Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label கண்விதுப்பழிதல். Show all posts
Showing posts with label கண்விதுப்பழிதல். Show all posts

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்


குறள் 1180
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
மறை - மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு.

பெறல் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

ஊர்  - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.
மக்கள்)

ஊரார்க்கு - ஊரார் -  ஊரார், அன்னியர், (தன்னை வீடு, அலுவலுகம் போன்ற சுற்றத்தில் உள்ள 

அரிது - அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

அன்றால் - அல்ல

எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

எம்போல் - என் போல்

அறை - அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம்; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை

பறை - தோற்கருவி; தப்பு; பறையடிக்குஞ்சாதி; வட்டம்; சொல்; விரும்பியபொருள்; ஒருமுகத்தலளவை; மரக்கால்; நூல்வகை; வரிக்கூத்துவகை; குகை; பறத்தல்; பறவைஇறகு; பறவை.

கண்ணார் -  (அழகிய) கண்களை உடைய

அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
”என் போன்றவருக்கு மனதில் உள்ளவற்றை பறை அடித்து சொல்வது போல் என் கண்களே அழுது சொல்லிவிடும். அப்படி இருக்கையில் என் மனதில் இருக்கும் இரகசியத்தை இவ்வூரார் அறிந்துக்கொள்வது ஒன்றும் அரிதான / கடுமையான ஒன்று அல்ல. மிக எளிதாகவே என் கண்கள் மூலம் இவ்வூரார் கண்டுக்கொள்வர்”  என்று தலைவி கூறுகிறாள் . 

ஆதலால் என் தலைவன் பிரிந்து சென்ற என் அகத்துன்பத்தை நான் மறைக்க நினைத்தாலும் பறை அடித்துச் சொல்வதுப்போல் என் கண்கள் அழுதோ வாடியோ சொல்லிவிடும்.

மேலும் அகத்துன்பத்தை மற்றவர்கள் உணர்வது கடினமான ஒன்று அல்ல. எளிதாகவே மற்றவர்கள் உணர்ந்துக்கொள்வர்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது) எம் போல் அறைபறை கண்ணார் அகத்து மறை பெறல் - எம்மைப் போலும் அறைபறையாகிய கண்ணிணையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையையறிதல்; ஊரார்க்கு அரிதன்று - இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது. '('மறை' என்றது ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்குஅறிவித்தலாகிய தொழிலாம் ஒற்றுமை உண்மையின் 'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்'என்று பாடம் ஓதுவாரும் உளர். 'யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.)

மணக்குடவர் உரை
எம்மைப்போல அறைபறையாகிய கண்களையுடையார் மாட்டு உளதாகிய மறையை யறிதல் ஊரார்க்கு எளிது.

மு.வரதராசனார் உரை
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

சாலமன் பாப்பையா உரை
அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

 

குறள் 1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
வாராக் - வாரா - வாராத - வராத

கால் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

துஞ்சுதல் - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல்

துஞ்சாவரின் - தூங்கா என்கண்கள்

துஞ்சுதல் - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல்
துஞ்சா - தூங்கா என்கண்கள்

ஆயிடை - அவ்விடம்; அக்காலத்து.

ஆர் - நிறைவு; பூமி கூர்மை அழகு மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி ஆரக்கால் தேரின்அகத்தில்செறிகதிர்; அச்சுமரம் செவ்வாய் சரக்கொன்றை அண்மை ஏவல் பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப்பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.

அஞர் - துன்பம்; நோய் சோம்பல் வழுக்குநிலம் அறிவிலார்.

உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.

உற்றன - - adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty.

கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
உடையார்

முழுப்பொருள்
கண்கள் படும் துன்பநோயைப்பற்றி கூறிகிறாள் தலைவி. பிரிந்து சென்ற தலைவன் வராத பொழுது அவர் எப்பொழுது வருவார் என்று வரும் வழிபார்த்து தூங்காமல் இருக்கும் என் கண்கள். அவர் வந்த பின்போ எப்பொழுது அவர் பிரிந்து சென்று விடுவாரோ என்று அஞ்சி தூங்காமல் இருக்கும் என் கண்கள். அதுமட்டுமின்றி தலைவன் என்னுடன் இருக்கும் பொழுது கலவி செய்வதாலும் தூங்காமல் இருக்கும் என் கண்கள். இப்படி தலைவன் உடன் இருந்தாலும் அல்லது பிரிந்து சென்றிந்தாலும் என் கண்கள் காதல் நோயை பெற்று துன்பப்படுகிறதே என்று புலம்புகிறாள் தலைவி. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக்கண் ஆரஞர் உற்றன- ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய ('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்)

மணக்குடவர் உரை
அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா: அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள். இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் இன்றேயல்ல எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

சாலமன் பாப்பையா உரை
அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்

 

குறள் 1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணாது - போற்றாமல்  ; மதிக்காமல்

பெட்டார் - நண்பர்; விரும்பியவர்.

உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர்.

மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

மன்னோ - வாழ்வேனா ?

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அவர்க் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காணாது - காணாமல்

அமைவு - அமைதி; ஒப்பு

இல - இல், இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
என்னுடன் கூடியவர் என்னை வேண்டாது என்னை உண்மையாக விரும்பாது பிரிந்துசென்றுவிட்டார். அத்தகைய பெட்டார் (நான் விரும்பியவர்) உயிர் வாழ்ந்துக்கொண்டுத்தான் இருக்கிறார். ஆனால் கண்ணே நீ அவர் மேல் வெறுப்பும் கோபமும் கொள்ளாது அவர் பிரிவால் தூக்கம் இழந்து நொந்து அமைதியிழந்து இயல்பான பொலிவிழந்து வாடுகிறாயே என்று தன் கண்களை கேட்பதாக தலைவி கூறுகிறாள்

“பெட்டார்” என்ற சொல் நட்பு, காதலர் மற்றும் பகைவர் என்று வெவ்வேறுவிதமாகப் பொருள்படும். காதலித்து, பின் பெண்ணின் காதலுக்குப் பிரிவின்மூலம் தற்காலிகமாகப் பகையாக ஆனதால், வள்ளுவர் பெட்டார் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதாகத் தோன்றுகிறது.

பின்னால் வரப்போகும் புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தின் கண், இதே பொருளில், குறள் 1283காணா தமையல கண்என்று எழுதியுள்ளார் வள்ளுவர். திருவாய்மொழிப் பாடலொன்றும் இக்குறளின் கருத்தையொட்டியதே! அப்பாடல்

“கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்த னாகிலும்
கொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கும்” 
(திருவாய் மொழி, 5.3:5)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் பெற வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணாது பெட்டார் உளர்-நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல்மாத்திரத்தால விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க்கண் காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?(செயலாற் பிரிந்துநின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது, 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை. யான் ஆற்றவும் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் 'கொண்கனை'என்று பாடமாயின் 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ'? என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை)

மணக்குடவர் உரை
விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவு முளவோ?

மு.வரதராசனார் உரை
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

சாலமன் பாப்பையா உரை
உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!.

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து

குறள் 1177
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
உழ - uẕa   VII. v. t. practise, learn by practice, பழகு; 2. conquer, வெல்லு; v. i. suffer, undergo penance, வருந்து; 2. be accomplished in any art, பழகு; 3. labour hard, exert, உழை

உழத்தல் - செய்தல்; பயிலுதல்; பழகுதல்; முயலுதல்; வெல்லுதல்; வருந்துதல்; பட்டனுபவித்தல்; துவைத்தல்.

உழந்து - ஆசையோடு பழகி ; உறவுகொண்டு; புணர்ச்சி மகிழ்ந்து

உழந்து - ஆசையோடு பழகி ; உறவுகொண்டு; புணர்ச்சி மகிழ்ந்து 

உள்நீர் - கண்களில் கண்ணீர் 

அறுக - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

விழைந்துவிழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc.

விழைதல் - மிகவிரும்புதல்; மதித்தல்; நெருங்கிப்பழகுதல்.

இழைதல் - நூற்கப்படுதல்; உராய்தல் சோறுமுதலியனகுழைதல்; கூடுதல் நெருங்கிப்பழகுதல்; உள்நெகிழ்தல்; மூச்சுச்சிறுகுதல்; குறுமூச்சுவிடுதல்; மனம்பொருந்துதல்

இழைந்து - இழைந்தவர் - கூடினவர்.

வேண்டி - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

அவர்க் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

கண்ட - கண்டது - காணப்பட்டபொருள்; சம்பந்தமற்றசெய்தி.
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
தன் தலைவன் பிரிந்து சென்ற பின் பிரிவால் வாடும் தலைவி தன் பிரிவுக்கு காரணமாக கண்களை காட்டுகிறாள். அவற்றை எப்படி ஏசுகிறாள் தெரியுமா? கேளுங்கள். 

