Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label 02 பொருட்பால். Show all posts
Showing posts with label 02 பொருட்பால். Show all posts

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்

 

குறள் 1080
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து
[பொருட்பால், குடியியல், கயமை]

பொருள்
எற்றிற்குஎற்றித்தல் - இரங்குதல் (Totake pity, have compassion;)
எற்றிழிவு - உயர்வுதாழ்வு; பெருமைசிறுமை; மேடுபள்ளம்.

உரியர் - உரி - உரி-மை கொண்டாடுபவர்

எற்றிற்குரியர் – வேறு எத்தொழிலுக்குத்தான் ஏற்றவர் (எதற்கும் இல்லை என்பது உள்ளுரை)

கயமை - கீழ்மை.
கயவர் - கீழ்மக்கள்

ஒன்று ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.
உற்றக்கால் - நேர்ந்த பொழுது

விற்றற்கு - விற்றல் - பண்டங்களைவிலைக்குக்கொடுத்தல்

உரியர் உரி - உரி-மை கொண்டாடுபவர்

விற்றற்கு உரியர் – அதற்காக தம்மையே அடிமையாக விலை கூறி விற்கவும் செய்வர்

விரைந்து உற்றுழி
துன்பம்நேர்ந்தகாலம்; துன்புற்றஇடம்.
மிக விரைவாக; விரைவு - வேகம்; வெம்மை; போற்றுகை; வேண்டுதல்.

முழுப்பொருள்
தமக்கு லாபம் என்றாலோ அல்லது குறிப்பாக தமக்கு ஒரு நட்டம் அல்லது துன்பம் என்றாலோ தன்னையே விற்க விரைந்து செல்லக்கூடிய கயவர்கள். தன்னையே ஒரு சுயநலத்திற்காக விற்கக்கூடியவர்கள் என்றால் அவர்கள் எத்தகைய கீழான செயலையும் செய்யக்கூடியவர்கள். அத்தகைய கீழோர்கள் வேறு எத்தொழிலுக்கு உரியவர்? எத்தொழிலுக்கும் உரியவர் அல்லர் அவர்கள் என்று உணர்த்துகிறார் திருவள்ளுவர். அவர்களுடன் தொழில் முறையாகக்கூட உறவு வைத்துக்கொள்ளக்கூடாது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர் - கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பமுற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர்; எற்றிற்கு உரியர் - அதுவன்றி வேறு எத்தொழிற்கு உரியர்? (உணவின்மையாகப் பிறிதாக ஒன்று வந்து உற்ற துணையான் என்பது தோன்ற 'ஒன்று உற்றக்கால்' என்றும் . கொள்கின்றார் தம் கயமை அறிந்து வேண்டா என்றற்கு முன்னே விற்று நிற்றலின் 'விரைந்து' என்றும் கூறினார். ஒரு தொழிற்கும் உரியரல்லர் என்பது குறிப்பெச்சம். இதனான் தாம்பிறர்க்கு அடிமையாய் நிற்பர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கயவர் யாதினுக்கு வல்லரெனின், தமக்கு ஒரு துன்பமுற்றால் விரைந்து தம்மை விற்க வல்லவர். இது நிலையிலர் என்றது.

மு.வரதராசனார் உரை
கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

 

குறள் 1077
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு
[பொருட்பால், குடியியல், கயமை]

பொருள்
ஈர்ங்கை  - உண்டுலரும் ஈரக்கை கொண்டும்
ஈர்ங்கை - உண்டுகழுவியகை.

விதிர்த்தல் - நடுங்குதல்; அஞ்சுதல்; சிதறுதல்; தெறித்தல்; அசைத்தல்; உதறுதல்; பலவாகப்போகவிடுதல்; சொரிதல்.

விதிரார் - உதறிவிடமாட்டார் (எங்கு ஏதேனும் இரந்தார்க்குப் போய்விடுமோ என்று)

கயமை - கீழ்மை.
கயவர் - கீழ்மக்கள்

கொடிறுகதுப்பு; யானைமதச்சுவடு; குறடு; பூசநாள் (cheeks, jaws).

உடைக்கும் - உடைத்தல்uṭai-   11 v. tr. caus. of உடை¹-. [K. oḍe, M. uḍa.] 1. To break into pieces,as a vessel, a lump, a clod, any solid or massivesubstance, teeth; தகர்த்தல் மகுட கோடிக ளுடைத்தலின் (பாரத. காண்டவ. 27). 2. To cuff on another'shead with the knuckles; குட்டுதல் (திவா.) 3. Tosplit, as wood; to fracture, as the skull; பிளத்தல் கட்டையை யுடைத்துக்கொடு. Colloq. 4. To burst,as the bank of a river; கரை உடைத்தல் செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் (நாலடி, 222).5. To open, as a boil; புண் கட்டியுடைத்தல். 6. Tountwist, untwine; முறுக்கவிழ்த்தல். 7. To defeat,rout, put to disorderly flight; தோற்கச்செய்தல்.படைக்குட்டம் பாய்மா வுடையா னுடைக்கிற்கும் (நான்மணி. 18). 8. To break, as news; to reveal;வெளிப்படுத்துதல். அவன் அந்த இரகசியத்தை உடைத்துவிட்டான். Colloq. 9. To damage, ruin, impoverish; அழித்தல் பெண்மை யுடைக்கும் படை (குறள், 1258). 10. To trouble, distress; வருத்துதல் பொறாமை யுள்ளுடைக்கு மென்க (இரகு. யாக. 12).  

கூன் வளைவு; உடற்கூனல்; கூனன்; நத்தை; ஆந்தை; பெரும்பாத்திரம்செய்யுளடியில்அளவுக்குமேல்வரும்அசையும்சீரும்.

கையர்
கீழ்மக்கள்; கள்ளர்; வஞ்சகர்; மூடர்.

அல்லாதவர்க்கு கொள்ளாதவர் தவிர, 

முழுப்பொருள்
கீழோர்களான கஞ்சர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? தங்களின் தாடைகளை (கன்னத்து கதுப்புகளை) உறுதியான கைகளைக்கொண்டு உடைப்பவர்கள் (வன்முறையாளர்கள்) தவிர மற்ற எவருக்கும் தாங்கள் உண்டு கை கழுவியப்பின்புக்கூட கை விரல்களை உதிறமாட்டார்கள். ஏனெனில் கையில் உள்ள உணவின் மணம் நீரில் இருக்கும். அந்த மணம் கூட பிறருக்கு கிடைக்ககூடாது என்று நினைப்பவர்கள் அவர்கள். 

கஞ்சர்கள் புண்ணியதற்காகவோ புகழுக்காகவோ அல்லது வேறு ஏதாவது பயன் அடையவேண்டியோ கூட பிறருக்கு கொடுத்து உதவ மாட்டார்கள் போலும். அதனால் தான் இவர்களை அடித்து வன்முறை வழியில் சிலர் பொருளை பிடுங்கிக்கொள்வர் போலும்.

பிறருக்கு எத்தருணத்திலும் கொடுத்து உதவாத கஞ்சர்கள் கீழோர்கள் என்கிறார் திருவள்ளுவர்.

”ஈர்ங்கை மறந்தவென் இரும்பே ரொக்கல்” (புறநா 393:10)

இதே கருத்தையே, அறநெறிச்சாரப்பாடல் இவ்வாறு கூறுகிறது

இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப்
பட்ட வழங்காத பான்மையார்–நட்ட
சுரிகையாற் கானும் சுலாக்கோலாற் கானும்
சொரிவதாம் ஆபோற் சுரந்து.

