Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_022. Show all posts
Showing posts with label Athikaaram_022. Show all posts

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

குறள் 220
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து 
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

பொருள்
ஒப்புரவினால் - ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம்.

வரும் - வரும் ; வந்து சேரும் 

கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

எனின் -  என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்

விற்றுக் - விற்றல் - பண்டங்களைவிலைக்குக்கொடுத்தல்.

கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

தக்கது - தகுதி; தகுதியானது.

உடைத்து  -  உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
ஒப்புரவாளனுக்கு பிறருக்கு உதவி செய்து ஒரு கேடு (அல்லது வறுமை) வரும் என்ற நிலை வந்தால் (அல்லது யாராவது சொன்னால்) அக்கேட்டை பெறவதற்காகவாது அவன் தன்னை விற்றாவது அவ்வுதவியை செய்யவேண்டும். உட்பொருள் என்னவெனில் பிறருக்கு உதவி செய்து கெட்டவன் யாரும் இல்லை யாரும் இருக்கவும் முடியாது. ஆதலால் கண்ணை மூடிக்கொண்டு தன்னை விற்றாவது உதவு என்று கூறுகிறார் திருவள்ளுவர். பிறருக்கு உதவ வேண்டுமெனில் தன்னை விற்றலும் தகும்.

அதுமட்டும் இன்றி, பிறருக்கு உதவுவது எவ்விதத்திலும் கேடு அல்ல. இம்மையில் பிற்காலத்திற்கும், அடுத்துவரும் மறுமைக்கும் முதலீடு. ஒப்புரவு செய்தால் பெருமையும் புகழும் கிட்டும். 

பழமொழிப் பாடல் (218) ஒன்று  இதே கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது:
“அடுத்தொன் றிரந்தார்கொன் றீந்தாரைக் கொண்டார் படுதேழை யாமென்று போகினும் போக”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒப்புரவினால் கேடு வரும் எனின் - ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து. (தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது. அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து. கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்: பிற்பயப்பன நன்மையாதலான்.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

குறள் 219
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

பொருள்
நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

நயம் - nayam   n. naya. 1. Policy,principle; நீதி நன்றி யீதென்றுகொண்ட நயத்தினைநயந்து (கம்பரா. கும்பகருண. 35). 2. See நயன்², 2.3. Vēdas; வேதசாத்திரம். (யாழ். அக.) 4. The four kinds of causal relation, viz., oṟṟumai-nayam, vēṟṟumai-nayam, puriviṉmai-nayam,iyalpu-nayam; ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை (மணி. 30,218.)

நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.

உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

நல்கூர்-தல் - nalkūr-   4 v. intr. prob.நல்கு- + ஊர் 1. To be poor, indigent, destitute;வறுமைப்படுதல். நல்கூர்ந்த மக்கட்கு (நாலடி, 242).2. To be wearied; களைப்படைதல். நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் (மணி. 13, 72). 3. To suffer;துன்புறுதல். மாலைநீ யாயின் மணந்தா ரவராயின்ஞாலமோ நல்கூர்ந்தது வாழிமாலை (சிலப். 7, 50).  

நல்கூர்ந்தான் - வறியோன்

ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

செயும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

நீர - nīra   s. (pl.) (நீர்மை) those which have properties, குணத்தையுடையன.

செய்யாது - செய்யாமல்

அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

அமைகலா - உண்டாகாமல் 

ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை

முழுப்பொருள்
ஒரு ஒப்புரவாளானுக்கு எது வறுமை? பிறருக்கு கொடுத்து உதவ முடியாத நிலைமையே ஒருவருக்கு வறுமை எனப்படுவது. பணம் இல்லை பொன் இல்லை என்ற நிலைகளை தாண்டி கொடுத்து உதவ வேண்டியவனுக்கு கொடுத்து உதவமுடியாத நிலையே வறுமை. 

செல்வ நிலையில் வறுமையுற்றாலும் ஒப்புரவாளர் மனம் வருந்தமாட்டார். ஆனால் பிறருக்கு கொடுத்து உதவ முடியாத நிலையை எண்ணியே மனம் வருந்துவார். அந்நிலையில் தான் வறியவராய் உள்ளோம் என்று நோகுவார்.

கி.வா.ஜ உரையில் புறநானூற்றிலிருந்து மேற்கோளிட்டு சுட்டியிருப்பார் இவ்வாறு: “புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா இன்மையான் உறவே” (புற 72:17-8)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது, செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம். இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

குறள் 218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்] 

பொருள்
இடன் - அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம்இருப்பவன்

இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.
இல் - இல்லை 

பருவத்தும் பருவம்  - காலம்; காலப்பிரிவு; இளமை; பக்குவம்; வயது; மறைநிலாஅல்லதுநிறைநிலா; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்என்னும்ஆறுபருவங்கள்; மாதம்; மழைக்காலம்; தக்ககாலம்; பயிரிடுதற்குறியகாலம்; ஆண்டு; பயனளிக்குங்காலம்; கணு; நூற்கூறுபாடு; நிலைமை; உயர்ச்சி; அளவு; சூரியன்ஒவ்வோர்இராசியிலும்புகும்காலம்; ஆடவர்பெண்டிர்க்குரியவெவ்வேறுஆயுட்காலநிலைகள்; முகம்மதியர்திருவிழாவகை.

ஒப்புரவிற்கு - ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம்.

ஓல்குதல் - தளர்தல்; மெலிதல்; குழைதல்; நுடங்குதல்; சுருங்குதல்; அசைதல்; ஒதுங்குதல்; அடங்குதல்; வளைதல்; குறைதல்; வறுமைப்படுதல்; மேலேபடுதல்; மனமடங்குதல்; கெடுதல்; நாணுதல்; எதிர்கொள்ளுதல்.

ஒல்கார் - தளராதவர், அசையாதவர், மனமுடையாதவர்

கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.

அறி - அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்

காட்சி -பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

அவர்க்கு - அவருக்கு

முழுப்பொருள்
பிறருக்கு தானம் கொடுக்க முடியாத வறுமையான காலத்திலும் ஒப்புரவு (பிறருக்கு உதவி) செய்ய மனம் தளரமாட்டார்கள் உண்மையான ஒப்புரவாளார்கள். அவர்கள் வாழ்வின் முறையான கடன்களை அறிந்தவர்கள். ஆதலால் வறுமையிலும் பிறருக்கு உதவி செய்வது தனது கடமை என்று உணர்ந்தவர்கள். தன்னால் இயன்றதை கண்டிப்பாக உதவுவார்கள்.

செல்வம் இருக்கும் பொழுது உதவுவது நல்ல காரியம் தான். ஆயினும் கொடுத்து உதவ இல்லாத பொழுதும் உதவு முற்பட்டு உதவுவது மேலும் சிறப்பு. அப்பொழுது தான் ஒருவருடைய உண்மை பெருமை நமக்கு தெரியவருகிறது. ஒருவரின் கொடுத்து உதவும் இயல்பு தெரிகிறது.

பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்”, என்பார் பரிமேலழகர். அவர் “செத்தும் கொடுத்த சீதக்காதி” என்ற வழக்குக்கு முற்பட்டவராய் இருந்திருக்க வேண்டும்.

இத்தகு பண்பினரைப் பற்றிய நாலடியார் பாடல்கள்:
இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து – மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு. (நாலடியார் 91)                           

பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு, பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் பண்பினருக்கு வானோரில்லத்து கதவு அடைபடாது, திறந்தே இருக்கும்.
எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்;
அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும். (நாலடியார் 150)

நீரற்ற அகன்ற ஆறு, தோண்டிய உடனே சுரந்து தெளிந்த நீரைத் தரும். அதுபோல, உயர்குடிப் பிறந்தோர் தம்மிடம் யாதொரு பொருளும் இல்லாத போதும், துன்புற்றுத் தம்மைச் சார்ந்தவர்க்கு அவரது தளர்ச்சி நீங்க ஊன்றுகோல் போல உதவுவர். 

