Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label பகைமாட்சி. Show all posts
Showing posts with label பகைமாட்சி. Show all posts

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்


குறள் 870
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]

பொருள் 
கல்லான் - கல்வியில்லாதவன்; கற்காதவன்; கல்லாத மூடன்

வெகுளும் - வெகுளுதல் - சினத்தல்; பகைத்தல்

சிறு - சிறிய - ciṟiya   சிறு, (adj.) (சிறுமை) little, small, inferior, சின்ன, Note:- Before a substantive beginning with a vowel சிறு becomes சிற்று.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்

ஒல்லானை - ஒல்லாதவர் - பகைவர்
ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.

ஒல்லாது - பொருந்தாது ; உடன்படாது; தகாது, இயலாது, ஆற்றாது

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.

முழுப்பொருள்
கற்காதவனை சிறுமையான செய்கைகளுக்கு எல்லாம் சினந்து எழுவோரை பகைத்து ஒரு பகைவர் இருந்தால் அப்பகைவரை என்றும் புகழ் சேராது. அதாவது கற்காதவன் சிறுமையான செய்கைகளுக்கு சினப்பவன் தகுதியற்றவன் மாட்சிமை அற்றவன். அத்தகையவனை பகைப்பதுக்கூட பகைவருக்கு மாட்சிமை அற்ற செயலாகும். 

”உன் எதிரி யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்” ஏனெனில் உன் எதிரியின் பலம் வைத்து தான் உனது பலம் என்னவென்று கூறமுடியும். ஆதலால் பலமற்றவனை எதிர்த்து நின்றால் எதிர்த்து நின்றவனுக்கு பலம் இல்லை என்று ஆகிவிடும். ஆதலால் பலம் அற்றவனை எதிர் நின்றால் மாட்சிமை கிடையாது.

கற்காதவனை சிறுமையான செய்கைகளுக்கு சினப்பவன் மாட்சிமையற்றவன். அத்தகையவனை பகைவர் கூட ஒரு பொருட்டாக கருதி பகைக்கொள்ள மாட்டார்கள். இத்தகையவனிடம் பகைக்கொள்வது இழுக்கு என விலகி இருப்பார்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை - நீதிநூலைக் கல்லாதானோடு பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது - எஞ்ஞான்றும் புகழ் மேவாது. (சிறு பொருள் - முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம், ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லாநாளும் ஒளி பொருந்தாது.

மு.வரதராசனார் உரை
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை
பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா


குறள் 869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]

பொருள் 
செறுதல் -  அடக்குதல்; தடுத்தல்; சினத்தல்; வெறுத்தல்; வருத்துதல்; வெல்லுதல்; அழித்தல்; வேறுபடுதல்.

செறு - வயல்; குளம்; பாத்தி; கோபம்

செறுதொழில் - தீச்செயல்.
செறுவார்க்குச்  - தீச்செயலை செய்வார்க்கும்

சேண் - அகலம்; நீளம்; சேய்மை; உயரம்; மலையினுச்சி; வானம்; தேவருலகம்; நெடுங்காலம்.

இக-த்தல் - ika-   12 v. tr. 1. To leap over,jump over; தாண்டுதல் (திவா.) 2. To over-flow, go beyond; கடத்தல் வரம்பிகந்தோடி (கம்பரா. நாட். 9). 3. To transgress, violate, deviatefrom a rule or justice; அதிக்கிரமித்தல். நெறியிகந்து . . . நீரலசெய்யும் (காசிக. சிவசன்மாவாயு. 28).4. To leave behind, go away from; பிரிதல் இகந்துறைவ ரேதிலர் (குறள், 1130). 5. To bear,endure; பொறுத்தல் (பிங்.)--intr. 1. To depart, go away; போதல் (திவா.) 2. To leave,put away, eradicate; நீங்குதல் முனிவிகந் துயர்ந்த(நன். சிறப்புப்.).

இகவா - நீங்காமல்

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

இலா - இல்லாத 

அஞ்சும் -  அஞ்சுதல் - பயப்படுதல்

பகைவர்ப் - காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம்எனஆன்மாவின்உட்பகைகளாயுள்ளஆறுகுற்றங்கள்.

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள்
நம்மை அழிக்க வேண்டும் என்ற முனைப்போடும் சினத்தோடும் வரும் பகைவருக்கு வான் உயர மகிழ்ச்சியை தருவது வெற்றியை தருவது எது தெரியுமா? அறிவில்லாமல் / மதியற்று பகைவரை அஞ்சுவோராய் இருத்தலே ஆகும். 

பகைவருக்கு வலிமை /மாட்சி சேர்ப்பது அவரது படைகள் வியூகங்களை விட அவர்களது எதிரிகளின் அறிவற்றத்தனமும் அச்சமும் ஆகும். 

அறிவில்லாத்தனமும் அச்சமும் மாட்சியாகாது. வலிமையை குறைத்துவிடும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா - அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இனபங்கள் நீங்கா. (உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணுடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
அறிவில்லாத அச்சமுடைய பகைவரைப் பெறின் அவரைச் செறுவார்க்கு இன்பம் தூரப்போகாது, அணித்தாக வரும். அறிவு- காரியவறிவு.

மு.வரதராசனார் உரை
அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.