அதாவது, தம்பால் உள்ள பொருள்களை, நட்பினர்களுக்கும் கொடாமலும், பிச்சையேற்று வாழ்வோருக்கும் ஈயாமலும் வாழும் கஞ்சராம் கீழோர் உடைவாளால் தம்மைத் தாக்க வருபவனுக்கும், தடியைச் சுழற்றிக்கொண்டு அடிக்க வருபவனுக்கும், கறப்பவனுக்குத் தனது பாலைச் சுரந்து கொடுத்தல்போல அப் பொருளை நிறைய வழங்குதல் உண்டாகும். தடியெடுப்பவனுக்கும் தண்டல்காரனுக்கும் அஞ்சுகிற கீழோர், மற்றபடி, எச்சல் கையால் காக்கைகூட ஓட்டமாட்டார்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு: ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத் தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார். (வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்: நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
தம்கதுப்பினை ஒடிக்கும் வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு, ஈரக்கையையுந் தெரியார் கயவர். ஈரக்கை- கழுவினகை. இஃது இரப்பார்க்குக் கொடா ரென்றது.

மு.வரதராசனார் உரை
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

 

குறள் 1075
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது
[பொருட்பால், குடியியல், கயமை]

பொருள்
அச்சமே - அச்சம் - பயம்; மகளிர்நாற்குணத்துள்ஒன்று; தகடு இலேசு அகத்திமரம்; சரிசமானம் பளிங்கு

கீழ் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம்.

கயமை - கீழ்மை.

கீழ்களது கீழ்மக்கள், s. Inferiors, low-caste people, the base, the vulgar, the igno rant, இழிந்தோர்.

ஆசாரம்சாத்திரமுறைப்படிஒழுகுகை; நன்னடை காட்சி வியாபகம் சீலை படை அரசர்வாழ்கூடம்; தூய்மை பெருமழை உறுதிப்பொருள் முறைமை

எச்சம் எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்.

அவா எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

உண்டேல் - உள்ளது என்றால்
உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு
- To say it is. 2. [vul. adverbially.] Much, exceedingly, more, நிரம்ப. உண்டெனத்தரவேண்டும்

உண்டாம்உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்; uṇṭu   உள்-. [K. uṇṭu, M. Tu.uṇḍu.] v. intr. Finite verb denoting existence,used in common to all genders and personsand both numbers;

சிறிதுஇழிந்தது, அற்பம், சிலபல, சிறுமை

முழுப்பொருள்
கீழ்மக்களான கயவர்களிடம் சிறிதளவாவது நன்னடத்தை இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பயமே ஆகும். ஏன் பயப்படுகிறார்கள்? அவர்கள் தண்டிக்கப்படக்கூடும் என்ற பயத்தினால். பயத்தினால் மட்டும் இன்றி சில ஒழுக்கங்களை அவர்கள் பின்பற்றுவது ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்ற கொள்கையாலோ அல்லது ஒழுக்க உணர்வாலோ அல்ல. அவர்கள் வேறு ஏதோ ஒரு பொருளின் மீதோ அல்லது பதவியின் மீதோ அல்லது பலனின் மீதோ கொண்ட அவாவினால் தான் சிறிதளவில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். 

கயவர்கள் கொஞ்சமேனும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது தண்டனையின் மீதுள்ள அச்சத்தினாலும் தங்களுடைய சுயநலத்தின் மீதுக்கொண்ட அவாவினாலும் தான் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கீழ்களது ஆசாரம் அச்சமே - கயவரதாய ஆசாரம் கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அஃதொழிந்தால், தம்மால் அவாவப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம். (ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப்படுவதனை 'அவா' என்றும் கூறினார். 'எச்சத்தின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானும் அன்றி இயல்பாக உண்டாகாது என்பதாம். வேண்டிய செய்தலே இயல்பு, ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கயவர் ஆசாரமுடையராதற்குக் காரணம் அச்சமே: அஃதொழிய ஒருபொருள்மேல் ஆசையுடையராயின் அது காரணமாகவும் சிறிது ஒழுக்கம் உண்டாம். இஃது இயல்பான ஒழுக்கம் இலரென்றது.

மு.வரதராசனார் உரை
கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்

 

குறள் 1070
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]

பொருள்
கரவு - மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை.

கரப்பவர்க்கு - வஞ்சனை செய்பவர்க்கு, களவு செய்பவர்க்கு, பொய் செய்பவர்க்கு

யாங்கு - எங்கு; எப்படி; எவ்வாறு; எவ்விடம்.

ஒளிக்கும் - ஒளித்தல் - மறைத்தல்; மனத்திலடக்குதல்; பதுங்குதல்.

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை

கொல்(லு)-தல் - kol-   3 v. tr. [K. M. kol.]1. To kill, slay, murder; வதைத்தல் கொன்றன்னவின்னா செயினும் (குறள், 109). 2. To destroy,ruin; அழித்தல் கொன்றான்காண் புரமூன்றும் (திருவாச. 12, 16). 3. To fell, cut down; வெட்டுதல் மரங்கொஃ றச்சர் (சிலப். 5, 29). 4. To reap, asthe heads of grain; கதிரறுத்தல். நெற்கதிரைக்கொன்று களத்திற் குவித்து (தொல். பொ 76, உரை).5. To afflict, tease; துன்பப் படுத்துதல் நின்னலங் காட்டி யெம்மைக் கொன்றாயென (சீவக. 642).6. To neutralize metallic properties by oxidation; இரசமுதலியவற்றின் விஷத்தன்மையைக் கெடுத்தல்  

இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
இரப்பவர் - இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.), யாசகம் செய்பவன்

சொல்லாட  - சொல்லாடு-தல் - col-l-āṭu-   v. intr. id.+. To speak, talk; பேசுதல் சொல்லாடச்சோர்வு படும் (குறள், 405). , col-l-āṭu-   v. intr. id.+. To be current in colloquial usage; பேச்சில்வழங்குதல். இப்படி ஒன்று சொல்லாடுகின்றது. Tj.

போம் - ஓர்அசைச்சொல்

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

முழுப்பொருள்
வறுமையில் வந்து யாசிப்பவருக்கு இல்லை என்று சொன்னால் அவர் பசியின் கொடுமையாலும் இத்தகைய வறுமையிலும் இல்லை என்று கேட்க நேரிட்டதாலும் மானத்திற்கு அஞ்சி உயிர் துறக்க நேரிடும். அவ்வுயிர் எல்லோருக்கும் ஒன்று தானே? யாசிப்பவருக்கு வாய்க்கூசாமல் இல்லை என்று சொன்ன கஞ்சர்கள் எங்கே அவர்களது உயிரை ஒளித்துக்கொள்ள போகிறார்கள்? ஒருநாள் அவ்வுயிரும் போகத்தான் போகிறது. எல்லாம் கொஞ்சக்காலம். 

கீழ்காணும் நாலடியார் பாடல் இவ்வாறு கூறுகிறது.
புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின் (நாலடி 307)

தனது வறுமையானது புறமாகிய தன் உடலை வருத்த, அதற்காகத் தன் அகத்தே ஒளி விடும் மெய் அறிவை விலக்கி, அறியாமையை நிறுத்தி, செல்வன் ஒருவனிடம் சென்று, ‘ஒன்றைத் தரவேண்டும்’ என இரப்பானாகில், அச்செல்வன் ‘இல்லை’ என்று மறுக்க, அதைக் கேட்டபோதே அவ்வறுமையாளன் உயிர் விடமாட்டானோ? மானத்தால் உயிர் துறப்பான்! 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
சொல்லாட இரப்பவர் உயிர் போம் - கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது; கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல் - இனிச் சொல்லாடுகின்ற அவர்தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப்புரையுள் புக்கொளிந்து நிற்கும்? (உயிர் போகலாவது, 'இனி யாம் என் செய்தும்'? என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். 'அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்' (நாலடி-308) என்றார் பிறரும். 'கேட்டாரைக் கொல்லவற்றாய சொல், சொல்வாரைக் கோறல் சொல்லவேண்டாவாயினும் அது காண்கின்றிலம், இஃது என்னோ' என்பதாம். 'வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர்கட்கும் அதனைச் சொல்லாட உயிர் போம், ஆனபின், மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளிந்துநிற்கும்? இரண்டானும் போமேயன்றோ'? என இரவஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
எமக்கு யாதும் இல்லை, சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்குக் குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே அவர் உயிர்போய்ப் பிணம்போல நிற்பார்: பொருள் உடையராய் வைத்து அவர் சொன்ன இல்லையென்னுஞ் சொல்லையே சொல்லி ஈயாதார்க்கு உயிர் எவ்விடத்து ஒளித்து நிற்கின்றதோ. இது பிணத்தை யொப்பரென்றது.

