Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label விருந்தோம்பல். Show all posts
Showing posts with label விருந்தோம்பல். Show all posts

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

குறள் 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மோப்பக் - மணம்; மூக்கு.
குழையும் - குழை-தல் - kuḻai-   4 v. intr. [K. koḻe, M.kuḻayu.] 1. To become soft, mashy, pulpy, aswell-cooked; இளகுபதமாதல். குழையச் சமைத்தபருப்பு (திவ். பெரியாழ். 3, 1, 3, வ்யா.). 2. Tomelt, become tender, as the mind; மனமிளகுதல் தொண்டரினங் குழையாத்தொழும் (பதினொ. பட்டினத்.திருவே. 28). 3. cf. kuth. To be overboiled, asrice; சோறு அளிதல். 4. cf. kuš. To be in closeintimacy, to be hand in glove with; நெருங்கி உறவாடுதல் குழைந்து பரிமாறுகிறார்கள். 5. cf. kuṭ. Tobe bent, as a bow; வளைதல் திண்சிலைகுழைய (சூளா.அரசியற். 319). 6. To fade, languish, becomespoilt, as flowers or twigs; வாடுதல் மோப்பக்குழையு மனிச்சம் (குறள், 90). 7. To wave, as aflag, to sway to and fro; துவளூதல். குழைந்த நுண்ணிடை (கம்பரா. சித்திர. 9). 8. To be tired, to beweighed down; தளர்தல் கோதைசூழ் கொம்பிற்குழைந்து (பு. வெ 12, பெண்பாற். 14). 9. To betroubled; வருந்துதல் மகளிர் குழைகின்ற குழைவை(கம்பரா. பிரமாத். 31).  

அனிச்சம் - மோந்தால் வாடும் பூவகை

முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

திரிந்து - திரிதல் - அலைதல்; எழுத்துமாறுதல்; பால்தன்மைகெடுதல்; கெடுதல்; சுழலல்; வேறுபடல்; சலித்தல்; மயங்குதல்; கைவிடுதல்; திருகுறுதல்; போதல்; திரும்புதல்.

நோக்கக் - நோக்குதல் -  பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

குழையும் குழை-தல் - kuḻai-   4 v. intr. [K. koḻe, M.kuḻayu.] 1. To become soft, mashy, pulpy, aswell-cooked; இளகுபதமாதல். குழையச் சமைத்தபருப்பு (திவ். பெரியாழ். 3, 1, 3, வ்யா.). 2. Tomelt, become tender, as the mind; மனமிளகுதல் தொண்டரினங் குழையாத்தொழும் (பதினொ. பட்டினத்.திருவே. 28). 3. cf. kuth. To be overboiled, asrice; சோறு அளிதல். 4. cf. kuš. To be in closeintimacy, to be hand in glove with; நெருங்கி உறவாடுதல் குழைந்து பரிமாறுகிறார்கள். 5. cf. kuṭ. Tobe bent, as a bow; வளைதல் திண்சிலைகுழைய (சூளா.அரசியற். 319). 6. To fade, languish, becomespoilt, as flowers or twigs; வாடுதல் மோப்பக்குழையு மனிச்சம் (குறள், 90). 7. To wave, as aflag, to sway to and fro; துவளூதல். குழைந்த நுண்ணிடை (கம்பரா. சித்திர. 9). 8. To be tired, to beweighed down; தளர்தல் கோதைசூழ் கொம்பிற்குழைந்து (பு. வெ 12, பெண்பாற். 14). 9. To betroubled; வருந்துதல் மகளிர் குழைகின்ற குழைவை(கம்பரா. பிரமாத். 31).  

விருந்து -  viruntu   n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று.(தொல். பொ. 551.)

முழுப்பொருள்
தொடக்கூட வேண்டாம் முகர்ந்தாலே அனிச்சம் மலர் வாடிவிடும். அவ்வளவு மென்மையானது அனிச்சம். அதுப்போல வரும் விருந்தினர்களிடம் முகம் சலித்தோ அல்லது வேறுபட்டோ இன்முகம் காண்பிக்காமல் வரவேற்றாலோ அல்லது விருந்தளித்தாலோ அல்லது பிரியம் இல்லாமல் பார்த்தாலோ முகம் சலித்த நொடியே வந்த விருந்தினர்களுக்கு வருத்தத்தை  தந்துவிடும். விருந்தினர் வாடிவிடுவார். முகமே சலிக்க கூடாது என்றால் நம் சொல் நம் நடவடிக்கைகள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

ஆதலால் விருந்தை லேசாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு மென்மையான மலரை கையாளுவது போன்று பக்குவமாய் கையாளவேண்டும். வரும் விருந்தினர் எக்காரணத்திற்காகவும் வருந்தக்கூடாது. 

சிலர் அனிச்சம் பூவை விருந்தினருடன் ஒப்பிட்டு கூறுகின்றனர். அனிச்சம் பூ போன்று மென்மையான குணம் கொண்டவர்களுக்கு விருந்தளிக்க வேண்டும். விருந்தினர் மென்மையாவர்களாக இருக்க வேண்டும். குறைகள் சொல்ல கூடாது என்று கூறுகின்றனர். திருவள்ளுவர் இக்குறளில் அப்படி கூறவில்லை. ஏனெனில் "குறள் 580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்" என்ற குறளில் விருந்தினர்களுக்கான இலக்கணத்தை வரையறை செய்துள்ளார் திருவள்ளுவர். இக்குறள் முழுக்க முழுக்க விருந்து அளிப்பவர்களுக்கான குறள். 

அனிச்சமலர் மிகவும் மென்மையானது. இலக்கியங்களில் பெண்களின் மென்மையோடு ஒப்பிட்டு பேசப்பட்ட ஒரு மலர். இதை மார்பணியும் மாலையாகத் (தார்) தொடுத்து அணிந்துகொண்டதையும், கண்ணியாக (வளையமாக) கைகளிலும், கழுத்திலும் அணிந்துகொண்டதையும் “அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம் புரிநெகிழ் முல்லை நறவோடு அமைந்த தெரிமலர் கண்ணியும் தாரும் நயந்தார்” (கலித்.மரு. 26:1-3) என்னும் கலித்தொகை பாடல் வரி தெரிவிக்கிறது.

அனிச்சத்தின் மென்மை பற்றி “அனிச்சத்தம் போது போலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி” என்று (சீவக.2939) கூறுகிறது
முகம் திரிந்து நோக்குதல் பற்றி “அகன்நக வாரா முகன் அழி பரிசில்” என்று புறநானூறு (207:4) கூறுகிறது.

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் குறிப்பாக (main-ஆக) அவரது துணைவியார் கணவதி அம்மாள் பற்றி கி.ரா.இணைநலம் (எஸ்.பி.சாந்தி எழுதியது) நூலில் இருந்து சில பகுதிகள்
கணவதி அம்மாள் (கி.ராவின் மணைவி): கவிஞர் நாவன்னா காமராஜ்னு ஒருத்தர். அய்யாவுக்கு வேண்டியவர். காதி போர்டு இருந்தவர். அவர் ஒரு தடவை கன்னியாகுமரியிலிருந்து ஒரு முப்பது பேருடன் பாதயாத்திரை சென்று திரும்பி வந்துகிட்டிருப்பதாவும், இடைசெவல் வழியா வாரதாகவும், இரவு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யும்படியும் சேதி சொல்லி அனுப்பிவிட்டார். கேப்பைக்களியும், கருவாட்டுக் குழம்பும் போதும் என்று செய்ய வேண்டிய சமையல் அயிட்டத்தையும் அவரே சொல்லிவிட்டார். 
“முப்பது பேர்னா சும்மாவ. இரண்டு நாள் முன்னாடிதான், மத்தளம்பாறை வீட்டில் இருந்து வெள்ளைக் கேழ்வரகு ஒரு பத்து கிலோ போல கொடுத்து விட்டிருந்தாங்க.அதை அரைச்சி வெச்சிருந்தேன். எங்க ஊர்ல “பெத்த பூச்சி”ன்னு ஒரு பெரிய அம்மா கேப்பக் களி கிண்டுவதில் ரொம்ப திறமைசாலி. அவங்கள கூப்பிட்டு கேப்பைக்களி பண்ணி, கருவாட்டுக் குழம்பு தயார் பண்ணோம், தோசை ஊற்றி, அதையும் தயாரா வைச்சிருந்தோம். பிறகு பத்துமோ, பத்தாதோன்று உப்புமாவும் கிண்டி எல்லாருக்கும் வயிறார பசியாற்றினோம்.

வீட்டுக்கும் வர்ரவங்க யாரா இருந்தாலும், சாப்பிடற நேரத்துக்கு வந்துட்டாங்கன்னா, அவங்களுக்கும் பசியாத்தினாத்தான் எங்களுக்கு நிம்மதியா சோறு இறங்கும்.

அவர்கள் பேசி முடித்தவுடன் நானும்(எஸ்.பி.சாந்தி) நினைத்துப் பார்க்கிறேன். அய்யா பாண்டிச்சேரியில் மாறிய அத்தனை வீடுகளுக்கும் போயிருக்கிறேன். நான் அவர்கள் வீட்டில் ஒரு வேளையாவது உண்ணாமல் வந்ததில்லை. அதோடு, பல சமயங்களில் யாராவது கூடுதல் நண்பர்கள் வந்திருப்பார்கள்.

நான் ஒரு முறை சென்றபோது, திரு மாசிலாமணி, Ex.MLA, ஜெயங்கொண்டம் அவர்கள் குழந்தைகளுடன் பெண்ணின் திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். நல்ல வெய்யில் நேரம்.

சிறிது நேர உரையாடலுக்குப் பின் விருந்து உபச்சாரம் ஆரம்பித்து விடுகிறது. என்ன, பருப்பும் நெய்யும், வடையும், பாயாசமும் இல்லை. புளிக்குழம்பு,கீரைக்கூட்டு, வெண்டைக்காய் வறுவல், முட்டை என சாதாரண சாப்பாடுதான். ரொம்ப திருப்தியான சாப்பாடும்மா என்கிறார் விருந்தினர்.

அய்யா உடனே, “இங்கு வர்ரவங்க எல்லாருமே சாப்பாடு ருசியா இருக்குன்னு சொல்றாங்க. இது சாதாரண சாப்பாடுதானே” என்கிறார். சாப்படு என்பதின் ருசி சாப்பாட்டில் மட்டும் இல்லை. கூட இருக்கும் மனிதர்களின் கபடமில்லாத மனம், அவர்களின் இனிய உபசரிப்பு, பரிமாறும் விதம், உறுத்தல் இல்லாத, கலப்படமில்லாத எளிய பேச்சு,  இப்படி நிறைய்ய.

(19 செப் 2006 அன்று எடுத்த ‘அவள் விகடன்’ பேட்டியில் இருந்து ஒரு கேள்வி): இன்றும் உங்கள் மனைவியிடம் நீங்கள் வியந்து ரசிக்கும் விஷயம் எது?
கி.ரா: கவிஞர் நா.காமராசன் அவர்கள் தனது “படை பட்டாள”த்துடன் ஒரு நடைப்பயணம் வந்தார் (சுமார் 30 பேர் இருக்கலாம்). “ராத்திரி நாங்கள் இடைசேவல் தங்கல். எங்களுக்கு கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும் போதும் வேற எந்த விருந்தும் வேண்டாம் என்று துண்டுச்சீட்டு கொடுத்தனுப்பி இருந்தார்.

என் நண்பர் மத்தளம் பாறை ராமசாமி அவர்கள் அவருடைய தோட்டத்தில் விளைந்த வெள்ளைக் கேப்பை (ராகி) கொடுத்துனுப்பியிருந்தார். அன்றுதான் அதை மாவு அரைத்து வைத்திருந்தோம். ராமேஸ்வரம் பால் நெத்திலிக் கருவாடு வீட்டில் இருப்பு இருந்தது. ஒரு சிரமும் இல்லை; முப்பது பேருக்கு அளவில் களி கிண்டுவது தான் சிரமம். சொந்தக்காரப் பெண்கள் வந்து உதவினார்கள். காணுமோ காணாதோ என்று அரிசியைக் கொஞ்சம் நனைய வைத்து ஆட்டி ஒரு திடீர் உப்புமா செய்தாள். பிறகுதான் தெரிந்தது இதும் சரிதான் என்று. நடந்து வந்த பசி அவர்களுக்கு. கேப்பைக் களியும் கருவாட்டுக் கொழம்புக்கும் ஒரே கொண்டாட்டம்; உப்புமாவும் போன மூலை தெரியவில்லை. ஒரு தார் கதலிப்பழமும் சேர்ந்து கைகொடுத்தது.




அண்மயில் கவிஞர் விக்ரமாதித்யன் - இன் அ-விருந்தோம்பல் என்ற கவிதை ஒன்றை வாசித்தேன். 

அ-விருந்தோம்பல் 

முதலில் ஆள் 
ஊரில் இருக்க வேண்டும் 
அப்புறம் அவர் 
வசதியாக இருக்கவேண்டும் 
பிறகு அவரே 
வரவேற்கிற மனநிலையில் இருக்கவேண்டும் 
எல்லாமே கூடிவந்தால் நல்லது 

இடவசதி 
இருக்கவேண்டும் 
பணவசதி 
இருக்கவேண்டும்

நேரம் 
இருக்கவேண்டும் 
விளையாட்டில்லை 
விருந்துபசரிப்பு 

வேலைப்பளு 
இருக்கக்கூடாது 
மனைவி 
கோபித்துக்கொள்ளக்கூடாது
உணவுப்பழக்கம் 
ஒத்துப்போகவேண்டும் 
எவ்வளவு இருக்கிறது 
ஒருவனை வா என்று சொல்ல 
கடன் வாங்கவாவது
முடிய வேண்டும் 
கைமாற்றாவது 
கிடைக்கவேண்டும் 

தன்னைப் பேணிக்கொள்வதே பெரிய காரியம் 
இன்னும் இருக்கிறது வீடு குடும்பம் பிள்ளைகள் 
விருந்தினர் வருகையை எப்படிக் கொண்டாட 
அவரவர்க்கும் 
ஆயிரத்தெட்டு பிரச்னைகள் 
எதற்குத் தேடிப்போய்ப் பார்த்து 
இடைஞ்சல் பண்ணுவானேன் 
இருட்டோ வெளிச்சமோ 
இருக்கும் இடத்திலேயே இருக்கலாம்
--விக்ரமாதித்யன் 


பரிமேலழகர் உரை
அனிச்சம் மோப்பக் குழையும் - அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக்குழையும் - விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர். (அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது: விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர். இது முகம்நோக்கி யினிமை கூறவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

சாலமன் பாப்பையா உரை
தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

English Meaning - As I taught a kid - Rajesh
The Anicham (Scarlet pimpernel) flower when smelled will wilt / flop /droop. That sensitive it is. Similarly, when our face expressions aren't pleasant with our guests, the entire hospitality is spoiled despite massive arrangements made. Our guests will get hurt. Thiruvalluvar doesn't even mention our voice tone or body language etc because all these will have its reflection in face. Also, face is the mirror of heart. Hence, hospitality should be from heart. It shouldn't namesake. 

