Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label வினைசெயல்வகை. Show all posts
Showing posts with label வினைசெயல்வகை. Show all posts

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்


குறள் 680
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள் 
உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.

சிறியார் - சிறியவர், சிறியர், சிறி யோர், s. The low, the base, கீழ்மக்கள். 2. Small persons, சிறுவர்; [ex சிறுமை.] சிறியார்க்கினியதுகாட்டாதேசேம்புக்குப்புளிவிடாதாக் காதே. Give not dainties to children, and spare not tamarind with சேம்பு. i. e., indulge not hurtfully, neither hesitate as to what is needful.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

நடுங்கல் - அச்சம்

அஞ்சி - அஞ்சுதல் -  பயப்படுதல்

குறை - குற்றம்; குறைபாடு; வறுமை; எஞ்சியது; மனக்குறை; தவறு; நேர்த்திக்கடன்; இன்றியமையாப்பொருள்; செயல்; வேண்டுகோள்; வேண்டுவது:துண்டம்; ஆற்றிடைக்குறை; சொல்லின்எழுத்துக்குறை; ஆறாம்வேற்றுமை; உண்ணுந்தசை; அரசிறை

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

கொள்வர் - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை

பெரியார்ப் - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர்.

பணிந்து - பணி-தல் - paṇi-   4 v. cf. pan. [M. paṇi-yuka.] intr. 1. To be low in height, as ahouse, a roof or a branch; to be short, as aperson or post; to be lowered; தாழ்தல் பணியியரத்தைநின் குடையே (புறநா. 6). 2. To behumble; to be submissive, as in speech; பெருமிதமின்றி யடங்குதல். எல்லார்க்கு நன்றாம் பணிதல்(குறள், 125). 3. To decline, as a heavenly body;to descend lower, as a bird; இறங்குதல் (W.) 4.To spread; பரத்தல் (சீவக. 2531, உரை ) 5. Tobecome inferior; தாழ்ச்சியாதல். 6. To fall, asprices, wages; குறைதல் (J.) 7. To be reducedin circumstances; எளிமையாதல். (J.)--tr. 1. Tobow to, make obeisance to; வணங்குதல் உடையான் கழல்பணிந்திலை (திருவாச. 5, 35). 2. To eat;உண்ணுதல். பூதம் பணிகிறதுபோலப் பணிகிறான்.(J.)  

முழுப்பொருள்
அளவிலும் அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் ஒரு சிறிய நாடு தன்னைவிட பெரிய நாடுகளை கண்டு உள்ளே நடுங்கி அச்சம் கொண்டு ஒரு மனக்குறையுடன் வாழ்தலை காட்டிலும் அப்பெரிய நாடுடன் தாழ்ந்து பணிந்து இணக்கமாக நட்பாக சென்றுவிடுவதே சிறந்தது. நட்பாக இயைந்துவிட்டால் அச்சம் என்று ஏதுமில்லை.  பெரிய நாடுகளுடன் போட்டிப்போட்டு வெற்றிப்பெற முடியாது. அச்சம் இல்லாமல் மற்ற காரியங்களில் முழு கவனத்தையும் செலுத்தி ஆக்கம் செய்யலாம். அதுவே நன்மை பயக்கும்.

அப்படி என்றால் பெரிய நாட்டிற்கு அடிபணிவதா / அடிமையாவதா? இல்லை. நட்பென்று ஆகிவிட்டால் அங்கே அடிமைத்தனம் வராதே. இருநாடுகளும் பேசி பல பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாம்.

இது காரியம் பெரியதா அல்லது வீரியம் பெரிதா என்ற சொலவடையை ஒட்டியகுறளாகத்தான் கொள்ளவேண்டும்.மானத்தைப் போற்றும் அரசர்களுக்கு இது சற்றும் பொருந்தாவிட்டாலும், உலகியல் வழக்கில் நடக்கக்கூடியதே என்கிறார். 

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
உறை சிறியார் - ஆளும் இடஞ் சிறியராய அமைச்சர்; உள்நடுங்கல் அஞ்சி -தம்மின் வலியரால் எதிர்ந்தவழித் தம்பகுதி நடுங்கலை அஞ்சி; குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வார் - அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர். (இடம்: நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேல் ஏற்றப்பட்டது. மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதல் அரிதாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியாராயினார் தம் பகுதியும் அஞ்சி நீங்கின் முதலொடும் கெடுவராகலின், அது வாராமல் சிறிதுகொடுத்தும் சந்தியை ஏற்றுக்கொள்க என்பதாம். பணிதல் மானமுடையார்க்குக் கருத்து அன்மையின் , 'கொள்வர்' என உலகியலால் கூறினார், இவை மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உறையும் இடம் சிறியார் தமது இடம் நடுங்குதற்கு அஞ்சித் தமது குறைதீரப் பெறின் தம்மின் பெரியாரைத் தாழ்ந்து நட்பாகக் கொள்வர். இது சிறையானால் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை
சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

 

குறள் 679
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள் 
நட்டார்க்கு - நட்டார் - நண்பர்; உறவினர்.

நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான

செயலின் - செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

விரைந்ததே - விரைதல் - virai-   12 v. intr. 1. To bespeedy, swift, rapid; வேகமாதல். தன்னை வியந்தான் விரைந்து கெடும் (குறள், 474). 2. To hurry,hasten; அவசரப்படுதல். 3. To be importunate,intent, eager; ஆத்திரங்காட்டுதல். (W.) 4. To beperturbed, disturbed in mind; மனங்கலங்குதல்.விரையாது நின்றான் (சீவக. 513).

ஒட்டாரை - ஒட்டார் - பகைவர்

ஒட்டுதல் - ஒட்டவைத்தல்; பொருத்துதல்; சார்தல்; பந்தயம்கட்டுதல்; துணிதல்; கிட்டுதல்; கூட்டுதல்; இணைத்தல்; தாக்குதல்; உடன்படுதல்; ஆணையிடுதல்; நட்பாக்குதல்; வஞ்சினங்கூறல்; பதுங்கிநிற்றல்; அடைகொடுத்தல்; சுருங்குதல்; வற்றுதல்.

