Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_025. Show all posts
Showing posts with label Athikaaram_025. Show all posts

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

குறள் 249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
தெருளான் - அறிவிலி

தெருளாதான் - அறிவில் தெளிவு இல்லாதாவர்

மெய்ப்பொருள் - உண்மை, உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று

கண்டற்றால் - கண்டு அடைதல் என்பது

தேரின் - தேர்தல் - tēr-   4 v. tr. 1. [M. tēruka.]To examine, investigate, inquire into; ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541). 2.To understand, know; அறிதல் தேர்ந்தனன்முருகன் வாய்மை (கந்தபு. மூவாயிர. 81). 3. Toconsider, deliberate, ponder well; சிந்தித்தல் 4. To elect; தெரிந்தெடுத்தல். Mod. 5. To seek;தேடுதல். சிறுவெண்காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு (ஐங்குறு. 162). 6. To ascertain,form a conclusion; நிச்சயித்தல் பேதைபாகனேபரமெனத் தேர்ந்துணர் பெரிய (திருவிளை. புராணவர.8). 7. To acquire, obtain; கொள்ளுதல் (பிங்.)8. To doubt, question; ஐயுறுதல் (குறள், 144,உரை.)--intr. To be well versed, proficient in;பயிற்சியடைதல். நூல்களிற் றேர்ந்த மதி  

அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

அருளாதான் - பிற உயிர்களிடத்தில் அருள் இல்லாதான்

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

அறம் - தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல்

முழுப்பொருள்
பிறரிடத்தில் மனதளவில் அருளில்லாதவன் செய்யும் அறம் பயனளிக்காது ஏனெனில் அருளின்மையே அவன் செய்யும் அறத்தை அழித்துவிடும். எப்படியென்றால், அறிவில்லாதவன் மெய்ப்பொருள் கண்டது போல் பயனற்றதாகும். 

உதாரணமாக சொன்னால் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் சிதம்பர ரகசியம் என்னும் ஒரு சந்நிதி மூலவர் நடராஜர் அருகில் இருக்கும். அங்கே பொன்னாலான வில்வ தள திரை விலகிய உடன் ஆகாச ஸ்வரூபமாக இறைவன் உள்ளார் என்றே பலர் நினைக்கின்றனர். அது மெய்யான ஞானம் இல்லாதவர்கள் கூறுவது. ஞானம் உள்ளவர்கள் அறிவர் மாயை என்னும் திரை விலகினால் தான் ஒளி தெரியும் என்றென்பது. அதுவே அறிவில்லாதவர்கள் திரையை விலக்கினாலும் மெய்யான ஒளியை காண முடியாது. ஆதலால் திரை விலக்கியதன் பயனை பெற முடியாது. அதுபோலவே அருள் இல்லாதவர்கள் அறம் செய்தாலும் பயனில்லை. 

சிதம்பர ரகசியம்
ஐந்தாயிரமாண்டுகளுக்கும் மேலாக உலக முழுவதும் அறியப்பட்ட வார்த்தை, 'சிதம்பர ரகசியம்' ஆகும். ஆனால் , அதன் ரகசியம் அறிந்தவர் ஒரு சிலரே.

சிதம்பர ரகசியத்தை புறக்கண்னால் காணாமல்  ஞானக்கண்ணால் கண்டுணர்வதே இந்த ரகசியம் உணர்வதன் அருளாகும். இதற்கு இறையருள் தேவை. பரம ரகசியமாகவும், பராபர ரகசியமாகவும் விளங்கும் சிதம்பர ரகசியம் சிவ ரகசியமாகும்.

உயிர்களால் உணர முடியாததும், புலன்களால் அறிய முடியாததுமே சிதம்பர ரகசியம்.. சித்தத்தை வென்ற சித்தர்களுக்கே இது வசப்படும்.

சிவ ரகசியத்தை- சிதம்பர ரகசியத்தை தரிசிக்க பொருள் வல்லது சாதனையேயன்றி வேறொன்றும் இல்லை.

சிதம்பர ரகசிய பீடம்
தில்லையம்பல நடராசன் சந்நதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது. சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது. இதனை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறுவார்கள்.

இது 'திரஸ்க்ரிணீ' என்கிற நீல வஸ்திரத் திரையால் மூடப்பட்டு இருக்கும். திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். பரிபூரணமான வெட்டவெளியே இதன் ரகசியமாகும். இந்த வாயிலில்  உள்ள திரை அகற்றுப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது, அங்கு சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது. தங்கத்தால் செய்யப்பட்ட  'வில்வ தளமாலை' ஒன்று தொங்கும்  காட்சிமட்டுமே தெரியும். இதனுள்ளே வேறு திருவுருவம் ஏதும் தோன்றாது.  

மூர்த்தி ஒன்றும் இல்லாமலேயே வில்வ தளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் முடிவும் முதலும் இல்லாது இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. வெட்ட வெளியில் அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். அந்த ரகசியத்தின் அடிப்படையில் தான்  

பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்தது எனலாம். சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம் = சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்- வெட்டவெளி. 'மனிதனே !உன்னிடம் ஏதும்  இல்லை’ என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.

புராணங்கள்  சிதம்பர ரகசியத்தை 'தஹ்ரம்' என்று குறிப்பிடுகின்றன. உருவமின்றி  அருவமாய் இருப்பதால் ‘அரூபம்’ என்றும் சொல்வார்கள்.