ஏ கண்ணே! அன்று என் தலைவனை மிக விரும்பி பார்த்தீர்கள் அல்லவா? பார்த்த உடன் நெகிழ்ந்து காதல் வயப்பட்டீர்கள் அல்லவா? அது மட்டுமல்லாது, எனக்கும் இந்த காதல் நோய் உண்டாக காரணமாக இருந்தீர்கள் அல்லவா? இப்பொழுது தலைவன் பிரிந்து சென்றுவிட்டான். இன்பத்தை பங்குபோட்டு எனக்கு தந்தீர்கள். இதோ அதனால் வந்த துன்பத்தையும் பங்கிட்டு கொள்ளுங்கள். இந்தாருங்கள் உங்களுக்கான துன்பம். பிரிந்து சென்ற தலைவனை காணாமல் உழன்று உழன்று (வருந்தி வருந்தி) கண்ணீர் சிந்தி உங்கள் கண்கள் வற்றிப்போகட்டும். அதவாது பிரிவின் துன்பத்தால் அவள் உயிர் வற்றிப்போயுள்ளதாம். அதுப்போல அவள் கண்களும் கண்ணீர் இன்றி வற்றிப்போகட்டும் என்று கண்களை சபிக்கிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக-இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக. (அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது)

மணக்குடவர் உரை
அழுதலை யுழந்துழந்து உள்ளநீர் அறுவனவாக; தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள். இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

சாலமன் பாப்பையா உரை
விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!.

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

குறள் 1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
படல் - ஓர்அடைப்புவகை; மறைப்புத்தட்டி; பூந்தடுக்கு; பாய்மரத்தில்இணைக்கப்பட்டகுறுக்குக்கட்டையிலுள்ளகுழி; உறக்கம்.

ஆற்றுதல் -   வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றா - ஆற்றாமல் - பொழியாமல்

பைதல் - இளையது; சிறுவன்; குளிர்; துன்பம்.

உழக்கும் - உழ-த்தல் - uḻa-   4 v. intr. 1. To suffer;to experience sorrow, pain, trouble or fatigue;வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன்(மணி. 16, 74). 2. To be accomplished, asin an art; பழகுதல் (சீவக. 597.) 3. To try,make an effort; பிரயாசப்படுதல் செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு 130).--tr. Toconquer; வெல்லுதல் பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52).

கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி.

ஆற்றுதல் -   வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றா - ஆற்றாமல் - பொழியாமல்

காம - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
முன்பு ஒரு குறளில் தலைவியின் காதல் கடலளவு ஆழமும் அகலும் கொண்டது என்று பார்த்தோம் [குறள் 1164 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல்]. ஆனால் அப்படிப்பட்ட காதலை தந்தது தலைவியின் கண்கள். ஏனெனில் அவையே தலைவனை காணச்செய்தது. ஆனால் இப்பொழுது தலைவன் தலைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டான். ஆதலால், தலைவி, காதல் தரும் நோயால் அவதிப்படுகிறாள். இக்காமநோய் கடலைவிட பெரிதாக உள்ளது. கடலளவு காதலை தந்த இக்கண்களே இக்கடலை விட பெரிதான காமநோய்க்கு காரணமாக அமைகின்றன. இந்த காமநோயால் இக்கண்களும் உறங்காமல் துன்பப்படுகின்றன.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கந்தர வந்த காம ஒள்ளெரி” (குறுந் 305:11)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) கடல் ஆற்றா காமநோய் செய்த என்கண்- எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் -அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன. (காமநோய் காட்சியான் வந்ததாகவின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது)

மணக்குடவர் உரை
கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள் தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன. இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

சாலமன் பாப்பையா உரை
கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

பெயலாற்றா நீருலந்த உண்கண்

குறள் 1174
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
பெயல் - பொழிகை; மழை; மழைத்துளி; மேகம்.