சாலமன் பாப்பையா உரை
நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு


குறள் 868
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]

பொருள் 
குணன் - குணமுள்ளவன், நற்குணம்உடையவன்

இலனாய் - இல்லாதவனாய்

குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.

பல - ஒன்றுக்குமேற்பட்டவை

ஆயின் - ஆனால்; ஆராயின்

மாற்றார்க்கு -  பகைவர்க்கு (பற்றலர்க்கு)

இனன் - சூரியன்; உறவினன்; ஒத்தவன்; ஆசிரியர்

இலன் - இல்லை என்று

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து.

உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது

முழுப்பொருள்
நற்குணங்கள் இல்லாதவனாய் குற்றங்கள் பல புரியும் அரசனாய் இருத்தல் பல கேடுகளை தரும். இந்நிலையே பல துன்பங்களை அரசருக்கும் நாட்டிற்கும் தரும்.  அதனால் அரசனுக்கு துணை இல்லாமல் போகும். நட்பு நாடுகள் உடன் இருக்காது என்றும் சொல்லலாம். இப்படி துணையில்லாத ஒரு அரசனும் நாடும் பகைவனுக்கு வலிமையையும் வெற்றியையும் சேர்ப்பதுப்போல் ஆகும். 

நமது பலவீனம் பகைவரின் பலம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் இனன் இலனாம் - ஒருவன் குணம் ஒன்றும் இலனாய், உடைய குற்றம் பலவாய வழி அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அவ்விலனாதல் தானே அவன் பகைவர்க்குத் துணையாதலையுடைத்து. (குணம் - இறைமாட்சியுட் சொல்லியன, குற்றம் - இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும், துணை - சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின. பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாமாகலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'இலனாய்' என்னும் செய்தெனெச்சம் 'உடைய' என வந்த பெயரெச்சக் குறிப்புக் கொண்டது.).

மணக்குடவர் உரை
குணங்களுள் யாதும் இலனாய்க் குற்றங்கள் பல உடையனாயின் அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு ஏமமாதலை உடைத்தாம்.

மு.வரதராசனார் உரை
ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து

குறள் 867
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]

பொருள் 
கொடுத்தும் - koṭu-   11 v. tr. [K. koḍu,M. koṭu.] 1. To give, grant, supply; ஈதல் கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005).2. To bring forth; பெற்றெடுத்தல். பார்வதியேழுலகுங் கொடுத்தாள் (பிரமோத். 9, 61). 3.To divide, distribute, as a sum of money;பங்கிடுதல். இந்தத் தொகையைப் பத்துப்பேருக்குக்கொடு. 4. To sell; விற்றல் தில்லை முன்றிற்கொடுக்கோ வளை (திருக்கோ. 63). 5. To allow,permit; உடன்படுதல் மலரன்றி மிதிப்பக் கொடான்(திருக்கோ. 303). 6. To lose by death, asgiving to Yama; சாகக்கொடுத்தல். நீ பயந்தகோட்டானைத் தானே கொடு (தனிப்பா. i, 35, 68).7. To abuse roundly; திட்டுதல் நன்றாய்க் கொடுத்தாளா? வேணும், வேணும் 8. To belabour,thrash; அடித்தல் --aux. An auxiliary verb, asin சொல்லிக்கொடு, முடித்துக்கொடு; ஒரு துணைவினை

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

வேண்டும் -  vēṇṭum   imp. v. + dat. veeNum வேணும் want; should, need 
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

மன்ற -  maṉṟa   perh. மன்னு-. adv. 1.Clearly; தெளிவாக. (தொல். சொல். 267.) 2.Certainly; நிச்சயமாக. சென்று நின்றோர்க்குந்தோன்று மன்ற (புறநா. 114). 3. Abundantly,plentifully; மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு.தேவ. போற். 6).--part. An expletive; ஓர் அசைச்சொல். (யாழ். அக.); maṉṟa   s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி.; ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக

அடுத்து - அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல்.
ஊர்வது - ūr-   4 v. [M. ūr.] intr. 1. Tomove slowly; to creep, as an infant; to crawl,as a snake; நகர்தல் நந்தூரும் புனனாட்டின் (பாரத.கிருட்டிண. 11). 2. To spread, circulate, as blood;to extend over a surface, as spots on the skin;பரவுதல். இவக்காணென் மேனி பசப்பூர் வது (குறள்,1185). 3. To flow, as juice from the sugar-cane; வடிதல் கரும்பூர்ந்த சாறுபோல் (நாலடி, 34).4. To come to close quarters; அடர்தல் வெஞ்சமமூர்ந்தம ருழக்கி (சிலப். 27, 27, அரும்.). 5. To beunloosed, relaxed; கழலுதல் அவிர்தொடி யிறையூர(கலித். 100). 6. To itch; தினவுறுதல். உடம்பெல்லாம் ஊருகின்றது.--tr. 1. To mount; ஏறுதல் பாசடும்பு பரியவூர் பிழிபு . . . வந்தன்று . . . தேர்(ஐங்குறு. 101). 2. To ride, as a horse; to drive,as a vehicle; ஏறிநடத்துதல். சிவிகை பொறுத்தானோடூர்ந்தானிடை (குறள், 37).

