Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label தீவினையச்சம். Show all posts
Showing posts with label தீவினையச்சம். Show all posts

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

குறள் 210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் 
தீவினை செய்யான் எனின்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
அரும் - அரிய
கேடன் - கெட்டவன், கேடுடையவன்; அழிப்பவன்.
அருங்கேடன் - கேடுகள் தன்னைச் சூழாதவன் என்பவன் (அரும் கேடன் – கேடுகளுக்கு அரியவன், அவை இல்லாதவன்)

என்பது - என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )

அறிக - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்

மருங்கு - பக்கம்; விலாப்பக்கம்; இடை; வடிவு; எல்லை; இடம்; சுவடு; சுற்றம்; குலம்; ஒழுங்கு; செல்வம்; நூல்.

ஓடித்  - ōṭu-   5 v. intr. cf. hōḍ. [T.K. M. Tu. ōḍu.] 1. To run, flee away,pass quickly; ஓட்டமாய்ச்செல்லுதல். கூற்றங்கொண் டோடும் பொழுது (நாலடி, 120). 2. To go,as a watch; to pass, as time; to sail; செல்லுதல் திரைகட லோடியும் திரவியந்தேடு (கொன்றைவே.).3. To operate, follow, as the mind; மனம்பற்றுதல். அவனுக்குப் படிப்பில் ஓடவில்லை. 4. To extend, go far; நீளுதல் வழி மிகவோடுகிறது. 5. Tosuffer, to be distressed; வருந்துதல் ஓடியதுணர்தலும். (சிறுபாண். 214). 6. To happen, occur; நேரிடுதல் இவளுக்கோடுகிற நோவும் (ஈடு, 4, 6, ப்ர.). 7. Toturn back, retreat; to be defeated; பிறக்கிடுதல் ஓடா வம்பலர் (பெரும்பாண். 76). 8. To come off,as a ring; கழலுதல் ஓடுவளை திருத்தியும் (முல்லைப்.82). 9. To be endowed with; பொருந்துதல் கூர்மையோடம்பு (தேவா. 533, 3). 10. To be dismantled; குலைதல் (பிங்.) 11. To pass, as inthe mind; எண்ணஞ் செல்லுதல் திருவுள்ளத்தில்ஓடுகிறதறியாதே (திவ். இயற். திருவிருத். 99, வ்யா.).12. To hasten; விரைதல் அவன் எதைச் செய்யத்/  

தீவினை - பாவம்; கொடுஞ்செயல்; அக்கினிகாரியம்; தீவழிபாடு.

செய்யான் - ceyyāṉ   n. id. 1. See செய்யவன், 1. செய்யானை வெண்ணீ றணிந்தானை (திருவாச.8, 13). 2. Red, venomous centipede; செம்பூரான் Loc.  ; சிவந்தவன்; ஒருபூரான்வகை.

செய்யான்  - செய்யமாட்டான்

எனின் -என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

முழுப்பொருள்
அரும் என்றால் அரிய /அரிதான என்று பொருள். ஆதலால் மிக அரிதாக கேடு சூழப்பட்டவன் (அல்லது கேடே சூழாத) ஒருவன் இருப்பான் என்றால் அவன் யார்? நெறிநூல்கள் படி வாழ்ந்து யாதொரு தீதும் (தீவினையும்) செய்யாத ஒருவன் என்று பொருள். ஏனெனில் தீவினை செய்தவனுக்கு கேடுகள் அவனை சூழும். ஆதலால் கேடுகள் சூழாதவனை தீவினை செய்யாதவன் என்று பொருள் கொள்ளலாம். 

முற்பிறவியில் தீவினை செய்யாது இருந்திருந்தால் இம்மையில் கேடுகள் இருக்காது. இம்மையில் தீவினை செய்யாது இருந்தால் இம்மையிலும் கேடுகள் இருக்காது மறுமையிலும் கேடுகள் இருக்காது. 

முற்பிறவியில் செய்த தீவினையின் பயனை அனுபவித்து தான் ஆக வேண்டும். அதற்கு பரிகாரம் இல்லை. ஆனால் இம்மையில் தீவினை செய்யாமல் இருந்தால் இம்மையிலும் மறுமையிலும் கேடுகள் சூழாதிருக்க செய்ய முடியும். 

ஆதலால் எப்பொழுதும் தீவினை செய்யாதே. தீவினை செய்தால் அதன் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, 'சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்' (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.).
 
மணக்குடவர் உரை
ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின் தனக்குக் கேடுவருவதில்லை யென்று தானே யறிக. இது கேடில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

சாலமன் பாப்பையா உரை
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

குறள் 208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
தீயவை - தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.

செய்தார் - செய்தவர்

கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

நிழல் - சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய்

தன்னை - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

வீ-தல் - vī-   4 v. intr. prob. vī. 1. Toperish; to cease; to disappear; அழிதல். வீயாச்சிறப்பின் (புறநா. 15). 2. To die; சாதல். சிலைத்தெழுந்தார் வீந்தவிய (பு. வெ. 3, 7). 3. To leave;நீங்குதல். வினைப்பகை வீயாது பின்சென் றடும்(குறள், 207). 4. To change; to deviate, as fromone's course; மாறுதல். வானின் வீயாது சுரக்கும்(மலைபடு. 76).

வீயாது - அழியாது 

அடி – அவருடைய அடியை ஒற்றியே

அடி – பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை

உறைந்து - உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள்
ஒருவன் தீவினை செய்தால் முதலில் அவன் அவனுக்கே கேடு செய்துக்கொள்கிறான். அவன் செய்த தீவினை நிழல்ப்போல அவனை பின்தொடர்ந்து அவனை கொல்லும்/தண்டிக்கும். நிழலின் அளவு நேரத்திற்கு ஏற்ப வெளிச்சத்திற்கு ஏற்ப வெளிச்சத்தின் உயரத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆதலால் நிழல் பெரிதாகி தொலைவில் இருப்பது போலக்கூட தோன்றும். சில சமயம் மழுப்புவது போலவும் தோன்றும். ஆனால் எல்லா நிழலும் ஒருவனின் காலடியில் தான் தங்குகிறது.  அதுப்போல ஒருவன் செய்த வினை அவன் உள்ளே தான் தங்கும். ஆதலால் தீவினை செய்தால் அக்கேட்டை செய்த குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது. 

என்ற குறளையும் இங்கு தொடர்புபடுத்திக்கொள்ளலாம்.

