Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label கள்ளாமை. Show all posts
Showing posts with label கள்ளாமை. Show all posts

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்

குறள் 290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]

பொருள்
கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.

களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி.

கள்வார்க்குத் - களவு செய்வோர்க்கு 

தள்ளும் - தள்ளுதல் - விலகுதல்; குன்றுதல்; மறதியால்சோர்தல்; தடுமாறுதல்; கழித்தல்; புறம்பாக்குதல்; ஏற்றுக்கொள்ளமறுத்தல்; அமுக்குதல்; வெட்டுதல்; கொல்லுதல்; மறத்தல்; தூண்டுதல்; தவறுதல்; வலியுடைத்தாதல்; வெளியேறுதல்; முன்செல்லுமாறுதாக்குதல்.

உயிர்நிலைஉடல், உயிர்தங்கும்இடம்; உயிரின்உண்மைவடிவம்; பிராணாயாமம், உட்கருத்து

கள்ளார்க்குத் - களவு செய்யாதவர்க்கு 

தள்ளாது -விலகாது / விலக்காது 

புத்தேள் - புதுமை; புதியவள்; தெய்வம்; தேவர்

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
களவு செய்வோர்க்கு (களவு செய்ய வேண்டும் என்ற வஞ்சக எண்ணம் கொண்டோர்க்கும்) அவர்கள் உயிரை கொண்ட உடல்க்கூட ஒத்துழைக்காது. அவர்களின் உடல்க் கூட தன் கடமையில் (கடமை: உயிர்வாழ்தல்) இருந்து தவறிவிடும். களவு செய்வோர்க்கு அவர்களின் உடலே ஏற்றுக்கொள்ளவில்லை பிறகு எப்படி இவ்வுலகத்தில் உள்ள மற்றவர்களும் உயர் உலகான தேவர்கள் வாழும் புத்தேள் உலகும் ஏற்றுக்கொள்ளும்? ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அதுவே களவு எண்ணம் இல்லாதவர் களவு செய்யமாட்டார். அவர்களை தேவர்கள் வாழும் புத்தேள் உலகமும் தவறாது ஏற்றுக்கொள்ளும். தேவர்கள் உலகமே ஏற்றுக்கொள்வதால் இப்பூவுகத்தில் உள்ள எல்லோரும் ஏற்றுக்கொள்வர் என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். 

நல் எண்ணங்களுக்கும் நற்செயல்களுக்கும் எவ்விடத்திலும் ஏற்பும் மதிப்பும் உண்டு. தீய எண்ணங்களுக்கும் தீய செயல்களுக்கும் தன் உடம்பு உட்பட எவ்விடத்திலும் ஏற்பும் மதிப்பும் இருக்காது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் - களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும், கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது - அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது ஆகிய புத்தேள் உலகும் தவறாது. (உயிர் நிற்றற்கு இடனாகலின், உயிர்நிலை எனப்பட்டது. சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின், 'உயிர் நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். 'மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' (குறள்.566) என்புழியும் 'தள்ளுதல்' இப்பொருட்டாதல் அறிக. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும். கள்ளாதார்க்குத் தேவருலகம் பெறுதல் தப்பாது. இது கள்வார் முத்தி பெறுதலுமிலர், கள்ளாதார் சுவர்க்கம் பெறாமையுமிலரென்றது.

மு.வரதராசனார் உரை
களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.

சாலமன் பாப்பையா உரை
திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

குறள் 289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]

பொருள்
அளவு  - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அல்ல -  இல்லை, அன்று  

செய்து - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

ஆங்கே - ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.

வீவர் - வீவு - அழிவு; சாவு; கெடுதி; முடிவு; குற்றம்; இடையீடு.

களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி

அல்ல -  இல்லை, அன்று 

மற்றைய - குறித்த பொருளுக்கு இனமான வேறு ஒன்று

தேற்று - தெளிவு; தெளிவிக்கை; தேற்றாமரம்.

தேற்றாதவர் - தெளிவு இல்லாதவர் 

முழுப்பொருள்
அளவு என்பது ஞானம். ஆதலால் அளவு என்பது நல்ல எண்ணங்கள். நல்ல எண்ணங்களுக்கு எதிரான தீய எண்ணங்களை கொண்டவர் தீயச் செயல்களை செய்வார். அப்படிச் செய்கின்றவர் அங்கேயே அழிவார். அவர்கள் களவு / வஞ்சம் என்னும் தீய எண்ணங்களை தவிர வேறு ஏதும் அறியாத தெளிவு இல்லாதவர்கள். வஞ்சம் அல்லாத நல்லவற்றை நல்லவழிகளை அறியாதவர்கள். 

