Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label நெஞ்சொடுகிளத்தல். Show all posts
Showing posts with label நெஞ்சொடுகிளத்தல். Show all posts

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா


குறள் 1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]


பொருள்
துன்னுதல் - பொருந்துதல்; மேவுதல்; அணுகுதல்; செறிதல்; செய்தல்; அடைதல்; ஆராய்தல்; தைத்தல்; உழுதல்.

துன்னாத் - நம்மை அன்புடன் அணுகாதவர்

துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.

துறந்தாரை  துறந்தார் - துறந்தவர்கள்

நெஞ்சத்துநெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

உடையேமா - உடைதல் - கொண்டது, உடைதல், இருக்கும், கொள்வோமாயின்

இன்னும் - இவ்வளவுகாலம்சென்றும்; மறுபடியும் மேலும் அன்றியும்

இழத்தும் - இழ-த்தல் - iḻa-   12 v. tr. [M. iḻa.] 1. Tolose, forfeit; தவற விடுதல் (நாலடி. 9.) 2. Tolose by death; சாகக்கொடுத்தல். மக்க ளிழந்த விடும்பையினும் (உத்தரரா. திக்குவி. 138).  

கவின் - அழகு

முழுப்பொருள்
ஏ நெஞ்சமே! நம்மை விரும்பாமல் நம்மை விட்டு பிரிந்து (நம்மை துறந்து) சென்ற தலைவர் நம்மிடம் வந்து இன்னும் சேரவில்லை. நம்மிடம் வந்த அன்பு செலுத்தாமல் கூடாமல் இருக்கிறார். அதனால் நான் வாடிக்கொண்டு இருக்கிறேன். எனது உறுப்புகளும் நலன் இழந்துவிட்டன. அத்தகையவரை நீ இன்னும் நெஞ்சில் வைத்து சொந்தம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறாய். இப்படிச்செய்வதால் துன்பத்தால் மேலும் வாடி உன் அழகை மேலும் இழப்பாய். இவ்வாறு நெஞ்சிடம் கூறுகிறாள் தலைவி.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்பதுபடச் சொல்லியது.) துன்னாத துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம். ('குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்' (குறுந்.கடவுள்வாழ்த்து) என்புழிப்போல் 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும். நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன பொய்க்கவினே அன்றி நின்ற நிறையும் இழப்பேம்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின் முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

சாலமன் பாப்பையா உரை
நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ

 

குறள் 1249
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
உள்ளம் மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உள்ளத்தார்  - மனதில் உள்ளவர்

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

காதலவர் - காதல் கொண்டவராக, மனம் விரும்புவராக

ஆக - ஆகுதல்  - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

உள்ளி - உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )

நீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர்.

யார் - யாவர்

உழை - இடம்; பக்கம்; யாழின்ஒருநரம்பு; மான்; பசு; பூவிதழ்; ஏழனுருபு; உவர்மண்; விடியற்காலம்; கதிரவன்மனைவியருள்ஒருத்தி; வாணாசுரன்மகள்; இடைச்சுரம்.

யாருழைச் -  யார்மாட்டு 

செறித்தல் - சேர்த்தல்; இறுக்குதல்; அடைதல்; அடக்குதல்; வைத்தல்; திணித்தல்; பதித்தல்; அணியாகஇடுதல்; அடைவித்தல்; ஏற்காதபொருளைச்செய்யுளிற்புகவிட்டுஉரைகூறுதல்; கொல்லுதல்; அழித்தல்; மூழ்குதல்; திரட்டுதல்; நெரித்தல்; மூடுதல்.

சேறி - தேடிச் செல்கிறாய்

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

முழுப்பொருள்
ஏ நெஞ்சே! நாம் காதலித்த நம் தலைவர் நம் உள்ளத்திலேயே இருக்கிறார். அப்படி உன் உள்ளத்திலேயே அவர் குடிக்கொண்டு இருக்க, நீ யாரை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறாய் (பேதை) நெஞ்சே??? என்று தலைவி நெஞ்சே கேட்கிறாள். 

