Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_003. Show all posts
Showing posts with label Athikaaram_003. Show all posts

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

குறள் 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள்
அந்தணர் - அந்தணன் - வேதத்தின்அந்தத்தைஅறிபவன்; அழகியதட்பத்தினையுடையவன், செந்தண்மையுடையவன்; பெரியோன் முனிவன் கடவுள் பார்ப்பான் சனி வியாழன்

என்போர் - என்கிறவர் 

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

அறவோர் - தரும வழிகளின் படி நின்று வாழும் உயர் குணத்தோர் (பிரமத்தை அறிந்த ஞானிகள்)

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

எவ் - எந்த 

உயிர்க்கும்உயிர்  - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

தண்மை - குளிர்ச்சி; சாந்தம்; இன்பம்; மென்மை; தாழ்வு; விளைவுக்குறைவு; அறிவின்மை.

செந் தண்மை - அருள்

பூண்டு - பூண்(ணு)-தல் - pūṇ-   7 v. [T. pūnu, K.pūṇ.] tr. 1. To put on, wear; அணிதல்.பூண்பதுவும் பொங்கரவம் (திருவாச. 12, 1). 2. To befettered with, shackled with, yoked with;விலங்கு முதலியன தரித்தல். புனை பூணும் (குறள்,836). படுநுகம் பூணாய் பகடே (சிலப். 27, 228).3. To surround; சூழ்ந்துகொள்ளுதல். யாருமச்செங்கணானைப் பூண்டனர் (கம்பரா. இராவணன்கள.19). 4. To undertake, as a business; to as-sume duty; மேற்கொள்ளுதல். போர்த்தொழில்வேட்கை பூண்டு (கம்பரா. படைத்தலை. 1). 5. Tobecome possessed of, as knowledge, love;உடைத்தாதல். அன்பு பூண்டனை (கம்பரா. விபீடணடை. 2).--intr. 1. To become entangled, asa lock of hair; to be caught, as birds in asnare; சிக்கிக்கொள்ளுதல். (W.) 2. To be yoked;நுகத்திற் கட்டப்படுதல். பூண்டன புரவியோ (கம்பரா.இராவணன்வ. 38). 3. To come close together;to become inseparable; நெருங்கி யிறுகுதல். அவனுக்குப் பல் பூண்டுவிட்டது.

ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

ஆன் - ஆன் - āṉ   part. 1. An instr. ending,as in மண்ணானியன்ற குடம் மூன்றனுருபு. (தொல்சொல். 75, உரை ) 2. Ending common to nounsand verbs of the 3rd pers. masc. sing.; ஆண்பாற் பெயர்வினைகளின் விகுதி ஊரான், வந்தான். 3.An euphonic increment, used with a modification of பத்து `ten', as in இருபான் ஒரு சாரியை (நன். 244.)

ஒழுகலான் -  நடந்துக்கொள்பவன்

முழுப்பொருள்
ஆதிகாலத்தில் யார் அந்தணன் ?
திருத்தொண்டத்தொகை புராணத்தில் "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்" என்று கூறப்பட்டு உள்ளது. தில்லை வாழ் அந்தணன் சிவன் ஆவான். அதாவது அந்தணன் என்பவன் கடவுள். 

புலன் அடக்கி யோக பயிற்சி செய்து தத்துவ உணர்வு பெற்று அதனால் அவா அறுத்து இறைவனோடு சில பேர் கலந்தார்கள். அவர்களே முற்றும் துறந்த முனிவர்கள். ஆதலால் இறைவனோடு சேர்ந்தவர்களையும் அந்தணன் என்று அழைத்தார்கள்.  இவர்கள் பெரும்பாலும் ரிஷிகள். இவர்கள் சில சமயம் உலக நன்மைக்காக பிள்ளைகளை பெற்றனர். அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தது. நாளடைவில் அவர்கள் ரிஷிகள் வழிவந்த குலங்களாக/கோத்திரங்களா கருந்திக்கொண்டனர்.

இந்த துறவிகள் அறங்களை அறிந்து உலக நுட்பங்களை உணர்ந்தவர்கள். இவர்கள் அறங்களை இவ்வுலக மக்களுக்கு சொல்வர். 

யார் அந்தணர்கள்?
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்களுள் முதன்மையாக விளங்குகின்றவர்கள் அதே போன்று விருப்பு வெறுப்பு இவை இல்லாமல், அல்லது அந்நிலையை அடைந்த, பிரமம் எனப்படும் பேருண்மை அறிந்தவர்கள். அவர்களே அந்தணர்கள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றதாலும், அந்தணன் என்பவருக்கு உண்டான தகுதி என்ன என்று வரையறுத்துச் சொல்வதாலும், பிறப்பால் எவரும் அந்தணராவதில்லை, குணத்தால், பேணுகின்ற அறத்தால் மட்டுமே ஆகிறார்கள் என்ற கருத்தை மிகவும் நயமாகச் சொல்லிவிடுகிறார் வள்ளுவர். நாம் ஒருபிறப்பில் செய்யும் நற்கருமங்களே, பின் வரும் பிறவிகளில், நமக்கு நல்ல குலத்தைத் தரும் என்பது உண்மையென்றாலும், நமது அறிவை, அறத்தை நோக்கிய பயணமே நம்மை அந்தணர் என்கிற நிலைக்கு உயர்த்தும்.

குறளின் பொருள் 
அந்தணர்கள் என்பவர்கள் அறத்தை காப்பவர்கள். ஆதலால் அவர்களை அறவோர் என்று கூறுவர். அவர்கள் மற்ற எல்லா உயிர்களுக்கும் தீமை ஆற்றமாட்டேன் அருளை / கருணையை மட்டுமே ஆற்றுவேன் என்பதை விரதமாக பூண்டு அதன் படி வாழ்கின்றவர்கள்.

முந்தைய குறளில் (குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது) சான்றோர்க்கு துறவிகளுக்கும் கோபம் வராது என்று கூறப்பட்டது. அப்படி கோபம் வந்தாலும் அது ஒரு கணம் கூட இருக்காது என்று கூறப்பட்டது. அவர்களுடைய கோபம் அழிவை உண்டு பண்ணாது ஏனெனில் துறவிகள் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்வதையே விரதமாக கொண்டவர்கள்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”அறந்த வாநெறி யந்தணர் தன்மையை” (கம்ப.அகத்தியப் 19)
“அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர்” (திருமந் 234)

பரிமேலழகர் உரை
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

குறள் 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள்
குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிகஇராசததாமதமாகியமூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள்.

ஏறி - ஏறுதல் - உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல்.

நின்றார் - நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.)

நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்

கணம் - காலநுட்பம்; கூட்டம்; விண்மீன்கூட்டம்; ஒருநோய்; பேய்; சிறுமை; திரட்சி; ஒருவகைப்புல்.

ஏயும் - ஏய்தல் - ஒத்தல், பொருந்தல், தகுதல்; எதிர்ப்படுதல், சந்தித்தல்

காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.

அரிது - அருமை; பசுமை

முழுப்பொருள்
நற்குணங்கள் ஒழுக்கம் ஆகிய சிறிய குன்றின் மேல் ஏறி மேன்மை அடைந்து நிற்கும் சான்றோர்களுக்கு ஒரு கணமேனும் (ஒரு  நொடியேனும்) கோபம் தோன்றாது. அப்படி ஒரு நொடி தோன்றினாலும் அது மிக அரிது. அப்படியே கோபம் வந்தாலும் அது நொடிப்பொழுதில் மறைந்துவிடும். அப்படி அரிதாக தோன்றினாலும் அதனை எதிர் நிற்பவர் ஒரு கணம் கூட தாங்க முடியாத வெம்மையை கொண்டதாக இருக்கும் அழித்துவிடும் (ஏனெனில் சான்றோர் சொற்கள் பலித்துவிடும் என்று முந்தைய குறளில் (நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்)  பார்த்தோம். 

கோபம் கண்ணை மறைத்து, கருத்தை அழிக்கும். 