மனதில் தீய எண்ணங்களை விதைத்தால் அது சொற்களில் வெளிவரும் பின்பு செயல்களில் வெளிப்படும். ஆதலால் தீய எண்ணங்களை கொள்ளும் உடனேயே அவர் அழிந்தார் என்றும் புரிந்துக்கொள்ளலாம். 

எண்ணங்கள் மீது கண்காணிப்பும் கவனமும் கட்டுப்பாடும் அவசியம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அளவு அல்ல செய்தாங்கே வீவர் - அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர், அளவு அல்ல மற்றைய தேற்றாதவர் - களவு அல்லாத பிறவற்றை அறியாதவர். (தீய நினைவுகளாவன : பொருளுடையாரை வஞ்சிக்குமாறும், அவ்வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்ட அதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலும் செய்தலாகலின், 'செய்து' என்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கி, கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்கும் ஆகலின் ஆங்கே வீவர்' என்றும் கூறினார். மற்றையாவன: துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய், கனி ,கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையே நுகர்ந்து அவ்வளவால் நிறைந்திருத்தலை அறியாமை. இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நேர் ஆகாதன செய்து அவ்விடத்தே கெடுவார்; களவல்லாத மற்றைய அறங்களைத் தெளியாதவர். இது கள்வாரை அரசர் கொல்வரென்றது.

மு.வரதராசனார் உரை
களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்

குறள் 287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]

பொருள்
களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

கார் - கருமை; கரியது; மேகம்; மழை; நீர்; கார்ப்பருவம்; கார்நெல்; கருங்குரங்கு; வெள்ளாடு; ஆண்மயிர்; கருங்குட்டம்; இருள்; அறிவுமயக்கம்; ஆறாச்சினம்; பசுமை; அழகு; செவ்வி; எலி; கொழு.

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.

ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை 

அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

புரிந்தார் - புரிதல் - விரும்புதல்; தியானித்தல்; செய்தல்; படைத்தல்; ஈனுதல்; கொடுத்தல்; நுகர்தல்; உற்றுப்பார்த்தல்; விசாரணைசெய்தல்; சொல்லுதல்; நடத்துதல்; மேற்கொள்ளுதல்; முறுக்குக்கொள்ளுதல்; திரும்புதல்; மிகுதல்; அசைதல்; விளங்குதல்; பொருள்விளங்குதல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.


முழுப்பொருள்
அறிவில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஒளி அறிவு. இரண்டு இருண்ட அறிவு. இருண்ட அறிவு உண்மை அறிவை மறைக்கும் தன்மை வாய்ந்தது. அதனால் தான் கற்க கசடற என்று கூறினார் திருவள்ளுவர்.

அளவு எனில் ஞானம். ஆற்றல் எனில் சக்தி, முயற்சி, வாய்மை, அறிவு, ஆண்மை. 

அளவு அறிந்து (அதாவது எது ஞானம், எது இயற்கையான தன்மை என்று அறிந்து) அதற்கு ஏற்ப தன் அறிவை ஆற்றலைப் பயன்படுத்தி வாழ்வை நேர்மையாக வாழ்வை நடத்துபவர் (வாழ்கின்றவர்) களவு என்னும் இருண்ட அறிவை தன்னிடம் வைத்துக்கொள்ள மாட்டார். இருண்ட அறிவே இல்லாததால் அவர் பிறரின் பொருளை களவு செய்யமாட்டார். 

எண்ணங்களே செயலை தூண்டுகின்றன. தீய எண்ணங்கள் இல்லையேல் தீய செயல்கள் இல்லை. 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“களவின் ஆகிய காரறிவு” (சூளா)

பரிமேலழகர் உரை
களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. (இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவென்னும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்றல்' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை. இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.

மு.வரதராசனார் உரை
களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

குறள் 286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]

பொருள்
அளவின் - அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

தருக்கம் - நியாயவாதம்; மேம்பாடு; வாக்குவாதம்; நியாயவாதநூல்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நின்று - எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஒர் இடைச்சொல்.