தலைவி தலைவனின் பிரிவால் வாடுகிறாள். அப்பொழுது அவன் பிரிந்து சென்றுவிட்டான் என்பதை மறக்கும் அளவிற்கு பேதையாகிவிட்டாலாம்? அதனால் தான் தன் நெஞ்சிற்குள்ளேயே தலைவன் வாழ்வதாக கற்பனை செய்துக்கொண்டு இருக்கிறாள். அது பேதைத்தனம் என தெரிந்தப்பின்பு தன் நெஞ்சின் பேதமைதனத்தை (இக்குறளாக) சொல்லிக்கொள்கிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? ('உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை.

மணக்குடவர் உரை
என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய். இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.

சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?.

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்

 

குறள் 1248
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
பரிந்து பரி-தல் - pari-   4 v. intr. 1. cf. spṛh. Tocovet; பற்றுவைத்தல் பண்டம் பகர்வான் பரியான்(பு. வெ 12, ஒழிபு 2). 2. To be affectionate;காதல்கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 3. To sympathise; இரங்குதல் பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ 3,8). 4. To plead, intercede; சார்பாகப் பேசுதல் நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 5. Tobe troubled, distressed; to suffer; வருந்துதல் பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50). 6. Topart, separate; பிரிதல் (W.) 7. To besundered; அறுதல் பரிந்த மாலை (சீவக. 1349).8. To break off; முறிதல் வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229). 9. To be destroyed; toperish; அழிதல் பழவினை பரியு மன்றே (சீவக.1429). 10. [K. pari.] To run; ஓடுதல் மாவே. . . பரிதலின் (புறநா. 97). 11. To go out; toescape; வெளிப்படுதல் பரிச்சின்ன ஞானம் பரிய(சிவப்பிர. சிவஞா. நெஞ்சு 81).--tr. 1. To fear;அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502). 2.cf. pṛ. To guard with difficulty; வருந்திக் காத்தல்  

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்..

நல்கார் - விரும்பாதவர் 

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

ஏங்கி - ஏங்குதல் - ஒலித்தல்; அழுதல்; இரங்குதல்; திகைத்தல்; மனம்வாடுதல்; அஞ்சுதல்; கவலைப்படுதல்:இளைத்தல்.

பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.

பிரிந்தவர் - விட்டு விலகிச்சென்றவர்

பின்  - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

செல்வாய் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து சென்று இருக்கிறான். பிரிவின் துன்பத்தால் தலைவி வாடுகிறாள். அப்பொழுது தலைவி நெஞ்சத்திடம் கூறுகிறாள் “ஏ நெஞ்சே, நாம் விரும்பிய நம் காதலர் நம்மை ஒருகாலத்தில் விரும்பியவர். ஆனால் நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். உண்மையில் நம்மீது விருப்பம் இருந்தால் இந்நேரம் வந்திருப்பார் அவர். ஆனால் கொடியவர் அவர் நம்மை விரும்பவில்லையே, நம்மிடம் வந்து அன்புக்காட்டவில்லையே என்று வருந்திக்கொண்டு இருக்கும் பொழுது பிரிந்து சென்ற அவர் மீது ஏக்கம் கொண்டு செல்கிறாயே? நீ என்ன பேதையா நெஞ்சே? 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஆந்தை குறுங்கலி கொள்ளநம் மாடவர்
காய்ந்து கதிர்தெறூஉங் கானங் கடந்தார்பின்
ஏந்தல் இளமுலை ஈரெயிற்றாய் என்னெஞ்சு
நீந்தும் நெடுவிடைச் சென்று” (கைந்நிலை 21)

“ஒருசிறை இருந்து போன உள்ளத்தோ டூடு வாரும்” (கம்ப.ஊர்தேடு.180)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) என் நெஞ்சு - என் நெஞ்சே; அவர் பிரிந்து நல்கார் என்று - அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் நொந்து வந்து தலையளி செய்யாராயினார் என்று கருதி; பிரிந்தவர்பின் ஏங்கிச் செல்வாய் பேதை- அறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்து போயவர்பின் ஏங்கிச் செல்லலுற்ற நீ யாதும் அறியாய் (ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள்.).

மணக்குடவர் உரை
என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி நம்மைவிட்டுப்போனவர் பின்னே போகாநின்றாய், பேதையா யிருந்தாய். இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.

சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!.

