Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label வினைத்தூய்மை. Show all posts
Showing posts with label வினைத்தூய்மை. Show all posts

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்


குறள் 659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]

பொருள்
அழக் அழுதல் -  அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்

கொண்ட - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

எல்லாம் - முழுதும்

அழப் - அழுதல் -  அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்

போம் - ஓர்அசைச்சொல்

இழப்பினும் - இழத்தல் - iḻa-   12 v. tr. [M. iḻa.] 1. Tolose, forfeit; தவற விடுதல் (நாலடி. 9.) 2. Tolose by death; சாகக்கொடுத்தல். மக்க ளிழந்த விடும்பையினும் (உத்தரரா. திக்குவி. 138).  

பிற் - பின் - பின்பு - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

பயக்கும் - பய-த்தல் - paya-   12 v. cf. பயம்¹. intr. 1.To yield, produce, put forth fruit; விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406). 2. To come intoexistence; to be made; உண்டாதல் (திவா.) 3.To take place; to be productive of good orevil; பலித்தல் நல்வினை பயந்த தென்னா (கம்பரா.கார்முக. 36). 4. To be obtained; கிடைத்தல் (சூடா.)--tr. 1. To produce, create; படைத்தல் தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும்(திருவாச. 5, 30). 2. To beget, generate, givebirth to; பெறுதல் (திவா.) பராவரும் புதல்வரைப்பயக்க (கம்பரா. மந்தரை 47). 3. To give; கொடுத்தல் இன்னருள் பயந்து (தேவா. 775, 4). 4. Toblossom; பூத்தல் தாமரை பயந்த வொண்கேழ்நூற்றித ழலரின் (புறநா. 27). 5. To compose;இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த . . . தமிழ்(தேவா. 201, 12).  

நற் - நல்ல, நன்மை
பால் - குழவி, குட்டிமுதலியவற்றைஊட்டத்தாய்முலையினின்றுசுரக்கும்வெண்மையானநீர்மப்பொருள்; பிணத்தைஅடக்கம்பண்ணினமறுநாள்அவ்விடத்திற்பாலும்நவதானியமும்சேர்த்துத்தெளிக்கும்சடங்கு; மரம்முதலியவற்றிலிருந்துவடியும்நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மைமுதலியவற்றிலிருந்துகசியும்சீழ்; பிரித்துக்கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமைபன்மைஎன்றஇருவகைப்பாகுபாடு; அகத்திணைபுறத்திணைஎன்றபாகுபாடு; இடையர்குறும்பர்களின்வகை.

அவை -  மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

நற்பாலவை – நல்ல வழியில் பெற்றவை

முழுப்பொருள் 
தீயவினைகள் செய்து பிறர் பொருளை அபகரித்தால் பிறர் அழுது துன்பப்படுவர். அப்படி பிறர் அழுகையில் பெற்ற பொருளை பின்னொரு நாள் நாமும் இழப்போம். அப்பொழுது நாம் அழுவோம். ஏனெனில் பொய்யான இன்பத்தில் திளைத்தோம். இப்பொழுது அவ்வின்பத்தை இழக்கையில் நமக்கு துன்பமே.

ஆனால் நல்ல வழிகளில் இயற்றிய பொருளை இழந்தாலும் நமக்கு பிற்காலத்தில் அது நன்மையே பயக்கும். ஏனெனில் தீமை செய்தால் தீமையே பயக்கும். தீமை செய்யாது இருந்தால் தீமை/ துன்பம் பயக்காது. அதுவே ஒருவிதத்தில் நன்மை. (துன்பம் இல்லாத நிலையே ஷக்தி). மேலும் துன்பமே இயல்பென நினைத்தால் துன்பம் இல்லை. ஆதலால் இன்பமே. 

இது அரசுகளுக்கு பொருந்தும். ப்ரிட்டீஷ் (British) போன்ற நாடுகள் மற்ற நாடுகளை அடிமைப்படுத்தி அவர்களிடம் இருந்து பெற்ற செல்வங்கள் அனைத்தையும் ஒரு காலத்தில் இழந்தார்கள். ப்ரிட்டீஷ் எவ்வளவு செல்வம் பெற்று இருந்தாலும் அவர்கள் கைகள் என்றும் இரத்தக்கரைகளால் கரைபடிந்தவையே. அதுவே இந்தியா போன்ற நாடு பலவற்றை இழந்தாலும் அஹிம்சையை பின்பற்றியதனால் இன்று உலக அரங்கில் பெருமையே.

இதே கருத்தை வெஃகாமை அதிகாரத்திலும் “படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர் (குறள் 172) என்று கூறியிருக்கிறார். தமக்குரியதென்று அல்லாதவற்றைக் கவர்தல் நடுநிலையற்ற செயல் என்றறிந்து அதற்கு வெட்கப்படுபவர், ஒருவர் பொருளை முறையற்று கவர்ந்தால், தமக்குறும் பயன் மிக்கதாயினும் முறையற்று கவர்ந்ததோடு மட்டுமல்லாது, அது பழிக்கப்படும் செயலென்றறிந்து, அச்செயலைச் செய்யமாட்டார். 


மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் - ஒருவன், தீயவினைகளைச் செய்து பிறர் இரங்கக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே அவன் தான் இரங்கப் போகாநிற்கும்; நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும் - மற்றைத்தூய வினையான் வந்த பொருள்கள் முன் இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும். (பின் எனவே, மறுமையும் அடங்கிற்று. பொருள்களான் அவற்றிற்குக் காரணமாய வினைகளது இயல்பு கூறியவாறு.).

மணக்குடவர் உரை
பிறர் அழக்கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்: அவ்வாறன்றி அறப்பகுதியில் கொண்ட பொருள்கள் இழந்தாராயினும் பின்பு பயன்படும். இது தேடினபொருள் போமென்றது.

மு.வரதராசனார் உரை
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்


குறள் 658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]

பொருள்
கடிந்த - கடிதல் - ஓட்டுதல், நீக்குதல்; அழித்தல்; கண்டித்தல்; கோபித்தல்; விரைதல்; கொல்லுதல்; வெட்டுதல்; அடக்குதல்.

கடிந்து - கடிதல் - ஓட்டுதல், நீக்குதல்; அழித்தல்; கண்டித்தல்; கோபித்தல்; விரைதல்; கொல்லுதல்; வெட்டுதல்; அடக்குதல். 

ஒரால் - ஒருவுகை, நீங்குகை.

