Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_019. Show all posts
Showing posts with label Athikaaram_019. Show all posts

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

குறள் 189
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

நோக்கி  - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

கொல்  - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

ஆற்றுங்கொல் – பொறுமையாக இருக்கிறது

வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ்

புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

புறன்  - puṟaṉ   புறம்¹. n. 1. See புறம்¹. 2.Slander; பழிச்சொல். கேளாம் புறன் (சி. போ.அவையடக். 9).--adv. Behind one's back;காணாதபோது. புறனழீஇப் பொய்த்து நகை (குறள்,182).- 

நோக்கிப் -  நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

புன் - புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

புன் - புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி

சொல்  - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

உரைப்பான் - உரை-த்தல் - urai-   v. tr. [K. ore, M. ura.]1. To tell, say, speak; சொல்லுதல் (திவா.) 2.To sound; ஒலித்தல் (திவா.)

பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை

முழுப்பொருள்
இந்தப் பூமியிற்கு என்று ஒரு அறம் இருக்கிறது. அவ்வறத்தை கருதியே (கருத்தில் கொண்டே) இவ்வுலகம் பலவற்றை மிகப் பொறுமையாக தாங்கிக்கொள்கிறது. "அகழ்வாரைத் தாங்கும் நிலம்" என்று அதனால் தான் திருவள்ளுவர் முன்னர் கூறியிருந்தார். 

பிறரைப் பற்றிப் புறம் பேசுவது மிகுந்த இழிச்செயல். எல்லாவற்றையும் பொறுக்கும் இவ்வுலகிற்கே புறம் பேசுவோரை பொறுத்தல் மிக கடினமான/கொடுமையான ஒன்று. ஆனால் என்ன செய்வது இவ்வுலகம் தன் அறத்தை பேணுவதற்காக இவர்களையெல்லாம் விட்டுவைத்திருக்கிறது. இல்லையென்றால் இவ்வுலகமே இவர்களை தண்டித்திருக்கும் என்று கூறாமல் கூறுகிறார் திருவள்ளுவர். புறம் அத்தகைய இழிவான செயல். ஆதலால் புறம் பேசாதே.

உபரி கருத்து : இவ்வுலகம் புறம் பேசுவோரையும் மற்ற இழிச்செயல்களை செய்வோரையும் தாங்கிக்கொள்ளவில்லையென்றால் இவ்வுலகத்தில் எத்தனை பேர் எஞ்சுவர்?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்! (எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.' இவை ஐந்து பாடடானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும். இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?.

சாலமன் பாப்பையா உரை
பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!

Thirukkural - Management - Avoiding Backbiting
The earth considers that to bear even a person who practices harmful acts of talking the negatives of others in their absence is its responsibility, Kural 189.

The earth bears a scandalmonger 
Only for the sake of duty.

As the earth fulfills its responsibility, we, with all our education, learning, knowledge, and common sense, need to be more responsible not to give such a chance to the earth.

English Meaning - As I taught a kid - Rajesh
This earth has a principle/rule/duty. Only considering that principle this world is tolerating and living with many injustice stuffs [just like the land bears those archeologists despite they hit the ground with heavy equipment]. Though the world tolerates all these injustice stuffs, yet. for this earth, it is difficult to tolerate backbiting / talking behind the back / gossiping etc. If not those principles, the earth would have punished these people. 

Talking behind back, gossiping are very disgusting and trivial stuffs. Do not do that.

Questions that I ask to the kid
What if earth isn't tolerant?

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

குறள் 188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]

பொருள்
துன்னுதல் - பொருந்துதல்; மேவுதல்; அணுகுதல்; செறிதல்; செய்தல்; அடைதல்; ஆராய்தல்; தைத்தல்; உழுதல்.

துன்னியார் - அடுத்தோர்; நண்பர்; tuṉṉiyār   n. துன்னு¹-.Friends, relations, adherents; நண்பர். மன்னர்திருவு மகளி ரெழினலமுந் துன்னியார் துய்ப்பர்(நாலடி, 167).  

குற்றமும் - குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.

தூற்றும் - தூற்றுதல் - சிதறுதல்; தூசுபோகத்தானியங்களைத்தூவுதல்; புழுதிமுதலியவற்றைஇறைத்தல்; பரப்புதல்; அறிவித்தல்; பழிகூறுதல்; வீண்செலவுசெய்தல்.

மரபினார் - மரபு - முறைமை; சான்றோரின்சொல்வழக்குமுறை; பழைமை; வமிசம்; பாரம்பரியம்; இயல்பு; இலக்கணம்; நல்லொழுக்கம்; பெருமை; பாடு; நியாயம்; வழிபாடு; பருவம்.

என்னை - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு.

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

என்னைகொல் – என்ன செய்வாரோ

ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர்

மாட்டு - அகன்றுகிடப்பினும் அணுகியநிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற்கொண்டு கூட்டிய சொல்முடிவு கொள்ளும்முறை; அடி; சொல்.
māṭṭu   v. defect. used only in the future and negat.; (மாட்டுவேன் மாட்டுவாய் etc.), I can, I shall be able to do it.

மாட்டு - v. noun. A beat, a stroke, as நல்லமாட்டு, good blows. 2. Referring.

முழுப்பொருள்
தன்னுடன் பொருந்திச் செறிந்த நட்பினை உடைய நண்பரின் குற்றங்களைப் பற்றிப் பிழைகளைப் பற்றி அவர் இல்லாத பொழுது புறம் பேசி அவரை அவருடைய பிம்பத்தை சிதறடிக்கும் இயல்புடைவாரென்றால் அவர் அயலாரைப் பற்றி மற்றவரைப் பற்றி என்ன தான் பேசமாட்டார்கள் அல்லது அயலவருக்கு எத்தகைய தீங்கையும் செய்யத்தக்கவர்கள் தானே? 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? ('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது என்பது சொல்லெச்சம்'. 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார் செறிவில்லாதார்மாட்டு யாங்ஙனஞ் செய்வாரோ? இது யாவரோடும் பற்றிலரென்றது.

மு.வரதராசனார் உரை
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.

சாலமன் பாப்பையா உரை
தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

குறள் 187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]

பொருள்
பகு - paku   II. v. i. part, divide, பிரி; 2. ramify, கிளை; பகாப்பதம், a primitive, indivisible word; பகுபதம், a compound word.