மு.வரதராசனார் உரை
இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.

சாலமன் பாப்பையா உரை
இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?.

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள

 

குறள் 1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]

பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை

உள்ள - uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது  , உண்டாயிருக்கிற; உண்மையான.

உள்ள - uḷḷu   உள்கு, III. v. t. think, remember, நினை; 2. intend, எண்ணு; 3. honour, esteem, மதி.

உள்ளம்  - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உருகும் - உருகுதல் - இளகுதல், மனநெகிழ்தல், மெலிதல்

கரவு - மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை.

உள்ளது -  உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.

உம் - ஓரிடைச்சொல், அசைநிலை விகுதி

இன்றிக் - இல்லாமல்

கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.
கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

முழுப்பொருள்
பிறரிடம் யாசிக்கும் ஒருவரைக் கண்டால் அவர் அவ்வறுமையில் எவ்வளவு துன்பப்படுகிறார் யாசிக்கவும் எவ்வளவு துன்பப்படுகிறார் என்று நினைத்துப்பார்ப்போருக்கு உள்ளம் உருகும் இலகுவாகும். அதுவே வறுமையில் துன்பப்பட்டு யாசிப்பவரை கண்டும் மனம் இரங்காமல் தன்னிடம் இருக்கும் செல்வத்தை மறைத்துவைத்துக்கொள்வோரிடம் உள்ள செல்வமும் அழிந்துவிடும். மேலும் அத்தைகைய கஞ்சர்களிடம் இருக்கக்கூடிய புண்ணியமும் புகழும் கூட அழிந்துவிடும். ஏனெனில் செல்வம் என்பது பிறருக்கு கொடுத்து உதவுவதற்காக மறைத்துவைத்துக்கொள்ள அல்ல. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இரவு உள்ள உள்ளம் உருகும் - உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைத்தால் எம் உள்ளங் கரைந்து உருகாநிற்கும்; கரவு உள்ளதூஉம் இன்றிக் கெடும் - இனி அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லை என்றலின் கொடுமையை நினைத்தால், அவ்வுருகுமளவுதானும் இன்றிப் பொன்றிவிடும் ('இரவினை, உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு' (நாலடி.305)என்றார் பிறரும், இரவினும் கரவு கொடிது என்பதாம்.இதற்குப் பிறரெல்லாம் 'இரக்கின்றவர் உள்ளம் உருகும்'என்று உரைத்தார்.).

மணக்குடவர் உரை
இரப்பென்று நினைக்க உள்ளம் கரையும்: இரக்கப்பட்டவர் கரக்கு மதனை நினைக்கக் கரைந்து நின்ற உள்ளமும் மாய்ந்து கெடும். இஃது இரப்பார்க்கு ஆக்கமில்லை என்றது.

மு.வரதராசனார் உரை
இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.

சாலமன் பாப்பையா உரை
பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

 

குறள் 1068
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]

பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

தோணி - ஓடம்; மிதவை; மரக்கலம்; நீர்; நீரத்தொட்டி; சேறு; மதிலுறுப்பு; அம்பு; இரேவதிநட்சத்திரம்; சிறுவழுதுணங்காய்.

கரவு - மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

பார் - பரப்பு; தேரின்பரப்பு; வண்டியின்நெடுஞ்சட்டம்; பூமி; நிலம்என்னும்பூதம்; நாடு; வன்னிலம்; பாறை; தடை; உரோகிணிநாள்; பருமை; வரம்பு; முத்துவிளையும்திட்டு; மறையோன்; புத்தன்; பாத்திபலகொண்டபகுதி; அடுக்கு; தடவை.

தாக்கப் - தாக்குதல் - எதிர்த்தல்; மோதுதல்; முட்டுதல்; பாய்தல்; தீண்டுதல்; அடித்தல்; வெட்டுதல்; பற்றியிருத்தல்; எண்கூட்டிப்பெருக்கல்; குடித்தல்; சரிக்கட்டுதல்; உறைத்தல்; கடுமையாதல்; பழிவாங்குதல்; தலையிட்டுக்கொள்ளுதல்; பலித்தல்; பெருகுதல்; பாரமாதல்; நெளித்துப்போதல்.

பக்கு - பிளவு; கவர்படுகை(double dealing, duplicity); பை; மரப்பட்டை; புண்ணின்அசறு; பற்பற்று; பொருக்கு

விடும் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

முழுப்பொருள்
வறுமையில் யாசித்தல் என்கிற காவல் இல்லாத தோணி மறைத்தில் என்னும் கடினமான வன்னிலத்தில் சென்று மோதி பிளந்துவிடும். 

யாசிப்பதை என்பது ஒரு வலிமையான செயல் அல்ல. ஆனால் வறுமையில் பாதுகாப்பு ஏது? ஏதுமில்லை. ஆனால் வறுமையை / யாசிப்பதை மறைத்தால் அது வலுவில்லாத தோணி கடினமான பாறையை மோதி பிளப்பதுப்போல பிளந்துவிடும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி - இவ்வறுமை என்னும் கடலை இதனால் கடத்தும் என்று கருதி ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமமற்ற தோணி; கரவு என்னும் பார் தாக்கப்பக்குவிடும் - அதன்கண் ஓடுங்கால் கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின் பிளந்துபோம். (முயற்சியால் கடப்பதனை இரவால் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பு இல் தோணி' என்றார். ஏமாப்பு இன்மை தோணி மேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்றது அன்மையானும் நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம். இஃது அவயவ உருவகம்.).

மணக்குடவர் உரை
ஒருவன் வறுமையாகிய கடலை நீந்திக் கடக்க அமைத்துக் கொண்ட இரத்தலாகிய அரணில்லாத தோணி, இரக்கப்பட்டார் மாட்டுக் கரத்தலாகிய கல்லோடே தாக்க இறந்துவிடும். இஃது நல்குரவு தீராமைக்குக் காரணங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை
வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

 

குறள் 1060
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
இரப்பன் - இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.)
இரப்பான் -இரப்பன் - யாசகம் செய்பவன்

வெகுளாமை - சினவாமை

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச்சூழப்போடும்நெல்; மங்கலக்குறியாகநெல்வைத்துநிரப்பியநாழி.

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

தானேயும் - தாமே ஒரு

சாலும் - சாலுதல் - நிறைதல்; பொருந்துதல்; முற்றுதல்; மாட்சிபெறுதல்.

கரி - அடுப்புக்கரி; நிலக்கரி; கரிந்தது; கருமையாதல்; மிளகு; நஞ்சு; மரவயிரம்; யானை; பெட்டைக்கழுதை; சான்றுகூறுவோன்; சான்று; விருந்தினன்; பயிர்தீய்கை; வயிரக்குற்றங்களுள்ஒன்று.

