Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_038. Show all posts
Showing posts with label Athikaaram_038. Show all posts

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

குறள் 379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி

கால் - நாலில்ஒன்று; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும்'வ' என்னும் பின்ன எண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை.

நல்லவாக் - விளைவாய இன்பங்களை நல்லவை

காண்பவர் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி

கால் - நாலில்ஒன்று; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும்'வ' என்னும் பின்ன எண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

அல்லல் -  துன்பம்

அல்லற்படுவது - துன்பப்படுவது 

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

முழுப்பொருள் 
ஒருவர்க்கு வாழ்வில் நல்லது, இனியது நடக்கும் பொழுதெல்லாம் வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் நல்லவற்றையெல்லாம் நன்கு அனுபவிக்கும் ஒருவர் தீயது நடக்கும் பொழுதும் நல்லவை நடக்காத பொழுதும் இவை யாவும் விதி என நினைப்பது ஏனோ?

விதி என்ன தீமை மட்டும் தருவதா என்ன. இல்லையே. விதி இன்பமும் தரவல்லது. ஆனால் இன்பம் வரும் பொழுதெல்லாம் விதிக்கு நன்றித்தெரிவிக்காமல் தனது செயலுக்கும் உழைப்பிற்கும் கிரீடம் சுட்டிக்கொண்டு (அதாவது அகங்காரம் கொண்டு) இருப்பாது ஏனோ?

இதை ஒட்டி ஒரு கருத்தை நான் இப்படிச் சொல்வேன், நம்மில்ல பலர் இறைவன் இருக்கும் கோயில்களுக்கு சென்று அல்லது வீட்டில் இறைவனை வணங்கும் பொழுது இறைவனிடம் இல்லாதை நினைத்து வருந்துகிறோம், இல்லாததை வேண்டி நிற்கிறோம் அதற்காக மன்றாடுகிறோம். ஆனால் இருப்பவற்றுக்கு இறைவன் கொடுத்தவற்றுக்கு நன்றி தெரிவிப்பதில்லை. அது ஏனோ? துன்பம் வரும் பொழுது மட்டும் இறைவனின் நினைப்பு வருவது ஏனோ? 

முற்றுக்கருத்தையும் கம்பராமாயண தைலமாட்டுப்படலப் பாடலொன்று கூறுகிறது. “இன்பம்வந் துறுமெனின் இனிய தாயிடைத் துன்பம்வந் துறுமெனின் துறக்க லாகுமோ?”

மேலும்: அஷோக் உரை

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள் என்ற உங்கள் சொல்லை நான் தலைக்கொண்டவன்.

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை என்றது உங்கள் மெய்வேதம்.
-

ஒப்புமை
“சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே ஆகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத்தென்னை பிரிவு” (நாலடி 110)

“சாதலும் பிறத்தல் தானும் தம்வினைப் பயத்தின் ஆகும்
ஆதலும் அழிவும் எல்லாம் அவைபொருட் கியல்பு கண்டாய்
நோதலும் பரிவும் எல்லாம் நுண்ணுனர் வின்மை யன்றே
பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி யென்றான்” (சீவக 269)

“முடியுநாள் தானே வந்து முற்றினான் துன்பமுந்நீர்
படியுமாம் சிறியோர் தன்மை நினக்கிது பழியிற்றாமால்” (கம்ப.மாயாசீதைப் 65)

“இன்பம்வந் துறுமெனின் இனிய தாயிடைத்
துன்பம்வந் துறுமெனின் துறக்க லாகுமோ” (கம்ப.தைலமாட்டு.29)

பரிமேலழகர் உரை
நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, இவை நல்ல என்று இயைந்து அனுபவிப்பார், அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி? (தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத்துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு?. இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?.

சாலமன் பாப்பையா உரை
நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?.

English Meaning - As I taught a kid - Rajesh
When good things happens to one person, he(or she) enjoys all the good stuffs (without giving credit to other factors, other people). Whereas whenever some bad thing happens to him and he suffers, he blames it upon fate or someone else? Whenever good things he gives credit to his hardwork, talent, intelligence and one doesn't even thank God for it. But when something bad happens, he blames on fate and goes to God and question why God gave sufferings to him. Why this double standards? Why is he suffering thinking about suffering and bad times?

So, one should accept both good and bad equally. One should be grateful for all the factors in his favor during good times, stay ground and be humble. When one goes through bad times, one should learn from the mistakes and continue do his work and take help of others. 

Also, taking all the credit for good results is a ego because one alone cannot be a reason for good results. There are many other factors. Also taking blame for all the failures is a bigger ego because failures can happen for things not under our control (taking blame means that one is so egoistic that he could have done beyond the limitations).

Questions that I ask to the kid
Is it correct to suffer when going through difficulties/failures or a bad phase in life? Why? How can you overcome? That means, how would you treat good phases of life?

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

குறள் 378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

பொருள்
துறப்பார் - துறவந்தவர்கள்

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

துப்புரவு - தூய்மை; நுகர்ச்சிப்பொருள்; ஐம்பொறிநுகர்ச்சி; அனுபவம்; திறமை; முறைமை; மேன்மை; வேண்டற்பாடு; அழகு.

இல்லார்- இல்லாதவர்

உறற்பால -  ஊழ்வலியால் வந்துறும் துன்பங்கள்

ஊட்டல் - உண்பிக்கை; ஊட்டுதல்; அடைவிக்கை, கன்றுமுதலியனபால்குடித்தல்.

ஊட்டுதல் - உண்ணல்; உண்பித்தல்; வாயிலிடுதல்; புகட்டுதல்; கன்றுபால்குடித்தல்; சாயமேற்றுதல்; அகிற்புகை, செம்பஞ்சு, மைமுதலியனஊட்டுதல்; நினைப்பூட்டுதல்; நுகரச்செய்தல்.

ஊட்டா - வந்து வருத்தாமல் 

கழியும் - கழிதல் - மிகுதல்; கடந்துபோதல்; நடத்தல்; குறைபடுதல்; அழிதல்; ஒழிதல்; சாதல்; முடிவடைதல்; வருந்துதல்; மலம்முதலியனவெளிப்படுதல்; அச்சங்கொள்ளுதல்.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்

முழுப்பொருள்
துப்புரவு என்ற சொல்லுக்கு அகராதியில் இடம்பெற்றுள்ள பொருள்களில் நுகர்ச்சிப்பொருள், ஐம்பொறிநுகர்ச்சி, திறமை, முறைமை ஆகிய பொருள்களை எடுத்துக்கொண்டால் இக்குறளுக்கு நல்ல ஒரு பொருள்ளை நாம் காண முடியும்.

ஒருவருக்கு நுகர்ச்சிச் செய்கிறப் பொருள்கள் இல்லையேல் அதாவது அவர் வறியவராக இருப்பினும், ஐம்பொறிகள் காட்டும் புலனின்பங்களை நுகர வேண்டும் என்று நாட்டம் இல்லையென்றாலும் (அவர் துறவறம் பூண எல்லா மனதகுதிகளும் இருப்பினும்),  ஒருவருக்கு திறமை இல்லையென்றாலும் அதில் இருந்து தப்பிக்க துறவறம் பூண வேண்டும் என்று நினைத்தாலும், ஒருவருக்கு துறவறம் பூண முறைமையில்லை (ஊழ்யில்லை) என்றால் தனது ஊழின் விதியால் அவர் துன்பங்கள் நீங்காமல் அதனை அனுபவிப்பார். அவரால் துறவறம் பூண முடியாது/மாட்டார். ஆதலால் துறவறம் என்பது தப்பித்துக்கொள்ளும் ஒரு வடிகால் அல்ல. துறவறம் பூணுவதற்கும் ஊழ்தனில் விதிக்கபட்டு இருக்கவேண்டும் என்றென்கிறார் திருவள்ளுவர். விதி வலிமை வாய்ந்தது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர், உறற்பால ஊட்டா கழியும் எனின் - ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின். ('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
நுகரும்பொரு ளில்லாதார் துறக்க அமைவர்: தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதுபோமாயின். இது துறவறமானது ஊழினால் வருமென்றது

மு.வரதராசனார் உரை
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை
துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

குறள் 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

பொருள்
வகுத்தல் கூறுபடுத்தல்; பகிர்ந்துகொடுத்தல்; இனம்பற்றிப்பிரித்தல்; பகுத்துக்கணக்கிடல்; அமர்த்துதல்; வகைப்படுத்தல்; நியமத்தோடுசெலவிடுதல்; பூசுதல்; படைத்தல்.

வகுத்தான் - படைத்தவன்; vakuttāṉ   n. id. Fate, as theGreat Dispenser; ஊழ். வகுத்தான் வகுத்த வகையல்லால் (குறள், 377).

வகுத்த - வகுத்தல் கூறுபடுத்தல்; பகிர்ந்துகொடுத்தல்; இனம்பற்றிப்பிரித்தல்; பகுத்துக்கணக்கிடல்; அமர்த்துதல்; வகைப்படுத்தல்; நியமத்தோடுசெலவிடுதல்; பூசுதல்; படைத்தல்.

வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

அல்லால் - allāl   prep. அல்&sup4;. Except, besides; அல்லாமல் அஞ்சாமை யல்லால் (குறள், 497).  

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.

தொகுத்தார்க்கும் - தொகுத்தல் - எண்கூட்டல்; திரட்டிக்கூட்டுதல்; அடுக்குதல்; மதிப்பிடுதல்; தொக்குநிற்கச்செய்தல்; சொல்லின்முதல்இடைஇறுதியில்எழுத்துகளைநீக்குதல்; சுருக்குதல்; சம்பாதித்தல்.

துய்த்தல் - புலன்களால்நுகர்தல்; உண்ணுதல்; நூல்நூற்றல்; நாடகச்சந்திஐந்தனுள்இறுதியானது.

அரிது - அருமை; பசுமை

முழுப்பொருள்
நம்மை படைத்தவன் அதாவது இறைவன் நமக்கு ஒரு தலைவிதியை திட்டத்தை வகுத்து இருப்பான். அதுவே வெல்லும். அவ்வகுத்தலுக்கு மாறாக வேறு எதனையும் தளராத உழைப்பால் வென்று அதனை கோடி எண்ணிக்கையில் ஈன்றாலும் அதனை நாம் நுகருவதற்குக்கூட இறைவனின் தலைவிதி அமைந்திருக்க வேண்டும் இல்லையேல் மிக மிக கடினம். 

உதாரணமாக ஒருவர் அயராத உழைப்பால் எண்ணிக்கையில் அடங்காத சொத்துக்களை சேர்த்துவைத்து இருக்கலாம், ஆனால் அவர் அதை நுகரும் தருவாயில் அதனை நுகரமுடியாமல் போகும். நாம் விதியை வென்று இருக்கலாம். ஆனால் விதி நம்மைவிட வலியது. அது நம்முன்னே சென்றுவிடும். அவருக்கு உடல் உபாதையோ வந்தாலோ அல்ல உறுப்பு செயலற்றுப்போனாலோ அதனை நுகரமுடியாமல் போகக்கூடும். வணிக ரீதியாக பார்த்தால் ஒரு இயற்கை சீற்றம் வணிக பரிவர்த்தனைகளை மாற்றக்கூடும், அல்லது தீயினால் நடக்கும் விபத்து நமது சொத்துக்களை நிலைக்குலைய செய்யும் அல்லது ஒரு சுறாவளியோ மழையோ ஒரு விளையாட்டு போட்டியினை ரத்து செய்யகூடும். இப்படிப் பற்பல உதாரணங்களை கூறலாம்.