நில்-தல் - [நிற்றல்]   3 v. intr. [K.nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt,tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast;to persevere, persist in a course of conduct;உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. Tostay, abide, continue; தங்குதல் குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; tobe discontinued, stopped or suspended; ஒழிதல் வேலை நின்றுவிட்டது. 6. To be subdued;அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியாழிசைநிற்ப (கலித். 143, 38). 7. To remain; tobe left, as matter in a boil, as disease in thesystem; to be due, as a debt; எஞ்சுதல் நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை 3). 8.To wait, delay; தாமதித்தல் தெய்வம் நின்றுகேட்கும்.  -

நிற்றல் - niṟṟl   v. noun. A standing, நிலை; [ex நில்.] (p.)

ஒழுகல்  - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றாது - செய்யாது இருத்தல் 

ஆற்றார் - செய்யாது இருப்பவர் 

களவின் - களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

கன்று - விலங்கின்கன்று; மரக்கன்று, இளமரம்; சிறுமை; கைவளையல்.

இய - இயைவு - iyaivu   n. இயை¹-. Union, joining together; சேர்க்கை


2கன்றிய -  கன்றுதல் - முதிர்தல்; அடிபடுதல்; சினக்குறிப்புக்கொள்ளுதல்; வெயிலாற்கருகுதல்; மனமுருகுதல்; வருந்துதல், நோதல்; வாடுதல்; பதனழிதல்.

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

காதலவர் - காதல் கொண்டவராக, மனம் விரும்புவராக

முழுப்பொருள்
"நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை அற்று" என்று கல்லாமையில் கூறியுள்ளார் திருவள்ளுவர். நுண்மையாக அறிந்து ஆராய்வதே அறிவு. தன்னைக்குள்ளேயும் பிறர்க்குள்ளேயும் தருக்கத்தின் மூலம் நுணுகி ஆராய வேண்டும். அப்படி அறிந்தால் தான் மேம்பாடு அடைய முடியும். நியாயத்தை கண்டுஅடைய முடியும். இந்த நியாயமே தருக்க அளவு என்று இக்குறளில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

சமயத்தில் 10 அளவைகள் உண்டு (wiki  யில் படிக்கலாம்)
1) காண்டல் (காட்சி)
2) கருதல்
3) உவமம்
4) ஆகமம் (நூல்)
5) ஆண்டைய அருத்தாபத்தி (பொருட்பேறு)
6) இயல்பு
7) ஐதிகம் (உலகுரை)
8) அபாவம் (இன்மை)
9) மீட்சி
10) ஒழிவறிவு எய்தி உண்டாம் நெறி (உள்ள நெறி)

ஆதலால் அளவைகள் துணைக்கொண்டு நுணுகி ஆராய்ந்து பெற்ற தருக்க அளவினை அறிந்தே துறவின் கண் ஒருவர் செல்லலாம். ஆதலால் அந்த தரும்ம நியாயத்தின் கண் நின்று ஒருவர் நடத்தல் வேண்டும். ஆனால் அவ்வாறு ஆற்றாதவர் களவின் கண் அதாவது வஞ்சம், திருட்டு, கள்ளவொழுக்கம் ஆகியவற்றை விரும்பி அவற்றை பின்பற்றுபவராக இருப்பார் அல்லது அவரால் துறவை பின்பற்ற முடியாமல் துறவின் பயனை அடையமாட்டார். 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார், களவின்கண் கன்றிய காதலவர் - களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார். (உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உற்ற விளைவுகளையும் அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.).

மணக்குடவர் உரை
களவின்கண்ணே மிக்க ஆசையையுடையவர் நேரின்கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார். இது நேர் செய்ய மாட்டாரென்றது.

மு.வரதராசனார் உரை
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

குறள் 285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

கருதி - கருத்து - நோக்கம், தாற்பரியம், கொள்கை, எண்ணம், விருப்பம், சொற்பொருள், கவனம், இச்சை, விவேகம், சம்மதம், மனம், பயன், சங்கற்பம், தன்மதிப்பு.

அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்

ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

பொருள் - சொற்பொருள், தகுதி, நற்வினைப்பயன், கல்விப்பொருள், அகப்பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

கருதிப் - கருத்து - நோக்கம், தாற்பரியம், கொள்கை, எண்ணம், விருப்பம், சொற்பொருள், கவனம், இச்சை, விவேகம், சம்மதம், மனம், பயன், சங்கற்பம், தன்மதிப்பு.