Questions that I ask to the kid
How sensitively we should handle hospitality? Explain with an easy metaphor.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

குறள் 89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
மடமை மடவார்கண் உண்டு
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]

பொருள்
உடைமையுள் உடைமை - uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).
உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் (நகை) உரிமை உரியவை

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று.

விருந்து - viruntu   n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று.(தொல். பொ. 551.)

ஓம்பு - பாதுகாத்தல், பேணுதல், காத்தல், 
ஓம்பல் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

ஓம்பா - பேணாத 

மடமை - பேதைமை

மடவார் - பெண்டிர்; மூடர்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள்
ஒருவனிடம் செல்வம் இருப்பினும் பிறருக்கு விருந்து அளித்து பேணாமால் இருக்கிறார் என்றால் அவர் செல்வம் இருந்தும் வறுமையில் இருக்கிறார் என்று தான் அர்த்தம். அத்தகைய மூடர்கள் பலர் உண்டு இவ்வுலகில்.

ஏன்  செல்வத்தில் வறுமை என்று இதனை கூறுகிறார் திருவள்ளுவர்? ஒருவரிடம் செல்வம் இல்லை என்றால் அவரால் விருந்து அளித்து பேண முடியாது. அதன் பெயர் வறுமை. அதனை புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் செல்வம் இருந்தும் விருந்தளிக்க மனம் வரவில்லை என்றால் பின்பு கையில் இருப்பது செல்வம் அல்ல அதற்கு பெயர் வறுமை. செல்வம் பொருட்களில் இல்லை. மனதில் இருக்கிறது. பிறருக்கு மனமுவந்து விருந்தளிக்கக்கூடிய மனமே செல்வம்.

“செல்வர்க்கழகு செழுங்கிளைத் தாங்குதல்” என்று வெற்றிவேற்கையில், அதிவீரராம பாண்டியர் கூறுவார்.   “காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே” என்ற பட்டினத்தார் வாசகமும் “உங்கள் அத்தமெல்லாம் ஆழப் புதைத்து வைத்தாலும் வருமோ நும் மடிப்பிறகே” என்று எங்கோ படித்த கவி வாக்கும் நினைவுக்கு வருகின்றன.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“இன்மையுள் இன்மை விருந்தொரால்” (குறள் 153)

பரிமேலழகர் உரை
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.

மு.வரதராசனார் உரை
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

குறள் 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]

பொருள்
பரிந்து - பரி-தல் - pari-   4 v. intr. 1. cf. spṛh. Tocovet; பற்றுவைத்தல் பண்டம் பகர்வான் பரியான்(பு. வெ 12, ஒழிபு 2). 2. To be affectionate;காதல்கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 3. To sympathise; இரங்குதல் பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ 3,8). 4. To plead, intercede; சார்பாகப் பேசுதல் நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 5. Tobe troubled, distressed; to suffer; வருந்துதல் பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50). 6. Topart, separate; பிரிதல் (W.) 7. To besundered; அறுதல் பரிந்த மாலை (சீவக. 1349).8. To break off; முறிதல் வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229). 9. To be destroyed; toperish; அழிதல் பழவினை பரியு மன்றே (சீவக.1429). 10. [K. pari.] To run; ஓடுதல் மாவே. . . பரிதலின் (புறநா. 97). 11. To go out; toescape; வெளிப்படுதல் பரிச்சின்ன ஞானம் பரிய(சிவப்பிர. சிவஞா. நெஞ்சு 81).--tr. 1. To fear;அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502). 2.cf. pṛ. To guard with difficulty; வருந்திக் காத்தல்  

ஓம்பிஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

அற்று - அத்தன்மையது 
ஏம் - இன்பம், மகிழ்ச்சி, களிப்பு; மயக்கம்; பொன்.
அற்றுப்போதல் - முழுதும்ஒழிதல்
அற்றேம் -  ஒன்றும் இல்லாத ஒரு நிலை

என்பர் - என்பார்கள்

விருந்து - viruntu   n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று.(தொல். பொ. 551.)

ஓம்பி - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

வேள்வி - யாகம்; ஓமகுண்டம்; பூசனை; கலியாணம்; ஈகை; புண்ணியம்; காண்க:களவேள்வி; மகநாள்.

தலைப்படு-தல் - talai-p-paṭu-   v. id. +.tr. 1. To unite, be in communion with; ஒன்றுகூடுதல் சிவனைத் தலைப்பட்டுச் சென்றொடுங்கும்ஊழியிறுதி (திருக்கோ. 25, உரை). 2. To meet,cross; எதிர்ப்படுதல் ஓர் வேட்டுவன் றலைப்பட்டானே (சீவக. 1230). 3. [T. talapaḍu.] To under-take, enter upon; மேற்கொள்ளுதல் ஏவல் தலைப்படவிரும்பும் (சேதுபு. துரா 2). 4. To obtain, attain;பெறுதல். சிலரதன் செவ்வி தலைப்படுவார் (குறள்,1289).--intr. 1. To advance; to improve incircumstances; முன்னேறுதல் 2. To be noble,exalted; தலைமையாதல். தலைப்படு சால்பினுக்குந்தளரேன் (திருக்கோ. 25). 3. To enter, asa character on the stage; புகுதல் கூரிய பல்லினையுடையாள் தலைப்பட்டாள் (பு. வெ 10, பொதுவி. 5,உரை). 4. To follow; வழிப்படுதல் தம்மிற்றலைப்பட்டார் பாலே தலைப்பட்டு (திருக்களிற்றுப்.2). 5. To commence; தொடங்குதல் அந்தக்காரியத்தைச் செய்யத் தலைப்பட்டான்.  

தலைப்படாதார் - மேற்கொள்ளாதார் 

முழுப்பொருள்
உலகத்தில் நிலையில்லாத இந்தப் பொருட்செல்வத்தை (பணம், நகை, வீடு, ஊர்தி/கார், செல்பேசி, மற்றும் பல) மட்டும் பற்றுடன் வளர்த்து பேணியவர் ஒரு நாள் அதனை இழப்பார் ஏனெனில் அது நிலையில்லாதது. நிலையில்லாத செல்வத்தை இழந்தால் சோர்வு வரும். ஆதலால் இழந்தவர் கூறுவார் இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்த எல்லாவற்றையும் இழந்தேனே என்று (கஷ்டப்பட்டு சேத்தது எல்லாம் போச்சே) புலம்புவார். 

ஏனெனில அத்தகையவர் பொருட்களை சம்பாதித்தாரே தவிர மனிதர்களை சம்பாதிக்கவில்லை. நண்பர்கள், விருந்தினர்கள், உறவினர்கள் மற்றும் உணவு தேவை படுவோர்க்கு விருந்து அளித்து அவர்களை பேணவில்லை. அவ்வாறு விருந்து அளித்து பேணியிருந்தால் அவருக்கு இந்த மக்கள் வந்து உதவுவர். நான் இருக்கிறேன், எல்லாவற்றையும் மீட்டுவிடலாம் என்று ஆறுதல் சொல்வர். இப்படி மனிதர்களை சம்பாதிக்கவில்லை என்றால் தனிமைபடுத்த படுவோம். 

ஆதலால் விருந்து அளித்து உறவுகளை பேணுவதை ஒருவர் மேற்கொள்ளவில்லை என்றால் பொருள் பொருள் என்று சேர்த்து பின்பு ஒரு இழப்பு என்று வரும் பொழுது ஆறுதல் சொல்ல ஊக்கம் கொடுக்க ஒருவரும் இருக்க மாட்டார்கள். 

விருந்து என்பது மனதில் இருந்து வர வேண்டும். அதுவே நல்லியல்பு. விருந்து என்பது வேள்வி போன்றது. வேள்வியின் பயன் வேள்வி முடிந்த உடன் வருவதில்லை. அப்புண்ணியம் தக்க நேரத்தில் வரும். அதுப்போல விருந்தின் பயன் தக்க நேரத்தில் வந்து உதவும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் - நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார். ("ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.).

மணக்குடவர் உரை
விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார், வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்.

மு.வரதராசனார் உரை
விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.

சாலமன் பாப்பையா உரை
விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

குறள் 87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]

பொருள்
இனைத் - iṉai   adj. of this degree (in respect of size or quantity) இன்ன; இத்தனை வருத்தம்

துணைத்து - துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

என்பது - என்று அறியப்படுவதெல்லாம்

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

விருந்தின் - விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.

துணைத் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

வேள்விப் - யாகம்; ஓமகுண்டம்; பூசனை; கலியாணம்; ஈகை; புண்ணியம்; காண்க:களவேள்வி; மகநாள்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

முழுப்பொருள்
ஒரு இல்வாழ்வான் ஐந்து வேள்விகளை செய்யவேண்டும் என்று அறநூல்கள் கூறுகின்றன. 1. ப்ரம்ம/ப்ரஹ்ம வேள்வி (பரம்பொருளை  (மூலக்கடவுள்) தேடிச் செய்யப்படுகிற வேள்வி) 2. தேவ வேள்வி (தேவர்களுக்காகச் செய்யப்படுகிற வேள்வி) (அக்னி வளர்த்து நவதானியம் வளர்த்து செய்ய படுவது. அக்நி மாசற்றது. ஆதலால் தான் அக்நி மூலம் தேவர்களுக்கு உணவு அளிக்கிறோம்) 3. பிதுர் வேள்வி (மூதாதையர்கள் செய்யப்படும் வேள்வி) 4. (பஞ்ச) பூத வேள்வி (காக்கை உணவளித்தால் கூட பஞ்ச பூதங்களுக்கு உணவளித்து திருப்தி பண்ணுவது போல் ஆகும் 5. மானுடர் வேள்வி (அதாவது விருந்து. மானுடர்களுக்கா செய்வது).


அதனால் தான் விருந்தை வேள்வி என்று கூறுகிறார் திருவள்ளுவர். மனிதனை பேணுபவன் மானுடத்தை பேணுகிறான். சமூகத்தை பேணுகிறான்.

மனிதன் எதை கொடுத்தாலும் போதும் என்று சொல்ல மாட்டான். பணம், புகழ், வீடு, வாசல் என்று எந்த ஒரு பொருட்ச்செல்வம் கொடுத்தாலும் அவன் மனம் அவ்வளவு எளிதாக நிறைவடையாத. ஆனால் மனிதன் நிறைவடையும் ஓர் இடம் உணவு. போதும் என்று வயிறும் மனமும் உணவிற்கு மட்டுமே சொல்லும். அதுவே உணவின் சிறப்பு என்றும் கூறலாம். ஆதலால் ஒருவரை மன நிறைவு அடைய செய்து பார்க்க கூடிய ஆற்றல் விருந்திற்கு உண்டு. 

விருந்தினர்களுக்கு விருந்து அளித்து ஓம்புவது அறம். ஆனால் அவ்விருந்தின் பயன் இவ்வளவு தான் என்று வரையறை செய்யமுடியாத அளவிற்கு அதற்கு பயன் உண்டு. விருந்தும் ஒருவித வேள்வியே. வேள்வி எப்படி அதற்கான அவிஸ் மற்றும் நெய்யினை கொடுக்கும் தோறும் உண்டுகொண்டே இருக்கோமோ அதுபோல் விருந்தில் மக்கள் உண்டுகொண்டே இருப்பார்கள். உணவு வேண்டி நிற்கும் மக்களுக்கு உலகில் பஞ்சமில்லை. ஆதலால் விருந்தின் பயன் வேள்வியின் பயன் போன்றது. விருந்தில் உதவுவோன் பசியாக இருப்போர்க்கு உணவளித்து பசியாற்றி உதவுகிறானா என்பதை பொருத்தே விருந்தின் பயன் அமையும். விருந்தின் தகுதி அதாவது தேவையானவர்களுக்கு உணவளிக்கிறோமா என்பதை பொருத்தது ஆகும்.

விருந்தின் பயன் விருந்துக்கு வந்தோரின் தகுதியை பொருத்தே என்பது பொருந்தாது என்பது எண்ணம். 

ஆனால் மற்ற உரைகள் விருந்து பயன் விருந்தை பெறுபவனின் சால்பை பொருத்தது ஆகும் என்று கூறுகின்றன. அவ்வாறு எடுத்துக்கொண்டால் எப்படி என்று பார்ப்போம்.  இது எப்படி என்றால் உதவி செய்யும் பொழுது நாம் கொடுக்கும் ஐந்து ரூபாய் (அல்லது ஐந்து டாலர் / வோன்)  அல்ல புண்ணியம். நாம் யாருக்கு கொடுக்கிறோம் அவரின் தகுதிக்கு ஏற்றவாறே புண்ணியம். அது விருந்துக்கும் பொருந்தும் என்கிறார் திருவள்ளுவர். விருந்தை பெறுவோரின் தகுதியை பொருத்தே விருந்தின் பயனும் அமையும்.

கிருஷ்ணன் ஒரு அரக்கியிடம் இருந்து தாய்ப்பால் உண்டப்பிறகு அவ்வரக்கிக்கு புகழ் கிட்டியது அல்லவா?

ஆதி சங்கரரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்ச்சி. அவர் ஒரு வயதான வறிய மூதாட்டிக்கு, அவள் வறியவளாக இருந்தாலும், வாயிலில் “ பிட்சை”க்காக நின்ற அந்தணச் சிறுவனுக்கு தன்னிடமிருந்த ஒரே நெல்லிக்கனியை ஈந்த கனிவுக்காக பொன்மாரி பொழிவித்ததும், அதன்காரணமாக கனகதாரை என்கிற கவியமுதம் பொழிந்ததும் நிகழ்ச்சி என்பதைவிட நெகிழ்ச்சி என்பதே சரி.