பகுத்தல் - பங்கிடுதல்; வகைப்படுத்தல்; தெளிவாய்க்கூறுதல்; கொடுத்தல்; வெட்டுதல்; பிடுங்குதல்; கோதுநீக்குதல்.

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை

சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

பகச் சொல்லிக்  -  பிறரைப் பிரிக்கும்படியாக அல்லது பிறர் தம்மை பிரிந்து செல்லும்படி புறம் பேசி; மாறுபாடாக பேசி ; 

கேளிர்ப் - தோழர்; உறவினர்.

பிரிப்பர் - பிரித்தல் - பிரியச்செய்தல்; முறுக்கவிழ்தல்; பகுத்தல்; வகுத்தல்; கட்டவிழ்தல்; பங்கிடுதல்.

நகச் - நகுதல்- சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

சொல்லி - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

நட்பு  - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

ஆடல் - அசைகை; கூத்து துன்பம் செய்கை ஆளுகை விளையாட்டு புணர்ச்சி சொல்லுகை; நீராடல் போர் வெற்றி

தேற்று - தெளிவு; தெளிவிக்கை; தேற்றாமரம்.

தேற்றாதவர் - தெளிவு இல்லாதவர் 

முழுப்பொருள்
தன்னுடைய நண்பரைப் பற்றி புறம் பேசி அந்நண்பரை அந்நண்பரின் நண்பரிடம் இருந்து பிரிப்பார் என்றால் அவர் எத்தகைய நபர்? நட்பென்பது உளமார சிரித்து மகிழ்ந்து பேசி உறவாடி உறவை வளர்ப்பது என்ற தெளிவை //அறிவை உணராதவர்கள். 

நட்பென்பது கூடிப்பேசி சிரித்து மகிழ்ந்து உறவை வளர்ப்பது. அதனை அறியாதவரே புறம் பேசி நட்பைப் பிரிப்பார்கள். 

உளமார சிரித்து மகிழ்ந்து பேசிய ஒரு நண்பனை பற்றியே புறம் பேசி மற்றவரிடம் பிரித்தார் என்றால் மற்ற நண்பர்களை பற்றியும் புதிதாக நட்புக்கொள்பவர்களைப் பற்றியும் புறம் பேச மாட்டார் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. சொல்லப்போனால் புறமே பேசுவார். ஆதலால் அத்தகையவரிடம் நட்புக்கொள்ளாதே. 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”..........................மன்னரை
நயனாடி நட்பாக்கும் வினைவர்போல்” (கலி 46:7-8)


பரிமேலழகர் உரை
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும் ஆற்றால் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார். (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கருத்தான், 'அயலாரோடும்' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல். "கடியுமிடந் தேற்றாள் சோர்ந்தனன் கை" (கலி. மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்: மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வுபண்ண மாட்டாதார். இது நட்டவரை யிழப்பர் என்றது.

மு.வரதராசனார் உரை
மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

சாலமன் பாப்பையா உரை
கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.

Thirukkural - Management - Avoiding Backbiting
Those who do not know how to mend broken relationships and build long lasting relationships by highlighting the positive qualities of others, will damage the existing relationships by speaking the negative qualities of others. Kural 187 elaborates on this weakness. 

Those who Cannot laugh and matte friends
Can only slander and matte foes?

Backbiting is a major cause for interpersonal conflicts in families, workplaces, and societies. Keep the people who backbite at arms distance for a healthy relationship with everyone.

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

குறள் 186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

பழி -  குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

கூறுவான் - கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்.

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

உள்ளும் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

திறன் -  திறம் - கூறுபாடு;  வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.

தெரிந்து - தெரிந்து வினையாடல் - அமைச்சர் முதலாயினார் செய்யவல்ல செயல்களை ஆராய்ந்து அவற்றின் கண்ணே அவரை ஆளும் திறம்.

கூறப்படும் கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்.

முழுப்பொருள்
புறம் கூறுபவன் நன்மையை பேசமாட்டான். குற்றங்களையும் தீயவற்றையுமே  பேசுவான். சமூகத்தில் இருக்கும் நற்பெயரை கெடுக்க இல்லாதவற்றையெல்லாம் கற்பனையாக பொய்யாக கூட பேசுவான். 


நீ ஒருவன் முகத்திற்கு நேராக ஒன்றும் புறத்தில் ஒன்றும் பேசினால் உன்னுடைய குற்றங்களை பிறர் பிறரிடம் கூறுவார்கள். ஏனெனில் உன்னுடைய புறம் கூறும் குணத்திற்காகவே உன்னுடைய குற்றங்களையும் புறத்தில் மட்டும் அல்ல நேரிலேயும் பேசுவர். 

நீ புறம் பேசுவதை அறிந்த அந்த சம்மந்தப்பட்ட நபரோ அல்லது நீ புறம் கூறுவதை கேட்டுக்கும் நபரோ உன்னை ஆராய்ச்சி செய்வர். உன் குற்றங்களில் எவற்றை கூறினால் உனக்கு அதிக இழுக்கும் வருத்தமும் வரும் என்று ஆராய்ந்து அதை தேர்ந்தெடுத்து உன்னைப்போல் புறத்தில் அல்லாமல் உன் முகத்திற்கு நேரே கூறுவர். அவன் ஒன்றை மட்டும் அல்ல பலகுற்றங்களை வரிசைப்படுத்தி கூறுவான். கூனி குறுகி நிற்க நேரிடும். நீ வீணாக இழுக்கு அடைவாய். அவன் திறனுடன் தேர்ந்து எடுத்து கூறும் குற்றங்கள் பொய்யாக இருக்காது. உண்மையாக இருக்கும். அதனை நீ மறுக்க முடியாமல் இழுக்கு அடைவாய். 

பிழை செய்யாதவர்கள் யாருமில்லை. பிறர் செய்ததுபோல நீயும் பிழை செய்திருப்பாய். ஆதலால் புறம் பேசாதே. அது உனக்கே வினையாக மாறும். 

