Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label பெண்வழிச்சேறல். Show all posts
Showing posts with label பெண்வழிச்சேறல். Show all posts

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

 

குறள் 907
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

ஏவல் - ஏவுகை, தூண்டுகை; கட்டளை; ஏவல்வினைமுற்று; ஓதுகை; பணிவிடை; பணியாள்; பிசாசைஏவிவிடுகை; வறுமை.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

ஒழுகும் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

ஆண்மையின் - ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை

நாணுடைப் - நாண் - எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்; வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

உடைமை -  உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

பெண்ணே பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை

உடைத்து - உடைதல் - இருக்கும்

முழுப்பொருள் 
தனது கடமைகளை ஆற்றாமல் பொருளை ஈட்டாமல், பெண்ணின்/மனைவியின் கட்டளைகளை செய்து ஒழுகும் ஒரு கணவனுக்கு திறமை / திராணி / வலிமை இல்லை என்றே பொருள். அத்தகையவனை கண்டு இவ்வுலகம் நாணும். இவனை காட்டிலும் இவன் மனைவியின் பெண்மையே பெருமை /வல்லமை வாய்ந்ததாக போற்றப்படும். இவன் கட்டளைகளை இயற்றினாலும், அவற்றின் பெருமை எல்லாம் அவன் மனைவியினையே சாரும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணி¢னையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. ('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துக்கோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.).

மணக்குடவர் உரை
பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின், நாணமுடைய பெண்மையே தலைமை உடைத்தாம். இது பிறரால் மதிக்கப்படாரென்றது.

மு.வரதராசனார் உரை
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

சாலமன் பாப்பையா உரை
மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்

 

குறள் 909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

அறவினையும் - அறவினை - நேர்மையான தொழில்

ஆன்ற -  மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.

பொருளும் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

வினையும் வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

ஏவல் -  ஏவுகை, தூண்டுகை; கட்டளை; ஏவல்வினைமுற்று; ஓதுகை; பணிவிடை; பணியாள்; பிசாசைஏவிவிடுகை; வறுமை.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

செய்வார் -செய்வார்கள்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இல் - இல்லை 

முழுப்பொருள் 
பெண்ணின் / மனைவியின் கட்டளைகளை பிரதானமாக செய்யும் கணவன்மார்களிடம் அறச்செயல்களும் மாட்சிமைவாய்ந்த பொருளும்/செல்வமும் மற்ற வினைகளும் மற்ற இன்பங்களும் இருக்காது. மற்ற/பிறவினைகள் என்றால் மனைவியிடம் பெறக்கூடிய புணர்ச்சியின்பத்தை/சிற்றின்பத்தைத் தவிர மற்ற இன்பங்கள் ஏதும் அவனுக்கு கிடைக்காது.

இங்கே திருவள்ளுவர், தன் கடமைகள் தர்மங்கள் அறங்கள் என்னவென்று அறிந்தவன் அதையே செய்வான். அதை செய்தே பொருள் ஈட்டுவான், இன்பமும் அடைவான். ஆனால், பெண்ணின் கட்டளைகளை செய்பவனுக்கு தனது கடமைகளை செய்ய நேரமேது? அல்லது தனது கடமைகளை செய்பவனுக்கு பெண்ணின் கட்டளைகளை செய்ய நேரம் ஏது? அல்லது கணவன் தன் கடமைகளை செய்துக்கொண்டு இருந்தால் பெண் ஏன் கட்டளைகளை இடுகிறாள் அல்லது கட்டளைகளை பிறப்பிக்க நேரம் ஏது? 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறவினையும் - அறச்செயலும்; ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும்; பிறவினையும் - இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல் - தம் மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாகா. (புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை' எனப் பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின் என்பதுதோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறஞ்செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் ஒழிந்த காமம் நுகர்தலும் பெண்ணேவல் செய்வார்மாட்டு இல்லையாம். இஃது அச்சமில்லாராயினும் சொன்னது செய்வாராயின் இம்மூன்று பொருளும் எய்தார் என்றது.

மு.வரதராசனார் உரை
அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்

 

குறள் 908
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
நட்டார் - நண்பர்; உறவினர்.