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்

குறள் 1246
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
கலந்து - கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

உணர்த்தும் - உணர்த்தல் - அறிவித்தல்; துயிலெழுப்புதல்; ஊடல்தீர்த்தல்; நினைப்பூட்டுதல் கற்பித்தல்

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

காதலர்க் -  கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.

கண்டால் - காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

புலந்து - புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.

உணராய் - உணர் ; உணரமாட்டாய்; 

பொய்க் - மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கையானது; சிறுசிறாய்.

காய்வு - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல்.

பொய்க்காய்வு - poy-k-kāyvu   n. பொய் +.Temporary estrangement; நிலையில் வெறுப்பு.(குறள், 1246.)

காய்தி - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல்.

என் - என்னுடைய ; என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
காதலரை பிரிந்து உள்ள தலைவி, தலைவன் வந்த உடன் என்ன நடக்கும் என்று நினைத்து, தன் நெஞ்சுடன் பேசுகிறாள். ஏ நெஞ்சே! என் தலைவனுடன் நான் ஊடலில் இருக்கிறேன். ஆனால் அவர் வந்த உடன் என்னுடன் கூடி அந்த ஊடலை எல்லாம் நீக்கிவிடுவார். (அப்படியெனில் அவர் என்னை பிரிந்து சென்ற தவறுகளையெல்லாம் எப்படி உணர்த்த முடியும்?). இப்படி இருக்கையில் அவருடன் ஊடுவதுப் போல ஏன் நெஞ்சே நீ பொய்யாக ஊடுகிறாய் / (நடிக்கிறாய்)? யாரை ஏமாற்ற? நான் அறிய மாட்டேனா உன்னை. அவரை வெறுத்தாலும் ஆழுள்ளத்தில் காதல் தான் நிரம்பியுள்ளது. காதலனை கண்ட உடன் பொங்கி வந்துவிடுகிறது. என் ஊடல் எல்லாம் வீண். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது.) என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கணடால் புலந்து உணராய் - யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய், இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக. ('கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி , அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.).

மணக்குடவர் உரை
என்நெஞ்சே! நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும் அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை: இப்பொழுது பொய்க்காய்வு காயாநின்றாய்.

மு.வரதராசனார் உரை
என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.

சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்

குறள் 1245
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
செற்றார் - பகைவர்

எனக் - என்று 

கைவிடல் - கைவிடுதல் - கைவிட்டுவிடுதல், விட்டொழிதல்

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

உண்டோ - இருக்கிறதா ?

நெஞ்சே - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

யாம் - தன்மைப்பன்மைப்பெயர்

உற்றால் - அன்பு செலுத்தினாலும்

உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்

உறாஅதவர் - மீளாதவர் 

முழுப்பொருள்
தலைவி தலைவனின் பிரிவால் வாடுகிறாள். தலைவன் திரும்பி வரவில்லை. ஆதலால் தலைவனுக்கு தலைவி அன்பு இல்லை என்று நினைக்கிறாள். ஆதலால் தன் நெஞ்சிடம் இப்படி கூறுகிறாள்: "ஓ நெஞ்சே! தலைவன் மேல் நான் அன்புசெலுத்தினேன் ஆனால் பிரிந்துசென்ற அவர் இன்னும் மீளவில்லை என்னிடம் வந்து சேரவில்லை. இது அவர் என்மேல் அன்புசெலுத்தவில்லை என்று தானே காட்டுகிறது. என்னை கைவிட்டவரை நாமும் கைவிடுவதே தானே பதிலாக இருக்கும். ஆதலால் நெஞ்சே இப்படிப்பட்டவரை கைவிடும் மனதிடம் உண்டோ உனக்கு? " தனக்கு அம்மனதிடம் இல்லை என்பதை சொல்லாமல் உரைக்கிறாள் தலைவி.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர் - யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை. (உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தகுவது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ?. உறுதல்- விரைந்துறுதல். தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்

குறள் 1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
இருந்து - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

உள்ளி - உள்ளு-தல் -uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

பரி - செலவு; வேகம்; குதிரைநடை; குதிரை; அசுவினிநாள்; குதிரைமரம்; உயர்ச்சி; பெருமை; கறுப்பு; மாயம்; பருத்திச்செடி; பாதுகாக்கை; சுமை; துலை; ஊற்றுணர்வு; அன்பு; வருத்தம்; மிகுதிப்பொருள்குறிக்கும்ஓர்இடைச்சொல்