பிறர் குற்றங்களை சொல்லும் பொழுது நமக்கு மகிழ்ச்சி. அப்படி கூறும்பொழுது ஒருதடவை நிறுத்திவிட்டு யோசியுங்கள். நான் உத்தமனா என்று? இல்லை என்றால் புறம் பேசாதீர். குறைந்தது புறம் பேசும் குற்றம் குறையும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும். ('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.).

மணக்குடவர் உரை
பிறனுடைய பழியைச் சொல்லுமவன் தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்

மு.வரதராசனார் உரை
மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

Thirukkural - Management - Avoiding Backbiting
Never ever talk of any negative qualities and negative actions of someone in his absence. Remember that other people also highlight the negative qualities and actions of a person who has the habit of talking of the negative qualities of others in their absence. It is said ’as within so without.' More than that talking against people in their absence is a tendency for some people. When a person points out the negatives of others, others will point out his own negative qualities, warns Kural 186.

A slandered invites a searching censure
Of his own faults.

Beware, 'If a person can talk to you against someone, he can talk to someone against you,' because it is a tendency for some people and they enjoy doing that. 

English Meaning - As I taught a kid - Rajesh
If one talks behind the back of others, backbites, gossips, then the person hearing it would first try to find the mistakes in the person talking and meticulously spread it across the world. Also, this world will see a backbiting person as a untrusty /unreliable, unskilled, characterless, strengthless, weak person. We loose more by backbiting. Hence, one should not backbite / gossip / talking behind others. 

Remember, everyone does mistakes in this world or everyone has flaws in this world. At least do not do the mistake of talking behind back.

Questions that I ask to the kid
What will others do when you backbite?
How will you be seen by others when you backbite?

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

குறள் 185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]

பொருள்
அறம்  - தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல்.

சொல்லும்  - சுட்டிக்காட்டும் / எடுத்துக் காட்டும் / காட்டிக் கொடுத்து விடும்.

நெஞ்சத்தான் -  நெஞ்சம் (மனம்) உடையவனுக்கு

அன்மை  - aṉmai   s. (அல்) negation of a quality, அல்லாமை,  ; தீமை

புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்; puṟam   s. the side of a thing, பக்கம்; 2. the outside, வெளி; 3. the back, முதுகு; 4. back-biting, புறணி; 5. a tract or part of a country, இடம்; 6. side, party, பட்சம்; 7. a surrounding wall or fortification, சுற்றுமதில்; 8. a form of the 7th case, ஏழனுருபு; 9. valour, bravery, வீரம்.

சொல்லும் -  சுட்டிக்காட்டும் / எடுத்துக் காட்டும் / காட்டிக் கொடுத்து விடும்.

புன்மையால் - புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

காணப்படும் - பிறர்க்குத் தெரியவருகிறது; உணரலாம்

முழுப்பொருள்
ஒருவன் அறத்தைப் பற்றி ஆயிரம் பேசலாம் அடுத்தவற்கு அறிவுரை சொல்லலாம் சொற்பொழிவு ஆற்றலாம். ஆனால் மனதினால் அறமல்லாது (அறத்திற்குத் தொடர்பல்லாது) தீயனவற்றை தீமையை கொண்டவனா என்பதை அறியவேண்டுமா ? அவன் புறத்திலேப் பேசும் சொற்களின்மூலம் அவனுடைய மனஇழிவை கண்டுக்கொள்ளலாம். 

எவ்வளவு அழகாக பேசினாலும் மனதில் இருந்து வரமால் அது வாயில் இருந்து வந்தால் அந்த சொற்களுக்கு மதிப்பு குறைவு தான். ஆதலால் ஒருவருக்கு மனத்தூய்மை இல்லை என்பதை அவர் புறம் பேசுவதில் இருந்து நாம் அறிந்துகொள்ளலாம். ஒரு சமூகம் அறிவைவிட ஒழுக்கத்தை அதிகம் மதிக்கும். புறம் கூறுவது ஒழுக்கமற்றதாகும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றானல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே அறியப்படும். (மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும். இஃது இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது

மு.வரதராசனார் உரை
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

சாலமன் பாப்பையா உரை
அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின்

குறள் 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]

பொருள்
புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

கூறி - கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்.

பொய்த்து பொய் - மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கையானது; சிறுசிறாய்.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

வாழ்தலின் - வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

சாதல் - cātal   n. சா-. Death; இறப்பு சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும்(சீவக. 269).  


அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

கூற்றும் - கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்.

ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

தரும் - தருதல் - கொடை,  v. noun. Giving, &c. See தா, v.

முழுப்பொருள் 
பொதுவாக தற்கொலை போன்றவை கொழைத்தனம் என்று நாம் சொல்வோம். ஆனால் அப்படிப்பட்ட இறப்பு உயர்வு தருமா? இறப்பு/தற்கொலை சிறந்தது ஆகுமா? அப்படியானால் எப்பொழுது? 

தற்கொலை சிறந்ததாகும் என்று அறம் கூறும் நூல்கள் கூறுவதாக திருவள்ளுவர் கூறுகிறார். எப்பொழுது? பிறரை பற்றி புறத்தில் தீங்கை கூறி கண் முன்னே பழகும் பொழுது பொய்யாக இனியவர் போல் பேசுவதும் பழகுவதை காட்டிலும் சாதல் சிறந்தது.  ஏனெனில் முகத்துக்கு நேரே கூற தைரியம் இல்லாத நேர்மை இல்லாத கோழைத்தனம் புறம் பேசுவது ஆகும். அதனை போன்ற கீழ்மையான செயல் வேறெதுவும் இல்லை. புறம் பேசுபவர்கள் நோயினை பாய்ச்சும் கிருமிகளை போன்றவர்கள். இவர்கள் ஆபத்தானவர்கள். இவர்கள் உயிர்வாழ்வதை விட இறப்பதே இவ்வுலகிற்கு செய்யக்கூடிய நன்மையாகும். அதனால் தான் அற நூல்கள் புறம் கூறுபவர்கள் இறந்தால் அது இவ்வுலகிற்கு நன்மையே (அதாவது ஆக்கம் தரும்)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும். (பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.).

மணக்குடவர் உரை
காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.