வள்ளுவர், அப்படி குணக்குன்றாய் இருப்பவர்களும், கோபம் வரக்கூடிய தருணங்கள் உண்டு, ஆனால் அவ்வாறு வந்தபோது, அக்கோபம் நொடியளவுகூட நீடிக்காது என்கிறார். நாலடியாரில் இதே கருத்தையொட்டி, “நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம்” எனப்படுகிறது.

ஒளவையார் மூதுரையில் இப்படி கூறுகிறார்.
கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே-விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம். (23)

கற்பிளவோ டொப்பர் கயவர்  - கீழ்மக்கள் கடுங்கோபம் கொண்டால் கல் பிளந்ததுபோல உறவைப் பிளந்து கொள்வர். அவ்வெடிப்பு பின்பு ஒன்று சேராது. 

கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே - நல்லோர் கடுஞ்சினத்தினால் பிரிந்தாலும் பின்பு பிளந்த பொன் ஒட்டிவிடுவது போலசேர்ந்துவிடுவார். 

விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம் - நல்லொழுக்கமுடைய அறிவுடையோர்/சான்றோர் கோபம், விற்பிடித்து எய்த அம்பினால் ஏற்படும் வடு உடனேயே மறைந்து விடுவதுபோல தோன்றிய உடனேயே மறைந்துவிடும். 

ஒப்புமை
”கோதி லாத குணப்பெரும் குன்றனார்” (பெரிய.திருக்கூட்டச் 7)

“குன்றுபோற் குணத்தான்” (கம்ப.வேள்வி.58)

“மாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான்” (யசோதர 23)

”நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே 
சீர்கொண்ட சான்றோர் சினம்” (நாலடி 68)

“கலைவலார் நெஞ்சில் காமமே போன்றும்
கடவுளர் வெகுளியே போன்றும்
உலைவிலார் நில்லா தொருபக லுள்ளே
உருப்பவிர் வெஞ்சுரங் கடந்தார்” (சீவக 2107)

“பொறுப்பர்என் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி அணிமலை நன்னாட
பேர்க்குதல் யார்க்கும் அரிது” (நாலடி 161)

“அருமை யுடைய அரண்சேந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்” (நாலடி 164)

“இனியொரு கற்பமுண் டென்னின ன்றியே
வனைகழல் வயங்குவார் வீரர் வல்லரோ
பனிவரும் கானிடைப் பழிப்பில் நோன்புடை
முனிவரர் வெகுளியின் முடிபென்றார்சிலர்” (கம்ப.மாரீசன்.34)
 
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; 'கணம் ஏயும்' காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது. (சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின்,கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

குறள் 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நிறைமொழி - பலிக்கும்வாக்கு; மந்திரம்.

மாந்தர்  - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை

நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை. 

மறைமொழி - மந்திரம்; வேதம்; இடக்கரடக்கல்.

காட்டிவிடும் - காட்டு-தல் - kāṭṭu-   5 v. tr. Caus. ofகாண்-. [M. kāṭṭu.] 1. To show, exhibit, display;காண்பித்தல். எம்மில்லங் காட்டுதும் (நாலடி, 293). 2.To reveal, disclose, set forth; அறிவித்தல் காணாதாற் காட்டுவான் (குறள், 849). 3. To demonstrate,prove; நிரூபித்தல் நிறைமொழி மாந்தர் பெருமைநிலத்து, மறைமொழி காட்டிவிடும் (குறள், 28). 4. Toremind; நினைப்பூட்டுதல் முறுவற்குறி காட்டி முத்தே யுலகை முடிப்பாயோ (கம்பரா. கடல்காண். 8).5. To offer to a deity; நிவேதனஞ்செய்தல்.ஆழ்வார்க்குக் காட்டுகின்ற திருவமுர்தும் (S.I.I. iii,102). 6. To reflect, as a mirror or water;பிரதிபலிக்கச்செய்தல். அடுத்தது காட்டும் பளிங்குபோல் (குறள், 706). 7. To create, bring topass; உண்டாக்குதல் களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி (சிலப். 19, 17). 8. To introduce;அறிமுகஞ்செய்வித்தல். செவ்வழியுள்ளத் தோனைக் காட்டுதி தெரியவென்றான் (கம்பரா. அனுமப். 23). 9. Toapply, as incense or perfume to the hair; நறுமணமுதலியன ஊட்டுதல் ஆவிகாட்டி . . . சோர்குழல் (கம்பரா.  

முழுப்பொருள்
யார் சான்றோர், துறவி? 
பயனுள்ள அறிவார்ந்த சொற்களை பேசும் பெரியோரின் பெருமையை அவர்கள் இவ்வுலகில் பேசும் சொற்களே காட்டிவிடும். அவர்கள் கூறும் சொற்கள் பலிக்கும். அவர்கள் சொற்களை மந்திரம் போல் பிறர் பின்பற்றுவர். 

ஆன்மாவின் சக்தி சூட்சமமாக வெளிப்படுவது வார்த்தையில். எண்ணங்களில் வெளிப்பட்டு பின்பு வார்த்தைகள் செறிவாகும். நாம் செறிவானால் நமது வார்த்தைகளும் செறிவாகும். தேவையில்லாதற்கு முந்திக்கொண்டு பேசுபவர்கள் முட்டாள்கள். தேவை அறிந்து பேசுபவன் அறிஞன். தேவைப்படும் பேசாதவன் ஞானி. ஏனெனில் ஞானியின் எண்ணமே வார்த்தை. ஞானிகளின் வார்த்தைகள் மந்திரமாகும். 

ஆதலால் நமது சொற்களால் நம்மை பற்றியும் நமது எண்ணங்களை பற்றியும் பிறர் அறிவர். ஆதலால் எண்ணங்களை செறிவாக்கி சொற்களையும் செறிவாக்குக.

யோகா

யோகத்தில் மனிதனின் ஆழத்தில் உள்ள சக்கரங்களில் ஒன்றான விஷுத்தி சக்கரம் (Vishudhi chakra) என்று ஒன்று உண்டு. அது தூய்மை செய்யும் காரியத்தை செய்வது. உடல் ரீதியாக அல்ல. மன ரீதியாக. ஒருவருக்கு விஷுத்தி சக்கரத்தில் தடைகள் இருந்தால் அவரால் பிறருக்கு தனது கருத்துக்களை எண்ணங்களை சரிவர எளிமையாக எடுத்துக்கூற முடியாது. இப்படிப் பட்டவர்கள் பொதுவெளியில் பேசுவதில் சிக்கல்கள் இருக்கும். 

விஷுத்தி சக்கரத்தில் ப்ரானன் (pranan) நன்கு இருக்கும் ஒருவர் சொல்வது மற்றவர்களுக்கு எளிதில் விளங்கும். மேலும், இத்தகையவர்கள் ஒன்றை சொன்னால் மற்றவர்கள் அதை பின்பற்றுவார்கள். இவர்கள் சொன்ன சொல் பளிக்கும். உதாரணமாக காந்தியடிகள் போன்றோர் ஒன்றை சொன்னால் அதனை பலர் அப்படியே பின்பற்றினர். காந்தியடிகள் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்திற்கு தானங்கள் கேட்டால் பலர் தங்களது தங்க நகைகளை கொடுத்துள்ளனர்.

ஆனால் விஷுத்தி சக்கரத்தில் ப்ரானன் நன்கு செயலாற்ற அவர் யோக முறைகளை பின்பற்றலாம். அல்லது வேறுவழிகளை பின்பற்றலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.).

மணக்குடவர் உரை
நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று

மு.வரதராசனார் உரை
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

சாலமன் பாப்பையா உரை
நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Great people's greatness can be found in how their words translate into action and prosperity. Such words live here as mantras/quotes which people in the generations to come will recall and follow.

Questions that I ask to the kid
How is great people's greatness identified by their words?

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

குறள் 27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள்
சுவை - ஐம்புலன்களுள்நாவின்உணர்வு, உருசி; இன்பம்; இரசம்; இனிமை; கவிதையின்இரசம்; சித்திரைநாள்.

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்

ஊறு - உறுகை; தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம்.

