Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_037. Show all posts
Showing posts with label Athikaaram_037. Show all posts

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

குறள் 370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
ஆர்தல் - நிறைதல்; பரவுதல் பொருந்துதல் தங்குதல் உண்ணுதல் துய்த்தல் ஒத்தல் அணிதல் பெறுதல்

ஆரா - எப்போதும் தீராத

இயற்கை - இயல்பானதன்மை; வழக்கம் இலக்கணம் நிலைமை கொள்கை

அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை

நீ-த்தல் - nī-   11 v. tr. 1. To separatefrom; பிரிதல் மணந்தினி நீயே னென்ற தெவன்கொல் (ஐங்குறு. 22). 2. To renounce, as theworld; துறத்தல் ஒழுக்கத்து நீத்தார் பெருமை(குறள், 21). 3. To put away, reject; தள்ளுதல் (W.) 4. To put to disgrace; இழித்தல் பிள்ளையேயாயினு நீத்துரையார் (ஆசாரக். 69). 5. Todespise, loathe; வெறுத்தல் ஊரேது வல்லதேதென்றா னீத்து (திருவால. 13, 15). 6. To abandon,leave; விடுதல் உயிர்நீப்பர் (குறள், 969).--intr.To be removed; நீங்குதல் மயிர்நீப்பின் வாழாக்கவரிமா (குறள், 969).  

நீப்பின் - நீப்பு - துறவு; பிரிவு

அந் - அந்த 

நிலையே - நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

பேர் - pēr   adj. [used as a prefix.] Great, large, excellent, principal, பெரிய. See பெருமை.

பேர் - pēr   கிறது, ந்தது, பேரும், பேர, v. n. To become loose, to be detached, சிதைய. 2. To leave, depart, remove, to go away, நீங்க. For other meanings, see பெயர், v.

பேர்தல் - சிதைதல்; பிரிதல்; போதல்; அழிதல்; பிறழ்தல்; அசைதல்; குறைதல்; பின்வாங்குதல்; நிலைமாறுதல்; முறைபிறழ்தல்.

பேரா - பெரிய; நீங்காத; நிலைத்து நிற்கும்

இயற்கை - இயல்பானதன்மை; வழக்கம் இலக்கணம் நிலைமை கொள்கை

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
ஆராத என்றால் என்றும் நிறைவடையாத என்றும் தீராத என்று பொருள். என்றும் தீராத என்றும் மனநிறைவடையாத தன்மையை இயல்பை வாய்ந்தது அவா (ஆசை, விருப்பு, விழைவு). மனநிறைவடையாத தன்மை துன்பத்தையே தரும். அத்தகைய அவாவை ஒருவர் நீப்பார் என்றால் அந்நிலையே எப்பொழுதும் நீங்காத தன்மை வாய்ந்த மெய்யான இன்பம் ஆகும். அதுவே வீடுபேறு ஆகும். 

திருவாய்மொழி இவ்வாறு கூறுகிறது
நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த அரும் பெரும் பாழ்
உலப்பு இல் அதனை உணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை அற்றால்
அன்றே அப்போதே வீடு,
அதுவே வீடு வீடாமே.     . (திருவாய் 78-6)”.

வேட்கையின் ஆராமையைப்பற்றி மணிமேகலை (30:91) கூறூவது: “வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை”.

“சிறுகா லையிலா நிலையோ திரியா
குறுகா நெடுகா குணம்வே றுபடா
உறுகால் கிளர்பூ தமெல முகினும்
மறுகா நெறியெய் துவென்வா னுடையாய்” (கம்ப.சரபங்கர்.20)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும் - அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும். (நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன் மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின் வீட்டினை 'பேரா இயற்கை' என்றும், அஃது அவாநீத்த வழிப்பெறுதல் ஒரு தலையாகலின், 'அந்நிலையே தரும்' என்றும் கூறினார். ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே. (திருவாய் 78-6)என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை உடையவனை வடநூலார் 'சீவன் முத்தன்' என்ப. இதனால் வீடாவது இது என்பதூஉம், அஃது அவா அறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும். இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

“அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று. ஐயங்கள் கோடி, விடை ஒன்றே. அதை அறிந்தவர் மட்டுமே செயல்களை முழுமையாக அறிவென்றாக்கிக் கொள்பவர். செயல்களை ஆற்றி அதன் தொடர்விளைவுகளிலிருந்து விடுபடுபவர். துயரும் உவகையுமின்றி அலைகடலுக்குமேல் துருவமீன் என உலகச்செயலில் நின்றிருப்பவர். ஞானமென்பது நிலைகொள்ளுதலே. நிலைகொள்ளாமையே துயரம் எனப்படுகிறது. துயர்நீக்குவதே ஞானம் என்றனர் முனிவர்.”

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

குறள் 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

இடையறு-தல் - iṭai-y-aṟu-   v. intr. id. +.To be interrupted; to cease in the middle;தடைப்படுதல். இன்ப மிடையறா தீண்டும் (குறள், 369).  

இடையறாது - தடைப்படாது

ஈண்டும் ஈண்டல் - நெருங்குதல், கூடுதல் நிறைதல் விரைதல்

அவா - எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

துன்பத்துள்துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

கெடின் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
புலன்கள் ருசிப்பதும் அகங்காரம் நிறைவடைவன எல்லாம் இன்பம் அல்ல. இன்பம் என்பது மனமகிழ்ச்சி. அதுவே மெய்யான இன்பம். அத்தகைய இன்பம் இடைவிடாது ஒருவரை கூட அதுவாது இன்பம் நீங்காது/விலகாது நிலைத்து நிற்க இருக்க வேண்டும் என்றால் அவர் அவாவை முற்றிலும் அறுத்தொழிய வேண்டும். 
ஏன் அவாவை அறுத்தொழிய வேண்டும்?
ஏனேனில் அவாவென்பது விருப்பு, விழைவு, ஆசை. இவைத் துன்பங்களை இன்பம் போல் தருவது. ஒருவித மயக்கநிலையிலேயே நம்மை வைப்பது. துன்பங்களை இன்பம் போல் தருவதால் இது துன்பத்துள் எல்லாம் துன்பம். உதாரணமாக நெருப்பில் கை வைத்தால் நமக்கு சுடும் என்று தெரியும். அது துன்பம். அதுவே ஒருவர் தன் வாழ்வின் ஆசையாக குறிக்கோளாக தன் தேவைக்கு அதிகமான தன் ஊதியத்திற்கு கட்டுபடியாகாத ஒரு 3000 அடி வீட்டை கட்டியாக அல்லது வாங்கியாக வேண்டும் என்று நினைத்தால் அது அவருக்கு துன்பத்தையே தரும் ஏனேனில் அந்த வீடின் சொகுசுகள் அவருக்கு இன்பம் தரலாம். ஆனால் அதனை அடைய அவர் 20 ஆண்டுகளுக்கு மேல் தேவைக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும் அதனால் உடலும் மனமும் அயர்ச்சியடைந்து உறுப்புகள் நலன் அழியும். அல்லது அடையாமல் அவ்வாசையால் அலைக்கழிக்கப்பட்டு துன்பத்துள் உழலுவார். மனவருத்தம்  மன அழுத்த நோய்களை தரும். அதனால் தான் இன்பம் தருவதுபோன்ற இவ்வாசை துன்பமே. 