இருந்து - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

மாண்(ணு)-தல் - māṇ-   7 v. intr. 1. Tobecome excellent, glorious; மாட்சிமைப்படுதல்.மாண்டார் வினைத்திட்பம் (குறள், 665). 2. To begood, worthy; நன்றாதல். மாண்டற் கரிதாம் பயன்(குறள், 177). 3. To be full, abundant; நிறைதல்.மாணாப் பிறப்பு (குறள், 1002). 4. To be great; மிகுதல். மாணப் பெரிது (குறள், 124).

மாணாத - பொருந்தாத ; மாட்சியற்ற 

செய்வான் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

முழுப்பொருள்
பகை என்றென்பது மனதில் மகிழ்ச்சியையும் முகத்தில் சிரிப்பையும் அழித்துவிடும். பகை ஒருவனுக்கு கெடுதலையே செய்யும் என்று தான் அறிந்துணர்ந்தோம். ஆனால் அப்பகையையும் சிலரிடம் விலை கொடுத்தாவது பெறலாம் என்கிறார் திருவள்ளுவர். முரணாக உள்ளதா? முரண் ஒன்றுமில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. 

நம்முடன் சேர்ந்து இருப்பவர்கள் மனம் ஒத்து இல்லாமல் மாட்சியற்ற (அறம் அற்ற தீய) செயல்களை செய்பவர்களானால் அவர்கள் நமக்கு இழுக்கையும் கேட்டையும் சேர்ப்பார்கள். அது நிகழ்காலத்திலும் தொலை நோக்கிலும் நமக்கு கேடே. அவர்கள் நம்முடன் இருக்கும் பொழுது நமக்கு நிம்மதியே இருக்காது. நம்முடன் இருந்தால் அவர்கள் மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே இருப்பார்கள். ஆதலால் அவர்களிடம் இருந்து விலகுவதே தீர்வாக அமையும். வைத்துக்கொண்டு மனதில் புழுங்குவதை காட்டிலும் வெட்டிவிட்டு இருப்பது அதிக நிம்மதி தானே. 

ஆனால் சேர்ந்து இருப்போரை எப்படி கழற்றிவிடுவது? அதற்கு பகையை தவிர வேறு வழி உண்டா என்ன? பகை உறவை முறிக்கும் தன்மை வாய்ந்தது. ஆதலால் மாட்சியற்றவற்றை செய்பவர்களிடம் பகையை விலைகொடுத்தாவது வாங்கிக்கொள்ள வேண்டும் என்றென்கிறார் திருவள்ளுவர்.

இதற்கு விலை என்றால் அது பல வேறு விதங்களில் இருக்கும். ஒரு நாடும் மற்றொரு நாடும் அருகருகே சேர்ந்து இருந்தாலும் மனதளவில் ஒற்றுமை இல்லை என்றால் அவர்கள் நமக்கு இடையூறே. அவர்களை பகையாக கொண்டால் போர் புரிய நேரிடும். போர் என்பது உயிர்கள், நேரம், செல்வம் என்று பலவற்றை விலையாக கேட்கும். 

அதுவே சில சமயம் உறவுகளாக இருந்தால் நம்முடன் இருந்துகொண்டே நமக்கு கஷ்டம் கொடுப்பர். அவர்களிடம் பகை கொண்டால் நம்முடன் இருக்கும் மற்ற உறவினர்கள்/நண்பர்கள் நமக்கு வந்து "தண்ணி அடித்து தண்ணி விலகாது" என்றோ அல்லது "ஆயிரம் இருந்தாலும் நாம் எல்லாம் ஒரு உறவு/நட்பு" என்றோ அறிவுரை கூறுவர்.  பல தடவை இவர்களின் அழுத்தத்தை சந்திப்பதும் அதற்கு விடை/மறுப்பு அளிப்பதும் ஒருவித விலையே. அதை ஒரு சில நிமிடங்கள் அல்லது சில மணிநேரங்கள் கொடுத்தே/சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் இவர்களுக்காக/வெளியுலகிற்காக நாம் மனம் ஒற்றாதவரிடம் உறவாடிக்கொண்டு இருந்தால் நமக்கு காலம் முழுவதும் கொடைச்சலே. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை - வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை; கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும் - சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒரு தலையாக வேண்டும். (ஏலாதன - மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் துணிதலும் முதலாயின, அப்பொழுது அதனால் சில பொருள் அழியினும், பின் பல பொருள் எய்தற்கு ஐயம் இன்மையின், 'கொளல் வேண்டும் மன்ற' என்றார். இவை ஆறு பாட்டானும் அது சிறப்பு வகையாற் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகையை உற்றிருந்தும் மாட்சியையில்லாதன செய்யுமவன் பகையினைத் துணிந்து ஒன்றனைக் கொடுத்தும் கொள்ளல் வேண்டும். மாணாதசெய்தலாவது பகைக்காவன செய்யாது பிறிது செயல். இஃது இவன் பகைசெய்யமாட்டானாதலால் அப்பகை கோடலாமென்றது.

மு.வரதராசனார் உரை
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

குறள் 866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]

பொருள் 
காணுதல்- அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
காணாச் - சிறுபாம்பு, காணாமல்; அறிந்து ஆராயாமல்

சினத் - சினம் -  கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.
சினத்தல் - கோபித்தல்; புண்முதலியனசிவத்தல்.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

கழி - கோல், மரக்கொம்பு; கடலடுத்தஉவர்நீர்ப்பரப்பு; நுகத்துளையில்இடுங்கழி; ஆயுதக்காம்பு; யாழின்இசையெழுப்புங்கருவி; வரிச்சல்; நூற்சுருள்; மிகுதி; ஊன்; கயிறு.

