Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label குறிப்பறிவுறுத்தல். Show all posts
Showing posts with label குறிப்பறிவுறுத்தல். Show all posts

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

 

குறள் 1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

பெண்ணினான் - பெண்ணினால் – பெண்ணவளால் (பெண்மையின் என்பதே பொருந்தும்)

பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை.

உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது

என்ப -  எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

கண்ணினான் - தம்முடைய கண்ணசைவாலேயே

காம - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

காமநோய் - s. Love-sickness, மதன நோய்.

சொல்லி - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்

இரவு - இராத்திரி; மஞ்சள் இருள்மரம் இரத்தல் இரக்கம் பன்றிவாகை

முழுப்பொருள்
ஒரு பெண்ணாலே தனக்கு பெண்மை இருக்கிறது என்பதை உணர்த்த முடியும். எப்படி? தலைவன் பிரிந்து சென்றுள்ள பொழுது தலைவியின் கண்களை பார்த்தாலே அவள் காமநோயாம் பசலைநோயை கொண்டு இருக்கிறாள் என்பதை மற்றவர்களால் அறிந்துணர முடியும். மேலும், என்னைவிட்டு பிரிந்து செல்லாதீர் என்று தலைவனுக்கு கண்களாலேயே குறிப்பறிவுறுத்த முடியும் எனில் அதுவே எப்பெண்ணிற்கு பெண்மை இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது.) காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர் தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற்சொல்லாது கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர். (தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தெளிந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.).

மணக்குடவர் உரை
வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர். இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது.

மு.வரதராசனார் உரை
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

 

குறள் 1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்.

நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

மென் - - மெல்லிய - மென்மையான

தோளும்தோள் - புயம்; கை; தொளை.

நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

அடி - பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை

நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
ஆண்டு - அகவை; அவ்விடம்
ஆண்டு - ஆள்(ளு)-தல் - āḷ-   2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reign over, govern;அரசுசெய்தல். (திவ். பெரியதி. 6, 2, 5.) 2. Toreceive or accept, as a protégé; ஆட்கொள்ளுதல் ஆள்கின்றா னாழியான் (திவ். திருவாய். 10, 4, 3).3. To control, manage, as a household; அடக்கியாளுதல். 4. To use a word in a particularsense and so give currency to it; வழங்குதல் சான்றோரா லாளப்பட்ட சொல் 5. To cherish,maintain; கைக்கொள்ளுதல் நாணாள்பவர் (குறள்,1017). 6. To keep or maintain in use; கையாளுதல் எடுத்தாளாத பொருள் உதவாது.  

அவள் - பெண்பால்சுட்டுப்பெயர்

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்தது - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

முழுப்பொருள்
தலைவி தலைவனின் பிரிவால் வாடுகிறாள். பசலை நோய் அவளை வாட்டுகிறது. அப்பொழுது, அவள் கைகளில் இருந்து நழுவும் கைவளையல்களை பார்த்தாள். அதாவது அவருடன் முயங்க காரணமானது இந்தக் கைகள் தானே. நீ தானே அவர் மீது அன்பும் இப்பசலைநோய்க்கும் காரணம். பின்பு மெலிந்த அவள் தோள்களை பார்த்தாள். அதாவது அவரை தழுவிய தோள்கள் தான் இப்பசலைநோய்க்கு காரணம் போன்று பார்த்தாள். பின்பு அவளுடைய கால்களை பார்த்தாள். அதாவது தலைவனை தேடிச்சென்று தழுவ இக்கால்களே நடந்தது. இதுவே இப்பசலைநோய்க்கு காரணம் போன்று பார்த்தாள். தலைவன் பிரிந்தாலும் இவ்வுறுப்புகள் எல்லாம் தலைவனை நோக்கிச் செல்லும் என்பதை குறிப்பறிவுருத்துவதுபோல் இருப்பதாக தலைவி சொல்கிறாள். அதனால் தானும் தலைவனை நோக்கிச் செல்லப்போவதை உறுப்புகளின் ஊடாக குறிப்பாக உணர்த்துகிறாள்.