குறை - குற்றம்; குறைபாடு; வறுமை; எஞ்சியது; மனக்குறை; தவறு; நேர்த்திக்கடன்; இன்றியமையாப்பொருள்; செயல்; வேண்டுகோள்; வேண்டுவது:துண்டம்; ஆற்றிடைக்குறை; சொல்லின்எழுத்துக்குறை; ஆறாம்வேற்றுமை; உண்ணுந்தசை; அரசிறை.

முடியார் - நீக்கார்

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

ஆற்றாது - செய்யாது இருத்தல் 

ஆற்றார் - செய்யாது இருப்பவர் 

நன்னுதல் - naṉṉutal   n. நல்¹ + நுதல் Damsel, lady, as having a beautiful forehead;[அழகிய நெற்றியை உடையாள்] பெண் நன்னுதல்கணவ (பதிற்றுப். 42, 7).  

நன்னுதலாள் - அழகிய நெற்றியுடைய பெண்ணை

பெட்டு - பொய்; மயக்குச்சொல்; சிறப்பு; மதிப்பு.

ஆங்கு  - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.

ஒழுகுபவர் -  ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

முழுப்பொருள் 
அழகிய நெற்றியை உடைய பெண்ணின் / மனைவியின் மயக்குச்சொற்களைக் கேட்டு, உண்மை எதுவென அறிந்துக்கொள்ளாமல், அம்மயக்கத்திலேயே ஒழுகி இருப்பவர் தனது நண்பர் உறவினர்களின் நியாயமான குறைகளையும் நீக்க மாட்டார் அவர்களுக்கு நல்லவற்றையும் செய்யமாட்டார். ஏனெனில் அவருக்கு நேரமும், சிந்தனையும், அதிகாரமும், அனுமதியும் இருக்காது. இவை எல்லாவற்றையும் மனைவியிடம் இழந்துவிட்டானே. பெண்ணின் வழி சென்றால் சுயத்தையும் சுய முடிவுகளையும் ஆற்றக்கூடிய செயல்களையும் இழப்பாய், கடமைகளை செய்ய தவறுவாய் என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.

காவிய நாயகன் இராமனே, மண்மேல் ஆசை கொண்டதால், தாம் தம்முடைய அன்னை உள்ளிட்ட எல்லோருக்கும் ஒரு புண்ணின்மேல் தீயினால் சுட்டாற்போல் துன்பத்தை விளைவித்ததாகவும் வருத்துவதாக ஒரு கம்பராமாயணப்பாடல்; இதுவும் கூட ஒரு பெண்ணின் மேல் (தன் மனைவி சீதையின் மேல் வைத்த ஆசையால்) என்று சொல்லுகிறான்.

“மண்மேல் வைத்த காதலின், மாதா முதலோர்க்கும்
புண்மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன்;
பெண்மேல் வைத்த காதலின், இப் பேறுகள் பெற்றேன்
எண்மேல் வைத்த வென்புகழ் நன்றால் எளியேனோ” (கம்ப.பிரமாத்திரப்.212)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார் - அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார். ('நல்நுதலாள்' என்பதனை 'அமை ஆர் தோள்' (குறள்-906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்து ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார், தம்மோடு நட்டார்.

மு.வரதராசனார் உரை
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

குறள் 906
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
இமைத்தல் - இமைகொட்டுதல்; ஒளிவிடுதல் சுருங்குதல் தூங்குதல்

இமையாரின் - இமையார் - imaiyār   n. இமை- + ஆ neg.The gods, who never wink their eyes; தேவர் (குறள், 906.)  

வாழினும்  - வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்

பாடு - உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு.

இலரே - மக்கள் இல்லை 

இல்லாள் - மனைவி; மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; வறுமையுடையவள்.