இது வாயிலில் உணவென்று வந்தவருக்கு, வறுமையிலும் தன்னிடமிருந்த ஒன்றைத் தந்த மூதாட்டியின் வரலாறு. 

இராமாயணத்தில் வரும் சபரியின் விருந்தோம்பும் பண்பு அவளுக்கு வீட்டுப்பேற்றினை அளித்தது.

சிறுதொண்டர் சிவனடியாருக்குப் பிள்ளைக்கறி சமைத்த நிகழ்ச்சி. அவ்வில்லத்தினரின் விருந்தோம்பும் பண்பு அவர்களுக்கு இறைவனின் பதத்தினைத் தந்தது

கம்பராமாயணப்பாடல் மிக எளிதாக வாமன அவதாரத்தில் மகாபலிச் சக்ரவர்த்தியின் கொடைக்குச் சமமாக வாமனன் உயர்ந்து, வளர்ந்து நின்றதை குறிக்கும் விதமாக இவ்வாறு எழுதுகிறான்.

“கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்.
பயந்தவர்களும் இகழ் குறளன். பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள. விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே

மேலும்: அஷோக் உரை

சமிபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் “அன்னம்” சிறுகதை வாசித்தேன். அதில் ஒரு பகுதி கீழே. இப்பகுதிகளும் விருந்தோம்பலை வேள்விக்கு நிகராக விவரிக்கபட்டுள்ளது

என்னை ஒரு கொட்டகையில் அமர வைத்தனர். கொஞ்ச நேரத்தில் வாழைப்பழமும் இளநீரும் வந்தது.

பதினொரு மணிக்கெல்லாம் அங்கே சாப்பாடு ஆரம்பித்துவிட்டது. பெரிய பந்தல்போட்டு வரிசையாக உட்காரவைத்து ஆட்டுப்பிரியாணியும் ஆட்டுக்கறியும் பரிமாறினார்கள். மக்கள் வரிசையாக உள்ளே போனார்கள்.

நான் அப்போது கவனித்த ஒன்று இருந்தது, அதைப்போன்ற ஒன்றை அதற்குப்பிறகு கூட பார்த்ததில்லை. கறுத்தசாகிப் பந்தல் வாசலில் நின்று ஒவ்வொருவரையாக மூன்றுமுறை கட்டித்தழுவி உள்ளே அனுப்பினார். எல்லாரிடமும் ஒருசில சொல்லாவது பேசினார். சின்னப்பையன்களின் தலையை தட்டினார். பெண்களுக்கு தனி பந்தி. அங்கே அவருடைய பீவி அனைவரையும் வரவேற்றார்.

அங்கே எவருக்கும் தனிப்பந்தி இல்லை. எவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பளபளக்கும் பியூக் காரில் வந்தவர்களும், நடந்து வந்தவர்களும், முஸ்லீம்களும், இந்துக்களும், ஆற்றுக்கரையில் வாழும் புலையர்களும் ஓரிரு மலைக்குறவர்களும் எல்லாரும் ஒரே வரிசையில் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டனர். அவர்களுடன் அமர்ந்துதான் கறுத்த சாகிப்பும் சாப்பிட்டார்.

அந்த விருந்தை நான் ஒரு பழைய மரத்தொட்டிமேல் ஏறி நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். மனிதர்கள் சாப்பிடுவது ஒரு யாகமாக நிகழமுடியும் என்று அப்போதுதான் பார்த்தேன். நான் பல யாகங்களை பார்த்திருக்கிறேன். அங்கே மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாக பிரிக்கப்பட்டிருப்பார்கள்.

சாகிபின் பந்தியில் உணவு அள்ளி அள்ளி பரிமாறப்பட்டது. ஒருவர் கூட கேட்கும்படி ஆகவில்லை. வெறிகொண்டவர்கள் போல சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள். பின்பக்கம் ஒரு பெரிய சமையல் கொட்டகை. அங்கே பனம்பாயில் பிரியாணியை அள்ளி அள்ளி கொட்டினார்கள். குன்றுபோல. ஆமாம், ஆளுயர அன்னமலைகள். ஆவிபறந்தது அவற்றில். நாயர்சார், அது கார்த்தவீர்யார்ஜுன மகாப்பிரபுவின் அன்னசபை போல் இருந்தது.

சற்றுநேரத்தில் அங்கே இருந்த ஒரு மங்களூர் பிராமணன் ஒரு சம்புடத்தில் எனக்கு சாப்பாடு கொண்டு வந்தான். சோறு குழம்பு கறிகள். “மன்னிக்கவேண்டும், கண்டிப்பாக நெய்போட்ட பருப்புப் பாயசம் வேண்டும் என்று கறுத்தசாகிப் சொன்னார். ஆகவே கொஞ்சம் தாமதமாகிவிட்டது” என்று அவன் சொன்னான்.

ஒவ்வொருவரும் கறுத்த சாகிப்பிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். நான் அவரிடம் விடைபெறும்போது “சாப்பிட்டீர்களா?” என்று கேட்டார்.

“ஆமாம், நல்ல சாப்பாடு” என்று சொன்னேன்.

“நீங்கள் பிரியாணிக்குப் பதிலாக பாயசம்தான் சாப்பிடுவீர்கள் என்று சொன்னார்கள்” என்றார்.

நான் புன்னகைத்தேன். அவர் என்னைத் தழுவி விடைஅளித்தார். நான் திரும்பச் செல்லும்போது அந்த இடவழி, அந்த சாலை, அந்த தோப்புகள் எல்லாமே எனக்கு இனிய இடங்களாக ஆகிவிட்டன. இன்றுவரை அப்படித்தான்.

அன்று தொடங்கியது அந்த உறவு. அவர் வீட்டிலும் சுற்றியிருக்கும் இடங்களிலுமாக அன்றைக்கு பதினெட்டு நம்பர்கள் இருந்தன. ஆகவே வாரமொரு முறையாவது போக வேண்டியிருக்கும். எப்போதுமே நான் போனது அவருக்கு ஒரு உதவியைச் செய்யத்தான் என்று அவர் பேசுவார். என்னை நண்பனாக நடத்துவார். அவர் பணம் தருவது அவருக்கே தெரியாது என்று எனக்கே தோன்றும்படி இருக்கும்.

நான் கறுத்த சாகிப்பின் வீட்டில் மிகமிக விரும்பியதே அங்கே நடக்கும் மாபெரும் விருந்துகளைத்தான். எந்த விருந்தானாலும் அது எல்லாருக்குமாகத்தான். எந்தப் பந்தியானாலும் அது மனிதர்கள் அனைவருக்குமாகத்தான். மாதம் இரண்டு விருந்தாவது நடக்காமலிருக்காது. விருந்து என்று தெரிந்தாலே போய்விடுவேன். எங்காவது ஏறி நின்று மக்கள் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருப்பேன்.

மக்கள் எப்படிச் சாப்பிடுகிறார்கள்! யக்ஷகானத்தில் அன்னசம்யோகம் என்று சாப்பாட்டைச் சொல்கிறார்கள். உடலும் சாப்பாடும் அன்னம் என்றுதான் சொல்லப்படுகின்றன. அன்னம் என்றால் பிசிக்ஸில் மேட்டர் என்கிறோமே அது. அன்னம் அன்னத்தை கண்டுகொள்கிறது, அன்னம் அன்னத்துடன் இணைகிறது, அன்னம் அன்னத்தால் நிறைகிறது. பூமி மீது இருக்கும் எல்லா உயிரும் சேர்த்து ஒரே அன்னம்தான்.

காலிப்பானைகளுக்கும் குடங்களுக்கும் ஒரு பதற்றம் இருக்கிறதைப்போல தோன்றுவதில்லையா சார்? அவை வாய் திறந்து அலறுகின்றன. குருவிக்குஞ்சுகள் வாய்திறந்து எம்பிக்குதிப்பதுபோல. தண்ணீரை அள்ளி ஊற்ற ஊற்ற இன்னும் இன்னும் என்கின்றன. அதன்பின் நிறையும் ஓசை. அது ஒரு பெருமூச்சு. ஓம் என்ற ஓசை அது.

நாயர் சார், அங்கே மனிதர்கள் அப்படி சாப்பிடுவார்கள். பரவசமாக சாப்பிடுவார்கள். பட்டினிக்காரர்கள் வெறிகொண்டு அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள். சின்னப்பிள்ளைகள் ருசித்து ருசித்து தலையாட்டி சாப்பிடும். சில சின்னப்பிள்ளைகள் ருசியான ஒரு துண்டு கிடைத்தால் அதை எடுத்து அவற்றின் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ ஊட்டும் பாருங்கள் நான் கைகூப்பி அழுதுவிடுவேன். அன்னத்தைக் கொடுக்கும் மனிதனைப்போல அழகானவன் யார் சார்?

ஒரு ஐந்துவயது பெண் ஒருவயது தம்பிக்கு ஊட்டியதை பார்த்தேன். வெளியே வந்ததும் அதன் காலைத்தொட்டு வணங்கி “புவனராணியான அன்னபூரணியே, இந்த உலகத்தில் பசியை அணைத்துக்கொண்டே இரு தாயே” என்று சொல்லி கண்ணீர்விட்டேன்.

கறுத்த சாகிப் ஒருவேளைகூட தனியாகச் சாப்பிடுபவர் அல்ல. அவர் வீட்டில் எல்லாநாளும் சாதாரணமாக நூறுபேர் சாப்பிடுவார்கள். வீட்டு வேலைக்காரர்கள், படகுக்காரர்கள், தென்னை வேலைக்காரர்கள் எல்லாரும் ஒரே பந்தியாக அமர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிடும் நேரத்தில் வெளியே போய் குரல் கேட்கும் தொலைவிலுள்ள அனைவரையுமே சாப்பிடக் கூப்பிடுவார்கள். காகம் கரைந்து அழைப்பது போலவே.

அந்தக்குரல் கேட்ட எவரானாலும் எந்தக்கூச்சமும் இல்லாமல் சாப்பிட வந்துவிடுவார்கள். கந்தலாடை அணிந்த பிச்சைக்காரர்களுக்குக் கூட அதே பந்திதான், அதே சாப்பாடுதான்.

அங்கே எல்லாநாளும் பிரியாணிதான். கறுத்தசாகிப் பிரியாணி தவிர வேறு உணவை ஒரு பொருட்டாக நினைத்தவரே அல்ல. பிரியாணிதான் ஆரோக்கியம், சுவை என்று அவர் உண்மையாகவே நினைத்தார். பிரியாணி சாப்பிடாததனால் நான் சீக்கிரமே செத்துவிடுவேனோ என்று மெய்யான கவலையுடன் என்னிடம் கேட்டிருக்கிறார்.

சாப்பிட்டால் அவரைப்போல சாப்பிடவேண்டும். அவர் சாப்பிடுவதை நல்ல சாப்பாட்டுராமன்கள் மூன்றுபேர் சாப்பிடலாம். ஆனால் அள்ளி அள்ளி திணித்துக்கொள்ள மாட்டார். யானை சாப்பிடுவது அப்படித்தான். நிறைய சாப்பிடும், ஆனால் சுவையறிந்து சாப்பிடும். மூங்கிலின் தளிரை முதலில் சாப்பிடும். மூங்கிலையே கடைசியாகச் சாப்பிடும்.

கறுத்தசாகிப் சாப்பிட்டு முடித்து கைகழுவி சமையற்காரரை அழைத்துத் தோளில் கைவிட்டு தழுவி பாராட்டுவார். அவருடைய வீட்டில் வேலைபார்க்கும் சமையற்காரனையே நாள்தோறும் பாராட்டுவார். சாப்பிடும்போதே சங்கீதம் கேட்பதுபோல “பலே! பேஷ்! சபாஷ்!” என்றெல்லாம் சொல்வார். தலையை ஆட்டுவார். கையைத் தூக்கி “சுபானல்லா!” என்று வணங்குவார்.

ஒருமுறை நான் கறுத்த சாகிபிடம் சொன்னேன். “இங்கே இந்தப் பந்தியில் அமர்ந்து சாப்பிட வேண்டும் சாகிப்.”

ஒப்புமை
உறக்குந் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்” (நாலடி 38)

“அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்
திறத்துவழிப் படூஉம் செய்கை போல”  (மணி 17:3-4

“பெருந்தவர் கைப்பெய் பிச்சையின் பயனும்
நீரும் நிலமும் காலமும் கருவியும்
சீர்பெற வித்திய வித்தின் விளைவும்
பெருகிய தென்னப் பெருவளம் சுரப்ப” (மணி 28:229-32)

“நான்மறை யாளர்கைத்
தானம் என்னத் தழைத்தது நீத்தமே” (கம்ப.ஆற்றுப் 5)

“வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க் குதவிய உதவி ஒப்பவே” (கம்ப.வேள்விப் 35)


பரிமேலழகர் உரை
வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்.

மு.வரதராசனார் உரை
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

சாலமன் பாப்பையா உரை
விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

குறள் 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]

பொருள்
வித்தும் - வித்து-தல் - vittu-   5 v. tr. [K. bittu.] 1.To sow; விதைத்தல். வித்திய வுழவர் நெல்லொடுபெயரும் (ஐங்குறு. 3). 2. To spread, broadcast;பரப்புதல். அண்ண லிவனேல் விளியாக் குணத்துதிநாம் வித்தாவா றென்னே (சீவக. 1611). 3. Toimpress on one's mind; பிறர்மனத்துப் பதியவைத்தல். செவிமுதல் வயங்குமொழி வித்தி (புறநா. 206).

இடல் - இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை.

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

கொல்லோ -  கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.

ஓம்பி - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

மிச்சில் - எஞ்சியபொருள்; எச்சில்; கரி.

மிசை - உணவு; சோறு; உயர்ச்சி; மேலிடம்; மேடு; வானம்; முன்னிடம்; ஏழனுருபு.

மிசைவான் -  மிசைஞர் - உண்பவர்.


புலம் - வயல்; இடம்; திக்கு; மேட்டுநிலம்; பொறி; பொறியுணர்வு; அறிவு; கூர்மதி; துப்பு; நூல்; வேதம்.