ஆதலால் நம்மை படைத்த இறைவன் நமக்கு விதித்து இருந்தால் மட்டுமே நம்மால் அதனை நுகரமுடியும் இல்லையேல் முடியாது. ஆதலால் இறைவனை என்று நாடு. 

அப்படியென்றால் நாம் விதியை வெல்ல உழைக்ககூடாதா? தளராது உழைக்கவேண்டும். படைத்த இறைவனைத் தவிர யாருக்கு தெரியும் நமக்கு விதிக்கபட்டதா இல்லையா என்று? நமக்கு ஒன்றை நுகர அல்லது அனுபவிக்க விதிக்கபட்டு இருக்கலாம். ஆனால் அது நமது இடத்திற்கு வராது. நாம் தான் தேங்கி நிற்காது அங்கு செல்ல வேண்டும் அதற்கு உழைக்கவேண்டும். அங்கு சென்றும் நுகரமுடியவில்லையென்றால் விதிக்கபடவில்லை என்று நினைத்துக்கொண்டு முன்னே செல்ல வேண்டும். பலனை எதிர்ப்பாராமல் கடமையை செய்ய வேண்டும். 

இக்கருத்தையே நாலடியார் பாடல் இவ்வாறு கூறுகிறது.
“வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை
அளந்தன போகம் அவரவராற்றான்” (நாலடி 107)

சீவக சிந்தாமணிப்பாடலொன்று உழை மையமாகக்கொண்டு இக்குறள் கருத்தை பின்வருமாறு கூறுகிறது.
“அளந்துதாங்கொண்டு காத்த அருந்தவமுடைய நீரார்க்
களந்தன போகமெல்லாம் அவரவர்கற்றை நாளே 
அளந்தன வாழும் நாளும்”(சீவக.213)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது. (ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார். 'இசைத்தலும் உரிய வேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையா தார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், உம்மை எச்ச உம்மை. வெறும்முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.).

மணக்குடவர் உரை
விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

சாலமன் பாப்பையா உரை
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.


Thirukkural - Management - Fate
The influence of fate is that even if a person has earned crores of money and has other material belongings in his possession, he cannot enjoy that wealth or prosperity, if his fate is not  favorable to him to enjoy that wealth, confirms Kural 377.

Except as disposed by the Great Disposer
Even crores amassed may not be enjoyed

So, earning wealth or becoming prosperous is one thing and enjoying what one has earned is another thing. Both, to earn wealth and material things and to enjoy what one has earned, need the support of fate. 

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

குறள் 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

பொருள்
பரி-தல் - pari-   4 v. intr. 1. cf. spṛh. Tocovet; பற்றுவைத்தல் பண்டம் பகர்வான் பரியான்(பு. வெ 12, ஒழிபு 2). 2. To be affectionate;காதல்கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 3. To sympathise; இரங்குதல் பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ 3,8). 4. To plead, intercede; சார்பாகப் பேசுதல் நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 5. Tobe troubled, distressed; to suffer; வருந்துதல் பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50). 6. Topart, separate; பிரிதல் (W.) 7. To besundered; அறுதல் பரிந்த மாலை (சீவக. 1349).8. To break off; முறிதல் வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229). 9. To be destroyed; toperish; அழிதல் பழவினை பரியு மன்றே (சீவக.1429). 10. [K. pari.] To run; ஓடுதல் மாவே. . . பரிதலின் (புறநா. 97). 11. To go out; toescape; வெளிப்படுதல் பரிச்சின்ன ஞானம் பரிய(சிவப்பிர. சிவஞா. நெஞ்சு 81).--tr. 1. To fear;அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502). 2.cf. pṛ. To guard with difficulty; வருந்திக் காத்தல்

பரியினும் -  வருந்தினாலும்

ஆகா - வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக்குறிப்பு; ஒருகந்தருவன்.

ஆகாவாம் - ஆகாது

பால் - குழவி, குட்டிமுதலியவற்றைஊட்டத்தாய்முலையினின்றுசுரக்கும்வெண்மையானநீர்மப்பொருள்; பிணத்தைஅடக்கம்பண்ணினமறுநாள்அவ்விடத்திற்பாலும்நவதானியமும்சேர்த்துத்தெளிக்கும்சடங்கு; மரம்முதலியவற்றிலிருந்துவடியும்நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மைமுதலியவற்றிலிருந்துகசியும்சீழ்; பிரித்துக்கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமைபன்மைஎன்றஇருவகைப்பாகுபாடு; அகத்திணைபுறத்திணைஎன்றபாகுபாடு; இடையர்குறும்பர்களின்வகை.

அல்ல - இல்லை ;  அது மட்டும் அல்ல

உய்த்துச் - உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல்; சேர்த்தல்; நடத்துதல்; அமிழ்த்தல்; நுகர்தல்; கொடுத்தல்; அனுப்புதல்; குறிப்பித்தல்; அறிவித்தல்; ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்.

சொரியினும் - சொரிதல் - உதிர்தல்; மழைபெய்தல்; மிகுதல்; பொழிதல்; கொட்டுதல்; மிகக்கொடுத்தல்; காண்க:சொறிதல், சுழலுதல்.

போகா - போகாமல் - நீங்காமல்

தம - தமக்கு என்று ஊழால் விதிக்கப்பட்ட செல்வமானது

முழுப்பொருள்
நாம் எவ்வளவு வருந்தி செல்வம் (உடல் ஆரோக்கியம் உட்பட) ஈட்டி வைத்தாலும் அதனை எவ்வளவு பாடுபட்டு காத்தாலும் அது நம்மிடம் தங்கவில்லையென்றால் அதற்கு நமது ஊழ் காரணமாக இருக்கலாம் அல்லது அச்செல்வத்தின் கணிக்க முடியாத இயல்பாகவும் இருக்கலாம். அதுப்போல நாம் எவ்வளவு பாடுபட்டலாம் நாம் வெளியே தள்ளினாலும் நம்மை விட்டு நீங்காத செல்வங்களும் இருக்கலாம். அதற்கும் ஊழ் அல்லது செல்வத்தின் இயல்பாகவும் இருக்கலாம்.

ஆதலால் செல்வம் இழந்தாலோ செயல்களில் தோற்றாலோ அதற்கு நாம் வருந்தி கழிவிரக்கத்தில் உழன்றுக்கொண்டு இருக்க கூடாது. ஏனெனில் ஊழிற் சரணடைவது கோழைத்தனம்.

ஊழின் செயல்பாடுகள் நமக்கு அறிவுறுத்துகிறது, எச்சரிக்கிறது, வழிகாட்டுகிறது. ஊழின் பல்லாயிரம் கைகள் நமது ஆட்டக்களத்தில் பகடைக் காய்கள் கொண்டு அமர்ந்திருக்கின்றன எனும்போது அவற்றால் எந்தப் பயனும் இல்லை. ஆதலால் ஊழை ஒரு பொருட்டாக எண்ணலாகாது. ஏனெனில் அது ஊழுக்கு அடிபணிவதாகும். தோற்பதே முடிவு என்றாலும் ஊழுடன் ஆடுவதே வீரரும் அறிவரும் யோகியரும் ஏற்கும் செயல்.

இது செல்வம் என்றில்லை. நமக்கு நடக்கும் செயல்களுக்கும் பொருந்தும்.

குறிப்பு: ஆயினும் இதற்காக உடற்பயிற்சி செய்யாது இருப்பதோ அல்லது அளவற்று உணவு உண்பதோ அல்லது வீண் செலவுகள் செய்வதோ அல்லது சோம்பி செயல்கள் செய்யாது இருப்பதோ தவறு. நாம் ஆரோக்கியமாய் இருக்க வாழ்வில் முன்னேற செய்யவேண்டியவனவற்றை செய்யவேண்டும். நம் கட்டுப்பாட்டில் இல்லாதவையை எண்ணி நாம் செய்வனவற்றை குறைக்கவோ செய்யாது இருந்தாலோ கூடாது.

ஒப்புமை
ஊழென்பது பொருள் சேராமல் செய்தலுக்கும்,  உரியவை போகாமல் செய்தலுக்கும், நாலடியார், பழமொழி, கம்பராமாயணப் பாடல்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டலாம்.

நாலடியார் பாடலொன்று,
“மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் 
விடுக்கும் வினையுலந்தக்கால்” (நாலடி 93) என்கிறது.  

கம்பர் மாரீச வதைப் படலத்தில், 
“தருவது விதியே என்றால் தவம்பெரி துடையரேனும் 
வருவது வருநாளன்றி வந்து கைகூடவற்றோ” (கம்ப.மாரீசன் 80) என்பார்.

“உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா” (நாலடி.103)
“ஈண்டுநீர் வையத்துள்.. நல்லதை
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால்
தீண்டாவிடுதல் அரிது” (நாலடி.109)

”உறற்பால யார்க்கும் உறும்” (நாலடி 117)

பழமொழி நானூறு பாடல் ஒன்று, ஊழால் உரியவை போகாமையை, 

“விழுமிய
வேண்டினும், வேண்டாவிடினும் உறர்பால 
தீண்டாவிடுதல் அரிது” (பழமொழி 15, 62) என்கிறது. 

நாட்டுங் கால்நெடு நல்லறத்தின்பயன்
ஊட்டுங்காலத்திகழ்வ துறுங்கொலோ” (கம்ப.நிந்தனைப்.34)

இக்குறளின் முற்றுக்கருத்தையும் சொல்லும் பழமொழிப்பாடல் ஒன்று:
“ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே
ஏகல் மலைநாட! என்செய்தாங் கென்பெறினும்
ஆகாதார்க்கு ஆகுவது இல்.” (பழமொழி 127)


”ஆம் பொருள்கள் ஆகும் அவை யார்க்கும் அழிக் கொண்ணாப்
போம்பொருள்கள் போகும் அவை பொறியின்வகை வண்ணம்” (சீவக.848)

“பெருமுழங்கு திரைவரைகள் நீந்திப்பிணியுறினும்
திருமுயங்கல் இல்லையெனில் இல்லைபொருளீட்டம்
ஒருமுழமும் சேறலில ரேனும்பொருளூர்க்கே
வரும்வழிவினாயுழந்து வாழ்கதவம் மாதோ” (சிவக.2556)

“ஆகுவ தாகுங்காலத்தழிவதும் அழிந்து சிந்திப்
போகுவதயலே நின்று போற்றினும் போதல் செய்யும்” (கம்ப.கும்பகர்ணன்.165)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகா. (பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது. காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகா. இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.

சாலமன் பாப்பையா உரை
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.

Thirukkural - Management - Ethical Behavior
Wealth obtained through improper means, ill-gotten wealth, cannot be protected from going away from that person, even if he creates the best possible protections or measures to keep or hoard the wealth with him, predicts Kural 376.

What is not naturally ours cannot be got,
Nor what is, ejected.

On the contrary, wealth obtained through proper means, well-gotten wealth, will remain with him, even if he does not take the protections or measures to keep them with him. Well- gotten wealth remains with him despite his spending recklessly. The implied meaning is that a person who gets wealth through proper means will not squander his wealth. A person who gets his wealth through improper means is always reckless with his wealth.

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

குறள் 375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நல்லவை  - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை.

எல்லாஅம் -  ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.

