறது. சிலப்பதிகாரமும் “ வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதி” என்கிறது.

”ஓத்தொடு புணர்ந்த காப்புடை ஒழுக்கின்
.............................................................................................
அந்தணர்”  என்றென்கிறது பெருங்.3.3:83-7


மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகனின் எண்ணங்கள் கீழ்வருமாறு "பார்ப்பான் பிறப்பொழுக்கம்"
குறளின் பொருளை கொள்ளும்போது அது உருவான காலகட்டத்தின் பொதுவான சமூகச்சூழல், அன்றிருந்த அறவியல், குறள் ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் பார்வை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் பொருள்கொள்ளவேண்டும்.

குறள் சமணப்பண்பாடு தமிழகத்தில் வேரூன்றிய களப்பிரர் காலகட்டத்தில், ஒரு சமணக் குரவரால், இங்கு அவர்கள் உருவாக்கிய கல்விப்பணிகளின் பொருட்டு எழுதப்பட்ட அறநூல் என்பது என் எண்ணம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஏறத்தாழ எல்லாமே சமண – பௌத்த பின்னணி கொண்டவை. தங்கள் கல்விப்பணிகளின்பொருட்டு இலக்கணநூல்கள், அறநூல்கள் ஆகியவற்றை இந்தியாவெங்கும் சமணர் உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆனால் குறள் சமணத்தை போதிக்கும் நூல் அல்ல. பொதுவான அறத்தையே அது முன்வைக்கிறது. சமணம் இன்று நம்மில் கற்பிதம் செய்வதுபோல வேதமதத்திற்கு எதிரானது அல்ல. மாற்றான பார்வை ஒன்றை முன்வைத்தது, கொள்கையளவில் முரண்பட்டது எனலாம். ஆனால் வைதிகமதத்திற்கும் சமணத்திற்கும் பொதுவான தொன்மங்களும் அறங்களும் தத்துவங்களுமே மிகுதி.

இக்குறள் அந்தணரின் ஒழுக்கம் பற்றியே பேசுகிறது. சங்கப்பாடல்கள் தொட்டு தமிழிலக்கியத்தில் எங்கெல்லாம் அந்தணர் குறிப்பிடப்படுகிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் இரண்டு இயல்புகளைக் கொண்டு அடையாளப்படுத்தப் படுகிறார்கள். ஒன்று அவர்களின் நோன்பு வாழ்க்கை. இரண்டு அவர்களின் மூவேளை எரியோம்பும் கடமை. அந்தப் பார்வையின் நீட்சியே இதில் உள்ளது.

ஆனால் நுட்பமான ஒரு வேறுபாடும் உள்ளது. வைதிகமதத்தைப் பொறுத்தவரை கற்றவேதத்தை மறப்பதே அந்தணம் சென்றடையும் அறுதியான இழிநிலை. குறள் அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம் தன் குடிக்குரிய ஒழுக்கநெறிகளை அவன் கைவிடுவது அதைவிடவும் கீழானது என்கிறது. உடைமையின்மை, கொல்லாநெறி, இன்சொல் என அந்தணருக்கான ஒழுக்கநெறிகள் அன்று வகுக்கப்பட்டிருந்தன. அவையே முதன்மை, வேதமோதுவதோ வேள்வியோ அல்ல என்று குறள் சொல்கிறது. அது சமணத்தின் பார்வையாக இருக்கலாம்

ஜெ

பாடல்களைப் பொருள்கொள்வதில் வாசிப்புச் சுதந்திரத்திற்கு இடமுண்டு. எப்படி? படிமங்களை கற்பனையால் வளர்த்தெடுப்பதில். சொற்களின் வைப்புமுறையை வைத்து பொருள்கொள்வதில், சொற்பொருள் கொள்வதில். இவை மூன்றினூடும் கவிதை முன்வைக்கும் அறிதலும் அனுபவமும் பெருகவேண்டும், சுருங்கலாகாது.

சொற்பொருள் கொள்ளும் நெறி என்ன? அச்சொல்லுக்கு அவ்வண்ணம் பொருள்கொள்ள அந்தக் காலகட்டத்து சொல்முறைமை ஒத்துச்செல்கிறதா என்று பார்க்கவேண்டும். உரிய அகராதிகளில் நிகண்டுக்களில் அச்சொற்பொருளுக்கு ஆதாரமுண்டா என்று பார்க்கவேண்டும். முந்தைய நூல்களில் அச்சொல் அவ்வண்ணம் பயின்று வந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்,

ஆனால் கருத்தியல்சார்ந்து, உள்நோக்குடன், பாடல்களை ஆராய்பவர்கள் அவ்வண்ணம் செய்வதில்லை. உதாரணம் ஞானசம்பந்தரின் திருவுளப்பத்து பாட்டில்  ‘அமண் சமணர் கற்பழிக்கத் திருவுளமே’ என்று வருகிறது. அதை சமகாலப்பொருள்கொண்டு சமணப் பெண்டிரை கற்பழிக்க ஞானசம்பந்தர் ஈசனிடம் வரம்வேண்டினார் என பேசிப்பரப்பி, இன்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கற்பழித்தல் என்பது நவீன நாளிதழ்கள் ரேப் என்பதற்குச் சமானமாக உருவாக்கிய சொல்லாட்சி. தினத்தந்திச் சொல் அது. பழங்காலத்தில் அந்த பொருள் இல்லை. கற்பு என்றால் கல்வி என்றே முதற்பொருள். எழுதாக்கற்பின் நின்நூல் என குறுந்தொகை சொல்வது எழுதாமல் கற்பது என்ற பொருளில்.

சமணர் மந்திரநூல்களில் வல்லவர்கள், அக்கல்வியை வெல்ல ஆயுதமாக சிவனருள் அமையவேண்டுமென ஞானசம்பந்தர் கோருகிறார். வாதுக்குச் செல்ல அனுமதி கோரும் பாடல் அது. சமணர்கள் சபைகளில் பெண்களை கொண்டுவருவதில்லை. ஆண்களை கற்பழிக்கும் வழக்கம் பொதுவாக இல்லை. ஆனால் இந்த அபத்தத்தைப் பேசுபவர்களுக்கு எந்த கூச்சமும் இல்லை.

அந்தக் கூச்சமில்லா பொருள்கோடலின் இன்னொரு தரப்பு இது. பார்ப்பான் என்னும் சொல் பார்ப்பவன் என்னும் பொருளில் குறள் காலகட்டத்து நூல்களில் எதிலும் கையாளப்பட்டதில்லை. ஞானிகள் அவ்வாறு கூறப்பட்ட முன்னுதாரணமே இல்லை. ஞானி,பரமஹம்சர்,அவதூதர், சித்தர் என பல பெயர்கள் உள்ளன. பார்ப்பவர் என்ற பொருளில் எச்சொல் உள்ளது?

ஆங்கிலத்தில் seer என்ற சொல் உள்ளது. அதன் பண்பாட்டுவேர் இருப்பது கிரேக்க மரபில். கிரேக்க மரபில் உச்சகட்ட மத அதிகாரம் கொண்டவர்கள் தெய்வங்களை கண்டு உரையாடி குறிசொல்பவர்கள். அவர்களை clairvoyant, oracle என்றெல்லாம் சொல்கிறார்கள். அதில் ஒரு சொல் seer. அது அங்கிருந்து கிறித்தவ மெய்யியலுக்கு வந்தது.

பின்னாளில் ஆங்கிலேயர் இந்துமெய்யியலை மொழியாக்கம் செய்தபோது இங்கிருந்த ஞானி, அவதூதர், பரமஹம்சர் போன்ற சொற்களுக்கு அவர்களுக்கு இணைச்சொல் இல்லாமையால் seer என்னும் சொல்லை கையாண்டனர். அச்சொல்லுக்கு இந்து மெய்ஞானமரபில் பண்பாட்டுப்பின்புலமே இல்லை.

அச்சொல்லை மீண்டும் தமிழுக்கு மொழியாக்கம் செய்து பார்ப்பவன் என்றாக்கி பார்ப்பான் என மாற்றி இக்குறளுக்கு பொருள்கொண்டிருக்கிறார். அதன் நோக்கம் ஒன்றே. அதாவது மெய்ஞானியாக இருந்தாலும்கூட பிறப்புக்குரிய ஒழுக்கநெறிகளை கடைப்பிடிக்கவேண்டும் என்ற ஆசாரவாதத்தை முன்வைப்பது. அதற்காக மறப்பினும் ஒத்துக்கொள்ளலாகும் என்ற வரியை விட்டுவிடுகிறார். அவதூதர்கள் எதை மறக்காமலிருக்கவேண்டும்?

