Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label வினைத்திட்பம். Show all posts
Showing posts with label வினைத்திட்பம். Show all posts

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

குறள் 669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

உறவு - உறுகை; பொருத்தம்; சேர்க்கை; சம்பந்தம்; சுற்றம்; நட்பு; ஒற்றுமை; விருப்பம்.
உறவரினும் - உறவாடுதல் - உறவுகொண்டாடுதல்; நட்புச்செய்தல்.

செய்க - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

துணிவு - தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்; கைக்கிளைவகையுள்ஒன்று.

ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

பயக்கும் - பயத்தல் - paya-   12 v. cf. பயம்¹. intr. 1.To yield, produce, put forth fruit; விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406). 2. To come into existence; to be made; உண்டாதல் (திவா.) 3.To take place; to be productive of good or evil; பலித்தல் நல்வினை பயந்த தென்னா (கம்பரா.கார்முக. 36). 4. To be obtained; கிடைத்தல் (சூடா.)--tr. 1. To produce, create; படைத்தல் தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும்(திருவாச. 5, 30). 2. To beget, generate, give birth to; பெறுதல் (திவா.) பராவரும் புதல்வரைப்பயக்க (கம்பரா. மந்தரை 47). 3. To give; கொடுத்தல் இன்னருள் பயந்து (தேவா. 775, 4). 4. To blossom; பூத்தல் தாமரை பயந்த வொண்கேழ்நூற்றித ழலரின் (புறநா. 27). 5. To compose;இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த . . . தமிழ்(தேவா. 201, 12).  ;;; paya-   12 v. intr. பச-. Tochange in hue or complexion, as the skinthrough love-sickness; to turn sallow throughaffliction; நிறம் வேறுபடுதல் மாமையொளி பயவாமை (திவ். இயற். திருவிருத். 50).  

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி

முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் பொழுது குறிக்கோளை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் பொழுது பல தடைகளும் துன்பங்களும் சுயசந்தேங்கங்களும் நிதி நெருக்கடியும் வறுமையும் மனசோர்வுகளும் சில சமயங்களில் உடலுக்கு நோய்களும் வரும். அத்துன்பங்கள் நம்மோடு தொடர்ந்து உறவாடும். ஆயினும் மனம் தளராமல் செயலின்கண் உறுதியுடன் (மனத்திட்பத்துடன் / வினைத்திட்பத்துடன்) அச்செயலை செய்து முடித்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் அச்செயலின் பலன் கிடைக்கும். அப்பலன் மனமகிழ்ச்சியாக இன்பமாக (புலன்களால் வரக்கூடியது இன்பம் அல்ல இருக்கும். தனக்கும் (தன் சுற்றத்தாருக்கும்) பயனுள்ளதாய் இருக்கும். 

மேலும், நாம் இங்கு காண வேண்டிய மற்றொன்று “செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை” என்று கூறுகிறார். பயன் தரக்கூடிய செயல்களை மட்டுமே செய்க. பயன் தராதவற்றை செய்யாதே என்றும் பொருள் கொள்ளலாம். மேலும் “செய்க” என்று உத்தரவு இடுகிறார் திருவள்ளுவர் அதாவது பயன் தரக்கூடிய செயல்களை மன உறுதியுடன் செய்க. மன உறுதி இன்றி, செய்யும் செயலின் கண் வினைத்திட்பம் இல்லாமல் சோம்பி திரியாதே என்றும் பொருள் கொள்ளலாம். ஒரு செயலை அரைகுறையாக ஏனோதானோ என்று செய்யாதே என்றும் பொருள் கொள்ளலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க. (துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாமஇன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க, பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை.

மு.வரதராசனார் உரை
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.

Thirukkural - Management - Perseverance
Keep working with perseverance, assures Valluvar through Kural 669, even if you face indomitable 
hardships and pains on your way up. The end of any determined effort is happiness.

However great the hardship,
Pursue with firmness the happy end.

Charles Darwin said, “Struggle is a biological necessity.” Struggle is not only a biological necessity, but it is also a neurological necessity. Many research works have established that myelin irresponsible for attention, concentration, retention, and recollection. Myelin is a fatty layer around nerve cells. Formation of myelin is called myelination. Myelination is the process by which a fatty layer, called myelin, accumulates around nerve cells. Myelination enables nerve cells to transmit information faster and allows for more complex brain processes. Superior performance can happen, if there is proper myelination. Myelination can happen when there are mental challenges. Mental challenges make you persevere. 

English Meaning - As I taught a kid - Rajesh
"When we do a work with a goal in mind, we would or we might come across many challenges expectedly or unexpectedly. Yet, one should persevere with the goal in mind and complete the task. The result of completing the task would make us happy and its payoffs will benefit us. The challenges can be financial, personal, medical, external, resources etc. These challenges could potentialy stick with us. Hence, one should understand that challenges are part of the work. 
Also, thiruvalluvar says ""செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை”. He orders us to do work which would benefit. Meaning don't do work that doesn't benefit anyone. Don't waste time. Do work. "

Questions that I ask to the kid
Challenges expectedly or unexpectedly stick to us. What should we do? 

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

குறள் 667
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
உருவு - உருவம்; வடிவு அழகு அச்சம்
உருவு - (வி)உருவுஎன்னும்ஏவல்; ஊடுருவு.

கண்டு - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.
எள்ளாமை - இகழ்ச்சி வேண்டாம்

வேண்டும் -  வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

உருள் - தேருருளை; வண்டி உரோகினி; வட்டம்
உருள் - (வி)புரள்; உருட்டு திரள் அழி

பெருந் - பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத., பெரியது; மிகவும்.

தேர்க்கு - தேர் - இரதம்; சிறுதேர்; காண்க:கொல்லாவண்டி; உரோகிணிநாள்; கானல்; பௌத்தமுனிவர்.

அச்சு - அடையாளம்; உயிரெழுத்து வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு வலிமை அச்சம் துன்பம்

ஆணி - இரும்பாணி; அச்சாணி எழுத்தாணி மரவாணி உரையாணி புண்ணாணி மேன்மை ஆதாரம் ஆசை சயனம் பேரழகு; எல்லை

அச்சாணி - கடையாணி, ஊர்திகளின்இருசில்சக்கரம்கழலாமல்செருகப்படும்ஆணி.

அன்னார் - Such persons

உடைத்து - இருக்கும்

முழுப்பொருள்
ஒரு மிகப்பெரிய தேரினை வடத்தை (வடம்) இழுத்து நகர்த்துவர். அத்தேர் பெரிய சக்கரங்களில் நகருகிறது/ஓடுகிறது. சக்கரங்கள் இல்லாமல் தேர் நகராது. ஆயினும் அச்சக்கரங்களுக்கும் தேருக்கும் இணைப்பாக ஒரு அச்சாணியே இருக்கிறது. பெரிய சக்கரங்கள் ஓடுவதற்கு தேவை என்றாலும் அவற்றைவிட மிக சிறிய அச்சாணியும் மிக மிக தேவையானது. அச்சாணி இல்லாமல் சக்கரங்கள் சிறிது தூரத்திற்கு மேல் நகரமுடியாது. அச்சாணி இல்லாமல் முறிந்த தேர் கதைகள் எல்லாம் உண்டு.

அதுப்போல் எவ்வளவு பெரிய செயலை (தேர் இழுப்பது) செய்தாலும் அதற்கு கடும் உழைப்பு (சக்கரங்கள்) இன்றியமையாதது. உழைப்பு (தேர்) இல்லாமல் செயல் நடக்காது (தேர் ஓடாது). ஆயினும் செய்யும் செயலின் கண் மன உறுதி /வினைத்திட்பம் (அச்சாணி) இல்லையேல் அச்செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியாது. ஆதலால் அளவில் சிறிதாயினும் செயலின்கண் மன உறுதியை இழக்காது ஒரு செயலை செய்யவேண்டும்.

சிறு அச்சாணியின் வலிமையை உருவில் சிறிய அமைச்சர்களின் வினைத் திண்மைக்கு உவமையாக வள்ளுவர் கூறியது நயமானது. வலிமையென்பது உருவில் அல்ல, உள்ளத்துள்ளது என்பதும் உணர்த்தப்பட்டது. கடுகு சிறியதாயினும் காரம் பெரியது அல்லவா?

மேலும், மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் (அமைச்சர்கள்) எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.



இராதே பக்கங்கள்: அச்சாணி


கீழ்வரும் அறநெறிச்சாரப் பாடல், தற்புகழ்ச்சி வேண்டாம் என்பதற்காகச் சொல்லப்பட்டாலும், “சிறு துரும்புல் பல்குத்த உதவும்” என்ற பொருளில் வந்தாலும், சிறு அச்சாணி பெரிய அளவில் உதவுவதைக் குறிப்பதைக் காணலாம். அப்பாடல்:

”பலகற்றோம் யாமென்று தற்புகழ்தல் வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்” (அறநெறி 42)

“மாணியாம் படிவ மன்று மற்றிவன் வடிவம் மைந்த
ஆணியிவ் வுலகுக் கெல்லாம் என்னலாம் ஆற்றற் கேற்ற
சேணுயர் பெருமை தன்னைச் சிக்கறத் தெளிந்தேன் பின்னர்க்
காணுதி மெய்ம்மை யென்று தம்பிக்குக் கழறிக் கண்ணன்” (கம்ப.மராமரப்.21)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக. (சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம், அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து, அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர், அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண்டும். உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங்கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகம் உடைத்து: ஆதலால்.

மு.வரதராசனார் உரை
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.

Thirukkural - Management - Leadership
Valluvar uses a metaphor from the field of vehicle to drive the irrelevance of physical size for a leader. He, through Kural 667, refers to the kingpin of a vehicle to educate us on the irrelevance of size.

Don't despise by looks. the linchpin holds
The huge wheel in place.

Though the kingpin is small, it gives the maximum protection to the wheels of a vehicle or a chariot. The safety of a vehicle depends entirely on its kingpin.

A leader must not underestimate  or laugh at a person's capability or likely contribution based on  that person's size and appearance.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

குறள் 666
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம்.