பரிதல்? - pari-   4 v. intr. 1. cf. spṛh. Tocovet; பற்றுவைத்தல் பண்டம் பகர்வான் பரியான்(பு. வெ 12, ஒழிபு 2). 2. To be affectionate;காதல்கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 3. To sympathise; இரங்குதல் பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ 3,8). 4. To plead, intercede; சார்பாகப் பேசுதல் நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 5. Tobe troubled, distressed; to suffer; வருந்துதல் பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50). 6. Topart, separate; பிரிதல் (W.) 7. To besundered; அறுதல் பரிந்த மாலை (சீவக. 1349).8. To break off; முறிதல் வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229). 9. To be destroyed; toperish; அழிதல் பழவினை பரியு மன்றே (சீவக.1429). 10. [K. pari.] To run; ஓடுதல் மாவே. . . பரிதலின் (புறநா. 97). 11. To go out; toescape; வெளிப்படுதல் பரிச்சின்ன ஞானம் பரிய(சிவப்பிர. சிவஞா. நெஞ்சு 81).--tr. 1. To fear;அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502). 2.cf. pṛ. To guard with difficulty; வருந்திக் காத்தல்

நெஞ்சே - நெஞ்சு  - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

பரிந்து - அன்புடன்

உள்ளல் - உள்ளான்குருவி; உள்ளான்மீன்; உள்ளுதல்; நினைத்தல், எண்ணுதல்; மகிழ்தல்; கருதல்; எண்ணியிரங்கல்.

பைதல் - இளையது; சிறுவன்; குளிர்; துன்பம்.

நோய்  - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

செய்தார் - செய்தவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

செய்தார்கண் - செய்தவரிடம்

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

இல் - இல்லை

முழுப்பொருள்
வாழவும் முடியாமல் இறக்கவும் முடியாமல் நான் வருத்தத்தில் இருக்கிறேன் நெஞ்சே. நீ அவரையே நினைத்து நினைத்து என்னை இன்னும் வருத்தம் கொள்ளச்செய்கிறாய். ஏ நெஞ்சமே! என்னை காதல்கொள்ளச்செய்தத் தலைவன் பிரிந்துசென்றதனால் நான் துன்பத்தால் வாடுகிறேன். முன்பு இன்பத்தையும் இப்பொழுது துன்பத்தையும் தந்த என் தலைவன் இப்பொழுது இங்கில்லை. அவர் என்னைப் பிரிந்துச் சென்றிருக்கிறார் என்பதை தெரிந்துக்கொள்.

பிரிவினால் தலைவி வாடுகிறாள். அவரை நினைக்காது இருந்தால் இந்த துன்பத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறாள். அவளால் அது முடியவில்லை. அதற்கு காரணம் தன்னுடைய நெஞ்சம் என்றெண்ணி நெஞ்சத்துடன் ஊடுகிறாள். ஆனால் அவளுக்கு தெரியும் அதற்கு காரணம் அவள் தான் என்று. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - நெஞ்சே! அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்து படுவதும் செய்யாதிருந்து அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண் பரிந்து உள்ளல் இல் - இப்பையுள் நோய் செய்தார் மாட்டு நமக்கு இரங்கிவரக் கருதுதல் உண்டாகாது ('நம்மாட்டு அருளுடையர் அன்மையின், தாமாக வாரார், நாம் சேறலே இனித்தகுவது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு? வருத்தமுற்று நினைத்தல் நமக்குச் சிறுமைசெய்யும் நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின். இது வாராது வருந்துகின்றாமென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.

காதல் அவரிலர் ஆகநீ நோவது

குறள் 1242
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

இலர் -  who are not

ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல்.

நீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர்.