ஓசை - ஒலி; எழுத்தோசை; செய்யுளோசை; வான்என்னும்பூதம்தோன்றுவதற்குக்காரணமாகியஏழுதன்மாத்திரை; புகழ்; இரைச்சல்; மிடற்றொலி; சொல்; பேச்சு; இயம்; பாம்பு; வாழை.

நாற்றம் - மணம்; மூக்கால்அறியும்புலனறிவு; தீநாற்றம்; கள்; தொடர்பு; தோற்றம்.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

ஐந்தின் - ஐந்து

வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

தெரிவான்கட்டே - தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
ஐந்து புலன்களான சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஆகியவற்றின்  தன்மை, வலிமை, அவை பிறக்கும் வழிமுறைகள், அவை செய்யும் தந்திரங்கள், அவை பிறப்பதற்கான காரணங்கள் ஆகியவற்றை அறிந்து உணர்ந்து அவற்றை அறுத்து கடப்பவனுக்கு இவ்வுலகு வசப்படும். ஏனெனில் ஐந்துபுலன்களும் ஆசைகள் உண்டாக காரணமாக அமைகின்றன. ஆகவே ஐந்து புலன்கள் மூலம் வரும் ஆசைகளை  ஒருவன் அறுக்க வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உன் னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
துறுப்பினது குறிப்பாகும் ஐவீர்” (அப்பர்.திருஆரூர் 4)

“ஆமே சுவையொளி யூறோசை கண்டவன்” (திருமந் 1350)

“சுவையொளி யூறோசை நாற்றம் தோற்றம்” (திருவொற்றியூர் ஒருபா ஒருபது 9:23)

“மன்னிய மோகச் சுவையொளி யூறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்கும்” (ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 5)

பரிமேலழகர் உரை
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். (அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை யாராய்வான் கண்ணதே யுலகம். எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம் அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று.

மு.வரதராசனார் உரை
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

சாலமன் பாப்பையா உரை
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

குறள் 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள்
ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறிகள்; ஐந்தென்னும்எண்; பஞ்சாங்கம்.

அவித்தான் - அவித்தல் - வேகச்செய்தல்; அணைத்துவிடுதல்; அடக்குதல்; கெடுத்தல் துடைத்தல் நீக்குதல்

ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

அகல் - விளக்குத்தகழி; சட்டி , விரிவு, ஓர்அளவு; வெள்வேல்மரம்.
அகல் - akal   n. அகல்-. 1. Inland townor village; உள்ளூர். (பொதி. நி.) 2. The interioror inner part of a town or village; ஊரின் உட்புறம். (பொதி. நி.) 3. Extent of space; பரப்பு.(W.) 4. Country, province; நாடு. (பொதி. நி.)5. Pudendum muliebre; அல்குல். (W.)

விசும்பு - வானம்; தேவலோகம்; மேகம்; திசை; வீம்பு; செருக்கு.

விசும்புளார் - தேவலோகத்தின்

கோமான் - அரசன்; பெருமையிற்சிறந்தோன்; மூத்தோன்; குரு; பன்றி.

இந்திரனே - இந்திரன் -

சாலும் - சாலுதல் - நிறைதல்; பொருந்துதல்; முற்றுதல்; மாட்சிபெறுதல்

கரி - அடுப்புக்கரி; நிலக்கரி; கரிந்தது; கருமையாதல்; மிளகு; நஞ்சு; மரவயிரம்; யானை; பெட்டைக்கழுதை; சான்றுகூறுவோன்; சான்று; விருந்தினன்; பயிர்தீய்கை; வயிரக்குற்றங்களுள்ஒன்று.

முழுப்பொருள்
ஐந்து புலன்களையும் அடக்கி வலிமையை பெற்ற துறவிகளை கண்டால் பரந்த வானுலகத்தின் தலைவனான இந்திரனே அவர்களை வணங்குவான். ஆதலால் புலன்களை நீத்தவர்களுக்கு அப்படிப்பட்ட பெருமையும் சிறப்பும் மேலுலகிலேயே உண்டு என்பதை அறியலாம். அதனால் தான் அவர்களுக்கு இவ்வுலகில் கடந்தகாலங்கிலும் இக்காலங்களிலும் அரசர்களும் மதிக்கும் இடத்தில் வைத்து அவர்களிடம் ஆலோசித்தனர்.

இந்திரன் சில துறவிகளை மதிக்காததால் சாபம் பெற்றவன். இந்திரனுக்கே சாபம் கொடுக்கும் ஆற்றல் துறவிகளுக்கு இருந்தது. அதனால் தான் துறவிகளின் வலிமையை கூற இந்திரனை சான்றாக திருவள்ளுவர் இங்கு  கூறுகிறார்.

ஐராவத்தில் இந்திரன் (Bantey Srai, Angkor area, Siam Reap, Cambodia)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

”ஐந்து புலங்களைக் கட்டவர் போற்ற” (சம்பந்தர்.திருப்புகலியும் திருவீழிமிழலையும் 8)

நாகபாப்பாக்கள் பற்றி ஜெயமோகன் (நீர்க்கூடல்நகர் – 5 இல் இருந்து. சுட்டியை தட்டவும்)
ஒரு நாகாபாபாவின் குடிலுக்குள் கொஞ்சநேரம் சென்றால் என்ன என்று தோன்றியது. கிருஷ்ணன் மொழியாக்கம் செய்ய ஒரு நாகாபாபாவை வணங்கி சென்று அருகே அமர்ந்தோம். நாகாபாபாக்கள் சாதாரணமான நீலநிற நைலான் தார்ப்பாயை இழுத்துக்கட்டி கூடாரம் அமைத்து கீழே நைலான் பாய் விரித்து அமர்ந்திருக்கிறார்கள். கும்பமேளா வளாகம் முழுக்க ஏராளமான நாகாபாபாக்களின் கூடாரங்களை காணலாம். அவர்கள் தனித்தனி அகாராக்களாகவே ஓரிடத்தில் முகாமிட்டிருப்பார்கள். அகாரா என்றாலே முகாம் என்றுதான் பொருள்.  ஜூனா அகாரா என்பதே தொன்மையானது, பெரியது என்கிறார்கள்.

நாகாபாபாக்கள் பலவகை. ஆடை அணிந்தவர்கள் உண்டு, அவர்கள் சற்றே கீழ்நிலையில் இருப்பவர்கள். முற்றாகவே ஆடைகளைத் துறந்து உடலெங்கும் சாம்பல்பூசி அமர்ந்திருப்பவரே தீக்ஷை பெற்று முழுமையை நோக்கிச்செல்லும் நாகாபாபா. அவருக்கு துறவிகள் நடுவே உள்ள இடம்  சிற்றரசர்கள் நடுவே பேரரசர்களுக்குரியது. பிற துறவிகள் அவரை மறு எண்ணமின்றி பணிந்து வணங்குவதை காணலாம். எங்கும் ஆடையற்ற, மண்படிந்த மேனியராகவே அவர்கள் செல்கிறார்கள். ஆடை என்பதை அவர்கள் அறிந்ததே இல்லை என்பதைப்போல.

நாகா பாபாக்களில் பெரும்பாலானவர்கள் கஞ்சா புகைப்பார்கள்.  கஞ்சா என்பது எதுவாக இருக்கிறோமோ அதை பெரிதாக்குவது. ஆகவே அது தியானத்திற்கு உதவும் சிவமூலியாகவே நம் மரபில் எப்போதும் கருதப்பட்டு வருகிறது. அது சிவனின் கொடை என்பதனால் பெரும்பாலும் கேட்டால் உடனே நமக்கும் இழுப்பதற்கு கொடுத்துவிடுவார்கள்.

நாம் துறவு என்று சொல்லும் எந்த ஆசாரங்களுக்கும் கட்டுப்படாதவர்கள் நாகா பாபாக்கள். சுத்தம், ஒழுங்கு, நாகரீகம் என எதையும் அவர்கள்மேல் போட்டு புரிந்துகொள்ளமுடியாது. நாம் வாழும் இந்த உலகியல் வாழ்க்கையிலிருந்து முற்றாகவே வெளியே சென்றுவிட்டவர்கள். அவர்களிலேயே இன்று எளிய பிச்சைக்காரர்களும் வித்தைக்காரர்களும் கலந்துள்ளனர். ஆனால் மிகமிக எளிதாக வேறுபாட்டை கண்டுகொள்ள முடியும்.