இது தலைவனுக்கு சொல்லப்பட்டதாகக் கூட இருக்கலாம். தலைவனே!நீர்(நீங்கள்) என்னைப் பிரிந்து சென்றால், என் கைகளும், தோள்களும், கால்களும் உங்களுடன் வரும். அதன்மூலம் நானும் வருவேன். ஆதலால் அது நடவாமல் பார்த்துக்கொள்ளவும். அதவாது நீர் எம்மை பிரிந்து செல்லாமல் இரும் என்பதை குறிப்பாக உணர்த்துகிறாள். 

இதுவும் பொருத்தமான பொருள் தான். ஏனெனில் என் சொந்தவாழ்விலும் சரி, எனது நண்பர்கள் சிலர் கூறியுள்ள தங்கள் அனுபவங்களிலும் சரி, மனைவிமார்கள் தலைவனை நோக்கி குறிப்பாக வெளியூர்களுக்கு செல்ல ஆயுத்தமாகும் வேலையில், நீங்கள் இன்னும் ஆறு மாதத்தில் வந்து என்னை அழைத்துசெல்லவில்லை என்றால், நான் அங்கு வந்துவிடுவேன். திருவள்ளுவர் காலத்தில் பூடகமாக சொல்லப்பட்டது, இன்றைய காலக்கட்டங்களில் பகிரங்கமாக சொல்லப்படுகிறது. ஆனால், அன்பு ஒன்றுத்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது. (செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275)என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.).

மணக்குடவர் உரை
தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு.

மு.வரதராசனார் உரை
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

சாலமன் பாப்பையா உரை
நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்

குறள் 1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
நெருநற்றுச் - நேற்று.

சென்றார் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

காதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.;

யாமும் - யாம் - தன்மைப்பன்மைப்பெயர்

எழு - eẕu   s. pillar, post, கம்பம்; 2. a kind of weapon; 3. see ஏழு.
ஏழு - ஓர்எண், seven  
எழு - eẕu   II. v. i. get up, rise, எழும்பு; 2. appear, originate, தோன்று; 3. awake, துயிலெழு; 4. spread as fame or rumour பரவு; v. t. commence, தொடங்கு.

நாளேம் - நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின் ஈற்றடியிறுதியில் வரும் ஒரசைச் சீர் வாய்பாடு

மேனி - நிறம்; வடிவம்; உடல்; அழகு; நன்னிலைமை; நிலத்தின்சராசரிவிளைச்சல்; காண்க:குப்பைமேனி

பசந்து - - pacantu   n. U. pasand. 1.Elegance; beauty; attractiveness; fineness;நேர்த்தி. பசந்தெனவே சென்று (கவிகுஞ். 2). 2.A superior kind of Mango fruit; உயர்ந்த மாம்பழம் உன்னிடத்தில் என்ன பசந்திருக்கிறது.

பசத்தல் - பசுமையாதல்; காமத்தால்மேனிபசலைநிறமாதல்; ஒளிமங்குதல்; மங்கிப்போதல்; பொன்னிறங்கொள்ளுதல்.

முழுப்பொருள்
நெற்றுத் தான் என் தலைவர் என்னை பிரிந்துச் சென்றார். ஆனால் என் மேனி மீது இந்த பசலைநோய் ஏழு நாட்களாய் இருப்பதுப்போன்று தோற்றம் அளிக்கிறது என்று தலைவி கூறுகிறாள். அதாவது ஒருநாள் பிரிவு ஏழு நாட்கள் போன்று பெரிதாக தோன்றுகிறதாம். அது தலைவன் பிரிந்து சென்றதால் அவள் வருத்தத்தில் இருப்பதை ஊராருக்கு அறிவுணர்த்தும் குறிப்பு. அல்லது, தலைவர் பிரியப்போகிறார் என்பதை முன்னமே கூடி இருக்கும்பொழுது அவள் உள்ளம் உய்த்தறிந்து பசலையை நோயை இவள் மேல் படரவிட்டிருக்க வேண்டும். அது அவள் உள்ளம் அவளுக்கு அறிவுணர்த்த கொடுக்கபட்ட குறிப்பு.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

”கூற்றம் குதித்துய்ந்தார்” (நாலடி 6)
“கூற்றம் குதித்துய்ந் தறிவாரோ இல்” (பழமொழி 183)
“கூழைமை பயின்ற கூற்ற வரசனைக் குதிக்கும் சூழ்ச்சி” (சூளா.துறவு 18)
“கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே” (திருமந் 172)

“சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர்தொழும் முதுகுன் றடைவோமே” (சம்பந்தர்.முதுகுன்றம் 6)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்று - எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். ('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.).