“உறைப்பருங் காலத்து மூற்றுநீர்க் கேணி
இறைத்துணினு மூராற்று மென்பர் - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியோர்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணு மரிது” (நாலடி184)

“உறுபுன றந்துல கூட்டி யறுமிடத்தும்
கல்லூற் றழியூறு மாறேபோற் செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை” (நாலடி 185)

இதேபோன்று பழமொழிப் பாடல்களும் இத்தகுப் பண்பினரைப் பற்றி இவ்வாறு கூறுகின்றன: “ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு ஆற்றும் மனைபிறந்த சான்றவன்” (பழமொழி 217). “கூஉய்க் கொடுப்பதொன்று இல்லெனினும் சார்ந்தார்க்குத் தூஉய்ப் பயின்றாரே துன்பந் துடைக்கிற்பார்” (பழமொழி 162)

”செல்வ மேவிய நாளி லிச்செயல் செய்வ தன்றியு மெய்யினால்
அல்லல் நல்குர வான போதிலும் வல்லர்” (பெரிய.இளையான்குடி 6)

“வெள்ளநெடு வாரியற வீசியுள வேனும்
கிள்ள வெழு கின்ற புனல் கேளிரின் விரும்பித்
தெள்ளுபுன லாறுசிறி தேயுதவு கின்ற
உள்ளது மறாதுதவும் வள்ளலையு மொத்த” (கம்ப.வரைக் காட்சி 23)

“தாமுத லோடுங் கெட்டா லொழிவரோ வண்மை தக்கோர்” (கம்ப.சேதுபந்தனப் 18)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார், கடன்அறி காட்சியவர் - தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார். (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.).

மணக்குடவர் உரை
செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்: ஒப்புரவை யறியும் அறிவுடையார். இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது

மு.வரதராசனார் உரை
ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

குறள் 217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மருந்து -  maruntu   n. cf. amṛta. [T. mandu,K. mardu, M. marunnu.] 1. Medicine; ஔஷதம். (குறள், அதி. 95.) ஆசைநோய்க்கு மருந்துமுண்டாங்கொலோ (கம்பரா. மிதிலைக். 80). 2. Remedy;பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித்.89). 3. Philter, love-potion; வசியமருந்து. 4.Nectar, ambrosia; அமிர்தம். கடல் கலக்கி மருந்துகைக்கொண்டு (கல்லா. 41, 26). 5. Boiled rice;சோறு. இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்(புறநா. 70). 6. Drinking water; குடிதண்ணீர்.(புறநா. 70.) 7. Sweetness; இனிமை. மருந்தோவாநெஞ்சிற்கு (கலித். 81). 8. Gunpowder; வெடிமருந்து. (W.) 9. Holly leaved berberry; முள்ளுக்கடம்பு. 10. A kind of grass; புதற்புல் என்னும் புல்வகை. (அக. நி.)

ஆகித் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

தப்புதல் - தவறுதல்; பயன்படாதுபோதல்; பிறழுதல்; விட்டுப்போதல்; அபாயத்திலிருந்துநீங்குதல்; இறத்தல்; பிழைசெய்தல்; அழிதல்; அடித்தல்; சீலைதப்புதல்; விட்டுவிலகுதல்; காணாமற்போதல்; தடவுதல்; அப்பம்முதலியனதட்டுதல்; கையால்தட்டுதல்; தடவிப்பார்த்தல்; அப்புதல்; செய்யத்தவறுதல்; தண்டுதல்.

தப்பா - தவறாது

மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை.

அற்றால் - தன்மை / போன்று 

மரத்தற்றால் - மரத்தின் தன்மை போன்று

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

பெருந்தகையான் - மிக்கபெருமையுடையவர்; காண்க:பெருந்தன்மை; மிக்கஅழகு.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

படின் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
சில மரங்கள் மருந்தாக பயன்படும். தன்னுடைய அங்கங்கள் முழுவதையும் மருந்தாக தரும் மரங்கள் சில இருக்கும். எல்லா உறுப்புகளும் மருந்தாக பயன்படும் மரம்போல செல்வம் ஒப்புரவாகிய பெருந்தகைமை கொண்டவனிடம் இருந்தால் அச்செல்வம் எல்லோருக்கும் எல்லா வகையிலும் முழுவதுமாக தவறாமல் பயன்படும். இவர்கள் எளிதாக அணுகக்கூடிய இடத்தில இருப்பார். ஆதலால் அவர்களிடம் இருந்து செல்வம்  தவறாமல் பயன் தரும்.

நீர் அத்தியாவசியம், பழம் ஆடம்பரம் (முந்தைய குறள்களை நினைவில் கொள்க). இவ்வாடம்பரம் அதிகமானால் (எல்லை கடக்கும் பொழுது) அதுவே நோயாக மாறிவிடும். நோய்க்கு நிவாரணம் மருந்து. ஆதலால் அந்நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டியது ஒரு ஒப்புரவாளனின் கடமை.

நாம் முக்கியமாக நோக்க வேண்டியது
1) மரம் மருந்தாக பயன் படும்
2) மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாக பயன் படும்
3) அம்மரம் தவறாமல் பயன் தரும். உலகத்தில் சில மரங்கள் பல மருந்துகளை கொண்டு இருக்கலாம். ஆனால் அவை நமக்கு தெரியாமல் இருக்கலாம். அல்லது அவை கண்காணாத இடத்தில் அல்லது அடைவதற்கு கடினமான இடத்தில இருக்கலாம். அப்படி இருப்பின் அம்மருந்து அதன் பயன் மக்களை சென்றடையாமல் தப்பிவிடுகிறது.

நமது பாரத நாட்டில் மரங்களை வாழ்வாதாரங்களாகவும், வாழ்க்கைத்தத்துவங்களை உணர்த்துவதாகவும் பல ஆயிரவருடங்களாக கருதும் வழக்கம் இருக்கிறது. ஆலமரம், அரசமரம், வேப்பமரம், தென்னைமரம், வாழைமரம், இன்னும் பலவும், மக்களின் வாழ்வாதாரங்களாக இருந்தும், இறந்தும் தம்மையே கொடுக்கின்றன. குறிப்பாக வாழைமரம் தன்னில் ஒவ்வொரு பகுதியாலும் பிறருக்குப் பயனாவதை எல்லோரும் அறிவோம்.

தன்னில் ஒவ்வொரு பகுதியையுமே பிறருக்குப் பயனாகக் கொடுத்து பிறருக்கு வாழ்வை நல்கும் பெருந்தகைமையான பண்பினை உடைய மரங்களைப் போன்றவர்கள் ஒப்புரவாளர்கள். அவர்களிடத்து உள்ள செல்வம் பிறருக்காகப் பயன்படுவதாம்.

உயிருள்ள போதும் மரத்தின் பாகங்கள் பிறருக்குப் பயனாகின்றன, அவை மடிந்தும், மக்களுக்கே பயனாகின்றன. ஒப்புரவில் ஒழுகும் பெருந்தகையாளர் செல்வமும் அத்தன்மையதே. ஈயார் தேட்டை தீயார் கொள்வார் என்பதுபோல, ஈவார் தேட்டை மேலோர் கொள்வர் என்றும் சொல்லலாம். நம் நாட்டிலேதான் “செத்துங் கொடுத்தான் சீதக்காதி” என்று ஒரு வள்ளலைப் பற்றிச் சொல்லுகிறோம்.

திரிகடுகப்பாடலொன்று (75) இவ்வாறு கூறுகிறது.
“வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூலும் – புணர்வின்கண்
தக்க தறியும் தலைமகனும் இம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம்”
அதாவது, கொடையாளனிடத்துற்ற செல்வமும், அறிவொடு கற்ற அறநூலும், தன்னை அடுத்தவர்க்குச் செய்யத்தக்கதைத் தெரிந்தவனும் உறுதியான பொருள்கள் என்கிறது இப்பாடல்.

”மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்” (நற் 226:1)
“மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி” (புறநா 180:5)
“மரமுதல் சாய மருந்துகொண் டாங்கு” (பெருங் 1.37:188)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செல்வம் பெருந்தகையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே படுமாயின், மருந்து ஆகித் தப்பா மரத்தற்று - அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும். (தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில் இன்றாதல், மறைந்து நின்றாதால் , காலத்தான் வேறுபட்டாதல், பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக்கும், செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின். தப்புதலென்றது ஒளித்தலை.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.