துன்பத்துள் துன்பம் என்பதை அறநெறிச்சாரப் 133 பாடலொன்றும் இவ்வாறு சொல்கிறது.
“துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்தெய்தும் இன்பத்தியல்பறியாதவர்”. 

பரிமேலழகர் அவா அறுத்தார் வீட்டின்பம் (முத்தி) தம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பார்.

மனத்தடுமாற்றம் தான் அவாகவும் ஆசையாவும் தோன்றுகிறது. அதில் இருந்து ஒருவன் விடுபட்டுவிட்டால் மனம் ஸ்திடப்பட்டுவிடும். அதன் பிறகு மனதில் அசைவில்லை. அதன் பிறகு இறையருள் தானாக நிரம்புமும். பாரதியார் குருதரிசனம் பற்றி கீழிக்காணும் பாடலில் கூறியுள்ளார். ஒரு குருவிடம் பாரதியார் உபதேசம் கேட்பார். அதற்கு அந்த குரு மூன்று விஷயங்களைப் பார்ப்பார். 1) சூரியனைப் பார்ப்பார் 2) இடிந்த வீட்டையும் குட்டிச்சுவரையும் பார்ப்பார் 3) கீழே கிணற்றைப் பார்ப்பார். கிணற்றுக்குள்ளே தெரிகிற சூரியனைப் பார்ப்பார். அது (அச்சூரியன்) தெரிகிறாதன் என்பதுப்போல் குரு பாரதியாரிடம் கேட்ப்பார். பாரதி சொல்வார். இந்த உடம்பு அழிந்துவிடும். நிலையாமையை சொல்கிறது குட்டிச்சுவர். கிணறுக்குள்ளே சூரியன் எப்பொழுது தெரிவான் என்றால் நீர் அசைவில்லாது நிற்கும் பொழுது. அசைவில்லாது நீர் நிற்கும் பொழுது தண்ணீர் கண்ணாடி போல் இருக்கும். அப்பொழுது சூரியன் தெளிவாக தெரியும். 
அதையே தான் திருவள்ளுவர் முன்பு இக்குறளில் கூறியிருக்கிறார். அவா போய்விட்டால், மனம் அசைவில்லாமல் இருக்கும். அப்பொழுது திருவருள் தானாக நிரம்பிவிடும். இன்பம்.

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனேயொன் றிருந்ததங்கே;பரம யோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி, சென்றேன்
அறிதிகொலோ! எனக்கேட்டாம் அறிந்தேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே, வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி நுள்
தெரிவதுபோல் உனக்குள் சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை.அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான். 
--------------பாரதியார்


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது. அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது. (துன்பத்துள்துன்பம் - ஏனைத் துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும்துன்பம். விளைவின் கண்ணே அன்றித் தோற்றத்தின்கண்ணும் துன்பமாகலின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக்காரியமாக உபசரித்து அவா என்றும், 'துன்பத்துள்துன்பம்' என்றும், அது கெட்டார்க்கு மனம் தடுமாறாதுநிரம்பி நிற்றலான் 'ஈண்டும் இன்பம் இடையறாது'என்றும் கூறினார். இனி 'ஈண்டும்' என்பதற்குப் 'பெருகும்'என்று உரைப்பாரும் உளர். இதனால் அவா அறுத்தார்வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பதுகூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின் இன்பமானது இடையறாமல் வந்து மிகும். இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
துறவும் சன்னியாசமும்
கீதையில் யோகம், துறவு, சன்னியாசம், தியாகம், வேள்வி ஆகிய யாவும் ஏறத்தாழ ஒரே கருத்திலேயே உபயோகிக்கப்படுவதை நாம் இங்குக் கவனிக்க வேண்டும். துறவு, சன்னியாசம் என்பன தாடியும் சடையும் வளர்த்துக் கொண்டு காட்டுக்குப் புறப்படுவதல்ல. துறவு என்பது வாழ்வைத் துறப்பதல்ல. உண்மையில் வாழ்வைத் துறந்தாலாகாது என்பதை வற்புறுத்த எழுந்ததே பகவத்கீதை. எது உண்மையான துறவு என்பதைக் கீதை தெளிவாகக் கூறுகின்றது. செய்யும் செயலின் பலனில் நாம் கொள்ளும் பற்றையோ ஆசையையோ துறப்பதே துறவு. அதுவே உண்மைச் சன்னியாசம், உண்மையான தியாகமும் அதுவேயாகும். ஆசைகளை ஞானமாகிய அக்கினியினால் எரிப்பதே வேள்வி. வேதங்களிலே பேசப்படும் வேள்விக்கும் இக்கருத்துப் பொருந்தும். மிருகங்களை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதுதான் வேள்வியென்றோ யாகமென்றோ கொள்ளாது நமது ஆசைகளாகிய விலங்குகளை ஞானமெனப்படும் அக்கினியிலே இட்டு எரிப்பதே வேள்வியும் யாகமும் எனக் கொள்வதே பொருத்தமாகும். 

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
மணிமேகலையும் பௌத்தமும்
ஒரு விதத்தில் பௌத்த மதக் கொள்கையையும், குறிக்கோளையும் இரண்டே இரண்டு அடியுள் அடக்கிக் காட்டிய பெருமை மணிமேகலை என்னும் காப்பியத்தை ஆக்கிய சீத்தலைச் சாத்தனாருக்கு உண்டு. 

