Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label பழைமை. Show all posts
Showing posts with label பழைமை. Show all posts

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

 

குறள் 806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
எல்லைக் - வரம்பு; அளவு; அவதி; வரையறை; தறுவாய்; முடிவு; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்; சூரியன்; பகல்வேளை; நாள்; இடம்; கூப்பிடுதொலைவு.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நின்றார் - நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.)

துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.

துறவார் - துறவாதவர்கள்

தொலைவு - அழிவு; சோர்வு; குறைகை; தோல்வி; முடிவு; தூரம்.

இடத்தும் - இடம் -  தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

தொல்லைக் - பழமை; துன்பம்; செயல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நின்றார் - நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.)

தொடர்பு - தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்பந்தம்.

முழுப்பொருள் 
நட்பின் எல்லைக்குள் நெடுந்நாடகள் நட்புறவாடியவர்கள் நட்பின் அழிவிற்கு காரணங்கள் (ஒரு நண்பர் கெடுதல் செய்தாலும்) இருப்பினும் நட்பின் பழைமையினால் அந்நட்பைவிட்டு நீங்காது (/ துறவாது / அறுக்காது/ துண்டிக்காது) அந்நட்பின் எல்லைக்குள்ளேயே நின்று உறவில் நீடிப்பர்.

நட்புறவுக்கு நம்பிக்கை மிகவும் தேவை; நட்பின் வரம்புகளும் நன்றாக புரிந்து கொள்ளப்படவேண்டும். அவ்வாறு வரம்புகளைப் புரிந்துகொண்ட நட்புகளுள் சில நேரங்களில் கேடுகளைத் தரும் செயல்களை ஒருவருக்கொருவர் செய்துவிடலாம். அவற்றால் ஒரு நண்பருக்கு நன்மையும், மகிழ்ச்சியும் தொலையலாம். ஆனாலும் அவற்றால் எல்லாம் நட்பானது இழக்கப்படாது

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எல்லைக்கண் நின்றார் - நட்பு வரம்பு இகவாது அதன் கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலைவிடத்தும் துறவார் - தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார். (பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும்.).

மணக்குடவர் உரை
ஒழுக்கத்தின்கண்ணே நின்றார் பழைமையின்கண்ணே நின்றாரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார். எல்லை- வரம்பு.

மு.வரதராசனார் உரை
உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்

 

குறள் 807
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
அழி - அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல்.

வந்த - வருதல் 

செய்யினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

அறுதல் - கயிறுமுதலியனஇறுதல்; இல்லாமற்போதல்; தீர்தல் பாழாதல் செரித்தல் தங்குதல் நட்புச்செய்தல்; கைம்பெண்

அறார் - மாறாத

அன்பின் - அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு.

வந்த - வருதல் 

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு

யவர் - அவர்

முழுப்பொருள் 
முகத்தால் மட்டும் அல்லாமல் உண்மையாக மனதால் அன்பால் நெடுந்நாள் கொண்ட நட்பில் ஒரு நண்பர் தமக்கு கெடுதலையும் அழிவையும் செய்தாலும் அந்நட்பில் அன்பு மாறாது இருப்பார் என்றால் அதுவே நட்பாகும்.  உண்மையான அன்புகொண்டவர்கள் நிலை மாறாதவர்கள்.

நாலடியார் பாடலொன்று, இக்கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது. நண்பர் என்று கொண்டவர், அவ்வுறவிலிருந்து விலகி இருப்பதை அறிந்தால், அவரை மேலும் மிகுதியாகப் போற்றி, அவர் நட்புறவில்லில்லை என்று புறத்தே தூற்றாது தமக்குள்ளாகவே அந்நட்பைப் போற்றிக்கொள்ள வேண்டும் என்கிறது அப்பாடல்.

தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தா ராயின், அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல். (நாலடி 229)

“நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்” (நாலடி 221)

“..............இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர்” (நாலடி 227)

“நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக்
கண்கண்ட குற்றம் உளவெனினும் காய்ந்தீயார்” (பழமொழி 16)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அழிவந்த செய்யினும் அன்பு அறார் - நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்; அன்பின் வழிவந்த கேண்மையவர் - அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார். ('அழி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். அழிவு - மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டு பாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்றன்று என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தமக்கு அழிவுவரும் கருமங்களைப் பழைய நட்டோர் செய்தாராயினும் அவரோடு உள்ள அன்புவிடார்: முற்காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர். இது கேடுவருவன செய்யினும் அமைய வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.

சாலமன் பாப்பையா உரை
தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார்.

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

 

குறள் 808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
கேள் - உறவு; நட்பு; நண்பன்; கணவன்.

இழுக்கம் - பிழை; ஒழுக்கந்தவறுகை; தீயநடத்தை; ஈனம் தளர்வு தாமதம்

கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.

கேளாக் - கேளாமல் - கேட்காமல், அனுமதி பெறாமல்

கெழுதகைமை - உரிமை; நட்பு.

வல்லார்க்கு வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.

நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

இழுக்கம் - பிழை; ஒழுக்கந்தவறுகை; தீயநடத்தை; ஈனம் தளர்வு தாமதம்

நட்டார் - நண்பர்; உறவினர்.

