Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label பெரியாரைப் பிழையாமை. Show all posts
Showing posts with label பெரியாரைப் பிழையாமை. Show all posts

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்

 

குறள் 900
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
இறந்து -  இறந்துபடுகை; சாவு
இறந்து - இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்பொருட்பால், குடியியல், குடிமை
அமைந்த - அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

சார்பு - இடம்; பக்கம்; அடைக்கலம்; பற்று; பிறப்பு; பௌத்தர்கூறும்பன்னிரண்டுநிதானங்கள்; ஒருதலைநிற்றல்; அண்மை; கூட்டுறவு; பொருத்தம்; சார்ப்புக்கூரை; புகலிடம்; கிட்டுகை.

உடையர்  - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்

உய்யார் - நீங்க முடியாது ; தப்பிக்க முடியாது ; பிழைக்க முடியாது 

சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

சிறத்தல் - மேன்மையாதல்; மேற்படுதல்; கனத்தல்; இன்றியமையாதிருத்தல்; மங்கலமாதல்; அன்பாதல்; மகிழ்தல்; அழகாதல்.

அமைந்த அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

சீரார் - சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.

செறின் -  செறு¹-தல் - சினத்தல். அரசர்செறின் வவ்வார்(நாலடி, 134), வெறுத்தல். செற்றாரெனக் கைவிடலுண்டோ (குறள், 1245).

முழுப்பொருள்
ஒருவருக்கு மிகுதியாக அமைந்த புகலிடங்களும் துணைகளும் அடைக்கலங்களும் இருந்தாலும் அவர் பல நற்குணங்களை கொண்ட அறிவுத்திறனை கொண்ட சான்றாண்மையை கொண்ட சான்றோர் பெரியோர் சினக்கும் வகையில் நடந்துக்கொண்டால் அவரால் அதன் தீய விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது. கண்டிப்பாய் அழிவர். துன்பம் வந்து சேரும். 

சார்பு என்பதை, அரண், படை, பொருள், நட்பு என்று நான்கு வகைப்பட்டதாகக் கூறுவார் பரிமேலழகர். குணம், கல்வி, கேள்வி, அறிவுடைமை என்று நான்குவகைப்பட்டதாகக் கூறுவார் காளிங்கர்.

நாலடியார் பாடலொன்று இக்குறளின் முற்றுக் கருத்தையும் கூறுவதாக அமைந்தது. படம் விரித்தலையுடைய நாகப்பாம்பு நிலத்தின் வெடிப்பினுள்ளே உள்ளதானாலும் இடியின் கொடிய ஒலிச்சீற்றமானது தொலைவில் இருந்தும் அதற்கு அஞ்சும், அதுபோல, அருமைப்பாடுடைய பாதுகாப்பிடத்தைச் சேர்ந்திருந்தாலும், மேன்மையுடைய பெரியோர் சீறுவாராயின், ஏனைச் சிறியோர் அதற்குத் தப்பமாட்டார். அப்பாடலானது:

விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.(நாலடி.164)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சிறந்து அமைந்த சீரார் செறின் - கழிய மிக்க தவத்தினை உடையார் வெகுள்வராயின்; இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார் - அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையார் ஆயினும் அதுபற்றி உய்யமாட்டார். (சார்பு - அரண், படை, பொருள், நட்பு என இவை. அவை எல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும் ஆகலின், 'உய்யார்' என்றார். சீருடையது சீர் எனப்பட்டது. இதனால் அக்குற்றமுடையார் சார்பு பற்றியும் உய்யார் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மிகவும் அமைந்த துணையுடைய ராயினும் கெடுவர்: மிகவும் அமைந்த சீர்மையுடையார் செறுவாராயின். இது துணையுடையாராயினும் உயிர்க்கேடு வருமென்றது.

மு.வரதராசனார் உரை
மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை
மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

 

குறள் 899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
ஏந்திய - ஏந்துதல் - ஏந்து-தல் - ēntu-   5 v. [M. ēndu.] tr. 1.To stretch out the hands; கைநீட்டுதல் நீ தர நான்ஏந்தி வாங்கினேன். 2. To receive in the hands;கையிலெடுத்தல். நீரை ஏந்திப் பருகினான். 3. To holdin the hands; தாங்குதல் அடிமை படிக்கத்தைஏந்தி நின்றான். 4. To hold up, as an umbrella;to carry in the hand, as a weapon; தரித்தல் அங்குசபாசமேந்தி (சூடா.) 5. To support, as abeam; சுமத்தல் உத்திரத்தைத் தூண் ஏந்திநிற்கிறது.--intr. 1. To rise high; to be elevated; ஓங்குதல் நில னேந்திய விசும்பும் (புறநா. 2, 2). 2. To beeminent, excellent, exalted, of fine quality;சிறத்தல். ஏந்தியகொள்கையார்சீறின் (குறள், 899). 3.To be abundant; மிகுதல் (தொல். பொ 543, உரை )  

கொள்கை - கருத்து; கோட்பாடு; பெறுகை; நோன்பு; ஒழுக்கம்; நிகழ்ச்சி; இயல்பு; செருக்கு; நட்பு; பாண்டவகை.

