Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label சூது. Show all posts
Showing posts with label சூது. Show all posts

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்


குறள் 940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
[பொருட்பால், நட்பியல், சூது]

பொருள்
இழ-த்தல் - iḻa-   12 v. tr. [M. iḻa.] 1. Tolose, forfeit; தவற விடுதல் (நாலடி. 9.) 2. Tolose by death; சாகக்கொடுத்தல். மக்க ளிழந்த விடும்பையினும் (உத்தரரா. திக்குவி. 138).  

இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு.

இழத்தொறூஉம் - ஒருவன் தன் செல்வத்தை வைத்திழக்க இழக்க

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.
காதலிக்கும் - காதல் -  காதலித்தல் - அன்புகொள்ளுதல், விரும்புதல்.

சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி.

சூதேபோல் - சூதாட்டத்தை (சூதாட்டத்துக்குத் தன்னை இழந்தவர்கள் செய்வது)

துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

உழலுதல் - அசைதல்; அலைதல்; சுழலுதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல்.
உழத்தல் - செய்தல்; பயிலுதல்; பழகுதல்; முயலுதல்; வெல்லுதல்; வருந்துதல்; பட்டனுபவித்தல்; துவைத்தல்.
உழத்தொறூஉம் - மீண்டும் மீண்டும் அனுபவிப்பினும்

காதற்று - காதல் + அற்று
காதற்று -  உடம்பை காதலிப்பை விடாது

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

முழுப்பொருள்
ஒருவர் உடல் உபாதைகளால், வியாதிகளால், உடற்புண்களால் எவ்வளவு அவதிப்பட்டாலும் பல ஆண்டுகளாய் துன்பத்தில் தவித்து உழன்றாலும் அவரது மனம்/உயிர் உடலை விரும்பும். இவ்வுடல் அழியும் தன்மை வாய்ந்தது யாக்கை நிலையில்லாதது என்று அறிந்தும் இன்னும் சிலகாலம் வாழவேண்டும் என்று ஆசைப்படும். தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று அறிந்து உணர்ந்தும் கூட உயிர்வாழ் ஆசைப்படும். இவ்வுடம்பின் காரணமாக உடம்பில் உள்ள ஐம்பொறிகளின் காரணமாக பல துன்பங்களை அடைந்தும், மேலும் உறுவோம் என்றவுண்மை அறிந்தும் புரிந்தும், உடலை விடுவதற்கு இவ்வுயிர் துணியாது உடம்பென்னும் சட்டையை உதறாது பிடித்துவைத்துக்கொள்ளும். இதை அறிந்தும் அறியாமையில் உழலுவதே உயிரனு இயல்பு. 

அதுப்போல செல்வத்தையும் மானத்தையும் அருளையும் கல்வியையும் புகழையும் நேர்மையையும் அறத்தையும் இழந்தும் கூட ஒருவர் சூதினை விரும்புவார். அதுவே சூதின் காமவிசை. அதுவே சூது ஒருவர் மீது செலுத்தும் ஆற்றல். இதனை அறிந்து சூதாடாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் - சூதாடலான் இருமைப் பயன்களையும் இழக்குந்தோறும் அதன்மேற் காதல் செய்யும் சூதன் போல; துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் - உடம்பான் மூவகைத் துன்பங்களையும் அனுபவிக்குந்தோறும் அதன்மேற் காதலை உடைத்து உயிர். (சூது - ஆகுபெயர். உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூறினார். இதன் எதிர்மறை முகத்தால், சூதினை வெறுத்து ஒழிவானை யொக்கும் உடம்பினை வெறுத்தொழியும் உயிர் எனவும் கொள்க, இதனான் இஃது ஒழிதற்கு அருமையும், ஒழிந்தாரது பெருமையும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக்கும் சூதுபோலத் துன்பத்தை உழக்குந்தோறும் இன்பத்திலே காதலுடைத்து உயிர். இவை இரண்டினுக்கும் அஃதியல்பு.

மு.வரதராசனார் உரை
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்


குறள் 939
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்
[பொருட்பால், நட்பியல், சூது]

பொருள்
உடை - ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு.

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்

கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி, நூல் அறிவு, திறம்பட ஆட்சி செலுத்தும் வகைமுறைகளைக் கற்றுத் தெளிந்த அறிவுடைமை

என்று எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

ஐந்தும் - ஐந்து (பூதங்கள், பொறிகள்)

அடைதல் - சேருதல்; பெறுதல் கூடுதல் ஒதுங்குதல் அடுத்தல் சரண்புகுதல்

அடையாவாம் - அடையமுடியாததாகிவிடும்

ஆயம்  - கமுக்கம்; தோழியர்கூட்டம்; வருத்தம் மேகம் மல்லரிப்பறை; 34அங்குலஆழமுள்ளகுழி; வருவாய் குடியிறை கடமை சூதுகருவி கவற்றிற்றாயம்; சூதாட்டம் பசுத்திரள்; நீளம் மக்கள்தொகுதி; பொன்

கொளின் - கொண்டால்

முழுப்பொருள்
1) உடை - ஒருவர் உடுத்தும் ஆடையைக் கூட சூது இழக்கச்செய்யும். அதாவது ஒருவரை மானம் அற்றவராக மாற்றிவிடும்.

