Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label மெய்யுணர்தல். Show all posts
Showing posts with label மெய்யுணர்தல். Show all posts

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்

குறள் 360
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை

வெகுளி சினம்; வெறுப்பு; கபடமற்றவர்.

மயக்கம் - அறிவின்திரிபு; அவித்தை; பிழைபடஉணர்கை; விரகநோய்; மூர்ச்சை; படைப்பில்அலித்தன்மைமுதலியகலப்பு; கூடல்; கலப்பு; எழுத்துப்புணர்ச்சி; சாவுச்சடங்கினுள்ஒன்று; சோம்பேறித்தனம்.

இவை அண்மையிலுள்ள பொருள்களைச் சுட்டு தற்குரியசொல்

மூன்றன் - மூன்று 

நாமம் - திருமண்கட்டி; அச்சம்; நிறைவு; புகழ்; திருமாலின்பன்னிரண்டுபெயர்களைக்கூறிஉடலில்இடும்திருமண்காப்பு; பேர்; தும்பைச்செடி; முள்தராசின்நடு; காண்க:நாரத்தை; பாசி

கெட - கெடுதல் அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

நோய்துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு


முழுப்பொருள்
நாமம் என்ற சொல்லுக்கு பலர் ”பேர்” என்ற அர்த்தத்தைக் கையாண்டு உள்ளனர். இக்குறளில் நாமம் என்ற சொல்லுக்கு நிறைவு என்னும் பொருளே பொருத்தமாக இருக்கும் என்றென்பது எனது கருத்து. அது ஏன் என்று கீழ்காணும் குறளின் பொருளைப்படித்து உணர்ந்தால் புரியும். 

காமம் என்றால் விருப்பு, ஆசை, விழைவு. ஆசைகள், விழைவுகள் நிறைவேறாதப்பொழுது ஏமாற்றங்கள் வருகிறது. அதுவே கோபங்களாக உருமாறுகிறது. கோபம், சினம், வெறுப்பு இருந்தால் பகை பிறக்கிறது. முகத்தில் புன்னகை/சிரிப்பு மறைகிறது மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அழிகிறது. இக்கோபங்கள் அறிவை ஒரு மயக்க நிலையில் சிந்தனையை மேலும் மழுங்கடித்துவிடும். இந்த மயக்க நிலையில் இருக்கும் பொழுது நாம் துன்பத்தில் சிக்கித் தவிக்கிறோம். அதுவே மெய்யினை உணர்ந்து இருந்தால் இம்மூன்றிலும் சிக்கித் துன்பத்தில் தவிக்க மாட்டோம். 

ஆதலால் காமம், வெகுளி (சினம், கோபம்), மயக்கம் ஆகிய மூன்றும் அழிவிற்கான காரணங்கள். இம்மூன்றும் முழுதும் (நிறைவாக) ஒருவரை விட்டு நீங்கினால் அதாவது காமம், வெகுளி, மயக்கம் ஆகியவறை ஒருவர்மனதில் இருந்து முற்றாக அழித்தால் அவரிடம் இருந்து துன்பங்கள் நீங்கும்/அழியும்.

அநாதியாய அவிச்சையும் (அஞ்ஞானம், spiritual ignorance) 'அதுபற்றி யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், என வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் என்பது ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றன் நாமங்கெட' என்றார் - என்று பரிமேலழகர் குறிப்புகளை எடுத்துரைத்துள்ளார். 

இம்மூன்று பகைவர்களைப் பற்றியும் சொல்லிய இலக்கியப்பாடல்கள் ஏராளம். எல்லாவற்றையும் பட்டியலிட்டு மேற்கோளாகச் சொல்லாவிட்டாலும், இதோ சில.

”தருவனத்துள் யானியற்றும் தவவேள்விக் கிடையூறாத்
தவஞ்செய் வோர்கள்
வெருவரச்சென் றடைகாம வெகுளியென” (கம்ப.கையடைப் 10)

“யாம்மேல் உரைத்தப் பொருள்கட்கெல்லாம் 
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசியெனத்
தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்
மைத்திரி கருணா முதிதையென் றறிந்து
திருந்துநல் லுணர்வால் செற்றமற் றிடுக
சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி யுய்த்து மயக்கம் கடிக” (மணி.30:252-9) என்றே மணிமேகலைக் கூறுகிறது.

“காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்த் 
தேமம் பிடித்திருந்தேனுக்கு” என்கிறது திருமந்திரப்பாடல் (2436).

“காமமும் வெகுளியும் களிப்பும் கைத்தெழு, கோமுனி” (கம்ப.திருஅவதாரப்.48)
“காமம் முதலா முக்குறும்பற வெறிந்த வினை”  (கம்ப.விராதன் 3)
என்று அம்மூன்றையும் குறும்பு என்கிறான் கம்பன்.

“முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம் 
துக்கத்துள் நீக்கிவிடும்” என்கிறது நாலடியார் (190).


“ஐந்தொ டாகிய முப்பகை மருங்கற வகற்றி
உய்ந்து போயினர்” (கம்ப.மந்திரப் 64)

“கொடுநாலொ டிரண்டு குலப்பகை குற்ற மூன்றும்
சுடு ஞானம் வெளிப்பட வுய்த்த துயக்கி லார்போல்” (கம்ப.கடல்தாவு.51)

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன்
திரிந்த காமம்போல் நஞ்சு பிறிதில்லை


ஒருமுறை காசியில் இருந்து டேராடூன் செல்லும் வழியில் ரயிலில் என்னருகே ஒருவர் அமர்ந்திருந்தார். பழைய அழுக்குக் காவி உடை. தலைப்பாகை. கையில் உடைமை என ஒரு சிறிய பை மட்டுமே. நீண்ட நரைத்த தாடி. தோளில் சரிந்த கூந்தல். இருக்கையில் காலைத் தூக்கிவைத்து அமைதியாக வெளியே நோக்கிக்கொண்டு வந்தார். ஏதோ சாமியார் என நான் நினைத்தேன்.

அன்றெல்லாம் பிரெஞ்சுக்காரரான ஜீன் பால் சார்த்ர் மிகப்பிரபலமான தத்துவ ஆசிரியர். இலக்கியவிமர்சகர், அரசியல்போராளி, நாடக ஆசிரியர் என்னும் நிலைகளில் சார்த்ர் உலகமெங்கும அறியப்பட்டிருந்தார். இருத்தலியம் [Existentialism] என்னும் கோட்பாடு சில அறிஞர்களால் முன்வைக்கப்பட்டு உலகசிந்தனையை உலுக்கிக் கொண்டிருந்த காலம். சார்த்ரின் இருத்தலும் இன்மையும் [Being and Nothingness] என்னும் நூல் அத்தத்துவத்தின் மூலநூலாக கருதப்பட்டது. அக்கொள்கையைச் சார்ந்து எழுதிய காஃப்கா, காம்யூ போன்றவர்கள் இளைஞர்களால் பரபரப்புடன் வாசிக்கப்பட்டனர்

நான் சார்த்ர் எழுதிய நாசியா [Nausea] என்னும் சுயகுறிப்புநூலை வாசித்துக்கொண்டிருந்தேன். சாதாரணமாகத் திரும்பிய அந்தச்சாமியார் அதை கண்டு கைநீட்டினார். நான் தயக்கத்துடன் அதை நீட்டினேன். வாங்கி புரட்டிப்பார்த்துவிட்டு புன்னகையுட்ன் திருப்பித்தந்தர். “Being and nothingness” என்றார். வெடித்துச் சிரித்துக்கொண்டு “Do you know there is a way called nothingness and being?” [ஒன்றுமில்லாமல் இருப்பது என்னும் நிலை ஒன்றுண்டு, தெரியுமா?]

நான் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். “பாவம் சார்த்ர், நல்ல மனிதர்” என்றார் அவர். நான் கொஞ்சம் எரிச்சலுடன் “அவரைத்தெரியுமா?” என்றேன். “நன்றாகவே தெரியும். நான் சார்போனில் அவரது மாணவனாக இருந்தேன். அவர் வீட்டில்தான் இருப்பேன்” என்றார். என்னால் திகைப்பை மறுக்கமுடியவில்லை. சாமியார்களிடம் பூர்வாசிரமத்தைப்பற்றிக் கேட்பது தவறு என்று தெரியும் என்பதனால் நான் மேலே பேசவில்லை.

அவரே மெலே சொன்னார். “ஒரு கூரியஎண்ணம் நமக்குள் வந்ததும் நாம் பரவசம் அடைகிறோம். நம்முள் அது வந்தது என்பதனாலேயே அது அரியது, மகத்தானது, அதை உலகுக்குச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் என பரபரக்கிறோம். ஆகவே கடுமையாக உழைத்து அதை ஒரு கொள்கையாக ஆக்கிக்கொள்கிறோம். அப்படி கொள்கையாக ஆக்கும்தோறும் நாமே அதை நம்புகிறோம். நம் வாழ்க்கையை அப்படி ஆக்கிக்கொள்கிறோம். அது மிகப்பெரிய நடிப்பு. மெல்ல நடிப்பே வாழ்க்கையென்றாகிவிடுகிறது”

“சார்த்ர் நடித்தார் என்கிறீர்களா?” என்றேன். “ஆம். அவரும் அவர் தோழியும் சேர்ந்து நடித்தார்கள். உலகம் கைதட்டியது”. சார்த்ரின் தோழி சிமோங் த பூவா உலகமெங்கும் இன்று பரவியிருக்கும் பெண்ணியச் சிந்தனைகளை உருவாக்கியவர். அவரது இரண்டாம் பாலினம் [The second sex] என்ற நூல் பெண்களின் தன்னுரிமை, விடுதலை, ஆணைச்சாராமல் நின்றிருக்கும் ஆற்றல் ஆகியவற்றை முன்வைப்பது

நான் சீற்றத்துடன் “இருத்தலியலை நீங்கள் நிராகரிக்கலாம், ஆனால் அவர்களை பொய்யானவர்கள் என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்றேன். “அவர்கள் பொய்யானவர்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழவில்லை. தங்கள் கோட்பாடுகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். அதை மட்டுமே சொன்னேன்” என்றார்.