கொள்கையார் -  கொள்கைகளைக் கடை பிடிக்கும் பெரியோர்

சீறின் - சீறுதல் - பாம்புமுதலியனசத்தத்துடன்வெகுளுதல்; குதிரைமுதலியனமூச்செறிதல்; மூர்க்கமடைதல்; தீமுதலியனமுழங்கிஎரிதல்; கோபித்தல்; அழித்தல்.

இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு

முரிந்து - முரிதல் - ஒடிதல்; கெடுதல்; சிதறுதல்; தவறுதல்; தோல்வியுறுதல்; நீங்குதல்; நிலைகெடுதல்; குணங்கெடுதல்; வளைதல்; தளர்தல்.

வேந்தனும் - வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

வேந்து - வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்.

கெடும் -  கேடு விளைவிக்கும்
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

முழுப்பொருள்
ஒழுக்கத்திலும் சீலத்திலும் அறிவிலும் தானத்திலும் தவத்திலும் சான்றாண்மையிலும் சிறந்து விளங்கும் பெரியோர்கள் உயரிய கொள்கைகள் கொண்ட சான்றோர்கள் முனிவர்கள் தவவலிமை உடையவர்கள் சினம் (கோவம்) கொள்ளும் வண்ணம் ஒருவர் நடந்துக்கொள்வார் ஆயின் (குறிப்பாக ஒரு அரசர்) அவர் எல்லா அதிகாரங்களையும் கொண்ட ஒரு நாட்டின் அரசன் ஆனாலும் சரி அவர் தனது அரசபதவியை இழந்து கெடுவான் / அழிவான்.

பரிமேலழகர் இதற்குப் புராணக்கதையொன்றை மேற்கோளிடுகிறார். நகுஷன் என்பான் தம்முடைய யாகத்தின் பலனால் இந்திரப் பதவி பெற்று ஆட்சி செய்கையிலே, அகத்தியர் வெகுள பிழை செய்தான். அதனால் தன்னுடைய இந்திரப் பதவியையே இழந்தான். அதை மனத்திலிருத்தியே இக்குறளை வள்ளுவர் செய்திருக்கக்கூடும் என்பார்

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கொள்கையினால் உயர்ந்த, நிறையுடையார்” (சம்பந்தர்.நெடுங்களம்.1)

“நினக்கொலா தாகின் ஐய நீள்நிலத் தியாவ ரேனும்
மனக்கினி யாரை நாடி வகுப்பல்யான் வேள்வி யென்னச்
சினக்கொடுந் திறலோய் முன்னம் தேசிகற் பிழைத்து வேறோர்
நினக்கிதன் நாடி நின்றாய் நீசனாய் விடுதி என்றான்” (கம்ப.மிதிலைக்காட்சி.109)

“...............பொருள் எய்திச்
செருக்கி இடையே திருவிழந்த சிறியோர் போன்ற” (கம்ப.மாரீசன்.117)


பரிமேலழகர் உரை
ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடையே தன் பதம் இழந்து கெடும். '(''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உயர்ந்த கோட்பாட்டை யுடையார் வெகுள்வராயின், இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும். இது பொருட்கேடு வருமென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை
உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

 

குறள் 898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள்.

அன்னார் - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.)
அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person

குன்ற - குன்றுதல் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

மதித்தல் - அளவிடுதல்; பொருட்படுத்துதல்; கருதுதல்; தியானித்தல்; துணிதல்; கடைதல்; கொழுத்தல்; மதங்கொள்ளுதல்; சாதல்; உப்புதல்.

மதிப்பின் - மதிப்பு -அளவிடுகை; சிறப்பிக்கை; கருத்து; கடைகை; கொழுத்திருக்கை.

குடியொடு - குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

நின்று - எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் படவரும் ஒர் இடைச்சொல்.

அன்னார் - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.)
அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person

மாய்வர் - மாய்தல் - மறைதல்; அழிதல்; சாதல்; ஒளிமழுங்குதல்; கவலைமிகுதியால்வருந்துதல; அறப்பாடுபடுதல்; மறத்தல்.

நிலத்து நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை. 

முழுப்பொருள்
மலையளவு மாட்சிமை கொண்ட பெரியோர்களை சான்றோர்களை மதித்துப்போற்றுவது ஒருவரின் கடமையாகும். அதனை செய்யாது பெரியோரை அவமதித்தாலோ அல்லது அவர்களுக்கு கேடு செய்ய நினைத்தாலோ அல்லது அவர்களின் நற்பெயரை கெடுக்க முற்பட்டாலோ அத்தகையவர் இவ்வுலகத்தில் வாழ்கிறவர் போல் தோன்றினாலும் தன் குடியோடு அழிந்து விடுவார்.

மலையளவு என்ற உவமையினால் அவர்களின் பொறுக்கும் தன்மையைச் சுட்டி, வெயிலால் காய்ந்தாலும், மழையால் நனைந்தாலும், சலியாது, மாட்சியிலே உயர்ந்து நிற்பதைக் குறிக்கிறார் வள்ளுவர்

“கெடுவான் கேடு நினைப்பான்” என்ற நிலைமொழியின் கருத்தையே கூறுகிறது இக்குறள்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
'மாதவக் குன்றினை யெதிர்ந்தனன்” (கம்ப.திருவவ.49)

பரிமேலழகர் உரை
குன்று அன்னார் குன்ற மதிப்பின் - குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்று அன்னார் குடியொடு மாய்வர் - அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியொடும் மாய்வர். (வெயில், மழை முதலிய பொறுத்தலும் சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், 'குன்றன்னார்' என்றார். 'மல்லல் மலையனைய மாதவர்'(சீவக.முத்தி-191) என்றார் பிறரும். நிலை பெற்றாற் போறலாவது, இறப்பப் பெரியராகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லை என்று கருதப்படுதல்.).