2) செல்வம்  - ஒருவரின் பொன், செல்வம் என அனைத்தையும் அடையமுடியாமல் அழித்துவிடும் சூது

3) ஊண் - உண்ண உணவுக்கூட இல்லாத அளவிற்கு செமித்துவைத்த உணவு தானியங்களையும் விளைநிலங்களையும் கையில் இருக்கும் செல்வத்தையும் சேமிப்பையும் அழித்துவிடும் சூது

4) ஒளி - அறிவு, மதிப்பு, நன்மதிப்பு, புகழ் ஆகியவற்றை ஒழித்துவிடும் சூது

5) கல்வி - அறிவு, வித்தை, திறம், தெளிந்த அறிவுடைமை என்ற அறிவு சார்ந்தவை சூது ஆடுபவரிடம் இருந்து விலகிவிடும். ஏன் என்றால் சூது அறிவை மழுங்கடிக்கும் ஆற்றலைப் பெற்றது. தெளிந்த அறிவை தொலைத்துத்தானே சூதை விளையாடுகிறார். பின்பு எப்படி மறுபடியும் தெளிந்த அறிவை சூதிடம் இருந்து பெறமுடியும்.

ஆக, மேற்சொன்ன ஐந்தையும் சூதாடும் (கவறாட்டம் ஆடும்) ஒருவரால் அடையமுடியாது என்பதை குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். அதனை அறிந்துணர்ந்து அதன்படி நடப்பது நமது கடமையாகும். 

இதையே அறநெறி சாரப் பாடலொன்று இக்குறளின் கருத்தையொட்டியது.

“ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால் 
மேதை எனப்படும் மேன்மையும் – சூது
பொருமென்னும் சொல்லினால் புல்லப் படுமேல்
இருளாம் ஒருங்கே இவை” (அறநெறி. 147)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆயம் கொளின் - அரசன் சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின்; ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்று அடையாவாம் - அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்று இவ்வைந்தும் சாராவாம். (ஆயம்: ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுள் நோக்கிப் பிறழ நின்றது. செல்வம் - அறுவகை உறுப்புக்கள். ஊண் உடை என்பனவற்றால் துப்புரவுகளெல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறாமையின், இவை உளவாகா என்பதாம். இவை நான்கு பாட்டானும் சிறுமை பல செய்து அவற்றான் இருமையும் கெடுதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உடையும், செல்வமும், உணவும், புகழும், கல்வியுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சூதினைக் கொள்ளின் சாராவாம். செல்வம்- பொன்னும், மனையும், பூமியும், அடிமையும் முதலாயின.

மு.வரதராசனார் உரை
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

சாலமன் பாப்பையா உரை
சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து


குறள் 938
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது
[பொருட்பால், நட்பியல், சூது]

பொருள்
பொருள்  - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

கெடுத்து - கெடுத்தல் - அழித்தல்; பழுதாக்குதல்; ஒழுக்கங்கெடுத்தல்; அவமாக்குதல்; செயலைத்தடைசெய்தல்; இழத்தல்; நீக்குதல்; நஞ்சுமுதலியவற்றைமுறியச்செய்தல்; முறியடித்தல்; காணாமற்போகுதல்.

பொய் - மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கையானது; சிறுசிறாய்.

மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

பொய் மேற்கொளீஇ – பொய்யும் சொல்லச் செய்யும்

அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

கெடுத்து - கெடுத்தல் - அழித்தல்; பழுதாக்குதல்; ஒழுக்கங்கெடுத்தல்; அவமாக்குதல்; செயலைத்தடைசெய்தல்; இழத்தல்; நீக்குதல்; நஞ்சுமுதலியவற்றைமுறியச்செய்தல்; முறியடித்தல்; காணாமற்போகுதல்.

அல்லல் - துன்பம்

உழத்தல் - செய்தல்; பயிலுதல்; பழகுதல்; முயலுதல்; வெல்லுதல்; வருந்துதல்; பட்டனுபவித்தல்; துவைத்தல்.
உழப்பு - முயற்சி, ஊக்கம்; வருத்தம்; பழக்கம்; வலிமை.
உழப்புதல் - மழுப்புதல்; குழப்பிப்பேசுதல்; போலிவாதஞ்செய்தல்; காலங்கடத்துதல்.
உழப்பிக்கும் - துன்பப்படுத்தல்

சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி.

முழுப்பொருள்
சூதின் கேடுகளை இக்குறளில் பட்டியல் இடுகிறார் திருவள்ளுவர்
1. சூது முதலில் அழிப்பது ஒருவரிடம் உள்ள பொருளை. செல்வத்தை அழித்துவிடும். செல்வம் எனில் பொன், அறம், அறிவு, கொள்கை, நன்மதிப்பு, செய்கை என அனைத்தையும் அழித்து விடும்

2. ஒருவரை பொய் சொல்ல வைக்கும் சூது. முதலில் சூது ஆடப்போகிறேன் என்று உண்மையை சொல்ல வைக்காது. ஏனெனில் சூது செல்கிறார் என்றால் எல்லோரும் வந்து தடுப்பர். சூது ஆடி பொருள் இழந்து பிறகு சூதில் இழந்தேன் என்று உண்மையை சொன்னால் அதற்கு இவ்வுலகம் ஏசும். ஆதலால் சூதாடி இழந்ததையும் மறைப்பர். சூதாடி இழந்தப்பின்பும் பாடம் கற்காமல் மீண்டும் சூதாடுவதற்காக பிறரிடம் பொய் கூறியாவது கடன்வாங்குவர், பிறகு அதற்காகத் திருடவும் செய்வர். 