தீய - தீமையான; போலியான

ஆம் - ām   part. 1. A connecting increment between the parts of a compoundword; சாரியை மண்ணாங்கட்டி (நன். 244, உரை).2. An expletive; அசைநிலை பணியுமா மென்றும்பெருமை (குறள், 978). 3. V. term.: (a) 1st pers.pl., as in வந்தாம்; தன்மைப்பன்மை விகுதி (b) 1stpers. pl. including the person or persons spokento; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி யாமும்நீயும் செல்வாம்.  ; நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

தீயவும் -  தீமையான; போலியான

நல்ல நன்மையான; மிக்க; கடுமையான.

ஆம் - ām   part. 1. A connecting increment between the parts of a compoundword; சாரியை மண்ணாங்கட்டி (நன். 244, உரை).2. An expletive; அசைநிலை பணியுமா மென்றும்பெருமை (குறள், 978). 3. V. term.: (a) 1st pers.pl., as in வந்தாம்; தன்மைப்பன்மை விகுதி (b) 1stpers. pl. including the person or persons spokento; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி யாமும்நீயும் செல்வாம்.  ; நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

செயற்கு - செய்வதற்கு

முழுப்பொருள்
நற்செயல்கள் செய்வதற்கும் செல்வம் ஈட்டுவதற்கும் எல்லா சூழ்நிலைகளும் (அதாவது திட்டம், இடம், காலம், மனித வளம் போன்ற சூழ்நிலைகள்)  சரியாக அமைந்தாலும் ஊழ் தீயதாக அமைந்திருந்தால் அச்செயலில் வெற்றிகொள்ளவோ அல்லது செல்வம் ஈட்டவோ முடியாது. அதேப்போல் நம்முடைய சூழ்நிலைகள் சரியாக இல்லையென்றாலும் ஊழ் நமக்கு சாதகமா இருந்தால் நமக்கு அச்செயலில் வெற்றியும் செல்வமும் கிட்டும். அதுவே ஊழின் வலிமையாகும்.

ஊழானது நாம் செய்யும் கர்மத்தின் (காரியத்தால்) பலன்களால் வரும். இப்பிறவியில் செய்யும் கர்மம் இப்பிறவியிலேயே பலனை காண்பிக்கும் அல்லது அடுத்தபிறவியிலும் ஊழாக வரும்.

சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட “ஊழ்வினை உறுத்து வந்தூட்டலை” நினைவு கொள்ளவேண்டும்.

பி.கு: எனக்கு இன்னொரு அர்த்தமும் தோன்றுகிறது. நமக்கு நடக்கும் நல்லவையெல்லாம் நன்மைக்கு என்று அர்த்தமில்லை. அது ஒரு விதத்தில் தோல்வியை தள்ளிப்போடுகிறது. அதனை அப்பொழுது எதிர்க்கொள்வது கடினமாகக்கூட இருக்கும். அந்நிலையில் செல்வம் ஈட்டுவது கடினமாக இருக்கும். அதலால் அது தீதே. ஆதலால் வாழ்க்கை ஏறுமுகமாகவே இருக்காது என்று உணர்ந்து உழைத்துக்கொண்டு இருக்க வேண்டும். அதுப்போல் இன்று நமக்கு வரும் தீயவை நமக்கு பல துன்பங்களை தரலாம் ஆனால் அவையெல்லாம் நன்மைக்கே. அந்தக் கடினமான காலங்களை கற்பதற்கான பக்குவமடைவதற்கான காலமாக உணர்ந்து உழைத்தால் நன்மைகள் வரும்பொழுது அது நெடுங்காலம் நிலைத்து நிற்க ஏதுவாக இருக்கும். நல்லவைப்பின் தீதும், தீயவற்றின் பின் நன்மையும் ஒருவரின் தலைவிதி அல்லது ஊழ் என்று ஒருவர் உணரவேண்டும். ஊழை மதித்து வெற்றியில் மமதை கொள்ளாமல் தோல்வியில் சோர்வு கொள்ளாமல் செயல்லாற்றவேண்டும்

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நன்மையும் தீமையன்றோ நாசம்வந்துற்ற போது” (கம்ப.மாரீசன்.202)

பரிமேலழகர் உரை
செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.

மணக்குடவர் உரை
செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.

மு.வரதராசனார் உரை
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

சாலமன் பாப்பையா உரை
நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.

Thirukkural - Management - Fate
When your fate is against you, all positive intentions, behavior, and efforts will result in negative consequences. However, when your fate is favorable to you even negative intentions, behavior, and efforts will result in positive consequences, reveals Kural 375. When you reflect on this Kural, you will have many personal incidents to prove the validity of the thought in the Kural.

Favorable means prove adverse, adverse help
When fate intervenes.

When your fate is unfavorable to you, that will make you lose all your wealth and knowledge and prevent you from putting in sincere efforts. Whereas, when your fate is favorable to you that will make you gain more wealth, knowledge, and help you put in sincere efforts. 

English Meaning - As I taught a kid - Rajesh
When we want to do good work, earn money even if all the circumstances (i.e., plan, place, time, resources, human resources etc.) happens correctly, if the fate is bad, we might not be successful or earn the money. At the same time, some times even if our circumstances doesn't happen correctly, we might still succeed in our task and earn money. That is because of fate.

Fate comes because of our karma. Karma can show its effect in this birth itself or in next birth.

Also, one has to understand that if we are continuously succeeding it doesn't mean it is because of us/you (so don't have the ego that it is because of you), our fate could just be postponing our failure. So, we need to be humble and do our work sincerely in the present and future. if one is failing it can be because of us and it can be because of fate too. So, don't get bogged down. Do your work sincerely. Your efforts will succeed one day.

Questions that I ask to the kid
Even if circumstances are favourable, it turned out harmful? Why? How should I react?
Even if circumstances are not favorable, it turned out beneficial? Why? How should I react?

நுண்ணிய நூல்பல கற்பினும்

குறள் 373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

பொருள்
நுண்ணிய - நுண்மை - கூர்மை; நுட்பம்; மிகுதி; வேலைத்திறம்; அறிவுநுட்பம்; பொருள்நுட்பம்; சிற்றுண்டி; கமுக்கம்.

நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.

பல - ஒன்றுக்குமேற்பட்டவை

கற்பினும் - கல் - கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி; kaṟkai   n. கல்-. Learning; படிக்கை. கற்கை நன்றே. (நறுந்.).

மற்றும் - மேலும்; மீண்டும்.

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப்பெறும்திரிபு.

உண்மை -  உள்ளது; இயல்பு உள்ளதன்மை; மெய்ம்மை நேர்மை ஊழ்

அறிவே - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

மிகும் - மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல்.

முழுப்பொருள்
ஒருவர் எவ்வளவு நுட்பமாக பல நூல்களை கற்றாலும் ஊழின் (தலைவிதியின்) படி எந்த அளவு அறிவு நம்மில் இருக்க வேண்டுமோ அந்த அளவே நம்மில் எஞ்சி இருக்கும் என்கிறது இக்குறள்.

அதற்கு உதாரணமாக கர்ணன் பரசுராமரிடம் பெற்ற சாபத்தைச் சொல்லலாம். அச்சாபத்தினால், பிரம்ம அத்திரத்தை தகுந்த நேரத்தில் மகாபாரதத்தில் தன்னுடைய  எதிரியாம் அருச்சுனம் மேல் எறியமுடியாமல் போனது. கற்றுத் தேர்ந்தது ஊழ் வலியின் முன் பயனற்று போனது,

இரண்டாயிரம் வருடங்களுக்குள்ளான சரித்திரப்பதிவில், இளங்கோ அடிகள் தனக்குத்தான் என்று கணிக்கப்பட்ட மணிமுடியைத் துறந்து, துறவியான கதை நாமெல்லோரும் அறிவோம். இதில் கணித்தவருடைய அறிவை, மற்றவருக்கு விதிக்கப்பட்ட பாதை, மாற்றியது.


நாலடியாரின் (341) பாடல் 
“கனம் பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன் 
மனம் புரிந்தவாறே மிகும்” என்கிறது. 

பழமொழிப்பாடல் (203), 
“பொறியின் வகைய கருமம் 
அதனால் அறிவினை யூழே அடும்” என்கிறது.  

இப்பாடல் கல்வியினும் ஊழின் வலி பெரிது என்கிறது. இதற்கு மாற்றாக “விதியை மதியால் வெல்லலாம்” என்னும் கூற்றும் வழக்கத்தில் உண்டு.

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-இமைக்கணம்-6 இல் இப்படி வருகிறது
“ஊழ் என்பது ஒருகையில் வாளும் மறுகையில் மலரும் கொண்ட விந்தைப்பெருந்தெய்வம்” என்றார் தென்தமிழ்நிலத்து நிமித்திகர் சாத்தனார். “நஞ்சும் அமுதும்கொண்டு அது வாழ்வை நெய்கிறதென்கின்றன நூல்கள். எவருக்கும் அது முற்றாக கனிந்ததில்லை. எவரையும் கைவிட்டதுமில்லை.

பரிமேலழகர் உரை
நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும். (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் - கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். 'காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம் போலுமால்' (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும். மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.

மு.வரதராசனார் உரை
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

சாலமன் பாப்பையா உரை
பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது).

Thirukkural - Management - Personality Development - Heredity
Kural 373 highlights the role of heredity in personality development.

This view is contrary to the belief that one's environment plays a major role in shaping one's personality. Even if a person has read and keeps reading the best of the books and learns a lot from that reading, education and training, what remains in him even after so much learning is his innate or natural quality.

A man may have studied many subtle
But what survives is his innate wisdom.

In other words, what is deep seated in one's psychophysical make up cannot be covered superficially because what is deeply ingrained in one keeps surfacing now and then. So, tuition is not superior to intuition.

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

குறள் 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

பொருள்
பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.
வறிஞன் - பொருளில்லாதவன்

படுக்கும் - படுத்தல் - செய்தல்; நிலைபெறச்செய்தல்; சேர்ப்பித்தல்; வளர்த்தல்; உடம்பிற்பூசுதல்; அழித்தல்; பரப்புதல்; தளவரிசையிடுதல்; ஒழித்தல்; வீழச்செய்தல்; எழுத்துகளின்ஒலியைத்தாழ்த்திக்கூறுதல்; கிடத்தல்; பறையறைதல்.

இழவு - இழப்பு; கேடு சாவு எச்சில் வறுமை

ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

அகற்றும் - அகற்றுதல் - நீக்குதல்; துரத்துதல் அகலப்பண்ணுதல், விரிவாக்கல்.

ஆகல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்; ஆக்கம்

ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை.

உற்ற - உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

முழுப்பொருள்
பொருளில்லாதவன் / அறிவில்லாதவன் அழிந்து கேடுப் பெற்று வறுமையில் துயரப்பட வேண்டும் என்று ஊழ் இருந்தால் அது அவ்வாறே நடக்கும். அதுப்போல ஒருவனுக்கும் அறிவு (ஞானம்) விரிவாகவேண்டும் என்று ஊழ் இருந்தால் அறிவு வளர்வதற்கான சூழல் அமைந்து நடக்கும்.

இங்கே ஊழ் என்ற சொல்லுக்கு தலைவிதி என்று பொருள் இருந்தாலும், ஊழ் என்ற சொல்லுக்கு குணம், முதிர்ச்சி, முடிவு என்ற பொருள்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் நாம் கேட வேண்டும் என்றாலும் அல்லது நாம் வளரவேண்டும் என்றாலும் அது நம்முடைய முடிவின் விளைவே ஆகும்.  இங்கே கூற வேண்டிய மற்ற ஒன்றும் இருக்கிறது. நாம் எடுக்கும் முடிவு நமது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் நாம் சேர்த்துக்கொண்ட தகவல்களின் அடிப்படையிலும் எடுக்கப்படும். ஆதலால் அது நாம் செய்த வினையின் பயனாகும். அதுவும் ஊழே.