பெருங் - பெரும்
பெரு - peru   VI. v. i. grow thick, stout, numerous etc., see பரு.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

காமத்தான் - விருப்பம் / ஆசை கொண்டவன் ; பெண்ணுடன் கூடிய புணர்ச்சியின்பத்தில் நாட்டம் உடையவன்

பேணாமை - பகைமை

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணப்படும் - விரும்பப்படும்

முழுப்பொருள்
விளைவுகளை அறிந்து ஆராயாமல் சினம் கொள்ளுபவனிடம், அளவிற்கு அதிகமாக மிகுதியான பொருளின் மீதும் பெண்ணின் (/ புணர்ச்சியின்பத்தின்) மீதும் ஆசை உடையவனிடம் பகைமையை பகைவர் விரும்புவர். ஏனெனில் அத்தகையவரை வீழ்த்துதல் மிக எளிது.

அறிந்து ஆராயாமல் சினம் கொள்ளுபவர் தவறான முடிவுகளை எடுப்பர். அது பகைவர்க்கு சாதகமாக இருக்கும். பெண்ணிடத்திலும் பொருளிலும் அதிகாரத்திலும் பதவியிலும் அதிக நாட்டம் (பேராசை) உடையவர் மெய்யான செயல்களில் செயலாற்ற கவனம் செலுத்தமாட்டார். அதனால் அத்தகையவரை வீழ்த்துதலும் பகைவருக்கு மிக எளிது.

மகாபாரதத்தின் துரியோதனனை நினைவுபடுத்தும் குறள். பாண்டவர்மேல் பொறாமையின் காரணமாக அவன் கொண்ட கோபமும், அதில் பாண்டவர் பக்கம் இருக்கும் துணை யாரென்றும் எண்ணிப்பாராது இருந்தமையும் தெரிந்ததுதான். மூத்தவனும், அரசுரிமைக்கு அதிகாரம் பெற்றவனுமான தருமன் இருக்கையிலே, ஊசிமுனையளவுக்குக் கூட நாட்டுரிமை பாண்டவர்க்குக் கூடாது, நாடு முழுவதும் தமக்கே வேண்டுமென்ற அவனது பேராசையும் அத்தகைய பகையை பாண்டவர் விரும்பி ஏற்றதற்கான காரணத்தை கூறி, அப்பகையை மாட்சிமை படுத்துகின்றன.

அடுத்தவன் மனைவி சீதை என்று தெரிந்தும் அவள் மீது கொண்ட பேராசையினால் இராவணன் மதிகெட்டு அழிந்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
காணாச் சினத்தான் - தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும். (காணாத சினம் என்பது விகாரமாயிற்று. முன்னோனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பதுபற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.).

மணக்குடவர் உரை
மீண்டும் பாராத சினத்தனுமாய் மிகப்பெருகிய காமத்தனுமாகியவன் பகை விரும்பப்படும். இஃது இவையுடையார் நட்டோரிலராதலால் இவரிடத்துப் பகை கொள்ளலா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

சாலமன் பாப்பையா உரை
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

குறள் 865
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கான் - நோக்காமல் இருப்பவர்

வாய்ப்பன் - vāyppaṉ   n. prob. வாய்²-. Akind of cake; ஒருவகைப் பணிகாரம். (J.)

வாய்ப்பு - ஆதாயம்; கைகூடுநிலை; நேர்பாடு; நன்கமைந்தது; பொருத்தம்; அழகு; சிறப்பு; செழிப்பு; பேறு.

செய்யான் - ceyyāṉ   n. id. 1. See செய்யவன், 1. செய்யானை வெண்ணீ றணிந்தானை (திருவாச.8, 13). 2. Red, venomous centipede; செம்பூரான் Loc.  ; சிவந்தவன்; ஒருபூரான்வகை.

செய்யான்  - செய்யமாட்டான்

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

நோக்கான் - நோக்காமல் இருப்பவர்

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

இலன் - இல்லை என்று

பற்றார்க்கு - பகைவர்

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
நெறிநூல்கள் கூறும் வழிகளை ஆராய்ந்து நோக்காமல் அவ்வழிகளில் செல்லாமல், நல்ல வாய்ப்புகளை (வாய்ப்புகளைத் தேடி) நல்ல செயல்களை செய்யாமல், பழிவரும் செயல்களை தீய செயல்களை பழி வரும்படி செயல்களை செய்யதக்க,  நற்பண்புகள் அறவே இல்லாதவரை வெல்லுதல் மிக எளிது. அத்தகையவர் பகைவர்க்கு வேலையே/கஷ்டமே தரமாட்டார். ஆதலால் அவர் பகைவர்க்கு மிக இனிமையானவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வழிநோக்கான் - ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான் - அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான் - தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்புஇலன் - தான் பண்புடையன் அல்லன்; பற்றார்க்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது. (தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும் , தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும் , இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான், அதனால் உறும் பழியைப் பாரான், குணமுமிலன்; இவன் பகைமை பகைவர்க்கு இனிது. இஃது இவன் பகைமையால் பகைவர்க்கு இனிமை உண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.