ஆற்றுதல் -   வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றா - ஆற்றாமல் - பொழியாமல்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

உலந்த - உலர்தல் - காய்தல்; வாடுதல் அழிதல்

உண்கண் - மைதீட்டியகண்

உயல் - தப்புகை; உளதாதல் உயிர்வாழ்தல்

ஆற்றா - ஆற்றாமல்

உய்வு - உய்தி; (Escaping fromdanger) உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும்நீங்கும்வாயில்; உய்தல்

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

என்கண் -என்னுடைய கண்ணில்

நிறுத்து - niṟuttu   III. v. t. raise, erect, நிற்கச்செய்; 2. detain, stop, discontinue, cause to stand still, தடு; 3. defer, put off, தாமதப்படுத்து; 4. put an end to, cause to cease, முடியச்செய்; 5. reestablish, restore one to better circumstances, re-form, சீர்திருத்து; 6. reinstate, place one in office; 7. establish, maintain, support, ஸ்தாபி; 8. make proper pauses, accent, emphasis, cadence etc. in reading or singing. ; இசைப்பாட்டின்சிறுபகுதி

முழுப்பொருள்
தலைவனைப் பிரிந்துள்ளதால் தலைவனை காணமுடியாமல் தலைவி வாடிக்கொண்டிருக்கிறாள். அவளால் உயிர்வாழவும் முடியவில்லை இந்த துன்பத்தில் இருந்துத் தப்பவும் முடியவில்லை. ஏனெனில் இந்த காதல்நோய் தலைவனை அவள் கண்களிலேயே நிறுத்தியுள்ளது.

ஆனால் இக்கண்களின் நிலைமையை பாரும். அழுது அழுது துன்பத்தை ஆற்றிக்கொண்டிருந்தேன். இப்பொழுது அவ்வழுகையும் வற்றிப்போய்விட்டது. என்னால் இப்பொழுது அழக்கூட முடியவில்லை. ஆதலால் மைதீட்டிய என் கண்கள் உலர்ந்துபோய் பொலிவும் இழந்துவிட்டன.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது). உண்கண் -உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் செய்வன. என் கண் நிறுத்து-அன்று யான் உய்ய மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்லாத நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன. (நிறுத்தல்: பிரிதலும் பின் கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன' என்பதாம்.)

மணக்குடவர் உரை
உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தித் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன. கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு.

மு.வரதராசனார் உரை
என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

சாலமன் பாப்பையா உரை
மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.

தெரிந்துணரா நோக்கிய உண்கண்

குறள் 1172
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
தெரிந்து - அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்

உணரா - உணரார் - அறியார்; மூடர்

நோக்கிய - நோக்கியநோக்கம் - கண்களால்நோக்குகை.

உண்கண் - மைதீட்டியகண்.

பரிந்து - பரிந்துபேசு-தல் - parintu-pēcu-   v. intr. பரி¹- +. 1. To plead, intercede, vindicate,advocate one's interests; ஒருவற்காக ஏற்றுப்பேசுதல். 2. To speak with feeling, solicit withearnestness; அன்போடு கூறுதல் பரிந்துபேசியொன்று கொடுத்தாய் (அருட்பா, v, அருட்பிர. 98). 

உணராஉணரார் - அறியார்; மூடர்

பைதல் - இளையது; சிறுவன்; குளிர்; துன்பம்.

உழத்தல் -  செய்தல்; பயிலுதல்; பழகுதல்; முயலுதல்; வெல்லுதல்; வருந்துதல்; பட்டனுபவித்தல்; துவைத்தல்.

உழப்பது - வருந்துதல்

எவன்? - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்

முழுப்பொருள்
இந்த மைதீட்டிய அழகிய கண்கள் தானே அன்று தலைவனை பற்றி ஆராயாமல் என்னிடம் காண்பித்தது.  இதனால் இன்ன விளைவுகள் வரும் என்று உய்த்துணராது, அவன் அழகைக் கண்டு பருகி, காதலில் ஆழ்ந்தது இக்கண்கள். ஆனால் தலைவன் இன்று பிரிந்து இருக்கும் உண்மையை உணராமால் எனக்கு பரிந்து பேசாமல் கூச்சமே இல்லாமல் இந்த கண்களும் என் துன்பத்தில் வருந்தி அழுகிறதே ? என்னுடைய இந்த நிலைமையே இந்த கண்களால் தானே. கண்கள் தான் இதற்கு காரணம் என்று உணராமல் ஏன் இந்த கண்கள் அழுகிறது ?


ஒப்புமை
2) ”பைதல வாகிப் பசக்குவ மன்னோஎன்
நெய்தல் மலரன்ன கண்” (கலி.142:22-3)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி? (விளைவது: பிரிந்து போயவர் வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல், முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம்.)

