Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label பேதைமை. Show all posts
Showing posts with label பேதைமை. Show all posts

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

 

குறள் 840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
கழா - அசுத்தத்தை மிதித்துவிட்டு கழுவாமால்
அக் - அந்த
கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

பள்ளி - கல்விகற்குமிடம்; அறை; அறச்சாலை; இடம்; சிற்றூர்; இடைச்சேரி; நகரம்; முனிவர்இருப்பிடம்; சமணபௌத்தக்கோயில்; அரசருக்குரியஅரண்மனைமுதலியன; பணிக்களம்; மக்கட்படுக்கை; கிறித்துவக்கோயில்; பள்ளிவாசல்; தூக்கம்; விலங்குதுயிலிடம்; சாலை; வன்னியச்சாதி; குள்ளமானவள்; குறும்பர்.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அற்றால்  - (உணவின்) தன்மை அறிந்து

வைத்தற்றால் -  வைத்ததுபோலேதான்

சான்றோர் - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

குழா - குழு -  மக்கட்கூட்டம்; மகளிர்கூட்டம்; ஆடுமாடுமுதலியவற்றின்கூட்டம்; தந்திரம்; சாதுரியச்சொல்; தொகுதி

அத்துப் - இசைப்பு; சிவப்பு செவ்வை துவர் அரைஞாண் அரைப்பட்டிகை தைப்பு; அசைச்சொல், ஒருசாரியை.

குழாஅத்துப் – குழுவினிலே

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

புகல் - புகுகை; இருப்பிடம்; துணை; பற்றுக்கோடு; தஞ்சம்; உடம்பு; தானியக்குதிர்; வழிவகை; போக்கு; சொல்; விருப்பம்; கொண்டாடுகை; பாடும்முறை; வெற்றி; புகழ்; புரையுள்ளது.

புகுதல் - அடைதல்; தொடங்குதல்; உட்செல்லுதல்; தாழ்நிலையடைதல்; ஆயுளடைதல்; ஏறுதல்; நிகழ்தல்; உட்படுதல்; அகப்படுதல்.

முழுப்பொருள்
ஒரு அசுத்தத்தை (சாணி, மலம்) மிதித்து விட்டு அக்காலை கழுவாமல் ஒரு வீட்டு அறையினுள் சென்றாலோ அல்லது ஒரு இறைவனை வழிப்படும் கோவிலுக்குள் சென்றாலோ அல்லது உறங்கும் படுக்கையின் மேல் வைத்தாலோ எப்படி இருக்கும்? மிகவும் அருவருப்பாக இருக்கும். நாம் தூய்மையை மதிக்கவில்லை என்பதை குறிக்கிறது. அது அவ்விடத்தை இழிவு செய்வதுப்போல் ஆகும். 

அசுத்ததை மிதித்துவிட்டு காலை கழுவாமல் அக்காலால் ஒரு கோவிலுக்குள் செல்வதைப்போல சான்றோர் கற்றோர் அறிஞர் கூடியுள்ள ஒரு அவையினில் அல்லது ஒரு குழுவினில் பேதையர்கள் அறிவில்லாதவர்கள் செல்வது சான்றோரை அறிஞரை அவமதிப்பதுக்கு / சிறுமைசெய்வதற்கு ஒப்பாகும். ஆதலால் தண்டிக்கப்படும். தண்டனையை நாமே தேடிக்கொள்வதற்கு ஒப்பாகும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

பேதையராய் இருக்கும் இழிவையும் பேதையர் சென்று இழிவு சேர்க்க கூடாத இடங்களையும் கூறியுள்ளார் திருவள்ளுவர்.

“கழாஅக்கால்” என்பதை இடக்கரடக்கல் என்று உணரவேண்டும். வெளிப்படையாகச் சொல்லப்படக்கூடாதவற்றை, குறிப்பால் சொல்லுவதை, இடக்கரடக்கல் என்று சொல்லுவர். மலம், சிறுநீர் போன்றவற்றை கழித்துவிட்டு உடலைத் தூய்மையாக்குதலை, “கால் கழுவுதல்” என்பது வழக்கம்.

படுக்கையில் கழுவாத கால் எப்படி தவறு ஆகும்?
படுக்கையில் கழுவாத காலை வைப்பது எப்படி உவமையாகும்? சான்றோரை படுக்கை என்கிறாரா வள்ளுவர்? 

சமணர்களின் குகைப் பள்ளிகளில் நுழைவாயிலை ஒட்டி பல இடங்களில் கல்லால் ஆன குழிகள் இருக்கும். அங்கே நீர் வைக்கப்பட்டிருக்கும். கால்கழுவாமல் பள்ளிக்குள் புகுதல் விலக்கப்பட்டிருந்தது.

ஏனென்றால் சமண அறவோர் வெறுங்கற்தரையில் படுப்பவர்கள். கழுவாத காலுடன் நுழைதல் அவர்களின் மேனியை காலால் தொட்டு அழுக்கு படுத்துவதற்கு நிகர். பெரும்பழி சேர்ப்பது. சமணர்களின் காவல்தேவர்களால் அந்தக் குற்றம் தண்டிக்கப்படும்.

இந்த ஆசாரமே பின்னர் இஸ்லாமிய மரபிலும் நீண்டு ஒளு எனப்படும் கால்கை முகம் கழுவும் சடங்காக ஆகியது. கால்கழுவாமல் பள்ளியில் நுழைதல் என்பதை ஓர் இஸ்லாமியர் எப்படிப்பட்ட பழியாகக் கொள்வாரோ அப்படித்தான் சமணர்களும் எண்ணினர்.