சாலமன் பாப்பையா உரை
நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.

English Meaning - As I taught a kid - Rajesh
Whom does the enemies consider as darlings? 1) வழிநோக்கான்  -  The one who doesn't find and follow/live/travel by the ways mentioned by the books/scholars 2)  வாய்ப்பன செய்யான் - The one who doesn't seek opportunities 3) பழிநோக்கான் - The one who does wrong activities without worrying about the bad/negative consequences 4) பண்பிலன்  - The one who doesn't have noble qualities - The aforementioned are darlings for enemies because they can be easily defeated without much effort.

Questions that I ask to the kid
What are the four qualities which makes it easy for the enemies to defeat us?

நீங்கான் வெகுளி நிறையிலன்

குறள் 864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]

பொருள் 
பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

மாட்சி - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு

நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

நீங்கான் - நீங்காதவன் ; விலகாதவன்

வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்

நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்

இலன் -  இல்லை என்று

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

யாங்கணும் - எங்கும்

யார்க்கும் - எல்லோருக்கும் ; எவருக்கும்

எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது.

முழுப்பொருள்
பகைமாட்சி என்றால் பகையின் இயல்பு என்று இங்கு பொருள்கொள்ள வேண்டும். இங்கே திருவள்ளுவர் பகை கொள்வதால் ஏற்படும் விளைவுகளை குறிப்பிடுகிறார் என்று நான் நினைக்கிறேன் .

வெகுளி நீங்கான் என்றால் சினம் வெறுப்பு நீங்காதவன் என்று பொருள். நிறை இலன் என்றால் மனவடக்கம் இல்லாதவன் என்று பொருள். (நிறை என்றால் மனவடக்கம் என்ற பொருளும் உண்டு). ஆதலால் வெறுப்பு நீங்காதவனையும் மனவடக்கம் இல்லாதவனையும் வெல்லுதல் பகைவர் உட்பட எவர்க்கும் எப்பொழுதும் மிக சுலபமான எளிமையான செயல்.

சினத்துடன் இருப்பவர்கள் சரியான மனநிலையில் இருக்க மாட்டார்கள். சினத்துடன் இருக்கும் பொழுது தீர்க்கமாக யோசிக்கமுடியாது. அப்பொழுது தவறான சிந்தனைகள் வரும். தவறான சிந்தனைகள் தவறான முடிவுகளை எடுக்கச்செய்யும். தவறான விளைவுகள் ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவரை வெல்வது எவர்க்கும் எளிது.

மனவடக்கம் இல்லாதவர்கள் நிதானமாக இருக்க மாட்டார்கள். ஆதலால் அவர்களால் நல்ல முடிவுகளை எடுக்கமுடியாது. அது தவறுக்கு வழி வகுக்கும். ஆதலால் அவர்களை வெல்வது மிக எளிது.

இதனால் தான் காந்தி அடிகள் மக்களிடம் வெறுப்பை பகையை வளர்க்காமல் அடக்கத்தை வளர்க்க அஹிம்சை முறையில் மக்களைப்  போராடிச் செய்து வெள்ளையரிடம் இருந்து விடுதலை பெற்றுத்தந்தார். வெள்ளையரிடம் வெறுப்பை வளர்த்து இருந்தால் கட்டுக்கடங்காத கலவரங்கள் நாட்டில் நடந்திருக்கும். இதனை காரணம் காட்டி வெள்ளையர்கள் நமக்கு விடுதலை அளித்திருக்கமாட்டார்கள். அதாவது நாம் அடக்கத்துடன் இல்லாமல் சினம் கொண்டு இருந்திருந்தால் நம்மை வெள்ளையர்கள் எளிதாக வென்றிருப்பார்கள். நமக்கு விடுதலையும் கிடைத்திருக்காது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன் - அதுவேயன்றித் தான் நிறையுடையன் அல்லன்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது. (நிறை-மறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும், மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
வெகுளியின் நின்று நீங்கானாய் நிறையுடைமை இலனாயின் அவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது. இஃது இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந் தோற்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

சாலமன் பாப்பையா உரை
கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.

அன்பிலன் ஆன்ற துணையிலன்

குறள் 862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]

பொருள் 
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி

இலன் - இல்லை என்று

ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

இலன் - இல்லை என்று

தான் - tāṉ ] [obl. தன்   avantaan அவன்தான் himself, herself, itself (resumptive pronoun)  ; படர்க்கை ஒருமைப் பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில் போடப்படும் காய்கறித் துண்டம்; 'அதுவின்றி இஃது ஒன்று' என்று பொருள் படுவதோர் இடைச்சொல்.

துவ்வான் - துவ்வாதவன் - வறிஞன்; tuvvātavaṉ   n. துவ்வு¹- +ஆ neg. +. Poverty-stricken, indigent person;தரித்திரன்; பொருளில்லாதவன்; vaṟiñaṉ   n. வறு-மை. Poorman, destitute person; தரித்திரன்.

அரி - அறு; slice, cut, reap, 
அரி-தல் - ari-   4 v. tr. 1. To cut off, nip;அறுத்தல். நாக்கிரியந் தயமுகனார் (கம்பரா. சூர்ப்ப. 125).2. To cut away the excess clay from the mouldin making bricks; செங்கலறுத்தல். (J.)  