எண்ணிய - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.
யாங்கு - எங்கு; எப்படி; எவ்வாறு; எவ்விடம்.

எண்ணியாங்கு - எண்ணியப்படி;  தாம் கருதியவாறே

எய்துப- எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

எண்ணியார் - எண்ணியவர், நினைத்தவர்

திண்மை - வலிமை; உறுதி; கலங்காநிலைமை; பருமன்; உண்மை.

திண்ணியர் - செயல்களில் உறுதியும் திண்மையும்

ஆகப்பெறின் -  உடையவராக இருப்பின்

முழுப்பொருள்
முன் குறிப்பு: (@14:58 https://youtu.be/iQnyTQAmvs4?t=898) இன்று (16-feb-2023) எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் ஒரு நேர்காணல் காணொளியில் இன்றைய வாழ்வில் எப்படி தன்னை கண்டடையும் முன்பே 17 வயதில் பொறியில் கல்லூரியில் சேர்ந்து 21 வேலைக்கு சென்று 24 வயதில் EMI யில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பேசியிருப்பார். அப்பொழுது sense of accomplishment எனப்படும் எய்தும் நிறைவை பற்றி பேசியிருப்பார். ஒரு நிமிடம் என்னை நிமிரச் செய்தது நாம் எதை எய்த வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் கண்டடைவது எவ்வளவு முக்கியம் என்பதை மேலும் ஒருமுறை வேறு ஒரு கண்ணோட்டத்தில் விளங்கிற்று.


தான் ஒரு காரியத்தை அல்லது ஒரு செயலை அல்லது ஒரு லட்சியத்தை அல்லது ஒரு குறிக்கோளை எவ்வாறு நினைத்தோமோ (/ எண்ணினோமோ) அவ்வாறே (/ எண்ணியபடியே/நினைத்தப்படியே) அதனை முழுவதுமாய் அடைய முயற்சிகளை மேற்கொண்டு எண்ணியவற்றையே அடைய எண்ணியவர் மிகுந்த மனவலிமையும் செயலில் உறுதியும் கொண்டவர் ஆவார்.  அவர் மேற்கொண்ட செயலை எண்ணியபடியே அடைய்வார். அவரை ஒரு செயலை செய்து முடிக்கப் பெற்றால் அது அவ்வரசுக்கும் / அந்நிர்வாகத்துக்கும் நன்மை பயக்கும்.

எல்லோரும் உயர்ந்த லட்சியங்களை கொண்டு இருப்பர். (அது ஒருவித உந்து சக்தி. ஆங்கிலத்தில் Motivation எனலாம்). ஆனால் எல்லோரும் அல்லட்சியங்களை அடைவதில்லை ஏனெனில் பலர் அல்லட்சியங்களை நோக்கி பயனித்தலே சாதனை என்று நினைகின்றனர். அல்லது குறிக்கோளில் 60 அல்லது 70 சதவிதம் அடைந்தாலே பெருவெற்றி என்றி நினைக்கின்றனர் அல்லது 70% வெற்றிக்கே குறி வைக்கின்றனர். அதனால் தான் அவர்கள் உறுதி அற்றவர்கள் எனலாம். வினையில் திண்மை இல்லாதவர்கள். உண்மையான வினைத்திட்பம் உடையவர்கள் எண்ணியவற்றை எண்ணியவாரே (அதாவது 100%) அடையவே எண்ணுவர். அவ்வாறு எண்ணி அதனை அடைவர். 

செயலாற்றும் பொழுது எய்துப என்கிறார். அதாவது எய்யப்பட்ட அம்புபோல சென்றுகொண்டே இரு என்கிறார் திருவள்ளுவர். எய்யப்பட்ட அம்பு திரும்ப வராது. இலக்கை நோக்கி சென்றுக்கொண்டே இருக்கும். இலக்கை அடையும் வரை அம்பை எய்திக்கொண்டே இரு வில்லை தாழ்த்தாதே என்கிறார். 

”எண்ணிய எண்ணியாங்கு” என்பதையும் எய்து என்ற சொல்லையும் கீழ்க்காணும் குறளுடன் தொடர்பு படுத்திப்பார்க்கலாம். நாம் ஒன்றை அடையவேண்டும் என்றால் நமது குறிக்கொள்களில் எவ்வளவு தெளிவாகவும் திண்ணமாகவும் இருத்தல் அவசியம் என்பதை உணரலாம். ஆனால் உனக்கு ஒன்னு வேண்டியப்படி வேணுமா, செய்க தவம் என்று ஆணையிடுகிறார் திருவள்ளுவர். செயலில் ஈடுபடு. திட்டமிட்றேன், நாளைக்கு செய்யுறேன், காலம் வரும்போது பாத்துக்கலாம் என்று இல்லாமல், செய்க தவம் என்கிறார் திருவள்ளுவர். 


இதே கருத்தைப் பழமொழிப் பாடல் ஒன்றின் இறுதி இரண்டு அடிகள் இவ்வாறு சொல்கின்றன. 
“இனியாரும் இல்லாதார் எம்மில் பிறர்யார்
தனியேம்யாம் என்றொருவர் தாமடியல் வேண்டா
முனிவிலராகி முயல்க முனிவில்லார் 
முன்னிய தெய்தாமை இல்” (பழமொழி நானூறு: 161)

சமீபத்தில் ஒரு கலந்துரையாடலில் ஒன்று கேள்விபட்டேன். அதில் ஒருவர் (X என்று வைத்துக்கொள்வோம்) ஒரு மனதடையில் சிக்கித்தவிக்கிறார். அவர் ஒரு செயலை செய்யவேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு ஆயிரம் காரணங்கள் உந்துசக்திகள் இருக்கிறது என்று கூறுகிறார். ஆனால் தன்னால் அதனை செய்ய முடியவில்லை. ஏதோ ஒரு தடை இருக்கிறது என்று நினைத்து ஒரு ஆசிரியரிடம் செல்கிறார். அங்கு நடக்கும் உரையாடல் இங்கு

ஆசிரியர்: X-ஐ பார்த்து ஒன்று கேட்கிறார். 2019 ஐல் நீ 2014 பற்றி நீ வருத்தபடுவாய் என்றால் அது எதற்கு என்று கூறமுடியுமா? 

X: அதற்கு  1,2,3,4 என்று நான்கு செயல்களை 2014-இல் நான் செய்யவில்லை என்றால் நான் 2019இல் 2014 பற்றி வருந்துவேன் (என்னிடமே கோபித்துக்கொள்வேன்). 

ஆசிரியர்: வேறு ஏதாவது இருக்கிறதா? 

X: இல்லை.

ஆசிரியர்: அப்படியென்றால் 1,2,34 ஆகிய நான்கையும் செய்தால் நீ மகிழ்ச்சியாக இருப்பாய் அல்லவா?

X: இல்லை.

ஆசிரியர்: ஏன்? 

X: நான் இந்த நான்கையும் செய்து அதில் வெற்றிபெற்றால் தான் மகிழ்ச்சியாக இருப்பேன்.

ஆசிரியர்: ஆனால் நீ 1,2,3,4’இல் இவற்றில் வெற்றிபெறுவது பற்றி கூறவில்லையே ?

X: ஆம். ஏனெனில், 1,2,3,4 ஆகியவற்றை செய்வது தான் என் கடமை. வெற்றி என்பது என் கையில் இல்லையே.

ஆசிரியர்: அப்படியென்றால் 1,2,3,4 ஆகியவற்றை செய்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டியத் தானே?

X: அப்படி இருக்க முடியாது. ஏனெனில் இவற்றில் வெற்றிபெறுவது என் வாழ்விற்கு தேவையான ஒன்று. இவ்வெற்றிதான் எனக்கு செல்வத்தை /ஊதியத்தை ஈட்டித்தரும். அதுவே இன்பம் தரும். இல்லையேல் அறம், பொருள், இன்பத்தின் சமநிலை குலையும். ஆதலால் இவ்வெற்றி எனக்கு இன்றியமையாதது. 

ஆசிரியர்: அப்படியென்றால்?

X: இந்த வெற்றிக்கும் நானே பொறுப்பு. 

ஆசிரியர்: அப்படியென்றால்?

X: 2014'இல் நான் (இச்செயலில்) வெற்றிபெற வேண்டும். 1,2,3,4 எல்லாம் அதற்கான முயற்சி மட்டும் தான். வெற்றியே இலக்கு எனக்கொள்ளவேண்டும். 1,2,3,4 படிக்கட்டுகளே. 1,2,3,4 ஆகியவற்றை செய்வதனால் எனது கடமை முடியவில்லை வெற்றிக்கான முழுப்பொறுப்பும் என்னுடையதே. 1,2,3,4 எல்லாம் எனக்கு வெற்றி அடைய உதவும். அவ்வளவே. 1,2,3,4 அல்லது வேறு ஏதும் பொறுப்பாகாது. ஆங்கிலத்தில் சொன்னால் Success is a function of me(and my thoughts) (Success = f(me (and my thoughts))). Success is not just a function of the process or steps taken.

தற்காப்பு: ஒரு செயலை செய்தால் அதனை 100% அடைய எண்ணுவது வினைத்திட்பமாகும். அதுவே சிறந்தது. குறிக்கோளே குறைவாக இருந்தால் அடைவது அதைவிட குறைவாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், 100% அடைய முயலும் பொழுது அது நமக்கோ அல்லது பிறருக்கோ அல்லது நிர்வாகத்திற்கு எவ்வித பாதிப்பு உண்டாக்க கூடாது. அதாவது செயலை செய்யும் பொழுது 100% அடைய முயன்றுகொண்டு இருக்கும் பொழுது அது பல இழப்புகளை தரும். 100% நிறைவேற்றுவதால் வரும் பலனை விட இழப்பு மிக அதிகம் என்றால் அச்செயலை பாதியில் நிறுத்திவிட வேண்டும். உதாரணமாக சொன்னால், இமயமலை (Mount Everest) ஏறும் பொழுது பனிபொழிவு அதிகமாக இருக்கிறது. மேற்கொண்டு பயணத்தை தொடர்ந்தால் உயிருக்கு ஆபத்து என்றால், திரும்பிவிடுவது தான் உசித்தம். மீறி தொடர்ந்தால் உயிரை இழக்க கூடும். உயிரவிட பெரிய குறிக்கோள் என ஏதுமில்லை. ஆதலால் சரியான குறிகோள் சரியான சூழ்நிலைகளுக்கு திட்டமிடபட வேண்டும். சில சமயம் நெடுந்தூர / மராத்தான் ஓட்டம் (Marathon) ஓடுபவர்கள் இலக்கை அடைய ஓடுகையில், அவர்கள் உடம்புக்கு அசௌகர்யம் ஏற்பட கூடும். சிலருக்கு இதயம் பலவீனமாக இருக்ககூடும். அப்பொழுது மூச்சுதிண்றலோ அல்லது நெஞ்சுவலி இருப்பதாக உணர்ந்தால் ஒட்டத்தை நிறுத்திவிட வேண்டும். இலக்கிற்கு அருகில் இருக்கிறோம் என்று நினைத்து நெஞ்சுவலியை மீறி(தாங்கிக்கொண்டு) ஓடினால் உயிரை இழக்க கூடும்.  உதாரணம்: Student dies on Marathon run: Eyewitnesses said Santhosh was struggling near Foreshore Estate, but he refused to give up as he was close to the finish line.