அமை - அமைதல் - amai-   4 v.intr. 1. To becomestill, quiet, to subside; அடங்குதல் (கல்லா. முரு.வரி, 15.) 2. To be satisfied, contented; திருப்தியாதல். அமைய வுண்மின். (W.) 3. To submit,acquiesce, agree; உடன்படுதல் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை (குறள், 803). 4. (Gram.) Tobe regularized, as irregular expressions; வழுவாயினும் ஏற்புடையதாதல். பொருள் வேறுபட்டு வழீஇயமையுமாறு (தொல். பொ 196, உரை). 5. To besettled, fixed up; தீர்மானமாதல். அந்த வீடு எனக்கமைந்தது. 6. To crowd together, be close;  

ஆர் - ஆகாத

அமையார் - அமையாத - உடன்படாத ; ஏற்புடையாத 

தோள் - புயம்; கை; தொளை

அஞ்சுபவர் - பயப்படுபவர்

முழுப்பொருள் 
வெளி உலகில் தேவர் போன்று பீடுநடைப்போட்டு வாழ்ந்தாலும் எல்லா புகழையும் மரியாதையும் பெற்றாலும் ஒருவர் தன்னுடைய வீட்டில் உள்ள மனைவியிற்கு பயந்தால் அவருக்கு பெருமை/குணம்/அழகு இல்லை. 

கணவன் மனைவியிற்கு இடையே அன்பும் காதலும் தான் இருக்க வேண்டும். இருவருக்கும் இடையே பரஸ்பர நட்பும் மதிப்பும் இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் அச்சம் இருக்காது. அச்சமும் இருக்க கூடாது. 

மேலும் மனைவிக்கு அஞ்சி ஒருவன் தனக்கு ஒவ்வாதவற்றையும் அறம் அல்லாதவற்றையும் வெளியுலகில் செய்வான் சென்றால் அது அவனுக்கு இழுக்கே.

அழகிய தோளைக் குறித்ததற்கு என்ன காரணம் என்றால், வீரம் பொருந்திய வீரர்களையும் வென்றிருந்தாலும், மனைவியின் அழகியதோளுக்கு அஞ்சுவதை நையாண்டியாகக் குறிக்கத்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை:
இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - தம் இல்லாளுடைய வேய் போலும் தோளினை அஞ்சுவார்; இமையாரின் வாழினும் பாடு இலர் - வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும், ஆண்மையிலர். (அமரர்போல் வாழ்தலாவது, பகைத்த வீரர் தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு வாழ்தல். அது கூடாமையின் 'வாழினும்' என்றார். 'அமை ஆர் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார் ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார் ஆண்மையிலார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் அவளை அஞ்சுதற் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தேவரைப்போல இன்புற்று வாழினும், பெருமை யிலராவர்; மனையாளது வேய்போலும் தோளை அஞ்சுபவர். இது செல்வமுடையராயினும் பிறரால் மதிக்கப்படாரென்றது.

மு.வரதராசனார் உரை:
மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்

குறள் 904
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
மனையாளை - மனையாள் - மனைவி, இல்லாள்; மருதநிலத்தின்தலைவி; மனையையுடையாள்.

அஞ்சும் - அஞ்சுதல் - பயப்படுதல்

மறுமை - மறுபிறவி; மறுவுலகம்.

இலாளன் - இல்லாதவன் 

வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

ஆண்மை -  ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை

வீறு - தனிப்பட்டசிறப்பு; வெற்றி; வேறொன்றற்கில்லாஅழகு; பொலிவு; பெருமை; மிகுதி; நல்வினை; மருந்துமுதலியவற்றின்ஆற்றல்; செருக்கு; வெறுப்பு; ஒளி; வேறு; தனிமை; அடி.

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

இன்று -  இல்லை; இந்தநாள்; ஓரசைச்சொல்.


முழுப்பொருள் 
மனைவியை கண்டு அஞ்சி வாழும் ஒருவன் மனைவியின் ஆணைக்கிணங்க வாழும் ஒருவனுக்கு மறுபிறவியில் பயன் ஏதும் இல்லாதவனாய் பிறப்பான். அத்தகையவன் எத்தகைய செயல் திறன் படைத்திருந்தாலும் அவனுடைய சிறப்பை இவ்வுலகம் பாராட்டாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது.