"அறிவு இறைவன் வழங்கியது. அறிவினால் பயன் இல்லை" என்ற பிற்காலத்தவர் கருத்திற்கு வள்ளுவர் கருத்து மாறுபட்டது. முற்போக்கானது.

இக்குறளில் தீயூழ் அறிவழிக்கும்,  நல்லூழ் அறிவு விரிக்கும் என்று ஊழுக்கும் அறிவுக்கும் உறவு கூறவே செய்கிறார் திருவள்ளுவர். ஆனால் அறிவு விதியினால் தான் உண்டாகிறது திரிபடைகிறது என்று வள்ளுவர் முற்றுரிமை கொண்டாடவில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும். (கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்'என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை'என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும். இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

சாலமன் பாப்பையா உரை
தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.

Thirukkural - Management - Fate
When your fate is favorable to you to create wealth, you will amass wealth but when your fate is not favorable,  you will lose all your wealth. Kural 372 supports the existence of fate.

Adverse fate befools, and when time serves
A friendly fate sharpens the brain.

When your fate is positive, you may succeed because of that. When your fate is negative, you may fail 
in spite of your best efforts.

ஆகூழால் தோன்றும் அசைவின்மை

குறள் 371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

பொருள்
ஆகு - ஆக்கம், ஆதல்
ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை.
ஊழால் - தலைவிதியால்
தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.
தோன்றும் - உண்டாகும்
அசைவு - ஆட்டம்; சலனம், அசைதல் சஞ்சலம் சோர்வு, தளர்வு வருத்தம் உண்கை.
இன்மை - இல்லாமை; வறுமை ; உடைமைக்கு மறுதலை; அறு வகை வழக்கினுள் ஒன்று
கைப்பொருள் - கையிலுள்ள பொருள்.
போகு - போகும், விலகும்
ஊழால் - தலைவிதியால்
தோன்றும் - உண்டாகும்
மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.

முழுப்பொருள்
ஒருவருக்கு ஒரு பொருள் (அல்லது காரியம்) ஆக்கம் பெற வேண்டும் என்றால் அவனுக்கு அப்பொருளை (அல்லது காரியம்) அடைவதற்கான சலனமற்ற முயற்சி தோன்றும். அம்முயற்சியே அக்காரியத்தில் வெற்றிப் பெற செய்யும்.

அதுவே ஒரு பொருள் (அல்லது காரியம்) தன் கையை விட்டுப் போக வேண்டும் என்றால் அவனுடன் சோம்பல் கைக்கோர்த்துக்கொண்டு அவனை சோம்பேறியாக்கி இருக்கிற பொருளும் போய் விடும்.

தலைவிதி எப்படி இருப்பின் ஆயின், முயற்சி இருந்தால் அந்த பொருளை ஒருவரால் அடைய முடியும் அல்லது தக்கவைத்துக்கொள்ள முடியும். அதுவே சோம்பல் உற்று இருந்தால் அடைய வேண்டிய தலைவிதி இருப்பாயின் கையில் இருக்கும் பொருளும் நழுவும் அல்லது கிடைக்கவேண்டிய பொருளும் கிடைக்காது. 

அதுமட்டும் இன்றி திருவள்ளுவர் ஊழ் அதிகாரத்தை அறத்துப்பாலில் கடைசியில் வைத்து இருக்கிறார். பாயிரம், இல்லறம், துறவறம் ஆகிய அறத்திற்கு பிறகு, ஊழ் அதிகாரத்தை வைத்து இருக்கிறார் ஏனெனில் இல்லறம் மற்றும் துறவறம் ஆகியவற்றில் ஆற்றும் அறங்களில் பலன்களை ஊழாக ஒருவர் பெறுகிறார். அதுவே விதி. அப்பலன் என்பது பொருள், இன்பம் என பொருட்பால், காமத்துப்பால் பின்பு பேசுகிறார். ஆக நாம் என்ன அறம் செய்கிறோமோ அதுவே நல் ஊழாக அமையும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இரவிதன் புதல்வன்.... அவன்பாற் செல்வம்
வருவதோர் அமைவின் வந்தீர்” (கம்ப.மராமர.25)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, இருவினைப்பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதியென்பன ஒருபொருட்கிளவி. இது பொருள் இன்பங்கள் இரண்டிற்கும் பொதுவாய் ஒன்றனுள் வைக்கப் படாமையானும், மேற்கூறிய அறத்தோடு இயைபு உடைமையானும், அதனது இறுதிக்கண் வைக்கப்பட்டது.]

கைப்பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் - ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம். (ஆகூழ், போகூழ் என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு -மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும்; அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடிதோன்றும். இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது.

மு.வரதராசனார் உரை
கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை
பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.

Thirukkural - Management - Fate
When a person's fate is favorable to him to earn wealth, that fate will make him more enthusiastic and more energetic to earn more and gain many things, favors Kural 371. It is believed that rich becomes richer and poor  becomes poorer. Earning wealth becomes a virtuous circle when one's fate is favorable to him. When a person earns wealth, he becomes more enthusiastic to work more. As a result, he earns more and further he works more to earn more. He starts moving uphill confidently and becomes victorious in the end. 

Favoring fate induces energy
Depriving fate inertia

On the contrary, earning wealth becomes a vicious circle when a person's fate is not favorable to him. When a person loses wealth, he becomes dejected and stops to work more. As a result, he stops to earn more and further he stops to work more. He starts moving down the slope and becomes defeated in the end.

If a person's fate is not favorable to him, he will lose all the motivation, energy, and enthusiasm to earn or gain anything. Ultimately, laziness sets in him and that laziness will not help him to put his efforts. Failing to put in efforts leads to further failures. Failures in turn will make him more lethargic. Sloth is more dangerous than any other negative quality. That happens because of fate. That is why fate is more powerful.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
1) தமிழிலக்கியங்களில் ஊழ்
இவ்வினைகளின் வலிமைபற்றிச் சமணர்களால் எழுதப்பட்ட நாலடியார் என்னும் நூலில் பழவினை என்னும் பெயரில் ஓர் அதிகாரமும், திருக்குறளில் ஊழ் என்னும் பெயரில் ஓர் அதிகாரமும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழ் என்ற சொல்லுக்கு, “இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி’ எனப் பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கின்றார். அன்றியும் ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே கருத்துடைய சொற்கள் எனவும் பரிமேலழகர் குறிப்பிடுகின்றனர். ஊழை நினைத்தால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வராமலிருப்பது அரிது. ஊழின் வலியை வற்புறுத்துவதற்கென்றே எழுதப்பட்ட காப்பியமாகக்கூட அதனைக் கருதலாம். இப்பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யாத கோவலன், கள்வன் எனக் கருதப்பட்டுக் கொல்லப்படுகிறான். முற்பிறப்பிலே கோவலன் குற்றமற்ற ஒருவன் சொல்லப்படுவதற்குக் காரணமாய் இருந்தான். அத்தீவினையின் பலனையே இப்பிறப்பிலே அவன் அனுபவிக்கின்றான். கன்மம் என்பதும் ஊழ் என்பதும் இதுதான்.

2) ஊழும் முயற்சியும்
இப்பிறப்பிலே நமக்கு நிகழ்வன யாவும் முற்பிறப்பிலேயே விதிக்கபட்டுவிட்டன் என்றல் நாமாக முயன்று செய்வதற்கென எதுவுமில்லை. நாம் செய்வது, செய்யாமலிருப்பது எல்லாம் முன்வினைப்பயனானால், வாழ்வில் ஊக்கம், முயற்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடம் எங்கே என்ற வினா எழலாம். “விதியை நம்பாதவன் தான் தமிழன். விதியை நம்பினால் முயற்சிக்கு இடமில்லை” என்று இன்று சிலர் பிர்சங்கங்கள் செய்து திரிகின்றார்கள். இது விதி என்பது என்ன என்று சரியாக விளங்கிக்கொள்ளாமையால் ஏற்படும் அநர்த்தம். ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ற பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதே விதி என்ற சொல்லுக்குக் கருத்து. எனவே விதையை நம்பினால் தான் முயற்சிக்கு இடமுண்டு. நம்பாவிட்டால் தான் இடமில்லை. பழவினை பயனை நுகரும்போது நமது முயற்சிக்கும் இடமுண்டு என்பதைக் காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்கள் ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கியுள்ளார். பழவினையின் பயன், ஒருவன் கடன்பட்டிருத்தலை ஒத்தது. தொடக்கத்தில் அவனுடைய உழைப்பிலே பெரும்பகுதி அவனுடைய பழைய கடனைத் தீர்ப்பதிலேயே செலவாகிவிடும். தனது உழைப்பு முழுதும் கடனை அடைப்பதிலேயே செலவாகிவிடுகிறது என்று அவன் உழைக்காமல் இருக்கலமா? அங்ஙனம் இருப்பின், அவனுடைய கடன் மேலும் மேலும் பெருகும். அங்ஙமன்றி அவன் உழைக்கத் தொடங்கினால் எவ்வளவு அதிகம் உழைக்கிறானோ அவ்வளவுக்கு அவனுடைய கடனும் குறையும். பின், பணத்தை சேர்க்கவும் இடமுண்டு. அது போலவே, ஊழினால் துன்பப்படுகிறவன் முயற்சி செய்யாமலிருந்தால் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாவான். முயற்சி செய்தால் அதற்கேற்ப அவனது துன்பம் குறையும். 

நமது வாழ்வை ஒரு “பிறிட்ஜ்” விளையாட்டுக்கு ஒப்பிடுகிறார் பேராசிரியர் ராதாகிருஷ்ணன். இவ்விளையாட்டிலே நமக்குக் கிடைக்கும் சீட்டுகளைப்போல நமது பழவினையை வைத்துக்கொள்ளலாம். இச்சீட்டுகளை நாம் நம் விருப்பப்படி தெரிந்தெடுப்பதில்லை. சீட்டுகளைத் தெரிந்தெடுக்க நமக்கு உரிமை இல்லாவிடினும், அச்சீட்டுகளைக்கொண்டு வெற்றியோ, தோல்வியோ ஈட்டும் வாய்ப்பு நமக்கு உண்டு. இதைப் போலவே, பழவினையைத் தெரிந்தெடுக்க அதிகாரம் இல்லாவிடினும், அதனை வைத்துக்கொண்டு மேலே ஆக்குவதோ அழிப்பதோ யாவும் நம் கையிலேயே உள்ளது. 

ஊழிற் பெருவலி யாவுள

குறள் 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை.
ஊழின் - தலைவிதியின்

வலி - வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு.
பெருவலி - மிகு வலிமையுடையது; பெருநோவு.

உளதாதல் - உண்டாதல், தோன்றியிருத்தல்; இருத்தல்.
யா - யாவை
உள- யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால்

மற்று - மற்றப்படி
ஒன்று - மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்;
மற்று ஒன்று - வேறு ஒன்றும்
சூழினும் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.
தான்  - தன், தனது, acc. தன்னை, dat. தனக்கு, சுயம்
முந்துதல் - மேலெழுதல், விரைதல், எதிர்ப்படுதல், காலம் இடம் முதலியவற்றால் முற்படுதல், முதன்மையாதல், சிறத்தல்

முழுப்பொருள்
நமது முன் ஜென்ம தீ வினைகளின் பயனை நாம் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம் - அதனை ஊழ் எனலாம். நாம் பிறக்கும் பொழுதே நமது வாழ்க்கை எழுதப்பட்டு இருக்கும் - அதனை தலைவிதி என்பர் அல்லது விதி என்பர் - அதாவது ஊழ். பொதுவாக இந்த ஜென்மத்தில் என்ன என்ன இன்ப துன்பங்களை சந்திக்க வேண்டும் என்று வரையருக்கபட்டு இருக்கிறதோ அதுவே ஊழ்.