ஒப்புமை
அகநானூற்று (49:15) வரியான, “செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழற் போல” என்பதும்,  கலித்தொகை (61:8-9)  பாடல் வரியான் “நிழல்போற்றிரி தருவாய் என்னீ பெறாததீதென்”  என்பதும் நிழல் நம்மைத் தொடர்ந்து வருதலை குறிப்பதாகிய அறிவியல் உண்மையை உணர்த்தும் சங்கப்பாடல்கள். முழுக்கருத்தையும் சொல்லும் பாடலாக , “செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே” சுந்தரரின் தேவாராப்பாடலைச் (4) சொல்லலாம். 

”நீலமா மணிநிற நிருதர் வேந்தனை
மூலநா சம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்
மேலைநாள் உயிரொடும் பிறந்து தான்விளை
காலமோர்ந் துடனுறை கடிய நோயனாள்” (கம்ப.சூர்ப்பனகை.8)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தீயவை செய்தார் கெடுதல் - பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று - ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கியதன்மைத்து. (இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, வீயாது அடி உறைந்தற்று என்ற பாடமே கரியாயிற்று. மேல் 'வீயாது பின் சென்று அடும்' என்றார்.ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.).

மணக்குடவர் உரை
தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும். மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார்.

மு.வரதராசனார் உரை
தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

குறள் 207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எனைப் -  என்ன; எவ்வளவு; எல்லாம்

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

உற்றாரும் -  உற்றார் உறவினர், சுற்றத்தார்; நண்பர்.

உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்
உய்வர் - உய்வு - உய்தி; உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும்நீங்கும்வாயில்; உய்தல்

வினைப் - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

வீ-தல் - vī-   4 v. intr. prob. vī. 1. Toperish; to cease; to disappear; அழிதல். வீயாச்சிறப்பின் (புறநா. 15). 2. To die; சாதல். சிலைத்தெழுந்தார் வீந்தவிய (பு. வெ. 3, 7). 3. To leave;நீங்குதல். வினைப்பகை வீயாது பின்சென் றடும்(குறள், 207). 4. To change; to deviate, as fromone's course; மாறுதல். வானின் வீயாது சுரக்கும்(மலைபடு. 76).

வீயாது - அழியாது

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

சென்று - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

அடும் - அடு-தல் - aṭu-   6 v. tr. [K. aḍu, M. aṭuka.]1. To cook, dress, as food, roast, fry; சமைத்தல் அமுதமடு மடைப்பள்ளி (கல்லா. 13). 2. To boil;காய்ச்சுதல். அட்டாலும் பால்சுவையிற் குன்றாது (மூதுரை, 4). 3. To melt; உருக்குதல் அட்டொளி யரத்தவாய்க் கணிகை (சீவக. 98). 4. To pound, as rice;குற்றுதல். வித்தட் டுண்டனை (புறநா. 227). 5. Toconquer, subdue, as the senses, paṣsions;வெல்லுதல். ஐம்பொறியு மட்டுயர்ந்தார் (சீவக. 1468).6. To trouble, afflict; வருத்துதல் கழிபசி நோயடக் கவலும் பூதரும் (கந்தபு. சூரனமை. 59). 7. Todestroy, consume; அழித்தல் எல்லாப் புவனமும். . . அடுபவர் (கந்தபு. ஏமகூ. 18). 8. To kill;கொல்லுதல். அடுநை யாயினும் (புறநா. 36).  

முழுப்பொருள்
எவ்வளவு பெரிய பகையை பெற்றாரும் அப்பகையில் இருந்து தப்பித்து பிழைத்துவிடக்கூடும். ஏனெனில் இரு பகைவர்கள் இணக்கமாக வாய்ப்புகள் உண்டு (மன மாற்றம், மன்னிப்பு, தூது, அரசியல் நெருக்கடிகள், வலிமை, சரண்).   ஆனால் தீவினை செய்து வந்த பகை அழியவே அழியாது. அப்பகை தீவினை செய்தவனை பின்தொடர்ந்து கொல்லும். தப்பித்து பிழைக்கவே முடியாது. ஏனெனில் அதற்கு பரிகாரம் இல்லை. ஆதலால் தீவினை செய்வதால் உனக்கு நீ கேட்டினை விதைக்கிறாய். அதைக் கண்டிப்பாய் அறுவடைசெய்வாய். ஆதலால் தீவினை செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

மஹாபாரதத்தில் தூது செல்கிற பொழுது தருமன் / யுதிஷ்டிரன் கூறுகிறான் "ஒரு எதிரிக்கு நீ கேடு செய்ய புறப்படுகிறாய் என்றால் முதலில் நீ உனக்கு கேடு செய்துகொள்கிறாய் என்றே அர்த்தம்". ஆதலால் தீவினையைச் செய்யாதே. 

வினைப்பகையை வென்றான்” என்று கம்பராமாயணப் பாடல் (ஊர்தேடுபடலம்:166) சொல்லுவதன் மூலம், தீவினையைப் பகையென்று பின்னர் வந்த கம்பரும் சொல்கிறார். சிலப்பதிகாரம், “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்” என்றும்,  “ஒழிகென ஒழியாதூட்டும் வல்வினை” என்றும், மணிமேகலை, “ உம்மை விநை வந்துருத்தல் ஒழியாது” என்றும் கூறுவது இக்குறள் கருத்தை ஒட்டித்தான். தேவார மூவருள் ஒருவரான, சுந்தரரும், “முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடும்”,  “முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய” என்பார்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“வினைப்பகையை வென்றான்” (கம்ப.ஊர்தேடு.166)

“செய்ததன் பயம்பற்று விடாது” (கலி 59:25)

“சூள்வாய்த்த மனத்தவன் வினைபொய்ப்பின் மற்றவன்
வாள்வாய்நன் றாயினும் அஃ தெரியாது விடாதேகாண்” (கலி 149:10-11)

“உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா” (நாலடி 103)

“வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுத லரிது” (நாலடி 109)

“ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம்” (சிலப்.பதிகம் 57)

“ஒழிகென ஒழியா தூட்டும் வல்வினை” (சிலப்.பதிகம் 10:171)

“உம்மை வினைவந் துருத்தல் ஒழியாது” (மணி 26:32)

“ஒளிப்பினும் ஊழ்வினை ஊட்டாது கழியாது” (இறை சூ 2 உரை)

“அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்” (சம்பந்தர்.திருநீலகண்டப் 1)

“முன்ச் செய்வினை யிம்மையில் வந்து மூடும்” (சுந்தரர்.புறம்பயம் 7)

“முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய” (சுந்தரர்.திருவிடைமருதூர் 4)

“அல்லித்தா ளற்ற போது மறாத நூ லதனைப் போலத்
தொல்லைத்தம் முடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்காப்
புல்லிக் கொண்டுயிரைச் சூழ்ந்து புக்குழிப் புக்குப் பின்னின்
றெல்லையி றுன்ப வெந்தீச் சுட்டெரித் திடுங்க ளன்றே” (சீவக 2876)

“வெவ்வினை வந்தென வருவர் மீள்வரால்...” (கம்ப.கலன்காண் 30)

“நீயயன் முதற்குலம் இதற்கொருவன் நின்றாய்
ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்தறி வமைந்தாய்
தீவினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தால்
ஏயின வுறத்தகைய இத்துணைய வேயோ” (கம்ப.இராவணன் மந்திரப் 48)

“உயிர்புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்
பழவினை புகுந்த பாடகம்போல்” (கல் 10:1-2)

பரிமேலழகர் உரை
எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும். அஃதாமாறு பின் கூறப்படும்.