மு.வரதராசனார் உரை
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

சாலமன் பாப்பையா உரை
தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்

குறள் 903
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
இல்லாள் - மனைவி; மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; வறுமையுடையவள்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

தாழ்ந்த  - தாழ்ந்துபோதல் - ஒப்புமையில்குறைந்துபோதல்; இழிந்தநிலையடைதல்; தாழ்ந்துகொடுத்தல்

தாழ்தல் - அமிழ்ந்துதல்; சாய்தல்; குறைதல்; சரிதல்; நிலைகெடுதல்; தாமதித்தல்; தங்குதல்; தொங்குதல்; ஈடுபடுதல்; விரும்புதல்; ஆசைப்பெருக்கம்; வணங்குதல்.

இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்

நல்லாருள் - நல்லார் - நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர்

நாணுத்  - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள் 
தாழ்தல் என்ற சொல்லுக்கு அமிழ்ந்துதல் குறைதல் என்ற பொருள்கள் மட்டும் இல்லை. தங்குதல், விரும்புதல், ஆசைப்பெருக்கம், வணங்குதல் ஆகிய பொருள்களும் உண்டு. அதுமட்டுமின்றி  "இல்லாளிடம் தாழ்ந்து இருக்கும்" என்று கூறவில்லை. "இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு" என்று கூறப்படுகிறது. அதுவும் இன்மை என்னும் வறுமை என்று கூறப்படுகிறது.

ஆதலால் இக்குறளுக்கு பொருள் இப்படி இருக்கவேண்டும். மனைவியிடம் மோகத்தில் ஆசையில் திளைத்து அவளின்கண் விழுந்துகிடந்து வீட்டிற்குள்ளேயே தங்கி "அறம், பொருள், இன்பம், வீடு" என்பனவற்றுள் தன்னுடைய "அறம்" ஆகிய கடமைகளை  தருமங்களை செய்யாது இருக்கும் இயல்பு வறுமை என்கிறார் திருவள்ளுவர். இத்தகைய இயல்பு எந்நாளும் நல்லோர்களால் சான்றோர்களால் பெரியோர்களால் கற்றோர்களால் ஏன் மகளீரால் கூட விரும்பப்பட மாட்டாது. மேற்சொன்ன நல்லோர் முன் வெட்கி தலைக்குனிந்து இருக்க நேரும்.

மற்ற உரைகள் கூறுவது போல மனைவியிடம் அடிபணிவது அழகல்ல வெட்கப்படவேண்டியது. ஆனால் அதற்கு முன் தலைவன் தன் கடமைகளை சரியாக ஆற்றவேண்டும். அப்படி ஆற்றவில்லையென்றால் வீட்டில் மதிப்பு கிடைக்காது. அங்கே மனைவியிடம் தாழ்ந்துப்போகவே நேரும். அது நல்லோர் முன் வெட்கி நிற்கச்செய்யும். மேலும் நாம் நம் கடமையை சரியாக செய்தால் யாரிடமும் தாழ்ந்துபோக வேண்டிய அவசியம் இல்லை.

இங்கு ஔவையார் பாடல் வரிகளை நினைவு கூறுதல் நன்று. “எதிரில் பேசு மனையாளில் பேய் நன்று” என்று கூறிய ஔவையார் மேலும் சொல்லுவது இதோ.

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும். (அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத்தரும்' என்றார்.).

மணக்குடவர் உரை
மனையாள்மாட்டுந் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும்.

மு.வரதராசனார் உரை
மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.

சாலமன் பாப்பையா உரை
மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.

பேணாது பெண்விழைவான் ஆக்கம்

குறள் 902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
பேணுதல்போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணாது - போற்றாமல்  ; மதிக்காமல்

பெண் - பெண்களை ; மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

விழைதல் - மிகவிரும்புதல்; மதித்தல்; நெருங்கிப்பழகுதல்.