”துன்பம் தோற்றம்: பற்றே காரணம்:
இன்பம்; வீடே: பற்றிலி காரணம்”

என்பது அவர் வாக்கு. இதனையே மணிமேகலையில் பிறிதொரு இடத்தில்.

“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்:
பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்:
பற்றின் வருவது முன்னது: பின்னது
அற்றோர் உறுவது” அறிகஎன்று அருளி,
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி,
உய்வகை இவைகொள்

என்கின்றன

இந்த நான்கு அடிகளுக்கும் முறையே துக்கம், துக்க நிவாரணம், துக்க உற்பத்திம், துக்க நிவாரண மார்க்கம் ஆகிய வாய்மைகள் நான்கும் அடங்குகின்றன. பிறந்தோர் உறுவது பெருகிய துன்அம் என்பது துக்கம். பிறவார் உறுவது பெருகிய இன்பம் என்பது துக்க நீக்கம், துன்பம் பற்றால் வருவது என்பது துக்கத்தின் காரணம். இன்பம் பற்றறறோர் உறுவது என்பது துக்கத்தை நீக்கும் வழி. இந்த நான்குமே புத்தர் பெருமான் கண்ட பேருண்மைகள். துக்க உற்பத்தியை ஒன்றுக்கொன்று காரணமான பன்னிரண்டு இணைப்புகள் கொண்ட ஒரு சக்கரமாக உருகித்துக் காட்டுவது பௌத்த மத வழக்கம். வடமொழியில் இதனைப் பவ சக்கரம் என்பர். தமிழின் இதனை ஊழ் வட்டம் என்பர். மணிமேகலையில் ஏது நிகழ்ச்சி எனப் பேசப்படும் காரண காரிய பரம்பரையும் இதுவே. காரணகாரியமாகத் தொடரும் இத்துன்ப வட்டத்திலே ஏதாவது ஓர் இணைப்பை அறுத்துவிட்டாலும் வட்டம் அழிந்துவிடும். இவற்றை நினைவுகூருமுகமாக இன்றும் பௌத்த மதத்தினர் சிலர், ஏனைய சமயத்தோருள் சிலர் செபமாலையை உருட்டுவது போல, சக்கரத்தை உருட்டுவது வழக்கம். 

துன்ப நீக்கத்துக்குப் பௌத்தம் நற்காட்சி, நற்கருத்து, நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கொள்கை, நல்லமைதி ஆகிய எட்டு வழிகளை வகுத்துள்ளது. காமம், கொலை, சள் (சூது??), பொய், களவு ஆகிய ஐந்தையும் முற்றத் துறத்தல் ஆகிய ஐவகைச் சீலமும் இவற்றுள் அடங்கும். இதுவரை பௌத்தம் பேசும் நால்வகை வாய்மையையும் ஐவகைச் சீலத்தையும் குறிப்பிட்டோர். 

“அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று. ஐயங்கள் கோடி, விடை ஒன்றே. அதை அறிந்தவர் மட்டுமே செயல்களை முழுமையாக அறிவென்றாக்கிக் கொள்பவர். செயல்களை ஆற்றி அதன் தொடர்விளைவுகளிலிருந்து விடுபடுபவர். துயரும் உவகையுமின்றி அலைகடலுக்குமேல் துருவமீன் என உலகச்செயலில் நின்றிருப்பவர். ஞானமென்பது நிலைகொள்ளுதலே. நிலைகொள்ளாமையே துயரம் எனப்படுகிறது. துயர்நீக்குவதே ஞானம் என்றனர் முனிவர்.”

English Meaning - As I taught a kid - Rajesh
Real happiness will unendingly, without a break, touch a person if one kills the desires because desires are the roots of pain. 
Happiness that comes from satisfying our physical senses, satisfying materialistic quest, satisfying our desires, satisfying our ego is not real happiness. Actually speaking, we toil very hard for a small amount of unreal happiness coming from satisfying desires. Desires will keep us in a vicious cycle which is a pain. Once, we get rid of desires and identify what gives true happiness, we would have unending happiness

Questions that I ask to the kid
When does real happiness endlessly touch a person ? How that is possible?

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

குறள் 368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

இல்லார்க்கு - இல்லாதவர்

இல்லாகும் -  இல்லாமல் போகும்; இல்லாதொழியும்

துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

உண்டேல் - உள்ளது என்றால்
உண்டு -
- உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு
- To say it is. 2. [vul. adverbially.] Much, exceedingly, more, நிரம்ப. உண்டெனத்தரவேண்டும்

தவா - தவு-தல் - tavu-   prob. 11 & 4 v. intr. தபு-.cf. dabh. [K. tavu.] To shrink; to be reduced;to be ruined; குன்றுதல் எஞ்ஞான்றுந் தவாஅப்பிறப்பீனும் வித்து (குறள், 361).  

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

மேன்மேல் - பின்னும்பெருக

வரும் - வரும் ; வந்து சேரும் 

முழுப்பொருள்
அவா (அதாவது ஆசைகள், விருப்புகள், விழைவுகள்) இல்லாதவர்க்கு துன்பங்கள் இல்லை. துன்பங்கள் இல்லாத நிலையே சக்தி என்று பாரதியார் கூறியுள்ளார். ஆசைகள் இல்லாது இருந்தால் துன்பங்கள் அல்லாது சக்தியை அதாவது இன்பத்தை அடையலாம். 

ஆனால் அவா ஒருவரிடம் இருந்தால் அவரை வதைக்கும் துன்பம் குன்றாது மேன்மேலும் வந்துக்கொண்டே இருக்கும். ஏனெனில் ஆசைகளால் தான் துன்பங்கள் விளைகிறது. ஆதலால் துன்பம் வேண்டாம் என்றால் ஆசைகளை அறு என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

ஆசை என்பது வெட்ட வெட்ட மேன்மேல் வளரும் என்று குறிப்பதை கீழ்க்காணும் குறளில் காணலாம்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் - அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை, அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும் - ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும். (உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இதுபொழுது அவாவால் செய்துகொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனான் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும். அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.

மு.வரதராசனார் உரை
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

குறள் 365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
அற்றுஅத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அற்றவர் - இல்லாதவர் 

என்பார் - என்று கூறுவார்

அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

அற்றார் -  பொருள்இல்லாதவர்; முனிவர்

மற்றையார் - மற்றவர்கள் 

அற்று - இல்லாது 

ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல்.