பேதை அறிஞர் சபையில் நுழைவதென்பது அறிஞர்களை சிறுமைசெய்வது, தனக்கு பழியும் தண்டனையும் தேடிக்கொள்வது. வள்ளுவர் கூறுவது அதைத்தான்.

மேலும்: அஷோக் உரை

நான் ஒரு குறளை எடுத்து விளக்கினேன்.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

என்ற குறளுக்கு பரிமேலழகர் “சான்றோர் அவையின்கண் பேதையாயினன் புகுதல் தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளியின்கண் வைத்தாற்போலும்” என உரை அளிக்கிறார்.

அதையொட்டி மு.வரதராசனார் முதல்  மு.கருணாநிதி வரையிலான அனைத்து உரைகளுமே ‘கழுவாத காலை படுக்கையில் வைப்பதைப் போன்றது அறிவில்லாதவன் அறிஞர் அவையில் புகுந்து பேசமுற்படுவது’ என்றே பொருள் அளித்துள்ளனர்.

அதுவே அறிஞர் வழக்கம். ஒருவரை முன்னோடி அறிஞர் என ஏற்றுக்கொண்டார்களென்றால் அனைவரும் அவரையே திரும்பத்திரும்ப பின் தொடர்வார்கள். சான்றோர் அவையில் அறிவிலாதவன் பேசுவது அச்சான்றோரை அவமதிப்பது. அதற்கும் படுக்கையில் கழுவாத காலை வைப்பது எப்படி உவமையாகும்? சான்றோரை படுக்கை என்கிறாரா வள்ளுவர்? எந்த வகையில் பொருத்தமானது இந்த வாசிப்பு?

நான் நண்பரிடம் சொன்னேன். சமணர்களின் குகைப் பள்ளிகளில் நுழைவாயிலை ஒட்டி பல இடங்களில் கல்லால் ஆன குழிகள் இருக்கும். அங்கே நீர் வைக்கப்பட்டிருக்கும். கால்கழுவாமல் பள்ளிக்குள் புகுதல் விலக்கப்பட்டிருந்தது.

ஏனென்றால் சமண அறவோர் வெறுங்கற்தரையில் படுப்பவர்கள். கழுவாத காலுடன் நுழைதல் அவர்களின் மேனியை காலால் தொட்டு அழுக்கு படுத்துவதற்கு நிகர். பெரும்பழி சேர்ப்பது. சமணர்களின் காவல்தேவர்களால் அந்தக் குற்றம் தண்டிக்கப்படும்.

இந்த ஆசாரமே பின்னர் இஸ்லாமிய மரபிலும் நீண்டு ஒளு எனப்படும் கால்கை முகம் கழுவும் சடங்காக ஆகியது. கால்கழுவாமல் பள்ளியில் நுழைதல் என்பதை ஓர் இஸ்லாமியர் எப்படிப்பட்ட பழியாகக் கொள்வாரோ அப்படித்தான் சமணர்களும் எண்ணினர்.

பேதை அறிஞர் சபையில் நுழைவதென்பது அறிஞர்களை சிறுமைசெய்வது, தனக்கு பழியும் தண்டனையும் தேடிக்கொள்வது. வள்ளுவர் கூறுவது அதைத்தான்.

பரிமேலழகர் உரை
சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும். (கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும், சான்றோர் அவையின்கண் பேதை புகுந்து கூடியிருத்தல். இது பேதை யிருந்த அவை யிகழப்படுமென்றது.

மு.வரதராசனார் உரை
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

 

குறள் 839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
பெரிது -  peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27).

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

பேதையார் - அறிவில்லாதவர்கள்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

பிரிவின் - பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

பீழை - துன்பம்

தருவது - தருதல் - கொடை,  v. noun. Giving, &c. See தா, v.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல் - இல்லை; இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
மெல்லிய நய்யாண்டியை பொதிந்து வைத்துள்ள குறள் இது. அறிவில்லாத மூடர்களுடன் நட்பு உறவு வைத்துக்கொள்வது என்பது ஒருவிதத்தில் மிகவும் நன்மைவாய்ந்தது இனிமையானதும் கூட. ஏனெனில் அந்நட்பு முறிந்தாலோ அல்லது அந்நட்பை விட்டுப் பிரிந்தாலோ நமக்கு வருத்தம் என ஏதுமில்லை. ஆதலால் அது இனிமையானது. அகத்தால் கொள்ளும் நட்பே பிரிவின் போது வருத்தை தரும். ஆனால் இதுவோ பேதையார் உடன் கொண்ட நட்பு முகத்தால்  மட்டும் கொண்ட நட்பாகும். ஆதலால் வருத்தம் இருக்காது.

இதில் என்ன நய்யாண்டி? பேதையாரை அறிவுள்ளோர் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். பேதையரின் பிரிவிற்கு வருந்த மாட்டார்கள். அவர்களை பயனற்றவர்களாகவே கருதுவார்கள். பேதையர்கள் பூமிக்கு ஒரு வித பாரமே. பேதையர்களால் எவ்வித பயனும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறது இக்குறள். 

அப்படியெனில் ஏன் அவர்களுடன் நட்புக்கொள்ள வேண்டும். சில சமயம் சில சூழ்நிலைகளில் பேதையர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள நேரிடும். அதனை முற்றிலுமாக தவிர்க்க முடியாது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அந்நட்பை நினைத்து வருந்தாதே இதனால் உனக்கு ஒரு இழப்பும் இல்லை என்று கூறுகிறார் திருவள்ளுவர். பேதையருடன் கொள்ளும் நட்பு பல நேரங்களில் இக்கட்டுகளை உருவாக்கும். எப்படி முறித்துக்கொள்வது என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை. அது தாமாகவே முறியும் போது, அதைவிட மகிழ்வைத் தருவது எதுவுமில்லை. அதன்காரணமாகவே பேதையர் நட்பு பெரிதும் இனிமையானது எனப்படுகிறது. அது தானாக முறியும் இயல்பினது என்றும் உணர்த்தப்படுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது: பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான். இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!.

