Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label நிறையழிதல். Show all posts
Showing posts with label நிறையழிதல். Show all posts

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ

 

குறள் 1260
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்] 

பொருள்
நிணம் - கொழுப்பு; ஊன்; ஊனீர்.

தீயில் - தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

இட்டு - தொடங்கி; காரணமாக; ஓர்அசை; சிறுமை

அன்ன -  அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

இட்டன்ன - இட்டார்போல

நெஞ்சினார்க்கு - நெஞ்சில் உள்ளவர்க்கு

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்
உண்டோ - இருக்கிறதா ?

புணர்ந்து - புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள்

ஊடி - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்

நிற்பேம் - நில்லுதல் - நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

எனல் - என்று சொல்லல் ; அது போல் இருத்தல்

முழுப்பொருள்
இக்காலத்தில் பசு’வில் பாலில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பே நெய் என கருதப்படுகிறது. ஆனால் பொதுவாக ஊனில் இருந்து கொழுப்பு எடுக்கப்படுகிறது. அக்கொழுப்பை ஊன் நெய் என்பர். தேங்காய், நிலக்கடலை(மள்ளாட்டை), எள் போன்றவற்றின் ஊனில் இருந்தும் கொழுப்பு அதாவது எண்ணெய் எடுக்கப்படுகிறது. சரி, குறளுக்கு செல்லலாம்.

தீயின் பசி எல்லையற்றது. தீ எத்தகைய அழுக்கினையும்(மாசு)  அழித்துவிடும். ஊன் நெய்யை தீயில் இட்டால், நெய்யை உண்டு தீ மேலும் வளரும். அதுப்போல என்னுடைய நெஞ்சிற்கு இனியவரானவர் கூட விரும்பி நான் ஊட விரும்பினால் அங்கு என் ஊடல் நிற்க முடியுமா என்ன? தலைவன் முன் பிணங்கிப் பிரியமுடியுமா என்ன? அங்கு நான் நெய்போல் உருகி ஊடலை விட்டொழிந்து கூடிப் புணர்வேன். நிறையழியும். இன்பம் பெருகும் என்று தலைவி கூறுகிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு - நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ - அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது. (புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று', என்பதாம்.).

மணக்குடவர் உரை
தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?.

மு.வரதராசனார் உரை
கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?.

சாலமன் பாப்பையா உரை
கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?.

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

 

குறள் 1259
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்] 

பொருள்
புலப்படுதல் - தெரிதல்; வெளிப்படுதல்.

புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.

புலப்பல் - பிரிந்து சென்றார் திரும்புகையில் பிணங்கி இருப்போம்

எனச் - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

சென்றேன் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

புல்லினேன் -  புல்லுதல் - ழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

நெஞ்சம் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

கலத்தல்  - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

உறுவது - Thatwhich happens; சம்பவிப்பது. , வரற்பாலது; 2. That whichaccrues; gain; இலாபம் உறுவதும் . . . பேதைகளோர்கிலரே (திருநூற். 13). 3. That which resembles; ஒப்பது. இமையவர்களுலக முறுவதுவே(சீவக. 1780). 4. That which is proper; தகுவது.உறுவதாவது . . . குடக்கூத்தனுக் காட்செய்வதே (திவ்.திருவாய். 4, 10, 10). 
உறுவது - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

கண்டு காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

முழுப்பொருள்
தலைவனின் பிரிவின் பொழுது தலைவி நானோ வருந்திக்கொண்டு இருந்தேன். பிரிந்து சென்ற தலைவன் திரும்பிவந்தான். வந்த உடன் தலைவனுடன் ஊட வேண்டும் என்றே அவரிடம் சென்றேன். ஆனால் அடக்கமில்லா என் நெஞ்சமோ அவருடன் கலக்கவேண்டும் என்று விழைந்தது. ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல் அவரை தழுவி புணர்ந்தேன். நிறை அழிந்தது. இன்பம் அடைந்தேன் என்று தலைவி கூறுகிறாள்.

