Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label புலவி நுணுக்கம். Show all posts
Showing posts with label புலவி நுணுக்கம். Show all posts

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

 

குறள் 1320
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று
[காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்]

பொருள்
நினைத்திருந்து - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

நோக்கினும் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

காயும் - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல்

அனைத்தும் - எல்லாம்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி.

உள்ளி - உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )

நோக்கினீர் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

முழுப்பொருள்
அவள் என்னுடன் ஊடிக்கொண்டு இருக்கையில் எதற்கடா வம்பு? அவளை சமாதானம் செய்தால், பிறரையும் இப்படித்தானே சமாதானம் செய்வாய் என்று மறுபடியும் என்னிடம் ஊடுவாள். அதற்குபதிலாக அமைதியாக இருக்கலாம் என்று நினைத்தேன். வாயை அடக்கினேன். ஆனால் இந்தமுறை அவளை நினைத்து அவளை அங்கம் அங்கமாக நோக்கி அவள் அழகை ரசித்துக்கொண்டு இருந்தேன். இதைக் கண்ட அவள், வேறு யாரை நினைத்து அல்லது கற்பனை செய்து என் அங்கங்களை ரசிக்கிறாய் என்று மறுபடியும் ஊடுகிறாள்.  குற்றம் கண்டுபிடித்தே (மனதில் இடமும்) பெயர் வாங்கும் காதல்தலைவிகள்.

பி.கு: ஒருமுறை என் மனைவி சில பல மயிர் இழைகளை சுருட்டாக (curly hair) அலங்காரம் செய்துக்கொண்டாள். நன்றாக இருக்கிறதே என்றேன். உங்களுக்கு தான் சுருட்டை முடிப் பெண்களை பிடிக்குமே என்றாள். அதனால் தான் செய்துக்கொண்டேன். அப்படியா என்றேன்? ஆம், ரித்திகா சிங், (திரு திரு துறு துறு) ரூபா மஞ்சரி, நித்யா மேனன், கங்கணா ரானட் போன்ற கதாநாயகிகளை உங்களுக்கு பிடிக்குமே. அதனால் என்ன? அவர்களுக்கெல்லாம் சுருட்டை முடி. என் சுருட்டை முடி அவர்களை நியாபகம் படுத்தியதா என்றாள்? அடுப்புல ஏதோ கருக்குற வாசனை அடிக்கிறது என்று அங்கிருந்து தப்பித்தேன். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நினைத்து இருந்து நோக்கினும் காயும் - என் சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன் அவயங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும் என்னை வெகுளாநிற்கும்; அனைததும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று - நீர் என் அவயவமனைத்தும் நோக்கினீர, அவற்றது ஒப்புமையான் எம் மகளிரை நினைந்து? என்று சொல்லி. ('யான் எல்லா அவயங்களானும் ஒருத்தியொடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப் பலரையும் நினைக்கவேண்டும்; அவரெல்லாரையும் யான் அறியச் சொல்லுமின்', என்னுங் கருத்தால் 'அனைத்தும் நோக்கினீர் யாருள்ளி'? என்றாள். 'வாளாவிருத்தலும் குற்றமாயிற்று' என்பதாம்.).

மணக்குடவர் உரை
தனது உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை யெண்ணி நோக்க இருப்பினும், என்னுறுப் பெல்லாம் நீர் காதலித்தவர்களில் யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்திருந்து நோக்கினீரென்று சொல்லி வெகுளும். இது பார்க்கிலும் குற்றமென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.

சாலமன் பாப்பையா உரை
என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள் உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச் சினப்பாள்.

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

 

குறள் 1319
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று
[காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்]

பொருள்
தன்னை - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

உணர்த்தினும் - உணர்த்தல் - அறிவித்தல்; துயிலெழுப்புதல்; ஊடல்தீர்த்தல்; நினைப்பூட்டுதல் கற்பித்தல்

காயும்காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல்
வெகுளுதல் - சினத்தல்; பகைத்தல்

பிறர்க்கும் - பிறர் - அயலார்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை

இந் - இந்த 

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை

நீரர் - தன்மையராகத்தான்; குணம் படைத்தவர்

ஆகுதிர் - இருப்பீர்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

முழுப்பொருள்
தலைவி தலைவனுடன் ஊடியிருக்கிறாள். தலைவியை தலைவன் சமாதானம் படுத்துகிறான். ஊடல் தீர்கிறது. (அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் தலைவன்.) ஆனால் அங்கு தான் தலைவனிடம் முறுக்குகிறாள் தலைவி (திருப்பம் /twist). அது என்ன முறுக்கு? நீர் (நீங்கள்) என்னை சமாதானம் செய்ததுப்போல் பிறப் பெண்களையும் சமாதானம் செய்யும் குணம்படைத்தவராக ஆவீர் தானே என்று தலைவனுடன் மறுபடியும் சினம் கொள்கிறாள் தலைவி. ஊடலின் பின் கூடல் என்பது பொதுவான வழக்கம். ஆனால் சற்று மாறுதலாக மறுபடியும் ஊடல். 

இத்தகைய ஊடல்களை கேட்க சுவையாகதான் உள்ளது. அனுபவிக்கும் தலைவர்களின் மன ஓட்டமான “இப்பவே கண்ண கட்டுதே” என்பதை கேட்டால் பகீராக உள்ளது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தன்னை உணர்த்தினும் காயும் - இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர், என்று சொல்லி. ('இவள் தெளிவித்தவழியும் தெளியாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அது தானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும், பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி வெகுளும். இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.