முழுப்பொருள்
ஈவர் கொடுத்து உதவவில்லை என்றால் அவர்களிடம் யாசிப்பவர்கள் கோபம் கொள்ளக்கூடாது. ஏனெனில் வறுமையில் வரும் துன்பத்திற்கு யாசிப்பவர்களே போதுமான சான்றாக உள்ளனர். வறுமையினால் யாசிப்பவர்களுக்கு வறுமையின் துன்பம் தெரியும். ஆதலால் அதனை உணர்ந்து ஈவர் கொடுக்கவில்லை என்றால் கொடுத்த உதவ முடியாத அளவுக்கு ஏதோ ஒரு துன்பம் அவர்களை வாட்டுகிறது என்று புரிந்துக்கொள்ள வேண்டும். கோபம் கொள்ளகூடாது. 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்னினிதே” (இனியவை.40)

பரிமேலழகர் உரை
இரப்பான் வெகுளாமை வேண்டும் - ஈவானுக்குப் பொருள் உதவாவழி இவன் எனக்கு ஈகின்றிலன் என்று அவனை இரப்பான் வெகுளாதொழிதல் வேண்டும்; நிரப்பு இடும்பை தானேயும் கரிசாலும் - அது வேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும். (யாவர்க்கும் தேடவேண்டுதலும் நிலையின்மையும் முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட நின்றமையின், உம்மை எச்ச உம்மை. தனக்கேயன்றி மற்றை யிரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறும் துன்பத்தைத் தனக்கேயாக வைத்துத் தானுறுந் துன்பம் தான் அறிந்து வெகுளற்க என்பதாம். இதனான் அவர்க்கு இன்றியமையாததோர் இயல்பு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவனை யிரந்தால் அவன் ஈந்தில னென்று தான் வெகுளா தொழிதல் வேண்டும். பொருளரிதென்பதற்குத் தன்னுடைய நிரப்பிடும்பை தானேயும் அமையுஞ் சான்று. இஃது இரப்பார்க்கு வேண்டியதோ ரியல்பு கூறிற்று

மு.வரதராசனார் உரை
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை
பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

 

குறள் 1059
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
ஈவு - கொடை; நன்கொடைப்பொருள்; பங்கிடுகை; பிரித்துக்கண்டபேறு; ஒழிகை.

ஈவார் - கொடை அளிப்பவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

உண்டாம்  - உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்; uṇṭu   உள்-. [K. uṇṭu, M. Tu.uṇḍu.] v. intr. Finite verb denoting existence,used in common to all genders and personsand both numbers;

தோற்றம் - காட்சி; விளக்கம்; சாதி; படைப்பு; சாயை; புகழ்; பார்வை; உயர்ச்சி; உற்பத்தி; பிறப்பு; உருவம்; தன்மை; வலிமை; சொல்மாலை; உறுப்பு; உத்தேசம்; நாடகப்பிரதேசம்; எண்ணம்; மாயை; இருவகைத்திணை; காண்க:உயிர்த்தோற்றம்

இரந்துஇரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

கோள் - கோள் கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

மேவார் - மேவுதல் - அடைதல்; விரும்புதல்; நேசித்தல்; உண்ணுதல்; ஓதுதல்; நிரவிச்சமனாக்குதல்; மேலிட்டுக்கொள்ளுதல்; வேய்தல்; அமர்தல்; பொருந்துதல்.

இலா - இல்லை 

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

இலாஅக் கடை – இல்லாது போயின்

முழுப்பொருள்
ஈவாரிடம் சென்று யாசிப்பவர்கள் இல்லாமல் போனால் கொடுத்து உதவும் ஈவார்க்கு புகழ் இருக்குமா? யாசிப்பவர்கள் இல்லையென்றால் பின்பு ஈவார்க்கு புகழும் புண்ணியமும் அடைய வேறு வழி ஏது? 

இரந்து கொள்வார் சென்று இரக்கவில்லையாயின் ஈவார் என்பார்க்கு புகழுக்கு யாதொரு வழியுமில்லை.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பரப்புநீர் வையத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்
இரப்பாரில் வள்ளல்களும் இல்லை - இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பனும்
தம்மைத் தலைப்படுத்த லால்” (அறநெறி.219)

பரிமேலழகர் உரை
இரந்துகோள் மேவார் இலாஅக் கடை - அவர்பாற்சென்று ஒன்றனை இரந்துகோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் - கொடுப்பார் மாட்டு என்ன புகழுண்டாம்? யாதுமில்லை. (தோற்றம் - ஆகுபெயர். மேவுவார் என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின் அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இரந்து கோடலைப் பொருந்துவார் இல்லாதவிடத்து ஈயக கருதியிருப்பார்மாட்டுப் புகழ் யாதான் உண்டாம். இஃது இரப்பாரில்லாராயின் புகழுடையார் இலராவார். ஆதலால் இரவு பழிக்கப்படா தென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

 

குறள் 1058
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
இரப்பன் - இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.)
இரப்பன் - யாசகம் செய்வேன்
இரப்பாரை - யாசகம் செய்யும் நபர்கள்

இல்லாயின் - இல்லையானால்

ஈர்ங் - ஈரம் - நீர்ப்பற்று; பசுமை குளிர்ச்சி அன்பு அருள் அழகு அறிவு குங்குமப்பூ பகுதி கரும்பு வெள்ளரி

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்சொல்.

ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.

மரப்பாவை - மரப்பொம்மை, சிறுவர் விளையாட்டுக்குரிய மரப்பொம்மை.

சென்று - செல்லும் , செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

அற்று - அத்தன்மையானது

வந்தற்று - வருவதுபோலாம்

முழுப்பொருள்
யாசிப்பவர்கள் இல்லாமல் போனால் என்னவாகும்? கொடுத்து உதவ நெஞ்சில் ஈரம் உடைய அதாவது அன்புடைய மக்கள் பெருமை வாய்ந்த பெரிய உலகில் இருந்தும் யாசிப்பவர்கள் இல்லாமல் போயின் (ஈவரும் இல்லாமல் போவர் பின்பு அன்பும் குறைந்துவிடும்) இவ்வுலகம் மரப்பாவைகள் நடமாடும் இடத்திற்கு சென்று வருவதுப்போல் ஆகிவிடும். ஈதல் செய்வதால் ஏற்படும் புகழும், புண்ணியங்களும் இல்லாமையின் வானோர் உலகும் ஒருவருக்கு கிடைக்காது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையிற் கையற வுடைத்து” (புறநா 38:12-5)

பரிமேலழகர் உரை
இரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்; ஈர்ங்கண்மா ஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற்போலும். (ஐகாரம், அசைநிலை. ஞாலம் என்னும் ஆகுபெயர்ப் பொருட்கு உவமையோடு ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும் புண்ணியமும் எய்தாமையின், உயிருடையரல்லார் என்பதாம், 'ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து, வாழ்வாரே வன் கணவர்', என்றார் பிறரும்: இத்தொடையின்பம் நோக்காது 'இரப்பவர் இல்லாயின்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் இரக்குமவர்களை உடைத்தல்லவாயின், உள்ள மக்களது இயக்கம் மரப்பாவை சென்றுவந்து இயங்கினாற்போலும். இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.

மு.வரதராசனார் உரை
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.

துப்புர வில்லார் துவரத் துறவாமை


குறள் 1050
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
துப்புரவு - தூய்மை; நுகர்ச்சிப்பொருள்; ஐம்பொறிநுகர்ச்சி; அனுபவம்; திறமை; முறைமை; மேன்மை; வேண்டற்பாடு; அழகு

இல்லார் - இல்லாதவர்

துவரத் - துவர - மிக; முழுதும்.

துறவு - விடுதல்; இரகசியம்; வாய்ப்பானநிலை; வெளியிடம்; சன்னியாசம்; துறவியருக்குவிதித்துள்ளஅறம்.
துறத்தல்  - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.
துறவாமை -  எல்லாவாற்றையும் துறக்காமல் இருத்தல் (மானத்தை மட்டும் துறந்து)

உப்பிற்கும் - உப்பு - உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல் இனிமை பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு

காடிக்கும் - காடி - புளித்தகஞ்சி; புளித்தகள்; சோறு; கஞ்சி; புளித்தபழரசம்; ஊறுகாய்; ஒருவகைவண்டி; ஒருமருந்து; கழுத்து; நெய்; அகழி; கோட்டையடுப்பு; மாட்டுக்கொட்டில்; மரவேலையின்பொளிவாய்.

கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்.

முழுப்பொருள்
அன்றாடம் ஒருவர் அடிப்படையாக நுகரும் பொருட்களான உணவு உடை ஆகியவைக்கூட இல்லாமல் வறியவராக இருப்பவர்கள் இல்லறத்தை முழுவதுமாக துறக்காமல் துறவறத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு காரணம் அவருக்கு உண்பதற்கு சோறு கஞ்சியும் உப்பும் தேவை என்ற கூற்றை / அறைகூவலை / பஞ்சப்பாட்டை முன்வைப்பதற்காக. அவர்(/அவ்வறியவர்) வாழ்வதற்கு உந்துதலுடன் இருக்கிறார் அதற்கு சற்று உணவு வேண்டும் என்பதற்கான அறைகூவல் அது. 