மணக்குடவர் உரை
எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம். இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.

சாலமன் பாப்பையா உரை
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

குறள் 1277
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
தண்ணந் - தண்ணம் - ஒருகட்பறை; மழுவாயுதம்; குளிர்ச்சி; காடு.
தண் - குளிர்ச்சி; அருள்.
தண்ணீர் - taṇṇīr   [நீர்] taNNi தண்ணி water; [cold water]  

துறைவன் - துறைவன் - நெய்தல்நிலத்தலைவன்

தண-த்தல் - taṇa-   12 v. intr. 1. To depart,go away; நீங்குதல் தங்குதீமல நாளுந் தணந்திடும்(பிரமோத். 10, 38). 2. To go; to pass; போதல் --tr. 1. To put away, remove; நீக்குதல் மெலிவைத்தணப்பான் (தணிகைப்பு. கள 340). 2. To leave,separate from; பிரிதல் தணந்தமை சால வறிவிப்பபோலும் (குறள், 1233).

தமை - tamai   n. T. tami. Passion,desire; ஆசை அவனுக்கு அதிகத் தமையிருக்கிறது. 

தணந்தமை - அவர் நீங்கியதை

நம்மினும் - நம்மை விட

முன்னம் - முற்காலம்; கருத்து; மனம்; குறிப்பு; இம்மொழிசொல்லுதற்குஉரியாரும்கேட்டற்குஉரியாரும்இன்னோரெனப்படிப்பார்அறியுமாறுசெய்யப்படுவதாகியசெய்யுளுறுப்பு; அரிமா; சீக்கிரிமரம்.

உணர்ந்த - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

வளை - சுற்றிடம்; சங்கு; கைவளை; சக்கரப்படை; துளை; எலிமுதலியவற்றின்பொந்து; நீண்டமரத்துண்டு; தூதுவளைஎன்னும்கொடிவகை; சிறியஉத்திரம்.

முழுப்பொருள்
குளிர்ந்த நீர்ப்பரப்பின் தலைவன் என்னுடன் கூடியப்பின்பு பிரிந்துவிட்டான் தலைவி கூறுகிறாள். ஆனால் அவன் பிரியப்போகிறான் என்பதை தன்னை காட்டிலும் தான் அணிந்துள்ள வளையல்கள் முன்னமே அறிந்துள்ளன என்கிறாள் தலைவி. 

இது தலைவியின் யூகமாவே இருக்க முடியும். ஏனெனில் கூடும்பொழுது அறிந்திருந்தாலும், வளையல்கள் கழன்று விழ அவள் உடம்பு வருந்தி மெலிந்திருக்க வேண்டும். அப்படியெனில் தலைவி தானே முதலில் அறிந்தாள். அல்லது கூடலின் பொழுது தலைவனின் மெல்லிய அசைவுகளுக்கு ஏற்ப வளையல்களின் ஓசை இருக்கும் எனில் தலைவியின் ஊகம் சரி எனலாம். ஏனெனில் தலைவன் பிரியப்போகிறான் என்றால் அது அவனுக்கு தெரியும், அப்படி இருக்கும் பொழுது அவன் உடல் மொழி மாறுபடும். ஆதலால் கூடல் வித்தியாசமாக இருக்கும். அதனால் உடலின் அசைவுகள் மாறுபட்டு அதனால் வளையல்களின் ஓசையும் மாறுபடும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தண்ணந்துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை; நம்மினும் வளை முன்னம் உணர்ந்த - அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளைகள் முன்னே அறிந்தன. (கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தெளிய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அதுதன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள்.).

மணக்குடவர் உரை
குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன.

மு.வரதராசனார் உரை
குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!.

சாலமன் பாப்பையா உரை
குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி

குறள் 1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத.

பெரிது - peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27).

ஆற்றிப்ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

பெட்பக் - s. desire, lust, ஆசை; peṭpa   adv. பெள்-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662). peṭpa   adv. பெள்-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662).