ஒரார் - நீங்காது ; ஒழியாது 

செய்தார்க்கு - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

அவைதாம் - அச்செயல்கள்

முடிதல் - muṭi-   4 v. [K. muḍi.] intr. 1.To end, terminate; to be complete, as in sense;முற்றுப்பெறுதல். சொன்முறை முடியாது (தொல்.சொல். 233). இந்நூன் முடிந்தது முற்றும். 2. Tobe effected or accomplished; நிறைவேறுதல்.முட்டின்றி மூன்று முடியுமேல் (நாலடி, 250). 3.To be destroyed; to perish; அழிதல். 4. Todie; சாதல். கயலேர் கண்ணி கணவனொடு முடிய(பு. வெ. 10, சிறப்பிற். 9, கொளு). 5. To appear;தோன்றுதல். முடிந்தது முடிவது முகிழ்ப்பது மவைமூன்றும் (பரிபா. 13, 46). 6. To be possible,capable; இயலுதல். என்னால் அதனைச்செய்ய முடியவில்லை. 7. To incite persons to a quarrel;சண்டை மூட்டுதல். அவனுக்கும் இவனுக்கும் முடிந்துவிட்டான். 8. To make a marriage alliance;சம்பந்தப்படுத்துதல். அவளுக்கும் இவனுக்கும்முடிந்துவிட்டார்கள்.--tr. 1. To tie, fasten; tomake into a knot; முடிச்சிடுதல். தலையை முடிந்தான்; ரூபாயை முடிந்தான். 2. To put on, adorn;சூடுதல். அவள் தலையிற் பூவை முடிந்தாள்.

முடிந்தாலும் - இயன்றாலும், நிறைவேறினாலும்

பீழை - துன்பம்

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள் 
இது இச்செயல் இப்பண்பு இச்செல்வம் இம்முறை இவ்வழி இக்கருத்து இக்கொள்கை இவ்வுறவு வேண்டாம் என்று ஒன்றை நீக்கியிருப்பார் பெரியோரும் சான்றோரும். ஏனெனில் அவர்கள் பல நூல்களை கற்றுணர்ந்தவர்கள் அனுபவம் கொண்டார்கள். வேண்டாம் என்று முடிவு எடுப்பதே சுதந்திரம். வேண்டாம் என்று விலக்கினால் அதனால் துன்பம் இல்லை இன்பம் (குறள் 341: யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்) என்று உணர்ந்தவர்கள். 

அப்படி வேண்டாம் என்று பெரியோர்கள் நீக்கிய ஒன்றை நாம் வாழ்வில் நீக்காமல் அச்செயலை செயல்புரிந்தாலோ அல்லது அவ்வழியில் சென்றாலோ அப்பண்பை வளர்த்துக்கொண்டாலோ அச்செயலை முடித்தாலும் அதனால் நமக்கு துன்பமே வந்து சேரும். இன்பம் வராது. ஆதலால் செய்யும் செயலில் சுத்தம் வேண்டும். சுத்தம் அல்லாதவற்றை நீக்கி (நீக்கியவற்றையும் நீக்கி) செய்.

இது அமைச்சர்களுக்கு அரசர்களுக்கு என்று எல்லோருக்கும் பொருந்தும். அலுவகத்தில் ”Do not re-invent the wheel” (முதலில் இருந்து மறுபடியும் துவங்காதே) என்பார்கள். ஏனெனில் பல தவறுகளை கடந்தே ஒரு செயல் இவ்வடிவத்தில் உள்ளது. வேண்டாம் என்று பெரியோர்கள் அல்லது முன்னே அச்செயலில் வேலை செய்து இருந்தவர் சொல்லி இருந்தால் அதனை செய்யாது இருப்பதே நல்லது. தவறான பொருளாதார கொள்கைகள் வேண்டாம், கடன் வாங்கி வணிகம் செய்யாதே, இவ்விடத்தில் இந்த வணிகம் எடுப்படாது என்று பிறர் கூறியிருந்தால் அதில் ஓர் அர்த்தம் இருக்கும். குறைந்தது அது உண்மையா என்று ஆராயவேண்டும். அது எதையும் செய்யாமல் தன் மீதும் தன் செயல்திறன் மீதும் வருங்காலத்தின் மீதும் அதீத நம்பிக்கை வைத்து வேண்டாம் என்ற காரியத்தை செய்தால் பெருத்த பொருளாதார நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இன்றைய காலகட்டங்களில் எத்தனையோ வணிகங்கள் தவறான இடங்களில் வைக்கப்பட்டு முதலினை இழந்த கதையை நாம் பார்த்துள்ளோம். 

அதேப்போல் இல்லறத்தில் இருப்போருக்கும் இது பொருந்தும். ஒரு வீட்டில் பெரியோர் ஒன்று வேண்டாம் என்று சொன்னால் அதனை செய்யக்கூடாது. குறைந்தது அதன் காரணத்தை அறிந்து அது உண்மையா என்று ஆராயவேண்டும். உதாரணமாக சுகபேதிக்கு அதிகமாக ஆமணக்கு எண்ணெய் எடுத்துக்கொள்ளாதே என்றால் எடுத்துக்கொள்ளகூடாது. அளவுக்கு மீறி எடுத்தால் அது உடம்புக்கு மிகுந்த துன்பத்தை தரும். சுகபேதி அன்று இளநீர் குடிக்காதே என்றால் குடிக்ககூடாது. மீறி குடித்தால் ஜலதோஷம் பிடிக்கும். அதேப்போல் வீட்டில் கடன் வாங்கி செலவு செய்யாதே என்றால் கடன் வாங்கக்கூடாது. மீறி கடன் வாங்கி பொருட்களை வீட்டில் குவித்தால் அதனால் கடன் அதிமாகி வருமானம் எல்லாம் விரயம் ஆகும். தேவையானவற்றிற்கு  (உதாரணமாக மருத்துவ செலவிற்கு) வருமானம் இல்லாமல் அவதிப்படுவோம்/ துன்பப்படுவோம்.

நான் கூறியவை எல்லாம் மிக எளிமையான உதாரணங்கள். ஆனால் இதனை விட மிக பெரிய விஷயங்களை எல்லாம் பெரியோர்கள் கூறியிருப்பார்கள் உதாரணமாக, சோம்பல், தீ நட்பு, விரத்தி, கடன், பொய், வஞ்சகம் என்று பலவற்றை.

காலந்தோறும் மாறாது வருவது, கற்றறிவை, பட்டறிவை பொருட்படுத்தாமை என்கிற “தமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை” என்னும் அகந்தைப் பிழைதான். அறிவில் மந்தமில்லாவிடினும், மந்தைச் சிந்தனைகளைக் கொண்டவர்கள் புள்ளிவிவரங்களில் ஒன்றாக ஆகிவிடுவரே அன்றி, சாதிப்பது ஒன்றுமில்லை.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் - அவை தூய அன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும். (முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள்மேல் ஏற்றப்பட்டது.).

மணக்குடவர் உரை
நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு அவ்வினைகள் தாம் கருதியவாற்றான் முடிந்த பின்பும் பீடையைத் தரும். இது நன்மையல்லாத வினையைச் செயின், அது தீமை தருமென்றது. அவை பின்பு காட்டப்படும்.