சாலமன் பாப்பையா உரை
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

 

குறள் 1318
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
[காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்]

பொருள்
தும்முச் - தும்மு-தல் - tummu-   5 v. intr. [T. tum-muṭa, M. tumpuka.] 1. To sneeze; சளிமுதலியவற்றால் மூச்சுக்காற்றுத் தடைப்பட்டு வாய் மூக்கு வழிகளால் ஒலியுடன் வெளியேறுதல் ஊடி யிருந்தேமாத்தும்மினார் (குறள், 1312). 2. To breathe; மூச்சுவிடுதல் (சூடா.--tr. To emit, let go, leave; விடுதல் (W.)  

செறுப்ப - செறுப்பு - கட்டுப்பாடு; நெருக்கம்; கொலை.

அழுதாள் - அழுதல் -   அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்

நுமர் - நுமன் - உம்மைச்சார்ந்தவன்.

உள்ளல் - உள்ளான்குருவி; உள்ளான்மீன்; உள்ளுதல்; நினைத்தல், எண்ணுதல்; மகிழ்தல்; கருதல்; எண்ணியிரங்கல்.

எம்மை - எப்பிறப்பு; எம்தலைவன்; எவ்வுலகு.

மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.

மறைத்திரோ -  மறைத்திடவேதான் செய்தீர்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

முழுப்பொருள்
தலைவன் கூறுவதுப்போல் அமைந்த குறள் இது.
தலைவன் நான் தும்மல் வந்தபொழுது அதனை அடக்கிக்கொண்டேன். அதனை கண்ட தலைவி அழுதாள். ஏன் அழுகிறாய் என்று கேட்டேன்? உங்களை தங்களது விருப்பத்திற்கு உரியவர் என்று எண்ணும் பிறர் இருக்கின்றனர். அவர்கள் உங்களை நினைத்ததால் வந்த தும்மலை நான் அறிந்திடலாகாது என்று நீங்கள் என்னிடம் இருந்து வேண்டுமென்றே மறைத்துள்ளீர்கள் என்று அழுகிறாள். 

மிளகாய் பொடி நெடியா அல்லது தூசு விழுந்த நெடியா என்று உண்மையை என்னவென்று அறிந்துக்கொள்ளாமல் இதுதான் காரணம் என்று தானாகவே ஒரு விளக்கத்தை கற்பனையாக கூறி தலைவனுடன் ஊடுகிறாள் தலைவி.

தும்மினாலும் தவறு, தும்மலை அடக்கினாலும் தவறு. என்ன செய்வான் ஒரு தலைவன்? ஐயோ பாவம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியவழி, யார் உள்ளித் தும்மினீர்? என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன், அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள். ('தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
தும்மல் தோற்ற அதனை யடக்கினேன். அதற்காக நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள். இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

குறள் 1317
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று
[காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்]

பொருள்
வழுத்தினாள் - வழுத்துதல் - வாழ்த்துதல்; துதித்தல்; மந்திரித்தல்.

தும்மினேனாக -  தும்முதல் - தும்மல்; மூச்சுத்தடைப்பட்டுஒலியுடன்மூக்குவாய்வழியாய்வெளிவருதல்; விடுதல்; மூச்சுவிடுதல்.

அழித்து - அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல்.

அழுதாள் - அழுதல் -  அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்

யார் - யாவர்; எவர்; 

உள்ளித்  -  உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )

தும்மினீர் தும்முதல் - தும்மல்; மூச்சுத்தடைப்பட்டுஒலியுடன்மூக்குவாய்வழியாய்வெளிவருதல்; விடுதல்; மூச்சுவிடுதல்.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

முழுப்பொருள்
தலைவன் தும்மினான். அருகில் இருந்த தலைவி தலைவனை நீடுடி வாழ்க என்று வாழ்த்தினாள். அவன் மகிழ்ச்சி அடைவதற்குள் அவள் உள்ளம் மாறி அழ தொடங்கினாள். தலைவி தலைவனை கேட்டாள் யார்(எவள் அவள் / எந்த சிறுக்கி) உன்னை இப்பொழுது நினைத்தாள் நீ(நீர்/நீங்கள்) இப்பொழுது தும்மினாய் ?

ஊடல் புரிவதற்கு தும்மல் போதும் என்று உணர்ந்த தலைவன் விழி பிதுங்கி நின்றான்.

ஒரு தும்மலில் இவ்வளவு சிக்கல் இருக்கும் என்று தெரிந்தால் தலைவன் தும்மியேயிருக்கமாட்டானோ என்னவோ! தும்மினால் யாரோ நம்மை நினைப்பதால்தான் தும்முகிறோம் என்று பெரியவர்கள் கூறுவதும்கூட 2000 வருடத்துக்கும் மேலாக இருந்துவரும் ஒன்றுதான் போலுள்ளது

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தும்மினேனாக வழுத்தினாள் - கூடியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்? என்று சொல்லிப் புலந்தழுதாள். (வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான். அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இல்வழக்கை உள்வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்; நும்மை யார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள். இது தும்மினும் குற்றமென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?.

சாலமன் பாப்பையா உரை
நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள்.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

குறள் 1316
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்
[காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்]

பொருள்
உள்ளினேன் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

என்றேன் என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

மறத்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

மறந்தீர் - மறந்தீர்கள்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்

என்னைப் - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு.