கலித்தொகைப் பாடல் வரிகள் “புலப்பென்யான் என்பேன்மன் அந்நிலையே அவர்க்காணிற் கலப்பென்” (67:8-9) என்று குறள் கருத்தையே கூறுவதிலிருந்து, சங்ககாலப் புலவர்கள் மற்ற புலவர்களது, கருத்துக்களை மேற்கோள்களாக தமது படைப்புகளில் பயன்படுத்தியதையே காட்டுகிறது. இதில் யார் முன்னவர், யார் பின்னவர் என்கிற ஆராய்ச்சி தேவையில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன் (வாயாமை - புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.).

மணக்குடவர் உரை
புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன்: நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு. இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது

மு.வரதராசனார் உரை
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.

சாலமன் பாப்பையா உரை
அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்

 

குறள் 1257
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்] 

பொருள்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

ஒன்றோ -  part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682).

அறிதல் -  உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அலம் - துன்பம்; தேள் விருச்சிகராசி; அமைவு போதும் திருப்தி கலப்பை நீர்
அறியலம் - அறியவில்லை

காமத்தான் - காமம் -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்

பேணியார் -  என்னால் விரும்பப்படுபவர்

பெட்பக் - s. desire, lust, ஆசை; peṭpa   adv. பெள்-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662). peṭpa   adv. பெள்-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662).

பெட்பு - பெருமை; விருப்பம்; அன்பு; தன்மை; பேணுகை; பாதுகாப்பு.

செயின் - செய்தால்

செய்தல்  - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

முழுப்பொருள்
நாணம் என்றால் வெட்கம். ஒருவித கூச்சம் என்று பொருள். நாணம் என்பது பெண்கள் கொள்ளவேண்டிய (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய) நாற்பண்புகளில் ஒன்று. தான் திருமணம் செய்துக்கொள்ளப்போகிற ஆணிடம் திருமணத்திற்கு  முன்பு தனது நிறையை(கற்பை) காப்பாற்றிக்கொள்ள நாணத்தை பயன்படுத்துவர். 

நான் விரும்பிய என் காதலருடன் கூடி இருக்கும் ஒரு பொழுதில் நான் உள்ளுர விரும்பியதையே என் காதலரும் செய்தார். அப்பொழுது நாணமென ஒன்று உண்டெனவோ அல்லது நிறையென ஒன்றை இழந்தேன் என்பதையே  நான் அறியவில்லை/உணரவில்லை என்று கூறுகிறாள் காதலி/தலைவி. காதலனும் காதலியும் கலவி விழைந்தார்கள். ஆதலால் நாணத்தையும் நிறையினையும் மறந்தார்கள் அவர்கள். 

ஆசை மலர தன்னையும் நாணத்தையும் மறந்து கலவி நிகழ நிறை இழந்து காதல் வென்றது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணியார் காமத்தாற் பெட்பசெயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம். ('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.).

மணக்குடவர் உரை
நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின். அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகா தென்றவாறு.

மு.வரதராசனார் உரை
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.

சாலமன் பாப்பையா உரை
என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.

செற்றவர் பின்சேறல் வேண்டி

குறள் 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்] 

பொருள்
செற்றவர் - ceṟṟavar   n. செறு¹-. See செற்றார் செற்றவர் புரங்கண் மூன்றுந் தீயெழச் செறுவர்போலும் (தேவா. 476, 3).  

செற்றார் - ceṟṟār   n. id. Enemies; பகைவர். செற்றார் செயக்கிடந்த தில் (குறள், 446).

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

சேறல் -  சென்று சேர்தல் 

வேண்டி - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

அளித்து - அளித்தல் - காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல் சொல்லுதல்

அரோ!-  arō   . A poetic expletive, அசை ச்சொல், as கூறுவாமரோ, we will speak. (p.)  