மணக்குடவர் உரை
மலைபோலப் பெரியாரைக் குறைய மதிப்பாராயின், உலகத்தின் கண்ணே நின்றாற்போலத் தோன்றுகின்றவர் குடியோடே கூடமாய்வர். குன்ற மதித்தல்- அவமதித்தல்.

மு.வரதராசனார் உரை
மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

சாலமன் பாப்பையா உரை
மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

குறள் 896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
எரியால் - எரி - நெருப்பு; வேள்வித்தீ; தீக்கடைகோல்; ஒளி; அக்கினிதேவன்; நரகம்; கார்த்திகை; புனர்பூசம்; கந்தகம்; இடபராசி; கேட்டை; வால்மீன்வகை

சுடப்படினும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

உய்வு  - உய்தி; உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும்நீங்கும்வாயில்; உய்தல்

உண்டாம் - உண்டு - உள்ளதன்மையைஉணர்த்தும்ஐம்பால்மூவிடத்திற்கும்உரியஒருகுறிப்புவினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்; uṇṭu   உள்-. [K. uṇṭu, M. Tu.uṇḍu.] v. intr. Finite verb denoting existence,used in common to all genders and personsand both numbers;

உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்

உய்யார் - நீங்க முடியாது ; தப்பிக்க முடியாது ; பிழைக்க முடியாது 

பெரியார்ப் -மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர்.

பிழைத்து - பிழைத்தல்- குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல்.

ஒழுகுவார் ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

முழுப்பொருள்
தீ என்பது ஒரு காட்டையே முற்றிலும் அழிக்கும் தன்மை வாய்ந்தது. ஆதலால் தீ ஒருவர் உடலை மிக எளிதாக அழித்துவிடும். அத்தகைய தீ ஒருவரை சுட்டால் அவர் உயிர் பிழைப்பது மிக மிக அரிது/கடினம். நெருப்பு சுட்டும் ஒருவர் பிழைக்க கூடும் ஆனால் சான்றோர் பெரியோரிடம் தவறாக நடந்துகொண்டால் அக்குற்றத்தின் விளைவான அழிவில் இருந்து தப்பிக்கவே முடியாது. 

ஏனெனில் பெரியோரின் சினம் நம்மை அழிக்கும் தன்மை வாய்ந்தது. நம்மை பற்றி முழுவதுமாக அறிந்து இருப்பர். நம்முடைய பலகீனங்கள் பெரியோர்களுக்கு தெரியும். ஆதலால் நம்மை வீழ்த்துவது அவர்களுக்கு மிக எளிது. 

தரையில் சேதம் என்றால் எல்லோருக்கும் உடனடியாக தெரிந்துவிடாது. மூடி மறைத்துவிடலாம். ஆனால் கோபுரத்தில் சேதம் என்றால் மூடிமறைக்க முடியாது. செய்தி மிக வேகமாய் பரவி விடும். ஆதலால் பெரியோரிடம் தவறாக நடந்துகொண்டால் இந்த சமூகம் அமைதியாக வேடிக்கை பார்க்காது. பெரியோரின் பகையை அஞ்சி தன் பங்கிற்கு நம்மை அவர்களிடம் இருந்து விலக்கி விடும். ஆதரவு அற்று பலம் குறையும். தனிமை படுத்தப்படுவோம். அழிவு உண்டாகும். 

இன்னா நாற்பது , “இன்னா, பெரியார்க்குத் தீய செயல்” (இன்னா.27) என்றும் “பெருமையுடையாரைப் பீடழித்தல் இன்னா” (இன்னா.28) என்றும் கூறும். பழமொழி நானூற்றுப் பாடலொன்று, இக்குறளின் கருத்தை இவ்வாறு கூறுகிறது:

ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண் காணாத வாறு. (பழமொழி.233)

இப்பாடல் சொல்லும் கருத்து. பெரியோர்களை வெகு குறைவாக மதிப்பிட்டு, இவர்கள் எம்மோடு மாறுபடுதல் கூடுமோ என்று ஆணவத்தால் நினைத்து, அறிவிற் சிறியார் தாமாக வன்மையானவும், முறையற்றனவும் செய்வதும் சாகப்போவது அறியாமல் விலங்குகள் அவை செல்லும் வழியினை அறியாதவாறு, அறிவு மயங்கலால், ஊரினுள் புகுந்து தம்முடைய உயிரையே இழந்து வருந்துவது போலாகும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - காட்டிடைச் சென்றானொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானாயினும் ஒருவாற்றான் உயிருய்தல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் - தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார், எவ்வாற்றானும் உயிருய்யார். (தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறலின், இடையே உய்யவும் கூடும். அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தான் நிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின், (குறள்-6) அது கூடாதாகலான், அதற்கு ஏதுவாய பிழை செய்யற்க என்பதாம்.).