மு.வரதராசனார் உரை
ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

 

குறள் 657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]

பொருள்
பழி  - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

மலைந்து - மலைத்தல் - மாறுபடுதல்; பொருதல்; மயங்குதல்; வருத்துதல்; 

மலைந்து - மலை-தல் - malai-   4 v. cf. மிலை-. [K. male.]tr. 1. To wear, put on; சூடுதல். மாபெருந் தானையர்மலைந்த பூவும் (தொல். பொ. 60). 2. To takeupon oneself; to enter into, as war; மேற்கொள்ளுதல். பழிமலைந் தெய்திய வாக்கத்தின் (குறள்,657). 3. To resemble; ஒத்தல். கவிகைமாமதிக் கடவுளை மலைய (கந்தபு. சூரனரசிருக். 9). 4.To pluck; பறித்தல். கழுநீர் மலையு வயன்மா தினரே(கல்லா.). 5. To oppose, fight against;எதிர்த்தல். (சூடா.)--intr. 1. To fight; to become opposed; பகைத்து மாறுபடுதல். இகன்மலைந்தெழுந்த போழ்தில் (சீவக. 747). 2. To bestaggered; to be doubtful or confused; மயங்குதல். வேறு வேறு எடுத்துக் காட்டுதல்பற்றி மலையற்க(சி. போ. பா. 6, 2, பக். 146). 3. To wrangle,dispute; வாதாடுதல். தத்த மதங்களே யமைவதாகவரற்றி மலைந்தனர் (திருவாச. 4, 53).திகைத்தல்; வியத்தல்.

எய்திய - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

ஆக்கத்தின் - ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

சான்றோர் - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

கழி - கோல், மரக்கொம்பு; கடலடுத்தஉவர்நீர்ப்பரப்பு; நுகத்துளையில்இடுங்கழி; ஆயுதக்காம்பு; யாழின்இசையெழுப்புங்கருவி; வரிச்சல்; நூற்சுருள்; மிகுதி; ஊன்; கயிறு.

நல்குரவே - நல்குரவு - வறுமை

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள் 
குற்றங்களிலும் பொய்களிலும் தீய வழிகளிலும் பகைவரிடமும் மயங்கி செல்வத்திற்கு ஆசைப்பட்டுப் பெற்ற செல்வத்தை யாரும் மதிக்கமாட்டார்கள். அத்தகைய செல்வத்தை காட்டிலும் மிக துன்புறுத்தும் வறுமையை ஏற்று அனுபவித்து வாழ்வதே சான்றோர்க்கு சிறப்பு. ஏனெனில் குற்றங்களில் இருந்து வரும் செல்வம் மெய்யான இன்பம் அல்ல. அது துன்பம். மேலும் வறுமையை துன்பம் என நினையாமல் இருந்தால் அது துன்பமே இல்லை. அவ்வாறு நினைத்து வறுமையை அனுபவிப்பதே சான்றோர்க்கு சிறப்பு.

கீழ்வரும் பழமொழிப் (657) பாடல் இக்குறளின் கருத்தையொட்டிருப்பதைக் காணலாம்.

சிறியவர் எய்திய செல்வத்தின் மாணப்
பெரியவர் நல்குரவு நன்றே – தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின்
முதுநெய்தீ(து) ஆகலோ இல்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் - சாலாதார் தீய வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின்; சான்றோர் கழி நல்குரவே தலை - அதுமேற் கொள்ளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது. (நிலையாத செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், 'சான்றோர் கழிநல்குரவே தலை' என்றார்.).

மணக்குடவர் உரை
பழியைச் சுமந் தெய்திய ஆக்கத்தினும், சான்றோர் மாட்டு உளதாகிய மிக்க நல்குரவே தலைமையுடைத்து. மேற்கூறியவாறு செய்யின் நல்குரவு உளதாகு மென்றார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை
பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.

Thirukkural - Management - Ethical Behavior

Valluvar resorts to a simile, in Kural 657, to further drive home the importance of ethical behavior for a lifelong happiness and achievement. It is better for a person to live in poverty than to live in prosperity with the wealth gained through improper or unimproved means. Living in poverty makes life more meaningful than living in prosperity with the wealth gained through unethical means. One's living must be honest and meaningful. Be known for your integrity, as money cannot buy integrity.

Better the poverty of the wise 
Than wealth got with infamy. 

Wealth amassed through improper means will get that person all the blame. The wealth amassed through improper means is not worth the blames a person gets for resorting to unethical means. Moreover, that act will disturb the conscience of that person at a later stage and he will regret. Regretting demolishes all that one has built in life. Ends do not justify means.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

குறள் 656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஈன்றாள் - ஈன்றவள், தாய்

பசி - உணவுவேட்கை; வறுமை; தீ.

காண்பான் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

செய்யற்க - எதுவும் செய்யாமல் 

சான்றோர் - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

பழிக்கும் - நிந்தித்தல்; புறங்கூறுதல்.
பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள் 
ஒருவர் செய்யும் செயல் எக்காலத்திலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் நீதி தவறக்கூடாது. அறம் அல்லாத செயல்களை ஒருவர் என்றும் செய்யக்கூடாது. அவ்வாறு மீறி செய்தால் சான்றோர் பழிப்பர் என்ற அச்சம் ஒருவர்க்கு வேண்டும் . தன்னை பெற்றெடுத்த தாய் பசியால் வாடுகிறாள் அவள் பசியை போக்க ஒருவன் அறம் அல்லாத காரியத்தை செய்தால் அக்குற்றத்திற்காக அவன் சான்றோரால் பழிக்கப்படுவான். ஆதலால் எக்காரணம் கொண்டும் தவறு செய்யாதே.

தாயின் பசியை விட பெரிய ஒரு காரணம் இவ்வுலகில் ஒருவனுக்கு இல்லை. ஆதலால் நீ உன்னை நியாயப்படுத்திக்கொள்ள எப்படிப்பட்ட காரணமும் அது உனது கடமையையை ஆனாலும் கூறாதே. மேலும் ஒருவர் தவறு செய்ய உணர்ச்சியின் அதிகபட்சமான தாயின் பசியை காரணமாக கூறக்கூடாது. அப்படியெனில் எவ்வித உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவும் எடுக்காதே செயலையும் செய்யாதே. தவறு செய்தால் சான்றோர் பழிப்பர்.

மேலும் சான்றோர் பழிப்பர் என்று திருவள்ளுவர் கூறுகிறார். ஏனெனில் ஒரு சராசரி மனம் சலம் உடையது உணர்ச்சிவயமாக எதனையும் அணுகுவர். சான்றோர் தவறான செயல்களை என்றும் ஒப்பர். ஏனெனில் அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். 

One cannot justify their wrong / unethical things with any kind reason even if it is helping to alleviate one's mother's hunger.