இந்துமதத்தின் இன்றைய எளிய லௌகீகர்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ள முடியாது. தங்களை அறிவாளிகள் என நினைக்கும் நகர்சார்ந்த அரைவேக்காட்டு லிபரல்களால் அவர்களை அணுகவே முடியாது. ஒவ்வொரு கும்பமேளா வரும்போதும் டெல்லி மும்பை சார்ந்த அறிவிலிகளான இதழாளர்களால் நாகா பாபாக்களைப் பற்றிய அவதூறும் ஒவ்வாமையும் பரப்பப்படுகின்றன. நவீனமேற்கத்திய சிந்தனைகளே அறிவு என நம்பும் ஒரு தரப்பிலிருந்து சலிப்புக்குரல்களும் எழுகின்றன.

இன்று இந்தியாவின் மரபான உள்ளம் கொண்ட எளிய இந்துக்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ளமுடியும். அல்லது ஹிப்பிகளை, வரலாற்றில் மைய நாகரீகத்தை எதிர்க்கும் அறிவியக்கங்களின் பங்களிப்பை, பண்பாட்டில் புறனடையாளர்களின் இடத்தை  அறிந்த ஐரோப்பியர்களால் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு பண்பாட்டின் உச்சியில் அப்பண்பாட்டின் அத்தனை கூறுகளையும் முழுக்க நிராகரித்த ஒருவர் அமர்ந்திருப்பதென்பது பிரமிப்பூட்டும் முரண்பாடு. விவேகானந்தர் அவருடைய உரை ஒன்றில், உலகின் மாபெரும் செல்வக்களஞ்சியமாக இந்தியா இருந்த காலகட்டத்தில், சக்கரவர்த்திகளால் இந்நிலம் ஆளப்பட்டபோது, இதன் உச்சியில் அமர்ந்திருந்தவர்கள் இங்கே எனக்கு எதுவுமே தேவையில்லை, என்று சொன்ன நாடோடிப் பிச்சைக்காரர்களே என்று சொல்கிறார். நம் பண்பாட்டின் சிம்மாசனம் அவர்களுக்கே அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

துறப்பவனிடமே உச்சகட்ட அதிகாரம் இருக்கவேண்டும் என கண்டடைந்தது நம் மரபு. வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார் வள்ளுவர். இந்துமதத்திலும் சமண பௌத்த மதங்களிலும் துறவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உச்ச இடத்தை புரிந்துகொண்டாலொழிய இந்த மதங்களின் எந்தக் கொள்கையையும் உள்வாங்க முடியாது.

நாகா பாபாக்கள் எதையும் செய்யலாம், ஆனால் அவர்களே ஏற்றுக்கொண்ட கடுநோன்பு அவர்களுடையது. அவர்கள் கொட்டாங்கச்சியில் உணவுண்ணவேண்டும். ஆடை துறக்கவேண்டும். இவ்வுலகின் எந்த இன்பங்களையும் ஒரு பொருட்டாக எண்ணக்கூடாது.

குளிர், வெப்பம், வலி, நோய், பசி என்னும் ஐந்து உடல்துன்பங்களை அவர்கள் கடக்கவேண்டும். ஆணவம், சினம், ஐயம், அச்சம், அருவருப்பு என்னும் ஐந்து உளநிலைகளை கடக்கவேண்டும். இந்தப் பத்து தளைகளால் கட்டுண்டு, இந்த பத்து திரைகளால் மூடப்பட்டிருக்கும் மெய்மையை அதன்பின்னர் அவர்கள் காணமுடியும். அது ’நானே சிவம்’ எனும் பேருணர்வு. ’சிவோஹம்!” என அவர்கள் அதை முழங்குகிறார்கள்.

நாங்கள் சென்ற நாகாபாபா விறகுமூட்டி தீயிட்டிருந்தார். கூடார அறைக்குள் கஞ்சாப்புகையும் விறகுப்புகையும் நிறைந்திருந்தது. எங்களுக்கு அவரே பால்காய்ச்சி டீ போட்டு அளித்தார். ஊரிலிருந்து கிளம்பிய பின் அருந்திய மகத்தான டீ அது. அந்த நெருப்பிலிருந்தே சாம்பலை அள்ளி நெற்றியிலிட்டு பிடரியில் மெல்ல மூன்றுமுறை அறைந்து தலையில் கைவைத்து வாழ்த்தளித்தார்.

அவரிடம் பேசியபடி அங்கே சற்றுநேரம் அமர்ந்திருந்தோம். கஞ்சா சிலும்பியை பற்றவைத்து ஆழ இழுத்து புகைவிட்டார். நண்பர்களும் வாங்கி இழுத்தனர். ஓங்கூர் சாமியை ஜெயகாந்தன் வர்ணிப்பதுபோல ‘வெட்டவெளியில் இல்லையென்றிருக்கும்’ நிலையை அவர் அடைந்தார். முகிலுக்குள் கொஞ்சநேரம் அமர்ந்திருந்துவிட்டு வணங்கி கிளம்பினோம்.

என்ன அடைந்தோம்? அதை சொல்ல முடியாது. நான் முதன்மையாக மிகமிக அரிய மனிதர் ஒருவரின் அருகே அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். பெருங்கல்வி கொண்டவர்கள், கனிந்தவர்கள் அடையும் ஓர் உச்சத்தில் இருப்பவர் என. மிகச்சில நிமிடங்களிலேயே ஆடையற்ற உடலுடன் அஞ்சத்தக்க கோலத்துடன் ஒருவர் அங்கே இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம் என்பது ஓரு வியப்பு. இனிய, கம்பீரமான ஆளுமை ஒருவரை அகம் உணரத் தொடங்குகிறது. அந்த உணர்வு ஓரு தொடக்கம். அங்கிருந்தே அவரை நோக்கி செல்லவேண்டும்

பரிமேலழகர் உரை
ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

மணக்குடவர் உரை
நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

மு.வரதராசனார் உரை
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

துறந்தார் பெருமை துணைக்கூறின்

குறள் 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள்
துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.; உலகியல் பற்றுகளைத் துறந்து அறநெறி வாழ்பவர்

துறந்தார் - tuṟantār   n. துற-. Ascetics,recluses, as having renounced the pleasures ofthe world; [பற்றுவிட்டவர்] சன்னியாசிகள். துறந்தார்; பற்றுவிட்டமுனிவர்

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.

துணைக் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

கூறின்கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்

வையத்து - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ்.

இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

இறந்தாரை - மரணம் அடைந்தவரை ; வாழ்க்கையை வெறுமென கடந்தவர்

எண்ணிக் - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள்
இங்கே முக்கியமாக நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது துறந்தவர்களைப் பற்றியும் இறந்தவர்களைப் பற்றியும். ஆதலால் முதலில் அதைப்பார்ப்போம்.

துறந்தவர்கள் என்றால் இவ்வுலகின் பொருளியல் செல்வங்களின் மீதும் இன்பங்கள் மீதும் இருக்கும் பற்றைத் துறந்தவர்கள் என்று பொருள். எல்லாம் துறந்த முனிவர்கள் மட்டும் அல்ல இவர்கள். தனக்கும் தனது குடும்பத்திற்கு மட்டுமென்றில்லாது இவ்வுலகிற்கும் / சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் வாழ்வை வாழ்ந்தவர்கள். அறவழில் வாழ்ந்து பொருளையும் இன்பத்தையும் துறந்தவர்கள். இவர்களின் பெருமையை அளக்க முடியாது. இவரைவிட பெரியவர் அவர் என்ற ஒப்பீடு எல்லாம் அபத்தம். (உதாரணமாக இளையராஜா பெரியவரா ஏ.ஆர்.ரஹ்மான் பெரியவரா என்ற அபத்தமான எளிய சண்டையை சொல்லாம்). துறந்தார்கள் நிகரற்ற வல்லமையை கொண்டவர்கள்.