மணக்குடவர் உரை
தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்: பெரியாரைப் பிழைத்தொழுகுவார் உய்யார். இது முனிவரைப் பிழைத்தலினால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட உயிர்க்கேடு வருமென்று கூறினார்.

மு.வரதராசனார் உரை
தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை
தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்

குறள் 895
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
யாண்டுச் - எங்கு; எப்பொழுது; ஆண்டு

சென்று - செல்லும் - செல்லுதல் -  நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

யாண்டும் - எப்போதும்; எவ்விடத்தும்.

உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர்.

ஆகுதல் - ஆவது என்பது; ஆதல்; ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆகார் - விருப்பத்திற்கு உரியவராக இல்லாது இருத்தல் ; வளரமாட்டார்

வெந்  - வெம் - வெம்மை -வெப்பம், கடுமை; சினம்; விருப்பம்; வீரம்.

துப்பின் - துப்பு - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது.

வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்.

செறல் - கோபம்; கொல்லுகை.

செறப்பட்டவர் - கோபத்திற்கு உள்ளானவர்

முழுப்பொருள்
மிக பெரிய வலிமையுடைய அரசனின் கோபத்திற்கு ஆளான ஒருவர் எங்கு சென்றாலும் எப்பொழுதும் வாழமுடியாது. ஆதலால் பெரியோரிடம் பிழை செய்யாது இருத்தல் வேண்டும். அரசரின் கோபம் பெரிய தவறுகளுக்கு வரும் என்பதை நாம் சொல்லித்தான் அறியவேண்டும் என்றில்லை.

அவர்கள் எங்குசென்றாலும் வாழ முடியாது என்பதற்கு காரணம்: இவர்களை பற்றிய செய்தி (அதாவது இவர்கள் செய்த தவறுகள்) மிக வேகமாக எல்லா இடங்களுக்கும் பரவிவிடும். ஆதலால் இவரை பற்றி எல்லோரும் அறிந்து இவரிடம் பழகி அரசரின் கோபத்திற்கு ஆளாக மாட்டார். மேலும் பெரிய தவறு செய்வோரிடம் பழக்கம் வைத்துக்கொள்வதை அடிப்படையாகவே யாரும் விரும்பமாட்டார்.

கி.வா.ஜவின் ஆராய்ச்சியுரை, இக்குறளோடு முற்றும் ஒப்பதாய சீவக சிந்தாமணிப் (1089) பாடல் வரியினைச் சுட்டுகிறது: “வேந்தொடு மாறு கோடல் விளிக்குற்றா தொழிலதாகும்”. அதாவது அரசனோடு மாறுபட்ட கருத்தில் நிற்பது கேட்டினை அடைய எண்ணுபவரது தொழிலாகும் என்கிறது இவ்வரி.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்குவெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் -அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார். (இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின்வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங்கொடுப்பாரில்லை, உளராயின், இவர் இனி ஆகார்என்பது நோக்கி அவனொடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வெளவுதற்பொருட்டும் கொல்வர், அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடையஅரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்: வெய்ய வலிமையுடைய வேந்தனால் செறப்பட்டார். இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.

சாலமன் பாப்பையா உரை
பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

குறள் 894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்.
கூற்றம் - பகுதி; கொடும்பகைவன், யமன்; அழிவுண்டாக்குவது; நாட்டின்பகுதி; சொல்.

கூற்றுதைத்தான் - யமனைக்காலால்உதைத்தசிவன்.

கூற்றத்தைக் - யமனை

கையால் - கைகளினால்

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

விளித்தல் - அழைத்தல்; சொல்லுதல்; பாடுதல்; அழித்தல்; கொல்லுதல்; பேராரவாரஞ்செய்தல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அற்றால் - தன்மை அறிந்து

ஆற்றுவார்க்கு - ஆற்றுவார் - செயலை செய்வார்கள் , எடுத்த செயலை தன் அறிவார், மிகுந்த முயற்சியால் வெற்றிகரமாக முடிப்பவர்,  தவம் ஆற்றுபவர்கள் / நோன்பு இருப்பவர்கள் , செய்வார்கள்; வலிமை அடைய செய்வார்கள்; உண்மையை தேடுவார்கள்;

ஆற்றாதார் - செயலை செய்யாதவர்கள்

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
செயல்களை ஆற்றுபவர்கள், தவம் ஆற்றுபவர்கள், வலிமையுடையவர்கள் என கருதப்படும் ஆற்றுவோர்க்கு ஒரு செயலையும் ஆற்றாத வலிமையில்லாதவர்கள் துன்பம் தரும் செயல்களை இகழ்ச்சி தரும் செயல்களை செய்தால் அது கீழ்மையாகும். அத்தகைய கீழ்மையை செய்வது அழிவைத் தரும் கொடும் பகைவனை (யமனை) யானையின் துதிக்கையால் விளித்து/அழைத்து அழிவைத் தேடிக்கொள்வதுப்போல் ஆகும்.