Thirukkural - Management - Corporate Social Responsibility
This kural is replete with similes. Yet another simile is employed in Kural 217 that elaborates that the wealth with a person who has a big heart of sharing his wealth with others and giving away for right causes or helping the needy is similar to a medicinal tree that sacrifices all its parts to others for curing various diseases.

The wealth of a large-hearted 
Is an unfailing medicine tree.

English Meaning - As I taught a kid - Rajesh
An unfailing medicinal tree sacrifices all its parts for curing various diseases (medicinal tree examples : Neem tree, banana tree etc). Like a medicinal tree, a magnanimous person shares his wealth with others and giving away for right reasons or helping the needy. 

Questions that I ask to the kid
What is a magnanimity? Who is a magnanimous person?

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

குறள் 216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

பொருள்
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை.

உள்ளூர்ப் - ஊர்நடு; சொந்தஊர்; uḷ-ḷ-ūr   n. உள்² +. 1. Heart of atown, interior of a village;

பழுத்தல் - பழமாதல்; முதிர்தல்; மூப்படைதல்; பக்குவமாதல்; கைவருதல்; பருமுதலியனமுற்றுதல்; மனங்கனிதல்; நிறம்மாறுதல்; நன்மையாதல்; செழித்தல்; மிகுதல்; பழுப்புநிறமாதல்; குழைதல்; காரம்முதலியனகொடாமையால்பிள்ளைபெற்றவயிறுபெருத்தல்.

அற்றால்  - (உணவின்) தன்மை அறிந்து

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

படின்படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
ஊரின் நடுவிலே பயன்படுகின்ற மரம் சுவையான பல பழங்களை தருகிறது. சில மரங்கள் நிழலைத்தருகிறது. சில சமயம் இந்த மரத்தை விரும்பாதவர்கள் கூட அந்த மரத்தின் நிழலில் இளைப்பாறுவார் அல்லது அம்மரங்களின் கனிகளை உண்ணுவார். பசியுள்ளவர்களுக்கு இந்த மரம் மிகவும் பயனுள்ளதாய் அமையும். ஆதலால் இந்த மரத்தை எல்லோரும் விரும்புவர்.

அதேப்போல எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒப்புரவாளனிடம்  வந்து சேரும் செல்வம் எல்லா மக்களும் குறிப்பாக தேவையுள்ளவர்களுக்கு எல்லா காலமும் பயன்படும்.

நீர் எப்படி அத்தியாவசியம் அதுபோல பழங்கள் ஆடம்பரம் எனலாம். ஆனால் சில சமயம் ஒப்புரவாளன் சில ஆடம்பர தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். உதாரணமாக ஊரிலே திருவிழா, அதில் கரகாட்டம், மயிலாட்டம் போன்று நிகழ்ச்சி நடக்கும். அதனை நடத்த செல்வம் வேண்டும். இல்லையெனில் ஊர் வறட்சியை அனுபவிக்கும்.  வாழ்வதற்கான அடையாளம் என்பது திருவிழா. மகிழ்ச்சியாக இருப்பது. இது இல்லாவிட்டால் வாழ்வில் சுவையில்லாமல் போகி விடும். இது சமூதாயத்தை உற்சாகப்படுத்தும். வாழ்வின் லட்சணமாக அமையும்.

இதேபோன்று பழுத்தமரம் பயனாகுதலை கம்பராமாயண மந்திரப்படலப்  (82) பாடல் வரியொன்று இவ்வாறு கூறுகிறது: “பார்கெழு பழுமரம் பழுத்தற்றாகவும்”.

நாலடியார் பாடல்கள், இப்பாடலின் கருத்தினையொட்டி கூறும் பாடல் வரிகளாவன:
“நடுஊருள் வேதிகைச் சுற்றுகோள் புக்க படுபனையன்னர் பலர் நச்ச வாழ்வார்” (நாலடி 96).
“துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரமெல்லாம் உழைத்தங்கண் சென்றார்க்கு ஒருங்கு” (நாலடி 167)
“பழுமரம்போல் பல்லார் பயந்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன்”(நாலடி 202)
பழமென்ற உவமை, துய்க்கக்கூடியதும், இனிமையானதும், உடலுக்குப் பயனாவது போன்ற குணத்தை உடையதுமாகையால்.  பொதுவிடம் பழுத்த மரம் என்றது, ஒப்புரவு ஒழுகுவாரின் செல்வத்தைப் போன்று எல்லோருக்குமே உரிமையானது, கிடைக்கக்கூடியதுமாம்.

”முன்னூர்ப் பழுனிய கோளியா லத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன்
வளனுஞ் செம்மலு மெமக்கென நாளும்” (புறநா 254.7:9)

“ஞால நல்லறத்தோர் உண்ணும் பொருள்
போல நின்று பொலிவது பூம்பொழில்
சீல மங்கை வாயெனத் தீங்கினி
காலமின்றிக் கனிவது காண்டிரால்” (கம்ப.நாடவிட்ட.18)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின், பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று - அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும். (உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார்.எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்: பிறரால் விரும்பப்படுவான்மாட்டுச் செல்வ முண்டாயின். இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.

Thirukkural - Management - Corporate Social Responsibility
When a business organization keeps giving back to the society in which that exists and operates, the organization will keep getting a lot of support from the society to give back to the society again. The more an organization gives, the more it gets back in turn. The practice becomes a virtuous cycle.

Valluvar resorts to yet another simile to support his recommendations. The wealth, as explained in Kural 216, with a benevolent person is like a tree that is full of rich and ripe fruits. The tree will be beneficial to others as it is located in the middle of a village.

The wealth of a liberal man
Is a village tree fruit-laden.

A socially responsible person keeps getting more and more resources so that he can distribute that to the people around him. Similarly, an organization that continues to serve the society keeps prospering to give back to the society further.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம்

குறள் 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

பொருள்
தாள் - கால்; மரம்முதலியவற்றின்அடிப்பகுதி; பூமுதலியவற்றின்காம்பு; வைக்கோல்; முயற்சி; தாழ்ப்பாள்; படி; திறவுகோல்; ஒற்றைக்காகிதம்; சட்டையின்கயிறு; விளக்குத்தண்டு; விற்குதை; ஆதி; கடையாணி; வால்மீன்; சிறப்பு; கொய்யாக்கட்டை; தாடை; கண்டம்.

ஆற்றித் - ஆற்று-தல் - āṟṟu-   5 v. intr. 1. To becomestrong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. Tobe sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 101).--v. tr. 1. To  ; āṟṟu-   v. tr. அகற்று-. Toremove, put away; நீக்குதல் மையலாற்றிய குணத்து மாதவர் (அரிச். பு விவாக. 42).  ; āṟṟu-   5 v. tr. caus. of ஆறு-.1. To assuáge, appease, alleviate, mitigate; பசிமுதலியன தணித்தல் அரும்பசி களையவாற்றுவது காணான் (மணி. 11, 86). 2. To comfort,console, soothe; துக்கமுதலியன தணித்தல் அவன்விசனத்தை யாற்றினான். 3. To cool; உ்ணந்தணித்தல். வெந்நீரை ஆற்றிக்கொடு. 4. To dry, asthe hair; ஈரமுலர்த்துதல். குஞ்சியை ஆற்றின பின்பு(சீவக. 2422, உரை ) 5. To smooth out a twistedthread in order to keep it from untwisting orknotting; நூல்முறுக்காற்றுதல். Colloq. 

தந்த - தருதல் - trutl   v. noun. Giving, &c. See தா, v.; கொடை

பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

எல்லாம் - முழுதும்

தக்கார்க்கு - மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர்.

வேளாண்மை - பயிர்த்தொழில்; உதவிபுரிதல்; கொடை; உண்மை.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; நிமித்தமாக.