3. சூதினை ஆடுவதால் அருளை இழப்பர். சூது பொருளை கெடுப்பது மட்டுமல்லாமல் மானத்தையும், ஒழுக்கத்தையும் கெடுப்பதால், ஆன்றோர்களும் சான்றோர்களும் இறைவனும் நல்கும் அருள் கிடைக்காமல் ஒழியும்.

4. சூது ஒருவரை துன்பத்தில் ஆழ்த்திவிடும். ஆழ்த்துவது மட்டுமல்லாமல் அதிலேயே உழலவிடும். ஏனெனில் இழந்த செல்வத்தை சூதிலேயே மீட்டு எடுக்கவேண்டும் என்ற தவறான எண்ணத்தை சூது ஒருவரிடம் உண்டுப்பண்ணும். அடிப்படையில் அது சூதின் தன்மை ஆகும். 

பொருளற்றார்க்கு இவ்வுலகில்லை, அருளற்றார்க்கு அவ்வுலகில்லை என்ற சொல்வழக்கு உண்டு என்பதை நினைவில் கொள்க. இது சூது ஆடுவோருக்கு மிகவும் பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சூது - சூது; பொருள் கெடுத்து - தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ - பொய்யை மேற்கொள்ளப் பண்ணி, அருள் கெடுத்து - மனத்து எழும் அருளைக் கெடுத்து, அல்லல் உழப்பிக்கும் - இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும். (இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும், தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும் ஏனையவற்றான் மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ' என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.).

மணக்குடவர் உரை
சூது, முற்படப் பொருளைக் கெடுத்து அதன் பின்னர்ப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி அருளுடைமையைக் கெடுத்து அல்லற்படுத்துவிக்கும்

மு.வரதராசனார் உரை
சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை
சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்

குறள் 936
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்
[பொருட்பால், நட்பியல், சூது]

பொருள்
அகடு - உள்; வயிறு நடு மேடு நடுவுநிலை பொல்லாங்கு

ஆர் - நிறைவு; பூமி கூர்மை அழகு மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி ஆரக்கால் தேரின்அகத்தில்செறிகதிர்; அச்சுமரம் செவ்வாய் சரக்கொன்றை அண்மை ஏவல் பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப்பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.

ஆரு - நிறைதல் - தணிதல் 

ஆரார் - நிறையாத ; தணியாத 

அல்லல் - துன்பம்

உழப்பர் - உழ-த்தல் - uḻa-   4 v. intr. 1. To suffer;to experience sorrow, pain, trouble or fatigue;வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன்(மணி. 16, 74). 2. To be accomplished, asin an art; பழகுதல் (சீவக. 597.) 3. To try,make an effort; பிரயாசப்படுதல் செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு 130).--tr. Toconquer; வெல்லுதல் பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52).  

சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

முகடியான்முகடி - mukṭi   s. The elder-sister of Lukshmi, மூதேவி; (lit.) poverty, or misfortune. (சது.)

மூடுதல் - போர்த்தல்; மறைத்தல்; சுற்றிக்கொள்ளுதல்; நோய்முதலியனமிகுதல்.

மூடப்பட்டார் - சுற்றிக்கொள்ளப்பட்டார் ; நோயால் மிகுதியாக பாதிக்க படுவார் 

முழுப்பொருள்
என் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்என்ற சொல்வழக்கு ஒன்றுண்டு. அவ்வயிறு ஆராமல் இருப்பதே வறுமையில் உச்சக்கட்ட கொடுமை. வயிறு ஆராதிருக்கும்போது மற்ற புலன் நுகர்ச்சிகளும் இராது. ஆதலால் வயிறு ஆராமையை முதன்மை படுத்துகிறார் திருவள்ளுவர். 

சூது என்பது சூழ்ச்சிகள் நிறைந்த ஒரு கொடிய விளையாட்டு. எவ்வளவு நடுநிலை வாய்ந்தவரும் தோற்கக்கூடிய விளையாட்டு. தோற்றால் உச்சியில் இருந்து அதல பாதாளத்திற்கு செல்ல நேரிடும். அத்தகைய சூதை ஒருவர் விளையாடுவார் என்றால் அவர் எல்லா செல்வத்தையும் இழந்து பசி ஆராத அளவிற்கு உச்சகட்ட வறுமையில் சிக்கி தவிப்பார். மேலும் துன்பங்கள் பலவற்றில் உழன்று வருத்தப்படுவார். வறுமை(மூதேவி) என்னும் நோயால் பற்றிகொள்ளப்படுவார்.  
 
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சூது என்னும் முகடியான் மூடப்பட்டார் - தன் பெயர் சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்; அகடு ஆரார் அல்லல் உழப்பர் - இம்மைக்கண் வயிறாரப் பெறார்; மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர். (செல்வங்கெடுத்து நல்குரவு கொடுத்தல் தொழில் வேறுபடாமையின் 'சூது என்னும் முகடி' என்றும், வெற்றி தோல்விகளை நோக்கி ஒரு பொழுதும் விடாராகலின், ஈண்டு 'அகடு ஆரார்' என்றும், பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின் ஆண்டு 'அல்லல் உழப்பர்' என்றும் கூறினார். வயிறாராமை சொல்லவே ஏனைப் புலன்கள் நுகரப் பெறாமை சொல்ல வேண்டாவாயிற்று. உழப்பர் என்பது எதிர்கால வினைச்சொல்.).