செயின் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

முழுப்பொருள் 
பலகாலம் கொண்ட ஒரு நட்புறவில் ஒரு நண்பரை பற்றி பிறர் வந்து கோள் (புறங்கூறுதல்) சொன்னாலும் அதனை கேளாமல் தன் நண்பனின் மீது நம்பிக்கை வைத்திருப்பதே நட்பாகும். ஆனால் அவ்வாறு நட்பு வைத்திருக்கும் நண்பனின்(A) நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஒரு நண்பர்(B) தவறு செய்தாலோ அல்லது நண்பர் (A) நண்பர்(B) செய்த தவறை உண்மையென அறிந்துக்கொண்டாலோ அந்நாள் இழுக்காகும். அந்நாள் இழுக்கானாலும், நட்பும் அன்பும் மாறாது. ஆயினும் தவறு தவறு தான்.

மனிதர்கள் தவறு செய்வது இயல்பானது. தவறுகள் இயற்கையாகவே நடக்கக்கூடும். ஆதலால் பழைமையான நண்பர்கள் அதனை மன்னித்து நண்பரை ஏற்றுக்கொள்வர். நண்பனுக்கு துன்பம் தவறு என்ற உடன் நட்புறவை முறித்துக்கொள்ளமாட்டர். 

ஆனால் தவறுக்கும் நம்பிக்கை துரோகத்துக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு உறவில் ஒரு நண்பர் தான் செய்வது மிக தவறு தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தெரிந்தும் தவறு செய்தாலோ அல்லது அத்தவறை நண்பரிடத்தில் இருந்து வேண்டுமென்றே மறைத்தாலோ அது கண்டிப்பாக அந்நட்பிற்கு இழுக்கை விளைவிக்கும். அதனை அதுவரை அறிந்திறதா நண்பர் அறியும் பொழுது அந்நாள் அந்நட்பிற்கு தளர்வை தரும். இன்னும் சொல்லப்போனால் நண்பன் அறிந்து செய்த தவறை கண்டிக்காமல் இருப்பது நட்பே அல்ல ஏனெனில் புணர்ச்சி பழகுதல் மட்டும் நட்பில்லை. தவறுகளை திருத்துவதே நல்ல நட்பு.

பொதுவாக சினிமா உதாரணங்களை சொல்வதை தவிர்த்துவிடுவேன். ஆயினும், கூறுகிறேன் (சினிமா உதாரணங்களை வெறுப்போர் என்னை மன்னித்துவிடும்). நடிகர் விஜயகாந்த் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வந்த திரைப்படம் ஹானஸ்ட் ராஜ் (Honest Raj). விஜயகாந்த் கதாபாத்திரத்டின் பெயர் ஹானஸ்ட் ராஜ். அதில் அவரின் உற்ற நண்பனாக நடிகர் தேவன் (கதாபாத்திரத்தின் பெயர் வரதராஜன்) இருப்பார். தேவன் ஏழ்மையின் காரணமாக தேவன் கள்ளநோட்டு அடிக்கும் தொழிலை மறைவாக புரிவந்துவருவார். சிலகாலம் கழித்து விஜயகாந்திடம் வேறு ஒருவர் போனில் (Phone) அழைத்து தேவனின் குற்றங்களை கூறுவார். விஜயகாந்த் அதனை அப்படியே நம்பமாட்டார். ஆனால் பின்பு அதனை ஆதாரங்களுடன் அந்த மற்றொருவர் நிருபிப்பார். ஆயினும் தன் நண்பரிடம் வந்து எங்கள் நம்பிக்கையினையெல்லாம் இப்படி செய்துவிட்டாயே என்று குமுறுவார். தன் நண்பனின் குற்றைத்தை கண்டித்து அவரை போலிஸீடம் சரணடைய சொல்வார். ஆனால் அந்நாள் அந்நட்பு உடைந்துவிடும். அது இழுக்காக மாறிவிடும். 

விஜயகாந்த் தேவன் நட்பாக இருத்தல்

தேவன் கள்ளநோட்டு அடித்தல்

பிறர் தேவனை பற்றி விஜயகாந்திடம் கோள் சொல்லுதல். விஜயகாந்த் நம்பாது இருத்தல்

தேவனின் குற்றங்களை ஆதாரத்துடன் பிறர் கூறுதல்

தேவனின் குற்றங்களை பற்றி விஜயகாந்த் தேவனிடமே கேட்டல். நம்பிக்கை இழக்கும் தருவாய்.

திரைப்படம்: ஹான்ஸ்ட் ராஜ் /  Honest Raj (1994)


மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா ளாகிலும்
சிதகு ரைக்குமேல்
என்னடியா ரதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தார்
என்பர் போலும்” (பெரியாழ்வாஅர் திருமொழி 4.9:2)

பரிமேலழகர் உரை
கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு - நட்டார் செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செயின் நாள் - அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம். (பிழையாவன: சொல்லாது நற்பொருள் வௌவல், பணியாமை,அஞ்சாமை முதலாயின. கேட்டல் - உட்கோடல். 'கெழுதகைமைவல்லார்' என்பது ஒரு பெயராய், 'கேளாத' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாளல்லவாயின. இதனான் பிழை பொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம். இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது. .

மு.வரதராசனார் உரை
பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.

சாலமன் பாப்பையா உரை
நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

குறள் 805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை

ஒன்றோ -  part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682).

பெருங்கிழமை  - முழுஉரிமை; மிகுநேயம்

பெருங் - பெரும் - பெரிய 
கிழமை - உரிமை; உறவு; நட்பு; ஆறாம்வேற்றுமைப்பொருள்; குணம்; வாரநாள்; முதுமை.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

உணர்க - உணர்-தல் - uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல் முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect,consider, contemplate; கருதுதல் (திவா.) 3. Toexamine, test, observe, scrutinize; ஆராய்தல் உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 4. Toexperience, as a sensation; அனுபவித்தல் ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ 11,1, 1). 5. To realize, conceive, imagine; பாவித்தல் அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ 9, 2, 3).  