முழுப்பொருள்
தன்னுடைய முயற்சியிலும் உழைப்பிலும் ஈன்ற பொருள்கள் எல்லாம் எதற்கு? அதுபோல அவை இவ்வுலகில் யார்க்கு சேரும்? என்பதற்கு விடையாகவே இக்குறள் அமைகிறது. ஒருவர் தன் உழைப்பால் ஈன்ற செல்வம் எல்லாம் பிறருக்கு உதவி செய்வதற்காகவே. யார்க்கு உதவி செய்வது ? தக்கார்க்கு. அப்படி என்றால் உண்மையாக பிறர் உதவியினை தேவைப்படும் எளியோர், வயதானோர்/முதியோர், வறியோர்,  உடலால்லோ அல்லது வேறு சில நியாயமான காரணத்திற்காக உழைக்க முடியாதவர்கள், துறந்தோர் ஆகியோர்க்கு உதவ வேண்டும். நாம் உழைத்து சம்பாதிப்பது நாம் சுகமாக இருப்பதற்கு இல்லை பிறர்க்கு உதவி செய்யவே என்பதை சொல்லாமல் சொல்கிறார் திருவள்ளுவர். 

இந்த உதவியை கொடையை வேளாண்மையுடன் ஒப்பிட்டு சொல்வதால் உழவர் பயிர்த்தொழில் செய்து உணவு படைப்பது இவ்வுலகிற்கு அவர்கள் அளிக்கும் கொடை என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

மேலும்:
அறவழி நின்ற துறந்தோர்க்கும், அறிவு வழி நிற்கும் மாணாக்கருக்கும், அயர்ந்த வயதினரான முதியோருக்கும், அன்றாடம் உணவுக்கு வழியில்லாது, உழைத்துப் பிழைக்கவும் இயலாது அல்லாடும் வறியவர்களுக்கும் கொடுப்பதே தகுதியுடையோருக்குக் கொடுப்பதாகும்.

“நோன்றாள் நசைவளன்” (புறநா 148:2)
“தாள்படு செல்வம்” (புறநா 161:15)
“தாளாற்றலால் செய்த பொருளை யாவர்க்கும் அளித்து”  (125:7-8)

தாளாற்றலால் உதவுவதலை, “தாளாற்றலால் செய்த பொருளை யாவர்க்கும் அளித்து” என்று புறநானூற்றுப் பாடல் வரிகள் (125:7-8) தெரிவிக்கின்றன.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.).

மணக்குடவர் உரை
ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம். இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒப்புரவறிதல் - உலக நடையினை அறிந்து ஒழுகல்; உலக ஒழுக்கத்தை உணர்ந்து நடத்தல்.

ஊருணி  - ஊரினருக்கு உண்ணும் நீர் உதவும் நீர் நிலை; ஊரையடுத்த குளம்; ஊரார் நீர் முகக்கும் குளம்; ūr-uṇi   n. id. + உண்-. Publicdrinking water tank in a village or town; ஊராருண்ணுநீர்நிலை. ஊருணி நீர்நிறைந் தற்றே (குறள், 215)  

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை; மழை; மேகம்

நிறைதல் - நிறைதல் நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல்.

அற்றேல் - அப்படியானால்.

நிறைந்தற்றே - (மழையினால்) நிறைந்த/ நிரம்பிய குளம் போலும்

உலகு உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

அவாம் - 
பேர் அறிவாளன்  - பல நூல்களை கற்று என்ன பயன் நாம் அறிவுக்கு அறிவானவனின், முதன்மை அறிவைக்கொண்டவன், அறிவேயானவன் வாலறிவன்; pēr-aṟivāḷaṉ   n. id. +அறிவு +. Person of mature understanding,wise man; உயர்ந்த ஞானமுடையவன். உலகவாம்பேரறிவாளன்றிரு (குறள், 215).

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

முழுப்பொருள்
ஒரு ஊரில் உள்ள குளம் ஊரில் உள்ள மக்களுக்கு உண்ணுவதற்காக பயன்படும் நீர் நிலையாகும். அத்தகைய நீர் தானாக வந்தது இல்லை. அது மேகத்தில் இருந்து பெய்த மழையும் ஊற்றுகளில் இருந்து வந்தது ஆகும். அந்த குளம் அந்த ஊருக்கு பொதுவானது சொந்தமானது.

குளத்தில் உள்ள நீரை போலவே செல்வந்தர்களின் செல்வமும். இவர்களின் செல்வம் தானாக முளைத்தது இல்லை. இவர்களின் உழைப்பு ஒரு பக்கம் (குளம் கட்டுவதற்கான கட்டுமானார்களின் உழைப்புப் போல)இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அது உலகிற்கு சொந்தமானது. கொஞ்சம் ஆழாமாய் பார்த்தால் வானமும் மண்ணும் அளித்த இயற்கை பொருட்களே விலை என்ற பெயரில் பணமாக செல்வமாக அவர்களிடம் போய் சேர்ந்து உள்ளது. ஆக அந்த செல்வம் ஊர் மக்களுக்கு உதவ வேண்டும். அந்த ஞானமே பேரறிவு. அதனை உடையவனே பேரறிவாளன். அவனுடைய செல்வம் ஊருணி நீர் போன்று உலகத்திற்கானது. மக்கள் உரிமை கொண்டாடலாம் என்று அர்த்தமில்லை. அச்செல்வத்தை அவன் மட்டும் அனுபவிக்காமல் அந்த மக்களுக்கு உதவும் வகையில் செலவிட வேண்டும்.

ஊருணி இருப்பது என்பதற்க்காக மழைப்பெய்யவில்லை. ஊருணி இயற்க்கையின் கொடையை சேமித்துத்துவைத்துள்ளது. அதுப்போல் ஒருவர் சூழ்நிலைகளால் நல்ல அறிவு பெற்றுவிடுகிறார். அவர் தானாக இவ்வுலகில் கற்றது என்று என்பது மிக மிக குறைவே. அவர் காலச்சங்கிலியில் ஒரு கொப்பளம் போன்ற மிக மிக சிறிய ஒன்று. அவர் முந்ததைய சந்ததியரின் அறிவு செயல்பாட்டின் ஒரு சிறு துளி மட்டுமே. ஆதலால் அவ்வறிவுச்செல்வம் பொதுவானது. அதனை பிறர்க்கு பயன்படும் வண்ணம் பகிர்ந்தளிப்பதே அறமாகும். அதேப்போல் பொருட்செல்வமும் பலரின் உழைப்பால் குவிந்தவை. அவற்றை பகிர்ந்தளிப்பதே அறமாகும்.

நீர் என்பது அத்தியாவசிய தேவை. ஒரு ஒப்புரவாளன் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கொடுக்கிறவனாக இருக்க வேண்டும். அதுப்போல் அறிவும் செல்வமும் அத்தியாவசியம் ஆகும்.
=====
கேணி, பிரத்யேகக் குடும்பக் கேணி அல்ல. ஊருண் கேணி. இந்த வார்த்தையே வெகு அழகு. கிணறுகளில் தண்ணீர் சேந்த மறுக்கப்பட்ட வரலாறு கொண்ட இச்சமூகத்தில் , இந்த வார்த்தை முக்கியமானது.
அந்தக் கேணி நீர் நிறைந்திருப்பது இன்னொரு நல்லூழ்.
பேரறிவாளன் செல்வம் அது போன்றது. என்றால், பேரறிவு என்பது தான் ஈட்டிய பொருள் தனது மட்டுமே என்று கருதாத அறிவு.
எல்லோராலும் பொருள் ஈட்ட இயலாது. ஈட்டுபவர்கள் அதைத் தேவைப்படுவோர்க்குத் தந்துவுவதே சமூக அறம்.
காந்தியின் தர்மகர்த்தா முறை.
=====

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறைப்
பல்லோர் உவந்த உவகை” (அகநா 42:9-11)

“ஊருணி நிறையளவும் .... மறுக்கின்றார்கள் யார்” (கம்ப..மந்திரப் 82)

“வள்ளிய ராயோர் செல்வம் மன்னுயிர்க் குதவு மன்றோ” (கம்ப.சேதுபந்தன 24)

“ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்” (அப்பர்.மறைக்காடு 5)

“ஊருணி யுற்றவர்க்கு” (திருக்கோவையார்.400)


ஊருணியின் நீர் அந்த ஊருக்குள் பெய்யும் மழை. அந்த ஊரின் ஊற்று. அந்த ஊருணி நிறைவது மழையாலும் ஊற்றாலும். ஆகவே அது ஊருக்குச் சொந்தமானது. அவ்வாறுதான் செல்வனின் செல்வமும். அவனுடையது அல்ல அது. வானமும் மண்ணும் அவனுக்கு அளித்தது அது. ஆகவே அது ஊருக்கு உதவவேண்டும். அந்த ஞானமே பேரறிவு. அப்பேரறிவை உடையவனின் திருவே ஊருணி போல உலகாக்குவது. இந்த வாசிப்பை கவிதையின் தனிமொழி அடைந்தவனே செய்வான். அவனே கவிதைவாசகன். அவனுக்கே இது கவிதை.