மணக்குடவர் உரை
தமக்கு உள்ளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார்; அதுவேயன்றி அல்லற்படுவதும் செய்வர்; சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார். மறைத்தல்- நற்குணங்களைத் தோன்றாமல் மறைத்தல்.

மு.வரதராசனார் உரை
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.

சாலமன் பாப்பையா உரை
சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.

கவறும் கழகமும் கையும் தருக்கி

குறள் 935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்
[பொருட்பால், நட்பியல், சூது]

பொருள்
கவறும் - கவறு - சூதாடுகருவி, தாயக்கட்டை; சூது; பனம்பட்டை.

கழகமும் - கழகம் - கல்விபயிலும்இடம், கல்விச்சங்கம்; படை, மல்முதலியனபயிலும்இடம்; சூது; சூதாடுமிடம்; ஓலக்கம்; புலவர்கூடியசபை.

கையும் - கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்

தருக்கி - தருக்குதல் - அகங்கரித்தல்; களித்தல்; ஊக்கமிகுதல்; பெருக்குதல்; இடித்தல்; வருத்துதல்; உடைத்தல்; மேற்கொள்ளுதல்.

இவறுதல் - ஆசையுறல்; விரும்புதல் மறத்தல் மிகுதல் உலாவுதல் கைவிடாதிருத்தல்; வேண்டும்வழிப்பொருள்கொடாமை.

இவறியார் - கைவிடாதவர்; ஆசைப்பட்டோர்.

இல்லாகியார் - எதுவும் இல்லாமல் போவார்

முழுப்பொருள்
சூதாட்டத்தில் பயன் படுத்தப்படும் தாயக்கட்டையையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறன் பெற்றதனால் (வளர்த்துக்கொண்டதனால்) சூதாட்டத்தில் களித்து இன்புறுவோர் சூதாட்டத்தை விரும்பி அதனை கைவிடவில்லையென்றால் அவர் வாழ்வில் எல்லாம் செல்வமும் பெற்றவராக இருந்தாலும் அவர் எல்லாவற்றையும் இழந்துவிடுவார்.  

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இல்லாகியார் - முற்காலத்துத் தாம் உளராகியே இலராகி ஒழுகினார்; கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் - கவற்றினையும் அஃது ஆடுங் களத்தினையும் அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலினையும் மேற்கொண்டு கைவிடாத வேந்தர். (கைத்தொழில் - வெல்லும் ஆயம்படப் பிடித்தெறிதல். அவ்விவறுதலால் பாண்டவர் தம் அரசுவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைந்தொழுகினார் என அனுபவம் காட்டியவாறு. இவை ஐந்து பாட்டானும் அதனது வறுமை பயத்தற் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கவற்றினையும், கழகத்தினையும், கைத்தொழிலினையும் விரும்பி விடாதவர் முற்காலத்தினும் வறுவியரானார். கவறு - நெத்தம், கழகம் - உருண்டையுருட்டு மிடம், கைத் தொழில் - கவடி பிடித்தல்.

மு.வரதராசனார் உரை
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

சாலமன் பாப்பையா உரை
சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

குறள் 934
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்
[பொருட்பால், நட்பியல், சூது]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.

பல - ஒன்றுக்குமேற்பட்டவை

செய்து - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.

அழிக்கும் - அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல்.

சூதின் - சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி.

வறுமை - துன்பம்; வெறுமை; திக்கற்றதனிமை.

தருவது - கொடுப்பது

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல் - வேறு இல்லை

முழுப்பொருள்
சிறுமை எனப்படும் கீழ்மை, (மனதில்) துன்பம், (மனத்துன்பத்தால் வரும்) நோய், (பெரியோர் இடத்திலும், குடும்பத்திலும், சமூகத்திலும்) இழிவு ஆகிய பலவற்றையும் தந்து சீர் எனப்படும் செல்வங்கள் (நேர்மை, பொருட்ச்செல்வம், அழகு, நன்மதிப்பு, புகழ், தலைமைப்பண்பு, இயல்பு) அனைத்தையும் அழிக்கவல்ல சூதாட்டத்தைப்போன்று வறுமையும் ஏழ்மையும் துன்பமும் கொடுக்க வல்லது வேறேதும் இவ்வுலகிலில்லை.

சீட்டுக்கட்டின் வழவழப்பில்
ஒரு மாயமிருந்தது.
ஐம்பத்திரண்டு என்கிற அதன்
எண்ணிக்கையிலும் ஏதோ ஒன்று.
தலைகீழாகவும் நேராகவும் நிற்கிற
ராஜா ராணிகளின்
இதுவரை பாராத சாயல்கள்
அரசசபைக்கும் அந்தப்புரத்திற்கும்
ரகசியமாக அழைத்தன.
கெட்டபுத்தகங்களை வாசிக்கத் தரும்
பதின்வயது சினேகிதன் போல
ஜாக்கி இருந்தான்.
யாரிடமும் புகையிலை வாங்கிப்போட்டு
எப்போதும் கதை சொல்லும்
கிழவி போல பிரியமானது ஜோக்கர்.
ஆடுகிறவர்கள் நேர்த்தியில்லாமல்
அவரவர் சௌகரியப்படி அமர்ந்து
அவரவர்க்குத் தோன்றுவதைப் பேசுவது
பிடித்திருந்தது நிரம்ப.
ஜெயித்தவர்களை விட, தோற்றவர்கள்
விளையாட்டைத் தொடரும்படி  
இருந்த ஒரு வினோத அழைப்பு
சிக்கல் நூல்கண்டு போல் சவாலுடன்
அவிழ்க்கத் தூண்டியது.
பக்கத்திலிருந்த என்னிடம் கஜேந்திர மாமா
‘சீட்டைப் பார்த்துக்க மாப்ளே” என்று
சிறு நீர் கழிக்கப் போன சமயம்
சும்மாதான் கையில் எடுத்தேன்.
சூதாடியாவதற்குப் போதுமானதாக
இருந்தது அந்தச்
சும்மா என்கிற சின்னஞ் சிறு நொடி.
-வண்ணதாசன்