ஒட்டிக்கொளல் - தம்முறவாக சேர்த்துக்கொள்ளுதல் வினையை செப்பமுற செய்யும் வழியாம்

முழுப்பொருள்
நண்பர்களுக்கு / நட்பு நாடுகளுக்கு நல்ல செயல்களை விரைந்து செய்தலைக்காட்டிலும் நமது பகைவர்களின் பகைவர்களிடம் விரைந்து நட்புப்பாராட்தல் மிக அவசியமாகும்.  ஏனெனில் ”பகைவனுக்குப் பகைவன் நண்பன்” என்பது சாணக்கிய நீதி.

மேலும் ஔவையின் கூற்றுபடி, “வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்” என்பதை நினவில் கொண்டால், அவரைப் பகையாகக் கருதி அவரோடு இணங்குதலைத் தவிர்க்கவே வேண்டும். தவிரவும் இனியவை  நாற்பதிலும் (18), “நட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே” என்று இதே கருத்து கூறப்படுகிறது. பகையை பகை மறந்த உறவாக்குதல் என்பது நெடிய பாதை; அதுவே செயலானால், செய்யவேண்டியவையெல்லாம் முடங்கிவிடும். அதனால் அதனை வினைச் செயல்வகை அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லிருக்கமாட்டார். அதுவும் அமைச்சர்களுக்கு உண்டான வழிமுறைகளைச் சொல்லும் அதிகாரத்தில் சொல்லமாட்டார். தவிரவும் ஆட்சிமுறை வழிகளில் பகை ஒறுத்தலையே அமைச்சர்களுக்கு வழிமுறையாகச் சொல்லப்படுகிறது. ஆதலால் இங்கு ஒட்டார் எனப்படுவது பகைவனின் பகைவனையே குறிப்பதாக கொள்ளவேண்டும்.

நான் அமேரிக்காவை சிறந்த உதாரணமாக சொல்வேன். அவர்கள் பக்கத்து நாடான Mexico வை ஒரு எதிரி நாடாகவே கருதுவர். அங்கே சுவர் எழுப்ப வேண்டும் என்றெலாம் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் பேசுவர். ஆனால் இந்தியாவுடன் நட்புப்பாராட்டுவர். ஏனெனில் இந்திய சீனாவுக்கு எதிரி. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரி. அதேப்போல் சீனா பாகிஸ்தானுடன் நட்புப்பாராட்டும் ஏனெனில் பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி. ஸ்ரீலங்கா சீனாவுடன் நட்பு பாராட்டும். ஏனெனில் சீனா இந்தியாவின் எதிரி.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே - வினை செய்வானால் தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொடல் - தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக் கோடல். (அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பார். 'விரைந்தது' என்றார்; 'விரைந்து செய்யப்படுவது' என்றவாறு. வினைசெய்யும் திறமாகலின் பகைவரோடு ஒட்டாராயிற்று. தன் ஒட்டார் பிறருட்கூடாமல் மாற்றி வைத்தல் எனினும் அமையும்.).

மணக்குடவர் உரை
தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும் பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை விரைந்து செய்யவேண்டும். இஃது அரசர்க்கும் ஒக்கக் கொள்ளவேண்டு மாயினும் அமைச்சர்தம் தொழிலாக ஈண்டுக் கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

 

குறள் 678
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
வினையான் - வினை செய்பவன்
வினையால் - செயல்களால்

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

ஆக்கி - ஆக்குதல்  - செய்தல்; படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல்; மாற்றுதல் உயர்த்துதல்

கோடல் - கொள்ளுகை; பாடம்கேட்கை; மனத்துக்கொள்ளுகை; வளைவு; முறித்தல்; வெண்காந்தள்.

ஆக்கிக்கோடல் - செய்து கொள்ளல்

நனை  - பூவரும்பு; தேன்; கள்; யானைமதம்.

கவுள் - கன்னம்; யானையின்கன்னம்; யானையின்உள்வாய்; பக்கம்.

நனைகவுள் – மத நீர் ஒழுகும் கன்னங்களை உடைய (வெறியூட்டப்பட்ட)

யானையால் -  ஒரு யானையைக் கொண்டு

யானை - துதிக்கையுடையவிலங்குவகை; ஆனைமரம்.

யாத்தல்- செய்யுளமைத்தல்; கட்டுதல்; பிணித்தல்; நீர்முதலியனஅணைத்தல்; விட்டுநீங்காதிருத்தல்; சொல்லுதல்.

அற்று - அத்தன்மையானது

யாத்தற்று - பிணைப்பது போன்றது

முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் பொழுதே மற்ற செயல்களையும் செய்து நிறைவேற்றிக்கொள்வது என்றென்பது (உள்வாயில் இருந்து) மதநீர் ஒழுகும் யானையை (அதாவது கூடல் வேட்கையுடன் இருக்கும் யானை) மற்றொரு (கும்கி)யானையைக் கொண்டுப் பிடிப்பதுப்போலாகும்.  ஒரு செயலை செய்யும் பொழுதே, அதனால் வரும் பயன் அல்லது ஒத்த எண்ணங்களைக் கொண்டு மற்ற செயல்களைச் சாதிப்பது செயல் திறனாகும்.  ஆங்கிலத்தில் synergy என்று ஒரு வார்த்தை உண்டு. அது போலவே இதுவும். 

மதநீர் ஒழுகும் யானை என்றது கூடல் வேட்கை ஊட்டப்பட்ட யானையைக் குறிப்பது. இதே போன்று ஒரு செயலின் வேகத்தில், சாதிக்கவேண்டும் என்கிற வேட்கையைக் கொண்டே பிறசெயல்களை செய்து முடித்துக்கொள்வது அமைச்சர்கள் கொள்ளவேண்டிய செயல் திறனும் வகையுமாகும்.