ஏன் பெருமையை பற்றி பேச வேண்டும் ? ஏனெனில் 1) அவர்கள் ஒரு நாளில் வல்லமையை அடையவில்லை. அதற்கு அவர்கள் பலவற்றை துறந்து அதற்காக உழைத்தார்கள். 2) அவர்கள் செய்த செயல்கள் எல்லாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் பல போராட்டங்களை சந்தித்து செயல்படுத்தப்பட்டு இருக்கும். ஆதலால் அவற்றின் பெருமையை எடுத்துரைப்பதும் தேவையாகும்.

இறந்தார்கள் என்றால் மரணம் அடைந்தவர்கள் என்று மட்டும் பொருள் அல்ல. இறத்தல் என்றால் கடத்தல் கழிதல் என்ற பொருள்களும் உண்டு. அதாவது பிறவியில் உண்டுறங்கிப் புணர்ந்து பெற்று முதிர்ந்து மாயும் எளியோர்கள். பிறவி முழுதும் நேரத்தை மெய்யறியாது வெறுமென பொருளல்லவற்றில் கழித்தவர்கள். இவர்களின் எண்ணிக்கை அளவிட முடியாது.

துறந்தவர்களின் பெருமையை மாட்சிமையை வல்லமையை நாம் அளந்து கூறுவது (கூறவேண்டும் என்றால் அது) இவ்வுலகில் எண்ணிக்கையால் அளவிட முடியாத இறந்தார்களின் எண்ணிக்கையை போன்றதாம். ஆதலால் துறந்தவர்களின் மாட்சிமையை அளந்து பார்க்க முடியாது என்கிறார் திருவள்ளுவர்.

பி.கு: இந்திய சமூகத்தில் குலம் கோத்திரம் என்று கூறுவர். இதில் கோத்திரத்தின் தலைவர் என்று விஸ்வாமித்ரர் போன்ற முனிவர்கள் இருப்பார்கள். இவர்களின் கோத்திரங்கள்  வழி மட்டும் வந்தோம் என்று  வேற்று பெருமையடைகிறார்கள் எளியோர்கள். உண்மையில்விஷவாமித்ரர் போன்றோரின் மாட்சிமையை பெருமையை ஓரிரு வரிகளை தாண்டி அறிய முற்படுபவர்கள் மிக அரிது. அதன்படி நடப்பவர்கள் அதனினும் அரிது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“வையமும் தவமும் தூக்கிற் றவத்துக்
கையவி அனைத்தும் ஆற்றா தாகலின்
கைவிட் டனரே காதல்ர்” (புறநா 358:3-5)

“திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டுகழிந் தோரே” (மதுரைக் 236-7)

“நினைப்பான் புகில்கடல் எக்கரின் நுண்மண லிற்பலர்
எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தனர்” (திருவாய்மொழி 4, 1:4)

“இறந்தனர் இறந்த காலத் தெண்ணிறந் தனர்கள் எல்லாம்” (யசோதர 36)

பரிமேலழகர் உரை
துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். (முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.).

மணக்குடவர் உரை
காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும். து பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

சாலமன் பாப்பையா உரை
ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை

குறள் 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒழுக்கத்து - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே வழுவாது நின்று

நீத்தார் - முனிவர்; துறவியர்; உலக ஆசைகளைத் துறந்தவர், இறை சிந்தனையும், சுய உணர்தலையும் நாடும் தவத்தோர்

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.

விழுப்பத்துவிழுப்பம் - viḻuppam   n. id. 1. Seeவிழுமம், 1. ஒழுக்கம் விழுப்பந் தரலான் (குறள், 131).2. Good; benefit; நன்மை. (பிங்.) 3. Family,ancestry; குலம். (பிங்.) 4. See விழுமம், 4. நின்விழுப்ப நீக்குதி (விநாயகபு. 57, 23); viẕuppam   s. desire, wish, விருப்பம்; 2. good, benefit, நன்மை; 3. excellence, மேன்மை; 4. a tribe, குலம்.

வேண்டும் - வேண்டும்; தேவையானது

பனுவல் - paṉuval   n. பன்னு-. 1. Tousedcotton; சுகிர்ந்த பஞ்சு. பருத்திப் பெண்டின் பனுவலன்ன (புறநா. 125). 2. Cotton thread; பஞ்சிநூல். (சூடா.) 3. Word; discourse; சொல். மெய்யறி பனுவலின் (தொல். சொல். 96). 4. Stanza,musical composition; பாட்டு. வரிநவில் பனுவல்(புறநா. 135). 5. Treatise on scientific subjects;நூல். பனுவற்றுணிவு (குறள். 21). 6. Learningthrough oral instruction; கேள்வி. செவிமுதல் வித்திய பனுவல் (புறநா. 237). 7. Research;ஆராய்ச்சி. பனுவ னுண்ணூ னடையுளார் (சீவக.464). 8. Learning; கல்வி. (பிங்.)

பனுவல் - paṉuval   s. cotton, பஞ்சிநூல்; 2. word, discourse, மொழி; 3. the Agamas; 4. science, literature, நூல்.

பனுவலாட்டி - Saraswati, as the goddess of science.

துணிவு - தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்; கைக்கிளைவகையுள்ஒன்று.

முழுப்பொருள்
தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று, தத்தம் தனக்கு உரிய ஒழக்கங்களையும் அறங்களையும் வழுவாது ஒருவன் வாழ்ந்தால் அறம் வளரும். அறம் வளர அறியாமை நீங்கும். அறியாமை நீங்கினால் இம்மை (இப்பிறவி) மறுமை (மறு பிறவி) இன்பங்களின் உவர்ப்பும் (துவர்ப்பு, வெறுப்பு) தோன்றும்.

அவ்வாறு தோன்றினால் அறம், பொருள், இன்பம் வரிசையில் வீட்டின் கண் ஆசை உண்டாகும்.  அஃது உண்டாக (மறு)பிறவிக்குக் காரணமாகிய பயன் இல்லாத செயல்களையெல்லாம் விட்டு விட்டு (துறந்து), வீட்டிற்கு காரணமாகிய யோகமுயற்சியில் ஈடுபடுத்திக்கொள்வர்.

அஃது உண்டானால், மெய்யுணர்வு பிறக்கும். புறப்பற்று எனப்படும் ‘எனது’ மற்றும் அகப்பற்று எனப்படும் ’யான்’ தன்னை விடும். ஆகவே இவ்விரு பற்றையும் உவர்த்து விடுதல் வேண்டும்.

இப்படி தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்து, மேன்மக்கள் வீட்டினை அடைவர். அவர்களது பெருமையை நூல்கள் (பனுவல்) பாடும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது ,முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ் அறமுதற்பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் அவர் ஆகலின், இது வான் சிறப்பின்பின் வைக்கப்பட்டது.]

ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. (தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். தானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

சாலமன் பாப்பையா உரை
தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

English Meaning - As I taught a kid - Rajesh
When one leads a disciplined life and performs his/her dharma/duties, he/she would gain his/her success, prosperity and happiness. He/She will remove ignorance/darkness from his/her life. He/She will ignore the desires because he/she has realized that performing dharma alone would give true happiness. Such a person would attain growth and can attain moksha/success. The literature/world would sing praises of such people. Generally, it refers to sages. But in current world, it can refer to everyone who has contributed to uplift their family, community, nation, and world.

Questions that I ask to the kid
Of our ancestors who's praises will be sung by books?

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம்

குறள் 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள்
நீத்தார் - முனிவர்; துறவியர்.

இருமை - பெருமை; கருமை இருதன்மை; இருபொருள் இம்மை மறுமைகள்.

வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

தெரிந்து - முழுதும் தெளிந்து / அறிந்து
ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம் இம்மை விரைவு புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
- நேர்மை
- நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையை குறிப்பிடும் சொல்.
- சுகர்ம யோகத்தின் தனித்தமிழ் சொல்.
- ஒழுக்கம், தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது;  தவம், ஆசாரம், சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்;

பூண்டு - சிறுசெடி; உள்ளிப்பூண்டு; சிற்றடையாளம்.
பூண்டார் - சிற்றடையாளம் கொண்டோர்

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.