மேலும் வீடுபேறு நோக்கிய துறவறம் என்பது இல்லறத்தில் இருந்து தப்பிப்பதற்கானது அல்ல. இல்லறத்தில் இருந்து தப்பிப்பது என்றால் அது உயிரை மாய்த்துக்கொள்வது. அதனை செய்யாமல் உயிர் வாழ விரும்புகிறவர் அதற்கு அறைக்கூவலாகவே உணவு வேண்டுகிறார். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம். (மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
நுகரும்பொருள் இல்லாதார் பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல், உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டியாம். துறப்பாராயின் நன்றென்வாறாயிற்று. நல்கூர்ந்தார்க்குத் துன்பமுறுதலன்றி இன்ப நுகரும் நெறியுளவோ என்றார்க்கு, இது துறப்பாராயின், இன்ப முறலா மென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்


குறள் 1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
இன்றும் - இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.

வருவது - வருதல் 

கொல்லோ - கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

நெருநலும் - நெருநல் - நேற்று

கொன்றது - கொல் -  கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

போலும் - pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.)

நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச் சூழப்போடும் நெல்; மங்கலக்குறியாக நெல்வைத்து நிரப்பிய நாழி.

முழுப்பொருள்
என்னை(என்னையும் என் குடும்பத்தையும்) கொன்றதுப் போன்ற துன்பத்தை நேற்று (அதாவது கடந்த சில நாட்களாக சில மாதங்களாக சில வருடங்களாக) தந்த இந்த வறுமை இன்றும் வந்து என்னை கொல்லுமா? துன்புறுத்துமா? வறுமையில் உழலுவோர் அதனை விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. வறுமை எத்தனை கொடியது என்றும் அதனை அஞ்சியே தினம் தினம் இருக்கின்றனர் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர்.  

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்? (அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.).

மணக்குடவர் உரை
இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை. இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

சாலமன் பாப்பையா உரை
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?.

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்


குறள் 1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும் 
[பொருட்பால், குடியியல், நல்குரவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நற் - நல்ல- நன்மையான; மிக்க; கடுமையான

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம்.

உணர்ந்து - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

சொல்லினும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

நல்கூர்-தல் - nalkūr-   4 v. intr. prob.நல்கு- + ஊர் 1. To be poor, indigent, destitute;வறுமைப்படுதல். நல்கூர்ந்த மக்கட்கு (நாலடி, 242).2. To be wearied; களைப்படைதல். நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் (மணி. 13, 72). 3. To suffer;துன்புறுதல். மாலைநீ யாயின் மணந்தா ரவராயின்ஞாலமோ நல்கூர்ந்தது வாழிமாலை (சிலப். 7, 50).  

நல்கூர்ந்தார் - வறியோன்

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

பொருட்பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
நூல்கள் பல கற்று நன்கு உணர்ந்து அல்லது அனுபவத்தின் மூலமும்  பலருடன் கேட்டும் தர்க்கம் செய்தும் நன்கு உணர்ந்து மற்றவர்களுக்கு அதனை எடுத்து கூறினாலும் அதனை கூறுபவர் செல்வம் இல்லாத வறியவராக இருப்பின் அதனை கேட்பவர் அதனை தளர்ச்சியுடனே கேட்கக்கூடும். அதாவது வறியவர் கூறியதன் பொருளை முழுவதுமாக எடுத்துக்கொள்ளாமல் அல்லது கேட்ட உடன் சிறிது காலத்தில் மறந்துவிடுவார் அல்லது பொருட்படுத்தாமல் மதிக்காமல் அலட்சியம் செய்துவிடுவார். 

மேலும் தாம் சொல்வதை கேட்க ஆட்கள் இல்லை என்றாலும் அல்லது சொல்வதை மனதார கேட்டுணராதவர்கள் இல்லை என்றால் அதுவும் மன அழுத்தம் தரும். ஊக்கத்தை குறைக்க கூடும். 

ஆதலால் நல்லவை கூறினாலும் சொல்பவரிடம் செல்வம் இருந்தால் அதனை காது கொடுத்தும் மனம் கொடுத்தும் கேட்போர் விகிதம் அதிகமாக இருக்கும். அதுமட்டும் இன்றி, செல்வம் என்பது ஒரு செயல் செய்தலோ அல்லது வேலை செய்தாலோ அல்லது கடமையை ஆற்றினால் தான் கிடைக்கும். சும்மா வந்துவிடாது செல்வம். ஆதலால் சொல்பவர் செயலாற்றி செல்வம் ஈட்டுபவராக இருத்தல் வேண்டும். வறியவராக இருக்க கூடாது.

“ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்ற சொலவடையைக் கூறுவதே இக்குறள். 

இதையே ஒரு நாலடியார்(115) பாடல் இவ்வாறு கூறுகிறது. “உயர் இனத்து ஆவின் கன்றாயின் இளங்கன்றும் மிக்க விலைபெறும், ஆதலின் படியாதவரேயாயினும் செல்வரது வாய்ச்சொல் மதிக்கப்படும். வறிஞரது வாய்மொழி, அவர் கற்றவரே யாயினும், சிறிது ஈரமுள்ள காலத்தில் உழுகின்ற உழவுபோல மேலளவாய்ச் சென்று உள்ளே மதிக்கப்படாதொழியும்”. அப்பாடலானது:

நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். (நாலடி 115)

ஒரு இன்னா நாற்பது (29) பாடல்வரியும் இக்குறள் கருத்தை அடியொட்டியதே. “இல்லாதார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா”

மேலும் கீழ்க்காணும் குறளை நினைவில் கொள்க, ஒருவர் நற்பொருளை நன்கு உணர் சொல்கிறார் என்றார் அவர் முதலில் அதனை பின்பற்றி இருக்கவேண்டும். அப்படி பின்பற்றினால் அவர் வாழ்வில் நல்ல இடத்தில் இருப்பார். வறுமையில் வாடமாட்டார். ஆதலால் வறுமையில் இருப்போரை தோல்வியடைந்தவராக, பேதையாக, வாய்ச்சொல் வீரராக கருதி அவர் கூறுபவற்றை காதுக்கொடுத்து கேட்கமாட்டார்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும். (பொருளின்மையைத் தலைப்படுதலாவது 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும் என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும். ஏற்றுக்கொள்வாரில்லை என்றவாறாயிற்று. இது கல்வி கெடும்: சுற்றத்தாரும் கைவிடுவ ரென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

English Meaning - As I taught a kid - Rajesh
A person can say noblest things, most valuable advise for business/work/life etc, highest wisdom etc in the most efficient manner with clarity. It might look agreeable to the listener too. However, if the person is poverty or doesn't have sufficient money then his words would be most taken for granted (because people would think that the person is only preaching and he didn't practise his words). Two important things 1) Poverty is not respected 2) Money is essential for life. One should not neglect money.

Questions that I ask to the kid
When does wise thoughts lose attention or value? Why?

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து


குறள் 1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

செல்லான் - தன்னுடைய நிலத்தில் அன்றாடம் பாடுபடச் செல்லாது இருப்பான்

நிலக்கிழார் - நிலத்துக்குஉரியவர்.
கிழவன் - உரியவன்; தலைவன்; மருதநிலத்தலைவன்; அகவைமுதிர்ந்தவன்; எண்ணெய்க்கசடு; பரணி.
கிழவன் இருப்பின் – நிலக்கிழானாகிய விவசாயி

இருப்பின் - இருந்தால் - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

புலந்து - புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.

இல்லாளின் - இல்லாள் -  மனைவி; மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; வறுமையுடையவள்.

ஊடுதல் -  புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்.

ஊடிவிடும் - மனைவி கோபங்கொண்டு வெறுத்து விடுவாளோ அது போல.