முதன்முறை தவறு செய்யும் பொழுது ஒருவருக்கு தான் செய்வது தவறு என்று தெரியும். ஆனால் அதற்கு அவர் ஒரு நொண்டி சாக்கை கண்டுப்பிடித்துக்கொள்வர். அது அவர்களுக்கு பழகிவிடும். அடுத்தவருக்கு பழகி விடும். அதனால் அவர்கள் நெஞ்சத்தில் அவலம் இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார். அதனால் தன்னை ஈன்றத் தாயின் பசியையே ஒரு காரணமாக எடுத்தக்கொள்ள மறுக்கிறார் திருவள்ளுவர். கடமையைவிட அறமும் வாய்மையும் முக்கியம் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் - தன்னைப் பயந்தாளது பசியை வறுமையால் கண்டு இரங்கும் தன்மையினான் எனினும்; சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க - அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாதொழிக. ('இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக' என்னும் அறநூற்பொது விதி, பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு உரியராதலும், நன்கு மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமை பற்றி, இவ்வாறு கூறினார். இவை ஐந்து பாட்டானும், 'பாவமும் பழியும் பயக்கும் வினை செய்யற்க' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னைப் பயந்தாள் பசிகண்டானாயினும் சான்றோரால் பழிக்கப்படும் வினையைச் செய்யாதொழிக. இது நல்லோர் பழிக்கும் வினையைத் தவிர்க என்றது.

மு.வரதராசனார் உரை
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை
தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.

Thirukkural - Management - Ethical Behavior
Never do an act that will have negative consequences and will make you regret. Valluvar is too 
strong when he advises, ‘Never resort to unethical acts even if they quench your mother's hunger.’ 
That act will not make your mother satisfied and instead will make virtuous people blame you, 
commands Kural 656.

Do not do what the wise condemn
Even to save your starving mother.

The decisive test to check whether a task is worth doing is to ask yourself whether your mother 
will feel proud of you, if you do that task. Definitely, your mother will not be proud of your 
involving in any unethical act. Therefore, the acid test is to ask yourself, 'Will this make my 
mother feel proud?’

English Meaning - As I taught a kid - Rajesh
Even if one sees his/her mother starving, yet one should not do wrong/unethical/immoral activities that would be lamented/discouraged by scholars. There cannot be a bigger reason than mother's hunger to justify stealing or any other immoral activities. Yet Thiruvalluvar places honesty and morality above any other justification. Because, people have the potential to justify anything with 1000s of reasons

Questions that I ask to the kid
You see your mother is starving to death, what should you not do? Why?

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

குறள் 655
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]

பொருள்
எற்று - எற்றுகை; எத்தன்மையது; வியப்பிரக்கக்குறிப்புச்சொல். eṟṟu   III. v. t. cast, throw off, jerk away, kick away, எறி; 2. kill, கொல்லு; 3. pierce, stab, குத்து; 4. hit with the fist, குத்து; v. i. cease, நீங்கு; 2. feel pity, இரங்கு.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

இரங்குவ - இரங்குதல் - வருந்துதல்; அருளல் மனமழிதல்; அழுதல்; கழிவிரக்கம்கொள்ளல்; ஒலித்தல் யாழொலித்தல்; கூறுதல் ஈடுபடுதல்

அற்க - வேண்டாம்
செய்யற்க - செய்யாதே ; செய்ய வேண்டாம்

செய்வானேல்  - மீறி செய்தால் 

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

செய்யாமை - செய்யாதிருத்தல்

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள் 
இப்படிப்பட்ட ஒரு (தீங்கு விளைவித்த, வருந்தத்தக்க) செயலை செய்துவிட்டோமே என்று வருங்காலத்தில் வருந்தும்படியான செயல்களை ஒரு பொழுதும்  செய்யாதே. அதை மீறி செய்தாலோ அல்லது அறியாமையினால் செய்தாலோ அல்லது சூழலலினால் செய்தாலோ வருங்காலத்தில் மறுபடியும் இதைப்போன்ற ஒரு தவறை செய்யாதே. அவ்வாறு தவறான காரியங்களையும் தப்பான காரியங்களையும் செய்யாது இருத்தல் நன்மை விளைவிக்கும்.

தவறுகளில் இருந்து கற்காமல் அலட்சியமாக இருப்பது மிகப்பெரிய தவறு என்றென்கிறார் திருவள்ளுவர். முதல் தடவை எவ்வளவு முயன்றும் தவறு நடந்தாலோ அல்லது அறியாமல் செய்த தவறு நடந்தால் அதில் இருந்து கற்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அதனால் தான் இக்காலத்தில் அலுவகங்களில் “business review / de-brief" என்று ஒரு meeting நடக்கிறது.

தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் தெரிந்து செய்வது அல்லது மறுபடியும் தெரிந்து செய்வது சரியல்ல. அது மன்னிக்க முடியாததாகும்.

இக்கருத்தையொட்டிய சங்க இலக்கிய பாடல்களின் மேற்கோள்கள் சில இதோ, கி.வா.ஜ-வின் ஆய்வு பதிப்பிலிருந்து.

செய்து பின்னிரங்கா வினையொடு (அகநானூறு. 268:13)
செய்திரங்கா வினை (புறநானூறு 10:11)

கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம் (நான்மணி 8)

நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த "பெற்றால் தான் பிள்ளையா ?" திரைப்படத்தில் கவிஞர் வாலியின் வரிகளில் "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" என்ற பாடலில் கீழ்க்காணும் வரிகள் வரும்

தவறு என்பது தவறி செய்வது...
தப்பு என்பது தெரிந்து செய்வது...

தவரு செய்தவன் திருந்தி ஆகனும்...
தப்பு செய்தவன் வருந்தியாகனும்


மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை

எற்று என்று இரங்குவ செய்யற்க - யான் செய்தது எத்தன்மைத்து என்று பின் தானே இரங்கும் வினைகளை ஒருகாலும் செய்யாதொழிக; செய்வானேல் மற்று அன்ன செய்யாமை நன்று - அன்றி ஒருகால் மயங்கி அவற்றைச் செய்யும் தன்மையனாயினான் ஆயின், பின் இருந்து அவ்விரங்கல்களைச் செய்யாதொழிதல் நன்று. ('இரங்குவ' என முன் வந்தமையின், பின் 'அன்ன' வெனச் சுட்டி ஒழிந்தார். அவ்வினைகளது பன்மையான் இரக்கமும் பலவாயின. அச்செயற்குப் பின்னிருந்து இரங்குவனாயின், அது தீரும் வாயில் அறிந்திலன் எனவும், திட்பமிலன் எனவும் பயனல்லன செய்கின்றான் எனவும், தன்பழியைத் தானே தூற்றுகின்றான் எனவும் எல்லாரும் இகழ்தலின், 'பின் இரங்காமை நன்று' என்றார்.இதுவும் வினைத்தூயார் செயலாகலின்,உடன் கூறப்பட்டது. 'பின் தொடர்தற்குச் செய்வானாயின், அவை போல்வனவும் செய்யாமை நன்று' எனப் பிறரெல்லாம் இயைபு அற உரைத்தார்.).

மணக்குடவர் உரை
துணியப்பட்ட தென்று பின்னிரங்கப்படும் வினையைச் செய்யா தொழிக; வினைசெய்வானாயின் அவை போல்வனவுஞ் செய்யாமையே நல்லது. இது பின்னிரங்கப்படும் வினையைச் செய்யலாகாதென்றது.


மு.வரதராசனார் உரை
பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை
என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.