இந்த ஊழ் என்பது மிகுந்த வலிமையானது. அது கொடுக்கும் சோதனைகளும், துன்பங்களும், சஞ்சலங்களும், வலிகளும் மிக மிக கொடுமையானவை. அதனால் தான் திருவள்ளுவர் ஊழிற் பெருவலி என்கிறார். ஊழ் கொடுக்கும் மிக பெரிய வலி. இத்தகைய வலி என்பது எவ்வாறு எல்லாம் உண்டாக வேண்டும் என்று இருக்கிறதோ அவ்வாறு எல்லாம் உண்டாகிவிடும். அதனை தடுக்க முடியவே முடியாது.

என் விதியை நான் மாற்றி விடுவேன் என்று வரிஞ்சிக்கட்டிக்கொண்டு மாற்ற முயன்றால் நம் விதி நமக்கு முன்பு சென்று இன்னும் அதிக இன்னல்களை கொடுக்கும்.

ஆதலால் விதியை வெல்ல முடியாது - இது மிக மேலோட்டமான அர்த்தம் ஆகும். சற்று உள்ளே செல்வோம்.

இங்கே நான் எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைகள் தொகுதியில் இருந்து  பெருவலி [பெருவலி - 1, பெருவலி - 2] என்கிற  சிறுகதையில்  இருந்து நான் பெற்றுக் கொண்ட பாடங்களை துணுக்குகளாக அப்படியே கத்திரி போட்டு இங்கு சேர்த்துள்ளேன்.

[பெருவலி சிறுகதையில் இருந்து] ஜெயமோகன், இப்ப வலி ஒரு கைக்குழந்தை மாதிரி ஆயிட்டுது. எப்ப பாத்தாலும் மூக்கு ஒழுகிண்டு நைநைன்னு அழுதுண்டு இடுப்பிலே ஒக்காந்திருக்கு. ராத்திரியிலே திடீர்னு முழிச்சுண்டு படுத்தி எடுத்திரும். ஆனா இது என்னோட வலி. என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அதுமேலே ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துண்டு போறது. வளத்து ஆளாக்கிருவோம், என்ன?

[ராஜேஷ்] துன்பம் என்பது வாழ்வில் வந்துக்கொண்டே இருக்கும். அதனை கண்டு வருந்தாமல், நேரத்தை வீணாக்காமல், மனதை குழப்பிக்கொள்ளாமல் அதனை ஏற்றுக்கொண்டு முன்னே எப்படி செல்வது என்று பார்க்கவேண்டும். குழந்தை ஒரு பெரியவனாக பல வருடங்கள் ஆகும். ஒரு குழந்தையை முதலில் கஷ்டங்களை கொடுக்கும். பின்பு பழகிவிடும்.

[பெருவலி சிறுகதையில் இருந்து] எத்தனை ஆயிரம் பறவைகள் பறந்தாலும் வானத்திலே ஒரு தடம்கூட இல்லேன்னு ஒரு கவிதை இருக்கே, அதைமாதிரி

[ராஜேஷ்] வாழ்வில் நாம் எவ்வளவு துன்பங்கள் சந்தித்தாலும் பின் பார்க்கும் பொழுது அந்த துன்பத்தின் தடங்கள் எல்லாம் தெரியாது.

[பெருவலி சிறுகதையில் இருந்து] நல்ல ஆரோக்கியம் இருந்தாலே போறது கஷ்டம்’ என்றேன் ‘நல்ல ஆரோக்கியமிருக்கிறவங்க போறது கஷ்டம்தான். அவங்களுக்கு போய்ட்டு வரணும்னு இருக்கும். திரும்பி வரவேணாம்னு நினைச்சா எங்க வேணுமானாலும் போய்டலாம்…

[ராஜேஷ்] ஐயோ நமக்கு மட்டுமே இப்படி ஒரு பிரச்சினை வந்து விட்டதே. நன்கு படித்தவர்களாலும், நன்கு வசதியாக இருப்பவர்களாலும் கூட இதனை கடக்க முடியவில்லை. என்னால் எப்படி முடியும் என்று எல்லாம் நினைக்க கூடாது. ஏன் எனில் நாம் ஒரு செயலை செய்யும் பொழுது முடிவு இனிதாக இருக்கவேண்டும் என்று நினைத்தால் வழியில் சிறு துன்பம் வந்தாலும் நமக்கு முடிவின் மீது ஐயம் வரும். ஆனால் அதுவே முடிவைப் பற்றிய கவலை இல்லாமல் சென்றால் எதிரே வரும் அனைத்து இடர்களையும் கையாலலாம்.

[பெருவலி சிறுகதையில் இருந்து] வலி இருக்கு இல்லசார்?’ அபத்தமான, ஒருவேளை குரூரமான, கேள்வி. ஆனால் அதைத்தவிர அங்கே என்ன பேசுவது? ‘ஊழிற்பெருவலி யாவுள?’ என்று சொல்லி உதடுகோண புன்னகை செய்தார். அவரை கோமல் என்று அகம்நம்பியது அச்சிரிப்பைக் கண்ட பிறகுதான். ‘பெருவலின்னு சொல்றார் பார்த்தீங்களா? தமிழிலே இப்டி நெறைய சிக்கல்கள் இருக்கு. வலிமைக்கும் வலிக்கும் என்ன சம்பந்தம்? வலி இல்லென்னா வலிமை கெடையாதா? இல்ல வலிமை ஜாஸ்தியா இருந்தா வலி ஜாஸ்தியா? ஆனா அந்த வார்த்தை பிடிச்சிருக்கு. பெருவலி…நெறையவாட்டி அதைச் சொல்லிட்டே இருக்கேன்..

[ராஜேஷ்]  வலியில் இருந்து வலிமை பிறக்கிறது (வலி இல்லாமல் வலிமை இல்லை என்று பொருள் அல்ல). ஆதலால் இவ்வலியினை வலிமையடைய ஒரு கருவியாகவும் கருதலாம். வாழ்வில் பல பேர் தனக்கு வந்த இன்னல்களையும் சவால்களையும் முன்னேற ஒரு வாய்ப்பாக கருதி முன்னே சென்று இருக்கிறார்கள். இன்னலை இன்னலாக பார்த்தவர் துவண்டு அங்கேயே இருந்து இருக்கிறார்.

அதுமட்டுமின்றி மெய் உணர வலியும் ஒரு வழியே. இருளின் உச்சத்தில் ஒளி இருப்பது போல. கோடையின் உச்சத்தில், அனல் காற்றின் உச்சத்தில் மழை இருப்பது போல, வலியின் உச்சத்தில் மெய் இருக்கிறது. 

[பெருவலி சிறுகதையில் இருந்து] முனகி முனகிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக்கொண்டிருந்தார். பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள நினைத்தேன். ஆனால் அவர் பேசுவதை விரும்பினார் என்று தோன்றியது. ‘வலிமரப்புக்கு ஊசி ஒண்ணும் போடலையா?’ ‘எல்லாம் போட்டாச்சு. மடைன்னா அடைக்கலாம். உடைப்புன்னா ஒண்ணும் பண்ண முடியாதுல்ல’ அவரது தஞ்சைப் பின்னணி எப்போதாவதுதான் வார்த்தைகளில் வரும் 

[ராஜேஷ்] நாம் வாழ்வில் ஒவ்வொரு வலியினை அடைக்க முற்பட்டால் அது முட்டாள் தனமாகும். ஏன் என்றால் வலிகலெல்லாம் மடையல்ல அவை உடைப்பு. அவற்றை அடைக்க முடியாது.

[பெருவலி சிறுகதையில் இருந்து]  உயரம்தான் இமயமலை. காலடியிலே இருந்து இறங்கி சரசரன்னு கிலோமீட்டர் கிலோமீட்டரா போய்ட்டே இருக்கிற பாதாளம் கூட பெரிய உயரம்தான், என்ன தலைகீழா நிக்கிற மாதிரி யோசிச்சுப்பாக்கணும். மனுஷனை சின்னச்சின்னதா எறும்புகளா ஆக்கற உயரம். அந்தி மாதிரி எப்பவும் ஒரு கருக்கிருட்டு. மலையோட இடுப்பில சுத்தின அர்ணாக்கொடி மாதிரி பாதை. கொஞ்ச தூரம் போனதும் பக்கவாட்டிலே இருந்து பெரிய மலை அப்டியே திரும்பி கண்முன்னாடி எழுந்திரிச்சு வந்து நின்னுட்டிருக்கும். இதோ இருக்கேன்னு…பிரம்மாண்டமான பூதம். பூதகணங்கள் தலையிலே வளைவா வானத்தை தாங்கிண்டு நிழலும் இருளுமா நீலமும் கருப்புமா ஒக்காந்திண்டிருக்கு. ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டு தியானத்திலே இருக்கிற மாதிரி.

[ராஜேஷ்]  வலி என்பது இமயமலையின் உயரம் போன்றது. நாம் எவ்வளவு முன்னே சென்றாலும் உயரம் குறைந்தது போன்று தோன்றாது. அது இன்னும் வலியினையே தரும். ஆதலால் இமயத்தின் உயரத்தை பார்த்தால் ஏற முடியாது. வலியின் வலியை பார்த்தால் வாழ முடியாது.

ஒரு சிறிய பொடி கல்லினை கண் அருகே வைத்துப்பார்த்தால் அது பாறைப்போலவே தெரியும். ஆதலால் அதனை தூரத்தில் வைத்து பார்க்கவேண்டும்.

[பெருவலி சிறுகதையில் இருந்து] அந்த மலை ஏறுற வழி முழுக்க வடநாட்டுக்கார பக்தர்ங்க கைதட்டி ஆடிட்டே பாடிட்டே வர்ரதை கவனிச்சப்ப நானும் அதேமாதிரி ஆடிட்டே ஏறணும்னு நெனைச்சேன். ஆனால் அந்த வலி இல்லாம இருந்தாக்கூட ஆடியிருப்பேன்னு சொல்ல முடியாது. வலி இல்லாம இருந்திருந்தா மலைக்கு வந்திருப்பேனாங்கிறதே சந்தேகம்தான். அப்ப ஆடணும்ணு தோணிச்சு. ஆனா என்னை அந்த உடம்புக்குள்ளே இருந்து வெளியே கொண்டுவர முடியலை. அப்ப பீதி வந்திட்டுது. இதுக்குள்ளே மாட்டிண்டு இங்கேயே கெடக்கப்போறானா? பொறியிலே மாட்டிண்டு பொறியோட மட்கி அழுகிப்போற காட்டெலி மாதிரி…

[ராஜேஷ்] நாம வாழ்க்கையில் வலியினை சந்திப்பதென்பது ஒரு பேரனுபவத்திற்கான ஆயுத்தமாகக்கூட இருக்கலாம். நாம் எங்கேயும் செல்லலாம். ஒரே இடத்தில் இருந்தால் நாம் எங்கேயும் செல்ல முடியாது. வலி இருக்கிறதே என்று அங்கேயே இருந்தால் அங்கேயே இருக்க வேண்டியது தான். அது ஒரு நரகமாவே இருக்கும். முன்னே செல்ல வேண்டும். அது நல்லதில் முடியுமா என்று சொல்ல முடியாது. ஆனால் நல்லதில் முடிய வாய்ப்பு இருக்கிறது. 