இந்த சிதம்பர ரகசியத்தை  வேண்டிக்கொண்டு, திடசங்கல்பத்துடன் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி நினைத்த பலன்  கிடைக்கும். ஆனால் எவ்வித  பலனையும் சிந்திக்காமல் ‘நிஷ்சங்கல்’பமாகத் தரிசித்தால் ஜென்ம விமோசனம் கிடைக்கும் என்பது  நம்பிக்கை.

இந்த சிதம்பர ரகசியம் என்பதன் விளக்கம். இது  மனக் கண்ணால் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது, திரை  என்பது மாயை. திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்‘ என்பதே விளக்கம். இந்த அருவ நிலைதான் இங்கு  மூலஸ்தானம்.

அருவ  வடிவமாக,  இறைவன்  இங்கு ஆகாய உருவில்  இருக்கிறான்  என்பதை உணர்த்துவதே இந்த வெட்டவெளி ஆகும்.  அதனால் சிதம்பரம் ஆகாயத் தலம் என்றும் பூசிக்கப்படுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும். (மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.).
 
மணக்குடவர் உரை
தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்: ஆராயின்அருளில்லாதான் செய்யும் அறமும். இஃது அறஞ் செய்யவும் மாட்டாரென்றது

மு.வரதராசனார் உரை
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

குறள் 248
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அற்றார் - பொருள்இல்லாதவர்; முனிவர்

பூப்பர் - பூத்தல் - மலர்தல்; தோன்றுதல்; உண்டாதல்; பொலிவுபெறுதல்; பூப்படைதல்; கண்ணொளிமங்குதல்; பூஞ்சணம்பிடித்தல்; பயனின்றிப்போதல்; தோற்றுவித்தல்; படைத்தல்; பெற்றெடுத்தல்.

ஒருகால் - ஒரு காலத்தில் 

அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

அற்றார் -  பொருள்இல்லாதவர்; முனிவர்

அற்றார் -  பொருள்இல்லாதவர்; முனிவர்

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

அரிது அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

முழுப்பொருள்
பொருள் இவ்வுலகத்தில் வாழ தேவையான ஒன்று அதுப்போல துறவறத்தில் வாழ அருள் அவசியம் என்று முன்னர் கூறியிருந்தார். ஆனால் இல்லறத்தில் பொருள் தேவையான ஒன்று தானே தவிர அடிப்படை தகுதி அல்ல. ஆனால் துறவறத்தில் அருள் என்பது அடிப்படை தகுதியாகும்.

அதனால் தான் திருவள்ளுவர் கூறுகிறார் இல்லறத்தில் பொருள் இல்லாதவர் ஒருவர் (வறியவர்) ஒரு காலத்தில் செல்வத்தை பெற்று பொலிவடைய முடியும். உழைப்பு, சூழல், ஊழ்வினை, குடும்ப சொத்துக்கள் என்று ஏதாவது வந்து கைக்கொடுக்க கூடும். ஆனால் அருள் ஒருவனை விட்டு விலகியது என்றால் அதனை அவன் மறுபடியும் பெறுவது மிக மிக அரிது. அதாவது ஒருவதடவை போன அருளை மறுபடியும் பெறுவது மிக மிக மிக கடினம். மீண்டும் அருளுள்ளவராய் ஆதல் முடியாது. அருள் இல்லாதவருக்கு துறவறமும் இல்லை அதனால் வீடுபேறும் இல்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொருள் அற்றார் ஒருகால்பூப்பர்- ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர், அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது - அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை. ( 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது, மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.).

மணக்குடவர் உரை
பொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடையராதலும் கூடும்; அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்கமுண்டாகாது. இது பொருளின்மையேயன்றி எல்லாக் கேடு முண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.

Thirukkural - Management - Ethical Behavior
We are familiar with the phrase overnight-riches. If person does not have wealth or if a person loses his properly earned wealth, he can earn them over a period. However, if a person does not have grace, virtue or kindness, he can never become a noble person, even if he becomes wealthy, admonishes Kural 248.

The poor may be rich one day, but the graceless
Will always lack grace.

A person with only wealth but not kindness will lose his wealth and lose his popularity. That sort of loss is huge, irreparable, and destructive to self.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

குறள் 247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு 
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

இல்லார்க்கு - இல்லாதவர்க்கு

அவ் - அந்த 

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

இல்லார்க்கு - இல்லாதவர்க்கு

இவ் - இந்த 

உலகம்  - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

இல்லாகியாங்கு - வாழ்க்கை இல்லை அதுபோலே.

முழுப்பொருள்
பொருள் நிலையில்லாதது என்று ஆயிரம் கூறலாம். ஆனால் இந்த வையகத்தில் வாழ பொருள் அவசியம். பொருள் இல்லையென்றால் இந்த இல்லறவாழ்வில் வாழ்வது மிக மிக கடினம். அதிகம் தேவையில்லையென்றாலும் தேவைக்கான அளவாவது பொருள் இருத்தல் வேண்டும். அதுவே நடைமுறை யதார்த்தம். ஆதலால் இல்லறத்தில் வாழ்கிறாய் என்றால் பொருளை பேணுவதில் தவறில்லை. ஆனால் அதுமட்டுமே வாழ்வும் அல்ல. 