நோ - ஓர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஓ); வலி; துன்பம்; நோய்; சிதைவு; வலுவின்மை.

தக்க - - takka   தகுந்த, adj. part. see under தகு.

தகு - taku   II. & IV. v. i. be fit, suitable, proper, decent or convenient, appertain, ஏல்.

நட்டார் - நண்பர்; உறவினர்.

செயின் - செய்தால்

செய்தல்  - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

முழுப்பொருள் 
நம் நண்பர் நமக்கு நாம் வருந்தும் வண்ணம் ஒரு செயலை செய்தாலோ அல்லது சொல்லை கூறினாலோ அதற்கு அவரது அறியாமை அல்லது மடமை அல்லது உய்த்துணரமால் செயல் புரிந்தது மட்டும் காரணமாக இருக்காது அதற்கு நம் நண்பர் நம் மேல் கொண்ட கொண்ட (அதீத) உரிமையும் காரணம் என்பதை உணர்க. ஆதலால் அவரிடம் உறவை துண்டிக்காதே. நடந்தவற்றில் நல்லதை எடுத்துக்கொண்டு தீயதை விலக்கிடுக. குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்பதை நினைவிலும் வைத்துக்கொள்க. 

உரிமை இல்லை என்று உணரும் நண்பன் உன்னை ஒரு பொருட்டாக எண்ணாமல் அவன் காரியம் என்னவென்று பார்க்க சென்றுவிடுவான். அவனுடைய கோபம் கூட ஒருவித அன்பின் வெளிப்பாடுதான். நட்பின் ஆழத்தையும் குறிக்கிறது. 

இதையே நாலடியார் (223) பாடலொன்று 
“இறப்பவே தீய செயினும் தன் நட்டார் 
பொறுத்தல் தகுவதொன் றன்றோ 
ஒருவர் பொறை இருவர் நட்பு” சொல்வதும் இக்கருத்தையொட்டியே.


இருவர் நட்புறவில் இருக்கும்போது, யாராவது ஒருவர் தவறு செய்தால் அதை மற்றொருவர் பொறுக்க வேண்டும. இல்லையெனில் நட்பு நிலைக்காது. இப்பழமொழியைப் பழமொழி நானூறு பாடல் இவ்வாறு கூறுகிறது. தெளிவாகப் பொருள் கொள்ளும்படி பதம்பிரிக்கபட்டுள்ளது.

தீந்தீமை இல்லவர், நட்டவர் தீமையையும்,
‘எந்தீமை’ என்றே உணர்ப, தாம்; அம் தண்
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
....ஒருவர் பொறை, இருவர் நட்பு. (பழமொழி 247)

“பேதை மையாற் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லே” (குறுந்.230:3-4)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நோதக்க நட்டார் செயின் - தாம் வெறுக்கத் தக்கவனவற்றை நட்டார் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க - அதற்குக் காரணம் ஒன்றில் பேதைமை என்றாதல் ஒன்றின் மிக்க உரிமை என்றாதல் கொள்க. ('ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். 'செயின்' எனவே, தம் இயல்பால் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும் இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதங்கொண்டாரென்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒற்றுமை மிகுதி பற்றி அவரின் வந்ததென்றாதல் கொள்வதல்லது. அன்பின்மையென்று கொள்ளப்படாது என்பதாம். கெடும் வகை செய்யின் அதற்குக் காரணம் இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்வாராயின் அதற்கு முனியாது ஒன்றில் அறியாமையாலே செய்தாரென்று கொள்க: ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க.

மு.வரதராசனார் உரை
வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

குறள் 804
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்
[பொருட்பால், நட்பியல், பழைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
விழை - விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி.

தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

யான் -  தன்மையொருமைப்பெயர்

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

வேண்டியிருப்பர் - வேண்டியிருத்தல் - இன்றியமையாததாயிருத்தல்.

கெழு - நிறம்; ஒளி; ஒருசாரியை.

தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

யான் -  தன்மையொருமைப்பெயர்

கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.

கேளாது - கேளாமல் - கேட்காமல், அனுமதி பெறாமல்

நட்டார் - நண்பர்; உறவினர்.

செயின் - செய்தால்

முழுப்பொருள் 
ஒரு நட்பில் நண்பர்களுக்குள் ஒளிவுமறைவு இருக்காது என்று நாம் நினைக்கிறோம். நண்பன் எது செய்தாலும் நம்மிடம் சொல்லிவிட்டு செய்யவேண்டும் அல்லது என்னை ஆலோசித்துவிட்டு என் சம்மதம் வாங்கிவிட்டு செய்யவேண்டும் என்று பலர் எண்ணுகிறோம்.

ஆனால் உண்மையான நட்பிற்கு சிறப்பு என்னவெனில் நம் நண்பர் ஒரு விஷயத்தை அல்லது ஒரு செயலை பற்றி நம்மிடம் கூறாமல் செய்கிறார் என்றால் அதனை நினைத்து வருந்தாது அவர் நட்பை மட்டுமே வேண்டி இருப்பதே ஆகும்.

நண்பருக்கு என்று ஒரு தனியுரிமை (privacy) இருக்கலாம் அல்லது அவர் நம்மிடம் கூற காரணம் இருக்கலாம் அல்லது காரணம் இல்லாமல் இருக்கலாம் அல்லது காரணம் இருக்கவேண்டும் என்றில்லை. எதுவாயின் அதனை நாம் மதிக்க வேண்டும். ஏனெனில் அது அவரவர் சுய விருப்பம். இதனை சுயநலம் என்றெல்லாம் வரையறை செய்வது தவறு. நண்பர் நம்மிடம் சொன்னால் சந்தோஷம் சொல்லவில்லையெல்லையென்றால் வருத்தமில்லை என்ற மனப்பான்மை வேண்டும். 