மு.வரதராசனார் உரை
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

குறள் 182
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே 
புறனழீஇப் பொய்த்து நகை
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]

பொருள்
அறன் - aṟaṉ   n. அறம் Sacrificer, asperforming a sacred duty; வேள்விமுதல்வன் (பரிபா. 3, 5.)  ; வேள்விமுதல்வன்; அறக்கடவுள்

அழீஇ - அழி - கேடு; வைக்கோல் வைக்கோலிடும்கிராதி; கிராதி வண்டு மிகுதி வருத்தம் கழிமுகம் இரக்கம்

அல்லவை - அறம் அல்லாதவை; பாவச் செயல்கள்; பயன் அல்லாத செயல்கள்; allavai   n. அல்¹. 1. Sin, evil;பாவம். அழுக்காற்றி னல்லவை செய்யார் (குறள், 164).2. Uselessness, fruitlessness; பயனின்மை. (பிங்.)

செய்தலின் - செய்வது

தீதே - தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு.

புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

புறன்  - puṟaṉ   புறம்¹. n. 1. See புறம்¹. 2.Slander; பழிச்சொல். கேளாம் புறன் (சி. போ.அவையடக். 9).--adv. Behind one's back;காணாதபோது. புறனழீஇப் பொய்த்து நகை (குறள்,182).

அழீஇப் - இழிவாக இப்பொழுது பேசுதல்

பொய்த்து - அசத்தியம்; (எ. கா.) பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ (குறள். 938); மாயை (W); போலியானது (W.); நிலையாமை; (எ. கா.) புற்புதமே யன்ன பொய்க்குடி வாழ்க்கை யை (திருநூற். 3); உட்டுளை; (எ. கா.) பொய்பொரு முடங்குகை (சிலப். 15, 50); மரப்பொந்து (பிங்.); செயற்கையானது (பேச்சு வழக்கு); சிறுசிராய் (W.); உண்மை இல்லாதது, உண்மைக்குப் புறம்பானது

நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.
நகை - (வி)சிரி; பழி

முழுப்பொருள்
எனக்கு இக்குறளுக்கு இரண்டு பொருள்கள் தோன்றுகின்றன (ஏனோ தெரியவில்லை சமீபகாலமாக சில குறள்களுக்கு இரு அர்த்தங்கள் தோன்றுகின்றன. வாசிப்போர் அவர்களுக்கு சரி என்று படுவதை எடுத்துக்கொள்க)

1) அறத்தை அழித்து பாவச் செயல்களை செய்வதைப் போன்று (அல்லது அதனினும்) தீயது, கேடு விளைவிக்ககூடியது பிறரைப்பற்றி அவர் இல்லாதப் பொழுது தவறாகப் பேசிப் பின்பு அவர் இருக்கும்பொழுது செயற்கையாக நல்வற்றைப் பேசுவது (முகஸ்துதி செய்வது) என்ற பழி. நகை என்ற சொல்லுக்கு பழி என்ற பொருளும் உண்டு. ஆதலால் ஒருவர் புறம் பேசுவது நகைப்புக்கு /சிரிப்புக்கு என்ற அர்த்தத்திலும் மற்றொன்று பழி என்ற அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ளலாம்.

2) பிறரொருவர் அறத்தை அழித்து அறத்திற்கு புறம்பாக பாவச்செயல்களை நமக்கு செய்தாலும் அவறைப் பற்றி நாம் புறம் பேசுவது தீயது ஆகும். அதாவது அவறைப்பற்றி தவறாக அவரது முதுகுக்கு பின்னால் அவரில்லாதபோது பேசுவது தீயது ஆகும். கேடு விளைவிக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை - ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல். (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.).

மணக்குடவர் உரை
அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல். இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.

மு.வரதராசனார் உரை
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.


Thirukkural - Management - Avoiding Backbiting
Though duality is the way of the universe, dual nature must not be the way of an individual. One's tongue should not move according to its whims and fancies just because it is flexible. Sharing with a person the negative qualities of another person in his absence and talking the positive qualities of the same person in his presence are too dangerous. They are more harmful than committing a crime, advices Kural 182.

Worse thon scoffing at virtue and committing a sin
Is to slander behind one's back and smile to his face.

அறங்கூறான் அல்ல செயினும்

குறள் 181
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
அறம் - aṟam   n. அறு-. 1. Happiness;சுகம். (சம். அக. Ms.) 2. That which is salutary; இதம். அறத்துறை மாக்க டிறத்திற் சாற்றி(சிலப். 14, 28).
அறம்புறமாகப்பேசு-தல் aṟam-puṟam-āka-p-pēcu-, v. intr. அறம் + புறம் + ஆ- +. Tospeak disrespectfully, vulgarly; மரியாதையின்றித் தாழ்வாகப் பேசுதல். (J.)

கூறான் - கூறாதவன், பேசதாவன்

அல்ல - அறத்திற்கு புறம்பான பாவங்களைச்

செயினும் - செய்தாலும்

ஒருவன் - அத்தகையவன்

புறம் வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்; puṟam   s. the side of a thing, பக்கம்; 2. the outside, வெளி; 3. the back, முதுகு; 4. back-biting, புறணி; 5. a tract or part of a country, இடம்; 6. side, party, பட்சம்; 7. a surrounding wall or fortification, சுற்றுமதில்; 8. a form of the 7th case, ஏழனுருபு; 9. valour, bravery, வீரம்.

கூறான் - கூறாதவன், பேசதாவன்

என்றல் - என்றால்

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
உலக நூல்கள் அனைத்தும் எந்தெந்த காரியங்கள் அறம் என்று சொல்கின்றன. அத்தகைய அறச்செயல்களை செய்தால் நன்மை பயக்கும் மற்றும் வீடு அடைய ஏதுவாக இருக்கும்.  இவ்வுலகலில் எல்லோரும் அறத்தை பின்பற்றி வாழ்வதில்லை. ஆனால் புறம் பேசுவோர் பெரும்பான்மையில் உண்டு என்று திருவள்ளுவருக்கு தெரியும் போலிருக்கு. 