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

 

குறள் 838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
மையல் - :maiyal   n. மை-. 1. Infatuationof love; காமமயக்கம். மையல் செய்தென்னை மனங்கவர்ந்தானே யென்னும் (திவ். திருவாய். 7, 2, 6). 2.Madness; பித்து. மைய லொருவன் களித்தற்றால்(குறள், 838). 3. Overwhelming pride, due torank, wealth, etc.; செல்வம் முதலியவற்றால் வரும்செருக்கு. மையல் . . . மன்னன் (சீவக. 589). 4.Must of an elephant; யானையின் மதம். வேழமையலுறுத்த (பெருங். உஞ்சைக். 37, 232). 5.Purple stramony. See கருவூமத்தை. (மலை.)

ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.

களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அற்றால்  - (உணவின்) தன்மை அறிந்து

களித்தற்றால் - போதை கொள்ள கள்ளைக் குடித்தாற்போல்

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள்
மயக்கத்தில் உள்ளவன் அல்லது பித்துப்பிடித்த ஒருவன் எதையும் நிதானத்துடன் சுயநினைவில் செய்ய முடியாத நிலையில் இருப்பான். அத்தகையவன் எதையும் சரிவர செய்ய முடியாது. அவன் மயக்கத்தைத் தரும் சோர்வைத் தரும் கள்ளை (மதுவை) உண்டால் கேட்கவே வேண்டாம். அவன் செய்பவை கெடுதலையும் அழிவையும் தரும். 

ஆதலால் அறிவில்லாதவன் ஒரு பொருளை பெறுவது என்பது பித்துப்பிடித்தவன் கள் உண்டு கேடு விளைவிப்பதுப் போல் ஆகும். இன்னும் சொல்லப்போனால் ஆக்கமுள்ள பயனை பெறுவது என்பது எட்டாத கனியாகவே இருக்கும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும். ('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முன்னே பித்தாய் மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற் போலாவதொன்று, பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து.

மு.வரதராசனார் உரை
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

குறள் 837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர்

ஆர - ஓர்உவமச்சொல்; மிக

தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.

பசி - உணவுவேட்கை; வறுமை; தீ
பசிப்பர் - பசித்திருப்பர்

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்

பெருஞ் -  பெரும் -  பெரிதான; மூத்த; இன்றியமையாத, பெருமை

செல்வம்  - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

உற்ற - உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

முழுப்பொருள்
ஒரு அறிவிலி / பேதை / மடயரிடம் அதிகமான செல்வம் வந்து சேருமானால் அவருடைய மிக உற்றார் உறவினர்கள் அந்நியர்கள் அவரிடம் அதிக நெருக்கம் காண்பிப்பர். ஏனெனில் அவர்கள் அச்செல்வத்தை அனுபவிக்க பெரும்பசியுடன் காத்து இருப்பர். பிறர் செல்வதை அனுபவிக்க நினைப்போர் (பசித்து இருப்போர்) ஒரு வித வறுமையில்  இருக்கிறார்கள் என்பதை குறிக்கவே வள்ளுவர் பசிப்பர் என்ற சொல்லை பயன் படுத்தி இருக்கக்கூடும். 

தான் ஈன்ற செல்வத்தை மட்டும் நம்பி இருப்பவர் பிறர் செல்வங்களுக்காக பசித்து இருக்க மாட்டார்கள். அவர்கள் செல்வந்தர்கள். பிறர் செல்வத்தின் மீது ஆசைகொண்டோர்களுக்கு எதுவும் எவ்வளவும் பத்தாது. அத்தகையோர் (மனதளவில்) வறுமையில் இருக்கிறார்கள். இதை அறியாத அவர்களே உண்மையில் பேதை. 

இக்கருத்தைப் பழமொழி நானூற்றுப் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்
இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ‘ஆற்றக்
கரும்பனை அன்ன துடைத்து’ (பழமொழி 286)

இப்பாடலின் பொருள்:
பெரிய மூங்கில் வில்லினையும் தன் வடிவினாலே வெற்றி கொண்ட அழகிய புருவத்தை உடையவனே! தம்மை விரும்பி வந்து சேர்ந்திருப்பவர்களுக்கும், தம்முடைய சுற்றத்தினர்களுக்கும் அவர்களை வருத்துகின்ற பசித்துன்பத்தினைப் போக்காதவர்கள், யாரோ புதியவர்களுக்கு உதவுதலானது, தன்னை மிகவும் பாதுகாத்து வளர்த்தார்க்கு உதவாது, நெடுங்காலஞ் சென்று, பின்வரும் புதியவர்களுக்கு உதவுகின்ற இயல்பினையுடைய கரிய பனைபோலும் தன்மையை உடையதாகும். அது அறிவீனர்களின் செயல்ன்றோ? இப்பாடலில் ஒருவனை விளித்துச் சொல்லுவதிலே ஒரு நையாண்டி இருப்பதை உணரலாம். அழகிய புருவம் உடையவனாய், புற அழகனாய் இருப்பவனே, ஆனால் அறிவிலாப் பேதையாக இருக்கிறாயே என்று பொருள்படுவதை உணர்க.