மு.வரதராசனார் உரை
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
We can can escape or end the enmity in the heart. But any bad action/thing that we do to others will always hurt/kill us back badly in some or other because people will never forget what we do them. Hence, we should not do bad things in life.

Questions that I ask to the kid
Can we escape from effects of bad actions?

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

குறள் 206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
தீப் - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

பால - தரக்கூடியவற்றை

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

பிறர் - Outsiders, strangers;அன்னியர்.; அயலார்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அற்க - வேண்டாம்
செய்யற்க - செய்யாதே ; செய்ய வேண்டாம்

நோய்ப் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

பால - விளையும்

தன்னை -  தன்னைப் பற்றி; தான்;  தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

அடல் - வலிமை; வெற்றி போர் கொலை பகை மீன்வகை.

வேண்டாதான் - வேண்டாதவன்

முழுப்பொருள்
பகை, கொலை, துன்பம் ஆகியவற்றை நோயென கருதி அவற்றை விரும்பாதவன், பிறருக்கு தீயச்செயல்களை தீது விளைவிக்கும் செயல்களை செய்யக்கூடாது. ஏனெனில் நீ பிறருக்கு செய்த தீச்செயல் உண்மையிலேயே தீவினை. அத்தீவினை உன்னை வந்து தாக்கும். ஆதலால் உன்னை தற்காத்துக்கொள்ள வேண்டுமெனில் பிறருக்கு தீயவற்றை செய்யாதே.

நீ ஒன்றை அருவருத்தால் அதனை மற்றவர்களுக்கு கொடுக்காதே. நீ பிறருக்கு ஒன்றை கொடுத்தால் அதனை பிறர் உனக்கு கொடுக்க நேரிடும். அதனை ஏற்க ஆயுத்தமாக இருக்கு.

தமக்கு துன்பம் வரும் என்ற சுயநல காரணத்துக்காகவாவது, பிறருக்குத் தீமை செய்யாதே.

கலித்தொகைப் பாடல் : “ஈதலின் குறைவு காட்டாது அறனறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல” என்று கூறும். அறனறிந்து ஒழுகிய தீதிலான் என்று சொல்வதோடு நில்லாமல், அதனால் வருவது செல்வம் என்றதனால் அதுவே தீவினையற்று இருத்தலுக்கு ஒரு ஊக்கியாகிறது. அதேபோல, தீவினை செய்வதால் துன்பம் வரும் என்பதால் தீவினை விலக்கலுக்கு ஊக்கியாகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.).

மணக்குடவர் உரை
தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக. இது நோயுண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

குறள் 205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
இலன் - இல்லை; இல்லாதவன்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

தீயவை - தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.

அற்க - வேண்டாம்
செய்யற்க - செய்யாதே ; செய்ய வேண்டாம்

செய்யின் - மீறி செய்தால்

இலன் - இல்லை; இல்லாதவன்

ஆகும் - நடக்கும்; ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

மற்றும் - மேலும்; மீண்டும்.

பெயர்த்து - பின்னும்

பெயர்த்தல் - போக்குதல்; நிலைமாறச்செய்தல்; அப்புறப்படுத்துதல்; திருப்பிப்போடுதல்; பிடுங்கல்; கெடுத்தல்; ஒடுங்கிக்கொள்ளுதல்; பிரித்தல்; மீட்குதல்; வசூலித்தல்; செலுத்துதல்; விடுத்தல்.

முழுப்பொருள்
நீ வறுமையில் இருக்கிறாய் என்பதற்காக வறுமையை போக்கப் பிறருக்குத் தீயனவற்றைச் செய்யாதே. அப்படித் தீயனவற்றைச் செய்தால் நீ இன்னும் வறுமையாகிவிடுவாய்.

உதாரணமாக நீ செல்வத்தில் வறுமையாக இருந்தாலும் உன்னுடன் உன் கல்வி, உறவினர்கள் மதிப்பு என்று மற்ற செல்வங்கள் இருக்கும். ஆனால் நீ தீயவற்றை பிறருக்கு செய்தால் உன் கல்வியும் உறவினர்களும் என்று மற்ற செல்வங்களும் உன்னைவிட்டுப்போய் நீ மேலும் வறுமையில் சிக்கீத் தவிப்பாய். வரும் பிறவிகளிலும் நீ வறுமையில் தவிப்பாய். சென்றப்பிறவியில் செய்த தீவினைக்காகத் தான் இந்த பிறவியில் கஷ்டப்படுகிறாய். ஆதலால் இப்பிறவியிலும் தீவினை செய்து அடுத்தபிறவியிலும் கஷ்டப்படாதே.

குற்றம் செய்கின்றவர்கள் குற்றம் செய்வதற்கு ஒரு சப்பைக்கட்டு காரணம் வைத்திருப்பர் (உதாரணமாக மறந்து செய்துவிட்டேன், கோபத்தில் செய்துவிட்டேன், அவன் செய்ததால் நானும் செய்தேன், வறுமையில் செய்துவிட்டேன், வீட்டில் கஷ்டம்). இக்காரணங்கள் எல்லாம் பொய். கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தாங்கினால் தான் தருமம் பழக முடியும். சிலர் நினைப்பதுபோல் தருமம் தானாக வந்து மடியில் விழாது. ஆனால் தருமம் என்பது பல பிறவிகளுக்கு வந்து உன்னை காக்கப்போகிறது. உனக்கு துணைவரப்போகிற தருமத்திற்காக நீ கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும். ஆதலால் வறுமை வந்துவிட்டது என்று தயவு செய்து பிழை செய்யாதே.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இலமென்று வெஃகுதல் செய்யார்” (குறள் 174)

பரிமேலழகர் உரை
இலன் என்று தீயவை செய்யற்க -யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது. இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.

மு.வரதராசனார் உரை
யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

சாலமன் பாப்பையா உரை
தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

அறிவினுள் எல்லாந் தலையென்ப

குறள் 203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
அறிவினுள் - அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

எல்லாம் - முழுதும்

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

என்ப - என்று சொல்லப்படுவன; என்று சொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

தீய - தீமையான; போலியான.