சுருக்கமாகச் சொன்னால், ரமணராக இருந்தாலும் சந்தியாவந்தனம் செய்தாகவேண்டும் என்று சொல்லவருகிறார். பிராமணச் சடங்குகளை முறையாகச் செய்யாமையால் ராமகிருஷ்ண பரமஹம்சர் கெட்டவர்தான் என்று நிறுவ விரும்புகிறார்.ஊரிடும் சோறு, துணிதரும் குப்பை என இங்கே வாழ்ந்து மறைந்த சித்தர்களும் அவதூதர்களும் நெறிபிழைத்த வீணர்கள் என்கிறார். அதை நம்புகிறவர்கள் அந்த ஆசாரவாதத்திற்குள் செல்லலாம். எனக்கு அவர்கள் ஆயிரம் காதம் அப்பால் நிற்பவர்கள். அவர்களிடம் பேச ஒன்றுமில்லை.

இக்குறள் இல்லறவியலில், ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் வருகிறது. இது மெய்ஞானத்தைப் பேசவில்லை.

ஜெ

பரிமேலழகர் உரை
ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.).

மணக்குடவர் உரை
பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

சாலமன் பாப்பையா உரை
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

குறள் 133
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் 
இழிந்த பிறப்பாய் விடும்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]

பொருள்
ஒழுக்கம் - olukkam   n. ஒழுகு-. 1. Conduct, behaviour, demeanour; நடை நல்லொழுக்கந் தீயொழுக்கங்கள். 2. Good conduct, morality, virtue, decorum; சீலம் ஒழுக்க முயிரினுமோம்பப் படும் (குறள், 131). 3. Behaving in conformity with the canons of right conduct laiddown for observance; விதித்த கடமைகளினின்று வழுவாதுநடக்கை. (குறள், உரைப்பாயிரம்.) 4. Acting according to established rules or customs; உலகத்தோடொட்ட ஒழுகுகை. (சி. சி 2, 23, சிவஞா.) 5.Going, passing; செல்லுகை. 6. Way; வழி (திவா.) 7. Height, elevation; உயர்ச்சி (சூடா.)8. Caste, tribe, family; குலம் (பிங்.)

உடைமை - uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).
உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் (நகை) உரிமை உரியவை

குடிமை - kuṭimai   n. id. 1. Mannersand customs of the higher classes, of nobility;உயர்குலத்தாரது ஒழுக்கம் (தொல். பொ 273.) 2.Supreme quality of advancing the status of afamily; பிறந்தகுடியை உயரச்செய்யுந் தன்மை மடிமை குடிமைக்கட் டங்கின் (குறள், 608). 3. Lineage,family, descent; குடிப்பிறப்பு குணனுங் குடிமையும் (குறள், 793). 4. Allegiance, homage, as ofsubjects to their sovereign; அரசரது குடியாயிருக்குந் தன்மை குடிமை மூன்றுலகுஞ் செயுங் கொற்றத்து(கம்பரா. நிந்தனை 37). 5. Domestic economy;குடித்தனப்பாங்கு. (W.) 6. Slavery, servitude,feudal dependence, feudatory in reference tohis chief; அடிமை குடிமைசெய்யுங் கொடும்புலையன்(அரிச். பு சூழ்வினை 70). 7. A tax, certain duesfrom tenants; குடிகளிடமிருந்து பெறும் ஒருவகைவரி. (S.I.I. iii, 110.)

இழுக்கம் - iḻukkam   n. இழுக்கு-. 1.Fault, offence, transgression; பிழை நாளிழுக்கநட்டார் செயின் (குறள், 808). 2. Violation of socialand caste rules; ஒழுக்கந்தவறுகை. இழுக்க மிழிந்தபிறப்பாய் விடும் (குறள், 133). 3. Ignominy, discomfiture; ஈனம் மழுவாளவ னிழுக்கமுற்ற வன்றினும் (கம்பரா. அயோத். மந்திர. 42).  ; பிழை; ஒழுக்கந்தவறுகை; தீயநடத்தை; ஈனம் தளர்வு தாமதம்

இழிந்த - தாழ்ந்தநிலை
இழிந்தோர் - தாழ்ந்தநிலையில்இருக்கின்றவர்.

பிறப்பாய் - பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

விடும் - ஆகும்

முழுப்பொருள்
மு.கு: பொதுவாக வர்ணத்தின் படி பிறப்பினால் உயர்ந்த குலம் தாழ்ந்த குலம் என்று வகுக்கும் அவலம் இன்னும் இவ்வுலகில் உள்ளது. ஆனால் வள்ளுவரோ அன்றே அதனை மறுக்கவே இக்குறளை எழுதி இருக்கிறார்போலும். அன்று வர்ணத்தினால் மக்கள் பாகுபட்டு இருந்தாலும் அவர்களுக்குள் உயர்ச்சியும் தாழ்ச்சியும் இல்லாமல் இருந்திருக்கலாம். அவரவர் குலம்/வர்ணத்திற்கு ஏற்ப வேலை இருந்திருக்கலாம். ஆனால் அன்றுப் போல் இன்று இல்லை. பிறப்பினால் மக்கள் பாகுபடுக்க படுகின்றனர். அதற்காகவே அன்று திருவள்ளுவர் கூறியுள்ளார் என்று நினைக்கிறேன்.

உலக ஒழுக்கம் என்பது இவ்வுலகம் விதிக்கபட்ட விதிகளில் இருந்து ஒருவர் வழுவாது நடப்பது ஆகும். மனிதனுக்கு தாழ்வு தராமல் உயர்ச்சி தருவது ஒழுக்கமாகும். ஒழுக்கம் துன்பம் தராது. ஒழுக்கம் என்பது ஒரு வழி என்றும் சொல்லலாம். நம் முன்னோர்கள் நடந்து/கடந்து சென்று வீடுபேறு அடைந்த சரியான பாதையை ஒழுக்கம் எனலாம். ஆனால் ஒழுக்கம் என்பது ஒரு சடங்கு அல்ல. அது ஒரு வாழும் முறை. இன்னும் எளிதாக சொன்னால் அறத்திலிருந்து வழுவாது இருப்பது ஒழுக்கம். இல்லையே அது ஒழுக்கமில்லை/ஒழுக்கமற்றது.

வாழ்வில் ஒருவர் ஒழுக்கத்துடன் இருக்கிறார் என்றால் அதுவே அவருக்கு உடைமை. உடைமை என்றால் செல்வம், அணிகலன் என்று பொருள். ஒழுக்கமே ஒருவருக்கு சிறந்த நகை(அணிகலன் ஆகும்). செல்வம் என்பது பெருகிக்கொண்டே இருக்கும்.

இத்தகைய இவ்வொழுக்கத்தை பொருத்தே ஒருவரின் குலத்தின் குணத்தை சொல்ல முடியும். ஒருவர் நல்லொழுக்கத்தை கடைப்பிடித்தார் என்றால் அவரின் குலம் உயர்ச்சி பெறும். இல்லை என்றால் அவரின் குலத்திற்கு கெட்ட பெயர் வந்து சேரும். நல்லொழுக்கத்தினார் தன் குலம் மேம்படும். அடுத்த கட்டத்திற்கு செல்லும்.

ஆனால் ஒழுக்கத்திற்கு மாறாக தீயொழுக்கம் கொள்வதும், பிழை செய்வதும், தீயநடத்தை பின்பற்றுவதும், தளர்வு கொள்வதும் (சோம்பல்), தாமதம் செய்வதும் ஒருவருக்கு இழுக்கை தரும் தாழ்ச்சியை கொடுக்கும். அவருடைய பிறப்பை (பிறப்பின் அர்த்தத்தை, பொருளை, மேன்மையை) குறைத்துவிடும். ஆதலால் அவரால் வீடுபேறு அடைய முடியாமல் போகும். அதுமட்டும் இன்றி அவருடைய குலத்திற்கும் (குடும்பத்திற்கும்) கேட்டை கொடுக்கும். தன் வருங்கால சந்ததியினருக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருப்பார். அவரின் தீயொழுக்கத்தால் அவர் தாழ்ச்சி அடைந்தார். அவர் குலமும்/குடும்பமும் இதனால் பாதிக்கப்பட கூடும்.