பரிமேலழகர் உரை
உலகு அவாம் பேர் அறிவாளன் திரு - உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும். (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம். இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

Thirukkural - Management - Corporate Social Responsibility
Corporate Social Responsibility (CSR) is the development of the twentieth century management practice. There have been debates on the relevance of Corporate Social Responsibility and doing charity with shareholders' money. “Corporate Social Responsibility is sincerely considering the impact of the company's actions on society,” 

(Koontz, 1990). Corporate Social Responsibility includes social responsiveness also. “Social Responsiveness is the ability of a corporation to relate its operations and policies to the social environment in ways that are mutually beneficial to the company and to the society,” (Koontz, 1990). Valluvar anticipated the need for organizations to be socially responsible and provided his views on the importance and objectives of Corporate Social Responsibility. Kurals support the need for business organizations to serve the society in which they operate.

Valluvar presented his views on social obligations of an organization in Kural 215. He uses a rich simile to advocate the importance of service to the society.

The wealth of a wise philanthropist 
Is a village pool ever full.

The wealth with a person, who considers it as an obligation to help the needy, is like a fountain in a village that keeps giving water for the needs of all the people in that village. The fountain is always overflowing. There is no lack of water. Similarly, wealth keeps increasing in a person who uses his wealth to the welfare and the development of his society. 

English Meaning - As I taught a kid - Rajesh
Water accumulated in a pond gathered from rain and other drainage sources is common for the uses of entire people in the village/city/world. Because rain showered for the entire village/world. Not just for the pond.

Similarly, a knowledgeable intelligent person and wealthy person should contribute and benefit the society. Because the knowledge a person has is not just his/her knowledge. He/She didn't start from scratch. They have gained knowledge from the society which has carried it over centuries. Hence, knowledge and wealth of an intelligent person should be useful for many people.

Questions that I ask to the kid
How would you relate a water pond with knowledge?
Is Pond water common for all? What would you relate this to? Why? Why a person who has worked hard to gain knowledge should not think that it is his earned knowledge?

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

குறள் 213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
ஒப்புரவின் நல்ல பிற
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

பொருள்
புத்தேள் - புதுமை; புதியவள்; தெய்வம்; தேவர்.
உலகத்தும் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்
ஈண்டும் - ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம் இம்மை விரைவு புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது
பெறல் - பெறுதல்
அரிது - செயற்கரிது s. Difficulty, unattainable ness, rareness, preciousness,  அருமை; பசுமை 
அரிதே -  செயற்கரிது
ஒப்புரவு - oppuravu   n. ஒப்பு + உரவு 1.Agreement, union; ஒற்றுமை 2. Smoothness,levelness, evenness; சமம் 3. Custom, usage,duties enjoined by long established custom,caste rules; உலகாசாரம் ஒப்புரவொழுகு (ஆத்திசூ.).4. Philanthropy; லோகோபகாரம் ஓருயிர்க்கேயுடம்பளித்தா லொப்புரவிங் கென்னாகும் (பெருந்தொ.188). 5. Reconciliation; சமாதானம் பண்ணுகை.Chr. 
ஒப்புரவின் - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம்.
நல்ல - நல்லவை
பிற - பிற அனைத்தும்

முழுப்பொருள்
புத்தே ளுலகத்தும் ஈண்டும் 
உயர்ந்தோர் உலகத்திலும் (அல்லது வானுலகத்திலும், அல்லது தேவலோகத்திலும்) சரி மனிதர்கள் வாழும் இவ்வுலகத்திலும் சரி

பெறலரிதே 
இந்த பாக்கியம் /சந்தர்ப்பம் தனை பெறுதல் அரிதே

ஒப்புரவின் நல்ல பிற
இயலாதவர்களுக்கு உதவி செய்வதை தவிர நன்மையானது

வானுலகத்திலும் சரி, இவ்வுலகத்திலும் சரி இயலாதவர்களுக்கு உதவி செய்வதை தவிர சிறந்ததும் நன்மையானதும் வேறொன்றும் இல்லை அதைப் போன்ற அரிய வாய்ப்பும் வேறு இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

ஒப்புரவைப்பற்றி மற்ற இலக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பதையும் சிறிது பார்க்கலாம். ஆத்திச்சூடியில் ஔவையும் செய்யத்தக்கவற்றுள், அகார வருக்கத்தில் “ஒப்புரவு ஒழுகு” என்பார் கட்டளயாகவே. மதுரை கூடலுர் கிழாரின் முதுமொழிக் காஞ்சியில், “ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை” என்பார்.  கயத்தூர் பெருவாயின் முள்ளியார் யாத்த ஆசாரக்கோவையின் முதல் பாடல் “நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு, இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல் இனத்தாரோடு நட்டல், – இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து” என்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஒப்புரவ வறிதலிற் றகுவர வில்லை” (முதுமொழிக் 52)


பரிமேலழகர் உரை
புத்தேள் உலகத்தும் ஈண்டும் - தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது - ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது. ( ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

சாலமன் பாப்பையா உரை
தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

குறள் 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல் ]

பொருள்
கைம்மாறு - மறு, பிரதி; பதிலுதவி.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டா - வேண்டாம் 

ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம்.

கடப்பாடு - கடமை; முறைமை; கொடை; ஒப்புரவு; அதிகப்படுதல்.

மாரி - மழை; நீர்; மேகம்; மழைக்காலம்; பூராடநாள்; புள்வகை; சாவு; அம்மைநோய்; ஒருதேவதை; துர்க்கை.
மாட்டு - அகன்று கிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற்கொண்டு கூட்டிய சொல்முடிவு கொள்ளும் முறை; அடி; சொல்.

மாரிமாட்டு -

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

ஆற்றுங் - ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

கொல்லோ -  கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
எந்த பிரதிபலன் இன்றி எல்லோருக்கும் உதவுவது கடமையாக கொண்டு பெய்யும் மழைக்கு கைம்மாறாக என்ன செய்து விட முடியும் இந்த உலகினால் , என்பதே இக்குறளின் பொருளாகும்.



ஒன்றை எதிர்பார்த்து நாம் செய்வது உதவி அன்று.எந்த பிரதி பலனையும் எதிர் பாராமல் செய்யும் உதவியே உதவி எனக் கூறுகிறார் வள்ளுவர். 

நாம் கோவில் உண்டியலில் இடும் பணம் கூட, எதையோ எதிர்ப்பார்த்து தானே?  அதற்கான புண்ணியம் நம்மை வந்து அடைய வேண்டும் என்பது தானே அச்செயலின் அடிநாதம். அதன் பொருட்டு தானே நம் கையால், உண்டியலில் பணம் இட வேண்டும் என நாம் ஆசைப்படுவது. இவ்வாறு எதிர்பார்ப்புடன் செய்யும் செயலை விட, முகமறியா ஒரு ஏழைக்கு, எந்த எதிர் பார்ப்பின்றி ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்யும் உதவி எவ்வளவோ சிறந்தது.

