Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label பசப்புறுபருவரல். Show all posts
Showing posts with label பசப்புறுபருவரல். Show all posts

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

 

குறள் 1190
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்.

எனப் - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு

பேர் - பெயர்; ஆள்; உயிரி; புகழ்; பெருமை; பொலிவு.

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

நன்றே நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

நயப்பித்தார் - நயப்பி-த்தல் - nayappi-   11 v. tr. Caus. ofநய¹-. 1. To induce to love or desire; விரும்பும்படி செய்தல் தலைமகனை நயப்பித்துக் கொள்கையில்(ஐங்குறு. 88, உரை). 2. To persuade, winanother's consent, secure compliance orapproval; சம்மதப்படுத்துதல். (W.) 3. To rendercheap, cheapen; மலிவாக்குதல். (W.) 4. Toimprove, benefit; பயன்படுத்துதல். (W.)  

நல்கு - nalku   III. v. t. desire, long for, விரும்பு; 2. bestow, grant, ஈ; 3. favour, கடாட்சி.
ஆமை - ஒரு நோய்

நல்காமை - (என் மீது) ஆசை நோய்

தூற்றல் - பழிச்சொல்; சிறுமழை.

தூற்றுதல் - சிதறுதல்; தூசுபோகத்தானியங்களைத்தூவுதல்; புழுதிமுதலியவற்றைஇறைத்தல்; பரப்புதல்; அறிவித்தல்; பழிகூறுதல்; வீண்செலவுசெய்தல்.

தூற்றார் - பழிச்சொல்லாமல், பரப்பாமல்

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்

முழுப்பொருள்
என்னை அவர்மேல் விரும்பச்செய்தவர், என்னை விரும்பியவர் எனக்கு இன்பம் தந்தவர் என்னை பிரிந்து சென்றுவிட்டார். அதனால் நான் துன்பநோயால் வாடுகிறேன். பசலைநோய் என்னை வாட்டுகிறது. ஆனால் என்மேல் அன்பு நல்காதவரை தூற்றுவார்கள் எனில் அதைவிட இப்பசலைநோயை நானே பெற்றுக்கொண்டேன் என்றப் பெயரை பெறுதல் நன்றே என்று தலைவி கூறுகிறாள். ஏன் அது நன்று? ஏனெனில் அப்பிரிவுக்கு சம்மதித்தவள் அவள் தானே. மேலும் ஆயிரம் இருந்தாலும் தன் தலைவனை பிறர் ஏசுவதை தலைவி விரும்பவில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்; பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று. ('நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள், அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று: நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின். இது நின்மேனி பசந்ததென்ற தோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையென்று தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.

சாலமன் பாப்பையா உரை
என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

 

குறள் 1189
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
பசக்கு - pacakku   n. Nāñ. 1. Substance;பொருள். 2. Ability; திறன்
பசக்கெனல் - pacakkeṉal   n. Onom. expr.signifying suddenness; திடீரெனற்குறிப்பு.

பசப்புதல் - பசப்பு இன்முகங்காட்டிஏய்த்தல்; அலப்புதல்.
பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

பசக்கமன் - பசலைப் பூக்கட்டும்

பட்டாங்கு - உண்மை; உள்ளநிலைமை; சாத்திரம்; மெய்போல்பேசும்கேலிப்பேச்சுமுதலியன; சித்திரவேலையமைந்தசேலை.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

மேனி - நிறம்; வடிவம்; உடல்; அழகு; நன்னிலைமை; நிலத்தின்சராசரிவிளைச்சல்; காண்க:குப்பைமேனி.

நயப்பித்தார் - நயப்பி-த்தல் - nayappi-   11 v. tr. Caus. ofநய¹-. 1. To induce to love or desire; விரும்பும்படி செய்தல் தலைமகனை நயப்பித்துக் கொள்கையில்(ஐங்குறு. 88, உரை). 2. To persuade, winanother's consent, secure compliance orapproval; சம்மதப்படுத்துதல். (W.) 3. To rendercheap, cheapen; மலிவாக்குதல். (W.) 4. Toimprove, benefit; பயன்படுத்துதல். (W.)  

நல் - நல்ல; வறுமை.
நிலையர் - நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

ஆவர் - யாவர்

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்

முழுப்பொருள்

இக்குறளை இருவிதமாக பொருள்கொள்ளலாம்
1. தலைவியின் மேனியில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நிறமாற்றத்திற்கு காரணம் தலைவனின் பிரிவு. ஏனெனில் அவரை விரும்பச்செய்தவர் அவரே. ”அப்பிரிவால் நான் பசலைநோயால் அவதிப்படுகிறேன். நான் இப்படி துன்பப்பட்டாலும், இப்பிரிவால் அவர் நல்ல நிலைமையில் இருக்கிறார் என்றால் எனக்கு அதுப்போதும். இப்பசலை நோயை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தலைவி கூறுகிறாள்.

2.  தலைவியின் மேனியில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நிறமாற்றத்திற்கு காரணம் தலைவனின் பிரிவு. ஏனெனில் அவரை விரும்பச்செய்தவர் அவரே. ”அப்பிரிவால் நான் பசலைநோயால் அவதிப்படுகிறேன். ஆனால் இப்பிரிவிற்கு காரணமான அவரை இவ்வுலகமோ நல்லவர் என்றுப் போற்றுகிறது. உண்மையில் என்னிடம் காதலை உண்டுப்பன்னியது அவர் தான். அதனை இவ்வுலகம் மறந்துவிட்டதா அல்லது அறியவில்லையா? அவரை நல்லவர் என்று நினைத்து ஏமாந்து இப்பிரிவை சந்தித்ததற்கு தண்டனையாக நான் இப்பசலைநோயை ஏற்கிறேன்” என்று தலைவி கூறுகிறாள்.