செறுதல் -  அடக்குதல்; தடுத்தல்; சினத்தல்; வெறுத்தல்; வருத்துதல்; வெல்லுதல்; அழித்தல்; வேறுபடுதல்.

செறு - வயல்; குளம்; பாத்தி; கோபம்

செறுதொழில் - தீச்செயல்.
செறுவார்க்கும் - தீச்செயலை செய்வார்க்கும்

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்யா  -  இயற்றாமல் இருத்தல்

விடல் - விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்.

முழுப்பொருள்
நாம் பெறக்கூடிய அறிவென்பது இவ்வுலகில் பல. ஆனால் அவற்றினுள் எல்லாம் சிறந்தது எது தெரியுமா? நமக்கு தீயவற்றை செய்யும் பகைவர்க்குக்கூட தீயவற்றை கெடுதலை செய்யாது இருத்தல்.

ஏன் பகைவர்க்குக்கூட என்று சொல்ல வேண்டும் ? பகைவரிடம் தான் நமக்கு உச்சகட்ட கோவம் வரும். ஆனால் அவருக்கு கூட நாம் கெடுதல் செய்யக்கூடாது என்றால் நமது நண்பர்கள், உறவினர்கள் என்று யாராவது நமக்கு தீயது செய்தால் நாம் அதை மறந்து கடந்து செல்வதே சிறந்தது என்பதை சொல்லாமல் சொல்கிறார். நண்பரும் உறவினரும் பகைவராய் மாறினால்க்கூட இக்குறள் பொருந்தும் யார்க்கும் தீது செய்யாதே என்று.

ஏன் அறிவினுள் எல்லாம் சிறந்தது இது? ஏனெனில் பிறருக்கு தீயவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்துவிட்டால் அது நமது நிம்மதியை சிதைத்துவிடும். அதுப்போல தீது நமக்கு வேறேதும் இல்லை. ஆதலால் பிறருக்கு (அவர் நமக்கு தீது செய்யும் பகைவரானாலும்க்கூட) தீது செய்யக்கூடாது என்பதே நாம் பெறக்கூடிய அறிவினுள் எல்லாம் சிறந்தது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறிவினுள் எல்லாம் தலை என்ப - தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர், செறுவார்க்கும் தீய செய்யா விடல் - தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை. (விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத் தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாது என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை. இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.

மு.வரதராசனார் உரை
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

குறள் 201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தீவினை பாவம்; கொடுஞ்செயல்; அக்கினிகாரியம்; தீவழிபாடு.

தீவினையார் - தீவினைகளில் திளைப்பவர்கள்;

அஞ்சார் - அஞ்ச மாட்டார்கள்

விழு viḻu   adj. விழு¹-. 1. cf. vara.Excellent; sublime; சிறந்த. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லை (குறள், 162). 2. Distressing,grievous; துன்பமான. (சீவக. 2355.)

விழுமியோர் - viḻumiyōr   n. id. Excellent persons; சிறந்தோர். வானகங் கையுறினும்வேண்டார் விழுமியோர் (நாலடி, 300).

விழுமியார் - சிறந்த குணம் உடையோர்

அஞ்சுதல் - பயப்படுதல்.

அஞ்சுவர் - பயப்படுவார்கள்

தீவினை - பாவம்; கொடுஞ்செயல்; அக்கினிகாரியம்; தீவழிபாடு.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

செருக்கு - cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.

முழுப்பொருள்
தீவினை என்பது பாவச்செயல், கொடுஞ்செயல். அதனை செய்வது தீவழிபாடு ஆகும். அதன் ஊற்றுக்கண் என்பது செருக்கு. அதாவது அகங்காரம் ஆகும். நான் என்னும் அகங்காரம். நம்மை யாரும் எதுவும் கேட்க முடியாது, நாம் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்ற அகங்காரம் ஆகும்.

அத்தகைய அகங்காரத்தையும் தீவினைகளையும் கண்டு அதனை செய்யவும் அஞ்சுவார்கள் உயர்ந்த பண்புகளையும் மாண்புகளையும் உடைய சான்றோர்களும் பெரியோர்களும். ஆனால் தீவினை செய்பவர்கள் தீவினையை கண்டு அஞ்சமாட்டார்கள்.

தீவினைகளை அஞ்சுவதால் அவர்கள் அகங்காரம் தன்னை அண்ட விடாமால், தீவினை செய்யாமல் உயர்கிறார்கள். அதனாலே அவர்கள் விழுமியார்.


பரிமேலழகர் உரை
[அஃதாவது, பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல். இதனான் மெய்யின்கண் நிகழும் பாவங்கள் எல்லாம் தொகுத்து விளக்குகின்றார் ஆகலின்.இது பயன்இல சொல்லாமையின்பின் வைக்கப்பட்டது.)

தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.

மு.வரதராசனார் உரை
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

சாலமன் பாப்பையா உரை
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
Bad work/activities or terrible things are considered as Sin. The root of bad activities is EGO. Self ego makes us such that no one can question us as one thinks that we don't have to respond to anyone. Hence, such people whon't be afraid of bad activities.

Hence, the one who is scared of bad activities will focus on doing good things and build good character. They are considered as scholarly people

Questions that I ask to the kid
Root of Bad activities is EGO. Who is afraid of it? Who is not afraid of it? What does people who are afraid of this EGO/bad activities do?

தன்னைத்தான் காதல னாயின்

குறள் 209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
துன்னற்க தீவினைப் பால்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தன்னைத், தான் சுயம்
தன்னைத் தான் - ஒருவன் தன்னையே சுயமாக
காதலன் - அன்பிற்குரியவன்; தோழன்; கணவன்; மகன்
ஆயின் - அப்படி ஆனால்
எனைத்து  - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு.
ஒன்றும் - சிறிதும்

துன் - துர் - tur   a prefix signiffing difficult, bad, evil, ill (opp. to சற், சன்). Before a consonant the ர் is often changed into a homogeneous letter (as in துஷ் கிருத்தியம், துன்மார்க்கம்,; துன்னாற்றம்).
ur
துன் - s. A prefix used in combination signifying evil, ill, bad, deficient; it is often changed to ற், before the hard let ters, to ன் before the soft, as துன்மார்க்கம். Before இடையினம், there is no change. Sometimes ர் is dropped and the relative letter takes its place--as துச்சரிதம், ஒருபசர்க் கை. (See துஷ்.) W. p. 414. DUR.