மேலும் எல்லாவற்றையும் சொல்லுகிறவர் நல்ல நண்பர் என்றெல்லாம் இல்லை. சில சமயம் இப்படி கூறுகிறவர் மனதில் அழுக்காறு போன்ற தீய குணங்கள் பொதிந்து இருக்கும். அது நமக்கு நன்மையில்லை.

உதாரணமாக நம்மிடம் ஒரு நண்பர் அவர் குடும்ப சுபநிகழ்ச்சிகளைப் பற்றி இறுதியாக கூறலாம், அவருடைய மேற்படிப்புப் பற்றி கிளம்பும் முன்பு சொல்லலாம் (அல்லது சொல்லாமல் கூட இருக்கலாம்), அவர் வீடு கட்டுவதை அல்லது வாங்கியதை அல்லது வாங்கப்போவதைப் பற்றி சொல்லாமல் இருக்கலாம். சிலசமயங்களில் கல்யாணத்தைப் பற்றி கூறாமல் கூட இருக்கலாம். இதற்கெல்லாம் நாம் கோவித்து கொண்டு இருந்தால் அல்லது மனம் வருந்தினால் நமக்கு தான் நிம்மதியில்லை. தேவையில்லாமல் நட்பும் கெடும். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்பதையும் நினைவில் கொள்க.

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”கிழமையிற் செய்தனன் கெழுதகை தருமென” (பெருங் 4.8:76)


பரிமேலழகர் உரை
நட்டார் கெழுதகையான் கேளாது செயின் - தம் கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழைதகையான் வேண்டி இருப்பர் - அச் செயலது விழையப்படுந்தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார். (ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலின் ஊங்கு நன்மை யின்மையின், அச்செயல் விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கல்லது இன்மையின் அவர்மேல் வைத்துக் கூறினார். 'வேண்டியிருப்பார்' என்பது எழுந்திருப்பார் என்பதுபோல ஒரு சொல் நீர்மைத்து. இதனான் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில்லாதவற்றைச் செய்வாராயின் அதற்கு முனியாது அதனையும் தாம் விரும்பும் தன்மையோடே கூட விரும்பத் தப்பாதிருப்பர் மிக்கார். இஃது உடன்படுதலன்றி விரும்பவும் வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

சாலமன் பாப்பையா உரை
தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.


எழுத்தாளர் லதா என்பவர் கழிவறை இருக்கை என்ற ஒரு கட்டுரை தொகுப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக கலவி (sex) பற்றியும், பெண்ணியம் பற்றியும் ஒரு புத்தகம். பொதுவெளியில் உடலுறவு/கலவி பற்றிப் பேசாத சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு நல்ல நூல். அதில் இருந்து சில பத்திகள் கீழே
அத்தியாயம் - 11 நட்பே அடித்தளமாக…… 
"நட்பை அடித்தளமாக கொள்ளாத எந்த காதலும் (அன்பும்) மணல் மேல் எழுப்பிய மாளிகை போன்றது"
— Ella Wheeler Wicox 

இதைப் படிக்கையில் எனக்கு நினைவிற்கு வருவது என் நண்பனொருவனின் கூற்று: “நட்பென்பது ஒரு மாளிகை போன்றது. அதில் எல்லாவற்றிற்கும் அறைகள் உண்டு” முதல் கூற்று நட்பை விட மேலானது எதுவுமில்லை எனப் பொருள் கொள்கிறது. இரண்டாவது ஒரு கேள்வியை முன்வைக்கிறது. “ஏன் அன்பினால் ஏற்படும் அத்துணை உறவுகளையும் நட்பாகப் பார்க்கக்கூடாது?” 

நட்பின் அழகே நாம் ஒரு நண்பரை நமக்கே நமக்கானவராக, நம் உடைமையாகச் சொந்தம் கொண்டாட மாட்டோம் என்பதே. அவர்களைத் தனி ஒரு மனிதராக நாம் மதிப்போம். ஆனால் ஒரு கணவன் - மனைவி உறவிலோ, காதலர்கள் உறவிலோ இது பொதுவாகச் சாத்தியப்படுவதில்லை. நம்மொரு  நண்பனுக்குப் பல நண்பர்கள் இருப்பார்கள்; சிலரை நமக்குத் தெரிந்திருக்கும்; சிலரைத் தெரியாமல் இருக்கும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் நாம் கவலை கொள்வதில்லை. 

நாம் அவரைச்  சந்திக்கும் வேளைகளிலும் சரி, சந்திக்காத வேளைகளிலும் சரி அன்பென்ற ஓர் இழை அங்கு ஓடிக்கொண்டே தான் இருக்கும். அவருக்கு நம்மைத் தவிர இன்னும் பத்தோ நூறோ நண்பர்கள் இருந்தாலும் நம்மீது அவருக்கு அன்பு இல்லையென்றோ, இல்லை குறைந்துவிட்டது என்றோ சிந்திக்கவே மாட்டோம். அவருக்குப் புதுப்புது நட்புகள் ஏற்படும்போதும் நம்மை விட்டு அவர் விலகுகிறார் என்றோ, நம்மை ஏமாற்றிவிட்டார் என்றோ கவலை கொள்ள மாட்டோம். ஒரு வினாடி கூட, நம்மை அவருக்குப் பிடிக்காமல் போய் விட்டதோ, நம்மீது ஏதாவது குறை கண்டுவிட்டாரோ இல்லை நம் நட்பு இனி அவருக்குத் தேவைப் படவில்லையோ என்றெல்லாம் குழப்பிக்கொள்ள மாட்டோம். 