அதேப்போல் இவ்வுலக வாழ்க்கைக்கு அதாவது இல்லற வாழ்க்கைக்கு அடுத்த படிநிலையான துறவறத்திலும் அதற்கு அடுத்தபடியான சொர்க்கத்திலும் (வீடுபேறு) அருள் மிக அவசியம். அருள் இல்லையென்றால் அவ்வுலகம் இல்லை. 

பொருள் இல்லையென்றால் இவ்வுலகத்தில் வாழத்தான் முடியாது இவ்வுலகத்தில் இடம் இல்லை என்று இல்லை. ஆனால் அருள் இல்லையென்றால் அவ்வுலகமே இல்லை. 

ஆனால் மேற்கோள் வழக்கில் பொருள்செல்வம் என்பது, பணம் சார்ந்ததாகவே சொல்லப்படுவதை இன்றைய வழக்கிலும், பழம்பாடல்களிலும் கூட காணலாம். குறுந்தொகைப்பாடல்(120:1) ஒன்று, “இல்லோன் இன்பம் காமுற்றாங்கு” என்கிறது. நாலடியார் பாடல் (281), “ஒத்த குடிப்பிறந்தார்க் கண்ணும் ஒன்றில்லாதார் செத்த பிணத்திற்கடை”! அப்பர் சுவாமிகள் கூட, “மாடு தானத்தில்லெனின் மானுடர் பாடுதான் செல்வாரில்லை”  (அப்பர்.கொண்டீச்சரம் 3) என்று வேடிக்கையாகவோ, அல்லது வேதனையுடனோ கூறுவார். “இல்லானை இல்லாளும் வேண்டாள், மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள், செல்லாது அவன்வாய் சொல்” என்பது “நல்வழி”யில் ஔவை வாக்கு. ஆனால் வள்ளுவரே கூட பொருள்செய்வகை அதிகாரத்தில், “இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு” என்று கூறுகிறார். சீவக சிந்தாமணிப்பாடல் (1549) ஒன்று, “எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கிவ்வுலகில் இன்பமேபோல் ஒட்டாவே கண்டீர்” என்று கூறுவதும் பணவசதி சார்ந்த வளப்பத்தைப் பற்றிதான்.

”இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்’ (குறள் 1042)

மஹாகவி பாரதியார் தனது சுயசரிதையில் "பொருட் பெருமை" என்ற தலைப்பில் பொருளின் அவசியத்தையும் கூறியிருப்பார். 
பொருளி லார்க்கிலை யிவ்வுல கென்றநம்
புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்.
பொருளி லார்க்கின மில்லை, துணையிலை,
பொழு தெலாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால்.
பொருளிலார் பொருள் செய்தல் முதற்கடன்.
போற்றிக் காசினுக் கேங்கி யுயிர்விடும்
மருளர் தம்மிசை யேபழி கூறுவன்:
மாமகட்கிங்கொர் ஊன முரைத்திலன்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல. ( 'அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.).

மணக்குடவர் உரை
அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல. இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

சாலமன் பாப்பையா உரை
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
We know that money, materials are transient in nature. However, money/materials alone is not sufficient for life. We can say that the poor do not possess this world. Likewise, the uncompassionate do not inhabit the other world.

Questions that I ask to the kid
Who can live in this world? Who doesn't have place in the other world?

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

குறள் 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

நீங்கிப் -  நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

பொச்சா-த்தல் - poccā-   12 v. tr. 1. Toforget; மறத்தல். புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள், 719). 2. To deride, ridicule; இகழ்தல். கொடையளிக்கட் பொச்சாவார் (ஆசாரக். 67).

பொச்சாந்தார் - மறந்தவர் 

என்பர் - என்பார்கள்

அருள் -  சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

நீங்கி - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

அல்லவை - தீயவை; பயனின்மை; மற்றவை ; அல்லாதவற்றை

செய்து  - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

ஒழுகுவார் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

முழுப்பொருள்
இல்லறவியலுக்கு அன்பு அடிப்படையாகும். துறவறவியலுக்கு அருள் அடிப்படையாகும். மற்ற உயிர்கள் மீது அருள் என்றால் கருணை என்று அர்த்தம். ஆனால் இல்லறத்தில் இருப்பவருக்கும் பொருந்தும். துறவியர்க்கு கட்டாய பண்பு. மனிதர்களுக்கு இது பொது பண்பு.

வாழ்வின் நல்வினைகள் அன்பு அருள் ஆகியவை நீங்கும் வண்ணம் அறச்செயல்கள் புரிவதில் இருந்து விலகி தீயனவற்றை பயனல்லாதவற்றை செய்யும் ஒருவர் இப்பிறவியின் பொருளான வீடுபேறில் இருந்து நீங்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டார் என்று இவ்வுலகம் கூறும்.

மூன்று விதமான துன்பங்கள் உண்டு 1) தன்னால் வருகின்ற துன்பம் 2) பிற உயிர்களால் வருகின்ற துன்பம் 3) தெய்வங்களால் வருகின்ற துன்பம்.

இவற்றை வடநூலார் “தாபத்ரயம்” என்பர். அவை ஆதியாத்மிகம், ஆதிபௌதிகம் மற்றும் ஆதிதெய்விகம் எனப்படும். பின்னாளில் இசைப்பாடல்களில் “தாபத்ரய வெயில்” என்று இவற்றை தகிக்கும் வெயில் சூட்டுக்கு இணையாக இசையாசிரியர்கள் கூட எழுதியிருக்கிறார்கள்.