துன்னற்க - பிறர்க்கு துன்பம் நினைக்காதே, துன்பம் கொடுக்கும் செயல்களை செய்யாதே
தீவினைப் - பாவம்; கொடுஞ்செயல்; அக்கினிகாரியம்; தீவழிபாடு
பால் - குழவி, குட்டி முதலியவற்றை ஊட்டத் தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான நீர்மப் பொருள்; பிணத்தை அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற்பாலும் நவதானியமும் சேர்த்துத் தெளிக்கும் சடங்கு; மரம் முதலியவற்றிலிருந்து வடியும் நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மை முதலியவற்றிலிருந்து கசியும் சீழ்; பிரித்துக் கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமை பன்மை என்ற இருவகைப் பாகுபாடு; அகத்திணை புறத்திணை என்ற பாகுபாடு; இடையர் குறும்பர்களின் வகை.

முழுப்பொருள்
பிறர்மீது அன்பு செலுத்துவது என்பது இயற்கை. தாய் நம்மை பாலூட்டி அரவணைத்து அன்பு செலுத்துவதனால் அன்பு செலுத்துகிறோம், தந்தை நம்மை பேணி காக்கிறார்கள் என்பதனால் அன்பு செலுத்துகிறோம், நமது மனைவி/கணவன் மீது அவரின் குணங்களினாலும் அவரின் பால் கொண்ட காமத்தினாலும் அன்பு செலுத்துகிறோம், நமக்கு பிறந்த குழந்தை ஆயிற்று என்பதனால் அன்பு செலுத்துகிறோம், நமது நண்பர்கள், உறவினர்கள், அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள் என்பதனால் அன்பு செலுத்துகிறோம். ஆதலால் பிறர் மீது அன்பு செலுத்துவதில் ஆச்சர்யமில்லை. அது மட்டும் இன்றி நமக்கு பிறரை பற்றிய முழுதும் தெரியாது. அவர்களின் நற்குணங்களை மட்டும் எண்ணி அவர் மீது அன்பு செலுத்துகிறோம்.

ஆனால் நம்மை நாம் அவ்வளவு எளிதாக உயர்வாக எண்ணிக்கொள்வது இல்லை. ஆதலால் நாம் நம்மை காதலிப்பது இல்லை. ஏன் என்றால் நமக்கு தெரியும் நாம் செய்த தவறுகள் எண்ணவென்று. ஆதலால் நம்மை நாம் அவ்வளவு நேசிப்பதில்லை.

நம்மை நாம் நேசிக்கவேண்டும் என்றால் நம்மை பற்றிய உயர்வான எண்ணங்களே நம்மிடம் இருக்க வேண்டும். நம்மை பற்றிய கீழ்மைகள் நம்மிடம் இருக்க கூடாது. கீழ்மை செய்தால் தான் கீழ்மையான எண்ணங்கள் வரும். ஆதலால், தன்னை தான் நேசித்துக்கொள்வதற்கு தனக்கும் சரி பிறர்க்கும் சரி துன்பம் தரும் செயல்களை சிறிதளவாயினும் ஒருபொழுதும் செய்யக்கூடாது.  தனக்கு தன்பம் தருவது என்பது உடலை பேணானது, மனதை பேணானது, எண்ணங்களை பேணாதது, நேரத்தை போற்றிப் பேணாதது, ஒழுக்கத்தைப் பேணாதது, அறத்தை பேணாதது, அடக்கத்தைப் பேணாதது என்று பலவற்றை சொல்லலாம். பிறர்க்கு தீங்கு என்பது உடல் முதல் மனம் வரை செய்யப்படும் தீங்கு பலவற்றை சொல்லலாம்.

மேலும் 
குறிப்பு: தீய செயல் செய்யுங் காலத்துப் பிறருக்குத் துன்பம் உண்டாக்குவதாகத் தோற்றினும் விளையுங்கலாத்துத் தனக்கே துன்பந் தருதலின் அது விலக்குதற்குரியது என்றவாறு.

எழுத்தாளர் வண்ணதாசனின் ஒரு கவிதையை வாசித்தேன்.. இக்குறள் நினைவுக்கு வந்தது. பிறருக்கு துன்பம் தறாத வாழ்க்கை எவ்வளவு மகத்தானது
தான் பிடித்த 
பட்டாம்பூச்சியை
அதன் சந்தோஷம் மாறாமல்
இன்னொரு கைகளுக்கு
மாற்ற முடிந்தவர்கள்
பாக்கியசாலிகள்
- வண்ணதாசன் (எ) கல்யாண்ஜி

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக. இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.

எழுத்தாளர் லதா என்பவர் கழிவறை இருக்கை என்ற ஒரு கட்டுரை தொகுப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக கலவி (sex) பற்றியும், பெண்ணியம் பற்றியும் ஒரு புத்தகம். பொதுவெளியில் உடலுறவு/கலவி பற்றிப் பேசாத சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு நல்ல நூல். அதில் இருந்து சுய அன்பு/சுய மரியாதை பற்றிய சில பத்திகள் கீழே (அத்தியாயம் - 8 இல் இருந்து) (இது இக்குறளுக்கு முற்றும் சம்மந்தாமான பத்திகள் இல்லை. ஆனால் தன்னை ஒரு காதலிக்கு அன்பு எவ்வளவு முக்கியம். அதற்கு பெற்றோர், ஆசிரியர், சமூகம் செய்ய வேண்டியவை யாவை என்ற கோணத்தில் இருந்து. எல்லாவற்றையும் ஒருவரே செய்து விட முடியாதே. சூழ்நிலைகளுக்கும், சந்தர்ப்பங்களும் முக்கியம் தானே)

நம் மேலான சுய-அன்பையும் மரியாதையையும் அறவே ஒழித்துவிட்டு, மற்றவர்களிடம் அன்புடனும் மரியாதையுடனும் இருக்குமாறு நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுவது என்பது துயரமானதாகும் (உண்மையில் துயரம் என்பது குறைந்த மதிப்பீடே!). இந்தக்காரணத்தால், நாம் மற்றவர்களிடம் அன்பையும், மரியாதையையும் எதிர்பார்க்கிறோம். உண்மையில், நாம் அன்புக்கும் மரியாதைக்கும் யாசித்துக் கொண்டிருக்கின்றோம். நம்மீது அன்பையும் மரியாதையும் செலுத்த, நாம் மற்றவர்களையும் நிர்ப்பந்திக்கிறோம்.    