எற்று - எற்றுகை; எத்தன்மையது; வியப்பிரக்கக்குறிப்புச்சொல்.
எற்று - eṟṟu   III. v. t. cast, throw off, jerk away, kick away, எறி; 2. kill, கொல்லு; 3. pierce, stab, குத்து; 4. hit with the fist, குத்து; v. i. cease, நீங்கு; 2. feel pity, இரங்கு.

என்னை - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு.

உற்ற -  adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty.

துயர் - துன்பம்; அரசர்க்குஉரியசூதுமுதலாகியவிதனம்.

முழுப்பொருள்
தலைவன் தலைவியை விட்டு பிரிந்து சென்று இருக்கிறான். ஆதலால் தலைவி தலைவன் மேல் கோபத்தில் இருக்கிறாள். ஆனால் அகன்று சென்ற தலைவன் பின் என்னை விரும்பி செல்ல என்னை கொல்லும் இந்த பிரிவின் துயர் தள்ளுகிறது. நோயும் தந்து நோயின் மருந்தாக நோயை தந்தவரிடமே என்னை செலுத்துகிறதே இந்நோய் அது எத்தனை கொடியது. அல்லது இத்தகைய நோயை கொடுத்தவர் எவ்வளவு கொடியவராக இருப்பார் ஏனெனில் அது அவருக்கு தானே சாதகம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டுதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று. (செற்றவர் என்றது ஈண்டும், அப்பொருட்டு. 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. 'இக்காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
செறுத்தார்பின்னே யான் சேறலை வேண்டுதலால் என்னை யடைந்த துயர் எத்தன்மைத்து; நன்றாக இருக்கின்றது. இது தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலைமகளை நோக்கி இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ!.

சாலமன் பாப்பையா உரை
என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்

குறள் 1254
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்]

பொருள்
நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.

உடையேன் -  உடையவன் -  கொண்டவன், உரியவன்; பொருளையுடையவன்; கடவுள் செல்வன் தலைவன்

என்பேன் - என்று கூறுவேன்

மன் - n. மன்னு-. 1. King; அரசன்.மன்னுடை வேலினாய் (சீவக. 1200). 2. Kṣattriya;warrior; க்ஷத்திரியன். மன்னாகி மறையவனாய் (சேதுபு. சேதுபல. 69). 3. Lord, chief; தலைவன்.மன்னுயிர் நீத்தவேலின் (பு. வெ. 4, 23, கொளு). 4.Husband; கணவன். மன்னொடுங்கூடி . . . வானகம் பெற்றனர் (சிலப். 25, 59). 5. The 26thnakṣatra. See உத்தரட்டாதி. (பிங்.) 6. Greatness; பெருமை. (யாழ். அக.) 7. Meanness,inferiority; இழிவு. (சூடா.)

மன்  - n. manu. Mantra; மந்திரம்.(பிங்.)

யானோ - நானோ

என் - என்னுடைய

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

மறை - மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு

இறந்து - இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

மன்று-தல் - maṉṟu-   5 v. tr. மன்று. Tofine, punish; தண்டஞ்செய்தல். அடிகெட மன்றிவிடல் (பழ. 288). முட்டில் ஐங்கழஞ்சு பொன்மன்றஒட்டிக்கொடுத்தோம் (S. I. I. iii, 99).

மன்று - சபை; தில்லையிலுள்ளபொன்னம்பலம்; நீதிமன்றம்; பசுத்தொழுவம்; பசுமந்தை; மரத்தடிப்பொதுவிடம்; தோட்டத்தின்நடு; நாற்சந்தி; மணம்.