ஒப்புமை
“பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்றுகுக்கும்
வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து” (நாலடி.269)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய,` எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியாநிற்பர். (எல்லா நன்மையுஞ் செய்துகோடற் கருவி என்பது தோன்ற 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
அயலார் உண்ண, உற்றார் பசியாநிற்பர்; பேதையானவன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து. இதுபேதை பொருள்பெற்றால் வழங்குந்திறங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

குறள் 836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்
[பொருட்பால், நட்பியல், பேதைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பொய்படும் - பொய்படுதல் - பொய்யாதல்; பயன்விளையாதுஅழிந்திடுதல்.

பொய்-த்தல் - poy-   11 v. பொய். intr. 1.To fail, as a prediction or omen; to deceivehope, as clouds; தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 2. To prove false; தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள்போவாராம் (கம்பரா. சூளா. 41). 3. To go to ruin;கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம்(குறள், 753).--tr. 1. To lie, utter falsehood;to make false pretences; பொய்யாகப் பேசுதல்.தன்னெஞ் சறிவது பொய்யற்க (குறள், 293). 2. Todeceive, cheat; வஞ்சித்தல். நின்றோடிப் பொய்த்தல் (நாலடி, 111).

ஒன்றோ - part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682).

புனை - அழகு; பொலிவு; அலங்காரம்; அணிகலன்; கால்விலங்கு; சீலை; புதுமை; நீர், தளைக்கும்விலங்கு

பூணும் - பூணுதல் - அணிதல்; மேற்கொள்ளுதல்; விலங்குமுதலியனதரித்தல்; சூழ்ந்துகொள்ளுதல்; உடைத்தாதல்; சிக்கிக்கொள்ளுதல்; நுகத்திற்கட்டப்படுதல்; நெருங்கியிறுகுதல்.

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியாப் - உணராத ; நினைக்காத

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

மேற்கொளின் - மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் ஆற்றல் அறியாத (ஆற்றல் இல்லாத) அறிவில்லாத பேதை ஒரு செயலை மேற்கொண்டு செய்தால் அச்செயல் பொய்த்துவிடும் (தோல்வியடையும்). அதுமட்டும் இன்றி தன் கைகளையும் கால்களையும் விலங்கினால் கட்டவேண்டியதிருக்கும். அதாவது தவறு இழைத்தமைக்காக சிறைப்படுத்த படுவான் (படலாம்).

இதையே பழமொழிப்பாடலொன்று “நுணலும் தன் வாயால் கெடும்” என்கிற பழமொழியை விளக்குவதற்காகக் கூறுகிறது!

“பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்
 சொல்லாலே தன்னைத் துயர்படுக்கும் – நல்லாய்
 மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
 நுணலும்தன் வாயால் கெடும்.” (பழமொழி  184)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும் - அதுவும் புரைபடும், தானும் தளை பூணும். (புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண்டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும் பட்டுப் பிறர்க்குப் புனைபூணும். புனைபூணல் - சிறைபடுதல்.

மு.வரதராசனார் உரை
ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

சாலமன் பாப்பையா உரை
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

English Meaning - As I taught a kid - Rajesh
If a stupid person does a work without knowing how to execute the work or doesn't not have the caliber to execute a work, then the work will end up as a failure and he will also get bad reputation. That stupid person will be considered a person who did a mistake and end up in jail too because we have seen people 1) spoiling resources/environment, 2) end up killing many lives without taking safety precautions etc. 

Questions that I ask to the kid
What happens when a stupid does a work? 
What happens when one starts a work without knowing how to do the work?

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

குறள் 835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
ஒருமைச் - ஒரேதன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்றதன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒருபிறப்பு; இறையுணர்வு;

வீடுபேறு - முத்திநிலை

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

எழுமையும் - உயர்ச்சி; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

புக்கு - pukku   n. Paper-tree; பிராய். (பிங்.); pirāy   n. Paper-tree, s. tr., Streblusasper; மரவகை.
பிராயச்சித்தசமுச்சயம் pirāyaccitta-camuccayam, n. A Tamil work on pirāyaccit-tam, 17th C.; பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிராயச்சித்தங்களைக்கூறும் தமிழ் நூல்.

புகுதல் - அடைதல்; தொடங்குதல்; உட்செல்லுதல்; தாழ்நிலையடைதல்; ஆயுளடைதல்; ஏறுதல்; நிகழ்தல்; உட்படுதல்; அகப்படுதல்

அழுந்தும் - அழுக்குண்ணுதல்; உறுதியாகப்பற்றுதல்; உறுதியாதல்; பதிதல் அமிழ்தல் அனுபவப்படுதல்; வருந்துதல்;ஆழ்தல்; தோய்தல்

அளறு - குழைசேறு; குழம்பு காவிக்கல் நீர் நரகம்

முழுப்பொருள்
பேதைகளின் இயல்பு என்ன ?
ஏழுபிறவியில் புகுந்து அனுபவிக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் ஒரேபிறவியில் பல தீய செயல்களை அறிவற்றவர்கள் போல செய்து அதன் தீ பலன்களை துன்பங்களை நரகமெனும் சேற்றுப்புதையில் அமிழ்ந்து அனுபவிப்பதுபோல அனுபவிப்பர்.  சேற்றுபுதையலில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் அதற்கு அறிவும் எண்ணமும் முயற்சியும் தேவை. இவையில்லாதோர் பேதை. இவர்களை யாரும் வந்து காப்பாற்ற முடியாது. ஏனெனில் இவர்களுக்கு உதவ கைகொடுத்தாலும் அதனைப் பற்ற கைகொடுக்கமாட்டார்கள்.