இருத்தலியலை சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம். காலம் எல்லையற்றது. இங்கே நிகழும் அனைத்துமே தற்செயல்கள். இதில் மனிதவாழ்க்கைக்கு என தனியான அர்த்தம் ஏதும் இருக்கமுடியாது. அனைத்து அர்த்தங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டவை மட்டுமே. அவற்றை அறியாமல் நம்புபவன் வாழ்க்கையை இயல்பாக வாழ்கிறான். அவற்றின் பொருள் என்ன என்று தேடுபவன் வெறுமையையே சென்றடைகிறான்.

“இங்குள்ள அனைத்தும் வெறுமை அல்ல. நாம் பொருளை அறியவில்லை என்பதனால், அறியமுடியவில்லை என்பதனால் பொருள் இல்லை என்றாவதில்லை” என்றார் அவர். “பொருள் உள்ளது. அதை அறிய வேண்டுமென்றால் நான் என்ற நிலையில் இருந்து அதை அணுகக்கூடாது. சார்த்ர் தேடியது ‘எனக்கான பொருள் என்ன?’ என்ற கேள்விக்கான பதிலை. இதற்கெல்லாம் பொருள் என்ன என்று தேடினால் கண்டுகொள்ளலாம்” என்று அவர் சொன்னார்.

நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். “மிகமிக எளிது. ஒரு கூழாங்கல்லை எடுத்துப்பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதை பார்ப்பதற்கான தடையை அகற்றவேண்டும். அது நான் என்னும் எண்ணத்தின் தடை. அதிலிருந்து உருவாகும் காமம் குரோதம் மோகம் ஆகிய மூன்று அழுக்குகளின் பூச்சு. அதைக்களைந்து உண்மையை அறிவதே ஆன்மீகமான பயணம். இத்தனை அலைச்சலும் இத்தனை பயிற்சிகளும் அதற்கே”

“அது என்ன?” என்றேன். “ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்” என்ற உபநிடதவரியை அவர் சொன்னார். [இங்கனைத்திலும் இறை உறைகிறது] ”ஒரு வரியாக மிக எளியது. உண்மையனுபவமாக உணர்வதற்கு தவம் தேவை” அதன்பின் அவர் பேசவில்லை. பேசுவார் என நானும் நெடுநேரம் காத்திருந்தேன். அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச்சென்றுவிட்டார். நான் அவர் சென்ற பின் எஞ்சிய வெட்டவெளியை பார்த்துக்கொண்டிருந்தேன். ரயில் நகர்ந்தது

நெடுநாட்களுக்குப்பின் சார்த்ரின் அணுக்கமான மாணவி ஒருத்தி அவரைப்பற்றி ஒரு நூலை எழுதினாள். சார்த்ர் கட்டற்ற காம உணர்ச்சி கொண்டவர் என்றும் அவரது ஆய்வுமாணவிகள் அனைவரிடமும் அவர் உறவுகொண்டிருந்தார் என்றும், அதற்காக கட்டாயப்படுத்தி மன்றாடுவார் என்றும் அவள் சொன்னாள்.

அதைவிட முக்கியமானது அவள் சிமோங் த பூவா பற்றி சொன்னது. ஆணைச்சாராது பெண் வாழவேண்டும் என்று வாதிட்டு அவ்வளவு பெரிய நூலை எழுதிய சிமோங் த பூவா அதன்பொருட்டே சார்த்ரை மணம் செய்துகொள்ளாமல் தோழியாக வாழ்ந்தவர். அவர் உண்மையில் சார்த்ரின் விசுவாசமான மனைவியாகவும், அவரது ஆணைக்குக் கட்டுப்பட்ட அடியாளாகவுமே இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தாள் அம்மாணவி. தன் மாணவிகளையும் பேசி மடக்கி சார்த்ருக்கு பாலியல் தேவைக்காகக் கொண்டுசெல்வது சிமோங் த பூவாவின் வழக்கமாம். பிற மாணவிகளும் அதை உறுதிப்படுத்தினர்

எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. அகங்காரத்தின் மறுபக்கம் காமமே என நான் அதற்குள் எழுதி எழுதிக் கற்றிருந்தேன். அவை மறைத்து நிற்கும் விழிகளால் அப்பாலுள்ள பிரம்மாண்டத்தைக் காணமுடியாது. அதன்பின் செய்யவேண்டியது எதைக் காண்கிறோமோ அதை கோட்பாடாக ஆக்கி வாதிடவேண்டியதுதான். “பாவம் சார்த்ர்” என அந்த சாமியாரை நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டேன்.

“நான் தவம்செய்கிறேன். மெய்மையை பற்றுகிறேன்” என்றான் கௌசிகன். “அரசே, காமத்தை குரோதத்தை மோகத்தை கடந்தவர்களே தவத்தின் முதல்படியில் கால்வைக்கிறார்கள்

ஆக, வாழ்வில் ஒருவர் மெய்மையை நோக்கி தவம் செய்தாலும் சரி அல்லது தனது செயலை ஒரு தவமாக செய்தாலும் சரி, அல்லது ஒரு குறிக்கோளுடன் தவமாக ஒரு செயலை செய்தாலும் சரி காமம்,, குரோதம், மோகம் ஆகியவற்றிற்கு இடம் கொடுக்கல் ஆகாது.

விருப்பங்கள் பற்று வளர்ப்பவை. நீங்கள் வெறுப்பவற்றையும் வைத்துக்கொள்ளவேண்டாம். அவை மும்மடங்கு பற்றை வளர்ப்பவை


சுழற்சிக்கு நடுவே மையம் அசைவின்மை கொண்டிருக்கிறது. ஆழம் அலையின்மையால் இறுகியிருக்கிறது. அப்பாலிருப்பவனே அனைத்தையும் அறிபவனாகிறான். செயல்களுக்குள் செயலற்றிருப்பவனே செயலாற்ற வல்லவன்.

நிலமறைந்து பாயும் சிம்மத்தில், முகக்கை சுழற்றிப் பாயும் களிற்றில், சீறிப்படமெடுக்கும் நாகத்தில் எழுகிறது இப்புவியாளும் பெருவிசை. புரவியின் கால்களில், கழுகின் சிறகில், தவளையின் நாவில் வெளிப்படுகிறது. அது தெய்வங்களுக்குரியது. அதனால் ஆற்றப்படுகின்றன அனைத்துச் செயல்களும். அனைத்து அறங்களும் அதனால் நிலைநிறுத்தப்படுகின்றன.

அவ்விசை உணரப்படுகையில் மானுடருக்குரியவையாகின்றது. காமம் சினம் விழைவு என சொல்கொள்கின்றது. அனைத்தையும் மறைக்கும் திரையாகின்றது. அனைத்தும் தானாகித் தோன்றுவதனூடாக பிறிதெதையும் காட்டாதவையாகின்றது.

ஐம்புலன்களையும் ஆளும் காமமும் சினமும் விழைவும், கால்களும் விழிகளும் அற்றவை. ஆணவமே அவற்றின் ஊர்தி. ஆணவத்தை வென்றவன் அம்மூன்றையும் ஆள்கிறான். காற்றிலா கருவறையில் நிலைகொள்ளும் சுடர் என அகம் கொண்டிருப்பான். அவன் காண்பவை துலங்கும்

முன்பு இலங்கையின் தலைவனாகிய ராவணன் பெருவேள்வி ஒன்றை இயற்றினான். அதில் அவன் தன் செல்வங்கள் அனைத்தையும் ஆகுதியாக்கினான். தன் உறவை, துணையை அவியென அளித்தான். பின்னர் தன் தலைகளை ஒவ்வொன்றாக அறுத்து அனலோம்பினான். காமம், சினம், விழைவு எனும் மூன்று தலைகளை அளித்தான். மறுபக்கத்திலிருந்து கல்வி, புகழ், பற்று என்னும் மூன்று தலைகளை மீண்டும் வெட்டியிட்டான்.

பின்னர் ஆகூழ், போகூழ், அறம் என்னும் மூன்று தலைகளையும் வெட்டி அவியூட்டினான். வேள்விமுழுமை பெறாமை கண்டு திகைத்தபின் தன் பத்தாவது தலையையும் வெட்டி எரிபலி அளித்தான். அந்தத் தலையே தன்னிலை. அது நீங்கிய பின்னரே வேள்வித்தீயில் அவனுக்குரிய தெய்வம் எழுந்தது.

மானுடன் தான் ஆற்றும் செயலை புரிந்துகொள்வது எப்படி? இங்கு வாழ்பவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் காற்றில் சுழலும் காற்றாடிகள்போல செயலாற்றுபவர்கள். அறியாப் பெருவிசைகளுக்கு தங்களை முற்றாகக் கொடுத்துவிட்டவர்கள். மிகச் சிலரே தங்கள் செயல்நோக்கத்தின் தொடக்கத்தை, தங்கள் செயல்விளைவின் நெறியை அறியவிரும்புகிறார்கள். பாய்மரம்போல காற்றுக்கு தங்களை அளித்தாலும் சுக்கானை தாங்களே ஏந்த விழைகிறார்கள். மானுடர் இந்த இருவகையினர் மட்டுமே.