அதனால் தான் ”குறள் 476 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்” என்று வலியறிதல் அதிகாரத்தில் முன்னறே திருவள்ளுவர் கூறியுள்ளார்.

இலக்குகள் ஒருவித ஊக்கசக்தியே.
இலக்குகள் ஒருவித ஊக்கசக்தியே. ஆனால் அதனை அடைய தொடர்ந்து இடைவிடாது மனம் தளராது உழைக்க ஒழுக்கம் அவசியம். அவ்வொழுக்கத்தை மனதில் கொள்வதே வினைத்திட்பம் ஆகும். 

Motivation gets you going, but discipline keeps you growing

Goals cannot be achieved without discipline

Don't rely on motivation for anything. It is fleeting and unreliable. Discipline however, is unyielding. Force yourself to follow through.

When motivation stumbles, self-discipline saves the day

Suffer the pain of discipline or suffer the pain of regret

Discipline is the bridge between goals and accomplishment


மேலும்: அஷோக் உரை


“பிரஹலாதனிடமிருந்து அதைப் பெறுக! அவ்வேதத்தை நீர் உமதென்றாக்குக! அதுவே வெல்லும் வழி.” இந்திரன் “ஆசிரியரே, நான் அவரை வெல்லமுடியாது. அதற்குரிய படைக்கலங்கள் என்னிடமில்லை” என்றான்.

புன்னகைத்து “உம் படைக்கலம் எப்படியென்றாலும் வெல்லவேண்டுமெனும் முனைப்பே. அதைக் கொள்க!” என்றார் சுக்ரர். “

அந்தக் கணங்களின் முகங்கள். அவை எழுந்து திரண்டு அலை கொண்டிருந்தது அப்பெருவெளி. நடப்பது களைப்பை உருவாக்கவில்லை. எண்ணினால் எழுந்து பறக்க முடிந்தது. எண்ணுமிடத்திற்கு அக்கணமே செல்ல முடிந்தது. எண்ணம் எண்ணியாங்கு சென்றடையுமென்றால் இடமென்பதே ஓர் எண்ணம் மட்டும்தான். இடமிலாதானால் காலமும் மறைகிறது. காலமில்லாதபோது எங்கு நிகழ்கின்றன எண்ணங்கள்? அவை எண்ணங்களே அல்ல, எண்ணமென எழாத கருக்கள். இவையனைத்தும் ஒற்றைக்கணத்தில் நிகழ்ந்து மறையும் ஒரு கனவு.

பரிமேலழகர் உரை
எண்ணிய எண்ணியாங்கு எய்துப - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் - எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின். ('எளிதின் எய்துப' என்பார், 'எண்ணியாங்கு எய்துப'என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும். அது முடிய அவை யாவையும்கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும்பயன் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே பெறுவர்: அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின். இது வினையின்கண் திண்மை வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

சாலமன் பாப்பையா உரை
ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

Thirukkural - Management - Thoughts
Smile and anger cannot go together. When you are angry, you cannot smile. When you smile, you cannot express anger. The common and accepted wisdom is ‘Action speaks louder than words.’ One's action is the result of one's thoughts. Hence, Sigmund Freud's thought, “What you think, oozes through every pore of your body,” has high relevance.  We cannot hide our thoughts. 

It is often said, ‘A man becomes what he thinks about.’ That is the power of thought. Valluvar, through Kural 666, emphasizes that we can achieve whatever we conceive, if we focus on our thoughts and put in all possible and relevant efforts to realize our thoughts.

All one aims at can be gained 
If one is but firm.

The phrases ’Law of attraction’ and 'Law of expectations’ are in line with Valluvar's thought on  thoughts.

Thoughts and deeds are interrelated and they are important for high achievements. Just positive thoughts without actions will not help a person progress. It is similar to a rocking horse that will not take you anywhere. On the contrary, just action without positive thoughts will not be fruitful. So, have a thought, believe in that thought, and put in your best efforts to realize that thought. Napoleon Hill's “Whatever the mind can conceive and believe, the mind can achieve,” supports this thought.


இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
தியானத்துக்கு உவமை
தியானத்துக்கு முண்டக உபநிடத்திலே ஒரு சிறந்த உவமை சொல்லப்பட்டிருக்கிறது. ‘தியானம் செய்பவன் வில்லாளி. குருவிடத்திலே அடைந்த வேதாந்த ஞானமேவில். தியானம் செய்பவனுடைய ஆத்மாவே அம்பு. அம்பாகிய ஆத்மாவை - அதாவது, தன் உள்ளத்தை வில்லில் வைத்து நாணை இழுக்க வேண்டும். நாணை இழுப்பதென்றால் ஏகாக்கிரசித்தத்துடன் தான் அடைந்த ஞானத்தை உபயோகித்துத் தியானிப்பது. நாணை நன்றாக இழுத்துக் குறிபார்க்க வேண்டும். பரமாத்பாவே குறியாகும். நல்ல வில்லாளி வில்லை வளைக்கும் போது குறியும் அம்பும் ஒரு நேரில் அமையச் செய்கிறான். அந்த நிலையில் அம்பு குறியில் மறைந்து போகிறடு. பரம்பொருளைத் தியானம் செய்பவன் அவ்வாறே தன் ஆத்மாவையும் பரமாத்மாவையும் ஒன்றாகவே காண வேண்டும். தியானம் செய்யும் காலத்தில் பரமாத்மாவில் மன் ஆத்மா முற்றிலும் அத்துவிதீயமாகப் போகல் வேண்டும். 


‘எண்ணிய எண்ணியாங்கெய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப்பெறின்’ என்று வள்ளுவர் கூற்று. பல தருணங்களில் நம்மை பொருள்குழப்பத்திற்கு தள்ளும் ஒரு வரியும் கூட. குறள் போன்ற நூல்களை ஆசிரியர் முன் நெடுவிவாதமின்றி பயிலக்கூடாது என்பதற்கான சான்றும் கூட.

பெரும்பாலானவர்கள் ‘எண்ணியவற்றை எண்ணியாங்கு எய்துபவர்’ எவரென்றால் அவ்வாறு எண்ணியவர்களில் எவர் உளத்திட்பமுடையவரோ அவர் மட்டும்தான்’ என்று பொருள் கொள்வார். அதாவது இயல்பிலேயே உளத்திட்பம் வாய்ந்தவர்கள் மட்டுமே எண்ணியதை எய்தமுடியும் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

அவ்வாறு இளமையிலேயே உளத்திட்பம் ஒருவருக்கு வர முடியுமா என்ன? எவராயினும் தான் எவரென்றும், தன் ஆற்றல் என்னவென்றும், தன் இலக்கென்னவென்றும், செல்வழி என்னவென்றும் எண்ணி மயங்கிச்சுழலும் ஒரு முதிரா இளமைக்காலம் அவர்களுக்கு உண்டு அல்லவா? அப்போது உளத்திட்பம் இருக்க முடியுமா என்ன? அந்நிலையில் ஒருவர் தான் எண்ணியவற்றை எப்போதுமே எய்த இயலாது என்ற சலிப்பையும் சோர்வையும் தானே அடைவார்.

நம் வாழ்க்கையில் உளத்திட்பம் உடையவர்கள் என்று பலரைப்பார்க்கிறோம். எத்தகையவர் அவர்? முதலில் கண்ணுக்குப்படுபவர்கள் செல்வ வளம் உடையவர்கள். செல்வம் அளிக்கும் தன்னம்பிக்கையும் துணிவும் என்னவென்று நான் தொடர்ந்து கண்டுகொண்டிருக்கிறேன்.

பலசமயம் பெருஞ்செயலாற்றியவர்கள் தந்தையர் ஈட்டிய பொருளை இளமையிலேயே பெற்றவர்கள். அதனால் உயர்கல்வியும் உயர்குடிச்சூழலின் பழக்கமும் அடைந்தவர்கள். தொடக்கத்திற்கான முதலீடு கையில் இருக்கும். தன் உயிர்வாழ்தலுக்காக மட்டும் எதையும் செய்யவேண்டியதில்லை என்னும் சூழல் இருக்கும். தன் ஆற்றலை தன் இலக்கற்ற வேறு விஷயங்களில் சிதறடிக்க தேவை இருக்காது. எதிர்காலம் குறித்த அச்சம், எதிர்பாராமை குறித்த பதற்றம் இருக்காது. உளத்திட்பம் என நாம் காணும் பெரும்பாலான ஆளுமைப்பண்பு, செல்வத்திலிருந்து வருவது.

அதற்கு அடுத்தபடியாக அறிவு அளிக்கும் உளத்திட்பம். அறிவு தெளிவென ஆகும்போதுதான் அந்த உளத்திட்பம் வருகிறதே ஒழிய அறிவு மட்டுமே ஒருவனை வந்தடைந்துகொண்டிருக்கையில் அத்திட்பம் வாய்ப்பதில்லை. பல தருணங்களில் பகுதியான அறிவு, ஒத்திசைவற்ற அறிவு ஒருவனுக்கு பதற்றத்தையும் மிகையார்வத்தையும், விளைவாக எதிர்நிலை பண்புகளையும், இறுதியாக கடும் உளச்சோர்வையும் அளிக்கும். அறிவுச்சூழலில் இருப்பவர்களில் இன்று பெரும்பாலானவர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள்.