புல்லாள் - pu-l-lāḷ   n. புல்¹ + ஆள். 1. Seeபுல்லுரு. புல்லாளைச் செய்து கொல்லையிலே வைத்தாற் போலே (இராமநா. கிஷ்கி. 5). 2. Highwayrobber; ஆறலைகள்வன். புலவு வில்லுழவிற் புல்லாள்வழங்கும் (பதிற்றுப். 15, 12).
pul-l-āl   n. id. +. Grass-cutter;வெட்டிக்கொணருங் கூலியாள். Loc.

புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

புலத்தல் - pula-   12 v. intr. 1. To pout,sulk; to be displeased; மனம்வேறுபடுதல். புலத்தலு மூடலு மாகியவிடத்து (தொல். பொ. 157). 2.To suffer pain; துன்புறுதல். போகும் புழையுட்புலந்து (ஏலாதி, 11).--tr. To dislike; வெறுத்தல்.பல புலந்து (பொருந. 175).
pula-   12 v. tr. புலம். Tomake known; to instruct; அறிவுறுத்துதல். புலக்கவேண்டுறுமக்காதை (உபதேசகா. சிவத்துரோ. 264).

புலத்தக்கனள் - என்னோடு ஊடுவாள்

முழுப்பொருள்
தலைவி தலைவனை தழுவிக்கொண்டு இருக்கிறாள். இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பொழிந்துக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் இருக்கிறார்கள். அப்பொழுது தலைவன் கூறுகிறான் "பிரிவில் இருக்கும் பொழுது நான் உன்னை நினைத்தேன் என்று".

நியாயமாக பார்த்தால் தலைவி தலைவன் தன்னை நினைத்தானே என்று சந்தோஷப்பட வேண்டும். ஏனெனில் அவள் பிரிந்து இருக்கும்பொழுது நான் தான் நினைக்கிறேன் தலைவன் என்னை நினைக்கவில்லை என்று பிரிவாற்றாமையையும், அவள் உடல் மெலிதலையும் பற்றி தோழியுடனும் நெஞ்சோடும் புலம்பிக்கொண்டு இருந்தாள் (இதனை மற்ற அதிகாரங்களில் பார்க்கலாம்).

ஆனால் தலைவன் "நான் உன்னை நினைத்தேன்" என்று கூறியப் பின் தலைவி சட்டென்று மாறி "அப்படியானால் நீங்கள் அதற்கு முன் என்னை மறந்தீர்கள் அல்லவா? மறந்தால் தானே நினைப்பீர்கள். எப்பொழுதும் என் நினைவாக இல்லையா நீங்கள்?" என்று தலைவனுடன் ஊடுகிறாள். தலைவன் செஸ் (chess) விளையாட்டில் "செக்-மேட் (check-mate) என்பதுபோல் தலைவியிடம் வசமாக மாட்டிக்கொண்டான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், யான் உள்ளினேன் என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - என, அதனை ஒருகால் மறந்து பின் நினைந்தேன் என்றதாகக் கருதி, என்னை யிடையே மறந்தீர் என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள். (மற்று - வினை மாற்றின்கண் வந்தது. அருத்தாபத்திவகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவ்விடத்து எம்மை நினைத்தோமென்றீர்: மறந்தாரன்றே நினைப்பார். ஆதலான் எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங்காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள். இது நினைத்தோமெனினும் குற்றமென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

சாலமன் பாப்பையா உரை
எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

குறள் 1315
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்
[காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்]

பொருள்
மை - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஐ); கண்ணுக்கிடும்அஞ்சனம்; மசி; வண்டிமசகு; கருநிறம்; இருள்; பசுமை; களங்கம்; கருமேகம்; வானம்; குற்றம்; பாவம்; அழுக்கு; பிறவி; மலடு; மலடி; மலட்டுஎருமை; மேடராசி; ஆடு; இளமை; நீர்; மந்திரவாதத்தில்பயன்படுத்தும்மை; பண்புப்பெயர்விகுதி; தொழிற்பெயர்விகுதி; வினையெச்சவிகுதிகளுள்ஒன்று; அறியாமை.

இம்மைப் - இப்பிறப்பு; இவ்வுலகவாழ்வு.

பிறப்பில் - பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

அல-த்தல் - ala-   12 v. intr. 1. Tosuffer, to be in distress; துன்பமுறுதல். அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் (குறள், 1303). 2. Tosuffer privation, to be in want; வறுமைப்படுதல். அலந்தவர்க் குதவுதல் (கலித். 133).

பிரியலம் - பிரிவு + அலம் (அலத்தல்) - பிரிந்து துன்பப் படுத்தல்

என்றேனா - என்பதால்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

கொண்டனள் - கொண்டாள்  தலைவி

முழுப்பொருள்
தலைவன் தலைவியிடம் ஆசையாக இருக்கும்பொழுது அன்பின் மிகுதியால் இப்படி கூறுகிறான் : என் பேரன்பிற்குரிய தலைவியே நான் இப்பிறவியில் இவ்வுலக வாழ்வில் உன்னை விட்டு பிரிந்து பிரிவு தரும் துன்பத்தை தரமாட்டேன் என்கிறான்.  ஆனால் தலைவியோ தன் கண் முழுவதும் குளம்போன்று கண்ணீரை நிறைத்து அழுது கண்ணை கசக்கினாள். ஊடலுக்கான சமிஞை என்றுணர்ந்த தலைவன் ஏன் அழுகிறாய் என்று தலைவியிடம் கேட்டான். தலைவி சொன்னாள்: இப்பிறவியில் பிறவியில் பிரியமாட்டேன் என்று கூறினீர்கள். அப்படியானால் அடுத்த பிறவியில் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவீர்களா ? திடுக்கிட்டான் தலைவன்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள் - அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள் ( 'வெளிப்படுசொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை', என்பதாம்.).