தொல்காப்பியரே, வள்ளுவரின் இக்குறளுக்கு வழிகாட்டி என்பதை, “குடிமையாவது குடிப்பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கம்” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்), என்பதால் அறியலாம். ஔவையார் மூதுரையில், “குலத்தளவேயாகுமாம் குணம்” என்பார்.  ஆனால் வள்ளுவரோ அதற்கு எதிர்மாறாக “குணத்தளவேயாம் குலம்” என்ற கருத்தைச் சொல்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

ஒப்புமை
“குலம்சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம்” (கம்ப.நாட்டுப்.38)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

சாலமன் பாப்பையா உரை
தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்

குறள் 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் 
தேரினும் அஃதே துணை
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]

பொருள்
பரிதல் - பற்றுவைத்தல்; காதல்கொள்ளுதல்; இரங்குதல்; சார்பாகப்பேசுதல்; வருந்துதல்; பிரிதல்; அறுதல்; முறிதல்; அழிதல்; ஓடுதல்; வெளிப்படுதல்; அஞ்சுதல்; வருந்திக்காத்தல்; பகுத்தறிதல்; அறிதல்; அறுத்தல்; அழித்தல்; நீங்குதல்; கடத்தல்; உதிர்த்தல்; வாங்கிக்கொள்ளுதல்.

பரிந்து - முழு மனதுடன் அன்புடன் ஏற்று செய்தல்

ஓம்பிக் - ஓம்புதல் - ōmpu-   5 v. [T. ōmu, K. ōvū,M. ōmbu.] tr. 1. To protect, guard, defend,save; பாதுகாத்தல் குடிபுறங் காத்தோம்பி (குறள்,549). 2. To preserve; to keep in mind; to cherish, nourish; பேணுதல் ஈற்றியாமை தன்பார்ப்போம்பவும் (பொருந. 186). 3. To remove, separate; to keep off; to ward off; தீதுவாராமற்காத்தல். 4. To dispel; பரிகரித்தல் எனைத்துங்குறுகுத லோம்பல் (குறள், 820). 5. To maintain,support; to cause to increase; to bring up;வளர்த்தல். கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1). 6.To consider, discriminate; சீர்தூக்குதல் ஓம்பாவீகையும் (பு. வெ 9, 1). 7. To concentrate themind; மனத்தையொருக்குதல். தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை (குறள், 132). 8. To clutch or grasp tightly, as a miser; இவறுதல் பெற்றேமென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626).


காக்க - காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.

ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

தெரிந்து - தெரிந்து வினையாடல் - அமைச்சர் முதலாயினார் செய்யவல்ல செயல்களை ஆராய்ந்து அவற்றின் கண்ணே அவரை ஆளும் திறம்.
ஓம்பித் - ஓம்புதல்

தேர் - tēr   n. prob. தேர்²-. 1. [T. Tu. tēru,K. M. tēr.] Car, chariot; இரதம் கடலோடாகால்வ னெடுந்தேர் (குறள், 496). 2. A vehicle.See கொல்லாவண்டி 3. Boy's small car; சிறுதேர் புதல்வனைத் தேர்வழங்கு தெருவிற் றமியோற்கண்டே (அகநா. 16). 4. The 4th nakṣatra. Seeஉரோகிணி. (சூடா.) 5. Mirage; கானல் யானையிலங்குதேர்க் கோடு நெடுமலை (கலித். 24).

தேர் - tēr   தேரு, II. v. t. examine, investigate, ஆராய்; 2. discriminate, know, அறி; 3. consider, deliberate, யோசி; 4. say, tell, சொல்லு; v. i. be well versed or proficient in, பயில்.

தேரினும் - தேர்ச்சியுடன் பயின்றாலும்

அஃதே  - அஃதாவது
துணை - துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).


முழுப்பொருள்
ஒழுக்கம் என்பது உலகம் ஓம்பிய நெறி. மனிதர்களுக்கு உயர்ச்சி தரும் நெறி, நன்னடத்தை என்பது நாம் அறிவோம்.  ஒருவனுக்கு நல்லொழுக்கம் என்பது விதைக்கு பாய்ச்சும் நல்ல பசுமையான நீரைப் போன்றது ஆகும். நீரின் தன்மை விதைக்குள் சென்று வளர்ந்து நல்ல மரமாக வளரும். அதுப்போல் நல்ல குணங்கள் பழக்கவழக்கங்கள் நன்னடத்தைகள் ஒருவருள் வளர்ந்து உயர்ச்சி தரும். அறம் தனை நிலைநாட்ட உதவும். துன்பமான நேரங்களிலும் தவறான பாதையில் செல்வது தவறு என்று நம்மை அதில் இருந்து விலக்கி நல்வழியில் செலுத்தும் நல் ஒழுக்கம்.  இறுதியில் பல தடைகள் வந்தாலும் இன்பமே பயக்கும்.

அத்தகைய நன்னடத்தையை பின்பற்ற வகுக்கபட்ட நெறிகளை ஒருவர் பல நூல்களில் (உதாரணமாக திருக்குறள், ஆத்திச்சூடி, திருவாசகம், திருமந்திரம், நாலடியார், பெரியபுராணம், திருவருட்பா, திருமுறை, தேவாரம்) இருந்து ஆழமாக கற்றுக்கொள்ளலாம். ஆனால் தெரிந்து கொள்வதனால் மட்டும் என்ன பயன்? ஒன்றுமில்லை. நாம் கற்ற அறங்களை ஒழுக்கங்களை முழு மனதுடன் பரிவுடன் ஏற்று நன்மை தீமைகளை பகுத்தறிந்து முடிவு எடுத்து, அவ்வொழுக்கத்தை காதலித்து, அதற்காக தன்னை வருத்திக் காத்தால் தான், ஒழுக்கம் நமக்கு அரணாக இருக்கும்.

இங்கே திருவள்ளுவர் தெரிந்து என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அவ்வார்த்தைக்கு வெறுமென தெரிந்துக்கொள்ளுதல் என்ற அளவில் மட்டுமே பொருளை அகராதியில் காண்கிறோம். [ஒருவேளை அறிந்து என்று போட்டு இருந்தால் வேறு அர்த்தம் வரும். ஏன் என்றால் அறிந்து என்ற சொல்லுக்கு பயிலுதல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் "61 - பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற" என்று மற்றொரு குறளில் அழகாக கூறியிருப்பார்].

மேலும்: அஷோக் உரை

“இளையோனே, நெறியென்றால் என்னவென்று எண்ணுகின்றாய்? நன்றென நாம் உணரும் ஒன்றின் பொருட்டு எப்போது வேண்டுமானாலும் சுருட்டி வைத்துக் கொள்ளத்தக்க பட்டாடையா அது?” என்றார். “அது மணிமுடியல்ல, காலணி. முள்ளும் கல்லும் நிறைந்த பாதையில்தான் காலில் இருந்தாக வேண்டும்.”

பரிமேலழகர் உரை
ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க - ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க, தெரிந்து ஓம்பித்தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, இவற்றுள் இருமைக்கும். துணையாவது யாது? எனது மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். ('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால். இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை
எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.

பொருள்: பரிந்து ஓம்பி ஒழுக்கம் காக்க - (ஒருவன்) வருந்திப் பேணி ஒழுக்கத்தைக் காக்கக் கடவன் ; தெரிந்து ஓம்பி தேரினும் அஃதே துணை - (தனக்குத்) துணையானவற்றை யயல்லாம்) அறிந்து பேணி ஆராயினும் ஒழுக்கமே (தனக்குத் ) துணை (யாகலான்).

கருத்து: ஒருவனுக்கு நல்லொழுக்கமே ‘பொன்றுங்கால் பொன்றாத் துணை’.

Thirukkural - Management - Personality Development - Self Discipline
Even if a person learns from all  the scriptures and excels in the demonstration of his knowledge of them, only self-discipline remains as supreme in his life, confirms Kural 132.

Guard your conduct with care; studies won't give
A surer aid.

There are many educated failures. Education alone is not adequate to have a balanced personality. Therefore, there is a need to put in special efforts to cultivate self-discipline. The process of learning to be self-disciplined may be demanding but the outcomes of that will be more fruitful. There are examples of people who achieved excellence just because of self-discipline.


இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
தெய்வங்கள் மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன. மனிதன் ஒழுக்கந்தவறினால் தெய்வத்தின் சீற்றத்துக்கு ஆளாவான். வேறு யாரிடமிருந்து மறைத்தாலும் தெய்வங்களிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. ஒழுக்கத்துக்குத் தெய்வம் வருணன். வருணன் மனிதனுடைய செயல்களை எவ்வளவு தூரம் கவனிக்கின்றான் என்பதை உணர்த்துவதற்காகப் போலும் சூரியனையே வருணனுடைய கண்ணாக வேதத்திலே பல இடங்களில் கூறப்பட்டுள்ளது

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்

குறள் 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.
நன்றிக்கு - நற்பயனுக்கு, அறத்திற்கு
வித்து - மரஞ் செடி கொடிகள் முளைக்கக் காரணமாயிருக்கும் விதை; விந்து; மரபுவழி; வழித்தோன்றல்; சாதனம்; காரணம்.
வித்து ஆகும் - விதை யாகும் (நன்மை மரஞ் செடி கொடி போன்றதாகும். சில விதைகள் (உதாரணமாக மூங்கில்) முளைக்க பல நாட்கள்/வருடங்கள் ஆகும்
ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம் ஓம்பிய நெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.
நல் ஒழுக்கம் - நல்ல நன்னடத்தை
தீ ஒழுக்கம் - தீய நடத்தை, தீய பண்புகள்
என்றும் - என்றுமே, எக்காலத்திலும்
இடும்பை - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம்.
இடும்பை தரும் - துன்பத்தை/ தீமை/ நோய்/ வறுமை/ அச்சம் தனையே தரும்

முழுப்பொருள்
ஒருவனுக்கு நல்லொழுக்கம் என்பது விதைக்கு பாய்ச்சும் நல்ல பசுமையான நீரைப் போன்றது ஆகும். நீரின் தன்மை விதைக்குள் சென்று வளர்ந்து நல்ல மரமாக வளரும். அதுப்போல் நல்ல குணங்கள் பழக்கவழக்கங்கள் நன்னடத்தைகள் ஒருவருள் வளர்ந்து உயர்ச்சி தரும். அறம் தனை நிலைநாட்ட உதவும். துன்பமான நேரங்களிலும் தவறான பாதையில் செல்வது தவறு என்று நம்மை அதில் இருந்து விலக்கி நல்வழியில் செலுத்தும் நல் ஒழுக்கம்.  இறுதியில் பல தடைகள் வந்தாலும் இன்பமே பயக்கும். 

ஆக இறுதியில் நன்மை பயத்தமைக்காகவும் வழியில் தவறான பாதையில் இருந்து தடுத்தமைக்காகவும் ஒழுக்கத்திற்கு நாம் நன்றியே சொல்லுவோம். [நன்றிக்கு நன்மை என்ற பொருளும் உண்டு]

ஆனால் தீய பண்புகள் தீய குணங்கள் தீய நடத்தைகள் தீய நட்புகள் நமக்கு நல்லது செய்யாது. கேடான நீரை விளைச்சலுக்கு பாய்ச்சினால் செழுமையாக செடிகள் வளராது. சிறிது நாட்களில் துவண்டுவிடும். மடிந்துவிடும். அதுப்போல தீய பழக்கங்கள் நமக்கு தீமையே தரும். சிலர் சில தீய பழக்கங்களை ரகசியமாக கொள்வர். அவர்களுக்கு மட்டுமே தெரியும். அது தனக்கு உடனே தீமை பயக்காவிட்டாலும் நெடுங்காலத்தில் தீமை பயக்கும். அதற்கும் திருவள்ளுவர் கூறியுள்ளார் தன்நெஞ்சே தன்னைச் சுடும் [குறள் 293: தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்].  

இங்கே திருவள்ளுவர் வித்து என்று சொல்லி இருக்கிறார். ஏன் என்றால் குழந்தை பருவத்தில் இருந்தே நல் எண்ணங்களை வித்திடுதல் வேண்டும். அதனுடைய பலன் நல்ல மரமாக வளரும். ஆனால் மரமாக வளர்ந்தப்பின் மரத்தின் தன்மையை மாற்றவே முடியாது. முடிந்தாலும் மிக மிக கடினம். செடிகளை பிடுங்கிநடலாம். மரங்களை எளிதில் பிடுங்கிநட்டுவிடமுடியாது. மண் அத்தனை வல்லமை மிக்கது.  உதாரணமாக நாம் இளமையில் உடற்பயிற்சி செய்யாவிட்டாலோ, நல்ல உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கா விட்டாலோ அதனை மாற்றுவது எவ்வளவு சிரமமாக உள்ளது. 

இவ்வொழுக்கம் என்பது எல்லாவற்றிற்கும் பொருந்தும். பேசும் சொல், வாழும் முறை, உண்ணும் உணவு, செல்வம் ஈட்டுவது, அறம் செய்வது, நிர்வாகம் செய்வது, நட்பு வைத்துக்கொள்வது என்று எல்லாவற்றிலும் ஒழுக்கம் வேண்டும்.

”விதைகறதெல்லாம் தப்பாம மொளக்கும்” என்பதை நினைவில் கொள்க. ஆதலால், நல்லொழுக்கத்தை வித்திடல் அவசியம் ஏனெனில் தீயொழுக்கத்தை விதைத்து துன்பத்தை அறுவடை செய்வவேண்டாதிருக்க

பொதுவழக்கில் வழங்கும் தொல்மொழி “விரையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?” என்பதாம். “பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்” என்றது அதனால்தான். ஆத்திச்சூடியில் ஒளவையாரும் கூறியுள்ளார் நன்மை கடைப்பிடி, நேர்பட ஒழுகு, தீவினை அகற்று, சீர்மை மறவேல், கீழ்மை அகற்று, உத்தமனாய் இரு, மோகத்தை முனி என்று.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும். - ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். ('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.

தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் - ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும் ; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீயவொழுக்கம் எக்காலும் துன்பமே தரும் .

மறுமையில் விளையும் இன்பத்திற்கு இம்மையில் ஒழுகும் நல்லொழுக்கம் வித்துப்போன்றிருத்தலால் , 'வித்தாகும்' என்றார் . தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் என்பதால் , நல்லொழுக்கம் இம்மையிலும் இன்பந்தருதல் பெற்றாம் .

மு.வ உரை
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்

சாலமன் பாப்பையா உரை
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: நல் ஒழுக்கம் நன்றுக்கு வித்து ஆகும் - நல்ல நடக்கை இன்பத்திற்குக் காரண மாகும்; தீ ஒழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய நடக்கை எஞ்ஞான்றும் துன்பம் தரும்.

அகலம்: நன்று என்பது இன்பம் எனப் பொருள் தருதலானும், எதுகை நயம் பயத்தலானும், முன் உரையாசிரியர்கள் பாடம், ‘நன்றிக்கு’.

கருத்து: நல்லொழுக்கம் இன்பத்தையும் தீ யயாழுக்கம் துன்பத் தையும் தரும்.

தி.பொ.ச. உரை
நன்மை என்னும் பயிர் விளைய நல்லொழுக்கம் என்னும் நல்லநீரைப் பாய்ச்ச வேண்டும். மாறாக, தீயொழுக்கம் என்ற கெட்டநீரைப் பாய்ச்சினால் கேடு எனும் பயிரே என்றும் விளையும். ( இங்கு வித்து = நீர். ' வித்தும் இடல் வேண்டும் கொல்லோ? ' ஆய்வுக் கட்டுரை காண்க. பயிர்களுக்கு நாம் பாய்ச்சும் நீரின் தன்மையைப் பொறுத்தே பயிரின் விளைச்சல் அமைகிறது என்பதை அறிவோம். நல்லநீரைப் பாய்ச்சாமல் கெட்ட நீரைப் பாய்ச்சினால் பயிர்கள் கெட்டு மடிந்து விளைச்சலற்றுப் போகும் என்பதையே கேடு விளையும் என்கிறார். இங்கு ஒழுக்கத்தினை நீருடன் ஒப்பிட்டிருப்பது சாலப் பொருத்தமாகவே படுகிறது. ஏனென்றால் இந்த இரண்டுமே ஒழுகும் தன்மை உடையவை என்பதுடன் இடத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளவும் வல்லவை. ) 

Thirukkural - Management - Personality Development - Self Discipline
Self-discipline leads to all beneficial outcomes in one's life. Beneficial outcomes include health, happiness, harmony, and professional success. Kural 138 affirms that a self-disciplined person will be grateful because of his positive habits.