Thirukkural - Management - Ethical Behavior
Never do acts that will make you regret or feel sorry for doing those sorts of  acts. If you have done an act that makes you regret, never do that again and regret once again, reinforces Kural 655. Wisdom is not to repeat blunders. If we do a thing without knowledge, that is an error. If  we do an act despite knowledge, that is a mistake. And if we do an act that brings insult, that is a blunder. Only people who never think of the consequences of their actions, will repeat actions that bring further insults.

Do not do what you will regret; and if
Do not regret.

If you build an empire through unimproved means and regret later on for having built that through 
wrong practices, the entire empire would collapse internally. You cannot be proud of your achievements.

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

குறள் 654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இடுக்கண் - மலர்ந்தநோக்கமின்றிமையல்நோக்கம்படவரும்இரக்கம்; துன்பம் வறுமை

படினும் - படிதல் - அடியிற்றங்குதல்; பரவுதல்; வசமாதல்; கையெழுத்துத்திருந்திஅமைதல்; கீழ்ப்படிதல்; குளித்தல்; கண்மூடுதல்; அமுங்குதல்; கலத்தல்; வணக்கமுடன்கீழேவிழுதல்; நுகர்தல்; பொருந்துதல்.

இளிவந்த - இளிவு - இழிவு; இகழ்ச்சி இழிதகவு அருவருப்பு அவலச்சுவைநான்கனுள்ஒன்று; நிந்தை

செய்யார் - பகைவர்; செய்யமாட்டார்கள் 

நடுக்கு - நடுக்கம்; மனச்சோர்வு.
நடுக்கம் - நடுங்குகை; மிக்கஅச்சம்; துன்பம்; கிறுகிறுப்பு.

அற்ற - அல்லாத

காட்சி - பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

யவர் - அவர்

முழுப்பொருள் 
தனக்கு எவ்வளவு துன்பங்கள் இடையூறுகள் சோதனைகள் வந்தாலும் (வந்து நெடுங்காலம் சூழ்ந்தாலும்) மனசோர்வான காலத்திலும் நடுக்கம் அற்ற ஐயம் அற்ற தெளிவான அறிவை உடையோர் (எக்காரணத்திற்காகவும் காழ்ப்பாலும் வஞ்சத்தாலும் கோபத்தாலும் விரத்தியாலும்) இழிவான செயல்களை நடுக்கமற்ற சிந்தனைகளையும் தெளிவுடைய அறிவுடையவர்கள் ஒருபொழுதும் செய்யமாட்டார்கள். அதுவே மேன்மை உடையார்க்கு அழகு. 

கோபத்தில் (இழிவான செயல்களை) செய்தேன் அது மனித இயற்கை/சுபாவம், நானும் மனுஷன் இல்லையா? என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டமாட்டார்கள். துன்பமோ நெடுங்காலம் துன்பம் இருந்ததனால் வந்த சோர்வோ தவறு செய்வதற்கான பலவீனமான சந்தர்ப்பங்களாக கூடாது என்கிறார் திருவள்ளுவர்.

அதற்கு ஒருவர் தன் ஆத்மஷக்தியை வளர்த்துக்கொள்வது மிகவும் உதவும். அதனை வளர்ப்பது ஒரு தவமாகும். ஆனால் எல்லோராலும் முடிந்த ஒன்றாகும்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் இடுக்கணிலே படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார்; நடுக்கு அற்ற காட்சியவர் - துளக்கம் அற்ற தெளிவினை உடையார். (சிறிதுபோழ்தில் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவர் ஆகலான் , 'செய்யார்' என்றார்.).

மணக்குடவர் உரை
துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார் துளக்க மற்ற தெளிவுடையார். இது பிறரால் இகழப்படுவன செய்யற்க வென்றது. இதனையும் கடிய வேண்டு மென்பது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.

English Meaning - As I taught a kid - Rajesh
A knowledgeable person with clarity, a wise person will never do or support wrong things even amidst difficult situations, hurdles, testing times, depression times despite occsilations in mind and dilemma. It is easy to give an excuse that I did it in anger, out of depression, difficult situation etc. Or another common excuse is I am also human. But, wise people won't give such lame execuses. Hence, one has to develop their inner strength so that it protects us from doing wrong things during tough times.

Questions that I ask to the kid
What does a wise person not do during difficult times?
One has an oscillatory mind during difficult times. Who does what? How can one avoid it?

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

குறள் 651
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
துணை- அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்)

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

தரூஉம் - தரும், கொடுக்கும்

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி

நலம் -  நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

வேண்டிய - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

எல்லாந் - எல்லாவற்றையும்

தரும் தரும், கொடுக்கும்

முழுப்பொருள் 
துணை என்றால் கணவன் மனைவின் என்று பல உரைகள் இங்கு கூறுகின்றன. ஆனால் துணை என்றால் உறவு நட்பு கணவன் மனைவி என்ற எல்லா பொருளும் இக்குறளுக்கு பொருந்தும். ஒருவர் செய்யும் காரியத்தில் நல்ல துணையாக ஒரு நண்பரோ நபரோ கணவனோ மனைவியோ அலுவலக நண்பாரோ அமைந்தால் அச்செயல் இறுதியில் நல்ல பலனை தரும். பலன் என்றால் புகழ் செல்வம் பொருள் என்று அர்த்தம் கொள்ளலாம். 

துணை என்ற சொல்லுக்கு உறவு என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பொருள் எடுத்துக்கொள்ளாமல், அம்பு என்ற பொருளும் அகராதியில் இருப்பதை காணாலம். அதாவது, செய்யும் செயலுக்கு உதவியாக இருக்கக்கூடிய கருவிகளை குறிக்கிறது. அதாவது Tools / Productivity Tools. இந்த கருவிகள் செய்யும் செயலை செய்ய உதவும். 

அதுபோல செய்யும் செயலில் தூய்மையும் செம்மையும் அழகும் அறமும் முழுமையும் இருந்தால் அச்செயலின் பலனாக தேவையான எல்லாச்செல்வங்களையும் பெறலாம்.

சிலகாலம் கழித்து இன்னும் ஆழமாக இக்குறளைப் பற்றி யோசித்தேன். எனக்கு தோன்றியது என்னவெனில், பொதுவாக எல்லோரும் கூறுவது எனக்கு கூடயிருந்து நல்லது கெட்டது சொல்ல யாருமே (உறவுகளோ நண்பர்களோ இல்லை) இல்லைங்க என்பது தான். என்ன தூக்கிவிட ஆளே இல்லை என்பது தான். எனக்கு ஒரு support system இல்லைங்க என்பது தான். நல்ல உறவுகளும் நண்பர்களும் நமக்கு செல்வங்களே. அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் தான் வள்ளுவரே சுற்றந்தழால் அதிகாரத்தில் “குறள் 524 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்” என்று கூறியிருப்பார். ஆனால் இந்த support system இல்லங்க என்றென்பது எல்லாம் சுத்தமான சால்ஜாப்புக்கள். ஏனெனில் நாம் நமது அன்றாட நாட்களில் எவ்வளவு நேரம் வீண் செய்கிறோம், நமது கவனத்தையும் ஆற்றலையும் எவ்வளவு வீண் செய்கிறோம். அதுவே நாம் ஒரு செயலை செவ்வென செய்தால் நமக்கு அதன் பலனும் முன்னேற்றமும் நன்றாக கிடைக்கும். அதனால் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் என்று இக்குறளில் கூறியுள்ளார் வள்ளுவர். ஏனெனில் “குறள் 1024 சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு” என்று வள்ளுவரே கூறியுள்ளார். இதையே “When you want something all the universe conspires in helping you to achieve it” என்று - Paulo Coelho (The Alchemist இல்) கூறியிருப்பார். நாம் ஒன்று வேண்டும் என்று ஒரு செயலில்  ஈடுப்பட்டால் நமக்கு இவ்வுலகமே வந்து உதவும். அதனால் தான் எல்லோரும் கூறுவது "செய்யும் தொழிலை சுத்தமாக செய்யவேண்டும்" என்று. 