பிறங்கு -  lines inside the joints of the fingers - விரலிறை,

     - III. v. i. shine, glitter, துலங்கு; 2. be lofty, elevated, உயரு; 3. grow full, abundant; 4. sound, ஒலி; 5. come abroad, வெளிப்படு.
பிறங்கு-தல்
piṟaṅku-   5 v. intr. 1. Toshine, glitter, glisten; விளங்குதல்.; To be high,lofty, elevated; உயர்தல். பிறங்குநிலை மாடத்து(புறநா. 69). 3. To be great, exalted, dignified;சிறத்தல். பெருமை பிறங்கிற் றுலகு (குறள், 23).4. To grow full, complete, abundant; மிகுதல்.

பிறங்கிற்று - 

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
எல்லா இடங்களிலும் நிலவுகின்ற நன்மை தீமை போன்ற இருவகை நிலைகளைத் தெளிவாக உணரவேண்டும். அவ்வாறு உணர்ந்து அவ்விடத்தில் அறவழியில் (அதாவது நேர்மையான வழியில், தருமத்தின் வழியில்) செல்வோர் வாழ்வில் உயர்வு பெற்று மாட்சிமை என்கிற சிறப்பு ஒளியாக இவ்வுலகில் வீசும். அதுவே சிறந்தது.


இக்குறள் நீத்தார் பெருமை அதிகாரத்தில் வருகிறது. நீத்தார் என்றால் முனிவர், துறவியர் என்று பொருள். ஆதலால் ஞானம் உடையவர்களின் பெருமை என்று நாம் இங்கு பொருள் கொள்ளலாம்.

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”இருமை நோக்குறும் சான்றவர் குழாம்” (கம்ப.கிளைகண்டு 82)

நாஞ்சில் நாடன் உரை
‘இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு ’

என்று. நன்மையும் தீமையும் போல, எல்லா இடத்தும் நிலவும் இருவகை நிலைகளைத் தெளிவாக உணர்ந்து அறவழி நிற்பவரின் சிறப்பு உலகில் ஒளிவீசும் என்பது பொருள். எனவே இருமை என்றால் இரண்டு என்று பொருள். அந்த வரிசையில்

பரிமேலழகர் உரை
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்பவின்பக் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து; ஈண்டு அறம்பூண்டார் பெருமை - பிறப்பறுத்தற்கு இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் விளங்கித் தோன்றிற்று.

படைகொண்டு பொருது பார்முழுதும் வென்றவரினும், ஐம்புலனையடக்கி ஆசையை வென்றவரே பெரியர் என்பது. பிரிநிலையேகாரம் செய்யுளில் தொக்கது.

மணக்குடவர் உரை
பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது.
இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.

மு.வரதராசனார் உரை
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

சாலமன் பாப்பையா உரை
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.

செயற்கரிய செய்வார் பெரியர்

குறள் 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
 [அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] 
(For English meaning scroll to the bottom of this post)

பொருள் 
செயல் தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

செய்தல் இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

செயற்கு - செய்வதற்கு

அரிய அருமையான (rare); அரியவற்றை, கடினமானவற்றை, அருமையானவற்றை, பயனுள்ளவற்றை

செய்தல் இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்வார்- செய்வார்கள்

பெரியர் - பெருமை, சான்றோர்

சிறியர் - சிறியவர், சிறியார்; ciṟiyr   --சிறியவர்--சிறியார்--சிறி யோர், s. The low, the base, கீழ்மக்கள். 2. Small persons, சிறுவர்; [ex சிறுமை.] சிறியார்க்கினியதுகாட்டாதேசேம்புக்குப்புளிவிடாதாக் காதே. Give not dainties to children, and spare not tamarind with சேம்பு. i. e., indulge not hurtfully, neither hesitate as to what is needful.

செய்தல் இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செயற்கு - செய்வதற்கு

அரிய - அரியவற்றை, கடினமானவற்றை,  அருமையானவற்றை, பயனுள்ளவற்றை

செய்தல் இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்கலாதார் - செய்யமாட்டார்கள்

முழுப்பொருள்
மேன்மக்கள் தாம் செய்யும் செயல்களை மிகுந்த கவனுத்துடன் தேர்ந்தெடுத்து செய்வார்கள். இச்செயல் என்ன நன்மை பயக்குமோ என்று சிந்தனை செய்வார்கள். பயனற்ற எளிய செயல்களை செய்ய மாட்டார்கள். நேரத்தை வீணாக விரயம் செய்ய மாட்டார்கள். ஆதலால் தான் திருவள்ளுவர் கூறுகிறார் சான்றோர்களும் மேன்மக்களும் அருஞ்செயல்களையும் கடினமானவற்றையும் பிறருக்கு பயன் தருபவற்றையும் அறம் சார்ந்ததை மட்டுமே செய்வார்கள். அவ்வாறு ஒருவர் பெரிய செயலை செய்தால் அவருக்கு சிறிய செயல்களை செய்ய நேரம் இருக்காது. பெரிய செயல்களை செய்தப்பின்பு சிற்றின்பங்கள் உவக்காது. 

உதாரணமாக பாருங்கள் சான்றோர்கள் 60 வயது ஆனப்பின்பு ஓய்வு பெற மாட்டார்கள். தொடர்ந்து ஆக்கப்புர்வமான விஷயங்களில் ஈடுப்படுத்திக்கொண்டே இருப்பர் (உதாரணமாக டெல்லி மெட்ரோ ஈ.ஸ்ரீதரன், ரத்தன் டாட்டா, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் பலர்). 60 வயதில் கட்டாய ஓய்வுப் பெற்றவர்களை நான் குறைச்சொல்லவில்லை. சில உதாரணப்புருஷர்களை மட்டுமே நினைவுப்படுத்துகிறேன். 

ஆனால் சிறியவர்களோ எதற்கு உதவாத நேரத்தை விரயம் செய்யும் செயல்களை செய்து கொண்டு பொழுதை கழிப்பர். அவர்களை இவ்வுலகம் சிறுமை என்றே எண்ணும். 

கிருஷ்ணம்மாள் (நன்றி ஜெயமோகன்)
புகழ் என இரண்டு வகை உண்டு. ஒன்று அறியப்படுதல். இன்னொன்று வணங்கப்படுதல். ஊடகங்கள் தோறும் தென்படுபவர்கள் கொண்டிருப்பது முதல் வகையான புகழ். கிருஷ்ணம்மாள் போன்றவர்கள் அடைந்திருப்பது இரண்டாம் வகை புகழ். மரபின் மொழியில் சொல்லப்போனால் பொன்றாப்புகழ்.

”தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்” , “செயற்கரிய செய்வார்” என்னும் இரண்டு வரிகளால் அவர்களை நம் மரபு வரையறை செய்கிறது. ’வையத்தில் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என வகுக்கிறது. அவர்களே புலவர் சொல்லில் எழவேண்டியவர்கள். தலைமுறைகளின் நினைவில் நின்றிருக்கவேண்டியவர்கள். கிருஷ்ணம்மாள் அவர்களில் ஒருவர். அவர்களை வணங்குகிறேன்



மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்” (பெரிய.இயற்பகை 29)

பரிமேலழகர் உரை
செயற்கு அரிய செய்வார் பெரியர் - ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். (செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய, 'நாலிரு வழக்கின் தாபதபக்கம்'(புறப்பொருள் வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செயற்கு அரிய செய்வார் பெரியர் - உயர்திணை எனப்படும் மக்களுள் பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர்; செயற்கு அரிய செய்கலாகாதார் சிறியர் - பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்யாது எளிய செயல்களையே செய்து முடிப்பவர் சிறியோர்.

"செயற்கரியவாவன இயமம் நியமம் முதலாய எண்வகை யோக வுறுப்புகள்". என்பர் பரிமேலழகர். எண்வகை ஓக உறுப்புகள் கடிவு (இமயம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணாயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்), ஒன்றுகை (சமாதி) என்பன. இவற்றுள் ஒருக்கமும் நிறையுமான மனவடக்கம் சிறந்ததாம்.

"வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்
சந்ததமு மிளமையோ டிருக்கலா மற்றொரு
சரீரத்தினும் புகுதலாம்
சலமே னடக்கலாம் கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது"
என்றார் தாயுமான அடிகள். ஆதலால், மனமடக்குதலும் அவாவறுத்தலுமே செயற்கரிய செயல்கள் என அறிக.