Good conduct sows good, and from bad springs
Eternal trouble

Positive habit is possible as a person becomes grateful when he achieves significant success. Achieving significant success is possible with positive habits. Whereas, lack of self-discipline leads to a long lasting misery. Happiness and misery are the products of positive and negative habits respectively. Let us remember Aristotle's thought, “Excellence is not an act. It is a habit.”

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

English Meaning - As I taught a kid - Rajesh
Good discipline will be the seed to good results. Whereas bad habits and indiscipline will always lead to difficulties in life. 

Questions that I ask to the kid
What is the seed for good results? What does indiscipline lead to ?
What gives you difficulties all the time?
Why indiscipline leads to difficulties? (indiscipline->distractions->unfocus->unproductivity->no wealth->difficulties)

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

குறள் 131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்.
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

விழுப்பம் - சிறப்பு; நன்மை; குலம்; இடும்பை.

தரலான் - தருதல் - Giving, கொடை

ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உயிரினும் - உயிரை விட

ஓம்பப் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
உயிரைவிட சிறந்தது ஒழுக்கம்
இவ்வுலகிலே விலைமதிப்பில்லாதது உயிர். அவரவர் அவரவர் உயிருக்கு விலை இல்லை என்றே கூறுவர். உலகிலேயே மிக உயர்ந்த பொருள் எது என்று கேட்டால் யாரும் தயங்காமல் சொல்லும் பதில் அவர்களுடைய உயிர் தான்.

உயிரைவிட சிறந்த பொருள் ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.  அது தான் ஒழுக்கம். உயிர் போனால் வராது. ஒழுக்கமும் போனால் வராது. 

உயிர் போன பின் நமக்கு வலி இல்லை. ஒரு வேளை போகும் போது வலிக்கலாம். ஆனால் ஒழுக்கம் போன பின்பும் நாம் வாழ வேண்டி இருக்கும். அது மிகுந்த வேதனையை தரும். உயிர்ப் பிரிந்து விட்டால் மற்றவர் நம்மக்காக அழுவார்கள். ஆனால் ஒழுக்கம் பிரிந்து விட்டால் நமக்கு நாமே அழுவோம். எனவே, ஒழுக்கம் உயிரினும் மேலானாதாகக் கருதப்படும். 

ஒழுக்கம் சிறப்பை தரும். உயிர் சிறப்பை தராது. எத்தனையோ பேர் உயிரோடு இருக்கிறார்கள். யாருக்குத் தெரியும்? உயிரோடு இருப்பவனெல்லாம் உயர்ந்தவனல்ல. ஒழுக்கத்தோடு இருப்பவன் தான் உயர்ந்தவன் என்று சொல்வதற்க்காக தான் உயிரினும் ஒம்பப் படும் என்கிறார். 

ஒழுக்கம் விழுப்பம் தரலாம்
ஒழுக்கம் விழுப்பம் தரலாம். அதற்கு மூன்று பொருள்கள் உண்டு. ஒன்று சிறந்தது, நன்மை, இடும்பை.

முதலாவதாக விழுப்பம் என்றால் இடும்பை என்று எடுத்துக்கொள்வோம். ஒழுக்கத்தை பின்பற்றுவதால் சில துன்பங்களை சிறிய காலத்திற்கு நாம் அனுபவிக்க நேரிடும். அதாவது ஒழுக்கம் உனக்கு துன்பத்தை தரலாம்(தரக்கூடும்). உதாரணமாக சில அசௌகர்யங்கள். ஆயினும் ஒழுக்கத்தை பேணு. ஏனெனில் வாழ்வில் ஒழுக்கமே உனக்கு சிறப்பைத் தரும்.

ஒழுக்கத்தை பின்பற்றுவதால் உனக்கு உலகியல் நன்மை கிடைக்காமல் போகலாம். ஆனால் நீ ஒழுக்கத்தை பின்பற்றினால் உனக்கு தீங்கு நேராது. 

விழுப்பம் என்றால் சிறந்தது, உயர்ந்தது என்று பொருள். 
 
வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப்” என்பார் மணிவாசகர். வேதத்தின் சிறந்த பொருள் அவன் என்ற அர்த்தத்தில். (முழுப் பாடலும் கீழே) 

ஒழுக்கம் சிறப்பை தரும். உயிர் சிறப்பை தராது.

உயிரினும் ஓம்பப்படும்
உயிர் இருக்கும் வரை தான் நமக்கு பேர், வணக்கம், மரியாதை எல்லாம். உயிர் போய் விட்டால் "பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு " என்று பட்டினத்தார் கூறியது போல நாம் பிணம். ஆனால் ஒழுக்கத்தோடு இருந்தால், உயிர் போன பின்னும், நம் பேர் நிலைத்து நிற்கும். வாழும் காலம் மட்டும் அல்ல, அதற்கு பின்னும் நமக்கு சிறப்பை தருவதால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் 

வேதம் ஓதுவதனால் மட்டும் நீ சிறந்தவன் ஆகிவிட மாட்டாய். உன் ஒழுக்கம் கெடுகின்ற சூழ்நிலையிலே நீ ஒழுக்கத்துடன் இருந்தால் உனக்கு நன்மை கிடைக்கும். இல்லை என்றால் உன் பிறப்பே சந்தேகத்திற்கு உள்ளாகும்.

வீடு தீபிடித்துக் கொண்டால், போட்டது போட்டபடி உயிரை காத்துக் கொள்ள வெளியே ஓடுவோம். உயிரை விட எதுவும் பெரியது அல்ல. எனவே, மற்றவை போனாலும் பரவாயில்லை, உயிரை காத்துக் கொள்ள ஓடுகிறோம்.

உயிரா ஒழுக்கமா என்ற கேள்வி வந்தால்? வள்ளுவர் விடை தருகிறார். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 

ஓம்புதல் என்றால் பாதுகாத்தல். உயிரை பாதுகாக்க வேண்டும். உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியதால், அதைவிட கவனமாக, உயிரை விட கவனமாக ஒழுக்கத்தை காக்க வேண்டும்.

சரி. ஏன் ஒழுக்கம்?
ஒழுக்கம் ஏன் முக்கியம் என்று இதுவரை பார்த்தோம். அதனால் நாம் பெறக்கூடிய சிறப்பை எல்லாம் பார்த்தோம். இன்னும் சற்று ஆழமாக பார்ப்போம். 

நமது உடல், மனம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. (Our body and mind are connected. One and the same). அவற்றை ஒழுங்குடன் வைத்துக்கொண்டால் நாம் விரும்பியவற்றை எல்லாம் பெறமுடியும். 

உடலை ஒழுங்குடன் வைத்துக்கொள்வது என்றால் சீராக சுவாசிப்பது (பிராணாயமம் மட்டும் அல்ல. பொதுவாகவே சீராக ஆழமாக சுவாசிப்பது (Deep Diaphragmatic breathing), உடற்பயிற்சி செய்வது, சுறுசுறுப்பாக இயங்குவது, ஆரோக்கியமான உணவுகளை சமச்சீராக சாப்பிடுவது, நிதாணமாக ஆழ்ந்து சாப்பிடுவது, வயிற்றில் உள்ள நுண்கிருமிகளை சமச்சீராக வைத்துக்கொள்வது (There number of microbiomes in your stomach is more than the number of cells (which is trillion cells) in your body. Your brain starts from your gut. You are what you eat. Hence, keep the microbiome healthy and balanced. Do not take much antibiotics. Don't eat much processed foods which has lot of preservatives that kills the bacteria), நன்கு உறங்குவது என்று பலவற்றை கூறலாம். 

மனதை ஒழுங்குடன் வைத்துக்கொள்வது என்றால் நமது எண்ணங்களை சிந்தனைகளை ஒழுங்குடன் வைத்துக்கொள்வதாகும். எண்ணங்கள் ஒழுங்காக இருந்தால் நமது உணர்ச்சிகளும் சீராக இருக்கும். எண்ணங்களும், உணர்ச்சிகளும் சீராக இருந்தால், நமது ஆக்க சக்தியும் சீராக இருக்கும். நமது குறிக்கொள்களுக்கு செயல்களுக்கு ஒத்துழைக்கும். 

இவ்வாறு உடலையும் மனதையும் ஒழுங்குடன் வைத்துக்கொண்டால், கல்பவிருக்ஷம் மரம் நாம் விரும்பியவற்றை எல்லாம் தருவதுப்போல் நாமும் நாம் விரும்பியவற்றை எல்லாம் பெறலாம். 