இக்கருத்தை ஒரு பழமொழிப் பாடல் அழகாகக் கூறுகிறது. அப்பாடல்:

வெஞ்சின மன்னவன் வேண்டாத வேசெயினும்
நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா
என்செய் தகப்பட்டக் கண்ணும் எழுப்புபவோ
துஞ்சு புலியைத் துயில். (பழமொழி 33)

கொடும் சினத்தை உடைய அரசன், தமக்குக் கீழே வாழ்வார்க்குத் தீமையே செய்தாலும், அவன் மனத்தில் கறுவுகொள்ளத் தக்கனவற்றை, அவன்கீழ் வாழ்வார் சிறிதளவுகூட செய்ய வேண்டாம். எல்லாத் துன்பங்களையும் தமக்குச் செய்யுமென்ற புலி, தம்மிடத்து அகப்பட்டாலும், யாராவது, உறங்குகின்ற புலியை எழுப்புவார்களோ? என்கிறது இப்பாடல்.

“எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக்
கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் - சொல்லின்
....... எருக்கு, மறைந்தியானை காய்ந்து விடல்” (பழமொழி 376)

“”காலனை அளியன் தானே கையினால் விளிக்கும் என்னா” (சீவக.2148)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் - மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

மு.வரதராசனார் உரை
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.

கெடல்வேண்டின் கேளாது செய்க

குறள் 893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
கெடல் கெடு - கேடு; வறுமை; தவணை; எல்லை.

கெடல் கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

வேண்டின் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

கேளாது - -, 9 v. [K. M.kēḷ.] tr. 1. To hear, hearken, listen to;செவிக்குப் புலனாக்குதல். சொல்லுநபோலவுங் கேட்குநபோலவும் (தொல். பொ 513). 2. To learn, be instructed in; பாடங்கேட்டல் ஒரு குறி கேட்போன்(நன். பொது 42). 3. To ask, inquire, question,catechise; வினாதல் என்னை நீ கேட்கையாலே (கைவல். 20). 4. To investigate; விசாரித்தல் களவு போனமை எங்ஙனே என்றுகேட்டு (Insc.) (சோழவ. 66).5. To request, solicit, crave; வேண்டுதல் படிக்கப்புத்தகம் தருமாறுகேட்டான். 6. To be informed of;கேள்விப்படுதல். தருதி நீ யெனக் கேட்டேன் (பாரத.கன்ன. 238). 7. To require, demand, claim; உரிமை கொண்டாடிக் கொடுக்கச்சொல்லுதல். 8. Toavenge, punish; தண்டித்தல் தீயரைத் தெய்வங்கேட்கும். 9. To effect a remedy, cure, as medicine;நோய்முதலியன நீக்குதல் செயச் செய வூறுகேளாது. . . அரவுகான்ற வேகம் மிக்கிட்டதன்றே (சீவக. 1274).10. To bid, offer, inquire the price of; விலைகேட்டல். 11. To accept, agree to; ஏற்றுக்கொள்ளுதல் கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் (குறள், 643

செய்க - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

அடல் - வலிமை; வெற்றி போர் கொலை பகை மீன்வகை.

வேண்டின் -வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

ஆற்றுதல் - āṟṟu-   5 v. intr. 1. To becomestrong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. Tobe sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 101).--v. tr. 1. To

ஆற்றுபவர் - வலிமையானவர்

கண்  - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

முழுப்பொருள்
ஒருவர் கெடவேண்டும் என்று நினைத்துவிட்டால் யாரையும் (அதாவது பெரியவர்களை, அனுபவசாலிகளை, சான்றோர்களை, அறிஞர்களை) கேட்காமல் (அவர்களிடமும் விசாரிக்காமல், விவாதிக்காமல்) செய்தாலே போதும். அப்படி கேட்காமல் செய்தால் அவர்கள் கெட்டுப்போவார்கள்.  அதுவே ஒருவர் அழியவேண்டும் என்றால் தான் பழகுகின்ற பெரியவரிடத்தே சான்றோரிடத்தே தவறு செய்தாலே போதும். அவர்கள் அழிந்து விடுவார்கள்.

ஏன் கெட்டுப்போவார்கள் எனில் அனுபவம் இல்லாமல் ஒரு காரியத்தை செய்யும் பொழுது அதில் தவறுகள் ஏற்பட பல வாய்ப்புகள் உண்டு. பிறரை ஆலோசிக்காமல் செய்தால் அந்த தவறுகளில் இருந்து தப்பிக்க முடியாமல் கெட்டுப்போவார். இடர்கள் வந்த பின்பு சென்று பெரியவரை ஆலோசிப்பது பல நேரங்களில் தாமதமாகிவிடும்.  இழந்தவை இழந்தவையே.

அதுவே பெரியோரிடத்தில் இருக்கும் பொழுது தவறு செய்தால் அழிந்துவிடுவார்கள். தவறு செய்தால் அதனை திருத்துவதற்கு தானே பெரியோர் இருக்கிறார்கள். அப்படி என்றால் நாம் எப்படி அழிந்து போவோம்? ஒரு செயலை செய்யும் பொழுது தவறு வந்தால் அது இயற்கை.  பெரியோரிடம் கேட்டு அச்செயலை செய்தாலும் தவறுகள் நடப்பதும் இயற்கையே. ஆனால், பெரியோரிடம் விவாதித்தும், கேட்டும் கற்றுணர்ந்தும் நாம் செய்யாமல் (அல்லது கற்றுணராமல்) குற்றம் இழைத்தால் அவர்களை காப்பாற்ற முடியாது. அவர்கள் அழிந்து போவார்கள். அத்தகையவர்களை பெரியோர்களும் இகழ்வர்.