ஒருவன் வாழ்வில் செய்யவேண்டிய அறச்செயல்களை செய்யாமல் இருந்தாலும், அறச்சொற்களை பேசாமல் இருந்தாலும், (அறம் என்ற சொல்லுக்கு நேர்மை என்றும் பொருள்) நேர்மையான சொற்களை நேர்பட பேசாமல் இருந்தாலும், முகத்திற்கு நேராக நேர்மையான கருத்துக்களை பேசாமல் இருந்தாலும், முகத்திற்கு நேராக (முகஸ்தூதியோடு) வஞ்சனையாக பேசினாலும் (வஞ்சமாய் பேசினால் மனிதன் அறிந்துக்கொள்ள முடியும்), அறம் அல்லாதாவற்றை செய்தாலும், நேர்மையற்ற காரியங்களில் ஈடுபட்டாலும் பரவாயில்லை அக்தொருவன் முதுகிற்கு பின்பு நின்று புறம் பேசாமல் இருந்தால் என்று. அக்தொரு அறமற்றவன் புறம் பேசாமல் இருந்தால் அவனுக்கு அது நன்மையே பயக்கும் என்கிறார் திருவள்ளுவர். 

இங்கே புறம் பேசுவது என்றால் நாம் இல்லாத போது நமது உற்றாரிடம் நம்மை பற்றி நேர்மையற்ற சொற்களை கூறுவது, நம்மை பற்றி அன்னியர்களிடம் கூறுவது நாம் இல்லாத பொழுது ஆகும். 

இங்கே திருவள்ளுவர் புறம் பேசாமல் இருந்தால் போதும் அறமற்றவற்றை செய்யலாம் என்று சொல்லவில்லை. அறமற்றவருக்கே புறம் பேசாமல் இருந்தால் நன்மை பயக்கும் என்றால், அறத்துடன் இருப்பவர் புறம் பேசாமல் இருந்தால் எவ்வளவு நன்மை பயக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

பாரதியாரும் தன்னுடைய பாப்பா பாட்டிலே, “இளமையில் கல்” என்பதற்கு ஏற்றவாறு “புறஞ்சொல்லாலாகாது பாப்பா” என்பார்.

உலகநாதர் தன்னுடைய உலகநீதி என்ற நூலில் “போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்”,  “காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம், புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம், புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்” என்று சொல்லுகிறார்.

வள்ளாலார் சுவாமிகள் “உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்று சொல்கிறார்.

எல்லா நீதி நூல்களும் புறங்கூறாமையை இழிந்து உரைப்பதோடு, புறங்கூறுவாரோடு சேருவதையும் வேண்டாமென்கின்றன.

பெரியோர் பெருமையைப் பற்றி பேசும் அதிகாரத்தில், நாலடியார், “பிறர் மறையின்கட் செவிடாய் திறனறிந்து ஏதிலாரிற்கட் குருடனாய் தீய புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும் அறங்கூற வேண்டா அவற்கு” என்னும். அதாவது தீமைதரும் புறங்கூற நேரின் ஊமையாகிவிட வேண்டுமென்ற குணமுடையவரே மேலோர் என்கிறது இப்பாடல்.  “இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும் பழிப்புறம் சொல்லாப் பண்பினன்” என்று புறங்கூறுதலை பழித்து, கூறாததை பண்பு என்றும் சொல்கிறது பெருங்கதையில் வரும் இவ்வரிகள்.

ஒப்புமை
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு (நாலடி 158)

இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும்
பழிப்புறம் சொல்லாப் பண்பினன் (பெருங் 1.36:9-10)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, காணாதவழிப் பிறரை இகழ்ந்து உரையாமை. மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், இஃது அழுக்காறாமை வெஃகாமைகளின்பின் வைக்கப்பட்டது.)

ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றல் இனிது - பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று, (புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம், இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

Thirukkural - Management - Avoiding Backbiting
One of the limiting and self-injuring habits is talking the negatives of people behind their backs. “Backbiting,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 74), “is unkind and unpleasant talk about somebody who is not present.” A universally damaging habit is unknowingly practiced by most of us. An employee complains to his spouse against his superior and complaints to his colleagues against his spouse. Ironically, neither his spouse can influence the behavior of his boss, nor his colleagues can influence the behavior of his spouse. This situation must sound familiar to you.

Rarely there are exceptions to this condescending, if that is the right word, practice. One person commented, “Backbiting is lubrication for our gossips. Without backbiting, we cannot continue our conversations here. We cannot pass time.” People, for sure, cannot pass their time without getting into it. Though everyone talks against talking behind other people, everyone enjoys doing that.

People spend considerable time talking against others and suddenly they become philosophical or enlightened and say ‘there is no point in backbiting as it is meaningless and waste of time.' They get into backbiting again and become philosophical again. Gossiping and regretting are regular practices for some people. 

Valluvar anticipated the irrelevance of talking against people in their absence and relevantly devoted a chapter to the ills of backbiting. Kurals that warn us of the negative consequences of backbiting and educate us to avoid resorting to that practice. Though a person does not do any virtuous act, he will be considered a pleasant person, if he does not talk ill of others in their absence, as in Kural 181. Not talking ill of someone in someone's absence is better and more pleasant than doing any positive act.

Even to ignore virtue and to sin
Is not so bad as to earn a slanderer's name 

English Meaning - As I taught a kid - Rajesh
Even if one does not speak positive things or truth, people will still consider him better or fine if he doesn't gossip or talk behind the back. Because gossiping or backbiting is considered characterless as it is unproductive, destructive and creates a negativity.

Questions that I ask to the kid
When will this world get consider you a better person even if you don't do speak positive things? Why gossiping is considered bad?