உதாரணமாக நான் கார் (car), லாரி (Lorry, Truck) போன்ற வண்டிகளின் மைய இயந்திரங்களை(Engine) உற்பத்தி செய்யும் ஒரு மிகபெரிய நிறுவனத்தில் வேலை செய்தேன். அவர்கள் அங்கு Engineகளை உற்பத்தி செய்தாலும், அவர்கள் கூடவே அதற்கான /இயந்திரங்களுக்கான பாகங்களையும் (Engine parts) விற்றனர். ஆனால் அவர்கள் பாகங்களை தயார் செய்பவர்கள் அல்ல. அவர்கள் பாகங்களை மற்றவர்களிடம் வாங்கி இயந்திரத்தை தயார் செய்து விற்பார்கள். அதுவே பெரிய வேலை. அத்துடன் பாகங்களை விற்பதும் ஒரு வேலை தான். அதனையும் செய்வது அவர்களுக்கு நல்ல லாபத்தை தருகிறது. இதற்கென்று அவர்கள் பெரிதாக வேலை செய்யவில்லை. இதை தனியாக செய்தால் அது மிக பெரிய வேலை. பெரிய வேலையுடன் இதனை சேர்த்து செய்வதால் இது சிறிய அளவு வேலை பளு தான்.  அதற்கு ஆட்களை நியமித்து வேலையை முடித்தார்கள். லாபமும் நன்றாக இருந்தது (ஏனெனில் இதற்கென்று தனி கட்டுமான செலவுகள் அதிகம் இல்லை).

பழமொழி நானூற்றுப் பாடலொன்று இதே ஈற்றடியை வைத்துப் பாடல் செய்திருப்பதால், “யானையால் யானையாத் தற்று” என்பது ஒரு நன்கு அறியப்பட்ட பழமொழியாகவும், யானையைக் கொண்டு யானையைப் பிடிக்கும் பழக்கமும் நெடுங்கால பழக்கம் என்று தெரியவருகிறது. அப்பாடலானது:

ஆணம் உடைய அறிவினார் தம்நலம்
மாணும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்
மான்அமர் கண்ணாய்! மறம்கெழு மாமன்னர்
யானையால் யானையாத் தற்று. (பழமொழி 223)

“தெள்ளி உணரும் திறனுடையார் தம்பகைக்
குள்வாழ் பகைவர்ப் பெறுதல் உறுதியே
கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ
முள்ளினால் முள்களையு மாறு” (பழமொழி,54.1)

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
வினையான் வினை ஆக்கிக்கோடல் - செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக்கொள்க; நனைகவுள் யானையால் யானை யாத்தற்று - அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிதுமோர் யானையைப் பிணித்ததனோடு ஒக்கும். (பிணித்தற்கு அருமைதோன்ற 'நனைகவுள்' என்பது பின்னும் கூறப்பட்டது. தொடங்கிய வினையானே பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க. செய்யவே. அம் முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒரு வினையால் பிறிதொரு வினையைச் செய்து கொள்வது, ஒரு மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும். இது தமக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுவார் பக்கல் பகையாய் வருவாரில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
In general multi-tasking is not productive. However, an effective leader or a person, whenever he or she does an bigger task, he would also accomplish other related tasks by taking advantage of the synergy associated with it. For e.g., a company that manufactures an engine can also sell its parts, a person visiting a big city for visiting a family or for a business meeting can also visiting nearby historical places/music concerts etc. As a caution, care should be taken that side tasks don't distract us from the main task

Questions that I ask to the kid
What is the difference between multi tasking and synergy? Who can pull off synergy? Give an example of synergy.

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

குறள் 675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள் 
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

கருவி - ஆயுதம்; சாதனம்; கவசம்; கேடகம்; குதிரைக்கலணை; குதிரைச்சம்மட்டி; தொகுதி; மேகம்; தொடர்பு; ஆடை; ஓவியம்; அணிகலன்; துணைக்காரணம்; இசையுண்டாதற்குரியயாழ்முதலியகருவிகள்.

காலம் - நேரம், பொழுது, பருவம், சமயம்,  தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்;

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

இடனொடு - இடன் இடம், அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம்இருப்பவன்.
இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

ஐந்தும் - ஐந்து

இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்

தீர - முற்ற; மிக.

தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல்.

எண்ணிச்  - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள் 
ஒரு செயலை செய்யும் முன் கீழ்காணும் ஐந்திணை ஆராய்ந்து எண்ணி அவற்றுள் அறியாமை குற்றங்கள் நீக்க வேண்டும். இவற்றில் எவ்வித குழப்பமும், ஐயப்பாடும், மயக்கமும் இருத்தல் கூடாது.  அதன் பின்பே அச்செயலை செய்யவேண்டும். 

1. பொருள் - செயலிற்கு தேவையான  செல்வம் அதாவது பொருள் ஆகியவற்றை ஆராய்ந்து கணக்கிட வேண்டும் 

2. கருவி - செயலிற்கு தேவையான கருவிகள் / சாதனங்கள், திறன்கள் ஆகியவற்றை வல்லுனர்களுடன் ஆலோசித்து அறிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் கருவிகள், திறன் ஆகியவற்றில் ஏதாவது குற்றம் குறை இருப்பின் அவற்றை கலையவேண்டும். 

3. காலம் - செயலை செய்வதற்கான தக்க காலத்தை/பருவத்தை ஆராயவேண்டும். செய்யக்கூடாத நேரத்தையும் ஆராயவேண்டும். செயல் செய்து முடிக்க தேவையான சரியான அளவு காலத்தையும் கணக்கிட வேண்டும். செயல் முடிக்க வேண்டிய (அதாவது தேவை) காலத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். 

4. வினை  -  செயல் செய்வதற்கான திட்டம்  வியூகம் ஆகியவற்றை நன்கு ஆராயவேண்டும். அவற்றில் ஏதேனும் குற்றம் இருக்கிறது என்று ஆராய வேண்டும். திட்டமிடப்படாத தோல்விகளை இடையூறுகளை சமாளிக்க ஆவனவற்றை திட்டமிட வேண்டும். 