பொச்சாவாமை  - மறவாமை - மறதி இல்லாமை - மறதியின்மை

பொச்சாப்பு - மறதி; பொல்லாங்கு; குற்றம்; உறுதியின்றிமனம்நெகிழ்ந்திருக்கை

பார்ப்பார் - பார்-த்தல்
pār-   11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலுமருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship;வணங்குதல். (சூடா.) 8. To estimate, value;மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்.Colloq. 9. To heed, pay attention to; கவனித்தல். 10. To look after, take care of, manage,superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.11. To peruse, look through, revise; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. Totreat, administer medicine; மருந்து முதலியனகொடுத்தல். யார் வைத்தியம் பார்த்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இல் - இல்லை

முழுப்பொருள்
பிறரின் பொருளை விரும்பி அவரிடம் வஞ்சனையாக பழகி அவர் சோர்வாக இருக்கும்பொழுது அதனை களவு செய்வோர்க்கு அந்த பொருள் சொந்தம் இல்லை. அதுமட்டும் இன்றி பொருள் வந்தால் கவலை வரும். பொருள் போனால் கவலையும் போகும். விட விட கவலை குறையும். ஆதலால் துறவில் ஒருவன் விடுதலையை நோக்கி செல்வான். 

அருள் மீது நேசம் கொண்டு வாழ நினைக்கின்றவர் தன் பொருள் மீது  மட்டும் அல்ல பிறர் பொருள் மீது பற்றுக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு அருள் (துறவரத்தால் பயன்) இல்லை. 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல், பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது. (தமக்கு உரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சிகூடாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
அருளைக் குறித்து உயிர்மீது அன்புடையரா யொழுகுதல் பொருளை குறித்துப் பிறரது மறவியைப் பார்ப்பார் மாட்டு இல்லை. இஃது அருளும் அன்பு மில்லையாமென்றது.

மு.வரதராசனார் உரை
அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.

English Meaning - As I taught a kid - Rajesh
A person in the journey of moksha, should have love inspired by compassion. Such love doesn't occur to those who await others' lapses to (deceptively) grab their wealth because it shows that they have materialistic desires and deceptive / swindling thoughts. Others' lapses here mean whenever they are down or weak physically, mentally, morally. 

Questions that I ask to the kid
For whom love inspired by compassion doesn't occur?
What happens when you wait for others lapses to grab their wealth? 

களவின்கண் கன்றிய காதல்

குறள் 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]

பொருள்
கள்ளாமை - களவுசெய்யாமை.

களவின் - களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி. 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கன்று - விலங்கின்கன்று; மரக்கன்று, இளமரம்; சிறுமை; கைவளையல்.

இயஇயைவு - iyaivu   n. இயை¹-. Union, joining together; சேர்க்கை

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்

விளைவு - நிகழ்ச்சி; விளைகை; முதுமை; விளைபொருள்; பழம்; பயன்; கைகூடுகை; ஆக்கம்; விளையுமிடம்; வயல்; மேகம்; நாடகச்சந்திஐந்தனுள்ஒன்று.

இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

கண் விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

வீ-தல் - vī-   4 v. intr. prob. vī. 1. Toperish; to cease; to disappear; அழிதல். வீயாச்சிறப்பின் (புறநா. 15). 2. To die; சாதல். சிலைத்தெழுந்தார் வீந்தவிய (பு. வெ. 3, 7). 3. To leave;நீங்குதல். வினைப்பகை வீயாது பின்சென் றடும்(குறள், 207). 4. To change; to deviate, as fromone's course; மாறுதல். வானின் வீயாது சுரக்கும்(மலைபடு. 76).

வீயா - அழியாத 

விழுமம் - சிறப்பு; சீர்மை; தூய்மை; இடும்பை; துன்பம்

தரும் தரும்  

முழுப்பொருள் 
கன்றிய காதல் என்றால் முதிராத காதல் /வேட்கை /விழைவு. ஆதலால் பிறர்பொருளை வஞ்சித்து திருடும்(களவு செய்யும்) முதிராத வேட்கையும் விழைவும் கொண்டு சேர்க்கப்படும் பொருளானதின் விளைவு அழியாத (சிறப்புப்போல் தோன்றும்) துன்பத்தையே தரும்.   பிறர் பொருளை வஞ்சிக்க நினைக்கும் எண்ணமானது மிக மிக அற்பமான கீழமையான சிறுமையான வேட்கை/விழைவு என்றென்கிறார் திருவள்ளுவர். 