பெட்பு - பெருமை; விருப்பம்; அன்பு; தன்மை; பேணுகை; பாதுகாப்பு.

கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

அரிது - அருமை; பசுமை; That which is difficult, unattainable, rare, precious; அருமையானது.

ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று

சூழ்வது - சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது

முழுப்பொருள்
என் தலைவன் எனக்கு பொறுக்கமுடியாத துன்பத்தை பிரிவாக தந்தார். அத்தகையவர் இப்பொழுது மிகவும் ஆசையாக என்னுடன் கூடுகிறார் /புணருகிறார். இம்மகிழ்ச்சி அருமையானதாக இருந்தாலும் இதனை நான் எவ்வாறு எடுத்துக்கொள்வது? ஏனெனில் அவர் என்னைவிட்டு மறுபடியும் பிரிந்து செல்லக்கூடும் என்பதற்காக எனக்கு இம்மகிழ்ச்சியை அதிகமாக தருகிறார் என்று அர்த்தமாகுமா?

அதாவது இக்கூடல் பிரிவிற்கான ஒரு குறிப்பா? அப்படியெனில் அவருக்கு (தலைவனுக்கு) பிரிந்து செல்லும் எண்ணம் கூடலின் பின் இருப்பதால் இங்கே கூடல் (அன்பின் வெளிப்பாடானாலும்) மிகுந்த அன்பின்மையின் வெளிப்பாடாகவே தெரிகிறது எனக்கு/தலைவிக்கு.  என்னை பிரிதல் அன்பின்மையின் வெளிப்பாடு. கூடல் பின்வரும் பிரிவின் குறிப்பானால் பின்பு கூடல் அன்பின்மையின் வெளிப்பாடாகும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து. (பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து. இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்

குறள் 1275
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
செறி - நெருக்கம்

தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

இறந்த - இறத்தல் கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

கள்ளம் - வஞ்சகம்; பொய்; களவு; குற்றம்; அவிச்சை; புண்ணிலுள்ளஅசறு.

உறு - மிகுதி; மிக்க; பகை; போர்.

துயர் - துன்பம்; அரசர்க்குஉரியசூதுமுதலாகியவிதனம்.

தீர்க்கும் - தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.-

மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை.

ஒன்று - ஒன்று

உடைத்து - உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
நெருக்கமாக சிலபல வளையல்களை அணிந்த என் காதலி என்னிடம் ஆசையாக இருக்கும் பொழுது அவள் கள்ளமாக செய்த (செய்து உணர்த்திய) குறிப்பை நினைக்கையில் என்னை மிக வருத்தும் துன்பங்கள் எல்லாம் குணமாகிவிடுகின்றன. அந்த குறிப்பை துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாகவே கருதுகிறேன். எனக்கு அது இனிமையை சேர்க்கிறது. அவளே என் மருந்து.

பி.கு: "காதல் கொண்டேன்" திரைப்படத்தில் வினோத் (தனுஷ்) கதாபாத்திரம் தன் பால்யத்தில் பல துன்பங்களை அனுபவிக்கும். அவன் விரும்பும் அவன் கல்லூரித்தோழி அவனுடைய துன்பங்களையெல்லாம் ஆற்றும் மருந்தாக அவன் எண்ணுவான். அவனுடைய சர்ச் பாதர்(church father) அவனிடம் அதை கூறுவார்.
Youtube Link (from 1:13:00 to 1:15:00)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”...................நாண்விட்
டருந்துயர் உழந்த காலை
மருந்தெனப் படூஉம் மடவோ ளையே” (நற் 384:9-11)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாததொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு; உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - என் மிக்க துயரைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை உடைத்து. (உட்கொண்டது - பிரிவு. கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிபபுத் தானும் உடன்போக்கு உட்கொண்டது. உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து - அப்பிரிவின்மை தோழியால் தெளிவித்தல். 'நீ அது செய்தல் வேண்டும்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்ற களவு நீ உற்றதொரு துன்பத்தைத் தீர்ப்பதொரு மருந்தாதலை உடைத்து. தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியுள் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச்செல் லென்று தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.