5. இடம் - செயலை செய்வதற்கான ஏற்ற இடத்தை தேர்வு செய்யவேண்டும். அவ்விடத்தில் மேற்சொன்ன நான்கும் பொருந்துமா என்று பார்க்க வேண்டும்.

இக்கருத்தோடு இயைந்து கம்பரும் தனது கம்பராமாயண மந்திரப்படலப்  (8)பாடலில், “காலமும் இடனும், ஏற்ற கருவியும் தெரியக் கற்ற நூலுற நோக்கித் தெய்வம் நுனித்தறம் குணித்த மேலோர்” என்பார்

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினைசெய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல் - மயக்கம் அற எண்ணிச் செய்க. (எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும்¢ பொருளும். கருவி-தன்தானையும் மாற்றார் தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர் வல்ல வினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.).

மணக்குடவர் உரை
பொருளும், கருவியும், காலமும், வினையும் வினைசெய்யும் இடமுமென்னும் ஐந்தினையும் மயக்கந்தீர எண்ணிப் பின்பு வினைசெயத் தொடங்குக. இவற்றுள் ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு வகைப்படும்:-1. பொருளாவது கெடும் பொருளும் பெறும் பொருளும், 2. கருவியாவது தனக்கு உள்ள படையும் மாற்றரசர்க்கு உள்ள படையும், 3. காலமாவது தனக்காங்காலமும் மாற்றரசர்க் காங்காலமும், 4. வினையாவது தான் செய்யும் வினையும் பகைவர் செய்யும் வினையும், 5. இடமாவது தனக்கா மிடமும் பகைவர்க்கா மிடமும் ஆம். இவை செய்யும் வினைக்கு முற்பட வேண்டுதலின் முற் கூறப்பட்டன.

மு.வரதராசனார் உரை
வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.


Thirukkural - Management - Decision Making
In addition to the four components of decision making highlighted in Kural 471, Kural 675 suggests 
that five more weapons are also important for effective decision-making.
675)
Five things should be pondered over before you act
Resources, weapons,  time, place and deed

They are: 1) Right resources, 2) Right tools and techniques, 3) Right time, 4) Right action, and 5) Right place. If a person executes a task after analyzing all the above five, he will be a successful executive. Decide and execute.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

குறள் 674
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள் 
வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

என்ற - eṉṟa   part. என்-. An adjectivalexpression signifying comparison; ஓர் உவமவாய்பாடு. வாயென்ற பவளம் (தொல். பொ 286, உரை; eṉṟa   a. -NNa, -nna -ண்ண, -ன்ன b. -nkra -ங்கற a. said above (pt.) b. called (pt.)

இரண்டின் - ஆகிய இரண்டு

எச்சம் - காரியம், எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலே வரும் குறை: குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில் பிண்டம் என்னும் எட்டுவகை ஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபு முற்று எச்சங்கள் கொண்டு முடியும் பெயர் வினைகள்; பெயரெச்ச வினையெச்சங்கள்

நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

நினையுங்கால் - நினைக்கும் பொழுது

தீயெச்சம் - அவிக்கப்படாத நெருப்பின் மிச்சம்

போலத் - போன்று

தெறும் - தெறுதல் - சுடுதல்; காய்ச்சுதல்; கோபித்தல்; வருத்துதல்; தண்டஞ்செய்தல்; அழித்தல்; கொட்டுதல்; பகைத்தல்; கொல்லுதல்; தங்கல்; நெரித்தல்.

முழுப்பொருள் 
விறகு எரிந்துகொண்டு இருக்கும். அதை முழுதாக அணைக்கவில்லையென்றால் வெளியே சாம்பல் தெரியும் ஆனால் உள்ளே நெருப்பு இருக்கும். சாம்பல் இருக்கிறதே என்று கை வைத்தால் உள்ளே இருக்கும் நெருப்பு சுடும். ஆதலால் நெருப்பை முழுவதுமாக அணைக்கவேண்டும். மிச்சம் வைக்கக்கூடாது.

அதுப்போல செய்ய தொடங்கிய செயலில் முழுவதுமாக முடிக்காமல் மிச்சம் வைக்க நினைத்தாலோ அல்லது அழிக்க முற்பட்ட பகையினில் அல்லது பகைவர்களில் மிச்சம் வைக்க நினைத்தாலோ அது நமக்கு அவிக்க படாத நெருப்பின் மிச்சம் போன்று சுடும் அல்லது கொல்லும். ஏனெனில் முடிக்கப்படாத காரியம் பிற்காலத்தில் தீங்கு விளைவிக்க நேரலாம். முற்றிலும் அழிக்கப்படாத பகைவர் பின்பு வளர்ந்து நம்மை அழிக்கலாம்.

மேலும் நாம் விட்டொழிய நினைக்கும் கெட்ட பழக்கம் (உதாரணமாக சிகரேட்  /cigarette குடிப்பது) விட்டொழிந்தால் முழுவதுமாக விட்டொழுக வேண்டும். அன்றொருநாள் இன்றொருநாள் என்று அந்த பழக்கத்தை பின்பற்றினால் அது நம்மில் சமயம் பார்த்து விருட்சமாக மீண்டும் வேகமாக முளைத்தெழும். நம்மை அழிக்கும்.

சில செயல்கள் தொடங்கிய பின் நடுவிலே முடிக்கவோ அல்லது கைவிடவோ நேரும். அது காலத்தையும் சூழ்நிலையும் பொருத்ததாகும். ஆனால் இங்கு திருவள்ளுவர் அடிக்கோடு இடுவது நினையுங்கால் என்ற வார்த்தையை. காரணமின்றி சோம்பலினாலும் செருகினாலும் தொலைநோக்கு பார்வையில்லாமல் நினைத்தால் நமக்கு அழிவு வரும் என்கிறார் திருவள்ளுவர்.