இளைய யாதவர் அவரை நோக்கி புன்னகைத்து “அருமணியை கண்டடைந்தீர்களா?” என்றார். “இல்லை” என்றார் விதுரர். “அது அந்த அறைக்குள்தான் உள்ளது, நீங்கள் விரும்பிப் பயிலும் சுவடிக்கட்டுக்குள்.” விதுரர் திகைப்புடன் “ஆம், நான் கட்டுகளை பிரிக்கவேயில்லை” என்றார். பின்னர் “தேவிஸ்தவத்திற்குள்ளா?” என்றார். “இல்லை, விவாதசந்திரத்திற்குள்” என்றார் இளைய யாதவர். “ஆம், அதற்கும் வாய்ப்புண்டு” என்றார் விதுரர். “தேவிஸ்தவம் பின்னர் நீங்கள் பயின்ற நூல், விதுரரே. தொடக்கம் முதல் உடனிருப்பது லகிமாதேவியின் நூல்தான்.” விதுரர் பெருமூச்சுவிட்டார். “அவ்விரு நூல்களுக்குள் ஆடுவது உங்கள் ஊசல்” என்றார் இளைய யாதவர்.

இளைய யாதவரை சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்த விதுரர் “என் வினாவை நான் எங்கும் சந்திக்கவேயில்லை” என்றார். இளைய யாதவர் “உடல் மண்நீங்குவதற்கு முன்னரே இவ்வுலகில் விழைவாலும் சினத்தாலும் விளையும் விசைகளை தாங்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்பவனே மாறாதனவற்றை அறிய இயலும். அசைவற்ற கலத்திலேயே அமுதத்தை கறந்தளிக்கிறது அப்பசு. தனக்குள் இன்பத்தை அடைந்தவன், ஒளியை தன்னுள் கொண்டவன், வெளியே தேடவேண்டியதில்லை. இருமைகளை வெட்டிவிட்டவன் மட்டுமே இருத்தலுக்கு அப்பால் சென்று எதையேனும் அறியக்கூடும்” என்றார்.


காமம் மோகம் குரோதம். எவராலும் மறைத்துவைக்க இயலாதது. மறைக்க மறைக்க பெருகுவது.


 இளைய யாதவர் “காமகுரோதமோகம் இல்லாத மானுட உள்ளங்களே மெய்மையை அறியமுடியும் என்றால் மெய்மை மானுடருக்கு உரியதே அல்ல” என்றார்.

முகம் சற்றே எளிதாக, ஆம் என விதுரர் தலையசைத்தார். “காமத்தை எவ்வண்ணம் வெல்வீர், விதுரரே?” என்றார் இளைய யாதவர். “அறியேன். முனிவரும் அறியாது தவிக்கும் மாயவெளி அது” என்றார் விதுரர். “குரோதத்தை? மோகத்தை?” என்று இளைய யாதவர் கேட்டார். “அதற்கும் சொல்லப்பட்ட மறுமொழிகளே என்னிடமுள்ளன” என்று விதுரர் சொன்னார். “அன்பால் குரோதத்தை. எளிமையால் மோகத்தை.” இளைய யாதவர் புன்னகைத்து “காமத்தை அடக்கத்தால் என்பர் நூலோர். அமைச்சரே, அவ்வண்ணம் வென்ற எவரையேனும் எப்போதேனும் பார்த்திருக்கிறீர்களா?” என்றார். விதுரர் திகைத்து பின் எண்ணத்திலாழ்ந்து “நான் பார்த்தவர்கள் சிலரே” என்றார்.

“விதுரரே, காமம் கொண்டவர்கள் அனைவருமே அதை அஞ்சுகிறார்கள். அடக்கப்படாத காமம் விலங்குகளுக்கு மட்டுமே இயல்வது. குரோதத்தை நிகர்செய்யவே அன்பை பயில்கிறார்கள் மானுடர். தன்னவர்பால் அன்பையும் அல்லவரிடம் சினத்தையும் கொள்பவர் எளியோர். எதிரிகளிடமும் அன்பை கொள்கிறார்கள் அறத்தோர். மோகத்தை வெல்ல எளிமையில் அமைகிறார்கள் தவத்தோர். காமமும் சினமும் விழைவும் அனைத்து மானுட உள்ளங்களிலும் இருபால்பிரிவு கொண்டே அமைந்துள்ளன. இரு முனைகளும் பூசலிடுகின்றன. அல்லது ஒன்றின் வாலை பிறிதொன்று விழுங்கி சுற்றிவருகின்றன.”

“இருபாற்பிரிவு கொண்ட நெஞ்சில் அமைதி என்பதே இல்லை” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “அறிக, காமமோ சினமோ விழைவோ துயரளிப்பதில்லை! அதை தடையின்றி அடையும் விலங்குகள் தெய்வத்துயரையும் உலகத்துயரையும் மட்டுமே அடைகின்றன. அவை எவ்வுயிரும் தவிர்க்கவியலாதவை. மானுடத்துயர் என்பது காமமும் சினமும் விழைவும் நிகர்விசைகளால் எதிர்கொள்ளப்படும்போது உருவாகும் கொந்தளிப்பே. குற்றவுணர்வாக, குழப்பமாக, கொந்தளிப்பாக, சோர்வாக அது மானுடரை அலைக்கழிக்கிறது.”

ஆம் என விதுரர் தலையசைத்தார். “இருமையொழிதலே அந்தத் துயரிலிருந்து விடுபடச்செய்யும். காமம் அடக்கம் என்னும் இருமையிலிருந்து, சினம் அன்பு என்னும் இருமையிலிருந்து, விழைவு துறப்பு என்னும் இருமையிலிருந்து எழுவதொன்றே மீளும் வழியாகும். ஒளிநாடுபவனே இருளை சென்றடைகிறான். இருளும் ஒளியும் அற்றதை, இருளும் ஒளியும் ஒன்றானதை நாடுக! அதுவே அறிவின் வழி.”

“அறிதொறும் தீமையை கண்டேன் என்றீர் விதுரரே, நீங்கள் கண்டது இருமையை. நீங்கள் கண்ட ஒவ்வொன்றிலும் தீமையிடம் தோற்றுச் சுருங்கி அமர்ந்திருந்தது நன்மை. ஏனென்றால் உங்களுக்குள் இருந்தது அதே இருமை. இருமையழிந்த அறிவே அறிவெனப்படும். இருமையில் எழுவன அனைத்தும் அறிவின்மையே” என்றார் இளைய யாதவர். “நோக்குக, அஸ்தினபுரியின் அந்த எளிய அமைச்சரை!”

...............
..............
இளைய யாதவர் “விதுரரே, இதனால் நீங்கள் அந்த அருமணிமேல் கொண்ட பற்றை இழந்துவிட்டீர்கள் என்று பொருளா? நாளை மீண்டும் அதன்பொருட்டு சினம் கொள்ளமாட்டீர்கள் என்று சொல்லமுடியுமா?” என்றார். விதுரர் “இல்லை, இது ஓர் அலை. இது அந்தச் சினத்தின் மறுபக்கம். இதன் மறுபக்கமென மீண்டும் பிறிதொரு சினமே எழும்” என்றார். “இங்கிருந்து மட்டுமே அதை காணமுடியும், அமைச்சரே” என்று சொல்லி இளைய யாதவர் புன்னகை செய்தார். “இது ஒரு கணம். ஒரு துளியை நதியென நீட்டுவதைப்போல் இதை காலமென்றாக்குபவரே மெய்யறிதலை பெறுகிறார்.”

“நான் இவற்றை அறிந்துகொண்டேன்” என்றார் விதுரர். அதிலிருந்த உட்பொருளை உணர்ந்து இளைய யாதவர் புன்னகை செய்தார். “ஆம், அறிதலைப்போல் எளிது வேறில்லை. ஓரிரு சொற்றொடர்களில் சொல்லிமுடிக்கத்தக்கவையே மெய்மையென மானுடம் அறிந்த அனைத்தும். மெய்யுணர்தலும் மெய்யிலமைதலுமே யோகம். யோகமென்பது ஒவ்வொரு கணமும் என, ஒவ்வொரு எண்ணத்தாலும் என பயிலப்படவேண்டியது. ஒவ்வொருவரும் எதில் உளம் ஈடுபட்டிருக்கிறார்களோ அதையே யோகமென்று பயில்வதே தொடக்கம். முழுமைநோக்கிய இலக்குடன் பயில்வன அனைத்தும் யோகமே” என்றார் இளைய யாதவர்.

அறிதலின் மாயங்களில் சிக்கி அலைக்கழிபவன் அறிஞன். நான் அறிகிறேன் என்னும் மயக்கம் அறிதலனைத்தையும் அறிபவனில் கோக்கிறது. அறிவனைத்தையும் அவன் இயல்புக்கேற்ப உருமாற்றுகிறது. அறிபவன் தன்னையே மீளமீள அறியும் சுழலில் சிக்கவைக்கிறது. அறிவது தானென்பதனால் அவ்வினிமையை அறிதலின் இனிமையென எண்ணச் செய்கிறது. தானற்ற ஒன்றை அறியமுடியாதவனாக ஆக்குகிறது. அறிவை அறிவின்மை என ஆக்கி விளையாடுகிறது.

அறிந்தவை அறிவனவற்றுக்கு முன்சொல்லாக அமைவதன் மயக்கம் சொல்லுக்கு பொருள் அளிக்கும் புலமென்றாகி அனைத்தையும் தானெனக் காட்டுகிறது. முன்னறிவால் வருமறிவு வகுக்கப்படுவதனால் முன்னறிவே அறிவின் எல்லையென்றாகிறது. கலமென்று சமைந்து கவிந்தவற்றை தள்ளிவிடுகிறது. அறியப்படுவன அனைத்தும் அறிந்தவற்றால் தொடங்கிவைக்கப்படுபவையாகின்றன. அறிவனவற்றை மதிப்பிட அறிந்தவற்றால் இயலுமென்பது அறிதலின் மயக்கம். வென்றவை அனைத்தையும் தன் கோட்டைக்குள் கொண்டுவரும் அரசன் கோட்டை ஒன்றையே உண்மையில் வென்றிருக்கிறான்.