மன்றுபடும் - சபைக்கு வந்துவிடும்

முழுப்பொருள்
ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் என்னிடம் இருக்கிறது என்று நினைத்தேன். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவற்றை கடைபிடிக்கும் குணம் என்னிடம் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் அதற்கு மாறாக என் காமம் / காதல் அதை முறியடித்துவிட்டது. ஏனெனில் நான் தலைவன்மேல் மறைத்து வைத்திருந்த ஆசையை/காதலை இவ்வூரார் சபை முன்பு வெளிப்படுத்திவிட்டது. காதல் எல்லாவற்றையும் முறியடிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

”மறையல ராகி மன்றத் தஃதே” (குறுந்.97:4)
“அலரும் மன்றுபட் டன்றே” (அகநா 201:10)


பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது. (மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன, மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.).

மணக்குடவர் உரை
யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது. இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.

மு.வரதராசனார் உரை
யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

சாலமன் பாப்பையா உரை
இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்

குறள் 1253
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்]

பொருள்
மறைப்பேன் - மறைத்தல் - மறையச்செய்தல்; மூடுதல்; தீதுவாராமற்காத்தல்.

மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

காமத்தை - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

யானோ - யான் - தன்மையொருமைப்பெயர்

குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு.

இன்றித் - இல்லை, இல்லாமல்

தும்மல் - தும்முதல்; மூச்சு.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

தோன்றிவிடும் - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்

முழுப்பொருள்
தலைவி தலைவன் மேல் உள்ள காமத்தை(காதலை) மறைக்கவேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் இந்த காமமோ (காதலோ) குறிப்பே இல்லாமல் வந்துவிடுகிறது இந்த தும்மலைப்போல். தலைவியை சுற்றியிருப்பவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. 

தும்மல் உள்ளுக்குள் இருந்தால் அசௌகர்யத்தை கொடுக்கும். அதனால் அது வெளிவந்துவிடும். அதுபோல் இந்த காமம் அசௌகர்யத்தை கொடுத்து வெளிவந்துவிடுகிறதுபோலும். காதல் வந்தப்பிறகு அதனை எண்ணங்களால் வெல்லமுடியாதுபோலும் அது செய்வதையும் தடுக்கமுடியாதுபோலும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(மகளிர் காமம் மறைக்கப்படும், என்றாட்குச் சொல்லியது.) காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல் போல் வெளிப்பட்டே விடாநின்றது. ('மன்' ஒழியிசைக் கண் வந்தது. ஓகாரம் இரங்கற்கண் வந்தது. 'தும்மல் அடங்காதாற் போல அடங்குகின்றதில்லை' என்பதாம்.).

மணக்குடவர் உரை
காமத்தை யான் அடக்கக்கருதுவேன்: அவ்வாறு செய்யவும். அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது. இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.

மு.வரதராசனார் உரை
யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.

சாலமன் பாப்பையா உரை
என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.

காமம் எனவொன்றோ கண்ணின்றென்

குறள் 1252
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்]

பொருள்
நிறை - நிறை, பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.

நிறையழிதல் - மனவடக்கம் அழிதல்

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு

ஒன்றோ - oṉṟō   part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல் பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல் ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682). 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நெஞ்சத்தை - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

யாமத்தும் - யாமம் - நள்ளிரவு; சாமம்; இரவு; இடக்கைமேளம்; மாலைப்பொழுதின்பின்பத்துநாழிகை; அகலம்; தெற்கு.

ஆளும் - ஆள்(ளு)-தல் -āḷ-   2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reign over, govern;அரசுசெய்தல். (திவ். பெரியதி. 6, 2, 5.) 2. Toreceive or accept, as a protégé; ஆட்கொள்ளுதல் ஆள்கின்றா னாழியான் (திவ். திருவாய். 10, 4, 3).3. To control, manage, as a household; அடக்கியாளுதல். 4. To use a word in a particularsense and so give currency to it; வழங்குதல் சான்றோரா லாளப்பட்ட சொல் 5. To cherish,maintain; கைக்கொள்ளுதல் நாணாள்பவர் (குறள்,1017). 6. To keep or maintain in use; கையாளுதல் எடுத்தாளாத பொருள் உதவாது. 

தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு.

முழுப்பொருள்
காமம் என்ற ஒன்று அறிவில்லாதது கருணையில்லாதது இரக்கமற்றது. ஏனெனில் நடுஇரவானாலும் என் நெஞ்சை ஆள்வதை தொழிலாய் செய்கிறது. இரவில் தான் எல்லோரும் ஓய்வெடுப்பார்கள். ஆனால் இரவு என்றுகூட பாராமல் எனக்கு அன்றாடம் வந்து துன்பம் தருகிறது இந்த பொல்லா காமம்.

பி.கு: தினமும் / அன்றாடம் வந்து செய்வதால் அது தொழிலாகியது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும் என்றாட்குச் சொல்லியது.) யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடை யாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது. ('ஓ' என்பது இரக்கக் குறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் - தலைமகன்பாற் செலவிடுத்தல். தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும் அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.).

மணக்குடவர் உரை
காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று: என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில்கொள்ளா நின்றது. தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர்மாட்டுப் போக விடுத்தல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தலைமகள் தோழிக்குக் கூறியது.

மு.வரதராசனார் உரை
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.

சாலமன் பாப்பையா உரை
எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை

குறள் 1255
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்]

பொருள்
நிறை - நிறை

பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.

நிறையழிதல் - மனவடக்கம் அழிதல்

செற்றார் - ceṟṟār   n. id. Enemies; பகைவர். செற்றார் செயக்கிடந்த தில் (குறள், 446).

பின்  - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

செல்லாப்  - செல்லாத

தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.

பெருந்தகைமை  - பெரும் தன்மை; பெரும் பொறுமை; பெரும அழகு

காமநோய் - s. Love-sickness, மதன நோய்.

உற்றார் - உறவினர், சுற்றத்தார்; நண்பர்.

அறிவது -அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

அன்று - aṉṟu   அன்றே, third pers. sing. of அல்ல it is not that (but something else).

முழுப்பொருள்
பொதுவாக நம்மை இகழ்ந்தவர்பின், நம்மைவிட்டு வலிய பிரிந்து சென்றவர்பின் நாம் செல்ல மாட்டோம். ஏனெனில் அது தன்மானம் அற்ற செயல் என்று நினைப்போம். அப்படிச் செல்வது சான்றான்மை அல்ல என்று நினைப்போம். 

ஆனால் நம்மை இகழ்ந்து விட்டுச்சென்ற நம்மை பிரிந்துச் சென்ற நம் பிரியத்திற்கூரிய காதலர் பின் செல்லக்கூடாது என்றும் அல்லது குறைந்தபட்சம் விரைந்துச்செல்லாமல் அவர் நம்மை நோக்கிவர முதல் அடி எடுத்துவைக்கும் வரையிலாவது பொறுத்து இருக்க வேண்டும் என்று நம்முடைய தீரா காதல்/காம நோய்க்கு அறிந்து இருக்கவேண்டும் என்று நாம் நினைப்பது தவறு. ஏனெனில் காமம் நம்மை சுட்டு விடும். இயற்கையான காமத்திற்கு மனவடக்கம் கிடையாது. அதற்கு காதலரிடம் கொண்ட அன்பு மட்டுமே முக்கியம். காதலர்முன் மனவடக்கம் தேவை இல்லை.

இது இருபாலினருக்கும் பொருந்தும் குறள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம் என்றாட்குச் சொல்லியது.) செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை - தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காமநோயினை உறாதார் அறிவதொன்று அன்றி உற்றார் அறிவதொன்று அன்று. (இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காம நோய் உறாதார் - மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று' என்பதாம்.).

மணக்குடவர் உரை
தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை காம நோயுற்றால் அறிவதொன்று அன்று. இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.

சாலமன் பாப்பையா உரை
தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.