உதாரணமாக மகாபாரதத்தில் கர்ணன் தான் பிராமணன் என்று விஸ்வாமித்ரரிடம் பொய் சொல்லி ப்ரம்மாஸ்திரம் தன்னை கற்றுக்கொள்வான். ஆனால் பெரியோரிடம் பொய் சொல்வது இழுக்கு. விஸ்வாமித்ரர் உண்மையை அறிந்த பின்பு கர்ணனுக்கு சாபம் இடுவார். அதனால் பிரம்மாஸ்திரம் பயனற்றதாகிவிடும்.  குருஷேத்திரத்தில் அவன் உயிரும் அழியும்.  அதேபோல் துரியோதனன் பெரியோர் (சான்றோர் - பீஷ்மர், கிருஷ்ணன்) சொல்லை கேட்காமல் பகையை வளர்த்து போரை உருவாக்கி இறுதியில் போரிலே மாய்வான். அதுவே பாண்டவர்களில் தம்பி மார்கள் எல்லோரும் அண்ணன் சான்றோன் தருமனின் பேச்சை மதிப்பார்கள், பாண்டவர்களும் கிருஷ்ணன் சொல்லையும் மற்ற சான்றோர் சொல்லையும் கேட்டு நடப்பார்கள். அதனால் அவர்களுக்கு கேடு நடக்காது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர்மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாதுசெய்க - தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதிநூலைக் கடந்து செய்க. (அப்பெரியாரைக் 'காலனும் காலம் பார்க்கும் பாராது -வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய - வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்' (புறநா.41) என்றார் பிறரும்.நீதி நூல் 'செய்யலாகாது' என்று கூறலின், 'கேளாது' என்றார்.).

மணக்குடவர் உரை
தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க. தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க.

மு.வரதராசனார் உரை
அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.

பெரியாரைப் பேணாது ஒழுகிற்

குறள் 892
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
பெரியாரைப் - பெரியார் - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர்.

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணாது - போற்றாமல், மதிக்காமல், பாதுகாக்காமல், பொருட்படுத்தாமல்

ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

ஒழுகின் - நடந்துக்கொள்ளுதல்

பெரியாரால் பெரியார் - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர்.

பேராழி  - பெருங்கடல்.

பேர் - pēr   adj. [used as a prefix.] Great, large, excellent, principal, பெரிய. See பெருமை.

பேர் - pēr   கிறது, ந்தது, பேரும், பேர, v. n. To become loose, to be detached, சிதைய. 2. To leave, depart, remove, to go away, நீங்க. For other meanings, see பெயர், v.

பேரா - பெரிய; நீங்காத

இடும்பை -  துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
வயதால் பெரியோர் அன்று, ஞானத்தாலும், குணத்தாலும், பண்பாலும், அனுபவத்தாலும் பெரியோர்களை நாம் பேண வேண்டும் - அதாவது அவர்களுக்கு மதிப்பு செலுத்த வேண்டும், அவர்களை போற்ற வேண்டும், பொருட்படுத்த வேண்டும். அது இல்லாது அவர்களை அவமதித்தால் அது நமக்கு நீங்காத பெரிய தீமையை தரும். உதாரணமாக பெரியோர்களுடைய ஞானம். இந்த ஞானம் இந்த பிறவியில் பெற்ற ஞானம் மட்டும் அன்று அது பல நூற்றாண்டுகளின் பெருந்தொகை, விவேகம் ஆகும். இவர்களை மதிக்காவிட்டால் பிறகு அந்த ஞானம் நமக்கு கிடைக்காது தக்க நேரத்தில் துன்பத்தை கொடுக்கும். இந்த ஞானம் அடுத்த தலைமுறையினருக்கு கிடைக்காமல் போனால் இவர்கள் இந்த ஞானத்தை அடைய இன்னும் ஒரு பிறவி அல்லது அதற்கு மேலும் செலவிட வேண்டியது இருக்கும் ஏனெனில் ஞானம் என்பது ஒரு தொடர் விவாதத்தின் விவேகம் ஆகும். அத்தொடர் அறுபட்டால் அதனை முதலில் இருந்து வளர்க்க நேரிடும். பெரியோர்களை மதித்தால் இந்த ஞானம் இப்பிறவியிலேயே கிடைக்கும். இல்லையென்றால் அவ்வளவு எளிதில் நீங்காத துன்பத்தில் உழன்று காலத்தை செலவு செய்வர்.

நாலடியாரில், இதே தலைப்பில் உள்ள அதிகாரத்தில் இக்குறள் கருத்தினையொட்டிய பாடல் இதோ.

பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் – வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட
பேர்க்குதல் யார்க்கும் அரிது. (நாலடி 161)

இக்குறள் சொல்லும் கருத்து, மாணுடை பெரியோர், தம்மை மதியார்க்கு துன்பத்தை வஞ்சத்தால் விளைவிப்பார் என்பதல்ல. அவர்க்கு இழைக்கப்படும் தாமாகவே இழைப்பவர்க்கு வந்துறும் என்பதே இக்குறள் சொல்லும் கருத்து. அதேபோல், மாண்பிலார்க்கு செய்யப்படும் அவமதிப்பு துன்பத்தைப் பொதுவாகத் தருவதில்லை என்றும் உணரலாம்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பொறுப்பர்என் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின்
..................பேர்க்குதல் யார்க்கும் அரிது” (நாலடி.161)

“தீயன கொடியவள் செய்த செய்கையை
நாயினேன் உணரின்நன் னெறில் நீங்கலாத்
தூயவர்க் கிடரிழைத் துழலும் தோமுடை
ஆயவர் வீழ்கதி அதனில் வீழ்கயான்” (கம்ப.பள்ளிபடை.116)

பரிமேலழகர் உரை
பெரியாரைப் பேணாது ஒழுகின் - ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின், பெரியாரால் பேரா இடும்பை தரும் - அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவர்க்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும். (அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம், அவையெல்லாம் தாமே செய்துகொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப.).

மணக்குடவர் உரை
பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின் அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும். இது முனிவரைப் போற்றா தொழியின் அது குற்றம் பயக்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை

குறள் 891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
[பொருட்பால், நட்பியல், பெரியாரைப் பிழையாமை]

பொருள்
ஆற்றுவார் - எடுத்த செயலை தன் அறிவார், மிகுந்த முயற்சியால் வெற்றிகரமாக முடிப்பவர்
ஆற்றல் -  சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

இகழ்ச்சி - அவமதிப்பு; குற்றம் விழிப்பின்மை; வெறுப்பு
இகழாமை - அவமதிக்காது இருத்தல்

போற்றுதல் - துதித்தல், வணங்குதல், பாதுகாத்தல், வளர்த்தல், பரிகரித்தல், கடைப்பிடித்தல், உபசரித்தல், விரும்புதல், கருதுதல், மனத்துக்கொள்ளுதல், கூட்டுதல்
போற்றுவார் - நம்மை பாதுகப்பார்
போற்றலுள் - வணங்குதலில்
எல்லாம் - எல்லாவற்றிலிலும்
தலை - சிறந்தது

முழுப்பொருள்
ஒரு செயலை எடுத்து அதற்கு தேவையான விடாமுயற்சியினை எடுத்து வெற்றிகரமாக முடிப்பவரே ஆற்றுவார் ஆவார். அவருடைய ஆற்றலை அதாவது வலிமையை குறைத்து மதிப்பிடவோ இகழவோ கூடாது.

அதுபோல நம்மை பாதுகாக்கும் பெரியோர்களை (சான்றோர்களை) இகழாது போற்றுவதே (பாதுகாப்பது, வணக்குவதே) சிறந்ததாகும். (அல்லது) நம்மை பாதுகாத்து கொள்ள இப்பெரியோர்களுடைய தயவு பின்நாளில் தேவைபடக்கூடும். ஒருவேளை அவர்களை இகழ்ந்திருந்தால் அவருடைய தயவு கிடைக்காமல் போகும். நம்மை காத்துக்கொள்ளவதில் சிறந்தது பெரியோரை இகழாது போற்றுவது ஆகும். 

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண் தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது. (ஆற்றல் என்பது பெருமை,அறிவு,முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொதுவகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்ட வினை முயற்சிகளை யெல்லாம் வெற்றியாக முடிக்கவல்லவரின் வல்லமையைத் தாழ்வாக மதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தமக்குக் கேடுவராமற் காத்துக் கொள்வார் செய்யுங் காவல்க ளெல்லாவற்றுள்ளும் தலைமையானதாம்.

'ஆற்றல்' என்பது ஆக்கத்திற்கும் அழித்தற்கும் ஏதுவான பல்வகை வலிமைகள். இகழ்ந்தவிடத்து அழித்துவிடுவார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், படை,அரண்,நட்பு முதலிய பிறகாவல்கள் அழிக்கப்பட்டு விடுமாதலின் 'தலை' என்றும், கூறினார். இதனால் பெரியாரைப் பிழையாமையின் இன்றியமையாமை கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழாதொழிதல், தம்மைக் காப்பார்க்குக் காவலாகிய எல்லாவற்றுள்ளும் தலையான காவலாம். இது பெரியாரைப் பிழையாமையால் வரும் பயன் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை
எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

வகைமாண்ட வாழ்க்கையும்

குறள் 897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் 
தகைமாண்ட தக்கார் செறின்.
[பொருட்பால், நட்பியல், பெரியாரைப் பிழையாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வகை - வலிமை, வாழ்க்கைக்குரிய பொருள் முதலியன, வணிகமுதல் ( the principal stock in trade, முதல்.); இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள், கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை

மாண் - Beinggreat, being worthy; மாட்சியாகை; மாண்டூகம்(One of the thirty-two Upanishads. See உபநிடதம்.),
மாண்டல் - மாட்சிமைப்படுதல்; இறத்தல்

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

வகைமாண்ட வாழ்க்கையும் - வலிமையாக, வாழ்க்கைக்குரிய பொருள்களை (மற்றும் சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின) ஆடம்பரமாக (முதல் ரகத்தில்) வைத்துக்கொள்வதை வாழ்க்கையின் மாட்சியாக கருத்துதல்

வான் - s. air, ether, sky, ஆகாயம்; 2. rain, மழை; 3. cloud, மேகம்; 4. adj. great, excellent, பெருமையான.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

வான்பொருளும் - பெருமைப்படக்கூடிய பொருள்கள்

என்னாம் - என்னவாம் ? என்ன பயன் ? (அப்பொருள்களுக்குப் பயன் இல்லை)

தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.