மணக்குடவர் உரை
இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.

மு.வரதராசனார் உரை
இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.

சாலமன் பாப்பையா உரை
காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.

கோட்டுப்பூச் சூடினும் காயும்

குறள் 1313
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று
[காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்]

பொருள்
புலவிநுணுக்கம் - pulavi-nuṇukkam   n. id. +. Sulks of a wife on flimsy grounds; அற்பகாரணத்தைக்கொண்டு தலைவி ஊடுகை. (குறள், 132,அதி.)

கோட்டுப் - - நெற்கூடு; சீட்டாட்டத்தில் எல்லாப் பிடிகளையும் பிடித் துவெல்லுதல். kōṭṭu   III. v. t. bend, make crooked, வளை VI; 2. paint, எழுது; 3. build, construct, கட்டு.

பூச் - ஒர்உயிர்மெய்யெழுத்து(ப்+ஊ); அழகு; கொடிப்பூ; கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதற்பூஎனநால்வகைப்பட்டமலர்; தாமரைப்பூ; பூத்தொழில்; சேவலின்தலைச்சூடு; நிறம்; நீலநிறம்; பொலிவு; மென்மை; யானையின்நுதற்புகர்; யானையின்நெற்றிப்பட்டம்; கண்ணின்கருவிழியில்விழும்வெண்பொட்டு; விளைவுப்போகம்; ஆயுதப்பொருக்கு; தீப்பொறி; நுண்பொடி; தேங்காய்த்துருவல்; சூரியனின்கதிர்படுதற்குமுன்னுள்ளபூநீற்றின்கதிர்; இலை; காண்க:முப்பூ; இந்துப்பு; வேள்வித்தீ; கூர்மை; நரகவகை; பூப்பு; பூமி; பிறப்பு.

கோட்டுப்பூ - மரக்கொம்புகளில்  தோன்றும் பூ.

சூடினும் - சூடுதல் - அணிதல்; பெயர்முதலியனதரித்தல்; கவிதல்; வளைந்துபோதல்.

காயும் - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல்

ஒருத்தியைக் - காதலியை

காட்டிய - காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்

சூடு - வெப்பம்; அரிக்குவியல்; சுடப்பட்டது; சுடுபுண்; சூட்டுக்குறி; ஒற்றடம்; கோபமுண்டாக்குதல்; கோபம்; உணர்ச்சி; விலையேற்றம்; கண்ணோய்வகை; வடு.
சூடு - cūṭu  கிறேன், சூடினேன், வேன், சூட, v. n. To wear, commonly on the head, அணிய. (c.) 2. To be crowned, crested, to adorn one's self, கிரீடஞ்சூட. (p.) 3. To bear, sus tain, be invested with a name, நாமஞ்சூட. 4. v. a. (coast usage.) To brand cattle, brand as a medical operation, மாடுமுதலியவற் றைச்சுட.

நீர் - நீங்கள்
நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

முழுப்பொருள்
ஒரு கட்டுப் பூவினை தலைவன் தலைவியின் தலையில் ஆசையாய் சூடினாலும், (என்றும் இல்லாமால் இன்று ஏன்) என் தலையில் சூடினாய்? வேறெந்த சிறுக்கிக்கு (பெண்ணுக்கு) இந்த பூக்களைச் சூட என் தலையில் வைத்து ஒத்திகை பார்க்கிறாய் என்று தலைவி தலைவனிடம் கடிந்து கூறினாளாம். பெண்கள் காரணமே இல்லையென்றாலும் அற்ப காரணங்களை தேடி தலைவனிடம் ஊடல் செய்வார்கள். அதில் ஓர் இன்பம் அவர்களுக்கு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது? என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச்செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ? ('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர், வளையமாகச் சூடினும் என்பதாம்; 'கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்' (புறநா.275)என்றார் பிறரும். இனி, 'அம்மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்', எனினும்அமையும்.).

மணக்குடவர் உரை
பக்கப்பூச் சூடினும் ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீரென்று சொல்லிக் காயும். பக்கப்பூ- ஒப்பனைப்பூ. கோட்டுப்பூ சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீரெனினுமாம். இது கோலஞ்செய்யினும் குற்றமென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

குறள் 1311
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் 
நண்ணேன் பரத்தநின் மார்பு.
[காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்]

பொருள்
புலவிநுணுக்கம் - pulavi-nuṇukkam   n. id. +. Sulks of a wife on flimsy grounds; அற்பகாரணத்தைக்கொண்டு தலைவி ஊடுகை. (குறள், 132,அதி.)

பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

இயலார் - இயல்புடையோர்

எல்லாரும் - யாவரும்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணின் - கண்களால்

பொது - பொதுமையானது; சிறப்பின்மை; சாதாரணம்; வழக்கமானது; நடுவுநிலை; ஒப்பு; குறிப்பானபொருளின்மை; வெளிப்படையானது; சபை; தில்லையம்பலம்.