அறிதலின் நெறிகளை அறிதலினூடாக வகுக்க முயல்வதனால் அறிதல்களின் பொதுமைகள் மட்டும் கருத்தில்கொள்ளப்படுகின்றன. பொதுமையே மெய்மை என்பது மயக்கம். நெறிகள் அனைத்தும் தொகுப்புத்தன்மை கொண்டவை. தொகுப்புச்செயல் சாரம் தேடுவது. சாரமென மட்டும் மெய்மை வெளிப்படுவதில்லை. தொகுப்புகள் அனைத்தும் தொகுப்பவனிடம் ஆணைபெற்றுக்கொள்பவை. நெறிகளின் திசைவழி தொடங்கிய இடத்தையே சுற்றிவந்துசேரும் வளைகோடு. நெறிகள் அறிதல்களை ஏற்றும் மறுத்தும் பகுக்கின்றன. இரண்டென்றானவை தங்களுக்குள் ஆடத் தொடங்கிவிடுகின்றன.

அறிவின் முழுமை அதன் முடிவில் உள்ளது என்னும் மயக்கம் அறிவதனைத்தையும் அறியப்படாத ஒன்றைக்கொண்டு மதிப்பிடச் செய்கிறது. மறுத்து மறுத்து முன்னேறுபவன் சென்றடைவதில்லை. ஏற்று ஏற்று சென்றடைபவன் வழியில் நின்றுவிடுகிறான். ஏற்பும் மறுப்பும் இரு நிலை. அதை கடத்தலே யோகம்.

ஒன்றுபிறிதுடன் சொல்லாடுமென்றால் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று பிறிதுடன் இணையுமென்றாலும் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று தன்னை முழுமையென்று காட்டுமென்றாலும் அது அறிவல்ல. கன்று முலையை அறிவதுபோல் நிகழ்வதே அறிதல். ஆன்மா உடலை அடைவதுபோல் ஆதலே அறிவு.

அறிதலை அறியவியலும் என்னும் மயக்கம் அறிதலை ஓர் ஆடலென்றாக்குகிறது. அடைந்தவற்றில் மகிழ்வும் அடைவன குறித்த எதிர்பார்ப்பும் தவறுவன குறித்த பதற்றமும் அறிதலை மறைக்கின்றன. அறிதலில் வெற்றிதோல்வி இல்லை. நல்லது அல்லது என்றில்லை.

எவரும் உடல்வளர்வதை உணர்வதில்லை. ஆற்றும் செயல்கள் அனைத்தையும் அறிதலென்றாக்கியவன் தன்னுணர்வின்றி அறிவடைந்து அறிவிலமைந்துகொண்டிருக்கிறான். அறிதலென்பது ஆதல். அறிந்த பின்னரும் அறிந்ததென்ன என்று அறியாதிருத்தல். அறிவென்று தனித்து ஒன்றை கொண்டோர் அறிவை அடையாதவர்.

புறத்தே அறியும் அறிதல்களனைத்தும் தொடக்கமும் முடிவும் கொண்டவை. அறிவமைந்தவன் அவற்றில் களிப்புறுவதில்லை. ஒவ்வொரு அறிதலும் ஒரு முழுமை. ஒவ்வொரு அறிதல்கணமும் ஒரு வாழ்வு. ஒன்று பிறிதல்ல. ஒன்றிலிருந்து பிறிதும் இல்லை. ஒவ்வொன்றிலும் திகழ்பவன் முழுமையிலிருந்து முழுமைக்கு செல்பவன். அவன் முழுமையில் இருக்கிறான். முழுமையே அறிவெனப்படும்.


பரிமேலழகர் உரை
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட - ஞான யோகங்களின் முதிர்ச்சியுடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான், நோய் கெடும் - அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா. (அநாதியாய அவிச்சையும் 'அதுபற்றி யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், என வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் என்பது ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றன் நாமங்கெட' என்றார். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'கெட' என்பது எச்சத் திரிவு. 'நோய்' சாதியொருமை. காரணமாய அக்குற்றங்களைக் கொடுத்தார் காரியமாகிய வினைகளைச்செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இலவாதல் மெய்உணர்வின்பயன் ஆகலின், இவை இரண்டுபாட்டும்இவ்வதிகாரத்த வாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்த உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களுமே என்பது பெற்றாம்.).

மணக்குடவர் உரை
ஆசையும் வெகுளியும் மயக்கமு மென்னும் இவை மூன்றினது நாமம்போக வினைபோம். வினைகெடுதற்கு வழி இதுவென்று கூறுதலான் இது மெய்யுணர்தலாயிற்று.

மு.வரதராசனார் உரை
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.

சாலமன் பாப்பையா உரை
விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.

Thirukkural - Management - Personality Development - Self Discipline
Kural 360 warns us of the three diseases of the mind that damage the name and fame of a person and bring disgrace to him.

Where lust, wrath and delusion are
Sorrow shall not be.

The diseases are: 1) Lust, 2) Anger, and 3) Indulgence. Mental disease one is lust. Lustful thoughts interfere with one's lofty thoughts. Lust is a pleasure principle. Pleasure principle prevents a person from pleasant and possibility thoughts. Mental disease two is anger.

Anger does twofold damage. Anger destroys the holder and damages the receiver of it. It is known that anger is a letter short of danger.

The third mental disease is self- indulgence. Self-indulgence with respect to mind and body makes one blind to consequences.  The word binge, means over indulging or overeating, is an often- used word in today's health counseling.

There is no suffering for a person, if a person can protect himself from all these three diseases. Enormous self-control is required to keep these diseases away. However, the efforts to prevent negative consequences  are worth the efforts.

English Meaning - As I taught a kid - Rajesh
Desire, anger, illusion that comes from being lethargic rather being alert/conscious in understanding the reality are 3 qualities that are like diseases. They lead to downfall of a person, kills him/his life, and prevents him from attaining his/her goal and even moksha. Hence, one should stay away from them. 

Questions that I ask to the kid
What are the 3 things that are considered as disease and prevent us from attaining Moksha?

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

குறள் 359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
சார்பு - இடம்; பக்கம்; அடைக்கலம்; பற்று; பிறப்பு; பௌத்தர்கூறும்பன்னிரண்டுநிதானங்கள்; ஒருதலைநிற்றல்; அண்மை; கூட்டுறவு; பொருத்தம்; சார்ப்புக்கூரை; புகலிடம்; கிட்டுகை.

உணர்ந்து - உணர்தல் -  uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல் முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect,consider, contemplate; கருதுதல் (திவா.) 3. Toexamine, test, observe, scrutinize; ஆராய்தல் உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 4. Toexperience, as a sensation; அனுபவித்தல் ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ 11,1, 1). 5. To realize, conceive, imagine; பாவித்தல் அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ 9, 2, 3).  

சார்பு - இடம்; பக்கம்; அடைக்கலம்; பற்று; பிறப்பு; பௌத்தர்கூறும்பன்னிரண்டுநிதானங்கள்; ஒருதலைநிற்றல்; அண்மை; கூட்டுறவு; பொருத்தம்; சார்ப்புக்கூரை; புகலிடம்; கிட்டுகை.

கெட - கெடுதல் அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

ஒழுகின் - ஒழுகுதல் நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்

மற்று ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி

அழித்து - அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல்.

தருதல் - கொடை

சார்தரா - பற்றுகளைத் தராது இருத்தல்

சார்தரும்பற்றுகளைத் தருகின்ற

நோய் துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

முழுப்பொருள்
சார்பு என்றால் பற்று மற்றும் பிறப்பு என்ற அர்த்தங்களை “சார்புணர்ந்து” என்ற சொல்லாட்சியில் பொருத்திப்பார்த்தால் பற்றுகளின் தன்மை அறிந்து, அவைத் தரும் மயக்கத்தை அறிந்து, அவை எப்படி நிலையான வீடுபேறினை அடைவதற்கு தடையாக இருக்கும் என்பதை உணர்ந்தால், பற்றுகள் எப்படி நம்மை நிலையில்லா பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் தள்ளிவிடுகிறது என்று உணரமுடியும். 

ஆதலால் ஒருவர், குறிப்பாக துறவறத்தில் இருக்கும் ஒருவர், பற்றுகளை முற்றும் அழித்து அவற்றைவிட்டு முழுவதுமாக நீங்கினால் அவர் மயக்கத்தில் இருந்து நீங்குகிறார். பற்றுகளை விட்டு நீங்குவதால் அதாவது பற்றுகளை சாராமல் இருப்பதால், பற்றுகள் தரும் துன்பங்கள் (துன்பம் என்னும் நோய்) அவரை விட்டு நீங்கும். 

பற்றுகளின் தன்மை அறிந்தால் மெய்யுணர்தல் சுலபம். அதன்படி நடந்தால் துன்பங்கள் நம்மை நீங்கும், வீடுபேற்றினை அடைய முடியும்

'ஈண்டு'ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுஉரைப்பின் பெருகும். யோக நூல்களுள் காண்க என்று பரிமேலழ்கர் கூறியுள்ளார்.