மணக்குடவர் உரை
முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள் இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது எற்றுக்கு? இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.

சாலமன் பாப்பையா உரை
வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?.

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

குறள் 1171
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

விதுப்பு - நடுக்கம்; விரைவு; பரபரப்பு; வேட்கை.

அழிதல் - நாசமாதல்; சிதைவுறுதல்; தவறுதல் நிலைகெடுதல் தோற்றல் மனம்உருகுதல்; வருந்துதல் மனம்உடைதல்; பெருகுதல் பரிவுகூர்தல்; செலவாதல்

கண்விதுப்பழிதல் - தலைவனைக் காணவேண்டுமென்னும் துடிப்பால் தலைவியின் கண்கள் வருந்துதல்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்தாம் - தன்னுடைய கண்கள்

கலுழ் - அழுகை; நீர்க்கலக்கம்

கலுழ்வது  - துக்கத்தில் அழுவது

எவன்கொலோ - எதனைக் கருதி?

தண்டுதல் - வசூலித்தல்; வருத்துதல்; இணைத்தல்; நீங்குதல்; விலகுதல்; தணிதல்; கெடுதல்; தடைபடுதல்; தொடுதல்; மனம்அமைதல்; விருப்பங்கொள்ளுதல்; சினமூண்டெழுதல்; விலகுதல்.

தண்டா - தொந்தரவு; சண்டை; சிக்கல்; கதவைஅடைத்துஇடும்இரும்புத்தடி; உடற்பயிற்சிவகை.

தண்டா -தணியாத

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

காட்ட - காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்.

யாம் - yām   pers. pron. (எம், எம்மை) etc. we, நாம்.

கண்டது - kaṇṭatu   n. காண்-. 1. Thatwhich has been seen; காணப்பட்ட பொருள் கண்டதெல்லாம் பகை (திவ். இயற். திருவிருத். 35, அரும்.). 2.Irrelevant matter; சம்பந்தமற்ற செய்தி கண்டதெல்லாம் பேசுகிறான்.
கண்டதுங்கடியதும் kaṇṭatuṅ-kaṭiya-tum, n. id. +. Everything, including thegood and the bad; நல்லதும் தீயதும். (தீய. இயற்.திருவிருத். 2, அரும்.)

முழுப்பொருள்
என்காதலரின்றி தணியாத இக்காமநோயை (காதல் நோய், ஆசை நோய்) துன்பத்தை எனக்கு தந்தவர் என் ஆசைக்காதலர். என் ஆசைக்காதலரை எனக்கு காண்பித்தது என் கண்கள் தான். என் கண்கள் காண்பித்ததனால் தான் நான் அவரை பார்த்தேன் (இல்லையேல் பார்த்திருக்க மாட்டேன்). அவரோ இப்போது என்னிடம் இல்லை. நானோ அவரின்றி அவரைக்காணாமல் வாடுகிறேன், வருந்திக்கொண்டு இருக்கிறேன். ஆனால் என் கண்கள் ஏன் வருந்துகின்றன? அதனில் ஏன் நீர்க்கலங்கி வழிகிறது. அவரை எனக்கு காண்பிப்பதே அதனுடைய வேலை. அவரைத் தேடி எனக்கு காண்பிக்கும் வேலை செய்யாமல் ஏன் துன்பத்தில் இருக்கிறது?  என்று தலைவி தன் கண்களை பழிக்கிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? ('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது'? என்பதாம்.

மணக்குடவர் உரை 
அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி? இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.

சாலமன் பாப்பையா உரை
தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?.

ஓஒ இனிதே எமக்கிந்நோய்

குறள் 1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் 
தாஅம் இதற்பட் டது
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
- பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; தெரிதல்குறிப்பு; நினைவுக்குறிப்பு; கொன்றை; பிரமன்; ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை; பிரிநிலை, ஐயம், அசைநிலைஇவற்றைக்காட்டும்ஓர்இடைச்சொல்.