மணியில் திகழ்தரு நூல்போல்

குறள் 1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
மணி - கோமேதகம்; நீலம்; பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வயிரம்என்னும்ஒன்பதுவகைஇரத்தினங்கள்; நீலமணி; காண்க:சிந்தாமணி; பளிங்கு; கண்மணி; உருத்திராக்கம்; தாமரைமணிமுதலியன; தானியமணிநஞ்சுநீக்குங்கல்; சந்திரகாந்தக்கல்; மணிமாலை; அணிகலன்; உருண்டைவடிவமாயுள்ளபொருள்; மீன்வலையின்முடிச்சு; ஆட்டினதர்; வீடுபெற்றஆன்மா; அழகு; சூரியன்; ஒளி; நன்மை; சிறந்தது; கருமை; கண்டை; அறுபதுநிமிடமுள்ளநேரம்; ஒன்பது; ஆண்குறியின்நுனி; பெண்குறியின்ஓர்உள்ளுறுப்பு. 

மணியுள் - மணிகளை கோர்க்கும் 

திகழ் - ஒளி; தோற்றம்.

தரும் - கொடுக்கின்ற 

நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை

போல் - போன்று 

மடந்தை - பெண்; பதினான்குமுதல்பத்தொன்பதுவயதுவரையுள்ளபெண்; பருவமாகாதபெண்; சேம்புவகை

அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

யுள் - உள்ளே; உள்  

திகழ்வது - ஒளி; தோற்றம்.

ஒன்று - ஒன்று 

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள்
அணிகல மணிகளை ஒன்றாக கோர்க்கும் நூல் கண்ணுக்கு புலப்படாது. ஆனால் அந்த நூல் இல்லை என்றால் அழகிய அணிகலனாய் அந்த மணிகள்உருப்பெறாது. அதுபோல என் தலைவியின் (காதலியின்) குணங்களை கோர்க்கும் அழகிலும் கண்ணுக்கு தெரியாத ஒரு குறிப்பு உண்டு. அது என்னவென்று எனக்கு தெரியவில்லை என்கிறான் தலைவன்.

இரு மணிகளுக்கு இடையே நூல் என்பதனை அறியலாம். ஆனால் இவள் ஒரு முழு பெண். இவள் உள்ளே இருக்கும் அந்த துன்பத்தை அவள் அழகால் மறைத்து இருக்கிறாள் என்பதே இங்கு கண்ணுக்கு புலப்படாத குறிப்பு என்று படுகிறது. தலைவி காதலன் உடன் இருந்தால் தலைவன் இப்பொழுது என்னுடன் இருக்கிறான் ஆனால் இவன் என்னை விட்டு போய்விடுவானோ என்ற கவலை அவள் உள்ளே இருக்கலாம் அல்லது பிரிந்திருந்து ஒன்று சேர்ந்த தலைவனிடம் இவ்வளவு காலம் தாங்கிய துன்பத்தை அவள் உள்ளே புதைத்திருக்கலாம். பிரிந்து இருக்கும் பொழுது ஊர் மக்களுக்கு காண்பிக்க கூடாது என்பதற்காக தன் அழகால் அவள் துன்பத்தை மறைக்கலாம்.

இத்திருக்குறளைக்கேட்டால், எனக்கு சேதுப்படதி படத்தில் நிகழும் ஒரு சம்பவம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. மனைவி தலைவன் மீது கொண்டு இருக்கும் அன்பினால் ஊடலுக்குப் பின் பொட்டுவைத்துக்கொண்டு அலங்காரம் செய்துக்கொண்டு அழகாக வருவாள். அக்குறிப்பை தலைவன் கண்டுப்பிடித்துவிடுவான். அதாவன் காதலை கண்டு அறிந்துக்கொள்வான்.




மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல் - கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு. (அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான்அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்', என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல, இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உணடு. அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு.

மு.வரதராசனார் உரை
( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட்

குறள் 1272
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நிறைந்த - நிறைதல் - நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல்.

காரிகை - பெண்; அழகு; அலங்காரம்; கட்டளைக்கலித்துறை; ஓர்யாப்பிலக்கணநூல்; ஒருநிறை; வாதனை.