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங்

குறள் 190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் 
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஏதிலார் - அன்னியர், பகைவர்
குற்றம்போல் - செய்கின்ற தவறுகளை, குற்றங்களை, பிழைகளை
தம் - தான் செய்கின்ற
குற்றம் - தவறு, பிழை, குற்றம்
காண்கிற்பின் - காணும் வல்லமையும் மனதும் இருட்ந்தால்
தீது - தீமையும், வருத்தமும் 
உண்டோ - இருக்குமோ?
மன்னும் - மன்னில்
உயிரக்கு  - வாழும் உயிர்களுக்கு

முழுப்பொருள்
மற்றவர்களின் குற்றங்களை தேடுவதில் எல்லோரும் வல்லவர்கள். நுழைந்து நுழைந்துத் தேடுவோம். மற்றவர்களுடைய பிழைகளுக்கு பூதக்கண்ணாடி பிடிப்பதில் கெட்டிக்காரர்கள். அதனால் பயன் ஒன்றில்லை. அப்படி பிறர்குற்றம் காண முடிந்தவர்களால் தன்னுடைய குற்றங்களை பார்க்க முடியும். அப்படி பார்த்தார்கள் எனில் அவர்கள் பிறர் குற்றங்களை புறம் பேசி நிலைமையை இன்னும் மோசமாக்க மாட்டார்கள். அதனால் இவ்வுலகிற்கு நன்மையே (ஏனெனில் புறம் பேசினால் நிலைமை மோசமாகும். தீமையே விளையும். அதனை காட்டிலும் பேசாதிருப்பது நல்லது). தீது இல்லை. புறம் பேசுவதே தீது என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

“பாட்டு எழுதிப் பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். இதில் நீர் எந்த வகை என்பது உமக்கே தெரியும்” என்ற “திருவிளையாடல்” திரைப்பட வசனத்தை யாரால் மறக்க முடியும்? சிலர் குற்றம் கண்டுபிடிப்பதை ஒரு முழு நேரத் தொழில்போலச் செய்வார்கள். எத்தனை குற்றம் கண்டுபிடிக்கிறார்களோ அதற்கு ஏதோ வெகுமதி இருப்பது போலச் செய்வார்கள்! இக்குணாதிசியம் நம்மிடம் இருந்தால் இக்குறள் நம்மக்கானது. நாம் நம்மை திருத்திக்கொள்ளவேண்டும். 


உதாரணமாக சொன்னால் அவன் கோபம் படுவான் என்று சொல்லுவோர் அவர் அவர் வீட்டில் தன் தாய் தந்தை சகோதர்கள் மனைவி கணவன் பிள்ளைகளிடம் மிகுந்த கோபத்துடன் நடத்துக்கொள்பவராக இருக்கக் கூடும். அவர் முதலில் தன்னுடைய கோபத்தை விட்டுவிட்டால் அவர் வாழ்வு மேலும் அமைதிப் பெறும்.

நமக்கு அடுத்தவர் தவறுகள் எப்போதுமே பெரியதாகத் தெரியும். ஆனால் நம் தவறுகள் நம் கண்ணுக்குத் தெரியாது. 

தராசில் பிறரை பிறர் குற்றங்களை ஏற்றி இவ்வுலகிற்கு காண்பிப்பதற்கு முன்பு தன்னை நிறுத்தி பார்த்துக்கொண்டால் நல்லது. ஆனால் அதனை செய்ய பெரும்பாலும் தயங்குகிறோம். அது அரிய செயல். அதனால் தான் தன் குற்றங்களை முதலில் கண்டு அதனை நிவர்த்தி செய் என்கிறார் திருவள்ளுவர்.

மேலும் பிறர் குற்றங்களை பேசுவது நேரத்தை வீண் செய்வதாகும். அதற்கு பதிலாக அந்நேரத்தை (பிறர் குற்றங்களை காணுவதுப்போல) உன் குற்றங்களை நடுவுநிலைமையுடன் காண நீ தொடங்கினால் அதற்கான தீர்வுகளையும் காணுவாய். அதனை திருத்திக்கொள்வாய். நீ உருப்படுவாய். உனக்கு இம்மையிலும் (இப்பிறவியிலும்) மறுமையிலும் (அடுத்தபிறவியிலும்) நன்மையே (இன்பம்). அதனால் உன் சுற்றத்தில் இருப்பவருக்கும் நன்மையே. ஆதனால் இவ்வுலகிற்கும் நன்மையே. 

உலகில் குற்றங்களை கண்டுப்பிடிப்பது அவ்வளவு கடினமான செயல் அல்ல ஏனெனில் அது சுவாரசியமான ஒன்று. அதுவும் பிறருடைய குற்றங்களை காண்பது அவ்வளவு கடினமும் அல்ல. ஏனெனில் பிறருடைய குற்றங்கள் நம் கண் முன்னே இருப்பது. இதை அப்படி செய்து இருக்கலாம் அதை இப்படி செய்து இருக்கலாம் என்று புறம் கூறலாம். ஆனால் பிறர் தவறு செய்த பொழுது அவர்களுடைய சூழ்நிலைகள், எண்ணங்களை மற்றவர் அறிய வாய்ப்பு மிக குறைவு. அது மட்டுமின்றி அடுத்தவர் குற்றங்களை காண்பதில் ஒரு மகிழ்ச்சியும் அடைவர். எள்ளி நகையாடவும் செய்வர். மற்றவர் குற்றங்களை கண்ட பிறகு அதில் இருந்து மீண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றில்லை. ஆதலால் அது எளிதும் கூட.

அதுவே தன்னுடைய குற்றங்களை காண்பது அவ்வளவு எளிதும் அல்ல. நாம் பல வேலைகளில் இருக்கிறோம். ஆதலால் நமது குற்றங்களை காண நேரமும் இல்லை. மனதும் இல்லை. அப்படியே கண்டால் நமது திமிர் பிழைக்கான காரணத்தை சூழ்நிலையின் மீதும் பிறரின் மீதும் போடும். தன்னை பற்றிய உயர் பிம்பம் உடைந்துப்போகும். ஆதலால் பிழைக்காண்பது என்பது மகிழ்ச்சியும் தராது. அது துன்பத்தையே தரும். ஒரு தவறை உணர்ந்தபின்பு அதனை மறுபடியும் செய்யாமல் இருப்பதே சிறந்தது. ஆதலால் அதற்கு நிவர்த்தியான காரியங்களை செய்ய வேண்டும். அது அவ்வளவு எளிதான ஒன்றும் அல்ல.

ஆதலால் தான் தன் குற்றங்களை காண முடிந்தவனால் குற்றம் செய்ததால் வரும் தர்மசங்கடங்களை உணர்வான். அதனை களையெடுக்க முடிந்தவனால் அதனை எப்படி எதிர்க்கொள்வது எப்படி சரி செய்வது என்பது தெரியும். அதனால் அடுத்தவர் தவறு செய்தால் அதனை ஊதி பெரிதாக்காமல் அதனை பக்குவமாக அவரிடம் நேரடியாக கூறி அதில் இருந்து மீண்டுவர உதவுவார்கள்.