ஆனால் திருமணம், காதல் என்று ஏற்பட்டுவிட்டால் மட்டும், ஏன் இத்தனை குழப்பங்களும், வேண்டாத எண்ணங்களும் வந்து ஒட்டிக்கொள்கின்றன? இம்மாதிரியான எண்ணங்கள் எந்தவோர் உறவையும் அழித்து விடும் தன்மை கொண்டவை.  ஆனாலும் நாம் பெருமையாகக் கூறிக்கொள்வோம் எங்கள் உறவு அன்பினாலானது என்று. 

நட்பு என்பது ஓர் இயற்கையான உணர்வினால் ஏற்படும் உறவு. மற்ற எல்லா உறவுகளுக்கும் ஓர் இலக்கணம், சட்டம், வரைமுறை என உருவாக்கி வைத்திருக்கிறோம். அவை தான் பெரும்பாலும் நம் இயற்கை உணர்வுகளுடன் உரசி குழப்பங்களை உருவாக்கி விடுகின்றன. 

ஒரு நட்பில் எதையும் செய்துதான் ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பில்லை. நம் தேவைகள் அனைத்தையும் ஒரு நண்பர்  பூர்த்தி செய்துதான் தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை. உதாரணத்திற்கு நான் ஒரு நண்பரைக் கேட்கிறேன் இன்று மாலை எதுவும் திரைப்படத்திற்குச் செல்வோமா என. அவர் வேண்டாம் என ஏதோ ஒரு காரணத்தினால் சொல்கிறார் என வைத்துக்கொள்வோம். நான் அவர் எதனால் வரவில்லை என ஆராய மாட்டேன். அதனால் என்ன?  இன்னொரு நாள் போய்க்கொள்ளலாம் என விட்டுவிடுவேன். 

அதே போல் நான் ஒரு நண்பரிடம் இன்றெனக்கு அவரைப் பார்க்க நேரமில்லை, இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறினால், அவரும் சாதாரணமாகச் சரி என்று சொல்லிக் கடந்துவிடுவார். 

ஆனால் அதே சமயம் எனக்கோர் உதவி என்றால் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடி வருவார். அவர் ஊரில் இல்லை எனில், அவர் வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரி இல்லை எனில் நான் ஓடுவேன். நான் இருக்கிறேன் கவலைப் படாதே என்ற ஓர் எழுதப்படாத நியதி இருக்கும். ஒரு குற்ற உணர்வோ, ஏமாற்றப்பட்ட உணர்வோ ஒரு நல்ல நட்பில் ஏற்பட வாய்ப்பே இல்லை. இதே விஷயங்கள் ஒரு கணவன் மனைவிக்குள் நடக்கையில், அது ஒரு பெரும் பிரச்சினையாகவே வெடிக்கிறது. ஏன்? நட்பில் நாம் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த நினைப்பதில்லை. ஆனால் உறவிற்குள் என் கட்டுக்குள் நீ என்றோ, எனக்காகவே நீ என்றோ ஒரு செயற்கையான கயிறைக் கட்டிவைக்க விழைகிறோம். 

நட்பில் ஆலோசனைகள் வழங்கிக்கொள்வோம், ஆனால், நம் ஆலோசனைப்படி தான் அவர் நடக்க வேண்டும் என நிர்ப்பந்திக்க மாட்டோம். ஆளுமையோ, அடக்கமோ நட்பில் தலை தூக்குவதில்லை. 

ஒரு நண்பர் அவரின் இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்தினால், அவரை நமக்குப் பிடித்திருந்தால் நாமும் நட்பாவோம். இல்லையெனில், நம் நண்பரிடம் தனியாக எனக்கு அவரைப் பிடிக்கவில்லை, இனி அவர் வரும்பொழுது என்னைக் கூப்பிடாதே என்று வேண்டுமானால் சொல்வோம். எனக்கு அவரைப் பிடிக்கவில்லை, அதனால் நீயும் அவருடன் நட்பாயிராதே எனக் கூற மாட்டோம். 

இதே ஒரு திருமணத்திலோ, காதலர்களுக்குள்ளோ என்ன நடக்கும்? “ஒன்று அவன்/அவள் நட்பை நீ துண்டிக்க வேண்டும், இல்லை நான் உன் உறவைத் துண்டித்து விடுவேன்” என்று நிர்ப்பந்திக்கப்படுவோம். 

எந்த ஓர் உறவாக இருந்த போதிலும் அங்கு நட்பு என்ற ஒன்று போற்றப்படவேண்டும். நட்பே அடித்தளமாக இருத்தல் வேண்டும். ஓர் அம்மாவிற்கும் பிள்ளைகளுக்கும் இடையிலோ இல்லை அப்பாவிற்கும் பிள்ளைகளுக்கும் இடையிலோ, இல்லை உடன் பிறந்தவர்களுக்குள்ளோ நட்பு என்ற ஓர் அற்புதம் இருந்தால் வாழ்வு எத்தனை சுலபமாக இருக்கும்? 

பல வருடங்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கும் நட்புகள் நடுவில் என்ன ஆகின்றது? நட்பு இன்னும் வலுப்பெறுகிறது. நட்பு நம்மைச் சிறைப் படுத்துவதில்லை, நம்மை விடுதலைப்படுத்துகிறது. நம்மீது எதையும் திணிப்பதில்லை.  எனக்கு மட்டுமே நீ என வசனம் பேசுவதில்லை. ஏன், நட்பு நிலைக்க வேண்டும் என்று கூடத் திணிப்பதில்லை. திணிக்கவும் இயலாது. எந்தச் சட்ட திட்டங்களுக்குள்ளும், இலக்கணங்களுக்குள்ளும் நட்பு விழுவதில்லை; அது இயற்கை தன்மை கொண்டது. 