அற்றது - அறுத்தவர் 

இலர் - வேறு இல்லை 

முழுப்பொருள்
என்னிடம் ஏதும் இல்லை என்று கூறிக்கொள்பவர் உண்மையில் அவரிடம் பொருள்கள் ஏதும் இல்லையென்றாலும் உண்மையில் ஏதும் இல்லையென்றால் அது எதன் மீதும் ஆசையில்லாது இருக்கும் நிலையே ஆகும். ஆதலால் ஆசையில்லாதவரே உண்மையில் ஏதும் அற்றவர். மற்றவர்களுக்கு ஏதாவது பொருளோ அல்லது ஆசையோ இருக்கும். .

வீடுபேறு நோக்கிய பயணத்தில் ஒருவர் பல விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். அதனால் பயணும் கிட்டும். ஆனால் வீடுபேறு அடைய ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரதம் அவா அறுத்தல். அதுவே பிறவித்துன்பதை விலக்கும். மற்ற விரதங்களை கடைப்பிடித்துவிட்டு அவா அறுத்தலை கடைப்பிடிக்கவில்லை என்றால் வீடுபேறு கிட்டாது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள், மற்றையார் அற்றாக அற்றது இலர் - பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி அற்றிலர். (இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே; ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர்.

மு.வரதராசனார் உரை
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

சாலமன் பாப்பையா உரை
ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

குறள் 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
உய்தி - ஈடேற்றம், உயிர்வாழ்தல், தப்பிப்பிழைத்தல், நீங்குகை
உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்

தூ - ஓர்உயிர்மெய்யெழுத்து(த்+ஊ); தூயது; தூய்மை; வெண்மை; பற்றுக்கோடு; வலிமை; பகை; இறைச்சி; பறவையின்இறகு; இகழ்ச்சிக்குறிப்பு.

உய்மை - உயிர்வாழ்தல்

என்பது - என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )

அவா - எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

மற்று -  ஓர்அசைநிலை; மற்றவை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு

வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி
வாய்மை - உண்மை ; மெய்ப்பொருள்

வேண்ட - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வரும் - வரும் ; வந்து சேரும் 

முழுப்பொருள்
தூ என்றால் தூய்மை அதாவது மனத்தூய்மை என்று பொருள். மனத்தூய்மை என்பது ஆசையில்லாமல் இருப்பதால் வரும். ஆசையில்லாமல் இருப்பது உண்மைப்பொருளாம் மெய்ப்பொருளை வேண்டுவதால் வரும். பொருள் அல்லாதவற்றை விரும்பாது பொருளுள்ள மெய்ப்பொருளை வேண்டினால் மனத்தூய்மை வரும்.  வாழும்போது தூய்மையும், உயர் மெய்ப்பொருளைத் தேடி அடைவதும், மீண்டும் பிறவாது வீடுபேறினை அடைவதற்கான வழிகள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை,அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம். (வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின்,அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை' என்பது அவா இன்மை என்றும் மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையது போல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம்

குறள் 363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.


வேண்டாமை - வேண்டாது இருத்தல் [அவா அறுத்தலாகிய விருப்பற்றத் தன்மையினை]

அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

விழுச்செல்வம் - சிறந்த செல்வம்

ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம் இம்மை விரைவு புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது

ஈண்டு-தல் - īṇṭu-   5 v. intr. 1. To gather,come together; கூடுதல் ஈண்டிய வடியவ ரோடும்(திருவாச. 2, 144). 2. To be close together; toget to be a compact mass, as the atoms of earth;செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை(புறநா. 19). 3. To abound, to be numerous;மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145). 4.To speed, haste; விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).--tr.To gouge, extract, pluck out, dig out; தோண்டுதல் மலர்க்கண்ணை யீண்ட . . . ஆழி யீந்தார் (தேவா.192, 5).

ஈண்டல் - நெருங்குதல், கூடுதல் நிறைதல் விரைதல்

இல்லை - இல்லை 

யாண்டும் - எப்போதும்; எவ்விடத்தும்.

அஃது - aḵtu   pron. அ That. used before words commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

ஒப்பது - ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

இல் - இல்லை

முழுப்பொருள்
வேண்டாமை என்றால் அவாவை ஆசையை அறுத்தல், விரும்பாதிருத்தல் என்று பொருள். பற்றற்று இருத்தல் என்று பொருள். அப்படி பற்றற்று இருப்பதிற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறேதும் இல்லை. எக்காலத்திற்கும் வேண்டாமைக்கு ஒப்பான சிறந்த செல்வம் எவ்விடத்திலும் வேறு இல்லை.

வேண்டும் வேண்டும் என்ற எண்ணம் என்றும் நிறைவு தராது. ஆனால் வேண்டாமை என்னும் எண்ணம் மனநிறைவை நிம்மதியை தரும். அதற்கிணையான சிறந்த செல்வம் வேறு இல்லை.

ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கும் பொழுது தங்கம் ஒரு செல்வமாக பார்க்கப்படும். ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்றால் தங்கம் ஒரு அன்றாட செல்வமாக கருதப்படாது. ஆக செல்வத்தின் மீதான மதிப்பு ஆசை இடத்திற்கு இடம் வேறுபடும். அதனால் தான் இக்குறளில் ”எவ்விடத்திலும் வேறு இல்லை” என்று கூறுகிறார் வள்ளுவர்.

ஒரு பொருளை வேண்டாம் என்று சொன்னால் அதற்கு நாம் அரசன். அதாவது செல்வம். அதுவே ஒரு பொருளை வேண்டும் என்று சொன்னால் நாம் அதற்கு அடிமை.

என்ற குறளை எடுத்துக்கொண்டு ஆசைகள் வேண்டாம் என்று சொன்னால், ஒவ்வொரு ஆசையையும் வேண்டாம் என்று விட்டு நீங்கி இருந்தால், நமக்கு அதனால் நன்மையே.

குறிப்பு:வானோர் உலகே ஒரு பெருஞ்செல்வம்மென்று வருணித்து அதையே எல்லோரும் அடைய வேண்டுமென்று விற்கிற வியாபார உத்தியாகப்படுகிறது. இது வியாபார யுக்தியின் உச்சம்கூட!