இதையே ஒளவையார் "செய்வன திருந்த செய்" என்று ஆத்திச்சூடியில் கூறியிருக்கிறார்.

பாரதியார் தனது கீழ்காணும் பாடலில் ஒரு தீப்பொரியின் வலிமையை உணர்த்துகிறார். அதுபோலவே மிச்சங்கள் பெரிதாய் வளர்ந்து ஒரு காட்டை அழிப்பது போல் அழித்துவிடும்.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

மேலும் : அஷோக் உரை 

ஒப்புமை
”பணிக்குறை வருத்தம்” (குறுந்.333:5)

“கருப்பை போற்குரங் கெற்றக் கதிர்சுழல்
பொருப்பை ஒப்பவர் தாமின்று பொன்றினார்
அருப்பம் என்று பகையையும் ஆரழல்
நெருப்பை யும்இகழ்ந் தால்அது நீதியோ” (கம்ப.முதற்போர்.92)

பரிமேலழகர் உரை
வினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும். (இனி,இக்குறை என் செய்வது? என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம், பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிபு விசாரிக்குங்காலத்துத் தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும். எச்சம்- சேஷம். இது வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது.

மு.வரதராசனார் உரை
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

குறள் 673
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள் 
ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்

ஒல்லும் - செய்ய முடிந்த

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

எல்லாம் - முழுதும்

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

நன்றே -நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

ஒல்லாக்கால் - செய்யமுடியவில்லை

செல்லும் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

நோக்கிச் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள் 
ஒருவரால் ஒரு இடத்தில அல்லது ஒரு காலத்தில் இயன்ற செயல்களையெல்லாம் நன்றாக செய்யவேண்டும். ஆனால் ஒரு காலத்திலோ அல்லது ஒரு இடத்திலோ ஒரு செயலை செய்யமுடியவில்லையென்றால் செயலற்று இருக்க கூடாது. செயலின்மை தீது. ஆதலால் தன்னால் செய்யக்கூடிய பயன்தரக்கூடிய (அல்லது நிலைத்துநிற்கக்கூடிய) செயலை கண்டு ஆராய்ந்து  அவற்றை விரும்பி செய்யவேண்டும்.

செல்லும் என்றால் செல்லுதல். செல்லுதல் என்ற சொல்லுக்கு பயனுறுதல் நிலைத்திருத்தல் என்ற பொருளும் உண்டு. ஆதலால் அது கற்றல், பிறருக்கு உதவிப்புரிதல், சேவைசெய்தல் போன்ற பயனுள்ள செயல்களை உதாரணமாக சொல்லலாம்.

இடைவிடாது செயலாற்றிக்கொண்டு இருப்பதே சிறந்தது. ஏனெனில் நேரம் வரும் பொழுது ஆயுதமாவதைவிட, ஆயுதமாக இருந்தால் நேரம் வரும் பொழுது மிக மிக பயனுள்ளதாய் அமையும்.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று - வினை செய்யுங்கால் இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல் - அஃது இயலாவிடத்து ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க. (இயலுமிடம்: பகையின் தான் வலியனாகிய காலம். அக்காலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலின். இயலா இடம் - ஒத்த காலமும் மெலிய காலமும். அவ்விரண்டு காலத்தும் சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார். அவை ஒன்றற்கொன்று வேறுபாடுடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின், இதனான், வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று: இயலாத காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க. இது வினைசெய்து முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த்துச் செய்கவென்றது.

மு.வரதராசனார் உரை
இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்

குறள் 671
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள் 
சூழ்ச்சி - ஆலோசனை; நுண்ணறிவு; ஆராய்தல்; வழிவகை; மனத்தடுமாற்றம்.

முடிவு - இறுதி; எல்லை; தீர்மானம்; முடிவானஉட்கோள்; நிறைவு; பயன்; இசைப்பாகுபாடு; சாவு.

துணிவு - தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்; கைக்கிளைவகையுள்ஒன்று.

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

துணிவெய்தல் - துணிவுடன் எய்தல் 

அத்துணிவு - அந்த துணிவு

தாழ்ச்சி - கீழ்மை; தாழ்வு; தாழ்மை; குறைவு; பணிவை வெளிப்படுத்தும் சொல்; வணக்கம்; ஆழம்; இகழ்ச்சி; ஏலாமை; காலநீட்டிப்பு; தவறு; நிலைகெடுதல்; விழுதல்.

தாழ்ச்சியுள் - கீழ்மைகளுடன் , காலா நீட்டிப்புடன் , தவறுகளுடன்,

தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்.

தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு.

முழுப்பொருள் 
ஒரு செயலை செய்யும் முன் அச்செயலை பற்றி முழுவதுமாய் ஆராய வேண்டும். அச்செயலின் விளைவுகளையும் பயன்களையும் அச்செயல் செய்யும் பொது வரக்கூடிய தடங்கள்களையும் அச்செயல் செய்யக்கூடிய நேரத்தையும் காலத்தையும் நன்கு ஆராய்ந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். அப்படி எடுக்கும் முடிவு அச்செயல் செய்வதற்கான துணிவை  மனவுறுதியை செயலின் மீது நம்பிக்கையை தர வேண்டும். 

அப்படி ஒரு முடிவை எடுத்த பின்பு அதனை உடனே செயல்முறைபடுத்தி முடிக்க வேண்டும். அப்படி இல்லாமல் அச்செயலை செய்ய காலம் தாழ்த்துவது அச்செயலுக்கு தீமையையே தரும். அது குற்றமும் ஆகும். ஏனெனில் அச்செயலை பற்றி ஆராய பல மணி நேரங்களை பயன்படுத்தியுள்ளோம். செயலை செய்யாது இருப்பது காலம் தாழ்த்துவது அந்த ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நேரங்களை வீண் செய்வதாகும். நேரத்தை வீண் செய்வது குற்றமாகும்.


மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம் துணிவுபெற்ற வினை. பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின் அது குற்றமுடைத்து. ('சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்' எனவே, துணிவு எய்தும் அளவும் சூழவேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு - செய்யுங் காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழிவாகலானும் பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் தீது என்றார்.) .

மணக்குடவர் உரை
சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்: அவ்வாறு துணிந்தவினை நீட்டித்தலின்கண்ணே கிடைக்குமாயின் அது தீதாம். இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின் அதனை யறிந்து பகைவர் தம்மைக் காப்பார்: ஆதலால் நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.

Thirukkural - Management - Decision Making
The objective of any lengthy and detailed discussion of a subject is to take a

decision. However, delaying to execute the decision taken is a destructive thing as that sort of delay brings disaster, warns Kural 6 71. It is often said that in corporate practices people are good decision makers but poor executioners. Hence, this warning by Valluvar is highly relevant.

The end of deliberation is decision
To decide and dawdle is bad.

செய்வினை செய்வான் செயன்முறை

குறள் 677
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை 
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள்
செய்வினை - வினை முதல் வினை; முற் பிறப்பில் செய்த கருமம்; பில்லி சூனியம்; செய்யுந் தொழில்; cey-viṉai   n. id. +. 1. Work,undertaking; செய்யுந் தொழில் செய்வினை தூய்மை(குறள், 455). 2. Karma; முற்பிறப்பிற் செய்த கருமம் சீலமில்லாச் சிறியனேனுஞ் செய்வினையோ பெரிதால் (திவ். திருவாய், 4, 7, 1). 3. (Gram.) Verbin active voice; வினைமுதல்வினை. (இலக். கொத்.67.) 4. Witchcraft, sorcery; பில்லிசூனியம் Colloq.

செய்வான் - செய் வான்

முறை - muṟai   s. manners, morals, legality, ஒழுக்கம்; 2. order, regularity, கிரமம்; 3. good disposition, குணம்; 4. relationship by blood or marriage, உறவு; 5. repetition, number of times repeated, தரம்; 6. turns by which duty or work is done, வரிசை; 7. complaint, முறைப்பாடு; 8. a book, புத்த கம்; 9. antiquity, பழமை.
செயல்முறை - ஒரு செயலை செய்ய வேண்டிய ஒழுங்கு
அவ் வினை - அச்செயலை

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை
அறிவான் - அறிந்து அதன் படி நடப்பவன் / ஒழுகுபவன்
உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்வது என்பது அவ்வளவு எளிது அல்ல. தனக்கான செயலாக இருந்தால் அது நமது நேரம், ஆற்றல், உழைப்பு என்று பல்வேறு தளங்களில் முக்கியமானது. அதேப் போல பலர் ஈடுபட்டு இருந்தால் அதில் பலருடைய நேரம், ஆற்றல், உழைப்பு அடங்கி உள்ளது. அதனை நாம் போற்ற வேண்டும். இல்லை என்றால் பிற்காலத்தில் அவர்களும் (இதனை பார்த்த) மற்றவர்களும் நமக்கு உதவ மாட்டார்கள்.

ஆகவே ஒரு செயலை செய்யும் முன் அதனை பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனுடைய நன்மை, தீமை, பயன், தேவையான வளங்கள், பொருள்கள், உழைப்பு, மக்கள், அறிவு, திறன், தொழில்நுட்பம் என்று பலவகையான கோணங்களில் அச்செயலை பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அதேப்போல ஒரு செயலை எப்படிச்செய்ய வேண்டும் என்பது முக்கியம். அதற்கென்று ஒரு ஒழுங்கு, முறை, பக்குவம், வரிசை என்று இருக்கும். அதனை அறிந்து இருக்க வேண்டும். இதற்கு எல்லாம் ஏது துணையாக இருக்கும் என்றால் அச்செயலை முன்னரே செய்த செயல்வீரர்களிடம் பேசுவதே ஆகும். அப்படி அவர்களிடம் பேசி அவர்களின் அறிவை , அனுபவத்தை பாடமாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே விவேகம் ஆகும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“மெய்ந்நீர ராகி விரியப் புகுவார்க்கும்
பொய்ந்நீர ராகிப் பொருளை முடிப்பார்க்கும்
எந்நீர ராயினும் ஆக அவரவர்
தந்நீர ராதல் தலை” (பழமொழி 395)


பரிமேலழகர் உரை
செய்வினை செய்வான் செயன் முறை - அவ்வாற்றால் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல்- அவனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல். ('அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு முதலிய தூக்கலையும். உள் அறிவான் - முன் செய்து போந்தவன். அவன் கருத்து: அவன் செய்து போந்த உபாயம். அதனையறியவே தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது அவ்வினையினது உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக் கோடல்.

மு.வரதராசனார் உரை
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.

Thirukkural - Management - Leadership
Leaders may have shortcomings. A leader need not know everything he is expected to know. Every  leader has to seek counsel from people who are experts in their respective fields. Kural 677 instructs us that a leader, before executing  an action, must get suggestions, directions,  and guidance from other people who have thorough knowledge and experience related to that particular action. In modern management that practice is called seeking expert advice.

The way to do a thing is to get
Inside an insider.

The thought presented in Kural 677 is related to mentoring. Every leader needs a mentor who can mentor his leadership skill. Studies of successful leaders prove that acclaimed leaders have benefitted from the guidance from their mentors. The practice of mentoring has been in all fields, viz., religion, politics, education, and business. Refer to the Practice on ‘Mentoring' to learn more. 