ஏனெனில் இன்று அறிதல் பலமுனைப்பட்டு ஒருவனை வந்து தாக்குகிறது. தேடி, கற்று அடையும் அறிவல்ல இன்று ஒருவனிடம் இருப்பது. ஒவ்வொருவரையும் தேடிவந்து அருவியென அவர்கள் மேல் பொழியும் அறிவு அவர்களின் தெரிவுக்கு அப்பாற்பட்டது. அத்தனை அறிவையும் உள்வாங்கி அமைப்பென ஒருங்கிணைத்து கூர்கொள்ளச்செய்து தன் வினாக்களை அவற்றின்மேல் ஏவி, விடைகளை பெற்று தெளிவு கொள்பவர் மிக அரிதானவர்.

கல்வி தெளிவென ஆவதற்கு முறையான ஆசிரியர்கள் தேவை. அந்த ஆசிரியர் மாணவர்களிடம் தெளிவை உருவாக்கும் நோக்கம் கொண்டிருக்கவேண்டும். தனது அரசியல் அல்லது அதிகாரம் அல்லது பற்று சார்ந்த நோக்கங்களை மாணவர்களிடம் திணிக்கக்கூடாது. அத்தகையோர் இன்று மிக அரிதாகவே கிடைக்கிறார்கள். ஆகவே தெளிவு கொண்ட அறிவென்பது காணக்குறைவானது.

அத்தகைய அறிவுத்தெளிவு இருக்குமெனில் அது உளத்திட்பத்தை அளிக்கிறது. தன் இலக்கென்ன என்று, தன் பணி என்ன என்று, அதில் எஞ்சுவதென்ன என்று முன்னரே அறிந்தவற்றின் விளைவாக வரும் உளத்திட்பம் அது. அதுவே

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

என்று கூறும் ஒருமை நிலைக்கு ஒருவரை இட்டுச் செல்கிறது.

நான் பார்த்த வரை கல்வியையும் அக்கல்வியைப் பயன்படுத்தும் களத்தையும் ஒருங்கே கண்டடைந்தவர்கள், கற்பவற்றை செயலென்று அக்கணமே ஆக்கிக்கொண்டிருப்பவர்கள், செயல் வழியாகக் கல்வியையும் கல்வி வழியாக செயலையும் முழுமை செய்து கொள்பவர்கள் மட்டுமே அந்த தெளிவுடன் உளத்திட்பத்துடன் இருக்கிறார்கள்.

நம் சூழலில் பெரும்பாலும் அத்தகையோர் மீதுதான் தெளிவிலாக் கல்வி கொண்டவர்களின் வஞ்சமும் காழ்ப்பும் வசையும் ஏளனமும் பெருகிக்கொண்டிருக்கும். ஏனெனில் தெளிவு பிறரை அச்சுறுத்துகிறது. அது ஓர் அறைகூவல் போன்றது. தெளிவற்றவர்கள் அத்தெளிவுடன் மோதியே தங்களை நிரூபிக்க முயல்வார்கள். தெளிவு கொண்டவர்களை சிதைத்து தன்பக்கம் இழுக்க இடைவிடாது எல்லாத்தரப்புகளும் முயலும். அதைக்கடந்து தெளிவு நின்றிருக்கும் என்பதனால் அம்முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடியும். தோல்வியிலிருந்து மேலும் வஞ்சம் மேலும் சீற்றம் உருவாகிறது. ஆனால் அவ்வஞ்சங்களைக் கடக்க தெளிவால் இயலும்

செல்வமும் அறிவும் அளிக்கும் திட்பம் உலகியல் சார்ந்தது எனில் அதற்கப்பால் உள்ளது ஆன்மீகம் அளிக்கும் திட்பம். நான் இங்கு மதம் சார்ந்த பற்றை ஆன்மீகம் என்று சொல்லவரவில்லை. பக்தியையோ அல்லது வெவ்வேறு வகையான பயிற்சிகளையோ மதம் என்று கூறவில்லை. ஆன்மீகம் என்று நான் சொல்வது முழுதறிவை அடைந்தவனின் நிலைபேற்றை. தன் வாழ்விலிருந்து, இப்பிரபஞ்சத்திலிருந்து, தன் ஆசிரியர்களிடமிருந்து ஒருவர் அடையும் சமநிலை கொண்ட அறிவு ஆன்மீகம் எனப்படுகிறது.

அது அறிதலால் நிகழ்வதல்ல, உணர்ந்து ஆதலால் நிகழ்வது. அது ஒன்றைச்சார்ந்து நிலைகொள்ளாதது. ஒன்றில் மட்டும் குவியாமல் அனைத்தையும் ஒருங்கிணைத்த, தனக்கென ஒரு மையத்தை சமைத்துக்கொள்வது. கலை, இலக்கியம், தத்துவம் ஆகிய மூன்றும் அடிப்படையில் ஆன்மீகத்தை நோக்கிச் செல்பவை. ஆன்மீகத்தால் மட்டுமே ஆழமும் அழுத்தமும் பெறுபவை.

மீண்டும் முதல் வினா. இந்த உளத்திட்பத்தை அத்தனை பேரும் அடையமுடியுமா என்ன? செல்வம் மூதாதையரால் ஈட்டித்தரப்பட்டிருக்க வேண்டும். அறிவும் ஆன்மீகமும் ஒருவன் தன் பயணத்தில் காலப்போக்கில் எய்துவது அப்பயணத்தை நிகழ்த்துவதற்கே உளத்திட்பம் தேவைப்படுகிறது. எனில் உளத்திட்பம் ஓர் இளையோனுக்கு எவ்வாறு அமையமுடியும்?

உளத்திட்பமின்மை என்பது ஒரு குறைபாடோ ஆளுமைச்சிக்கலோ அல்ல. உளத்திட்பமில்லாத ஒரு காலகட்டத்தை கடந்து வராத எவரும் இருக்க இயலாது. அது ஓர் ஆளுமையின் வளர்ச்சிக்காலகட்டம் மட்டுமே.  ஒரு மரம் செடியென்றாகி கிளை விரியும்போது எப்பக்கம் சூரிய ஒளி இருக்கிறது, எங்கே நீரிருக்கிறது என்று தன் வேர்களாலும் கிளைகளாலும் கண்டடையக்கூடிய காலகட்டம் அது. அது திட்பத்தை அது அடிமரம் பெருத்து வானில் கிளை விரித்த பின்னரே அடையமுடியும். அதுவரை காற்றிலாடி திசைகள் தோறும் நெளிந்து அது உருவம் கொள்கிறது.

காற்றில் பெருமரங்களைப் பார்க்கையில் அவை அனைத்துமே ஒரு நடனவடிவ உடல் கொண்டிருப்பதைப் போலிருக்கிறது. அந்த நடனம் அவற்றின் வளர்ச்சிப்போக்கில் நிகழ்ந்தது. அவை அடைந்த போராட்டத்தின் கண்கூடான வடிவம் இது. எந்த ஓர் ஆளுமையை எடுத்துப்பார்த்தாலும் அவருடைய போராட்டத்தின் வழியாகவே அவர் தன்னுடைய வடிவத்தை அடைந்திருப்பதை பார்க்க முடியும்.

அந்த தேடல்காலகட்டத்தில் முன்நகர்வதற்கான உளத்திட்பத்தை எப்படி அடைவது என்பது தான் நீங்கள் கேட்கும் வினா. அது எவரும் எங்கிருந்தும் கொண்டு வருவதல்ல. எங்கிருந்தும் அளிக்கப்படுவதல்ல. ஒருவர் தன்னால் ஈட்டிக்கொள்ளப்படுவதென்று உணர வேண்டும். ஈட்டிக்கொள்வதற்கான வழிகள் என்ன? உளத்திட்பம் என்பது இன்றைய சூழலில் மிக அரிதான ஒன்று.

சென்ற தலைமுறையில் இளமைப்பருவம் என்பது மிகக்குறுகியது. பதினெட்டு பத்தொன்பது வயதுக்குள் மரபு வகுத்து வைத்திருக்கும் வாழ்க்கை ஓடைக்குள் ஒருவன் வசதியாகச் சென்று சேர்ந்து விடுகிறான். எவரை மணப்பது, எத்தொழில் செய்வது, எங்கு வாழ்வது, என்னென்ன கடமைகளை ஆற்றுவது என்பது எல்லாமே அவனை மீறி முன்னரே தீர்மானிக்கப்பட்டு அவனுக்கு ஒரு பொட்டலமாகவே அளிக்கப்பட்டுவிடுகிறது. அவனுக்கு தெரிவுகளில்லை. ஆகவே அது சார்ந்த பதற்றங்களில்லை.

சுதந்திரமின்மை என்பது ஒரு வகையான சுதந்திரம். முடிவெடுக்கும் பொறுப்பிலிருந்து அது நம்மை விடுவிக்கிறது. சுதந்திரம் என்பது இருத்தலியல் பதற்றத்தை (பறதி, angst) அளிக்கக்கூடியது என்று மிக விரிவாக சார்த்தர் விளக்குகிறார்.

இருத்தலியல் பதற்றம், பறதி என்பது ஒருவனுக்கு சமூகம் அளிக்கும் சுதந்திரத்தால், அதை பயன்படுத்திக்கொள்ளும் அறிவோ ஆளுமையோ இல்லாத நிலையில் உருவாவது. சென்ற தலைமுறையில் இல்லாத பறதி இன்று உள்ளது. இன்று நம்முன் வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன. முடிவற்ற வாய்ப்புகள். அவற்றில் எங்கு செல்லவும் முழு சுதந்திரம் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நம்மால் தெரிவு செய்ய முடியவில்லை. நாம் யார் என்று நமக்கு தெரியவேண்டும். நம் திறனென்ன என்று நாம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாத நிலையில் திறந்திருக்கும் ஆயிரம் வழிகளுக்கு முன் எங்கும் செல்லமுடியாமல் திகைத்து அங்கேயே நின்று நம் இளமைப்பருவத்தை முற்றிலும் இழக்கிறோம்.