மேலும் ஒருவர் ஒரு காரியத்தை செவ்வென செய்து பலனை விளைவித்தால், நாம் அதனால் ஒரு பலனை அறுவடை செய்வதற்கு முன் மற்றவர்களின் நம்பிக்கையை ஈன்று எடுத்திருப்போம். அதுவே முதல் நன்மை.
For e.g, when you do your work well you would deliver results. When one delivers results, one would the earn the trust of his supervisors, manager, peers.

மேலும் அஷோக் உரை 


பரிமேலழகர் உரை
துணை நலம் ஆக்கம் தரூஉம் - ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் - அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையும் கொடுக்கும். (வேண்டிய எல்லாம் என்றது இம்மைக்கண் அறம், பொருள், இன்பம் முதலாயவற்றையும்,மறுமைக்கண் தான் விரும்பிய பதங்களையும். இதனான் காணப்படும் துணை நன்மையினும் கருதப்படும் வினை நன்மை சிறந்தது என வினைத்தூய்மையது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்; வினைநலம் அவ்வளவேயன்றி வேண்டிய எல்லாவற்றையும் ஒருங்கு கொடுக்கும். துணைநலம் ஆக்கங் கொடுத்தல் எல்லாரானும் அறியப் படுதலின் ஈண்டு ஏதுவாக வந்தது

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.

Thirukkural - Management - Personality Development - Environment
Friends are fortune. Remember the old saying, “A friend in need is a friend indeed.” Right companionship brings you all the wealth and benefits. We always need the supports of others to achieve greater things. There is no such person as a self-made man. Similar to right companionship, meaningful and timely execution of a beneficial act brings all the desired beneficial things to you, as per Kural 651.

A man's friends bring him worldly goods.
His good deeds all he needs.

English Meaning - As I taught a kid - Rajesh
Good support system (good people, mentors, team, tools, relationships etc) would help in improving the productivity/effectiveness and making progress. At the same time, prudently doing a work correctly and effectively will yield all the positive results one conspires for. 

Basically, One has to have a goal, conspire for it and prudently do all things required to achieve it. Support system would be of help for sure. However, one should not depend on support system alone. When you want something all the universe conspires in helping you to achieve it. 


Questions that I ask to the kid
What does good support system and prudence yield?

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும்

குறள் 653
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]

பொருள்
ஓ - பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; தெரிதல்குறிப்பு; நினைவுக்குறிப்பு; கொன்றை; பிரமன்; ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை; பிரிநிலை, ஐயம், அசைநிலைஇவற்றைக்காட்டும்ஓர்இடைச்சொல்.

ஒ - பத்தாம்உயிரெழுத்து; ஒவ்வுஎன்பதன்பகுதி; ஐம்பறவைகளுள்மயிலைக்குறிக்கும்எழுத்து

ஓஒ! -  அதிசயக்குறிப்பு, வியப்புக்குறிப்பு

ஓஒதல் - ஓவுதல் - ஒழிதல், நீங்குதல்; நீக்குதல்; முடிதல்.

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

ஒளி  - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.

மாழ்கும் - மாழ்குதல் - யங்குதல்; கெடுதல்; சோம்புதல்; கலத்தல்.

செய்வினை - வினைமுதல்வினை; முற்பிறப்பில்செய்தகருமம்; பில்லிசூனியம்; செய்யுந்தொழில்.

ஆஅதும் - ஆகுதல், (எண்ணிய திண்ணிய முடிதல்) உயர்வான மேன்மையைக் கொடுத்தல்
என்னுமவர் - வேண்டுமென கருதுவோர்

முழுப்பொருள்

ஒருவர் வாழ்நாளில் தவிர்க்க வேண்டும் என்றால் அது தன்னுடைய புகழையும் மாண்பையும் அறிவையும் நன்மதிப்பையும் கெடுக்கும் செயல்களும், எண்ணங்களும் ஆக தான் இருக்க முடியும் என்கிறார் திருவள்ளுவர். இதனை ஆக்கப்பூர்வாமான செயல்களை விரும்பவரும், வாழ்வில் மேன்மை தரும் செயல்களை வேண்டுபவரும் விரும்புவர். 

உனக்கு புகழ்வெளிச்சம் வேண்டும் என்றால் உனது செயல்களை சரியாக தேர்வு செய் செவ்வென செய்.


என்று முன்னரும் வள்ளுவர் கூறியிருந்தார்.

சும்மா சோம்பேறியாக ஒரு செயலையும் செய்யாது இருத்தலைக்கூட ஒருவர் வாழ்வில் இருந்து நீக்க வேண்டும். ஏனெனில் செயலின்மை புகழையும் மேன்மையையும் குறைக்கும். சான்றோர் ஏசுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆதும் என்னும் அவர் - மேலாகக்கடவோம் என்று கருதுவார்; ஒளி மாழ்கும் வினை செய் ஓஒதல் வேண்டும் - தம் ஒளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க. ('ஓஒதல்வேண்டும்' என்பது ஒரு சொல் நீர்மைத்து. ஓவுதல் என்பது குறைந்து நின்றது. ஒளி - தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல். 'செய்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை என வினைத் தொகையாக்கியவழிப் பொருளின்மை அறிக. ஒளிகெட வருவது ஆக்கம் அன்று என்பதாம்.).

மணக்குடவர் உரை 
தமக்குப் புகழ்கெடவரும் வினையைச் செய்தலையும் ஆக்கங் கருதுவார் தவிர்க. இது முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்க என்றது.

மு.வரதராசனார் உரை
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

என்றும் ஒருவுதல் வேண்டும்

குறள் 652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]

பொருள்
என்றும் - எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லா செயல்களிலும் எல்லா எண்ணங்களிலும் எல்லா இடங்களிலும்

ஒருவுதல் - விடுதல்; நீங்குதல்; கடத்தல்; ஒத்தல்.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

வேண்டும் - அவா, பெருவிருப்பம்

புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

புகழொடு - புகழையும்

நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

பயவா - பயக்காத, தாராத

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள்

பெரும்பயன் இல்லாத சொல்” என்று சிந்தனையும், சொல்லையும் பயனுக்கு தொடர்பு படுத்திய வள்ளுவர், செயலுக்கு என்ன சொல்கிறார் என்பதே இக்குறள்.