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

சூது முந்துறச் சொல்லிய மாத்துயர்
நீதி மைந்த நினக்கிலை யாயினும்
ஏதம் என்பன யாவையும் எய்துதற்
கோதுமூலம் அவையென ஓர்தியே (கம்ப.மந்தரை 12)

பரிமேலழகர் உரை
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல்; வறுமை தருவது ஒன்று இல் - நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை. (அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும் நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும் தீயினத்தையும்கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார். வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் சூதுபோல வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
துன்பங்கள் பல தந்த, நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
In general, people who gamble would loose more money than they might earn. Hence, the gambler lots of trivial things such as 1) stealing money 2) telling lies 3) doing odd disrespected jobs 4) doing immoral stuffs. When one does all these trivial things, coupled with gambling, it leads to destruction of wealth, fame, reputation, respect etc. Hence, we can say that there is nothing like gambling which gives poverty (not just in terms of money but also in terms of reputation)

Questions that I ask to the kid
There is nothing like this which gives poverty.  Which is that?

உருளாயம் ஓவாது கூறின்

குறள் 933
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்
[பொருட்பால், நட்பியல், சூது]

பொருள்
உருள் -  தேருருளை; வண்டி உரோகினி; வட்டம்
(வி)புரள்; உருட்டு திரள் அழி

ஆயம்  - கமுக்கம்; தோழியர்கூட்டம்; வருத்தம் மேகம் மல்லரிப்பறை; 34அங்குலஆழமுள்ளகுழி; வருவாய் குடியிறை கடமை சூதுகருவி கவற்றிற்றாயம்; சூதாட்டம் பசுத்திரள்; நீளம் மக்கள்தொகுதி; பொன்

ஓவாது - ஓவுதல் - ஒழிதல், நீங்குதல்; நீக்குதல்; முடிதல்; ஓயாது

கூறின் - கூறினால்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை

ஆயம் - கமுக்கம்; தோழியர்கூட்டம்; வருத்தம் மேகம் மல்லரிப்பறை; 34அங்குலஆழமுள்ளகுழி; வருவாய் குடியிறை கடமை சூதுகருவி கவற்றிற்றாயம்; சூதாட்டம் பசுத்திரள்; நீளம் மக்கள்தொகுதி; பொன்

ஒய் - oy   I v. i. pass away, depart, ஒழி; 2. escape, தப்பு; v. t. cause to go, செலுத்து; 2. give, கொடு; 3. wipe off போக்கு.

போஒய்ப் - சென்று

புறமே - புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
சூதாட்டத்தில் பகடையை உருளுவார்கள். சூதாட்டத்தில் சில சமயங்களில் வருவாய் வரும். அந்த வருவாயை நம்பி அல்லது தான் ஒரு முறை (அல்லது ஒரு சில முறை) சூதாட்டத்தில் பெற்ற வருவாயை நம்பி அதனை சொல்லி சொல்லி அதிலேயே மூழ்கி சூதாடிக்கொண்டிருந்தால் தன்னிடம் இருக்கும் செல்வங்களெல்லாம் பிறரிடம் (பகைவரிடம்) சென்று விடும். அதாவது நாம் சூதில் எல்லாசெல்வத்தையும் இழந்துவிடுவோம். ஆதலால் சூதாடாதே.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பொருளாயம் எய்துதற்குப் புகழ் குடந்தை அம்பலத்தே
உருளாய்ச் சூதாடி” (பெரிய.மூர்க்க.8)


பரிமேலழகர் உரை
உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப்போய்ப் பகைவர் கண்ணே தங்கும். (கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத்தொகை. ஆயம் - வடமொழித் திரிசொல், காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின் அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவானாயின், பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்.

மு.வரதராசனார் உரை
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

சாலமன் பாப்பையா உரை
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும்

குறள் 932
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு
[பொருட்பால், நட்பியல், சூது]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒன்று - ஒன்று என்னும் எண்; மதிப்பிற்குரிய பொருள்; வீடு பேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்

எய்தி - அடைய எண்ணி செல்லுத்துதல்

நூறு - நூறு என்னும் எண்; மா, பொடிமுதலியன; சுண்ணணாம்பு.

இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு

இழக்கும் - இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்

சூதர் - அரசர் முன்னின்று அவர்களைப் புகழ்வோர்; பாணர்.

சூதர் - cūtar   s. (sing. சூதன்.) Bards, en comiasts, புகழ்வோர். 2. Charioteers, coach men, தேர்ப்பாகர். 3. Singers, flute players, a caste, பாணர். W. p. 94. SOOTA. 4. The chief disciple of Vyasa, and the com municator of the eighteen Puranas which he received from him, வியாசர்மாணாக்கர். 5. [ex சூது.] Gamblers, players at draughts, சூதாடுபவர். (p.) சூதர்பானிருபன்சீர்கேட்டு. Being informed of the beauty of the king (நளன்) from the bards. (நைட.)