- பத்தாம்உயிரெழுத்து; ஒவ்வுஎன்பதன்பகுதி; ஐம்பறவைகளுள்மயிலைக்குறிக்கும்எழுத்து

ஓஒ! -  அதிசயக்குறிப்பு, வியப்புக்குறிப்பு
இனிதே!- மகிழ்ச்சியானதே, இனிமையானதே, விருப்பத்திற்கானதே, நன்றானதே
எமக்கு
இந் நோய் - இந்த நோய்
செய்த - செய்து கொடுத்த
கண் - இந்த கண்களும்
தாம் இதற்பட்டது -  உறங்காமல் அழுதுக் கொண்ட இருக்கும் 

முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள் தலைவனின் பிரிவால் நான் வாடுகிறேன். துன்ப படுகிறேன். இல்லை இல்லை. அவரை காண முடியாமல் நான் துன்ப படுகிறேன். என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை

அடடே!! இந்த கண்களும் உறங்கவில்லை. நன்றாய் வேண்டும் இதற்கு. நான் காதல் வயப்பட முதற்காரணம் என் கண்களே. எனக்கு என் தலைவனை காட்டியவை கண்களே. தலைவனின் முகத்தை என் மனதில் ஆழ பதித்தவை என் கண்கள். ஆழ பதித்ததனால் கண்கள் மூடினாலும் அவரே கண் முன் வருகிறார். உறக்கம் இல்லை. இப்படி எனக்கு துன்பமே கடைசியில்.... ஆனால் இதிலும் ஒரு ஆறுதலும் மகிழ்ச்சியும்.  என்னை இந்நிலைக்கு ஆழ்த்திய இந்த கண்களும் உறக்கம் கொள்ளாமல் என்னை போன்றே தவிக்கிறதே. மகிழ்ச்சி மகிழ்ச்சி!!

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) எமக்கு இந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது- எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒ இனிதே - மிகவும் இனிதாயிற்று. ('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்)

மணக்குடவர் உரை
எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் இந்நோயகத்துப்பட்டது மிகவும் இனிது.

இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)

எமக்கு இந்நோய் செய்தகண் தாம் இதற்பட்டது-எமக்கு இக்காமநோயை வருவித்த கண்கள் தாமும் இத்துன்பத்துள் அகப்பட்டுக் கொண்டது; ஒ ஒ இனிதே-மிகவும் இனிதாவதே.

துன்பமென்றது தூங்கா தழுதலை.எம்மைத் துன்புறுத்தினார் துன்புறுவது. எம் துன்பந் தீர்ந்தாற் போல்வதென்பதாம். 'ஓ' மிகுதிப்பொருட் குறிப்புச்சொல். 'ஓ ஒ' 'தா அம்' இசைநிறையளபெடைகள். ஏகாரம்தேற்றம்

மு.வ உரை
எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

சாலமன் பாப்பையா உரை
எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காதலனைப் பிரிந்து வெந்தாள் மங்கை நல்லாள்
கண்ணுறக்கம் கொள்ளவில்லை கண்ணீர் வேறு
சாதலுக்கு வழி உண்டா என்றால் அவன்
சரியாக மனத்துக்குள் அமர்ந்துளானே
பேதலித்துப் போன பெண்ணாள் பேசுகின்றாள்
பிரிவில் அழும் கண்களினைப் பார்த்து பார்த்து
நீர் தந்த நோய் தானே அவரைப் பார்த்து
நீர் வழிய அழுங்கள் எனக்கு இனிமை ஈது

காரணமான கண்களே ......!!! (நன்றி கவிப்புயல் இனியவன்)
பூக்கள்
வாடுவதுபோல் ...
என் கண்களும் வாடுகின்றன ...
என் காதல் நோய்க்கு
காரணமான கண்களே ......!!!

நான்
வாடுவதுபோல் ..
என் கண்களும் வாடுகின்றன ...
ஒருவகையில் எனக்கு
இன்பம் தான் - என்னை வாட
வைத்த கண்கள் வாடுவதால் ...!!!

கதுமெனத் தாநோக்கி தாமே கலுழும்

குறள் 1173
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
கதுமெனல் - katum-eṉal   - விரைதல், n. Expressiondenoting quickness; விரைவுக்குறிப்பு. கதுமெனக்கரைந்து (பொருந. 101).  

கதும் - விரைவுக்குறிப்பு (swiftly) -
- கற்பு உடை உமையாள் மைந்தன் கதும் என கழுத்தில் இட்டான் (திருவிளையாடற் புராணம்)
- கதும்  எனக் கனல்  பொத்தித் தள்ளு மின் (கம்பராமாயணம்) (விரைவாக நெருப்பை மூட்டி அதில் அவனைத்  தள்ளுங்கள்)

கதும் எனத் - விரைவாக

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

தா - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஆ)வலிமை; வருத்தம்; கேடு; குற்றம்; பகை; பாய்கை; குறை.