[பெருவலி சிறுகதையில் இருந்து] ‘சாயங்காலம் மூணு மூணரைதான் இருக்கும். ஆனா அங்க நேரமே கெடையாது. ஏன் காலமே கெடையாது. மலைச்சிகரங்களுக்கும் காலத்துக்கும் என்ன சம்பந்தம்? அதெல்லாம் அப்டியே காலாதீதமா ஒக்காந்திண்டிருக்கு. சீக்கியர்கள் அவங்க கடவுளை சத்ஸ்ரீ அகால்னு கும்பிடுறாங்க. அகாலம். அகால். என்ன ஒரு வார்த்தை. அகாலத்திலே யாராச்சும் காலமாக முடியுமா என்ன? காலா சற்று என்னருகே வாடா உன்னை உதைக்கிறேன். ஏன் வலிக்கவே இல்லை? வலிங்கிறது வாழ்க்கை. வாழ்க்கைமேலே படியற மரணத்தோட அதிர்வு. வாழ்வும் மரணமும் இல்லாத எடத்திலே ஏது வலி.

[ராஜேஷ்] வாழ்வும் மரணமும் இல்லாத இடத்தில் வலி இல்லை. வாழ்வு இருந்தால் மரணம் இருக்கும். இவை இருக்கும் இடங்களில் வலி இருக்கும்.


[பெருவலி சிறுகதையில் இருந்து] ’அங்க நின்னுட்ட்டிருந்த எம்பது பேரும் கண்ணிர் விட்டுட்டிருந்தாங்கன்னு சொன்னா நீங்க நம்பமாட்டீங்க. ஏன் கண்ணீர்? துக்கமா துக்கம் வழிஞ்சு போன ஆனந்தமா? ஒவ்வொரு மனசும் ஒரு பிரபஞ்சம். அங்கே ஒவ்வொரு கடவுள். ஒவ்வொரு சொற்கமும் நரகமும். ஆனா பொதுவா எல்லாருமே மனுஷங்கதானே. சின்னப்பூச்சிங்க ஒரு கூழாங்கல்லிலே ஒண்டிக்கிட்டு நிக்கிற மாதிரி. இவ்ளவு அற்பமா இவ்ளவு கேவலமா வாழ விதிக்கப்பட்டிருந்தாலும், இவ்ளவு துக்கத்தையும் வலியையும் அனுபவிச்சு அர்த்தமில்லாம சாக விதிக்கப்பட்டிருந்தாலும் யாரோ மானுடம் மேலே இந்த மகத்தான மணிமுடிய சூட்டியிருக்காங்களே! தாங்க முடியலை. அந்த மகத்தான கௌரவத்தை குடுத்த அது எதிர்பார்க்கிறத்தான் செய்றோமா?

’அய்யய்யோ அய்யய்யோன்னு அகம் கூப்பாடு போடுது…கூசி சிலுத்துட்டுது உடம்பு. என்னென்னமோ கீழ்மையெல்லாம் ஞாபகம் வந்து மனசு கொந்தளிக்குது. கீழ்மைகளைப்பாத்து பாத்து கண்புளிக்கிற ஒரு துறையிலே இருந்தவன் நான் மோகன். பெரியவங்களோட கீழ்மை. சிறியவங்களோட கீழ்மை. இத்தனை கீழ்மைகளுக்கும் மேலே இந்த கிரீடத்தை தூக்கி வச்சு மனுஷனை ஆசீர்வதிச்ச முட்டாள் யாரு? மனுஷன் எத்தனை மகத்தான வார்த்தை. சொல்லிட்டான். ஆனா, நான் எட்டு பேராலே ராவெல்லாம் கற்பழிக்கப்பட்ட பன்னிரண்டு வயசுப்பொண்ண கைத்தாங்கலா அவ அம்மா தூக்கிண்டு போறத பாத்திருக்கேன் மோகன். எட்டு பேரும் பொண்களை பெத்த அப்பாக்கள். ஈவிரக்கமில்லாம ஏமாத்தப்பட்ட பொண்கள் நின்னு கதறுறத பாத்திருக்கேன். அநீதிகளை விழுங்கி விழுங்கி வயிறே ஆசிட்டால நிறைஞ்சுடுத்து


’கபோதி, உனக்கெதுக்குடா முதுகெலும்பு ?. நீ நின்னு எரிஞ்சிருக்க வேண்டிய எடங்களிலே எல்லாம் குளுந்து கல்லா நின்ன கோழை தானேடா? அன்னிக்கு உன் வாயிலே எழுந்த சாபத்தையெல்லாம் துப்பாம உள்ளுக்குள்ள சேத்து வச்சிட்டே. எல்லாம் படிஞ்சு உன் முதுகெலும்பு உளுத்துப்போச்சு. உப்பு பட்ட இரும்பு மாதிரி துருப்பிடிச்சு தொங்கி போச்சு. இந்தா, என் முதுகெலும்பு ஒண்ணை ஒண்ணு கவ்விண்டிருக்கிற நூறு தேளு மாதிரி இருக்கு. நூறு கொடுக்கு. நூறு வெஷம்… என் மேலேயா தூக்கி வச்சிருக்கே இந்த பொற்கிரீடத்த? வெளையாடுறியா? கேலி பண்றியா? நான் பட்ட சிறுமைக்குமேலே இன்னும் சிறுமைப்பட்டு கூசி புழுவா மலமா இங்க நிக்கணும்னு நெனைக்கறியா?

[ராஜேஷ்]  நாம் அறச்சீற்றத்துடன் இருந்து இருக்க வேண்டிய சூழ்நிலைகளில் அறம் அற்று நமக்குள் அடக்கிக்கொண்டவையே, நம் மனசாட்சியாக நம்முள் இறங்கி வலியாக உருவெடுத்து, சிலகாலம் கழித்து நோயாக (புற்றுநோய்)  தாக்கி இருக்கிறது. அதுவே ஊழ்.

மேலும்: பாரதியார் சொல்கிறார்

விதி மதி இரண்டில் எது வலியது என்பது பற்றிய தன் கருத்தைச் சுருக்கமாக அழகுத் தெய்வம் என்னும் பாடலில் கூறுகிறார்,

காலத்தின் விதி மதியை வெல்லுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியாமென்றாள்.

ஆம். மதியைத் தெளிவாக வைத்திருந்தால் விதி வசத்தால் துன்பம் நேர்கையில் அதைப் போக்கிக் கொள்ளச் செயல்படத் தூண்டும். முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற மொழிப்படி செயலுக்கு விளைவு நிச்சயம் உண்டு என்ற விதியின் நி்யமத்தைச் சாதகமாகப் பயன்படுத்தித் துன்பத்திலிருந்து விடுதலை அடையலாம்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க்கின்று காப்பாரார்” (திருவாய் 5.1:1)
“எம்மா பாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்” (திருவாய் 7)
“விதியது வலியினும் இசைந்தார்” (கம்ப.மந்திரப் 33)
“விதியது வலியினானும்” (கம்ப.மாரீசன் 86)
“வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ” (கம்ப.சடாயு 15)
“ஊழ்முறையல்லது வலியதொன் றில்லென” (கம்ப.ஊர்தேடு 205)

“பொறியின் வகைய கருமம் அதனால்
அறிவினை யூழே அடும்” (கம்ப.நகர்நீங்கு 163)

“சூழ்வினை நான்முகத் தொருவற் சூழினும்
ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ” (கம்ப.சடாயு 193)

“விதிவயம் என்பதை மேற்கோ ளாவிடின்
மதிவலி யான்விதி வெல்ல வல்லமோ” (கம்ப.சடாயு 194)

“பிரிவுசெய் துலகெலாம் பெறுவிப்பான்தலை
அரிவுசெய் விதியுனுக் கரிதூண் டாகுமோ” 
“அரிது போகவோ விதிவலி கடத்தல்என் றஞ்சி” (கம்ப.காட்சி.9)

யாதனா யக்ஞம் என அதை சொல்கின்றனர் முனிவர். ஒவ்வொரு உடலணுவிலும் பெருவலியை நிறைத்துக்கொண்டு, ஒவ்வொரு காலத்துளியையும் துயரென்றே உணர்ந்தபடி, கண்ணீரும் அலறலுமாகச் செய்யும் வேள்வி அது. நோயுற்ற உடல்கள் அதை இயற்றுகின்றன. நலிந்து இறக்கும் உயிர்கள் அதனூடாகவே விடுதலை பெறுகின்றன.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
1) தமிழிலக்கியங்களில் ஊழ்
இவ்வினைகளின் வலிமைபற்றிச் சமணர்களால் எழுதப்பட்ட நாலடியார் என்னும் நூலில் பழவினை என்னும் பெயரில் ஓர் அதிகாரமும், திருக்குறளில் ஊழ் என்னும் பெயரில் ஓர் அதிகாரமும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழ் என்ற சொல்லுக்கு, “இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி’ எனப் பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கின்றார். அன்றியும் ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே கருத்துடைய சொற்கள் எனவும் பரிமேலழகர் குறிப்பிடுகின்றனர். ஊழை நினைத்தால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வராமலிருப்பது அரிது. ஊழின் வலியை வற்புறுத்துவதற்கென்றே எழுதப்பட்ட காப்பியமாகக்கூட அதனைக் கருதலாம். இப்பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யாத கோவலன், கள்வன் எனக் கருதப்பட்டுக் கொல்லப்படுகிறான். முற்பிறப்பிலே கோவலன் குற்றமற்ற ஒருவன் சொல்லப்படுவதற்குக் காரணமாய் இருந்தான். அத்தீவினையின் பலனையே இப்பிறப்பிலே அவன் அனுபவிக்கின்றான். கன்மம் என்பதும் ஊழ் என்பதும் இதுதான்.

2) ஊழும் முயற்சியும்
இப்பிறப்பிலே நமக்கு நிகழ்வன யாவும் முற்பிறப்பிலேயே விதிக்கபட்டுவிட்டன் என்றல் நாமாக முயன்று செய்வதற்கென எதுவுமில்லை. நாம் செய்வது, செய்யாமலிருப்பது எல்லாம் முன்வினைப்பயனானால், வாழ்வில் ஊக்கம், முயற்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடம் எங்கே என்ற வினா எழலாம். “விதியை நம்பாதவன் தான் தமிழன். விதியை நம்பினால் முயற்சிக்கு இடமில்லை” என்று இன்று சிலர் பிர்சங்கங்கள் செய்து திரிகின்றார்கள். இது விதி என்பது என்ன என்று சரியாக விளங்கிக்கொள்ளாமையால் ஏற்படும் அநர்த்தம். ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ற பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதே விதி என்ற சொல்லுக்குக் கருத்து. எனவே விதையை நம்பினால் தான் முயற்சிக்கு இடமுண்டு. நம்பாவிட்டால் தான் இடமில்லை. பழவினை பயனை நுகரும்போது நமது முயற்சிக்கும் இடமுண்டு என்பதைக் காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்கள் ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கியுள்ளார். பழவினையின் பயன், ஒருவன் கடன்பட்டிருத்தலை ஒத்தது. தொடக்கத்தில் அவனுடைய உழைப்பிலே பெரும்பகுதி அவனுடைய பழைய கடனைத் தீர்ப்பதிலேயே செலவாகிவிடும். தனது உழைப்பு முழுதும் கடனை அடைப்பதிலேயே செலவாகிவிடுகிறது என்று அவன் உழைக்காமல் இருக்கலமா? அங்ஙனம் இருப்பின், அவனுடைய கடன் மேலும் மேலும் பெருகும். அங்ஙமன்றி அவன் உழைக்கத் தொடங்கினால் எவ்வளவு அதிகம் உழைக்கிறானோ அவ்வளவுக்கு அவனுடைய கடனும் குறையும். பின், பணத்தை சேர்க்கவும் இடமுண்டு. அது போலவே, ஊழினால் துன்பப்படுகிறவன் முயற்சி செய்யாமலிருந்தால் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாவான். முயற்சி செய்தால் அதற்கேற்ப அவனது துன்பம் குறையும். 