சூதர்க்கும் -  சூதாடுபவர்களுக்கும்

உண்டாம் - [ex உள்.] Third pers. neut. sing. of the symbolic verb உள், but now used with all persons, in both numbers and in both திணை, it is, it exists, there is, there was, there are, there may be, there might be, &c. In some connexions, it im plies a degree of uncertainly, குறிப்புவினை முற்று. 2. Existing, existence, a thing that exists, உள்ளது. This and the participle உள்ள, (with its appellative) are the only parts of the verb, generally brought into colloquial use. எனக்குத்தெய்வமுண்டு. God is my help, (எனக்கு is often omitted)--spoken of one when deserted, ill-treated, &c. அதற்குநானுண்டுஅவனுண்டு. This concerns him and me exclusively (you need not meddle with it). 2. He and I are respon sible for that. உண்டில்லையெனல், Either affirming or denying.

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை; kol   கொல்லு, I v. t. kill, slay, கொலை செய்; 2. afflict, tease; 3. fell, cut down.

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்

எய்தி - அடைய எண்ணி செல்லுத்துதல்

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழ்வதோர் - வாழ்வோர்

ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை

முழுப்பொருள்
சூதாட்டத்தில் விளையாடும் ஒருவர் முதல் சில ஆட்டங்களில்  சில வெற்றிகளை பெற்று இருப்பர். அது அவர்களுக்கு ஒருவித போதையை தரும். அந்த ஒரு (அல்ல ஒரு சில) வெற்றி(களை) பெற்றதை மனதில் கொண்டு தனக்கு இன்னும் பல வெற்றிகள் வரும் என்று கண்மூடித்தனமாக நம்புவார்கள். ஆனால் இவர்கள் காலப்போக்கில் இந்த சூதாட்டத்தில் ஒருநாள் பலநூறு செல்வங்களை இழப்பார்கள். இதுவே சூதினால் வந்த வினை பயன்.

இத்தகையவர்கள் நற்வழியில் வாழ்ந்து இன்பம் (நல்வினை) ஏய்த நெறிகள் உண்டோ? இல்லை. 

Image result for mahabharatham game

ஒன்று, நூறு என்கிற கணக்குக்கு வள்ளுவர் மகாபாரதத்தின் கௌரவர்களை அடிப்படையாகக் கொண்டே கூறியிருக்கலாம். இல்லையெனில் சிலவற்றைப் பெற்று பலவற்றை இழக்க நேரும் என்றோ, அல்லாது எல்லாவற்றையுமே இழக்கவேண்டும் என்றோ கூறியிருக்கலாமே!

மகாபாரதத்தைப் பொருத்தவரை இக்குறள் கௌரவர் அனைவருக்கும், துரியோதனன், சகுனி, திருதராட்டிரன் எல்லோருக்கும் ஒன்று-நூறு என்கிற கணக்கு, பொருந்துவதே. தம் நூறு மகன்களின் நலனுக்காக, குறிப்பாக துரியோதனின் மேலிருந்த குருட்டுத்தனமான பாசத்துக்காக, திருதராட்டிரன் சூதாட அனுமதி அளித்தான்; சகுனியோ தம் தங்கையின் நூறு புதல்வர்களும் குறிப்பாக துரியோதனும் நலமாக இருக்க, பாண்டவர்களை ஒழிக்க எண்ணினான்; துரியோதனோ பிறவியிலேயே குணக்கேடன். பாண்டவர்களின் மேல் கொண்ட பொறாமைக்காக, தாமே நாட்டை அடையவேண்டுமென்கிற ஆசையில் சகுனியின் துணையுடன், திருதராட்டிரன் அனுமதி பெற்று, வஞ்சக சூதிலே பாண்டவர்களை வென்றாலும் முடிவில் இவர்களெல்லாம் அடைந்தது என்ன? நூறு புதல்வர்களை திருதராட்டிரனும், நூறு மருகன்களை சகுனியும், துரியோதனன், தம்மோடு சேர்த்து நூறு சகோதரகளையுமே இறுதியில் இழந்தார்கள். இவர்கள் சூதால் ஒன்றை அடைந்தாலும், இறுதியில் பெற்றது என்ன? நூறை இழந்தார்களே!

இதனை நாம் அன்றாட விஷயங்களில் கூட காணலாம். உதாரண்மாக சொன்னால். நான் MBA படிக்கும் பொழுது ஒரே ஒரு பெரிய நிர்வாகத்திற்கு தயார் செய்யும் சிலர்ப் பற்றி கேள்விப்படுவது உன்று. அது ஆபத்தான யுக்தி என்று கூறுவார்கள். ஏனெனில் அந்த நிர்வாகத்திற்காக ஒருவர் தன்னை நன்கு தகுதிப்படுத்திக்கொண்டாலும் அந்நிர்வாகம் இவரைவிட மற்றொருவரை வேறு சில காரணங்களுக்காக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டு. சில சமயங்களில் அந்நிர்வாகம் ஆட்குறைப்புப் போன்ற பிரச்சனைகளால் யாரையும் வேலைக்கு எடுப்பதை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஒரு நிர்வாகத்தை நம்பி மற்ற நூறு நல்ல நிர்வாங்களை தவரிப்பது அறிவின்மை. ஒரே ஒன்றில் கவனம் தேவைத்தான். ஆனால் அது சூதாக மாறிவிடக் கூடாது. "Do not put all eggs in one basket" என்று கூறுவார்கள். 