நட்பே அடித்தளமாகட்டும், எந்தவகையான உறவு முறையாக இருப்பினும்; காதலர்கள், இணையர்கள், பெற்றோர்-பிள்ளைகள், ஆசிரியர்-மாணவர்கள், உடன் பிறந்தவர்கள், எதுவாக இருப்பினும். 

நாம் ஒருவரின் மேல் அன்பு வைத்திருப்பதின் அறிகுறி என்னவென்றால், அவருக்கு இடைவெளி தேவைப்படும் நேரம் ஒதுங்கி இடம் கொடுப்பதும், நம் அருகாமையை விரும்பும் நேரம் அணைத்து ஆதரிப்பதும் ஆகும். அவர்களுடனேயே எப்பொழுதும்  இருக்க வேண்டியதில்லை, அவர்களுக்குத் தேவைப்படும் நேரம், கூப்பிடு தொலைவில் நாம் இருந்தால் போதும். உண்மையான நட்பிற்கு இதுவே ஆதாரம். 

நம் எல்லா உறவுகளுக்கும் பாலமாக நட்பென்ற ஒன்றை அமைத்து விட்டால் போதும், நம் உறவுகள் நாமே ஆச்சரியப்படும் அளவிற்கு வலுப்பெறும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Even if our friend does not inform us about his or her personal information / milestone / event or doesn't ask us an opinion We should be friends with that friend. Because as a friend we must respect even our friends privacy or personal space. Also there might be a reason for not informing us. Or it can be unintentional as well. In a way this is good to us. Because, unnecessary disappointments or hatred will kill our peace and create disturbances in our mind taking our attention and energy away from our work

Questions that I ask to the kid
A friend did something without informing you. What will you do? Will you get angry for it? why? (Anger kills happiness, smiles) Will you runaway from him or disconnect or minimize the relationship? (No. that is his choice. also i show my maturity being good to him)

பழகிய நட்பெவன் செய்யுங்

குறள் 803
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
பழகிய - பழகுதல் - பயிலுதல்; உறவுகொள்ளுதல்; பதப்படுதல்; சாதுவாதல்; இணக்கமாதல்; ஊடாடுதல்; நாட்படுதல்.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

கெழுதகைமை - Intimacy, உரிமை; நட்பு.

தாங்கு - தாங்கல்; ஆதாரம்; ஈட்டிக்காம்பு

செய்தாங்கு - செய்தவற்றை

அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

அமையா - பொருந்தாத

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

முழுப்பொருள் 
பலகாலம் பழகிய நண்பர் உரிமையுடன் ஒரு செயலை செய்தால் (நம் கொள்கையுடன் உடன்படாத செயலாகக்கூட இருக்கலாம் அல்லது நம்மிடம் அறிவிக்காமல் செய்த செயலாக கூட இருக்கலாம்) அதனை ஏற்று நாம் அச்செயலை செய்யாவிட்டால் அல்லது அவருடன் அச்செயலிற்குப்பின் துணையாக நாம் இல்லையேல் பல காலம் பழகிய அந்த நட்பிற்கு பிறகு பொருள் என்ன?

இங்கே செயல் எனப்படுவது நமக்கு உடன்படாத செயல் அல்லது நம்மிடம் அறிவிக்கப்படாத செயல் ஆகிய பொருள்களை மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக திருமணம் போன்றவற்றை நண்பர் நமக்கு அறிவிக்காமல் செய்திருக்கலாம். திருமணத்திற்கு பின் அவரை வாழ்த்தி அவருடன் துணையாக இருப்பதே சிறந்தது.

ஆனால் நம் நண்பர் தீயவற்றை விளைவிக்கும் செயல்களை அல்லது அறம் அல்லாத செயல்களை செய்வார் என்றால் அதனை நாம் உடன் இருந்து செய்யவேண்டும் என்று திருவள்ளுவர் கூறவில்லை.

நம் நண்பர் தீங்கான ஒரு செயலை தவறிச்செய்தால் அதன் பிறகு அவருடன் உறவை முறித்துக்கொள்வது தவறு. அவரை மீட்டெடுக்க அவருடன் துணையாக இருந்து உதவுவதே பழகிய நட்பிற்கு அழகு.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை - தாம் உடம்படாதனவேனும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிற்குத் தாம் செய்தாற் போல உடம்படாராயின்; பழகிய நட்பு எவன் செய்யும் - அவரோடு பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்? (செய்தார் போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம். இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.

சாலமன் பாப்பையா உரை
தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?.

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை

குறள் 802
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
பழைமை - தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; நெடுநாட்பழக்கம்; பழங்கதை; மரபு; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு

நட்பிற்கு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை

உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு

கெழுதகைமை - உரிமை; நட்பு

மற்று  - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி

அதற்கு -அதற்கு

உப்பு  -உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல் இனிமை பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு

ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

சான்றோர்  - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.

முழுப்பொருள்
நெடுநாட்கள் ஆன நட்பு அதாவது பழைமையான நட்பு என்றால் என்ன? நண்பர்கள் உரிமை எடுத்துக்கொண்டு நெருங்கி பழகுவதாகும். தவிர, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக அன்பு செலுத்தி நெருங்கி பழகுவது நட்பினை போற்றும் அறிவொழுக்கங்களால் நிறைந்த சான்றோர்களின் முறையாகும் (கடனாகும்). அதாவது நண்பர்களை நெருங்கி உரிமை எடுத்துக்கொண்டு அன்பு செலுத்துதல் சான்றோரின் பணி.