துன்பங்களை குறைத்துக்கொள்ள வல்லவர் அறிவுடையோர். துன்பங்களில் உழன்று துன்பங்களை பெருக்கிக்கொள்வோர் அறிவில்லாத பேதையர்.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம். (எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புக்களிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துன்பம் உழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச்செயல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பேதை ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

மு.வரதராசனார் உரை
எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்

குறள் 834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
[பொருட்பால், நட்பியல், பேதைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஓதி - அறிவு; கல்வி; ஓதுபவன்; ஓந்தி; செறிவு; பெண்மயிர்; நெருங்கித்தாக்குகை; அன்னம்;

உணர்ந்தும் - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

பிறர்க்கு - piṟar   n. id. Outsiders, strangers;அன்னியர்

உரைத்தும் - urai-   v. tr. [K. ore, M. ura.]1. To tell, say, speak; சொல்லுதல் (திவா.) 2.To sound; ஒலித்தல் (திவா.)

தான் -படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

அடங்குதல் - அமைதல்; நெருங்குதல் கிடத்தல் கீழ்ப்படிதல் சுருங்குதல் நின்றுபோதல் படிதல் மறைதல் புலன்ஒடுங்குதல்; உறங்குதல்

அடங்காப் - கீழ்படியாத, நெருங்காத

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.
பேதையின்

பேதையின்  -  பேதையை விட 

பேதையார் - பேதை என யாரும்

இல் - யாரும் இல்லை

முழுப்பொருள்
“கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று முன்பே தெளிவாக சொல்லியிருக்கிறார் வள்ளுவர். கற்கத்தக்கவற்றைக் கண்டு, அவற்றைக் குற்றமில்லாமல் கற்று, பின்பு கற்றவற்றின் கருத்துக்கேற்ப நல்வழிகளில் நின்று ஒழுகுதல் வேண்டும்.

ஒருவர் நூல்கள் பலவற்றை கற்றுத் தேர்ந்து இருப்பார்கள், கற்றவற்றை தர்க்கத்தினாலோ அல்லது அனுபவத்தினாலோ உள்ளமும் உணர்ந்து இருப்பார்கள், தான் கற்றவற்றை பிறர்க்கு உரைத்தும் இருப்பார்கள். ஆனால் தன்னுடைய வாழ்விலே அதனை பின் பற்றாமல் அதன் அப்படி நடக்காமல் இருக்க மாட்டார்கள். அவர்களை விட அறிவில்லாதவர்கள் பேதைகள் யாரும் இல்லை. ஏனெனில் அறிவை பெறாதவர்கள் அறிவிலிகள் (பேதைகள்) ஆனால் அறிவை பெற்றும் அதன் படி ஒழுகாதவர்களை போன்ற பேதையை விட பேதை யாரும் இல்லை.

இங்கே காந்தியை பற்றி கூற வேண்டும். காந்தி நூல்கள் பலவற்றை கற்றவர் அல்ல.  அவர் லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் (Leo Tolstoy 's War and Peace ), பகவத் கீதை போன்ற சில நூல்களை மற்றும் பயின்றார். மற்றவர்களைப்போல காந்தி கற்பதில் ஆர்வம் காட்டியவரல்ல. கற்றவற்றைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக்கொள்வதில் ஆர்வம் காட்டியவர். ஆகவேதான் அவரது சமகாலப் பேரறிஞர்களின் நூற்றில் ஒரு பங்கு நூல்களைக்கூட காந்தி வாசித்ததில்லை. ஆனால் வாசித்த ஒவ்வொரு கருத்தையும் அவர் தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு பரிசீலனை செய்தார். அவற்றை தன் வாழ்க்கையில் முழுமையாகக் கடைப்பிடிக்கமுடியுமா என்று பார்த்தார். அந்தப் பிடிவாதமான சுயபரிசோதனைதான் காந்தியை உருவாக்கியது.

நிறவெறிக்கு எதிரான திட்டவட்டமான போராட்டங்கள் வழியாக காந்திய சிந்தனை காந்திக்குள் கரு வடிவம் கொண்டது. இயற்கையுடன் இணைந்த மேலான வாழ்க்கை பற்றிய இலட்சியம் வழியாக காந்தியம் ஒரு தரிசனமாக ஆகியது. உண்மையை பலப்பல பக்கங்கள் கொண்டதாக மட்டுமே அணுகவேண்டும் என்ற பிரக்ஞை வழியாக காந்தியம் நம் காலகட்டத்தின் மிகப்பெரிய தத்துவநிலைப்பாடாக மாறியது. எந்நிலையிலும் அகிம்சையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற உறுதி வழியாக காந்தியம் மானுடம் இதுவரை உருவாக்கிக் கொண்ட மிகச்சிறந்த அரசியல் நடைமுறையாகத் திரண்டுவந்தது. காந்தி செயல் வீரர் ஆனார். கர்மயோகி ஆனார். ஆனால் வாழ்வில் பல நூல்களை கற்று அதன் படி நடக்காத பல அறிவிலிகள் உலகில் உண்டு. அப்படி பேதையாக இருக்காதே.

சிறுபஞ்சமூலப் 22 பாடல் வரி, “பேதைக்குரைத்தாலும் செல்லா துணர்வு” என்கிறது.இது ஒப்புக்கொள்ளக்கூடியதே இருப்பினும், ஓதி உணர்ந்தவனே பேதை இயல்பினனாக இருப்பின், என்ன பயன்?