முழுப்பொருள்
நம் வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்களுக்கு முதலில் வயிராற உணவளித்து எவ்வித வருத்தமும் வராமல் போற்றி உபசரித்து பின்பு மிச்சம் இருப்பதை நாம் உண்ணுவதே விருந்தோம்பல் ஆகும். அப்படி ஒருவர் விருந்தோம்பல் செய்து பழகுவார் என்றால் அவருடைய வயலில் (வீட்டில்) விதைக்க வேண்டுமா என்ன? விதைக்காமலையே செடிகள் வளரும். வளம் பெருகும். அதாவது அவர் வேறு செயல்களில் செய்து புண்ணியத்தை ஈட்டவேண்டும் என்றில்லை. விருந்தோம்பலை சரியாக செய்கிறமைக்காக அவருக்கு பலன் தானாக கிட்டும்/விளையும். 

ஒருவர் வீட்டிற்கு வருகிறார் என்றால் முதலில் எல்லாவற்றையும் தின்றுவிட்டு மீதம் இருப்பதை (அது வருபவர்களுக்கு தேவையான அளவு இருப்பினும்) வருபவர்களுக்கு கொடுத்தால் அது விருந்தோம்பல் ஆகாது. அதுமட்டுமில்லாது திருவள்ளுவர் மிச்சம் இருப்பதை உண்ணவேண்டும் என்கிறார். குறைவாக இருந்தால் புதிதாய் சமைக்கக்கூடாது என்று சொல்லவில்லையென்றாலும் அது பொருத்தமாக இருக்கிறது. ஏனெனில் வீட்டில் உள்ளோருக்கு உணவு பற்றாக்குறை ஆகிவிட்டதே என்று விருந்தினர் மனம் வருந்த நேரும். அந்த வருத்தத்தையும் அவர்களுக்கு கொடுக்க கூடாது. மிச்சத்தை உண்டு மகிழ வேண்டும். ஒரு வேலை குறைவாக சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது அல்லவா.

ஐம்பெரும் காப்பியங்களும் ஒன்றான மணிமேகலையில் (13:113-4)  ‘யாவரும் வருகவென்றிசைத்துடன் ஊட்டி, உண்டெழு மிச்சில் உண்டு’ என்று கூறப்பட்டிருப்பதிலிருந்து, விருந்து புறத்திருக்க தான் உண்ணா நெறியோடு, அவர்களை உண்ணுவித்து, பின்பு தான் உண்ணுதலை சிறப்பித்திருப்பதைக்காணலாம். சங்க இலக்கியங்களான குறுந்தொகை, குறிஞ்சிப் பாட்டு இவற்றிலும், இக்குறள் கருத்தை அடியொட்டிய வரிகள் இருப்பதைக் காணலாம்

மேலும் 
விச்சதின்றியே விளைவு செய்குவாய்
விண்ணு மண்ணக முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்
புலையனேனையுன் கோயில் வாயிலிற்
பிச்சனாக்கினாய் பெரிய அன்பருக்
குரியனாக்கினாய் தாம் வளர்த்ததோர்
நச்சு மாமரமாயினுங் கொலார்
நானும் அங்கனே யுடைய நாதனே
–திருச்சதகம், திருவாசகம், பாடல் 96

 பொருள்:-
விதை இல்லாமலே செடிகொடிகளை வளரச் செய்பவன் நீ; விண்ணுலகம், மண்ணுலகம் ஆகியவற்றை நிலைபெறச் செய்து, உரிய காலத்தில் அவைகளை, அழிப்பவனும் நீயே; புலையனைப் போன்ற என்னையும் உன் கோவிலின் முன்னே வைத்துப் பித்தனாக்கினாய் —அடியார்களுக்கு உரியவானாக ஆக்கிவைத்தாய்.  உலகத்தார் தாமே வளர்த்த மாமரங்கள் நச்சுத்தனமை எய்தினாலும் கொல்ல மாட்டார்கள்— என்னை அடிமையாக உடைய தலைவனே! யானும் அத்தகையேன் ஆவேன்.

“மரம் சா மருந்தும் கொள்ளார்”– என்று தமிழ் நூல்கள் பகரும். மருந்தே வேண்டினும் அந்த மரம் சாகும் அளவுக்கு அதன் பட்டைகளைத் தோலுரிக்க மாட்டார்கள்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“.... ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
வசையில் வாந்திணைப் புரையோர் கடும்பொடு
விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னொ டுண்டலும் புரைவதென் றாங்கு
அறம்புணை யாகத் தேற்றி” (குறிஞ்சிப் 204-8)

“உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில்’ (குறுந் 233.4-5)

“யாவரும் வருகவென் றிசைத்துடன் ஊட்டி
உண்டெழு மிச்சில் உண்டு” (மணி 13:113-4)


பரிமேலழகர் உரை
விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ - வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா. ('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.

மு.வரதராசனார் உரை
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.

சாலமன் பாப்பையா உரை
விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?.

அகனமர்ந்து செய்யாள் உறையும்

குறள் 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]

பொருள்
அகன் - akaṉ   n. அகல். Breadth; அகற்சி.சிலம்பாற் றகன்றலை (சிலப். 11, 108).; இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

அமர்ந்து - அமர்தல் - உட்காருதல்; இளைப்பாறல்; அடங்குதல் பொருந்தல் விரும்புதல்

செய்யாள் - செந்நிறமுடையதிருமகள்; தாயின்தங்கையானசிறியதாயார்.

செய் - வயல்; ஒன்றேமுக்கால்ஏக்கர்கொண்டநன்செய்நிலவளவு; 100சிறுகுழிகொண்டநிலவளவு.

உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.

உறையும் - உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல்.

முகன் - mukaṉ   s. poet, form of முகம், face; தலையில் நெற்றி முதல் மோவாய் வரையுள்ள முன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

அமர்ந்து - அமர்தல் - உட்காருதல்; இளைப்பாறல்; அடங்குதல் பொருந்தல் விரும்புதல்

நல் - நல்ல; வறுமை

விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.

ஓம்புவான் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
செய் என்றால் வயல் என்று பொருள். வயல் எனப்படுவது வளத்தை குறிக்கும் ஒரு சொல். ஆதலால் செய்யாள் என்றால் வளம் செழிப்பு ஆகியவற்றை குறிக்கும் செல்வத்தின் நாயகியான திருமகள். 

எல்லோரும் நமது வீட்டில் செல்வமும் வளமும் நிலையாக தங்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால் அப்படிப்பட்ட வளம், அகம் மலர்ந்து/ மகிழ்ந்து நமது வீட்டில் தங்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் ? நமது வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு நாம் முகம் (அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆதலால் முகம்) மலர்ந்து உணவு (மற்றும் தங்க இடம், தேவையான உதவிகள் ஆகியவற்றை) உபசரித்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அகம் மலர்ந்து திருமகள் நம் வீட்டில் தங்குவாள். 

மேலும்: அஷோக் உரை

உண்மையிலேயே சமைப்பதும் விளம்புவதும் உள்ளத்தை மாற்றிவிடுகின்றன


எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் குறிப்பாக (main-ஆக) அவரது துணைவியார் கணவதி அம்மாள் பற்றி கி.ரா.இணைநலம் (எஸ்.பி.சாந்தி எழுதியது) நூலில் இருந்து சில பகுதிகள்
கணவதி அம்மாள் (கி.ராவின் மணைவி): கவிஞர் நாவன்னா காமராஜ்னு ஒருத்தர். அய்யாவுக்கு வேண்டியவர். காதி போர்டு இருந்தவர். அவர் ஒரு தடவை கன்னியாகுமரியிலிருந்து ஒரு முப்பது பேருடன் பாதயாத்திரை சென்று திரும்பி வந்துகிட்டிருப்பதாவும், இடைசெவல் வழியா வாரதாகவும், இரவு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யும்படியும் சேதி சொல்லி அனுப்பிவிட்டார். கேப்பைக்களியும், கருவாட்டுக் குழம்பும் போதும் என்று செய்ய வேண்டிய சமையல் அயிட்டத்தையும் அவரே சொல்லிவிட்டார். 
“முப்பது பேர்னா சும்மாவ. இரண்டு நாள் முன்னாடிதான், மத்தளம்பாறை வீட்டில் இருந்து வெள்ளைக் கேழ்வரகு ஒரு பத்து கிலோ போல கொடுத்து விட்டிருந்தாங்க.அதை அரைச்சி வெச்சிருந்தேன். எங்க ஊர்ல “பெத்த பூச்சி”ன்னு ஒரு பெரிய அம்மா கேப்பக் களி கிண்டுவதில் ரொம்ப திறமைசாலி. அவங்கள கூப்பிட்டு கேப்பைக்களி பண்ணி, கருவாட்டுக் குழம்பு தயார் பண்ணோம், தோசை ஊற்றி, அதையும் தயாரா வைச்சிருந்தோம். பிறகு பத்துமோ, பத்தாதோன்று உப்புமாவும் கிண்டி எல்லாருக்கும் வயிறார பசியாற்றினோம்.

வீட்டுக்கும் வர்ரவங்க யாரா இருந்தாலும், சாப்பிடற நேரத்துக்கு வந்துட்டாங்கன்னா, அவங்களுக்கும் பசியாத்தினாத்தான் எங்களுக்கு நிம்மதியா சோறு இறங்கும்.

அவர்கள் பேசி முடித்தவுடன் நானும்(எஸ்.பி.சாந்தி) நினைத்துப் பார்க்கிறேன். அய்யா பாண்டிச்சேரியில் மாறிய அத்தனை வீடுகளுக்கும் போயிருக்கிறேன். நான் அவர்கள் வீட்டில் ஒரு வேளையாவது உண்ணாமல் வந்ததில்லை. அதோடு, பல சமயங்களில் யாராவது கூடுதல் நண்பர்கள் வந்திருப்பார்கள்.

நான் ஒரு முறை சென்றபோது, திரு மாசிலாமணி, Ex.MLA, ஜெயங்கொண்டம் அவர்கள் குழந்தைகளுடன் பெண்ணின் திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். நல்ல வெய்யில் நேரம்.

சிறிது நேர உரையாடலுக்குப் பின் விருந்து உபச்சாரம் ஆரம்பித்து விடுகிறது. என்ன, பருப்பும் நெய்யும், வடையும், பாயாசமும் இல்லை. புளிக்குழம்பு,கீரைக்கூட்டு, வெண்டைக்காய் வறுவல், முட்டை என சாதாரண சாப்பாடுதான். ரொம்ப திருப்தியான சாப்பாடும்மா என்கிறார் விருந்தினர்.

அய்யா உடனே, “இங்கு வர்ரவங்க எல்லாருமே சாப்பாடு ருசியா இருக்குன்னு சொல்றாங்க. இது சாதாரண சாப்பாடுதானே” என்கிறார். சாப்படு என்பதின் ருசி சாப்பாட்டில் மட்டும் இல்லை. கூட இருக்கும் மனிதர்களின் கபடமில்லாத மனம், அவர்களின் இனிய உபசரிப்பு, பரிமாறும் விதம், உறுத்தல் இல்லாத, கலப்படமில்லாத எளிய பேச்சு,  இப்படி நிறைய்ய.

(19 செப் 2006 அன்று எடுத்த ‘அவள் விகடன்’ பேட்டியில் இருந்து ஒரு கேள்வி): இன்றும் உங்கள் மனைவியிடம் நீங்கள் வியந்து ரசிக்கும் விஷயம் எது?
கி.ரா: கவிஞர் நா.காமராசன் அவர்கள் தனது “படை பட்டாள”த்துடன் ஒரு நடைப்பயணம் வந்தார் (சுமார் 30 பேர் இருக்கலாம்). “ராத்திரி நாங்கள் இடைசேவல் தங்கல். எங்களுக்கு கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும் போதும் வேற எந்த விருந்தும் வேண்டாம் என்று துண்டுச்சீட்டு கொடுத்தனுப்பி இருந்தார்.

என் நண்பர் மத்தளம் பாறை ராமசாமி அவர்கள் அவருடைய தோட்டத்தில் விளைந்த வெள்ளைக் கேப்பை (ராகி) கொடுத்துனுப்பியிருந்தார். அன்றுதான் அதை மாவு அரைத்து வைத்திருந்தோம். ராமேஸ்வரம் பால் நெத்திலிக் கருவாடு வீட்டில் இருப்பு இருந்தது. ஒரு சிரமும் இல்லை; முப்பது பேருக்கு அளவில் களி கிண்டுவது தான் சிரமம். சொந்தக்காரப் பெண்கள் வந்து உதவினார்கள். காணுமோ காணாதோ என்று அரிசியைக் கொஞ்சம் நனைய வைத்து ஆட்டி ஒரு திடீர் உப்புமா செய்தாள். பிறகுதான் தெரிந்தது இதும் சரிதான் என்று. நடந்து வந்த பசி அவர்களுக்கு. கேப்பைக் களியும் கருவாட்டுக் கொழம்புக்கும் ஒரே கொண்டாட்டம்; உப்புமாவும் போன மூலை தெரியவில்லை. ஒரு தார் கதலிப்பழமும் சேர்ந்து கைகொடுத்தது.




ஒப்புமை
குறள் 92, 93,
முருகு 251, நெடுதல் 183

“முகனமர்ந்து......
ஆனா விருப்பில் தானின் றூட்டி” (பெரும்பாண் 478-9)

பரிமேலழகர் உரை
செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண். இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.



Thirukkural - Management - Communication - Pleasant speech
Kural 92 also supports the importance of pleasant speech. It presents a comparison to differentiate 
the importance of pleasant words. Uttering pleasing words in your conversations
is far better than a gift wholeheartedly presented to someone.

More pleasing than a gracious gift 
Are sweet words with a smiling face.