இவர் முற்பிறவியில் செய்த பயனாக துன்பங்கள் அனுபவிப்பான் . அதையும் மறந்து இவன் இப்பிறவியில் அறம் செய்யாததற்கும் தீவினை செய்வதற்கும் துன்பம் அனுபவிப்பான். அருளை விட்டு நீங்குவான்.

அறிவாளிக்கும் அறிவில்லாதவனுக்கும் என்ன வித்தியாசம்? நாம் வாழ்க்கையில் கடந்து செல்கிற பொழுது ஒரு அனுபவம் ஏற்பட்டால் அவ்வனுபவத்தில் இருந்து ஒரு பாடம் படித்துக்கொள்கிறவன் அறிவாளி. அப்படி இல்லாமல் அந்த பாதையிலே திரும்ப திரும்ப ஒரே அனுபவத்தை கடந்துகொண்டு இருந்தான் என்றால் அவன் அறிவில்லாதவன் / முட்டாள். ஒரு தரம் வாழ்விலே தனது தவறால் (மனிதன் தவறு செய்வது இயல்பு. நிகழ வாய்ப்புண்டு) ஒரு பிரச்சனை வந்தால், ஆறாம் அறிவு எனும் சிந்தனை இருக்கிறது என்பதை சொல்ல ஒருவருக்கு தகுதி இல்லை. அவன் மனிதன் என்று கூற தகுதியற்றவன். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியுமுடையவரென்று சொல்லுவர். இது பொருளில்லையாமென்றது.

மு.வரதராசனார் உரை
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

சாலமன் பாப்பையா உரை
அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

குறள் 245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
அல்லல் - துன்பம்

அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

ஆள்(ளு)-தல் - āḷ-   2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reign over, govern;அரசுசெய்தல். (திவ். பெரியதி. 6, 2, 5.) 2. Toreceive or accept, as a protégé; ஆட்கொள்ளுதல் ஆள்கின்றா னாழியான் (திவ். திருவாய். 10, 4, 3).3. To control, manage, as a household; அடக்கியாளுதல். 4. To use a word in a particularsense and so give currency to it; வழங்குதல் சான்றோரா லாளப்பட்ட சொல் 5. To cherish,maintain; கைக்கொள்ளுதல் நாணாள்பவர் (குறள்,1017). 6. To keep or maintain in use; கையாளுதல் எடுத்தாளாத பொருள் உதவாது.

ஆள்வார்க்கு  - ஆட்கொண்டவர்க்கு (அருள் ஆட்கொண்டவர்க்கு)

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய்; சிறியகாலவளவுவகை.

வழங்கும் - வழங்குதல் - இயங்குதல்; உலாவுதல்; நடைபெறுதல்; அசைந்தாடுதல்; கூத்தாடுதல்; நிலைபெறுதல்; பயிற்சிபெறுதல்; கொண்டாடப்படுதல்; தகுதியுடையதாதல்; பயன்படுத்தல்; கொடுத்தல்; செய்துபார்த்தல்; சொல்லுதல்; நடமாடுதல்.

மல்லல் - வளம்; வலிமை; மிகுதி; பொலிவு; அழகு; செல்வம்

மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்சொல்.

ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.

கரி - அடுப்புக்கரி; நிலக்கரி; கரிந்தது; கருமையாதல்; மிளகு; நஞ்சு; மரவயிரம்; யானை; பெட்டைக்கழுதை; சான்றுகூறுவோன்; சான்று; விருந்தினன்; பயிர்தீய்கை; வயிரக்குற்றங்களுள்ஒன்று.

முழுப்பொருள்
இவ்வுலகில் நல்வினைகளை செய்து அருள் ஈன்றவருக்குத் துன்பம் இல்லை. அதற்கு சான்று? வேறு எந்த உலகத்திற்கும் சென்று தேட தேவையில்லை காற்று உளவும் இந்த வளமிக்க உலகத்தில் வாழ்ந்த வாழ்கின்ற அருள்பெற்ற உயர்ந்தோர்களே சான்று. 

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற  ஔவையின் “மூதுரைப்” பாடலின் கருத்தையொட்டித்தான் இங்கும் பொருள் கொள்ளவேண்டும். 

நெஞ்சில் ஈரமும், மாநிலத்துப் பிற உயிர்களிடத்தில் பெருங்கருணை கொண்டவர்கள் சிலராவது இருக்கையிலே, அவர்களும், அவர்களால் எல்லோருமே, உயிர்வாழ முதற்காரணியாய் இருக்கிற காற்று இருந்து இயங்கிக்கொண்டிருக்கிறது, என்றே நாம் உள்ளுரைப் பொருளைக் கொள்ளவேண்டும்

பி.கு : அப்படியானால் காந்தி போன்றோர் சுட்டுக்கொல்லப்பட்டாரே என்றால்? அது விதிவிலக்குகள்.விதிவிலக்குகளுக்கு விதி கிடையாது. அது ஊழின் கணக்கு. வேறேதோ ஒரு கணக்கிற்காகப் பெற்ற துன்பமாகும். 

வள்ளலார் போன்ற தவசீலர்களின் உள்ளங்களில் பெருக்கெடுத்து ஓடிய கருணை அவர்கள் பாடல்களிலே நமக்கு தெரியவருகிறது. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார் பெருமான். பயிருக்கும் உயிர் உண்டு, அது வாடவும் காணப்பொறுக்காத மனம் வள்ளலாருக்கு இருந்திருக்கிறது.