என் பரியும் - எவ்வாறு களைவான், நீக்குவான்

ஏதிலான் - ஏது + இன்-மை.Poor man; தரித்திரன். 
துப்பு - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது.

முழுப்பொருள்
”ஒரு மரம் தோப்பாகாது” என்று ஒரு பழமொழியை நாம் அறிவோம். இதனை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் நமது பகைவர்களை நாம் வெல்ல வேண்டும் என்றால் அதற்கு தனியாளாய் களத்தில் நின்றால் அவ்வளவு எளிதில் நடக்காது. அதற்கு நமக்கு துணை வேண்டும். அதையே திருவள்ளுவர் இக்குறளில் சொல்லுகிறார்.

தன்னுடைய நாட்டுமக்கள் மீது அன்பு இல்லாது இருப்பவர்கள், தனக்கு மாட்சிமை தரக்கூடிய நமது துணைவி / அமைச்சர்கள் / நண்பர்கள்/ உறவினர்கள் (அலுவலகத்தில் மேலாலர்கள்) என்று ஏதும் இல்லாதவர்கள், தனி ஆளாய் நின்று வெல்லக்கூடிய ஆற்றலும் இல்லாதவர்கள் எவ்வாறு வலிமை கொண்ட பகைவர்களை வெல்ல முடியும் என்று திருவள்ளுவர் கேட்கிறார்.

வலிமையை நீக்குவது என்பது, அதற்கெதிராக நின்று வெல்லுவது. பிறர்மேல் அன்பு கொள்ளும் தன்மை கொண்டவர்கள், அவர்கள் ஆதரவை வெல்லுவார்கள். அதேபோன்று உற்ற துணையாக ஒருவர் இருக்கையிலே அவர்களும் பகைக்கெதிராக ஆதரிப்பர். தாமே வலிமையோடு இருப்பின், அதுவும் பகையைத் தொலைக்க உதவும். இவ்வாறு தேவையானவை எதுவுமே இல்லாமல் எதிர்வரும் பகையைத் தொலைப்பது எவ்வாறு? என்ற கேள்வியை முன் வைக்கிறார் வள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன் மேல் தான் வலியிலன் : ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்? (சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.).

மணக்குடவர் உரை
சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன்; வேற்றரசராகிய வலிய துணையும் இலன்: ஆதலான், தான் வலியிலன்; இப்பெற்றிப்பட்டவன், மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?.

மு.வரதராசனார் உரை
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

சாலமன் பாப்பையா உரை
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?.

அஞ்சும் அறியான் அமைவிலன்

குறள் 863
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அஞ்சும் - அஞ்சு - அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான்

அறியான் - பகைவனது வலிமை அறியாதவன்

அமைவு - amaivu   n. id. 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை; அமை-. Modesty;respectful behaviour; அடக்கம்.
அமைவு இலன்பிறரோடு பொருத்தம் இலன்

ஈகை - கொடை
ஈகுதல் - கொடுத்தல்; படைத்தல்
ஈகலான் - ஈகைத் தன்மையில்லாதவனாகவும் இருப்பவன்

தஞ்சம் - எளிது; தாழ்வு; எளிமை; பற்றுக்கோடு; அடைக்கலப்பொருள்; உறுதி; பெருமை.

எளியன் - வறியவன்; இலகுவாய்அடையப்படுபவன்; வலியில்லாதவன்; அறிவில்லாதவன்; குணத்தில்தாழ்ந்தவன்.

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

முழுப்பொருள்
அஞ்ச வேண்டாவதற்கு அஞ்சுபவன்  (உதாரணமாக வேலையை செய்வதற்கு, வேலையில் வரும் இடையூறுகளுக்கு, அழிவிற்கு, அபயாத்திற்கு அஞ்சுவது, என்று பல சொல்லலாம்) , அறியவேண்டுவற்றை அறிந்துக்கொள்ளாதவன் (பகைவரின் வலிமை / பலம், பகைவரின் பலவீனம், தன்னுடைய வலிமை,தன்னுடைய பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் (SWOT - Strength, Weakness, Opportunities, Threats)), பிறரோடு ஒழுங்கி (பொருந்தி, இணங்கி) வேலை செய்ய முடியாதவன், கொடை அளிக்கும் குணம் இல்லாதவன் பகைவரால் எளிதாக வீழ்த்தக்கூடியவன் ஆவான்.

”தொடர்ச்சியாக பாதுகாப்பு தேவைப்படுவது நம்மை உண்மையில் பலவீனப்படுத்துவது. பயம் இன்மையிலேயே பலம் இருக்கிறது. நம் உடலின் சதைப் பற்றிலும் எலும்புத் திரட்சியிலும் அல்ல” என்று காந்தியடிகள் கூறுகிறார்.