உண் - uṇ   V. & I. v. t. (fut. உண்பேன், உண்ணு வேன்), eat, suck, take food. Some times it serves to form a passive verb, as in தள்ளுண்ண, to be rejected.

உண்பர் - உண்பார்கள்

நண்மை - அண்மை, naṇmai   n. perh. id. Proximity;சமீபம். நட்பெதிர்ந் தோர்க்கே யங்கை நண்மையன்(புறநா. 380, 11).

நண்ணேன் - தொடமாட்டேன், அருகில் வரமாட்டேன்

பரத்த - பரபரத்தல் - paraparattal   பரபரப்பு, v. n. hurrying hastening, தீவரித்தல்; 2. feeling a sensation of crawling or tingling, தினவு; 3. rumbling in the intestines; 4. activity, energy, avidity, முயற்சி.; பரவுதல்; தட்டையாதல்; அலமருதல்.

நின் - உன்னுடைய

மார்பு - நெஞ்சு; முலை; வடிம்பு; தடாகம்; அகலம்; கருப்பூரவகை; நான்குமுழஅளவுள்ளநீட்டலளவை.

முழுப்பொருள்
தலைவி தலைவனின் அழகு மிகுந்த வசிகரிக்கும் பரந்த மார்பு மீது கோபம் கொள்கிறாள். அதனால் தலைவனின் மீதும் கோபம் கொள்கிறாள். ஏனெனில், இவர் வெளியே மக்களுடன் மக்களாக பொது இடங்களுக்கு செல்லும் பொழுது பெண் இயல்புடையவர்கள் இவரின் வசிகரிக்கும் மார்பை பொதுவானை உண்பதுபோல உண்ணுவார்கள். இந்த மார்பு எனக்கானது மட்டும் அள்ளவா? இதை பிறர் காண்பதைக் கூட நான் விரும்பவில்லை. இதுப் போன்ற சிறு காரணங்களுக்காக தலைவனின் மீது கோபம் கொண்டு ஊடலிற்கு வழிவகுக்கிறாள் தலைவி. இன்னொரு கோணத்தில் பார்த்தால், தலைவி தலைவன் வீட்டைவிட்டு வெளியே (வெளியே சென்றால் தானே பிற பெண்கள் பார்ப்பார்கள்) செல்லக்கூடாது தன்னுடனே இருக்க வேண்டும் என்று விரும்பிகிறாள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

ஒப்புமை
”கருந்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்
றொருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரை மார்பன் நீராடா
தென்னையும் தோய வரும்”  (நாலடி 387)

“பரத்தையார் தோய்ந்த மார்பம்
பத்தினி மகளிர் தீண்டார்” (சீவக.2722)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அது , ' புலவியது ' நுணுக்கம் என விரியும் .அஃதாவது , தலைமகனும் தலைமகளும் ஒர் அமளிக்கண் கூடியிருந்துழி அவன் மாட்டுப் புலத்தற் காரண மில்லையாகவும் , காதல் கைம்மிகுதலான் நூண்ணியதோர் காரணமுளதாக உட்கொண்டு , அதனை அவன்மேலேற்றி அவள் புலத்தல். காரணத்தின் நுணுக்கம் காரியத்தின்மேல் நின்றது . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

(உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் - நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன். (கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.).

மணக்குடவர் உரை
என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

சாலமன் பாப்பையா உரை
பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.

ஊடி இருந்தேமாத் தும்மினார்

குறள் 1312
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை 
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
[காமத்துப்பால், கற்பியல், புலவி நுணுக்கம்]

பொருள்
ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு
ஊடி - பொய் சினம் கொண்டு பேசிக்கொள்ளாமல்
இருந்தேமா - இருக்கும் பொழுது

தும்முதல் - தும்மல்; மூச்சுத்தடைப்பட்டு ஒலியுடன் மூக்கு வாய் வழியாய் வெளிவருதல்; விடுதல்; மூச்சுவிடுதல்.

தும்மு -கிறேன், தும்மினேன், வேன், தும்ம, v. n. To sneeze. 2. To arise, revive, உயிர்க்க. 3. v. a. To emit, let go, leave, விட. (c.)
தும்முவது என்பது ஒருகணம் மூச்சு நின்று வருவது; இறப்புக்குச் சமம். அதனால் தும்மும்போது இப்போதும்கூட “நீண்ட ஆயுள் உண்டாவதாக” என்று பொருள் வரும்படி,”தீர்காயுசு” என்பர் பெரியோர். இந்த பழக்கம் இந்தியப்பழக்கமாக மட்டும் இல்லாமல், மேற்கத்திய நாடுகளிலும், “கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” (God bless) என்று கூறுகிறார்கள். இது கலாச்சாரங்களைத் தாண்டி வரும் பழக்கம்தான்

தும்மினார் - தும்மல் செய்தார். அதாவது பொதுவாக தும்மினால் நம்மை யாரோ நினைக்கிறார்கள் என்றும் பொருள் கொள்வார்கள். ஆதலால் பொய்சினம் கொண்டாலும் அவரும் தன்னை உண்மையாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்.

யாம் தம்மை - நான் அவரை நினைத்து

நீடு - நெடுங்காலம்; நிலைத்திருக்கை.