நோவது - நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

பேதைமை - உய்த்துணராமை; மடமை

வாழி - வாழ்கஎன்னும்பொருளில்வரும்வியங்கோள்சொல்; ஓர்அசைச்சொல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து இருக்கும் பொழுது தலைவி வருந்தும் தன் நெஞ்சிடம் கூறுகிறாள் : நீ(நாம்) காதலிக்கும் காதலர் (தலைவன்) அவர் உன்னை விரும்பாத பொழுது (உன்னை விட்டு பிரிந்து இருக்கும் பொழுது) நீ மட்டும் நோவது ஏன் ? அவர் இந்த பிரிவினால் வருந்திருந்தால் இந்நேரம் உன்னிடம் வந்து சேர்ந்திருப்பார். ஆனால் அவர் அப்படி வருந்தவில்லை. நெஞ்சே இப்படிப்பட்டவருக்கு நீ மட்டும் வருந்துவது அறிவிலித்தனம். பயனற்று இருந்தாலும் உன் அன்பில் நீ உண்மையாய் இருக்கிறாயே வாழ்க வாழ்க நீ என் நெஞ்சே.

சற்று உண்ணிப்பாக பார்த்தால், காதலி Devil’s advocate ஆக மாறுகிறாள், உன்னைப்பிரிந்து சென்ற தலைவனுகாக நீ ஏங்குகிறாய் நெஞ்சே. இந்நோய்க்கு அவர் தான் காரணம் என்று கூறுகிறாள். ஆனால் அடுத்த நொடி, இந்த இக்காதலை வாழவைக்க நீ அவரை நினைத்துக்கொண்டே இருப்பதே காரணம். ஆதலால் நீ வாழ்க என்றும் கூறுகிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) என் நெஞ்சு வாழி - என் நெஞ்சே, வாழ்வாயாக; அவர் காதல் இலராக நீ நோவது - அவர் நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமை - நின் பேதைமையே, பிறிதில்லை. ('நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பதுஅறியலாம், அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய், இது நீ செய்துகொள்கின்றது' என்னும் கருத்தால் 'பேதைமை' என்றாள். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு, 'யாம் அவர்பால் சேறலே அறிவாவது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது பேதைமை. இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.

சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே

குறள் 1241
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
நினைத்து - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

சொல்லாயோ - சொல்வாயோ?

நெஞ்சே - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு.

ஒன்றும் - சிறிதும், oṉṟum   oNNum ஒண்ணும் (+ neg.) nothing  

எவ்வ - evvai   n. எவ்வம். Care, anxiety;கவலை. எவ்வையில்லா வள்ளியம்மை கவ்வைமனதாகும் (வள்ளி. கதை. Ms.).

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

தீர்க்கும் - தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.

மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை.

முழுப்பொருள்
நெஞ்சே உனக்கு தெரியும் என் தலைவன் என்னைவிட்டு பிரிந்து சென்று இருக்கிறான். இப்பிரிவால் நான் படும் பாடு சொல்லி மாலாது. இதனால் நான் கொண்டுள்ள கவலையான ஆசை நோயானது எத்தன்மைவாய்ந்தது எவ்வளவு கொடியது என்று நீ அறிவாய். (பிறருக்கு புரியாது இது எவ்வளவு கொடியது என்று). ஒருவிதத்தில் பார்த்தால் நான் (காதலால்) கொண்ட துன்பத்திற்கு நீயும் தான் காரணம்.

என்னால் முடிந்தவரையில் இந்த நோயினை தீர்க்கும் மருந்து பற்றி கேட்டுப்பார்த்தேன்.  எனக்கு ஒன்றும் கிட்டவில்லை. நெஞ்சே நன்றாக யோசித்துப்பார், என் தலைவன் உன்மூலமாக தான் எனக்கு இக்காதலை தந்தான். யோசித்துப்பார், நீ அறிந்தவரை இதற்கு இந்த நோயை தீர்க்கும் மருந்து இருந்தால் என்னிடம் கண்டிப்பாய் சொல்!

இங்கே நாம் காணவேண்டிய ஒன்று, தலைவி இந்த நோய்க்கு புறவயமான மருந்துகள் ஆன கஷாயம், இலை, தழை என்று நினைத்து இருந்தால் அதனை மருத்துவர்களிடம் கேட்டு இருப்பாள். ஆனால் அவளுக்கு தெரியும் இந்த நோய் மிகவும் அகவயமான ஒன்று என்று. அதனால் தான் அகவயமாக உரையாடி நெஞ்சத்திடம் கேட்கிறாள் மருந்தினை.