ஒப்புமை
கீ.வா.ஜகன்னாதன் ஆராய்ச்சித் தொகுப்பில், வினைப்பயன் விளைவைப்பற்றி மணிமேகலையிலிருந்து இவ்வாறு கூறுகிறார். “வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு மனப்பேரின்பமும் கவலையும் காட்டும்” (மணி:30:62-3). முற்றுக் கருத்தையும் எதிரொலிக்கும் பாடல் வரிகளையும் சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற காவியங்களிலிருந்து எடுத்துக்காட்டியிருப்பார். கள்ளாமை என்பது சமணக்கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றானதால், சமணகாவியங்களே இவற்றைப் பற்றி வெகுவாகப் பேசியுள்ளன.

”முளரிமுக நாகமுளை யெயிறுழுது கீற
அளவில்துயர் செய்வரிவண் மன்னரத னாலும்
விளைவரிய மாதுயரம் வீழ்கதியுள் உய்க்கும்
களவுகட னாகக் கடிந்திடுதல் சூதே” (சீவக.2870)

“களவின் ஆகிய காரறி வுள்ளன்மின்
விளைவில் வெவ்வினை வீவில் கதிகளுள்
உளைய வுள்ளழித் தொன்றல வேதனை
வளைய வாங்கி வருத்தம் உறுக்குமே” (குளா)

”பீடில் செய்திக ளாற்கள வில்பிறர்
வீடில் பல்பொருள் கொண்ட பயன்எனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்
தோட லின்றி உலையக் குறைக்குமே” (வளையாபதி)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும். இது நரகம் புகுத்தும் என்றது.

மு.வரதராசனார் உரை
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

குறள் 283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]

பொருள்
களவினால் - களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி.

ஆகிய - ஆக்கம் ; உருவாகிய

ஆக்கம் - ākkam   n. ஆக்கு-. [M. ākkam.]1. See ஆக்கக்கிளவி செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல் (தொல். சொல் 20). 2. Creation;சிருஷ்டி. ஆக்க மவ்வவர் கன்மமெலாங் கழித்திடல் (சி.சி. 1, 37). 3. Increase, development; விருத்தி தம்மாலா மாக்க மிலரென்று (நாலடி. 301). 4. Gain,profit; இலாபம் ஆக்கங் கருதி முதலிழக்குஞ்செய்வினை (குறள், 463). 5. Accumulation; ஈட்டம் அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் (குறள்,755). 6. Wealth, prosperity, fortune; செல்வம் மனநல மன்னுயிர்க் காக்கம் (குறள், 457). 7. Gold;  ākkam   n. ஆகு-. 1. Achievement, accomplishing; கைகூடுகை. (பு. வெ. 1, 4,உரை.) 2. Auspiciousness; மங்களகரம். Loc.

அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

இறந்து - இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

ஆவது - ஆகவேண்டியது; விகற்பப்பொருள்தரும்ஓரிடைச்சொல்; விவரம்பின்வருதலைக்குறிக்குஞ்சொல்; எண்ணொடுவருஞ்சொல்.

போல - pōl   போலு, I. v. t. resemble, be like, be similar, ஒ.

கெடும் - கெடுநினைவு; கேடு

முழுப்பொருள்
பிறரை வஞ்சித்தோ அல்லது பிறரிடம் இருந்து திருடியோ சேர்த்த (நற்பெயர், புகழ், உறவுகள், அந்தஸ்து, பொருள், பொன்) செல்வம் ஆனது அளவுக்கு மிகுந்து உயர்வதுப் போல உயர்ந்தாலும் பின்பு ஒன்றும் இல்லாத நிலைமைக்கு நம்மை தள்ளி நமக்கு கேட்டை கொடுக்கும்.

பழமொழிப் (173) பாடலொன்று “தீயன, ஆவதே போன்று கெடும்” என்று சொல்லுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள், ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். (ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம் மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும். இது பொருள் நிலையாதென்றது

மு.வரதராசனார் உரை
களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.


சாலமன் பாப்பையா உரை
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.