‘நீடு வாழ்க!’  - நீங்கள் நெடுங்காலம் வாழ்க 
என்பாக்கு - என்னுடைய மனம்
அறிந்து - அறிந்ததனால்

முழுப்பொருள்
காதலர்களும் கணவன் மனைவி மார்களும் தங்கள் வாழ்வில் குறிப்பாக இல்லற வாழ்வின் துவக்க காலத்தில் சிறு சிறு (சில நேரம் பெரிய) சண்டைப் போட்டுக்கொள்வர். ஆனால் உண்மையில் இவை பொய்க் கோபம் மட்டுமே. இந்த சண்டை தீர்ந்த பின்பு இவர்கள் காதல் இன்னும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட பொய்சினத்தினை ஊடல் என்பார்கள்.

இப்படி ஒரு தடவை ஊடிக்கொண்டு இருக்கையில் இருவரும் பேசாமல் இருந்தனர். கணவரோ இவளை எப்படி பேச வைப்பது என்று எண்ணினார். இவள் கொண்டு இருப்பது பொய்க்கோபம் என்று எப்படி உடைப்பது என்று சிந்தித்தார். அவருக்கு ஒரு வழி தோன்றியது.

தும்முவது என்பது ஒருகணம் மூச்சு நின்று வருவது; இறப்புக்குச் சமம். அதனால் தும்மும்போது இப்போதும்கூட “நீண்ட ஆயுள் உண்டாவதாக” என்று பொருள் வரும்படி,”தீர்காயுசு” என்பர் பெரியோர்.

ஆதலால் தும்மினால் தீர்காயுசு (நீடு வாழ்க) என்று அவள் வாழ்த்தினால் அவள் தன் மீது காதல் கொண்டு இருக்கிறாள். இது வெறும் பொய்க்கோபம் என்பதை நிறுபித்து விடலாம். அவளுடம் மறுபடியும் பேசலாம்.

ஆகவே தலைவன்/ கணவன் தும்மினார்.

ஆனால் தலைவியோ/ மனைவியோ தும்மினால் இவரை நான் வாழ்த்துவேன் என்று அறிவார். ஆதலால் கோபம் இல்லை என்று நிறுபித்து விடலாம். அதனால் தான் தும்முகிறார் என்று மீண்டும் தலைவன் மீது பொய்க்கோபம் கொள்கிறாள் தலைவி!

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி. (தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.).

மணக்குடவர் உரை
தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக: அவ்விடத்து யாம் தம்மை நெடிதுவாழுவீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து தும்மினார். இது தலைமகள் தோழிக்குக் கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(தலைமகன் சென்றபின் வந்த தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்த கூறியது.)

ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு உரையாடா திருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்க என்பாக்கு அறிந்து - அது எதற்கெனின், யாம் ஊடல் நீங்கித் தம்மை நீடுவாழ்க என்று வாழ்த்தி உரையாடுதற்கு.

இயல்பாக நிகழ்ந்த தும்மலை வேண்டுமென்று செய்ததாகக் கொண்டதால் (புலவி) நுணுக்கமாயிற்று. தும்மியபோது வாழ்த்துதல் மரபாகலால், உரையாடல் வேண்டியதாயிற்று என்பதாம். ' யாம் ' என்றது அரசப் பன்மை (Royal 'we' ) , அகரந் தொக்கது.

மு.வ உரை
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

சாலமன் பாப்பையா உரை
நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்).

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
சொன்ன நேரம்  வருவதில்லை வந்த  பின்போ
          சுகம் உடனே வேண்டும் என்று  அலைகின்றார் பார்
சின்னவளா நான் அறிவேன் இவரை நன்கு
          சிரிப்பின்றி  முகம் மாற்றித் துன்பப் பட்டேன்
என்னவரோ மிகப் பெரிய  கெட்டிக்காரர்
          என் ஊடல் தீர்ப்பதற்காய் தும்மல் ஒன்றை
தன்னறிவால் உண்டாக்கித் தும்மித் தீர்த்தார்
          தனை மறந்து நான் அவரை வாழ்த்தவென்று

யார் நினைக்கிறார்களோ...? (நன்றி கவிப்புயல் இனியவன்)

என்னவனோடு .....
ஊடல் செய்தேன் .....
தும்மினான் ....
நான் நூறு என்று ....
வாழ்த்துவேன் ....
என்று நினைத்தார் ....!!!

நன்றாக நான் ....
வாழ்த்துவேன் ...
யார் நினைகிறார்களோ...?
என்றாலும் மனம் ...
தன்னை அறியாமல் ...
வாழ்த்தியது ....!!!


சாதாரணமாக நம் விட்டில் பெரியவர்கள், வயதில் சிறியோர் தும்மினால், "நீடூழு வாழ்க" என ஆசிர்வதிப்பர்.அந்தப் பழக்கம் வள்ளுவன் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பது இக்குறளால் தெரிகிறது. காதலி, காதலனிடன் ஊடல் கொள்கிறாள். ஊடலை மறக்க அவன் தும்மினானாம். அப்போதாவது எப்போதும் சொல்வதுபோல "நீ வாழ்க" என்று கூறி ஊடலை முடித்துவைப்பாள் என்ற எண்ணத்தில்.