ஒப்புமை
1)இறைவற் பேணிச் சார்பறுத் துய்தி (சீவக. 1221)
2) ”பிணியறியார் .. சாய்க்காட் டெந்தலைவன் தாள்சேர்ந்தாரே” (சம்பந்தர். சாய்க்காடு, 1)
”நக்க னார் அவர் சார்வலால் நல்கு சார்விலோம் நாங்களே”(சம்பந்தர். அறையணிநல்லூர், 8)
“உமைச் சார்பவர் வசையறுமது வழிபாடே” (சம்பந்தர்.சிறுகுடி, 8)

3) “தரியேன் இனியுன் சரணந் தந்தென் சன்மம் களையாயே” (திருவாய். 5.8:7
“மாறி மாறிப் பலபிறப்பும் பிறந் தடியையடைந்துள்ளந் தேறி
ஈறில் இன்பத் திருவெள்ளம் யான் மூழ்கினன்” (திருவாய். 2.6:8)

திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றிய மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றாம் திருக்களிற்றுப்படியாரில், இக்குறளை மேற்கோளாகக்கொண்டே கீழ் காணும் பாடல் வருகிறது
“சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் என்றமையால்
சார்புணர்தல் தானே தியானமுமாம் – சார்பு
கெடஒழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று” (திருக்களிற்றுப்.34)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் - ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா. (ஆகு பெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் 'சார்பு' என்றார். 'ஈண்டு'ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுஉரைப்பின் பெருகும். யோக நூல்களுள் காண்க. 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன: பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள்இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் 'பிறந்த உடம்பான்முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக்கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், 'அழித்துச்சார்தரா' என்றார். இதனை ஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக் காரணம் ஆகலான்' நல்வினைப் பயனும் 'நோய்'எனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளைஉணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும்வழிக் கிடந்ததுன்பங்கள் எல்லாம் என் செய்யும் என்னும் கடாவைஆசங்கித்து. அவை ஞான யோகங்களின் முதிர்ச்சி உடையஉயிரைச் சாரமாட்டாமையானும், வேறு சார்பு இன்மையானும் 'கெட்டு விடும்'என்பது இதனால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட ஒழுகுவானாயின் அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா: சாரக்கடவனவாய துன்பங்கள். சார்பு - வினைச்சார்பு. கெட ஒழுகல் - காமம், வெகுளி, மயக்கமின்றி மெய்யுணர்ச்சியான் ஒழுகுதல். இஃது உண்மையைக் கண்டு அக்காட்சியைத் தப்பாமல் முடிய நிற்பனாயின் சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப் போமென்றது.

மு.வரதராசனார் உரை
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

சாலமன் பாப்பையா உரை
எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

குறள் 358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

பேதைமை மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை

நீங்க - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

சிறப்புபெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

செம்பொருள்உண்மைப்பொருள்; நேர்பொருள்; சிறந்தபொருள்; முதற்பொருளானகடவுள்; அறம்.

காண்பது - காணுதல் -  அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
அவசியமில்லாத இச்சைகளினால் அறிவு மயக்கம் ஏற்படும். அம்மயக்கத்தினால் பிறந்திறக்கும் அவஸ்த்தையும் ஏற்படும். பிறந்து இறந்து பிறந்து இறந்து என்று சங்கிலி வாழ்வின் நிலையாமையின் அடையாலம். ஆதலால் இப்பிறப்பு என்பது பேதைமை. ”குறள் 351 பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு” என்று இவ்வதிகாரத்தின் முதலிலேயே பிறப்பு பேதைமையை விளக்கியிருப்பார் திருவள்ளுவர்.

எல்லாப்பொருள்களிலும் சிறந்தது வீடு/வீடுபேறு என்றென்பதால் அதை சிறப்பு என்று கூறுகிறார் திருவள்ளுவர். அதுவே நிலையானது. பிறப்பு என்னும் துன்பத்தில் இருந்து விடுதலையளிப்பது வீடுபேறு. 

ஆதலால் மீண்டும் பிறத்தலுக்குக் காரணமாய அறியாமையாகிய மயக்கம் நீங்கி, சிறப்பென்று கொள்ளப்படுவதான வீடுபேறினை செவ்வியதான மெய்ப்பொருளை கண்டு உணர்வதே அறிவுடைமையாகும். அதை அறிவதுமட்டும் இன்றி அந்த மெய்யினை உணர்ந்து அதற்கான பாதையில் பயனிப்பதே மெய்யான அறிவு செய்யும் செயலாகும்.

கம்பன் பல நேரங்களிலும் வள்ளுவன் சொற்களையே தன் பாடல்களில் கையாண்டிருக்கிறான். பிறப்பென்னும் பேதைமை என்பதை, 
“பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குவான்” என்று மந்திரப்படலத்திலும் (31), 

“துறத்தல் ஆற்றுறு ஞானமாக் கடுங்கணை தொடர
அறுத்த லாதுசெல் லாதுநல் லறிவுந் தணுகப்
பிறத்தலாற்றுறும் பேதைமை பிணிப்புறத் தம்மை
மறத்த லாற்றந்த மாயையின் மாய்ந்ததம் மாயம்” என்று இராவணன் வதைப் படலத்திலும் (124) சொல்கிறான்

இக்குறளின் முற்றுக்கருத்தையும் சொல்லும்படியாக இவ்வாறும் கம்பன் பாடுகிறான். இதுவும் மந்திரப்படத்தின்கண் (22) வருவது.
“ அருஞ்சிறப் பமைவரும் துறவும் அவ்வழி
  தெரிஞ்சுற வெனவரும் தெளிவு மாய்வரும்
  பெருஞ்சிறை உளவெனிற் பிறவியென்னுமிவ்
  விருஞ்சிறை கடத்தலின் இனிய தியாவதே”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய் உணர்வாவது. (பிறப்பென்னும் பேதைமை எனவும் 'சிறப்பு என்னும் செம்பொருள்' எனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்கும் காரணமாதல் உடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாகக் கூறினார். எல்லாப் பொருளினும் சிறந்ததாகலான், வீடு சிறப்பு எனப்பட்டது. தோற்றக்கேடுகள் இன்மையின் நித்தமாய் நோன்மையால் தன்னையொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய் , தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி , அதனைச் 'செம்பொருள்' என்றார். மேல் 'மெய்ப்பொருள்' எனவும் 'உள்ளது' எனவும் கூறியதூஉம் இதுபற்றி என உணர்க. அதனைக் காண்கையாவது உயிர் தன்அவிச்சை கெட்டு அதனொடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல், இதனைச் 'சமாதி எனவும்' 'சுக்கிலத்தியானம்' எனவும் கூறுப. உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனான் யாதொன்று பாவிக்கப்பட்டது, அஃது அதுவாய்த் தோன்றும் என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபு ஆகலின், வீடு எய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கு ஏதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான், அதனை முன்னே பயில்தலாய இதனின் மிக்க உபாயம் இல்லை என்பது அறிக. இதனான் பாவனை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

மு.வரதராசனார் உரை
பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

சாலமன் பாப்பையா உரை
பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

குறள் 357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
ஓர்த்து - ஓர்த்தல் - ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; நினைத்தல்; கூர்ந்துகேட்டல்

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உள்ளது -  உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது

உணரின் - உணர்தல் -   - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

ஒரு - ஒன்று என்பதன் திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

தலையா-தல் - talai-y-ā-   v. intr. id. +. Tobecome prominent; மேன்மையாதல். தமருட் டலையாதல் (பு. வெ 3, 6).

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

ஒருதலை - இன்றியமையாமை; கட்டாயம்; நிச்சயம்; ஓரிடம்; ஒருசார்பு; ஒருபக்கம்.

பேர்த்து - பெயர்த்து, பெயர்த்தும்; பின்னும் 
பேர்த்தும் - pērttum   adv. id. Again;மறுபடியும். பின்னைப் பழம் பொருட்கும் பேர்த்துமப்பெற்றியனே (திருவாச. 7, 9).


உள்ள - உண்டாயிருக்கிற; உண்மையான.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டா - விரும்பாத

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

முழுப்பொருள்
சான்றோரிடம் கூர்ந்து கேட்டும், தன்னுள் ஆராய்ந்தும் தருக்கம் செய்தும் உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்தவர் இன்றியமையாத மறுபடியும் நிகழக்கூடிய பிறவியை விரும்பமாட்டார் (அல்லது பிறவி அவருக்கு இல்லை).

கம்பரின் கீழ்வரும் பாடல் இக்கருத்தை குறள் விளக்கமாக விரித்துச் சொல்கிறது. இது சுக்ரீவன் தன்னுடைய வீரர்களுக்கு சொல்வதாக நாடவிட்ட படலத்தில் வரும் பாடல்.
இருவினையும் இடைவிடா எவ்வினையும் இயற்றாதே இமையோர் எய்தும்
திருவினையும் இரும்பதம்தேர் சிறுமையையும் முறை ஒப்பத் தெளிந்து நோக்கிக்
கருவினை அது இப்பிறவிக்கு என்றுணர்ந்து அங்கு அதுகளையும் கடையில் ஞானத்து
அருவினையின் பெரும்பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கர் பாலார் (கம்ப.நாடவிட்ட 27)

இப்பாடலின் கருத்து: நல்வினை தீவினைகளாகிய இரண்டு வினைகளையும் இடைவிடாமல் தொடர்பு கொண்டுள்ள எந்தக் கருமங்களையும் செய்யாமல் தேவர்களும் புகழும் படியான நிறைந்த செல்வ வாழ்க்கையையும் பிச்சையாக இடும் சோற்றை எதிர்பார்த்திருக்கும் தாழ்வையும் சமமாகத் தெளிந்துப் பார்த்து இந்தப் பிறப்பு உண்டாவதற்கு மூலகாரணம் அந்த இருவினைகளேயாகும் என்று தெளிந்து அவ்வினைகளின் தொடர்பை அந்த இடத்திலேயே நீங்குதற்குரிய எல்லையற்ற தத்துவ அறிவினையுடைய போக்குவதற்கு அரிய இருவினைகளுக்குப் பெரிய பகைவர்கள் அம் மலையில் இருக்கின்றார்கள்; அவர்களை இங்கிருந்த படியே அவர்களிருக்கும் திசை நோக்கி தொழுவதற்கு உரியவராவர்.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின், பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா. ('ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக. மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.


மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

சாலமன் பாப்பையா உரை
பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

குறள் 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

எப்பொருள் - எந்த ஒரு பொருளையும் , கருத்தையும், தத்துவத்தையும், செயலையும், அறிவையும், கொள்கையையும் , பயனையும், தலைமையும்

எத் - எந்த 

தன்மைத்து - தன்மை -  குணம்; இயல்பு; நிலைமை; முறை; பெருமை; ஆற்றல்; நன்மை; மெய்ம்மை; தன்னைக்குறிக்குமிடம்; ஒரணி.

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

அப்பொருள் - அந்த பொருளை  (செயலை, தத்துவத்தை ... )

மெய்ப்பொருள் - உண்மை, உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று

காண்பது - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
தன்மை என்றால் குணம், இயல்பு, நிலைமை, முறை, பெருமை, ஆற்றல், நன்மை, மெய்ம்மை என்று பொருள்கள்/அர்த்தங்கள் உண்டு. 

ஆதலால் பொருள் எனப்படும் சொற்பொருள், செய்கை, தத்துவம், அறிவு, அறம், வீடுபேறு, தலைமை ஆகிய எதுவாயினும் அவை எத்தன்மைத்தாயினும் (அதாவது அதன் குணம் (நற்குணம், தீ குணம்), இயல்பு, நன்மை/தீமை என்று எத்தகையதாயினும்)  அப்பொருளின் உண்மையான நிலையான மெய்ப்பொருள் அதாவது உண்மை என்னவென்று ஆராய்ந்து அறிந்து காண்பதே அறிவு எனப்படும் ஞானம், கல்வி ஆகும்.

இதற்கு முன்பு இதேப்போன்ற சொற்தொடர் கொண்ட ஒரு குறள் "எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று அறிந்தோம். அதில் யார் சொல்லி கேட்டாலும் மெய்ப்பொருளை நாம் தான் அறிந்து ஆராயவேண்டும் என்று கூறியிருந்தார். இக்குறளில் எப்படிப்பட்ட தன்மையுடைய தாயினும் அதனுடைய மெய்ப்பொருளை நாம் தான் அறிந்து ஆராய வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

“மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்ற பழமொழியைச் நாம் அறிவோம். ஒரு பொருள் (கருத்துக்கூட) ஒளிரும் பொருளாய் தோற்றமளித்தாலும், அப்பொருளின் உண்மைத்தன்மையை அறிவதே உண்மையான ஞானம் செய்யும் செயல் ஆகும்.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் - யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது. (பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றவழி. அரசன் என்பதோர் சாதியும் சேரமான் என்பதொரு குடியும், வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின் கண் கற்பனை ஆகலின், அவ்வாறு உணராது, நிலம் முதல் உயிர் ஈறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து, அவற்றை நிலம் முதலாகத் தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டுசென்றால் , காரணகாரியங்கள் இரண்டும் இன்றி முடிவாய்நிற்பதனை உணர்தலாம். 'எப்பொருள்' என்ற பொதுமையான்,இயங்குதிணையும் நிலைத்திணையும் ஆகிய பொருள்கள்எல்லாம் இவ்வாறே உணரப்படும். இதனான் மெய் உணர்வினதுஇலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும் அப்பொருளினுடைய வுண்மையைத் தான் உண்மையாகக் காண்பது யாதொன்று அஃது அறிவாம். மெய்யென்பதூஉம், அறிவென்பதூஉம் ஒன்று: என்னை? எக்காலத்தும் எவ்விடத்தும் ஒரு தன்மையாக அழியாது நிற்றலின் மெய்யாயிற்று: எல்லாப் பொருளையுங் காண்டலால் அறிவாயிற்று.

மு.வரதராசனார் உரை
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.

சாலமன் பாப்பையா உரை
எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

Thirukkural - Management - Truthfulness
True knowledge is the ability to understand the truth behind people, things and events, according to Kural 355.

The mark of wisdom is to see the reality 
Behind each appearance.

Checking for truth in others' advice, ideas and suggestions is a challenge, but the challenge is a 
very fruitful effort. If we do not verify the validity and listen to everything that others say, we will lead someone's life instead of our own.

Accepting things without analyzing the truth in them and implementing them may lead to negative consequences. Do not accept the statements made by others at the superficial level. Go deep into the ideas, advice and suggestions, analyze them, understand them, and accept them. Analyzing the information, understanding the meaning and accepting the fact will help you gain profound knowledge.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும்

குறள் 354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
ஒன்பதாம்உயிரெழுத்து; முன்னிலையொருமைவிகுதி; சாரியை; தொழிற்பெயர்விகுதி; பண்புப்பெயர்விகுதி; வியப்பிடைச்சொல்; இரண்டாம்வேற்றுமைஉருபு; அழகு; கோழை; இருமல்; இளிஎன்னும்இசையின்எழுத்து; யானையைப்பாகரதட்டும்ஓசை; தலைவன்; கணவன்; ஆசான்; அரசன்; தந்தை; கடவுள்; அம்பு; நுண்மை; ஐந்து; ஐயம்; கடுகு; சருக்கரை.

ஐ - ஐயம்சந்தேகம்; அகப்பொருள்துறைகளுள்ஒன்று, ஐயக்காட்சி; ஐயவணி; இரப்போர்கலம்; பிச்சை; சிலேட்டுமம்; சிறுபொழுது; குற்றம்; மோர்.

உணர்வு - அறிவு; தெளிவு துயில்நீங்குகை; கற்றுணர்கை; ஒழிவு ஆன்மா புலன்

எய்தியக் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

கண்ணும்  கண்ணு-தல் - kaṇṇu-   5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).  
கண்ணு-தல்  v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.)

பயம் - அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம்; பால்; நீர்; பலன்; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்மை.  (வீடு பேறு பயவாமையின் பயம் எனப்பட்டது)

இன்றே - இல்லை 

மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து.

உணர்வுஅறிவு; தெளிவு துயில்நீங்குகை; கற்றுணர்கை; ஒழிவு ஆன்மா புலன்

இல்லாதவர்க்கு - இல்லாதவர் . 

முழுப்பொருள்
ஐந்து புலன்களையும் கடந்து ஒருவர் இருத்தல் என்பது மிக கடினமான ஒன்றாகும். ஆனால் உண்மையை உணரும் தன்மை இல்லாவிட்டால் ஐந்து புலன்களையும் கடந்தும் பயனில்லை. அதாவது பலர் கடமைகளில் இருந்து தப்பிக்க துறவு வாழ்க்கையை மேற்கொள்வர். அவ்வாறு கடைப்பிடிப்பதனால் ஒரு பயனுமில்லை. உயர்பொருளாம் இறைப்பொருளே உண்மையென உணர்வது, நிலையாமையை உணர்வது, பிறந்திறக்கும் பிறப்பின்மை என்பதை உண்மை என உணரவில்லை என்றால் ஐம்புலன்களை கடந்தும் பலனில்லை. 

பொறிபுலன்களுக்கு அப்பாற்பட்டு அந்தக்கரணங்களையும் கடந்து நிற்பவனாய் யோகிகளின் மெய்யுணர்வுக்கே புலப்படுபவனாய் உள்ளவன் பரம்பொருள் என்பதை, சுமந்திரனுக்கு இராமர் கூறுவதாகக்கூறும் கம்ப இராமாயணப் தைலமாட்டு (27) பாடலின் பகுதி இது:
அடக்கும் ஐம் பொறியொடு கரணத்து அப்புறம்
கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான்

அப்பொருளையே, “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்றும் வள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே பாடினார்.

“ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே” (சம்பந்தர்.தென்குடித் திட்டை6)

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
ஐயுணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம், மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு. (ஐந்தாகிய உணர்வு : மனம் , அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின் 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.

மு.வரதராசனார் உரை:
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.

Thirukkural - Management - Personality Development - Self Discipline
Self-discipline helps us gain self-control.

Prevention of wrong doings, delaying impulsive decisions, and overcoming personal shortcomings are possible with self-discipline. Valluvar teaches us the importance of self-realization, wisdom or higher consciousness  through Kural 354.

Where the sense of the Real is lacking, 
The other five senses are useless.

Even if a person has control over all the five senses — seeing, hearing, smelling, tasting, and touching — just the control over those senses without proper self- realization will not help him achieve greater things in life. Self-realization, wisdom or higher consciousness is more important than mere control of senses.

இருள்நீங்கி இன்பம் பயக்கும்

குறள் 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி 
மாசறு காட்சி யவர்க்கு
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்

நீங்கி - நீங்கல் - விலகுகை; பிளப்பு; புறம்பு.

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

பயக்கும் - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

மருள் - மயக்கம்; திரிபுணர்ச்சி; வியப்பு; உன்மத்தம்; கள்; குறிஞ்சியாழ்த்திறம்எட்டனுள்ஒன்று; பண்வகை; எச்சம்எட்டனுள்பிறவிமுதல்அறிவின்றிமயங்கியிருக்கும்நிலை; சிறுசெடிவகை; புதர்; பேய்; ஆவேசம்; புல்லுரு.

நீங்கி - - நீங்கல் - விலகுகை; பிளப்பு; புறம்பு.