முழுப்பொருள்
நிலத்திற்கு உரியவன் (நிலக்கிழான்), விவசாயி அன்றடம் விவசாயம் செய்யாமல், நிலத்தில் உழவு செய்து பயிர்விளைவிக்க செல்லாமல் சோம்பித் திரிந்தால் என்ன ஆகும் தெரியுமா? கோபித்துக்கொண்டு ஊடி கணவனைவிட்டு விலகி இருக்கும் மனைவியைப் போல நிலமும் தனது வெறுப்பை காண்பிக்கும். எப்படித்தெரியுமா? நிலம் வெறுப்புற்று பலன் தராமல் தரிசாகிவிடும். பாடுபடாத நிலம் மும்மாரி பொழிந்தாலும், முப்போகம் விளையக்கூடியதாயிருந்தாலும், மெல்ல அருகி (நொந்து) இறுதியில் பாழாகி தரிசு நிலம் போன்றே ஆகிவிடும். 

ஆதலால் உழவிற்கு நிலமும் மழையும் இருந்தால் மட்டும் போதாது. விவசாயியும் விவசாயியின் சோம்பித்திரியாமல் உழவு செய்கிற உழைப்பும் தேவை. 

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
கிழவன் செல்லான் இருப்பின் - அந்நிலத்திற்குரியவன் அதன்கண் நாள்தோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின்; நிலம் இல்லாளின் புலந்து ஊடிவிடும் - அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப்பின் அவனோடு ஊடிவிடும். (செல்லுதல் - ஆகுபெயர். பிறரை ஏவியிராது தானே சேறல் வேண்டும் என்பது போதர, 'கிழவன்' என்றார். தன்கண் சென்று வேண்டுவன செய்யாது வேறிடத்திருந்தவழி மனையாள் ஊடுமாறுபோல என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி. இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மனையகத்திருப்பானாயின், அது தான் செல்லாமையாற் புலந்த இல்லாளைப் போலப் புலந்துவிடும். இது நாடோறுஞ்சென்று பார்க்க வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை
நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்


குறள் 1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்

ஏர்-தல் - ēr-   4 v. intr. To rise; எழுதல் பனிக்கடல் பருகி வலனேர்பு (முல்லைப். 4).--tr. To belike, similar; ஒத்தல் முத்தேர்முறுவலார் (இனி. நாற். 2).  

ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு

ஏரினும் - ஏர் கொண்டு உழுதலிலும் 

நன்றால் - நன்றென்பது

எரு - உரம்; சாணி; வறட்டி; பசளை; மலம்

இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை.

கட்டுதல் - பிணித்தல்; அமைத்தல்; செலுத்துதல்; கற்பித்துச்சொல்லுதல்; சேர்த்தல்; தடுத்தல்:இயற்றுதல்:போலுதல்; இறுகுதல்; வெல்லுதல்; நிமித்தமாதல்; அடக்குதல்:எழுப்புதல்; தழுவுதல்; திருமணம்பண்ணுதல்; பிடுங்குதல்; கதைகட்டல்; வீடுமுதலியனகட்டல்; உரைகட்டுதல்; களவுசெய்தல்; உகுத்தல்; சூடுதல்; வசப்படுத்தல்; முடித்தல்.

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

கட்டபின் - களை நீக்கிய பிறகு

நீரினும் -  நீர்ப் பாய்ச்சுதலிலும் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

அதன் - அதனுடைய 

காப்பு - பாதுகாவல்; காவலாயுள்ளது; காப்புநாண்; தெய்வவணக்கம்; காப்புப்பருவம்; திருநீறு; கைகால்களில்அணியும்வளை; வேலி; மதில்; கதவு; அரசமுத்திரை; ஏட்டுக்கயிறு; காவலானஇடம்; ஊர்; திக்குப்பாலகர்; சிறை; மிதியடி; அரசன்நுகர்பொருள்.

முழுப்பொருள்
உழவு எப்படி செய்யவேண்டும் என்று இக்குறளில் கூறுகிறார் திருவள்ளுவர். 
1. உழவு செய்ய முதலில் மாடுகளைக்கொண்டும் கலப்பையைக்கொண்டும் ஏர் உழுதல் வேண்டும். ஏர் உழுதால் காற்றில் வயலில் உள்ள மண்கடிகள், கற்கள் ஆகியவை எடுக்கப்பட்டு, விதைகளின் வேர் எளிதாக உள்ளே செல்ல ஏதுவாக இருக்கும். அதனால் பயிரும் நன்றாக வளரும். ஏர் உழும் பொழுது காற்றில் இருந்து நைட்ரஜன் ஆக்சைடை பெற்று மண்ணும் வளம் பெறும்.

2. ஏர் நன்றாக உழுதால் மட்டும் போதுமா? போதாது. நன்றாக எரு அதாவது உரம் இடுதல் வேண்டும். பயிர்விளைய தேவையான சத்துக்கள் மண்ணுக்கு கிடைக்கும். 

3. எரு இட்டால் போதுமா? போதாது. களைகளை நீக்க வேண்டும். தேவையற்ற களைகளை நீக்கினால் தான் செடிகளின் வேர்கள் நன்றாக உள்ளே செல்லும். 

4. களைகளை நீக்கினால் போதுமா? போதாது. நன்றாக வரப்புயர நீர் பாய்ச்ச வேண்டும். 

5. நீர் பாய்ச்சினால் போதுமா? போதாது. பயிர் விளைத்தபின், அப்பயிரைக் காப்பதற்காக காவல் செய்வதே மிக்க நன்றாம். ஏனெனில் மற்ற விலங்குகள் வந்து பயிரை மேய்ய கூடும். சில சமயங்களில் பூச்சிகள் வந்து தாக்கும். அவற்றில் இருந்து பாதுக்காக்கவேண்டும். களைகள் வளரும். அவற்றை களைந்து எறிந்து பயிர்களை காக்கவேண்டும். இல்லையேல் பயிர்கள் விளைய இடம்கொடுக்காமல் விளைச்சலை குறைத்துவிடும்.

ஆக மேற்சொன்ன ஐந்தும் பயிர்கள் விளைவிக்க இன்றியமையாதது என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

மேலும்: அஷோக் உரை 

ஒப்புமை
”பைங்கூழ் விளைவின்கண் போற்றான் உழவும்” (திரி.59)

பரிமேலழகர் உரை
ஏரினும் எரு இடுதல் நன்று - அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்ட பின் அதன் காப்பு நீரினும் நன்று - இவ்விரண்டும் செய்து களை கட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினும் நன்று. (ஏர் - ஆகுபெயர், காத்தல், பட்டி முதலியவற்றான் அழிவெய்தாமல் காத்தல். உழுதல், எருப்பெய்தல், களை கட்டல், நீர்கால் யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்..).

மணக்குடவர் உரை
உழுகின்றதினும் நன்றாம் எருவிடுதல்; களை கட்டபின்பு நீர் விடுதலினும் நன்றாம் அதனை அழியாமற் காத்தல். இது பல்கால் உழவு வேண்டுமென்பதூஉம் எருவிடவேண்டும்மென்பதூஉம், களைபறிக்க வேண்டுமென்பதூஉம் பசுப்புகுதாமற் காக்க வேண்டுமென்பதூஉம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை
உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது


குறள் 1035
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் 
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இரவார் - தாம் யாரிடமும் யாசிக்க வேண்டாதவர்

இரப்பார்க்கு - தம்மிடம் கையேந்துவார்க்கு

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

ஈவர்- ஈவு - கொடை; நன்கொடைப்பொருள்; பங்கிடுகை; பிரித்துக்கண்டபேறு; ஒழிகை.

கரவு- மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை

கரவாது - வஞ்சனை செய்யாது; களவு செய்யாது; பொய் சொல்லாது

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு.

மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

மாலையவர் - இயல்பினர், குணத்தினர்.

முழுப்பொருள்

உழவர்களின் சிறப்புகள் என்ன?
1. பிறரிடம் யாசிக்க மாட்டார்கள். தங்கள் உழைப்பில் வரும் வருமானத்திற்குள் வாழ்பவர்கள். வருமானத்திற்குள் எளிமையாக வாழ கற்றுக்கொண்டவர்கள்.