நமது வாழ்வை ஒரு “பிறிட்ஜ்” விளையாட்டுக்கு ஒப்பிடுகிறார் பேராசிரியர் ராதாகிருஷ்ணன். இவ்விளையாட்டிலே நமக்குக் கிடைக்கும் சீட்டுகளைப்போல நமது பழவினையை வைத்துக்கொள்ளலாம். இச்சீட்டுகளை நாம் நம் விருப்பப்படி தெரிந்தெடுப்பதில்லை. சீட்டுகளைத் தெரிந்தெடுக்க நமக்கு உரிமை இல்லாவிடினும், அச்சீட்டுகளைக்கொண்டு வெற்றியோ, தோல்வியோ ஈட்டும் வாய்ப்பு நமக்கு உண்டு. இதைப் போலவே, பழவினையைத் தெரிந்தெடுக்க அதிகாரம் இல்லாவிடினும், அதனை வைத்துக்கொண்டு மேலே ஆக்குவதோ அழிப்பதோ யாவும் நம் கையிலேயே உள்ளது. 


பரிமேலழகர் உரை
மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் , தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள? ('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஊழின் பெருவலி யா உள - ஊழைப்போல மிகுந்த வலிமையுள்ளவை வேறு எவையிருக்கின்றன ? ; மற்று ஒன்று சூழினும் தான் முந்து உறும் - அதை விலக்குதற்கு வேறொரு வழியை ஆய்ந்து எண்ணினும், அவ்வழியையே தனக்கும் வழியாகக்கொண்டு அது அவ்வெண்ணத்தின் முற்பட்டு வந்து நிற்கும்.

உறுவலி, மதவலி என்பனபோலப் பெருவலி என்பது ஆகுபெயர். சூழினும் என்பது எச்சவும்மை. 'சூழினுந்தான் முந்துறும்' என்றமையால், சூழ்ச்சியை நிறைவேற்றுதல் ஒருகாலுங் கூடா தென்பதாம். சூழ்தலாவது நாற்புறமும் வளைந்து முற்றுகையிடுதல்போலப் பகைவர் ஒருவழியாலும் தப்பமுடியாவாறு தீரஎண்ணுதல். இங்குப் பகை ஊழ்.

மணக்குடவர் உரை
ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள? பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்.

மு.வரதராசனார் உரை
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.

பொருள்: ஊழின் பெரு வலி யா உள - விதியைப் போலப் பெரிய வலியையு டையவை எவை உள்ளன? மற்று ஒன்று சூழினும் தான் முந்து உறும் - விதியை மாற்றும் ஒன்றை எண்ணினும் அவ் விதியே முற்பட்டுப் பொருந்தும்.

அகலம்: ஒருவன் விதைத்த வித்தின் விளைவை விட்டு வேறு வித்தின் விளைவை அடைய முடியாதது போல, ஒருவன் செய்த வினையின் பயனை விட்டு வேறொரு வினையின் பயனை அடைய முடியாதென்றார். அஃதாவது, ஒருவன் ஒரு வினையைச் செய்து அதன் பயன் அவனைப் பொருந்தும் காலையில் அப் பயனை மாற்றுதற்கு அவன் விரும்பின், அவனால் அதனை மாற்ற முடியாது. அப் பயனை மாற்றத் தக்க வேறு ஒரு வினையைச் செய்து, அதன் விளைவாகிய வேறு ஒரு விதியை ஆக்கி, அதனால் அப் பயனை மாற்ற வேண்டும். வலியை யுடையவற்றை வலி என்றார்.

கருத்து: விதியைப்போல வலி யுடையது வேறு யாதொன்றும் இல்லை.

Thirukkural - Management - Fate
There have always been debates on fate and fatalism. There are different schools of thoughts on the existence of fate and the impact of fate on one's life. There are researches on the role of luck and luck factors. “Fate,” according to Oxford Advanced Learner's Dictionary, “is the power believed to control all events in a way that cannot be resisted.” Valluvar has written about the existence of fate. From the chapternumber 62‘Manliness' assures that a person with determination can defeat fate.

Is there anything stronger and more powerful than fate? If you try to find out strategies, methods, and techniques to fight your fate, your fate will interfere with your attempt and spoil your ability to fight your fate, fatalistically mourns Kural 380.

What is stronger than fate which foils
£very ptoy to counter it.

Your fate acts before you act and that is fate. Fatalism is to accept that a person is a puppet in the hands of fate. The reader may have many personal experiences to agree or disagree with this thought.

English Meaning - As I taught a kid - Rajesh
Is there anything mightier than ool/karma? It remains dominant despite all plans devised to counter it. Ool or karma, in an Indian context as per Hindu, Jain and Buddhist traditions, and as rightly put in OED, is the sum of a person’s actions in this and previous states of existence, viewed as deciding their fate in future

We are today because of the sum of our actions in this and previous states of existence. When we are born itself, our life(birth chart) would have been written. In general, ool is whatever good and bad that we have to go through in this current life/existence. 

Ool/karma is mightier. It gives lots of challenges, pain, difficulties, distractions, dilemma etc. Hence, it is very painful. No one can stop these pain and difficulty. If someone says he will change it, most probably he will end up inviting more pain only.

If everything is pre-written, Does it mean we should not try and persevere? Certainly we should persevere. Because sum of our current actions would reflect in next existence. For e.g. due to previous birth's karma, a person might be born with lot of debt (inherited from his parents). If a person doesn't do try and do his work, this debt would increase in the form of interests, penalties etc. However, if a person put his effort, during the initial years, most of his effort will go in repaying the debt and reducing it. Slowly, his interest also comes down and he can pay back even faster. He can save more and invest more for the future. Whereas if he didn't do work at all, he would have gone even worse.

Also, we can compare our life to fridge card puzzle game (or another game Rummy). We can't choose our cards. Whatever cards can be considered as a result of our previous actions. However, without giving up, if one plays the game consistently without giving up, one has the chance to win as well. At least, we can try to be in a better position than the worst of not doing anything. 

In Jeyamohan's short story பெருவலி / Peru-vali (Great pain), there is lots of discussion around pain, ool/karma. Some of it are paraphrased here.

Pain/difficulties will keep coming in life. Without looking into (without worrying about it), without wasting our time thinking about it, without confusing our mind with random futile thoughts, we should accept what we have and try to improve and progress. A kid takes many years to become an adult. Initially a kid will give lots of pain. But, we will get used to it. Later, the kid will do better.

In life, we might see many pain/difficulties. But, at a later point, when we look back, we won't see any footmarks of pain.

When we do our work, we should not expect the end to be happy. Because if we get even a small difficulty or pain the middle, then we will doubt over the result. That doubt itself will turnout into worry. If we don't have worries, we can face our hurdles and cross them. 

Strength comes out of pain when we face it. That is why we can choose this pain as a tool to progress. If we see the challenge as a pain, then they will dwell, sulk, tire, stagnate and give up there itself.

Remember, at the end of darkness, there is light. At the end of summer there is rain.

Remember, if we try stopping all the pain/challenges, then it is stupidity. Because pain are not holes that can be fixed. They are openings cannot be shuttered like a dam.

Pain is like a Himalayan / Mount Everest height. However progress we have made, we won't get a feeling that height has reduced. We might endure more pain. So, if we are going to see the height, we can't climb. If we start measuring our pain, we can live. 

A small pebble went kept near our eyes will seem like a huge rock. We can keep it in far.

The pain we are facing could be a tool for a bigger experience in life. If we stagnate, we cannot go anywhere in the life. If we wonder about pain and dwell about it, we will stagnate and it will end up as a hell. We have to move forward. We cannot say it will end positively or successfully. But there is a chance for it.

So, if we understand all these, keep our mind with clarity, we can face the challenges/pain in life. We can reduce the pain. Our efforts will give its due results. We can even attain moksha.

Questions that I ask to the kid
Is there anything stronger than karma? Why? If everything is predestined, should we give up?  Explain with an easy to understand example.

இருவேறு உலகத்து இயற்கை

குறள் 374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளிய ராதலும் வேறு.
[அறத்துப்பால், ஊழியில், ஊழ்]

பொருள்
இரு - iru   adj. இரு-மை. 1. Great,spacious, vast; பெரிய மாயிரு ஞாலம் (குறள், 999).2. Black; கரிய. இருமலர்க் குவளை யுண்கண் (சீவக.1171).  

இருமை, duality, the two births, the present and future life.

இரு - பெரிய; கரிய; இரண்டு

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

இருவேறு - இரண்டு வேறு ஊழ் பயன்கள் இருப்பது.

ஊழ் - நியதி.

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

உலகத்து - உலகத்தினுடைய.

இயற்கை – இயல்பானதன்மை; வழக்கம் இலக்கணம் நிலைமை கொள்கை

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்

திரு வேறு – இதில் செல்வம் சேருவதற்கான விதி என்பது ஒன்று.

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

தெள்ளியர் - தெளிந்தஅறிவுடையவர்.

ஆதலும் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

தெள்ளியராதலும் வேறு – அறிவுடையராக இருத்தல் என்பது மற்றொரு விதமாய விதி.

முழுப்பொருள்
நாஞ்சில் நாடன்: உலகத்தின் இயற்கை இரண்டு வகையானது. செல்வம் என்பது ஒன்று, தெளிவு என்பது மற்றொன்று.

அறிவுடமையே பொருள் ஈட்டுவதற்கும் செல்வம் சேருவதற்குமான காரணம் என்பது எல்லோருக்கும் அறிந்தவொன்று. ஆனால் அறிவுள்ளவர்களிடல் திரு இல்லாததும், திரு உள்ளவர்களிடம் அறிவு இல்லாததும், இரு வேறு விதமான உழ்வினையால்தான் என்பதும் இவ்விதம் ஊழ் பொதுவாக அறிந்த கோட்பாடுகளுக்கு மாறாக இயங்குவது இயற்கையானது என்றும் கூறுகிறது இக்குறள். இக்குறளும் ஊழின் பெருவலி யாவுள என்பதை வலிந்து அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்நிலையை எடுத்துக்காட்டும் பழமொழிப் பாடலொன்று இவ்வாறு கூறும்:
“உரைசான்ற சான்றோர் ஒடுங்கி யுறைய 
நிரையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்” (பழமொழி.125)

நாலடியாரில் நன்றியில் செல்வம் என்னும் அதிகாரத்தில், வரும் இரண்டு பாடல்கள் இக்குறளின் கருத்தையொட்டி வருகின்றன.
புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே
உணர்வ துடையா ரிருப்ப – உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே
பட்டும் துகிலும் உடுத்து. (நாலடி 264)

இப்பாடலின் கருத்து: 
கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறி முள்ளியும் கத்தாழையும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர்.  இப்பாடலின் உள்ளுரைக் கருத்து: கறி முள்ளியும் கத்தாழைச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்துவன. அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மையும் இல்லை என்னும் பாடல் இது.

நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம் – தொல்லை
வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில். (நாலடி 265)

இப்பாடலின் கருத்து: 
இவ்வுலகில் நல்ல அறிவுடையோரும் நல்ல குணமுடையோரும் வறியராக இருப்ப, அவ்வறிவும் குணமும் அற்ற கீழோர் செல்வராக இருப்பதற்குக் காரணம் பழைய வினைப் பயனேயன்றி, எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் வேறு காரணம் இல்லை. அறிவொழுக்கம் அற்றவர் செல்வராக வாழ்வதற்குக் காரணம் ஊழ்வினையே! ஆயினும் அவரிடம் இரக்கத் தன்மையின்மையால், செல்வம் பெற்றும் ஒரு பயனும் இல்லை என்பது கருத்து.

மேலும் : அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.

மணக்குடவர் உரை
செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.

மு.வரதராசனார் உரை
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

சாலமன் பாப்பையா உரை
நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.


அருளியலும்.. பொருளியலும்..
நாம் இப்புவியில் வாழ இன்றைய தினம் அடிப்படைதேவை பணம் என்றால் மிகையொன்றுமில்லை எனக் கருதுகிறேன். அன்றாட வாழ்வில் நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, பண்டமாற்றுமுறை மறைந்து உழைப்பின் குறியீடாக, மதிப்பாக உள்ள அந்த பணத்தை/பொருளைச் சம்பாதிக்கும் முயற்சியே,  நமது அன்றாட வாழ்க்கை/நடவடிக்கைகள், பணிகள்.

இதன் நிமித்தமாக அன்றாடம் சகமனிதர்களுடன் உறவாட வேண்டியதாக இருக்கிறது. அந்த முயற்சியில் தெரிந்தோ, தெரியாமலோ நம்மால் அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

இது தவிர்க்கப்படவேண்டியதா, இல்லை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானா என சிந்தனை நமக்கு வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்கொள்ளும் துன்பம், பிரச்சினைகளுக்கு காரணம் என்ன?, நம்மால் பிறருக்கு துன்பம் எனில் பிறரால் நமக்கு துன்பம் என்பதும் சரிதானே:) அப்போதுதான் இது என்ன எப்படி என்பதை கணிக்க முடியும். வெளிவரவும் முடியும், அதே சமயம் பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தை நீக்க நம் பங்கு என சிந்தித்து செயல்படமுடியும்.

இந்த சூழ்நிலை நமக்கு பின்னர் தெரியவரும்போது என்ன செய்வது, தொழிலில், வணிக நடவடிக்கைகளில் இது சாதரணம் என எடுத்துக்கொள்வதா? , இல்லை நான் மிகவும் உணர்வுபூர்வமானவன். பணம் எனக்கு முக்கியமில்லை, மனிதமே முக்கியம் என பொருளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்வதா? பொருளியலா அல்லது அருளியலா ?

இவ்வுலகில் இனிது வாழ மனிதனுக்கு அருளியலும் வேண்டும், பொருளியலும் வேண்டும்

பொருள் மட்டும் இருந்தால்/சம்பாதிக்க வேண்டி இருந்தால் அவன் தனக்காகவும், தனக்கு கிடைக்கும் வசதிகளுக்காகவும் மட்டுமே வாழ்வை நடத்துவான். இது விலங்குநிலை வாழ்வு. அமைதியற்ற வாழ்வு. பொருளே பிரதானம் என்று வரும்பொழுது மனித தன்மை குறைந்துவிடும். அறிவு மட்டுமே அரசாளும். இதுவே இன்றைய உலகவாழ்வு. இது தன்னளவில் உகந்ததாக இருந்தாலும், நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு நன்றியானது அல்ல.

அருள் மட்டும் இருந்தால் அவன் உலகியலில், பொருளாதார வாழ்வில் தோற்றுவிடுவான். பொருள் அற்ற வாழ்க்கை பொருளற்ற வாழ்வாகிவிடும். அங்கேயும் அமைதி இழப்பு வரும். தன்னளவில் நிச்சயம் பாதிப்பு வரும். இது சமுதாயத்தை பாதிக்கும். இது நம் அனைவருக்கும் பொதுவானது. விதிவிலக்கானவர்கள் சிலர் இருக்கலாம். 

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு  (374)

எனவேதான் உலகியலில் அதிகமாக ஈடுபட்டவர்கள் அருளியலை இழக்கிறார்கள். அருளியலில் ஈடுபட்டவர்கள் உலகியலை இழக்கிறார்கள். இதுவே இன்றைய நிலை. போலித்தனமான அருளியலில் இருப்பவர்கள் ’எல்லாவற்றையும்’ அனுபவிக்கிறார்கள்:)

 எது எப்படி இருப்பினும் இரண்டும் இணைந்த வாழ்வே வெற்றியான வாழ்வு, சீரான வாழ்வு. 

சரி, நமக்கு வேண்டியது என்ன?

அருளியலையும், பொருளியலையும் இணைக்கும் வாழ்வை தியானம் கொண்டுவரும். வாழ்வில் தியானம் செய்வதை விடவும், வாழ்வையே தியான வாழ்க்கையாக மேற்கொள்வது சிறந்தது. அது வேறென்ன.. விழிப்புணர்வுதான், ஒவ்வொரு நொடியிலும்..!!!!!

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்தின்கண் விதி இரண்டு வேறு (வகைப்பட்டது); திரு(வினர் ஆதல்) வேறு தெள்ளியர் ஆதலும் வேறு -செல்வத்தை உடையவராதற்கு (உரிய விதி) வேறு ) அறிவை உடையவ ராதற்கு (உரிய விதி) வேறு.

அகலம்: பின்னர்த் ‘தெள்ளிய ராதல்’ என்று கூறுகின்றமையான், முன்னர்த் திருவினர் ஆதல் என்று கொண்டு பொருள் உரைக்கப்பட்டது. ‘ஆதல்’ இரண்டும் உருபும் பொருளும் உடன் தொக்க தொகைகள்.


கருத்து: செல்வந்த ராதற்கும் அறிவுடைய ராதற்கும் உரிய விதிகள் வெவ் வேறு.

Thirukkural - Management - Fate
The natural law of the world is that wealth and knowledge are two different things, differentiates Kural 374.

Twofold is the way of  the world 
Wealth is one, wisdom is another. 

There are people in possession of abundant wealth and there are people in possession of profound knowledge. Both, possession of abundant wealth and possession of profound knowledge, are the results of a person's fate. So to be wealthy and to be intelligent  are two different things. The Kural says that some are destined to be wealthy and some are destined to be intelligent. One cannot choose between these two as one's fate chooses what one deserves. 

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
1) தமிழிலக்கியங்களில் ஊழ்
இவ்வினைகளின் வலிமைபற்றிச் சமணர்களால் எழுதப்பட்ட நாலடியார் என்னும் நூலில் பழவினை என்னும் பெயரில் ஓர் அதிகாரமும், திருக்குறளில் ஊழ் என்னும் பெயரில் ஓர் அதிகாரமும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழ் என்ற சொல்லுக்கு, “இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி’ எனப் பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கின்றார். அன்றியும் ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே கருத்துடைய சொற்கள் எனவும் பரிமேலழகர் குறிப்பிடுகின்றனர். ஊழை நினைத்தால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வராமலிருப்பது அரிது. ஊழின் வலியை வற்புறுத்துவதற்கென்றே எழுதப்பட்ட காப்பியமாகக்கூட அதனைக் கருதலாம். இப்பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யாத கோவலன், கள்வன் எனக் கருதப்பட்டுக் கொல்லப்படுகிறான். முற்பிறப்பிலே கோவலன் குற்றமற்ற ஒருவன் சொல்லப்படுவதற்குக் காரணமாய் இருந்தான். அத்தீவினையின் பலனையே இப்பிறப்பிலே அவன் அனுபவிக்கின்றான். கன்மம் என்பதும் ஊழ் என்பதும் இதுதான்.

2) ஊழும் முயற்சியும்
இப்பிறப்பிலே நமக்கு நிகழ்வன யாவும் முற்பிறப்பிலேயே விதிக்கபட்டுவிட்டன் என்றல் நாமாக முயன்று செய்வதற்கென எதுவுமில்லை. நாம் செய்வது, செய்யாமலிருப்பது எல்லாம் முன்வினைப்பயனானால், வாழ்வில் ஊக்கம், முயற்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடம் எங்கே என்ற வினா எழலாம். “விதியை நம்பாதவன் தான் தமிழன். விதியை நம்பினால் முயற்சிக்கு இடமில்லை” என்று இன்று சிலர் பிர்சங்கங்கள் செய்து திரிகின்றார்கள். இது விதி என்பது என்ன என்று சரியாக விளங்கிக்கொள்ளாமையால் ஏற்படும் அநர்த்தம். ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ற பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதே விதி என்ற சொல்லுக்குக் கருத்து. எனவே விதையை நம்பினால் தான் முயற்சிக்கு இடமுண்டு. நம்பாவிட்டால் தான் இடமில்லை. பழவினை பயனை நுகரும்போது நமது முயற்சிக்கும் இடமுண்டு என்பதைக் காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்கள் ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கியுள்ளார். பழவினையின் பயன், ஒருவன் கடன்பட்டிருத்தலை ஒத்தது. தொடக்கத்தில் அவனுடைய உழைப்பிலே பெரும்பகுதி அவனுடைய பழைய கடனைத் தீர்ப்பதிலேயே செலவாகிவிடும். தனது உழைப்பு முழுதும் கடனை அடைப்பதிலேயே செலவாகிவிடுகிறது என்று அவன் உழைக்காமல் இருக்கலமா? அங்ஙனம் இருப்பின், அவனுடைய கடன் மேலும் மேலும் பெருகும். அங்ஙமன்றி அவன் உழைக்கத் தொடங்கினால் எவ்வளவு அதிகம் உழைக்கிறானோ அவ்வளவுக்கு அவனுடைய கடனும் குறையும். பின், பணத்தை சேர்க்கவும் இடமுண்டு. அது போலவே, ஊழினால் துன்பப்படுகிறவன் முயற்சி செய்யாமலிருந்தால் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாவான். முயற்சி செய்தால் அதற்கேற்ப அவனது துன்பம் குறையும். 

நமது வாழ்வை ஒரு “பிறிட்ஜ்” விளையாட்டுக்கு ஒப்பிடுகிறார் பேராசிரியர் ராதாகிருஷ்ணன். இவ்விளையாட்டிலே நமக்குக் கிடைக்கும் சீட்டுகளைப்போல நமது பழவினையை வைத்துக்கொள்ளலாம். இச்சீட்டுகளை நாம் நம் விருப்பப்படி தெரிந்தெடுப்பதில்லை. சீட்டுகளைத் தெரிந்தெடுக்க நமக்கு உரிமை இல்லாவிடினும், அச்சீட்டுகளைக்கொண்டு வெற்றியோ, தோல்வியோ ஈட்டும் வாய்ப்பு நமக்கு உண்டு. இதைப் போலவே, பழவினையைத் தெரிந்தெடுக்க அதிகாரம் இல்லாவிடினும், அதனை வைத்துக்கொண்டு மேலே ஆக்குவதோ அழிப்பதோ யாவும் நம் கையிலேயே உள்ளது.