எல்லோருக்கும் தெரிந்த குழந்தைகளைத் தாலாட்டும் தொட்டில் பாடலில், வரும் கீழ்கண்ட வரிகளைப் பார்த்தால், நம்மவர்கள் கருணையென்பதை குழந்தைகளுக்கும் சொல்லியே வளர்த்துள்ளதும் தெரியவரும். “கற்கண்டுக் கட்டியே சாய்ந்தாடு! கருணை ஒளியே சாய்ந்தாடு!”. குழந்தையை கருணை ஒளி, வளி என்பதற்காகமட்டும் சொல்லவில்லை. கருணையென்பதை நாமும் கொண்டாடுகிறோம், அப்படி ஒன்று இருப்பதை குழந்தைப் பருவத்திலேயே சொல்லிக்கொடுக்கிறோம் என்பதற்காகவே இவ்வரிகள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது, வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று. ( சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அருளுடையார்க்கு அல்லலில்லை: அதற்குச் சான்று காற்றியங்குகின்ற வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம். இஃது அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார்மாட்டே காணப்படுமென்றது.


மு.வரதராசனார் உரை
அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு

குறள் 244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

மன்னுயிர் - நிலைபெற்றஉயிர்; விலங்குச்சாதி; மானிடச்சாதி; ஆன்மா.

ஓம்பி - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

ஆள்வாற்கு  - āḷvār   n. ஆள்-. The Deity,as supreme ruler; ஸ்வாமி திருத்தீக்காலி ஆள்வார்கூத்தப் பெருமா னடிகளுக்கு (S.I.I. iii, 103).  ; அரசர்

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

என்ப - என்று சொல்லப் படுவன; என்று சொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

அஞ்சும் - அஞ்சுதல் -பயப்படுதல்.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள்
இந்த உலகத்தில் உள்ள நிலைபெற்ற உயிர்களை (மனிதர்கள், விலங்குகள்) போற்றி பாதுகாத்து பேணுவோர்க்கு அருள் எனப்படும் நல்வினை ஆளும். ஆதலால் அத்தகையவர்க்கு தன்னுடைய உயிரை பற்றியோ தீயவினைகள் பற்றியோ அஞ்சவேண்டிய அவசியம் இல்லை/இராது. 

இக்குறளில் எனக்கு இரண்டு விஷயங்கள் தெளிவடைகின்றன. முதலாவது, பிறரை பேணுவதே மானிடரின் கடமை. அப்படி பேணினால்தான் அவருக்கு அருள்/நல்வினை. இரண்டாவது, அப்படிப் பிறரை பேணுவோர் தீவினைகளைப்பற்றி (அதாவது யாராவது நம்மை பற்றி கண்ணுப்போட்டுவிடுவார்களோ, சூனியம் வைத்து விடுவார்களோ, கெடுதல் செய்வார்களோ) அஞ்சவே வேண்டாம். 

நாம் நல்வினைகளை செய்தால் தீவினைகளை பற்றி அஞ்சவோ நினைக்கவோ வேண்டவே வேண்டாம்.

உயிர்களுக்கு நிலைபேறா என்னும் கேள்விக்கு, உலகில், உயிர்கள் என்பது ஒரு நிலையான தத்துவம் என்பதையே “மன்னுயிர்” என்ற சொல் காட்டுகிறது

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர். (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.).

மணக்குடவர் உரை
நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார். இது தீமை வாராதென்றது.

மு.வரதராசனார் உரை
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த 
இன்னா உலகம் புகல்
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

சேர்ந்த - சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

நெஞ்சினார்க்கு - நெஞ்சத்தை உடையவர்க்கு

இல்லை - இல்லை

இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்

சேர்ந்த -  சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

புகல் - புகுகை; இருப்பிடம்; துணை; பற்றுக்கோடு; தஞ்சம்; உடம்பு; தானியக்குதிர்; வழிவகை; போக்கு; சொல்; விருப்பம்; கொண்டாடுகை; பாடும்முறை; வெற்றி; புகழ்; புரையுள்ளது.

முழுப்பொருள்
இருள் என்னும் அறியாமை என்னும் தீங்குதரும் இன்னா (துன்பமான) உலகம் ஆனது மிக கொடியது ஆகும். ஆனால் நெஞ்சத்தில் அருள் என்னும் கருணை, (பிறருக்கு) நல்வினை செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளோர்க்கு அத்தகைய இருண்ட உலகத்தில் இடம் இல்லை.

ஏனெனில் அறியாமை என்னும் இருள் அவர்கள் மனதில் இல்லை. அறிந்தும் மனதில் கருணை இல்லை என்றால் அவர்கள் மனதில் இருள் இருக்கிறது என்றே பொருள் (ஏனெனில் அறிந்ததை கடைப்பிடித்தால் தான் அறிதல்). ஒருக்கால் ஒரு நல்வினை ஆற்றும் பொழுது துன்பங்கள் வந்தாலும் அவர்களுக்கு வாழ்வின் மீது உள்ள நம்பிக்கை ஒளியாய் அவர்களை இருளில் (துன்பத்தில்) இருந்து விலக்கி ஊக்கம் தந்து முன்னே வழி நடத்தி காப்பாற்றும்.

இருள் இல்லையேல் அருள் உண்டு.
அருள் இல்லையே இருள் நிறைந்துவிடும்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.).

மணக்குடவர் உரை
அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.