Thirukkural - Management - Ethical Behavior
There are innumerable cases of people who had become rich by improper means and lost their riches overnight. The wealth that someone gets by cheating or deceiving others or by resorting to unethical means disappears quickly at one point, though that wealth appears to be increasing largely, predicts Kural 283.

Stolen wealth may seem to swell 
But in the end will burst.

A thing that does not belong to you will never belong to you. The wise proverb 'Things easily got 
are easily lost’ is in line with Valluvar's thought. This sort of wealth will inflate like a balloon and appear big, but will burst suddenly  and unexpectedly leading to nothing. Undeserved wealth is a big bubble.

எள்ளாமை வேண்டுவான் என்பான்

குறள் 281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் 
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.
எள்ளாமை - இகழ்ச்சி வேண்டாம்
வேண்டுவான் - வேண்டுபவன்
என்பான் - என்கிறவன்
எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு, எந்த நிலையானாலும்
ஒன்றும் - சிறிதும்
கள்ளாமை - களவுசெய்யாமை
களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி.
காக்க - காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான். 
தன் - தன்னுடைய 
நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
பிறர் உடைமையாயிருப்பது யாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை. கருதலும் செய்தலோடு ஒத்தலின் , 'கள்ளாமை' ஆகும்.

பிறரால் இகழப்படக்கூடாது என்று விரும்புகிறவன் எந்த ஒரு நிலையிலும் (அதனால் தான் ”எனைத்து” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது) பிறரின் பொருளை களவாட வேண்டும் என்ற எண்ணத்தை சிறிதளவுக்கூட மனதில் எழவிடாமல் காக்க வேண்டும்.

இங்கே திருவள்ளுவர் காக்க என்ற சொல்லை ஏன் சொல்கிறார் என்றால் இது ஒரு நாளைக்கு மட்டுமான ஒழுக்கம் அல்ல, வாழ்விற்கான் ஒழுக்கம்.

அதுமட்டும் இன்றி, ஏன் மனதில் கூட ஏழக்கூடாது என்கிறார் என்றால்? மனதில் உள்ளது கொஞ்சம் கொஞ்சமாய் நம் புலன்களில் கலந்து பின்பு ஒருநாள் நம்மை தவறான பாதையில் வழிநடத்தி களவு செய்ய தூண்டிடும் என்பதனால்.

ஏன் எனைத்து என்கிறார் என்றால்? நாம் நல்ல வசதி வாய்ப்புகளில் இருக்கும் பொழுது களவு எண்ணம் வராமல் பார்த்துக்கொள்வது அவ்வளவு சிரமம் அல்ல. ஆனால் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், வறுமையில் களவு செய்யவேண்டும் என்கிற எண்ணம் எழ அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் தான் எனைத்து என்ற சொல்லை எல்லா நிலைகளிலும் என்பதனை குறிக்க பயன்படுத்தப்பட்டது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, பிறர் உடைமையாயிருப்பது யாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை. கருதலும் செய்தலோடு ஒத்தலின் , 'கள்ளாமை' என்றார். இல்வாழ்வார்க்கு ஆயின், தமரோடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்ஙனம் கொள்ளினும் அமையும். துறந்தார்க்கு ஆயின், அதனைக் கருதிய வழியும் பெரியதோர் இழுக்காம்ஆகலின், இது துறவறமாயிற்று. புறத்துப் போகாது மடங்கி ஒரு தலைப்பட்டு உயிரையே நோக்கற்பாலதாய அவர் மனம் , அஃது ஒழிந்து, புறத்தே போந்து பல தலைப்பட்டு உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்குதலேயன்றி , அது தன்னையும் வஞ்சித்துக்கொள்ளக் கருதுதல் அவர்க்குப் பெரியதோர் இழுக்காதல் அறிக. இவ்வாறு 'வாய்மை' முதல் 'கொல்லாமை' ஈறாய நான்கு அதிகாரத்திற்கும் ஒக்கும். பொருள் பற்றி நிகழும் குற்றத்தை விலக்குகின்ற தாகலின், இது காமம் பற்றி நிகழ்வதாய கூடா ஒழுக்கத்தின்பின் வைக்கப்பட்டது.)

எள்ளாமை வேண்டுவான் என்பான் - வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், எனைத்து ஒன்று கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க. ('எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும்,நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.).

மணக்குடவர் உரை
பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன் யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்க. இது களவு ஆகாதென்றது.