அவளுக்கு தெரியும் நெஞ்சிற்கு தெரியும் தலைவன் தான் இதற்கு மருந்து என்று. அதனால் தான் நெஞ்சத்திடம் அவனை கேட்காமல் கேட்கிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , ஆற்றாமை மீதூரத் தனக்கு ஓர் பற்றுக்கோடு காணாத் தலைமகள் தன் நெஞ்சொடு செய்திறன் அறியாது சொல்லுதல் . இஃது , உறுப்புக்கள் தம் நலனழிந்தவழி நிகழ்வதாலின் , உறுப்பு நலன் அழிதலின்பின் வைக்கப்பட்டது.]

(தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது.) நெஞ்சே - நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று - இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய் - யான் அறியுமாற்றலிலன், எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல். (எவ்வம் - ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்' என்றாள்.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய். இஃது ஆற்றுதலரி தென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும்.

மு.வரதராசனார் உரை
நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?.

காமம் விடுஒன்றோ நாண்விடு

குறள் 1247
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
காமம் -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை

விடு -  பகல் இரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள்,  v. t. set at liberty, release, அனுப்பு; 2. let, permit, விடைகொடு; 3. leave, quit, abandon, relinquish, துற; 4. split, பிள.

ஒன்றோ -  part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682).

நாண் -  வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

விடு -  பகல் இரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள்,  v. t. set at liberty, release, அனுப்பு; 2. let, permit, விடைகொடு; 3. leave, quit, abandon, relinquish, துற; 4. split, பிள.

நல் -  நல்ல, மிகுந்த

நெஞ்சம் - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.
நெஞ்சே - மனமே

யானோ -  நானோ

பொறேன் - பொறுக்க முடியவில்லை

இவ் இரண்டு - இவ்விரண்டிற்கும் நடுவில் அகபட்டுக்கொண்டு

முழுப்பொருள் [மேலும்: அஷோக் உரை]
இப்பாடலில், காதலில் ஆழ்பட்ட காதற்தலைவி, தன்னெஞ்சை இறைஞ்சுகிறாள், ஒன்று தன்னுடைய காமத்தையாவது அல்லது காமத்துக்குத் தடையாயிருக்கிற நாணத்தையாவது கைவிடவேண்டுமென்று. 

நாணமும் காமமும் நீரும் நெருப்பும் போன்றன. காமம் நெருப்பாய் காயும்; நாணமோ அதை அவித்துவிடும். நாண நீர் குறைவாக இருப்பின் காம நெருப்பில் வற்றிவிடும். 

நெஞ்சமோ இரண்டையும் சரியான அளவில் வைத்து என் பெண்மையைக் காக்கிறது. இதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஏதாவது ஒன்றைமட்டும் எனக்குக் கொடு என்கிறாள்.

அவள் வேண்டுவதைப் பார்த்தால் காமமே மிக்கிருக்கவேண்டும். ஆயின் நாணமோ அதைத் தடுக்கக் கூடிய அளவில் இருக்கவேண்டும். அத்தடையை நீக்கச் சொல்லியே வேண்டுவதாகத் தோன்றுகிறது. 

குறுந்தொகைப் பாலைத்திணைப் பாடலொன்றில் காதற்தலைவி நாணம் தம்மை நெடுங்காலம் உடனிருந்து வருத்தியதையும், இனிமேல் காமம் மேலும் நெருங்க அது இல்லாது போய்விடும் என்பது வருந்தத்தக்கது என்கிறாள். அப்பாடல் இங்கே:

”காமம் எய்க்கும் எள்ளற விடினே உள்ளது நாணே” (குறுந் 112:1-2)

”அளிதோ தானே நாணே நம்மொடு 
நனிநீ டுழந்தன்று மன்னே யினியே 
வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை 
தீம்புன னெரிதர வீய்ந்துக் காஅங்குத் 
தாங்கு மளவைத் தாங்கிக் 
காம நெரிதரக் கைந்நில் லாதே.”  (குறுந் 149)



”கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே” (குறுந் 112:1-2)

“காணாக் கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழந்த காமம்” (குறுந் 231:4-5)


கலித்தொகைப் பாடலும் இவ்வாறே கூறுவதாகக் கொள்ளவேண்டும். அப்பாடலானது. இப்பாடலில் இது இன்னுமே தெளிவாகிறது.

“மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர்
நலிதரும் காமமும் கௌவையும் என்றிவ்
வலிதின் உயிர்காவாத் தூங்கி ஆங்கென்னை
நலியும் விழுமம் இரண்டு” (கலி 142:55-8)

பரிமேலழகர் உரை
(நாண் தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது.) நல் நெஞ்சே - நல்ல நெஞ்சே; ஒன்று காமம் விடு - ஒன்றின் நாண் விடமாட்டாயாயின் காம வேட்கையை விடு; (ஒன்று) நாண் விடு - ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு; இவ்விரண்டு யானோ பொறேன் - அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யான் இலன். ('யானோ' என்னும் பிரிநிலை, 'நீ பொறுப்பினும்' என்பதுபட நின்றது. 'நல்நெஞ்சே' என்றது, இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், 'நல்லை' என்னும் குறிப்பிற்று. 'அது நன்றே எனினும் என் உயிருண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன்', என்பதாம். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.).

மணக்குடவர் உரை
எனக்கு நல்லநெஞ்சே! ஒன்றிற் காமத்தை விடுதல் வேண்டும்: ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்: யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறுத்தலரிது. இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் நாணம் தடுத்தமை கண்டு கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(நாண் தடுத்தலின் காதலரிடம் செலவொழிவாள் சொல்லியது.)

நல் நெஞ்சே- என் நன்மனமே!? ஒன்று காமம் விடு -காமம் நாண் என்னும் இரண்டனுள் ஒன்று காமத்தை விட்டுவிடு, நாண் விடு - அல்லாவிட்டால் நாணைவிட்டுவிடு, இவ்விரண்டு யானோ பொறேன்- இவ்விரண்டையும் தாங்கும் ஆற்றலோ எனக்கில்லை.

'நன்னெஞ்சே' என்றது, இன்பத்தையும் பெண்மையையும் ஒருங்கே நிலைபெறுத்தலால் நீ நல்லையென்று பாராட்டியவாறாம். இது நன்றே யெனினும், இவ்விரண்டையும் ஒருங்கே தாங்குதல் உயிருக்கு இயலாமையின், உயிரைக் காக்க வேண்டின் இவ்விரண்டுள் ஒன்றை விட்டுவிடுதல் வேண்டும். இவற்றுள் நாணே சிறந்ததாதலின், காதலர் வரும்வரை ஆற்றியிருத்தலே தக்கதென்பதாம். 'ஒன்றோ'- ஓகாரம் அசைநிலை. யானோ- ஓகாரம் பிரிநிலை. முற்றும்மை தொக்கது.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஏதேனும் ஒன்றைக்  கொள் எந்தன் நெஞ்சே
         எப்படி நான் இரண்டையுமே  தாங்கிக் கொள்வேன்
சூதின்றி வாதின்றி இன்பம்  தன்னைச்
         சுகமதனைக் கொடுப்பதுவும் பெறுவதுவும்
பேதை நான் மணத்தோடு பெறுவதற்கு
         பெரும் உதவி நாணத்தை விட்டு விடு
வாதையின்றி  நான் வாழக் காமம் தன்னை
         வகையாக விட்டு  விடு  தாங்க மாட்டேன்

இரண்டிலொன்றே என்னாலே தாங்க ஏலும்
         இதை உணர மாட்டாயா எந்தன் நெஞ்சே
புரண்டு புரண்டழுதாலும் எந்தன் துன்பம்
         புரிந்து கொள்ள  மாட்டாயா   போதும் போதும்
துறந்திடத்தான் நினைக்கின்றாள் நாணம் தன்னைத்
         தோள்களிலே சேர்ந்திடத்தான் துடிக்கும் பெண்ணாள
இரந்து நிற்பாள் நாணத்தின் முன்னே     அதை
         எடுத்துரைத்துப் பெருமை சேர்த்தார்  வள்ளுவரும்

துடிப்பதை நிறுத்து ...!!! (நன்றி கவிப்புயல் இனியவன்)

ஓ மனமே ....
என்னவனை நினைத்து ...
துடிப்பதை நிறுத்து ...!!!

என்னவனோடு நான் ..
இணைவதை தடுக்கும்
நாணத்தை நிறுத்து ...
இரண்டையும் - நீ
என்னுள் இருந்து நீ
செய்தால் என் நிலை ...?