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

அறு - aṟu   II. v. i. break as a rope does be cut asunder; அறுக்கப்படு; 2. be decided, be ended, தீர்க்கப்படு., aṟu   IV. v. i. cease, end, தீரு; 2. vanish, become extinct, இல்லாமல் போ, aṟu   VI. v. t. cut off, part asunder, வெட்டு; 2. kill by cutting the throat; 3. reap, அரி; 4. root out; 5. distribute, பகிர், 6. tease, worry, வருத்து; v. i. become a widow.

அறுதல்- கயிறுமுதலியனஇறுதல்; இல்லாமற்போதல்; தீர்தல் பாழாதல் செரித்தல் தங்குதல் நட்புச்செய்தல்; கைம்பெண்

காட்சி -பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

அவர்க்கு - அவருக்கு

முழுப்பொருள்
இன்பம் பயக்கும் மெய்யறிவு, வீடுபேறு என்கிற காட்சியை வேண்டுபவர் தன்னுள் உள்ள இருள் (எனும் மயக்கம், அறியாமை, துன்பம், குற்றங்களை) நீக்கிக்கொள்ள வேண்டும், எதன் மேலும் மயக்கம் அல்லது வியப்பு கொண்டு இருந்தால் அதில் இருந்து நீங்க/விலக வேண்டும், தன்னுள் உள்ள எவ்வித ஒரு மாசு (அழுக்கு, தீமை, பாவம், குற்றம், இருள்) ஆகியவற்றை அறுத்தல் வேண்டும்.

(தன்னுள் உள்ள அறியாமை நீக்கி மயக்கத்தை நீக்கி மாசினை அறுத்தால்) அவ்வாறு செய்தால்  அவர் இன்பம் பயக்கும் மெய்யுணர்ச்சியை அடைவார்.

கீழ்காணும் கம்பனின் கார்காலப் படலப்  (105) பாடல், மெய்யுணர்வால் பொருள்கள் மீது பற்று நீங்கதலை பாடுகிறது.
தீவினை, நல்வினை, என்னத் தேற்றிய
பேய் வினைப் பொருள்தனைஅறிந்து பெற்றது ஓர்
ஆய் வினை மெய்யுணர்வு அணுக, ஆசு அறும்
மாயையின் மாய்ந்தது -மாரிப் பேர் இருள்

பொருளாசையானது தீவினையை நல்வினை என எண்ணச் செய்யும். மெய் உணர்வால் பொருள் மீதுள்ள பற்றாகிய மாயை நீங்கும்.  அதுபோல முன்பனிப் பருவம் வந்தவுடன் மழைக்காலத்துச் செறிந்த இருள் நீங்கியது என்பது இவ்வுவமையின் கருத்து.

“மருளில் வண்குரு கூர்வண் சடகோபன்
தெருள்கொள்ளச் சொன்ன ஓரா யிரத்துள்” (திருவாய்.2.10:11)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மருள்நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு - அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையார் ஆயினார்க்கு, இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும். (இருள்: நரகம், அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. 'நீக்கி' எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும். 'மருள்நீங்கி' என்னும் வினையெச்சம், காட்சியவரென்னும் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. 'மாசு அறுகாட்சி' என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது 'நிரதிசய இன்பம்' என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.

மு.வரதராசனார் உரை
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Darkness will give way to joy/happiness (that will lead to moksha), when delusion / deception / fantasy is replaced with a flawless (pure) vision. Many of us would have lots of impurities (impure thoughts), perform wrong actions, delusional thoughts. If one gets conscious of those and replaces them with a flawless vision, we can come out of the darkness and enjoy true happiness.

Questions that I ask to the kid
What to do to move out of darkness? 
Delusion vs flawless vision. Which one will you choose? Why?


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு

குறள் 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் 
வானம் நணிய துடைத்து.
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
ஐயத்தின் - ஐயம் - சந்தேகம்; அகப்பொருள்துறைகளுள்ஒன்று, ஐயக்காட்சி; ஐயவணி; இரப்போர்கலம்; பிச்சை; சிலேட்டுமம்; சிறுபொழுது; குற்றம்; மோர்.

நீங்கித் - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

தெளிவு - விளக்கம், துலக்கம்; உடற்செழிப்பு; பதநீர்; நினைவு; மனஅமைவு; அறிவு; நற்காட்சி; உளக்குறிப்பு; நீக்கம்; சான்று; ஆராய்வு; நம்பிக்கை; சாறு; கஞ்சித்தெளிவு; இலாபம்; பொருள்புலப்படஅமையும்செய்யுளின்குணம்; பாடற்பயன்வகை.
தெளிதல் - தெளிவாதல்; அமைதியுறுதல்; ஒளிர்தல்; வெண்மையாதல்; குணப்படுதல்; செழித்தல்; ஒழிதல்; துளைத்தல்; அறிதல்; முடிவுக்குவருதல்; ஆராய்தல்; தேறுதல்; நம்புதல்; இலாபம்காணுதல்.
தெளிந்தார்க்கு -  தெளிந்தவர்களுக்கு, மெய் உணர்ந்தவர்களுக்கு,

வையகம் - மண்ணுலகம்; விலங்குஇழுக்கும்வண்டி; கூடாரவண்டி; சிவிகை; ஊர்தி; உரோகிணிநாள்.
வையத்தின் - உலகத்தில்

வானம் - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு.

நணியது - naṇi   n. நண்ணு-. Nearness, proximity; அணிமையான இடம்
உடைத்து - உடையது, இருக்கிறது

முழுப்பொருள்
வாழ்வின் உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று நோக்கி தன்னுள் உள்ள ஒவ்வொரு ஐயங்களையும் ஆராய்ந்து அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் (நூல்கள் பல கற்தல், மெய்ப்பொருள் கண்ட சான்றோர்களுடன் உரையாடி விவாதித்தல் என்று பல வழிகளில்) மேற்கொண்டு மெய்ப்பொருள் என்ன என்ற தெளிவு தனை அடைவதே சிறப்பாகும். இல்லையேல் வாழ்வில் அடி மேல் அடி வாங்கி செல்வது காலத்தை விரையமாக்கும். அப்படி நெறியான வழியில் மெய்யுணர்ந்து அதன் படி வாழ்ந்தால் அவருக்கு வானம் எனப்படும் வீடு அல்லது தேவர்கள் வாழும் வானுலகம் என்னும் பேறு மிக அருகில் இருக்கிறது என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஐயம் நீங்கிஎம் அறிவுமதித் தொழுகிய” (பெருங் 4.8:68)

பரிமேலழகர் உரை
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணிய துடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து. (ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ? எனத்துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்குஅவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல்உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தன்வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து. துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை
சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்

குறள் 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 
மற்றீண்டு வாரா நெறி
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
கற்று கற்கை - படித்தல்
கற்று - கற்றுக்கொள்ளுதல் - பயிலுதல்

ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல்

ஈண்டு - ஈண்டு-தல் - īṇṭu-   5 v. intr. 1. To gather,come together; கூடுதல் ஈண்டிய வடியவ ரோடும்(திருவாச. 2, 144). 2. To be close together; toget to be a compact mass, as the atoms of earth;செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை(புறநா. 19). 3. To abound, to be numerous;மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145). 4.To speed, haste; விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).--tr.To gouge, extract, pluck out, dig out; தோண்டுதல் மலர்க்கண்ணை யீண்ட . . . ஆழி யீந்தார் (தேவா.192, 5).  

கற்றீண்டு - (மெய்ப்பொருளை) கற்று (அனுபவம் மூலம்) அறிந்தவர்களிடம் கற்று

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

மெய்ப்பொருள் - உண்மை, உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

கண்டார் - உணர்ந்தவர் / அறிந்துக்கொண்டவர்

தலைப்படுதல் - ஒன்றுகூடுதல்; எதிர்ப்படுதல்; மேற்கொள்ளுதல்; பெறுதல்; முன்னேறுதல்; தலைமையாதல்; புகுதல்; வழிப்படுதல்; தொடங்குதல்.

தலைப்படுவர் - செல்லும் வாழ்வின் பாதை; செயல்படுவார்கள்

மற்று  - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

ஈண்டு ஈண்டு-தல் - īṇṭu-   5 v. intr. 1. To gather,come together; கூடுதல் ஈண்டிய வடியவ ரோடும்(திருவாச. 2, 144). 2. To be close together; toget to be a compact mass, as the atoms of earth;செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை(புறநா. 19). 3. To abound, to be numerous;மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145). 4.To speed, haste; விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).--tr.To gouge, extract, pluck out, dig out; தோண்டுதல் மலர்க்கண்ணை யீண்ட . . . ஆழி யீந்தார் (தேவா.192, 5).  -

மற்றீண்டு - மீண்டும் இந்த உலகில் வந்து வாழ பிறக்க

வாரா - வாராத

நெறி - வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள்நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரைமுதலியவற்றின்நடை; வீடுபேறு; கோயில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக்குழி; புறவிதழ்ஒடிக்கை; காண்க:நெறிக்கட்டி; மனநிலை.

முழுப்பொருள்
வாழ்வில் மெய்ப்பொருள், நிலையான பொருள் என்றவற்றை உணர கற்க தக்க அற நூல்களும், ஆன்மீக நூல்களும் இன்றியமையாததாகும். அதைப்போல், அவற்றை கசடற (faultlessly. கசடு - குற்றம்) கற்க, அதனை கற்று, பட்டு உணர்ந்த ஒருவரை குருவாக கொண்டு கற்பது இன்றியமையாததாகும்.