இந்த ஆழமான கருத்தைச் சிலர் மேலோட்டமாகப் பார்க்க முயன்று புரியாமல் போவதால், இது ஒரு புரியாத் தத்துவம் என கடந்து போக நினைக்கலாம். எனவே நாம் அதை வேறு கோணத்திலும் பார்ப்போம்.  எத்தனை பெற்றோர், ஆசிரியர், நண்பர், சுற்றத்தார், குழந்தைகளுக்குச் சுய அன்பு மற்றும் சுயமரியாதை குறித்து போதிக்கின்றனர்? நம் நாட்டில், சுய இன்பம் மட்டுமே விலக்கப்பட்ட விஷயமன்று; சுய அன்பும், சுயமரியாதையும் கூட விலக்கப்பட்ட விஷயங்களே! ‘சுய அன்பு’ என்பது ‘சுயநலம்’ என்றும், ‘சுயமரியாதை’ என்பது ‘அகங்காரம்’ என்றும் நிலைநிறுத்தப் படுகின்றன. இவை கட்டாயமாக வெவ்வேறானவை; ஆயினும், நம்மில் எத்தனை பேர் இதை உணர்ந்துள்ளோம்? 

ஒருவரின் செல்வம் முழுவதையும் அழித்துவிட்டு அவர் தான தருமம் செய்யவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க இயலும்? நம் எதிர்பார்ப்பில் ஒரு நியாயம் இருக்க வேண்டுமல்லவா? நான்  எத்துணை பணிவானவன் என மற்றவருக்குக் காட்ட நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தி என்னைச் செய்ய வைக்குமிடத்தில், நான் எப்படி என் சுய-அன்பையும் சுயமரியாதையையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்? மற்றவரின் வற்புறுத்தல் படி நான் வாழத்தொடங்கும் பொழுதே இவை எல்லாவற்றையும் நான் தொலைத்து விடுகிறேன். ஒவ்வோர் ஆன்மாவும் இங்குக் காற்றை போல் சுதந்திரமானது. ஆனால் அந்த ஆன்மாவை மற்றவருக்கு ஏற்றாற்போல் வடிவமைக்க முற்படுகையில் அங்கு ஆன்மா மரணித்து விடுகிறது. இப்படித் தொலைத்ததைத் தொலைத்ததைத் தேடித்தான் தன்னையே தேடுவதற்காகச் சிலர் ஆன்மிகம் என்ற பாதையை பிற்காலத்தில் நாடுகிறார்கள்.  வாழ்வே மாயம் எனத் தோன்ற ஆரம்பிக்கிறது. இந்த உலகின் சூதும் வாதும் புரியாத நிர்மலமான வயதில் தொலைத்ததை இனி எங்கே சென்று தேடுவது? 

அன்பில்லா இதயம் மட்டுமே சுயநல இதயமாகிறது. நம் உள்ளத்தில் அன்பு இல்லை என்று தெரியும். அதனாலேயே, மற்றவர்களுடைய இதயங்களிலும் அன்பு இல்லை என்று நினைக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், தத்தம் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்து கொள்ளும் முறை ஏற்படுகிறது. அதனால் நான் சுயநலவாதியாகிறேன். என்மேல் எனக்கு மரியாதை இல்லை, அதனால் மற்றவரும் என்னை மதிக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நான் மதிக்கப்பட வேண்டியவன் என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, நான் அகந்தை உடையவன் ஆகிறேன். சுய அன்பும், சுயமரியாதையும் இல்லாத காரணத்தால் உண்டாகும் மாயையே இது. 

பெற்றோர், ஆசிரியர், மூத்தோர் ஆகிய நாம், அன்பும் மரியாதையும் கொண்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளல் வேண்டும். குழந்தைகள், இதை உள்ளுணர்வில் அறிந்துகொண்டு, இயல்பாகவே அன்புள்ளத்துடனும், மற்றவரை மதிக்கும் குணமுடையவர்களாகவும் இருப்பர். அன்பையும், மரியாதையையும் வெறும் சொற்களால் கற்றுத்தரத் தேவையில்லை. தங்களுடைய பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைகள், உண்மையாகவே, அவர்கள் வாழ்வில் காணும் ஒவ்வோர் ஆண் பெண்ணுடனும் அன்புடன் இருப்பார்கள். செயல்கள், சொற்களை விட உரக்கப் பேசும் என்பதை அறிந்திருக்கிறோம்.  என்னைக்கேட்டால், “செயல் ஒன்றே போதுமானது; மற்றவை தன்னிச்சையாக அதனதன் இடத்தில் அமர்ந்துகொள்ளும்” என்பேன்.

அன்பையும் மரியாதையையும் எப்போதும் கற்றுக்கொடுக்க வேண்டியதுமில்லை; அதற்கான தேவையும் இல்லை. எப்படி ஒரு ரோஜா பூக்கும் சமயத்தில் அதன் மணத்தையும் கொண்டுவருகிறதோ, அப்படியே, ஒரு குழந்தை பிறக்கும் போது, அன்பையும் கொண்டுவருகிறது.

English Meaning - As I taught a kid - Rajesh
If you want to love yourself, even if small do not even think and do not anything bad to others or yourself. Because if you do something bad your heart/conscience itself will burn/kill you

Questions that I ask to the kid
In order to love yourself, what should you do and not do? Why (because conscience will know)?

மறந்தும் பிறன்கேடு சூழற்க

குறள் 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
மற-த்தல் - 12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

மறந்தும் - மறதியுலும், நினைவில் கொள்ளாமல் கூட, உறக்கத்தில் கூட

பிறன் - மற்றவர்களுக்கு

கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

சூழல் - s. (சூழ்) a small-hill; 2. a company; 3. an incarnation, அவதாரம்; 4. a trick or stratagem, தந்திரம்; 5. consultation; 6. deliberation, thought; reflection
s. Thought, reflection, கருத்து. 2. Purpose, intention, design, குறிப்பு. 3. Place, location, position, இடம். 4. Collec tion, group, clump, assemblage, கூட்டம். (p.) See under சூழ், v.

சூழற்க! - நினைக்காதே. அந்த எண்ணத்தை ஒழித்து விடு

சூழின் - மீறி அப்படி நினைத்தால் 

அறம் -> தன்னறம் (தன்னுடைய அறம்) -  தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல், ஒழுக்கம்,

சூழும் - அவதரித்து, தந்திரத்தால்

சூழ்ந்தவன் - கேடு நினைத்தவனுக்கு, கேடு எண்ணியவனுக்கு

கேடு - கேடு விளைவாகும்

முழுப்பொருள்
பொதுவாகவே நாம் மற்றவருக்கு கேடு நினைத்தல் தவறு. ஆனால் திருவள்ளுவர் ஒரு படி மேலே சென்று மறந்தும் கூட கனவிலும் கூட மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காதீர் என்கிறார். ஒரு வேளை மறந்து தீங்கு நினைத்தால் அதனை உடனே மனதில் இருந்து ஒழித்து விடுக. கண்டிப்பாக பிறருக்கு தீங்கு செய்யாதே. அப்படி அல்லாமல் மற்றவர்களுக்கு தீங்கு நினைத்தாலோ அல்லது செய்தாலோ, அறம் அதாவது கருமம் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஆதலால் கனவிலும் மற்றவருக்கு கேடு நினைக்காதீர்.