There can be values attached to a gift or present. However, pleasant words are invaluable as they last longer. They create ripples and keep ringing in the ears of listeners. A cheerful countenance and pleasing words transform both the speaker and the listener. Therefore, a wholehearted speech is more valuable than a wholehearted gift.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

குறள் 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]

பொருள்
வரு - கிறேன், [com. வாறேன்], வந்தேன், வேன், வர, v. a. [neg. வரேன், வாரேன், imper. வா.] To come, நடக்க. 2. To happen, occur, சம்பவிக்க. 3. To accrue, be at command--as strength to move a limb, இயல. 4. To proceed spontaneously, இயல்பாய்வர. 5. (fig.) To come to mind, தோன்ற. நீவந்தகாரியமென்ன. What is the object of your coming? நாளைக்கங்கேவருவேன். I will come there to-morrow. உனக்குப்பாடம்வருமா. Do you know your lesson. நீஎப்போவந்தாய். When did you arrive? எனக்குஅடிக்கக்கைவராது. My hand is not at command to strike him. அவன்வந்தகாலோடேபோனான். He reterned no sooner than he came. உனக்குஎன்னவந்தாலும்நான்இருக்கிறேன். I will be [near], whatever may happen. இப்பொழுதுஅவனுக்குப்பெருமைவந்துவிட்டது. He is now very proud. வந்ததைவரப்பற்று. Receive whatever comes. அவனுக்குவியாதிவந்துகொண்டேயிருக்கிறது. He is always subject to sickness. ஒருமனம்வந்தாற்கொடுப்பான். He will give you if he have a mind. உனக்குச்சம்பளம்வந்ததா. Did you get your wages? வாய்வந்தவாறெல்லாம்எழுத்தலுற்றார். They of fered praises with every kind of com mendation which could proceed from their mouths, (பிரபுலி.) எனக்குநினைவுவந்தது. I just remembered. அப்போதுவாய்வரவில்லை. I could not speak then. அவனுக்கிரண்டுகாலும்வராது. He lame in both feet.

விருந்து - viruntu   n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று.(தொல். பொ. 551.)

வைகல் - vaikal   n. வைகு-. 1. Dwelling;staying; தங்குகை. (பிங்.) 2. Passing; கழிகை.மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ (பதிற்றுப்.71, 16). 3. See வைகறை, 1. (சூடா.) 4. Day;நாள். இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீமுன்னிய வினையே (புறநா. 363). 5. cf. vaikāla.Day that has passed away; கழிந்த நாள். (பிங்.)6. cf. vikala. Instant, moment; வேளை. மாதவிதன்னோ டணைவுறு வைகலி னயர்ந்தனன் (சிலப். 3,173).

வைகலும் - vaikalum   adv. id. Daily,everyday; நாடோறும். அடிசில் பிறர்நுகர்க வைகலும் (பு. வெ. 10, 8).

ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

ஓம்புவான் - உபசரிப்பான், பேணுவான்

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

பரு - இயல்பாக இல்லாமல், சற்று பருத்து இருக்கும் நிலை
பரு - paru   n. paru. cf. பரு-. 1. Pimple,as on the face; pustule; blotch; முகமுதலியவற்றிலுண்டாஞ் சிறு கட்டிவகை. Colloq. 2. Boil;சிலந்திப்புண். Loc. 3. Node; கணு (யாழ். அக.)4. Sea; கடல் (யாழ். அக.) 5. Mountain; மலை (யாழ். அக.) 6. Heaven; சுவர்க்கம் (யாழ். அக.)7. Sprout of paddy plant; நெல்லின் முளை Tj.
பரு - paru   adj. great gross, see under பருமை.
பருமை - parumai   n. cf. bṛh. [K. perme.]1. Thickness; bulkiness; corpulence; பருத்திருக்கை. 2. Greatness; பெருமை 3. Roughness,coarseness, grossness; பரும்படியான தன்மை 4.Seriousness, importance, gravity; முக்கியம் இதுபருங்காரியமாயிருக்கிறது. (W.)

பருவந்து - துன்பங்கள், வறுமை வந்து

பாழ்படுதல் - pāḻ n. பாழ்-. [K. hāḷ.] 1.Desolation, devastation, ruin; நாசம். நரகக்குழிபலவாயின பாழ்பட்டது (சடகோபரந். 5). 2.Damage, waste, loss; நட்டம். வெள்ளப்பாழ்,வறட்பாழ், குடிப்பாழ். 3. Corruption, decay,putrifaction; கெடுதி. ( W .) 4. Baseness, wretchedness, evil; இழிவு. ( W .) 5. That which isugly or graceless; அந்தக்கேடு. நீறில்லா நெற்றிபாழ் (நல்வழி, 24). 6. Profitlessness ..

இன்று - iṉṟu   n. and adv. இ³. [K. indu,M. innu.] This day, to-day; இந்நாள். (நாலடி,36.)
இன்று - iṉṟu   part. An expletive; ஓர்அசைச் சொல் (திவா.)
இன்று - iṉṟu   id. part. No; இல்லை.--adv.See இன்றி. உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே (நன். 172, மயிலை.).

முழுப்பொருள்
தன்னிடம் வருபவர்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களை உபசரித்து, உணவளித்து பசியாற்றி அவர்களை பேணுவது மிகச்சிறந்த அறமாகும். ஆனால் இதனையே (/பிறருக்கு விருந்தளிப்பதை) ஒவ்வொரு நாளும் இன்முகத்தோடு கடைப்பிடிக்கிறவனுடைய வாழ்க்கையானது வறுமை வந்து அதனால் வரும் துன்பத்தினால் (வாழ்க்கை) பாழ் (/நாசம்) ஆகாது. வறுமையும் துன்பமும் தற்காலிகமாக இருக்கலாம். ஆனால் அது நிரந்தரமாக அவர்களிடம் தங்காது.

வாழ்க்கை என்ற சொல்லுக்கு செல்வநிலை என்ற பொருளும் உண்டு. ஆதலால் ஒவ்வொரு நாளும் வருகிறவர்களுக்கு எல்லாம் விருந்துதளித்து உபசரிப்பதனால் வறுமை வந்து அவன் செல்வத்தை நாசம் செய்யாது என்று கொள்ளாலாம். இதனையே நாம் "தருமம் தலைக்காக்கும்" என்றும் சொல்லலாம்.

“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்கிற அறக்கட்டளை ஒரு சிலர் மனதிலாவது பதிந்திருக்குமானால், துன்பம் என்று வருங்காலையில், உதவி என்பது தானாகவே ஓடோடி வந்துவிடும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

கி.வா.ஜா வின் ஆராய்ச்சி உரையில் ‘பருவந்து’ என்னும் சொல், ‘பருவா’ என்றப் பகுதிச்சொல்லினின்று பிறந்தது என்று காண்கிறது. பொருள் கூறும் ஆசிரியர்கள், நல்குரவு என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தாலும், இரண்டு சொல்லுமே வழக்கில் இல்லாமல் போனது எனலாம். அகராதிகளில் நல்குரவு என்னும் சொல்லிருக்கிறது. பருவா என்ற சொல்லில்லை.

பரிதியாரின் உரை சற்று வேறுபட்டு “பரு” என்பதை உடலின் கண்தோன்றும் ஒருவித உடற்கட்டி என்று சொல்லி, அது தோன்றி பாழ்படுவதைப் போல வினையானது அறும் என்று பொருள் செய்திருக்கிறார். அவரது கற்பனை வளமா அல்லது சொல்லறிவு தேக்கமா என்று தெரியவில்லை என்றாலும், இப்படியும் சிந்திக்கமுடியும் என்பதைக் காட்டுகிறது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“.............வருவிருந் தயரும்
தண்குடி வாழ்நர் அங்குடிச் சீறூர்” (நற் 135:3-4)

பரிமேலழகர் உரை
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.

மு.வரதராசனார் உரை
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

சாலமன் பாப்பையா உரை
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்

குறள் 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இருந்து -  இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

ஓம்பி - ஓம்புதல் - ōmpu-   5 v. [T. ōmu, K. ōvū,M. ōmbu.] tr. 1. To protect, guard, defend,save; பாதுகாத்தல் குடிபுறங் காத்தோம்பி (குறள்,549). 2. To preserve; to keep in mind; tocherish, nourish; பேணுதல் ஈற்றியாமை தன்பார்ப்போம்பவும் (பொருந. 186). 3. To remove, separate; to keep off; to ward off; தீதுவாராமற்காத்தல். 4. To dispel; பரிகரித்தல் எனைத்துங்குறுகுத லோம்பல் (குறள், 820). 5. To maintain,support; to cause to increase; to bring up;வளர்த்தல். கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1). 6.To consider, discriminate; சீர்தூக்குதல் ஓம்பாவீகையும் (பு. வெ 9, 1). 7. To concentrate themind; மனத்தையொருக்குதல். தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை (குறள், 132). 8. To clutch orgrasp tightly, as a miser; இவறுதல் பெற்றேமென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626)

இல் வாழ்வது - இல்வாழ்க்கை வாழ்வது

எல்லாம் - எல்லாமே, அனைத்தும்

விருந்து - புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல்;

ஓம்பி ஓம்புதல் 

வேளாண்மை - vēḷ-āṇmai   n. வேள் +ஆள்-. 1. Gift, bounty, liberality; கொடை. (பிங்.)2. Beneficence, help; உபகாரம். விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு (குறள், 81). 3.Cultivation of the soil, agriculture, husbandry;பயிர்செய்யுந் தொழில். 4. Truth; சத்தியம். (பிங்.)வேளாண்மைதானும் விளைந்திட (கொண்டல்விடு. 84); 2. gift, bounty, liberality, ஈகை; 3. truth, மெய்.

செய்தற்பொருட்டு - செய்வதற்காக

முழுப்பொருள்
இல்வாழ்க்கையில் கணவன் மனைவியாக வாழ்கிறவர்களுக்கு பல கடமைகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று விருந்தோம்பல். கணவன் மனைவியாக வாழ்வது அவர்கள் இருவர் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ற சுயநலத்திற்கு அன்று. அவர்கள் இல்வாழ்க்கை வாழ்வது என்பது ஈகை செய்வதற்காக. வந்த விருந்தினருக்கு இருக்க இடம் கொடுத்து உபசரித்து நன்கு வயிராற உணவளித்து அவர்களை பேணுவதே விருந்தோம்பல். இல்வாழ்க்கையே வாழ்வது என்பதே வரும் விருந்தினரை உபசரிக்கவே என்கிறார் திருவள்ளுவர்.

மேலும் அஷோக் உரை

சிலப்பதிகாரத்தில் கோவலனை பிரிந்துள்ள கண்ணகி, அவன் (அவள் தலைவன் கோவலன்) இல்லாமல் தன்னால் விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறாள். அப்பாடல் கீழே
‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன் 75
முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருள் மொழி அளைஇ,
என் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்த, 80
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்’என்று அவள் கூற
-- இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ( / 2. மதுரைக் காண்டம் / 6. கொலைக்களக் காதை)

பொருள்
அறநெறியாளர்களுக்கு  அளித்தல், செந்தண்மைப் பூண்டொழுகும் அந்தணர்களைப் பாதுகாத்தல், துறவிகளை வழிபடுதல் - இந்த மூன்றும்  இல்லறம் பூண்டோர் கடமை. இந்த மூன்றையும் துறந்து நான் வாழ்ந்துகொண்டிருந்தேன்.  

இப்படி வாழ்ந்த என்னை உன் தாயும், தந்தையும் உன்மீது எப்போதும் இல்லாத சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, என்மீது அன்பு உள்ளம் கொண்டு, அருள் தரும் மொழிகளைப் பேசி, என்னைப் பாராட்ட, நான் வீட்டில் ஒளிந்துகொண்டு, என் நோவையும் துன்பத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், வாயால் புன்னகை பூத்துக் காட்ட, அந்த புன்னகையைப் பார்த்து  அவர்கள் மனம் வருந்தும்படிப் போற்றப்படாத ஒழுக்க நெறியில் வாழ்ந்தீர். 

அதனை நான் மாற்றாத உள்ளத்தோடு வாழ்ந்தேன் ஆகையால், நீ எழுக என்றவுடன் எழுந்தேன்.  - என்று கண்ணகி கோவலனிடம் கூறினாள்.  
(எழுக என எழுந்தாய். என் செய்தனை - என்று கோவலன் வினவியதற்கு இப்பபடி விளக்கம் அளித்தாள்) 

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் குறிப்பாக (main-ஆக) அவரது துணைவியார் கணவதி அம்மாள் பற்றி கி.ரா.இணைநலம் (எஸ்.பி.சாந்தி எழுதியது) நூலில் இருந்து சில பகுதிகள்
கணவதி அம்மாள் (கி.ராவின் மணைவி): கவிஞர் நாவன்னா காமராஜ்னு ஒருத்தர். அய்யாவுக்கு வேண்டியவர். காதி போர்டு இருந்தவர். அவர் ஒரு தடவை கன்னியாகுமரியிலிருந்து ஒரு முப்பது பேருடன் பாதயாத்திரை சென்று திரும்பி வந்துகிட்டிருப்பதாவும், இடைசெவல் வழியா வாரதாகவும், இரவு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யும்படியும் சேதி சொல்லி அனுப்பிவிட்டார். கேப்பைக்களியும், கருவாட்டுக் குழம்பும் போதும் என்று செய்ய வேண்டிய சமையல் அயிட்டத்தையும் அவரே சொல்லிவிட்டார். 
“முப்பது பேர்னா சும்மாவ. இரண்டு நாள் முன்னாடிதான், மத்தளம்பாறை வீட்டில் இருந்து வெள்ளைக் கேழ்வரகு ஒரு பத்து கிலோ போல கொடுத்து விட்டிருந்தாங்க.அதை அரைச்சி வெச்சிருந்தேன். எங்க ஊர்ல “பெத்த பூச்சி”ன்னு ஒரு பெரிய அம்மா கேப்பக் களி கிண்டுவதில் ரொம்ப திறமைசாலி. அவங்கள கூப்பிட்டு கேப்பைக்களி பண்ணி, கருவாட்டுக் குழம்பு தயார் பண்ணோம், தோசை ஊற்றி, அதையும் தயாரா வைச்சிருந்தோம். பிறகு பத்துமோ, பத்தாதோன்று உப்புமாவும் கிண்டி எல்லாருக்கும் வயிறார பசியாற்றினோம்.

வீட்டுக்கும் வர்ரவங்க யாரா இருந்தாலும், சாப்பிடற நேரத்துக்கு வந்துட்டாங்கன்னா, அவங்களுக்கும் பசியாத்தினாத்தான் எங்களுக்கு நிம்மதியா சோறு இறங்கும்.