விட்டு விட்டுச் சென்று விட்டார் காதலரும்
          வெறுத்திடவா முடிகிறது இல்லை இல்லை
தொட்டவரின் பின்னாலே செல்வதொன்றே
         துடியிடையாள் எனை இங்கு வாழ வைக்கும்
விட்டவரை விலகி இங்கு மானத்தோடே
        வெற்றி கொள்ள முடியாது காமம் நம்மை
சுட்டு விடும் அதனாலே மானம் கொள்ளல்
        சுத்தமாய்ப் பெண்களுக்கு வேண்டாம் என்றாள்

பன்மாயக் கள்வன் பணிமொழி

குறள் 1258
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் 
பெண்மை உடைக்கும் படை
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்]

பொருள்
பன் - பன்மை - ஒன்றுக்குமேற்பட்டது; தொகுதி; ஒருதன்மையாய்இராமை:நேர்குறிப்பின்மை; பொதுமை; பார்த்தும்பாராமை.

மாய - மாயம் - மாயை; வஞ்சனை; பித்தளை; பாசாங்கு; அறியாமை; கனவு; பொய்; நிலையின்மை; வியப்பு; அழகு; தீமை; கயமைத்தன்மை; கறுப்பு; உயரம்; நீளம்; தொகை.

கள்வன் - திருடன்; கரியவன்; நடுச்செல்வோன்; முசு; நண்டு; கற்கடகராசி; யானை.

பணி - செயல்; தொழில்; தொண்டு; பணிகை; பரக்கை; பயன்தரும்வேலை; நுகர்பொருள்; அணிகலன்; மலர்களால்அலங்கரிக்கை; பட்டாடை; தோற்கருவி; வேலைப்பாடு; வகுப்பு; சொல்; கட்டளை; விதி; வில்வித்தைமுதலியவற்றைக்கற்பிக்குந்தொழில்; ஈகை; நாகம்; தாழ்ச்சி.

மொழி - சொல்; கட்டுரை; சொற்றொகுதி; பேச்சுமுறை; வாக்குமூலம்; பொருள்; மணிக்கட்டு, முழங்கால், கணுக்கால்முதலியவற்றின்பொருத்து; மரக்கணு.

பணிமொழி - தாழ்ந்தசொல்; மென்மொழி; பெண்; கட்டளை.

அன்று -அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

அன்றோ - அதுவல்லவா 

நம் - எல்லாம் என்னும் சொல் உயர் திணையாயின் அஃது உருபேற்கும் போது கொள்ளுஞ் சாரியை; வணக்கம்

பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை.

உடைக்கும் - உடைத்தல் - தகர்த்தல்: அழித்தல்: வருத்துதல்: தோற்கச்செய்தல்: வெளிப்படுத்துதல்; குட்டுதல்: பிளத்தல்: கரைஉடைத்தல்: புண்கட்டியுடைதல்; முறுக்கவிழத்தல்.

படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

முழுப்பொருள்
நம் பெண்மையின் உறுதி தான் எத்தனை வலிமையுடையது . எக்கணத்திலும் குலையாத அப்பென்மையின் உறுதி கூட ,இந்த மாயங்கள் செய்வதில் வல்லவனான ,கள்வன் (தலைவன்) கூறும் அன்பு கலந்த இனிமையான, மொழியினில் உடைந்து கரைந்து விடுகின்றதே!!! என ஆச்சரியத்தில் தலைவி விளிப்பதாக கூறுகிறார் வள்ளுவர்.