நமக்குத் தேவை, நம்மைப் பற்றிய சுய ஆராய்ச்சி. அதன் மூலம் வளர்ச்சி, முன்னேற்றம். நாம் என்னென்ன தவறுகள் செய்கிறோம்? ஏன் அப்படி செய்கிறோம்? மீண்டும் அதுபோலத் தவறுகள் நிகழாமல் இருக்க என்ன செய்வது? என்பது பற்றி யோசிக்க வேண்டும். அடுத்தவர்களைப் பற்றிக் குற்றம் கூற நினைக்கும் போதெல்லாம் நாம் நம்மைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். நாமும் அதே போன்ற தவறுகளைச் செய்கிறோமா? என்று யோசித்து நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும். இந்த முயற்சியில் நாம் சிறந்த மனிதர்களாகி விடுவோம். மற்றவர்களின் குறைகளைப் பார்ப்பது போல நம்முடைய குறைகளைப் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.

அப்படி ஒவ்வொருவரும் செய்வதனால், வரக்கூடிய மன சஞ்சலங்கள் குறைந்து மனம் அமைதி அடையும். சஞ்சலத்தால் வரக்கூடிய தீமையும் குறையும்.


இதனால் தான் என்னவோ பிறரை காணாமல் தன்னை யார் என்று கொண்டார் மாணிக்கவாசகர் போலும்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
திருக்கோத்தும்பி -  சிவனோடைக்கியம் - எட்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்
நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி
ஊனாரும் உடைதலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ
திருச்சிற்றம்பலம்

Who am I? Who is the mind? Who is the wisdom? Who will know me?,
if the Lord of the celestials did not take me in His fold!
Oh king bee, go and sing at the honeyful lotus (feet) of
the Lord of thiruvambalam Who takes alms in the harebrained
fleshy broken skull!

பொருள்: நான் யார்? என் உள்ளம் யார்? என் ஞானங்கள் யார்? என்பதை யார் அறிவார் என்று மற்றவர்களை கேட்கிறார். இறைவன் ஆண்ட பிறகு தான் நான் யார் என்று எனக்கு தெரிகிறது. அப்படி ஆளாமல் விட்டிருந்தால் நான் யார் என்றே தெரியாமல் போய் இருக்கும். (ஆன்மீக பாதையில் முதலில் ஆன்ம தரிசனம். பிறகு தான் இறை தரிசனம்). 

காந்தியும் திருநாவுக்கரசரும்
மஹாத்மா காந்தி அவர்கள் இறுதிவரையும் தன்னைப்பற்றி ஆராய்ச்சிச் செய்துக்கொண்டே இருந்தார். தன் தவறுகளை கண்டுக்கொண்டே இருந்து களைந்தார். சிவபெருமான் திருநாவுக்கரசர் மேலே கைலாயம் செல்லும் பொழுது துறவறத்தில் இவர் எல்லாவற்றையும் துறந்தாரா என்று சோதனைகள் வைக்கிறார். அப்பொழுது நாவுக்கரசரும் 81 வயது. கைலாயத்தின் வழியில் பொன், வைரம், மணிகள் என்று பலவற்றை வைத்து ஆசைகாண்பிக்கிறார். திருநாவுக்கரசர் அதன் எதன் அருகிலாவது செல்கிறாரா என்று பார்க்கிறார்/சோதனைசெய்கிறார். திருநாவுக்கரசர் காலில் பட்ட கற்களையும் முற்களையும் போன்று அவற்றை தூக்கி வீசுகிறார். அழகான பெண்களை முன்னே வரவைக்கிறார். அதிலேயும் திருநாவுக்கரசர் வெற்றிபெறுகினார். ஏனெனில் குற்றங்களில் அடி வேர்களை கண்டறிந்து அதனை வெட்டி எறிந்தவர் திருநாவுக்கரசர். அதனையே மஹாத்மா காந்தியும் செய்தார். காமக்கூறுகள் எங்கேயாவது இருக்கிறதா என்று பலவகைகளில் சோதனை செய்தார். மஹாத்மா ஆனார். ஆதலால் பிறர் குற்றம் காணாமல் தன் குற்றம் காணவேண்டும். கண்டு சரிசெய்தால் மேன்மையடைவோம்.  

திருமந்திரம் அறிதலைப்பற்றி கீழ்க்கண்டவாரு சொல்கிறது
தன்னை அறியத் தனக்குஒரு கேடுஇல்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான்இருந் தானே. (திருமந்திரம் 2355)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ-அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?[நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.].

மணக்குடவர் உரை
பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும். இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - புறங்கூறுவார் தாம் காணும் பிறர் குற்றம்போல் தம்குற்றத்தையுங் காணவல்லராயின்; மன்னும் உயிர்க்கு தீது உண்டோ - நிலைபெற்ற மக்களுயிர்க்கு வரக்கூடிய துன்பமுண்டோ ?

அயலாரையும் பகைவரையுங் குறிக்கும் ஏதிலார் என்னும் சொல், இங்குப்பிறர் என்னும் பொருட்டாய் நின்றது. பிறர் குற்றம் போல் தம் குற்றமுங் காண்டலருமை நோக்கிக் 'காண்கிற்பின்' என்றார். கண்டவழித் தீவினை நிகழாதாதலின் அதனால் துன்பமுமிராதென்பதாம். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இனி , காண்கின்பின் என்று பிரிப்பினும் அமையும். உடல்நில்லா தொழியவும் உயிர் நிலைபெற்று நிற்றலால் மன்னுமுயிர் என்றார்.

மு.வரதராசனார் உரை
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

சாலமன் பாப்பையா உரை
புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கின் - பகைவரது குற்றங்களைக் காண்டல் போல் தமது குற்றங்களைக் காணின், பின் மன்னும் உயிர்க்கு தீது உண்டோ-பின்னர் நிலையுடைய மானிட உயிர்களுக்குத் தீமை உண்டோ? (இல்லை).

அகலம்: ஓகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது.

கருத்து: அன்னியர் குற்றங்களைக் காண்டல் போல் தன் குற்றங்களை ஒருவன் காணின், தன் குற்றங்களை விடுத்து மேம் படுவான்.