காதலரோடு ஊடல் கொண்டிருந்த போது, நான் அவரை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

தும்மல் விளைவித்த ஊடல்! (நன்றி: தினமணி)
தும்மல்' என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. அளவுக்கு மீறிய நெடியைத் தாங்கமுடியாமல், அதை முகர்வதால் மூச்சு விடுவதில் உருவாகும் தடையழர்ச்சியின் வெளிப்பாடாக, திணறல் ஏற்பட்டு அதை, விடுவிக்க மூக்கும் வாயும் முழு ஆற்றலுடன் மூச்சை வெளியேற்றுவதால் உண்டாவது. தும்மல், "நீர்க்கோவை'யாலும் (ஜலதோஷம்) ஏற்படும். இஃதன்றி, காற்று மாசு, சுற்றுச்சூழல், உணவு, உடை, அணிகலன் இவற்றின் ஒவ்வாமையாலும் தும்மல் வரும். இவைதவிர மனவியல் காரணங்களாலும் தும்மல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

÷மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசும்போது தும்மல் போடுபவர்கள் கடிந்துகொள்ளப்படுவதும் நடைமுறையில் உள்ளது. தும்முபவர் ஒற்றைத் தும்மலுடன் நிறுத்திவிடாமல், மேலும் ஓர் தும்மலைப் போட்டால் அதை நற்சகுனமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. குழந்தைகள் தும்மினால் அக்குழந்தைகளை ""நூறாண்டு வாழ்க!'' என்று குடும்பத்தினர் வாழ்த்தும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆனால், தும்மல் குறித்து திருவள்ளுவர் என்ன கூறியுள்ளார் என்பதைக் காண்போம்.

÷தலைவனும் தலைவியும் ஊடல்கொண்டு ஒருவருடன் ஒருவர் பேசுவதைத் தவிர்த்து இருக்கின்றனர். வழக்கம்போல தலைவன்தான் தன் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து, தான் சமாதானத்துக்குத் தயார் என்பதை உணர்த்த ஓர் உபாயம் கண்டுபிடிக்கிறான். தும்மல் போட்டால் அவரை வாழ்த்தும் பொருட்டு ""வாழ்க பல்லாண்டு!'' என்று கூறுதல் வழக்கத்தில் உள்ளதால், தலைவன் செயற்கையாக ஓர் தும்மலை வரவழைத்து தலைவியின் காதுகளில் ஒலிக்கும்படியாகப் பேரிரைச்சலுடன் தும்முகிறான்.

÷தலைவிக்கு, தலைவனின் நோக்கம் புரிந்துவிட்டது. அவரோடு நான் பேசாதிருக்கிறேன் ஆகையால், தம்மை ""நெடுங்காலம் வாழ்க'' என்று நான் வாய்திறந்து சொல்லவாவது அவரோடு நான் பேசுவேன் என நினைத்து அவர் தும்மினார் போலும்' என எண்ணினாள்.

""ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ்க என்பாக்கு அறிந்து'' (1312)

இவ்வாறு அவர்கள் ஊடலுக்கு விடைகொடுத்துவிட்டுக் கூடிக்களித்து வாழும் நிலையில், ஒருநாள் தலைவன் எதேச்சையாக ஓர் தும்மலை வெளிப்படுத்தினான். தலைவியும் அனிச்சைச் செயலாக தலைவனுக்குத் தன் வாழ்த்தைத் தெரிவித்தாள். ஆனால், உடனே அவளுள் ஓர் ஐயம் தோன்றியது. நாம் அருகிலேயே இருக்கிறோம். இந்நிலையில் இவர் தும்முகிறார் என்றால், இவரை வேறு யாரோ ஒரு மையல்கொண்ட தையல் நினைக்கிறாள் என்றுதானே பொருள் என முடிவு செய்கிறாள். உடனே தாம் கொடுத்த வாழ்த்தை அழித்துவிடுகிறாள். தலைவனை நோக்கி, ""உங்கள்பால் காதல்கொண்ட வேறு மங்கை எவளோ ஒருத்தி உங்களை நினைத்த காரணத்தால்தானே தும்மினீர்?'' என்று அழுது புலம்புகிறாள். தும்மலால் நேர்ந்த இந்தத் துன்ப நிகழ்வைக் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார் வள்ளுவர்.

""வழுத்தினாள் தும்மினேனாக அழித்து அழுதாள்
யார்உள்ளித் தும்மினீர் என்று'' (1317)

இதுகேட்டுப் பதறிப்போன தலைவன், தனது தும்மல் இயற்கையாக ஏற்பட்டதுதான் என்றும், தனக்கு வேறு எந்தப் பெண்ணுடனும் தொடர்பு இல்லை என்றும் தெளிவுபடுத்தி, தலைவியை சமாதானப்படுத்தினான். இந்தத் தும்மலை இயற்கைதான் என்பதை தலைவி புரிந்துகொண்டாள் என்று மகிழ்ந்தவனுக்கு அடுத்தும் ஓர் தும்மல் வரப்பார்த்தது. ஐயகோ.. இப்போதுதான் முந்தைய தும்மலால் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்திருக்கிறது; மீண்டும் ஓர் தும்மலா? மீண்டும் சிக்கல் உருவாகுமே என்று எண்ணி, வந்த தும்மலை அடக்க முயன்றான். ÷இதைப் பார்த்துக்கொண்டிருந்த தலைவி, ""உங்களை யாரோ காதலுடன் நினைக்கிறார்கள்; அதனால்தான் தும்மல் வருகிறது. ஆனால் நான் கேட்டுவிடுவேனோ என்பதற்காக அதை மறைக்கப் பார்க்கிறீர்'' என்று கோபத்தை வெளிப்படுத்தும் முகத்தான் அழுது மீண்டும் ஊடல் கொள்கிறாள்.