இப்பறதி பற்றி எனக்கு வரும் கடிதங்கள் எல்லாமே இருபதிலிருந்து முப்பது வயதுகளுக்குள் இருப்பவர்களால் எழுதப்படுபவை. தங்கள் இளமைப்பருவத்தை கிட்டத்தட்ட அவர்கள் கடந்துவிட்டார்கள், கடந்துவிட்டோம் என்று உணர்கிறார்கள். அதிலிருந்து எழுகிறது இந்தப் பதற்றம்.

என் பதில் ஒன்றே. நீங்கள் யார் என்று நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்க வேண்டாம். அந்தக்கற்பனை என்பது பெரும்பாலும் உங்களுடைய தன்விருப்பிலிருந்து உருவாவது. தன் விருப்பென்பது ஆணவத்தின் ஒரு இனிய வடிவம். அது உங்களை நீங்களே மதிப்பிட உதவாது.

தன்முன்னேற்ற நூல்கள் திரும்பத்திரும்ப இந்த ஆணவத்தை தன் விருப்பாக மாற்றிக்கொள்ள கற்பிப்பவை மட்டுமே. ‘நம்பு நீ ஆற்றல் மிக்கவன், அரியவன் என எண்ணு. உன்னால் முடியும்’ என்று அவை திரும்ப திரும்பச் சொல்கின்றன. அந்த மந்திரத்தை நீங்கள் திரும்பத்திரும்ப சொன்னால் விடுபட்டுவிடுவீர்கள் என்று அவை கற்பிக்கின்றன. உண்மையில் நம்பிக்கை இழந்து தன்முனைப்பிழந்து இருப்பவரிடம் அந்த தன்விருப்பு ஒருவகை ஆற்றலாக செயல்படும். அவர்களை அது முன்னகர்த்தும், சற்று விடுவிக்கவும் செய்யும். ஆகவே நான் ஒருபோதும் தன்முன்னேற்ற நூல்களை முற்றிலும் மறுத்துரைக்கமாட்டேன்.

ஆனால் தானாகவே சற்று சிந்திக்கும் ஒருவருக்கு அந்நூல்கள் பயனற்றவை. ஏனெனில் அவற்றைப் படிக்கும்போது அவற்றுக்கு எதிரான தர்க்கங்களையும் சிந்திக்கும் இளைஞன் உருவாக்கிக்கொள்வான். அதன்பிறகு தன்முனைப்பு நூலுக்கும் அவனுக்குமான ஒரு உரையாடலும் அதன் விளைவான ஒரு குழப்பமும் மட்டுமே அவனுக்கு இருக்குமே ஒழிய அந்நூல்களின் வழியாக இம்மி கூட முன்னகர்ந்திருக்கமட்டான். அத்தகையோருக்காகவே இந்தக்கட்டுரையை எழுதுகிறேன். அத்தகையோர் ஆற்றவேண்டியது என்ன ?

அதையே மீண்டும் சொல்கிறேன், செயல். செயலெனில் என்றோ ஒருநாள் வென்றெடுக்கப்போகும் கோட்டை அல்ல. அதன் மேல் நீங்கள் பறக்கவிடப்போகும் அந்த வெற்றிக்கொடி அல்ல. அது வரட்டும் அதை சென்றடையலாம். ஆனால் இப்போது இங்கு என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியமானது. செய்யத்தொடங்குவதே முக்கியமானது. முதற்செயல் அறுதி வெற்றியைவிட ஒருபடி மேலானது. மிகச்சிறிதாக இருக்கட்டும். மிக மிக எளியதாக இருக்கட்டும். ஒருவேளை முற்றிலும் பயனற்றதாகக்கூட இருக்கட்டும். ஆனால் செயலாற்றத்தொடங்கி செயலின் வழியாக நம் ஆற்றலை நாமே கண்டுகொள்வது தான் உளத்திட்பத்தை அடைவதற்கான முதல் வழி.

நீங்கள் ஒரு ஈருளியில் செல்கிறீர்கள் அது திடீரென்று நின்றுவிடுகிறது. முன்பொருமுறை அந்த ஈருளியை கழற்றிப் பார்த்திருந்தீர்கள் என்றால் நீங்கள் அடையும் பதற்றம் எந்த அளவுக்கு குறைந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். தன்னம்பிக்கையும் உளத்திட்பமும் கொண்டவர்கள் எல்லாருமே செயலாற்றி அதன்வழியாக பெற்ற அனுபவம் வழியாகவே அவற்றை அடைந்திருக்கிறார்கள். ஆகவே துளித்துளியாக செயலனுபவத்தை ஈட்டிக்கொள்ளுங்கள் என்றே சொல்வேன்.

இன்று உங்களால் இயன்ற மிக எளிதில் செய்யத்தக்க ஒரு செயலைச்செய்யுங்கள். அதன் வெற்றியைச்சுவையுங்கள். அது அளிக்கும் நம்பிக்கையை ஈட்டிக்கொள்ளுங்கள். அது ஒரு படி. இயல்பாகவே நீங்கள் அடுத்த படிக்கு தான் கால் வைப்பீர்கள். அது எச்செயலாகவும் இருக்கட்டும் கற்றல், சேவை செய்தல், உழைத்தல் எதுவாக இருப்பினும் அதில் உங்கள் ஆற்றல் செலவிடப்படவேண்டும். உங்கள் ஆளுமை அதில் முழுமையாக ஈடுபடவேண்டும். அதனூடாக நீங்கள் எதையோ கற்றுக்கொண்டிருக்க வேண்டும். அந்தக்கற்றல் அளிக்கும் இன்பம் உங்களை விடுதலை செய்வதை நீங்களே பார்ப்பீர்கள். அதனூடாக நீங்கள் முன்னகர்வதை உணர்வீர்கள்.

மனத்திட்பம் என்பது ஒட்டுமொத்தமாக ஒருவரிடம் வந்து சேரும் பெருஞ்செல்வம் அல்ல. அது ஒவ்வொரு ரூபாயாக ஈட்டிக்கொள்வது. ஒரு செயல் வழியாக ஒரு நாணயத்தை பெறுகிறீர்கள். உங்கள் களஞ்சியத்தில் செல்வம் நிறையத்தொடங்குகிறது. ஒருநாள் பெருஞ்செவ்லவந்தராக அதன்மேல் ஆம்ர்ந்திருப்பீர்கள். அதன் நிமிர்வுடன் நம்பிக்கையுடன். அந்த செயல் நோக்கிச் செல்லும் விசையை வேறெவரும் அளிக்க முடியாது. அதை நீங்களே உங்களிடமிருந்து பெறவேண்டும்.

ஒவ்வொருவரும் அவ்வண்ணம் செயல்நோக்கி செல்லமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நான் ஏராளமானவர்களை பார்க்கிறேன். செயல் என எதிலுமே ஈடுபடாமல், செய்யநேர்ந்தவற்றை மட்டுமே செய்துகொண்டு, முழு வாழ்க்கையும் வாழ்ந்து முடிப்பவர்கள் பலகோடிபேர் இங்குள்ளனர். அவர்கள் வாழ்ந்து மடிவதும் இவ்வியற்கையின் ஒரு நிகழ்வே. சற்றேனும் அகவிசை கொண்டு தன்னைத்தானே செலுத்திக்கொள்ள முடியும் ஒருவரிடம் மட்டுமே நான் பேச விரும்புகிறேன்.

நான் அவர்களிடம் சொல்வது முதற்செயல் தொடங்குக என்றே.

ஜெ

பிகு :நான் சொல்வன எவையும் புதியவை அல்ல. இன்றைய தன்முன்னேற்ற நூலாசிரியர்கள் அனைவருக்கும் முன்னோடியான எமெர்ஸன் அவருடைய Self-Reliance என்ற புகழ்பெற்ற கட்டுரையில் கூறியவையே. நூறாண்டுகளுக்கும் மேலாக உலகமெங்கும் சென்று இளைஞர்களின் செவிகளில் ஒலிக்கும் பெருங்குரல் அவருடையது.

English Meaning - As I taught a kid - Rajesh
The one who aims on a goal and desires/thinks to attain 100% of the goal, and who works and perseveres to attain the goal 100% with a determined spirit will attain the goal 100%. Whereas if one sets a goal while secretly aims only for 90% for complacency would perhaps get only 80% without reaching his/her potential. So, one must aim high and not get complacent when falling short of the potential when one could have achieved with determination. Out thoughts sets the tone of attaining the results. We should have right thoughts and put required efforts with a determined spirit. We should not just own our efforts. We should mainly own our results

Questions that I ask to the kid
Who achieves the target? Why? Why others doesn't achieve it? What is learning?


வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

குறள் 665
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
வீறு - தனிப்பட்டசிறப்பு; வெற்றி; வேறொன்றற்கில்லாஅழகு; பொலிவு; பெருமை; மிகுதி; நல்வினை; மருந்துமுதலியவற்றின்ஆற்றல்; செருக்கு; வெறுப்பு; ஒளி; வேறு; தனிமை; அடி.

எய்தி - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

மாண்டார் - மாட்சிமையுள்ளவர்; இறந்தவர்.

வினைத்திட்பம் -  தொழில்செய்வதில்மனவலிமை; செய்யும் செயல்களின் மேல் மனதிட்பம் அதாவது மனவுறுதி 

வேந்தன்எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்

கண்விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஊறு  - உறுகை (உறு-. 1. Joining, approaching; ); தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம்.
ஊறு - ūṟu   III. v. i. spring forth, issue as water out of the ground; 2. be soaked, steeped, pickled; 3. spread (as ink in paper); 4. percolate, ooze through, கசி; 5. form (as milk in the breast); 6. form (as flesh in a sore); 7. increase (as knowledge, or as flesh in the body after sickness); 8 increase, பெருகு.