அவர்கள் பேசி முடித்தவுடன் நானும்(எஸ்.பி.சாந்தி) நினைத்துப் பார்க்கிறேன். அய்யா பாண்டிச்சேரியில் மாறிய அத்தனை வீடுகளுக்கும் போயிருக்கிறேன். நான் அவர்கள் வீட்டில் ஒரு வேளையாவது உண்ணாமல் வந்ததில்லை. அதோடு, பல சமயங்களில் யாராவது கூடுதல் நண்பர்கள் வந்திருப்பார்கள்.

நான் ஒரு முறை சென்றபோது, திரு மாசிலாமணி, Ex.MLA, ஜெயங்கொண்டம் அவர்கள் குழந்தைகளுடன் பெண்ணின் திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். நல்ல வெய்யில் நேரம்.

சிறிது நேர உரையாடலுக்குப் பின் விருந்து உபச்சாரம் ஆரம்பித்து விடுகிறது. என்ன, பருப்பும் நெய்யும், வடையும், பாயாசமும் இல்லை. புளிக்குழம்பு,கீரைக்கூட்டு, வெண்டைக்காய் வறுவல், முட்டை என சாதாரண சாப்பாடுதான். ரொம்ப திருப்தியான சாப்பாடும்மா என்கிறார் விருந்தினர்.

அய்யா உடனே, “இங்கு வர்ரவங்க எல்லாருமே சாப்பாடு ருசியா இருக்குன்னு சொல்றாங்க. இது சாதாரண சாப்பாடுதானே” என்கிறார். சாப்படு என்பதின் ருசி சாப்பாட்டில் மட்டும் இல்லை. கூட இருக்கும் மனிதர்களின் கபடமில்லாத மனம், அவர்களின் இனிய உபசரிப்பு, பரிமாறும் விதம், உறுத்தல் இல்லாத, கலப்படமில்லாத எளிய பேச்சு,  இப்படி நிறைய்ய.

(19 செப் 2006 அன்று எடுத்த ‘அவள் விகடன்’ பேட்டியில் இருந்து ஒரு கேள்வி): இன்றும் உங்கள் மனைவியிடம் நீங்கள் வியந்து ரசிக்கும் விஷயம் எது?
கி.ரா: கவிஞர் நா.காமராசன் அவர்கள் தனது “படை பட்டாள”த்துடன் ஒரு நடைப்பயணம் வந்தார் (சுமார் 30 பேர் இருக்கலாம்). “ராத்திரி நாங்கள் இடைசேவல் தங்கல். எங்களுக்கு கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும் போதும் வேற எந்த விருந்தும் வேண்டாம் என்று துண்டுச்சீட்டு கொடுத்தனுப்பி இருந்தார்.

என் நண்பர் மத்தளம் பாறை ராமசாமி அவர்கள் அவருடைய தோட்டத்தில் விளைந்த வெள்ளைக் கேப்பை (ராகி) கொடுத்துனுப்பியிருந்தார். அன்றுதான் அதை மாவு அரைத்து வைத்திருந்தோம். ராமேஸ்வரம் பால் நெத்திலிக் கருவாடு வீட்டில் இருப்பு இருந்தது. ஒரு சிரமும் இல்லை; முப்பது பேருக்கு அளவில் களி கிண்டுவது தான் சிரமம். சொந்தக்காரப் பெண்கள் வந்து உதவினார்கள். காணுமோ காணாதோ என்று அரிசியைக் கொஞ்சம் நனைய வைத்து ஆட்டி ஒரு திடீர் உப்புமா செய்தாள். பிறகுதான் தெரிந்தது இதும் சரிதான் என்று. நடந்து வந்த பசி அவர்களுக்கு. கேப்பைக் களியும் கருவாட்டுக் கொழம்புக்கும் ஒரே கொண்டாட்டம்; உப்புமாவும் போன மூலை தெரியவில்லை. ஒரு தார் கதலிப்பழமும் சேர்ந்து கைகொடுத்தது.




பரிமேலழகர் உரை
[அஃதாவது, இரு வகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கு ஈதல் அன்மையானும், இடைநின்ற விருந்து ஓம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதல் ஆயிற்று. வேறாகாத அன்புடை இருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின்பின் வைக்கப்பட்டது.)

இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - கணவனும் மனைவிபும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு - விருந்தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே.

இக் காலத்திற்போல் உண்டிச் சாலைகளும் தங்கல் விடுதிகளுமில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவரு மின்மையின், இல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்றார். ' விருந்து ' பண்பாகு பெயர்.

மணக்குடவர் உரை
இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.

மு.வரதராசனார் உரை
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

பொருள்: இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - (ஒருவன்) இல்லின்கண் தங்கி (பொருளைக்) காத்து வாழ்த லெல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு- விருந்தினரைப் பேணி (அவருக்கு) உதவி செய்தற் பொருட்டு.

அகலம்: எல்லாம் என்பது ஈண்டு எஞ்சாப் பொருட்டாயதோர் உரிச்சொல். பொருள்+து = பொருட்டு. பொருட்டு ‡ பொருளையுடையது. ‘விருந்து’ ஆகுபெயர், அதனை உடையார்க்கு ஆயினமையால்.

கருத்து: இல்லின்கண் வாழ்வது விருந்தினரைப் பேணுதற்கே.

English Meaning - As I taught a kid - Rajesh
For the married couple, who "live" their lives, one of their duties is hospitality. They have to warmly receive guests (mainly sages, saints, elders, friends and whoever coming hungry) and serve them with food. The couple is engaged to themselves. But they shouldn't be selfish. They have to serve the needy with their hospitality.

Questions that I ask to the kid
What is the main duty of married couple? 
Is marriage meant to be a selfish, taking care of themselves?

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

குறள் 86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
செல் - செல்லு (போ)
விருந்து - புதுமை, அதிதிகளுக்கிடு முணவு,  விருந்தாளி, அதிதி, புதியர், புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல்; 
ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
வரு - மழை
வரு - வருகம் - இலை
விருந்து - புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல்
பார்த்திருப்பான் - காத்துக்கொண்டு இருப்பான், எதிர்நோக்கி கொண்டு இருப்பான்
நல் - நல்ல
வருந்து - வருந்திச்செய்ய
வானத்தவர்க்கு - வானில் உள்ளவர்க்கு

முழுப்பொருள்
நல்ல உபசரிக்கும் பண்புள்ளவன் என்று யாரை குறிப்புடுவது என்றால் அதற்கு மூன்று இலக்கணங்களை கூறுகிறார் திருவள்ளுவர்

1) செல்விருந்து ஓம்பி - இதுவரை தன் இல்லத்தில் புதியோராய் விருந்தினராய் வந்தவருக்கு நன்கு உபசரித்து அவர்களை பேணி அவர்கள் மனம் நோகாமல் அவர்களுக்கு நல்ல உணவையும் வசதியையும் அளிப்பவர். ஒருவர் தன் வீட்டில் இருக்கும் பொழுது உணவளித்து உபசரிப்பது மட்டும் இன்றி அவர் வீட்டை விட்டு வெளியே ”செல்லும்” பொழுது உணவு கொடுத்து அனுப்புவதும் விருந்தோம்பலில் அடங்கும். ஆகவே தான் ‘செல்விருந்து’ என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். நம் இந்திய கலாசாரத்தில் அதனால் செல்லும் பொழுது மதிய உணவிற்கும் (புளிசாதம், தயிர் சாதம் போன்று), இரவு உணவிற்கு (இட்லி போன்று) அல்லது சில இனிப்புகள் எதையாவது கொடுத்து அனுப்புகிறார்கள்.

2) வருவிருந்து பார்த்திருப்பான் - வருங்காலத்தில் இதற்கு முன் வந்து சென்றவர்களுக்கும், இன்னும் புதியதாய் வருபவர்களுக்கும் விருந்து படைக்க எதிர்நோக்கி காத்திருப்பவர்.  சமைத்துவைத்துக்கொண்டு வருவிருந்துக்காக காத்திருப்பார். 

3) நல்வருந்து வானத் தவர்க்கு -  தேவர்களுக்கும், கடவுளுக்கும் விருந்து படைக்கும் பொழுது எவ்வளவு தன்னை வருத்தி உபசரிக்கிறோமோ அதே அளவு எந்த பாரபட்சமும் இல்லாமல் தன் இல்லத்திற்கு வந்தவரை உபசரிக்க வேண்டும். 

உதாரணமாக இன்றும் சில ஊர்களில் வீட்டுக்கு வந்துவிட்டுசெல்லும் விருந்தினர்களுக்கு கையில் சில உணவு பண்டங்களை கொடுத்து அனுப்பும் வழக்கம் உள்ளது. கல்யாணங்களில் கட்டுசாத கூடை என்று  கூறுவர். பல குடும்பங்களில் விருந்தினர் ஊர்க்குப்போனால் கையில் இட்லி, புளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சப்பாத்தி (உடன் - வெங்காயம் தக்காளி கரி)  என்று ஏதாவது ஒன்றை கையில் கொடுத்து அனுப்புவர். இன்றைய காலத்தில் நாகரிகம் வசதி என்ற பெயரில் வழியில் வாங்கி சாப்பிடுவதை ஒருவித கௌரவமாக கொண்டு பல உயர் விழுமியங்களை நாம் இழக்கிறோம். 

இக்கருத்து மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறியதுபோல “கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்” என்று அடுக்கியது போல தேவராய் பிறப்பது ஒரு பிறவியென்பதை ஒட்டி இருக்கிறது.

தியடோர் பாஸ்கரன் அவர்கள் “செல்விருந்துதோம்பி வருவிருந்து பார்த்திருப்பார்” என்ற கட்டுரையில் இக்குறளை இப்படி எழுதியிருப்பார் - துறவிகள், சில நாட்களுக்கொருமுறை, அருகிலுள்ள ஊருக்குள் சென்று, யாசித்து உணவு பெற்று, அதை பள்ளியிலுள்ளத் எல்லாத் துறவிகளுடன் பகிர்ந்து உண்டனர். ஒரு வீட்டின் முன் சென்று அமைதியாக நிற்பார் துறவி. உணவு வேண்டி துறவிகள் தங்கள் இல்லத்திற்கு வருவதை மக்கள் ஒரு பேராகக் கருதினார்கள். இந்தப் பழக்கத்தைத் தான் வள்ளுவர், “செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு” என்று எழுதியிருகின்றார் என்றும், திருக்குறளில் விருந்து என்ற சொல் துறவிகளின் வருகையைத்தான் குறிக்கின்றது என்று ஜீவபந்து ஸ்ரீபால் கூறிகின்றார். 

Aritappati Jain Caves (அரிட்டாபட்டி சமண குகைகள்)

ஒப்புமை
”செல்விருந் தாற்றி” (அகநா 203.16)

“வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய” (புறநா 177.15)

“வருவிருந் தோம்பி மனையறம் முட்டாப்
பெருமனைக் கிழத்தியார்” (சிலப் 22.132.3)

“அருவிலையிற் பெறுங்காசும் அவையே யாகி
அமுதுசெயத் தொண்டரள விறந்து பொங்கி
வருமவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும்
மகிழ்ந்துண்ண இன்னடிசில் மாளா தாக” (பெரிய.திருஞான 571)

”இல்லா இடத்தும் இயன்ற அளவினால்
உள்ள இடம்போற் பெரிதுவந்து மெல்லக்
”கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு” (நாலடி 91)

“நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல் - அட்டது
அடைத்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு” (நாலடி 271)

“இன்சொ லளாவல் இடமினிதூண் யாவர்க்கும்
வன்சொற் களைந்து வகுப்பானேல் - மென்சொல்
முருந்தேய்கும் முட்போல் எயிற்றினாய் நாளும்
விருந்தேற்பர் விண்ணோர் விரைந்து” (ஏலாதி.7)

“ஒன்றாக நல்ல துயிரோம்பல் ஆங்கதன்பின்
நன்றாய்ந் தடங்கினார்க் கீந்துண்டல்  என்றிரண்டு
குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்
நின்றது வாயில் திறந்து” (அறநெறி 62)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.

மு.வ உரை
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

சாலமன் பாப்பையா உரை
வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

எழுத்தாளர் ஜெயமோகன் ”நமது விருந்தோம்பல்..” பதிவில் இருந்து (நன்றி) 
ஏனென்றால் சுற்றுலாப்பயணியை ஏமாற்றுபவர், சீண்டுபவர் நம் பிரதிநிதியாக நின்று அதைச் செய்கிறார். ‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பார்’ என்று வள்ளுவர் விருந்தோம்புதலைச் சொன்னார். அந்தப் பெரிய பண்பாட்டை அவமதிப்பவர்கள் நம்மில் உள்ள இந்த புல்லுருவிகள்தான்.

எழுத்தாளர் ஜெயமோகன், இந்தியாவின் ஆன்மா துறவில் உள்ளது என்று உணர்ந்ததாகவும், அதனை விவேகானந்தரும் சொன்னதாகவும் அவரின்அருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ் பயணக்கட்டுரையில் பதிவு செய்து இருக்கிறார். 
 
(அதில் இருந்து ஒரு பத்தி கீழே - அவருக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவம்)
காலையில் எழுந்ததும் சமண பஸதிக்குச் சென்று பார்த்தோம். அப்போது ஒருவர் நாங்கள் செல்லும் கார் எண்ணைப் பார்த்து வந்து சாமியார் அழைப்பதாகச் சொன்னார். வேறு வழியில்லாமல் சென்றோம். ஒரு பெரிய போஜனசாலையில் தட்டுகளைக் கழுவி வந்து அமர்ந்தோம். எல்லா ராமகிருஷ்ண மடாலயங்களையும் போல பிரம்மாண்டமான கூடம். அமைதி. சுத்தம். மாபெரும் கட்டிடங்கள். ஒரு வகை உப்புமா போட்டார்கள். என்னால் அள்ளி வாயில் வைக்கவே முடியவில்லை. குமட்டிக்கொண்டு வந்தது. நான் இரந்துண்டு வாழ்ந்தவன். வரிசைகளில் கால்கடுக்க நெடுநேரம் நின்றிருக்கிறேன். கிடைத்ததை உண்டிருக்கிறேன். அவமதிப்பும்கூட பெரிய விஷயமல்ல. அது அவமதிப்பவனின் மனநிலையைக் காட்டுகிறது, அவ்வளவுதான். இது அப்படி அல்ல, இதன் பின்னால் உள்ளது ஒரு மாபெரும் மனச்சிறுமை. என் முன்னால் அமர்ந்து தின்றுகொண்டிருந்த அந்தக் காவிதாரி எங்களை மதிப்பிடுகிறார். நான் வைரமோதிரம் போட்டிருந்தால் அவர் என் முன்னால் வந்து நின்று இளித்திருப்பார் என்று எனக்கு தெரியும் என்பதே என் பிரச்சினை.