ஒப்புமை
”நம்மாட் டுதவிய நன்னர்க் கீண்டொரு
கைம்மா றாற்றுதல் என்றும் இன்மையின்” (பெருங் 4:3:11-2)

“செயலருந் தவங்கள் செய்திச் செம்மலைத் தந்த செல்வத்
தயரதற் கென்ன கைம்மா றுடையம்யாம் தக்க தென்பார்’ (கம்ப.கைகேசி சூழ்வினைப் 89)

“விருந்தெவன் செய்கோ தோழி....
மலையிமைப் பதுப்போல் மின்னிச்
சிலைவ லேற்றொடு செறிந்தவிம் மழைக்கே” (நற்.112:1-9)

“ஆரிய னவனை நோக்கி யாருயிருதவி யாதும்
காரிய மில்லான் போனான் கரணையோர் கடன்மை யீதால்
பேரிய லாளர் செய்கை ஊதியம் பிடித்து மென்னார்
மாரியை நோக்கிக் கைம்மா றியற்றுமோ வைய மென்றான்” (கம்ப.நாகபாசப்.271)

இதிகாச உதாரணம் ஒன்றைக் கூற வேண்டும் எனில் கர்ணனை தவிர சிறந்த சான்று வேறு இல்லை. 
தான் சாகும் தருவாயில் கூட , தான் செய்த உதவிகளினால் அடைந்த அனைத்து புண்ணியத்தை கூட தானம் செய்த பெருமை கர்ணனை சேரும்..

இக்கணத்தில் ,கர்ணனின் ஈகை பண்பிற்கு சான்றாக விளங்கும் ஒரு சிறிய கதை ஒன்று  நினைவிற்கு வருகிறது.ஒரு முறை கண்ணன் ,பாண்டவரக்ளுக்கு நிறைய பொன்(சரியாக நினைவில்லை அது பொன்னா அல்லது வேறு ஏதோ செல்வமோ) கொடுத்து இன்று முடிவிற்குள் இது அனைத்தையும் தானம் செய்து விடுங்கள் எனக் கூறி விடுவார்.பாண்டவர்கள் சிறிது சிறிதாக எல்லோருக்கும் பிரித்து கொடுத்து கொண்டே இருப்பர் .நாள் முடியும் தருவாயில் அனைத்தையும் கொடுத்து முடிக்க முடியாமல் போய் விடும்.
கர்ணனிடம் இதே போன்று அச் செயலை  கொடுக்கும் பொழுது .,அவ்வளவு தானே என்று, முதலில் எதிர்ப்படும் சாமானியன் இடம் அனைத்தையும் கொடுத்து விடுவான்.நீயே அனைவருக்கும் கொடு என்று. 
அதாவது எல்லோருக்கும் அதைக் கொடுக்க வேண்டும் என்றாலும் அந்த புண்ணியம் தனக்கு வந்து அடைய வேண்டும் என்று எண்ணாமல் உதவி செய்யும் மனப்பான்மையை எடுத்துக் காட்டுவதற்காக கூறப்படும் கதை அது.

பரிமேலழகர் உரை
[அஃதாவது உலக நடையினை அறிந்து செய்தல்.உலகநடை வேதநடை போல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யுந் தன்மைத்தாகலின் , ஒப்புரவு அறிதலென்றார்.மேல்,மனம் மொழி மெய்களால் தவிரத் தகுவன கூறினார், இனிச் செய்யத் தகுவனவற்றுள் எஞ்சி நின்றன கூறுகின்றாராகலின், இது தீவினையச்சத்தின் பின் வைக்கப்பட்டது.)

மாரிமாட்டு உலகு என் ஆற்றும் - தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன, கடப்பாடு கைம்மாறு வேண்டா - ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல. ('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாராது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.).

மணக்குடவர் உரை
ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா: எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ? கடப்பாடு- ஒப்புரவு. இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?.

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான்

குறள் 214
ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான் 
செத்தாருள் வைக்கப் படும்.
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

பொருள்
ஒத்த தறிவோன் - ஒத்தது அறிவான் 
ஒத்தது - ஒப்பானது; தகுதியானது; உலகத்தார் அங்கீகரித்தது.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல்
அறிவோன் - அறிந்து அதன் படி நடப்பவன் / ஒழுகுபவன்

உயிர்  - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

வாழ்தல்  - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்

உயிர்வாழ்தல் - உயிரோடுகூடியிருத்தல், சீவித்தல்
உயிர்வாழ்வான் - உயிர் வாழ்கின்றவர்களாக கருதப்படுவர்

மற்றையான் - மற்றவர்கள் எல்லோரும்

செத்தல் - சாதல்; தேங்காய்நெற்று; உலர்ந்து சுருங்கிய பனம்பழம், மிளகாய், வாழை முதலியன; மெலிந்தது; அறக்காய்ந்தது, பசுமையற்றது.-

செத்தாருள் - செத்த பிணம் என்று (அதவாது நடமாடினாலும் செத்த பிணமே) 

வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

வைக்கப் படும்- கருதப் படும்

மற்ற மாந்தரின் மகிழ்வும் துன்பமும் தனக்கு நேர்ந்ததுபோல் உணர்பவனே வாழும் மனிதன். மற்றையான் செத்தவனும் நிகரானவன்

உரை 1
உயிர் வாழ்தலின் அர்த்தமே பிறருக்கு உதவுவதுதான். மற்றவர் இறந்தவர்கள்.  
(நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்) 
பொல பொலவென்று பொழுது புலருகின்ற நேரம் வள்ளுவப் பெருந்தகையைக் காணச்சென்றேன். வழக்கம் போல எழுதிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டு கொள்ளவேயில்லை.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏதோ ஒன்றன் பின் ஒன்றாக எழுதுகின்றார் என்று மட்டும் தெரிந்தது. பெரியவர்கள் பக்கத்தில் போய் என்ன எழுதுகின்றார்கள் என்று பார்க்கின்ற தவறை எப்படிச் செய்ய இயலும். சிறிது கழித்து அவரே என்ன நலமாக இருக்கின்றாயா என்றார். நலம்தான் என்றேன். மிகுந்த அச்சத்தோடு என்ன எழுதிக் கொண்டிருந்தீர்கள் தந்தையே என்றேன்.

இந்த ஊர்ச் சவக்கிடங்கில் வைக்கப் பட்டுள்ள சவங்களை அகர வரிசையில் எழுதிக் கொண்டிருந்தேன். என்றார். எனக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. மெதுவாகக் கேட்டேன். அது மருத்துவமனை நண்பர்கள் வேலையல்லவா.அதனைத் தாங்கள் ஏன் செய்ய வேண்டும் என்றேன்.

அவர்களுக்கு இந்த வேலையினைச் சரியாகச் செய்யத் தெரியவில்லை. ஆகவேதான் நான் அந்த வேலையினைச் செய்யத் தலைப் பட்டேன். என்றார்.

பெரியவர்கள் எது செய்யினும் அது சரியாகத்தானே இருக்கும்.

அந்தப் பட்டியலைப் பார்க்கலாமா என்று கேட்டேன்.

எனது கையிலே தந்தார்

பார்த்தேன். பதறிப் போனேன்.

ஆமாம் ஊரில் உயிரோடு இருக்கின்ற மிகப் பெரிய பணம் படைத்தவர்கள் வணிகர்கள் நில உடைமையாளர்கள் என்று பல பேரை சவக்கிடங்கு பட்டியலில் வள்ளுவப் பெருந்தகை எழுதியுள்ளார்.

அச்சத்தோடு அவரைப் பார்த்தேன்.

என்ன என்றார்.

தந்தையே இவர்கள் எல்லோரும் உயிரோடு உள்ளனர். இவர்களைத் தாங்கள் சவக்கிடங்கில் அடுக்கியுள்ளீர்களே என்றேன்.

ஆமாம் தாங்கள் இறந்தது தெரியாமலே இவர்கள் உயிரோடு உள்ளனர்.

இவர்கள் சவங்கள் என்று தெரியாமல் இந்த மக்களும் இவர்களைப் பார்த்துப் பயந்தும் வணங்கியும் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் சவங்கள் என்பதனை மக்களுக்கு தெரிவித்து சவக்கிடங்கிற்கு அனுப்ப உடனடியாக வேண்டிய வழி வகைகளைச் செய் என்றார்.

பேரறிஞர் என்ன சொல்ல வருகின்றார் என்று எனக்குப்புரியவில்லை.

கைகட்டி வாய் பொத்தி நின்றேன்.