நமது குழந்தைகளை ஒரே ஒரு விளையாட்டு ஒரே ஒரு கலை என்று குறிக்கிவிடக்கூடாது. அவர்களை கூடைப்பந்து, கிரிக்கேட், ஓட்டப்பந்தயம், கைப்பந்து, கால்பந்து, என்று பலவற்றை கற்க உற்சாகமூட்டலாம். ஒன்றே ஒன்று கற்றுக்கொண்டால் அதில் என்றாவது ஒருநாள் அப்பயிற்சி முடிய வாய்ப்பு இருக்கிறது. ஒன்றே ஒன்றில் மட்டும் கவனம் செலுத்துவதில் தவறில்லை. ஆனால் மற்ற அனுபவங்களை பெறுவது நன்மை பயக்கும். A range of diversified experiences is always better. 

சீட்டுக்கட்டின் வழவழப்பில்
ஒரு மாயமிருந்தது.
ஐம்பத்திரண்டு என்கிற அதன்
எண்ணிக்கையிலும் ஏதோ ஒன்று.
தலைகீழாகவும் நேராகவும் நிற்கிற
ராஜா ராணிகளின்
இதுவரை பாராத சாயல்கள்
அரசசபைக்கும் அந்தப்புரத்திற்கும்
ரகசியமாக அழைத்தன.
கெட்டபுத்தகங்களை வாசிக்கத் தரும்
பதின்வயது சினேகிதன் போல
ஜாக்கி இருந்தான்.
யாரிடமும் புகையிலை வாங்கிப்போட்டு
எப்போதும் கதை சொல்லும்
கிழவி போல பிரியமானது ஜோக்கர்.
ஆடுகிறவர்கள் நேர்த்தியில்லாமல்
அவரவர் சௌகரியப்படி அமர்ந்து
அவரவர்க்குத் தோன்றுவதைப் பேசுவது
பிடித்திருந்தது நிரம்ப.
ஜெயித்தவர்களை விட, தோற்றவர்கள்
விளையாட்டைத் தொடரும்படி  
இருந்த ஒரு வினோத அழைப்பு
சிக்கல் நூல்கண்டு போல் சவாலுடன்
அவிழ்க்கத் தூண்டியது.
பக்கத்திலிருந்த என்னிடம் கஜேந்திர மாமா
‘சீட்டைப் பார்த்துக்க மாப்ளே” என்று
சிறு நீர் கழிக்கப் போன சமயம்
சும்மாதான் கையில் எடுத்தேன்.
சூதாடியாவதற்குப் போதுமானதாக
இருந்தது அந்தச்
சும்மா என்கிற சின்னஞ் சிறு நொடி.
-வண்ணதாசன்

மேலும்: அஷோக் உரை

சௌனகர் “சில தருணங்களில் போர்கள் சூதை விட உயர்ந்தவை அரசே” என்றார். “என்ன சொல்கிறீர்கள்?” என்று சினத்துடன் தருமன் கேட்டார். “போர்கள் பருப்பொருட்களின் வல்லமையை நம்பி இயங்குபவை பருப்பொருட்கள் ஐயத்திற்கிடமற்றவை. எனவே கள்ளமற்றவை. பகடை பல்லாயிரம் வழிகளை தன்னுள் கரந்த முடிவிலா ஆழம். அதில் உறைகின்றன நாமறியாத தெய்வங்கள்.”

பரிமேலழகர் உரை
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் - அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல் - பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ? ஆகாது. (அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம்.).

மணக்குடவர் உரை
முன்பு ஒருபொருளைப் பெற்று அவ்வாசையாலே மற்றொரு பொருளினைப் பெறலாமென்று நூறு பொருளை யிழக்கின்ற சூதாடிகளுக்கு நன்றெய்தி வாழ்வதொரு நெறி உண்டாமோ?.

மு.வரதராசனார் உரை
ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.

சாலமன் பாப்பையா உரை
ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?

English Meaning - As I taught a kid - Rajesh
In gambling, a person aims at one while looses 100 times more than what he has aimed for. Is there any good thing that a gambler can attain in life? In gambling the result is purely based on chances/luck. A person not just looses money. He will loose reputation, time, work, fame, greatness, focus etc. 

This is not just applicable in gambling such lottery, games etc. It can be applied even in real life. For e.g, one person should not just prepare for one particular college admission, one particular company etc. One should be pragmatic and have plan B etc.  Because, in case of fall, one should have some boat to sail though one can always try the goal again. But we need some boat for survival

Questions that I ask to the kid
Who looses 100 while aiming 1? What does that 100 also mean?

பழகிய செல்வமும் பண்பும்

குறள் 937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
[பொருட்பால், நட்பியல், சூது]

பொருள்
பழகுதல் - பயிலுதல்; உறவுகொள்ளுதல்; பதப்படுதல்; சாதுவாதல்; இணக்கமாதல்; ஊடாடுதல்; நாட்படுதல்.
செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.
பழகிய  செல்வமும் - கற்ற கல்வியும், சான்றோர்கள் / பெரியோர்கள் நட்பும் (உறவும்)

பண்பும் - பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

கெடுக்கும்- கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

கழகத்துக் - கழகம் - கல்விபயிலும்இடம், கல்விச்சங்கம்; படை, மல்முதலியனபயிலும்இடம்; சூது; சூதாடுமிடம்; ஓலக்கம்; புலவர்கூடியசபை.

காலை - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை.