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
.....
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” (பெரிய.திருக்கூட்டச்.8)

பரிமேலழகர் உரை
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை - ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை, ஆண்டும் அஃது ஒப்பது இல் -இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பது இல்லை. (மக்கள் செல்வமும் தேவர் செல்வமும் மேன்மேல் நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பதில்லை என்றும் கூறினார். ஆகம அளவை போலாது காட்சி அளவை எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள்செல்வம் வகுத்து முன்கூறப்பட்டது. பிறவாமைக்கு வழியாம் எனவும், விழுச்செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை: அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை. இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது.


மு.வரதராசனார் உரை
அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

சாலமன் பாப்பையா உரை
எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை

குறள் 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வேண்டுங்கால் - ஒருவருக்கு வேண்டுமென்றால்

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

பிறவாமை - துயர் தரும் பிறப்பு இல்லாது இருத்தல்

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

வேண்டாமை - வேண்டாது இருத்தல் [அவா அறுத்தலாகிய விருப்பற்றத் தன்மையினை]

வேண்ட - விழைந்தால் மட்டுமே

வரும் - வரும்/ வந்து சேரும்

முழுப்பொருள்
இவ்வதிகாரம் அவா அறுத்தலை பற்றிக் கூறுகிறது. ஆனால் இவ்வதிகாரம் உனக்கு அவா என்று ஒன்று இருந்தால் அது இதுவாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது.

ஆசை/அவா என்பது மனிதனை வஞ்சிக்கும். நமது இலக்கு (வீடுபேறு) நோக்கி நம்மை செல்லவிடாது. ஆதலால் உனக்கு அவா(ஆசை, விருப்பம், விழைவு) என்று இருக்க கூடாது.

கவலையற்ற உற்சாகமான வாழ்க்கையையே எல்லோரும் எதிர்ப்பார்ப்பாகள். ஆனால் அதுவே எல்லோருக்கும் பெரும் சுமையாக ஆகிவிட்டிருக்கிறது. 

ஆசை என்பது வேட்கை. அதற்கான விலை என்பது பூசல். வேட்கை என்பது போர். அனைத்துமே போர்தான். வேட்கை.. வேட்கை.. வேட்கை.. அனைத்து வேட்கைக்கும் மேலாக புணர்ச்சிக்கான வேட்கை. உணவிற்கான வேட்கை.. பலவகையான சிறந்த உணவு வகைகள். ஓராயிரம் வேட்கைகள். வாழ்கை வேட்கைகளால் பெருகியிருக்கிறது. 

ஆதலால் ஆசை என்று இருந்தால் அது பிறவாமை என்னும் நிலையாகவே இருக்க வேண்டும். பிறவாமை என்பது நிலையாமையில் இருந்து நமக்கு விடுதலை தந்து நம்மை இந்த பிறப்பு-இறப்பு என்னும் துன்பசுழற்ச்சியில் இருந்து விடுவிக்கும். பிறப்பு இறப்பு என்பது துயர் தருவது. ஆதலால் அது கொடியது ஆகும். பிறவாமை என்பது மீண்டும் பிறப்பு இறப்பு அல்லாதது. மேலும். துன்பத்திற்கான அடிப்படைக் காரணம் இறப்பு அல்ல; பிறப்பே ஆகும். ஏனெனில் வாழ்க்கையெனும் கொடுமையானதொரு பயணத்தின் இறுதியாக நிகழும் மரணம் என்பது அனைத்தையும் மறக்கடிக்கும் ஒரு பெரும் விடுதலையாக இருக்குமல்லவா?

ஆனால் பிறவாமை என்னும் ஆசை எப்போது சாத்தியம் என்றால் மற்ற ஆசைகள் ஏதும் இல்லாது இருக்க வேண்டும். அதாவது மற்ற ஆசைகள் அற்று (இல்லாமல்) இருக்கும் பொழுது தான் பிறவாமை என்னும் நிலை உண்டாகும்.

நமக்கு ஆசைகள் இல்லை என்றால் துன்பங்கள் இல்லை. நமக்கு வருவன எல்லாம் இன்பமாகவே தோன்றும்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று திருக்குறளே கூறுகிறது. அது ஆசைக்கும் பொருந்தும். ஆசை என்று பட்டால் பிறவாமையை வேண்டு சிறுமை எதனையும் வேண்டாதே.

சுந்தரர் தேவாரத்தில்,”கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்” என்றும், “எங்கோனே உனைவேண்டிக் கொள்வேன் பிறவாமையே” என்பார், பிறவாமையை விழைந்து.
சைவ சிந்தாந்த நூல்களில் உள்ள மெய்க்கண்ட சாத்திரங்களில், உய்யக்கொண்டார் எழுதிய  திருக்களிற்றுப்படியார் திருக்குறளை அடிப்படையாக வைத்தே நிறையப் பாடல்கள் எழுதியுள்ளது.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின்அஃ தொன்றுமே வேண்டுவது – வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால். (திருக்களிற்றுப்.40)

இப்பாடலின் பொருள்: வேண்டுமிடத்துப் பிறவாமையையே வேண்டவேணுமென்று திருவள்ளுவர் சொன்னபடியினாலே, வேண்டுமானால் அந்தப் பிறவாமையொன்றுமே வேண்டுவது; விரும்பாமையை விரும்ப விரும்பினது வருமென்றும் அவர் சொன்னபடியினாலே, நம்மை விரும்பின கர்த்தாவினிடத்திலே விரும்பாமையை விரும்பிக் கேட்பாயாக. இதனுள், அவாவறுத்தலே பிறவாமைக்குக் காரணமென்பது கண்டு கொள்க

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்” (சுந்தரர்.கச்சித்திருமேற்றளி 2)

“எங்கோனே உனைவேண்டிக் கொள்வேன் பிறவாமையே” (சுந்தரர்.அவிநாசி 3)

“இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும்.......என்றார்” (பெரிய.காரைக்கால்.60)

நயம்பட உரைத்தலின் அழகை குறளில் கண்டபடியே செல்லலாம்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
‘வேண்டும் என்றால் பிறவா வரம் வேண்டும். பிறவாமையோ எதையும் வேண்டாமென்றில் வந்து சேரக்கூடியது’. இத்தகைய எழில்மிக்க கூற்றுகளை கவித்துவத்தின் ஆரம்பப் படிநிலை என்று சொல்லலாம். கவித்துவச்சாயல் இல்லாதவையும் நேரடிப்பொருளின்மூலம் முற்றாக கூறி நிறுத்துபவையுமான குறள்கள் மிகமிகச்சிலவே.