அப்படி ஒரு குருவிடம் மெய்ப்பொருள் யாது என்று கற்று உணர்ந்தவர், பின்பு அதனை மனதில் அவதானித்து தியானித்து கொண்டே இருந்தார் என்றால் அவர் மெய்ப்பொருளை இவ்வுலகிலேயே காணும் வழியை தேர்ந்தேடுப்பார். அதில் பயணிப்பார்.

அப்படி மெய்ப்பொருள் வேண்டி / தேடி செல்வார் மீண்டும் மானுட வாழ்வில் பிறவி எடுக்க மாட்டார் என்று சொல்கிறார் திருவள்ளுவர். 

ஒருவர் நூல்களை படித்தால் மட்டும் போதாது. மெய்ப்பொருள் அறிய, அவனை அறிய, கல்வி, கேள்வி, தெளிவு, உன்னம் (பாவனை) ஆகியவற்றைக் கொள்ள வேண்டும். 

கண்டார் என்று சொன்னது எதற்கு என்றால் மெய்ப்பொருளை இவ்வுலகிலேயே காணலாம், இதற்காக மற்ற உலகிற்கு (மடிந்து) செல்ல வேண்டியதில்லை

இதனை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். இந்தப் பிறவியிலேயெ மெய்ப்பொருளை காண, அதற்கான வற்றை கற்று, அந்த வழியைத் தேடி செல்வோர் (பெய்ப்பொருளை அடைவார், ஆதலால்) மீண்டும் பிறவி எடுத்து மெய்ப்பொருள் கற்க வேண்டிய அவசியமில்லை என்று. 

ஆத்திச்சூடி
பேதைமை அகற்று.
பெரியாரைத் துணைக் கொள்.
சான்றோர் இனத்து இரு.
மேன்மக்கள் சொல் கேள்.
உத்தமனாய் இரு.
வித்தை விரும்பு.
எண் எழுத்து இகழேல்
சேரிடம் அறிந்து சேர்.
தக்கோன் எனத் திரி.

பையலோடு இணங்கேல்.

மேலும்: அஷோக்
மேலும்: ஞானதானம்

திருவாசகத்தில் வரும் சிவபுராணத்தில் (87), “மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே” என்பார் மாணிக்கவாசகர்.  

அறநெறிச்சாரப்பாடல் (125) ஒன்று, “அறிவிற் கறிவாவ தென்னின் மறுபிறப்பு மற்றீண்டு வாரா நெறி” என்று இதே கருத்தைச் சொல்கிறது. 

கம்பரும்
”யாவரும் எவையுமாய் இருதுவும் பயனுமாய்ப்
பூவுநெல் வெறியுமொத் தொருவரும் பொதுமையாய்
ஆவனீ யாவதென் றறிவினார் அருளினார்
தாவரும் பதமெனக் கருமையோ தனிமையோ” (கம்ப.வாலி 124)

“ஊனம்உற்றிட, மண்ணின் உதித்தவர், 
ஞானம் முற்றுபுநண்ணினர் வீடு என” (கம்ப.பொழில்.இறுத்த 23) என்கிறார். குற்றம் நேர்ந்ததால், இம்மண்ணுலகத்தில் பிறந்த தேவர்கள், பின்பு முழு ஞானம் பெற்று, தங்கள் உலகமாகிய வீட்டினை அடைந்தார்கள் என்று இக்குறளை ஒட்டியே சொல்லியுள்ளார்.

பரிமேலழகர் உரை
ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடையதேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர். 

விளக்கம்
('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று; அவை, கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மை மக்கட் பிறப்பில் மெய்ப்பொருள் நூல்களைக் கற்றும் பட்டறிவுள்ள மெய்யோதியரால் செவியறிவுறுத்தப் பெற்றும் மெய்ப்பொருளுணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வராத வழியைப் பெறுவர்.

உலகநூற் கல்வி போன்றே மெய்ப்பொருட் கல்வியும் பல்வேறு நிலையிற் பல்வேறு ஆசிரியர்பாற் கற்றுங் கேட்டுமறிய வேண்டியிருப்பதால் 'கற்று' என்றும், நிலவுலகிலன்றித் தேவருலகில் வீடுபேற்று முயற்சிக்கிடமின்மையால் 'ஈண்டு' என்றுங் கூறினார். 'ஈண்டுவாரா நெறி' வீட்டு நெறி. வீட்டையளிப்பது இறைவனேயாதலால் அவனை யறிவதற்கு ஆம்புடைகள் (உபாயங்கள்) கல்வி, கேள்வி, தெளிவு, உன்னம் (பாவனை) என நான்காம். கேள்வியும் கல்வியுளடங்குமாதலின் அவையிரண்டும் இங்கே ஒருங்கே கூறப்பட்டன.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

பொருள்: கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் -(கற்கத் தக்க நூல்களைக்) கற்று இவ்வுலகின்கண் மெய்ப்பொருளைக் கண்டவர், மற்று ஈண்டு வாரா(த) நெறி தலைப்படுவர் - திரும்பி இவ் வுலகிற்கு வாராத வழியை அடைவர்.

அகலம்: மெய்ப்பொருளைக் காண்டற்குக் கல்வி இன்றியமையாத தென்பதைக் குறிப்பதற்காகக் ’கற்று’ என்றார். கற்கத் தக்க நூல்களாவன, அறநூலும் ஆன்ம நூலும். இவ் வுலகத்தைவிட்டு வேறு உலகத்தில் மெய்ப் பொருளைக் காணலாகுமோ என்று நினைப்பாரைக் கருதி, இவ் வுலகின் கண்ணேயே மெய்ப்பொருளைக் காணலாகும் என்றார். மெய்ப்பொருளைக் கண்டார் பிறப்பு இறப்புக்களினின்று நீங்குவர் என்பது ஒரு தலையாகலின், மற்று ஈண்டு வாராநெறி தலைப்படுவர் என்றார். வாராத என்பது செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு நின்றது. இக் குறளால் மெய்ப் பொருளை இவ் வுலகத்தின்கண்ணே காணலாகும் என்றார்.

கருத்து: மெய்ப் பொருளைக் கண்டார் பிறப்பினை அடையார்.

நன்றி: திருவருட்பா
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

பஜகோவிந்தமும் மறுபிறவியும்
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே 

புனரபி ஜனனம் - மீண்டும் ஒரு முறை பிறப்பு
புனரபி மரணம் - மீண்டும் ஒரு முறை இறப்பு
புனரபி ஜனனி ஜடரே சயனம் - மீண்டும் ஒரு முறை தாயின் கருப்பையில் தூக்கம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே - இந்த பிறப்பு-இறப்பு என்னும் சுழல் கடப்பதற்கு மிகக் கடினமானதொன்றாக இருக்கிறது
க்ருபயா பாரே பாஹி முராரே - அருள் கூர்ந்து என்னைக் காப்பாய் பெருமாளே.

மணக்குடவர் உரை
இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.

மு.வரதராசனார் உரை
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை
பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

இந்த உலக தோற்றத்தின் உண்மையை, உயிர் சுமந்து வாழும் வாழ்க்கையின் உண்மையை, ஆராய்ந்து கற்று அறிவதே மெய்ப்பொருளை அறியும் வழியாகும். உலகில் இயங்கும் பொருள் இயங்காப் பொருள் என இருவகைப் பொருட்கள் இருக்கின்றன. இயங்கும் பொருட்களே, இயங்காப் பொருள்களை இயக்குகின்றன. இந்த உண்மையைக் கண்ட மனிதன், இவ்வுலகையும் உலக உயிர்களையும் இயக்கும் பொருள் ஒன்று இருக்க வேண்டுமே என ஆராய்ந்தான். உலகத்தை இயக்கும் அப்பெரும்பொருளாகிய சக்தியை இயக்கி என்றான். இயக்கியோடு இசைந்தவன் இயக்கன் ஆனான். அண்ட கோளங்களை இயக்கும் அம்மெய்ப் பொருளை இன்றைய மனிதர்களாகிய நாம் கடவுள் என்கிறோம்.

அந்த மெய்ப்பொருளை அறிந்தோர், இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறந்து, இறந்து சுழழும் வழியில் வராது வேறு வழியுள் செல்வர். அந்த மாற்றுவழியை, அதாவது கடவுளை அடையும் வழியை திருவள்ளுவர் வாராநெறி என அழைத்துள்ளார். வாரா நெறி என்பது திரும்பவும் பிறவி வராத வழி.  நாம் மீண்டும் பிறவி எனும் வழியே வரத்தேவை இல்லை. அதனாலேயே அதனை நம் முன்னோர் வாராநெறி என அழைத்தனர். 

 மாணிக்கவாசகரும் திருவாசகத்தில்
வாரா வழியருளி வந்து என் உளம் புகுந்த
ஆரா அமுதாய்...............”                                   -(ப.திருமுறை: 8: 8: 2) 
என திருவள்ளுவர் கூறிய வாராநெறியை, வாராவழி எனச் சொல்கிறார்.

மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து வராதிருக்கும் வழியில் செல்ல வேண்டுமானால், உலகின் மெய்ப்பொருள் எது என்னும் உண்மையைக் கற்று அறியுங்கள் என இக்குறள் கூறுகிறது.

நன்றி: ஆத்திகம்
ஒனக்கு அடுத்த பிறவின்னு ஒண்ணு வேணாம்னா, உண்மையான மெய்ப்பொருள் இன்னாதுன்னு கத்துக்க முயற்சி பண்ணு.
அதுக்கு ஒரு நல்ல குருவைத் தேடிப் போயி கத்துக்கறது நல்லது.
அவர் சொல்றதைக் கேட்டுக்க.
அப்புறமா நீயே ஒனக்குள்ளாற யோசி.
ஒரு அறிவு வரும்.
அத்தைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ.
அவ்ளோதான்!