தா - தானே

நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கித் - பார்த்து

தாமே - தானே

கலுழ்தல் - கலங்குதல்; தடுமாறுதல்; அழுதல்; ஒழுகுதல்; உருகுதல்
கலுழும் - கலுழு கண்மழை (தேம்பாவணி) - கண்ணின் மழை வெள்ளம்

இது - இந்த (இந்த முரண்பாடு)

நக - நகைத்தல் - சிரித்தல்; நிந்தித்தல்.

நகத் தக்க துடைத்து - நகத்தக்கது (நகைக்க தக்கது) உடைத்து
நகை - சிரிப்பு
நகைக்க - சிரிக்க

தக்கது - takkatu   n. தகு-. 1. See தகுதி (திவா.) 2. That which is fit or proper; தகுதியானது. தக்கதே நினைந்தான் றாதை (கம்பரா. கைகேயி 102).  

உடைத்து - உடைதல் - இருக்கும்

தக்கது உடைத்து - இயல்பு உடையது

முழுப்பொருள்
காதலரை இக்கண்கள் சற்றும் சிந்திக்காமல் குடுகுடுவென திடுமென்று ஆசையாக பார்த்தது. இப்பொழுது அவரைப் பாராமல் காணவில்லையே என்று கண்ணில் மழை வெள்ளமாய் கண்ணிர் பொழிகிறது. கண்களின் இந்த முரண்பட்ட செய்கையை கண்டால் அவளுக்கு சிரிப்பாக இருக்கிறதாம். ஆக இவளுடைய அவசர புத்தியிற்கு கண்களின் மேல் பழியினை சுமத்துகிறாள்.

”தெப்பானே பிப்பானே” என்று சொல்லுவார்கள். 
விளைவறியாது அவசர அவசரமாக பார்த்ததனாள் தான் இப்பொழுது பார்க்க முடியாமல் அழுகிறாள். 

குறட் கருத்து (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

ஓடி ஓடிப் பார்ர்த்ததுவும் இந்தக் கண்கள்
உள்ளமதில் சேர்த்ததுவும் இந்தக் கண்கள்
ஆடிப் பாடி மகிழ்ந்ததுவும் இந்தக் கண்கள்
அயலார்க்குச் சொன்னதுவும் இந்தக் கண்கள்
வாடி வாடி இன்றழுமே இந்தக் கண்கள்
வதை பட்டு துன்பமுறும் இந்தக் கண்கள்
போடி இது சிரிப்பிற்கே இடம் என்கின்றாள்
பொன்னழகி தன் கண்ணைத் தானே இங்கு

உதாரணம்
கல்யாணத்திற்கு முன் மாப்பிள்ளை (வெகு நேரம்) பெண் பார்க்கும் பொழுது, பெண் *சிறிது நேரம்* (ஒரு கண நேரம்) மட்டும் தான் பார்ப்பாள். அதுவும் அவசரம் அவசரமாக அரைகுரையாக. இதன் பின்பு இனிமேல் கல்யாணத்தில் தான் பார்க்க முடியும். அதுவரை அவரை காணாமல் அழுகிறாள். இப்படிப் பட்ட முரண்பட்ட கண்களை பார்த்து சிரிக்கிறாள்.

ஆனால் உண்மையில் அவனை அவசர அவசரமாக பார்த்தது அவள். காணமுடியாமல் அழுகின்றவள் அவள். ஆனால் கண்கள் என்னமோ அவசர பட்டதாகவும், கண்கள் காணாமல் மழைப் போன்று அழுவதாகவும் என்று கண்கள் மேல் பழியினை போடுகிறாள்.

பெண்  *சிறிது நேரம்* தான் பார்ப்பாள் - இது காலத்திற்கு அவ்வளவுவாக பொருந்தாது. 


  


 

பரிமேலழகர் உரை
இதுவும் அது. தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து.

விளக்கம் ('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.)

மணக்குடவர் உரை
இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே கலுழாநின்ற; இது சிரிக்கத்தக்க துடைத்து. இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவிய தோழிக்கு அவள் கூறியது.

மு.வரதராசனார் உரை
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

சாலமன் பாப்பையா உரை
அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

நன்றி: ரிஷவன்
காதலரைக்கண்ட மாத்திரம்
பாய்ந்து சென்று
மகிழ்ந்த விழிகள்.. அவர்
காணாததை எண்ணி
கண்களை குளமாக்குவது
நகைப்பு தரும் நொடிகளாகும்