விழைவான் - விழைபவன்

ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

பெரியதோர் - பெரியதாக ; பெரிதான

நாணாக  -நாண்  - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

நாணுத்  - நாணுதல் -வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்

தரும் - கொடுக்கும் 

முழுப்பொருள்
ஒருவன் அறிவையும் பொருளையும் பேணாது அதாவது அறிவுச்செல்வதையும் பொருட்செல்வதையும் ஈட்டாமலும் அதனை பாதுகாக்காமலும்  சோம்பி பெண்ணிடம் சரணாகதி அடைந்து பெண்சுகத்தை மட்டும் விழைபவன் மிகவும் விரும்புவனையும் அவனுடைய (குடி) செல்வத்தையும் கண்டு நாணும் இவ்வுலகம் அவன் மீது. அதாவது பெண்சுகத்தில் மூழ்கி அறத்தையும் பொருளையும் ஈட்டாமல் இருப்பவருக்கும் பெரியதோர் வெட்கக்கேடினை கண்டு வெட்கும் படியாக நடக்கும்.

பொதுவாக "அறம் பொருள் தர்மம் வீடு (புருசார்த்தாவில் தர்மம் (righteousness, moral values), அர்த்தம் (prosperity, economic value), காமம் (pleasure, love, psychological values), மோக்ஷம் (liberation, spiritual values))" என்று கூறுவார்கள். அறம் என்ற தர்மத்தை (ஒருவன் செய்ய வேண்டிய கடமை)  செய்தால் தான் பொருள் ஈட்டமுடியும். பொருள் ஈட்டினால் தான் வாழ்வை நடத்த முடியும். பொருள் இருந்தால் இன்பம் இருக்கும். இவை இருந்தால் தான் வீடுபேறு என்னும் நிலைக்கு நம்மால முயற்சி செய்ய முடியும். இன்பத்தில் (பெண் இன்பம் மட்டும் அல்ல) திளைத்து இருந்து அறத்தை செய்யாது இருந்தால் பொருள் சென்றுவிடும் பின்பு இன்பமும் விலகி விடும். ஆதலால் அந்த சமநிலை தவறாது இருத்தல் வேண்டும்.

நான்கு வேடங்கள் - என்ற ஜெயமோகன் கட்டுரையை வாசித்தால் அறம், பொருள், இன்பம், வீடு பற்றி இன்னும் ஆழமாக அறியலாம். (சுட்டியை தட்டவும்)

ஒப்புமை
“பெண்விழைவார்க் கில்லைப் பெருந்தூய்மை” (அறநெறி. 114)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும். (எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலும் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண,அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப்பானது செல்வம், பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாகத் தனக்கு நாணினைத் தரும்.

மு.வரதராசனார் உரை
கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.

மனைவிழைவார் மாண்பயன் எய்தார்

குறள் 901
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
மனை - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய்.

விழைதல் - மிகவிரும்புதல்; மதித்தல்; நெருங்கிப்பழகுதல்.

விழைவார்  - விரும்புவர், மதிக்கிரவர், நெருங்கிப்பழகியவர்

மாண்  - மாட்சிமை; பெருமை, மாணம், மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.

பயன்  - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

எய்தார் - அடையமாட்டார்கள்.

வினை  - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னை வினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக் குறிக்கும் குழூ உக்குறி.

விழைவார் - விரும்புவர், மதிக்கிரவர், நெருங்கிப்பழகியவர்
வேண்டாப்  - வேண்டாத; விரும்பாத

பொருளும்  - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு; atu   pron. (pl. அவை, அவைகள், அவற்று) that, it, that thing; 2. termination of the sixth or possessive case as அவனது கை.

முழுப்பொருள்
இக்குறள் முக்கியமான குறள். அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லுவார்கள். நமது கடமைகளை சரிவர ஆற்றினால் தான் அறம் பூர்த்தியாகும். அப்போது தான் பொருள் கிட்டும். கடமை ஆற்றவில்லை என்றால் பொருள் கிடைக்காது. பொருள் இல்லை என்றால் வறுமை வீட்டில் (நாட்டில்) குடிப்புகும். வறுமை இருந்தால் இன்பம் இல்லை. இன்பம் இல்லை என்றால் வீடு பேறு கிட்டாது. ஆதலால் இன்பத்திற்கு அறமும் பொருளும் அவசியம்.