இங்கே திருவள்ளுவர் தெளிவாக உப்பாதால் என்கிறார். உப்பு என்றால் அன்பு. அன்பு செலுத்துவதற்கே இது பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை - நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையால் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர் கடன் - அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை. (வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். உறுப்பு என்பது ஈண்டு இலக்கணையடியாக வந்த குறிப்புச் சொல். அவயவமாதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்.).

மணக்குடவர் உரை
நட்பிற்கு அங்கமாவது உரிமை: அவ்வுரிமையால் செய்யுமதற்கு உடன்படுதல் சான்றோர்க்கு இயல்பு. இது பேய்ச்சுரைக்காய்க்குப் பல காயம் அமைத்தாலும் இனிமை யுண்டாகாதுபோல, உடன்படாராயின் இனிமை உண்டாகாதாதலான் உடன்படல் வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை
நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.

பழைமை எனப்படுவது யாதெனின்

குறள் 801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் 
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
பழைமை - தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; நெடுநாட்பழக்கம்; பழங்கதை; மரபு; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு.

எனப்படுவது - என்பது; என்பதின் பொருள் யாதெனின்
யாது - எது, இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

எனின் - என்றால்; eṉiṉ   conj. id. 1. If (it is)said so; என்று சொல்லின். 2. In consideration of; என்கையால். அவையவை முனிகுவமெனினே (பொருந. 107).  

யாதும் - yātum   adv. யாது¹ + உம். Anything and everything; anything; எதுவும். யாதுமூரே யாவருங் கேளிர் (புறநா. 192).

கிழமையைக் - கிழமை - உரிமை; உறவு; நட்பு; ஆறாம்வேற்றுமைப்பொருள்; குணம்; வாரநாள்; முதுமை; மாட்சிமை; 

கீழ் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம்.

கீழ்(ழு)-தல் - kīḻ-   4 v. cf. கீள்-. [K. kīḻ.] tr.1. To rend, tear; கிழித்தல் பழம் விழுந்து . . .பஃறாமரை கீழும் (திருக்கோ. 249). 2. To rive, split,cleave; பிளத்தல் உறுகால் வரைகீழ்ந்தென (சீவக.1157). 3. To destroy, demolish; சிதைத்தல் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு (குறள், 801). 4. To dig;தோண்டுதல். வேரொடுங் கீழ்ந்து வௌவி (சீவக.2727). 5. To break, as a promise; to transgress, as a command; மீறுதல் தாய்வார்த்தை கீழாதவாண்மை (விநாயகபு. 21, 19).--intr. 1. To draw,as a line, a diagram; கோடுகிழித்தல். (W.) 2. Tobe uprooted, dislocated; பறியுண்ணுதல். மரங்கள்வேரொடுங் கீழ்ந்தென (சூளா. சீய. 144).

கீழ்ந்திடா - சிதையாமல்

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
பழைமை என்றால் நெடுநாள் நட்பாகும். ஆனால் வெறும் நெடுநாள் நட்பு நட்பாகாது. நாம் நட்புக்கொள்ளும் பொழுது ஆராய்ந்துக்கொள்ள வேண்டும். இத்தகைய நெடுங்கால பழக்கத்தில் தன் நண்பரின் கிழமை அதாவது மாட்சிமை குண்றினாலும் தன் நண்பர் குற்றமே செய்தாலும் அவருடன் நட்பினை துண்டித்துக்கொள்ளக் கூடாது. இதற்கு பொருள் தன் நண்பரின் குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அர்த்தம் ஆகாது. இதன் பொருள் தன் நண்பர் தவறு செய்ததினால் அவர் நண்பர் என்று ஆகாது என்பது ஆகாது என்பதே ஆகும்.

மகாபாரத கர்ணனை, அவ்வாறே எடுத்தாள்பவர்கள் சித்தரிக்கின்றனர். அவன் துரியோதனனோடு கொண்ட நீண்ட நட்பால், அந்நட்பின் பழைமை கருதி அவனோடு, அவன் செய்த தீச்செயல்களுக்கு உடன் பட்டதாக கூறுவர். வியாச பாரதத்தில் காட்டப்படும் கர்ணனுக்கு இவை சற்றும் பொருந்தாவிடினும், இக்குறளின் கருத்தை வலியுறுத்த அவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , நட்டாரது பழையராந்தன்மை பற்றி அவர் பிழைத்தன பொறுத்தல் , காரணப் பெயர் காரியத்திற்கு ஆயிற்று , ஆராய்ந்து நட்கப்பட்டார் எனினும் பொறுக்கப் படும் குற்றமுடை யராகலானும் ஊழ்வகையானும் நட்டார் மாட்டுப் பிழையுளதாம் என்பது அறிவித்தற்கு , இது நட்பு ஆராய்தலின் பின் வைக்கப்பட்டது .]

பழைமை எனப்படுவது யாது எனின் - பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு - அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு. ('கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின. சிதைத்தல் - விலக்கல். இதனான், 'பழைமையாவது காலம்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின் அது யாதொன்றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு. இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது. 

மு.வரதராசனார் உரை
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.