சுற்றிலும் பிரம்மாண்டமான கான்கிரீட் கட்டிடங்கள். அவை எல்லாமே தங்குமிடங்கள். பெரும்பாலும் காலியாகவே இருக்கவும் கூடும் என அங்கே பார்த்ததுமே தெரிந்துகொண்டேன். அது மெல்ல மெல்ல மனக்கொதிப்பை உருவாக்கியது. உடனே அங்கிருந்து சென்று விடவேண்டும், ஒரு சொல் கூட அந்தக் காவிதாரியிடம் பேசக்கூடாது என நினைத்தேன். அவரைப் பார்க்காமலேயே வெளியேறினேன்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது அவரிடம் கேட்டார்கள், அமெரிக்காவில் உங்களைக் கவர்ந்தது என்ன என்று. இங்குள்ள பொது அற அமைப்புகள்தான் என்று அவர் சொன்னார். பின்னர் எழுதினார், இந்தியா நூற்றாண்டுகளாகப் பெரும் அறநிலைகளை அறநெறிகளை உருவாக்கி நிலைநாட்டி வந்தது. அவையெல்லாம் நவீன காலகட்டத்தில் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன, நவீன அற அமைப்புகளை உருவாக்கி அந்தப் பிரச்சினையை சமாளிக்க வேண்டும் என்று. அவ்வாறு அவர் உருவாக்கிய அமைப்புதான் ராமகிருஷ்ண மடம். அதற்கு அவருக்குத் தெளிவான நோக்கம் இருந்தது.

விவேகானந்தர் பல இடங்களில் சொல்லியிருக்கிறார், இந்த நாட்டின் பாரம்பரியமும் கலைகளும் ஆன்மீகமும் நிலை நிற்பதே உலகியலை உதறி இந்த நாட்டு நிலவெளி முழுக்க அலைந்து திரியும் அன்னியர்களால்தான் என. இங்குள்ள பெரும்பாலான ஆன்மீக வழிகளில் துறவி ஆவதற்கு முன் பிச்சை எடுத்து உண்டு அலையும் வாழ்க்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் லௌகீகம் சம்பந்தமான பயமும் கவலையும்தான் ஆன்மீகமான சிந்தனைக்குப் பெரும் தடைகள். அவற்றில் இருந்து முற்றாக விடுபட்டவனே உண்மையில் எதையாவது ஆழத்தில் சென்று சிந்தித்தறிய முடியும். ராமகிருஷ்ணரே அவரது மாணவர்களைப் பிச்சை எடுக்க அனுப்பியிருக்கிறார். விவேகானந்தரும் அப்படி பவிராஜக வாழ்க்கை வாழ்ந்தவர்தான்.

ஆன்மீகத்தில் மட்டும் அல்ல, கலையிலும் கூடத்தான். இந்நாட்டின் முக்கியமான எல்லா எழுத்தாளர்களும் பிச்சை எடுத்து அலைந்து திரிந்த வாழ்க்கை கொண்டவர்களே. பஷீராக இருந்தாலும், காரந்தாக இருந்தாலும். அவர்களைப் பேணும் அமைப்புகள் இந்நாடெங்கும் இருந்தன. ஒவ்வொரு இந்துவும் சமணரும் பௌத்தரும் சீக்கியரும் அந்த மனநிலை கொண்டிருந்தார்கள். அன்னியர்களை ஐயப்படுவதற்கும் புறக்கணிப்பதற்கும் பதிலாக அவர்கள் அன்னியர்கள் என்பதற்காகவே அவர்களைப் பேணும் ஒரு பண்பாடு. இன்றும் அந்தப் பண்பாடு நம் கிராமங்களில் உள்ளது. சாவடிக்குச் சென்று இரவுணவுக்கு எவராவது உள்ளனரா என்று பார்த்து உணவிட்டபின்னரே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்ற மரபு இன்றும் கூட பல்லாயிரம் தமிழகக் கிராமங்களில் உள்ளது.

சென்ற நூற்றாண்டில் பிரம்மசமாஜம் இந்த விழுமியங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. அலைந்து திரிபவர்களை சோம்பேறிகள் என்றும் குற்றவாளிகள் என்றும் அது சொன்னது. அந்த மனநிலை பெருகி ஒருகாலத்தில் அலைந்து திரியும் அன்னியர்கள் பேணப்படாது போய்விடுவார்கள் என விவேகானந்தர் அஞ்சினார். ஒருநாட்டின் ஆன்மீக சாரம் அந்த அன்னியர்களால், நாடோடிகளால்தான் நிலைநிற்கும் என்று அவர் சொன்னார். ஆகவே அதற்கான நவீன அமைப்பை உருவாக்க வேண்டுமென விரும்பி அவர் ராமகிருஷ்ண மடங்களை உருவாக்கினார். ஓர் இளைஞன் இன்னதென்றறியாத மன எழுச்சியால் உந்தப்பட்டவனாகத் தன்னிடம் உள்ள அனைத்தையும் உதறி எங்கு செல்வதென்றில்லாமல் செல்லும் அந்தப் பயணத்தில் எந்நேரத்திலும் அடையா வாசலும் உணவும் தலைசாய்க்க இடமுமாக அந்த அமைப்பு இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

அங்கேதான் இந்த ஆசாமிகள் காவிகளைக் கட்டிக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறார்கள் இன்று. இன்று இவர்கள் செய்யும் வேலை என்ன? விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பெயரைச்சொல்லி பெருநகர்களில் அமைப்புகளை உருவாக்குகிறார்கள். பெரும் பணக்காரர்களின் இல்லங்களைத் தேடிசென்று தொடர்புகளை உருவாக்குகிறார்கள். பல்லிளித்துப் பசப்பி நன்கொடைகளைப் பெற்று பெரும் கான்கிரீட் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். அவற்றுக்குள் நெய்விட்டு சோறு தின்று ஊன் வளர்த்து அமர்ந்திருக்கிறார்கள். சில வீணர்கள் சிலரை ஏமாற்றித் தின்று வாழ்வது பற்றி எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் அதற்கு இந்த தேசம் கண்ட விடிவெள்ளியின் பெயர் பயன்படுத்தப்படுவதே கொந்தளிக்கச் செய்கிறது.

என்னால் மிக எளிதாக ஓர் சிபாரிசைத் தொலைபேசியிலேயே ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் அது இன்றைய நான். முப்பதாண்டுகளுக்கு முன், பதறும் கண்களும் தயங்கும் நடையுமாக, கையில் பைசா இல்லாமல், பசித்துக் களைத்து நான் வந்து இந்த வாசலில் நின்றிருந்தால் என்னை இவர்கள் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். இந்த இடத்தில் இன்றும் என் அகம் அந்த அவமதிப்பை உணர்கிறது. இந்தக் காவி அணிந்த குமாஸ்தா ஒவ்வொரு அரசாங்க அமைப்பிலும் அமர்ந்திருந்து விதிகளைக்கொண்டு அந்த அமைப்பையே தோற்கடிக்கும் அதே ஆன்மாதான்.

நான் சென்ற ஒவ்வொரு முறையும் அரவணைத்து உணவிட்ட சமண நிலையங்களும் குருத்வாராக்களுமே எனக்கானவை. இது அல்ல. இது இந்து சமூகம் மேல் இருக்கும் ஒரு சீழ்க்கட்டி.

அருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட்

நான் சீனுவிடம் கேட்டேன், சிங்கப்பூரில் நான் ஆற்றிய உரையை வாசித்திருக்கிறீர்களா என. நானும் அதையேதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் சார் என்றார் அவர்.   நான் இந்தியா என்று ஆரம்பித்துப் பேசும்போது என்னிடம் பேசவருபவர்கள் ஒரு அரசியல் கட்டமைப்பை, ஒரு வரைபடத்தை இந்தியா என எண்ணிப் பேசவருகிறார்கள். இந்த தேசத்து நிலப்பரப்பில் அலைய ஆரம்பித்து முப்பதாண்டுகளாகின்றன. நான் இந்தியா என நினைப்பது எனக்கு அன்னமிட்ட ஆயிரக்கணக்கான கைகளை. நான் மிக அபூர்வமாகவே பட்டினி கிடந்திருக்கிறேன். அனேகமாக எங்கும் இல்லறத்தாரால் கனிவுடன் மட்டுமே உணவிடப்பட்டிருக்கிறேன். எனக்கு என் தேசம் மனித உள்ளங்களில் குடியிருக்கும் அன்னபூரணிதான்.

கலை இலக்கியம் எதற்காக? (எழுத்தாளர் ஜெயமோகன்)

பதினைந்து வருடம் முன்பு ஒரு உயர்காவலதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இந்தியக் காவல்துறை அமைப்பு என்பது உண்மையில் ஒரு சம்பிரதாயம் மட்டுமே. ஏறத்தாழ இருபதாயிரம் பேருக்கு ஒருகாவலர் வீதம் இங்குள்ளனர். உண்மையில் இந்தியாவில் உள்ள அமைதி என்பது போலீஸ் நோக்கில் ஓர் ஆச்சரியம்

”இங்க பசிச்சவன் கிட்ட கருணையும் நியாயமும் இருக்கு சார்” என்றார் அந்த அதிகாரி. அதை எப்படி புரிந்துகொள்வது என்பதில் நீங்கள் வேறுபடலாம். ஓயாது இந்திய நிலத்தில் அலைபவன் என்றமுறையில் இந்த மண்ணின் ஒவ்வொரு துளியிலும் ஊறிக் கொண்டிருக்கும் கருணையை மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன். இந்திய நிலத்தில் எங்கும் முலைகனிந்த அன்னையரும் அகம் கனிந்த தந்தையரும் காணக்கிடைக்கின்றனர்.

அவர்களின் வாழ்வின் சாரமாக உள்ள அறம்தான் என் கற்பனையின் ஈரம் சென்று தொடும் விதை. என் பத்தொன்பது வயதில் அம்மா அப்பா இருவரும் இறந்தபின் கையில் ஒரு பைசா இல்லாமல் வீட்டைவிட்டு கிளம்பி அலைந்திருக்கிறேன். என் நாட்டில் நான் ஒருவேளைக்குமேல் பட்டினிகிடக்க நேரவில்லை. ஒரு அன்னையை நான் இழந்தேன் . பல அன்னை முகங்கள் எனக்கு சோறூட்டின. அந்த முகங்களை இப்போது என்னிப்பார்க்கிறேன். அவைதான் இந்தியாவின் முகம்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்- (தன்பால் நின்று) செல்லும் விருந்தினரைப் பேணி (த் தன்பால்) வரும் விருந்தினரை (எதிர் நோக்கி) இருப்பவன், வானத்து அவர்க்கு நல் விருந்து - வானத்தின்கண் வாழும் தேவருக்கு நல்ல விருந்தினன் (ஆவன்).

அகலம்: செல், வரு என்பன வினைத் தொகைகள். அவை மேற்கூறிய பொருளன வாதலைத் ‘தருசொல் வருசொல்லாயிரு கிளவியுந், தன்மை முன்னிலை யாயீரிடத்த’, ‘ஏனை யிரண்டுமேனை யிடத்த’ என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களால் அறிக.

இச் சூத்திரங்களை அறியாதார் ‘செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்’ என்பதற்குத் ‘தன்கட் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான் அதனோடு உண்ண இருப்பான்’ என்று உரைப்பார்.

கருத்து: விருந் தோம்புவான் தேவர்களால் சிறப்புச் செய்யப் பெறுவான்.

திருக்குறளின் பெருமையை உலகுக்கு விளக்க வந்த நூல்களுள்,  பிறைசைச் சாந்தக் கவிராயர் இயற்றிய, நீதிசூடாமணி என்னும் "இரங்கேச வெண்பா" ஒன்று ஆகும். அதில் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல்....

தேசுபெறு மாறன் தெளித்த முளையமுதிட்டு
ஈசனுடன் போந்தான், இரங்கேசா! - பேசுங்கால்
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

இதன் பதவுரை --- 

 இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே!

தேசு பெறு மாறன் --- புகழ் பெற்ற இளையான்குடிமாற நாயனார், தெளித்த முளை அமுது இட்டு --- அன்று விதைத்த நெல்முளையை அமுதாக்கிப் படைத்து, ஈசனுடன் போந்தான் --- சிவபிரானுடன் சிவலோகம் சென்றார். (ஆகையால், இது) பேசுங்கால் --- எடுத்துச் சொல்லுமிடத்து, செல் விருந்து ஓம்பி --- உண்டு செல்லும் விருந்தாளிகளை உபசரித்து விட்டு, வருவிருந்து பார்த்து இருப்பான் --- இனி வரும் விருந்தாளிகளை எதிர்நோக்கி இருப்பவன், வானத்தவர்க்கு --- சுவர்க்கலோக வாசிகளாகிய தேவர்களுக்கு, நல் விருந்து --- இறந்த பிறகு நல்ல விருந்தாளியாவான் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

விளக்கவுரை ---  தமிழ்நாட்டில், இளையான்குடி என்னும் ஊரில் வாழ்ந்த மாறன் என்னும் வேளாளர், தாளாளராய், "தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது" என்றபடி பழுதற உழுது பயிரிட்டுச் செல்வம் பெருக்கி,"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை" என்றபடி இல்வாழ்க்கையை வாழும் இயல்பினான் வாழ்ந்து வந்தார். இவர் சிவபத்தியில் சிறந்து இருந்தாராகையால், சிவனடியவரை அவன் எனக் கருதி அன்புசெய்து அமுது ஊட்டுவாராயினார். அதுகண்ட சிவபிரான் அவரது விருந்தோம்பல் திறத்தை அவர் வாழ்வினன்றித் தாழ்வினும் போற்றுவார் என்று காட்டி உலகத்தவர்க்கு அவருடைய சிவபத்தியின் சிறப்பை வெளிப்படுத்த அவருடைய செல்வத்தை மாற்றி, அவரை வறியவராக்கினார். அன்றியும், ஒருநாள் அரை இரவில் விடைமழை பொழியும் இருட்டில், சிவபிரான் தாமொரு விருத்த சிவனடியவர்போல் வேடம் தாங்கி, மெத்தப் பசித்தவர் போன்று அவர் வீட்டுக் கதவைத் தட்டினார். வறுமையின் கொடுமையால் உறக்கமின்றி இருந்த நாயனார், உடனே வந்து கதவைத் திறந்து, சிவனடியவரை வரவேற்று உபசரித்து, அங்கொரு புறம் அவரை எழுந்தருளிவித்து, வீட்டில் ஒன்றும் இல்லாதிருந்து, அவர்க்கு அன்னமிடும் ஏற்பாட்டுக்காகத் தம் மனைவியாரோடு யோசித்து, அன்று பகல் விதைத்த நெல்முளையை மிக வருந்தி வாரிக் கொண்டு வந்து, அவர் கையில் கொடுத்தார். அதை வாங்கி அவ் அம்மையார், பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை ஆகையால், தக்கபடி பதம்செய்து அமுதாக்கி அடியவர்க்குப் படைத்தார். பொய்ப் பசி கொண்ட அடியவர், அவர்களுடைய பத்தி வைராக்கிய உண்மை அன்புக்கு வியந்து, மழவிடைமேல் அவர்களுக்குக் காட்சி தந்து, அவர்களிருவரையும் தமது உலகத்துக்கு அழைத்துக் கொண்டு போயினர்.