ஆதலால் தான் திருவள்ளுவர் சொல்லுகிறார் மனைவியுடன் (அல்லது கணவனுடன்) கூடும் போது கிட்டும் காம சுகத்தை மட்டும் விழைவோர் பெருமை புகழ் தனையும் பொருள் என்னும் பயன் தனையும் அடைய மாட்டார்கள் என்று. வெறும் காமசுகத்தையும் மட்டும் விழைவது மாணம் அற்ற செயல் என்பதை இங்கு காண்க. 

உலகில் பெரியதாய் சாதிக்க வேண்டும் என்றவர்கள், பெருமை வேண்டுபவர்கள் தன் இல்ல சுகத்தை தாண்டி அறம் பொருள் தனை நாடுவர். அவர்கள் காமசுகத்தை மட்டும் நாட மாட்டார்கள். ஆனால் சரியாக அறம் செய்வோர்க்கு பொருள் கிட்டும். அதுமட்டுமின்றி இயற்கையாக இன்பமும் கிட்டும் என்று. அவர்கள் இல்லறத்தையும், வினையாற்றலையும் சரியான பங்கீட்டிலேயே கையாளுவார்கள் என்பதையும் உணர்த்துகிறார் வள்ளுவர்.

கம்பர் அரசியல் படலத்தில் கூறுவதையும் பார்க்கலாம். மகளிர் காரணமாக, ஆடவர்க்கு மரணம் ஏற்படும் என்று கூறும் என்று வாலியை எடுத்துக்காட்டாகக் கூறி, பிறகு தயரதனும் இராமனும் அது காரணம்பற்றியே அல்லலுற்றதையும் உணர்த்துகிற பாடலிது.

"மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்” என்றல்,
சங்கை இன்று உணர்தி; வாலி செய்கையால் சாலும்; இன்னும்,
அங்கு அவர் திறத்தினானே, அல்லலும் பழியும் ஆதல்
எங்களின் காண்டி அன்றே; இதற்கு வேறு உவமை உண்டோ?" (கம்ப.அரசியல்.33)

தமிழ் இணையக் கல்விகழகத்து இணையதளத்து கம்பராமாயண உரையில், இப்பாடலுக்கு விளக்கவுரை இவ்வாறு அளிக்கப்பட்டுள்ளது.

பிறர் மனைவியை விரும்புவதால் மரணம் ஏற்படும் என்பதை வாலி,
சுக்கிரீவன் மனைவியை விரும்பி அதனால் இறக்க நேரிட்டால் அறியலாம்.
எங்களில் என்றது மனைவி சொல்லைக் கேட்டு உயிர் துறந்த தயரதனையும்
உளப்படுத்திக் கூறியதாகும்.  அல்லலும் பழியும் ஆதல் – தயரதன்
 கைகேயிக்கு வரம் அளித்துத் துன்புற்றுப் பழிக்கஞ்சி இறந்தான்.  சீதையின்
சொல்லைக் கேட்டுப் பொன்மானைத் துரத்திச் சென்றதால் மனைவியைப்
பிரிந்து வருந்திப் பிறர் கூறும் பழிக்காளானான் இராமன்.  "சீதை என்று
 ஒருத்தியால் உள்ளம் தேம்பிய பேதையேன்" (8772), "எம்பி வாய்மையான் 
தூயன உறுதிகள் சொன்ன கொல் கொளேன் போயினென்; பெண் உரை
மாறாது போகலால் ஆயது.  இப்பழியுடை மரணம்"(8773); "பெண்மேல் 
வைத்த காதலின் இப்பேறுகள் பெற்றேன்" (8651) என இராமனே பின்னர்
வருந்திக் கூறுவன காண்க.  இலக்குவனும் சீதை கூறிய சுடுமொழியால் அஞ்சி
 இராமனைத் தேடிச்சென்றதால் அல்லல்களே ஏற்பட்டன.  எனவே,
 மகளிர்மாட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது 
உணர்த்தப்பட்டது.