தகைமாண்ட - தன்மை, தகுதி, பெருமை, குணம் கொண்ட மதிப்பிற்குரிய 

தக்கார் - மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர்

செறின் -  செறு¹-தல் - சினத்தல். அரசர்செறின் வவ்வார்(நாலடி, 134), வெறுத்தல். செற்றாரெனக் கைவிடலுண்டோ (குறள், 1245).

முழுப்பொருள்
தன்மை, தகுதி, பெருமை, மதிப்பு, ஒழுங்குப் போன்ற நற்குணங்கள் கொண்ட மேன்மக்களின் சினத்திற்கு ஒருவர் உண்டானால் அவர் எத்தகைய வலிமையான வாழ்க்கை அதாவது வாழ்க்கைக்குரிய எல்லா பொருள்களும் சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின், மற்றும் வான்ப்போல் பெருமைக்குரிய பொருள்களை வைத்து இருந்தாலும் அவற்றுக்கு எப்பயனும் பொருளும் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

உதாரணமாக ஒரு பெரிய பணக்காரர் ஒரு நிகழ்ச்சிக்கு பிறரை காக்க வைக்கும் படியாக தாமதமாக சென்றால் அது மற்றவர்களை எரிச்சலடைய செய்யும். நான் வர தாமதமாகிறது நிங்கள் நிகழ்ச்சியை துவங்குகள். நாங்கள் வந்து சேர்ந்துவிடுகிறோம் என்று கூறலாம்.  அதேப்போல், பொருள் வைத்து இருக்கும் ஒருவர் பொருள் இல்லாத ஒருவரிடம் குறிப்பாக அறத்துடனும் ஒழுக்கத்துடனும் இருக்கும் ஒருவரிடம் சென்று பிழைக்க தெரியாதவனாக இருக்கிறாயே என்று கூறினால் அது அடுத்தவரின் சினத்தை சம்பாதிப்பது போன்று.

ஆத்திச்சூடி
சையெனத் திரியேல் - பெரியோர் "சீ" என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே .
மேன்மக்கள் சொல் கேள் - நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட .
தக்கோன் எனத் திரி - பெரியோர்கள் உன்னை நல்லவன் என்று புகழும்படி நடந்துக்கொள். .
சான்றோர் இனத்து இரு - அறிஞர்களின் குழுவிலே இரு
பெரியாரைத் துணைக் கொள் - அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள் .

பரிமேலழகர் உரை
தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்? 

விளக்கம் 
(உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் சேறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித் தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தகைமாண்ட தக்கார் செறின்- ஆக்க வழிப்பிற் கேதுவாகிய ஆற்றல் மாட்சிமைப்பட்ட மாதவர் அரசரை வெகுள்வாராயின், வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்ஆம் - ஆறுறுப்புக்களும் மாட்சிமைப்பட்ட அவர் அரச வாழ்வும் அவர் தமக்குச் சொந்தமாக ஈட்டிவைத்த பெருஞ் செல்வமும் என்ன ஆகும்! ஒரு நொடியுள் வெந்து சாம்பராய் விடுமே!

படை,குடி,நாடு,கூழ்,அமைச்சு, அரண் என்பன ஆறுறுப்புக்கள். நட்பு என்பது அரசனின் வலிமையை மிகுப்பதேயன்றி நாட்டுறுப்பன்று.

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் 
தகுதியான் வென்று விடல்." (குறள்.158)


என்று இல்லறத்திற்கும்,
"இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை." (ஷ.310)


"இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்." ( .314)

என்று துறவறத்திற்குங் கூறியிருப்பதால், 'செறின்' என்பது முற்றத் துறந்த முழு முனிவர் செறாமை தோன்ற நின்றது. 'வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு னென்னாம்' என்றது, அருந்தவரின் பெருந்திறலை யுயர்த்தி அரசர் தம் செல்வச் செருக்கால் அவருக்குத் தவறு செய்யாதவாறு எச்சரித்ததே யன்றி வேறன்றென வுணர்க.

மு.வரதராசனார் உரை
தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.

மணக்குடவர் உரை
எல்லா வகையானும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்: பெருமையால் மிக்க தகுதியுடையார் செறுவாராயின். எல்லா வகையுமாவன சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின 

சாலமன் பாப்பையா உரை
குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?.

English Meaning - As I taught a kid - Rajesh
One's luxurious /pompous lifestyle, sky high wealth doesn't matter (is insignificant) if we irk (or earn the wrath of) scholars / elders / respectable people. Wealth/money is essential in running day to day life. But it doesn't mean, if we have lot of money, we can do things that irritates others or disrespect others. We have to be humble irrespective of the money we have. By the way earning money illegitimately (through unethical means) will automatically irk others and they will not be respected irrespective how much money they have.

Questions that I ask to the kid
Does luxurious lifestyle or sky high wealth matter in front of scholars?
If we irk scholars would our pompous lifestyle or wealth save us? Why?