காம்பு - பூ, இலைமுதலியவற்றின்தாள்; மலர்க்கொம்பு; கருவிகளின்கைப்பிடி; மூங்கில்; ஆடைக்கரை; ஒருவகைப்பட்டாடை; பூசணி; அம்புச்சிறகு.

ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.

தோள் - புயம்; கை; தொளை.

பேதைக்குப் - பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை

நிறைந்த - நிறைதல் - நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல்.

நீர்மை - nīrmai   n. நீர்¹. 1. Property ofwater, as coolness; நீரின்றன்மை. (குறள், 195,உரை.) 2. Nature, property, inherent quality;தன்மை. நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் (குறள்,17). 3. Goodness, essential excellence; சிறந்தகுணம். பயனில நீர்மையுடையார் சொலின் (குறள்,195). 4. Affability; சௌலப்பியம் ஆவாவென்றநீர்மை யெல்லாம் புகழப் பெறுவ தென்றுகொல்லோ(திருவாச. 27, 5). நீர்மை கண்டு அனுபவிக்கலாம்படியிருப்பது இங்கேயிறே (திவ். திருப்பா. 1, வ்யா. பக்.44). 5. Beauty; அழகு மெய்ந்நீர்மை தோற்றாயே(திவ். திருவாய். 2, 1, 6). 6. Brilliance, lustre;ஒளி. நெடுநீர் வார்குழை (நெடுநல். 139). 7. State,condition; நிலைமை என்னீர்மை கண்டிரங்கி (திவ்.திருவாய். 1, 4, 4). 8. Observance of properrules or established custom; ஒப்புரவு (W.)

பெரிது - peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27).

முழுப்பொருள்
என்னுடைய கண்கள் நிறைந்த இந்த காரிகை(பெண்) மூங்கிலைப் போல வளைந்த அழகியத் தோள்களை கொண்டு உள்ளாள்.  இவள் பெண்களுக்கே உரித்தான குணங்களை மிகுதியாகவே பெற்று இருப்பது இவளுக்கும் இன்னும் அழகு சேர்க்கிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு - என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது. (இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.).

மணக்குடவர் உரை
காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளினையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது.

மு.வரதராசனார் உரை
கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை
என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.

கரப்பினுங் கையிகந் தொல்லாநின்

குறள் 1271
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் 
உரைக்கல் உறுவதொன் றுண்டு.
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
கரப்பினும் - கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.

கையிகந்து - கையிக-த்தல் - அளவுக்கு மேற்படுதல், மீறுதல்

ஒல்லல் - ஒல்லுதல்; இயலுதல்; பொருந்துதல்; இசைதல்; ஊடல்; தீர்க்கை
ஒல்லா - இயல முடியவில்லை என்றால்

நின் - உன்னுடைய

உண்கண் - மைதீட்டியகண்

உரைக்கல் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

உறுவது - வரற்பாலது; இலாபம்; ஒப்பது (That which resembles); தருவது.

ஒன்று - ஒன்று

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள்
நீ என்னிடம் சொல்ல கூடாது என்று நினைக்கும் அந்த சொற்களை மறைக்க முற்படுகிறாய். ஆனால் அன்பின் ஆழத்தில் இருந்து வரும் அந்த சொற்கள் அன்பின் மிகுதியால் மறைக்கமுடியாது போகிறது. ஏன் என்றால் நீ சொல்ல வேண்டும் என்ற சொற்களை கண்ணில் மையிட்டுக்கொண்டு மறைக்க முற்படுகிறாய். ஆனால் மைதீட்டிய உன் கண்களோ எனக்கு உண்மையை குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. நீ என்ன சொல்ல முற்படுகிறாய்? சொல் கண்ணே.

இங்கே இரண்டு சூழ்நிலைகள் இருக்க வேண்டும் - ஒன்று பிரிந்த சோகத்தில் ஏக்க நோயால் வாடும் தலைவி களைப்புற்று வரும் தலைவனிடம்  தனது சோகத்தினை காண்பிக்க கூடாது என்று மைதீட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது போல பொய் தோற்றம் கொள்ளலாம் - இரண்டு வேலைக்காக பிரிந்து செல்லும் கணவரிடம் பிரிவின் சோகம் தன்னை (தலைவியை) ஆட்க்கொள்ள துவங்கிய பின்னும் அவரை வழி அனுப்பும் பொழுது இன் முகம் காண்பிக்க வேண்டும் என்று நினைத்து மைதீட்டுக்கொண்டு இருக்கலாம்.