உதாரணமாக சொன்னால் ஒரு விவசாயி பயிர்கள் நன்கு விளையவேண்டும் என்பதற்காக ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தால் அதனை உண்ணும் மனிதர்களுக்கு கேடு ஏற்படும். சில காலம் கிடைக்கும் வருமானத்திற்காக இதை செய்தால் சில காலத்தில் அந்த விவசாய நிலம் பூச்சிகொல்லிகளை பயன்படுத்தியதால் கெட்டுப்போகும். மேலும் பூச்சிகொல்லிகள் இருப்பதால் பூச்சிகள் பறவைகள் வராமல் மகரந்த சேர்க்கை நடக்காமல் செடிகள் பூக்காது பழங்களையும் தானியங்களை தராது. அதனால் தான் மறந்து பிறன்கேடு செய்யாதே என்றார் திருவள்ளுவர். ஏனெனில் விளைவுகள் உனக்கே ஆபத்தாக முடியும்.

குறிப்பு: இதனால் தான் என்னவோ மனசு படி தான் எல்லாம் நடக்கும் என்று சொல்கிறார்களோ என்னவோ. சில நேரம் நான் நினைப்பது உண்டு. நாம் மற்றவர் பற்றி நினைத்துக்கொண்டு நம் வாழ்வை தொலைத்து விடுகிறோம். அவர்களை பற்றிய வெறுப்பை கக்கி நமது மகிழ்ச்சியை சிதைத்துக்கொள்கிறோம். இதற்கு மாறாக நாம் நமது முன்னேற்றத்திலும் ஆக்கப்பூர்வமான செயல்களில் நேரத்தை செலவு செய்தால் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் கிட்டும் என்று.


ஒப்புமை
”விட்டனன் இலங்கை தன்மேல் விண்ணுற விரிந்த மாடம்
பட்டன பொடிக ளான பகுத்தன பாங்கு நின்ற
சுட்டனபொறிகள் பின்னைத் துளங்கினர் அரக்கர் தாமும்
கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்” (கம்ப.பொழிலிறுத்த 54)

“ஈண்டிவ் வண்டத்துள் இராக்கதர் எனும்பெய ரெல்லாம்
மூண்டு வந்தது தீவினை முன்னின்று முடுக
மாண்டு வீழும் இன் றென்கின்ற தென்மதி வலியூழ்
தூண்டு கின்றதென் றடிமலர் தொழுதவன் சொன்னான்” (கம்ப.மூலபல 33)

பரிமேலழகர் உரை
பிறன் கேடு மறந்தும் சூழற்க - ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். ('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும். இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.
(நன்றி கவிப்புயல் இனியவன்)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறன்கேடு மறந்தும் சூழற்க-ஒருவன் பிறனுக்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணாதிருக்க; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-எவனேனும் எண்ணின், எண்ணினவனுக்குக் கேட்டை அறத்தெய்வமே செய்ய எண்ணும்.

தப்பாது பழிக்குப் பழிவாங்க வலிமை மிக்க அறத் தெய்வம் உடனிருத்தலால், ஒருவனுக்குத் தீங்கை எண்ணுதலும் ஆகாது என்பதாம்.

பொருள்: மறந்தும் பிறன் கேடு சூழற்க - (ஒருவன்) மறந்தும் பிறனது கேட்டை எண்ணற்க; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - (பிறனது கேட்டை) எண்ணின் (அவ்வாறு) எண்ணியவனது கேட்டை அறக் கடவுள் எண்ணும்.

கருத்து: பிறன் கேட்டைக் கருதியவனுக்குக் கடவுள் கேடு நினைப்பர்.

மு.வ உரை
பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்

சாலமன் பாப்பையா உரை
மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
தனை மறந்த நிலையினிலும் பிறர்க்குத் தீங்கைத்
தான் செய்ய ஒரு காலும் எண்ணிடாதீர்
அதை மறந்து தீங்கதனைச் செய்தீர் என்றால்
அறம் செய்யும் தீங்கதனைச் செய்தவர்க்கு
நிதம் இதை மனதினிலே கொண்டு விட்டால்
நிம்மதியாய் வாழ்ந்திடலாம் அதனை விட்டு
அறம் நம்மைச் சூழ்ந்து நின்று தீங்கைத் தரும்
அதை உணர்வீர் யார்க்கும் தீங்கு செய்ய வேண்டாம்

தீயவை தீய பயத்தலால்

குறள் 202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
[அறத்துப்பால்ம, இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
தீயவை – தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.

தீய – தீமையான; போலியான

பயத்தலால் பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

தீயவை – தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.

தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

தீயினும் – சுட்டு பொசுக்கி நீராக்கிவிடும் வெந்தீயைக் காட்டிலும் கொடியதாகச் சுடுமென

அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சப்படும் – பயப்படப்படும்

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
தீமை பயக்கும் செயல்கள் பழிச் செயல் என்றும் பாவம் என்றும் வழங்கப்படுகின்றன. செயல்கள் எதிலும் தீமை என்பது இல்லை. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றால் எண்ணம், சொல், செயல்கள், ஆகிய மூன்றுவகை வினைகளை ஆற்றுகிறோம். எந்த வினையானாலும் தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும் பிற்காலத்திலும், உடலுக்கும், மனத்துக்கும் துன்பம் எழாதபடி அளவோடும் முறையோடும் காத்துக் கொண்டால், அதுவே அறவழியாகும், நல்வினைகள் ஆகும். அவ்வாறன்றி நமது செயல் தனக்கோ பிறர்க்கோ, உடலுக்கோ மனத்துக்கோ துன்பம் விளைக்குமேயானால் அதுவே பழிச்செயல். இத்தகைய தீய செயல்கள்தான் துன்பத்தை விளைவித்து இறைஞானம் பெறுவதைத் தடை செய்கிறது. தீயைக் கண்டு எவ்வாறு அஞ்சியும், ஒதுங்கியும் நிற்கிறோமோ அதுபோல தீய விளைவுகளையும் கண்டு அஞ்சிச் செயலாற்றி நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்று கூறுகிறது இந்தக் குறள்

மேலும்: அஷோக்

ஆத்திச்சூடி
இயல்பு அலாதன செய்யேல்.
அழகு அலாதன செய்யேல்.
கீழ்மை அகற்று
நன்மை கடைப்பிடி
நுண்மை நுகரேல்
தீவினை அகற்று
நைவினை நணுகேல்
குணமது கைவிடேல்
கெடுப்பது ஓழி
கோதாட்டு ஒழி
கௌவை அகற்று
மனம் தடுமாறேல்.
மோகத்தை முனி.
வேண்டி வினை செயேல்.
வெட்டெனப் பேசேல்.
உத்தமனாய் இரு.
வாது முற்கூறேல்.
முனைமுகத்து நில்லேல்.
மூர்க்கரோடு இணங்கேல்.
துன்பத்திற்கு இடம் கொடேல்.
சூது விரும்பேல்
செய்வன திருந்தச் செய்
நிலையில் பிரியேல்
பிழைபடச் சொல்லேல்.
தூக்கி வினை செய்.
சுளிக்கச் சொல்லேல்
கொள்ளை விரும்பேல்
ஞயம்பட உரை
கடிவது மற.
ஔவியம் பேசேல்
இணக்கம் அறிந்து இணங்கு
வஞ்சகம் பேசேல்.