2. தன்னிடம் யாசிப்பவர்களுக்கு தன்னால் இயன்றவற்றை கொடுத்து உதவும் நற்பண்பையும் மனதையும் கொண்டவர்கள் உழவர்கள். அது அவர்கள் விளைவிக்கும் உணவுப்பொருட்களில் இருந்துப்பெற்ற தன்மை என்றுக்கூட கொள்ளலாம். [ஏனெனில் சமீபத்தில் விவசாயத்தை பாரம்பரியமாக செய்து வந்த ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் கூறினார், கைகாசைப்போட்டு உதவி செய்வதற்கும் விளைந்ததை எடுத்துக்கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விவசாயி அவன் வயலில் விளைந்ததை மனதார எடுத்து தருவான். அதனால் அவன் செல்வம் குறைந்ததாகவோ அல்லது செலவு செய்ததாகவோ எண்ண மாட்டான். அவனுக்கு அது பாரமாகவும் இருக்காது].

தன்னிடம் உதவி என்று யாசிப்பவர்க்கு மட்டுமல்ல. தன்னிடம் உணவுப்பொருட்களுக்கென இவ்வுலகமே உழவர்களிடம் தான் யாசிக்கிறது. இவ்வுலக மக்களுக்கே உணவு கொடுத்து மகிழ்பவர்கள் உழவர்கள்.

3. பிறரிடம் வஞ்சனை செய்யமட்டான். பிறர் பொருட்களை களவு செய்யமட்டான்.

4. தன் கையினால் உழவு செய்து கதிர் விளைவித்து உண்ணுவான்

மேற்சொன்னவற்றை தங்களுடைய இயல்பாக கொண்டவர்கள் உழவர்கள்.

கைவினை கரவேல் என்று ஆத்திச் சூடியும், இரப்போர்க்குக் கரப்பிலார் என்று சம்பந்தர்.புகலி(8) தேவாரமும் அத்தகைய கொடையுள்ளத்தினரையே கூறுகின்றன.

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
கைசெய்து ஊண் மாலையவர் இரவார் - தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர். ('செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.).

மணக்குடவர் உரை
பிறரை இரவார்; தம்மை இரப்பார்க்குக் காத்தலின்றி யாதொன்றாயினும் ஈவர்; கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்.

மு.வரதராசனார் உரை
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

சாலமன் பாப்பையா உரை
தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்


குறள் 1030
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]

பொருள்
இடுக்கண் -  மலர்ந்தநோக்கமின்றிமையல்நோக்கம்படவரும்இரக்கம்; துன்பம் வறுமை

கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

கொன்றிட - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

வீழும் - வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

அடுத்து -  அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல்.

ஊன்றும் - ஊன்றுதல் - நிலைபெறுதல்; சென்றுதங்குதல்; நடுதல்; நிலைநிறுத்துதல்; பற்றுதல்; தீண்டுதல்; தாங்குதல்; முடிவுசெய்தல்; அமுக்குதல்; தள்ளுதல்; உறுத்துதல்; குத்துதல்;

நல் - நல்ல, மிகுந்த

ஆள் - ஆண்மகன்; திறமையுடையோன்; வீரன் காலாள் கணவன் தொண்டன் ஆட்செய்கை; வளர்ந்தஆள்; ஆள்மட்டம் அரசு தொட்டால்வாடி பெண்பாற்பெயர்விகுதி; பெண்பால்வினைமுற்றுவிகுதி.

இலாத - இல்லாத

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
.

முழுப்பொருள்
துன்பங்கள் வரும் பொழுது அவற்றை முட்டுக்கொடுத்துத் தாங்கும் நல்ல குடும்பத்தலைவர்கள் நல்ல பிள்ளைகள் இல்லாத ஒரு குடும்பம் வீழும். அது எப்படிப் பட்டது தெரியுமா ?? எவ்வளவு பெரிய அல்லது சிறிய மரமானாலும் அதன் அடியில் கோடாரிக்கொண்டு வெட்டினால் சாய்ந்து வீழ்வதுப்போலாகும்.

ஆதலால் வாழ்வாதாரங்களானது முறிபடும்போது, ஊன்றுகோலெனத் தாங்கிப்பிடிக்க ஒருவர் வேண்டும். குடியைத்தாங்கி வழி நடத்த உயர்த்திப்பிடிக்க மனஉறுதியும் திறமையும் செயலின்கண் கவனமும் ஒருவருக்கு வேண்டும். 

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”இவனே
முழுமுதல் தொலைந்து கோளி யாலத்துக்
கொழிநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாயந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ” (புறநா 58:5)

“சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைக்கண் தோன்றில்தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்” (நாலடி 197)


பரிமேலழகர் உரை
இடுக்கண்கால் கொன்றிட வீழும் - துன்பமாகிய நவியம் புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி வீழா நிற்கும்; அடுத்து ஊன்றும் நல்லாள் இலாத குடி - அக்காலத்துப் பற்றாவன கொடுத்துத் தாங்க வல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியாகிய மரம். (முதல் - அதன் வழிக்கு உரியர். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக் கெடுதலும் உடைமையின், மரமாக்கினார், 'தூங்குசிறை வாவலுறை தொல்மரங்கள் அன்ன ஓங்குகுலம் நைய அதனுட் பிறந்த வீரர் தாங்கல் கடன்' (சீவக.காந்தருவ-6) என்றார் பிறரும். இது குறிப்பு உருவகம். இதனான் அவர் இல்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இடும்பையாகிய நவியம் அடுத்துத் தனது வேரை வெட்டுதலானே வீழும்: பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல்போலத் தாங்கவல்ல நல்ல ஆண்மக்கள் இல்லாத குடியாகிய மரம்.  (நவியம்-கோடரி). இது குடியோம்புவாரில்லாக்கால் அக்குடி கெடுமென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை
துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

 

குறள் 1028
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

செய்வார்க்கு - செய்பவர்க்கு 
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

பருவம் - காலம்; காலப்பிரிவு; இளமை; பக்குவம்; வயது; மறைநிலாஅல்லதுநிறைநிலா; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்என்னும்ஆறுபருவங்கள்; மாதம்; மழைக்காலம்; தக்ககாலம்; பயிரிடுதற்குறியகாலம்; ஆண்டு; பயனளிக்குங்காலம்; கணு; நூற்கூறுபாடு; நிலைமை; உயர்ச்சி; அளவு; சூரியன்ஒவ்வோர்இராசியிலும்புகும்காலம்; ஆடவர்பெண்டிர்க்குரியவெவ்வேறுஆயுட்காலநிலைகள்; முகம்மதியர்திருவிழாவகை.

மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.

செய்து செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

மானம் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம்; மண்டபம்; கத்தூரி; சவ்வாது; வானம்; ஒருதொழிற்பெயர்விகுதி; ஓர்இடைச்சொல்.

கருத - கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்.

கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.
கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை
.
முழுப்பொருள்
குடும்ப பாரத்தை தாங்கி குடும்பத்தை உயர்த்தும் குடும்பதலைவர்களுக்கு காலம் வயது என ஏதுமில்லை. அதாவது இக்குடும்பதலைவன் இளைஞன் என்பதனால் பொறுப்பு துறப்போ தாமதமோ இல்லை. அல்லது இவன் சற்று பெரிதானவுடன் பக்குவமும் அனுபவமும் வந்த உடன் குடும்ப பொறுப்பை எடுத்துக்கொள்ளலாம் என்றில்லை. அவன் முன் அப்பொறுப்பு இருந்தால் அவன் எடுத்து அதனை செய்யவேண்டும். 