"தூமகேது புவிக்கு எனத் தோன்றிய, வாம மேகலை
 மங்கையரால் வரும், காமம் இல்லை எனின், கடுங்கேடு எனும் நாமம் இல்லை;
நரகமும் இல்லையே" (1427) என்பது வசிட்டர் கூறிய அறிவுரை.  மாந்தர் 
என்பது ஆடவர்க்கும் மகளிர்க்கும் பொதுவான சொல்லாயினும் இங்கே
 ஆடவரைக் குறித்தது, ‘பெண்ணிற் பெருந்தக்க யா உள’ (குறள் 54) என
 அறத்துப்பாலில் கூறிய வள்ளுவர், பொருட்பாலில் பெண்வழிச் சேறல் (அதி.
91) என ஓர் அதிகாரமே வகுத்து எச்சரித்துள்ளார்.  தாரையைப் படைத்த
 கம்பரே இங்கும் பேசுகிறார் என்பது எண்ணுதற்குரியது.   கம்பர் தம் மகன் அம்பிகாபதியின் காதல் கதையின் காரணமாகவும் இவ்வாறு செய்திருக்கக்கூடும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனிக் காமத்தான் வருவன நேரே பகையல்லவாயினும, ஆக்கம் சிதைத்தல் அழிவு தலைத்தருதல் என்னும் தொழில்களால் பகையோடு ஒத்தலின், பகைப்பாற்படுவனவாம்; ஆகலான், அவற்றைப் பகைப்பகுதியது இறுதிக்கண்கூறுவான் தொடங்கி ,முதற்கண் பெண்வழிச் சேறல் கூறுகின்றார்.அஃதாவது, தன்வழி ஒழுகற்பாலளாய இல்லாள் வழியே தான் ஒழுகுதல் .]
மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம். (மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது, அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்ல விடாமையின், விடற்பாற்று என்பதாம்.).

மணக்குடவர் உரை
மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்: யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை. இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி அவர்தம்மையே காதலிப்பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.

மு.வரதராசனார் உரை
கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை
மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு

குறள் 910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
எண் - எண்ணிக்கை; கணக்கிடுதல்; எண்ணம்; ஆலோசனை; அறிவு; மனம்; கவலை; மதிப்பு; இலக்கம்; கணக்கு; சோதிடநூல்; இலக்கியம்; வரையறை; தருக்கம்; மாற்று; மந்திரம்; அம்போதரங்கம்; எளிமை; வலி; எள்.

சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.
சேர்ந்த - இணை / இணைந்த, புணர்ச்சி

நெஞ்சத்து - மனதிற்கு, அகதிற்கு
இடன் - அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம் இருப்பவன்.
உடையார்க்கு - உடையவருக்கு
எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும், Always. See ஞான்று

பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

சேர்ந்து - இணை / இணைந்த, புணர்ச்சி
ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை
இல் - இல்லை

முழுப்பொருள்
எந்த ஒரு செயலையும் வரையறைக்கு உட்பட்டு தன் அறிவை பயன்படுத்தி சிந்தித்து செயல்படும் மனதை உடையவர் எந்த காலத்திலும் பெண் (மனைவியின்) சொல் படி மட்டும் கேட்டு பெண்ணின் அனுமதி மட்டும் பெற்று ஒரு செயலை செய்யும் அறிவிலியான பேதைமை முட்டாள்தனத்தை செய்ய கூடாது.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - கருமச்சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு; பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும உண்டாகாது. ('இடன் இல் பருவத்தும்' (குறள்-218) எனவும், 'இடன் இன்றி இரந்தோர்க்கு' (கலித்.பாலை.1) எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. இளமைக்காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும'¢ என்றார். அப்பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம்மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - வினைச் சூழ்ச்சித் திறனுடைய உள்ளத்தையும் அதனாலுண்டான செல்வத்தையும் உடையவர்க்கு;பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனைவியொடு கூடுதலாலேற்படும் பேதைமை ஒருகாலத்தும் உண்டாகாது.