மு.வரதராசனார் உரை
பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.

Thirukkural - Management - Ethical Behavior
When Kural 657 warns us against unethical practices, Kural 281 reminds us that just the thought of stealing things that belongs to others in itself is an unethical act. If you want to protect yourself against criticism, insults, suspicion, and complaints from others, you have to protect yourself from even the thought of stealing. Keep your thoughts of stealing and thieving in control because even just the thought of stealing is equivalent to the act of stealing.

If you would avoid contempt,
Guard your thought against theft.

English Meaning - As I taught a kid - Rajesh
If one wishes not to be ridiculed, let him protect his heart from thoughts of swindling (deception / fraudulent) all the time. Thiruvallur tell us not to let the swindling thoughts raise in our heart because thoughts slowly transform into action (i.e., jealous, stealing, anger etc). He says to protect our heart all the time because it is not an one time event, it is a lifetime discipline that needs to be followed despite ups and downs in life, rich or poor.

Questions that I ask to the kid
What should a person who doesn't want to be ridiculed do?

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல

குறள் 288
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]

பொருள்
அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல்
அறிந்தார் - கற்றவர்கள்,
நெஞ்சத்து - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. 

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
அறம்போல நிற்கும் - மனதில் உள்ள ஞானம் வந்து தவரை செய்யாமல் இருக்க நம் முன் வந்து நிற்கும்

களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி.
கரவு - மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை.

முழுப்பொருள்
அளவு என்ற சொல்லுக்கு ஞானம் என்ற பொருளும் உண்டு என்பதே நாம் பார்த்தோம். ஆதலால் அறம் அறிந்து அதன்படி வாழ வேண்டும் என்ற மனிதனுக்கு தன் நெஞ்சமே துணையாக நிற்கும். தவறு செய்ய முற்படும் போது மனசாட்சி முன் வந்து நின்று நம்மை தவறு செய்யாது காக்கும்.

ஆனால் பிறர் பொருளைத் திருட வேண்டும் என்ற களவு எண்ணம் படைத்தவர் மனதில் வஞ்சகமே இருக்கும்.

ஆகவே மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும். பிறர் பொருள் மீது ஆசைப்படக் கூடாது

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் - அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும், களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை. (உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல - பொருள்களின் இயல்பை உள்ளவாறறிந்தவரின் உள்ளத்தில் அறம் நிலைத்து நிற்றல்போல; களவு அறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும்-களவையே பயின்றவரின் உள்ளத்தில் வஞ்சனை நிலைத்து நிற்கும்.

பழக்கம் நிலைத்து நிற்கும் இயல்பினதென்பதும், பொருள்களின் இயல்பை அளந்தறிதல் துறவறத்திற்கு இன்றியமையாத தென்பதும், இங்குக் கூறப்பட்டன.

மணக்குடவர் உரை
நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்: களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும். இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்த்தல் முடியாதென்றது.

மு.வரதராசனார் உரை
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்..

சாலமன் பாப்பையா உரை
உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.

பொருள்: அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல - தமது எல்லையுள் நின்றொழுகுவாரது உள்ளத்தின்கண் அறம் (நிற்றல்) போல, களவு அறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும் - களவு செய்வாரது நெஞ்சத்தின்கண் வஞ்சகம் (நிலைத்து) நிற்கும்.

கருத்து: தமது எல்லையுள் நின்றொழுகுவோர் அறத்தையே கருதுவர்; களவினைச் செய்வோர் கரவையே கருதுவர்.

உள்ளத்தால் உள்ளலும் தீதே

குறள் 282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உள்ளத்தால் - (வெளிக்காட்டிக்கொள்ளாமல், ரகசியமாக) மனதால் கூட

உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உள்ளலும் - நினைத்தலும்; 

உள்ளல் - உள்ளான்குருவி; உள்ளான்மீன்; உள்ளுதல்; நினைத்தல், எண்ணுதல்; மகிழ்தல்; கருதல்; எண்ணியிரங்கல்.

தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு.

தீதே - தீங்கே; தவறே, தீமை

பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

பிறன்பொருளைக் - மற்றவர் பொருள்கள் மீது உடைமைகள் மீது

கள்ளம் - வஞ்சகம்; பொய்; களவு; குற்றம்; அவிச்சை; புண்ணிலுள்ளஅசறு.