Thirukkural - Management - Avoiding Backbiting
Finding the shortcomings of others is always easier as we tend to look for the negative qualities of others. Listing out our own shortcomings is very difficult, as we are fond of our own faults. If a person, as in Kural 190, can look at his own faults as he observes and highlights others' faults, he will not do any harm to other living beings.

Can there be evil if we can see
Our own faults like those of others!

First set your home right before you set out to set others' homes right. We are subjective when we deal with our faults and we are objective when we deal with the faults of others. Learn to be objective to analyze your own faults and subjective to understand others' faults.

English Meaning - As I taught a kid - Rajesh
If one finds all the faults in oneself like he finds and talks about other's faults, then there can be no danger or harm can happen to him or her. Because once one knows and realizes all his mistakes then he or she will start towards rectifying them and become a better person.  Also, being aware of his own mistakes and understanding that he is not perfect, he will be compassionate towards others, understand others imperfection and not discuss/gossip about other's faults in public. 

Questions that I ask to the kid
When will there be no harm or danger to you?
What if you start looking into your mistakes like you see others mistakes?

கண்ணின்று கண்ணறச் சொல்லினும்

குறள் 184
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நின்று - எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் படவரும் ஒர் இடைச்சொல்.

நில்-தல் - [நிற்றல்]   3 v. intr. [K.nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt,tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast;to persevere, persist in a course of conduct;உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. Tostay, abide, continue; தங்குதல் குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; tobe discontinued, stopped or suspended; ஒழிதல் வேலை நின்றுவிட்டது. 6. To be subdued;அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியாழிசைநிற்ப (கலித். 143, 38). 7. To remain; tobe left, as matter in a boil, as disease in thesystem; to be due, as a debt; எஞ்சுதல் நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை 3). 8.To wait, delay; தாமதித்தல் தெய்வம் நின்றுகேட்கும்.  -

நிற்றல் - niṟṟl   v. noun. A standing, நிலை; [ex நில்.] (p.)

கண் - கண்ணோட்டம் - கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality, glow of kind feeling towards a friend or even a casual acquaintance, reluctance to deny a request made by a friend or acquaintance, humanity, fellow-feeling;)

அற - முழுவதும்; மிகவும் தெளிவாக செவ்வையாக.

அற - அறவே 

கண்ணறச் - கண்ணோட்டம் இல்லாமல்

சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

சொல்லினும் - சொல்லுதல் - கூறினாலும்

சொல்லற்க - சொல்லாதே 

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.

நின்று நில்-தல் - [நிற்றல்]   3 v. intr. [K.nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt,tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast;to persevere, persist in a course of conduct;உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. Tostay, abide, continue; தங்குதல் குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; tobe discontinued, stopped or suspended; ஒழிதல் வேலை நின்றுவிட்டது. 6. To be subdued;அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியாழிசைநிற்ப (கலித். 143, 38). 7. To remain; tobe left, as matter in a boil, as disease in thesystem; to be due, as a debt; எஞ்சுதல் நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை 3). 8.To wait, delay; தாமதித்தல் தெய்வம் நின்றுகேட்கும்.  -

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கா நோக்காமல் , கருதாமல்

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

முழுப்பொருள்
ஒருவன் முன்னே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையான சொற்களை கூடக்  கூறலாம். ஆனால் அவன் இல்லாத பொழுது, பின் விளைவுகளை எண்ணாத சொற்களை கூற கூடாது.  ஏனெனில் மனிதர்களைப் புரிந்துகொள்ளதான் நிறைய வாசிக்க வேண்டும் ஆனால் வெறுக்க சில வார்த்தைகள் போதும். கீழ்க்காணும் குறளையும் நினைவில் கொள்க.



ஒப்புமை
”கண்ணின்று கூறுத லாற்றா னவனாயின்” (கலி 378)
“கணமலை நன்னாட கண்ணின் றொருவர்
குணமேயும் கூறற் கரிதால் - குணனழுங்கக்
குற்ற முழைநின்று கூறும் சிறியவர்கட்
கெற்றால் இயன்றதோ நா” (நாலடி 353)

“காவா தவள்கண்ணறச் சொல்லிய வெஞ்சொல்” (சீவக 1069)

பரிமேலழகர் உரை
கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக. ('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக, இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.

மு.வரதராசனார் உரை
எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

பொருள்: கண் நின்று கண் அற சொல்லினும் - (ஒருவனது) கண் முன் நின்று கண்ணோட்டம் நீங்க (அவன் குறைகளைக் ) கூறினும், முன் இன்று பின் நோக்கா சொல் சொல்லற்க - (அவன்) முன் இல்லாமல் (அவனைப் ) பின் நோக்காமைக்கு ஏதுவாகிய சொற்களைச் சொல்லற்க.

அகலம்: நோக்காமைக்கு ஏதுவாகிய சொல்லை ‘நோக்காச் சொல்’ என்றார். அச் சொல்லாவது, ‘புறங்கூறல்’. ‘முன் இல்லாமல்’ என்பது பின் நின்று எனப் பொருள் தந்து நின்றது. கண்ணோட்டம் - இரக்கம் . நச்சர் பாடம் ‘பின்னோக்குஞ் சொல்’.

கருத்து: புறங்கூறல் கண்ணோட்டமின்மையினும் தீது.

Thirukkural - Management - Avoiding Backbiting
You can tell all the negative qualities and negative actions of someone in his presence. Look him in the eyes and tell him assertively why you do not like those qualities and actions. Be courageous and speak of someone's faults face to face is the direct message from Kural 184.

Better heartless words to a man's face
Than thoughtless ones at his back.

English Meaning - As I taught a kid - Rajesh
If you have an opinion or a feedback or a difference of opinion about a person, then courageously go to that person and speak to them about it face to face privately (one on one). Speak to them truthfully without hurting their feelings. [Because in the name of speaking bluntly we should not hurt others]. Speaking directly is better than talking behind the back. Because back biting / talking behind back / gossiping would have intended or unintended consequences which is generally impossible to reverse. Also talking behind back creates lots of negativity. 

Questions that I ask to the kid
What should you do if you have an opinion or difference of opinion or feedback about other person?
What is better than backbiting? or How can you avoid backbiting?
Why speaking directly and sorting out is better than backbiting? (backbiting has unintended consequences)