வள்ளுவர் சொன்னார். இந்த ஊரிலே ஏழைக் குழந்தைகள் கல்வி பயில நல்ல பள்ளி உள்ளதா. ஏழைகளுக்கென்று நல்ல மருத்துவமனை உள்ளதா. ஏழைகளின் பசி தீர்க்க வழி உள்ளதா. சமூகம் தந்துள்ள பொருளை இந்தச் சமூகத்திற்குத் தராத இந்தப் பணக்காரர்களும் வணிகர்களும் நில உடைமையாளர்களும் இன்னொரு உயிரின் துன்பம் துடைக்கும் உணர்வற்றவர்களாக இருந்தால் அவர்கள் செத்தவர்கள் தானே. பிறகேன் அவர்களை நாம் உயிரோடு உள்ள மனிதர்கள் வரிசையில் வைக்க வேண்டும்.
அடுத்தவர் துன்பம் தீர்க்க எண்ணாத அவர்களை அதனால்தான் சவக் கிடங்கிலே வைத்தேன். என்ன சொல் நான் செய்தது சரிதானே.

என்ன பதில் சொல்ல இயலும் தந்தையிடம். சரி சரி சரி என்றே சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

உரை 2: யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
உலகில் உள்ள சடப்பொருட்கள், உயிர்ப்பொருட்கள் அனைத்தும் இறையாற்றல் என்னும் அற்புதப் பேராற்றலால் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இறைநிலையில் அடங்கியுள்ள இருப்பு, விரைவு அறிவு எனும் முத்தன்மையும், எந்தத் தோற்றத்திலும் வடிவம், துல்லியம், இயக்க ஒழுங்கு (Pattern, Precision, Regularity) இவையாக அமைந்து இனிமையான முறையில் இயற்கையாக (with Natural Rhythm) இயங்கிக் கொண்டு இருப்பதை உணர்கிறோம். சடப்பொருட்களோடும் உயிர்ப் பொருட்களோடும் தினப்படி வாழ்வில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு பெற்றவன் மனிதன். சடப்பொருட்கள் தரத்திற்கேற்பவும், உயிர்ப்பொருட்களின் உணர்வுநிலை, மனநிலைகட்கேற்பவும், அவற்றோடு தொடர்பு கொள்ளக் கூடிய பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும்; பழகிக் கொள்ளவேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் எந்தப் பொருட்களின் தரம் குலையாமலும், உயிர்களுக்கு வருத்தம் நேராமலும் நுட்பத்தோடு, அவ்வவற்றோடு தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும். எந்தப் பொருளுக்கும் முறையான அணு அடுக்குகள் உள்ளன. அத்தகைய அணு அடுக்குகளான கட்டடங்களுள் காந்த ஆற்றலானது நிரம்பி ஒவ்வொரு வகையான அசைவிலும் அது தன் காந்த ஆற்றலை அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மனமாக மாறுவதுடன், உயிர் இனங்களிலே இவற்றிற்கு மேலாக இன்பம், துன்பம் என்ற உணர்வுகளைப் பெறுவதும் இயல்பு. இந்த நுட்பமான உண்மைகளை அறிந்து எந்தப் பொருளையும், உயிரினங்கள், மனிதர்கள் இவற்றையும் அந்தந்த நிலையிலும், இடங்களிலும் அவற்றின் நிலைமைக்குக் ஒத்து, உணர்ந்து, விளைவறிந்த விழிப்போடு கையாளவும், தொடர்பு கொள்ளவும் வேண்டும் என்பதே இக்குறளிலுள்ள உட்கருத்தாகும். மனிதனுக்கு வாழ்வில் இத்தகைய பண்பு இருக்க வேண்டும். உடலாகவும், உயிராகவும், மனமாகவும் இருக்கும் மனிதன், இத்தகைய பேரறப் பண்பாட்டோடு வாழ வேண்டும். அப்படி இல்லையானால் நடைப்பிணமாகத்தான் அவனைக் கருத நேரிடும். பிணம் என்றால் பயனற்றது என்ற ஒரு கருத்தோடு அது இருக்கும்போது மற்றவர்களுக்கு கெட்ட மணம் வீசுவதாலும், கிருமிகளை வெளியேற்றுவதாலும் சுற்றியுள்ளவர்களுக்குத் துன்பமே உண்டாகும். அதுபோல உயிரோடிருப்பவர்களும் பிறருக்கு உதவியின்றியும், துன்பம் விளைவித்துக் கொண்டேயும் இருந்ததால் நடைப்பிணம் என்று மதிக்கப்படுவர். ஒத்து உணர்ந்து வாழும் பண்பு இல்லாதவர்கள் நடைப்பிணமாக மதிக்கத் தக்கவர் என்று விளக்குகிறது இந்தக் குறள்.

உரை 3 : நன்றி (அம்மன் தரிசனம்)

இனி அடுத்த குறளில் அவர் சொல்லும் கருத்து மிகவும் சுவையானது.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

பிற உயிர்களின் இன்ப, துன்பங்களை அறிந்து கொள்வதும், அதற்கு துன்பம் நேராதபடி நடந்து கொள்வதுமே ஒத்தது அறிவதாம்.

ஒருநாள் வள்ளலாரின் சொற்பொழிவைக் கேட்பற்காக, ஓர் அன்பர், மாட்டு வண்டியை மிகவும் வேகமாக ஓட்டிக் கொண்டு வந்தாராம். அவருக்கு சொற்பொழிவை முழுவதும் கேட்டுவிட வேண்டும் என்ற ஆர்வம்.

இதை வள்ளலாரிடமே அவர் சொன்னபோது, ‘அட பாவமே! அடியேன் சொற்பொழிவிற்காக ஒரு வாயில்லா ஜீவனை ரொம்பவும் வதைத்து விட்டாயே! இத்தனை தூரம் ஓடி வந்தால் மாட்டுக்கு எப்படி மூச்சிறைக்கும்?’ என்று வருந்தி அந்த மாடுகளை அன்போடு வருடிக் கொடுத்தார். இதுதான் ஒத்தது அறிவது எனப்படுகிறது.

சக மனிதர்களின், பிற உயிர்களின் உணர்வு புரியாமல், நடந்து கொள்கிறவன், அதற்கு உபகாரமின்றி வாழ்பவன், செத்தாருள் வைத்து எண்ணத் தக்கவன் என்கிறார் அவர்.

குழந்தைத் திருடர்களை, கிட்னி திருடர்களை, ஆதாயம் கிடைக்கும் என்றால், உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய, போலி மருந்துகளை மக்கள் தலையில் கட்டும் கயவர்களை...

பலபேர் தற்கொலை செய்து கொள்வார்களே என்ற பாபத்தின் பயமில்லாத, பொதுப்பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடும் பைனான்சியர்களை...

எப்படி மனிதர்கள் என்று சொல்வது?

அவர்களுக்கு உணர்வு கிடையாது. பிறர் உணர்வும் புரியாது. அவர்கள் ஜடம்; ஆதலால் பிணம்.

எனக்குத் தெரிந்த தனவந்தர் ஒருவர் இறந்து போனார். அவர் வாழும் காலத்தில் எவருக்கும் சல்லிக்காசு கூட உதவியதில்லை. எச்சில் கையால் காக்காய் ஓட்டாதவர் என்பார்களே அந்த ஜாதி. அப்படிப் பட்டவர் இதய நோயால் இறந்து போனார்.

இதைக் கேள்விப்பட்ட போது, ஒருவர் சொன்னார், “அவருக்கு இதய நோய் இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவருக்கு இதயமே இருக்க வாய்ப்பில்லையே!”

மற்றொரு நபர் அந்த கருமியின் சாவைப் பற்றி வேறுவிதமாகக் கேலி செய்தார். “அவர் இறந்து விட்டாரா? அவர் எப்போது உயிரோடு இருந்தார்?”

உயிர்க்குலத்தின் உணர்வுகளை ஒத்து உணராதவன், பிறர் துன்பம் தமக்கே வந்த துன்பம் போல் கருத முடியாதவன் எவனோ, அவனே ஒத்தது அறியாதவன். பிறர் துன்பம் தன் துன்பமாய்க் கருதி நீக்க முயலுபவன் ஒத்தது அறிகிறவன்.