எல்லா நேரங்களிலும் காலங்களிலும், செயல்களிலும் எண்ணங்களிலும் இடங்களிலும் நாம் விருப்பத்துடன் விட வேண்டிய ஒதுங்கி இருக்க வேண்டிய செயல்கள் உண்டு. அவை புகழையும் பயனையும் விளைவாக பயக்காத செயல்கள். புகழும் நன்மையும் சேர்ந்து வருவது. செய்யும் வினையானது அறவழிகளில் செய்யப்பட்டிருந்தாலே நடக்கும். 

இங்கே திருவள்ளுவர் புகழ் என்று சொல்லி இருக்கலாம் ஆனால் சில செயல்கள் புகழ் தரும் ஆனால் நன்மை தராது அல்லது அறம் அல்லாதது. உதாரணமாக மனிதன் ஆடம்பரமாக செய்யும் அனைத்து செயல்களுமே (ஏன் ஆடம்பரமாக செய்யப்படும் சில திருமணங்கள் கூட). 

அதேபோல திருவள்ளுவர் நன்றி என்று சொல்லி இருக்கலாம். ஏன் என்றால் சில செயல்கள் சிலருக்கு நன்மை பயவிக்கும். ஆனால் அவை அறம் அல்லாத செயல்களாக இருக்கும். அது புகழ் தராது. அதேபோல சிலர் சுயநலமாக தனக்கு தானே எல்லாவற்றையும் செய்துகொள்வார்கள். அது தனக்கு பயன் தரும் ஆனால் புகழ் தராது. [தனக்கு செய்துக்கொள்ள கூடாது என்று அல்ல. எல்லாவற்றையும் தனக்கு மட்டுமே செய்துக்கொள்ளும் எண்ணம் நல்ல குணம் அல்ல என்பது தான்]

சரி, ஒன்றை விடுவதால் பயன் என்ன? அதற்கு பதில் ”குறள் 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். என்பதை நினைவில் கொள்க

ஒருவிதத்தில் இக்குறளை பார்த்தால் prioritization (செயல் முன்னுரிமை) எனலாம். புகழும் நன்மையும் வராத ஒரு செயலை விட்டுவிடுக. புகழும் நன்மையும் வரும் செயல்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதானால் தான் ஒரு செயலை தவம் போல் செய்யவேண்டும். இதனை கீழ்க்காணும் குறளில் காணலாம். தவம் செய்யும் பொழுது தானாக தேவையில்லாதவற்றில் இருந்து நீங்கி இருக்க வேண்டும்.

ஆத்திச்சூடி-யில் ஔவையார் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்
அறம் செய விரும்பு
அழகு அலாதன செய்யேல்
நன்மை கடைப்பிடி
பீடு பெற நில்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் லேண்டும் - அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும். (பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.)

மணக்குடவர் உரை
எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை பயவாத வினையை.

என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர்
புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கும் தமக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பொதுவாக உரிய அறமும் மறுமைக்குச் சிறப்பாகவுரிய புகழும் விளைக்காத வினைகளை; என்றும் ஒருவுதல் வேண்டும் - எக்காலத்தும் அமைச்சர் செய்யாது விட்டு விடுதல் வேண்டும்.

துன்பநிலைமையும் நெருக்கிடை நிலைமையும் உட்பட 'என்றும்' என்றார். இறப்பின் பின்னரே புகழ் சிறந்து தோன்றும் என்பதை,

"நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது." (குறள். 235)

என்பதனால் அறிக.

மு.வ உரை
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்

சாலமன் பாப்பையா உரை
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

Thirukkural - Management
It is wise to do any activity that brings fame to self and benefits to others. Valluvar strongly advocates through Kural 652 that one should shun or keep away from any activity that brings one disgrace and a sense of thanklessness. Never do acts that will make you regret or feel sorry for doing those sorts of acts. If you have done an act that makes you regret, never do that again and regret once again.

சலத்தால் பொருள்செய்தே

குறள் 660
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇயற்று.
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]

பொருள்
சலம் - அசைவு; நீர்; சீழ்நீர்; மூத்திரம்; நடுக்கம்; அசையும்அம்புக்குறி; இயங்குதிணை; சுழற்சி; தணியாக்கோபம்; கோபம்; பொய்ம்மை; வஞ்சனை; பட்சபாதம்; தீச்செயல்; மாறுபாடு; போட்டி; முள்ளம்பன்றியின்முள்இலாமிச்சை; பிடிவாதம்.

சலத்தால் - அறம் வழியில் அல்லாத வழியில்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

பொருள்செய்-தல் - poruḷ-cey-   v. id. +.tr. 1. To treat with regard, esteem highly;மதித்தல். நான் உன்னைப் பொருள் செய்யேன். 2.To comment on, explain; உரையிடுதல். Colloq.--intr. To acquire wealth; திரவியந் தேடுதல்.பொருள் செய்வார்க்கு மஃதிடம் (சீவக. 77).

பொருள்செய்து - பொருள் உருவாக்கிய / செல்வம் ஈட்டிய

ஏமார்-த்தல் - ēmār-   v. tr. id. + ஆர்²-.To strengthen, establish firmly, make secure;பலப்படுத்துதல். சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல்(குறள், 660).  

ஏமார்த்தல் - பலப்படுத்துதல்

ஏமார்-தல் - ēmār-   v. intr. ஏமம் + ஆர்¹-To be confused, bewildered; மனங்கலங்குதல்.ஏமார்ந் தனமெனச் சென்றுநா மறியின் (நற். 49).  

பசு - pacu   (with incremental `ம்' etc.) adj. from பசுமை, which see.

மண் - நிலவுலகம்; நீராடுங்கால்பூசிக்கொள்ளும்பத்துவகைமண்; பூமி; புழுதி; காண்க:திருமண்; தரை; அணு; சுண்ணச்சாந்து; மத்தளம் முதலியவற்றில் பூசும் மார்ச்சனை; மணை; வயல்; கழுவுகை; ஒப்பனை; மாட்சிமை.

பசுமண்  - பச்சை மண்
பசுமண் கலம் உள் - பச்சை மண்ணினால் செய்த மண்பாண்டத்தில் உள்ளே

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை

பெய்தல் - pey-   1 v. [M. peyyuga.] intr.& tr. To rain, fall, as dew or hail; மேனின்றுபொழிதல். பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55).--tr. 1. To pour down, pour into; வார்த்தல்.பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (புறநா. 115). 2.To put, place, lay, put into, serve up, as foodin a dish; கலமுதலியவற்றில் இடுதல். உலைப்பெய்தடுவது போலுந் துயர் (நாலடி, 114). 3. To throwout, throw aside; எறிந்து போகடுதல். பார்த்துழிப்பெய்யிலென் (நாலடி, 26). 4. To insert, interpol-ate, as in a text; இடைச்செருகுதல். 5. To give,confer; கொடுத்தல். உயிர்க்கு . . . வீடுபே றாக்கம் பெய்தானை (தேவா. 975, 7). 6. To make;to settle, appoint; அமைத்தல். பிரான் பெய்த காவுகண்டீர் . . . மூவுலகே (திவ். திருவாய். 6, 3, 5). 7.To spread; பரப்புதல். தருமணல் தாழப் பெய்து(கலித். 114). 8. To discharge; புகவிடுதல். கருந்தலை யடுக்கலி னணைகள் . . . . பெருங்கடலிடைப்பெய்து (கம்பரா. கும்ப. 248). 9. To write, draw;எழுதுதல். பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித்.143). 10. To put on, as harness; to

நீர் பெய்து - நீர் ஊற்றி 


இர் - முன்னிலைப்பன்மை விகுதி; படர்க்கைப்பன்மை விகுதி; கேளிர் பெண்டிர்.