இவ்விரு பொருள்களில், முதல் பொருளே பொருத்தமாக இருக்கிறது. ஏனெனில், ஒருவர் மற்ற ஒருவரிடம் ஏமாந்ததாக என்னினால் அதன்பின் அவரிடம் காதல் இருக்காது. பின்பு எப்படி பசலைநோய் வரும்? பொதுவாக பிரிவு வரும் என்பதை பெண்கள் அறிவர். ஆனாலும் காலம் அவர்களுக்கு கைகொடுக்கும் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வர். அது தலைவன் ஏமாற்றுவதாக ஆகாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக. (நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்'? என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக: நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின். இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.

மு.வரதராசனார் உரை
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.

சாலமன் பாப்பையா உரை
இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

 

குறள் 1187
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
புல்லி - புறவிதழ்; பூவிதழ்.

புல்லிக் - புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

கிடந்தேன் - கிடக்கை - படுக்கைநிலை; படுக்கை; படுக்குமிடம்; பூமி; பரப்பு; இடம்; உள்ளுறுபொருள்.

புடைபெயர்ந்தேன் - புடைபெயர்-தல் - puṭai-peyar-   v. intr. id. +. 1. To change in condition or position; to become topsy-turvy or overturned; நிலைமாறுதல். நிலம் புடை பெயர்வ தாயினும் (புறநா. 34).2. To go beyond; to trangress limits; வெளியேறுதல். புடைபெயர் கடலென (கம்பரா. எழுச்சி.10). 3. To move, change place; அசைதல். நாப்புடைபெயராது (மணி. 23, 16). 4. To do anaction; தொழிற்படுதல். 5. To rise up, get up;எழுந்திருத்தல். கனவொடும் புடைபெயர்ந்து (தக்கயாகப். 240).

அவ் - அந்த

அளவில் - அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அள்ளிக்கொட்டுதல் - பரவுதல்; மிகச்சம்பாதித்தல்; மிகக்கொடுத்தல்.

அள்ளுதல் - செறிதல்; கையால்முகத்தல்; திரளாய்எடுத்தல்; வாரிக்கொண்டுபோதல்; எற்றுதல் நுகர்தல்

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை

அள்ளிக்கொள்வற்றே - என்னைப் பற்றிக்கொண்டதே

பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்

முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள் - “என் தலைவனை தழுவிக்கொண்டு இன்பமாய் இருந்தேன். ஆனால் ஒரு கணம் அவரைவிட்டு விலகிவந்தேன். அவ்வளவுதான். இச்சந்தர்ப்பத்திற்காகதான் காத்திருந்ததுப்போல் இப்பசலைநோய் என்னை அள்ளிக்கொண்டுவிட்டது. இப்பசலைநோய் என்மேல் படர்ந்து நான் துன்பத்தில் வாடுகிறேன்”. அதாவது தலைவனை விட்டு சற்று அசைந்தாலும் துன்பம் வந்துவிடுகிறது. இங்கே காணவேண்டியது சற்று அசைந்தாலும்/விலகினாலும் பிரிவு தரும் துன்பம் என்னும் அம்சம்.

தலைவியின் அனுமதியுடன் தலைவியை அள்ளிக்கொண்டு தழுவி புணர்ந்த தலைவனோ இன்பத்தை தந்தான், ஆனால் பிரிவின் பொழுது தலைவியை அள்ளிக்கொண்ட பசலைநோயோ துன்பத்தையே தருகிறது. இவ்வித்தியாசம் தான் நாம் காணவேண்டிய மற்றோரு முக்கியமான அம்சம் இங்கு

ஒப்புமை
1) இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன்
யாங்கறிந் தன்றுகொல் தோழிஎன்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே (குறுந் 205:5-7)
2) “..... பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே” (குறுந் 399:2-4)
3) அவர், தொடுவுழித் தொடுவுழி நீங்கின்றால் பசப்பே” (கலி.130:20-21)
“முயங்காக்காற் பாயும் பசலை” (நாலடி. 391)
“நோக்கவே தளிர்த்து நோக்கா
திமைப்பினும் நுணுகும் நல்லார்” (சீவக.1880)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடைபெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது. ('கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை. இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!.

சாலமன் பாப்பையா உரை
முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

குறள் 1186
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
விளக்கு - ஒளிதருங்கருவி; ஒளிப்பிழம்பு; ஒளிபெறச்செய்கை; சோதிநாள்.
விளக்கு - viḷakku   III. v. t. polish, brighten, துலக்கு; 2. illustrate, explain, விளங் கச்செய்; 3. sweep, பெருக்கு; 4. solder, பொடிவை.

அற்றம் - அழிவு; துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை; அவகாசம் அவமானம் அறுதி விலகுகை; சுற்று மறைக்கத்தக்கது; நாய் பொய் உண்மை

பார்க்கும் - பார்த்தல்  - pār-   11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலுமருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship;வணங்குதல். (சூடா.) 8. To estimate, value;மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்.Colloq. 9. To heed, pay attention to; கவனித்தல். 10. To look after, take care of, manage,superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.11. To peruse, look through, revise; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. Totreat, administer medicine; மருந்து முதலியனகொடுத்தல். யார் வைத்தியம் பார்த்

இருளே - இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்

போல் -  ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

கொண்கன் - கணவன்; நெய்தல்நிலத்தலைவன்.

முயக்கு - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.

அற்றம் - அழிவு; துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை; அவகாசம் அவமானம் அறுதி விலகுகை; சுற்று மறைக்கத்தக்கது; நாய் பொய் உண்மை

பார்க்கும் - பார்த்தல்  - pār-   11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலுமருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship;வணங்குதல். (சூடா.) 8. To estimate, value;மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்.Colloq. 9. To heed, pay attention to; கவனித்தல். 10. To look after, take care of, manage,superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.11. To peruse, look through, revise; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. Totreat, administer medicine; மருந்து முதலியனகொடுத்தல். யார் வைத்தியம் பார்த்

பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்.

முழுப்பொருள்
பிரிவால் வாடும் தலைவி கூறுகிறாள் "விளக்கில் எண்ணெய் வற்றிப்போயோ அல்லது திரி தீர்ந்தோ விளக்கின் ஒளி குன்றி அழியும்பொழுது இருள் வந்து உடனே சூழ்ந்துவிடும். விளக்கு அணைவதற்காகவே காத்திருந்தது போலவே சற்றும் தாமதிக்காமல் இருள் உடனே பற்றிக்கொள்ளும். அதுப்போல என் தலைவன் என்னை தழுவும் பொழுது எப்பொழுது பிரிவான் தழுவதலில் இருந்து நீங்குவான் என்று இந்த பசலை நோய் காத்திருந்தது போல, அவர் பிரிந்த உடன் என்னை வந்து இப்படி வதைக்கிறதே. அதாவது தலைவன் பிரிந்து போருக்கு என்று அல்ல சாதாரணமாக பிரிந்தாலே அவளால் தாங்க முடியவில்லை.

பகலும் இரவும் இருமை. அதுப்போல வெளிச்சமும் இருளும். அதுப்போல இந்த தலைவனுடன் கூடலும் இந்த பசப்பு நோயும் இருக்கிறது என்று தலைவி கூறுவதாகவே இருக்கிறது. கூடலில் இன்பமாய் இருப்பவள் பசப்பு நோயில் துயர்கொண்டு இருக்கிறாள். 

இவள் சொல்வதை பார்த்தால் அணையாவிளக்கு போல நீங்கா தழுவுதல் உண்டோ/சாத்தியமோ?


ஒப்புமை
1) இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன்
யாங்கறிந் தன்றுகொல் தோழிஎன்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே (குறுந் 205:5-7)
2) “..... பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே” (குறுந் 399:2-4)
3) அவர், தொடுவுழித் தொடுவுழி நீங்கின்றால் பசப்பே” (கலி.130:20-21)
“முயங்காக்காற் பாயும் பசலை” (நாலடி. 391)
“நோக்கவே தளிர்த்து நோக்கா
திமைப்பினும் நுணுகும் நல்லார்” (சீவக.1880)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு. ('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்.).

மணக்குடவர் உரை
விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போலக் கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு. இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.

சாலமன் பாப்பையா உரை
விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

குறள் 1185
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
உவக்காண்- uvkkāṇ   adv. At that time, அப் பொழுது. 2. There, in that place, அவ்விடம். (குறள்.) (p.) உவக்காணெங்காதலர்செல்வார். Lately when my husband left me--  ; உங்கே, உவ்விடம்; உங்கேபார்

எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

காதலர் - காதலன் - அன்பிற்குரியவன்; தோழன்; கணவன்; மகன்.

செல்வார் - பிரிந்து சென்றுவிடுவார்

செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

இவக்காண் - இங்கே; இந்நேரமளவும்

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

மேனி - நிறம்; வடிவம்; உடல்; அழகு; நன்னிலைமை; நிலத்தின்சராசரிவிளைச்சல்; காண்க:குப்பைமேனி.

பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்.

ஊர்வது - ஊர்தல் - நகருதல்; பரவுதல்; தினவுறுதல்; நெருங்குதல்; வடிதல்; ஏறிச்செல்லுதல்; கழலுதல்; ஏறுதல்.

முழுப்பொருள்
உவக்காண் என்பது இறந்தகாலத்தை குறிக்கும் ஒரு சொல். தலைவி (காதலி) சொல்கிறாள் திருமண உடன்படிக்கைக்கு முன்பான நாட்களில் அவ்வவ்ப்போதுதான் நானும் தலைவனும் ஒன்றுகூடுவோம் /சந்தித்துக்கொள்வோம். அப்பொழுதே தலைவன்(காதலன்) என்னை (காதலி) பிரிந்து சென்றாலே என் மேனி மேல் பசப்பு நோய் ஊர்ந்து பரவிவிடும். ஆதலால் இப்பொழுது திருமண உடன்படிக்கை ஆன பின்பு நாங்கள் இருவரும் ஒன்றாய் ஒரே வீட்டில் வாழும் காலங்களில் கேட்கவாவேண்டும்? அவர் என்னைவிட்டு பிரிந்து சென்றால் பசலை என் மேனி மேல் பரவுதலை பற்றி கேட்கவே வேண்டாம். என்னால் தாங்க முடியாது. 

காதலன் நீங்கப் பசலைப்பூத்ததை தம் தோழிக்குச் சொல்லும் குறுந்தொகை வரிகளும் உண்டு.


ஒப்புமை
1) நற் 237:6, 242:6; குறுந் 367:3; ஐங் 206:1, 207:2; அகநா 4:13

2) 
3) இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன்
யாங்கறிந் தன்றுகொல் தோழிஎன்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே (குறுந் 205:5-7)

4) “..... பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே” (குறுந் 399:2-4)

5) அவர், தொடுவுழித் தொடுவுழி நீங்கின்றால் பசப்பே” (கலி.130:20-21)
“முயங்காக்காற் பாயும் பசலை” (நாலடி. 391)
“நோக்கவே தளிர்த்து நோக்கா
திமைப்பினும் நுணுகும் நல்லார்” (சீவக.1880)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கே செல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண- என் மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ? ('உவக்காண்', 'இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள், தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
எங்காதலராகச் செல்கின்றாரை உங்கே பாராய்; என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய். இஃது அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்கப் பசலை பரவாநின்றது. அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

சாலமன் பாப்பையா உரை
முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?.

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

குறள் 1184
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
உள்ளுவன் - உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

யான் - தன்மையொருமைப்பெயர்

உரைப்பது - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

அவர் - அவருடைய

திறம் - கூறுபாடு; வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.

ஆல்  - அகற்சட்டி; மரவகை; நீர் வெள்ளம் கார்த்திகை நஞ்சு ஆமெனல்; வியப்பு இரக்கம் தேற்றம்இவற்றைக்குறிக்கும்இடைச்சொல்; ஓர்அசைநிலை; மூன்றாம்வேற்றுமையுருபு; தொழிற்பெயர்விகுதி; எதிர்மறைவியங்கோள்விகுதி; எதிர்காலவினையெச்சவிகுதி.

கள்ளம் -  வஞ்சகம்; பொய்; களவு; குற்றம்; அவிச்சை; புண்ணிலுள்ளஅசறு

பிறவோ - பிறவு - பிறவி - பிறப்பு; உடன்பிறந்தவர்; இயல்பு; மறுபிறப்பு.

பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்.

முழுப்பொருள்
தலைவி தலைவனைப் பிரிந்திருக்கும் பொழுது அப்பிரிவை சமாளிக்க அவள் கையாண்ட முயற்சிகள் என்றால்

1) தலைவனைப் பற்றியே மனதார நினைத்துக்கொண்டு இருந்தாள். அவர்கள் ஒன்றாக பழகிய காலங்களை அசைப்போட்டுக் கொண்டிருந்தாள் அவர்கள் ஒன்று சேர்ந்து வாழப்போகிற காலங்களை கற்பனை செய்துக்கொண்டிருந்தாள்

2) தலைவனின் அருமைப் பெருமைகளையும் சிறப்பானத் திறமைகளைப் பற்றியேப்  பேசிக்கொண்டிருந்தாள்.

ஆனால் அவள் முயற்சிகள் அவளை வஞ்சித்துவிட்டது. ஏனென்றால் இவள் செய்வதெல்லாம் பசப்பு / பாசாங்கு. ஏமாற்றுவேலை. அவள் உள்ளுக்குள் ஆழ்மனதில் தலைவனின் பிரிவினால் வாடுகிறாள். அத்துன்பம் அவள் மேல் பசலை நோயாக படர்ந்துவிட்டது. உண்மை வெளிவந்துவிட்டது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்', என்ற வழிச் சொல்லியது.) யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்தது. (பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.).

மணக்குடவர் உரை
யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே, இத்தன்மையேனாகவும் பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது. இதற்கு நிலை யான் அறிகிலேன். இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?.

சாலமன் பாப்பையா உரை
நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?.

அவர்தந்தார் என்னும் தகையால்

குறள் 1182
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
அவர் -அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்; தலைவியின் காதலர்/தலைவன் 

தந்தார் - தருதல் - கொடை; கொடை அளித்தவர் 

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

தகையால் -குணத்தினால் ; தகுதியால் ' ஒப்பினால் ; பெருமையால் 

இவர்தந்து - இவர் தந்து ;இவர் கொடுத்து 

என் - என் 

மேனி - நிறம்; வடிவம்; உடல்; அழகு; நன்னிலைமை; நிலத்தின்சராசரிவிளைச்சல்; காண்க:குப்பைமேனி.

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

ஊரும் - ஊர்-தல் - ūr-   4 v. [M. ūr.] intr. 1. Tomove slowly; to creep, as an infant; to crawl,as a snake; நகர்தல் நந்தூரும் புனனாட்டின் (பாரத.கிருட்டிண. 11). 2. To spread, circulate, as blood;to extend over a surface, as spots on the skin;பரவுதல். இவக்காணென் மேனி பசப்பூர் வது (குறள்,1185). 3. To flow, as juice from the sugar-cane; வடிதல் கரும்பூர்ந்த சாறுபோல் (நாலடி, 34).4. To come to close quarters; அடர்தல் வெஞ்சமமூர்ந்தம ருழக்கி (சிலப். 27, 27, அரும்.). 5. To beunloosed, relaxed; கழலுதல் அவிர்தொடி யிறையூர(கலித். 100). 6. To itch; தினவுறுதல். உடம்பெல்லாம் ஊருகின்றது.--tr. 1. To mount; ஏறுதல் பாசடும்பு பரியவூர் பிழிபு . . . வந்தன்று . . . தேர்(ஐங்குறு. 101). 2. To ride, as a horse; to drive,as a vehicle; ஏறிநடத்துதல். சிவிகை பொறுத்தானோடூர்ந்தானிடை (குறள், 37).  

பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்.

முழுப்பொருள்
காதலர் / தலைவன் பிரிந்து இருக்கும் பொழுது காதலி / தலைவி மீத பசலை என்னும் நோய் வந்து விடுகிறது. இந்த நோய் அவர்/காதலர் தந்தது. இந்த பசலை நோய் காதலர் தந்தது என்னும் பெருமையால் அல்லது குணத்தினால் அது தலைவி மேனி முழுவதும் விருப்பி படர்ந்துவிடுகிறது. அவர் தரும் எதுவாக இருந்தாலும் இந்த உடம்பு ஏற்றுக்கொள்ளும் அது நோயாக இருப்பினும். 

பி.கு: பொதுவாக நோய் என்பது ஒரு பாகத்தை மட்டும் தாக்கும். ஆனால் இந்த பசலை உடல் முழுவதும் படர்ந்து இவ்வுலகிற்கு என் மனவருத்தத்தை காட்டிவிடுகிறதே. 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியுளேனாகவும்) பசப்பு - இப்பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனிமேல் இவர்தந்து ஊரும் - என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது. ('குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல' (சீவக.விமலை.1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. 'அஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா' என்பதாம்.).

மணக்குடவர் உரை
காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும். இஃது இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல: நீக்கவேண்டுவாயாயின் அவர்க்குச் சொல்லென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

சாலமன் பாப்பையா உரை
இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்

குறள் 1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடு

நயந்தவர் - விருப்பத்திற்குரியவர்; ஆசைக்குரியவர்

நயந்தவர்க்கு -

நல்கு - nalku   III. v. t. desire, long for, விரும்பு; 2. bestow, grant, ஈ; 3. favour, கடாட்சி.
ஆமை - ஒரு நோய்

நல்காமை - (என் மீது) ஆசை நோய்

நேர்தல் - பொருந்துதல்; நிரம்புதல்; நிகழ்தல்; எதிர்ப்படுதல்; இளைத்துப்போதல்; மென்மையாதல்; எதிர்தல்; நெருங்குதல்; தீண்டுதல்; பெறுதல்; கொடுத்தல்; உடன்படுதல்; ஒத்தல்; உறுதிசெய்தல்; அமர்த்தல்; நியமித்தல்; தண்டனைக்குஉட்படுத்தல்; வேண்டுதல்; செல்லுதல்; வேண்டிக்கொள்ளல்; எதிர்த்தல்; அறுத்தல்.

நேர்ந்தேன் - உடன்பட்டேன்

பசத்தல் - பசுமையாதல்; காமத்தால்மேனிபசலைநிறமாதல்; ஒளிமங்குதல்; மங்கிப்போதல்; பொன்னிறங்கொள்ளுதல்.

பசந்த - பசந்து - pacantu   n. U. pasand. 1.Elegance; beauty; attractiveness; fineness;நேர்த்தி. பசந்தெனவே சென்று (கவிகுஞ். 2). 2.A superior kind of Mango fruit; உயர்ந்த மாம்பழம் உன்னிடத்தில் என்ன பசந்திருக்கிறது.

என் - என்னுடைய

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

யார்க்கு - யாரிடம் சென்று

உரைக்கோ- சொல்லுவேன்

பிற - மற்றவர்கள்

முழுப்பொருள்
நான் ஆசையாய் காதலித்த என்னை ஆசையாய் காதலித்த என் காதலருக்கு அவர் கேட்ட பிரிவுக்கு உடன்பட்டேன். ஐயோ! நான் அப்போது உடன்பட்டேன் தவிர இப்படி ஆகும் என்று எனக்கு அப்போது தெரியாது. இவர் பிரிவால் நான் இப்பொது கொண்ட பசலை நிறத்தை (பசலை நோய்) யாரிடம் போய் சொல்வேன்?  

பி.கு: அப்படியே சொன்னாலும் பயனுண்டோ? இல்லை. பிரிவுக்கு என் காதலரே மருந்து. ஆதலால் யாரிடம் சொன்னாலும் அவர்களின் ஆறுதல் என்னை சமாதானமும் செய்யாது. 

ஒப்புமை


”பயப்பன் மேனி யதுவே; நயப்பவர்
நார்இல் நெஞ்சத்து ஆரிடை யதுவே” (குறுந்.219:1-2)

“பயப்புறு படரட வருந்திய
நயப்பின் காதலி நகைமுகம் பெறவே” (அகநா. 344:12-3)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அது, பசப்புற்ற பருவரல் என விரியும்.அஃதாவது, பசப்புறுதலானாய வருத்தம். இதனைப் 'பந்தெறிந்த வயா' (கலித், குறிஞ் .3) என்பதுபோலக் கொள்க. பசப்பாவது, பிரிவாற்றாமையான் வருவதோர் நிறவேறுபாடு. இது, தலைமகனைக் காணப் பெறாதவழி நிகழ்வதாகலின், கண் விதுப்பு அழிதலின்பின் வைக்கப்பட்டது .]

(முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான்; பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ - அதனை ஆற்றாது இது பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்? ('பிற' என்பது அசைநிலை. உடம்படாவழி ஒழிதல் குறித்துப் பிரிவுணர்த்தினராகலின் அவரன்புடையர் என்னும் கருத்தான் 'நயந்தவர்' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவு நிகழுமாகலின், இனி அவரைக் கூடுதலரிது என்னும் கருத்தான் 'நல்காமை' என்றும், முன்னர் உடம்படுதலும் பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தனவல்ல என்பாள் 'பசந்த என் பண்பு' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் 'யார்க்கு உரைக்கோ' என்றும் கூறினாள்.).

மணக்குடவர் உரை
காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த யான் பசந்தவெனது நிறத்தை மற்று யாவர்க்குச் சொல்லுவேன். இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது.

மு.வரதராசனார் உரை
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?.

சாலமன் பாப்பையா உரை
என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?.

பசந்தாள் இவள்என்பது அல்லால்

குறள் 1188
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
பசந்து - நேர்த்தி, Elegance; beauty; attractiveness; fineness
பசந்தாயிருத்தல், v. noun. Being pleasing, attractive, engaging to the sight.
பசலை -  அழகுதேமல்; பொன்னிறம்; காமநிறவேறுபாடு; தலைவன் பிரிவால் வேறுபட்ட நிறம்; வருத்தம்; மனவருத்தம்; இளமை; கவலையின்மை; கீரைவகை.
'பசந்தாள் இவள்' - தலைவனின் பிரிவால் தலைவி வருத்தம் கொண்டு உடல் வேறு நிறம் பூண்டது
என்பது - என்று கூறுவாட்
அல்லால் - மற்றபட்டி
‘இவளைத் - இந்த அழகு தலைவியை 
துறந்தார் அவர்’  - விட்டு விட்டு பிரிந்து இந்த வருத்த நிலைக்கு கொண்டு வந்த அந்த தலைவனை
என்பார் இல் - என்று பழிப்போர் யாரும் இல்லையே


முழுப்பொருள்

இவள் அழகினால் தலைவன் மேல் காமம் கொண்டாள். இப்பொழுது பிரிவைக்கூட தாள முடியாமல் மற்றவர்கள் அறிந்துக்கொள்ளும் அளவிற்கு வாடியுள்ளாள் (தேக நிறம் மாறியுள்ளதாம்). அதாவது பிரிவால் வாடி இருக்கிறாளாம். என்று ஏசூவார்களாம் சுற்றத்தில் உள்ளவர்கள்.

ஆனால் இந்த அழகிய பெண்ணை பிரிந்து துறந்து விட்டு சென்று விட்டானே இந்த நோய் நிலைமைக்கு காரணமான இந்த (பாவி :) ) தலைவன் என்று யாரும் தலைவனை குறை சொல்ல மாட்டார்களாம். ஐயோ என்ன அவலம் இது. ஒருத்தரை மட்டும் குறை சொல்கிறது இவ்வுலகு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை' என்ற தோழியோடு புலந்து சொல்லியது.) இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. ('என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின்.).

மணக்குடவர் உரை
இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது, இவளைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமையைச் சொல்லுவார் இல்லை. இஃது இப்பசப்பு வரலாகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(நீயிங்ஙனம் பசத்தல் கூடாதென்ற தோழியொடு புலந்து சொல்லியது.)

இவள் பசந்தாள் என்பது அல்லால்- இவள் காதலர் வரும்வரை ஆற்றியிராது பசலை கொண்டாள் என்று என்னைப் பழிப்பதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல்- இவளை அவர் கைவிட்டுப் போய்விட்டாரென்று அவரைக் குறை கூறுவார் இவ்வுலகத்துஒருவருமில்லை.

தன்னையே கடிதல் பற்றிப் புலக்கின்றாளாதலின்,'என்பார்' என அயன்மைபடுத்திக் கூறினாள்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கலந்திருந்தான் கனிந்திருந்தேன் கைகள் தமக்கிடையில்
பிணைந்திருந்தேன் விட்டுப் பிரியாமை வேண்டி நின்றேன்
அலந்திருந்த காரணத்தால் அணைப்பதிலே சிறப்பளித்தேன்
அப்படியே மயங்கியதால் கூடலிலோ வென்றிருந்தேன்
பிரிந்து விட்டான் பேதையெனை உடல் நிறமும் மாறியது
பேசுகின்றார் ஊரார் என் மாற்றமதைப் பெரிதாக
துறந்து சென்ற அவனன்றோ துன்பமதை இழைத்தவன் காண்
தூற்றுகின்றார் அவனை விட்டு எனை என்ன நியாயமிது

இழிவு படுத்துகிறார்கள் ... (நன்றி கவிப்புயல் இனியவன்)

உன்னால் தானடா ....
எல்லாம் நடந்தது .....
என் உடல் முழுவதும் ...
காதல் நோய் படர்ந்து.....
விட்டது ...!!!

என்
உடலில் காதல் நோய் ...
பரவியிருப்பதை ஊரார் ...
இழிவு படுத்துகிறார்கள் ...
நீ பிரிந்து சென்றது தான் ...
காரணம் என்று கூற ...
மாட்டார்களாமே .....!!!

மு.வ உரை
இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!.

சாலமன் பாப்பையா உரை
இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.

சாயலும் நாணும் அவர்கொண்டார்

குறள் 1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா 
நோயும் பசலையும் தந்து.
[காமத்துப்பால், கற்பியல், பசப்புறுபருவரல்]

பொருள்
சாயல் - மென்மைத்தோற்றம்; அழகு; ஒப்பு; நிறம்; மேனி; மென்மை; சாய்வு; இளைப்பு; நிழல்; மாதிரி; நுணுக்கம்; துயிலிடம்; சார்பு; மஞ்சள்; மேம்பாடு; மேம்பாடாகியசொல்; அருள்.

நாண் -> பெண்டிர் குணம் நான்கு - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று
நாணம் -> எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல் 

அவர்கொண்டார் - அவர் கொண்டு சென்று விட்டார்

கைம்மாறு - மறு, பிரதி; பதிலுதவி
கைம்மாறா - அதற்கு பதிலாக / கைம் மாறாக (உடனடியாக)

நோய் - வியாதி, துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு, நோ

பசலை -  அழகுதேமல்; பொன்னிறம்; காமநிறவேறுபாடு; தலைவன் பிரிவால் வேறுபட்ட நிறம்; வருத்தம்; மனவருத்தம்; இளமை; கவலையின்மை; கீரைவகை.

தந்து -  தருதல்

முழுப்பொருள்
என்னை பிரிந்து செல்லும் பொழுது என் காதலர் என் மேனி அழகினையும், நாணனத்தினையும் கொண்டு சென்றார். அவர் இல்லாமல் எனக்கு ஏது அழகு ? அவரை காணாமல் நான் எப்படி வெட்கபடுவேன் ? என் நினைவாக என் அழகினையும் அவர் முன் நான் நாணி வெட்கம்கொண்ட சித்திரங்களை மனதில் எடுத்து கொண்டு சென்றாரோ ?

அதற்கு பதிலாக அவர் எனக்கு கொடுத்தது காமநோயும் (துன்பம்), பசலையும் தான். இந்த காமநோய் என்பது அவரது பிரிவினில் அவரை நினைத்து நான் கொண்ட மன வருத்தம். அவர் இல்லாமல் என் மேனியில் வேறுபட்ட (காம) நிறம் ஒன்று பூண்டு உள்ளது. 

இங்கு கைமாறு என்று கூறப்பட்டுள்ளது. கைமாறு என்பது கொடுத்த உடன் திரும்ப பெருவது. ஆதலால் இங்கு தலைவனை பிரிந்த உடனேயே தலைவிக்கு பசலையும் நோயும் அவளை ஆட்கொண்டதாக பொருள்.

தலைவியின் பசலை நோயை தலைவன் வந்து தொட்டாலே ஒழிய தீராது.

அழகும் வெட்கமும் நோயிற்கும் பசலைக்கும் ஈடாகாது (எதிர்நிரை அணி). ஆதலால் அவர் மறுபடியும் வந்து எனது அழகினையும் நாணத்தினையும் தந்தால் தான் (என்னை தொட்டால் தான்) இந்த நோயும் பசலையும் தீரும் என்று குறிப்பு அறியலாம்.

- நோய் என்று வார்த்தைக்கு குற்றம் என்று பொருள் கொண்டால் - பிரிந்தவர் இன்னும் வரவில்லை - ஆக அவரை பிரிய விட்டது எனது குற்றம் என்றும் கூட கொள்ளலாம்.  ஆதலால் தான் இந்த நோயில் அவள் வாடுகிறாள்.

ஒப்புமை
”பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி 
பசலையார்ந்தன குவளையங் கண்ணே” (குறுந் 13:3,5)

”ஆய்மலர் உண்கண் பசப்பச் 
சேய்மலை நாடன் செய்த நோயே” (ஐங்குறு 242:4-5)

”அரிமதர் உண்கண் பசப்பநோய் செய்யும், பெருமான்” (கலி 82:20-21)

”பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே” (சம்பந்தர்.செங்காட்டங்குடி)

குறட் கருத்து காமத்துப் பால் (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஊரார் பழிக்கின்றார் என்னவரைப் புரியாமல்
உண்மை நிலை தெரியாமல் எங்கேயும் எப்போதும்
வாராது போயிடுவார் என்றெங்கும் கூறுகின்றார்
வழக்குணரார் உணர்வாரா என்னவரின் பெருந்தன்மை
நேராய் என் நாணமும் அழகும் அவர் கொண்டார
நினைத்துணரக் காம நோயும் பசலையுமே எனக்களித்தார்
சீராய் இரண்டெடுத்தார் சிறப்பாய் இரண்டளித்தார்
ஊரார் அறியார் இவ்வுண்மை நிலை பழிக்கின்றார்

குறட் கருத்து 2 (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

கண்கள் இது அவர் காணக் காதலித்தேன்
காதலரும் வந்து என்னை ஆதரித்தார்
பண்ணிசைத்தோம் பல விதமாய்ப் பாடி நின்றோம்
பாடலைப் போல் கூடலையும் தேர்ந்து வென்றோம்
மன்னவரும் எனைப் பிரிந்தார் அழகினோடு
மங்கை யெந்தன் நாணமதும் கொண்டு சென்றார்
தென்னவரோ கைம்மாறாய் நோய்கள் தந்தார்
தீராத காமமதும் பசலையதும்


பரிமேலழகர் உரை
'அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. கைம்மாறா நோயும் பசலையும் தந்து - பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; சாயலும் நாணும் அவர் கொண்டார் - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார். 

விளக்கம் 
(எதிர் நிரல் நிறை. 'அடக்குந் தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா,' என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(அழகும் நாணும் அழியாமல் நீயாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

நோயும் பசலையும் கைம்மாறாத் தந்து- நம் காதலர் நம்மைவிட்டுப் பிரியும் போதே இக்காம நோயையும் பசலையையும் எதிரீடாகத் தந்துவிட்டு; சாயலும் நாணும் அவர் கொண்டார்-என் மேனியழகையும் நாணையும், தம்முடன் கொண்டுபோய் விட்டார்.

அவர் திரும்பி வந்தாலொழிய என் மேனியழகும் நாணும் திரும்பாவென்பதாம்.சாயலுக்குப் பசலையும் நாணுக்கு நோயும் ஈடாதலால் எதிர்நிரனிறை.

மணக்குடவர் உரை
மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்; அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து. மென்மை- பெண்மை. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமைற் கூறியது.

சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.

மு.வ உரை
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

பரிவருத்தனை அணி (நன்றி: Wiki)
12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் பரிவருத்தனை யணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே 
                            --(தண்டியலங்காரம், 87)

பரிவருத்தனை - ஒன்று கொடுத்து வேறு ஒன்று வாங்குதல். இது மூவகைப்படும் என்று கூறுவாரும் உளர். அவை, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல், கொடுத்தது மிகையாய்க் கொண்டது குறைவாய் இருத்தல், கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்பன.

     சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
     நோயும் பசலையும் தந்து
                         --(திருக்குறள், 1183)

இது, தலைவன் தன்னைப் பிரிந்தமையால் பசலையுற்று வருந்திய தலைவி புலம்பிக் கூறியதாக அமைந்தது.

பாடல்பொருள்
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

அணிப் பொருத்தம்
இப்பாடலில் தலைவன் தலைவிக்குக் கொடுத்தனவும், அவளிடம் இருந்து கொண்டனவும் சமமாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இது, கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவருத்தனை அணி ஆகும்.

எதிர் நிரல் நிறை அணி (நன்றி: துரை தாசன்)

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
    நோயும் பசலையும் தந்து                                            (1183)

சாயல், நாண் என்ற சொற்களுக்கு ஏற்ப பசலை, நோய் என்ற சொற்களை வரிசைப்படக் கூறாமல் முறைமாற்றி அமைத்துள்ளமையால் எதிர் நிரல் நிறை அணி ஆகும்.  

குறுந்தோகையும் பசலையும் சினிமாவும்
1) காதல் கோட்டை
பாடல்: மொட்டு மொட்டு மலராத மொட்டு

2) என் ஸ்வாசகாற்றே
பாடல்: தீண்டாய் மெய் தீண்டாய்

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

நூல்: குறுந்தொகை (#27)
பாடியவர்: வெள்ளிவீதியார்

சூழல்: பாலைத்திணை : காதலியைப் பிரிந்து செல்கிறான் காதலன். ‘இந்தத் துயரத்தை இவள் எப்படித் தாங்குவாளோ!’ என்று தோழி கவலைப்படுகிறாள். அவளுக்குக் காதலி சொல்லும் பதில் இது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நல்ல பசுவின் இனிமையான பால். அந்தப் பாலைப் பசுவின் கன்று குடிக்கவேண்டும், அல்லது அது பாத்திரத்தில் கறக்கப்பட்டு மற்றவர்களுக்காவது பயன்படவேண்டும். இந்த இரண்டுமே இல்லாமல் அது தரையில் சிந்தினால் வீண்தானே?

அதுபோல, தேமல் படர்ந்த என் பெண்மையும் மாந்தளிர் நிற அழகும் எனக்கும் பயன்படவில்லை, என்னுடைய காதலனுக்கும் இன்பம் தரவில்லை. பசலை படர்ந்து வீணாகிக்கொண்டிருக்கிறது.




(மேலே உள்ள கன்றும் பாடலுக்கு மற்றுமொரு விளக்கம். நன்றி: மாதவிப் பந்தல்)
நல்ல பசும்பால்-ன்னா ஒன்னு கன்று குடிக்கணும்! இல்லை கலத்தில் கறக்கணும்! ஆனா இப்படி நிலத்தில் வீணே வழிகிறதே!
எனக்கும் உதவாமல், என்-அவருக்கும் உதவாமல், என் மாந்தளிர் மேனியும், வரியுள்ள அல்குலும் (பெண் உறுப்பும்), பசலையால், வீணே அழிந்து உழல்கிறதே!
(*அல்குல் = இடுப்பு (அ) பெண்ணுறுப்பு, அவ்வக் கவிதையில் இடத்துக்கு ஏற்றாற் போல்)

ஏதோ, "காமம்" பிடிச்சிப் போயிப் பாடிட்டாங்க-ன்னு நினைக்காதீங்க!:)
இந்தப் பாடல் மிகவும் சோகமான + புரட்சிகரமான பாடல்!

பொதுவாக, ஆண் கவிஞர்கள் வர்ணனைகள் பாடுவதுண்டு! பெண்களின் உறுப்புகளை வர்ணிப்பதுண்டு! ஆனால் பெண்கள்? = வெளிப்படையாக காமம் பற்றிப் பாடியதில்லை!
அதிலும் உறுப்பைக் காட்டி எல்லாம் பெண்கள் பாடியதே இல்லை! வெள்ளிவீதியார் என்னும் இந்தப் பெண் மட்டுமே இத்தனை "துணிவு"! தோழி கோதை என்னும் ஆண்டாளுக்கு முன்னோடி!

நீ பார்க்காமல்
நானெப்படி அழகாவேன் ?
உன்னைப் பார்க்காமல்
எனக்கெப்படி வரும் வெட்கம் ?
எப்போது உன்னைப் பிரிவேன் எனக்
காத்திருந்து தாக்குகிறது காதல் நோய்

நன்றி: ரிஷ்வன்
பிரிவுத் துயரத்தையும்
பசலை நிறத்தையும்
காதல் பரிசாய் தந்தவர்
நாணத்தையும் - என்
ஊணழகையும் ஒருசேர
கையோடு கொண்டுசென்றார்.