கம்பனின் கவிநயம், இவ்வாறு சொல்லுகிறது இக்குறளின் கருத்தையே:

நற்பெருங் கல்விச்செல்வம் நவையறு நெறியை நண்ணி
முற்பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி முற்றிப்
பிற்பயன் உணர்தல் தேற்றாப் பேதை” (கம்ப களியாட்டுப் படலம் 6)

தந்தையே ஆயினும் தானடங்கான் ஆகுமேல் (இனியவை 8)

ஓதலும் ஓதி உணர்தலும் (அறநெறி 147)



மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஓதி - மனமொழி மெய்கள் அடங்குதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும்; உணர்ந்தும் - அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவையடங்கி ஒழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்து இல்லை. (உம்மை முன்னும் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய இவற்றால் தீராமையானும், வேற்று மருந்து இன்மையானும், 'பேதையின் பேதையார் இல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பேதையது தொழில் பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.).

மணக்குடவர் உரை
நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அடங்குதலைச் செய்யாத பேதையார்போலப் பேதையார் உலகத்தில் இல்லை.

மு.வரதராசனார் உரை
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who has learnt all scholarly / professional books wholeheartedly by reciting, who has understood and realized the real meaning, who has taught and preached to others, yet if he doesn't follow or stand by his teaching is considering the stupidest because there is no stupid person than him. Because this stupidest person knows what to do through learning/teaching but doesn't do/follow.

Questions that I ask to the kid
Who is the stupidest person? why?

பேதைமை என்பதொன்று யாதெனின்

குறள் 831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
[பொருட்பால், நட்பியல், பேதைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை

என்பது - என்ரென்பது;

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

யாது? - எது?, கள், யாதி, இராக்கதன்; பிசாசு;  நினைவு.

எனின் - என்றால்; என்றுசொல்லின்; என்கையால்.
ஏதம் - துன்பம், குற்றம், கேடு
கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.
ஊதியம் - இலாபம்; கல்வி; பயன்.
போகவிடல் - செல்ல விடுதல்

முழுப்பொருள்
விவேகமற்ற செயல், அறிவற்ற செயல், மடமை என்பது என்னவென்றால் கேடு விளைவிக்க கூடிய செயல்கள்/ துன்பம் தரக்கூடிய செயல்கள் தனை பற்றிக்கொண்டு அதனை செயல்படுத்துதலுக்கு மாறாக நற்பயன் விளைவிக்கக்கூடிய செயல்களை செய்யாமல் கைவிடுதல்.  ஆதலால் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யாது கேடான செயல்களை செய்வது, சோம்பலில் திளைப்பது, போன்றது அறிவின்மை. இஃது அல்லாவற்றிலும் மடமையாகும்.

அறியாமையைத் தீர்த்துக்கொள்ள முடியும். அறிய அறிய அறியாமை வற்றிவிடும். ஆனால், பேதைமையை ? ஏதங்கொண்டு ஊதியம் தவறவிட்ட ஒவ்வோரிடத்திலும் நாம் பேதைகளாகத்தாம் நின்றிருப்போம். அதைத் தீர்ப்பதற்கு விழிப்போடிருத்தலே வழி.

அர்ஜுனன் கீதையில் கண்ணனிடம் தம்முடைய அறிவீனத்தில் பகைவர்கள் செய்வதெல்லாம் மன்னிக்கத்தக்கதில்லையா என்று வினவுகையில், அறியாமை தவறல்ல, அதைப் போக்கும் ஞானத்தைத் தேடாத அறிவீனத்துக்கு தண்டனையே சரியான மருந்து என்பான் கண்ணன். ஆக அறிவீனத்தைக் குற்றமாகப் பார்ப்பது சரியே என்று தோன்றுகிறது. உலகே கல்விக்கூடமாக இருக்கையில் கற்றலுக்குப் பலவழிகள் இருக்கையில், பேதைமையைக் கைக்கொள்வது மற்ற குற்றங்களில் மிக்கதாகும்.

பி.கு: இதற்கு மற்றொருப் பொருளும் எனக்கு தோன்றுகிறது. ஒரு நற்பயன் விளைவிக்கக்கூடிய செயல் என்றால் அதற்கு உழைக்கவேண்டும். உழைப்பு உடலுக்கு ஒரு அசதியை (துன்பத்தையும்) தரலாம். வெறும் அசதியை மட்டும் கருத்தில்கொண்டு அச்செயலினால் ஏற்படும் நற்பயனை கருத்தில்கொள்ளாமல் அச்செயலை கைவிடுதல் என்பது பேதைமையாகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி , அந்நட்பினை எதிர்மறுத்துப் பகை முகத்தாற் கூறிய தொடங்கினார் . அப் பகைதான் முற்றக் கடியுங் குற்றமன்மையின் உளவாய வெகுளியானும் காமத்தானும் வருவதாம் . அவற்றுள் வெகுளியான் வருவன ஐந்துஅதிகாரத்தானும் , காமத்தான் வருவன ஐந்து அதிகாரத்தானும் கூறுவார் , அவ்விரண்டற்கும் அடியாய மயக்கத்தை இரு வகைப்படுத்து , இரண்டு அதிகாரத்தால் கூறுவான் தொடங்கி , முதற்கண் பேதைமை கூறுகின்றார் .அஃதாவது , யாதும் அறியாமை .]

பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல். (கேடு - வறுமை, பழி, பாவங்கள், ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள், தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.).

மணக்குடவர் உரை
அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
நாட்டில் எவ்வகை மக்கள் அதிகம் என்று பார்த்தோமானால் நிச்சயம் அறிவாளிகள் அல்லர். அவர்கள் எல்லாக் காலத்திலும் சிறு தொகையினராகவே உள்ளனர். 