பதஞ்சலி யோகாவில், ஒரு நல்ல ஒழுங்குடன் கூடிய மனதை கல்பவிருக்ஷம் மரம் (விரும்பியவற்றை தரும்) மனம் என்றுகூறுவர். நமது உடலையும், மனதையும், உணர்ச்சிகளையும், ஆக்கசக்தியையும் சீர் செய்து ஒழுங்குடன் வைத்து ஒரு திசையில் செலுத்தினால், நாம் இவ்வுலகில் அடைக்கூடிய பல நன்மைகள் மிக உயர்ந்தது.  [In Yoga, a well-established mind is referred to as a Kalpavriksha or a “wishing tree.” Sadhguru explains that if you organize your body, mind, emotions and energy in one direction, your ability to create and manifest will be phenomenal.]

அதனால் தான் ஒழுக்கம் சிறந்தது. உயிரவிட பேணவேண்டியது.



மைந்தனுடன் தனித்துலாவுகையில் “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படவேண்டும், மைந்தா” என்றார். “மானுடர் எவரும் ஒழுக்கத்தின்பொருட்டு கணந்தோறும் உள்ளத்துடன் போரிட்டாகவேண்டும். சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் நம் ஒழுக்கத்துடன் ஆட விடாய்கொண்டுள்ளன. இனியமலர்கள், நறுமணங்கள், தென்றல், வண்ணங்கள், ஒளிகள் அனைத்தும் பிறழ்க பிறழ்க என்றே நம் உள்ளத்திடம் ஆழமாக சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆண்கள் தங்கள் விழைவால் வழிதவறுகிறார்கள். கன்னியர் தங்கள் ஆணவத்தால், அன்னையர் தங்கள் அன்பால் வழிபிழைக்கிறார்கள். அழகர்கள் பிறர் விழைவால் பிறழ்வுகொள்கிறார்கள். மைந்தா, ஒழுக்கம் என்பது அறத்திற்குக் கொண்டுசெல்லும் பாதை. ஒழுக்கத்தில் மாறாதிரு. உன் மதிப்பால் உவகையே கொள்முதல் செய்யப்படும்.”

எழுத்தாளர் ஜெயமோகன் உரை (பெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள் - சுட்டியை தட்டவும்)
அறம் வேறு ஒழுக்கம் வேறு என்ற புரிதல் நமக்குத்தேவை. மானுடகுலத்தை உருவாக்கும் சில மாறா அடிப்படைகள்தான் அறம் என்று சொல்லப்படுகின்றன. எளியோனை வலியோன் அழித்தல் கூடாது என்ற அறத்தின் அடிப்படையில்தான் சமூகமே உள்ளது. அதைப்போல பல அறங்கள் உள்ளன. உண்மை, கருணை, சமத்துவம் போன்று பல அறங்களால் ஆனது நம் வாழ்க்கை.

ஒழுக்கம் என்பது அறத்தின் அடிப்படையில் அமைந்திருக்கையில் அது நல்லொழுக்கம். அறமீறலை நிகழ்த்தும் என்றால் அது தீய ஒழுக்கம். இவ்வாறே ஒழுக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு பாலியல்போக்கு என்பது பிறரை ஏமாற்றுவதாகவோ, சுரண்டுவதாகவோ அமையுமென்றால் அதை ஒழுக்கமின்மை என்று கொள்ளலாம்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்ற குறள் ஒழுக்கத்தின் நோக்கத்தைச் சொல்கிறது. அது மேலான வாழ்க்கையை அளிக்கிறது. ஒரு செயல்பாடு விழுப்பம் அளிக்குமென்றால் அது ஒழுக்கமே ஆகும்.

ஜெ


நேற்றைய ஒழுக்கங்கள் ; இன்றைய ஒழுக்கங்கள்
நாம் பொதுவாக இன்று பேசுவது நேற்றைய ஒழுக்கங்கள். நமது முன்னோர் பின்பற்றிய ஒழுக்கங்கள். ஆனால், இன்றைய ஒழுக்கங்களை நாம் பேசுவது மிக குறைவு. இன்றை ஒழுக்கங்களில், வாகன போக்குவரத்து விதிகளை பின்பற்றுதலில் தொடங்கி, நாம் எத்தனை மணி நேரம் அலைபேசியில் நேரத்தை செலவிடுகிறோம், நாம் ஒரு நாளை/நேரத்தை எவ்வாறு திட்டமிடுகிறோம், ஆழ்ந்த செயல் (deep work) புரிவது, செயல்களில் தீவிரமாக செயல்படுவது என்று பல தளங்களில் ஒழுக்கத்தைப் பற்றி பேசலாம் பின்பற்றலாம்.

திருவெம்பாவை பாடல் 
ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

(திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் )

ஒப்புமை
1. ஒழுக்கினும் குலத்தினும் விழுப்ப மிக்கமை (பெருங். 3.22:36)
2. ஒன்றுரைத் துயிரினும் ஒழுக்கம் நன்றெனப்
பொன்றில புரவலன் பொருவில் சேனையே (கம்ப.கிளைகண்டு.24)
3. அறநெறிச்சாரம் இதே கருத்தை இவ்வாறு வலியுறுத்துகிறது.
தானத்தில் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தில் மிக்க உசாத்துணையும் – மான
மழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லை
பழியாமல் வாழும் திறம்

மேலும்: அஷோக் உரை




பரிமேலழகர் உரை
[அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல்.இது, மெய்ம்முதலிய அடங்கினார்க்கு அல்லது முடியாது ஆகலின் , அடக்கம் உடைமையின்பின் வைக்கப்பட்டது.)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும். (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். 'உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.).

மணக்குடவர் உரை
ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும். இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை
ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் (தன்னை யுடையார்க்கு) மேன்மையைத் தருதலால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - ஒழுக்கத்தை (த் தமது) உயிரினும் (மிகப்) பேண வேண்டும்.

அகலம்: பரிமேலழகர் பாடம் ‘தரலான்’. மற்றை நால்வர் பாடம் ‘தரலால்’.

கருத்து: தன் உயிரைக் காத்தலினும் மேலாக ஒருவன் தன் ஒழுக்கத்தைக் காக்கக் கடவன்.

Kalpavriskha - The Wishing Tree [Inner Engineering - Sadhguru Jaggi Vasudev]
Kalpavriksha - Lit. a wishing tree. In yoga, a well-established mind is referred to as a kalpavriksha

The reason why success comes so easily and naturally for one person, and is a struggle for someone else, is essentially this: one person has organized his or her mind to think the way he wants, and another thinks against his or her own interests.

A well-established human mind is referred to as a kalpavriksha, or a wishing tree that grants any boon. With such a mind, whatever you ask for becomes a reality. All you need to do is to develop the mind to a point where it becomes a wishing tree, rather than a source of madness. A mind that can manifest whatever it chooses is described in yoga as being in a state of samyukti. This is a skillfulness that arises out of equanimity.

Once your thoughts get organized, your emotions will also get organized. Gradually, your energies and body get organized in the same direction as well. However, the order in which you address these dimensions could vary, depending on what you are ready for. Considering the realities of the day, most people are not ready for any system unless they are first intellectually convinced of it. Eventually, once your thoughts, emotions, body, and energy are channeled in one direction, your ability to create and manifest what you want is incredible

Today modern science is proving that this whole existence is just a reverberation of energy, an endless vibration. Thoughts too are a reverberation. If you generate a powerful thought and let it out, it will always manifest itself.

For this to happen, it is important that you do not impede and weaken your thought by creating negative and self-defeating thought patterns. Generally, people use faith as a means to banish negative thoughts. Once you become a thinking human being, however, doubts invariably surface. The way your mind is made, if God appears right here this moment, you will not surrender to him or her. Instead, you will want to conduct an investigation to find out whether this is the genuine article or not.

There is an alternative to faith, which is commitment. If you simply commit yourself to creating what you really care for, now once again your thoughts get organized in such a way that there are no hurdles. Your thoughts flow freely toward what you want, and once this happens, the manifestation of your desire is a natural consequence.

To create what you really care for, your desire must first be well manifested in your mind. Is that what you really want? Think this through carefully. How many times in your life have you thought, “This is it.” The moment you got there you realized that was not it at all! So, first explore what it is that you really want. Once that is clear and you are committed to creating it, you generate a continuous process of thought in that direction. When you maintain a steady stream of thought without changing direction, it will manifest as a reality in your life.