முடிவும் இடையூறும் முற்றியாங்கு

குறள் 676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
முடிவும் - இறுதி; எல்லை; அந்தம்; தர்மானம்; முடிவான உட்கோள்; நிறைவு; பயன்; இசைப்பாகுபாடு; சாவு

இடையூறும் இடர், இடர்ப்பாடு, துன்பம், தடங்கல், வருத்தம், வறுமை, ஆபத்து

முற்றி - முற்று, முடித்தல்

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி; ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை

முற்றியாங்கு - அச்செயலை முடித்தல்

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

எய்தும் நூற்பயன், அடையும், அணுகும், சேரும், நிகழும், உண்டாகும்

படு - நன்மை, மகா, மிகுதியைக்காட்டுமோரடை சொல்

படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்

படுபயனும் - மகா பயன்

பார்-த்தல் - pār-   11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலுமருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship;வணங்குதல். (சூடா.) 8. To estimate, value;மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்.Colloq. 9. To heed, pay attention to; கவனித்தல். 10. To look after, take care of, manage,superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.11. To peruse, look through, revise; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. Totreat, administer medicine; மருந்து முதலியனகொடுத்தல். யார் வைத்தியம் பார்த்

பார்த்துக்கொள்ள - pārttukkoḷḷa   paattukkoo பாத்துக்கோ take care of, watch over  

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

பார்த்துச் செயல் - அதற்கு ஏற்றார்ப்போல் ஆராய்ந்து ஒர் திட்டதின் அடிப்படையில் வியூகத்தின் அடிப்படையில் செயல்படுக!

முழுப்பொருள்
ஒரு செயலை (குறிக்கொள்) செய்யும் பொழுது அதனை பாதியில் விடாமல் செய்து முடிக்க முயற்சி மேற்கொண்டு செய்ய வேண்டும். எடுத்த செயலில் என்ன என்ன தடங்கல்கள் வரும் என்று முன்னரே அனுமானித்து அதனை கடந்து செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு செயலை செய்தால் அதனால்  விளையும் (ஏற்படும்) பெரும் பயனை அறிந்து அச்செயலை வெற்றிக்கரமாக நிறைவேற்ற வேண்டும். அப்பெரும் பயனின் வீரியம் அறிந்து அதனை அடைய வியூகம் அமைத்து அயராது செயல்பட வேண்டும்!

பி.கு: இக்குறளில் நான் காணும் முக்கியமான ஒன்று படுபயன். ஏனென்றால் பெரிய பலன் தரும் செயல்களை மட்டுமே செய்யவேண்டும். சிறிய செயல்களை செய்யக்கூடாது!

மேலும்: அஷோக் உரையை காண்க (நன்றி)

ஒப்புமை
”தற்றூக்கித் தந்துணையும் தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
யாதானும் ஏன்றுகொண் டியாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்” (பழமொழி 321)

“நல்லவும் தீயவும் நாடி நாயகற்
கெல்லையின் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்
ஒல்லைவந் துறுவன உற்ற பெற்றியின்
தொல்லைநல் வினையென உதவும் சூழ்ச்சியார்” (கம்ப.மந்திரப்.10)

பரிமேலழகர் உரை
முடிவும் - வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம் முயற்சியும்; இடையூறும் - அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அது நீங்கி முடிந்தால் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல் - சீர்தூக்கிச் செய்க. (முடிவு, ஆகுபெயர், 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது அளவு பெரிதாயின் செய்க' என்பதாம்.)

மணக்குடவர் உரை
வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும் அதற்குவரும் இடையூறும் முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும் முன்பே கண்டு பின்பு வினைசெய்க.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
முடிவும்-வினை முடிதற்கு வேண்டிய முயற்சியும்; இடையூறும்-அதற்குத் தடையாக இடையில் வரும் துன்பங்களும்; முற்றிய ஆங்கு எய்தும் படுபயனும்-தடை நீங்கி வினை வெற்றியாக முடிந்தால் தான் அடையும் பெரும் பயனும்; பார்த்துச் செயல்-ஆராய்ந்து பார்த்து வினைசெய்க.

பெரும்பயன் எனவே சிறுபயன்வினை விலக்கப் பட்டதாம். 'படு' என்னும் சொல் பெருமை அல்லது மிகுதிப்பொருள் தருவதைப் படுகுழி, படுதண்டம், படுபொய், படுமோசம் என்னும் வழக்கு நோக்கி யுணர்க. 'முடிவு' ஆகுபெயர். முற்றியாங்கு (முற்றிய ஆங்கு) - முற்றியபோது.

மு.வ உரை
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.

Thirukkural - Management - Decision Making
Before one gets into action, one has to assess thoroughly three things, according to Kural 676. One is to identify the methods to complete the task; two is to understand the challenges or hardships faced in the process of doing that task and three is to anticipate the benefits one will get by executing that task.

Weigh well before you plunge
The inputs, impediments  and gain.

Stephen Covey's one of the qualities of highly effective people is to ‘Begin with the end in the 
mind’ in his book The Seven Habits of Highly Effective People.

Therefore, effective decision making, according to Valluvar, is possible if we consciously and clearly consider five factors. They are: 1) Resources that include people, 2) Tools and techniques, 3) Availability of time, 4) Complexity of the task, and 5) Place of execution. Decision-making is a process and that process needs a lot of patience. The process of learning to have patience takes a lot of time and energy. Therefore, elective decision-making facilitates effective execution. Look before you leap is still a sage and safe advice.


English Meaning - As I taught a kid - Rajesh
"Whenever you do a task, you should have a goal and should never drop the task. One should predict the hurdles as much as possible and have a contingency plans to mitigate the situation. Having contingency plan is essential because looking back is shame(துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு). 
Hence, having a goal, having a plan that includes contingency plan for hurdles, persevering to achieve the goal at any cost will yield huge results. This kural talks about huge results which is in sync with பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும், அரும்பயன் ஆயும் Thirukkural. Also remember, நுனிகொம்பேறினார் No goal is worth the life or the huge amount of money. Hence, we should keep right plans and also include plans that defines the situations for quitting for a genuine reason.

==========
Another version
Before doing a work or getting into action, one has to thoroughly assess 3 things 1) Have the clarity of destination/goal and identify best way by exploring multiple options to complete the task 2) understand the challenges that are possible 3) understand the benefits of doing this tasks. 
One of the main thing we need to note is ""படுபயன்” which means huge benefits. Do works that yields larger benefits not smaller or futile benefits.