எய்திஎய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

உள்ளப்படும் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

முழுப்பொருள்
செயலின்கண் கொண்ட உறுதியினால் ஒருவர் பெருமையும் வெற்றியும் அடைகிறார். ஆதலால் அவர் மாட்சிமையும் அடைகிறார். அத்தகைய வினைத்திட்பத்தை கொண்டு ஒரு தலைவர் / அரசர் / குடும்பத்தலைவர் / தனி நபர் எந்த ஒரு செயலை செய்தாலும் அதனுடைய பலன் பெருகி பின்பு கசிந்து அது பிறருக்கு உதவியாக அமையும். அப்பொழுது அத்தலைவரையும் அவரின் வினைத்திட்பத்தையும் எல்லோரும் நினைத்து பார்ப்பார்கள். போற்றுவார்கள். மதிப்பார்கள். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன்கண் ஊறு எய்தி உள்ளப்படும் - வேந்தன்கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும். (வேந்தன்கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறைவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.).

வினைத்திட்பம் கொண்டோர் மாட்சிமையும் அடைகிறார். எல்லோராலும் நினைக்கவும் படுகிறார். ஆதலால் வினைத்திட்பத்திற்கு அதற்கான பலன் உண்டு என்பதை அறிக. 

மணக்குடவர் உரை
மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாராலும் நினைக்கப்படும். இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.

மு.வரதராசனார் உரை
செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை
எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்

குறள் 663
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
கடைக் - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

கொட்கச் - கொட்கு-தல் - koṭku-   5 v. intr. cf. kuṭ.1. To whirl round; சுழலுதல் வளிவலங் கொட்குமாதிரம் (மணி. 12, 91). 2. To move in an orbit,revolve; சூழவருதல். காலுண வாகச் சுடரொடுகொட்கும் (புறநா. 43, 3). 3. To roam, wander;திரிதல். கொடும்புலி கொட்கும்வழி (சிறுபஞ். 80). 4.To be revealed; to come to view; வெளிப்படுதல் கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை (குறள், 663). 

செய் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

தக்கது - தகுதி; தகுதியானது.

ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை

இடைக் - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு.

கொட்கின்கொட்கு-தல் - koṭku-   5 v. intr. cf. kuṭ.1. To whirl round; சுழலுதல் வளிவலங் கொட்குமாதிரம் (மணி. 12, 91). 2. To move in an orbit,revolve; சூழவருதல். காலுண வாகச் சுடரொடுகொட்கும் (புறநா. 43, 3). 3. To roam, wander;திரிதல். கொடும்புலி கொட்கும்வழி (சிறுபஞ். 80). 4.To be revealed; to come to view; வெளிப்படுதல் கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை (குறள், 663). 

எற்றுதல் - அடித்தல், புடைத்தல்; உதைத்தல்; மோதுதல்; எறிதல்; குத்துதல்; வெட்டுதல்; கொல்லுதல்; உடைத்தல்; நீக்குதல்; நூல்தெறித்தல்; இறங்குதல்; எழுப்புதல்; நீங்குதல்.

எற்றா - நீங்காத

விழுமம் - சிறப்பு; சீர்மை; தூய்மை; இடும்பை; துன்பம்

தரும் - கொடுக்கும்
தருதல் - கொடை,  v. noun. Giving, &c. See தா, v.

முழுப்பொருள்
ஒரு செயலை முடித்தபின்பு அதை பற்றி வெளியே சொல்வதோ அல்லது வெளிப்படுத்துவதோ சரியானது. அவ்வாறு இறுதிவரை செயலை பற்றி வெளிப்படவிடாமல் காப்பாற்றுவதே செயலை புரிய ஓர் தகுதியாகும்.  வலிமை சேர்க்கும். அதற்குமாறாக செயலாற்றும் பொழுதே அதனை முடிக்கும் முன்பே இடையில் அதைப்பற்றி வெளிப்படுத்தினால் அது நீங்காத துன்பத்தை தரும். ஏனெனில் இடையில் கூறினால் அதற்கு (பகைவர்களிடம் இருந்து) புதிய தடைகள்  வர வாய்ப்புகள் இருக்கலாம் அல்லது உள்ளூர் மக்களிடம் இருந்து கேள்விகள் ஆலோசனைகள் என்று குழப்பங்களும் கவனசிதறல்களும் வரலாம் அல்லது பாதி கிணறு தாண்டி விட்டோம் என்ற செருக்கும் வரலாம். இவையாவும் செயல் தோல்வியில் முடிய வழிவகும். தோல்வியால் நீங்காத துன்பம் ஏற்படும். ஆதலால் வெளியே கூறவேண்டியதில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும். (மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும், தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான் அவன் உய்த்துணராமலும் அடக்கிச் செய்தல். அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை'எனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல், செய்வானை விலக்குதல் செய்வர்ஆகலின், அவற்றான் வருவன. விழுமம் : சாதிப்பெயர். இவைஇரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது; இடையிலே மீள்வானாயின் அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும். சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது தொடங்கின வினையை முடியச் செய்யவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

குறள் 662
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
ஊறு - உறுகை; தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம்.

ஒரால் - ஒருவுகை, நீங்குகை.

உற்ற - உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.
பின் - பின்பு

ஓல்குதல் - தளர்தல்; மெலிதல்; குழைதல்; நுடங்குதல்; சுருங்குதல்; அசைதல்; ஒதுங்குதல்; அடங்குதல்; வளைதல்; குறைதல்; வறுமைப்படுதல்; மேலேபடுதல்; மனமடங்குதல்; கெடுதல்; நாணுதல்; எதிர்கொள்ளுதல்.

ஒல்காமை - தளர்வடையாது ; சோர்வடையாது;

இவ் இரண்டின் - இவ்விரண்டும்

ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை

என்பர் - என்பார்கள்

ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

ஆய்ந்தவர் - சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர், வருந்துபவர்

கோள் - கோள் கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் முன்பே வரக்கூடிய இடையூறுகளை நீக்குவர், இடையூறுகளை வரும் பொழுதே இயன்றவரை களைவர், இடையூறுகள் வந்தபின்பு மனம் தளராது செயலில் ஈடுபடுவர் மன உறுதியும் செய்யும் வினையின்/செயலின் மீது துணிவும் உடையவர்கள். அத்தகையவர் பல நூல்களை கற்றதாலும் பட்டறிவினாலும் அறிவர் இடையூறுகள் என்பது எச்செயலை செய்யும் பொழுது வழியில் வரக்கூடிய ஒன்றே ஆகும். அவற்றை கண்டு சோர்வடையக்கூடாது. துணிவாக எதிர்கொண்டு உறுதியாக செயலை செய்துமுடிக்கவேண்டும். அதுவே அவர்களுடைய கொள்கை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆய்ந்தவர் கோள் - முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன் ஆறு என்பர் - பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர். (தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ, வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு' என்றமையின், 'உற்றபின்' என்றும்,இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார் 'இரண்டன் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர், அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்தில).

மணக்குடவர் உரை
வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும் அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார் நீதி நெறியை ஆராய்ந்தவர்.

மு.வரதராசனார் உரை
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

சாலமன் பாப்பையா உரை
பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

குறள் 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி

திட்பம் - உறுதி; வலிமை; மனவுறுதி; சொற்பொருள்களின்உறுதி; காலநுட்பம்

வினைத்திட்பம் - செயலின் கண் உறுதி

என்பது - 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )  

ஒருவன் - ஒரு செயலை செய்பவர் ; அமைச்சர்  ; அரசர் 

மனம்  - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

மனத்திட்பம் - மனவுறுதி

மற்றைய - மற்றது  - குறித்த பொருளுக்கு இனமான வேறு ஒன்று.

எல்லாம் - முழுதும்; (மற்ற) எல்லாம் 

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்ய பல குணங்கள் அவசியம். உதாரணமாக அச்செயலை செய்ய தேவையான பொருட்கள், ஆராய்ச்சி, மக்கள், குழு, திட்டம், ஒருங்கிணைப்பு, செல்வம், நேரம் என்று பலவற்றை சொல்லலாம். ஆனால் இவை மட்டும் போதாது. இவற்றிளுளெல்லாம் முதன்மையாக தேவைப்படுவது அச்செயலின் கண் கொள்ளும் மன உறுதியே ஆகும். மனவுறுதி என்னும் விசை இருந்தால் தான் மற்ற எல்லாவற்றையும் இயக்க முடியும். மனவுறுதி இல்லையென்றால் மற்ற எல்லாம் அரை மனதாகவே செய்வோம். அது செயலை முழுமையாக செய்யவிடாது. 

அது மட்டும் இன்றி நல்ல குழு நல்ல பொருட்கள் நல்ல ஆராய்ச்சி நல்ல திட்டம் இருக்கிறது என்று கர்வம் கொண்டு இருந்து செயலை செய்யும் மனவுறுதி இல்லை என்றால் பின்னால் ஏதாவது இடர் வந்தால் அதனை எதிர்நீச்சலிட்டு கடந்து செயலை செய்து முடிக்க முடியாமல் போகும்.

மனவுறுதி இருந்து மற்ற தேவையானவற்றில் சிறிது குறைந்தாலும் சமாளித்துவிடலாம். ஆனால் மற்ற எல்லாம் இருந்தும் மனவுறுதி இல்லை என்றால் நம்மால் அச்செயலை முழுமையாக செய்யவே முடியாது. 

செய்யும் செயலின் கண் உறுதி மிக அவசியம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா. (ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா. மற்றவையென்றது கருவியும் உபாயமும்.

மு.வரதராசனார் உரை
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.

Thirukkural - Management - Thoughts
A person's thought is the best tool for effcient  and effective execution of a task. Compared  to one's power of thoughts and the outcomes of determined thoughts, the other things do not have so much power. The rest of the things are secondary as per Kural 661

Efficiency is but strength of mind; 
All aids mere aids.

Our actions follow our thoughts. When our thoughts are positive and our beliefs in our thoughts are strong, our actions will be meaningful and the outcome will be possible.

English Meaning - As I taught a kid - Rajesh
An action/task's outcomes comes from one's determined thoughts. Our thoughts are primary. Rest of things are only secondary. A person's thought is the best tool for efficient and effective execution of the task. Because action follows our thoughts. When thoughts are positive and we believe in it, our actions will follow and the outcome will be possible.