செயற்கெளியவாவன உலகத்தொழில் செய்தலும் பொருளீட்டுதலும் இன்பந்துய்த்தலும் எளியாரை வாட்டுதலுமாம். இல்லறம் துறவறத்தை நோக்க எளிதாயினும், அதையுஞ்செய்ய இயலாதவர் சிலர் உளர். அவரே சிறியர் என்னுங் கருத்தினர் "செயற்குரிய செய்கலாதார்" என்று பாட வேறுபாடு காட்டுவர். அவ்வேறுபாடு பெரியர் சிறியர் என்னும் இரு வகுப்பார்க்கும் இடையே வேறொரு வகுப்பாரையும் வேண்டுதலின், அது அத்துணைச் சிறந்ததன்றாம்.

மணக்குடவர் உரை
செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர். அவற்றை செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர்.
செயற்கரியன- இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று.

மு.வ உரை
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

Thirukkural - Management - Perseverance
Meaningful and timely execution demand perseverance. Your entire success depends on the purpose and the persistence of the task you execute.

A great ship asks for deep waters. A great ship is built to explore the vast ocean. Similarly, great people do challenging tasks that are considered impossible by small people. Great people also attempt challenging tasks to explore themselves. One of the ways to identify whether a person is great in thinking is to measure the type of task he executes, explains Kural 26.

The great do the impossible:
The mean cannot.

Great people do not limit themselves by their limitations. Whereas small people make mountains out of molehills of their tasks and give up the thought of either doing them or persisting till the end. So, think great thoughts, challenge yourself to become a man of achievements. 

English Meaning - As I taught a kid - Rajesh
Great people do great things consistently whereas normal / trivial / mediocre people do average things / mundane stuffs and do not aim to be great or do great things consistently. Mediocre people don't even try to think about great stuffs or think about doing great stuffs

Questions that I ask to the kid
Who are great people? Who are mundane/trivial/mediocre people? By what do they differ?

உரனென்னும் தோட்டியான்

குறள் 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
உரனென்னும் -> உரன் + என்னும்.
உரன் -> திண்மை ((மன உறுதி) - Vigor / Density / Strength / Determination),  பற்றுக்கோடு வெற்றி வலி ஊக்கம், உள்ளமிகுதி மார்பு அறிவு

என்னும் -> என்கிற, யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

தோட்டி - ஆணை; காவல்; கதவு; மனைவாயில்; காண்க:தோணாமுகம்; கட்டழகு; செங்காந்தள்மலர்; நெல்லிமரம்; அங்குசம்; கொக்கி; வெட்டியான்; குப்பைமுதலியனவாருவோன், துப்புரவாளன்.

தோட்டியான் -> அங்குசத்தால் (அங்குசம் : யானையை அடக்க கூடிய கருவி) ->. கருவியாகிய.

 
(அடக்கும்) அங்குசம்

ஓரைந்தும் -> ஓர் ஐந்தும்; மெய், வாய்,கண், மூக்கு, செவி என்ற யானைப் போன்ற ஐம்புலன்கள்.

காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.  

காப்பான் -> எண்ணங்கள் செல்லாமல் காவல் காப்பான்.

வரன் - சிறந்தவன்; கடவுள்; பிரமன்; தமையன்; மணமகன்; கணவன்; சீவன்முத்தருள்பிரமவரர்எனப்படும்வகையினன்.

வரனென்னும் -> வரன் + என்னும்.

வைப்பு - வைக்கை; பாதுகாப்புநிதி; புதையல்; இடம்; நிலப்பகுதி; ஊர்; உலகம்; செயற்கையானது; செயற்கைச்சரக்கு; வைப்பாட்டி; கலிப்பாவகையின்இறுதியுறுப்பு.
வைப்பிற்கோர் -> வையத்தில் + பிறக்க + ஓர்

வரனென்னும் வைப்பிற்கோர் 
பேரின்பப் பெருவீடு; வரமாகிய வீடுபேறு; எல்லா நிலத்திலும் மிக்கது (சிறப்பானது).  அத்தகைய வையத்தில் பிறக்க தக்க

வித்து -> வித்து (விதை) ஆவான். (ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகன் அல்ல). வித்து என்றது, பூமியில் பிறவாது, மீண்டும் மோட்சமாகிய வீட்டிலே முளைப்பதால்
வித்து - மரஞ்செடிகொடிகள்முளைக்கக்காரணமாயிருக்கும்விதை; விந்து; மரபுவழி; வழித்தோன்றல்; சாதனம்; காரணம்.

முழுப்பொருள்
உலகம் மேம்பட உயிர்களின் மனம் மேம்பட வேண்டும். உயிர்களின் மனம்மேம்பட அறிவுமேம்படல் அவசியம். இத்தகு மேம்பட்ட அறிவுத்திண்மை புலனடக்கத்தால் சாத்தியம். ஐப்புலன்களின் உணர்வுகள் அடக்க முடியாதவை. யானையைப் போல் மலையானவை. 

இத்தகு ஐம்புல உணர்வுகளை அறிவுத்திண்மையெனும் (அறிவு, மன உறுதி) தோட்டியால் (என்னும் கருவியால்) காப்பவனே இவ்வுலகின் விதை போன்றவன் என்கிறார். 

அங்குசம் என்னும் சிறு ஆயுதமே ஒரு பெரிய யானையை அடக்க வல்லது என்பதை நாம் உணர வேண்டும்.  ஆனால் ஒரு தேர்ந்த பாகனால் மட்டுமே அங்குசத்தை சரியாக பயன்படுத்தமுடியும். ஒரு தேர்ந்த பாகன் என்பவன் பல பயிற்சிகளை கற்று (மறக்காமல்) உள்ளவன். ஆதலால் அறிவு மற்றும் மன உறுதியால் (மன பயிற்சிகளாலும்) ஐம்புலன்களை அடக்கலாம். 

துறவெனும் நிலந்தனில் துளிர்விடத் தகுந்த ஒர் முதிர்ந்த நல் வித்தாக அவன் விளங்குவனாம்.
அதாவது, தாய் ஈண்டு பிறந்து இறந்தவன் எல்லாம் மகன் அல்ல. மோட்சம் அல்லது பேரின்ப பெருவீட்டில் துளிர் விட தகுதியான முதிர்ந்த விதையானவனே மகன். 

இரவு ஒரு யானை. யானை எத்தனை அற்புதமான மிருகம். மிருகங்களில் அதற்கு இணையாக ஏதுமில்லை. கன்னங்கரிய பேருடல். அதன் எல்லா அசைவுகளும் அழகே. அது ஒரு மாபெரும் குழந்தை. ஆனால் அந்த மகத்துவத்திற்குள் மதம் ஒளிந்திருக்கிறது நண்பர்களே. மிருகங்களிலேயே யானையைப் பழக்குவதுதான் மிக மிக எளிதானது. ஆனால் ஒருபோதும் முழுமையாக பழக்கிவிடமுடியாத மிருகமும் யானைதான்.

யானைமேல் இருக்கும் மனிதன் உணரும் அகங்காரம் ஒன்றுண்டு. அவன் தன்னை ஒரு மகாராஜாவாக, சிம்மாசனம் மேல் அமர்ந்தவனாக உணர்கிறான். அவனறிவதில்லை அவன் மகத்தான அறியமுடியாமை ஒன்றின் மீது அமர்ந்திருக்கிறான் என்று. நம் முன்னோர் அதை உணர்ந்திருந்தார்கள். யானை மறப்பதேயில்லை என்று சாஸ்திரம் சொல்கிறது. யானை மன்னிப்பதேயில்லை என்கிறது. யானைப்பகை என்று அது குறிக்கப்பட்டிருக்கிறது.