எனக்கு தர்மம் எதுவென்று நன்றாகத் தெரிகிறது. ஆனால் என் மனம் தர்மவழி செல்ல மறுக்கிறது. அதர்மம் எதுவென்று நன்கு அறிந்திருந்தும் என்னால் அதர்மத்தை விட்டு விலக முடியவில்லை. என்னுள் மிகவும் சக்திவாய்ந்த ஏதோவொன்று இருந்துகொண்டு என்னை தர்மத்தைச் செய்யவிடாமலும் அதர்மத்தைச் செய்யும்படியும் தூண்டுகிறது” - என்று துரியோதனன் தன் தீய செயல்களை நியாயப்படுத்துகிறான்.

பாபத்தின் பயன் துன்பம் என்று மனிதன் நன்கு அறிவான். இப்பொழுது ஆற்றும் பாபச்செயல் இன்பமாக இருந்தாலும் இனிய பயனைத் தந்தாலும் பிற்காலத்தில் நிச்சயம் துன்பம் விளைவிக்கும். ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்பது உறுதி. காரியகாரண சம்பந்தம் உடனே வெளிச்சமாகாவிட்டாலும் பாபச்செயலின் விளைவிலிருந்து மனிதன் தப்ப முடியாது. ஏனெனில் ‘அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.’ இயற்கையின் நியதி இதுவே. ஆகையால் தீவினை தவிர்க்கப்படவேண்டும். பாபச் செயல்கள் செய்ய அஞ்சவேண்டும். திருவள்ளுவரும் ‘தீவினையச்சம்’ பற்றி குறிப்பிடுகையில்

தீயினும் அஞ்சப் படும் தீயவை தீய பயத்தலால் தீயவை
என்று கூறுகிறார்.
மாறாக அறம் செய்ய விரும்ப வேண்டும். அறவழி நடப்பவன் பயமறியமாட்டான்.

இதையேதான், ‘அறம் செய விரும்பு’ என்று தன் ஆத்தி சூடியில் முதல்வரியிலேயே சொன்னார் ஔவை மூதாட்டி.

ஆயினும் ஒரு நோயாளி உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று அறிந்தும் சபலப்பட்டு தகாத, உடலுக்கு ஒவ்வாத உணவை உண்டு விடுவது போல மனிதன் தெரிந்தே ஏன் தவறு செய்கிறான் என்பது அர்ஜுனனின் கேள்வி.

பரிமேலழகர் உரை
தீயவை தீய பயத்தலான்-தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான்; தீயவை தீயினும் அஞ்சப்படும் - அத்தன்மையவாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். 
விளக்கம்
(பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தீய தீயவே பயத்தலால்-ஒருவன் தனக்கின்பங் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமையிலும் துன்பங்களையே தருதலால்; தீயவை தீயினும் அஞ்சப்படும்-அத்தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப்படத்தக்கனவாம்.

தீயானது தொட்டவரைச் சுடினும் எரிப்பினும், சமைத்தலும் குளிர் போக்கலும் நோய் நீக்கலும் கொடுவிலங்கு விரட்டலுமாகிய நன்மைகளையுஞ் செய்தலாலும்; தீவினையானது செய்த காலத்தில் மட்டுமன்றிப் பின்பு வேறொரு காலத்திலும் வேறொரிடத்திலும் வேறோ ருடம்பிலுஞ் சென்று சுடுதலாலும், எவ்வகை நன்மையுஞ் செய்யாமையாலும்; 'தீயவை தீயினும் அஞ்சப்படும்' என்றார். தீவினை நன்மை செய்யாமை பற்றியே 'தீயவே' என்னும் பாடம் இங்குக் கொள்ளப்பட்டது.

மணக்குடவர் உரை
தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.

மு.வரதராசனார் உரை
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

சாலமன் பாப்பையா உரை
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

தீயவே தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும்
பொருள்: தீய தீயவே பயத்தலால் - தீ வினைகள் தீய பயன்களையே விளைத்தலால், தீயவை தீயினும் அஞ்ச படும்-(ஒருவன்) தீய வினைகளைத் தீயினும் மிக அஞ்ச வேண்டும்.

அகலம்: தீயானது தீயவும் நல்லவும் பயத்தலானும், தீய வினை தீயவே பயத்தலானும், தீய வினைகளைத் தீயினும் அஞ்ச வேண்டும் என்றார். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘தீயவை தீய’. அது பிழைபட்ட பாடம், ‘ஏ’ இன்றியமை யாத தாகலான்.

நன்றி: Moving Moon
உலகினில் வாழும் எவ்வோர்
.. உயிர்க்குமே உதவா வண்ணம்
நலமெலாம் அழிக்கும் தீதால்
.. நன்மைகள் கிடையா தென்றும்;
பலவித அழிவைத் தூண்டும்
.. பண்பிலார் செய்தீஞ் செய்கை
அலைதழல் தீயின் மேலாய்
.. அளவிலா அச்சம் சேர்க்கும்

தனக்கு இன்பம் தரும் என்று எண்ணி ஒருவன் ஒருவன் செய்யும் தீய செயல்கள் பின் தீமையே தருதலால் அத்தகைய தீயசெயல்கள் நெருப்பைக் காட்டிலும் கொடியன என்று அஞ்சி அவற்றை விலக்க வேண்டும் .

Thirukkural - Management - Values
Be a person of values, as a person is known for and by his values. “Values,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 1319), “are morals or professional standards of behavior, principles.” “Values are relatively permanent desires that seem to be good in themselves,” (Stoner, 1995). Keep away from bad things as indulging in bad things brings more bad things to one's life. Valluvar warns us through Kural 202 that bad things, events or people are feared more than fire as the damage caused by bad things is more dangerous and irreversible. Bad things do more harm or damage than fire. People with values will not do valueless things. So, value people with value more than people without values.

Fear evil more than fire
As sin tends to sin.