நம் அன்றாட வாழ்விலும் கூட கணவன் மனைவி இடையே ,ஊடல் ஏற்படும் சமயத்தில், மிகைப்படுத்தப்பட்ட சொல்லோ ஆனாலும் கூட இனிமையாக ,இணக்கமாக,இகழ்வாக பேசும் மொழியே மனைவியின் இறுக்கத்தை உடைக்கும். :)

ஒப்புமை
”கள்வர் போலக் கொடியன் மாதோ” (நற் 28:4)
“யாரும் இல்லைத் தானே கள்வன்” (குறுந் 25:1)
“கள்வனும் கடவனும் புணைவனும் தானே” (குறுந் 318:8)
“இவன்எனது, நெஞ்ச நிறையழித்த கள்வன்” (முத்தொள் 102)
“என் உள்ளங் கவர்கள்வன்” (சம்பந்தர்.சீகாழி 1)
“கண்வழி நுழையுமோர் கள்வ னேகொலாம்” (கம்ப.மிதிலைக்காட்சி 55)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணிமொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை? (பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக்கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக்கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பன்மாயக்கள்வன்' என்றாள். பணிமொழி - தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன்அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாயது ஒழியுமோ'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
பலபொய்களையும் பேசவல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ நமது பெண்மையை அழிக்குங் கருவி?. இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது: அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?.

சாலமன் பாப்பையா உரை
என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!.

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

குறள் 1251
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் 
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
[காமத்துப்பால், கற்பியல், நிறையழிதல்]

பொருள்
காமக் காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை

கணிச்சி - உளி;கோடாலி;கோடார்;ஆயுதம்; மரத்தைப் பிளக்கும் கருவிவகை; குந்தாலி - குத்தித் தோண்டும் கருவி; கிணறு வெட்டும் கருவி.

உடைக்கும் - உடைத்தல் - தகர்த்தல், அழித்தல், வருத்துதல், தோற்கச்செய்தல், வெளிப்படுத்துதல், குட்டுதல், பிளத்தல், கரைஉடைத்தல், புண்கட்டியுடைதல்; முறுக்கவிழத்தல்.

நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூ உக்குணம் நான்கனுள் காப்பன காத்துக் கடிவன கடியும் திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.

நாணுத்தாழ்  - நாணம் என்கிற தாழ்;
நாணம் - எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு; 
தாழ் - அச்சாணி; மதகுகளையடைக்கும் மரப் பலகை; கதவுகளை அடைக்கும் மரப் பலகை; தாழ்ப்பாள்; சீப்பு; சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம்; தாழ்க்கோல்.

வீழ்த்த - வீழ்ச்சி; சரிதல்.

வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

கதவு - மறைவு; காவல்; சினம்; katavu   n. prob. கதுவு 1. [K. kadavu,M. katahu.] Door; கவாடம் (பிங்.) 2. Guard;காவல். (திவா.)  

முழுப்பொருள்
கற்பு  என்றென்பது ஒரு சிறப்புமிக்க தன்மை வாய்ந்தது.  கற்பென்றென்பது ஒரு நிறைச்செல்வமாகும். அதனை இழந்தால் எல்லாவற்றையும் நீ இழப்பாய். ஆதலால் நாணம் மற்றும் அறிவினை அழியாமல் / இழக்காமல் நீ கற்பினை காக்க வேண்டும் என்று தோழிக்கு தலைமகள் அறிவுருத்தியது. ஆதலால் ஒரு பெண் அறிவு என்ற கதவுதனை நாணம் என்னும் தாழ்க்கொண்டு தன் கற்பினை பிறரிடம் இருந்து காப்பாள். 

ஆதலால் தானாக இக்கதவும் திறக்காது தாழும் இறங்காது. ஆகவே, ஒருவளுடைய கற்பு என்னும் நிறை என்கிற அழியா குணத்தை உடைக்க வேண்டும் என்றால் நாணம் என்னும் தாழையும் அறிவும் என்னும் கதவையும் வீழ்த்த வேண்டும். அது காமம் என்கிற கருவியால் முடியும்.

இது ஒரே நாளில் ஆகக்கூடிய செயலாக இருக்கவேண்டியது (இருக்ககூடியதும்) அல்ல. ஆகவே மரத்தைப் குந்தாலியால் (கோடாலியால்) குத்திக் குத்தி தோண்டித் தோண்டி பிளப்பதுப் போல், ஒரு கிணறை வெட்டி வெட்டி தோண்டுவதுப் போல், காமம் என்னும் கணிச்சியால் நாணம் என்கிற தாழையும், அறிவு என்னும் கதவையும் ஒன்றாக (ஒருங்கே) வீழ்த்தி உடைக்க வேண்டும். 