இங்கே, வாழும் பலரில் ஏற்கெனவே இறந்து போனவர்கள் தாம் அதிகம்.

சிலபேர், நண்பர்களுக்கு உதவி செய்வார்கள். பண உதவி செய்தால் அதை வட்டியுடன் திரும்ப எதிர் பார்ப்பார்கள்.

ஐயாயிரம் நன்கொடை தந்தாலும், அதற்கு ஐம்பதாயிரத்துக்குரிய விளம்பரம் தேடுகிறவர்களும் இருக்கிறார்கள்.

பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக உபகாரம் செய்தவன், பிரதிபலன் இல்லாவிட்டால் அலுத்துக் கொள்கிறான்; அலட்டிக் கொள்கிறான்.

பிறரைத் தன்போல் மதித்து உபகாரம் செய்கிறவன்தான் உண்மையில் உபகாரம் செய்தவனாகிறான். அவனுக்கே அதற்குரிய பலனும் கிடைக்கிறது.

இனி மற்றொரு குறளைப் பார்ப்போம்.
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

உலகத்தை நேசிக்கும் பேரறிவாளனின் செல்வம் ஊருணி நீர் நிறைந்தது போல் ஊருக்குப் பயன் தரும் என்கிறது குறள்.
உலகத்தை நேசிக்கும் பேரறிவு எல்லாருக்கும் வாய்க்காது. எவன் பேரறிவு உடையவனோ அவனே உலகத்தை நேசிக்கிறான்.

சிற்றறிவு தன்னையே நேசிக்கும். தன்னையே கொண்டாடும்.

பேரறிவு என்பது, ‘சர்வம் பிரம்ம மயம்’ என்று அறிந்து கொள்ளும் அறிவுதான். அவ்வறிவுதான் தன்னைப் போல் பிறரை நேசிக்க வைக்கும்.

அசடர்களை ஆசை ஆட்டிவைக்கிறது. அறிஞர்களை கருணை இயங்க வைக்கிறது.

அந்தக் கருணைதான் ஒப்புரவின் அடிப்படையாக இருக்கிறது.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் - (நாட்டுக்கு) ஒத்த செயலைச் செய்பவன் உயிரோடு கூடி வாழ்பவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்- அச் செயலைச் செய்யாதான் இறந்தவருள் (ஒருவனாகக்) கருதப்படுவான்.

அகலம்: நாட்டுக்கு ஒத்த செயல் - ஒப்புரவு

கருத்து: ஒப்புரவு செய்கின்றவன் உயிரோடு கூடி வாழ்கின்றவன்; ஒப்புரவு செய்யாதான் பிணத்தை ஒப்பன்.

உரை 5 (நன்றி: அஷோக்)
வள்ளுவரின் வெறுப்பின் உச்சமாக இக்குறள் ஒலிக்கிறது. “செத்தான்” என்பது, மிகவும் மரியாதைக் குறைவான சொல், இறந்தவரைக் குறிக்க. ஒப்புரவு இல்லாரை, அவ்வாறு சொல்வதன் மூலம், பிறர்குதவி செய்யும் குணமில்லாரை அவர் எவ்வாறு நினைக்கிறார் என்பதைத் தெளிவாக காட்டிவிடுகிறார்.

உலகநடைக்கு பிறருக்கு உதவி செய்து வாழும் பெருங்குணமே ஏற்றது, அவ்வாறு வாழ்கின்றவரே உயிரோடு வாழ்கின்றவர், மற்றவரெல்லாம், உயிரிருந்தும் பிணம் போன்றவரே. ஏனெனில் பிணத்துக்குத்தான் தன்முன்னர் தோன்றும் இல்லார்க்கு, அவர் முகமறிந்து உதவுதல் என்பது இயலாது. இதயத்தில் துடிப்பும், ஈரமும் உள்ளோர்க்கு அவ்வாறு பாராமுகமாய் இருத்தல் இயலாது.

மேலும்: இனிதல் (நன்று)
மேலும்: அஷோக் (முழு உரை)
மேலும்: பாட்டி சொல்லும் கதைகள்
மேலும்: சத்யானந்தன்

குறட் கருத்து   (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
வள்ளுவரைத் தவமிருந்தே பெற்றாள் நல்ல
வடிவழகில் சிறந்தோங்கும் தமிழாம் தாயாள்
அள்ளி அவர் தருகின்ற செல்வம் எல்லாம்
அப்படியே கைக் கொண்டால் வெற்றி கொள்வீர்
எள்ளி நகையாடுதற்கு இடமேயின்றி
எங்கேயும் நீரே தான் தலைமை ஏற்பீர்
உள்ளி அவர் வழி ஒன்றே உண்மை என்று
உணர்ந்தால் நீர் உலகத்தின் உயரே நிற்பீர்

பிறப்போடு இறப்பதனைக் கணக்கெடுக்கும்
பேரேடு அரசாங்கக் கையில் உண்டு
பொறுப்பாக அவர் எடுக்கும் கணக்கை நம்பி
பூமியிலே வாழ்கின்றார் மனிதரெல்லாம்
சிறப்பாக இதை விட்டு வள்ளுவனார்
செய்கின்றார் இப் பணியைத் தனி ஆளாக
கடுப்பாகிப் போயிடுவார் சிலரும் கண்டால்
கலகலத்துச் சிரிப்பீர்கள் நீங்கள் கண்டால்

உயிரோடு ஊரினிலே உயர்ந்தவராய்
உலவுகின்ற பல பேரை வள்ளுவரும்
அயராமல் சவக் கிடங்கில் வைக்கச் சொல்லி
அரசுக்கு ஆணையொன்றை அருளிச் செய்தார்
பயிருக்குள் களை போல வாழுகின்ற
பணம் படைத்தோர் மற்றவர்க்கு உதவி வாழார்
உயிரோடு இருந்தாலும் செத்தார் என்றே
உரைக்கின்றார் உறைக்கட்டும் உலகுக்கென்றே

படிப்பதற்கு உதவியின்றி தவிக்கும் ஏழ
பக்க த்திலே இருந்தும் உதவ எண்ணார்
அடி வயிற்றுப் பசியதனால் கலையிருந்தும்
அறிவிருந்தும் அழிவாரைக் காக்க எண்ணார்
கடி மணத்தைக் காணவொண்ணா ஏழ்மையிலே
கதறி நிற்கும் கன்னியர்க்கு உதவி செய்யார்
பெரியவராய்ப் பணம் கொண்டு வாழ்ந்தாரேனும்
பிணம் என்று கிடங்கினிலே வைக்கச் சொன்னார்

நன்றி (MovingMoon)
ஒப்புர வொழுகும் எண்ணம்
.. உடையவன் அதனைப் போற்றும்
அப்பெரும் பண்பினாலே
.. அனைவரின் துன்பம் நீங்க
தப்பிலா துதவி வாழும்
.. தரத்தினால் உயர்ந்தோன் ஆவான்;
அப்படி உதவா தானை
.. அழிந்ததாய் உலகம் எண்ணும் (4)

பரிமேலழகர் உரை
உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான்-உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்-அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும். 
விளக்கம்
(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேதநடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் - ஒப்புரவு செய்வானும் செய்யாதானுமாகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான்.

 உயிருக்குரிய அறிவுஞ் செயலுமின்மையின், நடைப்பிணமென்றுங்
 கருதப்படாது பிணமென்றே இழிந்திடப்படுவான் என்றார்.

மணக்குடவர் உரை
ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன். இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

Thirukkural - Management - Corporate Social Responsibility
A person is considered alive only when he is sensitive to the needs of all creations and serves them to satisfy their needs. That is why the philosophy' service before self’s is a reflection of Kural 214.

He only lives who is kin to all creation
Deem the rest dead.

If a person fails to be sensitive to the needs of other beings or lacks perceptiveness, he cannot serve them to fulfil their needs. If a person does not serve others' needs, he is considered dead. So, there is a social obligation to serve others. What is applicable to an individual is applicable to an organization as well. Let your organization serve the society to be served well in turn.