விழையார் விழையப் படுப

குறள் 810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
விழையார் - பகைவராலும்
விழைவு - விருப்பம், ஆசி
விழையப்படுப - விருப்படுவார்கள்
பழையார்கண் - பழகிய பழம் நட்பில் உள்ளவரிடம்
பண்பின்  - தம்முடைய பண்பின் காரணமாக
தலைப்பிரியாதார் - எப்போதும் பிரியாதார் (அவர்கள் குற்றம் செய்தாலும்)

முழுப்பொருள்
நல்ல நட்பு என்பது யாதெனில் பல ஆண்டுகளாக நல்ல நட்பில் இருப்பார்கள். அவர்களின் பயணத்தில் எத்தகைய நிலையிலும் ஒருவர் தவறே செய்தாலும், தவறான வழியில் சென்றாலும் அதற்காக கூசி அவர்களிடம் இருந்து பிரியாமல் இருப்பது. 

உதாரணமாக பால்யக்காலங்களில் நல்ல நட்பில் இருப்பர். பின்பு வேலைக்கு சென்று அந்தஸ்து, பதவி வந்ததும் பிரிந்து விடுவர்.  நண்பருக்கு வேலையிலோ அல்லது தொழிலிலோ நட்டம் ஏற்ப்பட்டால் அவர் எங்கு நம்மை கேட்ப்பாரோ என்று பயந்து பிரிந்துவிடுவர். நண்பர் ஒரு அவசரத்தில் செய்த தவறிர்க்காக அவரிடம் இருப்பது இழிவு கூடாநட்பு என்று பிரிந்து விடுவர். இத்தகையது நட்பல்ல.

எல்லா நேங்களில் நண்பருடன் உடன் இருந்து நட்பு பாராட்டுவதே நட்பாகும் அத்தகைய நட்பை எதிரியானாலும் போற்றுவர்.

இதற்கும் மகாபாரதத் கதையில் கர்ணன், நட்பின் பழைமையால், துரியோதனின் பிழைகளையும் பொறுத்து, நட்போடு இருந்ததை, அவர்களுடைய பகைவர்களும் போற்றியதைக் கூறலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைய நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்; விழையார் விழையப்படுப - பகைவரானும் விரும்பப்படுவர். (தம் பண்பாவது, செய்யாத முன் போல அன்புடையராதல். மூன்றன் உருபும் சிறப்பு உம்மையும் விகாரத்தால் தொக்கன. அத்திரிபின்மை நோக்கிப் பகைவரும் நட்டாராவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பழைமையறிவார் எய்தும் பயன் கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
பழைய நட்டோர்மாட்டுக் குணத்தினின்று நீங்காதார்,விரும்பாதாராலும் விரும்பப்படுவர்.
இது பகைவரும் விரும்புவாரென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைமையான நண்பர் தவறு செய்தாராயினும் அவரிடத்துத் தம் நட்புத் தன்மையினின்றும் மாறுபடாதவர்; விழையார் விழையப்படுப - பகைவராலும் விரும்பப்படுவர்.

பண்பாவது நட்பிற் பிழைபொறுத்தல். மூன்றாம் வேற்றுமையுருபும் எச்சவும்மையும் தொக்கன

மு.வ உரை
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை
பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்

கெடாஅ வழிவந்த கேண்மையார்

குறள் 809
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை 
விடாஅர் விழையும் உலகு.
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
கெடாஅ -

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு.

வந்த - வருதல் 

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

கேண்மையார் - நண்பர்; உறவோர்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

விடாஅர் - விடாமல்; நீங்காமல்

அர் - ar   part. 1. Pers. pl. suff.; பலர்பால்விகுதி. அரசர் வந்தனர். 2. Honorific pl. suff.;உயர்வுப்பன்மை விகுதி சம்பந்தர் பாடினர். 3. Anexpletive affixed to some words; பகுதிப்பொருள்விகுதி முன்னர் (குறள், 435).  

விழையும் - விழைதல் - மிகவிரும்புதல்; மதித்தல்; நெருங்கிப்பழகுதல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
உரிமை சிறிதும் குறையாமல் ,நட்பு கெடாமல் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பழைய நட்பை என்றும் விடாமல் விரும்பி போற்றும் இந்த உலகம்.

உதாரணமாக, எத்தனையோ நட்புகள் நம் அன்றாட வாழ்க்கையில் தோன்றினாலும் பள்ளி பருவத்திலிருந்து வரும் உரிமையான நட்பு (உரிமையுடன் கோபம் கொள்வது உரிமையுடன் சண்டை இடுவது உட்பட) நமக்கு என்றும் தனி சிறப்பிற்கு உரியதாக இருக்கும்.

பரிமேலழகர் உரை
கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை - உரிமை அறாது பழையதாய் வந்த நட்பினை உடையாரது நட்பினை; விடார் உலகு விழையும் - அவர் பிழை நோக்கி விடுதல் செய்யாதாரை உலகம் நட்புக்குறித்து விரும்பும். ('கெடாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. விடாதாரை எனவே, விடுதற்காரணம் கூறப்பட்டது. 'நம்மாட்டும் இவர் இத்தன்மையராவர்' என்று யாவரும் தாமே வந்து நட்பாவர் என்பதாம். 'கெடார்' என்று பாடம் ஓதி 'நட்புத் தன்மையில் கெடாராகி' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
குற்றம் உண்டாயின் அவ்விடத்து நட்பினிற் கெடாராய்க் குலத்தின்வழி வந்த நட்புடையாராது நட்பை விடுதலின்றி உலகத்தார் விரும்புவர். இது பழைமையைக் கொண்டாடுவாரை உலகத்தார் தாமும் நட்பு ஆகுதற்கு விரும்புவர் என்றது.

மு.வரதராசனார் உரை
உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

சாலமன் பாப்பையா உரை
உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.