ஒப்புமை
”இன்றிவ்வூர் அலர்தூற்ற வெய்யாநீ துறத்தலின்
நின்றதன் எவ்வநோய் என்னையும் மறைத்தாள்மன்
வென்றவேல் நுதியேய்க்கும் விறல்நலன் இழந்தினி
நின்றுநீர் உகக்கலுழும் நெடும்பெருங்கண் அல்லாக்கால்” (கலித் 124:13-6)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகன் , தலைமகள் , தோழி என்ற இவர் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல் . இது பிரிந்து போய தலைமகன் வந்து கூடியவழி நிகழ்வதாகலின் ,அவர் வயின் விதும்பலின்பின் வைக்கப்பட்டது.]

(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது ஒன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; ஒல்லா கை இகந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கை கடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இராநின்றது, இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக. (காத்தல் - நாணால் அடக்குதல், தன்கண் பிரிதற் குறிப்புள்ளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகுதியினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது வொன்றுடைத்தென அஞ்சிய வழி , அதை யவள் குறிப்பாலறிந்து அவன் அவட்குச் சொல்லியது.)

கரப்பினும்-நீ சொல்லாது மறைத்தாலும் , ஒல்லாகை இகந்து-அதற்குடம்படாது உன்கட்டை மீறி , நின் உண் கண் உரைக்கல் உறுவது ஒன்று உண்டு-உன் மையுண்ட கண்கள் எனக்குக் குறிப்பாகச் சொல்லுவதொரு செய்தியுள்ளது . இனி அதை நீயே வெளிப்படையாகச் சொல்வாயாக.

தலைமகனின் வரையிறந்த பாராட்டில் மீண்டும் பிரிதற் குறிப்புள்ளதாகத் தலைமகள் கருதி வேறுபட்டதை , அவட்கெடுத்துச்சொல்லித் தன் பிரியாமையை யுணர்த்தியவாறு . கரத்தல் நாணாலடக்குதல்.


மணக்குடவர் உரை
நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக் கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது: இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக.

மு.வரதராசனார் உரை
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை
நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்

குறள் 1274
முகைமொக்குள்  உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
முகை - அரும்பு; மொட்டு; குகை; கூட்டம்; மிடா

மொக்கு - பூமொட்டு; சீலைகளில் செய்யும் மொட்டு வேலைப்பாடு; தரையிலிடும் பூக்கோலம்; குத்துவிளக்கின் தகழி; மரக்கணு; காண்க:மொக்கை.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.

நாற்றம் - மணம்; மூக்கால்அறியும்புலனறிவு; தீநாற்றம்; கள்; தொடர்பு; தோற்றம்.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயது முதல் ஏழுவயதுவரையுள்ள பருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.

மொக்கு - பூமொட்டு; சீலைகளில் செய்யும் மொட்டு வேலைப்பாடு; தரையிலிடும் பூக்கோலம்; குத்துவிளக்கின் தகழி; மரக்கணு; காண்க:மொக்கை.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக் குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள்
மலர் மொட்டுக்குள், எவ்வாறு மனம் பொதிந்து (இன்னும் வெளிப்படாமல்) உள்ளதோ, அதே போன்று பாவையின் புன்முறுவலில் (காதலனை நோக்கி), ஏதோ ஒரு புலப்படாது ஒன்று ஒளிந்து உள்ளது. 

மொட்டாக இருக்கும் பொழுது நாம் முகர்ந்தால் மலரின் வாசம் பெரும்பாலும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் மிக சிறிய அளவிலேயே. அதுபோலத்தான் பாவையின் புன்முறுவலில் உள்ள அன்பினை நாம் முழுவதுமாக அறிந்துக்கொள்ள முடியாது. காதல் மலர மலர அதனை அறியலாம். 

ஒப்புமை
”முள்நுனை தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள்” (கலித் 142:7-8)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் - முகையது முகிழ்ப்பினுளதாய்ப்புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு. (முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.).

மணக்குடவர் உரை
மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போலப் பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு. இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

சாலமன் பாப்பையா உரை
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.