Questions that I ask to the kid
For perseverance, what is primary and what is secondary?

கலங்காது கண்ட வினைக்கண்

குறள் 668
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
திட்பம் - உறுதி; வலிமை; மனவுறுதி; சொற்பொருள்களின்உறுதி; காலநுட்பம்
வினைத்திட்பம் - செயலின் கண் உறுதி

கலங்கு-தல் - kalaṅku-   5 v. intr. [T. kalagu,K. Tu. kalaṅku, M. kalaṅṅu.] 1. To be stirredup, agitated, ruffled, as water; நீர் முதலியனகுழம்புதல். கலங்க முந்நீர் கடைந்து (திவ். பெரியதி.6, 5, 1). 2. To be confused, confounded; மனங்குழம்புதல். கலங்காமற் காத்துய்க்கும் (நாலடி, 59). 3.To be abashed, embarrassed, perplexed; மயங்குதல் காமநலியக் கலங்கி (பு. வெ 11, பெண்பாற். 1).
கலங்காது - மனங்குழம்பாமல், மயங்காமல்
கண்ட - தான் கண்ட,  தான் எண்ணிய, தன் நினைத்தை
வினைக்கண் - செயலின் கண்; செயலை செய்யும் பொழுது
துளங்குதல் - அசைதல்; நிலைகலங்குதல்; தளர்தல்; வருந்துதல்; ஒலித்தல்; ஒளிசெய்தல்
துளங்காது - அசையாது, நிலைகலங்காது, தளராது
தூக்கம் - உறக்கம்; அயர்வு; சோம்பல்; வாட்டம்; முகச்சோர்வு; காற்றுமுதலியவற்றின்தணிவு; விலையிறக்கம்; ஆபரணத்தொங்கல்; காதணி; அலங்காரத்தொங்கல்; காண்க:தூக்கணங்குருவி; காலநீட்டிக்கை; நிறுப்பு; விலையேற்றம்; உயரம்.
கடிந்து - கடிதல் - ஓட்டுதல், நீக்குதல்; அழித்தல்; கண்டித்தல்; கோபித்தல்; விரைதல்; கொல்லுதல்; வெட்டுதல்; அடக்குதல்.
செயல் - செய்ய வேண்டும்

முழுப்பொருள்
நாம் ஒரு செயலை எடுக்கும் பொழுது அதனை பற்றிய ஒரு குறிக்கோள், அதற்கான கனவு(vision) இருக்கும். பின்பு அச்செயலை செய்ய தேவையான வற்றை அறிந்து தெளிந்து இருப்போம். அதுவே முதல் படி.

அச்செயலை எடுத்தப்பின்பு எந்த ஒரு நிலையிலும் மனம் தளறாமல், மனம் குழம்பாமல், எந்த ஒரு பழக்கத்திற்கும் பொருளுக்கும் மயங்காமல், கவனம் சிதராமல் எடுத்த செயலின் கண் செல்ல வேண்டும். முக்கியமாக சற்றும் தளராமல் அதில் இருந்து நீங்காமல் சோர்வில்லாமல் விரைவாக தாமதிக்காமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் செயற்க்கூறிய பயனை அடைவோம். 

இக்குறளில் நாம் முக்கியமாக இரண்டு விஷயங்களை பார்க்க வேண்டும். (1) ஒன்று மயக்கம், கலக்கும், குழப்பம் அல்லாமல் ஒரு செயலை செய்ய வேண்டும் 2) சோர்வு இல்லாமல் ஒரு செயலை தாமதிக்காமல் விரைவாக செய்ய வேண்டும். சோர்வு என்பது கொடிய நோய் என்பதை அறிக.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தௌ¤ந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க. (கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின்,தௌ¤ந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.).

மணக்குடவர் உரை
கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க. இது விரைந்து செய்யவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

சொல்லுதல் யார்க்கும் எளிய

குறள் 664
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

யார்க்கும் - எவருக்கும்
யார் - யாவர், எவர்
யார்க்கும் - எல்லோருக்கும் , எவருக்கும், அனைவருக்கும்

எளிய - எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது.

அரிது - அருமை; பசுமை

அரியவாம் - அரிதானது ; கடினமானது

சொல்லிய சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

வண்ணம் - நிறம்; சிததிரமெழுதற்குரியகலவை; சாந்துப்பொது; அழகு; இயற்கையழகு; ஒப்பனை; குணம்; நன்மை; சிறப்பு; கனம்; வடிவு; சாதி; இனம்; வகை; பாவின்கண்நிகழும்ஓசைவிகற்பம்; சந்தப்பாட்டு; காண்க:முடுகியல்; பண்; இசைப்பாட்டு; மாலை; செயல்; எண்வகை.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
ஒரு செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் எனக் கூறுவது எல்லோருக்கும் எளிது. ஆனால் அதை சொல்லியபடி செய்து முடிப்பது மிகவும் கடினம். வெறும் வாய்சொல்லில் பேசிவிட்டு செயலில் கவனம் செலுத்தவில்லை என்றால் அவரை இவ்வுலகம் “வாய்ச்சொல் வீரர் அடி” என்று கூறும். அட்டைக்கத்தி என்றும் கூறலாம். அதனால் தான் “குறள் 505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்று கூறினார்கள். செயல் என்பது கடினமானது, அதனால் செயல் புரிந்தவருக்கு பெருமை. வெறும் பேச்சை பேசியவர்களுக்கு ஒரு புகழும் இல்லை. ”Free advice"கொடுப்பவர்களை நமக்கு பிடிக்காது. ஏனெனில் பெரும்பாலும் அத்தகையவர்கள் அச்செயலை செய்து இருக்க மாட்டார்கள்.

நம் குழந்தைகளுக்கு நாம் ஒன்றை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால், முதலில் நாம் அதை செய்ய (பின்பற்ற) வேண்டும் (சிலவற்றை செய்யக்கூடாது). Practice what you preach என்பார்கள்.  சொற்களைவிட செயல் வலிமை வாய்ந்தது (Actions speak louder than words). 

அதனால் தான் 
என்று முன்பே கூறியிருந்தார் திருவள்ளுவர்.

மேலும், 
குறள் 1046
என்பதை நினைவில் கொள்க. நாம் செயல் வீரர் இல்லை என்றாலோ அல்லது நாம் ஒன்றை பின்பற்றி முன்னேற்ற பாதையிலோ அல்லது பலனை பெறவில்லை என்றாலோ நாம் நல்லதையே சொன்னால் நாம் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள். மேடையில் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். வெற்றிப் பெற்றோரும், சான்றோரும், பெரியோரும் சொல்வதையே மக்கள் கேட்பர். ஆனால் அவர்கள் செயல் புரிந்தவர்கள்.

ஆனால் பேச்சு என்பது ஒரு கலையும் கூட. இன்று பேச்சு (Communication Skill)திறன் என்பது எல்லா இடங்களிலும் தேவைப்படும் ஒன்று. ஆனால் பேச்சு நின்றால் என்ன மதிப்பு? செயலிலும் செய்து வெற்றிகரமாக முடித்தால் தான் மதிப்பு. உதாரணமாக உயிர்காப்பீட்டு திட்டம் (Insurance Agent) ஒருவர் என்னிடம் வந்து என்னிடம் ஒரு பொருளை (insurance policies) விற்றார். அதற்காக தொடர்ந்து பேசிக்க்கொண்டு இருந்தார். அப்பொருளை பற்றிய உயர்ந்த எண்ணங்களை விதைத்தார் (high returns) ஆனால் அப்பொருளில் பிரச்சனை என்ற உடன் அவர் மிக மெதுவாக செயல்பட்டார். எனக்கு அப்பொருளின் வந்த லாபமோ மிக மிக குறைவு (one of the lowest returns). அதன் பிறகு நான் அவரிடமோ அல்லது மற்றவர்களிடமோ அதுப்போன்ற ஒரு பொருளை வாங்கவே இல்லை. ஏனெனில் இவர்களின் பேச்சுவது ஒன்று நடப்பது(செயல் படுவது) ஒன்று. இது insurance agent என்றில்லை. எல்லா Sales/marketing க்கும் பொருந்தும். Sales Marketing என்றில்லை எல்லா வேலைகளுக்கும் பொருந்தும். I.T-யில் வாய் கிழிய பேசலாம். ஆனால் செயலில் (வெற்றிகரமாக code செய்தால்) தான் மதிப்பு. இல்லை என்றால் வேலையை விட்டு தூக்கிவிடுவர்.

சொல்லிற்கும் வலிமை உண்டு. ஆனால் சொல்லில் நின்று விடாமல் செயலில் காண்பிக்க வேண்டும். ஒருவர் 100 சுய முன்னேற்ற புத்தகங்களை படிக்கலாம். படித்துவிட்டு உபதேசம் கூறலாம். ஆனால் அவற்றை நடைமுறையில் செயல்படுத்தினால் தான் பலன் கிடைக்கும். செயல்வீரரையே இவ்வுலகம் மதிக்கும்.

வீட்டில் பல தடவை நம்மைப் பார்த்து கூறுவர் “சும்மா பேசாத, செயல்ல காட்டு. அப்புறம் பார்க்கலாம்” என்று. ரஜினி முத்து திரைப்படத்தில் “நான் சொல்றதத்தான் செய்வேன், செய்றதத்தான் சொல்வேன்” என்று கூறும் வசனம் மிக பிரபலம் என்பதற்கு காரணம் செயலின் வலிமை. அதே சமயம் ரஜினி பல ஆண்டுகளாய் நகைப்பிற்கும் விமர்சனத்திற்கும் ஆளானதற்கு காரணம் அவரது அரசியல் வருகை பேசிலேயே இருந்தது. ஆனால் 2020 அது ஒரு முடிவுக்கு வந்தது.

இக்குறளின் மூலம் இரு கிளை கருத்துகளை அறியலாம்.