கள்ளத்தால் - சூழ்ச்சியால் / வஞ்சனையால்

கள்வேம் - அடையவேண்டும்

எனல் - என்ற எண்ணம் கூட

முழுப்பொருள்
பிறர் பொருள்கள், உடைமைகளை அடையவேண்டும்; வஞ்சித்து அடையவேண்டும்; களவு/சூழ்ச்சி செய்து அவருக்கு தெரியாமல் அடைய வேண்டும் என்று தன்னுடைய மனதினால் உள்ளூர ரகசியமாய் நினைத்தலும் கூட தீதே என்றுரைக்கிறார் திருவள்ளுவர். 

இது மனதை தூய்மையாய் வைக்கும் பொருட்டு துறவறவியலில் திருவள்ளுவர் கூறியுள்ளார். 

மேலும்: அஷோக்

ஆத்திச்சூடி
கொள்ளை விரும்பேல்
சூது விரும்பேல்
தீவினை அகற்று
துன்பத்திற்கு இடம் கொடேல்
நுண்மை நுகரேல்
மனம் தடுமாறேல்

பரிமேலழகர் உரை
உள்ளத்தால் உள்ளலும் தீதே - குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம்; பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் - ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்து கொள்வோம் என்று கருதற்க.

விளக்கம்
('உள்ளத்தால்' என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. 'உள்ளலும்' என்பது இழிவு சிறப்பு உம்மை. 'அல்' விகுதி வியங்கோள் எதிர்மறைக்கண் வந்தது. இவை இரண்டு பாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃது என்பதூஉம், அது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உள்ளத்தால் உள்ளலும் தீதே - தீவினைகளைத் தம் நெஞ்சாற் கருதுதலும் துறவறத்தார்க்குக் குற்றமாம் ; பிறன் பொருளைக் கள்ளத்தாற் கள்வேம் எனல் - ஆதலால் , பிறன் பொருள் எதையேனும் அவனறியாமற் கவர்வேம் என்று கருதற்க.

'உள்ளத்தால்' என்னும் வேண்டாச் சொல் துறவியரின் உள்ளம் தூய்மையாயிருக்க வேண்டும் என்பதை உணர்த்தி நின்றது. ' உள்ளலும்' இழிவு சிறப்பும்மை. 'அல்' இங்கு எதிர்மறை வியங்கோளீறு. இனி, கள்வேமெனல் உள்ளலுந்தீதே எனினுமாம்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: பிறன் பொருளை கள்ளத்தால் கொள்வேம் என - பிறனுடைய பொருளைத் திருட்டுத்தனத்தால் கொள்வேம் என, உள்ளத்தால் உள்ளலும் தீதே- மனத்தால் நினைத்தலும் தீதே.

அகலம்: ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. கள்ளம்-திருட்டுத்தனம். தருமர், மணக்குடவர் பாடம் ‘கள்ளத்தாற் கள்வேமெனல்’. நச்சர், பரிமேலழகர் பாடம் ‘கள்ளத்தாற் கொள்வேமெனல்’. தாமத்தர் பாடம் ‘கள்ளத்தாற் கொள்வோ மெனல்’. ‘என’ என்பதே போதிய தாகலான், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. உள்ளத்தால் என வேண்டாது கூறினார்.

கருத்து: களவு செய்ய நினைத்தலும் தீது.

மணக்குடவர் உரை
பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்; ஆதலால் அதனை மறைவினாலே கள்வேமென்று முயலாதொழிக. இது களவு தீதென்றது.

மு.வரதராசனார் உரை
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.

Thirukkural - Management - Ethical Behavior
Kural 282 is a sequel to Kural 281. Even if you desire to covet someone's possession,
that act of thinking itself is an unethical one.

The very thought of robbing another 
Is evil.

English Meaning - As I taught a kid - Rajesh
Even (discreetly) thinking about by cunningly or tactfully or strategically stealing others properties/materials (even if within the law  or rules) is evil and dangerous.  Because such dangerous thoughts are like seeds. It would germinate and destroy later at some point in time. It can lead us to dissatisfaction, anger, jealousy and lead us to steal. It will make us restless and we will get distracted. Hence, one should focus on keeping their heart, mind and all the thoughts pure and does not give any room for even tiny dirt. 

Questions that I ask to the kid
What are the things that are dangerous even at thought level?