அதனால் தான் கீழ்காணும் குறளில் அஞ்சாமை, ஈகை, அறிவு ஆகியவற்றை குறையாது ஒரு அரசருக்கு இயல்பாய் இருத்தல் வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்

சோர்வுடன் அதை கீழே உதிர்த்துவிட்டு அமர்ந்த பிரபாவனிடம் “காலைமுதல் இதை கண்டுபிடித்தேன். இந்நாள் வரை நானும் என் கணமும் அச்சமொன்றையே மெய்யென்று கொண்டிருந்தோம். எங்கள் எண்ணங்களும் செயல்களும் அச்சத்தாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன. அச்சத்தை உதறுவதன் எல்லையில்லா விடுதலையை அடையும் பேறுபெற்ற என் குலத்தான் நான். அதில் திளைக்கிறேன். உன் கூரலகைக் கண்டுதான் உன் அருகே வந்தேன்” என்றது பூச்சி.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அஞ்சும் - ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாநிற்கும்; அறியான் - அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன் - பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான் - இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன். ('தஞ்சம'¢, 'எளியன்' ஒருபொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அஞ்சும்-போருக்கு அஞ்சுபவனாகவும்; அறியான்-அறியவேண்டியவற்றை அறியாதவனாகவும்; ஈகலான்-ஈகைத் தன்மையில்லாதவனாகவும் இருப்பவன்; பகைக்குத் தஞ்சம் எளியன்-தன்பகைவர்க்கு மிக எளியவனாவான்.

இந்நான்கு நிலைமைகளுள் ஒன்றிருப்பினும் தோல்விக் கேதுவாயிருக்க, நாலும் ஒன்று சேரின் தோல்வியுறுதல் முழுவுறுதியும் மிக எளிதாய் நேர்வதுமாதலின் 'தஞ்சமெளியன்' என்றார். 'தஞ்சம்' எளிமைப் பொருளிடைச்சொல்.

"தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே."

(தொல்,751)

'தஞ்சமெளியன்' மீமிசைச்சொல். எளியனாதல் எளிதாய் வெல்லப்படுதல்.

மணக்குடவர் உரை
அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவனது வலிமை அறியான், மதியிலன், ஈயமாட்டான்: இப்பெற்றிப் பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன். இஃது இவை நான்கு முடையவன் தோற்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.

சாலமன் பாப்பையா உரை
பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.

English Meaning - As I taught a kid - Rajesh
Who can be easily defeated? 1) அஞ்சும்  - The one who has fear (or the one who lacks courage) (strength lies in fearlessness), 2) அறியான்  the one who doesn't have knowledge (or the one who doesn't know what to do) (knowledge of his SWOT (strength, weakness, opportunities, threats), his enemies SWOT, areas to prepare and areas to improve etc), 3) அமைவிலன்  - the one who could not team with others in order to chart out ideas, plans, execute plans, delegate work and delivers results and work to chart out ideas and execute plans, 4) ஈகலான் - The one who doesn't do charity/help to his neighboring countries and others can be easily defeated by his enemies/opponents. 

Questions that I ask to the kid
Who can easily be defeated by enemies?

வலியார்க்கு மாறேற்றல்

குறள் 861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]

பொருள்
வலியார்க்கு - வலியார் - வலியன் - வலிமையுடையான்; திறமையானவன்; உடல்நலமுடையவன்; கரிக்குருவி; இறுகியநிலையுடையது.

மாற்று - வேறுபடுத்துகை; ஒழிக்கை; கொடியமருந்து, நஞ்சுமுதலியகுற்றத்தைநீக்கக்கொடுக்கும்மருந்து; பண்டமாற்று; விலை; வண்ணான்வெளுத்தஉருப்படி; மாற்றிஉடுத்தும்சீலை; பொன்வெள்ளிகளின்உரைமாற்று; தங்கம்; எதிர்; உவமை; வலிமை; வண்ணம்.

ஏற்றல் - இசைவாதல்; இணங்கல்; ஏற்றுதல்; இரத்தல்; எதிர்த்தல்; எதிர்த்துப்போர்செய்தல்; அடுக்கல்; வாங்குதல்; ஏந்தல்; நடத்தல்; பெருந்தச்செய்தல்.

ஓம்புக - ஒம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

ஓம்பா -ஓம்பாதே

மெலியார் - meliyār   n. id. Weak,powerless persons; பலவீனர். மெலியார்மேன் மேகபகை (குறள், 861); வலியிலார்

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

மேக -

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
ஒரு நாட்டை ஆட்சி புரியும் அரசனுக்கு, மற்ற நாட்டரசர்களிடம் பகை ஏற்படுவது இயல்பு. பகை ஏற்படாமல் காப்பதும், பகை ஏற்பட்ட பிறகும் அதை தவிர்ப்பதும் சிந்தனையறிவு மிக்க அரசன் தகைமையாகும். இதையே பகைமாட்சி என்று கருதப்படுகிறது. முரட்டுத்தனத்தாலோ, பிடிவாதத்தாலோ பகை வளர்ப்பதும், போருக்கு வித்திடுவதும் தவிர்க்க வேண்டும் என்ற அறிவுரையை

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

என்ற குறள் மூலம் திருவள்ளுவர் வழங்குகிறார்.

இரு அரசர்களிடையே ஏதோ காரணத்தால் பகையுணர்வு தோன்றி விட்டது. இப்பகை வளர்ந்தால் என்ன ஆகும். வலிவு குறைந்தவனை வலிவு மிக்கவன் வீழ்த்தி வெற்றி கொள்வான். மெலிந்த அரசனும், குடி மக்களும் சீரழிந்து விடுவார்கள். அந்நாடும் வீழ்ச்சியடையும்; இது திண்ணம். தன் வலியும், எதிரி வலிவும் உணர்ச்சிவயம் நீங்கி விரிந்த கண்ணோட்டத்தில் ஒருவன் நன்றாக யூகித்து உணர்ந்து கொள்ள முடியும்.