இயற்று - இயற்றுதல் - செய்தல்; நடத்துதல் சம்பாதித்தல் தோற்றுவித்தல் நூல்செய்தல்.

இரீஇயற்று - வைத்தது போல் ஆகும்.

முழுப்பொருள்
ஒருவர் அறவழியில் அல்லாது பொருள் ஈட்டி, பின்பு அதனை அனுபவிக்க அதனை சேர்த்து வைக்கிறேன் என்று பாதுகாத்து வைப்பர். தங்கள் சொத்து மதிப்பினை பலப்படுத்துகிறேன் என்று செய்வர். சொத்து சேர்பதில் மகிழ்ச்சியடைவர். ஆனால் அப்படி பொருள் ஈட்டி சேமிப்பது பசுமண்ணால் செய்த மண் பானையில் (பொதுவாக மண் பானையை சுடுவர். பின்பு மண் பாணை கனமாக இருக்கும். ஆனால் அதை பசு மண் என்று சொல்ல மாட்டார்) நீரை ஊற்றி சேமிப்பதற்கு ஈடாகும். ஏனெனில் பசுமண் பானையில் நீர் ஊற்றினால் மண் கரைந்து நீரும் ஒழுகிவிடும். இரண்டுமே நிலைக்காது. மகிழ்ச்சியும் நிலைக்காது பொருளும் நிலைக்காது.

சுட்டமண் கலயமே நீரை சேகரிக்கவல்லது என்பது சுட்டும் பொருளாக இருந்து, சுடுவது, நேர்மையான வழியிலே உழைப்பதையும், கடினப் பாதையை உணர்த்துவதையும் குறிப்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்

ஒப்புமை
”ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கேற் றாங்கு” (நற் 308:9-10)

“பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல” (குறுந். 29:2)
“எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
இன்றுளி படநனைந் துருகி” (திருவிசைப்பா, கருவூர். திருவிடைமரு.7)

மேலும் - அஷோக்

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
சூதாலே அனைவரையும் ஏய்த்து ஏய்த்து
சொந்தங்கள் பந்தங்கள் தம்மை ஒய்த்து
தோதாக கொள்ளைகளால் பணத்தைச் சேர்த்து
துடிக்க வைத்து அனைவரையும் துவள வைத்து
மேதாவி போல் வாழ நினைப்பவரே
மேன்மையற்ற அறம் துறந்த அந்தச் செல்வம்
ஏதாகும் பச்சைமண் கலத்துள் விட்ட
ஏரியதன் நீராகும் இரண்டும் போகும்

குறட் கருத்து  2 (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஏய்ப்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து
எத்தனையோ கோடிகளைச சேர்த்து வைப்பார்
வாய்ப்பதெல்லாம் தமக்கென்று வளைத்திடுவார்
வகை வகையாய்ச சேர்த்திடுவார் உணர மாட்டார்
போய் அதனை மறைத்து வைத்தல் பச்சை மண்ணில்
பொதிந்து வைத்த பாத்திரத்தில் தண்ணீர் தன்னை
ஊற்றி வைத்தல் போலாகும் ஒழுகிப் போகும்
உதவாது உதவாது உணர்வீர் நீரே

பரிமேலழகர் உரை
சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் - அமைச்சன் தீய வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்; பசுமட்கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று-பசிய மட்கலத்துள்ளே நீரைப் பெய்து அதற்கு ஏமஞ்செய்ததனோடு ஒக்கும்.

விளக்கம்
[முன் ஆக்கம் பயப்பன்போல் தோன்றப் பின் அழிவே பயத்தலால், அவை 'சலம்' எனப்பட்டன. 'ஏமமார்த்தல்' என்பது 'ஏமார்த்தல்' என்றாயிற்று. ஏமத்தை அடையப் பண்ணுதல் என்றவாறு. இருத்துதல் - நெடுங்காலம் இருப்பச் செய்தல். அரசனும் பொருளும் சேரப்போம் என்பதாம். பிறரெல்லாம், 'ஏமாத்தல்' என்று பாடமோதி, அதற்கு மகிழ்தல் என்றும், 'இரீஇயற்று' என்பதற்கு வைத்தாற்போலும் என்றும் உரைத்தார்; அவர் அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய் உவமையிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர். இவை நான்கு பாட்டானும் அதற்குக் காரணம் கூறப்பட்டது.]

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சலத்தான் பொருள் செய்து ஏமார்த்தல்-அமைச்சன் வஞ்சனையாற் பொருளீட்டி அதனால் அரசனுக்குப் பாதுகாப்புச் செய்தல்; பசுமண் கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று - ஈரம் புலராத பச்சைமட் கலத்துள் நீரை வார்த்து அதற்குப் பாதுகாப்புச் செய்ததனோ டொக்கும்.

நீரோடு பசுமட்கலங் கெடுவது போல் வஞ்சனைப் பொருளோடு அரசன் கெடுவான் என்பதாம். ஆக்கஞ் செய்வது போல் முன் தோன்றிப் பின்பு அழிவைச் செய்வதால். 'சலத்தால்' என்றார். 'சலம்' வடசொல். ஏமாத்தல் என்பது ஏமாத்தல் என ரகரங்கெட்டு நின்றது. ஏமம்-பாதுகாப்பு. ஆர்தல்-பொருந்துதல், ஆர்த்தல்-பொருத்துதல். 'இரீஇ' இருத்தி யென்று பொருள் படும் சொல்லிசையளபெடை. இருத்துதல் நீண்டகாலம் இருக்கச் செய்தல்.

மணக்குடவர் உரை
வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல், பசுமட்கலத்திலே நீரை முகந்து

மு.வரதராசனார் உரை
வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.

Thirukkural - Management - Ethical Behavior
Kural 660 contains an outstanding simile. Storing or hoarding — assuming hoarding is the right word — the wealth that someone has got through improper means or by cheating others or by fraudulent  means is similar to storing water in an unburnt mud pot.

To stock ill-got wealth is to store
Water in unbumt clay.

Only a seasoned pot can retain water that is stored in that. It is everyone's knowledge that an unburnt mud pot cannot retain water that is stored in it. Water stored in unburnt mud pot is similar to the wealth earned through improper ways. Even though the wealth appears to be safe, that will disappear soon.