திருக்குறளின் பெருமையை உலகுக்கு விளக்க வந்த நூல்களுள், சிதம்பரம் பச்சைக் கந்தயைர் மடத்து சென்ன மல்லையர் இயற்றிய, "சிவசிவ வெண்பா" ஒன்று ஆகும். அதில் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல்....

அன்னம்இடான் பொன்நா டுஅடைந்தும் தனதுஉடலைத்
தின்எனவே தின்றான், சிவசிவா! - மன்னிஅயல்
செல்விருந் துஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

 தண்டகாரண மகிமையில் சுகேது மன்னன் இட்டுண்டு வாழாமையில், நரகத்தில் தன் உடலைத் தின்றான் என்று கூறப்பட்டுள்ளது.

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....                                 

"திருஇருந்த தண்டலையார் வளநாட்டில்
         இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்
ஒருவிருந்தா கிலும் இன்றி உண்டபகல்
         பகலாமோ, உறவாய் வந்த
பெருவிருந்துக்கு உபசாரஞ் செய்து அனுப்பி
         இன்னம் எங்கே பெரியோர் என்று
வருவிருந்தோடு உண்பு அல்லால், விருந்து இல்லாது
         உணும் சோறு மருந்து தானே".              
                   ---  தண்டலையார் சதகம்.

இதன் பதவுரை ---

 திரு இருந்த தண்டலையார் வளநாட்டில் இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் --- அருச்செல்வத்தோடு பொருட்செல்வமும் பொருந்தி உள்ள திருத்தண்டலை என்னும் வளம் மிகுந்த நாட்டினில் இல்லறம் நடத்துகின்ற பெரியோர்கள், ஒரு விருந்து ஆயினும் இன்றி உண்ட பகல் பகலாமோ --- ஒரு விருந்தினராவது இல்லாமல் உணவு கொண்ட நாளும் ஒரு நாள் ஆகுமோ? உறவாய் வந்த பெரு விருந்துக்கு உபசாரம் செய்து அனுப்பி --- உறவு போல அன்புடன் வந்த பெரிய விருந்தினருக்கு முதலில் உணவு அளித்து, வேண்டிய உபசாரங்களைச் செய்து அனுப்பிய பின்னரும், இன்னும் பெரியோர் எங்கே  என்று - மேலும் விருந்தாக வரக்கூடிய சான்றோர்கள் எங்கே என்று ( ஆவலோடு காத்திருந்து) வரு விருந்தோடு உண்பது அல்லாமல் --- வருகின்ற விருந்தினருடன் உண்பது அல்லமால்,  விருந்து இல்லாது உணும் சோறு மருந்து  தானே --- விருந்தினர்  இல்லாமல் உண்ணுகின்ற சோறு ஆனது மருந்து போலக் கசப்பாகத் தான் இருக்கும்.

கருத்து --- "செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்து இருப்பான், நல்விருந்து வானத்தவர்க்கு" என்னும் திருவள்ளுவ நாயனார் கருத்தை இங்கு வைத்து எண்ணுக.

"மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்பது கொன்றைவேந்தன். மருந்து என்னும் சொல் இங்கு அமுதம் என்னும் பொருளில் வந்தது.
    
 இல்லற வாழ்க்கையின் சிறப்புகளுள் ஒன்று விருந்தோம்பல் ஆகும். விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று உணவு வழங்கும் பண்பு இல்லாதவர்கள் இல்லற வாழ்வின் சிறப்பைப் பெற இயலாது. இதை, "விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்" என்றது கொன்றை வேந்தன். விருந்தினரை அன்புடன் உபசரிக்க வேண்டும் என்னும் பொருள் படவே, "அன்புடைமை" என்னும் அதிகாரத்தின் பின்னர், விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தை நாயனார் தமது திருக்குறளில் வைத்தார் என்னும் அருமையை உணர்க.

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த
     பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து
     ஒருப்படுத்த உறைப்பன் ஊர்;
மறைப் பெருந்தீ வளர்த்து இருப்பார்,
     வருவிருந்தை அளித்து இருப்பார்,
சிறப்பு உடைய மறையவர் வாழ்
     திருவரங்கம் என்பதுவே.    
                   --- பெரியாழ்வார் திருமொழி.

இதன் பொருள் ---
பிறத்தற்கு உரிய அறையிலேயே மாயமாய்ப் போய்விட்ட அந்தணனது நான்கு பிள்ளைகளையும் கொஞ்ச நேரத்திற்குள் பரமபதத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து கொடுத்து, தாயுடன் நேர்த்த வல்லமை உடையவனது வேதத்தில் கூறி உள்ளபடி, அக்கினியை வளர்த்துக் கொண்டு இருப்பவர்களும், வரும் விருந்தினரை உபசரித்துக் கொண்டு இருப்பவர்களும் மேன்மையை உடைய அந்தணர்கள் வாழுகின்ற ஊர் திருவரங்கம் ஆகும்.

இல்லா இடத்தும் இயன்ற அளவினால்
உள்ள இடம்போல் பெரிது உவந்து ---  மெல்லக்
கொடையொடு பட்ட குணன் உடை மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு.          
                    --- நாலடியார்.

இதன் பதவுரை ---

இல்லாவிடத்தும் --- பொருளில்லாத காலத்திலும், இயைந்த அளவினால் --- கூடிய அளவினால், உள்ள இடம்போல் பெரிது உவந்து --- பொருளுள்ள காலத்தைப் போல மிகவும் மகிழ்ந்து, மெல்லக் கொடையொடு பட்ட குணன் உடைய மாந்தர்க்கு --- ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல் தொழிலோடு பொருந்திய அருட்குணத்தையுடைய மக்களுக்கு, ஆண்டைக் கதவு அடையா --- அவ்வுலகக் கதவுகள் வழியடைக்கமாட்டா.

ஈகைக் குணமுடையவர்கள் மறுமை இன்பம் பெறுவர் என்பது கருத்து.

நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உள வரையால்
அட்டது பாத்து உண்டல் அட்டு உண்டல் ---  அட்டது
அடைத்து இருந்து உண்டு ஒழுகும் ஆவதின் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.       
            ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உளவரையால் அட்டது பாத்து உண்டல் அட்டு உண்டல் --- சமைத்து உண்ணுதல் என்பது, தமக்குள்ள பொருள் அளவினால் தம்மிடம் உறவு கொண்டோர்க்கும் கொள்ளாத விருந்தினர்க்கும் தாம் சமைத்ததைப் பகுத்து உதவிப் பின் தாம் உண்ணுதலாகும்;  அட்டது அடைத்திருந்து உண்டொழுகும் ஆவது இல் மாக்கட்கு அடைக்குமாம் ஆண்டைக் கதவு --- அவ்வாறன்றித் தாம் சமைத்ததைத் தமது வீட்டின் கதவையடைத்துக் கொண்டு தனியாயிருந்து தாமே உண்டு உயிர் வாழ்கின்ற மறுமைப் பயனற்ற கீழ்மக்கட்கு மேலுலகக் கதவு மூடப்படும்.

இம்மையில் பிறர்க்கு ஒன்று ஈயாதவர்க்கு மறுமையில் துறக்க உலகின்பம் இல்லை என்றது.

இன்சொல், அளாவல், இடம்,  இனிது, ஊண்
வன்சொல் களைந்து வகுப்பானேல் --- மென்சொல்
முருந்து ஏய்க்கும் முள் எயிற்றினாய், நாளும்
விருந்து ஏற்பர் விண்ணோர் விரைந்து.    -
           -- ஏலாதி.

இதன் பதவுரை ---
முருந்து ஏய்க்கும் --- மயிலிறகின் அடியை ஒக்கும், முள் எயிற்றினாய் --- கூரிய பற்களையுடைய பெண்ணே!, யாவர்க்கும் --- விருந்தாய் வருவாரெல்லாருக்கும், இன்சொல் --- இன்சொல்லும், அளாவல் --- உள்ளங்கலந்த உறவும், இடம் --- தங்குமிடமும், இனிது --- ஆடையணி முதலிய பொருளும், ஊண் --- உணவும், வன்சொல் களைந்து --- கடுஞ் சொற்களை நீக்கி, மென்சொல் --- பணிவு மொழியும், நாளும் வகுப்பானேல் --- என்றும் முறையே வழங்குவானானால், விண்ணோர் --- தேவர்கள், விரைந்து --- முன் வந்து, விருந்து ஏற்பர்--- அவனை விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர்.

மிருதுவாகிய சொல்லையும் மயிற்பீலியினது அடியையும் ஒத்து விளங்கும் கூரிய பல்லையும் உடையவளே! தன் மனை நோக்கி வரும் விருந்தினர் யாவரிடத்தும் இன்சொல் கூறலும், கலந்து உறவாடலும், இருக்கை உதவலும், அறுசுவை உண்டி அளித்தலும் செய்து, கடுஞ்சொல் ஒழித்து, மென்சொல் வழங்கிச் சிறப்பிப்பான் ஆயின் எக்காலமும் அவனை வானோர் விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர்.
   
ஒன்றாக நல்லது உயிர்ஓம்பல், ஆங்கு அதன்பின்
நன்றுஆய்ந்து அடங்கினார்க்கு ஈந்து உண்டல் – என்றுஇரண்டு
குன்றாப் புகழோன் வருக என்று மேல்உலகம்
நின்றது வாயில் திறந்து.           
--- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---
ஒன்றாக நல்லது உயிரோம்பல் --- அறங்களுள் தன்னோடு ஒப்பது இன்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், ஆங்கு அதன்பின் நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் --- அதனை அடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி போகாது அடங்கினார்க்கு உண்டி முதலியன உதவித் தாமும் உண்ணுதல், என்ற இரண்டும் குன்றாப் புகழோன் --- இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி அடைந்தவனை, வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது --- வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கா நின்றது.


வருவிருந் தோம்பி மனையற முட்டாப்
பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ்வு எய்தி
இலங்குபூண் மார்பில் கணவனை இழந்து
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை
கொங்கைப் பூசல் கொடிதோ அன்றெனப்
பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர்.... 
--- சிலப்பதிகாரம், அழல்படு காதை.

இதன் பதவுரை ---
வரு விருந்து ஓம்பி மனைஅறம் முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி --- தம் இல்லத்து வரும் விருந்தினரைப் பேணி இல்லற நெறியின் வழுவாத பெரிய மனையறத்திற்குரிய மகளிர் மிக மகிழ்ச்சியுற்று, இலங்கு பூண் மார்பிற் கணவனை இழந்து --- விளங்கும் பூண் அணிந்த மார்பினையுடைய தன் கொழுநனை இழந்து, சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப் பூசல் கொடிதோ அன்று என --- சிலம்பானே பாண்டிய மன்னனை வெற்றி கொண்ட செவ்விய அணிகலங்களையுடைய மங்கை தன் கொங்கையாற் செய்த பூசல் கொடி தன்று எனக் கூறி, பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் --- மிக்கு எரியும் தீக் கடவுளை வணங்கித் துதித்தனர் ;


அருந்தினர் அருந்திச் செல்ல
         அருந்துகின்றாரும், ஆங்கே
இருந்து இனிது அருந்தா நிற்க
         இன்னமுது அட்டுப் பின்னும்
விருந்தினர் வரவு நோக்கி
         வித்து எல்லாம் வயலில் வீசி
வருந்தி விண் நோக்கும் ஓர்
         ஏர் உழவர்போல் வாடி நிற்பார். --- தி.வி.புராணம். திருநகரச் சிறப்பு.

 இதன் பதவுரை ---
அருந்தினர் --- உண்ட விருந்தினர், அருந்திச் செல்ல --- உண்டு செல்ல, அருந்துகின்றாரும் --- உண்கின்றவர்களும், ஆங்கே --- முன் உண்டவர் போலவே, இருந்து இனிது அருந்தா நிற்க --- இருந்து மகிழ்ச்சியுடன் உண்ணா நிற்க, பின்னும் இன் அமுது அட்டு --- பின்பும் இனிய அமுதைச் சமைத்து, விருந்தினர் வரவு நோக்கி --- வரக்கடவராகிய விருந்தினர்களின் வருகையை நோக்கி, வித்து எலாம் --- விதை அனைத்தையும், வயலில் வீசி - விளைபுலத்தில் வித்தி, விண் வருந்தி நோக்கும் --- மழையை வருந்தி எதிர்பார்க்கின்ற, ஓர் ஏர் உழவர் போல் --- ஒரே ஏரினையுடைய உழவரைப்போல, வாடி நிற்பார் --- வருந்தி நிற்பார் (அவ் வேளாளர்) எ - று.

English Meaning - As I taught a kid - Rajesh
We should always give something when our guest leaves our house. We should always eagerly wait for our guests to come. We should treat our guests like God.

Questions that I ask to the kid
How should we treat our guests?
How should we display our hospitality?