பரிமேலழகர் உரை
வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும், அது வேண்டாமை வேண்ட வரும் - அப் பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம். (அநாதியாகத் தான் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலின், பிறவாமையை வேண்டும் என்றும் ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒருபொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின், அது வேணடாமை வேண்ட வரும் என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறி, பின் அதுவரும்வழி கூறத்தொடங்குகின்றமையின் 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Generally we say that do not have desires because most desires are not met and pain comes from longing for the unfulfilled desires. 
However, Thiruvalluvar says that if at all you want to have a desire, have a desire of no re-birth or no birth of desires. When you desire for no-desire, all other things i.e., happiness, peace, greatness etc will automatically (unsolicited) come to you (even if you didn't desire that happiness). Normally it is said that we are in the constant cycle of birth-death-birth cycle because we have unfulfilled desires. It is impossible for all desires to be fulfilled. So, for one to not have re-birth, one should not have desires as they are root cause of pain. Also, when one  doesn't have desires, one won't have distractions which helps in focusing on work and doing great things thereby achieve greatness.

Questions that I ask to the kid
1. What desire should one have?
2. Why should one desire for no desire?
3. What do you gain by not having desire?
4. What are the disadvantages of desires?
5. Why re-birth happens? or why we are in cycle of birth-death-birth?
6. How having no desires prevents re-birth?

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

குறள் 361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் 
தவாஅப் பிறப்பீனும் வித்து
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
அவா - ஆசை, எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.
என்ப - என்பது
எல்லா  - அனைத்து
உயிர்க்கும்  - உயிர்களுக்கும்
எஞ் ஞான்றும் - எக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.
தவா - தவாவினை tavā-viṉai   n. prob. தவு- + ஆneg. +. (அக. நி ) 1. Salvation, deliverance;முத்தி. 2. Hill, mountain; மலை  
அப் பிறப்பு  - உடனுக்குடனான பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.
ஈனும் - இயன்று தரும்
வித்து - மரஞ் செடி கொடிகள் முளைக்கக் காரணமாயிருக்கும் விதை; விந்து; மரபுவழி; வழித்தோன்றல்; சாதனம்; காரணம்.

முழுப்பொருள்
அவா அல்லது ஆசை என்பது என்வென்றால் எல்லா உயிர்களுக்கும் எல்லா காலத்திலும் உடனுக்குடன் மறுபிறப்பு என்னும் துன்பத்தை ஓயாது கொடுப்பதற்கான விதை என்கிறார் திருவள்ளுவர்.

மறு பிறவி இருக்கிறாத என்று கேட்டால் எனக்கு தெரியாது. முந்தைய அதிகாரத்தில் "ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து" என்று கூறி இருப்பார் திருவள்ளுவர். அதாவது அடுத்தப் பிறவி என்றென்பது இருக்கிறதா போன்ற ஐயங்களில் இருந்து தெளிவு பேற்று மெய்யுணர்தல் ஆகும்.

ஆனால், என்னைப்பொருத்தமட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு பிறப்பே என்று சொல்லலாம். ஒவ்வொரு நாளும் 86400 விநாடிகள் கொண்ட கொடை. இந்த அவா இருந்தால் அது நம்முடைய ஒவ்வொரு நாளையும் அதன் பிடியில் வைத்துக்கொள்ளும். நாம் அவாவை நிறைவேற்றிக்கொள்ள சென்றுவிடுவோம். மெய்யுணர்தலில் நேரம் செல்விடமாட்டோம். மெய்யான இன்பங்களை அடையாமல் துன்பங்களில் ஆழ்ந்துவிடுவோம். ஆதலால் வீடு என்னும் பேறை அடைய முடியாது. வீடை அடையாவிட்டால் மறுபிறப்பிலும் துன்பப்படுவோம். உதாரணமாக இன்று ஒருவர் தான் ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார், வாங்குகிறார். அதற்கான கடனை அடைக்கிறார். பின்பு ஒரு காருக்கு ஆசைப்படுகிறார். அதற்கான கடனை அடைக்கிறார். முதலில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். கொஞ்ச காலம் கழித்து சொந்தமாக ஒரு 2400 சதுர அடியில் இரண்டு தளங்கள் கொண்ட ஒரு வீட்டு கட்டவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இப்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பொருள் மீதே ஆசைப்படுகிறார். அல்லது இன்று இதை சாப்பிட வேண்டும், நாளை அதை சாப்பிட வேண்டும் என்று சதா சர்வகாலமும் உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போரும் உண்டும்.  அதனால் தான் திருவள்ளுவர் அவா எல்லா துன்பங்களுக்கும் வித்து என்கிறார்.
மேலும் இப்படி புறவாழ்க்கைக்கே ஆசைப்பட்டுகொண்டு இருந்தால், ஒருவர் எப்படி அகவாழ்க்கையை வாழ்ந்து வீடு நோக்கிய பயணத்தை செய்ய முடியும்? 

மறுபிறப்பு என்பது அவ்வளவு கொடுமையான ஒன்றா? ஆம். பிறப்பு இறப்பு என்னும் சுழல் கடப்பதற்கு மிக கடினமான எல்லையற்ற கடல்போன்றது என்று பஜகோவிந்தம் பாடலில் (”புனரபி ஜனனம் புனரபி மரணம், புனரபி ஜனனி ஜடரே சயனம், இஹ சம்சாரே பஹு துஸ்தாரே, க்ருபயா பாரே பாஹி முராரே ”என்று) ஆதி சங்கரர் கூறியுள்ளார்.

Bhaja Govindham  / பஜகோவிந்தம்
Snippet of the Hymm
Punarapi jananam punarapi maranam,
Punarapi janani jatare sayanam,
Iha samsaare khalu dusthare,
Krupayaa pare pahi murare.