""தும்மச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று'' (1318)

தும்மல் போடுவதில் இத்தனை நுட்பமான செய்திகளா? தும்மல் வந்தால் இனி காலம், நேரம் பார்த்துத்தான் தும்ம வேண்டும் போலிருக்கிறது!

"அடி'களின் பெருமை!

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - இளங்கோவடிகள்
சிலப்பதிகாரத்தில் வரும் பெண் துறவி - கவுந்தியடிகள்
திருநாவுக்கரசு சுவாமியைப் போற்றி, பக்தி செய்தவர் - அப்பூதியடிகள்

முதன் முதலில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் - மறைமலையடிகள்

இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர் - காந்தியடிகள்

இசைத் தமிழ் நூலான "யாழ்' நூலை எழுதியவர் - விபுலானந்த அடிகள்.

வடலூரில் சமரச சன்மார்க சத்திய ஞான சபையை நிறுவியவர் - இராமலிங்க அடிகள்.

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமையத் தூண்டுகோலாக இருந்தவர் - ஞானியாரடிகள்

யாரினும் காதலம்

குறள் 1314
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
[காமத்துப்பால், கற்பியல், புலவி நுணுக்கம்]

பொருள்
யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி.

இனும் - இன்னும், இருப்பினும்

யாரினும் - மற்றவர்கள் எல்லோரையும் விட

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

அம் - வினையின் விகுதி.
ஆதலால் காதல் + அம் -> அதிக காதல் என்று பொருள்

காதலம் - நாம் அதிக காதல் கொண்டு உள்ளோம்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

னோ - ஏன்? - எதற்கு, என்ன, என்னகாரணம், என்னை; இரக்கப்பொருளைத்தரும்இடைச்சொல்; தன்மையொருமைவிகுதி; பன்றி

என்றேனா - என்று அவளிடம் சொன்ன உடன்

ஊடினாள் - என்னுடன் ஊடினாள், ஊடல்
ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு

யாரினும் - யார் உடன் காதல் கொண்டீர் முன்பு ?

யாரினும் - யார் உடன் காதல் கொண்டீர் முன்பு ?

என்று  - என்று என்னிடம் ஊடினாள்.

  
 


முழுப்பொருள்
மற்றவர்களை விட நம் காதலின் அளவு மிக அதிகம் என்று கணவன் மனைவியிடம் கூறினான். கணவன் மற்றவர்கள் காதல் என்று கூறியது மற்ற எல்லா கணவன் மனைவி மாறும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலின் அளவை. ஆனால் மனைவியோ வேறு விதமாக புரிந்துக் கொண்டாள். அதாவது கணவன் இதற்கு முன்பு பல மகளிரை காதலித்ததாகவும், அவர்களிடம் கொண்ட காதலை விட தன் மேல் அதிகம் காதல் கொண்டதாக கணவன் சொல்கிறான் என்று. 

இது அவளுக்கு அதிர்ச்சியான ஒரு புதிய செய்தியாக கேட்க, யார் அவர்கள் ? யார் அவர்கள் ? யார் மீது நீங்கள் முன்னம் காதல் கொண்டீர் ? ஏன் என்னிடம் இத்தனை நாள் சொல்லவில்லை என்று அவன் மேல் கோவம் கொண்டாள். இந்த சச்சரவு ஊடலாக மாறியது. அவர்களுக்குள் பிணக்கு உண்டாயிற்று.


இந்த Post ஆசிரியரின் சொந்த பிரச்சனை :
கணவனுக்கு உண்மையில் அப்படி இல்லாத பொழுதே ஊடல போய் முடியுது. எனக்கு எங்க போய் முடியுமோ ஈஸ்வரா ? :) 

இருந்தாலும் திருவள்ளுவர் சொல்லி இருக்கார்


அந்த நம்பிக்கைல தான் நான் இருக்கேன் :) :)


பரிமேலழகர் உரை
இதுவும் அது. யாரினும் காதலம் என்றேனா - காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள் - நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, 'அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர்' என்று சொல்லிப் புலந்தாள்.

விளக்கம் (தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்பை உயர்ச்சிக்கண் வந்தது. 'யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை,' என்பதாம்.)

மணக்குடவர் உரை
ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக, அதனை அவ்வாறு கொள்ளாது, நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)
யாரினும் காதலம் என்றேனா - காமவின்பம் நுகர்தற்குரிய இருவராகிய கணவன் மனைவியர் வேறு யாரினும் நாம் மிகுந்த காதலுடையோம் என்னும் பொருளில், யாரினுங் காதலம் என்று சொன்னேனாக, யாரினும் யாரினும் என்று ஊடினாள்- உன் தலைவி அப்பொருள் கொள்ளாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் உன்பால் மிகுந்த காதலுடையேன் என்று நான் கூறியதாகக் கொண்டு, "யாரைவிட" என்று வினவிப் புலந்தாள்.

யான் அன்பு மிகுதியால் நல்ல பொருளிற் கூறியதைத் தீய பொருளில் தவறாக உணர்ந்து கொண்டதல்லது, வேறு கரணகமில்லை யென்பதாம். தலைமகள் கொண்ட பொருட்கு 'யார்' உயர்வுப்பன்மை.

மு.வ உரை
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

சாலமன் பாப்பையா உரை
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.