மு.வரதராசனார் உரை
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.

நல்லாற்றான் நாடி அருளாள்க

குறள் 242
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றால் 
தேரினும் அஃதே துணை.
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நல் - நல்ல பயன்களை விளைவிக்கும் வினைகளை
ஆற்றான் - ஆற்றுகின்றவன், செயல்படுத்துபவன்
நாடி - அறிந்துக்கொண்டு, ஆராய்ந்து அவரை தேடிச் சென்று
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை, ஏவல்
ஆள்க - -ஆளு, கிறேன், ஆண்டேன், வேன், ஆள, v. a. To rule, reign, exercise royal power, whether supreme or dele gated, அரசுசெய்ய. 2. To possess and em ploy slaves, அடிமையாள. 3. To possess and enjoy the produce of land, the use of a house, &c., ஆட்சிசெய்ய. 4. To govern a wife, household, &c., குடும்பத்தையாள. 5. To accept, adopt--as a servant, slave, &c., receive into protection, ஆட்கொள்ள. 6. To use, establish usage--as in language, மொ ழியாட்சிசெய்ய. 7. To cherish, maintain, cul tivate, exercise, ஓம்ப. 8. To manage, di rect, கையாள. (c.)-- 
பல் - எயிறு; ஒன்றுக்குமேற்பட்டவை; யானை, பன்றிமுதலியவற்றின்கொம்பு; நங்கூரநாக்கு; சக்கரம்; வாள்முதலியவற்றின்பல்போன்றகூர்; சீப்புப்பல்; வெள்ளைப்பூண்டுமுதலியவற்றின்தனித்தனிஉள்ளீடு; தேங்காய்உள்ளீட்டின்சிறுதுண்டு.
ஆற்றான் -  ஆற்றுகின்றவன், செயல்படுத்துபவன்
தேரினும் - தேர்ச்சி பெற்று இருந்தாலும்
அஃதே - அதுவே 
துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

முழுப்பொருள்
வாழ்வில் பிறருக்கு நற்பயன் விளைவிக்கும் செயல்களை செய்யும் நல்லாற்றான் தனை நன்கு ஆராய்ந்து அவரை நாடி அவர் செய்யும் நற்வினைகளை கற்று அவற்றை ஓம்பி செய்க. அத்தகைய நல்லவரின் அளவே ஒருவருக்கு அளவுகோலாகும். ஒருவர் செய்யும் நற்செயல்களே ஒருவருக்கு காப்பாகும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.  (நாம் வழக்கில் கூறுகிறோம் அல்லவா - நாம் செய்த புண்ணியம் நம்மை காப்பாற்றும்)

பலவழிகளில் பல சமையங்களில், பல மதங்களில் சென்று திக்கு தெரியாமல் நேரத்தை செலவழித்து கடைசியில் நற்வழியை கண்டுபிடித்து தேர்ச்சிப் பெறுவதை விட ஒரு நல்லாற்றதனை கண்டடைந்து அவரிடம் கற்று நற்வினைகளை செய்தால் அதுவே வாழ்வின் காப்பாக அமையும்.

இப்படி செய்தால் ஒருநாள் இவர்களே அருளுடையவர்களாக ஆவார்கள்.

இங்கே பாரதியார் அவர்கள் ஆயிரந் தெய்வங்களை தேடுவதை அறிவை தேடி அதன் படி நடப்பதே சிறந்தது என்கிறார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

அறிவே தெய்வம்
கண்ணிகள்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ? 1

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ? 2

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ? 3

வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே. 4

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே. 5

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே-உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே. 6

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ? 7

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ? 8

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ? 9

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்

உணர்வெனக் கொள்வாயே
(மகாகவி சுப்ரமணிய பாரதியார்)


மேலும்: அஷோக் உரை 
இக்குறளுக்குக்கான பரிமேலழகர் உரை மிகவும் அழகாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதனை ஒட்டியே இங்கும் கூறப்படுகிறது. “பல்லாற்றான் தேரினும்” என்பதற்கு, “ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை”, என்று பரிமேலழகர் உரையெழுதியுள்ளார். “நல்லாற்றான் நாடி அருள் ஆள்க” என்பதற்கு “நல்ல ஆறு வழிகளை நாடி அருள் உள்ளவராக ஆகுக’ என்று பொருள் வருமாறு செய்துள்ளார்.
இவற்றை அளவைகள் என்கிறார். இவ்வளவைகள் யாவை?  பொறிகளால் காணும் காட்சி (காணும் என்பது உணர்வு, நுகர்வு, கேட்டல் உள்ளிட்டது), குறிகளால் உணரும் அநுமானங்கள், ஆகமங்கள் காட்டும் வழிகள், ஒப்புக்காட்டப்படும் உவமைகள், இங்கனமாயின் கூடாது என்கிற காரண காரிய விளக்கங்கள் (அருத்தாபத்தி எனப்படுவது), உண்மைக்கு மாறான இன்மைகளைக்காட்டி உண்மையின் உயர்வை உணர்த்தல் எனப்படுவையே அளவைகள்.

இக்குறளால் சொல்லப்படும் கருத்து இதுவே: நல்ல வழிகளாலே விரும்பி பிறரிடத்தில் கருணையோடு இருக்கவேண்டும். பல வழிகளிலே ஆய்ந்து பார்த்து அறிந்து கொண்டவருக்கும் வாழ்க்கை முடிந்தபின் வருந்துணையும் கருணை மனத்தராக வாழ்ந்திருத்தல்தான்.