எதிரி வலிவு மிக்கவன் என்று தெளிவாக உணர்ந்தபின் மெலிந்தவன் என்ன செய்ய வேண்டும் ? எதிரி வலியைப் பாராட்டி அவனுக்குப் பணிந்து சமரசம் செய்து அமைதி காக்க வேண்டும். இதனையே வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக என்ற அடியில் கூறப்படுகிறது.

அவ்வாறு வலியவனிடம் அவன் நிலையை பாராட்டி உயர்வை ஒப்புக்கொண்டு பணிந்து போகாவிட்டால் என்ன விளைவு ஏற்படும் என்று அடுத்த அடியாக "ஓம்பா மெலியார் மேல்மேக பகை" என்று கூறுகிறார். மேகம் பகைத்தால் என்னவாகும் ? அதிகமாக பேய்ந்தும் கெடுக்கும் அல்லது மழையே பொழியாமல் காய்ந்தும் கெடுக்கும். மேகப்பகையால் நாடு பல்வளங்களையும் இழந்து சீர் கெடும். 

அது போல வலிவுள்ள நாட்டோடு, அரசனோடு அல்லது மனிதனோடு பகை எழுந்து, அப்பகை பணிந்து போகும் முறையால் சமரசம் செய்து கொள்ளப்படாவிட்டால், எப்போதும் அது அச்சத்தை விளைத்துக் கொண்டே இருக்கும். அழிவையும் தரும் என்று எச்சரிப்பதே இக்குறளின் கருத்தாகும். சந்தர்ப்ப வசத்தால் ஒரு மெலிந்தவன் வெற்றி கொண்டாலும் அது நிலைக்காது. 

தொடர்ந்து பின் விளைவாகத் துன்பத்தைத் தரவல்லது. பகை மிகுந்து போர் எழுந்து, மெலிந்தவன் வெற்றி கொண்டாலும், பின்னர் எழவிருக்கும் தொடர் பகையால் தீமையுண்டாம், தோல்விகண்டாலும் இழப்பேயாம். 

மழை அதிகமாகப் பெய்தாலும், பெய்யாமலே காய்ந்து விட்டாலும் விளைவு தீமையேயாகும் என்று மேகப்பகையென்று உவமை கூறுகிறார், எச்சரித்தும் அறிவுறுத்துகிறார் வள்ளுவர். 

வலியவர் முன் பணிவு காட்டல் இழிவு ஆகாது. விளைவறிந்த விழிப்பில் பின்பற்றப்படும் ஒரு சிறந்த நெறியே ஆகும். எனவே இது மெலியார்க்கு கூறியுள்ள பொதுவான அறிவுரை.

ஒப்புமை
”மிக்குடையார் ஆகி மிகமதிக்கப் பட்டாரை
ஒற்கப் படமுயறல் என்றல் இழுக்காகும்
நற்கெளி தாகி விடினும் நளிவரைமேல்
கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்” (பழமொழி 36)

‘ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க
போற்றாது கொண்டரக்கன் போரின் அகப்பட்டான்
நோற்ற பெருமை யுடையாரும் கூற்றின்
புறம்கொம்மை கொட்டினார் இல்” (பழமொழி 126)

“வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி
மெலியாரை மீதூரும் மேன்மை யுடைமை” (பழமொழி 157)

“அமர்நின்ற போழ்தின்கண் ஆற்றுவா ரேனும்
நிகரொன்றின் மேல்விடுதல் ஏதம்...
கல்லொடு கைஎறியு மாறு” (பழமொழி 382)


பரிமேலழகர் உரை
வலியார்க்கு மாறு ஏற்றல் ஒப்புக - தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக, மெலியார்மேல் பகை ஓம்பா மேக - ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக. 

விளக்கம் 
('வலியார்' என்புழித் துணை வலியும் அடங்கலின், 'மெலியார்' என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின், அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்க நோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக- தம்மினும் வலியார்க்குப் பகையாயெதிர்த்தலைத் தவிர்க; மெலியார்மேல் பகை ஓம்பா மேக- மற்ற மெலியார்க்குப் பகையாதலைத் தவிராது விரும்புக.

துணைவலியுடைமையால் மெலியார் வலியாராதலும் அஃதின்மையால் வலியார் மெலியாராதலும் உண்மையால், மெலியார் என்னுமிடத்துத் துணைவலியின்மையுங் கொள்ளப்படும்.

இது பொருட்பாலாதலாலும், "வினையே ஆடவர்க்குயிரே" (குறுந். 135) என்பதாலும் , வணிகர் பொருளீட்டும் வினை போன்றே அரசர் பிறநாடுகளைக் கைப்பற்றச் செய்யும் போர் வினையும் அவர் கடமையாகப் பண்டைக் காலத்திற் கருதப்பட்டதினாலும், "மெலியார் மேல் மேக பகை" என்றார். மேலும், இங்ஙனம் வலியப் போர்க்குச் செல்லுதலோடு,

'எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் 
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே

(தொல். 1008)
"மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச் 
சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப"

(தொல். 1009)

என்ற முறைப்படி வந்த போரை விடாமையும் அவர் கடமையாயிற்று.

சாலமன் பாப்பையா உரை
பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.

மணக்குடவர் உரை
தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க: தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக. இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது.