Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label படைச்செருக்கு. Show all posts
Showing posts with label படைச்செருக்கு. Show all posts

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு


குறள் 780
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
புரந்தார் - புரவலர்; அரசர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

கண்ணீர் - கண்ணிலிருந்து வழியும் நீர்

மல்கச் - மல்குதல் - நிறைதல்; செழித்தல்; அதிகமாதல்

சாகிற் - சாதல் - இறத்தல், வீரமரணம் அடைவதென்றால் 

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

சாக்காடு - இறப்பு; கெடுதி

இரந்து - இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

தக்கது -  தகுதி; தகுதியானது.
தகுதி - பொறுமை; பொருத்தம்; தகுதிவழக்கு; மேன்மை; நல்லொழுக்கம்; நடுவுநிலைமை; ஆற்றல்; அறிவு; கூட்டம்; தடவை; குணம்; நிலைமை.

உடைத்து - உடைதல், இருக்கும், உண்டு

முழுப்பொருள்
போர் வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் கண்களில் நீர் மல்க நிற்கும் ஆட்சியாளர் இருக்கும் பொழுது, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.

இவ்விடத்தில் இரண்டு விஷயங்களை காணவேண்டும்
1. அரசன் எண்ணிப்பார்க்கும் அளவிற்கு வீரர்கள் போரில் எழுச்சியுடன் போர் புரியவேண்டும்.
2. வீரர்களின் தியாகங்களை உயிரை அஞ்சா வீரத்தை மன உறுதியை எண்ணிப்பார்க்கும் தலைவனை பெறுதல் ஆகும். தனது குழுவை மனதார நினைத்துப் பார்க்கவேண்டியது ஒரு தலைவனின் கடமை எனக்கூட கூறலாம்.

கம்ப.கும்பகருணந் (154) வதை படலத்தில், கம்பர், 
“நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர்கொடாதங்குப் போகேன்” (கம்ப.கும்பகர்ணன் 158)என்றும் 
”ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க் குரிய தம்மா” (கம்ப.கும்பகர்ணன் 156)

என்பார். அதாவது, நீரில் வரைந்த கோலம் போன்றதான குறுகிய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள, இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கி இந்தப் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த அண்ணனுக்காக தன் உயிரைத் தராமல் இராமன் பக்கம் போகமாட்டேன் எனக் கூறும் கும்பகர்ணனின் நெஞ்சுரம் அவனை உயர்ந்த கொள்கையும், செஞ்சோற்றுக் கடன் கொண்டவனாகவும் இராவணனுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் குறிக்கோளாக அமைத்துக் கொண்டவன் எனவும் காட்டுகிறது. 

மகாபாரதத்திலும் துரியோதனுக்காகப் போரிட்டு மறைந்த மாரதர்கள் மாண்ட பிறகு, வருந்தி துரியோதனன் கலங்கும் காட்சிகள் பலவுண்டு, குறிப்பாகக் கர்ணனின் சாவுக்கு துரியோதனின் கண்ணீரே இக்குறளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் - தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்துகோள்தக்கது உடைத்து - அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து. (மல்குதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளியார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால் துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தம்மை ஆண்டவரது கண் நீர்மல்குமாறு சாக வல்லாராயின் அச்சாக்காடு எல்லாரானும் வேண்டிக் கொள்ளும் தகுதி யுடைத்து. இஃது ஆண்டவனுக்குக் கேடுவரின், படவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே


குறள் 779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
இழைத்தது - இழைத்தல் - செய்தல்; குழைத்தல் தூற்றல் செதுக்குதல் வரைதல் மூச்சிரைத்தல்; கூறுதல் நுண்ணிதாகஆராய்தல்; பூசுதல் வஞ்சினங்கூறுதல்; கலப்பித்தல்; அமைத்தல் இழையாக்குதல்; மாத்திரைமுதலியனஉரைத்தல்; பதித்தல்

இழைத்தது – தாம் இவ்வாறு பகைவரை முடிப்பேன் என்று வஞ்சினம் (சபதம்) செய்துவிட்டு

இகத்தல் - தாண்டுதல்; கடத்தல் அடக்குதல்; கைப்பற்றுதல் பிரிதல் பொறுத்தல் போதல் நீங்குதல் புடைத்தல் காழ்த்தல் நெருங்குதல்

இகவாமைச் -  நீங்காது; அச்சொல்லைத் தப்பாமால், கைவிடாது போரிட்டு

சாதல் - இறத்தல் 

சாவாரை - இறப்பார்; மடிந்தவர்

யாரே - யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி.

பிழைத்தல் - குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல்

பிழைத்தது - அவர் தாம் சொன்ன வஞ்சினத்தை நிறைவேற்றாது விட்டாரென்று

ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல்.

ஒறுக்கிற்பவர் - பழிச்சொல்லால் தண்டிக்க வல்லவர்?

முழுப்பொருள்
பகைவரை அழிப்பேன் அவர்களை வெல்வேன் என்று தூற்றி (சபதமிட்டு/ சூளுரைத்து / வஞ்சினங்கூறி)  போருக்கு சென்ற வீரர் அவ்வாறு பகைவரை அழிக்காமல் வீரமாக போரில் செத்தால் அவ்வீரர் தன் சொல்லில் இருந்து தவறிப்போனார் என்று இகழுபவர் யாரோ? யாருமில்லை. பெரும் படைவீரரது பெருமையைக் கூறுகின்ற மற்றொரு குறளிது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“இழைத்த திறவா தவரை” (பழமொழி 176)

பரிமேலழகர் உரை
இழைத்தது இகவாமைச் சாவாரை - தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை; பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார் - அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்? (இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னனாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்லி' என்பது அவாய் நிலையான்வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற்சிறப்புக் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரை அவர் தப்பியது சொல்லிப் பழிக்கவல்லவர் யாவர். இது வஞ்சினம் தப்பின் படவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

சாலமன் பாப்பையா உரை
தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?.

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

 

குறள் 778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
உறின் -  உறு - மிகுதி; மிக்க; பகை; போர்.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சா - அஞ்சாமல்; பயப்படாமல்

மறவர் - பகைவரின் ஆனிரையைக் கவரச் செல்லும் மறவர; ஒரு தமிழ்ச்சாதி, போர்த் தொழில் புரிபவர்கள், தென் தமிழகத்தில் பெருவாரியாக வாழும் முக்குலத்தோர் என்னும் மூன்றுச் சாதியினர் அடங்கிய சமூகப்பிரிவில் ஒரு சாதியினர் மறவர் எனப்படுவர்...மற்ற இரு சாதியினர் கள்ளர் மற்றும் அகமுடையார் ஆவர்.

இறைவன் - தலைவன்; கடவுள் சிவன் திருமால் அரசன் பிரமன் குரு மூத்தோன் கணவன் சிவனார்வேம்பு

செறிதல் - நெருங்குதல்; திண்ணிதாதல்; இறுகுதல்; அடங்குதல்; பொருந்துதல்; எல்லைகடவாதிருத்தல்; மறைதல்; மிகுதல்; திரளுதல்; கலத்தல்; குளித்தல்; புணர்தல்.

செறினும் -   அடக்கினாலும், (வேண்டாமென்று தடுத்தாலும்) 

சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.

குன்றல் - குறைதல்; கெடுதல்விகாரம்.

இலர் - இல்லாதவர்கள்; மக்கள் இல்லை; இல்லாதவர் 

முழுப்பொருள்
போர் வந்தால் தன் உயிர் போகக்கூடும் என்று அஞ்சாத வீரர்களை ஒரு அரசு போர் வேண்டாம் என்று தடுத்தாலும்/அடக்கினாலும் அவ்வீரர்கள் (அப்பாடா  தப்பித்தொம் என்று இல்லாமல்) தங்கள் நெஞ்சத்தில் பகைவரை வெல்லவேண்டும் என்னும் எழுச்சியை உறுதியை குன்றாது வீரத்தை குன்றாது வைத்திருப்பார்களானால் அவ்வீரமே அப்படைக்கு செருக்காகும். அப்படையே அந்நாட்டுக்கு செருக்காகும்.

இதுப்போன்ற சூழல்களை நாம் பழங்காலத்திலும் காணலாம், இன்றும் காணலாம். பழங்காலத்தில் மன்னராட்சி காலங்களில் சில மன்னர்கள் வீரமல்லாது இருப்பர். அவர்கள் போரை தவிர்க்கவே முனைவர். ஆனால் அப்பொழுதும் மக்களை நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் வீரர்கள் இருப்பது அந்நாட்டிற்கு நன்மை சேர்க்கும். இன்றைய மக்கள் ஆட்சி காலங்களில் போர் என்பது எதற்கு நடக்கிறது என்றென்பதே தெரியவில்லை. போர் சூழல் உருவாகும். ஆனால் பொருளாதார இழப்புகளையும் உலகநாடுகளை நட்பு இழப்புகளையும் உத்தேசித்து போர் இல்லாமல் அந்நாட்டு அரசரோ பிரதமரோ ஜனாதிபதியோ செய்துவிடுவார். இது ஒருவித தொடர்கதையே. ஆனால் ஒவ்வொரு தடவையும் எழுச்சிப் பெரும் வீரர்கள் ஒவ்வொரு தடவையும் இப்படி நடக்கிறது, ஆதலால் நாம் போரை பற்றி அஞ்சவேண்டியதில்லை தலைவர்கள் போரை நிறுதிவிடுவார்கள் என்று நினைத்தால் என்னவாகும்? அது நாட்டிற்கு மிகுந்த கேடு விளைவிக்கும். மன்னர் ஆட்சி என்றாலும் சரி மக்கள் ஆட்சி என்றாலும் சரி போர் என்பது கடைசி ஆயுதமே. மதிகொண்ட தலைவர்கள் உயிர் சேதங்களையும் பொருளாதார இழப்புகளையும் தவிர்க்கவே விரும்புவார்கள். தலைவர்கள் கூடிப்பேசி போரை தவிர்ப்பார்கள். ஆனால் என்றும் போரை அஞ்சாத பகைவரை வெல்லவேண்டும் என்னும் எழுச்சியை கொண்ட வீரர்களை கொண்டு இருப்பது ஒரு தலைவனுக்கும் நாட்டிற்கும் வலிமையை சேர்க்கும். நன்மை பயக்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மண்டமர் நசையொடு கண்படை பெறாது” (முல்லை.67)

“பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அதுபோர் என்னும் என்னையும் உளனே” (புறநா.89:7-9)

பரிமேலழகர் உரை
உறின் உயிர் அஞ்சா மறவர் - போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் - தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார். (போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்'(புறநா.31) என்றும்,'புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'(புறநா.68) என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
ஒன்று உற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர் தம்மரசனால் செறுக்கப்பட்டாராயினும் தமது முதன்மை குன்றுதல் இலர். இஃது அஞ்சாமையுடையார் வீரியஞ் செய்யுமிடத்துக் குறைய நில்லாமை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

குறள் 777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
சுழலும் - சுழலுதல் - உருளுதல்; வட்டமாகச்சுற்றுதல்; சுற்றுத்திரிதல்; அலைவுபடுதல்; சஞ்சலப்படுதல்; சோர்தல்; பொறிமயங்குதல்

இசை  -இசைவு; பொன் ஊதியம் ஓசை சொல் புகழ் இசைப்பாட்டு நரம்பிற்பிறக்கும்ஓசை; இனிமை ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை சீர் சுரம் வண்மை திசை

வேண்டி - vēṇṭi   prep. id. For thesake of; பொருட்டு. அதை எனக்கு வேண்டிச் செய்.
வேண்டிக்கேள்-தல் [வேண்டிக்கேட்டல்] vēṇṭi-k-kēḷ-, v. tr. id. +. To beseech;மன்றாடிக்கேட்டல். (யாழ். அக.)

வேண்டா - வேண்டாம் - vēṇṭām   veeNTaam வேண்டாம் do not want; should not  

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உயிரார் - உயிர் உள்ளவர் 

கழல் - வீரக்கழல்; சிலம்பு; கால்மோதிரம்; செருப்பு; பாதம்; கழற்சி; காற்றாடி; பொன்வண்டு.

யாப்புக் - கட்டுகை; கட்டு; செய்யுள்; யாழ்ப்பத்தரிற்குறுக்கேவலிவுறச்செய்யுங்கட்டு; சிறப்புப்பாயிரஇலக்கணம்பதினொன்றனுள்இன்னநூல்கேட்டபின்இன்னதுகேட்கத்தக்கதென்னும்தொடர்பு; அன்பு; உறுதி; சூழ்ச்சி; பொருத்தம்; பாம்பு.

காரிகை - பெண்; அழகு; அலங்காரம்; கட்டளைக்கலித்துறை; ஓர்யாப்பிலக்கணநூல்; ஒருநிறை; வாதனை.

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

நீர்த்து - நீர்த்தல் -  நீராதல்; ஈரமாதல்.

முழுப்பொருள்
இவ்வுலகில் எட்டுத்திக்கும் சுழலும் ஆற்றல் பெற்ற புகழை வேண்டி தன் உயிரை வேண்டாத படை வீரர்கள் தங்கள் உடம்பில் (தங்கள் கால்களில்) அணியும் சிலம்பு(வீரக்கழல்) அவர்ளுக்கும் அவர்கள் வீரத்திற்கும் அழகு சேர்க்கும் குணம் வாய்ந்தது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் - துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக்காரிகை நீர்த்து - கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து. (வையைத்தைச் சூழும் எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல் - அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.).

மணக்குடவர் உரை
பரவும் புகழை விரும்பி, உயிரை விரும்பாதார், கழல் கட்டுதல் அழகுடைத்து. இது புகழ் விரும்பும் படை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

குறள் 776
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
விழுப்புண் - போரில்முகத்திலும்மார்பிலும்பட்டபுண்; இடும்பைதரும்புண்.

படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்

படாத - உண்டாகாத , நிகழாத

நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.; யாவும்

வழுக்கினுள் - வழக்கு - இயங்குகை; உலகவழக்கு; செய்யுள்வழக்கு; என்னும்இருவகைவழக்குகள்; இயல்புவழக்குதகுதிவழக்குகள்; பழக்கவொழுக்கம்; நீதி; நெறி; நீதிமன்றத்தில்முறையிடுதல்; விவகாரம்; வாதம்; வண்மை.

வைக்கும் - வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

நாளை - அடுத்ததினத்தில்; நாளுக்குரிய.

எடுத்து - சுமை, பொதி.

முழுப்பொருள்
ஒரு வீரருக்கு நெறிப்படி ஒரு நாள் என்றால் அது விழுப்புண்கள் பட்ட நாள்  மட்டும் தானாம். அதாவது போர்க்களத்திலும் பயிற்சிகளத்திலும் மார்பிலும் முகத்திலும் பட்ட புண்கள் அவனுடைய நாட்களை அடையாள படத்துகின்றன. மற்ற நாட்களையெல்லாம் வீணாய் கழிந்த பயனற்ற நாட்களாகவே கருதுகிறான்.

இது போர் புரிந்தவனுக்கு என்று மட்டும் கருதாமல் எல்லோருக்கும் பொதுவாக கருதினாலும் பொருத்தமாக இருக்கும். செயலாற்றாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று கருதலாம். செயலாற்றிய நாள் என்றால் முட்டிமோதி கற்றுணர்ந்த நாட்களும் செயல் புரிந்து ஆக்கம் விளைவித்த நாட்களுமாகும்.

பேராசிரியர் கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் படைத்த வரலாற்று நாவலாம் பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையர் இருபத்து நான்கு யுத்தகளங்களில் பங்கெடுத்து அறுபத்து நான்கு விழுப்புண்கள் பெற்ற வீரராகவும், ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலாவில், விஜயாலயச் சோழர் தொண்ணுற்றாறு விழுப்புண்களைத் தாங்கியவராகவும் குறிப்பிடப்படுகின்றனர்.

இலக்கியங்களில் விழுப்புண் பெருமையப் பாடிய புலவர்கள் பலர். ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியின் வாகையப்பற்றிய பாடிய புறநானூற்றுப்பாடலில் 
“அருஞ்சமம் ததைய நூறி நீ 
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே!” (புறநா.93:15) 
”இரும்புசுவைக் கோண்ட விழுப்புண்” (புறநா.180.4)
”போரடு தானை எவ்வி மார்பின்” 
எஃகுறு விழுப்புண் பலவென” (புறநா.233:6-7)
என்பார்.

”ஒளிறுவாள் விழுப்புண் காணிய” (நெடுநல்.172)

இசை விழுப்புண்ணாற்றும் மருந்தானதை மலைப்படுகடாம் இவ்வாறு சொல்கிறது:

“கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார்க் காப்பென

அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்’
                                           – மலைபடுகடாம்-302-304

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன் நாளை எடுத்து - தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் - அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன் . (விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத நாள்களோடும் கூட்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊறு அஞ்சாமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

தனது வாழ்நாளாகிய நாளையெண்ணி அவற்றுள் விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளுள்ளே யெண்ணி வைக்கும் வீரன். இது போரின்கண் முகத்தினும் மார்பினும் புண்படலும், முதுகுபுறங்கொடாமையும் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்.

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்

குறள் 775
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
விழித்த - விழித்தல் - கண்திறத்தல்; தூக்கம்தெளிதல்; எச்சரிக்கையாயிருத்தல்; கவனித்துநோக்குதல்; மருண்டுநோக்குதல்; ஒளிர்தல்; தெளிவாதல்; உயிர்வாழ்தல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

வேல் - நுனிக்கூர்மையுடையஆயுதவகை; திரிசூலம்; ஆயுதப்பொது; ஆயுதவகை; முருகன்வேல்; வெல்லுகை; பகை; மரவகை; வெள்வேல்; உடை; மூங்கில்.

கொண்டு - கொள், முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை

எறிய - எறி - குத்து; தள்ளு; அறை; அடி; வெட்டு; வீச்சு; உதை; அடிக்கை; குறிப்பாகச்சொல்லுகை

எறிதல் - உதைத்தல்; வீசுதல்; வெட்டுதல்; முறித்தல்; அறுத்தல்; பறித்தல்; அழித்தல்; ஓட்டுதல்; குத்தல்; அடித்தல்.

அழித்து -  அழிதல் -  aḻi-   4 v. intr. [K. M. aḻi.]1. To perish, to be ruined; நாசமாதல். 2.To decay, to be mutilated; சிதைவுறுதல்.ஆரவண்டலழியும் (நைடத. கைக்கி. 10). 3. To fail,to be frustrated; தவறுதல் நீயுரைத்த தொன்றுமழிந்திலது (கம்பரா. பிராட்டி 30). 4. To becomeunsettled, to lose standing; நிலைகெடுதல் அழிந்தகுடி. 5. To be defeated; தோற்றல் வாதி லழிந்தெழுந்த (தேவா. 859, 3). 6. To melt with love மனம் உருகுதல் 7. To suffer, to be troubled;வருந்துதல். சூணயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும்(தொல். பொ 150). 8. To be disheartened; மனம்உடைதல். இதற்கு உள்ளழியேல் (கம்பரா. நகர்நீங்கு.18) 9. To swell, increase; பெருகுதல் அழியும்புன லஞ்சன மாநதியே (சீவக. 1193). 10. Tosympathise with; பரிவுகூர்தல். புணர்ந்த நெஞ்சமொ டழிந்தெதிர் கூறி விடுப்பினும் (தொல். பொ 40).11. To be spent, used up, sold out, exhausted;செலவாதல். என்னிடமிருந்த சரக்கெல்லாம் அழிந்துவிட்டது. 

அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல்

இமைப்பின் இமைப்பு - இமைத்தல் - இமைகொட்டுதல்; ஒளிவிடுதல் சுருங்குதல் தூங்குதல்

ஒட்டு - இணைக்கப்பட்டது; இணைப்பு; சார்பு; நட்பு; மரப்பட்டை; மரவொட்டு; ஓரம்; பறவைபிடிக்கும்கண்ணி; ஒட்டுக்கடுக்கன்; ஒட்டுத்திண்ணை; படைவகுப்பு; அற்பம்; நற்சமயம்; சூள்; துணை; இகலாட்டம்; ஓரணி.

ஒட்டுதல் - ஒட்டவைத்தல்; பொருத்துதல்; சார்தல்; பந்தயம்கட்டுதல்; துணிதல்; கிட்டுதல்; கூட்டுதல்; இணைத்தல்; தாக்குதல்; உடன்படுதல்; ஆணையிடுதல்; நட்பாக்குதல்; வஞ்சினங்கூறல்; பதுங்கிநிற்றல்; அடைகொடுத்தல்; சுருங்குதல்; வற்றுதல்.

அன்றோ - அதுவல்லவா
அன்றே. Not that, emphatically, or is it not that?

வன் - வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு.

கணவர் - கூட்டத்தார்.

முழுப்பொருள்
நாம் கவனமாய் நோக்கிக்கொண்டு இருக்கும் பொழுது (/அல்லது பகையைக் கண்டு கோபத்தில் கண் சிவந்த வீரனுடைய கண்கள் தன்னுடைய) பகைவர் வேலினை நம்மீதெறியும் நேரம் நாம் கண் சிமிட்டினாலும் அது(அந்த வேல்) நம்மை அழித்துவிடும். வலிமையான படையென்றாலும் அவ்வாறு அழிவது நமக்கு அற்பத்தையே சேர்க்கும். இங்கே கண்சிமிட்டுவது என்பது அஞ்சுவதை ஐயத்தை குறிப்பதாகும். அதுமட்டுமின்றி வலிமையான படையென்றாலும் கவனக்குறைவாக இருந்தால் அழிவு கண்சிமிட்டும் நேரத்தில் ஏற்படும். அது புறங் கொடுத்தலுக்கு ஒப்பாகும்.

பாய்ந்துவரும் எதிரியின் படைக்கருவிக்கு கண்சிமிட்டி இமையாமையைச் சொல்லும் இலக்கியப்பாடல்கள் இதோ!

“எடுத்தெறி ஞாட்பின் இமையான்,,” (புறநானூறு : 290). ஞாட்பு – போர்க்களம், போர்

“வேலும் கணையமும் வீழினும் இமையார் 
வீரியத் தறுகணர்” (பெருங்கதை – 1.46:17-8) (தணையம் – தண்டாயுதம்)

“இகலிடை இமையா எரிமலர்த் தடங்கண்” (பெருங். 4.5:60)

“வீரரெறி வெம்படைகள் வீழயிமை யானாய்” (சீவக சிந்தாமணி: 288)

“ஏந்தல்தன் கண்கள் வெய்ய இமைத்திட எறித லோம்பி
நாந்தக உழவன் நாணி நக்குநீ அஞ்சல் கண்டாய்” (சீவக.2258)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
விழித்த கண் - பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் - அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ - அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம். (அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.).

மணக்குடவர் உரை
மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின் அஃது அஞ்சாதார்க்குக் கெட்டதனோடு ஒக்கும். விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும்.

மு.வரதராசனார் உரை
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

சாலமன் பாப்பையா உரை
பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்

குறள் 771
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
என்னை - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு.

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்

நில் -[நிற்றல்]   3 v. intr. [K.nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt,tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast;to persevere, persist in a course of conduct;உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. Tostay, abide, continue; தங்குதல் குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; tobe discontinued, stopped or suspended; ஒழிதல் வேலை நின்றுவிட்டது. 6. To be subdued;அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியாழிசைநிற்ப (கலித். 143, 38). 7. To remain; tobe left, as matter in a boil, as disease in thesystem; to be due, as a debt; எஞ்சுதல் நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை 3). 8.To wait, delay; தாமதித்தல் தெய்வம் நின்றுகேட்கும்.   

அன் - ஆண்பால்வினைவிகுதி; தன்மையொருமைவிகுதி; ஆண்பால்பெயர்விகுதி; ஆண்பால்வினையாலணையும்பெயர்விகுதி; சாரியை எதிர்மறைகாட்டும்வடமொழிமுனனொட்டுத்திரிபு

மின் - மின்னல்; ஒளி; பெண்; முன்னிலையேவற் பன்மை விகுதியுள் ஒன்று.;4. vulg. for மூன், before

நில்லன்மின்  - முன்பு  நிற்காதே / முன்பு நிற்க துணியாதீர்கள் 

தெவ்வு - tevvu   s. the moon, சந்திரன்; 2. battle, war, contest, போர்; 3. an opposing force or enemy, சத்துரு; 4. enmity, hostility, பகை.

நீவிர் - நீங்கள், முன்னிலைப்பன்மைப்பெயர்.

தெவ்விர் - உங்களை போன்ற பகைவர் 

பலர் - அநேகர்; சபை.

என்னை - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்

நின்று - niṉṟu   id. adv. Always, permanently; எப்பொழுதும் நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை )  

கல் - வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி. நாடு  

கல் -  n. கல் + perh. நாட்டு.Hero-stone, cenotaph; வீரக்கல். நாகந்தை சிறுகுட்டியார் கல்நாடு (S. I. I. vii, 345).
வீரக்கல் - vīra-k-kal   n. வீரம்¹ +. Memorial stone. See நடுகல். Loc.; போரில் இறந்துபட்ட வீரனைத் தெய்வமாக நிறுத்தும்கல்

நின்றவர் - நின்றார்கள் 

முழுப்பொருள்
என்னுடைய வீரமிகு தலைவன் முன்பு நிற்காதீர்கள் அல்லது துணியாதீர்கள்(அசட்டுத்தனமாக). ஏனென்றால் அவரை (என் தலைவனை) வெல்வேன் என்று வீர சாகசம் செய்ய துணிந்த பகைவர்கள் எல்லோரும் அவரிடம் வீழ்ந்து நடுக்கல்லாய் (வீரக்கல்லாய்) அவரவர் வீட்டில் (நாட்டில்) நிற்கின்றனர். அவரது வீரம் அவ்வளவு செருக்கு (புகழ்)  வாய்ந்ததாகும்.

தனது தலைவனின் மீது தனது படைவீரர்களுக்கு உள்ள நம்பிக்கையே இங்கு செருக்கே விளங்குகிறது. அதற்கு ஏற்றவாரு தலைவன் இருத்தல் வேண்டும். ஒரு தலைவன் இடத்தில் எதிரியை வெல்லும் வியூகமும், எதிரிக்கு தலைவன் மீது அச்சமும் தேவை. அது தலைவனின் செயல் இருந்து வரும். கிரிக்கேட் விளையாட்டில் ஒரு அணி தனது முந்தைய வெற்றிகளை மட்டும் வைத்துக்கொண்டு விளையாட முடியாது. தற்போதைய அணியின் தலைவன் எவ்வாறு ஒழுக்கமாக விளையாட்டை அணுகுகிறான் என்பதும் மிக முக்கியம். ஒழுக்கம் (disciplined approach), வியூகம் (Strategy), சிந்தனை திறன்(thought process), செயல்திறன் (implementation/execution skills), ஆகியவை மிக முக்கியம். ஒரு யானை உண்ணுவதானாலும் அதனை ஒரே அடியாக உண்றுவிட முடியாது. ஒரு யானையினையும் ஒவ்வொரு வாயாக தான் சாப்பிட முடியும். (How to eat an elephant? Bite by bite). அதுப்போல் தலைவனும் எப்பேர்பட்ட எதிரியையும் ஒவ்வொரு அடியாக தான் வெல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் எல்லோரையும் வெல்லலாம். அந்த நம்பிக்கையை வீரர் இடத்தில் உருவாக்கி தக்கவைத்தல் மிக அவசியமாகும். 

இக்குறள், பகைவருடைய படையை அணுகி தம்மனோர் ஆண்மையை உயர்த்திச் சொல்லுவதாகிய புறப்பொருள் திணைகளுள் ஒன்றாம் வஞ்சித்திணையின் ஒருதுறையாம், “நெடுமொழி வஞ்சித் துறையைச்” சார்ந்த பாடலாகும். புறப்பொருள் வெண்பாமாலை, இதை, “ஒன்னாதார் படைகெழுமித் தன்னாண்மை எடுத்துரைத்தன்று” நெடுமொழி என்பது வீரவுரை, அல்லது பெருமித உரையாம்.

கீழ்வரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலொன்றும் இதையொட்டி அமைந்திருப்பதாம்.

“இன்னர் எனவேண்டா, என்னோடு எதிர்சீறி
முன்னர் வருக. முரண்அகலும் – மன்னர்
பருந்துஆர் படைஅமருள் பல்லார் புகழ
விருந்தாய் அடைகுறுவார் விண்
                      – புறப்பொருள் வெண்பாமாலை 44

நடுகல் என்பதைப் பற்றி, சேரமான் பெருமாள் நாயனார், “பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்ட கல்லும்” என்கிறார். அகநானூற்றுப் பாடலும் இதே செய்தியை இவ்வாறு கூறுகிறது, “ நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர் தோறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்”


ஒப்புமை
1. ”களம்புகல் ஓம்புமின்தெவ்விர்” - புறநா.87:1
2. “போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை
      ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
      தாட்படு சின்னீர்க் களிற்ட்டு வீழ்க்கும்
      ஈர்ப்புடைக் கராஅத் தன்ன வென்னை”      (புறநா. 104:1-4)
3. “யாரே னுந்தா னாகுக யானென் தனியாண்மை 
     பேரேன் நின்றே வென்றி முடிப்பென் புகழ்பெற்றேன்
     நேரே செல்லும் கொல்லுமெ னிற்றானி மிர்வென்றி
     வேரே நிற்கும் மீள்கிலன் என்னா விடலுற்றான்” (கம்ப.இராவணன் வதை. 136)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர் - பகைவீர்,இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின் - நீவிர் அதன்கணின்றி நும் உடற்கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின். ('என் ஐ' எனத் தன்னோடு தொடர்புபடுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல் - நடுகல். 'நம்பன் சிலை வாய் நடக்குங்கணைமிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை',(சீவக.காந்தர்வ.317) என, பதுமுகன் கூறினாற் போல ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி'.(பு.வெ.மா.வஞ்சி.12).

மணக்குடவர் உரை
என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லாது ஒழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே எழுதப்பட்டு நிற்கின்றார் பலராதலால் என்றவாறு. இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் என்றது.

மு.வரதராசனார் உரை
பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.

சாலமன் பாப்பையா உரை
பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.

English Meaning - As I taught a kid - Rajesh
Do not think or have to courage to stand in front of my leader/King because the people who had fought with my leader/King had lost his life and stood as stone in the graveyard in their home/place. This Kural showcases the confidence of soldiers on the King which means that King had capabilities to defeat any kind of opponent. That King had a disciplined approach, strategy, though process, implementation/execution skills, practice/preparedness, courage to take over an opponent.

Questions that I ask to the kid
What kind of courage a solider has on his king? What does that signify about a king?

கைவேல் களிற்றொடு போக்கி

குறள் 774
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
வேல் - நுனிக் கூர்மையுடைய ஆயுத வகை; திரிசூலம்; ஆயுதப்பொது; ஆயுதவகை; முருகன்வேல்; வெல்லுகை; பகை; மரவகை; வெள்வேல்; உடை; மூங்கில்

கைவேல் - கைவிடாவேல்; கப்பணம்; A hand-lance, a dart, dirk, javelin. ஆனை நெருஞ்சி முள்போல இரும்பால் பண்ணிய கருவி ;

களிறு  - ஆண்யானை; ஆண்பன்றி; ஆண்சுறா; அத்தநாள்.

களிற்றொடு - யானையுடன்  நேருக்கு நேராக

போக்கி - போக்குதல் - போகச்செய்தல்; செய்தல்; செய்துமுடித்தல்; கொடுத்தல்; உணர்த்தல்; உட்புகுத்துதல்; மெலிவுறச்செய்தல்; இல்லாமற்செய்தல்; கழித்தல்; அழித்தல்.

வருபவன் - வென்று வருகின்றவன்

மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து.

மெய்வேல் - உடலில் பட்ட அம்பு

பறி - பிடுங்குகை; கொள்ளை; இறக்கினபாரம்; மீன்பிடிக்குங்கருவி; பனையோலைப்பாய்; உடம்பு; பொன்

பறி-தல் - paṟi-   4 v. intr. 1. To slip out,run away, as a horse; to flow out quickly, aswater; ஓடிப்போதல். பண்டை வினைகள் பறியநின்ற (தேவா. 395, 2). 2. [K. paṟi.] To bedisplaced suddenly; to be capsized; to giveway; to be tilted; to be uprooted; நிலைபெயர்தல்.(W.) 3. To escape, as breath in sighing,as air from a bottle; to fly off, as steam, asheat from the system; வெளிப்படுதல். மூச்சுப்பறிகிறது. 4. To be discharged, as an arrow;
பறி-தல்
paṟi-   4 v. tr. cf. பரி-. To pierce;to penetrate; ஊடுருவுதல். பட்டுப்பறியும் படைவேல் (சொக்க. உலா, 393).

பறியா  - ஓடிப்போகாமல்

நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

நகும் - நகு - v. n. To shine, glitter, coruscate, ஒளிவிட. 2. To laugh, to smile, to smile in approbation or delight of heart, புன்னகைகொள்ள. 3. To deride, to laugh at, to ridicule, இகழ. (சது.) 4. To bloom, as a flower, மலர. (p.) இலங்கையுங்குலுங்கநக்கான். He laughed un til the island of Lanka (Ceylon) shook.
நகல்--நகுதல், v. noun. Shining, deriding, smiling, &c.

முழுப்பொருள்
வீரன் என்பவன் தன் எதிரே யானை வந்தாலும் அதன் மேல் தன் கையில் உள்ள வேலினை எறிந்து அதன் உயிரை போக்கி அடுத்து ஒரு யானை தன்னை தாக்க வந்தாலும் (மன)சோர்வடையாது தன் மார்பின் (உடலின்) மேல் உள்ள அம்பினை பிடுங்கி அந்த யானையை தாக்க முற்படுவான். அந்த யானையுடன் போர் புரிவதை மகிழ்ச்சியுடன் செய்வான்.

ஏனெனில் அத்தகைய தருணத்திலும் விழிப்பாக இருந்துக்கொண்டு தொடர்ந்து எதிர்த்துப்போட்டியிட ஒரு ஆயுதம்/ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்ற என்ன ஓட்டமும் மனநிறைவும் அடைகிறான். அது அவனுடைய விரத்திறனையும் காண்பிக்கிறது. தடைக்கற்களை வெற்றிப்படிகற்களாய் மாற்றும் மன உந்துதலும் முனைப்பும் விழிப்பும் உள்ளது. 

தத்துவார்த்தமாக பார்த்தால் ஓவ்வொருவருக்கும் தன் உயிரே (வாழ்வே) போகும் நிலையிலும் தான் செய்கின்ற தொழிலை நேசித்து உண்மையாக செய்யும் பொழுது யானையே (மலையளவு சோதனைகள்) எதிரே வந்தாலும் அதனுடன் போட்டி போட்டு அதனை வெல்வர். அவ்வாறு போர் புரிவதை சோர்வடையாமல் மகிழ்ச்சியாக செய்வார்கள்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”களிறெறிந்து முரிந்த கதுவாய் எஃகு” (பதிற்.45:4)
“பெருந்தகை மறவன்
மேல்வருங் களிற்றொடு வேல்துரந் தினியே
தன்னும் துரக்குவன் போலும்” (புறநா.274:2-4)

“அகலத்து... அழுத்திய சக்தி வாங்கி..திருத்தி” (பெருங் 3,20:62-5)
“புண்ணிடங் கொண்ட எஃகம் பறித்தலின்” (சீவக.284)
”நெஞ்சகம் நுழைந்த வேலைப் பறித்து..
மிறைக்கொளி” (சீவக.2293)

“மொய்யகத்து மன்னர் முரண்இனி என்னாங்கொல்
கையகத்துக் கொண்டான் கழல்விடலை - வெய்ய
விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த
படுசுடர் எஃகம் பறித்து” (பு.வெ.142)

பரிமேலழகர் உரை
கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் - கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி; வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித்திரிவான்; மெய்வேல் பறியா நகும் - தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும். (களிற்றோடு போக்கல் - களிற்றினது உயிரைக் கொடுபோகுமாறு விடுதல். மகிழ்ச்சி, தேடிய தெய்தலான். இதனுள் களிற்றையல்லது எறியான் என்பதூஉம், சினமிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன. நூழிலாட்டு. (பு.வெ.மா.தும்பை16).

மணக்குடவர் உரை
தன் கையிலுள்ள வேலை ஒரு களிற்றின் உயிரோடே போக்கி, அதன்பின் கருவி தேடிச் செல்பவன் தன் மெய்யின் மேற்பட்ட வேலைப் பறித்துக் கருவி பெற்றே மென்று மகிழும். இது வீரர் செயல் இத்தன்மையாதலால், புண்பட்டால் அதற்காற்றிப் பின்னும் அமரின்கண்சாதல் அல்லது வெல்லல் வேண்டும்என்றது.

மு.வரதராசனார் உரை
கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

சாலமன் பாப்பையா உரை
தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.

எழுத்தாளர் ஜெயமோகன்-இன் கட்டுரையில் (குறளைப் பொருள்கொள்ளுதல்…) இருந்து
மெய்வேல் பறியா நகும் என்பதை பறிக்காமல் என்று பொருள்கொண்டால் அவன் வேலை எறிந்துவிட்டு தன்மகிழ்வுடன் நின்றுகொண்டிருப்பதை காட்டும் கவிதை ஆகிறது. பறித்து என்றால் மேலும் போருக்குச் செல்பவனின் போர்ச்சிரிப்பாக ஆகிறது. அர்த்தம் உங்களுடையது.

சரி, நான் என்னபொருள் கொள்கிறேன்? பறித்து என்றுதான். வேலைக் கைவிடுவது போரில் செய்யக்கூடுவது அல்ல . அதற்கு இலக்கணம் உண்டா? ஆம். சும்மா கைபோன போக்கில் நினைவிலிருந்த சொல்லைத் தேடி எடுத்த உதாரணம்

ஐய உள்ளெழுந் தருளுக! வடிகணீ ர் அடியேன்
உய்ய வேண்டிய பணிதிரு வுளத்தினுக்கு இசையச்
செய்ய வல்லன் என்று அஞ்சலி செய்ய, உள் நகையா
மைய நோக்கியை நோக்கி மீனோக்கி தன் மணாளன்.
[திருவிளையாடற் புராணம்]

என்னும் பாடலில்  “உள் நகையா மைய நோக்கியை நோக்கி” என வரும் வரியைப் பாருங்கள். நகையா என்ற சொல் நகைத்து என்றே இங்கே பொருள்படுகிறது. [மீனோக்கி மீனாட்சிக்கு அருமையான தமிழ்வடிவம்]. சங்கப்பாடல்களில் நகையா, நில்லா என்னும் சொல்லாட்சிகள் நகைத்து,நின்று என்னும் பொருளில் பல இடங்களில் வருகின்றன. அது அக்காலத்தைய ஒரு மொழியாட்சி.

கான முயலெய்த அம்பினில்

குறள் 772
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள் -
கான - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

முயல் - போர்; சிறுவிலங்குவகை.
முயல் - வேகமாக ஓடும் முயல் ( வலிமையில் சிறிய விலங்கு) 

எய்த - எய்தல் -  அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

அம்பினில் - அம்பு - நீர்; கடல் மேகம் விண் உலகம் மூங்கில் கணை எலுமிச்சை பாதிரி திப்பிலி வெட்டிவேர் வளையல் சரகாண்டபாடாணம்.


யானை - துதிக்கையுடையவிலங்குவகை; ஆனைமரம்.

பிழைத்தல் - குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல்.

ஏந்தல் - உயர்ச்சி; மலை; மேடு; பெருமையிற்சிறந்தோன்; தேக்கம்; அரசன்; ஆழமின்மை; முதல்; இளமை; எளிதில்செய்துமுடிக்கும்தன்மை, ஏந்துதல், தாங்குதல், கையேந்துதல்.
ஏந்து-தல் - ēntu-   5 v. [M. ēndu.] tr. 1.To stretch out the hands; கைநீட்டுதல் நீ தர நான்ஏந்தி வாங்கினேன். 2. To receive in the hands;கையிலெடுத்தல். நீரை ஏந்திப் பருகினான். 3. To holdin the hands; தாங்குதல் அடிமை படிக்கத்தைஏந்தி நின்றான். 4. To hold up, as an umbrella;to carry in the hand, as a weapon; தரித்தல் அங்குசபாசமேந்தி (சூடா.) 5. To support, as abeam; சுமத்தல் உத்திரத்தைத் தூண் ஏந்திநிற்கிறது.--intr. 1. To rise high; to be elevated; ஓங்குதல் நில னேந்திய விசும்பும் (புறநா. 2, 2). 2. To beeminent, excellent, exalted, of fine quality;சிறத்தல். ஏந்தியகொள்கையார்சீறின் (குறள், 899). 3.To be abundant; மிகுதல் (தொல். பொ 543, உரை )  

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
தப்பி ஓடும் ஒரு சிறிய முயலினை குறி தவறாமல் எய்வது வீரம் அல்ல. ஓடும் முயலை குறி பார்ப்பது அவ்வளவு எளிதும் அல்ல. ஆனால் முயலின் வலிமை சிறியது. அதனால் ஒரு பயனும் இல்லை. ஓடிச்செல்லும் ஒரு விலங்கை வீழ்த்துவது வீரமும் இல்லை.  அத்தகைய வீரம் நம்மிடம் ஒரு தேக்க நிலையை உருவாக்கும். 

ஆனால் நம் முன்னே தைரியமாக வந்து நின்று நம்மை எதிர்த்து நிற்கின்ற யானை தனை குறி வைத்து வேல் எய்தி அது தவறினாலும் அது தோல்வி அல்ல. அது வெற்றியே ஆகும். ஆதலால் வெற்றி என்பது முடிவினால் அல்ல அது எதிரியின் வலிமையாலும் நமது உழைப்பாலும் நமது ஆற்றலாலும் நிறுவப்படுவது என்கிறார் திருவள்ளுவர்.  ஆதலால் ஷாத்ர குணத்தால் முயன்று தோற்பதும் வெற்றியே.

ஒரு முயலினை அம்பினால் எய்த ஒருவித திறமை (skill) வேண்டும் தான். ஆனால் திறமையை விட ஒரு யானையை கண்டு பயப்படாமல் போரிட மனதில் தைரியமும் அச்சமின்மையும் (courage / fearlessness), வெற்றியோ தோல்வியோ கடைசிவரைப்போராட விடாமுயற்சியும் ஊக்கமும் (perseverance) தேவை. 

எதற்கு தேவையின்றி யானையுடன் போராட வேண்டும், கிடைக்கும் முயலுடன் சந்தோஷமாக வாழலாமே என நினைப்போருக்கு உச்ச கட்ட வலியும் இல்லை. உச்சகட்ட அனுபவங்களும் இல்லை

ஒப்புமை
”நரிமா உளம்கிழித்த அம்பினில் தீதோ
அரிமாப் பிழைப்பெய்த கோல்” (நாலடி. 152)

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன் உரை (பதுங்குதல்)
இரண்டு விஷயங்கள். உலகியல்வாழ்க்கையில் அவசியமான ஒன்று ஷாத்ரம் என்னும் குணம். அதாவது தூய ரஜோகுணம். வென்றெடுக்க, கடந்துசெல்ல எப்போதும் உள்ள அக ஊக்கம் என அதைச் சொல்லலாம். அதை பேராசை என்று சொல்லக்கூடாது.

இருப்பது போதும் என்பது தமோகுணம். அதற்கு உலகியலில் இடமில்லை. அது தேக்கநிலை. துயரையே அளிக்கும். ஷாத்ர குணத்தால் முயன்று தோற்பதும் வெற்றியே. அதையே ‘யானைபிழைத்தவேல்’ என்றார் முனிவர்

தன்னறம் என்பது கூடவே இணைத்துப்பார்க்கவேண்டியது. ஒருவன் தன் செயல் மூலம் முழுமை பெறக்கூடிய துறையைத் தெரிவுசெய்யவேண்டும். தன் முழு ஆற்றலையும் அதில் செலுத்தவேண்டும். அதுவே அவனை விடுதலைசெய்யவைக்கும்

இவ்விரண்டிலும் உள்ள சோர்வே நீங்கள் சொல்லும் நிலைக்குக் காரணம். அது அச்சத்தால் சுயநலத்தால் வருவது. நம் நடுத்தரவர்க்க சமூகம் நம்மிடம் தேங்கி நிற்கவே சொல்லித்தந்து வளர்க்கிறது. அதைப்பாதுகாப்பாக இருத்தல் என நினைக்கிறது

‘பத்திரமா இருந்துக்க’ என்ற சொல்லைப்போல கேவலமான சொல் வேறு இல்லை. நான் எப்போதுமே பத்திரமாக இருந்ததில்லை. என் பையனிடமும் அதைச் சொன்னதில்லை

வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. பத்திரமாக பதுங்கி இருப்பதற்குரியதல்ல

முழுப்பொருள்2 (by நண்பர் நாகமணி):
வலிமை குறைந்த முயலை குறி வைத்து எய்வதற்கு ஏந்தி நிற்கும் அம்பினை விட, யானைக்கு பெரிய தீங்கு ஏற்பட்டுத்தாவிட்டாலும் அதன் மேல் எறிவதற்கு வேலை ஏந்தி நிற்பதே சிறந்தது எனக் கூறுகிறார் வள்ளுவர் .

இக்குறளின் மூலம் வள்ளுவர் நாம் எதிர்த்து போராடும் எதிரி கூட பலம் கொண்டவனாக இருக்க வேண்டும் என்றும், எளியவனிடம் போரிட்டு/மோதி வெல்வதை காட்டிலும்,வலியவனிடம் போரிட்டு/மோதி சிறிது தீங்கு ஏற்படுத்தினாலும் சிறந்தது  என உரைக்கிறார்.
இதை சிறிது மாற்றி, அடைய முடியா விட்டாலும் நமது இலக்கு உயரமானதாக இருக்க வேண்டும் எனவும் கொள்ளலாம். 

இது "Aim for the sky and you will reach the treetop" என்னும் ஆங்கில மொழியையும் நியாபகப் படுத்துகிறது .

ஏனோ இக்குறள் எழுதும் நேரத்தில் , 2014 தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடியுடன் மோதும் கேஜ்ரிவாலும் நினைவுக்கு வருகிறார் .

பரிமேலழகர் உரை
கான முயல் எய்த அம்பினில் - கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது - வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று. ('கானமுயல்' என்றதனால் வெள்ளிடை நின்ற என்பதும், 'பிழைத்த' என்¢றதனாற் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த' என்றதனான் யானைக்குத்தக எறிதலும் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் அவன்றன்மேற் செல்லலுற்றானது கூற்று).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கான முயல் எய்த அம்பினில்-காட்டிலோடும் முயலின்மேல் தப்பாது எய்த அம்பை ஏந்துவதிலும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது-திறந்த வெளியில் நின்ற யானைமே லெறிந்து தப்பிய வேலைப் பிடித்திருத்தல் பெருமை தருவதாம்.

இது, பகைவருள் ஒரு காலாட்படை மறவனைக் கொல்வதினும், ஓர் அரசனை அல்லது படைத்தலைவனை வெல்ல முயலும் முயற்சி சிறந்ததென்று கருதும் மறவன் கூற்று. மரஞ்செடி கொடியடர்ந்த கானம் என்றதனால் திறந்தவெளி யென்பதும், 'பிழைத்த' என்றதனால் தப்பாது என்பதும், சிறு விலங்கிற்கேற்ப 'எய்த' என்றதனால் பெருவிலங்கிற்கேற்ப எறிதல் என்பதும், மறுதலைச் சொற்களாக வருவிக்கப்பட்டன.

மணக்குடவர் உரை
வீரர்க்குக் காட்டகத்து முயலைப் பட எய்த அம்பினும், யானையைப் பிழைக்க எறிந்த வேலை யேந்துதல் இனிது. இதுமேலதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது

சாலமன் பாப்பையா உரை
காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது

Thirukkural - Management - Perseverance
Motivation is to aim high and think of big dreams. Courageously throwing a spear at an elephant is far greater an achievement than shooting an arrow at a rabbit. Your spear may miss the elephant and your arrow may hit the rabbit. But your courage to attack a powerful elephant is laudable one, lauds Kural 772.

Better the spear that missed an elephant
Than the arrow that killed a hare.

Similarly aiming for a big achievement, even if you fail to accomplish, is greater than aiming for small acts and achieving them. Therefore, big aim and perseverance make big things happen. 

பேராண்மை என்ப தறுகண்ஒன்

குறள் 773
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் 
ஊராண்மை மற்றதன் எஃகு
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
ஆண்மை  - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை
பேராண்மை - அரியவீரச்செயல்; மிக்கவீரம்; மானம்
என்ப - என்பது
தறுகண் - பகைவற்கு அஞ்சாமையாகிய வீரம் 
ஒன்று உற்றக்கால் - அதே பகைவற்கு
ஊராண்மை  - ஊரைஆளும்தன்மை; உபகாரியாந்தன்மை, ஒப்புரவு; மிக்கசெயல்; ஊரின்கண்மேம்பாடுடைமை; பகைமேற்செல்லுகை
மற்று அதன் - பேராண்மையெனப்படும் வீரத்தினும்
எஃகு - மிக்க கூர்மை உடையதாம் (பகைவருக்கருளும் நன்னெஞ்சைப் பற்றி பாரதியும் கூறுவர்)

முழுப்பொருள்
பேராண்மை எனப்படுவது பகைக்கு அஞ்சாத வீரமாகும். ஆனால் அதே பகைவர்க்கு ஒரு துன்பமான நேரத்தில் பகை என்று பாராமல் அவருக்கு உதவுவதே நல்ல பண்பாகும், நல்ல ஆளும் தண்மையாகும். வீரத்தினும் பகைவர்க்கு துன்ப நேரத்தில் உதவுவதே அந்த வீரத்தின் சிறப்பு.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தெற்றப் பகைவர இடர்ப்பாடு கண்டக்கால்
மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற
நவைக்கப் படுந்தன்மைத் தாயினும் சான்றோர்
அவைப்படிற் சாவாது பாம்பு” (பழமொழி 313)

“படைது றந்து மயங்கிய பண்பினான்
இடைதெ றும்படி பார்த்திகல் நீதியின்
நடைது றுந்துயிர் கோடலும் நன்மையோ
கடைது றுந்தது போரென் கருத்தென்றான்” (கம்ப.இராவணன்வதை.175)



பரிமேலழகர் உரை
தறுகண் பேராண்மை என்ப - பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு - அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீத்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர். ('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை - உபகாரியாம்தன்மை, அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமினாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின்தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி (பு.வெ.மா.வஞ்சி 3)

மணக்குடவர் உரை
ஒன்று உற்றக்கால் அஞ்சாமையை ஒருவனுக்குப் பெரிய ஆண்மையென்று சொல்லுவர்: உலகியலறிந்து செய்தலை அவ்வாண்மைக்குப் படைக்கலமென்று சொல்லுவர்.

உலகியலறிவது- தான் உலகியலை வெளியார் சொல்லாமையறிதல்.

மு.வ உரை
பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்

சாலமன் பாப்பையா உரை
பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.