மு.வ உரை
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது

சாலமன் பாப்பையா உரை
நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே

குறள் 1244
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

கொளச் - கொள் - koḷ   கொள்ளு, I v. t. take, receive in the hand, வாங்கிக்கொள்; 2. contain, hold, பிடி; 3. have, bear, வைத்திரு; 4. buy, வாங்கு; 5. take food, medicine etc. உட்கொள்; 6. marry, take a wife, பெண் கொள்; 7. get, obtain, பெறு; 8. resemble, ஒத்திரு; v. i. suit or befit, பொருந்து; 2. strike, hurt:-Note-As an auxiliary it either has a reflexive sense or denotes continuation. In the latter sense often கொண்டிரு & கொண்டுவா is used (see examples below).

சேறி - அவரைக் காணச்செல்லுகையில்

நெஞ்சே -  நெஞ்சு - (என் உள்ளமே) - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

இவை  - vai   pron. இ³. [T. ivi, K. ivu, M.iva.] These, the things close to the speaker,impers. pl.; சுட்டியறியப்படும் அண்மைப்பொருள்கள். (திருக்கோ 223, உரை )  

என்னைத் - என்னை - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு.

தின்னும் - தின்னுதல் - உண்ணுதல்; கடித்தல்; மெல்லுதல்; அரித்தல்; அழித்தல்; வருத்துதல்; வெட்டுதல்; அராவுதல்; பெறுதல்.

தின்னும் - பசியால் தின்னும்

அவர்க் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

காணல் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

உற்று - ṟṟu   part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10).  


முழுப்பொருள்
கண் நெஞ்சத்திடம் இவ்வாறு கூறுகிறது:
இந்த கண் காண்பித்துத் தானே நீ அவனை பார்த்தாய். நீ மட்டும் எங்க போனாலும் எங்கேயும் செல்கிறாய். உனக்கு நன்றியே இல்லையே. இந்த கண் காட்டவில்லை என்றால் அவனை நீ பார்த்திருப்பாயா ? கூடவே போகிறாயே. போமோது இந்த கண்ணையும் கூட்டிக்கொண்டு சென்றால் என்ன ?

(மொத்தமாக அவள் செல்வதற்கு திட்டம் தீட்டுகிறாள் - அவள் சென்றாள் தான் கண் செல்லும் அல்லவா ?)

இல்லையெனில் அவனை காணாத துயரத்தினால் இந்த கண் அவளை உண்றுவிடும்

குறட் கருத்து (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
நன்றியில்லா நெஞ்சென்று  தன் நெஞ்சையே
   நங்கையவள் நினைக்கின்றாள் அழகு போங்கள்
மன்னவனைப் பார்த்ததவள் கண்கள் தானாம்
   மனதுக்கோ அதனால்தான்  பழக்கமானான்
சின்னவனைத் தேடி இந்த நெஞ்சு மட்டும்
   சிறகடித்துப் பறக்கிறதாம் ஊர்கள் எங்கும்
கண்களையும் அழைத்துச் செல்ல  வேண்டும் என்றே
   கை கூப்பி வேண்டுகின்றாள் நெஞ்சம் தன்னை

நன்றி : திரு.நெல்லை கண்ணன் (Star Vijay: தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நெஞ்சே, கண்ணும் கொளச் சேறி - நெஞ்சே நீ அவர்பாற் சேறலுற்றாயாயின் இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - அன்றி நீயே சேறியாயின், இவைதாம் காட்சி விதுப்பினால் அவரைக் காண்டல்வேண்டி நீ காட்டு என்று என்னைத் தின்பன போன்று நலியா நிற்கும். ('கொண்டு' என்பது, 'கொள' எனத் திரிந்து நின்றது. தின்னும் என்பது இலக்கணைக் குறிப்பு. அந்நலிவு தீர்க்க வேண்டும் என்பதாம். என்றது, தான் சேறல் குறித்து.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! நீ அவர்மாட்டுச் செல்லுவையாயின் இக்கண்களும் அவரைக்காணும்படி கொண்டு செல்வாயாக: அவரைக் காணலுற்று இவை என்னைத் தின்பனபோல நலியாநின்றன. கொள - பார்க்க.

மு.வரதராசனார் உரை
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.