1. செயல் திட்டம் தீட்டும் பொழுதே அதை நன்கு ஆராய்ந்து, செய்து முடிக்க கூடிய திட்டமாக தீட்ட வேண்டும். எளிதாக சொல்லி விட்டு பின்பு அதை முடிக்க சிரமப்படாமல் இருப்பதை தவிர்க்கலாம். அதனால் தான்
குறள் 467

2. மற்றவர்களின் செயலை எளிதாக விமர்சனம் செய்யாமல் ,அதை நாம் செய்தால் எவ்வளவு கடினம் ஆக இருக்கும். என்ன என்ன தடங்கல்களை சந்திக்க வேண்டும் என்று உணர்ந்து பேச வேண்டும்.

கம்பர் இராமயணத்தின் அரசியல் படலத்தில்(44) இவ்வாறு கூறுகிறார்: “உரைசெயற் கெளிதுமாகி அரிதுமாம் ஒழுக்கில்”. 

”நெடுமொழி மன்னர் நினைக்குங் காலை” (புறநா.54:9)
“ஞாங்கர் நெடுமொழி பயிற்றி” (புறநா 376:22)

புறநானூற்றுப் பாடலொன்றில் (178:7-9), பாண்டியன் கீரஞ்சாத்தன் என்னும் குறுநில மன்னனின் வீரத்தைப் போற்றும் ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர், 
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின் 
கள்ளுடைக் உள்ளூர்க் கூறிய 
நெடுமொழி மறந்த சிறுபேராளர்” என்பார். 

வேலும் வாளும் வீசி விளையாடும் போர்களத்தில் ஊருக்குள் இருந்தபடி, மது உண்ட மயக்கத்தில் வீரம் பேசித் திரிந்தவர்கள், போர் வந்து விட்டபோது, பகைவரை எதிர்கொள்ள முடியாது பயந்து ஓட நினப்பவர்கள் என்று சிலரை இழந்து சொல்லுகிறார், இக்குறளின் கருத்தையொட்டி. (வெருவரு ஞாட்பின் – அச்சம்தரு போர்களத்தில்)

மேலும்: அசோக்  உரை

பரிமேலழகர் உரை
சொல்லுதல் யார்க்கும் எளிய - யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம். (சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம். அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.

மு.வரதராசனார் உரை
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

சாலமன் பாப்பையா உரை
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பது வினைத்திட்பம் அதிகாரத்துத் திருக்குறள். அதைச் செய், இதைச் செய், அதைச் செய்வேன், இதைச் செய்வேன், அதைச் செய்திருக்கலாம், இதைச் செய்திருக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளிய காரியம். ஆனால் அவர் சொன்னபடி அவரே செய்தல், அவர் எதிர்பார்த்தபடி எதிராளி செய்தல் என்பதெல்லாம் மிக அரிதான காரியம்.

Thirukkural - Management - Learning
Valluvar anticipated the difficulties and challenges we would face in the process of learning and prepared us through Kural 664.

It is easy for anyone to talk, 
But hard to act thereon.

The meaning of that Kural is: anybody can tell or advise others what to do  and how to do things.  However, the challenge is in practicing whatever one advises others to practice. That is one of the reasons New Year resolutions do not last longer. The English saying ‘Said is easier than done' is in line with this thought. Therefore, do not just be a person of words, but also be a person of deeds. 

Demonstrate by doing whatever you promise to do so that people will accept your principles and practice that themselves. That is an example for exemplary leadership.

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

குறள் 670
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் 
வேண்டாரை வேண்டாது உலகு.
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
எனை - என்ன; எவ்வளவு; எல்லாம்.

திட்பம் - சொற்பொருள்களின் உறுதி; திடம்; செறிவு, வலிமை (Solidity)
திட்பநுட்பஞ் சிறந்தன சூத்திரம்  (நன். 18). 
உருத்திட்ப முறாக்காலை (காஞ்சிப்பு. திருநாட். 97). 

எனைத்திட்பம் - படை, அரண், நட்பு முதலிய திட்பங்கள், வலிமைகள்

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

எய்தியக் கண்ணும் - எல்லாம் உடையவராக இருந்தாலும்

வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னை வினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

வினைத்திட்பம் - செய்யும் செயல்களின் மேல் மனதிட்பம் அதாவது மனவுறுதி 

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டாரை - இல்லாதவரை (அக்கரை இல்லாதவரை)

வேண்டாது உலகு - இவ்வுலகம் அதாவது சான்றோர்கள் (உயர்ந்தோர்கள்) மதிக்க மாட்டார்கள் / அவர்கள் விரும்பிப் போற்றமாட்டர்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
1. எல்லா திட்பங்களும் அதாவது படை, அரண், நட்பு ஆகிய வலிமைகள் சேர்க்ககூடிய திட்பங்கள் இருந்தும் ஒருவருக்கு (அமைச்சருக்கு) தான் செய்யும் செயலில் மன உறுதி (செயல் உறுதி) என்கிற வலிமை / திட்பம் இல்லை என்றால் அவரை உயர்ந்தோர் (சான்றோர்) மதிக்கமாட்டார்கள் / விரும்பி போற்றமாட்டார்.

2. எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.


இதனை மகாகவி பாரதியார் கிளியிடம் இப்படி சொல்லிகிறார்

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, 
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! 
வாய்ச் சொல்லில் வீரரடி. 
.................
.................
.................
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் 
செப்பித் திரிவா ரடீ! - கிளியே! 
செய்வ தறியா ரடீ! 
.................
.................
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா 
மாக்களுக் கோர் கணமும் - கிளியே 
வாழத் தகுதி யுண்டோ ? 
.................
.................
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல் 
வந்தே மாதர மென்பார்! - கிளியே! 
மனத்தி லதனைக் கொள்ளார் 
.................
.................

என் வாழ்வில் உதாரணம்:
என்னோட வாழ்க்கைல பல மைல்கல்களை நான் இப்படித் தான் கடந்து இருக்கிறேன். 

நான் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவு சிறு வயதில் இருந்தே உண்டு. நேத்து எங்க உறவு கார்த்திக்கேயன் அங்கில் பொன்னு கல்யானத்துக்கு சென்று இருந்தேன். (சுத்தி வலைத்த உறவு ஆதலால் அங்கில் என்று பொதுவாக சொல்கிறேன்). அங்கில்  மெட்ராஸ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் மாதிரி நம்மலும் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற உந்துதலை நான் உருவாக்கிக் கொள்ள காரணம் அவர் தான். 

காலப்போக்கில் பொறுப்புகள், தடைகள் எல்லாம் என்னை அந்தப் பாதையில் இருந்து விலக்கியது. நான் டாடா ஏலக்சியில் (Tata Elxsi) இருந்து வெளியே வரும் போதுக் கூட மேலே எம்.பி.ஏ படிப்பேன் பின்பு என்றேன். என் வீட்டுக்கு பிறகு என்னை எப்போதும் மேலே படி என்று சொல்பவர் இரண்டு பேர் ஒன்று சுந்தரேசன் அம்மா மற்றும் என் நண்பர்கள். 

ஒரு தடவை (2009 இல்) மதிப்பெண் குறைவாக வந்தது, பின்பு (2013’இல்) நேர்காணலில் தேர்ச்சி பெறாதது, பின்பு (2014’லும்) சில நேர்காணகளில் தேர்ச்சிப் பெறவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் எனது மேலாளர் ராஜாஜி, சுந்தரேசன் & அம்மா, நண்பர்கள் எனக்கு மிகுந்த உதவி புரிந்து இருக்கிறார்கள். நான் இந்த தோல்விகளை சந்திக்கும் போது எல்லாம், எனக்கு பல எண்ணங்கள் தோன்றும். இது மிக கடினமாக உள்ளது. மிகுந்த நீளமாக சென்றுக் கொண்டு இருக்கிறது. நமக்கு கிடைக்கவில்லை என்றால் என்னவாகும் என்ற கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கும். அப்படி நடந்தால் நாம் என்ன செய்வது என்ற சிந்தனைகள் புகுந்துக்கொண்டே இருக்கும். பேசாமல் நாம் எம்.எஸ் படிக்க முயற்சி செய்யலாம் அல்லவா என்று தோன்றும் பல நாட்கள். நான் சொல்லிக்கொண்டது ஒன்று தான், எடுத்த காரியத்தில் பின்வாங்கினால் இவர்கள் என்ன சொல்வார்கள் நம்மைப் பற்றி. நமக்கு மன உறுதி இல்லை என்றே சொல்வார்கள் ? இப்பயணத்தின் கடைசி நாட்களில் இந்த பழிச் சொல்லுக்கு அஞ்சியே நான் உறுதியோடு செயல்பட்டேன். இப்பொழுது எம்.பி.ஏ-க்கு அனுமதி பெற்றேன் (இரண்டு நாள் முன்பு 08-Feb-2014). 

இந்த குறளை நான் இன்று தான் முதல் முறை வாசிக்கிறேன். ஆனால் எனது மன ஓட்டத்துடன் எவ்வளவு ஒன்றிப் போய் உள்ளது என்று எண்ணுகையில் நன்றாக உள்ளது. 

பரிமேலழகர் உரை
வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை 'இது நமக்குச் சிறந்தது' என்று கொள்ளாத அமைச்சரை; எனைத் திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர். 
விளக்கம் 
[மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம்; ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பதுபற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.] 

மணக்குடவர் உரை
கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார். பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது 

மு.வரதராசனார் உரை
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது

சாலமன் பாப்பையா உரை
எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார் / விரும்பிப் போற்றமாட்டார்.

Thirukkural - Management - Commitment
Most of the management thinkers, entrepreneurs, consultants, and leaders frequently refer to ’commitment’ as a quality expected in and from their employees. Every leader works to create a committed workforce. Many workshops,  seminars,  and conferences are conducted to increase commitment of employees towards their tasks and their organizations. The often used or preferred word in today's organizations is commitment.  “Commitment,” according to Oxford Advanced Learner's Dictionary, “is  the state of being willing to give a lot of time, work, energy, etc to something.”

Valluvar's advice on commitment in Kural 670 is more relevant in today's context. A person may possess the required knowledge, skills, and qualities to execute a task. But he may not have the commitment required to perform the task. 

The world has no use for those however strong
who have no use for firmness.

If a person does not have the commitment to execute the task, the committed people, society, and the world at large will not accept his services. Therefore, commitment to accomplish a task is more important  than knowledge, skills, and other superior qualities. Be committed to the task, your position and your organization.