அறிவு என்பதும் பல்வகை. நடைமுறை அறிவு, துறைசார்ந்த அறிவு, அவையறிவு, பகுத்தறிவு, நுண்ணறிவு, பொது அறிவு என அறிவுக்குக் கிளைகள் நூறு. ஒரு சராசரியான அளவீட்டை நிர்ணயித்து அத்தகைய அறிவு மட்டத்தை அடைந்தவர்களை இனங்கண்டால் சோர்வு மிஞ்சக் கூடும்.

அப்படியானால் நாட்டில் அறிவில்லாதவர்களே அதிகமிருக்கிறார்களா ? தானுண்டு தன்வேலையுண்டு என்றிருப்பவன் அறிவில்லாதவனா ? அறிவுக்கு நிறையளவு என்று ஏதும் உள்ளதா ? அறிவு என்பதற்கும் அறிவுற்றாயிற்று என்று அமைவதற்கும் அளவுமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றனவா ? முடிவற்ற கேள்விகள் தோன்றுகின்றன. தெளிவற்ற விடைகளே தென்படுகின்றன. 

அதற்கு மாறாக, அறியாமையை அளந்துவிடுவது எளிது. பேருந்துத் தட எண் தெரியவில்லை என்பதை அறியாமையாகக் கொள்ள வேண்டியதில்லை. வாகனம் ஓட்டத் தெரிந்தும் எரிகுமிழ் (Spark Plug) துலக்கத் தெரியவில்லை என்பதைக் கணக்கிலெடுக்க வேண்டியதில்லை. 

ஆனால், ஈட்டத் தெரிந்த பணத்தைக் காக்கத் தெரியவில்லை என்றால் என்னவென்பது ? எல்லாம் தெரிந்திருந்தும் எடுத்தியம்பத் தெரியவில்லை என்றால் என்னவென்பது ? இது ஒருவகை அறியாமை. புன்மை நிலையெனக் கொள்ள முடியாது என்றாலும் குணச்சித்திரத்தில் ஏதோ குறைபாடு, ஆர்வமின்மை, அருமை உணராமை, பார்வைத் தெளிவின்மை, பக்குவப்படாமை. சரிவுக்கு உத்தரவாதமுள்ள போதாக்குறையான நிலைமை இது.

இதற்குத் தமிழில் தனியான சொல்லொன்று இருக்கிறது. பேதைமை. அப்படிப்பட்டவன் பேதை. ஒன்றிலும் தெளிவற்ற, பிரித்தறியத் தெரியாத, தான் கருதுவதே சரியென்ற மயக்கத்திலேயே வாழ்கின்றவன். இதற்குப் பேதுறுதல் என்று பெயர். 

பேதுற்றவன் பேதை. அவனின் அந்நிலை பேதைமை. கூட்டமில்லாமல் போகின்ற பேருந்தில் ஏறாமல், எங்கோ வேடிக்கை பார்த்திருந்துவிட்டு நெரிசலான பேருந்தில் ஏறிக் கசங்கி வதங்கிப் பயணம் செய்யும் நிலை. வேர்க்கடலையை உடைத்துத் தின்னும்போது வேறேதோ நினைவுக்கு ஆட்பட்டால் பருப்பைக் கீழே போட்டுவிட்டுத் தொட்டுகளை வாய்க்குள் போடுவோமல்லவா, அத்தகைய நிலை !

இவையெல்லாம் பெருந்தவறில்லை. சிறு பிழைகள். கண்டிக்கத்தக்கவற்றைத்தானே கணக்கில் கொள்ள வேண்டும் ? ஆம். வள்ளுவரும் அவற்றைத்தான் பேதைமை என்கிறார். பேதைமை என்பது என்னவென்று அதிகாரத்தின் முதல் குறளில் விளக்கிய பின்பே மேற்செல்கிறார். 

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு 
ஊதியம் போக விடல்.

- என்பதே அக்குறள். இலாபத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய இடத்தில் எடுத்துக்கொள்ளாமல் போக்கடித்துவிட்டு நட்டத்தை வைத்துக்கொண்டு விழிப்பது. தும்பை விட்டு வாலைப் பிடிப்பது. ஏதம் என்றால் துன்பம்/குற்றம்/கேடு. ஊதியம் என்றால் பலன். 

பெண்ணுக்கு நல்ல நல்ல வரன்கள் தேடி வந்திருக்கும். அவை எவற்றிலும் திருப்தியுறாமல் எதையாவது குறைகூறி திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போவது. இறுதியில் காலங்கடந்துவிட, கிடைத்த மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைப்பது. நல்ல நல்ல வேலைகளைத் தொலைத்துவிட்டு இப்போது பொருத்தமேயில்லாத இடத்தில் அரைமனத்தோடு பணியாற்றுவது. வீட்டிற்கருகிலேயே வாய்த்த சிறு நிலத்தை வாங்காமல் விளம்பரத்தில் மயங்கி சென்னைக்கு அருகில் என்று செங்கல்பட்டில் வாங்குவது. 

அறியாமையைத் தீர்த்துக்கொள்ள முடியும். அறிய அறிய அறியாமை வற்றிவிடும். ஆனால், பேதைமையை ? ஏதங்கொண்டு ஊதியம் தவறவிட்ட ஒவ்வோரிடத்திலும் நாம் பேதைகளாகத்தாம் நின்றிருப்போம். அதைத் தீர்ப்பதற்கு விழிப்போடிருத்தலே வழி.

English Meaning - As I taught a kid - Rajesh
Stupidity is accepting and following negative things (bad habits, bad ideas, lethargy etc) that leads to a destructive path, loss, and not embracing positive things (good habits, bias for actions, consistency, focus etc), forsaking profits, advantages, productive things etc.
For the sake of long term benefits, one can accept any kind of difficulty in the work and not give room for stupidity/mediocrity/lethargy etc.

Questions that I ask to the kid
What is stupidity?

நாணாமை நாடாமை நாரின்மை

குறள் 833
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.
நாணாமை -  வெட்கப்படவேண்டிய செயல்கட்கு வெட்கப்படாமையும்

நாடு - nāṭu   III. v. t. aim at, seek, inquire, தேடு; 2. desire earnestly, விரும்பு; 3. scent, (as dogs a hare) மணம்பிடி; 4. (fig.) reach எட்டு.
நாடாமை -  எதிலேயும் நாட்டம் இல்லாமல் இருத்தல்; ஆய்ந்து பார்க்க வேண்டிய வற்றை ஆய்ந்துபாராமையும்

நார் - நார் - மட்டைமுதலியவற்றின்நார்; கயிறு; வில்லின்நாண்; பன்னாடை; கல்நார்; அன்பு
இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.
நாரின்மை - எவரிடத்தும் அன்பின்மையும்

யாது -எது
ஒன்றும் - ஒன்றிலும்

பேண் - விருப்பம்; பாதுகாப்பு; காண்க:பேண்மரம்.
பேணாமை - விருப்பம் கொள்ளாது இருத்தல்

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு

முழுப்பொருள்
செய்ய வெட்கப்படவேண்டிய செயல்களை செய்தல், எதனையும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்றோ கற்றுக்கொள்ள வேண்டும் என்றோ விருப்பம் இல்லாது இருத்தல், சக மனிதர்கள் மீது அன்பு இல்லாமல் இருத்தல், பேணி காக்க வேண்டிய வற்றை (அறம், பொருள், இன்பம்) பேணாது இருத்தல் ஆகியவை பேதைகளின் (அறிவற்றவர்கள், முட்டாள்கள்) செயல்களாக (தொழில்களாக) இருக்கும்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நாணாமை - நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமை - நாடவேண்டுமவற்றை நாடாமையும்; நார் இன்மை - யாவர்மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமை - பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில் - பேதையது தொழில். (நாணவேண்டுபவை - பழி பாவங்கள். நாடவேண்டுபவை - கருமங்களில் செய்வன தவிர்வன. முறிதல்: கண்ணுறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நாணாமை - வெட்கப்படவேண்டிய செயல்கட்கு வெட்கப்படாமையும்; நாடாமை - ஆய்ந்து பார்க்க வேண்டிய வற்றை ஆய்ந்துபாராமையும்; நாரின்மை - எவரிடத்தும் அன்பின்மையும்; யாது ஒன்றும் பேணாமை -பேணிக்காக்க வேண்டிய எதையும் காவாமையும்; பேதை தொழில் - பேதை செயல்களாம்.

வெட்கப்பட வேண்டியவை பழிகரிசுகள் (பாவங்கள்). ஆராய வேண்டியவை நல்லனவும் தீயனவும் வேண்டுவனவும் வேண்டாதனவும். பேணவேண்டியவை குடிப்பிறப்பு, தன்மானம், ஒழுக்கம், கல்வி, நல்நட்பு முதலியன. இயற்கைக் குணம் அல்லது வழக்கச் செயல் என்பது பற்றித் 'தொழில்' என்றார். 'பேதை' இருபாற்பொது.

மணக்குடவர் உரை
நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், ஈரமின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையார் தொழில். இது பேதையார்செயல் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.

சாலமன் பாப்பையா உரை
தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.

பேதைமையுள் எல்லாம் பேதைமை

குறள் 832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை 
கையல்ல தன்கட் செயல்.
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை

பேதைமையுள் - பேதைமைகளில்

எல்லாம் - எல்லாம்

பேதைமை - பேதைமை; கொடியது

காதன்மை - காதல், 1.Affection, attachment; அன்பு. காதன்மை கந்தா (குறள்.507); 2.Desire; ஆசை, 3.lust, passion, விரகம்
கை - கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

கையல்ல - கையல்லது - தகாதது

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

தன்கட்செயல் - தன்னுடைய நேரத்தை அதில் ஈடுப்படுத்தி செயல்படுதல்

முழுப்பொருள்
ஒருவனுக்கு அறியாமையுள் எல்லாம் அறியாமை என்னவென்றால் தன் நிலைக்கு ஒவ்வாத, ஒழுக்கத்திற்கு ஒவ்வாத, அல்லது எப்பயனையும் தராத ஒரு தகாத செயலை மிகுந்த விருப்பப்பட்டு / ஈடுப்பாடுடன் / பற்றுக்கொண்டு செய்வதே ஆகும். 

ஒப்புமை
சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் – கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
சீர்ந்தது செய்யாதா ரில். (பழமொழி 67)

பரிமேலழகர் உரை
பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது, கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். 

விளக்கம் 
(இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பேதைமையுள் எல்லாம் பேதைமை - பேதைமைக் குற்றங்களெல்லாவற்றுள்ளும் கொடியதாவது; கை அல்லதன்கண் காதல் செயல் - ஒருவன் தனக்குத்தகாத ஒழுக்கத்திற் பெருவிருப்பங் கொள்ளுதல்.

கையல்லது செய்தல் , இருமைக்கும் ஆகாதென்று அறநூலாற் கடியப் பட்டனவும், தன் நிலைமைக்கு ஏற்காதனவுமான தீய செயல்களைச் செய்தொழுகுதல். 'கை' ஒழுக்கம்; ஆகுபெயர்.

மணக்குடவர் உரை
அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று 

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.