இரவு ஒரு யானை. சாமரக்காதுகள் அசைய, கொம்புகள் ஊசலாட, பொதிகள் போல் காலெடுத்து வைத்து மெல்ல நடந்து வரும் யானை. கஜராஜவிராஜிதம் என்று காளிதாசன் சொன்னான். பேரழகியின் நடை யானையின் நடை போன்றது. ராத்ரி தேவியின் நடையல்லவா அது? யானை இதோ நம் வாசலில் வந்து நிற்கிறது. கன்னங்கருமையாக. பேரழகாக. வாருங்கள் அதன் வெண்தந்தங்களைப் பற்றிக்கொள்வோம். அதனிடம் காலெடு யானை என்று சொல்வோம்.ஏறியமர்ந்தால் இந்த உலகையே வென்றவர்களாவோம். ஆனாலும் அது யானை. அறியப்படமுடியாதது. ஏனென்றால் அது காடு. ஊருக்குள் இறங்கிவந்த காடல்லவா யானை? புதர்களின் இருளும் மலைப்பாறைகளின் கம்பீரமும் காட்டருவிகளின் ஓசையும் மலைச்சுனைகளின் குளிரும் கலந்தது யானை…

நூல் ஒன்பது – வெய்யோன் – 41 (நன்றி: ஜெயமோகன்)

முன்புலரியிலேயே கர்ணனின் அரண்மனைமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கி காலடிகள் ஓசையிட விரைந்து காவலரை பதறி எழச்செய்து “எங்கே? மூத்தவர் எங்கே?” என்றான் சுஜாதன். அவர்கள் மறுமொழி சொல்வதற்குள்ளாகவே கூடத்தில் ஓடி, படிகளில் காலடி ஒலிக்க மேலேறி இடைநாழியில் விரைந்தபடி “மூத்தவரே!” என்று கூவினான். கர்ணனின் துயிலறை வாயிலில் நின்ற காவலன் திகைத்தெழுந்து நோக்க “எங்கே மூத்தவர்? சித்தமாகிவிட்டாரா?” என்றான்.

கதவைத் திறந்த சிவதர் “கூச்சலிடாதீர்கள் அரசே, அரசர் அணிபுனைகிறார்” என்றார். “அணிபுனைவதற்கு நாங்கள் என்ன பெண்கொள்ளவா செல்கிறோம்? வேட்டைக்கு! சிவதரே, நாங்கள் வேட்டைக்கு செல்கிறோம்!” என்றான். “இதற்குமுன் வேட்டைக்கு சென்றதே இல்லையா?” என்றார் சிவதர். “பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் மூத்தவருடன் இப்போதுதான் நான் செல்லப்போகிறேன்” என்றான் சுஜாதன். கைகளைத் தூக்கி வில்லம்புபோல காட்டி “இம்முறை நானே தன்னந்தனியாக மதகளிறு ஒன்றை எதிர்கொள்ளப்போகிறேன்” என்றான்.

புன்னகையுடன் “நன்று” என்று சொன்ன சிவதர் “அதற்கு எளிய வழியொன்று உள்ளது” என்றார். “என்ன?” என்றான் சுஜாதன். “யானைக்குப் பிடிக்காத மணங்களை உடலில் பூசிக்கொள்வதுதான். தங்கள் உடலில் இருக்கும் இந்த யவனப்பூஞ்சாந்து காட்டில் உள்ள அத்தனை யானைகளையும் மிரண்டு இருளுக்குள் ஓடச்செய்துவிடும்” என்றார். சுஜாதன் உரக்க நகைத்து “ஆம், அதை நானும் எண்ணினேன். யானையை நான் எதிர்கொள்ள வேண்டும்… யானை என்னை எதிர்கொள்ளக்கூடாதல்லவா!” என்றான்.

உள்ளிருந்து கர்ணன் வெளிவந்து “என்ன, புலரியிலேயே பேரோசை எழுப்புகிறாய்?” என்றான். அவன் அருகே ஓடிச்சென்று ஆடை நுனியைப்பிடித்து ஆட்டி “வேட்டைக்கு! மூத்தவரே வேட்டைக்கு!” என்றான் சுஜாதன். “ஆம், வேட்டைக்குத்தான்” என்றபடி கர்ணன் “சென்று வருகிறேன் சிவதரே” என்றான். சிவதர் “படைக்கலங்கள் தேரில் உள்ளன” என்றார். “ஆம்” என்றபடி கர்ணன் நடக்க சுஜாதன் அவனுக்குப்பின்னால் ஓடிவந்து “நான் மூன்று விற்களையும் பன்னிரு அம்பறாத்தூணிகளையும் என் தேரில் வைத்திருக்கிறேன்” என்றான். “என்ன செய்யப்போகிறாய்? காய்கனிகளை அடித்து விளையாடப்போகிறாயா?” என்றான் கர்ணன்.

“மூத்தவரே” என்றபடி சுஜாதன் அருகே வந்து அவன் கைகளைப் பற்றி தன் தோளில் வைத்தபடி “நான் இம்முறை உண்மையிலேயே களிறு ஒன்றை எதிர்கொள்வேன்” என்றான். “நாம் களிறுகளை கொல்லச் செல்லவில்லை இளையோனே” என்றான் கர்ணன். “அவை வேளாண்குடிகளுக்குள் இறங்காமல் உள்காடுகளுக்குள் துரத்திச் செல்கிறோம். அவற்றின் நினைவில் சில எல்லைகளை நாம் வகுத்து அளிக்கிறோம். அங்கு வந்தால் வேட்டையாடப்படுவோம் என்பதை அவை தங்கள் குழந்தைகளுக்கு சொல்லும். அந்நினைவே காட்டுக்கும் விளைநிலத்திற்குமான எல்லையாக அமையும்” என்றான்.

“நரிகளுக்கும் ஓநாய்களுக்கும் அந்நினைவு நெஞ்சில் பதியாதா?” என்றான் சுஜாதன். “பதியும். ஆனால் அவற்றை மீறுவதைப்பற்றியே அவை எண்ணிக்கொண்டிருக்கும். யானைகள் நெறிகளுக்குள் வாழ்பவை.” அவன் கையை அசைத்து “ஏன்?” என்றான் சுஜாதன். “ஏனெனில் அவை மிகப்பெரிய உடல் கொண்டவை. ஒளிந்து கொள்ள முடியாதவை. அவற்றின் மேல் தெய்வங்கள் அமர்ந்துள்ளன.”

From Ashok's Blog: Good Explanation 

ஒப்புமை
“மறுமைக்கு வித்து” (நாலடி 183)

“மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்க்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்” (நாலடி 59)

“தொண்டர் அஞ்சு களிறு மடக்கி” (சம்பந்தர்.கேதாரம் 1)

“முழுக்கி யெழுவன மும்மத வேழம்
அடக்க அறிவெனும் தோட்டியை வைத்தேன்” (திருமந் 2034)

பரிமேலழகர் உரை
உரன் என்னும் தோட்டியான் ஒர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலங்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். 
விளக்கம் 
(இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந் நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.) 

மணக்குடவர் உரை
அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.

சாலமன் பாப்பையா உரை
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான். 

English Meaning - As I taught a kid - Rajesh
For the world to become a better place, every living being (especially human being) has to be become a better person. Hence, everyone's heart and mind have to become better. This can be achieved by developing mental vigor / strength and determination. This mental strength has to be used as a weapon against the 5 senses which mischievously fail us against our path to success / glory. This mental strength might seem like a small weapon (taming stick). But remember, an elephant is can be controlled using a small weapon. Similarly mental strength can be used to control the 5 senses. But, even to control a weapon, the elephant guard has to learn on how to use the small weapon against the huge elephant. Similarly, one has to learn how to use the mind (by meditation, perseverance etc) against the 5 senses.  If one does so, he or she can overcome the 5 sense and achieve success or attain Moksha in the life. Such a person is a like a healthy seed in this world.

But why is elephant used as a metaphor here? because elephant is like ignorance / illusion. Similarly our 5 senses are as big as elephant. our ignorance and illusion are also big. We all have ego in us because of this illusion and ignorance. So, we have to control that. But why elephant, not fox or lion - Because a fox cannot be controlled. It is always breaks the rules. But elephant can be trained to not cross borders. 

Similarly our mind can also be trained and practised. this can be achieved by controlling our 5 senses which can be done with the help of meditation.


Questions that I ask to the kid
Who is a good seed to the world? 
How can one become a good seed to the world?
What comes to your mind when you see a elephant mahot controlling a elephant using a small stick?