அதுமட்டும் இன்றி வீழ்த்த கதவு என்று சொல்வதால் அந்த கதவை மறுபடியும் ஏற்றி வைக்க இயலாது. வீழ்ந்தது வீழ்ந்தது தான்.

ஆதலால்,  தன் நாணம்தனை வீழ்த்த பல நாள் பொறுமையாக முயற்சிகள் மேற்க்கொள்ளபடும் என்று உணர்ந்து ஒரு பெண் தன் கற்புதனை காக்க வேண்டும்.

ஒப்புமை
”முலையும் மார்பும் முயங்கணி மயங்க
விருப்பொன்று பட்டவர் உளம்நிறை உடைத்தென” (பரி 6:20-21)

”காமக் கணிச்சியால் கையறவு வட்டித்து” (பரி 10:33)

“கட்டழ கமைந்த கண்ணாள் நிறையெனும் சிறையைக் கைபோய்
இட்டநாண் வேலி யுந்திக் கடலென வெழுந்த வேட்கை
விட்டெரி கொளுவ நின்றாள் எரியுறு மெழுகில் நின்றாள்” (சீவக 710)

“யாவனே யானு மாக அருநிறைக் கதவம் நீக்கிக்
காவ லென் னெஞ்ச மென்னும் கன்னிமா டம்பு குந்து
நோவவென் உள்ளம் யாத்தாய்” (சீவக 714)

“பிறையெனும் நுதலவள் பெண்மை யென்படும்
நறைகமழ் அலங்கலான் நயன கோசரம்
மறைதலும் மனமெனும் மத்த யானையின்
நிறையெனும் அங்குசம் நிமிர்ந்து போயதே” (கம்ப.மிதிலைக்காட்சி 40)

“பிறந்துடை நலநிறை பிணித்த வெந்திரம்
கறங்குபு திரியுமென் கன்னி மாம தில்
எறிந்தவக் குமரனை” (கம்ப.மிதிலைக்காட்சி 59)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, தலைமகள் மனத்து அடக்கற்பாலனவற்றை வேட்கை மிகுதியான் அடக்க மாட்டாது வாய்விடுதல். 'நிறையெனப்படுவது மறைபிறர் அறியாமை'(கலித். நெய்தல்.16) என்றார் பிறரும். அஃது அழிதற்காரணம் நெஞ்சொடு கிளந்தமையின், இதுநெஞ்சொடு கிளத்தலின் பின் வைக்கப்பட்டது.]. 

(நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக் கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது, இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை. (கணிச்சி - குந்தாலி. நாணுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும் , வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.).

மணக்குடவர் உரை
காமமாகிய மழு உடையாநின்றது: நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை. இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

சாலமன் பாப்பையா உரை
நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!

உதாரணம்
எனக்கு விதி (1984) என்கிற திரைப்படம் தான் நினைவிற்கு வருகிறது. இதில் ராஜா(மோகன்) என்கிற ஆண்மகன் ராதா (பூர்ணிமா) என்கிற புத்திசால் தலைமகளை பல நாள் பின் தொடர்ந்து அவள் மனதை மயக்கி நல்லவன் போல் நடித்து அவள் காதலை பெறுவான். பின்பு அவளை கடற்க்கரைக்கு அழைத்து சென்று அவளை கெடுத்துவிடுவான். இதில் குறிப்பிட பட வேண்டியது என்னவென்றால் ராதா ஒரு திடமான மனதுடைய புத்திசாலிப் பெண்ணாக இருந்தவள். ஆனால் அவளை அறியாமல் பல நாள் வசியத்திற்கு மயங்கிவிடுவாள்.