There are yogic processes by which you can touch another dimension of intelligence, unsullied by memory, called chitta, which we have mentioned earlier. Realizing the power of chitta is called chit shakti, a simple and powerful process through which you can access the very source of creation within you.

நன்றி: செல்வி மஞ்சரி (Star Vijay - தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு)
ஒழுக்கமுடைமை தான் மனிதர்களுக்கு உடைமை.
எது ஒழுக்கம் ? கடைசி வரை தன் கைத்தடியைப் போல தன் கொள்கையையும் வலையாமல் வைத்திருந்தாரே காந்தி - அது ஒழுக்கம். பாரதியின் பாட்டு ஒழுக்கம்; பாரதியுன் பார்வை ஒழுக்கம்; பாரதியுன் மீசைக் கூட ஒழுக்கம். தன் கரைப் படாத சட்டைப் போல் கடைசிவரை தன் கரங்களையும் கரைப் படாமல் வைத்திருந்தாரே காமராசர். அவர் ஒழுகியது ஒழுக்கம். 

அதனால் தான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்றார் திருவள்ளுவர்.
ஏன் ஒழுக்கத்திற்கு உவமையாக உயிரனை சொன்னார் திருவள்ளுவர் ?

உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும். அதாவது, உலகத்தில் உயிர்த் தான் சிறந்தது என்று எண்ணிக்கொண்டு இருக்கின்ற மனிதர்களே! இதைக் காட்டிலும் சிறந்தது ஒன்று இருக்கின்றதடா. அது தான் ஒழுக்கம்.

உயிர் சென்று விட்டால் உயிர் மறுபடியும் வரும். ஆனால் ஒழுக்கம் சென்று விட்டால் மறுபடியும் வராது. உயிர்ப் பிரிந்து விட்டால் மற்றவர் நம்மக்காக அழுவாரகள். ஆனால் ஒழுக்கம் பிரிந்து விட்டால் நமக்கு நாமே அழுவோம்

உயிர் போன பின் நமக்கு வலி இல்லை. ஒரு வேளை போகும் போது வலிக்கலாம். ஆனால் ஒழுக்கம் போன பின்பும் நாம் வாழ வேண்டி இருக்கும். அது மிகுந்த வேதனையை தரும். எனவே, ஒழுக்கம் உயிரினும் மேலானாதாகக் கருதப்படும். 

உயிரோடு இருப்பவனெல்லாம் உயர்ந்தவனல்ல. ஒழுக்கத்தோடு இருப்பவன் தான் உயர்ந்தவன் என்று சொல்வதற்க்காக தான் உயிரினும் ஒம்பப் படும் என்கிறார். வேதம் ஓதுவதனால் மட்டும் நீ சிறந்தவன் ஆகிவிட மாட்டாய். உன் ஒழுக்கம் கெடுகின்ற சூழ்நிலையிலே நீ ஒழுக்கத்துடன் இருந்தால் ஒழுக்கம் உயிரினிம் ஒம்பப் படும். உன் பிறப்பே சந்தேகத்திற்கு உள்ளாகும்.


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

தில்லை மறையோர் சிவசமயம் சார்ந்து ஒழுகி
இம்மையே சாரூபம் எய்தினார் நல்ல
ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.                       

தில்லை மறையோர் ---  தில்லை வாழ் அந்தணர்கள்.  இவ் அந்தணர்கள் தத்தமக்கு விதிக்கப்பட்ட நெறியில் ஒழுகியதோடு, இறைவழிபாட்டில் நின்றார்கள். இவர்கள் இம்மையிலேயே சிவசாரூபம் எய்தினமை, திருஞானசம்பந்தப் பெருமானுக்கு இவர்கள் சிவகணங்களாகத் தோன்றியமையினால் விளங்கும்.

அண்டத்து இறைவர் அருளால், அணிதில்லை
முண்டத் திருநீற்று மூவாயிர வர்களும்
தொண்டத் தகைமைக் கணநாதராய்த் தோன்றக்
கண்டு, அப்பரிசு பெரும்பாணனார்க்கும் காட்டினார்.

எனச் சேக்கிழார் பெருமான் பாடி உள்ளதை அறிக.

அடுத்ததாக, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

பழுக்கும் பழமொழி பார், ஒழுக்கம் விழுப்பம் தரலால்,
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று உரைப்பர், நெஞ்சே!
செழிக்குந் திருப்புல்லை மால்பதத்து அன்பில் திருந்துவையேல்
இழுக்கம் இல்லாமை ஒழுக்கம் விழுப்பம் எல்லாம் தருமே.

உலகில் சிறந்து விளங்கும் பழமொழியான திருக்குறள், ஒழுக்கம் சிறப்பைத் தருதலால், அந்த ஒழுக்கமானது உயிரினும் மேலானதாகப் பாதுக்காக்கப்படும் என்று வழங்குவதாகச் சொலவர். எனவே, நெஞ்சமே! சிறந்த நிலையில் விளங்கும் திருமாலின் திருவடிகளில் அன்பு பொருந்தி இருப்பாயானால், கீழ்மை ஏதும் இல்லாதபடிக்கு, அந்த ஒழுக்கமானது மேன்மை எல்லாவற்றையும் தரும்.

பழுக்கும் பழமொழி - சிறந்து விளங்கும் பழமொழியாகிய திருக்குறள். மால் பதத்தன்பில் - திருமாலின் திருவடி அன்பில்.  திருந்துவையேல் - பொருந்தி நிற்பாயானால்.  இழுக்கமில்லாமை - கீழ்மைத்தனமில்லாமை. விழுப்பம் - மேன்மை.
                                                              
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...
  
விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத்
தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே. 
--- திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

`உண்மையான கல்வியும், கேள்வியும், ஞானச் செய்தியும் யாவை` என்று ஒருவனது உள்ளம் ஓர்கின்ற காலத்து, அது பிழைபட்டுப் பொய்ம்மையில் விழாதிருப்பின், சிவபெருமான் அவனுக்குத் தடையின்றிக் காலம் கடந்த பொருளாய் வெளிப்பட்டு நிற்பன்.

குறிப்புரை :  வழுக்கி விழுதலாவது, பொய்யை மெய்யெனத் துணிதல்.  மெய்ம்மையான கல்வி கேள்வி ஞானச் செய்திகளை உடையார் காலத்தானும், இடத்தானும் வரையறுக்கப்படாத இறை நிறைவை எய்துவர்` என்றது. இதனால், மயக்க நூலைக் கற்றலும், மயக்க உரைகளைக் கேட்டலும், அவற்றின்வழி அறிந்த நெறியின் நிற்றலும் ஆகாமை கூறப்பட்டது.

தானத்தின் மிக்க தருமமும், தக்கார்க்கு
ஞானத்தின் மிக்க உசாத்துணையும் --- மானம்
அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் இல்லை,
பழியாமல் வாழும் திறம்.               
--- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

தானத்தின் மிக்க தருமமும் --- உயர்ந்தோரை நாடி அவர்க்கு வேண்டுவன உதவுதலைக் காட்டினும் சிறந்த அறமும், தக்கார்க்கு --- பெரியோர்க்கு, ஞானத்தின் மிக்க --- அறிவைக் காட்டிலும் சிறந்த, உசாத்துணையும் --- ஆராயுந் துணைவனும், மானம் அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் --- பெருமை கெடாத ஒழுக்கத்தைக் காட்டிலும் சிறந்த நல்லொழுக்கமும், இல்லை ---இல்லை, பழியாமல் வாழுந் திறம் --- இம்மூன்றும் பிறர் பழியாமல் வாழ்வதற்கேற்ற செயல்களாகும்.

பிறப்பு, நெடுவாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக்கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோயின்மை,
இலக்கணத்தால் இவ்எட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்.               
 --  ஆசாரக் கோவை.

இதன் பதவுரை ---

என்றும் --- எப்பொழுதும், ஒழுக்கம் பிழையாதவர் --- ஒழுக்கத்தில் தவறாதவர், பிறப்பு --- நற்குடிப்பிறப்பு, நெடு வாழ்க்கை --- நீண்ட வாழ்நாள், செல்வம் --- பொருட் செல்வம், வனப்பு --- அழகுடைமை, நிலக்கிழமை --- நிலத்திற்கு உரிமை, மீக்கூற்றம் --- சொல்லின் மேன்மை, கல்வி --- படிப்பு, நோய் இன்மை --- பிணியில்லாமை, இ எட்டும் --- இந்த எட்டு வகையினையும், இலக்கணத்தால் --- அவற்றிற்குரிய இலக்கணங்களுடன், எய்துப --- அடைவர்.