பரிமேலழகர் உரை
நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க - அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, நமக்குத் துணையாம் அறம் யாது? என்று ஆராய்ந்து, அருளுடையராக, பல் ஆற்றான் தேரினும் துணை அஃதே - ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை. (அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாயஇன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒரு ஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது, 'இது கூடும் , இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப. 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக: பல வழியினும் ஓடி யாராயினும் தமக்கு அவ்வருளே துணையாம். நல்லாற்றானாடியருளாள்க என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங்களையுஞ் செய்கவென்றவாறு. இஃது அருளுடைமை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.

சாலமன் பாப்பையா உரை
நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Pursue the virtuous path (by diligently finding out the people who virtuously do good deeds) and have compassion; all spiritual quests lead to this companion (virtuous path and compassion) that act as our support.

Questions that I ask to the kid
What path should we pursue? How? Why?

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்

குறள் 241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணும் உள
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அருட் / அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

செல்வம் -  கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

செல்வத்துள் செல்வம் - நான் ஈன்ற செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

பொருட் செல்வம் - பொன் என்கின்ற நிலையில்லாத செல்வம்

பூரியார் - பூரியர், கீழ்மக்கள், இழிந்தோர், கொடியவர்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். 

பூரியார்கண்ணும் உள - கீழ்மக்களிடமும்/ இழிந்தோரிடமும் இருக்கும்

முழுப்பொருள்
உலகில் வாழ பொருட் செல்வம் தேவையானதாக உள்ளது. இங்கே பொருள் எனப்படுவது பொன், பொருள், நிலம், என்று பல உண்டு. இதுவே செல்வம் என பலர் கருதுகின்றனர். இச்செல்வத்தினை சேர்க்கவே பலர் முற்படுகின்றனர். ஆனால் இச்செல்வம் என்பது அதிகம் செல்வம் படைத்தவரிடமும் இருக்கிறது, குறைந்த செல்வம் படைத்தவரிடமும் இருக்கிறது. உயர்ந்த குணங்களை உடையவரிடமும் இருக்கிறது, கீழ் குணங்கள் கொண்டோரிடமும் இருக்கிறது. ஆதலால் பொருள் இருப்பதனால் ஒருவர்க்கு மதிப்பு என்பது கிடையாது. ஆனால் பொருளுக்கு எப்பொழுதும் மதிப்பு உண்டு. அது பொருளின் சிறப்பு. ஆனால் பொருளினால் மனிதனுக்கு சிறப்பு இல்லை.

ஆனால் அருள் என்பதும் ஒரு செல்வம். அது நல்வினைகளை செய்வதனால் வரும் செல்வமாகும். இதுவே ஒருவருக்கு மதிப்பினை கூட்டும். அதுவே நிலைத்து நிற்கும். ஒருவர் வாழ்ந்து இறந்த பின்பும் நிலைத்து நிற்பது அருள். ஆதலால் செல்வத்துள் செல்வம் என்பது அருளே என்கிறார் திருவள்ளுவர். இவ்வருள் என்பது ஏழையிடமும் இருக்கும், பணக்காரரிடமும் இருக்கும். இவ்வருள் இருந்தால் அவர் உயர்ந்தோர், இல்லை என்றால் கீழோர். 

மேலும்: அஷோக் உரை

பொருள்
”பொருளினி யுணர வேறு புறத்துமொன் றுண்டோ புந்தித்
தெருளினை யுடைய ராகிற் செயலருங் கருணைச் செல்வம்” (கம்ப.நாகபாசப்.268)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை. இல்லறத்திற்கு அன்புடைமைபோல இது துறவறத்திற்குச் சிறந்தமையின் முன் கூறப்பட்டது.)

செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் - செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள - அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான். ( அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செல்வத்துள் செல்வம் அருள் செல்வம் - செல்வங்களெல்லாவற்றுள்ளும் சிறந்தது அருளாகிய செல்வமே; பொருள் செல்வம் பூரியார் கண்ணும் உள - மற்றப் பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்திலும் உள்ளன.

செல்வம் போன்ற பண்பைச்செல்வ மென்றார். உம்மை இழிவு சிறப்பு.

மணக்குடவர் உரை
செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்; பொருட்செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால். இஃது அருள்நிலை கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

சாலமன் பாப்பையா உரை
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.

பொருள்: அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் -அருளாகிய செல்வம் செல்வத்து ளெல்லாம் (சிறந்த) செல்வம் ; பொருள் செல்வம் பூரியார்கண்ணும் உள - பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்தும் உள்ளன.

அகலம்: அருள் -தண்ணளி‡கருணை. அதனை வட நூலார் ‘கிருபை’, ‘காருண்யம்’ என்பர்.

கருத்து: அருளுடைமை செல்வத்து ளெல்லாம் சிறந்த செல்வம்.

English Meaning - As I taught a kid - Rajesh
Money, wealth, assets, properties etc. to a certain extent are necessary in today's world. However, it is there with almost everyone (including trivial people, evil people) in this world though the amount would vary. Money can be earnt through immoral, tactful, cunning means too. So, there is nothing special about money. Also, humans does not become special or important for this world just because they have these  money. 

The grace, mercy, benevolence, good deed on earns by doing good things to others, to the humanity and to the world is the real wealth among all the wealth. This grace and good deed will live even after his or her death.