ஆதலால் தம் குடியை மேன்மையுறச் செய்யும் செயல்களில் முனைப்புடன் ஈடுபடுவோர்க்கு, இதுதான் உற்ற காலமென்று ஒன்றுமில்லை. நாளும் கோளும் நலிந்தோர்க்கில்லை என்ற சொலவடை நலிவுற்றவர்களை உயர்த்துபவர்களுக்கும் பொருந்தும். அவ்வாறு குடும்ப பொறுப்புகளை செய்யாமல்  வயதையும் அனுபவத்தையும் காரணம்காட்டி சோம்பித்திரிந்தாலோ அல்லது தனது வீண்பெருமைகளையும் புகழையும் தகுதியையும் காரணம் காட்டி தட்டிக்கழித்தாலோ அவனுக்கும் அக்குடும்பத்திற்கும் கேடு உண்டாகும். வழிதவறிப்போவான் குடும்பமும் வழிதவறிப்போகும். 

ஆதலால் தன்முன் ஒரு குடும்ப பொறுப்போ செயலோ இருந்தால் வயதுக்கு மீறிய செயல் அல்லது அனுபவம் வந்தப்பின்பு செய்கிறேன் அல்லது என் தகுதிக்கு ஏற்ற செயல் என்றெல்லாம் சாக்கு சொல்லாமல் அச்செயலை செய்து முடித்தால் குடும்பம் முன்னேறும் இல்லையேல் குடும்பம் வீணாய் போகும். அது அவனுக்கும் தீங்கு விளைவிக்கும். புகழும் கெடும்.

மேலும், ஒரு குடியை செய்வார் வீட்டில் மூத்தவராக த்தான் இருக்கவேண்டும் என்றில்லை. இளையவர்களும் பொறுப்பு எடுத்து செய்யலாம். வயதோ வரிசையோ ஒரு பொருட்டல்ல. அதேப்போல் ஒரு அலுவகத்தில் மேலாளரோ அல்லது குழுத் தலைவர் தான் ஒரு செயலை செய்யவேண்டும் என்றில்லை. குழுவில் உள்ள யார் வேண்டுமானாலும் பொறுப்பு எடுத்துச் செய்யலாம்.  இது எனது வேலை இல்லை என்று தலைமைப்பண்பு உள்ளவர் கூறமாட்டார். பதவி இருந்தால் தான் வேலை செய்வேன் என்றில்லை. ஒரு தலைவன் என்பவன் பொறுப்புகளை துறக்க மாட்டான். 

Ownership: Leaders are owners. They think long term and don’t sacrifice long-term value for short-term results. They act on behalf of the entire company, beyond just their own team. They never say “that’s not my job." என்பது Amazon நிர்வாகத்தில்  கடைநிலை ஊழியர் முதற்கொண்டு எல்லா ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு தலைமைப் பண்பு.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
மடி செய்து மானம் கருதக் கெடும் - தம் குடியினை உயரச்செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்துகொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை - ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை. (காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர்ச் செய்தும்' என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் - இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ? என்று உட்கோடல். மேல் 'இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது' (குறள்-481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ?' என்று கருதினும் 'அது கருதற்க' என்று மறுத்தவாறு.).

மணக்குடவர் உரை
குடியோம்புவார்க்குப் பருவம் இல்லை; தம் குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்து அதனை உயர்த்துவதனாலுள தாகும் குற்றத்தை நினைக்கக் குடிகெடும் ஆதலான். இது குடிசெய்வார் இன்பநுகர்ச்சியை விரும்பாரென்றது.

மு.வரதராசனார் உரை
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

சாலமன் பாப்பையா உரை
தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who wants to lift his family, community, nation does not have a best time. i.e., he doesn't have something like a best time or opportune time to start his work or do his work. He doesn't have time to mature, age, learn and do his work. He has to take the responsibility working right from day 1 . A person with ownership or responsibility to raise a family, community, nation cannot be lethargic or live his laurels. If one is lethargic or living in laurels then everything will deteriorate and destroy. When a responsible goes the wrong way even his family would go in the wrong way and get lost.

Hence, when one's family or community responsibility is bestowed upon him, one should not excuse that it is beyond his age or his experience. 

Questions that I ask to the kid
Do family head, community leader, national leader have best time to start or to do work? Why?

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்

 

குறள் 1027
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]

பொருள்
அமர் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்

அகத்து -  அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

வன்கண்ணர் -  வன்கண் - கொடும்பார்வை, பொறாமை, கொடுமை, வீரத்தன்மை

போல - ஓர்உவமவுருபு

தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.

அகத்து -  அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

தமரகம் - மூச்சுக்குழல்; உடுக்கை.

தமரகத்தும் -  – தமது குடியையும்

ஆற்றுவார் - தவம் ஆற்றுபவர்கள் / நோன்பு இருப்பவர்கள்
ஆற்றுவார் - எடுத்த செயலை தன் அறிவார், மிகுந்த முயற்சியால் வெற்றிகரமாக முடிப்பவர்
ஆற்றல் -  சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
அற்றேல் - அப்படியானால்.
அற்றே - அப்படியானால்

பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.

முழுப்பொருள்
தன்னுடைய நாட்டை காக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு போர்க்களத்தில் சண்டையிடும் வீரத்தன்மை உயிருக்கு அஞ்சாத வீரரிடம் மட்டுமே உண்டு. அதுப்போல தன்னுடைய குடும்பத்தை தன்னுடைய உறவினர்களை உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்கான செயல்களை ஆற்றுபவரிடமே குடும்ப பாரம் வந்து சேரும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

குடும்பத்தை உயர்த்துவது என்பது ஒரு தலைமைப்பண்பே. அது தமிழ் (மற்றும் இந்திய) கலாச்சாரங்களில் வேரூண்றி உள்ளது. ஏன் குருவி தலைமீது பனங்காயை சுமத்துகிறார்கள் என்று சலித்துக்கொள்ள வேண்டாம். எண்ணமும் செயலும் வலிமையும் இருப்பதால் தான் உறவினர்கள் குடும்பத்தலைவரிடம் வருகிறார்கள். 

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர் மேலதானாற் போல; தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம். (பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்கல் வன்கண்ணர்மாட்டே உளதானாற்போல, ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்பல் வல்லவர்கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல்.

மு.வரதராசனார் உரை
போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.

சாலமன் பாப்பையா உரை
போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை


குறள் 1020
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று
[பொருட்பால், குடியியல், நாணுடைமை] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு

இல்லார் - இல்லாதவர்

இயக்கம் - இயங்குகை; குறிப்பு வழி இசைப்பாட்டுவகை; சுருதி பெருமை மலசலங்கள்; வடதிசை கிளர்ச்சி பரப்புகை.

மரப்பாவை - மரப்பொம்மை, சிறுவர் விளையாட்டுக்குரிய மரப்பொம்மை.

நாணால் - நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

மருட்டி - மயக்கந்தருவது; கள்; மயங்கும்படிமினுக்குபவள்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது

மருட்டியற்று - மயக்குவது போலாம்

முழுப்பொருள்
அகத்திலே (மனதிலே) நாணம் இல்லாதவர்கள் உயிருடன் வாழ்வது எப்படிப்பட்டது தெரியுமா? மரத்தாலான பொம்மைகளை கயிற்றில் கோர்த்து உயிருடன் இருப்பதுப்போல் காட்டி மயக்குவது போலாம். மயக்கம் தெளிந்த உடன் அவை உயிரற்றவை என்று தெரிந்துவிடும்.  ஆதலால் அகத்திலே நாணம் இல்லாதவர்கள் உயிர் இல்லாத மரப்பாவைக்கு சமம்.



ஒப்புமை
”மரந்தான் என்னும் நெஞ்சினள் நாணாள்” (கம்ப.கைகேசி சூழ்வினை 34)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும். (கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல், மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும். இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.

மு.வரதராசனார் உரை
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
If a person is not ashamed (i.e. he doesn't have shyness (for earning bad reputation) in his/her heart) and his/her existence is like wooden toys/puppets tied on a rope. A person who carefully observes it will know that they are dead organisms. [A dead organism cannot do anything productive by themselves. It is better for them to go under earth and decay]

Questions that I ask to the kid
How is a person who is not ashamed of bad repute is considered as?