Translation
Again and again one is born,
And again and again one dies,
And again and again one sleeps in the mother’s womb,
Help me to cross,
This limitless sea of Life,

Which is uncrossable, my Lord

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே

புனரபி ஜனனம் - மீண்டும் ஒரு முறை பிறப்பு
புனரபி மரணம் - மீண்டும் ஒரு முறை இறப்பு
புனரபி ஜனனி ஜடரே சயனம் - மீண்டும் ஒரு முறை தாயின் கருப்பையில் தூக்கம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே - இந்த பிறப்பு-இறப்பு என்னும் சுழல் கடப்பதற்கு மிகக் கடினமானதொன்றாக இருக்கிறது
க்ருபயா பாரே பாஹி முராரே - அருள் கூர்ந்து என்னைக் காப்பாய் பெருமாளே.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, முன்னும் பின்னும் வினைத்தொடர்பு அறுத்தார்க்கு நடுவுநின்ற உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களும் நின்றமையின் , வேதனை பற்றி ஒரோவழித் துறக்கப்பட்ட புலன்கள்மேல் பழைய பயிற்சி வயத்தான் நினைவு செல்லுமன்றே? அந்நினைவும் அவிச்சை எனப் பிறவிக்கு வித்து ஆம் ஆகலின், அதனை இடைவிடாது மெய்ப்பொருள் உணர்வான் அறுத்தல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்]

எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து - எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து: அவாஅ என்ப - அவா என்று சொல்லுவர் நூலோர். (உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் பிறப்பீனும் வித்து என்றும் கதிவயத்தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறு படாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்'என்றும் இஃது எல்லாச் சமயங்கடகும் ஒத்தலான் 'என்ப' என்றும்கூறினார். இதனான், பிறப்பிற்கு அவா வித்து ஆதல்கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.

மு.வரதராசனார் உரை
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

அவாவினை ஆற்ற அறுப்பின்

குறள் 367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்
[அறத்துப்பால்,  துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
அவா - அது ; ஆசை, அவாவு, இச்சி, விரும்புதல், பற்றுச்செய்தல், ஒன்றைவேண்டிநிற்றல்,  இறங்குதல்

அவாவினை  - ஆசை தனை

ஆற்ற - ஆற்று,  மிகவும், முற்றும், Greatly,exceedingly, entirely
ஆற்றல் - வலிமை, முயற்சி, மிகுதி, ஞானம், நிலையுடைமை(stability),

அறு - அரிதல், ஊடறுத்தல், நீக்குதல், இல்லாமற்செய்தல், வெல்லுதல்,
அறுப்பின் - இல்லாமல் செய்தால், வென்றால்,

தவாநிலை - வழு வாநிலை, a firm condition
தவா வினை - மீண்டும் பிறவாத நிலை அல்லது துன்பம் அல்லாத இன்பம் மட்டும் பயக்கும் நிலை

தான்  வேண்டும்  - தான் வேண்டியது; தான் விரும்பிய

ஆற்றான்  - வலியில்லாதவன்
வரும் - வந்து சேரும்

முழுப்பொருள்
ஒருவன் தன் வாழ்வில் ஆசைகளை, இச்சைகளை, விருப்பங்களை, பற்றுகளை முற்றிலுமாக நீக்கி வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் அவனுக்கு தவ நிலை எனப்படும் மறுபிறவி அல்லாத நிலை வாய்க்கும். இந்நிலை என்பது ஒரு நிலையான நிலை (வழுவாநிலை). இந்நிலை அவன் வேண்டிய அவன் விரும்பிய துன்பம் இல்லாதவனாக அவனை ஆக்கும். அவனை வலிமையாக்கும். அத்தகைய நிலை (ஆசையில்லாமல் இருந்தால்) அவனை வந்து சேரும்.

மேலும்: அஷோக் உரை (நன்றி)


“எதையும் மிச்சமில்லாமல் விட்டுச்செல்வதற்கு பெயர் தவம். அது முனிவராலேயே இயலும்” என்றார் இளைய யாதவர். “பிறர் தங்கள் விழைவுகளையும் கனவுகளையும் விட்டுச்செல்கிறார்கள். ஏக்கங்களையும் வஞ்சங்களையும் நிலைநாட்டிச் செல்கிறார்கள்.” யுதிஷ்டிரர் “நான் எதிலிருந்தும் விடுபட்டவனல்ல. என் துயரெல்லாம் என் பற்றுகளால் உருவாவதே. பற்றறுக்க என்னிடம் சொல்லவேண்டியதில்லை. என் குடிகளை, நிலத்தை, இளையோரை, அரசியரை, மைந்தரை உளம்துறந்துவிட்டு நான் அடைவதொன்றுமில்லை” என்றார். “எங்கு பற்றிருக்கிறதோ அங்கே துயருள்ளது. எதில் பற்று மிகுகிறதோ அதிலேயே மிகுதுயரும் எழுகிறது. துயரென்பது பற்றின் மறுவடிவம் மட்டுமே” என்றார் இளைய யாதவர்.

பரிமேலழகர் உரை
அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம். (கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறுஅறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவிற்கு அஞ்சி அதை முற்றுங் கெடுக்க வல்லனாயின்; தவா வினைதான் வேண்டும் ஆற்றான் வரும் - அவன் கெடாமைக் கேதுவாகிய வினை அவன் விரும்பியவாறே உண்டாகும்.


கெடாமை பிறவித்துன்பங்களால் அழியாமை. அதற்கேதுவாகிய வினை மேற்கூறிய துறவறங்கள். 'வினை' வகுப்பொருமை. விரும்பியவாறாவது துன்பமில்லாதவகை.

மணக்குடவர் உரை
ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: அவாவினை ஆற்ற அறுப்பின்-(ஒருவன்) ஆசையை முற்ற ஒழிப்பின், தவா(த)வினைதான் வேண்டும் ஆற்றான் வரும் - கெடாத வினைகள் தான் விரும்பிய நெறியால் வரும்.

அகலம்: கெடாத வினைகள் - அறங்கள்

கருத்து: அவாவினை விட்டார் அறங்களைப் புரிவர்.

மு.வ உரை
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.

அஞ்சுவ தோரும் அறனே

குறள் 366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை 
வஞ்சிப்ப தோரும் அவா.
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அஞ்சுவது - அஞ்சுதல் - பயப்படுதல்

ஓரும் - ஓர்அசைச்சொல்

அறனே - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

ஒருவனை - ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.

வஞ்சம் - கபடம்; பொய்; கொடுமை; வாள்; வஞ்சினம்; பழிக்குப்பழி; மாயம்; சிறுமை; அழிவு; மரபு; பிரபஞ்சம்.

வஞ்சிப்பது - வஞ்சித்தல் - ஏமாற்றுதல்

ஓரும் - ஓர்அசைச்சொல்

அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.


அஞ்சுவ தோரும்  -> அஞ்சுவது ஓரும் –> ஆசையென்பதற்கு அஞ்சி வாழுதல் (ஓரும் என்பது அசைச்சொல்).
அஞ்சுவ -> அஞ்சி வாழ்வது [அச்சம் / பயம்].

அறனே -> அறமாகும்; சிறந்தது. (அறம் என்றால் நேர்மை என்றுப் பொருள்)
ஒருவனை -> ஏனெனில் ஒருவரை.

வஞ்சிப்பது ஓரும் -> வஞ்சித்து பிறந்திருக்கும் பாதையில் செலுத்துவது (ஓரும் என்பது அசைச்சொல்).

ஓரும் [தோரும்] -> ஆசை நிலை.

அவா -> அது ; ஆசை.

முழுப்பொருள்
ஒருவன் தன் மெய்யுணர்தலை (வாய்மை வேண்டலை) நோக்கி செல்கையில் அவனை அறியாமலே அவன் தன்னை மறந்த நேரத்திலோ அல்லது சோர்ந்த நேரத்திலோ (இனிமையான கள் போன்று) அநாதியாய் (அநாதையாக) ஆசை அவனுள்ளே புகுந்து விடும். 

பின்னர் அவனை விழிக்கச்செய்து அவனை கெடுத்து அவனது வாய்மை வேண்டலை நோக்கி செல்லும் பயணத்தை கெடுத்துவிடும். அவனை மறுபடியும் அவன் துவங்கிய இடத்திற்கே (அறியாமை) கொண்டு வந்து விடும். 

ஆக, அத்தகைய வல்லமை படைத்த ஆசையை ”அவா” என்கிறார் திருவள்ளுவர். ஆக, மெய்யுணர்தலை, வாய்மைவேண்டலை இடைவிடாதுப் பயின்று செல்ல அவ்வவாவை (ஆசையை) அஞ்சிக் (பயந்து) காப்பதே துறவறமாவது (அறமாகும் / சிறந்ததாகும்).  ஆதலால் வஞ்சிக்க வல்ல எல்லா ஆசை நிலைகளை அஞ்சி வாழ (இருக்க) வேண்டும்.

உலகியல் வாழ்க்கையில் கூட ஒருவர் ஒரு குறிக்கோளை நோக்கி செல்லும் போது வெற்றி நோக்கிய விளிம்பில் தோல்வி ஏற்படுதல் வேதனையைத் தரும். அதற்கு காரணம் அவாவினால் வந்த கவனச்சிதறலாகவே இருக்கும். அவாவே ஒருவனை அங்கு வஞ்சித்து இருக்கும். Falling from the cliff என்பார்கள். மிகுந்த வலியை தரும். ஆதலால் ஆசைகளை அஞ்சு.

---------------------------------------------------------------------------------------------------------


ஆசையென்பது ஒருவரை வஞ்சித்து, மெய்யுணர்வை நோக்கிச் செல்லும் நோக்கை நீர்த்துப் போகச் செய்யும் வஞ்சகன். ஆதலால் அந்த வஞ்சகனுக்கு அஞ்சி வாழ்வதே அறமென்கிறார் வள்ளுவர்.

இதனால் அவாவைக் குற்றமுள்ளதாகக் காட்டி, அந்த குற்றத்திலிருந்து நீங்கலே அறமென்றும் காட்டுகிறார் வள்ளுவர்.

இந்த குறளிலும், ஒருவரை பிறப்பின் கண்ணே வீழ்த்துவது அவா என்று பரிமேலழகர் உரைசெய்துள்ளார். அதையே அவா செய்யும் வஞ்சகமாகக் காட்டுகிறார். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்று அறிவுடைமை அதிகாரத்திலும் சொல்லப்போகிறார்.  மூவாசைகளை விட்டொழித்து முத்தி நெறி முயல்வோருக்கே, “யாமார்க்கும் குடியல்லோம்” என்னும் அப்பரின் உறுதி இருக்கும்.
இன்றெனது குறள்:
ஆசையாம் வஞ்சகனுக் கஞ்சிவாழ்தல் வாழ்விலறம்,
ஆசையற வாழும் திறம்.

“அஞ்சுகிறாயா?” என்று அவர் கேட்டார். “இப்புவியே அஞ்சுபவர் அஞ்சாதோர் என இருவகைப்பட்ட மானுடருக்கானது. தனித்தனிப்பாதைகள்.” இருளுக்குள் அவருடைய பற்கள் சிரிப்பில் மின்னி அணைந்தன. “அஞ்சுதல் உன்னை குடும்பத்தவன் ஆக்கும். விழைவுகளால் நிறைக்கும். அள்ளி அள்ளி குவிக்கவைக்கும். அடைந்ததை அறியமுடியாது அகவிழிகளை மூடும். அஞ்சாமை உன்னை யோகியாக்கும். அறியுந்தோறும் அடைவதற்கில்லை என்றாகும்.”

பரிமேலழகர் உரை
ஒருவனை வஞ்சிப்பது அவா - மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே விழித்துக் கெடுக்கவல்லது அவா, அஞ்சுவதே அறன் - ஆகலான், அவ்வவாவை அஞ்சிக் காப்பதே துறவறமாவது.  (ஓரும் என்பன அசைநிலை, அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின் , அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது வாய்மைவேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம்என்பதூஉம் கூறப்பட்டன.). 

மு.வ உரை
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: அவா ஒருவனை வஞ்சிப்பது - ஆசை ஒருவனை வஞ்சிப்பது; அவாவே அஞ்சுவது -ஆகலான்) அவாவே அஞ்சத் தக்கது.

அகலம்: ‘ஓரும்’ இரண்டும், ஏகாரமும் அசைகள். தாமத்தர் பாடம் ‘அஞ்சுவ தோரு மவாவே’. நச்சர் பாடம் ‘அஞ்சுவ தோரு மறிவே’. தாமத்தர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: அவாவினை விடுதலே மக்கள் கடமை.


English Meaning - As I taught a kid - Rajesh
One should beware that desires/distractions betray us. Hence, one should be fear desires/distractions when you want to achieve a goal. 
When one is working towards achieving a goal or moksha, one should remember that desires are distractions. These distractions would deter us from attaining the goal or moksha. When we don't attain the goal, Just like falling from somewhere middle of the mountain, we would go through lot of distress/pain. Also, we would have to start from scratch again. 

Questions that I ask to the kid
What should one fear or be conscious of ? What betrays us?