நற்குடிப் பிறப்பு, நெடிய வாணாள், செல்வம், அழகுடைமை, நிலத்துக்கு உரிமை, சொற்செலவு, கல்வி, நோயின்மை என்று சொல்லப்பட்ட இவ்வெட்டினையும் இலக்கணத்தோடு நிரம்பப் பெறுவர் என்றும் ஆசாரம் தப்பாமல் ஓழுகுவார். ஒழுக்கம் தவறாதவர்கள் மேற்கூறிய எட்டு வகையையும் எய்துவர்.

திருஒக்கும் தீதில் ஒழுக்கம், பெரிய
அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல், --- பிறனைக்
கொலை ஒக்கும் கொண்டுகண் மாறல், புலைஒக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு.
                                ---  நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

தீது இல் ஒழுக்கம் திரு ஒக்கும் --- தீமை கலவாத நல்லொழுக்கம் செல்வத்தை ஒக்கும்; ஆற்றின் ஒழுகல் பெரிய அறன் ஒக்கும் --- நெறிமுறைப்படி ஒழுகுதல் சிறந்த அறச் செய்கையோடு ஒக்கும்; பிறனைக் கொண்டு கண் மாறல் கொலை ஒக்கும் --- பிறனொருவனை நட்பாகக் கொண்டு, பின்பு அந் நட்பு மாறிப் புறங் கூறுதல், அவனைக் கொலை செய்தலைப் போன்றதாகும்; போற்றாதார் முன்னர் செலவு புலை ஒக்கும் --- தம்மை மதியாதாரிடத்தில் சென்று ஒன்றை விரும்புதல், இழி தகைமையை ஒப்பதாகும்.

நல்லொழுக்கம் செல்வம் போன்றது; பிறரைப் புறங்கூறல் அவரைக் கொலைசெய்தல் போல்வதாம்; தம்மை மதியாரைத் தாம் மதித்தல் இழிதகைமையாகும்.

கண்மாறல் : ஒரு சொல்; கருத்து மாறலென்பது பொருள்.

வன் தெறு பாலையை மருதம் ஆம் எனச்
சென்றது; சித்திரவடம் சேர்த்ததால் -
ஒன்ற உரைத்து, ‘உயிரினம் ஒழுக்கம் நன்று’ எனப்
பொன்றிய புரவலன் பொரு இல் சேனையே.  
    ---  கம்பராமாயணம், திருவடி சூட்டு படலம்.

இதன் பதவுரை ---

‘உயிரினம் ஒழுக்கம் நன்று என ஒன்று உரைத்து --- உயிரை விட நல்லொழுக்கமே சிறந்து விளங்குவது எனக் கருதிச் சத்தியம் ஒன்றையே உரைத்து; பொன்றிய புரவலன் --- உயிர்விட்ட சக்கரவர்த்தியாகிய தயரதனது; பொரு இல் சேனை --- ஒப்பற்ற சேனையானது; வன்தெறு பாலையை --- கொடிய அழிக்கவல்ல பாலை நிலத்தை; மருதம் ஆம் எனச் சென்றது --- (முன் கூறியவாறு  நீரும் நிழலும் பெற்றுக் குளிர்ந்தமையால் மருதநிலம் ஆகும் என்று கருதி எளிதாகக் கடந்து சென்று;) சித்திரகூடம் சேர்ந்தது --- சித்திரகூட மலையை அடைந்தது.     பாலை மருதமாயினது. யானைகளின் மதநீர்ப் பெருக்கால் வழி வழுக்கிச் சேறானதாலும், மன்னர் குடை நிழலால் குளிர்ச்சி ஆனதாலும் ஆம் என மேற் கூறினார்.



Thirukkural - Management - Personality Development - Self Discipline
Self-discipline is the best discipline according to Kural 131. Self-discipline is important as it brings a person name, fame, health, and greater achievements. Therefore, self-discipline must be considered greater than one's life and preserved for greater achievements.

Right Conduct leads to excellence, and
So Must be guarded above life.

Self-discipline helps us gain self-control.

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமனன்)
ஒழுக்கத்துக்கு முதன்மை
ஒழுக்கத்தைப் பாதுகாப்பதே வருணன் எனப்படும் தெய்வத்தின் கடமை என்பதையும், தெய்வங்களுக்கு வருணன் வழங்கப்பட்ட முதன்மையையும் வேதம் கூறுவதாக அறிவோம்.  இதிலிருந்தே, வேதங்களிலே ஒழுக்கம் எவ்வளவு முக்கியமாகக் கருதப்பட்டதென்பதும் புலனாகும். வேதங்கள் மனிதனுடைய கடமைகளை ஐந்தாகப் பிரித்துள்ளன. தெய்வம், ஞானிகள், பிதிரர், உடன் வாழும் ஏனைய மனிதர் ஆகிய நான்கு பகுதியினருக்குமட்டுமின்றிப் பிராணிகளுக்கும் தன்னால் ஆவன செய்ய ஒவ்வொரு மனிதனும் கடமைப்பட்டுள்ளான் என்பது வேதவாக்கு. “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்க ஐம்புலத்தா றோம்பல்தலை” என் வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பிடத்தக்கது. பிதிர்கள், தெய்வம், விருந்தினர், உறவினர், தான் ஆகிய ஐவருக்கும் செய்ய வேண்டிய கடமையைக் செய்வது ஒருவனுக்கு அறம் என்பதே இக்குறளின் கருத்து. வேதங்களும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றன. குறளும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றது. வேதமும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றது. அவற்றுள் தென்புளத்தார் தெய்வம் விருந்து ஆகிய மூவரையும் பேண வேணுமென்பது இரண்டுக்கும் பொதுவாயுள்ளது. ஆனால், குறள் ஒருவன் தன்னையும் தன் உறவினரையும் பேணவேணுமெனக் கூரியதற்கும் பதிலாக, வேதங்கள் ஞானிகளையும், மக்கலாலாத ஏனைய பிராணிகளையும் பேணுவது ஒருவனுக்கு அறம் எனக் கூறியிருப்பது ஒப்பிடத்தக்கது. ஒருவன் தன்னைப் பேணுவதை ஓர் அறமாக வேதங்கள் கருதாதது இங்குச் சிந்திக்கத்தக்கது. தன்னைப் பேணுவது பிறரைப் பேணுவதற்குத் தான் நிலைக்களனாய் நின்று பயன்படும் பொருட்டே. எனவே, தன்னைப் பேணுவதும் ஒரு அறமாகுமென வாதாடலாம். எனினும், சுயநலமின்மையே எல்லாவற்றுள்ளும் தலையாய அறமாக வேதங்கள் பேசுவதை இங்குக் குறிப்பிடல் வேண்டும். சதபத பிராமணத்தில் ஒருவன் தனக்குரிய எல்லாவற்றையும் தியாகம் செய்தலே வீடுபேற்றுக்கு வழி எனக் கூறப்பட்டுள்ளது. சுயநலமின்மை, தியாகம் ஆகிய இவற்றோடு சேர்த்து அன்பையும் விருந்தோம்பலையும் மிக முக்கியமான அறங்களாக வேதங்கள் பேசுகின்றன. சூதாடல், பிறன்மனை விழைதல், பொய் பேசுதல் ஆகியவற்றைப் பெரும்பாவங்களாக வேதங்கள் கண்டிக்கின்றன. 


இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
”செல்வத்தைப் புறக்கணிக்க வேண்டா. வந்த விருந்தினரைத் தெய்வமாகக் கருது. உனக்காக மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உணவு ஏராளமாக உண்டாக்கு. பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப்பாயாக. இதுவே ஒழுக்கம்” இவை உபநிடதங்களிலே காணப்படும் உபதேசங்களுக்குச் சில உதாரணங்கள்

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

English Meaning - As I taught a kid - Rajesh
Consistent Discipline will yield you all good things in life. At the same time, it could be difficult. Yet, discipline must be protected more than one's life. Because one is not disciplined he himself will regret for it and would be like a dead corpse making the living very difficult. Living a life with regrets about mistakes/indiscipline is much more painful than death

Questions that I ask to the kid
What is protected more than life? Why?
Why discipline should be protected more than life?