புகின் - அடைதல், தொடங்குதல், தாழ்நிலை யடைதல், உட்படுதல், அகப்படுதல்

முழுப்பொருள்
ஒரு மனிதனுக்கு செல்வம் எனப்படுவது தான் கற்ற கல்வியும், உறவாடிய நண்பர்களும், சான்றோர்களும், பெரியோர்களும் ஆகும். அது மட்டும் இன்றி அவனது இயல்பான குணமும் அவனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவற்றை பேணி காப்பது அவனது கடமையாகும்.

ஆனால் ஒருவன் சூதாடினால் அல்லது சூதில் பொழுதை கழித்தால் அது அவனுக்கு அழிவை கொடுக்கும், தாழ்நிலையை கொடுக்கும், அவனுடை செல்வங்களான கல்வி, நண்பர்கள், சான்றோர்கள் மற்றும் தன்னுடைய நற்குணத்தை இழப்பான். ஆதலால் சூதில் பங்கேற்க கூடாது.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
காலை கழகத்துப் புகின் - அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கண் கழியுமாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அக்கழிவு தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும். ('பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான் செய்து கொள்ளும் அறம் முதலியவேயன்றி முன்னோரைத் தொடங்கிவருகின்ற செல்வமும் முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம் என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
காலை கழகத்துப் புகின் - ஒருவன் அறம் பொருளின்பங்கட்குச் செலவிட வேண்டிய காலத்தில் சூதாடுகளம் புகுந்து ஆடுவானாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அது தொல்வரவாகிய பழஞ் செல்வத்தையும் நற்குணங்களையும் நீக்கும்.

களம் என்றே பொருள்படும் கழகம் என்னும் பொதுச்சொல், இங்கு இடம்பற்றிச் சூதாடு களத்தைக் குறித்தது, 'பழகிய' என்னும் அடை பண்பையுந் தழுவும், ஆதலால் பண்பென்றது இங்கு வழிமுறைப் பண்பை. முன்னோர் தேட்டு முதுசொம் எனப்படும். தான் புதிதாகச் செய்துகொள்ளும் அறம்பொருளே யன்றிமுன்னோரிடமிருந்து வழிவழி வந்த செல்வமும் நற்பண்பும் இல்லாமற்போ மென்பதாம்.

மணக்குடவர் உரை
சூதுகழகத்தின்கண்ணே காலைப்பொழுது புகுவானாயின், அது தொன்றுதொட்டு வருகின்ற செல்வத்தினையும் தமக்கியல்பாகிய குணத்தினையும் கெடுக்கும்.

மு.வரதராசனார் உரை
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.

வேண்டற்க வென்றிடினும் சூதினை

குறள் 931
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் 
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
[பொருட்பால்,நட்பியல், சூது]

பொருள் 
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டற்க - வேண்டாம் 

வென்று வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை.

வென்றிடினும் - வென்றாலும் 

சூதினை - சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி.

வென்றதூஉம் வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

தூண்டுதல் - செலுத்துதல்; ஏவுதல்; தள்ளுதல்; விளக்கைத்தூண்டுதல்; நினைப்பூட்டுதல்; செலுத்துதல்; அனுப்புதல்; கிளப்பிவிடுதல்.

பொன் - சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம்என்னும்நான்குவகைப்பட்டதங்கம்; உலோகம்; இரும்பு; செல்வம்; அணிகலன்; திருமங்கலியம்; பொன்நாணயம்; மேருமலை; பொலிவு; பசலை; ஒளி; அழகு; ஏற்றம்; திருமகள்; வியாழன்; சூரியன்; பெண்குறி.

மீன் - நீர்வாழ்உயிரி; விண்மீன்; சித்திரைநாள்; அத்தநாள்; மீனராசி; சுறா; நெய்தல்நிலப்பறை.

விழுங்குதல் - மெல்லாதுஉட்கொள்ளுதல்; கவளீகரித்தல்; தெளிவின்றிப்பேசுதல்; வெல்லுதல்; சொற்களைமழுப்புதல்; கவர்தல்; பரவுதல்; கொல்லுதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள் 
நமக்கு ஆரம்பித்தில் வெற்றியை தரக் கூடியதாகவே இருந்தாலும், நாம் என்றும் சூது விளையாட்டை நாடி செல்ல கூடாது. ஏனெனில், அந்த வெற்றியானது, மீன் தூண்டில் முனையில் உள்ள இரும்பை போன்றது. அந்த இரும்பை இரை என எண்ணி மாட்டிக்கொள்ளும் மீனை போல், சூது மூலம் வரும் வெற்றியானது நம்மை சிக்க வைத்து விடும்.

சூதினால் மகாபாரதத்தில் தர்மர், நாடு, சகோதரர், மனைவி எல்லாம் இழந்து காட்டில் ஒளிந்து வாழும் அவல நிலையும், அதை தொடர்ந்த மிக பெரிய போரும், அதன் இழப்புகளும் அனைவரும் அறிந்ததே.

சூது அத்தகைய வலிமை உடையது. வெற்றி என்னும் மாய தூண்டிலால் கவரப்பட்டு. சூது விளையாட்டில் எக்காரணம் கொண்டும் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள கூடாது என்பதே கருத்தாகும் .

பரிமேலழகர் உரை
வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும். (வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.).

மணக்குடவர் உரை
வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக; வென்று பெற்ற பொருளும் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற்போலும். இது பின் கேடுபயக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.