இவ்வுலகில் வாழ்வதற்கு எல்லாவகையிலும் இடந்தருவதால் செல்வம் இடனெனப்பட்டது. இடனில் பருவத்தும் (குறள்.218) என்று ஆசிரியர் வேறிடத்துங் கூறுதல் காண்க. இளமைக் காலத்தையும் உள்ளடக்குமாறு 'எஞ்ஞான்றும்' என்றார். பேதைமையாவது விழைதல்,தாழ்தல், அஞ்சுதல், ஏவல் செய்தல், அறம் பொருள் கைவிடுதல் ஆகியவற்றிற்கு ஏதுவான அறியாமை, பெண்வழிச் சேறலால் ஏற்படுங் கேடுகளெல்லாம் இக்குறளால் தொகுத்துக் கூறப்பட்டன.

மணக்குடவர் உரை
எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம். எண்ணஞ்சேர்தல் - இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல்.

மு.வரதராசனார் உரை
நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை

சாலமன் பாப்பையா உரை
சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.

இல்லாளை அஞ்சுவான்

குறள் 905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
இல்லாள் - மனைவி; மருதமுல்லை நிலங்களின் தலைவியர்; வறுமையுடையவள்

இல்லாளை -  மனைவியை கண்டு / நினைத்து

அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சுவான் - அஞ்சுபவர் / பயப்படுபவர்

அஞ்சுமற் றெஞ்ஞான்றும் - அஞ்சும் + அற்று + எஞ்ஞான்றும்

அஞ்சும் - அச்சம்

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது - (அச்சம்) எப்படிக் கொள்வாயின்
ஞான்று - always

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

நல்லார்க்கு - நல்லவர்களுக்கு, நன்-மை, நற்குணமுடையோர். கற்றவர், பெரியார்,

நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான

செயல் தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

நல்ல செயல். - நல்லது செய்யும் போது

முழுப்பொருள்
மனைவியை கண்டு (நினைத்தாலே) அஞ்சுபவர் எல்லாவற்றிற்கும் அஞ்சுவார். தான் இயன்ற பொருளாயினும் செல்வாமாயினும் எல்லா செயலையும் செய்ய அச்சம் கொள்வார்.

மனைவி திட்டுவாளோ என்று எண்ணி நல்லவர்களுக்கு உதவி செய்யக் கூட அஞ்சுவார். வீட்டிற்கு நண்பர்களோ, உறவினர்களோ, சான்றோர்களோ வந்தாள் விருந்தோம்பல் செய்ய சொல்லக்கூட அஞ்சுவார். வேளாண்மை (உபகாரம், ஈகை) செய்யக்கூட அஞ்சுவார். இது ஒரு நாள் இருநாள் அல்ல எல்லா நாட்களிலும்.

உதாரணம்: முதல் மரியாதை திரைப்படத்தில் வரும் கணவர் (சிவாஜி கணேசன்) மனைவி (வடிவுகரசி) கதாபாத்திரங்கள்.






பரிமேலழகர் உரை
இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும்-தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். வேளாண்மை தொழில் செய்ய அஞ்சுவார்,

விளக்கம் 
(நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்ய வேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். "இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக" (சீவக. மண்மகள். 217) என்றார் பிறரும்.)

மணக்குடவர் உரை
மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும். இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர்
இல்லாளை அஞ்சுவான் - தன் மனைவிக்கு அஞ்சி நடப்பவன்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளைக்கொண்டும் நல்லவர்க்கு நல்லவை செய்ய எப்போதும் அஞ்சுவான்.

நல்லார்; அரசனொழிந்த ஐங்குறவர், சான்றோர், அருந்தவர்,நல்விருந்தினர் முதலியோர். நல்லவை செய்தல் விருந்தோம்பலும் வேளாண்மை செய்தலும்.விழாநாளிலும் மனைவி மகிழ்ந்திருக்கும் போதும் என்பார் 'எஞ்ஞான்றும் ' என்றார்.

"இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற்
புல்லாள னாக" என்பது சிந்தாமணி(2319).

"இருந்து முகந்திருத்தி யீரோடு பேன்வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினா ளாடிப் பழமுறத்தாற்
சாடினா டோடத் தான்."

என்னும் பிற்காலத் தௌவையா ரொருவர் தனிப்பாடல் கடைப்பட்ட பெண்ணஞ்சி நிலைமையைக் குறிக்கும்.

மு.வரதராசனார் உரை
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

சாலமன் பாப்பையா உரை
தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.