Effective decision making, according to Valluvar, is possible if we consciously and clearly consider five factors. They are: 1) Resources that include people, 2) Tools and techniques, 3) Availability of time, 4) Complexity of the task, and 5) Place of execution. Decision-making is a process and that process needs a lot of patience. The process of learning to have patience takes a lot of time and energy. Therefore, elective decision-making facilitates effective execution. Look before you leap is still a sage and safe advice."

Questions that I ask to the kid
"Whenever you do a task, what are 4 things you should have in mind?

Look before you leap. Explain more. 

தூங்குக தூங்கிச் செயற்பால

குறள் 672
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள்
தூங்குதல் அசைதல்; தொங்குதல்; ஊசல்முதலியவற்றில்ஆடுதல்; சோம்பலாயிருத்தல்; வாடுதல்; சாதல்; இடையறாதுவிழுதல்; ஒலித்தல்; நிலையாகத்தங்குதல்; மெத்தெனநடத்தல்; செறிதல்; கூத்தாடுதல்; துயிலுதல்; தாமதித்தல்; அழுந்துதல்; மிகுதல்

தூங்குக - தொங்குதல், மந்தமாதல், தாமதி

செயற்பால - செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

தூங்கிச் செயற்பால - தாமதமாக செய்யக்கூடிய செயல்களை

தூங்கற்க - மந்தமாக செய்யாதே

தூங்காது - விரைவாக செய்ய வேண்டிய

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

செய்யும் வினை - செயலை

முழுப்பொருள்
ஒருவற்கு  பல செயல்கள் வரும். அனைத்து செயல்களும் ஒன்றாக இருக்காது. ஒவ்வொன்றுக்கும் முன்னுரிமை வேறுபடும். சில செயல்களை உடனே முடித்தாக வேண்டும், சில செயல்களை நிதானமாக செய்யலாம். 

ஆதலால் விரைவாக முடித்தாக வேண்டிய செயல்களை சற்றும் தாமதிக்காமல் செய்ய வேண்டும். நிதானமாக செய்ய வேண்டிய செயல்களை நிதானமாக செய்யலாம்/செய்ய வேண்டும். 

விரைந்து முடிக்க வேண்டிய செயல்கள் இருக்கும் பொழுது நிதானமாக செய்ய வேண்டிய செயல்களை கண்டிப்பாக செய்யக்கூடாது ஏனெனில் அது தீமை உண்டாக்கும்.  

உதாரணமாக: 
1) நீதிமன்றங்களில் அவசர வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆனால் அவசமில்லாத வழக்குகள் அதனை விட நிதானமாக தான் எடுத்துக்கொள்ளப்படும்.

2) அலுவகத்தில் முக்கியமான் வேலை இருக்கும் பொழுது இண்டர்னெட்டில் நண்பருடன் ஃபேஸ்புக்-இல் உரையாடுவது பிழையாகும். அலுவலுக வேலை முதன்மையான் ஒன்று. அதனை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். ஃபேஸ்புக் அப்படி ஒன்றும் முக்கியமானது அல்ல. அதனை எப்போது வேண்டும் மறுபடியும் வந்து பார்த்துக்கொள்ளலாம். 

இதனை தான் Time-Management என்று சொல்லுவார்கள்.
கீழ்காணும் படங்கள் ஒரு பயிற்சியரங்கில் நான் பெற்றவை/கற்றவை.












மேலும்: அஷோக்

ஒப்புமை
”மற்றிக்காலத் தல்லது மேற்சென்று
வெற்றிக் காலத்து வீட்டுதல் அரிதென” (பெருங் 4.8:53-4)

பரிமேலழகர் உரை
தூங்கிச் செயற்பால தூங்குக - நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக.

விளக்கம் 
[இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவதை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச்செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல் 'தூங்காமை' என்றார் (குறள் 383); ஈண்டதனைப் பகுத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் பொதுவகையால் வினை செய்யும் திறம் கூறப்பட்டது.]

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தூங்கிச் செயல் பால தூங்குக-மெள்ளச் செய்ய வேண்டிய வினைகளை மெள்ளச் செய்க; தூங்காது செய்யும் வினைதூங்கற்க-விரைந்து செய்ய வேண்டிய வினைகளை விரைந்து செய்க.

மெள்ளச் செய்தல் காலந்தாழ்த்துச் செய்தலும் காலம் நீடச் செய்தலும் என இருவகை. இவற்றுள் முன்னது வினை தொடங்கலையும் பின்னது வினைசெயல் முழுவதையும் பற்றியனவாம். மெள்ளச் செய்ய வேண்டியதை விரைந்தும் விரைந்து செய்ய வேண்டியதை மெள்ளவும் செய்யின், அவற்றால் தீமையே விளையும் என்பது கருத்து. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.

மு.வரதராசனார் உரை
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை
காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.

நன்றி: ஜெயமோகன்
தூங்கிக்கொண்டேசெய்ய வேண்டிய அலுவலக வேலையை அப்படித்தான் செய்ய வேண்டும். ஆனால் வீட்டில் அதேபோல வேலைசெய்தால் வினையாக முடியும் என்பது இக்குறளின் சாரம்.


Thirukkural - Management - Decision Making
Any outcome of a person's action depends on the timing of execution. There are always right times and wrong times. These are not similar to so called good times and bad times. Certain decisions or actions demand us to delay. If delaying an execution is a necessity, it is wise to delay the execution of the decision taken, advises Kural 672.

Delay where delay is needed, but do not delay
When you must act.

On the contrary, certain decisions or actions demand us to execute immediately. When there is a need to execute an important  decision, delaying becomes costlier. It is similar to the act of sleeping when you need to and not sleeping when you do not need to. Both not sleeping when you are drowsy and trying to sleep when you are not sleepy result in loss of energy. It is wrong to delay carrying out an action when delay is not needed and it is also wrong to carry out an action when execution is not needed. Deciding when to delay and when to deliver is the art of decision-making.