Questions that I ask to the kid
Why is grace, mercy, benevolence, good deed essential?

வலியார்முன் தன்னை நினைக்கதான்

குறள் 250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லு மிடத்து.
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
வலியார் - வலியன் - வலிமையுடையான்; திறமையானவன்; உடல்நலமுடையவன்; கரிக்குருவி; இறுகியநிலையுடையது.

வலியார் - (நம்மை விட)வலிமை உடையவர் 

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.

தன்னை - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

நினைத்தல் -கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

நினைக்கதான் - நினைக்காதவன் 

மெலியார் - meliyār   n. id. Weak,powerless persons; பலவீனர். மெலியார்மேன் மேகபகை (குறள், 861); வலியிலார்

மெலியார் -(நம்மை விட) எளியவர், நலிந்தவர் 

மேல் மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

செல்லும் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
மேல் செல்லும் - வெகுண்டுழுதல்,அதிகாரம் செலுத்துதல் (dominate)

முழுப்பொருள்
தன்னை விட மெலிந்தவர், பலவீனமானவர் முன் தன பலத்தை பிரயோகிக்க முயலும் அருள் இல்லாதவன், அவ்வாறு செய்யும் முன், அவனை விட வலிமை உடையவர் முன் அவன் அஞ்சி நிற்க வேண்டிய நிலையம் வரும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என உரைக்கிறார் வள்ளுவர்.

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்னும் சொல்லாடல் கூட இக்குறளை ஒற்றியே அமைந்து உள்ளது . 

இலங்கை ஜெயராஜ்
அருள் பெறுவதற்கு என்ன வழி? வலிமை உள்ளவன் உன்னை துன்புறுத்தி இருப்பான். அப்பொழுது பொறுத்துக்கொண்டு நீ வருத்தப்பட்டிருப்பாய். பிறகு உன்னைவிட எளியவன் (மெலிந்தவன்) உன் முன்னே வந்தால் அவனை நீ துன்புறுத்த ஒரு வாய்ப்பு வந்தால் நீ முன்புபட்ட துன்பத்தை நினைத்துப்பார். அருள் தானாக வந்துவிடும். அல்லது பிறர் நமக்கு இத்துன்பத்தை செய்தால் நமக்கு எவ்வளவு துன்பம் வருத்தமும் வரும் என்று ஒரு நொடி யோசித்துப்பார்த்தாய் என்றால் பிறருக்கு துன்ப செய்யமாட்டாய். அப்பொழுது அருள் பிறக்கும். இது பிற உயிர்களிடத்திலும் நீ காண்பிக்கும் அருளுக்கும் பொருந்தும். 

அப்படி என்றால் அரசர்கள் பிறரை தண்டிக்க கூடாதா? அதற்கும் திருவள்ளுவர் "குறள் 562 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்" என்று கூறுகிறார். அதாவது நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, "திருவிளையாடல்" திரைப்படத்தில், ஹேவனாத  பாகவதராக வரும் பாலைய்யா - சிவா பெருமானாக வரும் சிவாஜி பகுதியை கூறலாம்.

தன பாட்டுக்கு பாண்டிய நாடே,மற்றும் ஆண்டவனே அடிமை  அடிமை என்றும், தன்னை மிஞ்ச எவரும் இல்லை என்றும் அகந்தையில் கூறும் ஹேவனாத பாகவதரை சிவா பெருமான் சாதாரண விறகு வெட்டி போல் தோன்றி அவரை மிஞ்சும் விதமாக பாடி அவர் அகந்தையை அடக்கி வலியவர்க்கு வலியவர் உலகில் உண்டு என உணர்த்துவார் .



பரிமேலழகர் உரை
வலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்துத் தம்மின் வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க.

மு.வரதராசனார் உரை
(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.

பொருள்: தன்னின் மெலியார்மேல் தான் செல்லும் இடத்து - தன்னினும் மெலியவர்மேல் தான் (வெகுண்டு) செல்லுங் காலையில், வலியார்முன் தன்னை நினைக்க‡(தன் மேல் வெகுண்டுவரும்) வலியார் முன் தன் நிலையை நினைக்கக் கடவன்.

அகலம்: தன்னின் வலியார் தன்மேல் வெகுண்டு வருங்கால் அவர் முன் தான்நடுங்கி நிற்றலை நினைக்கவே, தான் தன்னின் மெலியார்மேல் வெகுண்டு செல்லான் என்றவாறு. தன்னை என்பது ஆகு பெயர், தன் நிலைக்கு ஆயினமையால். தன் நிலை - தான் நிற்கும் நிலை. மெலியார்-செல்வம் முதலியவற்றால் எளியவர்.

கருத்து: இஃது அருளை அடைதற்கு வழி கூறிற்று.

Thirukkural - Management - Managing Anger
We all know the damages caused by anger. The moot question is, ’Is there a technique to manage anger?’ Yes, definitely there is one. A technique to manage anger is before you shout at, threaten, and abuse a helpless person who is weaker than you are, just think for a moment of your precarious position or helplessness or your fear when you are in the presence of someone who is stronger and more powerful than you are, challenges, Kural 250. When you put yourself in that predicament, you will 
understand the predicament  of the person who will be the victim of your anger.

When you threaten a weaker than yourself
Think of  yourself before a bully.

Just think of a situation where you were helpless when someone more powerful than you insulted you. Remember that the helpless recipient of your anger will have similar emotion when you express your anger at him.